-
கிவுல் ஓயா திட்டத்தின் கீழ் எந்தவொரு இனவாத நோக்கமும் இல்லை ; இதனை அரசியல் மயப்படுத்த வேண்டாம் - அரசாங்கம்
அரசியலே தமிழினத்தை அழிப்பதற்கு இனவாதிகளின் ஆசீர்வாதத்துடன் நடைபெறுவது பூரணச் சந்திரன்போல் பளிச்சிடுகிறது. இதற்கு இலங்கை சுதந்திரமடைந்த நாளிலிருந்து இன்றுவரை இலங்கையை ஆட்சிசெய்யும், ஆட்சிசெய்த சிங்களத் தலைவர்களின் செயற்பாடுகளே ஆதாரம்.
-
Paanch started following “கரிநாள்” : வடக்கு, கிழக்கில் பேரணி ஏற்பாடு ; யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் அழைப்பு , கிவுல் ஓயா திட்டத்தின் கீழ் எந்தவொரு இனவாத நோக்கமும் இல்லை ; இதனை அரசியல் மயப்படுத்த வேண்டாம் - அரசாங்கம் , “தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்) and 6 others
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
ஆமாம் ஆனால் பூலோகம் இருண்டுவிடுமே?????? என்ற பயம்தான்.🫣 இப்படி ஒரு அவாவை வெளிப்படுத்துவதற்கும் ஒரு “தில்” வேண்டும்.!!!!! அது என்னிடம் இல்லை ஐயனே.😟
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
யாழ்களத்தில் நடைபெறும் இந்த வாதப் பிரதி வாதங்களால் இலங்கையில் தமிழினம் வாழ நல்வாழ்வு கிடைத்துவிடாது. சிங்களம் தமிழினத்தின் காலைச்சுற்றிய பாம்பு. பாம்புக்கு பால்ஊற்றி வணங்கவும் தமிழினத்திலும் பக்தர்கள் உண்டு. இவர்கள் போன்றோர் மாறும்வரை ஏட்டுச் சுரைக்காயை தொடர்ந்து சுவைக்கலாம் அவ்வளவுதான். இலங்கையில் இன்றைய பல தமிழர்களின் தறிகெட்ட வாழ்க்கை முறையும், அங்கு தலைவர்கள் என விளங்குவோரின் தவறான செயற்பாடுகளும் மேலோங்கி உள்ள நிலையில் தமிழீழம் மலர்ந்தால்…… நந்த வனத்தில் ஓர் ஆண்டிக் கதை மீண்டும் எழுதப்படும்போல் தோன்றுகிறது. புத்த துறவிகள் அரசியலுக்குள் நுழையாது வலுவான அணை ஒன்று கட்டப்படல் வேண்டும். துறவிகள் புத்த தர்மத்தைக் கடைப்பிடித்து மக்கள் வாழ்வை மலரச் செய்யும் செயல்களில் ஈடுபடும்வரை தமிழினம் மட்டுமல்ல, சிங்கள இனம் உட்பட, வேறு எந்த இனமும் இலங்கையில் நிம்மதியாக வாழ முடியாது.
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
என் சிறுவயதில் நான் படித்தது. இது உண்மைச் சம்பவம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடாமுயற்சிக்கான எடுத்துக்காட்டுகள் நம்மிடமே பல உள்ளன, நம்மைச் சுற்றியும் பல உள்ளன. அவற்றை நாம் கூர்ந்து கவனித்தால் உண்மை மனதிற்கு விளங்கும். "ஒரு சிலந்திப்பூச்சியின் விடாமுயற்சி மாபெரும் படையெடுப்பை தடுத்து, விரட்டியது" என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா?... ஆம் இது உண்மையில் நடந்தது. பல நூறு ஆண்டுகளுக்கு முன் ஸ்காட்லாந்தில், ராபர்ட் தி புரூஸ் என்ற மன்னர் வாழ்ந்து வந்தார். அச்சமயம் இங்கிலாந்து மன்னர் ஸ்காட்லாந்தை கைப்பற்ற முயற்சி செய்தார். ஸ்காட்லாந்து மீது படையெடுத்தார். மிகப் பெரிய படை பலத்துடன் இருந்தது இங்கிலாந்து, ஓரளவுக்கு படைபலத்துடன் இருந்தது ஸ்காட்லாந்து. ஆனால் மன உறுதி மிகவும் அதிகமாகவே இருந்தது. இங்கிலாந்து ஸ்காட்லாந்தை தன்னுடன் இணைத்துக்கொள்ள போரிட்டது. இங்கிலாந்திடம் ஆறுமுறை போரிட்டு ஸ்காட்லாந்து இங்கிலாந்திடம் தோற்றது. ராபர்ட் தி புரூஸ் மன்னரின் படைகள் சிதறடிக்கப்பட்டன, அவர் நாட்டை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டார். மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில் ஏதேனும் ஒரு இடத்தில் மறைந்திருக்க வேண்டும் என்று நினைத்தார். அதனால் தன் நாட்டிற்குள்ளேயே ஒரு மலைக் குகையில் ஒளிந்து கொண்டார். அவர் மனதளவில் மிகவும் சோர்ந்து