Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. பாலித்தீவில் இந்த புனுகுபூனையின் பின்பக்க காப்பியை குடித்து பார்த்தேன். சும்மா…லுலுலுலா 😂
  2. மாடு தேடும் கதை யாழில் யாரோ அறிமுகபடுத்தி வாசித்தேன். ஜஸ்டின் அண்ணாவாகவும் இருக்கலாம். யாழின் சமூக சுரண்டலையும் காட்டி இருப்பார். யானை - யாழ்ப்பாணத்து ஆசிரியர்கள் வன்னியில் போய் படிபிக்காமல், மாணவர்களை தொழிலாளர் போல் சுரண்டுவதை சுட்டும் கதையா? இப்படி ஒரு செ.ஆ கதை பல வருடம் முன்பு வாசித்தேன். குவேனி - யாழில் நான் எழுதி பாதியில் நிற்கும் கவிதை தொடர் ஒன்றின் இன்ஷ்பிரேசன்.
  3. நான் நினைக்கிறேன் - இது அவர்கள் சுயமாகவே, கேள்விகள் கேட்கும் போது இப்படி பதிகிறார்கள் என. அரசு அப்படி ஒன்றாக கருதவில்லை. வட, கிழக்கு, மேற்கு மாகாணத்தில்தான் இப்படி நடக்க்க வாய்புண்டு. மலையக மக்கள் என்ற அடையாளத்தால் கிடைக்கும் ஒதுக்கலில் இருந்து வருங்கால சந்ததிகளை பாதுகாக்கும் வகையில் இதை செய்ய கூடும். இதற்கு யாழ்பாண சாதி அமைப்பின் வரலாற்றில் ஒரு உதாரணமும் உண்டு. பல்வேறு இடைநிலையில் வைக்கப்பட்ட சாதிகள், தம்மை தாமே அடையாள மாற்றத்துக்குட்படுத்தி, வெள்ளாளர் என்ற குடையின் கீழ் வந்ததாயும், இதனால்தான் வெள்ளாளருக்குள் கூட ஏற்ற தாழ்வு பார்க்கும் வழக்கம் ஏற்பட்டது என்றும் கூறுவார்கள். மலையகத்தில் இந்த போக்கு இருக்க வாய்ப்பில்லை, அப்படி இருக்கும்வரை அவர்களுக்கான உரிமை, சலுகைகளை இது பாதிக்கவும் வாய்ப்பில்லை.
  4. நான் கணக்கில ரொம்பவே வீக்- ஆனாலும். இலங்கை தமிழர் தொகை எண்ணிக்கையிலும் சதவீதத்திலும் நாடளாவிய ரீதியில் அதிகரிக்கும் போக்கை என்னால் கூட காண முடிகிறது. 30 வருட போரில் இளையோரை அதிகம் காவு கொடுத்ததன் பின் விழைவு, இன்னும் சில பத்தாண்டுகளுக்காவது இலங்கை தமிழர் பிறப்பு வீதத்தில் தெரியத்தான் செய்யும். ஆனாலும் ஒட்டு மொத்தமாக இது 15 வருடத்துள் மீள நேர்மறை வளர்சிக்கு வந்துள்ளது நல்ல செய்தியே. ஆனால் இது மட்டுமே நல்ல செய்தியாக எனக்கு படுகிறது. எமது மக்கள் தம் பாரம்பரிய வாழிடங்களில் குறிப்பாக, யாழ், மட்டகளப்புக்கு அப்பால் ஒவ்வொரு நிர்வாக மாவட்டத்திலும் வீழ்சியை அல்லது மந்த நிலையை காட்டுவது கவலையான விடயம். யாரையும் ஒரு மாவட்டத்தில் இரு என கட்டாயம் செய்ய முடியாது. வாய்புக்கள் தேடி கொழும்பு இதர பகுதிகளுக்கு போவது இயல்பே. ஆனால் 1980 ற்கு முந்திய