ஏராளன்
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
Everything posted by ஏராளன்
-
76 வருடகால சாபத்திற்கு முற்றுப்புள்ளி வைப்போம் : மார்ச் 01 இல் வர்க்க அதிகாரத்தை நிலைநாட்டும் முன்னிலை சோசலிசக் கட்சியின் 4வது தேசிய மாநாடு கொழும்பில்
76 வருடகால சாபத்திற்கு முற்றுப்புள்ளி வைப்போம் : மார்ச் 01 இல் வர்க்க அதிகாரத்தை நிலைநாட்டும் முன்னிலை சோசலிசக் கட்சியின் 4வது தேசிய மாநாடு கொழும்பில் 16 Feb, 2026 | 06:35 PM (க.சிவலிங்கமூர்த்தி) நாட்டின் 76 வருடகால சாபத்தை முடிவுக்குக் கொண்டுவந்து உழைக்கும் வர்க்கத்தின் கரங்களில் அதிகாரத்தை ஒப்படைப்பதற்கான தீர்க்கமான அரசியல் வேலைத்திட்டத்தை முன்வைத்து முன்னிலை சோசலிசக் கட்சியின் 4ஆவது தேசிய மாநாடு எதிர்வரும் மார்ச் மாதம் 1ஆம் திகதி கொழும்பு சுகததாச உள்ளரங்கில் நடைபெறவுள்ளது. இது தொடர்பான விசேட ஊடகவியலாளர் சந்திப்பு திங்கட்கிழமை (16) நுகேகொடையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட கட்சியின் பொதுச் செயலாளர் குமார் குணரத்தினம் தற்போதைய அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் நாட்டின் அரசியல் நிலைவரம் குறித்து காரசாரமான கருத்துக்களை முன்வைத்தார். அவர் அங்கு மேலும் கூறுகையில், 76 வருடங்களாக நாட்டை மாறி மாறி ஆட்சி செய்த இரு பிரதான அரசியல் கும்பல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே 2024 ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களில் மக்கள் ஒரு புதிய அரசியல் இயக்கத்தை அதிகாரத்திற்கு கொண்டு வந்தனர். 2022 மக்களின் அரகலய போராட்டத்தின் நேரடி விளைவே இந்த மாற்றமாகும். எனினும் ஆட்சியில் அமர்ந்த புதிய அரசாங்கம் பழைய ஆட்சியாளர்களின் அதே 'நவதாராளவாத' பொருளாதாரப் பாதையிலேயே பயணிக்கிறது. மக்கள் மீது வரிச் சுமைகளை ஏற்றிவிட்டு பெரும் முதலாளிகளுக்கு வரிச் சலுகைகளை வழங்கி வருகின்றனர். சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அடிபணிந்துள்ள அரசாங்கம் இலவசக் கல்வியையும் சுகாதாரத்தையும் இல்லாதொழிக்க முற்படுகிறது. 3000 கிராமப்புற பாடசாலைகளை மூடும் திட்டம் மற்றும் மருந்துத் தட்டுப்பாடு என்பன மக்களின் வாழ்வாதாரத்தை அச்சுறுத்துகின்றன. மறுபுறம் இந்தியாவின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப திருகோணமலை மற்றும் மன்னார் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை விற்பனை செய்ய அரசாங்கம் இரகசிய ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது. இது நாட்டின் இறையாண்மைக்கும் சக்திவள பாதுகாப்புக்கும் விடப்பட்ட சவாலாகும். பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதாகக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் தற்போது அதைவிடக் கொடிய அடக்குமுறைச் சட்டங்களை கொண்டு வர முயற்சிக்கின்றனர். மக்களின் ஜனநாயகப் போராட்டங்களை முடக்குவதே இவர்களின் நோக்கம். கல்வி சுகாதார உரிமைகள் பறிக்கப்படும் போது தொழிலாளர்களின் ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதிஊழியர் சேமலாப நிதி ஆகிய நிதியங்கள் சூறையாடப்படும் போது மக்களுக்குப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை. எதிர்வரும் மார்ச் மாதம் 1ஆம் திகதி 'வர்க்கத்திற்கு அதிகாரம் - அதிகாரத்திற்கு கட்சி' எனும் தொனிப்பொருளில் எமது 4வது தேசிய மாநாடு நடைபெறவுள்ளது. வெறும் ஆட்சி மாற்றங்கள் எமது மக்களுக்கு விடிவைத் தரவில்லை. இனிவரும் அரசியல் சூழல் என்பது உழைக்கும் வர்க்கத்திடம் அதிகாரம் கைம்மாறும் ஒரு தருணமாக அமைய வேண்டும். மலையக மக்கள், வடக்கு தமிழ் மக்கள் மற்றும் கிழக்கு முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண இந்த அரசாங்கம் தவறிவிட்டது. மீண்டும் இனவாதம் தலைதூக்க இடமளிக்காது ஒரு பலமான