Everything posted by வைரவன்
-
ரஸ்யாவினுள் உள்ள விமானத்தளங்கள் மீது உக்ரேன் தாக்குதல்
ஐயா, நீங்கள் எந்த மொழியில் எழுதுகின்றீர்கள் என சொல்ல முடியுமா? அல்லது, நீங்கள் மர்ம மொழியில் எழுதிய பின் தமிழில் பொழிப்புரை யை சுருக்கமாகவேனும் தர முடியுமா? நான் ஒரு பாமரன் எனக்கு மண்டை காயுது ஐயா கருணை காட்டுங்கள்
-
ராஜேந்திர சோழன் தனது சிற்றன்னை நினைவாகக் கட்டிய 1000 ஆண்டுகள் பழமையான கோவிலில் வெளிப்பட்ட பாதாள அறை
நீங்கள் உங்கள் பிள்ளைகள் அமெரிக்காவிலா வசிக்கின்றீர்கள்? உங்களுக்கா அவர் மருத்துவம் பார்க்கின்றார்? இராத்திரியில் குடிச்சு போட்டு கருத்தெழுதும் குரங்குக்கு அவர் கொடுக்கும் மருந்து என்ன? கடுக்காய் குளிசையா?
-
தெரு நாய்களை அகற்றுமாறு அரசாங்கம் சுற்றறிக்கை ; விலங்குகள் நல அமைப்புகளும் ஆர்வலர்களும் போராட்டம்
ஒரு பெரிய வெறி நாயிடம் இருந்து தெரு நாய்களை பாதுகாக்க முனையும் அரசுக்கு பாராட்டுகள்!
-
மாற்று சாதி இளைஞரை காதலித்த தங்கை கொலை - அண்ணன் கைது
என் கேள்வி: இதில் சொல்லப்பட்ட செய்தியிற்கும் திராவிடத்துக்கும் என்ன சம்பந்தம்? இன்னொரு விதத்தில் கேட்கின்றேன். இரண்டு மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியில் உள்ள இருவர் காதலை ஏற்காத ஒரு அற்பன், தன் தங்கையை கொன்று விட்டான். இந்த குற்றத்திற்கும் திராவிடத்துக்கும் என்ன சம்பந்தம்?
-
மாற்று சாதி இளைஞரை காதலித்த தங்கை கொலை - அண்ணன் கைது
இதற்கும் திராவிடத்துக்கும் என்ன தொடர்பு? இப்படியான அரைவேக்காட்டுத்தனமான சாதிப்பிரச்சனைகளின் அடித்தளமான வர்ணாச்சிரம் பற்றிய அடிப்படை அறிவு கூட இல்லாமல் கண்டபாட்டுக்கு வந்து கருத்தெழுவதும் என்றே உங்கள் பொழுது போகுது அச்சு அச்சோ
-
தமிழரசுக்கட்சியுடன் இணைந்து களமிறங்கவுள்ள முஸ்லிம் காங்ரஸ்
சொல்கிறவர் யாரு? வடக்கு வாழ் தமிழர்களை தம் பிரதேசவாதம் காரணமாக எதிரிகளாக அவர்களை கட்டமைத்த முரளிதரனுக்கும் பிள்ளையானுக்கும் யாழில் காவடி தூக்கிய சந்தர்ப்பவாதி! அண்ணை உங்கள் கோவணத்தை மேலும் உரிக்கட்டா?
- IMG-20250318-WA0000.jpg
-
தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் வீரச்சாவு உத்தியோகபூர்வமாக அறிவிப்பு-மாவீரர் பணிமனை, தமிழீழ விடுதலைப்புலிகள்.
இன்று தலைவரின் வீரச்சாவு பற்றிய அறிக்கையை மீளப்பெறுவதாக இன்னொரு அறிக்கையை வெளியிட்டுள்ளனர். இந்த சுய நல பேய்களின் துரோகிகளின் விசர் கூத்தை தடுக்க வழியில்லாமல் உள்ளது.
