Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்

Everything posted by ஏராளன்

  1. லண்டனில் தீவிரமாக பரவி வரும் தட்டம்மை ; 34 சிறுவர்கள் பாதிப்பு 16 Feb, 2026 | 07:08 PM வடக்கு லண்டனில் பல பாடசாலைகளில் தட்டம்மை நோய் வேகமாக பரவி வருவதாகவும் குறைந்தது 34 சிறுவர்கள் தட்டம்மையினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நோய் காரணமாக ஐந்து சிறுவர்களில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் அனைவரும் முழுமையாக தடுப்பூசி செலுத்தவில்லை என்றும் அங்குள்ள பொது மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார். கடும் உடல் நல பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடிய இந்த தொற்று நோய்க்கு எதிரான தடுப்பூசிகள் தங்கள் பிள்ளைகளுக்கு செலுத்தப்பட்டதை உறுதி செய்துகொள்ளுமாறு பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. என்ஃபீல்ட் மற்றும் ஹாரிங்கியில் குறைந்தது 7 பாடசாலைகளில் தட்டம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆண்டின் (2026) முதல் மாதத்தில் இங்கிலாந்து முழுவதும் 96 பேர் தட்டம்மையால் பாதிக்கப்பட்டதாகவும் இதில் மூன்றில் ஒரு பங்காக, என்ஃபீல்ட்டில் 34 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தட்டம்மையில் பாரிய தாக்கம் கொண்ட தொற்றானது பெரும்பாலும் பாடசாலைகள் மற்றும் பாலர் பாடசாலைகளில் கற்கும் 10 வயதுக்குட்பட்ட சிறுவர்களையே அதிகமாக பாதிக்கிறது என இங்கிலாந்து சுகாதார பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/238831
  2. ஐந்து பேருக்கு மறுவாழ்வளித்த பத்து மாத பெண் குழந்தை..! 16 Feb, 2026 | 10:02 AM இந்தியாவின் கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள மல்லப்பள்ளியைச் சேர்ந்தவர் அருண் ஆபிரகாம். இவருடைய மனைவி ஷெரின் ஆன் ஜான். இந்த தம்பதியின் 10 மாத பெண் குழந்தை அலின் ஷெரின் ஆபிரஹாம். இந்நிலையில், கடந்த 5ம் திகதி குழந்தையின் தாய், தாத்தா, பாட்டி ஆகியோர் கோட்டயத்தில் இருந்து திருவல்லாவுக்கு காரில் சென்றனர். அப்போது, எதிரில் வந்த மற்றொரு கார் இவர்களின் கார் மீது மோதியது. இதில் ஷெரினின் தாய், தாத்தா மற்றும் பாட்டி காயமடைந்தனர். படுகாயமடைந்த குழந்தை ஷெரின் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். இதையடுத்து மருத்துவர்கள், குடும்பத்தினர் சம்மதத்துடன் குழந்தையின் கல்லீரல், சிறுநீரகங்கள், இதய வால்வு, கண்கள் ஆகியவற்றை தானமாக பெற்றனர். இதைத் தொடர்ந்து, குழந்தையின் கல்லீரல், திருவனந்தபுரம் கிம்ஸ் வைத்தியசாலையில் உள்ள 6 மாத குழந்தைக்கு பொருத்தப்பட உள்ளது. சிறுநீரகங்கள், திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியில் உள்ள மற்றொரு குழந்தைக்கு வழங்கப்பட்டது. இதய வால்வு மற்றும் கண்கள், சித்ரா இன்ஸ்டிடியூட் மற்றும் அமிர்தா வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவோருக்கு வழங்கப்பட்டன. இதன் மூலம், கேரளாவிலேயே மிகக் குறைந்த வயதில் உடல் உறுப்பு தானம் செய்து 5 பேருக்கு மறுவாழ்வளித்த பெருமை அலின் ஷெரினுக்கு கிடைத்துள்ளது. https://www.virakesari.lk/article/238762
  3. மரண தண்டனை விதிக்கப்பட்ட 817 பேர் சிறையில் Feb 16, 2026 - 05:12 PM மரண தண்டனை விதிக்கப்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பிரஜைகள் 817 பேர் சிறைச்சாலையில் உள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது. 2025ஆம் ஆண்டுக்கான முன்னேற்ற அறிக்கையின்படி, அந்த ஆண்டின் செப்டம்பர் மாதம் 30ஆம் திகதி வரை மரண தண்டனை விதிக்கப்பட்ட உள்நாட்டுக் கைதிகளின் எண்ணிக்கை 811 ஆகும். இதில் 792 ஆண்களும் 19 பெண்களும் அடங்குகின்றனர். மேலும், ஐந்து வெளிநாட்டுப் பிரஜைகளும், பயங்கரவாதக் குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒருவரும் சிறையிலிருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயுள் தண்டனை விபரங்கள்: ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 311 பேர் தற்போது சிறையிலுள்ளனர். இவர்களில் 70 பேர் வெளிநாட்டுப் பிரஜைகள் ஆவர். பயங்கரவாதக் குற்றங்கள் தொடர்பில் மூவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmlp3h0mq000r356n9zrd34cd
  4. யாழ்ப்பாணத்தில் காணித் தகராறு: ஒருவர் அடித்துக் கொலை Feb 16, 2026 - 08:03 PM யாழ்ப்பாணம், கோப்பாய் பகுதியில் நிலவிய நீண்டகால காணித் தகராறு காரணமாக ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்கள் தலைமறைவாகியுள்ள நிலையில், அவர்களைக் கைது செய்யக் கோப்பாய் பொலிஸார் விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். கோப்பாய் கல்வியியற் கல்லூரிக்கு அருகில் இன்று (16) இடம்பெற்ற இந்தத் தாக்குதலில், அப்பகுதியைச் சேர்ந்த செல்லத்துரை செல்வரஞ்சன் (59 வயது) என்பவரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபருக்கும் மற்றுமொரு தரப்பினருக்கும் இடையில் நீண்டகாலமாகக் காணிப் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இன்று திங்கட்கிழமை இது தொடர்பாக ஏற்பட்ட தர்க்கம் முற்றி கைகலப்பாக மாறியுள்ளது. இதன்போது மூவர் இணைந்து நடத்திய தாக்குதலில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்துக் கோப்பாய் பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். தாக்குதலை நடத்திய மூவரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களைத் தேடி விசேட சுற்றிவளைப்புகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவரின் சடலம் மீட்கப்பட்டு, உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmlp9v1vy000x356ntpv0ztpa
