Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. எனது புரிதல்: வீரவேங்கை என்பது நீங்கள் சொன்னது போல் பொது அடைமொழி மற்றும் முதல் தரநிலை இரெண்டும்தான். ஆனால் தளபதி சொர்ணம் போன்றோரை விளிக்கும் போது, நான் வீரவேங்கை என்பதை தவிர்கிறேன், அவர்களுக்கு தரநிலை சொல்ல முடியாத நிலையில் (மேலே விளக்கம் காண்க) வீரவேங்கை என மட்டும் போட்டால் அது தரநிலை என தவறாக புரிந்துகொள்ளபடக்கூடும் என்பதால்.
  2. பாகிஸ்தான் கிரிகெட் டீம் சும்மா உதார் வொடவே லாயக்கு.
  3. படிப்படியாக பணத்தை கொடுத்து அவர்களயே செய்ய சொல்வது விலை குறைவாக தெரிந்தாலும், வேலை சொன்னபடி, சொன்ன நேரத்தில் முடியுமா என்பது பற்றியும் யோசிக்க வேண்டும். ஓம்
  4. நன்றி நான் கேட்டவரிடம் 280-300,000 இடையே வரும் எண்டுதான் கேட்டேன். இனிப்போய் 4 என சொல்லுவது அழகாக இராது. பார்ப்போம் அதையும் ஏனையதையும் போட்டு செய்யலாம்.
  5. எதையும் தாங்கும் இதயம் இங்கே உறங்குகிறது😂 (அறிஞர் அண்ணாவின் கல்லறை வாசகம்).
  6. கள்ளனுக்கு ஒரு பாவம்… களவு கொடுத்தவனுக்கு (பலரை சந்தேகிப்பதால்) பல பாவம் என்பார்கள்… பல உண்மையான செயல்பாட்டாளர்கள் 2009 வரை, குறிப்பாக கீழ் அடுக்கில், உண்மையாக இருந்தார்கள் என்பதை மறுக்கவில்லை. இனத்துக்காக நேரம், வலுவை கொடுத்தவர்களுக்கு ஆதாரம் இல்லாமல் கள்ளபட்டம் கட்ட கூடாது என்பது உண்மை. ஆனால் இதை வைத்தே பல கள்ளரும் தப்புகிறாகள் என்பதும் உண்மை.
  7. 2009 மே 19 ற்கு முன் காவியமான அனைவரையும் மாவீரர் என அழைப்பது சாலப்பொருதமானதே என்பதே என் கருத்தும். ஆனால் நான் அறிந்த வகையில் வீரவேங்கை - 1ம் லெப்டினெண்ட்- 2ம் லெப்டினெண்ட்- கப்டன் - மேஜர், லெப்டினெண்ட் கேணல் - கேணல் - பிரிகேடியர் என்பதுதான் புலிகளின் தரநிலை அடுக்கு. அத்தோடு அதுவரை மாவீரர் ஆன பின் தரநிலை அறிவித்த இயக்கம், சமாதான காலத்தில் தளபதிகளை மட்டும், வாழும் போதே கேணல் என அறிவித்தது என நினைக்கிறேன். இங்கே தான் தளபதி சொர்ணம் போன்றோரை எப்படி அழைப்பது என்ற குழப்பம் வருகிறது. அவருக்கு வாழும்போதே இயக்கம் கொடுத்த தரம் கேணல். ஆனால் அவர் பெப்ரவரி மாதம் அளவில் மாவீரர் ஆகி இருந்தால் நிச்சயம் இயக்கம் அவரை பிரிகேடியர் ஆக்கி இருக்கும். இப்போ அவரை கேணல் என்பதா, பிரிகேடியர் என்பதா? வீரவேங்கை என்ற பதத்தை அவருக்கு பாவிக்க முடியாது என நினைக்கிறேன் (தவறு எனில் திருத்தவும்). ஆகவே மாவீரர் தளபதி சொர்ணம் என மட்டுமே நான் அவரை விளிக்கிறேன். எரிய சுணங்கினால்… நீங்கள் இருக்கிறியள்😂
  8. பார்ப்போம். பகலவன் அண்ணா என்று ஒருவர் முள்ளிவாய்க்காலில் நிண்டு வந்தவர் முன்னர் யாழில் எழுதினார். அவர் கண்ணில் பட்டால் தகவல் சொல்ல கூடும்.