-
யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்
நன்றி ஓணாண்டி. இந்த பதிவின் மூலம் நீங்கள் யார் என்றும் கண்டு பிடித்து விட்டேன். ஆனால் யாருக்கும் சொல்ல மாட்டேன். டவுட்டு கிளியராச்சு
-
மேதகு வே.பிரபாகரன் "வீர நாள்" (மே 17 2025)
மேதகு வே.பிரபாகரன் "வீர நாள்" (மே 17 2025) தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரும் தமிழீழத்தேசியத்தலைவருமான மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் வீரச்சாவு பேரறிவிப்பு 01-03-2025 உலகெங்கும் பரந்து வாழும் எம் உயிரினும் மேலான தமிழ் மக்களே. எமது விடுதலை இயக்கத்தின் தலைவரும் தமிழினத்தின் ஒப்பற்ற பெருந் தலைவருமான தமிழீழத்தேசியத தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள், இறுதிவரை கொண்ட கொள்கையில் உறுதி தளராது முப்பத்தாறு ஆண்டுகளாக (36 ஆண்டுகள்) எதிரிப்படைகளோடு அடிபணியாது போராடி நந்திக்கடலோரம் நடைபெற்ற இறுதிச்சமரில் வீரகாவியமானார். சிறிலங்கா அரசுக்கும் அதன் இராணுவ இயந்திரத்திற்கும் நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவிய உலகநாடுகளின் கூட்டுப்படை வலிமையையும் ஏகாதிபத்திய அரசுகளின் சூழ்ச்சி நிட்டங்களையும் எதிர்கொண்டு, அனைத்து தடைகளையும், தனது பேராற்றலால் உடைத்தெறிந்து தமிழினத்தின் ஆற்றலோனாக தேசியத்தலைவர் திகழ்ந்தார். தமிழினத்தின் தேசிய அடையாளத்தை நிலைநிறுத்தி, முள்ளிவாய்க்கால் இறுதிப்போர் வரையும் உறுதி குலையாது படைநடத்தி, நான் வரித்துக்கொண்ட உயரிய இலட்சியத்தையும், தனது வழிநடத்தலையும் உளமார ஏற்று உயிர்களை விதையாக்கிய மாவீரர்களின் தியாகங்களையும், இலட்சியக் கனவுகளையும். நெஞ்சில் நிறுத்தி, எதிரிப்படையோடு இறுதிக்கணம் வரை துணிவோடு களமாடி எமது தேசியத்தலைவர் அவர்கள் வீரச்சாவடைந்த நாள் 2009 ஆண்டு மே மாதம் 17ம் நாள் என தமிழீழ மாவீரர் பணிமனை முடிவு செய்து அறியத்தருகிறது. தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் வீரச்சாவினை உறுதிப்படுத்தி நெஞ்சைப் பிளக்கும் இப்பெரும் துயர்மிகு அறிவிப்பை, அவரது வழிநடத்தலை உளமார ஏற்றுப் போராடிய போராளிகளுக்கும், அவரை ஒப்பற்ற தேசியத் தலைமையாக தமது நெஞ்சங்களில் சுமந்திருக்கும் எம்முயிரினும் மேலான தமிழ் மக்களுக்கும் பெருந்துயரத்தோடு, தமிழீழ மாவீரர் பணிமனையூடாக உறுதிப்படுத்தி வெளிப்படுத்திக்கொள்ளும் அதேவேளை எமது வீரவணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம். காலம்காலமாக அடிமைவாழ்வுக்குள் சிக்குண்டு சிதைந்து கொண்டிருந்த ஈழத்தமிழினத்திற்கு கிடைத்த ஒரு சூரியத்தேவனாக, இந்த நூற்றாண்டில் உலகமே