Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. Maruthankerny

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    10720
    Posts
  2. துளசி

    கருத்துக்கள பார்வையாளர்கள்
    4
    Points
    8892
    Posts
  3. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    3
    Points
    87993
    Posts
  4. வாத்தியார்

    கருத்துக்கள உறவுகள்
    2
    Points
    11886
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 03/19/13 in all areas

  1. "தமிழீழ விடுதலைக்கான போராட்ட முழக்கங்கள்" மத்திய அரசே! மத்திய அரசே! மௌனம் காட்டும் மத்திய அரசே! மனிதநேயம் இல்லாமல் மரமாய் போன மத்திய அரசே! இரக்கம் இல்லா அரக்கனுக்கு இணங்கி போகும் மத்திய அரசே! ஆட்டம் போடும் சிங்களவன் அடியாள் நீ தான் மத்திய அரசே! ஆயிரமாயிரம் தமிழர்கள் அழிய ஆயுதம் தந்த மத்திய அரசே! இலங்கைகாரன் சொல் படி நடக்கும் எடுபிடி ஆள் நீ மத்திய அரசே! கொத்துக் கொத்தாய் குண்டுகள் போட்டு செத்து விழுந்த காட்சிகள் கண்டும், வாயை திறந்து தட்டிக்கேட்க வக்கில்லாத மத்திய அரசே! பாலகன் முகத்தை பார்த்துப் பார்த்துப் பாழும் நெஞ்சும் துடிக்கிறதே, பாவிகளே உங்களுக்கு பாசம் கொஞ்சமும் கிடையாதா? உலகமே பதைபதைத்து ஓலமிட்டு கதறும் போது, வெளி உறவு வேசம் போட்டு வேடிக்கைகள் செய்கின்றாய்! மரணத்தின் ஓலங்கள் மாநிலம் எங்கும் ஒலிக்கும் போது, மௌனம் காத்து நிற்பது தான் மனிதநேய கொள்கையா ? புத்தன் வேசம் போட்டுக் கொண்டு பூதங்கள் அங்கு ஆட்டம் போட, பயிற்சிக் களம் அமைத்து தந்து பாவம் செய்த மத்திய அரசே! நடுகடலில் மீனவரை நாயாய் வந்து சுடுகின்றான்! தமிழன் என்றால் இன்னும் கொஞ்சம் தைரியமாக கொல்கின்றான்! அழுது நாங்கள் சொன்ன போதும் அமைதி காத்த மத்திய அரசே! நாங்களும் இந்தியர் என்ற நம்பிக்கை உனக்கு இல்லையா ? "ஆம்" என்றால் அவனை எதிர்க்கும் ஆண்மை கூட இல்லையா? இறையாண்மை என்று சொல்லி இலங்கைக்காரன் வால் பிடிக்கும், ஈனச் செயலை மத்திய அரசே! இனியாவது நிறுத்திக்கொள்! மண்டி போட்டு மண்டி போட்டு, மௌனம் காத்து வாழ்ந்தது போதும்! இனப் படுகொலை செய்தவனுக்கு இறுதிச் சடங்கை செய்திடுவோம்! ஈழத்தமிழர் வாழ்வுக்காக இன்னுயிரும் தந்திடுவோம், தனி ஈழம் அமைந்திடவே தமிழர்கள் ஒன்றாய் குரல் கொடுப்போம! உலகத் தமிழர் எல்லோரும் ஒரு தாய் வாயிற்று பிள்ளைகளே! எல்லைகள் தாண்டி படந்திருக்கும் எங்கள் உயிர் பாசக் கொடி, எழுச்சி தமிழர்கள் எல்லோருக்கும் என்றும் ஒரே தொப்புள் கொடி! பதுங்குதல் என்பது கூட பாயும் புலியின் செயல் தானே? ஒற்றை கொக்காய் காத்து நின்று சிங்கள மீன்களை கொத்திடுவோம்! ஓங்கி உயர உலகம் வியக்க உயர்ந்த நம் கொடி ஏற்றிடுவோம்! உலகில் உள்ள தமிழருக்கெல்லாம் ஒரே ஒரு உறைவிடமாய், புயல்கள் ஒன்றாய் மையம் கொண்ட புலிகளுக்கெல்லாம் புகலிடமாய், நாளை மலரும் தமிழீழம் நமக்கான தனி ஈழம்.. ஓய்வு இல்லா சூரியனாய் உறக்கம் கொள்ளா கடல் அலையாய், உறைந்து நிற்கும் அனல் நெருப்பாய், ஒரு நாள் வெடிப்போம் எரிமலையாய்!! வாழ்வில் சாவும் ஒருமுறை தான் வந்தால் மடிவோம் வீரர்களாய், வரலாறு நம்மை வாசிக்கும் வரும் தலைமுறை நேசிக்கும்! -செங்கதிர்
  2. மாணவமணிகளின்..கவனத்திற்கு... 1. உணர்ச்சி வசப்படகூடியவர்களை முன்னணியில் நிறுத்த வேண்டாம். 2. அனைத்து கல்லூரி மாணவரையும் அரவணைத்து செல்லவும். 3. வீண் வாக்கு வாதங்கள் வேண்டாம். 4. நமது எண்ணத்தை ஏற்று கொள்ளும்படி யாரையும் நிர்பந்திக்க வேண்டாம். 5. பெற்றோரின் வற்புறத்தலால் விலக நேரும் தோழர்களை வருத்த வேண்டாம். 6 சில காலம் செல்ல வேண்டிய போராட்டம். இறுதி வருட மாணவர்களுக்கு "சுழற்சி" முறையில் பங்கு பெற செய்யுங்கள். 7. யார் தலைமை என எக்காலமும் போட்டி வர கூடாது. 8. மத, சாதீய உணர்வினால் பிரிக்க எண்ணுவார்கள் கவனம். 9. உடல் நிலை பேணல் மிக அவசியம் 10. வரலாற்றை பகிருங்கள் 11. "ஐரோம் சர்மிளா" "உதயகுமார் ஐயா" ஆகியோரின் கள வாழ்வு பற்றி அறிந்து கொள்ளுங்கள். 12. வன்முறை எண்ணம்..எள் முனையளவு கூட உள் நுழைய கூடாது. 13. மாணவர்களின்றி உங்களுடன் கலந்திருப்போரை கண்காணிப்பதும் மிக அவசியம். அவர்களின் எண்ணம் நாம் அறிய இயலாது 14. இதனை தங்களுக்குள் குழ பிரித்து கண்காணிப்பு, தகவல் தொடர்பு என பணிகளை சரியாக செயல் படுத்துங்கள் 15. தலைமைதுவம்..விட்டு கொடுத்தலில் தொடங்குகிறது. வெல்லும் உங்கள் படை.. உங்களின் பின்னால்..இந்த தமிழ் உலகு! - முகநூல் -

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.