காலம் போல் இப்படி போவபர்கள், ஊருக்கு வருவதையோ, வாக்களிப்பு பதிவை ஊரில் வைத்திருப்பதையோ இப்போ செய்வதில்லை. கொழும்பு போனால் சில வருடங்களில் அங்கே ஐக்கியமாகி விடுகிறார்கள். யாழ் மாவட்டத்தில் கூட நகருக்கு 10 கிமிக்குள் இருக்கவே பலர் விரும்புகிறனர். மட்டகளப்பிலும் எழுவான்கரையில்தான் அநேகர். தரவுகளை பார்த்தால் - சனத்தொகை அடர்த்தி குறைந்த முதல் எட்டு மாவட்டமும் எமதுதான். ஒரு ஒற்றையாட்ட்சி நாட்டில் - குறைந்தளவு மக்கள், இப்படி அதிகளவு மண்ணை ஒரு அளவுக்கு மேல் பிடித்து வைக்க முடியாது. ஏனைய மாவட்டங்களில் வளப்பற்றாக்குறை ஏற்படும் போது, கவனம் எமது மாவட்டங்கள் மீதே திரும்பும். இது மேலும் எமது மாவட்டங்களில் எமது எம் வீதத்தை குறைக்கும். எமது தனித்துவத்தின் அடிப்படையே எமது மண்ணில் நாம் அறுதி பெரும்பான்யாக இருப்பதுதான். ஆகவே ஒட்டு மொத்தமாக சதவீதம் கூடி விட்டது என்ற நற்செய்தியை விட எமது பாரம்பரிய வாழிடத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி பாரதூரமான விடயம். இதை சரிக்கட்டும் அளவுக்கு வாய்புகளை ஏற்படுத்த முடியாவிடினும், மூன்று பிள்ளைகள் பெற்று, 8 மாவட்டங்களில் ஒன்றில் வாழ்வோருக்கு மாதாந்த தொகை போல ஏதும் கொடுத்தால் ஒரு சிறிய மாற்றம் வரலாம். ஆனால் நான் உட்பட சிறிய குடும்பமே நன்று என்ற மனநிலை தமிழ் சிங்கள மக்கள் இடையே ஊறிவிட்டது. இதை உதவி தொகைகள் பெரிதாக மாற்ற சாத்தியமில்லை. முஸ்லிம்களை பிழை சொல்ல முடியாது. அவர்கள் ஒன்றும் திட்டமிட்டு இதை செய்வதில்லை. எண்ணிக்கையே பலம், இறைவன் கொடுக்கும் அருள் பிள்ளைகள் என அவர்கள் இயல்பாக நம்புவதால், எண்ணிக்கை இயல்பாகவே அதிகரிக்கிறது. அப்போ சிங்களவர், தமிழர் எண்ணிக்கையை கூட்ட என்ன செய்ய வேண்டும்? முதலில் தத்தம் மாவட்டங்களுக்கு பதிவு அளவிலாவது மீள வேண்டும். இன்றைய வேகமான உலகில் இது சாத்தியமே. அடுத்து, தனித்துவத்தை பேண நாம் எம் எண்ணிக்கையை கூட்ட வேண்டும் என்ற கூட்டு மனோநிலை உருவாக வேண்டும். அப்படி உருவாகி பிறக்கும் பிள்ளைகளை தெருவில் விடாமல், பராமரிக்க சமூக அமைப்புகள் இருக்க வேண்டும். குடும்பகட்டுப்பாட்டை ஊக்குவிக்கும் அமைப்புகள் போல, பிறப்புவீதத்தை ஊக்குவிக்கும் பிரச்சார அமைபுகளும் இருக்க வேண்டும். இப்படி எல்லாம் முயன்றுமே - ஸ்கெண்டிநேவிய நாடுகளின் இது போன்ற திட்டங்கள் தோல்விதான். ஆகவே இதற்கு silver bullet முடிவு ஏதும் இல்லை.
