Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. Live 27th Match, Group A (N), Colombo (RPS), February 15, 2026, ICC Men's T20 World Cup India 175/7 Pakistan (2/20 ov, T:176) 13/3 Pakistan need 163 runs in 108 balls.Stats view Current RR: 6.50 • Required RR: 9.05 Win Probability PAK 14.97% IND 85.03%
  2. பாகிஸ்தானுக்கு 176 ரன்கள் இலக்கு - சுழல் வியூகங்களுக்கு இடையே போராடி ரன் எடுத்த இந்திய வீரர்கள் பட மூலாதாரம்,Viraj Kothalawala/MB Media/Getty Images படக்குறிப்பு,இஷான் கிஷன் 27 பந்துகளில் அரை சதத்தை கடந்தார் 15 பிப்ரவரி 2026, 13:06 GMT புதுப்பிக்கப்பட்டது 7 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் (இந்த செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது) நடப்பு டி20 உலகக் கோப்பையில் லீக் ஆட்டம் ஒன்றில் 'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இன்று நேருக்கு நேர் மோதுகின்றன. கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அகா பந்து வீச்சை தேர்வு செய்வதாக கூறினார். இன்றைய டாஸின் போதும் இரு கேப்டன்களும் கைகுலுக்கவில்லை. போட்டி தொடங்கிய முதல் ஓவரிலேயே இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா ஆட்டமிழந்தார். எனினும் இஷான் கிஷன் மற்றும் திலக் வர்மா தொடர்ந்து ஆடினர். அபிஷேக் ஷர்மா ஆட்டமிழந்த போதும் இஷான் கிஷன் பெரிய ஷாட்களை ஆடி இந்திய அணிக்கு நம்பிக்கை கொடுத்தார். அவருக்கு பக்கபலமாக திலக் வர்மா சிங்கிள் ரன்களை எடுத்து ஸ்டிரைக்கை ரொட்டேட் செய்து கொடுத்தார். பவர் பிளே முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 52 ரன்கள் எடுத்தது. இஷான் கிஷன் 27 பந்துகளில் அரை சதத்தை கடந்தார். அதிரடியாக ஆடிவந்த இஷான் கிஷன் 40 பந்துகளில் 77 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 10 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் எடுத்தது. கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா களத்தில் இருந்தனர். பட மூலாதாரம்,Matthew Lewis-ICC/ICC via Getty Images படக்குறிப்பு,இஷான் கிஷன் மற்றும் திலக் வர்மா வலுவான பார்ட்னர்ஷிப்பை கொடுத்தனர் 24 பந்துகளில் 25 ரன்கள் எடுத்திருந்த திலக் வர்மா சயிம் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இதன் பின்னர் களமிறங்கிய ஹர்திக் பாண்ட்யா முதல் பந்திலேயே ஆட்டமிழக்க இந்திய அணி அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்தது. 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணிக்கு 176 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சவால் கொடுத்த சயிம் அயூப் இந்திய பேட்டர்களுக்கு பாகிஸ்தான் ஆஃப் ஸ்பின்னர் சயிப் அயூப் பெரும் சவால் கொடுத்தார். 4 ஓவர்களை வீசிய அவர் 25 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகள் வீசினார். இஷான் கிஷன், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா என அனைத்துமே பெரிய விக்கெட்டுகள். பெரும்பாலும் 'அரௌண்ட் தி ஸ்டம்ப்' வந்து ஸ்டம்ப் லைனில் சீராக வீசிக்கொண்டே இருந்தார். அதன் பலனாக ரன்கள் கட்டுக்குள் இருந்ததோடு விக்கெட்டுகளும் கிடைத்தது. 18 ஓவர்களை வீசிய ஸ்பின்னர்கள் இந்த இன்னிங்ஸின் 20 ஓவர்களில் 18 ஓவர்களை பாகிஸ்தான் ஸ்பின்னர்களே வீசினார்கள். சல்மான் அகா, சயிம் அயூப், அப்ரார் அஹமது, முகமது நவாஸ், சதாப் கான், உஸ்மான் தாரிக் என 6 ஸ்பின்னர்கள் அந்த 18 ஓவர்களை வீசினார்கள். வேகப்பந்துவீச்சாளர்களில் ஷஹீன் அஃப்ரிடி மட்டுமே 2 ஓவர்கள் வீசினார். மற்றொரு வேகப்பந்துவீச்சு ஆப்ஷனான ஃபஹீம் அஷ்ரஃப் பாகிஸ்தான் கேப்டனால் பயன்படுத்தப்படவில்லை. 