வியக்கும் பல அற்புதமான வரலாற்றுச் சாதனைகளைப் படைத்து. தமிழினத்தின் அதி உச்ச வீர அடையாளமாக, அவர் நிகழ்ந்தார். வரலாற்றிலிருந்து எவராலும் அழிக்கப்பட முடியாதவாறு, எதிரியாலும் போற்றப்படும் போரியல் அறத்துடனும், உயர்ந்த இராணுவ ஒழுக்கத்துடனும், தமிழர் வரலாற்றில் அவர் நிலைபெற்றுவிட்டார் என்பதால், செம்மொழியாம் எம் தாய்த் தமிழ்மொழி வாழும் காலமெல்லாம் எம்தேசத் தலைவரும் நிலைபெற்று நித்திய வாழ்வு வாழ்வார். எமது அன்பிற்குரிய தாய்த்தமிழ் உறவுகளே! தமிழினத்தின் கலங்கரை விளக்காக, தமிழ் மக்களை அடிமைத் தனத்திலிருந்து கரைசேர்க்கப் புறப்பட்டு, அடிமை விலங்குடைத்து, கொண்ட கொள்கையில் உறுதி தளராது, மாவீரர் வரிசையில் தன்னையும் இணைத்துக் கொண்டார். தமிழினத்தின் விடிவிற்காக தனது உயிரை அர்ப்பணித்த எம் தேசியத் தலைவருக்கு உலகத்தமிழர்கள் அனைவரும் ஒன்று கூடி பேரெழுச்சியோடு அவரை நெஞ்சங்களில் நிலைநிறுத்தி தமிழீழ போராட்ட வரலாற்றின் மிகப்பெரும் அடையாளமாக அவரை இறையாக்கி எம் இதயக்கோயில்களில் வைத்து பூசிக்கப்படக்கூடியவராக்க வேண்டியது ஒவ்வொரு தமிழ்களது மிகப்பெரும் கடமையும் பொறுப்புமாகும். ஆகவே வரலாற்றில் எமக்கு கிடைத்த பொக்கிசமான எம்தேசத்தலைவருக்கு தலைவரின் தலைமையில் போராடிய போராளிகள், சமூக கட்டமைப்பினர், புலம்பெயர் மற்றும் தாயக தமிழக மக்கள் என அனைவரும் ஒன்றிணைந்து அவரது இறுதி வீரவணக்க நிகழ்வை, தாயகம், தமிழகம் உட்பட தமிழ் மக்கள் பரந்துவாழும் உலகப்பரப்பெங்கிலும் உலகம் போற்றும் வகையில் மே 17, 2025 அன்று "மேதகு வே.பிரபாகரன் வீர நாள்" என்று பேரெழுச்சியோடு முன்னெடுப்போம் என உறுநிஅளிக்கிறோம். எம் பெருந்தலைவர் அவர்களால் கட்டமைத்து, வளர்த்தெடுக்கப்பட்டு நமது கைகளில் தரப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் போராட்டத்தை, அதே உறுதிப்பாட்டுடனும், அதே கட்டுக்கோப்புடனும், அதே ஒருங்கிணைவுடனும், மாறிவரும் பூகோள அரசியல் மாற்றங்களுக்கேற்ப தடம் மாறாது முன்னெடுத்துச் சென்று எமது இறுதி இலட்சியத்தை அடைவோமென எம் தேசியத் தலைவர் மீதும் மாவீரர்கள் மீதும் உறுதியெடுத்துக் கொள்கிறோம். "புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம்." மாவீரர் பணிமனை, தமிழீழ விடுதலைப்புலிகள். 01-03-2025
-
சீமானுக்கு சிக்கலா..?
ஆக சீமான் இப் பெண்ணுடன் வெறும் நட்புதான் என்று சொன்னது எல்லாம் பொய்யா கோபாலு? வழக்கறிஞரே ஒப்புக் கொண்டு விட்டார் சீமான் இவ் நடிகையுடன் உடலுறவு கொண்டவர் என. இனி கருக்கலைப்பு செய்யச் சொல்லியது உண்மை என்பார்.
-
மனித உரிமை செயற்பாட்டாளர் பொஸ்கோ சுவிஸ் பொலிசாரால் கைது..