  5. இந்த பக்கத்துக்கு வந்து வந்து போனாலும், நீங்கள் எழுதிய இந்த பதிவு இப்பதான் கண்ணில் பட்டது😂.
  6. இவரும் என் பி பி - கட்சி இல்லை என நினைக்கிறேன்😂 குற்ற செயலில் ஈடுபடுபவரின் மைத்துனர், பக்கத்து வீட்டுகாரார், ஒரே பஸ்சில் கூடப்பயணித்தவர் என இந்த லிஸ்ட் நீளும் போல உள்ளதே😂. தாம் நிரந்தரமாக ஆட்சி செய்ய, பாதாள உலகம், கட்டுப்பாடற்ற பேரினவாதம் இரெண்டும் ஆபத்து என உணர்ந்த ஜேவிபி, அதனோடு நூலிழை சம்பந்தம் உள்ளோரை கூட கொஞ்சம் கொஞ்சமாக போட்டு தள்ள ஆரம்பித்துள்ளது. தமது சொல்லை கேட்கவில்லை என்பதால் 87 இல் விதானைமார், சப்போஸ்மாஸ்டர், போஸ்ட்மன் ஈறாக போட்டுத்தள்ளிய அமைப்புத்தான் ஜேவிபி.
  7. ஓம். ஆனால் அனுர வெள்ளை கொடி விவகாரத்தை சொல்லுற வகையில் இவரை தட்டவே மாட்டார். மீளவும் இனவாதம் மூலம் இவர்கள் தம்மை வெல்லாமல் தடுக்க மட்டுமே. மட்டுப்பட்ட தட்டல்.
  8. யார் இந்த நிரஞ்சன்? “நாமல் ராஜபக்ச முறையில்” சட்டத்தரணி ஆகி இருப்பார் போலுள்ளது. 1995 வரை சந்தையில் இருந்த காலணி, 1999, 2000 வரை பாவிக்கப்பட்டிருக்கலாமே? 1995 க்கு முன்னானது என நிறுவ முயல்வதன் மூலம், ரிவிரெசவின் பின் செம்மணி பகுதி படையினர் கட்டுப்பாட்டுக்குள் வரமுதல் புதைத்தவை என நிறுவ முயல்கிறார். ஆனால் இவை மண்டையன் குழுவின் புதைகுழியாகவும் இருக்கலாம். 87 இல் இந்தியன் ஆமியிம் உதுக்குள்ள நிண்டதெல்லோ.
  9. கிரிமினல் வழக்குகள் என்ற போர்வையில் என் பி பி யின் அரசியல் எதிரிகள் துரத்தபடுவதன் இன்னொரு ஆதாரம் ?
  10. மேலே மாட்டை பற்றி கேட்க, மாட்டை கொண்டு வந்து மரத்தில் கட்டி விட்டு, மரத்தை பற்றி விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளதே? போதவில்லையா😂. எமக்கு எப்படி நாமாம்? இது எந்த வகையில் கட்டப்படாமல் தேங்கிய வரி என்பது தெரியவில்லை (மேலே இப்படித்தான் தேங்கி இருக்கலாம் என ஒரு ஊகம் கொடுக்கப்பட்டுள்ளது). ஆனால் முதல் பக்கத்தில் பதிந்த செய்திகளின் அடிப்படையில், திவாலாகுக் போது 240 மில்லியன் வரை HMRC க்கு இந்த நிறுவனம் கடனை கட்டாமல் விட்டு விட்டு திவாலாகியுள்ளது. 250 மில்லியன்க்கு 6-8 secondary schools ஐ கட்டலாம் என்கிறது ஜெமினி. இது ஒவ்வொரு யூகே வரியிறுப்பாளருக்கும் நாமம்தானே?
