Everything posted by ஏராளன்
-
ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
போரை நிறுத்துவது குறித்து கூட்டாகவே தீர்மானிப்போம் -டிரம்ப் Mar 9, 2026 - 10:24 AM ஈரான் உடனான போரை எப்போது முடிவுக்குக் கொண்டு வருவது என்பது குறித்து இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் இணைந்து எடுக்கப்படும் ஒரு பரஸ்பர முடிவாக இருக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளதாக டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் செய்தி வெளியிட்டுள்ளது. தொலைபேசி வாயிலாக அளித்த பேட்டியில் டிரம்ப் இதனைக் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாங்கள் இருவரும் இது குறித்துப் கலந்துரையாடி வருகின்றோம். சரியான நேரத்தில் நான் ஒரு முடிவை எடுப்பேன் என அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்கா தமது தாக்குதல்களை நிறுத்த முடிவு செய்தால், இஸ்ரேல் மட்டும் ஈரானுக்கு எதிரான போரைத் தொடர முடியுமா என இதன்போது வினவப்பட்டுள்ளது. அதற்கு பதில் வழங்கிய டிரம்ப், அத்தகைய ஒரு சூழல் உருவாக வாய்ப்பில்லை என குறிப்பிட்டுள்ளார். அதற்கான அவசியம் ஏற்படும் என்று தாம் நினைக்கவில்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். ஈரானின் புதிய அதி உயர் தலைவராக மொஜ்தபா கமேனி நியமிக்கப்பட்டது குறித்துக் கேட்டபோது, என்ன நடக்கிறது என பார்ப்போம் எனக் கூறி அது குறித்துக் கருத்து தெரிவிக்க டிரம்ப் மறுத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இருப்பினும், முன்னதாக மொஜ்தபாவுக்கு தனது எதிர்ப்பைத் தெரிவித்திருந்த டிரம்ப், கமேனியின் மகனை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியிருந்தார். அத்துடன் தமது ஆதரவின்றி தெரிவு செய்யப்படும் தலைவர் நீண்ட காலம் உயிருடன் இருக்கப் போவதில்லை எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. போரை நிறுத்துவது குறித்து கூட்டாகவே தீர்மானிப்போம் -டிரம்ப்
-
தேசிய வாய் சுகாதாரக் கணக்கெடுப்பு மார்ச் 10 ஆரம்பம்; இலங்கையர் ஒருவரின் வருடாந்த சீனியின் நுகர்வு 34 கிலோவாக அதிகரிப்பு
தேசிய வாய் சுகாதாரக் கணக்கெடுப்பு மார்ச் 10 ஆரம்பம்; இலங்கையர் ஒருவரின் வருடாந்த சீனியின் நுகர்வு 34 கிலோவாக அதிகரிப்பு Published By: Vishnu 09 Mar, 2026 | 03:53 AM இலங்கையின் 5ஆவது தேசிய வாய் சுகாதாரக் கணக்கெடுப்பு நடவடிக்கைகளை எதிர்வரும் மார்ச் மாதம் 10ஆம் திகதி ஆரம்பிக்கச் சுகாதார மற்றும் ஊடக அமைச்சு திட்டமிட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைக்கமைய, 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை இவ்வாறான கணக்கெடுப்புகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.South Asians & Diaspora நாடளாவிய ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட 10 ஆயிரம் பேரிடம் முன்னெடுக்கப்படவுள்ள இக்கள ஆய்வின் மூலம், பாடசாலை மாணவர்கள் மற்றும் பெரியவர்களின் வாய் சுகாதார நிலை தரவுகள் சேகரிக்கப்படவுள்ளன. இதற்காக வீடுகளுக்கும் பாடசாலைகளுக்கும் வருகை தரும் மருத்துவக் குழுவினருக்குப் பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. இக்கணக்கெடுப்பு குறித்து விளக்கமளிக்கும் விசேட ஊடக சந்திப்பு அண்மையில் நடைபெற்றது. இதன்போது கருத்துத் தெரிவித்த சுகாதார அதிகாரிகள், நபரொருவர் ஆரோக்கியமாக வாழ ஆண்டுக்கு 10 கிலோ சீனியை மாத்திரமே பயன்படுத்த வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ள போதிலும், இலங்கையில் நபரொருவர் ஆண்டுக்குச் சராசரியாக 34 கிலோ சீனியைப் பயன்படுத்துவதாக தெரிவித்தனர். கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் வாய் சுகாதாரத்தில் முன்னேற்றம் காணப்பட்டாலும், 5 வயது சிறுவர்களின் பற்சிதைவு வீதம் 63 சதவீதமாகவும், பெரியவர்களின் பல் ஈறு பாதிப்பு 50 சதவீதமாகவும் உள்ளமை சுட்டிக்காட்டப்பட்டது. இக்கணக்கெடுப்பிற்காகச் சுமார் 20 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. தேசிய வாய் சுகாதாரக் கணக்கெடுப்பு மார்ச் 10 ஆரம்பம்
-
ஈரானின் புதிய அதி உயர் தலைவர் தெரிவு?
இரானின் புதிய உச்ச தலைவர் 'மொஜ்தபா காமனெயி' - யார் இவர்? அரசியல் பின்னணி பட மூலாதாரம்,Tasnim News Agency கட்டுரை தகவல் பிபிசி பாரசீக மொழி சேவை 9 மார்ச் 2026, 01:33 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்ட இரானின் ஆயதுல்லா அலி காமனெயியின் மகனான மொஜ்தபா காமனெயி, அடுத்த அதிஉயர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தந்தையைப் போலல்லாமல், 56 வயதான அவர் பெரிதாக அறியப்பட்டவர் அல்ல. அவர் ஒருபோதும் அரசாங்கப் பதவியை வகித்ததில்லை, பொது உரை அல்லது நேர்காணல்களை வழங்கியதில்லை, அவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன. ஆனால் பல ஆண்டுகளாக இரானில் திரைக்குப் பின்னால் அவர் கணிசமான செல்வாக்கைக் கொண்டிருந்ததாக வதந்திகள் உள்ளன. 2000களின் பிற்பகுதியில் அமெரிக்க ராஜதந்திர நடவடிக்கைகள் பற்றி விக்கிலீக்ஸ் வெளியிட்ட ரகசியங்கள், அவரை "அங்கிகளுக்குப் பின்னால் உள்ள சக்தி" என்று விவரித்தன, அவர் ஆட்சிக்குள் "திறமையான மற்றும் வலிமையான" நபராக பரவலாகக் கருதப்பட்டதாக ஏ.பி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆயினும்கூட, அவரது தேர்வு இன்னும் சர்ச்சைக்குரியதாக இருக்கலாம். முடியாட்சி தூக்கியெறியப்பட்ட பிறகு 1979-ஆம் ஆண்டு இஸ்லாமிய குடியரசு நிறுவப்பட்டது. அதன் சித்தாந்தம், பரம்பரை வாரிசுரிமை மூலம் அல்ல, மாறாக அவரது மத நிலைப்பாடு மற்றும் நிரூபிக்கப்பட்ட தலைமைத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் அதிஉயர் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்டது. காமனெயி தனது ஆட்சிக் காலத்தில், இஸ்லாமிய குடியரசின் எதிர்காலத் தலைமை குறித்து பொதுவான சொற்களில் மட்டுமே பேசினார். அதிஉயர் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் மதகுரு அமைப்பான இரான் நிபுணர்கள் சபையின் ஒரு உறுப்பினர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, காமனெயி தனது மகன் எதிர்காலத் தலைமைக்கான வேட்பாளராக இருப்பதற்கான யோசனையை எதிர்த்ததாகக் கூறினார். ஆனால் அவர் அத்தகைய ஊகங்களை ஒருபோதும் பகிரங்கமாகக் கூறியதில்லை. பட மூலாதாரம்,EPA மொஜ்தபா காமனெயி யார்? செப்டம்பர் 8, 1969 அன்று இரானின் வடகிழக்கு நகரமான மஷாத்தில் பிறந்த மொஜ்தபா, காமனெயியின் ஆறு குழந்தைகளில் இரண்டாவது குழந்தை. அவர் டெஹ்ரானில் உள்ள மத அலவி பள்ளியில் இடைநிலைக் கல்வியைப் பெற்றார். 17 வயதில், மொஜ்தபா இரான்-இராக் போரின் போது பல குறுகிய காலத்திற்கு இராணுவத்தில் பணியாற்றினார் என்று இரானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எட்டு வருட ரத்தக்களரி மோதல்கள், இராக்கை ஆதரித்த அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகள் மீது இரான் ஆட்சியாளர்களை மேலும் சந்தேகப்பட வைத்தன. 1999-ஆம் ஆண்டில், மொஜ்தபா தனது மதப் படிப்பைத் தொடர ஷியா இறையியலின் முக்கிய மையமாகக் கருதப்படும் புனித நகரமான கோமுக்குச் சென்றார். இது வரை அவர் மதகுருமார்களின் உடைகளை அணியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தனது 30 வயதில் ஒரு செமினரியில் கலந்து கொள்ள அவர் ஏன் முடிவு செய்தார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. சமீபத்திய நாட்களில், சில ஊடக நிறுவனங்களும் இரானில் உள்ள அதிகார மையங்களுக்கு நெருக்கமான அதிகாரிகளும் மொஜ்தபா காமனெயியை "ஆயதுல்லா" என்று குறிப்பிடத் தொடங்கியுள்ளனர், இது ஒரு மூத்த மதகுருமார் பட்டமாகும். இந்த மாற்றம் அவரது நிலையை உயர்த்தி அவரை நம்பகமான தலைவராகக் காட்டும் முயற்சியாக சில பார்வையாளர்களுக்குத் தோன்றுகிறது. செமினரி அமைப்பில், "ஆயதுல்லா" பதவியை வகிப்பதும், உயர் வகுப்புகளுக்கு கற்பிப்பதும் ஒரு நபரின் கல்வி நிலை மற்றும் அறிவின் வெளிப்பாடாகக் கருதப்படுகின்றன. அவை எதிர்காலத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேவைகள் மற்றும் முன்நிபந்தனைகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றன. ஆனால் ஏற்கனவே ஒரு முன்னுதாரணமாக உள்ளது. 