இடதுசாரி மாற்றீட்டை எமது மாநாட்டின் மூலம் முன்வைப்போம். உலகளவில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தினால் உக்ரைன் மற்றும் காசாவில் முன்னெடுக்கப்படும் மனிதாபிமானமற்ற போர்களுக்கு எதிராக ஒரு சர்வதேச இடதுசாரி இயக்கம் கட்டியெழுப்பப்பட வேண்டும். எமது மாநாட்டில் சர்வதேச இடதுசாரிப் பிரதிநிதிகளும் பங்கேற்கவுள்ளனர். எனவே இந்த மாற்றத்தை விரும்பும் தொழிலாளர்கள் மாணவர்கள் விவசாயிகள் மற்றும் அனைத்து இடதுசாரி சக்திகளையும் மார்ச் 1ஆம் திகதி சுகததாச உள்ளரங்கில் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கிறோம் என்றார். https://www.virakesari.lk/article/238829
-
வடக்கு மாகாண பொதுச் சேவை வெற்றிடப் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் கோரல்
வடக்கு மாகாண பொதுச் சேவை வெற்றிடப் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் கோரல் 16 Feb, 2026 | 05:36 PM வடக்கு மாகாண பொதுச் சேவையில் நிலவும் தொழில்நுட்பவியல் சார்ந்த பதவிகளுக்குத் தகுதியானவர்களைத் தெரிவு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சைகளுக்காக விண்ணப்பங்கள் கோரப்படுவதாக வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் ஆ.சிறி தெரிவித்துள்ளார். கீழ்க்காணும் பதவிகளுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கே விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன: மண் பரிசோதகர் – மாகாண தொழில்நுட்பவியல் சேவை தரம் III அல்லது பயிற்சித் தரம் (அறிவித்தல் இல: R/2026/04) ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர் – வடக்கு மாகாண தொழில்நுட்பவியல் சேவை தரம் III (அறிவித்தல் இல: R/2026/05) வேலை மேற்பார்வையாளர் – வடக்கு மாகாண கட்டடங்கள் திணைக்களம் தரம் III (அறிவித்தல் இல: R/2026/06) மேற்படி பதவிகளுக்கான போட்டிப் பரீட்சை மற்றும் விண்ணப்ப விபரங்கள் அடங்கிய முழுமையான தகவல்களை வடக்கு மாகாண சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.np.gov.lk இல் "Exam and Recruitment Advertisement" எனும் பகுதியில் பார்வையிட முடியும். தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கு அமைவாகத் தமது விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து 2026.03.03க்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். https://www.virakesari.lk/article/238794
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
RESULT 30th Match, Group B (N), Pallekele, February 16, 2026, ICC Men's T20 World Cup Australia 181 Sri Lanka (18/20 ov, T:182) 184/2 Sri Lanka won by 8 wickets (with 12 balls remaining)
-
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
25 இந்திய மீனவர்கள் கைது Published By: Digital Desk 3 16 Feb, 2026 | 02:40 PM காங்கேசன்துறை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட இந்திய கடற்தொழிலாளர்கள் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கேசந்துறை கடற்படையினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) இரவு மேற்கொண்ட விசேட சுற்றுக்காவல் நடவடிக்கையின் போது , காங்கேசன்துறை கடற்பரப்பை அண்டிய பகுதிக்குள் இரு படகுகளில் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்டிருந்த படகோட்டிகள் உள்ளிட்ட 25 தொழிலாளர்களையும் கடற்படையினர் கைசெய்தனர். கைது செய்யப்பட்ட 25 பேரையும் அவர்களின் படகுகளையும் கரைக்கு கொண்டு வந்த கடற்படையினர், மேலதிக சட்ட நடவடிக்கைக்காக காங்கேசன்துறை கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் கையளித்துள்ளனர். https://www.virakesari.lk/article/238783
-
“புதுசும் வேண்டாம் பழசும் வேண்டாம்” கையெழுத்து போராட்டம்!