காணப்பட்டார். மிகவும் வருத்தத்துடன் காணப்பட்டார். தன் எதிரியிடம் நாட்டை விட்டு விட்டோமே என்ற நிலையில் மிகவும் குற்றவுணர்ச்சி இருப்பவராய் காணப்பட்டார், மிகவும் வருந்தினார். ஒரு சமயம் அந்த குகையில் இருக்கும் பொழுது மழை பெய்து கொண்டிருந்தது. மழையை பார்த்தவாரே ஓரிடத்தில் அமர்ந்து இருந்தார். அப்போது ஒரு சிலந்திப்பூச்சி தன் வலையை பின்னுவதற்காக காத்திருந்தது. வலையை கொஞ்சம் கொஞ்சமாக பின்னிக் கொண்டிருந்தது. இந்த குகையில் இருந்து எதிரில் இருக்கும் ஒரு குகைக்கு வலை பின்ன எண்ணியது. அது தன் வலையை வீசி, வீசி பார்த்தது, ஆனால் அந்த குகையில் வலை ஒட்டவே இல்லை. வலையை திரும்பத் திரும்ப வீசியது, அதை பார்த்து ராபர்ட் தி புரூஸ், "பாவம் அந்த சிலந்திக்கு தான் என்ன தெரியும், அந்தக் குகை அவ்வளவு தூரத்தில் உள்ளது. அதனால் எப்படி அடைய முடியும் என்று நினைக்கலாம். பாவம் அறிவில்லாத ஜீவன்" என்று எண்ணிக் கொண்டார். ஆறு முறை சிலந்தி முயற்சி செய்தது. அவ்வாறு செய்தது 6 முறையும் சிலந்திவலை அங்கே சென்று ஒட்டாமல் கீழே விழுந்து கொண்டே இருந்தது. ஆனால் ஏழாவது முறையாக மீண்டும் முயற்சி செய்தது. மிகவும் கச்சிதமாக அந்த சிலந்திவலை அடுத்த குகையில் சென்று ஒட்டிக் கொண்டது. சிலந்தி கூடு கட்ட ஆரம்பித்தது ஆரம்பித்தது. இதைப் பார்த்தவுடன் ராபர்ட் ப்ரூஸ் க்கு ஒரு எண்ணம் தோன்றியது. தன்னால் முடியாது என்று நினைத்தால் தான் எதுவும் முடியாது, தன்னால் முடியும் என்று நினைத்தால் எது வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்பதற்கு சிலந்தி ஓர் எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றது. என்னால் முடியாது என்று ஏன் எனக்கு தோன்றியது. என்னால் நிச்சயமாக முடியும். அவருக்கு புதிய உற்சாகம் பிறந்தது. ஸ்காட்லாந்தை மீண்டும் கைப்பற்ற முடியும், அது என்னுடைய நாடு என்று எண்ணிக்கொண்டார். தன்னுடைய படை வீரர்களுக்கு இந்த செய்தியை உற்சாகமாக அனுப்பினார். சில நேரத்தில் உற்சாகம் அதிகமான படைவீரர்கள் இவருடன் திரண்ட, கூட்டம் அதிகமாகிக் கொண்டே போனது. படைகள் பெருகிக்கொண்டே போனது. மீண்டும் போரிட்டார். ஏழாவது முறையில் ஸ்காட்லாந்து வென்றது. இங்கிலாந்து ஸ்காட்லாந்தை விட்டு வெளியேறுவதற்கான நிர்பந்தம் வந்து விட்டது. இங்கிலாந்து ஸ்காட்லாந்தின் வலிமை மிக்க, மிகப்பெரிய மன்னரிடம் தோற்றது. ஆம் ஸ்காட்லாந்தை ஆள்வதற்கு இவர் தான் சரியான ஆள் என்று இங்கிலாந்தும் விட்டு சென்றது. இந்த வரலாறு ஸ்காட்லாந்து மக்கள் அனைவருக்குமே தெரியும். ராபர்ட் புரூஸ் என்பவர் மன்னரான பின் ராபர்ட் I ,என்று அழைக்கப்பட்டார். இவர் ஸ்காட்லாந்தை ஆண்ட மன்னர்களில் மிகவும் பிரபலமான, மிகவும் தைரியமான மன்னராவார். விடாமுயற்சி என்பது மிகவும் முக்கியம். எதையும் நாம் தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும். தோல்வியுற்றாலும் செய்து கொண்டே இருக்க வேண்டும், நிச்சயம் ஒரு நாள் வெற்றி தரும் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
-
இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவராக சாணக்கியன் இராசமாணிக்கம் நியமனம்
எவருடைய தூண்டுதலோ, பலவந்தமோ இன்றி தங்களது உள்ளத்து உந்துதலால் ஈழ விடுதலை நோக்கிப் போராடச் சென்றவர்கள்தான் பிரபாகரன் படைவீரர்கள். உண்மையான ஈழவிடுதலப் போராளிகள். இடையில், பிறருடைய வேண்டுதலில், சுயநல எதிர்பார்புடன் புகுந்தவர்களாலேதான் போராட்டம் மௌனிக்பட்டு மக்களும் பலியாக வேண்டிய நிலை அடைந்ததாக எண்ணவேண்டி உள்ளது. இடையில் புகுந்தவர்களால் எங்கள் குடும்பத்தவரும் ஒருவகையில் பாதிக்கப்பட்டார்கள். இது உண்மை. அனுபவம்.