1989-இல் இரண்டாவது அதிஉயர் தலைவராக ஆன பிறகு காமனெயி விரைவில் "ஆயதுல்லா" ஆனார். பட மூலாதாரம்,West Asia News Agency Via Reuters அரசியல் தலையீடு குற்றச்சாட்டுகள் 2005 அதிபர் தேர்தலின் போது மொஜ்தபாவின் பெயர் முதன்முதலில் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது. அந்த தேர்தலில் தீவிரப் போக்காளராக அறியப்பட்ட மெஹ்மூத் அஹ்மதி நிஜாத் வெற்றி பெற்றார். காமனெயிக்கு எழுதிய பகிரங்க கடிதத்தில், இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) மற்றும் அஹ்மதிநிஜாத் வெற்றிபெற உதவும் வகையில் மதக் குழுக்களுக்கு பணத்தை விநியோகித்த பாசிஜ் குழு ஆகியவற்றின் மூலம் அதிபர் தேர்தலில் மொஜ்தபா தலையிட்டதாக சீர்திருத்தவாத வேட்பாளர் மெஹ்தி கரூபி குற்றம் சாட்டினார். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, மொஜ்தபா மீண்டும் அதே குற்றச்சாட்டை எதிர்கொண்டார். அஹ்மதிநிஜாத்தின் மறுதேர்தல் நாடு முழுவதும் 'பசுமை இயக்கம்' என்று அழைக்கப்பட்ட வெகுஜன போராட்டங்களைத் தூண்டியது. மொஜ்தபா தனது தந்தைக்குப் பிறகு இரானின் அதிஉயர் தலைவராக முடியும் என்ற கருத்தை எதிர்த்து சில போராட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பினர். அப்போதைய துணை உள்துறை அமைச்சர் முஸ்தபா தஜ்ஜாதே, இந்த முடிவை "தேர்தல் சதி" என்றார். அவர் ஏழு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார், இதற்கு "மொஜ்தபா காமனெயியின் விருப்பமே" காரணம் என்று அவர் விமர்சித்தார். பட மூலாதாரம்,Getty Images இரண்டு சீர்திருத்த வேட்பாளர்களான மிர்-ஹொசைன் மௌசவி மற்றும் மெஹ்தி கரூபி ஆகியோர் 2009 தேர்தலுக்குப் பிறகு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். பிப்ரவரி 2012-இல், மௌசவியை நேரில் சந்தித்து போராட்டத்தை கைவிடுமாறு மொஜ்தபா வலியுறுத்தினார் என்று இரானிய வட்டாரங்கள் பிபிசி நியூஸ் பாரசீகத்திடம் தெரிவித்தன. இப்போது, இரானின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிஉயர் தலைவராக, மொஜ்தபா தனது தந்தையின் கடும்போக்கான கொள்கைகளைத் தொடருவார் என்று பலர் எதிர்பார்க்கிறார்கள். அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களில் தனது தந்தை, தாயார் மற்றும் மனைவியை இழந்த ஒருவர் மேற்கத்திய அழுத்தத்திற்கு அடிபணிய வாய்ப்பில்லை என்றும் சிலர் நம்புகிறார்கள். ஆனால், இஸ்லாமியக் குடியரசின் இருப்பை உறுதி செய்வதும், அரசியல் மற்றும் பொருளாதார பேரழிவிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்குத் தானே சரியான நபர் என்பதை பொதுமக்களை நம்ப வைப்பதும் அவருக்கு மிகவும் கடினமான பணியாகும். அவரது தலைமைத்துவம் பெரும்பாலும் சோதிக்கப்படாமல் உள்ளது. இஸ்லாமிய குடியரசு ஒரு பரம்பரை அமைப்பாக மாறி வருகிறது என்ற கருத்து பொதுமக்களின் அதிருப்தியை மேலும் ஆழப்படுத்தக்கூடும். மொஜ்தாபா இப்போது ஒரு குறிப்பிடத்தக்க மனிதர். ஆயதுல்லா அலி காமனெயியின் வாரிசாகத் தேர்ந்தெடுக்கப்படும் நபர் "அடுத்த இலக்காக" இருப்பார் என்று இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் கடந்த வாரம் கூறினார். இரானின் புதிய உச்ச தலைவர் 'மொஜ்தபா காமனெயி' - யார் இவர்? அரசியல் பின்னணி
-
ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்
டி20 உலகக் கோப்பை சாம்பியன் - ஒரே வெற்றியில் இந்தியா படைத்த 4 வரலாறு என்ன? பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் பிரதீப் கிருஷ்ணா பிபிசி தமிழ் 8 மார்ச் 2026 வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் பிப்ரவரி 7-ம் தேதி 2026 டி20 உலகக் கோப்பை தொடங்கும்போது இதுதான் டி20 உலகக் கோப்பையின் வரலாறு. தொடரை நடத்திய நாட்டின் அணி கோப்பையை வென்றது இல்லை எந்த நடப்பு சாம்பியனும் கோப்பையை தக்க வைத்ததில்லை நியூசிலாந்து அணியை இந்தியா வீழ்த்தியதில்லை ஆனால், மார்ச் 8 இந்த வரலாறை மாற்றி, மூன்றாவது முறையாக டி20 உலகக் கோப்பையை வென்ற முதல் அணி என்ற புதிய வரலாறு படைத்திருக்கிறது இந்தியா. ஆமதாபாத்தில் நடந்த இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 255 ரன்கள் குவித்தது இந்தியா. அடுத்து விளையாடிய நியூசிலாந்து அணி 19 ஓவரில் 159 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து மூன்று போட்டிகளில் அரைசதம் அடித்து இந்தியா கோப்பை வெல்ல முக்கியக் காரணமாக விளங்கிய சஞ்சு சாம்சன் தொடர் நாயகன் விருது வென்றார். பட மூலாதாரம்,Getty Images அபிஷேக் அதிரடியும் மிகப் பெரிய பவர்பிளேவும் வழக்கமாக அதிரடியாக பேட்டிங்கைத் தொடங்கிக்கொண்டிருக்கும் சஞ்சு சாம்சன் இந்தப் போட்டியில் சற்று நிதானம் காட்டினார். மேட் ஹென்றி வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரின் முதல் 4 பந்துகளையுமே அவர் டாட் பால்களாகவே ஆடினார். ஹென்றியின் லென்த், ஸ்விங் ஆகியவற்றைக் கவனமாக கவனித்து ஆடினார் சாம்சன். அதிகம் படிக்கப்பட்டது அமெரிக்காவை வெல்ல முடியாது என தெரிந்தும் இரான் போரை தொடர்வது ஏன்? இந்தியாவின் வெற்றி தருணங்களை காட்டும் 10 புகைப்படங்கள் வலியே தெரியாமல் ரத்தம் உறிஞ்சும் 'அட்டைகள்' - நீங்கள் என்ன செய்ய வேண்டும்? போர்ப் பதற்றத்துக்கு நடுவே சந்திப்பு: 'நண்பன்' இரானை எதிர்த்து சௌதிக்காக பாகிஸ்தான் களமிறங்குமா? End of அதிகம் படிக்கப்பட்டது இரண்டாவது ஓவரில் ஆஃப் ஸ்பின்னர் கிளென் ஃபிலிப்ஸ் பந்துவீச வர, இம்முறை அபிஷேக் மிகவும் கவனமாக எதிர்கொண்டார். அந்த ஓவரில் அவர் சந்தித்த 4 பந்துகளில் 3 ரன்கள்தான் எடுத்தார். இரண்டு ஓவர்கள் முடிவில் இந்தியா 12 ரன்கள் எடுத்திருந்தது. ஆனால், சான்ட்னர் அதன்பிறகு எடுத்த முடிவு போட்டியின் போக்கையே மாற்றியது. முதலிரு ஓவர்கள் வீசிய பௌலர்களின் ஸ்பெல்லைத் தொடராமல், அடுத்த இரு ஓவர்களும் புதிய பௌலர்களைப் பயன்படுத்தினார் அவர். மூன்றாவது ஓவரை வீசிய ஜேக்கப் டஃபி நன்கு வேகம் கொடுக்க, அதை எதிர்பார்த்துக் காத்திருந்த இந்திய பேட்டர்கள் அதிரடியைத் தொடங்கினார்கள். அந்த ஓவர்களில் 15 ரன்கள் வர, லாக்கி ஃபெர்குசன் வீசிய நான்காவது ஓவரில் 24 ரன்கள் எடுக்கப்பட்டது. பட மூலாதாரம்,Getty Images அதன் விளைவாக நான்காவது ஓவரின் முடிவிலேயே இந்தியா 50 ரன்களைக் கடந்துவிட்டது. தொடர்ந்து சொதப்பிக்கொண்டிருந்த இந்தியாவின் தொடக்க ஜோடி முதல் முறையாக நான்கு ஓவர்களை கடந்தது. அதே வேகத்தில் இந்திய ஓப்பனர்கள் இருவரும் தொடர்ந்து ஆடினார்கள். மேட் ஹென்றி வீசிய ஐந்தாவது ஓவரில் 21 ரன்கள், ஜேக்கப் டஃபி வீசிய ஆறாவது ஓவரில் 20 ரன்கள் என ரன்கள் வந்துகொண்டே இருந்தது. பவர்பிளே முடிவில் இந்திய அணி 92 ரன்கள் விளாசியிருந்தது. இந்த உலகக் கோப்பையில் பவர்பிளேவில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுதான். அந்த பவர்பிளேவுக்குள்ளேயே அபிஷேக் ஷர்மாவும் தன்னுடைய அரைசதத்தை நிறைவு செய்திருந்தார். 