"புதுசும் வேண்டாம் பழசும் வேண்டாம்" எனும் தொனிப்பொருளில் கையொழுத்து போராட்டம்! 16 Feb, 2026 | 12:19 PM ஏற்கனவே நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டமும், இனிமேல் கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாதத்தில் இருந்து அரசாங்கத்தை பாதுகாக்கும் சட்டமும் வேண்டாம் என தெரிவித்து "புதுசும் வேண்டாம் பழசும் வேண்டாம்" என்ற தொனிப்பொருளில் இன்றையதினம் கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. திருகோணமலை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (15) ஆரம்பமாகிய குறித்த போராட்டம், திங்கட்கிழமை (16) யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் இல்லத்திலும் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது தவத்திரு வேலன் சுவாமிகள், யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் அருட்தந்தை ஜெபரட்ணம் அடிகளார், ஏனைய மதகுருக்கள் குறித்த சட்டங்களை எதிர்த்து கையொப்பமிட்டனர். இதன்போது குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் உடனிருந்தார். இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க விரும்புகிறோம் புலம்பெயர் தேசங்களில் வசிக்கின்ற உறவுகளும் கையொப்பமிடும் வகையில் இணைய வழி மூலமான கையொப்பமிடும் வசதியும் இன்றையதினம் ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/238775
-
வெடுக்கு நாறிமலையில் சிவாரத்திரி தின வழிபாடுகள்!
வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சுமூகமாக நடைபெற்ற சிவராத்திரி வழிபாடுகள் ; துரைராசா ரவிகரன் பங்கேற்பு 16 Feb, 2026 | 10:45 AM தமிழர்களின் பூர்வீக வழிபாட்டிடமான வவுனியா வடக்கு வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (15) சிவராத்திரி தின பூசை வழிபாடுகள் எவ்வித இடையூறுகளுமின்றி சுமூகமான முறையில் இடம்பெற்றதுடன் குறித்த பூசைவழிபாடுகளில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பங்கேற்றார். குறிப்பாக கடந்தகாலங்களில் வவுனியா வடக்கு வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரிதின வழிபாடுகளில் பொலிசாரால் கடுமையான குழப்பங்கள் ஏற்படுத்தப்பட்டுவந்தன. இந்நிலையில் இம்முறை இடம்பெறும் சிவராத்திரி தின பூசை வழிபாடுகளில் குழப்பங்கள் ஏற்படுத்தப்படாது சைவமக்கள் சுதந்திரமாக வழிபாடுகளை மேற்கொள்வதற்கு இடமளிக்கப்படவேண்டுமெனவும், சைவப்பெருமக்களின் வழிபாட்டுரிமை பாதுகாக்கப்பட வேண்டுமெனவும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கடந்த வெள்ளிக்கிழமை (13) இடம்பெற்ற வவுனியாவடக்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் வலியுறுத்தியிருந்தார். அதன்போது சைவமக்கள் சுதந்திரமாக வழிபாடுகளை மேற்கொள்வதற்கு இடமளிக்கப்படுமென வன்னிமாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத்தலைவரும் பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்கவினால் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்கமைய தமிழர்களின் பூர்வீக வழிபாட்டிடமான வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி தினத்திலே சுமூகமாகவும் சிறப்பாகவும் சிவராத்திரி பூசை வழிபாடுகள் இடம்பெற்றிருந்தன. அந்தவகையில் வெடுக்குநாறி மலை உச்சியில் அமைந்துள்ள ஆதிலிங்கேஸ்வரப் பெருமானுக்கு அபிசேகம் செய்யப்பட்டு பூசைவழிபாடுகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டது. அத்தோடு அங்கு சிவராத்திரிதின கலைநிகழ்வுகளும் சிறப்பான முறையில் இடம்பெற்றன. மேலும் குறித்த ஆதிலிங்கேஸ்வவர் ஆலயத்திற்குச் செவ்வதற்கான வீதி மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆலயத்தில் இடம்பெறும் சிவராத்திரி வழிபாடுகளுக்கு பக்தர்கள் சென்று வருவதற்காக ஆலய நிர்வாகத்தினரால் உழவியந்திரங்கள் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தன. அந்தவகையில் பெருத்த போக்குவரத்து நெருக்கடிகளுக்கு மத்தியிலும் பெருந்திரளான பக்தர்கள் வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய பூசை வழிபாடுகளில் பங்கேற்றிருந்ததுடன், வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், வவுனியா வடக்கு பிரதேசசபை உறுப்பினர்களான செல்வராசா சுசீலன், தர்மலிங்கம் சுசீலன், இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் வவுனியா வடக்கு பிரதேசக்கிளையின் செயலாளர் ச.