-
இன்று உலக தாய்மொழி தினம்
அம்மா என்ற சொல் இயற்கையில் தோன்றிய ஒன்றாகும். பிறந்த குழந்தை அழுவதும், சிரிப்பதுமாக வாயை மூடி மூடித் திறக்கின்றது. குழந்தை வாயைத் திறக்கும் போது அ என்ற ஒலி எழுகின்றது. வாயை மூடும் போது ம் என்ற ஒலி எழுகின்றது. ம்+அ. ம்ம -ம்ம -என்ற ஒலி மீண்டும் மீண்டும் வெளிவரும் போது அது அம்மா என்ற தமிழ் சொல்லைத் தருகின்றது. தமிழ்மொழி இனிமையானது, சுவையானது. அதனால்தான் பூச்சி புழுக்கள்கூட தமிழுக்குள் புகுந்து தமிழைத் தின்பதற்கு முனைகின்றன.😲
-
Paanch started following அன்பு ௐ , இன்று உலக தாய்மொழி தினம் , துப்பாக்கிச் சூடு நடத்த முற்பட்டவருக்கு வாள்வெட்டு! and 7 others
-
துப்பாக்கிச் சூடு நடத்த முற்பட்டவருக்கு வாள்வெட்டு!
வாள் என்பது கையாள்வதற்கு ஏதுவாக நீண்டகூர்மையான உலோக அலகு கொண்ட ஒரு பழங்கால ஆயுதம் இது வெட்டுவதற்கும் குத்துவதற்கும் பயன்படுகிறது. இன்று அது அறிவியல் உலகம் கண்டுபிடித்த துப்பாக்கியையும் வென்றுள்ளது. பல நூற்றாண்டுகளாகப் போர்க்களங்களில் முக்கிய ஆயுதமாக இருந்த இதுதற்காலத்தில் வாள்வீச்சு என்ற ஒலிம்பிக் விளையாட்டுப் பிரிவிலும் பயன்படுத்தப்படுகிறது. எம்ஜீஆர் அவர்கள் ரசிகர்களிடம் பிரபலம் அடைவதற்கு இந்த வாள்வீச்சும் ஒரு காரணமாக இருந்துள்ளது.🤺
-
இஸ்ரேல் - கட்டார் - துபாய் - அபுதாபி மீது ஈரான் தாக்குதல்
முன்னைய மன்னர் ஆட்சியின் ஆட்சி மோதல்களில், பூமியில் உயிர்கள் மட்டுமே பாதிப்புக்கு உள்ளாகி அழிந்தன அழிக்கப்பட்டன. பூமி பாதிப்பின்றிச் சுற்றியது. தற்போது மக்கள் ஆட்சியில் மக்கள் அறிவும் அதிகரித்த ஆட்சி மோதல்களில், உயிர்களோடு பூமியும் பாதிப்புக்கு உள்ளாகி அழிந்துவிடும்போல் தெரிகிறது. மக்களாட்சியை விடவும் மன்னராட்சி பூமிக்கு மேலானதுபோல் தோன்றுகிறது.
-
புலிகள் மீதான தடையினை நீக்குமாறு வைகோ தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
50+ likes · 2 weeks ago இந்தியாவில் பதவியில் உள்ள நீதிபதிகளுக்கு எதிராக கடந்த 10 ஆண்டுகளில் 8,630 புகார்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகத்தில் பெறப்பட்டதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
சிற்றுண்டிச்சாலையில் இனிப்பு பொருட்களை திருடிய சிறுமிகள் கைது!
படரவேண்டிய இடத்தில் படராமல் தவறான இடத்தில் தவறாகப் படர்ந்த முல்லைச் செடிக்கு தன் தேரையே கொடுத்தான் காவலன் பாரி வள்ளல் அன்று. இனிப்பு உண்ணும் ஆசையால் இனிப்பைத் திருடித் தவறுசெய்த இளம் முல்லைகளைக் கைதுசெய்து படம்காட்டுகிறது காவல்துறை இன்று.😲
-
கொழும்பில் நடந்த பெளத்த மாநாடு.
தேரர்களால் களங்கப்படும் பௌத்தம்! written by Admin July 9, 2023 நவகமுவ பிரதேசத்தில் தேரர் ஒருவரையும், இரண்டு பெண்களையும் தாக்கிய நபர்களை கைது செய்யுமாறு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் காவற்துறையினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். தேரர் ஒருவரும், இரண்டு பெண்களும் குழுவொன்றினால் நிர்வாணப்படுத்தப்பட்டு பொல்லால் தாக்கப்படும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் நிலையிலேயே குறித்த சம்பவம் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் தெரிவித்துள்ளார். தேரர் ஒருவர் மற்றும் இரண்டு பெண்களின் ஆடைகளை கலைத்து, அவர்களை நிர்வாணப்படுத்தி, கடுமையாக தாக்கியமை பாரிய குற்றமாகும். எவருக்கும் சட்டத்தை கையில் எடுக்க முடியாது. உடனடியாக குறித்த குழுவினர் கைது செய்யப்பட வேண்டும். மேலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும். இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு மேல் மாகாண சிரேஷ்ட காவற்துறை மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மற்றும் நவகமுவ காவற்துறை தலைமையகத்துக்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
-
பிரித்தானியாவில் தமிழ் அமைப்புகளின் எதிர்ப்பு: உரை ரத்து குறித்து நாமல் அறிக்கை
இந்தப் பதிவு துயர்பகிர்வோம் பகுதியில் வரவேண்டிய பதிவு என எண்ணுகிறேன். தவறுதலாக வாழும் புலம் பகுதியில் வந்துவிட்டது.😢
-
மட்டக்களப்பு மாநகர எல்லைக்குள் தொடரும் காட்டு யானைகள் அட்டகாசம்
கீழே விளக்கு ஏற்றப்படும்போது, மேலே உள்ள சுவரில் உருவாகும் நிழல் சிவபெருமான்.🙏
-
மட்டக்களப்பு மாநகர எல்லைக்குள் தொடரும் காட்டு யானைகள் அட்டகாசம்
- றோசா முள்ளா? மலரா??