18 பந்துகளில் அரைசதம் கடந்தார் அவர். இந்த உலகக் கோப்பையின் அதிவேக அரைசதம் இதுதான். பட மூலாதாரம்,Getty Images ஹாட்ரிக் அடித்த சஞ்சு சாம்சன் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான சூப்பர் 8 போட்டி, இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி என தொடர்ந்து இரண்டு போட்டிகளில் அரைசதம் அடித்த சஞ்சு சாம்சன், இந்த இறுதிப் போட்டியிலும் அரைசதம் கடந்து ஹாட்ரிக் அடித்தார். அபிஷேக் ஷர்மா ஒருபக்கம் அதிவேக அரைசதம் எடுத்து சாதனை படைக்க, வழக்கம் போல் சத்தமே இல்லாமல் தன்னுடைய 'கிளாசிக்' ஷாட்களால் ரன் சேர்த்துக் கொண்டிருந்தார் சாம்சன். கடந்த இரு போட்டிகளிலும் செய்ததைப் போலவே கிடைக்கும் பந்துகளில் பவுண்டரியும், சிக்ஸரும் எடுத்துவிட்டு அதன்பிறகு ஸ்டிரைக்கை ரொடேட் செய்தார். பின்னர் திரும்ப ஸ்டிரைக்குக்கு வரும்போது மறுபடியும் அதையே செய்தார். அவரது இந்த அணுகுமுறையோடு, அபிஷேக்கின் அதிரடியும் சேர்ந்ததால், இந்தியாவுக்கு ரன்கள் குவிந்தன. பந்துகளை சரியாகக் கணித்த சாம்சன், ஆட்டத்தின் போக்கையுமே புரிந்து விளையாடினார். நியூசிலாந்து அணியின் ஆபத்தான பௌலராகக் கருதப்பட்ட மிட்செல் சான்ட்னரை மட்டும் நிதானமாக எதிர்கொண்டார். அவருடைய ஓவரில் விக்கெட் விழாமல் ஆடிவிட்டு மற்றவர்களின் பந்துவீச்சைப் பதம் பார்த்தார். ஒருகட்டத்தில் தொடர்ச்சியாக சான்ட்னரின் 9 பந்துகளை (7-வது & 9-வது ஓவர்) சந்தித்த சாம்சன் 8 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதில் ஒரு பவுண்டரி மட்டுமே அடித்தார். அதிகமாக அவர் ரிஸ்க் எடுக்கவில்லை. பின்னர் சான்ட்னர் வீசிய 11-வது ஓவரில் 3 பந்துகள் சந்தித்து 2 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஆனால், அதற்கெல்லாம் ஈடுகட்டும் விதத்தில் 12-வது ஓவரில் ஃபெர்குசனை டார்கெட் செய்தார். அந்த ஓவரின் முதலிரு பந்துகளிலும் சிக்ஸர் அடித்துவிட்டு மூன்றாவது பந்தில் சிங்கிள் எடுத்தார். பின்னர் அந்த ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்டிரைக் எடுக்க வந்தவர், அதிலும் பவுண்டரி அடித்தார். அந்த ஓவரில் 4 பந்துகளில் 17 ரன்கள். ரச்சின் ரவீந்திரா வீசிய 14-வது ஓவரிலோ ஹாட்ரிக் சிக்ஸர்கள் விளாசினார். இப்படி பௌலர்களை சிறப்பாகக் கையாண்ட சாம்சன் 46 பந்துகளில் 89 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அரையிறுதி மற்றும் இறுதி என இரு போட்டிகளிலும் அரைசதம் அடிக்கும் மூன்றாவது வீரர் சஞ்சு சாம்சன். இதற்கு முன் ஷாஹித் அஃப்ரிடி (2009) மற்றும் விராட் கோலி (2014) அதைச் செய்திருக்கிறார்கள். பட மூலாதாரம்,Getty Images துபே அதிரடி சாம்சன், அபிஷேக் மட்டுமல்லாமல் மூன்றாவது வீரராக வந்த இஷான் கிஷனுமே அதிரடியாக விளையாடினார். முதல் பந்தில் இருந்தே அடித்து ஆடிய அவர், 23 பந்துகளில் அரைசதம் அடித்தார். இவர்களின் தொடர்ச்சியான அதிரடியால் 15 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழந்து 203 ரன்கள் எடுத்தது இந்தியா. 16-வது ஓவரில் நியூசிலாந்து அணிக்கு புத்துயிர் கொடுத்தார் ஜேம்ஸ் நீஷம். அவர் அந்த ஓவரில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். முதல் பந்தில் ஃபுல் டாஸாக வீசப்பட்ட பந்தில் சாம்சன் வெளியேற, ஐந்தாவது பந்தில் இன்னொரு ஃபுல் டாஸில் இஷான் வெளியேறினார். கடைசி பந்தில் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் தான் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்ததால், 17-வது மற்றும் 18-வது ஓவரில் இந்தியாவின் ரன் விகிதம் குறைந்தது. திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா இருவரும் பெரிய ஷாட் அடிக்க முயற்சி செய்தும் அவர்களால் முடியவில்லை. 19-வது ஓவரில் ஹர்திக் அவுட் ஆக, அந்த ஓவர் முடிவில் இந்தியாவின் ஸ்கோர் 231/5 என்றானது. அதனால், 250 ரன்கள் வருவது கேள்விக்குறியானது. ஆனால், கடைசி ஓவரில் அதிரடி காட்டிய ஷிவம் துபே, ஜேம்ஸ் நீஷம் வீசிய அந்த ஓவரில் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 24 ரன்கள் விளாசினார். அதனால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 255 ரன்கள் எடுத்தது. டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஒர் அணியால் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுதான். பட மூலாதாரம்,Getty Images பந்துவீச்சில் அசத்திய அக்ஷர் & பும்ரா இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் தன்னுடைய ஃபீல்டிங்கால் ஆட்டத்தில் பெரும் தாக்கம் ஏற்படுத்திய அக்ஷர் பட்டேல், இந்தப் போட்டியில் தன்னுடைய பந்துவீச்சில் அதே மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தினார். மூன்றாவது ஓவரில் பந்துவீசிய அக்ஷர் பட்டேல், அரையிறுதியில் அதிவேக சதமடித்திருந்த ஃபின் ஆலனின் விக்கெட்டைக் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் ஆலன் 9 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் நியூசிலாந்தின் பெரிய பலமாகக் கருதப்பட்ட அவர்களின் தொடக்க ஜோடி 31 ரன்களுக்கே உடைக்கப்பட்டது. இது இந்தியா ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்துவதற்கான அஸ்திவாரமாக அமைந்தது. அடுத்ததாக ஐந்தாவது ஓவரில் அதிரடி வீரர் கிளென் ஃபிலிப்ஸ் விக்கெட்டையும் வீழ்த்தினார் அக்ஷர். வழக்கமான அக்ஷர் பாணியில் உள்ளே வந்து ஸ்டம்பைத் தகர்ந்தது அந்தப் பந்து. பின்னர் 13-வது ஓவரில் டேரில் மிட்செல் விக்கெட்டையும் வீழ்த்தினார் அவர். இன்னொருபக்கம், நியூசிலாந்தின் பெரும்பாலான வீரர்களை பெவிலியனுக்கு அனுப்பினார் ஜஸ்ப்ரித் பும்ரா. நியூசிலாந்து இன்னிங்ஸின் மூன்றாவது ஓவரை வீச வந்த அவர், முதல் பந்திலேயே ரச்சின் ரவீந்திரா விக்கெட்டை வீழ்த்தினார். அரையிறுதியில் தன் ஸ்பெல்லின் முதல் பந்தில் 'ஸ்லோயர் பால்' வீசி ஹேரி ப்ரூக் விக்கெட்டை வீழ்த்தியதைப் போலவே, இந்தப் போட்டியிலும் தன் ஸ்பெல்லின் முதல் பந்தை ஸ்லோயர் பாலாக வீசி ரச்சினை அவர் வெளியேற்றினார். பும்ராவும் அக்ஷரும் பவர்பிளேவில் நியூசிலாந்தின் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அங்கேயே நியூசிலாந்தை பின்தங்க வைத்தார்கள். தன்னுடைய கடைசி ஸ்பெல்லை வீச வந்த பும்ரா 'ஸ்லோயர் யார்க்கர்களாக' வீசி மூன்று நியூசிலாந்து வீரர்களின் ஸ்டம்புகளைப் பதம் பார்த்தார். மிட்செல் சான்ட்னர், ஜேம்ஸ் நீஷம், மேட் ஹென்றி என அனைவருமே பும்ராவின் ஸ்லோயர் யார்க்கர்களில் போல்டாகி வெளியேறினார்கள். 4-0-15-4 என்று தன் ஸ்பெல்லை முடித்தார் பும்ரா. அதற்காக இந்தப் போட்டியின் ஆட்ட நாயகன் விருது வென்றார் அவர். அதுமட்டுமல்லாமல் இந்த உலகக் கோப்பையின் டாப் விக்கெட் டேக்கர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார் அவர். பட மூலாதாரம்,Getty Images இந்தியா உலக சாம்பியன் பவர்பிளேவிலேயே பின்தங்கிய நியூசிலாந்து அணியால் அதன்பின் கம்பேக் கொடுக்க முடியவில்லை. டிம் செய்ஃபர்ட் மட்டும் சற்று போராடி அரைசதம் அடித்தார். அவர் அவுட் ஆன பிறகு அந்த நம்பிக்கையும் குறைந்துவிட்டது. அதன்பிறகு டேரில் மிட்செல் மற்றும் மிட்செல் சான்ட்னர் (43 ரன்கள்) மட்டுமே நியூசிலாந்து அணிக்காக இரட்டை இலக்கத்தை எட்டினர். கடைசி கட்டத்தில் பும்ரா வரிசையாக விக்கெட்டுகள் வீழ்த்த 19-வது ஓவரின் முடிவில் நியூசிலாந்து ஆல் அவுட் ஆனது. அந்த அணியால் 159 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதனால் 96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய அணி உலக சாம்பியன் ஆனது. இந்தியாவின் பிரச்னைகளாகக் கருதப்பட்ட விஷயங்களெல்லாம் கடைசி கட்டத்தில் இந்தியாவின் வெற்றிக்குக் கைகொடுத்தன. இறுதிப் போட்டி வரை சோபிக்காத அபிஷேக் ஷர்மா, இந்தியா வெற்றி பெறுவதற்கு ஒரு நல்ல தொடக்கத்தைக் கொடுத்தார். ஃபீல்டிங் மிகப் பெரிய பிரச்னையாக சொல்லப்பட்டுவந்த நிலையில் அரையிறுதியில் அக்ஷர் பட்டேல், இறுதிப் போட்டியில் இஷான் கிஷன் போன்றவர்களின் ஃபீல்டிங் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பல சவால்கள் இருந்த நிலையிலும், முக்கியமான தருணங்களில் இந்திய வீரர்கள் எழுச்சி பெற்று அணியை சாம்பியன் ஆக்கியிருக்கிறார்கள். டி20 உலகக் கோப்பை சாம்பியன் - ஒரே வெற்றியில் இந்தியா படைத்த 4 வரலாறு என்ன?