தவேந்திரராசா, வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வவர் ஆலய அறங்காவலர் சபைத்தலைவர் பூபலசிங்கம், செயலாளர் ச.வசந்தன் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர். ஆலயத்திற்குச் செல்லும் பாதை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தமையால் பக்தர்களுக்கான போக்குவரத்து சேவையை வழங்கிய உழவியந்திரங்கள் புதையுண்டதுடன், ஆலயத்திற்கு குடிநீர் தாங்கியை எடுத்து வந்த உழவியந்திரமும் புதையுண்டதால் சிறிது நேரம் போக்குவரத்து தடங்கலும் ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு செல்வதற்கான வீதிச்சீரமைப்புத் தொடர்பில் எதிர்காலத்தில் தம்மால் கவனஞ் செலுத்தப்படுமென நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் இதன்போது தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக ஆலயத்திற்குச் செல்வதற்காக பயன்படுத்தப்படும் பாதிக்கப்பட்டுள்ள குறித்த வீதியானது வனவளத் திணைக்களத்தினுடைய பகுதிகளை ஊடறுத்துச்செல்வதால் வனவளத்திணைக்களத்தின் அனுமதிகள் பெறவேண்டியிருப்பதாகவும், அதற்கமைய அனுமதிகளைப் பெற்று வீதியை சீரமைப்பதுதொடர்பில் தம்மால் கவனம் செலுத்தப்படுமென நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இதன்போது தெரிவித்தார். மேலும், குறித்த சிவராத்திரி பூசை வழிபாடுகள் இடம்பெறும்போது வெடுக்குநாறிமலை ஆலயச்சூழலில் பொலிஸார் பாதுகாப்புக்கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். https://www.virakesari.lk/article/238765
-
நெடுந்தீவு மக்களின் நீண்டகாலப் போக்குவரத்துத் துயரம் நீங்கியது: கடற்படைப் படகு மூலம் கொண்டு செல்லப்பட்ட புதிய பஸ்!
நெடுந்தீவு மக்களின் நீண்டகாலப் போக்குவரத்துத் துயரம் நீங்கியது: கடற்படைப் படகு மூலம் கொண்டு செல்லப்பட்ட புதிய பஸ்! Published By: Digital Desk 1 16 Feb, 2026 | 10:33 AM நெடுந்தீவில் போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்தப்பட, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று, கடற்படையின் விசேட படகு மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. நெடுந்தீவில் இதுவரை காலமும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான ஒரு பஸ் மாத்திரம் சேவையில் ஈடுபட்டிருந்ததாகவும், நீண்ட நாட்களாக குறித்த பஸ், பழுதடைந்த நிலையில், கடும் சிரமத்திற்கு மத்தியில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனால் மக்கள் போக்குவரத்தில் பெரும் சிரமங்களுக்குள்ளாகியுள்ளனர். இதனை தொடர்ந்து, கடந்த செப்டெம்பர் 18ஆம் திகதி போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் நடைபெற்ற போக்குவரத்து ஒருங்கிணைப்புக் குழு விசேட கூட்டத்தில், இந்த விடயம் குறித்து கலந்துரையாடப்பட்டுள்;ளது. இந்த விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் கூறியிருந்த நிலையில், சுமார் 05 மாதங்களின் பின்னர் புதிய பஸ், சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, இதுவரை காலமும் நெடுந்தீவில் சேவையில் ஈடுபடுத்தப்பட்ட பஸ், திருத்த வேலைகளுக்காக யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/238763
-
89,000 இலங்கைத் தமிழர்களின் குடியுரிமைப் பிரச்சினைகளைத் தீர்க்க பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!
இலங்கை அகதிகள் விவகாரத்தில் தமிழக அரசுக்கு நாமல் வேண்டுகோள் Feb 16, 2026 - 05:30 PM தென்னிந்தியாவில் வசிக்கும் 89,000 இலங்கையர்களுக்கு இந்தியக் குடியுரிமை அல்லது நீண்டகால விசா வழங்குமாறு கோரி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் விடுத்துள்ள கோரிக்கை வரவேற்கத்தக்கது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது குறித்து தனது 'எக்ஸ்' (X) தளத்தில் பதிவிட்டுள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது: "பல தசாப்தங்களாக முகாம்களில் வசித்து வரும், ஸ்திரத்தன்மை, கௌரவம் மற்றும் பாதுகாப்பான சட்ட அந்தஸ்தை எதிர்பார்க்கும் ஆயிரக்கணக்கான இலங்கைத் தமிழர்களுக்கு இக்கோரிக்கை நம்பிக்கையளிக்கிறது. எனினும், இக்கோரிக்கையானது உண்மையான மனிதாபிமான அக்கறையின் வெளிப்பாடாக இருக்க வேண்டும் என்றும், வரவிருக்கும் மாநிலத் தேர்தல்களை இலக்காகக் கொண்டதாக இருக்கக்கூடாது என்றும் நாங்கள் உண்மையாக நம்புகிறோம். ஏனெனில் கடந்த காலங்களில் அரசியல் ரீதியாக உணர்வுபூர்வமான காலகட்டங்களில் இவ்வாறான கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. 