  11. நான் முதன் முதலில் பார்க்கும் போது சீனோர் இழுத்து மூடிய நிலையில் இருந்தது. அப்படியே கொஞ்ச தூரம் போனால் நேவி காம்ப். சின்னவயதில் செங்கை ஆழியான் கடற்கோட்டை நாவல் வாசித்ததில் இருந்து அதன் மீது ஒரு அதீத காதல். எப்படியாவது காசு உழைத்து அதை வாங்கி, அதில் குடியேறி விட வேண்டும், போர்ட்டில் வேலைக்கு வந்து போகவேண்டும் எனவெல்லாம் கூட யோசித்தது உண்டு. ஜெட்டியில் போய் நின்று பார்த்து வருவதோடு சரி. அப்போ ஊர்காவற்துறை போகும் பாதையும் உடைந்து கிடந்தது. யுத்த முடிவில், கடற்கோட்டை உள் போய் பார்க்கவும், பாதையில் பயணிக்கவும் வாய்ப்புக்கிட்டியது.
  12. அந்த காலத்தில் உங்கள் பிரதம எஞ்சினியராக ஒரு நெடு நெடு என வளர்ந்த மனிதர் இருந்தாரா அண்ணை? அதேபோல் போர்மென் உதவியாளராக கொஞ்சம் கட்டையாக நிறைய தலைமுடியோ கொஞ்சம் ரஜனி சாயலில் இன்னொருவர் இருந்தாரா? இப்பவும் எண்ணை மட்டும் அல்ல ரொம்ப சுவையான எள்ளுருண்டை தயாரிப்பும் வீட்டு கைத்தொழிலாக நடக்கிறது. பழக இனிமையான மக்கள்.
  13. நல்ல ஆனைக்கோட்டை எண்ணையில் உருட்டிய உருட்டு போல இருக்கண்ணை😀. அந்த மதகில் ஐந்து நீரை கட்டுப்படுத்தும் துவாரங்கள் உள்ளன என்பதால் காரணப்பெயர் என நான் கேள்விப்பட்டேன். கல்லுண்டாய் வெளிக்குள்ளால் போவது 782 வா? முன்னர் நாவாந்துறையை நெருங்கும் போது ஆரம்பிக்கும் சுகந்தம், மாநகரசபையின் கருணையால் வெளியில் இறங்கியதுமே ஆரம்பிக்கிறதாம்.
  14. சென்னை: எண்ணூர் பெரிய குப்பத்தில் கரை ஒதுங்கிய 4 இளம் பெண்களின் சடலம்; பின்னணி என்ன? வடசென்னை எண்ணூர் பெரியகுப்பம் கடற்கரை பகுதியில் நான்கு இளம் பெண்களின் உடல்கள் தற்போது கரை ஒதுங்கியுள்ளன. கரை ஒதுங்கிய சடலங்களை அந்தப் பகுதியிலிருந்த மீனவர்கள் பார்த்தவுடன் எண்ணூர் போலீசாருக்குத் தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சடலங்களைக் கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இந்த நான்கு பேரும் சென்னையிலுள்ள இலங்கை அகதிகள் முகாம் ஒன்றைச் சார்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. இவர்கள் நால்வரும் எண்ணூர் பகுதியில் கடலில் குளிக்க வந்தபோது, அவர்களில் ஒருவர் கடல் அலையில் சிக்கியுள்ளார். அவரைக் காப்பாற்ற முற்பட்டபோது மற்ற மூவரும் ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. உயிரிழந்த தேவகி, ஷாலினி, பவானி ஆகியோர் திருவள்ளூர் பொன்னேரியைச் சேர்ந்தவர்கள் எனவும், ஷாலினி என்பவர் அரசுக் கல்லூரியில் பயின்று வருவதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. சடலங்களைக் கைப்பற்றிய போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை: எண்ணூர் பெரிய குப்பத்தில் கரை ஒதுங்கிய 4 இளம் பெண்களின் சடலம்; பின்னணி என்ன? https://www.vikatan.com/சென்னை: எண்ணூர் பெரிய குப்பத்தில் கரை ஒதுங்கிய 4 இளம் பெண...