-
ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்து : 35 பேர் மீட்பு
IRIS Dena கப்பல் குறித்து ஈரான் இராணுவத்தின் அறிவிப்பு Mar 9, 2026 - 08:53 AM ஈரானின் போர்க்கப்பலான IRIS Dena கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 104 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 32 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஈரான் இராணுவம் அறிவித்துள்ளது. அமெரிக்கா நடத்திய தாக்குதல் காரணமாக, இலங்கை கடற்பரப்பிற்கு அப்பால் இந்த கப்பல் விபத்துக்குள்ளானது. கடந்த மார்ச் 4-ஆம் திகதி காலி துறைமுகத்திலிருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் இந்த கப்பல் மீது தாக்குதலுக்குள்ளானது. கப்பலில் இருந்த 35 பேரை இலங்கை கடற்படையின் மீட்புக் குழுவினர் மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக காலி - கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 10 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தத் தாக்குதலில் உயிரிழந்த 84 ஈரான் கடற்படையினரின் உடல்கள் மீதான பிரேத பரிசோதனைகள் அண்மையில் காலி தேசிய வைத்தியசாலையில் நடத்தப்பட்டன. வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் ஈரான் கடற்படையினரில் 8 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. IRIS Dena கப்பல் குறித்து ஈரான் இராணுவத்தின் அறிவிப்பு
-
ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
போரில் வெற்றி பெற அமெரிக்கா எவ்வளவு தூரத்திற்கும் செல்லும் Mar 9, 2026 - 07:36 AM ஈரான் உடனான போரில் வெற்றி பெறுவதற்கு எவ்வளவு தூரம் செல்ல வேண்டுமோ, அவ்வளவு தூரம் செல்ல அமெரிக்கா தயாராக உள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியிலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். ஒரு இராணுவ நடவடிக்கையில் எல்லைகள் என்ன என்பதை எதிரியிடமோ, ஊடகத்திடமோ அல்லது வேறு யாருடமோ வெளிப்படுத்தக் கூடாது. அமெரிக்கா வெற்றிக்காகப் போராடுகிறது, ஈரானின் சரணடைதலுக்கான நிபந்தனைகளை டொனால்ட் டிரம்ப் தீர்மானிப்பார். ஈரானால் போரிட முடியாது என்பது எங்களுக்குத் தெரியும். அவர்களுக்குத் தெரிந்தாலும் இல்லாவிட்டாலும், அவர்கள் போர்க்களத்தில் செயலற்றவர்களாகி, சரணடைவார்கள் என்று ஹெக்செத் குறிப்பிட்டார். மேலும், ஈரானின் கடற்படை பெரும்பாலும் அழிந்துவிட்டது என்றும், அது தொடர்ந்து வலுவிழந்து கொண்டே இருக்கும் என்றும் அவர் கூறினார். இது ஒரு ஆரம்பம் மட்டுமே என்று அவர் எச்சரித்துள்ளார். போரில் வெற்றி பெற அமெரிக்கா எவ்வளவு தூரத்திற்கும் செல்லும்
-
சர்வதேச சந்தையில் 10% இனால் அதிகரித்த கச்சா எண்ணெய் விலை!
மசகு எண்ணெய் விலை சடுதியாக அதிகரிப்பு Mar 9, 2026 - 06:26 AM மத்திய கிழக்கின் முக்கிய எரிசக்தி உற்பத்தியாளர்கள் உற்பத்தியைக் குறைத்ததைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் நேற்று மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 100 டொலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போர் காரணமாக, எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்திற்கான உலகின் மிக முக்கியமான கடல் பாதைகளில் ஒன்றான ஹோர்முஸ் ஜலசந்தி முடங்கியுள்ளது. இந்நிலையில் அதற்குப் பதிலடியாக இந்த உற்பத்தி குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பிரெண்ட் ரக மசகு எண்ணெய் 18% உயர்ந்து பீப்பாய் ஒன்றின் விலை 108.68 டொலராக விற்பனை செய்யப்படுகின்றது. அமெரிக்காவின் WTI ரக மசகு எண்ணெய் சுமார் 20% அதிகரித்து பீப்பாய் ஒன்றின் விலை 108 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது. 2022 ஆம் ஆண்டு பெப்ரவரியில் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தபோது மசகு எண்ணெய் விலை 100 டொலரைத் தாண்டியது. அதற்குப் பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய விலை உயர்வு இதுவாகும் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மசகு எண்ணெய் விலை சடுதியாக அதிகரிப்பு
-
சோசலிசமே பெண் விடுதலையின் உண்மையான பாதை எழுச்சி மாநாட்டில் சுதந்திரத்திற்கான பெண்கள் இயக்கம் வலியுறுத்து
சோசலிசமே பெண் விடுதலையின் உண்மையான பாதை எழுச்சி மாநாட்டில் சுதந்திரத்திற்கான பெண்கள் இயக்கம் வலியுறுத்து Published By: Vishnu 09 Mar, 2026 | 12:52 AM (க.சிவலிங்கமூர்த்தி) சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு 'சோசலிசமே பெண் விடுதலையின் உண்மையான பாதை' எனும் தொனிப்பொருளில் சுதந்திரத்திற்கான பெண்கள் இயக்கம் ஏற்பாடு செய்த விசேட மாநாடு ஞாயிற்றுக்கிழமை (08) கொழும்பு புதிய நகர மண்டபத்தில் நடைபெற்றது. 115 ஆவது சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த மாநாட்டில் பெண்களின் உரிமைகள் தற்போதைய அரசியல் பொருளாதார நெருக்கடிகள் மற்றும் பெண்களின் உண்மையான விடுதலைக்கான வழிமுறைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. நிகழ்வில் சுதந்திரத்திற்கான பெண்கள் இயக்கத்தின் ஒழுங்கமைப்புச் செயலாளர் ஹேமமாலி அபேரத்ன அங்கு உரையாற்றுகையில் பெண் விடுதலை என்பது தானாகக் கிடைத்த ஒன்றல்ல. மனித வரலாற்றில் பெண்கள் தங்களது கல்வி உரிமை கருக்கலைப்பு உரிமை இனப்பெருக்க உரிமை மற்றும் தொழில் உரிமை என்பவற்றை நீண்ட போராட்டங்கள் மூலமே வென்றெடுத்தனர். ஜனநாயகத்தின் அடிப்படை அங்கமான வாக்குரிமை கூட போராட்டத்தின் மூலமே எமக்குக் கிடைத்தது. எப்படியிருப்பினும், இத்தனை உரிமைகளைப் பெற்ற பின்னரும், இந்த 115 ஆவது சர்வதேச மகளிர் தினத்தில் பெண்கள் இந்த உலகில் ஒரு முழுமையான மனிதனாக வாழும் உரிமை கிடைத்துள்ளதா? என்ற கேள்வியை நாம் எழுப்ப வேண்டியுள்ளது. பெண்கள் இன்றும் சமூகத்தில் இரண்டாம் நிலையிலேயே வைக்கப்பட்டுள்ளனர். சமூகம் வகுத்துள்ள பொதுவான மரபுகள் மதக் கட்டுப்பாடுகள் மற்றும் கலாச்சாரம் என்ற பெயரிலான தடைகளை உடைக்க நாம் இன்னும் தயாராகவில்லை. பிள்ளைகளைப் பெறுவதும், சமையலறையில் முடங்கிக்கிடப்பதும் மட்டுமே பெண்ணின் கடமை என்று கருதும் வரை பெண்கள் நசுக்கப்பட்டே வாழ்வார்கள். இந்த நிலை மாற வேண்டும். பெண்கள் ஒரு மனிதனாக வாழ்வதற்கான உரிமையை உரக்கச் சொல்லும் காலம் வந்துவிட்டது. இன்று சந்தை வாய்ப்புக்களில் பெண்கள் ஈடுபடுவதால் அவர்களுக்கு விடுதலை கிடைத்துவிட்டதாக ஒரு மாயை உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் உண்மை அதுவல்ல. முதலாளித்துவப் பொருளாதாரம் பெண்களை வேலைத்தளங்களுக்கு அழைத்து வந்ததன் உண்மையான நோக்கம் அவர்களின் மலிவான உழைப்பைச் சுரண்டுவதாகும். இன்று நவதாராளவாதப் பொருளாதாரக் கட்டமைப்பிற்குள் பெண்கள் ஒரு சந்தைப் பொருளாக மாற்றப்பட்டுள்ளனர். எம்மை ஒடுக்குவது ஆண்கள் அல்ல் மாறாக இந்த நிலவும் அரசியல் பொருளாதாரக் கட்டமைப்பே எமது உண்மையான எதிரி. இந்த முறையை மாற்றியமைக்காமல் பெண் விடுதலை பற்றிப் பேசுவதில் அர்த்தமில்லை. தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உட்பட கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்த அனைத்துக் கட்சிகளும் பெண்களைத் திரட்டியது தங்களது வாக்கு வங்கியைப் பலப்படுத்துவதற்காக மட்டுமே. தேர்தலுக்குப் பின்னர் பெண்களுக்காக எவரும் ஆக்கபூர்வமான எதனையும் செய்யவில்லை. எமது வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றம் சென்றவர்கள், இறுதியில் பெண்களின் பாதுகாப்பை அச்சுறுத்தும் சட்டங்களையே நிறைவேற்றினர். எனவே தேர்தல் அரசியலை நம்பி ஏமாறாமல் நிலத்தில் இறங்கிப் போராடும் பெண்களை நாம் உருவாக்க வேண்டும். அநீதி இழைக்கப்படும் போது அச்சப்பட்டு ஒடுங்காமல் உரிமைகளுக்காக முன்னின்று குரல் கொடுக்கும் போராட்டக் குணமிக்க பெண்களை உருவாக்க எமது இயக்கம் முன்னின்று செயற்படும். இதற்காக நாட்டின் அனைத்துப் பெண்களும் உழைக்கும் மக்களும் ஒன்றிணைய வேண்டும் என்றார். இந்த மாநாட்டில் நாடளாவிய ரீதியிலிருந்து பெருமளவிலான பெண்கள் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. சோசலிசமே பெண் விடுதலையின் உண்மையான பாதை எழுச்சி மாநாட்டில் சுதந்திரத்திற்கான பெண்கள் இயக்கம் வலியுறுத்து