30 வருடகால யுத்தம் முடிவடைந்த பின்னர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில், தமிழக முகாம்களில் இருந்த இலங்கையர்கள் தாமாக முன்வந்து பாதுகாப்பாக நாடு திரும்புவதை எமது அரசாங்கம் தொடர்ந்து எளிதாக்கியது. சவாலான சூழ்நிலைகளுக்கு மத்தியிலும், அவர்கள் தமது தாய்நாட்டில் கௌரவமாகத் தமது வாழ்க்கையைக் மீளக்கட்டியெழுப்புவதற்குப் பாரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது தமிழக முகாம்களில் இருந்து நாடு திரும்ப விரும்புவோர் பல்வேறு தடைகளை எதிர்கொள்வதாக வரும் செய்திகள் கவலையளிக்கின்றன. நாடு திரும்ப விரும்புவோரின் கோரிக்கைகளை இலங்கை அரசாங்கம் கவனமாகப் பரிசீலித்து, தேவையற்ற தடைகளின்றி அவர்கள் சமூகத்துடன் இணைவதை உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். இலங்கையர்கள் இந்தியாவில் உள்ள அகதி முகாம்களில் தொடர்ந்து கஷ்டப்பட வேண்டிய அவசியமில்லை. அவர்கள் இலங்கைக்குத் திரும்பி, இங்கு உரிமையுள்ள குடிமக்களாக வாழ முடியும். இந்த 89,000 இலங்கையர்களும் எமது மக்கள். அவர்களின் நல்வாழ்வு, பாதுகாப்பு மற்றும் கௌரவம் ஆகியவற்றிற்கு நாமே பொறுப்பு. இந்த உணர்வுபூர்வமான மனிதாபிமானப் பிரச்சினையை அரசியலாக்க வேண்டாம் என இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்களையும், தமிழக அரசாங்கத்தையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். பாதிக்கப்பட்ட அனைத்துக் குடும்பங்களினதும் உரிமைகளையும் எதிர்காலத்தையும் பாதுகாக்கும் வகையிலான நிலையான தீர்வொன்றை நோக்கி நாம் ஒன்றிணைந்து செயற்படுவோம்," என நாமல் ராஜபக்ஷ தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். https://adaderanatamil.lk/news/cmlp4fwki000t356nztfnqf0x
-
முன்னாள் அமைச்சர் திஸ்ஸ விதாரண காலமானார்
மறைந்த முன்னாள் சிரேஷ்ட அமைச்சர் திஸ்ஸ விதாரணவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அஞ்சலி Published By: Digital Desk 3 16 Feb, 2026 | 09:47 AM மறைந்த லங்கா சம சமாஜ கட்சியின் தலைவரும் முன்னாள் சிரேஷ்ட அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரணவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இறுதி அஞ்சலி செலுத்தினார். பேராசிரியர் திஸ்ஸ விதாரணவின் பூதவுடல் வைக்கப்பட்டிருக்கும் என்.எம். பெரேரா நிலையத்திற்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) பிற்பகல் சென்ற ஜனாதிபதி, பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன், அவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/238759
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
Live 30th Match, Group B (N), Pallekele, February 16, 2026, ICC Men's T20 World Cup Australia 181 Sri Lanka (12.3/20 ov, T:182) 109/2 Sri Lanka need 73 runs in 45 balls.Stats view Current RR: 8.72 • Required RR: 9.73 • Last 5 ov (RR): 37/1 (7.40) Win Probability SL 55.16% AUS 44.84%
-
கிளிநொச்சியின் நீர் விநியோகத் திட்டத்தை விரிவுப்படுத்த நிதி ஒதுக்கீடு - நீர் வழங்கல் அமைச்சர்
கிளிநொச்சியின் நீர் விநியோகத் திட்டத்தை விரிவுப்படுத்த நிதி ஒதுக்கீடு - நீர் வழங்கல் அமைச்சர் 16 Feb, 2026 | 09:43 AM கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்தி, பொருளாதார வளர்ச்சி மற்றும் மக்களின் தேவைகளின் அடிப்படையில் குழாய் வழி நீர் விநியோக நடவடிக்கைகளை விரிவுப்படுத்த நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படும் என வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சராக வைத்திய கலாநிதி சுசில் ரணசிங்ஹ தெரிவித்துள்ளார். கடந்த வாரம் கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் நீர் விநியோக