  5. சமஷ்டி அரசியலமைப்பு குறித்து ஆராயும் கூட்டம் யாழில் இன்று; தமிழரசுக்கட்சி பங்கேற்காது 15 Feb, 2026 | 02:33 PM (நா.தனுஜா) தமிழர் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக அரசினால் கொண்டுவரப்படவிருக்கும் ஏக்கிய இராச்சிய வரைவை நிராகரித்து, கூட்டாட்சி தீர்வை ஒரே குரலில் முன்வைப்பது தொடர்பில் தமிழ்ந்தேசியக்கட்சிகள் மற்றும் சிவில் சமூகத்துடன் கலந்துரையாடும் நோக்கில் தமிழ்த்தேசிய பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டம் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என இலங்கைத் தமிழரசுக்கட்சி அறவித்திருக்கும் அதேவேளை, ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியும் இதில் கலந்துகொள்வதற்கான சாத்தியம் இல்லை என்றே தெரியவருகிறது. அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவுள்ள ஏக்கிய இராச்சிய அரசியலமைப்பு வரைவை நிராகரித்து, அதற்குப் பதிலாக தமிழ்த்தேசம் அங்கீகரிக்கப்பட்ட, தமிழ்த்தேசத்தின் தனித்துவமான இறைமையின் அடிப்படையில், சுயநிர்ணய உரிமையை அனுபவிக்கக்கூடிய கூட்டாட்சி அரசியலமைப்பு உருவாக்கப்படுவது குறித்து கலந்துரையாடும் நோக்கில் இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், அதில் பங்கேற்குமாறு கோரியும் தமிழ்த்தேசிய பேரவையின் தலைவர் பா.உ கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினால் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானத்துக்கு கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டது. அக்கடிதத்துக்கு பதில் அனுப்பிவைத்த சி.வி.கே.சிவஞானம், கஜேந்திரகுமாரின் அழைப்புக்கடிதத்தின் இரண்டாம் பந்தியின் கருத்துக்களின் அடிப்படையில் 15 ஆம் திகதி நடைபெறவுள்ள கூட்டத்தில் கலந்துகொள்வது சாத்தியமற்றது எனவும், இருப்பினும் ஒற்றையாட்சி அரசியலமைப்பு முறைமையை முழுமையாக எதிர்ப்பதிலும், எமது கட்சியின் அடிப்படைக் கோட்பாடான சமஷ்டி கூட்டாட்சி முறைமையை வலியுறுத்துவதிலும் தாம் உறுதியாக இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். அதேவேளை இக்கூட்டத்தில் பங்கேற்குமாறு கோரி கஜேந்திரகுமாரினால் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் செயலாளர் நாகலிங்கத்துக்கும் அழைப்பு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. அதற்குப் பதில் அனுப்பிய நாகலிங்கம், சிவில் சமூகத்தினரின் பங்கேற்புடனான கூட்டத்தை நடாத்துவதற்கு முன்பதாக இதுபற்றி தமிழ்த்தேசியக் கட்சிகள் சந்தித்துக் கலந்துரையாடவேண்டும் என விரும்புவதாகக் குறிப்பிட்டிருந்தார். அதற்குப் பதில் அனுப்பிய கஜேந்திரகுமார், அச்சந்திப்பை 15 ஆம் திகதிக்கு முன்பதாக ஒருங்கிணைக்குமாறு ஜனநாயக தமிழ்த்தேசியக்கூட்டணியிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். இருப்பினும் 15 திகதி நடைபெறவிருக்கும் சந்திப்பை தமிழ்த்தேசிய பேரவை ஒருங்கிணைப்பதன் காரணமாக, இச்சந்திப்பையும் அவர்களே ஏற்பாடு செய்வது தான் இலகுவானதாக இருக்கும் என ஜனநாயக தமிழ்த்தேசியக்கூட்டணி மீண்டும் பதில் அனுப்பியது. இவ்வாறானதொரு பின்னணியில், இன்றைய தினம் நடைபெறவிருக்கும் கூட்டத்தில் கலந்துகொள்வீர்களா என ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரனிடம் வினவியபோது, தாம் இறுதியாக அனுப்பிய கடிதத்துக்கு இன்னமும் பதில் எதுவும் கிடைக்கப்பெறவில்லை எனத் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/238712
  6. Drinks 27th Match, Group A (N), Colombo (RPS), February 15, 2026, ICC Men's T20 World Cup India 175/7 Pakistan (6/20 ov, T:176) 38/4 Pakistan need 138 runs in 84 balls.Stats view Current RR: 6.33 • Required RR: 9.85 • Last 5 ov (RR): 38/3 (7.60) Win Probability PAK 8.32% IND 91.68%