-
லெபனான் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் குண்டுவீசி தாக்குதல்
லெபனானில் 5 இலட்சம் பேர் இடம்பெயர்வு Mar 8, 2026 - 11:47 PM இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பிற்கு இடையே கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வரும் போரினால், 5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக லெபனான் தெரிவித்துள்ளது. இருப்பினும், உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கக்கூடும் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. லெபனான் அரசு குறிப்பிட்டுள்ள 5,17,000 என்ற எண்ணிக்கை, அரசின் இணையதளத்தில் பதிவு செய்தவர்களை மட்டுமே குறிக்கிறது. பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள லெபனான் அரசு, தெற்கு மற்றும் கிழக்கு லெபனானின் பெரும் பகுதிகளில் இருந்து வீடுகளை விட்டு வெளியேறியுள்ள ஏராளமான மக்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுக்க முடியாமல் திணறி வருகிறது. போர் தீவிரமடைந்துள்ள நிலையில், தெற்கு லெபனானில் உள்ள பல கிராமங்கள் மற்றும் பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதிகள் முழுவதையும் விட்டு வௌியேறுமாறு கடந்த வாரத்தில் இருந்து இஸ்ரேல் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmmi2qxxg0000356pz4ez682f
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பங்குபற்றிய உறவுகளுக்கும் முதல் மூன்று இடங்களைப் பிடித்த நியூபலன்ஸ், கந்தப்பு அண்ணை, நியாயம் மூவருக்கும் வாழ்த்துகள். போட்டியை திறம்பட நடத்திய @கிருபன் அண்ணைக்கு நன்றியும் வாழ்த்துகளும்.
-
ஈரானிய கடற்படை பணியாளர்களை பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வந்த இலங்கை கடற்படை
ஈரானிய மாலுமிகளுக்கு ஒரு மாத கால இலவச விசா: மனிதாபிமான அடிப்படையில் அரசாங்கம் நடவடிக்கை! 08 Mar, 2026 | 05:29 PM இலங்கைக் கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரானிய மாலுமிகளுக்கு ஒரு மாத காலத்திற்குச் செல்லுபடியாகும் இலவச விசாக்களை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஈரானியக் கப்பல்களில் இருந்து மீட்கப்பட்ட மாலுமிகள், மனிதாபிமானப் பாதுகாப்பின் கீழ் இலங்கையில் தங்கியிருக்க அனுமதிக்கும் வகையில் இந்த ஒரு மாத கால இலவச விசா வழங்கப்படுவதாகப் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். எதிர்காலத்திலும் இவ்வாறான சூழல்கள் ஏற்படும் போது இது போன்ற முடிவுகள் எடுக்கப்படலாம் எனச் சுட்டிக்காட்டிய அமைச்சர், இத்தகைய நடவடிக்கைகள் எந்தவொரு குறிப்பிட்ட தரப்பினருக்கும் ஆதரவாகவோ அல்லது பாதிப்பாகவோ அமையும் நோக்கத்தில் எடுக்கப்படுபவை அல்ல என்பதையும் வலியுறுத்தியுள்ளார். ஈரானிய மாலுமிகள் தொடர்பான இந்தத் தீர்மானமானது, சர்வதேச உடன்படிக்கைகள் மற்றும் இலங்கைக்குப் பொருந்தக்கூடிய கடல்சார் சட்டங்களை மிகத் துல்லியமாகப் பின்பற்றியே எடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச மட்டத்தில் இலங்கை தனது மனிதாபிமானப் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் உறுதியாக இருப்பதை இது காட்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரத்தை கையாள்வதில் இலங்கை அரசாங்கம் தனது அணிசேராக் கொள்கைக்கு இணங்கவே செயற்பட்டுள்ளது. இதன் மூலம் சர்வதேச அரசியலில் நடுநிலையைப் பேணுவதோடு, அதேவேளை மனிதாபிமான கடமைகளையும் முன்னெடுத்து வருவதாக அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் தெரிவித்துள்ளார். ஈரானிய மாலுமிகளுக்கு ஒரு மாத கால இலவச விசா: மனிதாபிமான அடிப்படையில் அரசாங்கம் நடவடிக்கை!
-
முல்லைத்தீவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்
சர்வதேச நீதி கோரி உறவுகளை இராணுவத்திடம் கையளித்த இடத்தில் மாபெரும் போராட்டம் Published By: Vishnu 08 Mar, 2026 | 08:59 PM இராணுவத்திடம் கையளித்த தமது உறவுகள் எங்கே? இவர்களுக்கு என்ன நடந்தது இந்த விவகாரத்துக்கு சர்வதேச நீதி விசாரணையே வேண்டும் என கோரி வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினரால் இறுதி யுத்தத்தின் சாட்சியாக காணப்படும் வட்டுவாகல் பாலத்தில் ஞாயிற்றுக்கிழமை (8) மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடந்த 08.03.2026 அன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக ஆரம்பித்த தொடர் கவணயீர்ப்பு போராட்டமானது இன்று ஒன்பது ஆண்டுகளை கடந்துள்ள நிலையில் சர்வதேச மகளிர் தினமான இன்று மகளிர் தினம் எமக்கு துக்க தினம் என தெரிவித்து தமக்கு சர்வதேச விசாரணையே தீர்வு என குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமது உறவுகளை இராணுவத்திடம் ஒப்படைத்ததுடன், தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என இதுவரை இலங்கை அரசாங்கத்தால் எந்த தகவலும் வெளியிடவில்லை எனவும் இனப்படுகொலையாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்து, இராணுவத்தினரிடம் ஒப்படைத்த எமது பிள்ளைகள் எங்கே, வட்டுக்கோட்டை தீர்மானம் வழிகாட்டி சுய நிர்ணயம் எங்கள் உரிமை, சர்வதேசமே பதில்சொல் என பல்வேறு கோசங்களை தாங்கிய பதாதைகளுடன் போராட்டத்தை முன்னெடுத்தனர். எங்கே எங்கே உறவுகள் எங்கே , பழைய சட்டமும் வேண்டாம் புதியசட்டமும் வேண்டாம் , அழிக்காதே அழிக்காதே தமிழரின் இன அழிப்பின் அடையாளமான வட்டுவாகல் பாலத்தை அழிக்காதே, வேண்டும் வேண்டும் சர்வதேச விசாரணை வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோசங்களுடன் வட்டுவாகல் பாலத்தடியில் ஆரம்பித்த கவனயீர்ப்பு போராட்டம் செல்வபுரத்தில் இராணுவத்திடம் உறவுகளை கையளித்த இடம் வரை சென்று நிறைவடைந்தது. குறித்த போராட்டத்தில் முல்லைத்தீவு,யாழ்ப்பாணம்,கிளிநொச்சி,வவுனியா,மன்னார் மாவட்டங்களை சேர்ந்த காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள், நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன், முன்னாள் யாழ் மாநகர மேஜர் மணிவண்ணன் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டதுடனர். போராட்டத்தின் இறுதியில் கோரிக்கைகள் உள்ளடங்கிய மகஜர் வாசிக்கப்பட்டு ஐக்கிய நாடுகள் சபையின் ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. சர்வதேச நீதி கோரி உறவுகளை இராணுவத்திடம் கையளித்த இடத்தில் மாபெரும் போராட்டம்
-
இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு: 6 புதிய துணை நிறுவனங்கள் உருவாக்கம்!