நடவடிக்கைகள் தொடர்பில் மாவட்டச் செயலகத்தில் நடத்திய கலந்துரையாடலின் போது கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், கிளிநொச்சி மாவட்டத்தின் எதிர்கால பொருளாதார நலன்கருதி குறிப்பாக பரந்தன் பகுதியில் அமைக்கப்படவுள்ள முதலீட்டு ஊக்குவிப்பு வயத்தின் தேவை கருதியும், பொது மக்களுக்கான குடி நீர் தேவை அதிகரித்துச் செல்லும் நிலைமையினையும் ஆதாவது முக்கியமாக கண்டாவளை பிரதேச செயலக பிரிவிவில் அதிகரித்து வரும் சிறுநீரக பாதிப்புக்களை கருத்தில் எடுத்தும் கிளிநொச்சி மாவட்ட நீர் விநியோகத் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனத் தெரிவித்தார். இதன் மூலம் புதிய நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல், கிராமங்களுக்கான குழாய்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளப்பட்டு மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளுக்கு சுத்தமான குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்படும் அத்தோடு முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்திற்கும் நீர் விநியோகம் வழங்கப்பட்டு மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு வழி சமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/238757
-
ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்
இங்கிலாந்து அணி 24 ஓட்டங்களால் வெற்றி! Feb 16, 2026 - 06:26 PM 2026 டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து மற்றும் இத்தாலி அணிகளுக்கு இடையிலான இன்று (16) இடம்பெற்ற போட்டியில் இங்கிலாந்து அணி 24 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. டெல்லியில் இடம்பெறும் இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுக்களை இழந்து 202 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் இங்கிலாந்து அணி சார்பில் வில் ஜாக்ஸ் 53 ஓட்டங்களை பெற்றார். பந்து வீச்சில் இத்தாலி அணி சார்பில் கிராண்ட் ஸ்டீவர்ட் மற்றும் கிரிஷான் கலுகமகே தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்படி, 161 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இத்தாலி அணி 20 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 178 ஓட்டங்களை மாத்திமே பெற்றது. இத்தாலி அணி சார்பில் பென் மனென்டி அதிகபட்சமாக 60 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பில் சாம் கரன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். https://adaderanatamil.lk/news/cmlp6gdi6000p356ndbq69lae
-
லண்டனில் தீவிரமாக பரவி வரும் தட்டம்மை ; 34 சிறுவர்கள் பாதிப்பு
லண்டனில் தீவிரமாக பரவி வரும் தட்டம்மை ; 34 சிறுவர்கள் பாதிப்பு 16 Feb, 2026 | 07:08 PM வடக்கு லண்டனில் பல பாடசாலைகளில் தட்டம்மை நோய் வேகமாக பரவி வருவதாகவும் குறைந்தது 34 சிறுவர்கள் தட்டம்மையினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நோய் காரணமாக ஐந்து சிறுவர்களில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் அனைவரும் முழுமையாக தடுப்பூசி செலுத்தவில்லை என்றும் அங்குள்ள பொது மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார். கடும் உடல் நல பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடிய இந்த தொற்று நோய்க்கு எதிரான தடுப்பூசிகள் தங்கள் பிள்ளைகளுக்கு செலுத்தப்பட்டதை உறுதி செய்துகொள்ளுமாறு பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. என்ஃபீல்ட் மற்றும் ஹாரிங்கியில் குறைந்தது 7 பாடசாலைகளில் தட்டம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆண்டின் (2026) முதல் மாதத்தில் இங்கிலாந்து முழுவதும் 96 பேர் தட்டம்மையால் பாதிக்கப்பட்டதாகவும் இதில் மூன்றில் ஒரு பங்காக, என்ஃபீல்ட்டில் 34 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தட்டம்மையில் பாரிய தாக்கம் கொண்ட தொற்றானது பெரும்பாலும் பாடசாலைகள் மற்றும் பாலர் பாடசாலைகளில் கற்கும் 10 வயதுக்குட்பட்ட சிறுவர்களையே அதிகமாக பாதிக்கிறது என இங்கிலாந்து சுகாதார பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/238831
-
கேரளாவில் 10 மாத பெண்குழந்தையின் உடல் உறுப்புகள் தானம் – 4 பேருக்கு மறுவாழ்வு!