3 ஸ்பின்னர்களுடன் இந்திய அணி இந்திய அணியில் கடந்த போட்டியில் விளையாடாத அதிரடி தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா மீண்டும் இடம் பிடித்துள்ளார். இந்திய அணி ஒரேயொரு பிரதான வேகப்பந்துவீச்சாளரை மட்டுமே இன்று களமிறக்குகிறது. ஜஸ்ப்ரித் பும்ரா தவிர்த்து ஆல்ரவுண்டர்கள் ஹர்திக் பாண்டியா மற்றும் ஷிவம் துபே ஆகியோர் மற்ற வேகப்பந்துவீச்சு ஆப்ஷன்களாக உள்ளனர். வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ், அக்‌ஷர் பட்டேல் என்று 3 ஸ்பின்னர்களைக் களமிறக்கியிருக்கிறது இந்தியா. பாகிஸ்தானும் உஸ்மான் தாரிக், அப்ரார் அஹமது, சதாப் கான், முகமது நவாஸ் என பல ஸ்பின்னர்களை தங்கள் பிளேயிங் லெவனில் கொண்டிருக்கிறது. இந்தியாவின் பிளேயிங் லெவன் விவரம் பின் வருமாறு: இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, ரிங்கு சிங், அக்சர் படேல், குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா பாகிஸ்தான் அணியில் உஸ்மான் தாரிக் பாகிஸ்தானின் பிளேயிங் லெவனில் இடம்பெற்றுள்ள வீரர்கள் விவரம் பின்வருமாறு, சாஹிப்சாதா ஃபர்ஹான், சைம் அயூப், சல்மான் ஆகா (கேப்டன்), பாபர் அசாம், ஷதாப் கான், உஸ்மான் கான் (விக்கெட் கீப்பர்), முகமது நவாஸ், ஃபஹீம் அஷ்ரஃப், ஷஹீன் ஷா அப்ரிடி, உஸ்மான் தாரிக், அப்ரார் அகமது பட மூலாதாரம்,Getty Images இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறும். பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த கடைசி 5 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. டி20 உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இதுவரை 8 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 7 முறை இந்திய அணியும் ஒரு முறை பாகிஸ்தான் அணியும் வென்றுள்ளன. ஆனால் பாகிஸ்தான் அணியின் சமீபத்திய செயல்பாடு மற்றும் வீர்களின் ஃபார்ம் அவர்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது. ஆரம்பத்தில் இந்த போட்டிக்கான அனுமதியை மறுத்த பாகிஸ்தான் அரசு, பல்வேறு ஊகங்களுக்குப் பிறகு, இறுதியில் முடிவை மாற்றிக் கொண்டு, தனது அணி உலகக் கோப்பை லீக் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக விளையாட அனுமதி அளித்தது. பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு ஆசியக் கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியபோது, இரு அணிகளின் மோதலை விட இரு நாடுகளுக்கு இடையிலான மோசமான உறவுகள் குறித்துதான் அதிகம் விவாதிக்கப்பட்டது என்பதும் உண்மைதான். கைகுலுக்காத கலாசாரம் தொடர்கிறது பட மூலாதாரம்,Matthew Lewis-ICC/ICC via Getty Images இந்தியா, பாகிஸ்தான் இடையேயான டி20 உலகக் கோப்பை போட்டியில் இரு அணி கேப்டன்கள் இன்றும் கைகுலுக்குவதை தவிர்த்துவிட்டனர். 2025 ஆசிய கோப்பையில் இந்தியா பாகிஸ்தான் போட்டியின் போது இரு அணி கேப்டன்களும் கைகுலுக்குவதை தவிர்த்தனர். அதே போல போட்டி முடிந்ததும் இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்குவதை தவிர்த்தனர். இந்திய அணியின் இந்த செயல் பேசுபொருளானது. காஷ்மீரின் பஹல்ஹாமில் நடந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களோடு நிற்க இந்த முடிவை எடுத்ததாக இந்திய கேப்டன் சூர்யகுமா யாதவ் கூறினார். இந்த விஷயத்தில் அதிருப்தி அடைந்த பாகிஸ்தான் ஐசிசியிடம் முறையிட்டது. இந்த நிலையில், இன்றைய போட்டியில் கைகுலுக்கல் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இது பற்றி சூர்யகுமார் யாதவிடம் செய்தியாளர் சந்திப்பில் நேற்று கேட்கப்பட்ட போது டாஸ் போடும் நேரத்தில் கைகுலுக்குவதைப் பற்றி பார்ப்போம். 