மின்சார சபை மறுசீரமைப்பு: 3 புதிய நிறுவனங்களுக்கு பிரதான நிறைவேற்று அதிகாரிகள் நியமனம்! 08 Mar, 2026 | 04:53 PM நாட்டின் மின்சாரத் துறையை மறுசீரமைக்கும் நடவடிக்கையின் ஒரு அங்கமாக, கலைக்கப்பட்டுள்ள இலங்கை மின்சார சபைக்குப் பதிலாக நிறுவப்பட்டுள்ள ஆறு புதிய நிறுவனங்களில் மூன்றிற்குப் புதிய முதன்மை நிறைவேற்று அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மின்சாரத் துறை மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ், கடந்த பெப்ரவரி மாதம் 06 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பின்வரும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்: லங்கா மின்சார உற்பத்தி லங்கா (தனியார்) நிறுவனம்: பொறியியலாளர் என். ஜி. சாலிய பண்டிதரத்ன. தேசிய பரிமாற்ற வலையமைப்பு சேவை வழங்குநர்கள் (தனியார்) நிறுவனம்: பொறியியலாளர் என். எஸ். வெட்டசிங்க. மின்சார விநியோக லங்கா (தனியார்) நிறுவனம்: பொறியியலாளர் கே. எஸ். ஐ. குமார. மறுசீரமைப்புச் செயல்பாட்டின் கீழ் உருவாக்கப்பட்ட ஏனைய நிறுவனங்களான மின்சார சபை ஊழியர் நிதி (தனியார்) நிறுவனம் மற்றும் எனர்ஜி வென்ச்சர்ஸ் லங்கா (தனியார்) நிறுவனம் ஆகியவற்றிற்கு இதுவரை புதிய முதன்மை நிறைவேற்று அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. மறுசீரமைப்புச் செயல்முறையின் ஒரு பகுதியாக, இலங்கை மின்சார சபையின் உத்தியோகபூர்வ செயல்பாட்டு நடவடிக்கைகள் ஞாயிற்றுக்கிழமை (08) நள்ளிரவுடன் அதிகாரப்பூர்வமாக நிறுத்தப்படுகின்றன. இதனைத் தொடர்ந்து, மின்சார சபையின் கீழ் ஊழியர்களால் நிறுவப்பட்டிருந்த அனைத்து தொழிற்சங்கங்களும் இன்று நள்ளிரவு முதல் தானாகவே கலைக்கப்படுகின்றன. தற்போது நடைமுறையிலுள்ள சுமார் 40-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் கலைக்கப்படுவதால், ஊழியர்கள் தத்தமது புதிய நிறுவனங்களின் கீழ் மீண்டும் புதிய தொழிற்சங்கங்களைப் பதிவு செய்து நிறுவ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளைத் தொழிற்சங்கங்கள் ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாக மின்சாரத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இலங்கையின் மின்சாரத் துறையில் மேற்கொள்ளப்படும் இந்த பாரிய மாற்றம், எதிர்வரும் காலங்களில் மின் விநியோகக் கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மின்சார சபை மறுசீரமைப்பு: 3 புதிய நிறுவனங்களுக்கு பிரதான நிறைவேற்று அதிகாரிகள் நியமனம்!
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
4 ஆவது விக்கெட் போட்டுது. 5 வது போட்டுது.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
எப்பவோ முடிந்த காரியம்! பேத்தல் போல யாராவது கடைசி வரை போட்டியை இழுப்பார்களா?!
-
காங்கிரசுக்கு 28+1 இடங்கள் ஒதுக்கீடு: திமுக கூட்டணியில் ஒப்பந்தம் கையெழுத்து!
28+1 இடங்கள் ஒதுக்கீடு: திமுக - காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்து கூட்டணி பேச்சுவார்த்தையில் உடன்பாடு Updated on: 05 Mar 2026, 2:35 am 2 min read சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 28 தொகுதிகள், ஒரு மாநிலங்களவை (ராஜ்யசபா) உறுப்பினர் இடத்துக்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை திமுக கடந்த பிப்ரவரி 22-ம் தேதி தொடங்கி நடத்தி வருகிறது. இதுவரை காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட்கள், விசிக உட்பட தோழமை கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இதில் முஸ்லீம் லீக், மமக ஆகிய கட்சிகளுக்கு தலா 2 இடங்கள் வரை ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதேபோல், தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடத்துக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியது. இதர கட்சிகளுக்கான பங்கீடு ஓரிரு நாட்களில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், காங்கிரஸ் 40 தொகுதிகள், 2 மாநிலங்களவை உறுப்பினர் கேட்டதால், தொகு திப் பங்கீட்டில் இழுபறி நீடித்தது. காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு எட்டப்படவில்லை. இதனால் திமுக - காங்கிரஸ் இடையேயான கூட்டணி நீடிக்குமா என்ற கேள்விகள் எழுந்தன. இந்த சூழலில் நேற்று முன்தினம் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து காங்கிரஸ் தேசிய தலைமையிடமும் அவர் பேசி சூழலை சுமூகமாக்கியதாகவும், திமுக தரப்பில் கனிமொழியும் காங்கிரஸ் தலைவர்களிடம் பேசியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, திமுக - காங்கிரஸ் இடையே நீண்ட நாட்களாக நீடித்து வந்த தொகுதி பங்கீடு பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது. இருதரப்பினரும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட இருப்பதாக நேற்று காலை தகவல்கள் வெளியாகின. அதன்படி, கோவாவில் இருந்து விமானம் மூலம் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் சென்னைக்கு நேற்று மாலை வந்தார். அவரை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வரவேற்றார். சிறிது நேரத்தில் விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்ட கிரிஷ் சோடங்கர், செல்வப்பெருந்தகை ஆகியோர் தி.நகரில் உள்ள ஓட்டலுக்கு சென்றனர். தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வந்த தகவல் கிடைத்ததும், இருவரும் அறிவாலயத்துக்கு சென்றனர். அப்போது, திமுக வழங்கிய 28 சட்டப்பேரவை தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடத்தை காங்கிரஸ் ஏற்றுக் கொண்டது. இதற்கான ஒப்பந்தத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், செல்வப்பெருந்தகை கையெழுத்திட்டனர். திமுக தரப்பில் அமைச்சர்கள் எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச் செயலாளர்கள் கனிமொழி, ஆ.ராசா, திருச்சி சிவா, பூச்சி எஸ்.முருகன் மற்றும் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், அகில இந்திய செயலாளர் நிவேதித் ஆல்வா, தமிழக சட்டப்பேரவை காங்கிரஸ் குழுத் தலைவர் எஸ்.ராஜேஸ்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்த காங்கிரஸ் 25 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. கூட்டணி கட்சிகள்: இந்திய கம்யூனிஸ்ட், மக்கள் நீதி மய்யம், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளுடனும் திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழு நேற்று பேச்சு வார்த்தை நடத்தியது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் நடத்தப்பட்ட 2-ம் கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. கடந்த 2021 தேர்தலை போல் 6 இடங்கள் வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கேட்பதாலும், புதிய கட்சிகள் கூட்டணிக்கு வந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள திமுக வலியுறுத்தியதாலும் முடிவு எட்டப்படவில்லை. மக்கள் நீதி மய்யம் 3 தொகுதி கேட்ட நிலையில், ஒரு இடம் மட்டும் வழங்கப்படும். அதுவும் உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டும் என்று திமுக குழு தெரிவித்துள்ளது. ஆம் ஆத்மியும் 2 தொகுதிகள் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 28+1 இடங்கள் ஒதுக்கீடு: திமுக - காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்து
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
India 255/5 New Zealand (3/20 ov, T:256) 32/1 New Zealand need 224 runs in 102 balls. Current RR: 10.66 • Required RR: 13.17 Win Probability NZ 7.19% IND 92.81% India 255/5 New Zealand (3.1/20 ov, T:256) 32/2 New Zealand need 224 runs in 101 balls. Current RR: 10.10 • Required RR: 13.30 Win Probability NZ 5.11% IND 94.89%
-
இரானுக்குள் தரைப்படை நடவடிக்கை?!
