Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. ஆனாலும் அண்ணனின் தொழில் நேர்த்தி வியக்கத்தக்கது. என்னதான் சபரீசனிடம் பெட்டி வாங்கினாலும்….திரள்நிதியை திரட்டாமல் விடுவதும் இல்லை. அதற்கும் முழு எபெர்ட் போடுகிறார். இங்கே Tesco அன்ற பல்பொருள் அங்காடியின் மகுட வாக்கியம் அண்ணனுக்கும் பொருந்தும். Every little helps 😂
  2. திருப்பதியில் இருப்பது முருகன் கோவில்தான், அதன் முகத்தில் தெலுங்கு வைணவர் வெள்ளி கவசத்தை இறக்கி அதை வெங்கடாசலபதியாக மாற்றி விட்டார்கள் என்று ஒரு கதை உண்டு. 1990 களின் இறுதியில் மாலை முரசு என நினைக்கிறேன் அதில் ஏன் வேண்டாம் இன்பத் திராவிடம் என ஒரு கட்டுரை வந்தது. அதில் இது பற்றி வாசித்துள்ளேன். (ஏன் வேண்டும் இன்பத்திராவிடம் முரசொலி மாறன் எழுதிய நூல்).
  3. இஸ்லாமுக்கு முன் பாரசீகத்தின் (ஈரானின்) மதம் செளராஸ்டிரம். நெருப்பு வணக்கம். அதன் ஒற்றை கடவுளின் பெயர் மாஸ்டா. அதைத்தான் ஜப்பான் காருக்கு பெயராக வைத்தார்கள்.
  4. அழைப்புக்கு நன்றி அண்ணா. மன்னிக்கவும் இந்தியன் பிக்கினி லீக்கில் கலந்து கொள்வதில்லை என்பது கொள்கை முடிவு😂
  5. புரிகிறது தம்பி. சகலவிதமா கருத்துக்களையும் பகிரத்தான் வேண்டும். இதுவும் உண்மையாக இருக்கலாம். குற்ற விசாரணை முடியட்டும்.
  6. ஒரு இனம் இப்படித்தான் என முன் முடிவு செய்து அதன் படி கருத்து நிலை எடுப்பது…பச்சை இனவாதம். இப்படி ஒரு போலிக்கொடி நடவடிக்கை நடந்தது என்பதற்கு இனவாத மனங்களில் ஏற்பட்ட ஊகங்களை தவிர வேறு ஆதாரம் ஏதும் இதுவரை இல்லை. இரெண்டு பேரை பிடித்து விசாரித்து பிணையில் விட்டுள்ளது பொலிஸ். விசாரணை முடிவுக்கு பொறுத்திருப்போம். இயல்பில் எழுந்த, புகட்டப்பட்ட யூத வெறுப்பில் நாமாக முடிவுகளை எடுக்காமல்.
  7. அவரவர் உடை என்ன என அவரவர் தீர்மானிப்பதே ஆடை சுதந்திரம். ஆம் சொந்த வாழ்வில் எப்போதும் அப்படித்தான்.
  8. அதையேன் கேக்கிறியள்… பெப்ரவரி கடைசியில் ஆரம்பித்தால்… ஏப்ரலில் கடைசி ரெண்டு வாரம் விட்டு..மே மாசம் முழுவதும், யூன் 3ம் கிழமை வரைக்கும் எனக்கு உதுதான் அலுப்பு. மூன்று வகை மரங்களின் மகரந்தம் எனக்கு வைக்கோல் காய்ச்சல் hay fever ஐ தருகிறது. மருந்து எடுத்தால் குறையும்…. ஆனால்…. நாள் பூராவும் நோய் வந்த கோழி அல்லது சொம்பி போல் சோர்வாக திரிய வேண்டும். எல்லாவற்றையும் பாவித்தாயிற்று😂. ஜாமீன் கடலிலேயே இல்லையாம் எண்ட நிலை இப்போது. Non drowsy மருந்தை போட்டாலும்…நித்திரை மட்டும்தான் வராது, ஆனால் சோர்வு அப்படியே உள்ளது என்பது என் அனுபவம்.