  9. ஓம்… 1992 உலக கிண்ணத்தில் சிம்பாப்வே 314 அடிக்க அதை இலங்கை திரத்தி, அர்ஜுன ரணதுங்க, சம்பக்க இராமநாயக்க கடைசியாக நிண்டு 315 அடித்ததெல்லாம் வேறலெவல் கிரிகெட். அப்போ டேவிட் ஹொட்டன் அவர்களின் கேப்டன். அப்போதும் எவன்ஸ் எண்டு ஒரு வேக பந்து வீச்சாளர் இருந்தார். கோழி பண்ணை வைத்திருந்தார். ஹென்றி ஒலங்கோ. வினோதமான சிகை கொண்ட கறுப்பின வீரர். அவர்களின் முதல் முழு கறுப்பின வீரரும் என நினைக்கிறேன். 1999 உலக கோப்பை நேரம், முகாபேயின் அடாவடியை எதிர்த்து இவரும் அண்டி பிளவரும் குரல் கொடுத்தனர். அத்தோடு கேரியர் ஓவர். அண்டி பிளவர் பின்னாளில் இங்கிலாந்து கோச் ஆகினார். அப்போ இங்கிலாந்துக்கு விளையாடிய க்ரேம் ஹிக், ரொபின் குக் கூட சிம்பாப்வே அடி உள்ளோரே. அதேபோல்தான் இப்போ சாம் கரன் மற்றும் சகோதரர்களும்.
  10. கடைசியாக எந்த திகதி இயக்கத்தால் தரநிலை வழங்கப்பட்டது. மாவீரர் பணிமனை எப்போது கடைசியாக செயல்பட்டது போன்ற தகவல்களை அறிய முடியுமா என பாருங்கள். தளபதிகள் ரமேஸ், சொர்ணம், சூசை போன்றோரை கூட நாம் தரநிலை சொல்ல முடியுமா என்பதை இட்டு நான் பலவாறு சிந்திப்பதுண்டு. அவர்கள் அனைவரும் பிரிகேடியர் தரம் என்பதை மக்களும், வரலாறும் அறியும். ஆனால் - இதை அறிவிக்க தகுதியானோர் எவரும் 2009 மே 19 இன் பின் இப்பூவுலகில் இல்லை.
  11. அருமையான கருத்து. ஏன் அண்ணை முன்பு போல் இப்போ யாழுக்கு வருவதில்லை?
  12. ஆம். இதைத்தான் நானும் சொல்லவந்தேன். இது என்ன திகதி என தெரியுமா?
  13. சந்திர சேகர் ஆட்சிக்கு, ரஜீவ் காந்தி கொடுத்த ஆதரவு போலவே எமது ஆதரவும். எப்ப கவுப்பம் எண்டு எமக்கே தெரியாது ஆனால் கவுப்பம்😂 Interest rate இருக்கிற நிலைல உவர் வாதாவூரருக்கு ஓசில வீடும் கேக்குதாம் 😂
  14. இதை மிக இலகுவாக கையாளலாம். நான் 2009 மே 10 ற்கு பின் இறந்த எவருக்கும் பிரிகேடியர், கேணல், நா.ப, மா.ம எந்த பட்டத்தையும் பாவிப்பதில்லை. இயக்கம் கொடுத்த பட்டங்கள் மட்டுமே பாவிக்கபட வேண்டும். 2009 மே 19 ற்கு பின் இந்த பட்டங்கள் கொடுக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை.
  15. பார் சிறியோடு கிளிநொச்சியில் இருந்து ஒரு உள்ளாட்சி அரசியல்வாதி கூட போகவில்லையா? அல்லது கூட்டி போலவில்லையா? சுமந்திரன் பச்சை கள்ளன். பார் சிறி நழுவல் கள்ளன். முள்ளை முள்ளால் எடுத்தால் உங்கள் கைதான் கிழியும்😂.
  16. செல்வா காலத்திலேயே… வடக்கில் தமிழ் “அரசு” கட்சி எனவும்… தெற்கில் பெடரல் “கூட்டாட்சி” பார்ட்டி எனவும்… பாம்புக்கு வாலையும், மீனுக்கு தலையையும் காட்டு கள்ளர் என சீனியர் பொன்னர் ஏசுவாராம்.