இரானுக்குள் அமெரிக்காவுக்கு பதில் இந்த படை களம் இறங்குமா? பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் ஓர்லா குயெரின் பிபிசி செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் ஒரு வாரமாக அமெரிக்காவும் இஸ்ரேலும் இரானில் உள்ள இலக்குகளைத் தாக்கி, வான்வழியாகப் போரை நடத்தி வருகின்றன. விரைவில் தரைப்படை இறக்கப்படுமா? இருக்கலாம். ஆனால் அவை அமெரிக்கப் படைகளாக இருக்காது. வடக்கு இராக்கில் புலம்பெயர்ந்து வாழும் இரானிய குர்திஷ் எதிர்ப்புக் குழுக்கள், எல்லையைத் தாண்டிச் செல்லும் திட்டங்கள் தங்களிடம் இருப்பதாக பிபிசியிடம் தெரிவித்துள்ளன. இந்தத் திட்டங்கள் பல ஆண்டுகாலமாகவே அவர்களிடம் உள்ளன. ஆனால் தங்கள் போராளிகள் ஏற்கெனவே எல்லை தாண்டிவிட்டதாகக் கூறப்படும் தகவல்களை அவர்கள் திட்டவட்டமாக மறுக்கின்றனர். "இஸ்லாமிய குடியரசு உருவான காலம் முதல், கடந்த 47 ஆண்டுகளாக இதற்காக நாங்கள் தயாராகி வருகிறோம்," என்று குர்திஸ்தான் சுதந்திரக் கட்சியின் ஹனா யஸ்தான்பனா கூறினார். இந்தக் கட்சி தங்களிடம்தான் மிகப்பெரிய ஆயுதப் படை இருப்பதாகக் கூறுகிறது. ஆனால், "ஒரு பெஷ்மெர்கா கூட இன்னும் நகரவில்லை" என்று அவர் கூறினார். 'பெஷ்மெர்கா'என்ற குர்திஷ் சொல்லுக்கு "மரணத்தை எதிர்கொள்பவர்கள்" என்று பொருள். ஆறு எதிர்ப்பு குழு சமீபத்தில் ஒரு கூட்டணியை உருவாக்கிய ஆறு எதிர்ப்பு குழுக்களும் அரசியல் ரீதியாகவும் ராணுவ ரீதியாகவும் ஒருவருக்கொருவர் ஒருங்கிணைந்து செயல்படுவதாக யஸ்தான்பனா கூறினார். "யாரும் தனியாக நகர மாட்டார்கள். எங்கள் சகோதரர்கள் நகரப் போகிறார்கள் என்றால் அது எங்களுக்குத் தெரியும்," என்று அவர் கூறினார். இந்த வாரம் போராளிகள் அடுத்தகட்டத்தை நோக்கி நகர்வார்கள் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. முதலில், அமெரிக்கா அதற்கான வழியை வகுக்க வேண்டும். "வான் தாக்குதல் நிறுத்தப்படாவிட்டால் எங்களால் நகர முடியாது. மேலும் இரான் ஆட்சியின் ஆயுதக் கிடங்குகள் அழிக்கப்பட வேண்டும். இல்லையெனில், அது தற்கொலைக்கு சமமானது. இந்த ஆட்சி மிகவும் கொடூரமானது, எங்களிடம் உள்ள மிகவும் மேம்பட்ட ஆயுதம் கலாஷ்னிகோவ் மட்டுமே," என்று குறிப்பிட்டார். குர்திஷ் போராளிகளைப் பாதுகாக்க அமெரிக்கா 'விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்ட மண்டலத்தை உருவாக்க வேண்டும்' என்று அவர் விரும்புகிறார். "நாங்கள் இதை பலமுறை கேட்டுள்ளோம். 'இது எங்களுக்கு அவசரமாகத் தேவை' என்று மின்னஞ்சல் அனுப்பியவர் நான்தான்" என்று அவர் கூறினார். இராக்கில் இஸ்லாமிய அரசு குழுவிற்கு எதிராகப் போரிட கடந்த காலத்தில் அமெரிக்கப் படைகளால் பயிற்சி அளிக்கப்பட்ட குர்துகளுக்கு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆயுதம் வழங்கப் பரிசீலித்து வருவதாக வெளியான செய்தியை வெள்ளை மாளிகை மறுத்துள்ளது. ஆனால் இரானிய குர்திஷ் படைகளின் சாத்தியமான முன்னேற்றம் குறித்த விவாதம் அதிகரித்து வரும் நிலையில், அவர்கள் மீதான இரானின் தாக்குதல்களும் அதிகரித்துள்ளன. இரண்டு வெவ்வேறு குழுக்கள் மீதான தாக்குதல்களின் பின்விளைவுகளை நாங்கள் கண்டோம், இதில் குர்திஸ்தான் சுதந்திரக் கட்சியின் தளம் ஒன்றைத் தாக்கிய பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலில் ஒரு போராளி கொல்லப்பட்டார். பட மூலாதாரம்,Matthew Goddard/BBC படக்குறிப்பு,வடக்கு இராக்கில் உள்ள இரானிய குர்திஷ் குழுக்களின் தளங்கள் மீது இரான் ஏவுகணைகளை வீசியதில் ஒருவர் கொல்லப்பட்டார். குர்து மக்கள் யார்? சில குழுக்கள் தங்கள் தளங்களை காலி செய்துவிட்டு, தாக்குதல்களில் இருந்து தற்காத்துக்கொள்ள தங்கள் படைகளை இடமாற்றம் செய்துள்ளன. இரான் ஆட்சிக்கு எதிரான போரில் இணைவது ஒரு மிகப்பெரிய அபாயமாகும், மேலும் இதற்குப் பதிலாக டிரம்ப் எதை வழங்கக்கூடும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. மத்திய கிழக்கின் நான்காவது பெரிய இனக்குழுவான குர்து மக்கள், இரான், இராக், சிரியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளில் சிதறி வாழ்கின்றனர். அவர்கள் துன்புறுத்தப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளனர். "மலைகளைத் தவிர நமக்கு நண்பர்கள் யாரும் இல்லை" என்பது குர்துகளின் பழமொழி. அமெரிக்கா தனது வாக்குறுதிகளை காப்பாற்றும் என்று நம்ப முடியுமா? சிரியாவில் உள்ள பல குர்துகள் இஸ்லாமிய அரசு (ஐஎஸ்) அமைப்பிற்கு எதிரான போரில் அமெரிக்காவின் உறுதியான கூட்டாளிகளாக இருந்தவர்கள். சமீபத்தில் தங்களை விடுத்து சிரியாவில் இடைக்கால அரசாங்கத்திற்கு ஆதரவாக டிரம்ப் செயல்பட்டபோது அவர்கள் கோபமடைந்தனர். ஆனால் சில மூத்த இரானிய குர்திஷ் தலைவர்கள் நடைமுறை ரீதியான பார்வையைக் கொண்டுள்ளனர். பட மூலாதாரம்,Matthew Goddard/BBC படக்குறிப்பு,முஸ்தபா மௌலூதி நம்பிக்கை என்ன? "அமெரிக்காவும் இஸ்ரேலும் இந்தப் போரை எங்களது நம்பிக்கைகளுக்காக தொடங்கவில்லை, மாறாகத் தங்களுடைய சொந்த நலன்களுக்காகவே தொடங்கின" என்கிறார் இரானின் குர்திஸ்தான் ஜனநாயகக் கட்சியின் துணைத் தலைவர் முஸ்தபா மௌலூதி. "ஆனால் அவர்கள் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் தளங்களைக் குறிவைக்கிறார்கள், இது எங்களுக்குச் சாதகமாக அமையும் என்பதோடு நாங்கள் உள்ளே நுழையவும் உதவும்," என்று குறிப்பிட்டார். 67 வயதான அவர், தனது வாழ்நாளின் பெரும்பகுதியை இந்த இஸ்லாமிய ஆட்சியின் வீழ்ச்சிக்காகக் காத்திருப்பதிலேயே கழித்துள்ளார். பாரம்பரிய குர்திஷ் உடையணிந்த அவர், தனது குடும்பத்தின் வேதனையான வரலாற்றை விவரித்தார். இவரது ஒரு உறவினர் 13 வயதில் இந்த இரான் ஆட்சியால் கொல்லப்பட்டார், மற்றொருவர் எதிர் தரப்புடன் ஒத்துழைத்ததாகக் கூறி 31 ஆண்டுகளாக இன்னும் சிறையில் இருக்கிறார். இவரது அரசியல் நடவடிக்கைகள் காரணமாக தனது குடும்பத்தில் 60 சதவீதத்தினர் கைது செய்யப்பட்டு, மோசமாக நடத்தப்பட்டதாக அவர் கூறினார். மௌலூதி தனது தாய் மண்ணுக்குத் திரும்பும் முதல் தருணங்களை ஏற்கனவே மனக்கண்ணில் வைத்துள்ளார். "நான் கிராமத்தை அடையும்போது, 'உங்களுக்காகவே நான் போராடினேன், நீங்கள் எனது மக்கள், இப்போது நான் இன்னும் அதிகமாகப் போராடுவேன்' என நான் உரத்த குரலில் சொல்வேன்" என்று அவர் பகிர்ந்து கொண்டார். மார்ச் 21 அன்று வரும் குர்திஷ் புத்தாண்டு பண்டிகையான நோரூஸை கொண்டாடுவதற்குள் தான் அங்கு இருப்பேன் என்று அவர் நம்புகிறார். இரானின் 90 மில்லியன் மக்கள் தொகையில் குர்துகள் சுமார் 10 சதவீதம் உள்ளனர். இங்குள்ள அவர்களின் தலைவர்கள், டிரம்புக்கும் தங்களுக்கும் ஆதரவளிக்குமாறு சர்வதேச சமூகத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். "நாங்கள் இரானில் அரசியல் ரீதியாக மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட குழு. மாற்றத்திற்கான இந்த வாய்ப்பை நாங்கள் வீணடிக்க விடமாட்டோம்," என்று இரானிய குர்திஸ்தான் கோமலா கட்சியின் பொதுச் செயலாளர் அப்துல்லா மொஹ்தாடி கூறினார். பட மூலாதாரம்,Matthew Goddard/BBC படக்குறிப்பு,குர்திஷ் குழுக்கள் தங்கள் படைகள் சில இரானுக்குள் நுழைந்ததாக வெளியான செய்திகளை மறுத்துள்ளன. எவ்வளவு துருப்புக்களைத் திரட்ட முடியும்? குர்துகளால் எத்தனை துருப்புக்களைத் திரட்ட முடியும் என்பதை மதிப்பிடுவது கடினம். "ஏற்கனவே உள்ளே இருப்பவர்களையும் சேர்த்து இது சில ஆயிரங்களாக இருக்கலாம்," என்று குர்திஷ் இனத்தைச் சேர்ந்த உள்ளூர் பத்திரிகையாளர் ஒருவர் கூறுகிறார். "இரானில் ஏற்படும் மாற்றத்தின் ஒரு பகுதியாக இருக்க அவர்கள் விரும்புகிறார்கள், இதன் மூலம் வருங்காலத்திலும் தங்கள் பங்கு இருப்பதை உறுதி செய்ய நினைக்கிறார்கள். வரலாற்றின் பாடங்கள் இருந்தபோதிலும், அவர்கள் தொடர்ந்து நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்." அமெரிக்காவின் வாக்குறுதிகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும், இது செயல்படுவதற்கான நேரம் என்று சில இரானிய குர்துகள் கூறுகின்றனர். "எங்கள் தாயகத்தைப் பார்க்கும் சிறிய நம்பிக்கை இருந்தாலே போதும்" என்று இரானிய எல்லைக்கு அருகிலுள்ள சுலைமானியா நகரைச் சேர்ந்த ஒரு பெண் கூறினார். "நாங்கள் அதை [இரானை] கொலைகாரர்களின் இஸ்லாமிய ஆட்சி என்று அழைக்கிறோம். நாங்கள் அவர்களை அவ்வளவு வெறுக்கிறோம். அவர்கள் பலரைக் கொன்றுள்ளனர்." இவை அனைத்தும் இராக்கை இக்கட்டான நிலையில் ஆழ்த்தியுள்ளன. அண்டை நாட்டுப் போருக்குள் தாங்களும் இழுக்கப்படுவோமோ என்ற அச்சம் அங்கு நிலவுகிறது. ''பயங்கரவாதச் செயல்களைச் செய்ய, இராக் மண்ணிலிருந்து இரானிய எல்லைக்குள் ஊடுருவவோ அல்லது கடக்கவோ எந்தக் குழுக்களையும் அனுமதிக்க மாட்டோம்," என்று இராக் அரசாங்கம் தெரிவித்துள்ளது. குர்திஷ் படைகள் எல்லையைத் தாண்டினால், அது யஸ்தான்பனாவிற்கு இனிப்பும் கசப்பும் கலந்த தருணமாக இருக்கும். "எனது நிலத்திற்குத் திரும்புவது மிகவும் உணர்ச்சிகரமானதாக இருக்கும்," என்று கூறிய அவர் "எனது தாத்தா பாட்டிகளும் உறவினர்களும் இங்கே [வடக்கு இராக்கில்] இறந்துவிட்டார்கள். நான் மகிழ்ச்சியாக உணர வேண்டுமா அல்லது வருத்தப்பட வேண்டுமா என்று எனக்குத் தெரியவில்லை, ஏனென்றால் இந்த நாளைப் பார்க்க உண்மையிலேயே தகுதியானவர்கள் இப்போது இல்லை" என்கிறார். கூடுதல் செய்திகள்: விட்ஸ்கே புரேமா, மேத்யூ கோடார்ட் மற்றும் பிஷார் ஷரீப் இரானுக்குள் தரைப்படை நடவடிக்கை?!