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
2009 இதன்பின்புதான் தமிழன்யார்? தமிழ் பேசுபவன்யார்?? தமிழைவைத்துப் பிழைப்பவன்யார்??? என்பதனை அறியமுடிந்தது.
-
நஞ்சுக் கொடியில் பிளாஸ்டிக் துகள் - உயர் நீதிமன்றம் தானாக விசாரணை
விரிவானஅறிக்கை வெளிவரும்போது அதனைப் பார்க்கவோ, படிக்கவோ மனித இனம் உலகில் இருக்குமா?????? அறிவு அளவுக்குமிஞ்சிக் கூடியதால்தான் மனித இனம் அணுகுண்டைக் கண்டுபிடித்தது.☠️🫣
-
இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவராக சாணக்கியன் இராசமாணிக்கம் நியமனம்
இன்றைய உலகில் மக்களை வழிநடத்துவது செய்திகள்தான் அனுபவங்கள் அல்ல! “அ” பின் “ஆ” அறிஞ்சதுதான் அனுபவம் அல்ல.🤔
-
41வது திருமதி உலக அழகிப் போட்டியில் இலங்கைப் பெண் சபீனா யூசப்!
சிப்பிக்குள் மூடியிருந்த முத்து ஒன்று வெளிப்பட்டுவந்து பரிசும் பெற்றது. வாழ்த்துக்கள்!!🙌
-
சுதந்திர தினத்தை கரி நாளாக கருதி போராட்டம் ஆரம்பம்!
தமிழினத்தின் துன்பங்களுக்கு தீர்வுவரும், விடிவுவரும். அடுத்த பொங்கல், வருடபிறப்பு, தீபாவளி என்று ஆறுதல் சொல்லச் சம்பந்தரும் இல்லையே!😭
-
4 மணி நேர வீர நீச்சல் : தாய், சகோதரன், சகோதரியை உயிருடன் மீட்ட 13 வயது சிறுவன்
தற்போதுள்ள சிறுவர்களின் அறிவும், திறனும் முதியோர்களிடம் இல்லை. ஆதாரம் இன்றுள்ள தமிழினத் தலைவர்கள். இது தெரிந்துதான் தலைவர் சிறுவர்களை நீதிபதிகளாக நியமித்தார்.
-
யாழ். மாவட்டத்தில் சுதந்திர தினம்!
யாழ் மாவட்டத்தில் கழுதைகள் கூடாரம். சுதந்திரம் என்றால் என்னனவென்று புரியாது. கற்பூர வாசனையும் தெரியாது.
-
“கரிநாள்” : வடக்கு, கிழக்கில் பேரணி ஏற்பாடு ; யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் அழைப்பு
ஈவிரக்கமற்ற ஆயுதப் போராட்டம் தவிர்ந்த வேறெந்தப் போராட்டமும் இன்றைய உலகில் வெற்றி தராது.
-
வவுனியா மாவட்டத்தில் அரசு முன்னெடுக்கவுள்ள கிவுல் ஓயா திட்டம் தமிழருக்கு ஆபத்து; பல்லாயிரம் ஏக்கர் காணிகளைப் பறித்து சிங்களக் குடியேற்றத்துக்கு முயற்சி
கோடாலிகள்…. காம்புகள் இன்றித் தனியாக ஒரு மரத்தையேனும் வெட்டி வீழ்த்தப் பயன்படுவதில்லை.
-
வவுனியா மாவட்டத்தில் அரசு முன்னெடுக்கவுள்ள கிவுல் ஓயா திட்டம் தமிழருக்கு ஆபத்து; பல்லாயிரம் ஏக்கர் காணிகளைப் பறித்து சிங்களக் குடியேற்றத்துக்கு முயற்சி
கிவுல் ஓயா திட்டத்தை இலங்கை தமிழ் அரசுக் கட்சி வன்மையாக எதிர்த்து பாரிய போராட்டத்தை நடத்தும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழரசுக் கட்சிக்குள் நுளைந்திருக்கும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனை வெளியேற்றும் பாரிய போராட்டத்தை அக்கட்சி எப்போது நடத்தும்.?????🤔