24 மணி நேரம் காத்திருங்கள் என்றார். பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அகாவும் அதே பதிலை கூறினார். இந்த நிலையில், டாஸின் போது மீண்டும் கைகுலுக்கலை தவிர்த்திருப்பது கவனம் பெற்றிருக்கிறது. இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c62d67klkqxo
  3. போர்க்காலத்தின் தகவல் பரிமாற்ற ஊடகமாக விளங்கிய வானொலி Courtesy: தீபச்செல்வன் ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி 13 ஆம் தேதி UNESCO அறிவித்துள்ள உலக வானொலி நாள் உலகெங்கும் வானொலியின் சமூகப் பங்களிப்பை நினைபடுத்துகிறது. தகவல் பரிமாற்றத்தின் மிக எளிய, மலிவு மற்றும் விரைவான சேவைக்காக வானொலி இன்னும் பல கோடி மக்களின் வாழ்வோடு இணைந்திருக்கிறது. தொலைதூர கிராமங்களிலிருந்து நகர மையங்கள்வரை மனிதர்களை ஒன்றிணைக்கும் ஒலிப் பாலமாக வானொலி தேசங்களையும் உலகத்தையும் இணைக்கின்றது. இலங்கைக்கு என்று தனித்துவமான வானொலிப் பாரம்பரியமுண்டு. அத்துடன் புலிகளின் குரல் என்ற தமிழர்களின் போராட்ட வானொலிப் பாரம்பரியமும் ஈழ மண்ணிற்குள்ளது. இலங்கையின் வானொலிப் பாரம்பரியம் தென்னாசியாவில் வானொலி ஒளிபரப்பின் முன்னோடிகளில் ஒன்றாக இலங்கை வானொலி எனப்படும் Sri Lanka Broadcasting Corporation (SLBC) விளங்குகிறது. 1920களிலேயே ஆரம்பித்த ஒலிபரப்பு, பின்னர் “Radio Ceylon” என உலகளவில் பிரசித்திபெற்றது ஆசியாவின் முதல் வானொலி. குறிப்பாக தமிழ்ச் சேவை, வடக்கு–கிழக்கு மக்களின் கலாச்சார, அரசியல் மற்றும் சமூக உணர்வுகளை வெளிப்படுத்திய முக்கிய மேடையாக இருந்தது. போர்காலத்திலும் பேரிடர் சூழல்களிலும், தகவல் பரிமாற்றத்தின் முதன்மை ஆதாரமாக வானொலி திகழ்ந்தது. நூற்றாண்டு கடந்து இன்னமும் மக்களின் மனங்களில் இலங்கை வானொலி நீங்காத இடத்தை தக்க வைத்திருக்கின்றது. இலங்கையில் உள்ள மக்கள் மாத்திரமின்றி தமிழ்நாட்டு மக்களின் வாழ்விலும் உயர்விலும் நகர்விலும் இலங்கை வானொலிக்கென ஒரு தனியான இடமுண்டு. இலங்கையில் வானொலி வெறும் செய்தி ஊடகமல்ல; அது கலாச்சார நினைவகமாகவும் இருந்தது. நாட்டுப்புறப் பாடல்கள், இலக்கிய நிகழ்ச்சிகள், விவசாய அறிவுரைகள், கல்வி ஒலிப்பரப்புகள் ஆகியவை கிராமிய வாழ்க்கையுடன் வானொலியை நெருக்கமாக இணைத்தன. இன்று தனியார் எப்.எம். நிலையங்கள் பெருகியுள்ளன. இசை, இளைஞர் நிகழ்ச்சிகள், அரசியல் விவாதங்கள் என வானொலி புதிய வடிவம் பெற்றாலும், அதன் அடிப்படை நோக்கம் மக்களை இணைக்கும் சேவையில் எந்த மாற்றமுமில்லை. இந்தியாவின் வானொலி வளம் இந்தியாவில் All India Radio (AIR), “ஆகாஷ்வாணி” என அழைக்கப்படும் அரசு வானொலி, 1936இல் தொடங்கப்பட்டது. பல மொழிகளிலும் ஆயிரக்கணக்கான நிகழ்ச்சிகளை ஒலிபரப்பும் AIR, இந்தியாவின் மொழி மற்றும் பண்பாட்டு பல்வகைப்பாட்டை பிரதிபலிக்கிறது. செய்தி, நாடகம், இசை, கல்வி, விவசாயம், அறிவியல் எல்லாவற்றிற்கும் தனித்தனி நிகழ்ச்சிகள் அமைந்துள்ளன. சுதந்திரப் போராட்ட காலத்தில் வானொலி தேசிய உணர்வை ஊட்டிய கருவியாக இருந்தது. பின்னர், கிராமிய மேம்பாடு, சுகாதார விழிப்புணர்வு, பெண்கள் முன்னேற்றம் போன்ற