ஐந்து பேருக்கு மறுவாழ்வளித்த பத்து மாத பெண் குழந்தை..! 16 Feb, 2026 | 10:02 AM இந்தியாவின் கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள மல்லப்பள்ளியைச் சேர்ந்தவர் அருண் ஆபிரகாம். இவருடைய மனைவி ஷெரின் ஆன் ஜான். இந்த தம்பதியின் 10 மாத பெண் குழந்தை அலின் ஷெரின் ஆபிரஹாம். இந்நிலையில், கடந்த 5ம் திகதி குழந்தையின் தாய், தாத்தா, பாட்டி ஆகியோர் கோட்டயத்தில் இருந்து திருவல்லாவுக்கு காரில் சென்றனர். அப்போது, எதிரில் வந்த மற்றொரு கார் இவர்களின் கார் மீது மோதியது. இதில் ஷெரினின் தாய், தாத்தா மற்றும் பாட்டி காயமடைந்தனர். படுகாயமடைந்த குழந்தை ஷெரின் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். இதையடுத்து மருத்துவர்கள், குடும்பத்தினர் சம்மதத்துடன் குழந்தையின் கல்லீரல், சிறுநீரகங்கள், இதய வால்வு, கண்கள் ஆகியவற்றை தானமாக பெற்றனர். இதைத் தொடர்ந்து, குழந்தையின் கல்லீரல், திருவனந்தபுரம் கிம்ஸ் வைத்தியசாலையில் உள்ள 6 மாத குழந்தைக்கு பொருத்தப்பட உள்ளது. சிறுநீரகங்கள், திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியில் உள்ள மற்றொரு குழந்தைக்கு வழங்கப்பட்டது. இதய வால்வு மற்றும் கண்கள், சித்ரா இன்ஸ்டிடியூட் மற்றும் அமிர்தா வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவோருக்கு வழங்கப்பட்டன. இதன் மூலம், கேரளாவிலேயே மிகக் குறைந்த வயதில் உடல் உறுப்பு தானம் செய்து 5 பேருக்கு மறுவாழ்வளித்த பெருமை அலின் ஷெரினுக்கு கிடைத்துள்ளது. https://www.virakesari.lk/article/238762
-
மரண தண்டனை விதிக்கப்பட்ட 817 பேர் சிறையில்
மரண தண்டனை விதிக்கப்பட்ட 817 பேர் சிறையில் Feb 16, 2026 - 05:12 PM மரண தண்டனை விதிக்கப்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பிரஜைகள் 817 பேர் சிறைச்சாலையில் உள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது. 2025ஆம் ஆண்டுக்கான முன்னேற்ற அறிக்கையின்படி, அந்த ஆண்டின் செப்டம்பர் மாதம் 30ஆம் திகதி வரை மரண தண்டனை விதிக்கப்பட்ட உள்நாட்டுக் கைதிகளின் எண்ணிக்கை 811 ஆகும். இதில் 792 ஆண்களும் 19 பெண்களும் அடங்குகின்றனர். மேலும், ஐந்து வெளிநாட்டுப் பிரஜைகளும், பயங்கரவாதக் குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒருவரும் சிறையிலிருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயுள் தண்டனை விபரங்கள்: ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 311 பேர் தற்போது சிறையிலுள்ளனர். இவர்களில் 70 பேர் வெளிநாட்டுப் பிரஜைகள் ஆவர். பயங்கரவாதக் குற்றங்கள் தொடர்பில் மூவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmlp3h0mq000r356n9zrd34cd
-
யாழ்ப்பாணத்தில் காணித் தகராறு: ஒருவர் அடித்துக் கொலை
யாழ்ப்பாணத்தில் காணித் தகராறு: ஒருவர் அடித்துக் கொலை Feb 16, 2026 - 08:03 PM யாழ்ப்பாணம், கோப்பாய் பகுதியில் நிலவிய நீண்டகால காணித் தகராறு காரணமாக ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்கள் தலைமறைவாகியுள்ள நிலையில், அவர்களைக் கைது செய்யக் கோப்பாய் பொலிஸார் விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். கோப்பாய் கல்வியியற் கல்லூரிக்கு அருகில் இன்று (16) இடம்பெற்ற இந்தத் தாக்குதலில், அப்பகுதியைச் சேர்ந்த செல்லத்துரை செல்வரஞ்சன் (59 வயது) என்பவரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபருக்கும் மற்றுமொரு தரப்பினருக்கும் இடையில் நீண்டகாலமாகக் காணிப் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இன்று திங்கட்கிழமை இது தொடர்பாக ஏற்பட்ட தர்க்கம் முற்றி கைகலப்பாக மாறியுள்ளது. இதன்போது மூவர் இணைந்து நடத்திய தாக்குதலில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்துக் கோப்பாய் பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். தாக்குதலை நடத்திய மூவரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களைத் தேடி விசேட சுற்றிவளைப்புகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவரின் சடலம் மீட்கப்பட்டு, உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmlp9v1vy000x356ntpv0ztpa
-
"கணவரின் இறுதிச்சடங்குக்கு கூட செல்லவில்லை" - பிரிட்டனின் புதிய சட்டத்தால் இலங்கை மக்கள் சந்திக்கும் சவால்கள்
வேலை விசாவில் வந்து வேலை செய்து வரி கட்டுவோர் நிலை என்ன மாதிரி அண்ணை?
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பத்து.