  17. மேலே தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளேன். எழுதுவதுதான் அப்பிடி, இப்படி எண்டுபார்த்தால், வாசிப்பும் அப்படித்தானா? பலபெயர் எண்டால் many names. Many others எண்டால் அதை பலர் என எழுதுங்கள். அல்லது வேறு பலரும் என எழுதுங்கள். படிக்கிற நேரத்தில் தமிழை ஒழுங்கா படிக்காமல் இங்க வந்து கழுத்தையறுக்காமல் 😂. அட கடவுளே. இப்படியும் நடந்ததா😂
  18. ஏன் விலகவில்லை? வடக்கு கிழக்கில் பல இடங்களில் இருந்த முகாம்கள் ஆமி தானாக விலக்கி கொண்டுள்ளது அவர்கள் தேவைக்கு ஏற்ப. பல வருடமாக நடப்பது இது. தெற்கில் பாவாடை நாடா காணாமல் போனாலும் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து என இனவாதிகள் கதறுவதும் வழமையானதே. அனுர இதுவரை இராணுவ பிரசன்னத்தை தலையீட்டை குறைக்கவே இல்லை. மாகாண சபை தேர்தலை நடத்தாமல் தனது கைப்பொமை ஆளுனர் மூலம் ஆட்சி செய்கிறார். ஜேவிபி எம்பிகள் இருந்த இடமும் தெரியாமல் இருக்கிறார்கள். இதுதான் யதார்த்தம்.
  19. தனது பொறுப்பில் உள்ள ஒரு அமைப்பு குடிமகன் ஒருவனை அதுவும் சிறுவனை கொலை செய்துள்ளது. குடும்பம் போராடுகிறது. பொலிஸ் குடும்பத்தை மிரட்டுகிறது. மனித உரிமை அலுவலகம் விசாரிக்கிறது. குறைந்த பட்சம். நடந்தவை கவலை அளிக்கிறன. பாரபட்ச விசாரணையை உறுதி செய்யும் முகமாக சம்பந்த பட்ட அனைவரையும் லீவில் அனுப்புகிறேன் என்றாவது கூறி இருக்கலாம். இதற்கெல்லாம் நேரம் இல்லை, மலையகத்தில் போய் தொழிலாளர் கையை பிடித்து பார்த்து டிராமா போடவும், ஹெலி கொப்டரில் போய் கிரிகெட் மேட்ச் பார்க்கவும் நேரமிருக்கிறது. கபடவேடதாரி, இனவாதி அனுர. இதை பற்றி 3 ஜேவிபி யாழ் எம்பிகள் ஏதும் சொன்னார்களா? தானாக விலகி போகும் ஆமியை நாம் அனுப்பினோம் என மார்தட்ட மட்டுமே அவர்கள் ரெடி. சுமந்திரனை வென்ற நடிகர் திலகங்கள் அனுரவும் அவரின் எம்பிகளும்.
  20. இராசதுரையை இப்படி கேவலப்படுத்த கூடாது. சிறிதரன் ஈழதமிழர் அரசியலில் ஒரு மிக்சர் மாமா 😂
  21. இவ்வளவு மோசமான சுமந்திரனை எதிர்த்து சொந்த கட்சியில் ஆட்களை திரட்ட வக்கிலாத ஆள்தான் சிறி என்கிறீர்கள். இவர் எம்பி. சுமன் ஒரு உள்ளாட்சி உறுப்பினர் கூட இல்லை. ஆனால் எதுவும் செய்ய முடியாமல் முக்கிறார்.
  22. இங்கிலாந்து எனக்கு பெரிய வீட்டில் நிரந்தர வதிவுரிமை எடுத்து தராமல் ஓயமாட்டார்கள் போல இருக்கு. இலங்கை சீரிசில் விளையாடியதை வைத்து இவர்களை பைனல் வரை கொண்டு வந்துள்ளேன்.
  23. மேலே போல்டில் இருப்பதை மீள வாசிக்கவும். முழுக்க முழுக்க ஒருமையில் எழுதி உள்ள்ளீர்கள். அப்படியாயின் ஒருவரைத்தான் குறிக்கும். பல பெயர் என்பது கூட - பல பட்ட பெயர்களை பட்டியல் இட்டு, உங்களுக்கு இப்படி பல பெயர்களை அவர் கொடுத்தார் என்ற அர்த்ததில்தான் உள்ளது. நீங்கள் B என நினைத்துகொண்டு A என எழுதினால், வாசிப்பவர் A என்றே புரிந்து கொள்ள முடியும். ஆகவேதான் சொன்னேன் குழப்பி அடிக்காமல் தெளிவாக எழுத சொல்லி. பிகு பலபெயர் என்பதும் பலர் (பலபேர்) என்பதும் ஒன்றல்ல.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.