சமூகப் பணிகளில் முக்கிய பங்கு வகித்தது. சமீப காலங்களில் சமூக வானொலிகள் (Community Radio) இந்தியாவில் வேகமாக வளர்ந்து வருகின்றன. உள்ளூர் குரல்களுக்கு இடமளித்து, சிறுபான்மையினரின் அனுபவங்களை வெளிக்கொணரும் பணியை அவை மேற்கொள்கின்றன. டிஜிட்டல் காலத்திலும் வானொலியின் தேவை இணையம், சமூக ஊடகங்கள், பொட்காஸ்ட்கள் போன்ற புதிய தொழில்நுட்பங்கள் வளர்ந்தாலும், வானொலி தனது தனித்தன்மையை இழக்கவில்லை. மின்சாரம் அல்லது இணையம் இல்லாத சூழல்களிலும் செயல்படக் கூடிய சாதனமாக அது தொடர்ந்து பயன்படுகிறது. இயற்கை அனர்த்தங்கள், அரசியல் பதற்றங்கள் போன்ற அவசரநேரங்களில் வானொலி நம்பகமான தகவல் ஊடகமாக விளங்குகிறது. தமிழீழ வானொலித்துறை புலிகளின் குரல் என்பது இலங்கையில் போர் இடம்பெற்ற காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ ஒலிபரப்பு சேவையாக இயங்கியது. 1990களில் வடக்கு இலங்கையில் இருந்து ஒலிபரப்பான இந்த வானொலி, செய்தி அறிவிப்புகள், அரசியல் கருத்துரைகள், நினைவுநாள் நிகழ்ச்சிகள் மற்றும் இயக்கத்தின் உள்நிலை தகவல்களை வெளியிட்டது. போர்நிலையிலிருந்த சூழலில், அது இயக்கம் மற்றும் போர் சார்ந்த தகவல் பரிமாற்ற ஊடகமாகவும் கருத்தியல் பரப்புரைக் கருவியாகவும் செயல்பட்டது. 2009ஆம் ஆண்டு இறுதிப்போருடன் ஈழ மண்ணில் அதன் ஒலிபரப்பு நிறுத்தப்பட்டது./ சினிமா பாடல்களைத் தவிர்த்து, களியாட்ட நோக்கம் தவிர்த்து விடுதலை பற்றிய உணர்வை ஊட்டியதுடன் சமூக எழுச்சிக்கான ஒலிப்படைப்புக்களையும் புலிகளின் குரலும் தமிழீழ வானொலியும் வடக்கு கிழக்கு மண்ணிற்கு வழங்கியது. விடுதலைப் போராட்டம் பற்றிய பாடல்கள் மக்களின் வாழ்வில் இரண்டறக் கலந்தன. இன்று விடுதலைப் புலிகள் இயக்கம் நிலத்திலற்ற காலத்திலும் விடுதலை பற்றிய உணர்வும் கருத்துக்களும் போராளிகளைப் பற்றிய நினைவும் ஆழமாக வேரூன்றி இருக்கின்றன என்றால் அதற்கு அன்றைய காலத்தில் புலிகளின் குரல் வானொலியும் விடுதலை இயக்கப் பாடல்களும் ஏற்படுத்திய தாக்கமே ஆகும். உலகத் தமிழர் வானொலிச் சேவை உலகத் தமிழர்களின் வானொலி முயற்சிகள், புலம்பெயர் வாழ்வின் மத்தியில் மொழி, கலாசாரம் மற்றும் அடையாளத்தைப் பாதுகாக்கும் பண்பாட்டு இயக்கமாக உருவெடுத்துள்ளன. கனடா, பிரிட்டன், பிரான்ஸ், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இயங்கும் சமூக மற்றும் இணைய வானொலிகள், உள்ளூர் தமிழர் சமூகத்தின் செய்திகள், இலக்கியம், இசை, மத நிகழ்வுகள் மற்றும் அரசியல் விவாதங்களை ஒலிபரப்புகின்றன. இணைய தொழில்நுட்ப வளர்ச்சியால், பாரம்பரிய எப்.எம். ஒலிபரப்பைத் தாண்டி, ஆன்லைன் ஸ்ட்ரீமிங் மற்றும் பொட்காஸ்ட் வடிவங்களில் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை இணைக்கும் ஒலி வலைப்பின்னல் உருவாகியுள்ளது. இவ்வாறான முயற்சிகள் வெறும் தகவல் பரிமாற்றம் மட்டுமல்ல; தலைமுறைகள் இடையிலான மொழிப் பிணைப்பை உறுதிப்படுத்தும் சமூக நினைவகங்களாகவும் செயல்படுகின்றன. தொழில்நுட்ப மாற்றங்கள் எவ்வளவு ஏற்பட்டாலும், மனித குரலின் நம்பகத்தன்மை மற்றும் உணர்ச்சி பிணைப்பு அழியாது என்பதையே உலக வானொலி நாள் கற்றுத் தருகிறது. இலங்கையிலும் இந்தியாவிலும் வானொலி, வரலாற்றை சாட்சியமாகக் கொண்டதும், எதிர்காலத்தை நோக்கியதுமான பயணத்தைக் கொண்டது. அது வெறும் தகவல் தொடர்புச் சாதனமல்ல. நாடு மற்றும் சமூகங்க நினைவுகளின் ஒலிப்பதிவு. மக்களின் இதயத் துடிப்பை எடுத்துச் செல்லும் ஒலி மொழி. இலங்கையிலும் இந்தியாவிலும், வானொலி