நியாயமான யோசிக்க வேண்டிய கருத்து. நன்றி விசுகு அய்யா
-
பெரியார் தொடர்பான லண்டன் கூட்டத்தை குழப்ப முயன்று தோற்றுப் போன சீமானின் காட்டுமிராண்டிக் கூட்டம்
உங்களுக்கு பிஸ்கட்டுகளின் சிவப்பு புள்ளிகள் நிச்சயமாக கிடைக்க போகுது பி.கு: பிஸ்கட்டின் தமிழ் உச்சரிப்பை நான் பாவிக்க கூடாதாம் நிர்வாகம் சொல்லியிருக்கு
-
பெரியார் தொடர்பான லண்டன் கூட்டத்தை குழப்ப முயன்று தோற்றுப் போன சீமானின் காட்டுமிராண்டிக் கூட்டம்
நன்றி சகோ
- Screenshot_20250209_192300_WhatsApp.jpg
-
பெரியார் தொடர்பான லண்டன் கூட்டத்தை குழப்ப முயன்று தோற்றுப் போன சீமானின் காட்டுமிராண்டிக் கூட்டம்
பௌசர் அவர்களால் நேற்றையதினம் லண்டனில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த அவரது புத்தக நிலையத்தில் நடந்த 'தந்தை பெரியார் மீது தொடர்ந்து வீசப்படும் அவதூறுகளும் கலந்துரையாடலும்' என்ற கருப்பொருளிலான உரையாடல்நி நிகழ்வு தொடங்கும் நேரத்தில் அங்கு வந்திருந்த ஒரு குழுவினர் அந்த நிகழ்வு பற்றியும் பெரியார் பற்றியும் இழிவுபடுத்திக் கத்தியதுடன் ஏற்பாட்டார்கள் நிகழ்வைத் தொடங்க அனுமதிக்காதவகையில் கத்திக் கொண்டிருந்தார்கள். கூட்டம் முடியும்போது உங்கள் கருத்துக்களை நீங்கள் தாராளமாகத் தெரிவிக்கலாம் என்று கூட்ட அமைப்பாளர் பௌசர் திரும்பத்திரும்பச் சொன்னபோதும் செவிசாய்க்காமல் தொடர்ந்து பெரியாரை திட்டியபடியும் கூட்டத்தை நடத்தமுடியாது என்றும் கூச்சலெழுப்பிக் குழப்பினர். எவ்வளவோ தடவை அமைதியைப் பேணுமாறு கேட்டபோதும் அதைக் கேட்காது அவர்கள் அட்டகாசம் செய்ததை அடுத்து அவர்களைப், பொலிசாரை அழைத்துப் பலவந்தமாக அப்புறப்படுத்த வேண்டியிருந்தது. ஆனால், இதில் பலமாகக் கத்தித் தன்னை தீவிரமான ஒருவராகக் காட்டிக்கொண்ட ஒரு நபர் அது பற்றித் தனது முகநூலில் எந்தவித வெக்கமுமின்றி, 'வீரம் ததும்ப' இவ்வாறு பதிவிட்டிருந்தார்: 'கிழக்கு இலண்டனில் திராவிடர்களால் தமிழர்கள் என்ற போர்வையில் புத்தக அறையில் 7 நபர்களுடன் நடக்கவிருந்த ஈர வெங்காயம் இராமசாமியின் கல்யாணக் கொண்டாட்டம் தமிழர்களால் தடுத்து நிறுத்தப்பட்டதுடன் விளம்பரப் பலகையும் அகற்றப்ப்பட்டது'!. என்றும், 'பொலிஸ் வந்து கூட்டத்தை நிப்பாட்டிட்டுப் போட்டுப் போனவன்' என்றும் பச்சைப் பொய்யைப் பெருமையாக பதிவுசெய்திருந்தார். உண்மையில் பெரியாரின் பாசையில் சொல்வதானால் அங்கு இவர்கள் வந்து கத்தியதன் மூலம் ஒரு 'வெங்காயமும்'புடுங்கப்படவில்லை. உண்மையில் பொலிசார் விரட்ட ஓடித் தப்பி ஊரைப்பேய்க்காட்டவும் தமது வீரத்தைப் பறை சாற்றவும் இப்படி ஒரு பச்சைப் பொய் முகநூல் பதிவொன்றை இட்டதைத் தவிர இவர்கள் வேறெதையும் சாதிக்கவில்லை. திட்டமிட்டபடி கூட்டம் நடந்து முடிந்தது. இந்த ஒன்றே போதும், பெரியார் யார், அவரை எதிர்த்து அரசியல் பிழைப்பு நடாத்தப் புறப்பட்டுள்ள இவர்கள் யார் என்பதை அடையாளம் கண்டுகொள்ள! பெரியார் இருக்கும் போது மட்டுமல்ல, இறந்து இத்தனையாண்டுகளுக்குப் பிறகும் இத்தகைய அயோக்கிய அரசியல் வெறியர்களுக்கு இன்னமும் அச்சமூட்டும் ஒருவராகத்தான் இருக்கிறார்! https://www.facebook.com/vickneaswaran.sk/videos/1130441498822683/?app=fbl