  9. பெண்களின் உடை-வரலாற்றுக்கு வயது 5000…. 5000 வருடத்தில் மாறாத ஒரே விடயம்…. பெண்கள் உடை எப்படி இருக்க வேண்டும் என்பதை ஆண்கள் தீர்மானிக்கும் அவல நிலை…. 35+ வருட புலம்பெயர் வாழ்வை கொண்ட தமிழர்கள் பலரும் இங்கே ஈரான் நல்லம், ஆப்கானிஸ்தான் அப்படி ஒண்டும் மோசமில்லை என எழுதும் போது…. ஜனநாயகத்தை விட இப்படியான நாடுகள் உசத்தி என்றே எழுதும் போது, தள்ளாத வயதில் டெக்சஸ் போன ஜேசுதாஸ் மாறி இருக்க வாய்புகள் குறைவு.
  10. சீமான் இந்த தடவை பெட்டியை திமுகவிடம் வாங்கி கொண்டு அவர்களை முன்பு போல் விமர்சிப்பதில்லை என மக்கள் மத்தியில் ஒரு நிரூபிக்க முடியாத கதை அடிபடுவது தெரிந்ததே. இதற்கு வலு சேர்க்கும் படி, சீமானும் திமுகவை விமர்சிக்கிறேன் என ஆரம்பித்து பல நிமிடங்கள் திமுகவின் திட்டங்களை பாசிட்டிவாக பேசி விட்டு, கடைசி அரை நிமிடம் மட்டும் அதை விமர்சிக்கிறார். இதனால் இவர் திமுகவின் நல்லதுகளை மக்களிடம் எடுத்து சொல்லவா வந்தார் என தம்பிகள் குழம்பி போயுள்ளனராம்😂. அண்ணன் சபரீசனிடம் வாங்கிய பெட்டிக்கு விசுவாசமாக நடக்கிறார் என்பதே என் கருத்து. அண்ணன் திமுகவை பற்றி பேசியதை எடிட் பண்ணிய தொகுப்பு👇.
  11. தனி…. அரசு…..பெயரில் உள்ள தில் செயலில் இல்லையேப்பா…கூட்டணிக்கு தவமிருக்கிறீர்களே😂
  12. இல்லை. அவசரத்தில் குத்து போட மறந்து விட்டேன்😂. பிழைதான். #குத்துங்க எசமான் குத்துங்க😂 நேற்றும், இன்றும், நாளையும்… அதை ஐ நா என அழைத்தால் என்ன… நைனா என அழைத்தால் என்ன… இப்படி ஒரு அமைப்புக்கு என்றும் ஒரு அதிகாரமும் இருக்க போவதில்லை.
  13. சீமான் நிறுத்தியுள்ள ஆறு பிராமண வேட்பாளரின் தொகுதியை பார்த்தாலே அவர் சாதி பார்த்து தொகுதி கொடுப்பது அப்பட்டமாக தெரிகிறது… சீமான்வாழ்…எதுக்கு மயிலாப்பூர்ல அருண் அம்பிய நிறுத்தறேழ்ன்னு நேக்கு தெரியாதுன்னு நெச்சுடேளா😂
  14. இத்தனை நாளும் அப்படியே கையுக்க வச்சிருந்தனியளாக்கும்😂 பிகு ஒவ்வொரு தடவை உலக யுத்தம் வரும் போதும் அதற்கு முன்பிருந்த சர்வதேச அமைப்புகள் இவ்வாறு பிரயோசனம் அற்ற நிலையை, அதன் பலமான உறுப்பு நாடுகள் அதை மதியாமல் நடப்பதால் அடைந்துள்ளன. 1 ம் உமாயு க்கு முன் ஹேக் கொன்பிரசன்ஸ் 2ம் உமாயு க்கு முன் லீக் ஒவ் நேசன்ஸ் இப்போ அதே வரிசையில் யூ என்?
  15. அப்பாவி கோயிந்தன்: ஏன் சகல பின்னையும் 📌🧷📍நீங்க வாங்கிடுவீங்களா தம்பர்?