இன உரிமை, சமூக நீதி, மொழி உரிமை, கலாச்சார அடையாளம் ஆகியவற்றை பாதுகாக்கும் கருவியாகத் திகழ்கிறது. ஈழ மண்ணல் போர் நடந்த காலத்தில் வானொலிகள் பொழுதுபோக்கைக் கடந்து மக்களை ஆற்றுப்படுத்தவும், தகவல் பரிமாற்றத்திற்கும் பயன்பட்டது ஒரு மாறுபட்ட வரலாற்று அனுபவம் ஆகும். அத்துடன் தமிழ்ச் சேவைகள், மொழி மற்றும் இன அடையாளங்களை காக்கும் பணியில் முக்கிய இடம் வகிக்கின்றன. ஒலியின் மூலம் உணர்வுகளைப் பகிரும் சக்தி, மனிதர்களின் உள்ளங்களை நேரடியாகத் தொட்டுச் செல்கிறது. பொறுப்பு துறப்பு! இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு, 15 February, 2026 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. https://ibctamil.com/article/radio-medium-of-communication-during-wartime-1771126719
  4. ஜியோவின் அடுத்த மாபெரும் பாய்ச்சல்! உலகத் தர வரிசையில் இணைந்த அம்பானி தொலைத்தொடர்பு, செமிகண்டக்டர் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற நவீன தொழில்நுட்பத் துறைகளில், நம்பகமான மற்றும் பாதுகாப்பான கட்டமைப்பை உருவாக்குவதற்காக டிரஸ்டட் டெக் அலையன்ஸ் (Trusted Tech Alliance) எனும் புதிய சர்வதேசக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட், கூகுள் கிளவுட், எரிக்சன், நோக்கியா மற்றும் ஆன்த்ரோபிக் உள்ளிட்ட உலகின் முன்னணி 15 நிறுவனங்கள் இணைந்துள்ள இந்தக் கூட்டமைப்பில், இந்தியாவின் முகேஷ் அம்பானியின் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனமும் ஓர் அங்கமாகியுள்ளது. வெளிப்படைத்தன்மை மற்றும் தனிநபர் தரவு பாதுகாப்பு ஆகியவற்றை உறுதிசெய்ய 5 அடிப்படை விதிகளைப் பின்பற்ற இந்தக் கூட்டமைப்பில் இணைந்துள்ள நிறுவனங்கள் ஒப்புக்கொண்டுள்ளன. மென்பொருள்கள் கிளவுட் சேவைகள் முதல் மென்பொருள்கள் வரை அனைத்திலும் பயனர்களின் நம்பிக்கையைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ள இந்த ஒத்துழைப்பு, உலக அளவில் எண்ம பொருளாதாரத்தைப் பாதுகாப்பான முறையில் வளர்க்க ஊக்கமளிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் தலைமைச் செயல் அதிகாரி கிரண் தாமஸ் தெரிவிக்கையில், உலகளாவிய எண்ம வளர்ச்சி அனைவரையும் சென்றடையப் பாதுகாப்பான தொழில்நுட்பம் அவசியம் எனத் தெரிவித்துள்ளார். அடுத்த தலைமுறை இணைய வசதி மற்றும் ஏஐ தொழில்நுட்பங்களில் மக்களின் நம்பிக்கையை நிலைநாட்டச் சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதில் ஜியோ பெருமிதம் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் மேற்கொண்டுள்ள இந்த முன்னெடுப்பு, உலகளாவிய தொழில்நுட்ப சந்தையில் இந்தியாவின் பங்களிப்பை மேலும் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/jio-google-ai-partnership-trusted-tech-alliance-1771099672
  5. புதிய பயங்கரவாத தடைச்சட்ட முன்மொழிவுக்கு எதிராக கையெழுத்து போராட்டம் Published By: Digital Desk 3 15 Feb, 2026 | 12:05 PM பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் புதிய பயங்கரவாத தடைச்சட்ட முன்மொழிவு ஆகியவற்றை முற்றாக நிராகரித்து எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மாபெரும் கையெழுத்துப் போரட்டம் திருகோணமலையில் சனிக்கிழமை (14) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. திருகோணமலையில் இடம்பெற்ற ஈழத் தமிழர் உரிமைகள் பெருமன்று (EDRA) அங்குரார்ப்பண நிகழ்வில் இக்கையெழுத்துப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்போது, திருகோணமலை