-
சுயலாபத்திற்காக தேசிய தலைவரை அணுகும் சீமான் : எழுந்துள்ள கண்டனம்
இவரையும் துரோகி என்று அழைக்க சீமானின் முரட்டு முட்டுக் கொடுப்போர் சங்கம் போலி போட்டோஷொப் பட புலவர் சங்கம் பா ஜ கவின் தீவிர நாதம் இசைப்பவர்கள் தலைவர் விடயத்திலும் போலி துவாரகா விடயத்திலும் பொட்டர் அண்ணை விடயத்திலும் கம்மென்று இருந்து விட்டு இப்ப பம்மிக் கொண்டு சீமானிற்கு ஆதரவு கொடுக்கும் முன்னால் போலி மெய்பாதுகாவலர்கள் வியாபாரிகள் விசுக்கோத்துகள் விசிலடிச்சான் குஞ்சுகள் இன்னும் ரெடியாகவில்லையா? ரெடியாகவில்லையா?? ரெடியாகவில்லையா???
-
'சீமான் துப்பாக்கி படம்' சூட்டிங் போட்டோ-பிரபாகரனை வைத்து சூதாட்டம்- ஈழ போட்டோகிராபர் அமரதாஸ் தாக்கு
அண்ணன் எவ் வழியே தம்பியும் அவ் வழியே! முட்டுக் கொடுக்க தொடங்கி தாயக விடுதலைக்காக பாடுபட்ட பொட்டம்மானை துதித்ததையும் சகித்து முட்டுக் கொடுக்கும் ஒருவர் இறுதி யுத்தத்தின் கொடூர இறுதி நிமிடங்கள் வரைக்கும் தன்னாலான பணியை செய்த அமரதாஸ் மீது பொய் குற்றச்சாட்டைத் தான் அடுக்குவது ஒன்றும் அதிசயம் அல்ல! ஆதாரம் காட்ட முடியாது என்றதுக்கு சிரிப்புக் குறியிட்டவர் யார் என்று பாருங்கள். போலி துவாராகாவின் சிஷ்ய கேடி!
-
'சீமான் துப்பாக்கி படம்' சூட்டிங் போட்டோ-பிரபாகரனை வைத்து சூதாட்டம்- ஈழ போட்டோகிராபர் அமரதாஸ் தாக்கு
@பாலபத்ர ஓணாண்டிஓணாண்டி, ஆதாரம் எங்கே? நீங்கள் இணைத்த படங்கள் உள்ள திரி எங்கே? அல்லது உங்கள் தலீவர் பொய்யிலே பிறந்து பொய்யிலே உழலும் சீமான் போல் ஆதாரம் கேட்டால் எஸ்கேப்பா?
-
'சீமான் துப்பாக்கி படம்' சூட்டிங் போட்டோ-பிரபாகரனை வைத்து சூதாட்டம்- ஈழ போட்டோகிராபர் அமரதாஸ் தாக்கு
அப்படியா? அந்த பதிவின் , திரியின் லிங் இனை பகிர ஏன் தயக்கம்? அதனை தாருங்கள்
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
இதில் வீரப்பையன் சேர்த்தி இல்லை பாஸ் அவரது தீவிர சீமான் ஆதரவு கருத்துகளுக்கு ஞான் கொஞ்சம் கூட ஆதரவு நஹி ஆனால் அவ் ஆதரவை நேர்மையாக ஒளிவு மறைவு இன்றி வெளிப்படையாக வெளிப்படுத்துகின்றார் இதே தீவிரத்தை சீமானின் உண்மை முகத்தை அவர் உணரும் காலம் வரும் போது எதிர்ப்பதிலும் காட்டுவார் என நம்புகிறேன். போலி துவாரகா விடயத்தில் அதை தீவிரமாக எதிர்த்தவர் இந்த வீரப்பையன். ஆனால் புலிகளின் காலத்தில் தமிழ் தேசியத்தினை தம் வியாபார வளர்ச்சிக்கான உத்தியாக பயன்படுத்தி பின் புலிகள் அழிவுற்றதும் போலி துவாரகா வின் பின்னும் அரிய நேத்திரங்காய் பின்னும் சீமான் பின்னும் பதுங்கி கொண்டு அவற்றையும் எப்படி தம் வியாபார வாய்ப்பிற்காய் 'பிரமுகர்' இமேஜிற்காய் பயன்படுத்தலாம் என அலையும் 'விசு' கோத்துகள் தான் மிக மிக ஆபத்தானவர்கள்.