  7. பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு: பாரதூரத்தன்மை குறித்து ஐரோப்பிய ஒன்றிய அதிகாரி தீவிர கரிசனை 15 Feb, 2026 | 02:32 PM (நா.தனுஜா) பயங்கரவாதத்தடைச்சட்டத்துக்குப் பதிலீடாக அரசாங்கத்தினால் புதிதாக முன்மொழியப்பட்டிருக்கும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகார சேவைப்பிரிவின் ஆசிய, பசுபிக் பிராந்தியத்துக்கான பதில் முகாமைத்துவப் பணிப்பாளர் பாவோலா பம்பலோனி தீவிர கரிசனையை வெளிப்படுத்தியிருப்பதாக அறியமுடிகிறது. ஐரோப்பிய ஒன்றியம் - இலங்கை கூட்டு ஆணைக்குழுவின் 27 ஆவது கூட்டத்தில் பங்கேற்பதற்காக கடந்த வாரம் நாட்டுக்கு வருகைந்த ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகார சேவைப்பிரிவின் ஆசிய, பசுபிக் பிராந்தியத்துக்கான பதில் முகாமைத்துவப்பணிப்பாளர் பாவோலா பம்பலோனி தலைமையிலான அதிகாரிகள் குழுவினர், இங்கு பல்வேறு தரப்பினருடன் சந்திப்புக்களில் ஈடுபட்டிருந்தனர். குறிப்பாக அரசாங்கத்தரப்புக்கு அப்பால், எதிர்க்கட்சித்தலைவர், தமிழ்ப்பிரதிநிதிகள், மலையகப் பிரதிநிதிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் எனப் பல்வேறு தரப்பினருடனும் நடைபெற்ற சந்திப்புக்களின்போது குறிப்பாக அரசாங்கத்தினால் புதிதாக முன்மொழியப்பட்டிருக்கும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு குறித்து விரிவாகப் பேசப்பட்டதாக தெரியவருகிறது. அதுமாத்திரமன்றி இச்சட்ட வரைவின் உள்ளட்டக்கம் பற்றிக் கேட்டறிந்த பாவோலா பம்பலோனி, அதன் பாரதூரத்தன்மை குறித்து தீவிர கரிசனையை வெளிப்படுத்தியதாகவும் அறியமுடிகிறது. https://www.virakesari.lk/article/238710
  8. பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்க வேண்டும் என்பது எமது கொள்கையே ; தேசிய பாதுகாப்பின் பங்காளர்களுக்கு பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்துவதற்கு சட்டம் அவசியம் - லக்மாலி ஹேமசந்திர எம்.பி தெரிவிப்பு 15 Feb, 2026 | 01:54 PM ஆர்.ராம் நாட்டில் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்பது எமது கொள்கையாகும். அதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. இருப்பினும், நாட்டின் தேசிய பாதுகாப்பு சார்ந்த பங்காளர்களுக்கு பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவதற்கு சட்டம் அவசியமாகின்றது என்பதாலேயே அதுபற்றி கலந்துரையாடல் முன்னெடுக்கப்படுகின்றது என்று தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திர தெரிவித்தார். இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு, ஊடக ஒழுக்கநெறி மற்றும் சுதந்திரத்துக்கான நிலையம், இன்சைட் நியூஸ் ஆகியவற்றின் இணை ஏற்பாட்டில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற மாதந்த கலந்துரையாடலின்போது, மக்கள் விடுதலை முன்னணியானது, எதிர்க்கட்சி வரிசையில் இருக்கின்றபோது பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக நீக்க வேண்டுமெனக்கோரியது. பின்னர்கொண்டுவரப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம், தீவிரவாத எதிர்ப்பு சட்டமூலம் ஆகியவற்றுக்கான கலந்துரையாடல்களில் கூட பங்கேற்றிருக்கவில்லை. அவ்விதமான நிலையில் தற்போது பயங்கரவாதத்திலிருந்து அரசினைப் பாதுகாக்கும் சட்ட வரைவினை தயாரித்து மக்கள் கருத்துக்களை கேட்டறிவதற்கு இம்மாதம் 28ஆம் திகதி வரையில் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆட்சிப்பீடத்தில் அமர்ந்தததும் கொள்கை ரீதியாக திடீரென்று மாற்றம் ஏற்படுவதற்கு என்ன காரணம் என்று ஊடகவியலாளரால் கேள்வி எழுப்பபட்டது. அதற்கு பதிலளித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக நீக்க வேண்டும் என்பது தற்போதும் எமது கொள்கையாகவே உள்ளது. அதில் எந்தவிதமான மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை. ஆனால் அரசுக்கு தேசிய பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய பங்காளர்கள் உள்ளார்கள். அவர்களுக்கு தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்வதற்கு பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவதற்கான சட்ட ஏற்பாடு அவசியமாகின்றது என்பது கோரிக்கையாக உள்ளது. எமது நாட்டைப் பொறுத்தவரையில் பயங்கரவாதத்தின் அனுபவங்களை 15வருடங்களுக்கு முன்னதாக கொண்டிருந்தாரும் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாகவும் நாம் பயங்கரவாத வெளிப்பாட்டின் விளைவுகளை அனுபவிக்கின்றோம். அவ்விதமான நிலையில், தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பங்காளர்களின் கோரிக்கையை எவ்வாறு நிராகரிக்க முடியும். நாட்டில் பயங்கரவாத அச்சுறுத்தல் இருக்காது என்று எவ்வாறு உறுதிப்படுத்த முடியும். ஆகவே சட்டத்தின் தேவையை நாம் புறந்தள்ளிவிட முடியாது. ஆனால், கடந்த காலத்தில் பங்கரவாத தடைச்சட்டம் எவ்வாறு பயன்படுத்தப்பட்டது. அதனால் ஏற்பட்ட விளைவுகளை நாம் அனுபவரீதியாகவே கண்டிருக்கின்றோம். ஆகவே பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதற்கான நோக்கம் பற்றியே அதிகமாக அவதானிக்க வேண்டியுள்ளது. தற்போதைய நிலையில் பயங்கரவாதத்திலிருந்து அரசினைப் பாதுகாக்கும் சட்ட வரைவே வெளியிடப்பட்டுள்ளது. இதனை சில தரப்பினர் அரசியல் நோக்கங்களுக்காக எதிர்க்கின்றார்கள். சிலர் நியாயமான கருத்துக்களை வெளியிடுகின்றார்கள். எம்மைப்பொறுத்தவரையில் மக்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்வதற்கே அந்த வரைவு வெளியிடப்பட்டுள்ளது. அதன்பின்னர் குறித்த வரைவு பற்றி முறையாக கலந்துரையாடப்படும். அதன்பின்னரேயே அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெறப்படுவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஆகவே அதற்குரிய செயன்முறைகள் எடுக்கப்பட வேண்டியுள்ளன. தற்போதைய நிலையில் சட்ட வரைவு தொடர்பில் உங்களுடைய அபிப்பிராயங்களை சுட்டிக்காட்டி வெளியிடுவதன் ஊடாக அரசாங்கத்துக்கும் அதுபற்றி சீர்தூக்கிப்பார்த்து மாற்றியமைப்பதற்கு இலகுவானதாக இருக்கும். தற்போது இருக்கும் வரைவினையே அரசாங்கம் அமுல்படுத்தப்போகின்றது என்ற உறுதியான நிலைப்பாட்டில் இருக்கவில்லை. நெகிழ்ச்சித் தன்மையுடன் மாற்றங்களைஏற்படுத்துவதற்கு தயாராகவே உள்ளோம் என்றார். https://www.virakesari.lk/article/238707