மறை மாவட்ட ஆயர் நோயல் இமானுவேல், சிவகுரு ஆதீன குரு முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகள், மட்டக்களப்பு அமெரிக்கன் மிசன் அருட்பணி லுக் ஜோன் ஆகியோர் முதல் கையொப்பங்களை இட்டபின்னர் நிகழ்வில் பங்கேற்றவர்களும் கையொப்பம் இட்டு வலுச்சேர்த்திருந்தனர். உங்கள் கையெழுத்து உங்கள் உரிமையைக் காக்கும்..! என்ற தொனிப்பொருளில், பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட முன்மொழிவை கைவிடக் கோரியும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கக் கோரியும் ஒரு இலட்சம் கையெழுத்து பெறும் இலக்குடன் வடக்கு கிழக்கு தழுவிய மாபெரும் கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் சார்பில், வடக்கு கிழக்கு குடிசார் அமைப்புகளின் கூட்டிணைவில் முன்னெடுக்கப்படும் மாபெரும் கையெழுத்துப் போராட்டமானது வரும் 25 ஆம் திகதி வரை முன்னெடுப்பட்டு நீதி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்படுவதுடன் அதன் பிரதிகள் ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம், ஐ.நா. மனித உரிமைகள் பேரவை ஆணையாளர், ஐரோப்பிய ஒன்றியம், சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட அனைத்துலக இராஜதந்திரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/238696
  6. பெருந்தோட்ட பகுதி முன்பள்ளி பாடசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் - முன்பள்ளி ஆசிரியர் ஒன்றியம் கோரிக்கை 15 Feb, 2026 | 10:46 AM மலையக பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள முன்பள்ளி பாடசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்று மத்திய மாகாணத்திற்கு கீழ் கொண்டுவரப்பட வேண்டுமென முன்பள்ளி ஆசிரியர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. கொட்டகலையில் சனிக்கிழமை (14) ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே குறித்த ஒன்றியம் இந்த கோரிக்கையை முன்வைத்தது. இது தொடர்பாக ஒன்றியத்தின் தலைவர் யோகேஸ்வரி கருத்து தெரிவிக்கையில், மலையக பெருந்தோட்ட பகுதிகளில் இந்த முன்பள்ளி பாடசாலைகளை சுமார் 20 வருடங்களாக நடாத்தி வருகிறோம். அரசாங்கத்தின் ஊடாக கிடைக்கும் வளங்கள் எதுவும் எமக்கு கிடைப்பதில்லை. மலையகத்தில் உள்ள மாணவர்களை கல்வித்துறையில் முன் கொண்டுவரப்பட வேண்டும் என்ற நோக்கில் செயற்பட்டு வருகிறது தோட்டப் புறங்களில் எமது செயற்பாட்டை முன்னெடுக்க பாரிய சவாலாக இருக்கிறது.அதில் ஒன்றுதான் தோட்ட நிர்வாகங்கள் தடையாக இருந்து வருகிறது. எமது முன்பள்ளி பாடசாலை மாணவர்களுக்கு அரசாங்கம் இதற்கான தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார். இதன் போது இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த முன்பள்ளி ஒன்றியத்தின் பணிப்பாளர் மைக்கல் ஜோக்கியம் தெரிவிக்கையில், மலையக மக்களுக்கு அங்கிகாரத்தை வழங்கிய அரசாங்கத்திற்கு நாங்கள் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம் இன்று எல்லோரும் காணி சம்பந்தமாக பேசுகிறார்கள். ஆனால் மலையக பெருந்தோட்ட பகுதிகளில் நூற்றுக்கு எழுபது வீதமானோருக்கு முன்பள்ளியில் கற்றல் செயற்பாடுகள் கிடைப்பதில்லை. 30 வீதமானோருக்கு மாத்திரம் முன்பள்ளி கல்வி கிடைக்கிறது. இந்த நாட்டில் முன்பள்ளி கல்வி என்பது மாகாண சபையின் கீழ் காணப்படுகிறது. முன்பள்ளி எந்த பகுதியில் இடம் பெற்றாலும் அது மாகாணசபை அதிகாரத்திற்கு கீழ் உள்வாங்கப்பட வேண்டும்.