  15. 2023 இல் நடந்தாய் வாழி வழுக்கை ஆறே என்ற பெயரில் இந்த மாரிகால ஆற்றின் வழி நடக்கும் ஒரு நடை பயணம் நடந்தது. இதன் walk path ஐ ஒரு trekking போல பிரபல்ய படுத்தினால், சாரணரும் உள், வெளி நாட்டு பயணிகளும் ஆர்வமாக கலந்துகொள்வார்கள்.
  16. 👆👇 ஏனைய இனங்களை பார்த்து குத்தி முறிவதில் பலனேதும் இல்லை மக்காள். இயற்கையாகவே நீங்கள் ஆப்பை செருகிகொள்வீர்கள். கொழும்பிலும், கம்பஹாவிலும் இலங்கை தமிழர் எண்ணிக்கை சதவீதம் எப்படி கூடியுள்ளது என பார்க்க ஆவல்.
  17. நான் எழுதிய கருத்தின் பின்னர் வசி உட்பட பலர் எழுதியவை. தாம் ஒருவரோடு, அல்லது பலரோடு பழகிய அனுபவத்தை மட்டும் வைத்து ஒட்டு மொத்த இனத்தையே எடை போடுகிறார்கள். இது 1990 இல் புலிகள் எடுத்த அதே அணுகுமுறை. அதாவது தனிமனிதர்களின் அல்லது குழுக்களின் தவறுக்கு இனத்தையே பழிகூறுவது. நாம் வாயளவில் மன்னிப்பு கேட்டாலும், பலரின் முஸ்லிம்கள் பற்றிய பார்வை 1990 இல் இருந்து அப்படியே உள்ளது என்பதை இது காட்டுகிறது. சாத்ஸ்சுக்கான பதில் - கோட்ட காலத்தில் முஸ்லிம் ஊர்காவல் படை இருக்கவில்லை. ஆனால் முஸ்லிம்கள் பலர் அரச படையுடன் சேர்ந்து இயங்கினர். அமைச்சராகவும் இருந்தனர். ஆனால் இதை 1990 காலத்தோடு ஒப்பிட முடியாது. 1990 போலன்றி இது அவர்கள் அமைப்பாக அல்லது, தனி மனிதர்களாக அரசுக்கு ஆதரவழித்த நிகழ்வு. டக்லஸ், கருணா என பல தமிழர்களும் ஆதரவழித்தனர். அதை வைத்து ஒட்டுமொத்த தமிழரை குற்றம் சொல்ல இயலாதே. புதிதாக ஒவ்வொரு வருடமும் ஒரு கதை சேர்ப்பது பற்றி ஏலவே என் கருத்தை முதலாம் பதிவிலே கூறிவிட்டேன். நீங்கள் சொல்வது உண்மையே ஆகினும் (எனது தனிப்பட்ட வாழ்வில் சுயநலமிகளை இன வேறுபாடின்றி சகல இனத்திலும் கண்டுள்ளேன்) அதனால் மட்டும் அவர்களுக்கு அவர்கள் வாழிடத்தில் இருக்கும் உரிமையை நாம் இல்லை என மறுக்க முடியாது.
  18. 3. நான் பேசிப்பார்த்தவரை பல முஸ்லிம்களின் மனநிலை - சிங்களவரும் தமிழரும் ஒன்றே என்பதே. இது அவர்கள் மத அடிப்படையில், அனுபவ அடிப்படையில் அடைந்த முடிவு. இதில் நாம் முரண்படலாம். ஆனால் முடிவை திணிக்க கூடாது. திணிக்க முடியாது என்பதே கள யதார்த்தம்.