  9. Live 27th Match, Group A (N), Colombo (RPS), February 15, 2026, ICC Men's T20 World Cup India 175/7 Pakistan (2/20 ov, T:176) 13/3 Pakistan need 163 runs in 108 balls.Stats view Current RR: 6.50 • Required RR: 9.05 Win Probability PAK 14.97% IND 85.03%
  10. பாகிஸ்தானுக்கு 176 ரன்கள் இலக்கு - சுழல் வியூகங்களுக்கு இடையே போராடி ரன் எடுத்த இந்திய வீரர்கள் பட மூலாதாரம்,Viraj Kothalawala/MB Media/Getty Images படக்குறிப்பு,இஷான் கிஷன் 27 பந்துகளில் அரை சதத்தை கடந்தார் 15 பிப்ரவரி 2026, 13:06 GMT புதுப்பிக்கப்பட்டது 7 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் (இந்த செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது) நடப்பு டி20 உலகக் கோப்பையில் லீக் ஆட்டம் ஒன்றில் 'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இன்று நேருக்கு நேர் மோதுகின்றன. கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அகா பந்து வீச்சை தேர்வு செய்வதாக கூறினார். இன்றைய டாஸின் போதும் இரு கேப்டன்களும் கைகுலுக்கவில்லை. போட்டி தொடங்கிய முதல் ஓவரிலேயே இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா ஆட்டமிழந்தார். எனினும் இஷான் கிஷன் மற்றும் திலக் வர்மா தொடர்ந்து ஆடினர். அபிஷேக் ஷர்மா ஆட்டமிழந்த போதும் இஷான் கிஷன் பெரிய ஷாட்களை ஆடி இந்திய அணிக்கு நம்பிக்கை கொடுத்தார். அவருக்கு பக்கபலமாக திலக் வர்மா சிங்கிள் ரன்களை எடுத்து ஸ்டிரைக்கை ரொட்டேட் செய்து கொடுத்தார். பவர் பிளே முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 52 ரன்கள் எடுத்தது. இஷான் கிஷன் 27 பந்துகளில் அரை சதத்தை கடந்தார். அதிரடியாக ஆடிவந்த இஷான் கிஷன் 40 பந்துகளில் 77 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 10 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் எடுத்தது. கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா களத்தில் இருந்தனர். பட மூலாதாரம்,Matthew Lewis-ICC/ICC via Getty Images படக்குறிப்பு,இஷான் கிஷன் மற்றும் திலக் வர்மா வலுவான பார்ட்னர்ஷிப்பை கொடுத்தனர் 24 பந்துகளில் 25 ரன்கள் எடுத்திருந்த திலக் வர்மா சயிம் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இதன் பின்னர் களமிறங்கிய ஹர்திக் பாண்ட்யா முதல் பந்திலேயே ஆட்டமிழக்க இந்திய அணி அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்தது. 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணிக்கு 176 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சவால் கொடுத்த சயிம் அயூப் இந்திய பேட்டர்களுக்கு பாகிஸ்தான் ஆஃப் ஸ்பின்னர் சயிப் அயூப் பெரும் சவால் கொடுத்தார். 4 ஓவர்களை வீசிய அவர் 25 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகள் வீசினார். இஷான் கிஷன், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா என அனைத்துமே பெரிய விக்கெட்டுகள். பெரும்பாலும் 'அரௌண்ட் தி ஸ்டம்ப்' வந்து ஸ்டம்ப் லைனில் சீராக வீசிக்கொண்டே இருந்தார். அதன் பலனாக ரன்கள் கட்டுக்குள் இருந்ததோடு விக்கெட்டுகளும் கிடைத்தது. 18 ஓவர்களை வீசிய ஸ்பின்னர்கள் இந்த இன்னிங்ஸின் 20 ஓவர்களில் 18 ஓவர்களை பாகிஸ்தான் ஸ்பின்னர்களே வீசினார்கள். சல்மான் அகா, சயிம் அயூப், அப்ரார் அஹமது, முகமது நவாஸ், சதாப் கான், உஸ்மான் தாரிக் என 6 ஸ்பின்னர்கள் அந்த 18 ஓவர்களை வீசினார்கள். வேகப்பந்துவீச்சாளர்களில் ஷஹீன் அஃப்ரிடி மட்டுமே 2 ஓவர்கள் வீசினார். மற்றொரு வேகப்பந்துவீச்சு ஆப்ஷனான ஃபஹீம் அஷ்ரஃப் பாகிஸ்தான் கேப்டனால் பயன்படுத்தப்படவில்லை. 3 ஸ்பின்னர்களுடன் இந்திய அணி இந்திய அணியில் கடந்த போட்டியில் விளையாடாத அதிரடி தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா மீண்டும் இடம் பிடித்துள்ளார். இந்திய அணி ஒரேயொரு பிரதான வேகப்பந்துவீச்சாளரை மட்டுமே இன்று களமிறக்குகிறது. ஜஸ்ப்ரித் பும்ரா தவிர்த்து ஆல்ரவுண்டர்கள் ஹர்திக் பாண்டியா மற்றும் ஷிவம் துபே ஆகியோர் மற்ற வேகப்பந்துவீச்சு ஆப்ஷன்களாக உள்ளனர். வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ், அக்‌ஷர் பட்டேல் என்று 3 ஸ்பின்னர்களைக் களமிறக்கியிருக்கிறது இந்தியா. பாகிஸ்தானும் உஸ்மான் தாரிக், அப்ரார் அஹமது, சதாப் கான், முகமது நவாஸ் என பல ஸ்பின்னர்களை தங்கள் பிளேயிங் லெவனில் கொண்டிருக்கிறது. இந்தியாவின் பிளேயிங் லெவன் விவரம் பின் வருமாறு: இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, ரிங்கு சிங், அக்சர் படேல், குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா பாகிஸ்தான் அணியில் உஸ்மான் தாரிக் பாகிஸ்தானின் பிளேயிங் லெவனில் இடம்பெற்றுள்ள வீரர்கள் விவரம் பின்வருமாறு, சாஹிப்சாதா ஃபர்ஹான், சைம் அயூப், சல்மான் ஆகா (கேப்டன்), பாபர் அசாம், ஷதாப் கான், உஸ்மான் கான் (விக்கெட் கீப்பர்), முகமது நவாஸ், ஃபஹீம் அஷ்ரஃப், ஷஹீன் ஷா அப்ரிடி, உஸ்மான் தாரிக், அப்ரார் அகமது பட மூலாதாரம்,Getty Images இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறும். பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த கடைசி 5 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. டி20 உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இதுவரை 8 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 7 முறை இந்திய அணியும் ஒரு முறை பாகிஸ்தான் அணியும் வென்றுள்ளன. ஆனால் பாகிஸ்தான் அணியின் சமீபத்திய செயல்பாடு மற்றும் வீர்களின் ஃபார்ம் அவர்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது. ஆரம்பத்தில் இந்த போட்டிக்கான அனுமதியை மறுத்த பாகிஸ்தான் அரசு, பல்வேறு ஊகங்களுக்குப் பிறகு, இறுதியில் முடிவை மாற்றிக் கொண்டு, தனது அணி உலகக் கோப்பை லீக் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக விளையாட அனுமதி அளித்தது. பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு ஆசியக் கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியபோது, இரு அணிகளின் மோதலை விட இரு நாடுகளுக்கு இடையிலான மோசமான உறவுகள் குறித்துதான் அதிகம் விவாதிக்கப்பட்டது என்பதும் உண்மைதான். கைகுலுக்காத கலாசாரம் தொடர்கிறது பட மூலாதாரம்,Matthew Lewis-ICC/ICC via Getty Images இந்தியா, பாகிஸ்தான் இடையேயான டி20 உலகக் கோப்பை போட்டியில் இரு அணி கேப்டன்கள் இன்றும் கைகுலுக்குவதை தவிர்த்துவிட்டனர். 2025 ஆசிய கோப்பையில் இந்தியா பாகிஸ்தான் போட்டியின் போது இரு அணி கேப்டன்களும் கைகுலுக்குவதை தவிர்த்தனர். அதே போல போட்டி முடிந்ததும் இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்குவதை தவிர்த்தனர். இந்திய அணியின் இந்த செயல் பேசுபொருளானது. காஷ்மீரின் பஹல்ஹாமில் நடந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களோடு நிற்க இந்த முடிவை எடுத்ததாக இந்திய கேப்டன் சூர்யகுமா யாதவ் கூறினார். இந்த விஷயத்தில் அதிருப்தி அடைந்த பாகிஸ்தான் ஐசிசியிடம் முறையிட்டது. இந்த நிலையில், இன்றைய போட்டியில் கைகுலுக்கல் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இது பற்றி சூர்யகுமார் யாதவிடம் செய்தியாளர் சந்திப்பில் நேற்று கேட்கப்பட்ட போது டாஸ் போடும் நேரத்தில் கைகுலுக்குவதைப் பற்றி பார்ப்போம். 24 மணி நேரம் காத்திருங்கள் என்றார். பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அகாவும் அதே பதிலை கூறினார். இந்த நிலையில், டாஸின் போது மீண்டும் கைகுலுக்கலை தவிர்த்திருப்பது கவனம் பெற்றிருக்கிறது. இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c62d67klkqxo
  11. போர்க்காலத்தின் தகவல் பரிமாற்ற ஊடகமாக விளங்கிய வானொலி Courtesy: தீபச்செல்வன் ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி 13 ஆம் தேதி UNESCO அறிவித்துள்ள உலக வானொலி நாள் உலகெங்கும் வானொலியின் சமூகப் பங்களிப்பை நினைபடுத்துகிறது. தகவல் பரிமாற்றத்தின் மிக எளிய, மலிவு மற்றும் விரைவான சேவைக்காக வானொலி இன்னும் பல கோடி மக்களின் வாழ்வோடு இணைந்திருக்கிறது. தொலைதூர கிராமங்களிலிருந்து நகர மையங்கள்வரை மனிதர்களை ஒன்றிணைக்கும் ஒலிப் பாலமாக வானொலி தேசங்களையும் உலகத்தையும் இணைக்கின்றது. இலங்கைக்கு என்று தனித்துவமான வானொலிப் பாரம்பரியமுண்டு. அத்துடன் புலிகளின் குரல் என்ற தமிழர்களின் போராட்ட வானொலிப் பாரம்பரியமும் ஈழ மண்ணிற்குள்ளது. இலங்கையின் வானொலிப் பாரம்பரியம் தென்னாசியாவில் வானொலி ஒளிபரப்பின் முன்னோடிகளில் ஒன்றாக இலங்கை வானொலி எனப்படும் Sri Lanka Broadcasting Corporation (SLBC) விளங்குகிறது. 1920களிலேயே ஆரம்பித்த ஒலிபரப்பு, பின்னர் “Radio Ceylon” என உலகளவில் பிரசித்திபெற்றது ஆசியாவின் முதல் வானொலி. குறிப்பாக தமிழ்ச் சேவை, வடக்கு–கிழக்கு மக்களின் கலாச்சார, அரசியல் மற்றும் சமூக உணர்வுகளை வெளிப்படுத்திய முக்கிய மேடையாக இருந்தது. போர்காலத்திலும் பேரிடர் சூழல்களிலும், தகவல் பரிமாற்றத்தின் முதன்மை ஆதாரமாக வானொலி திகழ்ந்தது. நூற்றாண்டு கடந்து இன்னமும் மக்களின் மனங்களில் இலங்கை வானொலி நீங்காத இடத்தை தக்க வைத்திருக்கின்றது. இலங்கையில் உள்ள மக்கள் மாத்திரமின்றி தமிழ்நாட்டு மக்களின் வாழ்விலும் உயர்விலும் நகர்விலும் இலங்கை வானொலிக்கென ஒரு தனியான இடமுண்டு. இலங்கையில் வானொலி வெறும் செய்தி ஊடகமல்ல; அது கலாச்சார நினைவகமாகவும் இருந்தது. நாட்டுப்புறப் பாடல்கள், இலக்கிய நிகழ்ச்சிகள், விவசாய அறிவுரைகள், கல்வி ஒலிப்பரப்புகள் ஆகியவை கிராமிய வாழ்க்கையுடன் வானொலியை நெருக்கமாக இணைத்தன. இன்று தனியார் எப்.