தோட்ட பகுதிகளில் இயங்குகின்ற முன் பள்ளிகளுக்கு தோட்ட நிர்வாகம் தடை விதித்து வருகிறது. ரதெல்ல மற்றும் பல பகுதிகளில் முன் பள்ளிகள் மூடப்பட்டு காணப்படுகின்றன. முன்பள்ளி கல்வி அரசாங்கத்தின் ஊடாக அங்கீகரிக்கப்பட்டுள்ள போதிலும் மலையக பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள முன்பள்ளி கல்வியும் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட வேண்டும். முன்பள்ளி கல்விக்கு தடையாக இருக்கின்ற தோட்ட நிர்வாகம் மற்றும் பெருந்தோட்ட நிறுவனங்கள் மற்றும் மனிதவள பெருந்தோட்ட அபிவிருத்தி நிறுவனங்கள் ஆகியன தடையாக இருப்பதை இடைநிறுத்த வேண்டும். எனவே இது தொடர்பாக முன்பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர்கள் அனைவரும் இணைந்து எதிர்வரும் 22ம் திகதி அட்டனில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளோம் என்றார். https://www.virakesari.lk/article/238678
  7. திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மகா சிவராத்திரி நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர் Feb 15, 2026 - 06:10 PM மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மகா சிவராத்திரி நிகழ்வுகள் இன்று (15) காலை ஆரம்பமான நிலையில் மன்னாரிற்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் ஹரிணி அமரசூரிய மதியம் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு விஜயம் செய்தார். இதன்போது பிரதமர், மகா சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற விசேட சிவ தேவி பூஜையில் கலந்து கொண்டார். -மன்னார் நிருபர் லெம்பட்- https://adaderanatamil.lk/news/cmlnqg2mb0008356n143dpd71
  8. வவுனியாவில் 8,000 பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் Feb 15, 2026 - 06:02 PM வவுனியா மாவட்டத்தில் சுமார் 7,999 பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அக்குடும்பங்களின் பொருளாதார மற்றும் சமூக நிலையை மேம்படுத்துவதற்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் குறித்து அரச அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்தும் விசேட நிகழ்வொன்றின் போதே இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிகழ்வு அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் மற்றும் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது. இதன்போது, இக்குடும்பங்களிலுள்ள பிள்ளைகளின் பாதுகாப்பு மற்றும் கல்வி வாய்ப்புகளை மேம்படுத்துவது குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது. அதற்கமைய, அரச அதிகாரிகள் இவ்விடயத்தில் எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்பது குறித்து விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டன. 2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகளின் கீழ், பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் வளர்ச்சிக்காக முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் குறித்து இதன்போது விளக்கமளிக்கப்பட்டதுடன், அந்த வேலைத்திட்டங்களைச் செயற்படுத்தும்போது வினைத்திறனை மேம்படுத்துவதன் முக்கியத்துவமும் வலியுறுத்தப்பட்டது. மேலும், பிள்ளைகள் தொடர்பான விடயங்களைக் கையாளும் போது நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புத் திணைக்களம் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் நன்னடத்தைப் பாதுகாப்பிலுள்ள பிள்ளைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டு, அவற்றுக்கான தீர்வு மார்க்கங்களைக் கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டது. https://adaderanatamil.lk/news/cmlnq5m9y0007356ncnyl88xs