றோசா என்றாலே அது மனதுக்கு மென்மையை உணர்த்தி நறுமணத்தையும் அள்ளி வீசும். ஆனால் தமிழ்சிறி தம்பிக்கு முள்ளாக குத்தி வைத்தியசாலைக்கும் அனுப்பி வைத்துள்ளதே.😳 தம்பி தற்போது வைத்தியசாலையில் தங்கிச் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் நலம்பெற்று வர இறைவனை வேண்டுகிறேன். மேலும் உறவுகளுக்கு விபரங்களை அறியத்தந்து அவர்களின் மனங்களை ஆறுதல்படுத்துமாறு தம்பியைத் தயவுடன் வேண்டிக் கொள்கிறேன்.🙏- அன்பு ௐ
நமசிவாயம் முருகா வாருங்கோ தங்களின் யாழ்வரவு நல்வரவாகட்டும்.🙏🙏🙏- புலிகளின் பணம் கனடாவில் யார் யாரிடம் உள்ளது? சம்பவம் அம்பலமானது!
அடித்ததும் “தமிழர்கள்தான் நாங்கள்” என்று இன்றும் மாவீரர் தினம், கல்விக் கழகம் அது இது என்று அப்பாவியாக ஏமாறும் தமிழர்களிடம் அடித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.- கிவுல் ஓயா திட்டத்தின் கீழ் எந்தவொரு இனவாத நோக்கமும் இல்லை ; இதனை அரசியல் மயப்படுத்த வேண்டாம் - அரசாங்கம்
அரசியலே தமிழினத்தை அழிப்பதற்கு இனவாதிகளின் ஆசீர்வாதத்துடன் நடைபெறுவது பூரணச் சந்திரன்போல் பளிச்சிடுகிறது. இதற்கு இலங்கை சுதந்திரமடைந்த நாளிலிருந்து இன்றுவரை இலங்கையை ஆட்சிசெய்யும், ஆட்சிசெய்த சிங்களத் தலைவர்களின் செயற்பாடுகளே ஆதாரம்.- “தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
ஆமாம் ஆனால் பூலோகம் இருண்டுவிடுமே?????? என்ற பயம்தான்.🫣 இப்படி ஒரு அவாவை வெளிப்படுத்துவதற்கும் ஒரு “தில்” வேண்டும்.!!!!! அது என்னிடம் இல்லை ஐயனே.😟- “தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
யாழ்களத்தில் நடைபெறும் இந்த வாதப் பிரதி வாதங்களால் இலங்கையில் தமிழினம் வாழ நல்வாழ்வு கிடைத்துவிடாது. சிங்களம் தமிழினத்தின் காலைச்சுற்றிய பாம்பு. பாம்புக்கு பால்ஊற்றி வணங்கவும் தமிழினத்திலும் பக்தர்கள் உண்டு. இவர்கள் போன்றோர் மாறும்வரை ஏட்டுச் சுரைக்காயை தொடர்ந்து சுவைக்கலாம் அவ்வளவுதான். இலங்கையில் இன்றைய பல தமிழர்களின் தறிகெட்ட வாழ்க்கை முறையும், அங்கு தலைவர்கள் என விளங்குவோரின் தவறான செயற்பாடுகளும் மேலோங்கி உள்ள நிலையில் தமிழீழம் மலர்ந்தால்…… நந்த வனத்தில் ஓர் ஆண்டிக் கதை மீண்டும் எழுதப்படும்போல் தோன்றுகிறது. புத்த துறவிகள் அரசியலுக்குள் நுழையாது வலுவான அணை ஒன்று கட்டப்படல் வேண்டும். துறவிகள் புத்த தர்மத்தைக் கடைப்பிடித்து மக்கள் வாழ்வை மலரச் செய்யும் செயல்களில் ஈடுபடும்வரை தமிழினம் மட்டுமல்ல, சிங்கள இனம் உட்பட, வேறு எந்த இனமும் இலங்கையில் நிம்மதியாக வாழ முடியாது. - றோசா முள்ளா? மலரா??
Important Information
By using this site, you agree to our Terms of Use.