எம். நிலையங்கள் பெருகியுள்ளன. இசை, இளைஞர் நிகழ்ச்சிகள், அரசியல் விவாதங்கள் என வானொலி புதிய வடிவம் பெற்றாலும், அதன் அடிப்படை நோக்கம் மக்களை இணைக்கும் சேவையில் எந்த மாற்றமுமில்லை. இந்தியாவின் வானொலி வளம் இந்தியாவில் All India Radio (AIR), “ஆகாஷ்வாணி” என அழைக்கப்படும் அரசு வானொலி, 1936இல் தொடங்கப்பட்டது. பல மொழிகளிலும் ஆயிரக்கணக்கான நிகழ்ச்சிகளை ஒலிபரப்பும் AIR, இந்தியாவின் மொழி மற்றும் பண்பாட்டு பல்வகைப்பாட்டை பிரதிபலிக்கிறது. செய்தி, நாடகம், இசை, கல்வி, விவசாயம், அறிவியல் எல்லாவற்றிற்கும் தனித்தனி நிகழ்ச்சிகள் அமைந்துள்ளன. சுதந்திரப் போராட்ட காலத்தில் வானொலி தேசிய உணர்வை ஊட்டிய கருவியாக இருந்தது. பின்னர், கிராமிய மேம்பாடு, சுகாதார விழிப்புணர்வு, பெண்கள் முன்னேற்றம் போன்ற சமூகப் பணிகளில் முக்கிய பங்கு வகித்தது. சமீப காலங்களில் சமூக வானொலிகள் (Community Radio) இந்தியாவில் வேகமாக வளர்ந்து வருகின்றன. உள்ளூர் குரல்களுக்கு இடமளித்து, சிறுபான்மையினரின் அனுபவங்களை வெளிக்கொணரும் பணியை அவை மேற்கொள்கின்றன. டிஜிட்டல் காலத்திலும் வானொலியின் தேவை இணையம், சமூக ஊடகங்கள், பொட்காஸ்ட்கள் போன்ற புதிய தொழில்நுட்பங்கள் வளர்ந்தாலும், வானொலி தனது தனித்தன்மையை இழக்கவில்லை. மின்சாரம் அல்லது இணையம் இல்லாத சூழல்களிலும் செயல்படக் கூடிய சாதனமாக அது தொடர்ந்து பயன்படுகிறது. இயற்கை அனர்த்தங்கள், அரசியல் பதற்றங்கள் போன்ற அவசரநேரங்களில் வானொலி நம்பகமான தகவல் ஊடகமாக விளங்குகிறது. தமிழீழ வானொலித்துறை புலிகளின் குரல் என்பது இலங்கையில் போர் இடம்பெற்ற காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ ஒலிபரப்பு சேவையாக இயங்கியது. 1990களில் வடக்கு இலங்கையில் இருந்து ஒலிபரப்பான இந்த வானொலி, செய்தி அறிவிப்புகள், அரசியல் கருத்துரைகள், நினைவுநாள் நிகழ்ச்சிகள் மற்றும் இயக்கத்தின் உள்நிலை தகவல்களை வெளியிட்டது. போர்நிலையிலிருந்த சூழலில், அது இயக்கம் மற்றும் போர் சார்ந்த தகவல் பரிமாற்ற ஊடகமாகவும் கருத்தியல் பரப்புரைக் கருவியாகவும் செயல்பட்டது. 2009ஆம் ஆண்டு இறுதிப்போருடன் ஈழ மண்ணில் அதன் ஒலிபரப்பு நிறுத்தப்பட்டது./ சினிமா பாடல்களைத் தவிர்த்து, களியாட்ட நோக்கம் தவிர்த்து விடுதலை பற்றிய உணர்வை ஊட்டியதுடன் சமூக எழுச்சிக்கான ஒலிப்படைப்புக்களையும் புலிகளின் குரலும் தமிழீழ வானொலியும் வடக்கு கிழக்கு மண்ணிற்கு வழங்கியது. விடுதலைப் போராட்டம் பற்றிய பாடல்கள் மக்களின் வாழ்வில் இரண்டறக் கலந்தன. இன்று விடுதலைப் புலிகள் இயக்கம் நிலத்திலற்ற காலத்திலும் விடுதலை பற்றிய உணர்வும் கருத்துக்களும் போராளிகளைப் பற்றிய நினைவும் ஆழமாக வேரூன்றி இருக்கின்றன என்றால் அதற்கு அன்றைய காலத்தில் புலிகளின் குரல் வானொலியும் விடுதலை இயக்கப் பாடல்களும் ஏற்படுத்திய தாக்கமே ஆகும். உலகத் தமிழர் வானொலிச் சேவை உலகத் தமிழர்களின் வானொலி முயற்சிகள், புலம்பெயர் வாழ்வின் மத்தியில் மொழி, கலாசாரம் மற்றும் அடையாளத்தைப் பாதுகாக்கும் பண்பாட்டு இயக்கமாக உருவெடுத்துள்ளன. கனடா, பிரிட்டன், பிரான்ஸ், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இயங்கும் சமூக மற்றும் இணைய வானொலிகள், உள்ளூர் தமிழர் சமூகத்தின் செய்திகள், இலக்கியம், இசை, மத நிகழ்வுகள் மற்றும் அரசியல் விவாதங்களை ஒலிபரப்புகின்றன. இணைய தொழில்நுட்ப வளர்ச்சியால், பாரம்பரிய எப்.எம். ஒலிபரப்பைத் தாண்டி, ஆன்லைன் ஸ்ட்ரீமிங் மற்றும் பொட்காஸ்ட் வடிவங்களில் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை இணைக்கும் ஒலி வலைப்பின்னல் உருவாகியுள்ளது. இவ்வாறான முயற்சிகள் வெறும் தகவல் பரிமாற்றம் மட்டுமல்ல; தலைமுறைகள் இடையிலான மொழிப் பிணைப்பை உறுதிப்படுத்தும் சமூக நினைவகங்களாகவும் செயல்படுகின்றன. தொழில்நுட்ப மாற்றங்கள் எவ்வளவு ஏற்பட்டாலும், மனித குரலின் நம்பகத்தன்மை மற்றும் உணர்ச்சி பிணைப்பு அழியாது என்பதையே உலக வானொலி நாள் கற்றுத் தருகிறது. இலங்கையிலும் இந்தியாவிலும் வானொலி, வரலாற்றை சாட்சியமாகக் கொண்டதும், எதிர்காலத்தை நோக்கியதுமான பயணத்தைக் கொண்டது. அது வெறும் தகவல் தொடர்புச் சாதனமல்ல. நாடு மற்றும் சமூகங்க நினைவுகளின் ஒலிப்பதிவு. மக்களின் இதயத் துடிப்பை எடுத்துச் செல்லும் ஒலி மொழி. இலங்கையிலும் இந்தியாவிலும், வானொலி இன உரிமை, சமூக நீதி, மொழி உரிமை, கலாச்சார அடையாளம் ஆகியவற்றை பாதுகாக்கும் கருவியாகத் திகழ்கிறது. ஈழ மண்ணல் போர் நடந்த காலத்தில் வானொலிகள் பொழுதுபோக்கைக் கடந்து மக்களை ஆற்றுப்படுத்தவும், தகவல் பரிமாற்றத்திற்கும் பயன்பட்டது ஒரு மாறுபட்ட வரலாற்று அனுபவம் ஆகும். அத்துடன் தமிழ்ச் சேவைகள், மொழி மற்றும் இன அடையாளங்களை காக்கும் பணியில் முக்கிய இடம் வகிக்கின்றன. ஒலியின் மூலம் உணர்வுகளைப் பகிரும் சக்தி, மனிதர்களின் உள்ளங்களை நேரடியாகத் தொட்டுச் செல்கிறது. பொறுப்பு துறப்பு! இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு, 15 February, 2026 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. https://ibctamil.com/article/radio-medium-of-communication-during-wartime-1771126719