- அறிவித்தல்: யாழ் இணையம் 28 ஆவது அகவையில் - கள உறுப்பினர்களின் சுய ஆக்கங்கள்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஒன்பது....
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
எட்டு!
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஏழு!
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஆறு!
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஐந்து!
-
சமஷ்டி அரசியலமைப்பு குறித்து ஆராயும் கூட்டம் யாழில் இன்று ; தமிழரசுக்கட்சி பங்கேற்காது
சமஷ்டி அரசியலமைப்பு குறித்து ஆராயும் கூட்டம் யாழில் இன்று; தமிழரசுக்கட்சி பங்கேற்காது 15 Feb, 2026 | 02:33 PM (நா.தனுஜா) தமிழர் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக அரசினால் கொண்டுவரப்படவிருக்கும் ஏக்கிய இராச்சிய வரைவை நிராகரித்து, கூட்டாட்சி தீர்வை ஒரே குரலில் முன்வைப்பது தொடர்பில் தமிழ்ந்தேசியக்கட்சிகள் மற்றும் சிவில் சமூகத்துடன் கலந்துரையாடும் நோக்கில் தமிழ்த்தேசிய பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டம் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என இலங்கைத் தமிழரசுக்கட்சி அறவித்திருக்கும் அதேவேளை, ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியும் இதில் கலந்துகொள்வதற்கான சாத்தியம் இல்லை என்றே தெரியவருகிறது. அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவுள்ள ஏக்கிய இராச்சிய அரசியலமைப்பு வரைவை நிராகரித்து, அதற்குப் பதிலாக தமிழ்த்தேசம் அங்கீகரிக்கப்பட்ட, தமிழ்த்தேசத்தின் தனித்துவமான இறைமையின் அடிப்படையில், சுயநிர்ணய உரிமையை அனுபவிக்கக்கூடிய கூட்டாட்சி அரசியலமைப்பு உருவாக்கப்படுவது குறித்து கலந்துரையாடும் நோக்கில் இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், அதில் பங்கேற்குமாறு கோரியும் தமிழ்த்தேசிய பேரவையின் தலைவர் பா.உ கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினால் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானத்துக்கு கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டது. அக்கடிதத்துக்கு பதில் அனுப்பிவைத்த சி.வி.கே.சிவஞானம், கஜேந்திரகுமாரின் அழைப்புக்கடிதத்தின் இரண்டாம் பந்தியின் கருத்துக்களின் அடிப்படையில் 15 ஆம் திகதி நடைபெறவுள்ள கூட்டத்தில் கலந்துகொள்வது சாத்தியமற்றது எனவும், இருப்பினும் ஒற்றையாட்சி அரசியலமைப்பு முறைமையை முழுமையாக எதிர்ப்பதிலும், எமது கட்சியின் அடிப்படைக் கோட்பாடான சமஷ்டி கூட்டாட்சி முறைமையை வலியுறுத்துவதிலும் தாம் உறுதியாக இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். அதேவேளை இக்கூட்டத்தில் பங்கேற்குமாறு கோரி கஜேந்திரகுமாரினால் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் செயலாளர் நாகலிங்கத்துக்கும் அழைப்பு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. அதற்குப் பதில் அனுப்பிய நாகலிங்கம், சிவில் சமூகத்தினரின் பங்கேற்புடனான கூட்டத்தை நடாத்துவதற்கு முன்பதாக இதுபற்றி தமிழ்த்தேசியக் கட்சிகள் சந்தித்துக் கலந்துரையாடவேண்டும் என விரும்புவதாகக் குறிப்பிட்டிருந்தார். அதற்குப் பதில் அனுப்பிய கஜேந்திரகுமார், அச்சந்திப்பை 15 ஆம் திகதிக்கு முன்பதாக ஒருங்கிணைக்குமாறு ஜனநாயக தமிழ்த்தேசியக்கூட்டணியிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். இருப்பினும் 15 திகதி நடைபெறவிருக்கும் சந்திப்பை தமிழ்த்தேசிய பேரவை ஒருங்கிணைப்பதன் காரணமாக, இச்சந்திப்பையும் அவர்களே ஏற்பாடு செய்வது தான் இலகுவானதாக இருக்கும் என ஜனநாயக தமிழ்த்தேசியக்கூட்டணி மீண்டும் பதில் அனுப்பியது. இவ்வாறானதொரு பின்னணியில், இன்றைய தினம் நடைபெறவிருக்கும் கூட்டத்தில் கலந்துகொள்வீர்களா என ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரனிடம் வினவியபோது, தாம் இறுதியாக அனுப்பிய கடிதத்துக்கு இன்னமும் பதில் எதுவும் கிடைக்கப்பெறவில்லை எனத் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/238712