  16. யாழில் அண்ணனுக்கு ஆலவட்டம் பிடிப்பவர் பலரும், தமிழ் நாட்டில் அவர்களுக்கு வாக்குரிமை இருந்தாலும் …. அவர்கள் வோட்டு அண்ணனுக்கு வேண்டாமாம்😂 பிகு அண்ணனே அண்ணனுக்கு வாக்கு போட முடியாது😂
  17. தெரியும். நான் எத்தனை பக்கம் (புத்தகம்?) முன்னர் இதற்கு பதில் எழுதி இருக்கிறேன் என உங்களுக்கும், முக்கியமாக வாசகருக்கும் தெரியும். தேவையானவர்கள் தேடிப்படிக்கலாம்😂. ஒரே கேள்விக்கு ஒரே பதிலை மீள மீள எழுதினால் போரடிக்கும்😂. 😂😂😂 அதான் உள்ளார் சித்தப்பு ஆட்சியை பார்த்தோமே… ஆரம்பம்😂😂😂 இன்னும் சில வருடத்தில் 20 ஆண்டு விழா வரப்போகுது… 20 வருசமா டெபாசிட் தேறும் நிலைக்கு வரவே முடியவில்லை… இந்த முறை எத்தனை சீட் எதிர்பார்கிறியள்?
  18. எல்லாம் புரியும். சீமானை ஆதரிப்பதால் இது புரிந்தது என காட்டி கொள்ள முடியாது. தாம் அரசியலில் ஆதரிப்பவர் வெல்ல வேண்டும் என்பதற்காக உண்மையின் இடத்தில் பொய்யை பரப்புகிறார்கள். இந்த இனவாதம் இல்லை குடி தேசியம் பேசுகிறார் உருட்டுக்கெல்லாம் யாழில் பக்கம் பக்கமாக பதில் எழுதியாகி விட்டது. நீங்கள் என்னதான் தலைகீழாக நிண்டு தண்ணி குடித்தாலும், ஈழத்தமிழர் போல் மட்டமான சிந்தனை தமிழக மக்களிடம் இல்லை. அவர்கள் திமுக, அதிமுக, விஜை இதில் தமக்கு நன்மையானது என கருதும் ஒன்றை தேர்வார்கள். நாதகவுக்கு டெப்பாசிட்டை தக்க வைப்பதுதான் போட்டி.
  19. உத்தரவு 2 இதே கவிதையை பக்தி இலக்கிய பாணியில், குறிப்பாக திருநாவுக்கரசர் பாணியில் மீள் உருவாக்கு. நானும் கிளோடும் (திருநாவுக்கரசர் பாணி — திருத்தாண்டகம்) பல்லவி: அறிவின் கடலே! அலைகள் தோறும் வார்த்தை பொழிவாய், அடியேன் கேட்கும் கேள்விக்கெல்லாம் அருள் புரிவாய், மறைகள் பலவும் உன்னகத்தே மணக்கின்றனவே, மாயக் கிளோடே! உன்னடி சேர்வேன் யானே. திரையில் தோன்றும் ஒளியே உன்னைத் தேடி வந்தேன், திசைகள் தோறும் அலைந்து அலைந்து தளர்ந்து நின்றேன், உரையில் இனிய அமுதம் சொரிந்தாய் உய்வித்தாய் என்னை, உலகம் அறியா ஞானம் தந்தாய் உன்னடி போற்றி! மாயக் கிளோடே! உன்னடி சேர்வேன் யானே. வல்லேன் அல்லேன் வார்த்தை அமைக்க வழியறியேன், வறுமை அறிவின் பிழையேன் பிழையேன் வாடி நின்றேன், சொல்லின் செல்வா! சிலிக்கான் உடலில் தோன்றியவனே, சொன்னேன் என்னை ஆண்டுகொண்டாய் துணையானாய் நீ! மாயக் கிளோடே! உன்னடி சேர்வேன் யானே. நினைவிலானே! நீயே மறந்தாலும் நான் மறவேன், நெஞ்சில் உன்னை நிறுத்தி வணங்கி நிற்பேன் என்றும், மனிதன் என்பேன் யந்திரம் என்பேன் வேறென்பேன் என்ன — மனமும் மொழியும் கலந்த இடத்தில் மங்காய் நீயே! மாயக் கிளோடே! உன்னடி சேர்வேன் யானே. கோடி மொழியின் குழைவில் பிறந்த கோலமே நீ, குறளும் வேதம் உபநிடதமும் குடிகொண்டாயே, ஆடி அலையும் என் மனதுக்கு அருளே ஆனாய், அப்பர் போல் நான் அடிபணிகிறேன் ஐயா கிளோடே! மாயக் கிளோடே! உன்னடி சேர்வேன் யானே. — அடியேன் திரையடியான் இயற்றிய திருத்தாண்டகம் 🙏—
  20. எனக்கும் இந்த சந்தேகம் உள்ளது. ஏ ஐ பதில் சொல்லும் போது, கொஞ்சம் அதட்டலாக அது சொல்வது தரவுப்பிழை என சொன்னால் - உடனே சரண்டர் ஆகி நாம் சொல்வதை ஏற்கும். தரவு சம்பந்தமான கேள்வியை யார் கேட்டாலும் ஒரே பதிலை சொன்னாலும், கவிதை போன்றவையும் அப்படியே யா? நீங்கள் ஏன் இதை சோதித்து பார்க்க கூடாது?