  12. ஜியோவின் அடுத்த மாபெரும் பாய்ச்சல்! உலகத் தர வரிசையில் இணைந்த அம்பானி தொலைத்தொடர்பு, செமிகண்டக்டர் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற நவீன தொழில்நுட்பத் துறைகளில், நம்பகமான மற்றும் பாதுகாப்பான கட்டமைப்பை உருவாக்குவதற்காக டிரஸ்டட் டெக் அலையன்ஸ் (Trusted Tech Alliance) எனும் புதிய சர்வதேசக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட், கூகுள் கிளவுட், எரிக்சன், நோக்கியா மற்றும் ஆன்த்ரோபிக் உள்ளிட்ட உலகின் முன்னணி 15 நிறுவனங்கள் இணைந்துள்ள இந்தக் கூட்டமைப்பில், இந்தியாவின் முகேஷ் அம்பானியின் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனமும் ஓர் அங்கமாகியுள்ளது. வெளிப்படைத்தன்மை மற்றும் தனிநபர் தரவு பாதுகாப்பு ஆகியவற்றை உறுதிசெய்ய 5 அடிப்படை விதிகளைப் பின்பற்ற இந்தக் கூட்டமைப்பில் இணைந்துள்ள நிறுவனங்கள் ஒப்புக்கொண்டுள்ளன. மென்பொருள்கள் கிளவுட் சேவைகள் முதல் மென்பொருள்கள் வரை அனைத்திலும் பயனர்களின் நம்பிக்கையைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ள இந்த ஒத்துழைப்பு, உலக அளவில் எண்ம பொருளாதாரத்தைப் பாதுகாப்பான முறையில் வளர்க்க ஊக்கமளிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் தலைமைச் செயல் அதிகாரி கிரண் தாமஸ் தெரிவிக்கையில், உலகளாவிய எண்ம வளர்ச்சி அனைவரையும் சென்றடையப் பாதுகாப்பான தொழில்நுட்பம் அவசியம் எனத் தெரிவித்துள்ளார். அடுத்த தலைமுறை இணைய வசதி மற்றும் ஏஐ தொழில்நுட்பங்களில் மக்களின் நம்பிக்கையை நிலைநாட்டச் சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதில் ஜியோ பெருமிதம் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் மேற்கொண்டுள்ள இந்த முன்னெடுப்பு, உலகளாவிய தொழில்நுட்ப சந்தையில் இந்தியாவின் பங்களிப்பை மேலும் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/jio-google-ai-partnership-trusted-tech-alliance-1771099672
  13. புதிய பயங்கரவாத தடைச்சட்ட முன்மொழிவுக்கு எதிராக கையெழுத்து போராட்டம் Published By: Digital Desk 3 15 Feb, 2026 | 12:05 PM பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் புதிய பயங்கரவாத தடைச்சட்ட முன்மொழிவு ஆகியவற்றை முற்றாக நிராகரித்து எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மாபெரும் கையெழுத்துப் போரட்டம் திருகோணமலையில் சனிக்கிழமை (14) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. திருகோணமலையில் இடம்பெற்ற ஈழத் தமிழர் உரிமைகள் பெருமன்று (EDRA) அங்குரார்ப்பண நிகழ்வில் இக்கையெழுத்துப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்போது, திருகோணமலை மறை மாவட்ட ஆயர் நோயல் இமானுவேல், சிவகுரு ஆதீன குரு முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகள், மட்டக்களப்பு அமெரிக்கன் மிசன் அருட்பணி லுக் ஜோன் ஆகியோர் முதல் கையொப்பங்களை இட்டபின்னர் நிகழ்வில் பங்கேற்றவர்களும் கையொப்பம் இட்டு வலுச்சேர்த்திருந்தனர். உங்கள் கையெழுத்து உங்கள் உரிமையைக் காக்கும்..! என்ற தொனிப்பொருளில், பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட முன்மொழிவை கைவிடக் கோரியும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கக் கோரியும் ஒரு இலட்சம் கையெழுத்து பெறும் இலக்குடன் வடக்கு கிழக்கு தழுவிய மாபெரும் கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் சார்பில், வடக்கு கிழக்கு குடிசார் அமைப்புகளின் கூட்டிணைவில் முன்னெடுக்கப்படும் மாபெரும் கையெழுத்துப் போராட்டமானது வரும் 25 ஆம் திகதி வரை முன்னெடுப்பட்டு நீதி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்படுவதுடன் அதன் பிரதிகள் ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம், ஐ.நா. மனித உரிமைகள் பேரவை ஆணையாளர், ஐரோப்பிய ஒன்றியம், சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட அனைத்துலக இராஜதந்திரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/238696
  14. பெருந்தோட்ட பகுதி முன்பள்ளி பாடசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் - முன்பள்ளி ஆசிரியர் ஒன்றியம் கோரிக்கை 15 Feb, 2026 | 10:46 AM மலையக பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள முன்பள்ளி பாடசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்று மத்திய மாகாணத்திற்கு கீழ் கொண்டுவரப்பட வேண்டுமென முன்பள்ளி ஆசிரியர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. கொட்டகலையில் சனிக்கிழமை (14) ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே குறித்த ஒன்றியம் இந்த கோரிக்கையை முன்வைத்தது. இது தொடர்பாக ஒன்றியத்தின் தலைவர் யோகேஸ்வரி கருத்து தெரிவிக்கையில், மலையக பெருந்தோட்ட பகுதிகளில் இந்த முன்பள்ளி பாடசாலைகளை சுமார் 20 வருடங்களாக நடாத்தி வருகிறோம். அரசாங்கத்தின் ஊடாக கிடைக்கும் வளங்கள் எதுவும் எமக்கு கிடைப்பதில்லை. மலையகத்தில் உள்ள மாணவர்களை கல்வித்துறையில் முன் கொண்டுவரப்பட வேண்டும் என்ற நோக்கில் செயற்பட்டு வருகிறது தோட்டப் புறங்களில் எமது செயற்பாட்டை முன்னெடுக்க பாரிய சவாலாக இருக்கிறது.