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
உங்கள் டிசைன் அப்படி பாஸ் ஒருத்தர் ஒன்றை சொன்னால் அப்படியே நம்புவது அது சரியா பிழையா என்று ஆராயாமல் நிமிர்ந்து படுத்துக் கொண்டு துப்புவது உங்கள் டிசைன் பாஸ் என் புரொபைல் போய் நான் ஆரம்பித்த திரிகள் எவை என்று சில நிமிடங்கள் செலவழிச்சு தேடி இருந்தால் உண்மை தெரிந்திருக்கும். ஆனால் அதுக்கு மண்டையில் மூளை எனும் வஸ்து தேவை அதை வைச்சுக் கொண்டா வஞ்சகம் செய்யிறியல்! பாவம் சார் நீங்கள்.
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
பிள்ளைவாள், Sorry, பிள்ளையான் வால் (அதுக்கு முந்தி கருணா வால்), நான் தமிழ் (கேலி கூத்தாடும்) கூத்தமைப்பை பாராட்டி, வாலாட்டி, போட்ட அந்த திரியை காட்டுங்கள் வால். அல்லது போட்டுடைக்கும் சுமந்திரன் காணொளியை இணைத்ததால் கேலிக் கூத்தமைப்பை ஆதரிக்கிறேன் என்று நெனைச்சுப் புட்டியளோ வால்? அது சரி, நீங்கள் இப்ப எந்த பிரதேசவாதியின் வாலைப் பிடிச்சு தொங்குறியல்? முன்னர் நீங்கள் தொங்கிய பிள்ளையானையும் முரளிதரனையும் கிழக்கு வாழ் தமிழ் உன்னத மக்கள் தொபுக்கடீர் என்று வீழ்த்தி விட்டனரே?
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
அப்படியா குழந்தாய்? சீமானின் பித்தலாட்டத்தையும் போலி துவாரகா மற்றும் பொட்டு அம்மான் (அதாவது உங்க தலீவர் சீமான் வாயால் மசிறு என்று தூற்றப்பட்டவர்) உயிருடன் உள்ளார் என்று சொல்லிய போலிகளை பற்றி திரி திறந்தால், உங்களைப் போல் அதையொட்டியோ எதிர்த்தோ கருத்து வைக்க வேண்டும். அப்படி இல்லாமல் திரி திறந்தவரை தூற்றும் விசுக்கோத்துகளை திருப்பி விமர்சிக்க எனக்கும் உரிமை இருக்கு. குழந்தாய். ச்சிம்பிள் தியறி ஒருவரை திருடன் என்றால், ஓம் என்றோ இல்லையென்றோ விவாதிக்க வேண்டும். அப்படி இல்லாமல், நீ எப்படி அப்படி சொல்லலாம் என்பவனும் கடைந்தெடுத்த திருடனே! அப்ப நான் வரட்டா
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
திருடனை, தலைவரின் பெயரை பயன்படுத்தி தமிழ் தேசியத்தை சிதைப்பவரை அம்பலப்படுத்தினால் யார் யாருக்கு உறைக்கும்? அதே போன்று , அத் திருடனைப் போன்று வயிறு வளர்க்கும் போலித் தேசியம் கதைக்கும் வியாபாரிகளுக்குஉறைக்கும். போலித் துவாராவை அருணா அக்காளின் நாடகத்தை அம்பலப்படுத்திய போது வந்த காயம் இன்னும் ஆறவில்லை போலிருக்கு சில விசுக்கோத்துகளுக்கு.