  19. கொஞ்சம் ஒரு முஸ்லீமாக இருந்து யோசித்து பாருங்கள். இது பச்சோந்திதனம் அல்ல. தம் இனத்தின் நல்வாழ்வுக்கு எது தேவை என்ற சுய நலன் மட்டுமே. சிங்களவன் எம்மைத்தான் அடித்தான். அவர்கள் ஏன் அதற்கு சிங்களவனோடு முண்ட வேண்டும்? கோட்டா காலத்தில் அவர்கள் தாக்கப்பட்ட போது நாம் பார்வையாளராத்தான் இருந்தோம் இல்லையா? சிங்களவர்-முஸ்லிம்களின் 1900 களில் ஏற்பட்ட பிணக்கை, முஸ்லிம் விரோதமாக, சிங்களவர் ஆதரவாக தீர்க்க உதவினார் என்றுதானே இராமனாதனை மனிதர்கள் வண்டி இழுத்து போனார்கள்? முஸ்லிம்கள் நாடெங்கிலும் பரந்து வாழ்கிறார்கள். எம்மைபோல் நாட்டில் எங்கு வாழ்ந்தாலும் வடக்கு அல்லது கிழக்கில் “அடி” உடையோர் அல்ல அவர்கள். அவர்களில் பலருக்கு பேருவளையும், காலியும், வெலிகமவும், இன்ன இடங்களும்மே சொந்த இடங்கள். எனவே அவர்கள் ஒருபோதும் தனிநாடு கோரவில்லை. இதை எப்படி பிழை என்றோ, பச்சோந்திதனம் என்றோ கூற முடியும். அவர்கள் தமது இனநலன் கருதியே செயல்படுகிறனர். அவர்களை பொறுத்தவரை: தற்போது இருப்பது அல்லது 1948 இன் பின் இருப்பது போல இருக்க சம்மதம். அதாவது சிங்கள மேலாண்மையின் கீழ் இருக்க சம்மதம். ஆனால் தமிழர் மேலாண்மையின் கீழ் இருக்க சம்மதம் இல்லை. தமிழருக்கு ஒரு அலகு கொடுக்கின், எமக்கும் அதுபோல் வேண்டும். இதில் என்ன தவறு உள்ளது. அவர்கள் மிகதெளிவாக தமது இனநலன் சார்ந்து கூட்டு முடிவெடுக்கிறார்கள். நாம் அவர்கள் எமது இனநலனுக்கு முடிவை மாற்றி எடுக்க வேண்டும் என நினைப்பதுதான் தவறானது. பிகு 1. நாட்டை பிரித்து அதில் ஒரு துண்டை எமக்கு தாருங்கள் என எந்த முஸ்லீமும், எப்போதும் கோரவில்லை. மாறாக நாட்டை பிரிக்காமல் தமிழருக்கு இனப்பரம்பல் அடிப்படையில் ஒரு அலகை கொடுக்கின், எமக்கும் அப்படியே தாருங்கள் என்பதே அவர்கள் கோரிக்கை. அதேபோல் சிங்களவர் அவர்களை அடித்த போதும், முஸ்லிம்கள் நாமும் தமிழர் என எம்மிடம் உதவி கோரவில்லை. உங்களை போல நாமும் ஒரு சிறுபான்மை இனம் என்றே சொன்னார்கள்.
  20. நன்றி நன்னி. இதுவும் கூட தமிழ் தேசிய பேரினத்தில் அடங்கும் இனக்குழு எனவே முஸ்லிம்களை அழைக்கிறது. முஸ்லிம்களை பொறுத்தமட்டில் இலங்கை சோனகர், இலங்கை தமிழருக்கு நிகரான ஒரு இனம். என்பதே அவர்கள் நிலைப்பாடு. நாம் 12% அவர்கள் 10% எனும் போது, அவர்கள் வாழும் இடங்கள் அவர்களினதும் மரபுவழி நிலப்பரப்புத்தான் எனும் போது, இது நியாயமான கோரிக்கை போலவே எனக்கு படுகிறது. என்ன நாம் போராடினோம் அவர்கள் போராடவில்லை. ஆனால் போராடினோமா இல்லையா என்பதல்லவே உரிமை உள்ளதா இல்லையா என்பதன் அளவுகோல்?
  21. இது நான் அறியாதது. தகவலுக்கு நன்றி. ஆதாரம் தந்தால் மகிழ்வேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.