அதில் ஒன்றுதான் தோட்ட நிர்வாகங்கள் தடையாக இருந்து வருகிறது. எமது முன்பள்ளி பாடசாலை மாணவர்களுக்கு அரசாங்கம் இதற்கான தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார். இதன் போது இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த முன்பள்ளி ஒன்றியத்தின் பணிப்பாளர் மைக்கல் ஜோக்கியம் தெரிவிக்கையில், மலையக மக்களுக்கு அங்கிகாரத்தை வழங்கிய அரசாங்கத்திற்கு நாங்கள் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம் இன்று எல்லோரும் காணி சம்பந்தமாக பேசுகிறார்கள். ஆனால் மலையக பெருந்தோட்ட பகுதிகளில் நூற்றுக்கு எழுபது வீதமானோருக்கு முன்பள்ளியில் கற்றல் செயற்பாடுகள் கிடைப்பதில்லை. 30 வீதமானோருக்கு மாத்திரம் முன்பள்ளி கல்வி கிடைக்கிறது. இந்த நாட்டில் முன்பள்ளி கல்வி என்பது மாகாண சபையின் கீழ் காணப்படுகிறது. முன்பள்ளி எந்த பகுதியில் இடம் பெற்றாலும் அது மாகாணசபை அதிகாரத்திற்கு கீழ் உள்வாங்கப்பட வேண்டும்.தோட்ட பகுதிகளில் இயங்குகின்ற முன் பள்ளிகளுக்கு தோட்ட நிர்வாகம் தடை விதித்து வருகிறது. ரதெல்ல மற்றும் பல பகுதிகளில் முன் பள்ளிகள் மூடப்பட்டு காணப்படுகின்றன. முன்பள்ளி கல்வி அரசாங்கத்தின் ஊடாக அங்கீகரிக்கப்பட்டுள்ள போதிலும் மலையக பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள முன்பள்ளி கல்வியும் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட வேண்டும். முன்பள்ளி கல்விக்கு தடையாக இருக்கின்ற தோட்ட நிர்வாகம் மற்றும் பெருந்தோட்ட நிறுவனங்கள் மற்றும் மனிதவள பெருந்தோட்ட அபிவிருத்தி நிறுவனங்கள் ஆகியன தடையாக இருப்பதை இடைநிறுத்த வேண்டும். எனவே இது தொடர்பாக முன்பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர்கள் அனைவரும் இணைந்து எதிர்வரும் 22ம் திகதி அட்டனில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளோம் என்றார். https://www.virakesari.lk/article/238678
  15. திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மகா சிவராத்திரி நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர் Feb 15, 2026 - 06:10 PM மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மகா சிவராத்திரி நிகழ்வுகள் இன்று (15) காலை ஆரம்பமான நிலையில் மன்னாரிற்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் ஹரிணி அமரசூரிய மதியம் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு விஜயம் செய்தார். இதன்போது பிரதமர், மகா சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற விசேட சிவ தேவி பூஜையில் கலந்து கொண்டார். -மன்னார் நிருபர் லெம்பட்- https://adaderanatamil.lk/news/cmlnqg2mb0008356n143dpd71
  16. வவுனியாவில் 8,000 பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் Feb 15, 2026 - 06:02 PM வவுனியா மாவட்டத்தில் சுமார் 7,999 பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அக்குடும்பங்களின் பொருளாதார மற்றும் சமூக நிலையை மேம்படுத்துவதற்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் குறித்து அரச அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்தும் விசேட நிகழ்வொன்றின் போதே இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிகழ்வு அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் மற்றும் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது. இதன்போது, இக்குடும்பங்களிலுள்ள பிள்ளைகளின் பாதுகாப்பு மற்றும் கல்வி வாய்ப்புகளை மேம்படுத்துவது குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது. அதற்கமைய, அரச அதிகாரிகள் இவ்விடயத்தில் எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்பது குறித்து விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டன. 2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகளின் கீழ், பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் வளர்ச்சிக்காக முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் குறித்து இதன்போது விளக்கமளிக்கப்பட்டதுடன், அந்த வேலைத்திட்டங்களைச் செயற்படுத்தும்போது வினைத்திறனை மேம்படுத்துவதன் முக்கியத்துவமும் வலியுறுத்தப்பட்டது. மேலும், பிள்ளைகள் தொடர்பான விடயங்களைக் கையாளும் போது நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புத் திணைக்களம் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் நன்னடத்தைப் பாதுகாப்பிலுள்ள பிள்ளைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டு, அவற்றுக்கான தீர்வு மார்க்கங்களைக் கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டது. https://adaderanatamil.lk/news/cmlnq5m9y0007356ncnyl88xs

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.