-
ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்
இந்தியா நிர்ணயித்த வெற்றியிலக்கு Mar 8, 2026 - 08:44 PM உலக கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இன்று (8) இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதி வருகின்றன. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. அஹமதாபாத் நரேந்திர மோடி சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இந்தப் போட்டி இன்றிரவு 7 மணிக்கு ஆரம்பமானது. அதன்படி முதலில் துடுப்பாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 255 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இந்திய அணி சார்பில் துடுப்பாட்டத்தில் சஞ்சு சம்சன் 89 ஓட்டங்களையும், இசன் கிஷன் 54 ஓட்டங்களையும், அபிஷேக் சர்மா 52 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தனர். உலக கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் ஒரு அணி பெற்றுக் கொண்ட அதிகூடிய ஓட்டம் இதுவாகும். இந்நிலையில் 256 என்ற வெற்றியிலக்கை நோக்கி நியூசிலாந்து அணி துடுப்பாடவுள்ளது. இந்தியா நிர்ணயித்த வெற்றியிலக்கு
-
ஈரான் மீதான தாக்குதல் சர்வதேச சட்டத்தை மீறுகிறது - சுவிஸ்
ஈரான் மீதான தாக்குதல் சர்வதேச சட்டத்தை மீறுகிறது - சுவிஸ் Mar 8, 2026 - 05:26 PM ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள் சர்வதேச சட்டத்தை மீறுவதாகச் சுவிஸ் பாதுகாப்பு அமைச்சர் மார்ட்டின் பிபிஸ்டர் தெரிவித்துள்ளார். ஈரான் மீதான தாக்குதல் சர்வதேச சட்டத்தை மீறும் ஒரு செயலாகும் என்பதே சுவிஸ் அமைச்சரவையின் கருத்தாகும் என்று அவர் நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். இந்தத் தாக்குதல்கள் வன்முறைத் தடையை மீறுவதாகக் குறிப்பிட்ட அவர், பொதுமக்களைப் பாதுகாப்பதற்காகப் போரை நிறுத்துமாறு அனைத்துத் தரப்பினரையும் வலியுறுத்தினார். அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளன. இதன் மூலம், ஈரானைப் போலவே அவர்களும் சர்வதேச சட்டத்தை மீறியுள்ளனர் என்று பிபிஸ்டர் தெளிவுபடுத்தினார். ஜேர்மனி மற்றும் ஸ்பெயினின் நிலைப்பாடு இந்தக் கருத்துக்கள் ஜேர்மனியின் உப ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான லார்ஸ் கிளிங்பெயிலின் நிலைப்பாட்டைப் பிரதிபலிக்கின்றன. இந்தப் போர் சர்வதேச சட்டத்தின் கீழ் சட்டபூர்வமானது என்பதில் எனக்குப் பலத்த சந்தேகங்கள் உள்ளன என்று அவர் தெரிவித்துள்ளார். விதிகள் இல்லாத, வலிமையானவர்களின் சட்டம் மட்டுமே செல்லுபடியாகும் ஒரு உலகிற்குள் நாம் தள்ளப்படும் அபாயம் இருப்பதாக கிளிங்பெயில் எச்சரித்துள்ளார். இதேவேளை, ஈரான் மீதான குண்டுவீச்சுகளைப் பொறுப்பற்றது மற்றும் சட்டவிரோதமானது என ஸ்பெயின் நாடும் கண்டித்துள்ளது. ஈரான் மீதான தாக்குதல் சர்வதேச சட்டத்தை மீறுகிறது - சுவிஸ்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
India (20 ov) 255/5 New Zealand New Zealand chose to field. Current RR: 12.75 • Last 5 ov (RR): 52/4 (10.40)
-
ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
இரானில் எண்ணெய் கிடங்குகள் மீது தாக்குதல் - இஸ்ரேல் தகவல் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,அமெரிக்காவும் இஸ்ரேலும் இரானுடன் போரிட்டு ஒரு வாரத்திற்கும் மேலாகிவிட்டது. இரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள 'பல எரிபொருள் சேமிப்பு வளாகங்களை' தாக்கியதாக, இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (ஐடிஎஃப்) உறுதிப்படுத்தியுள்ளன. எரிபொருள் டேங்குகளுக்கு எதிரான "அவசியமான தாக்குதல்" இது என்று ஐடிஎஃப் கூறுகிறது. ராணுவ உள்கட்டமைப்பை இயக்குவதற்கு இரானிய ஆட்சி இந்த எரிபொருள் டேங்குகளை "நேரடியாகவும் தொடர்ச்சியாகவும்" பயன்படுத்துகிறது என்று இஸ்ரேலிய ராணுவம் கூறுகிறது. முன்னதாக, தெஹ்ரானில் உள்ள ஓர் எண்ணெய் கிடங்கு குறிவைக்கப்பட்டதாக, ரானின் ஃபார்ஸ் செய்தி நிறுவனமும் செய்தி வெளியிட்டிருந்தது. இதற்கிடையில், டெஹ்ரானுக்கு மேலே வானத்தில் பெரிய தீப்பிழம்புகள் எழுவதைக் காட்டும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வீடியோவை பிபிசி வெரிஃபை உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும், இந்த தாக்குதலில் யாராவது தங்கள் உயிரை இழந்தார்களா இல்லையா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இரானில் எண்ணெய் கிடங்குகள் மீது தாக்குதல் - இஸ்ரேல் தகவல்
-
ஈரானின் புதிய அதி உயர் தலைவர் தெரிவு?
இரானின் புதிய அதிஉயர் தலைவர் தேர்வு செய்யப்பட்டதாக தகவல் பட மூலாதாரம்,Getty Images இரானிய நிபுணர்கள் சபையின் உறுப்பினரான அஹமது அலமொல்ஹோடா, அந்நாட்டின் புதிய அதிஉயர் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். இரானிய செய்தி ஊடகமான மெஹர் வழங்கும் தகவலின்படி, நிபுணர்களின் சபை தலைமை செயலகத்தின் தலைவரான ஹுசைனி புஷெஹ்ரி தான் இந்த முடிவை பொதுவெளியில் அறிவிப்பதற்கு பொறுப்பானவர். முன்னாள் அதிஉயர் தலைவர் காமனெயி மறைவுக்குப் பிறகு புதிய தலைவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில் புதிதாக எந்த தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அவரை இலக்கு வைப்போம் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இரானின் புதிய அதிஉயர் தலைவர் தேர்வு செய்யப்பட்டதாக தகவல்
-
ஈரான் நிலைமையைப் பொறுத்தவரை, இது நடந்திருக்கக் கூடாத ஒரு போர்; யாருக்கும் எந்த நன்மையும் தராத ஒரு போர் - சீன வெளிவிவகார அமைச்சர்
ஈரான் நிலைமையைப் பொறுத்தவரை, இது நடந்திருக்கக் கூடாத ஒரு போர்; யாருக்கும் எந்த நன்மையும் தராத ஒரு போர் - சீன வெளிவிவகார அமைச்சர் Published By: Digital Desk 3 08 Mar, 2026 | 05:05 PM ஈரான் நிலைமையைப் பொறுத்தவரை, இது நடந்திருக்கக் கூடாத ஒரு போர். யாருக்கும் எந்த நன்மையும் தராத ஒரு போர் என சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி தெரிவித்துள்ளார். சீனாவின் தலைநகரான பீஜிங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை (08) நடைபெற்ற 14வது தேசிய மக்கள் காங்கிரஸின் நான்காவது அமர்வின் ஒரு பகுதியாக, சீனாவின் வெளிவிவகாரக் கொள்கை மற்றும் உறவுகள் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பில் சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், மத்திய கிழக்கின் வரலாறு உலகிற்கு மீண்டும் மீண்டும் ஒன்றைச் சொல்கிறது: படைபலத்தைப் பயன்படுத்துவது எதற்கும் தீர்வாகாது மற்றும் ஆயுத மோதல்கள் வெறுப்பை அதிகரிப்பதோடு புதிய நெருக்கடிகளையே உருவாக்கும். நிலைமை மேலும் மோசமடைவதைத் தவிர்க்கவும், இந்த மோதல் மற்ற இடங்களுக்குப் பரவாமல் தடுக்கவும், இராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என சீனா மீண்டும் ஒருமுறை அழைப்பு விடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார். ஈரான் நிலைமையைப் பொறுத்தவரை, இது நடந்திருக்கக் கூடாத ஒரு போர்; யாருக்கும் எந்த நன்மையும் தராத ஒரு போர் - சீன வெளிவிவகார அமைச்சர்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
என்னத்துக்கு நியூசி பந்துவீச வெளிக்கிட்டவை?! தாங்களே துடுப்பெடுத்து அடித்திருக்கலாம். ஸ்கோர்போட் அழுத்தத்திலயே விக்கெட்டுகள் போயிடும். இவங்கள் துடுப்பாட்டத்திற்கு சாதகமாக பிட்ச் அமைத்துவிட்டு இப்ப அடிஅடி என்று அடிக்கிறாங்களே!