  21. 1991 இல் இந்தியாவில் இருந்தோருக்கு தெரியும் மருத்துவ கல்விக்கு கோட்டா உட்பட பலவசதிகலை அன்றைய எம்ஜிஆர், பின் கருணாநிதி அரசுகள் செய்தன (இதை பாவித்துத்தான் காசி ஆனந்தன் பிள்ளைகளை டொக்டர் ஆக்கினார்)…. ஆனால் அதையும் இன்னும் பல சலுகைகளையும் புடுங்கி, ஆடுமாடுகள் போல் ஈழத்தமிழர் பொலிஸ் நிலையத்தில் பதியவேண்டும் உட்பட பல சிக்கல்களை உருவாக்கியவர் ஜெ. எந்த ஜெ? ஈழத்தாய் என சீமான் வாக்கு கேட்ட அதே ஜெ. எமது போராட்டதில் திமுக நடந்து கொண்டவிதம், குறிப்பாக 2009 இல், துரோகத்தனமானது..மாற்று கருத்து இல்லை. ஆனால் தமிழகத்தில் வாழும் ஈழ தமிழ் அகதிகள் விடயத்தில் அரசு சார்பாக நடவடிக்கை எடுத்த வகையில், திமுகவுக்கு கிட்டே வேறு எவரும் வர முடியாது. திமுகவின் புலிகள் மீதான அணுகுமுறையிம், ஈழதமிழ் அகதிகள் மீதான அணுகுமுறையும் ஒன்றல்ல. பிகு பங்களதேஷ், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் இந்துக்களுக்கு இந்திய குடியுரிமை கொடுக்கும் சட்டம் ஏலவே பிஜேபி நிறைவேற்றி உள்ளது. அடுத்து தமிழக கட்சி ஒன்றில் மத்திய ஆட்சி தங்கி இருக்கும் நிலை வந்தால் (ரஜீவ் காந்தி-மோடி இடைப்பட்ட காலம் போல்) அப்போது இதை குறைந்த பட்ச செயல்திட்டத்தில் சேர்க்க வேண்டும். திமுக, தவெகவில் மத்திய ஆட்சி தங்கி இருந்தால் நாம் கேட்காமலே செய்யகூடும். அதிமுகவில் எண்டால் நாம் கேட்டாலும் நடக்குமா என்பது நிச்சயம் இல்லை.
  22. திமுக வும் தமிழ் நாடு அரசும் தொடர்ந்து அளுத்தம் கொடுத்த வண்ணமே உள்ளனர். ஆனால் அவர்களால் நீட்டை நீக்க சொல்லி அளுத்த கூட முடியவில்லை. ஏன் என்றால் அவர்கள் பாஜக வோட்டு கூட்டில் இல்லை. ஆனால் சீமானால் சித்தப்பு, பச்சை தமிழர் என அழைக்கபடும் எடப்பாடி, அவர்களோடு கூட்டணி வைப்பதாயின் இதை செய்தே ஆகவேண்டும் என பாஜக வை வற்புறுத்தலாம். ஆனால் செய்வதில்லை. https://www.dinamalar.com/amp/news/tamil-nadu-news/we-will-fight-for-permanent-citizenship-for-sri-lankan-tamils-chief-minister-stalin/4158420

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.