  9. இலங்கை மக்களின் பரிதாப நிலை இலங்கை சுகாதார அதிகாரிகள் நாடுமுழுவதும் சுமார் 10% சிறுநீரக நோயாளிகள் தாங்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளோம் என்பது குறித்து அறிந்திருக்கவில்லை என்று கூறுகின்றனர். உயர் இரத்த அழுத்தம் அல்லது நீரிழிவு நோயை முறையாக நிர்வகிக்காத நபர்கள் சிறுநீரக நோயை உருவாக்கும் அபாயத்தை கணிசமாக எதிர்கொள்கின்றனர் என்று தேசிய சிறுநீரகவியல், டயாலிசிஸ் மற்றும் மாற்று அறுவை சிகிச்சை நிறுவனத்தின் நிபுணர் மருத்துவர் அர்ஜுன மாரசிங்க எச்சரித்தார். சிகிச்சை மிகவும் சிக்கலானதாகிறது நோய் மேம்பட்ட நிலைக்கு முன்னேறும் வரை பல நோயாளிகள் கண்டறியப்படாமல் இருப்பார்கள், இதனால் சிகிச்சை மிகவும் சிக்கலானதாகிறது என்று அவர் குறிப்பிட்டார். அதிக கொழுப்பு அல்லது உயர்ந்த இரத்த அழுத்தம், உயர்ந்த நீரிழிவு அளவு உள்ளவர்கள் வழக்கமான சிறுநீரக பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு மருத்துவர் மாரசிங்க அறிவுறுத்தினார், கடுமையான சிக்கல்களைத் தடுக்க ஆரம்பகால கண்டறிதல் அவசியம் என்பதை வலியுறுத்தினார். https://ibctamil.com/article/10-of-kidney-patients-unaware-of-condition-1771082578
  10. அறியாமையைத் தோற்கடிக்க அனைவரும் சகோதரர்களாக ஒன்றிணைந்து போராட வேண்டும் Feb 15, 2026 - 04:15 PM இனம், மதம், குல வேறுபாடுகளைக் கடந்து நாம் அனைவரும் சகோதரர்களாக ஒன்றிணைந்து, அறியாமையைத் தோற்கடிப்பதற்காகப் போராட வேண்டிய தருணம் வந்துள்ளதாக சர்வஜன அதிகாரத்தின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார். இன்றைய (15) மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார். உலகெங்கிலும் உள்ள இந்து பக்தர்கள் சிவபெருமானுக்காக பூஜை வழிபாடுகள் நடத்தும் மகா சிவராத்திரி தினம் இன்றாகும். இந்துக்களின் மும்மூர்த்திகளில் ஒருவரான சிவபெருமான், தனது தேவி பார்வதியுடன் இணைவதையும், அவரது தெய்வீக நடனமான 'தாண்டவ நடனத்தை' ஆடுவதையும் மகா சிவராத்திரி குறிக்கின்றது. அறியாமை எனும் இருளை அகற்றி, வாழ்க்கையை வெற்றிக்கொள்வதைக் கொண்டாடுவதே மகா சிவராத்திரியின் நோக்கமாகும். அந்த உன்னத நோக்கத்தை மனதில் கொண்டு, இரவு முழுவதும் விழித்திருந்து, விரதம் அனுஷ்டித்து சிவபெருமானுக்கு பூஜை வழிபாடுகளை இந்து பக்தர்கள் இன்று மேற்கொள்கின்றனர். வரலாற்றில் முன்னெப்பொழுதையும் விட, ஒரு நாடாக நமது கண்களை மூடியுள்ள அறியாமை எனும் இருண்ட திரையை கிழித்தெறிய ஒரு தேசத்திற்கு ஞானம் தேவைப்படும் தருணம் இது. பொய், புரட்டு மற்றும் ஏமாற்று வேலைகள் ஆட்சி செய்யும் தருணம் இது. இந்த மண்ணில் வாழும் மக்களிடையேயும், கலாச்சாரங்களுக்கு இடையேயும் மிக சூட்சுமமாக பிளவுகள் விதைக்கப்பட்டுள்ள தருணம் இது. இனம், மதம், சாதி வேறுபாடுகளைப் பொருட்படுத்தாமல் நாம் அனைவரும் சகோதரர்களாக ஒன்றிணைந்து, அந்த அறியாமையைத் தோற்கடிக்கப் போராட வேண்டிய நேரம் இது. அந்த வகையில், மகா சிவராத்திரி வழங்கும் செய்தி நம் அனைவருக்கும் மிகவும் முக்கியமானதாகும். இன்று ஏற்றப்படும் தீபத்தின் ஒளியைப் போலவே, நம் இதயங்களிலும் அமைதி, மகிழ்ச்சி மற்றும் சகோதரத்துவம் பிரகாசிக்கட்டும் என்றும், அறியாமை, பிளவுகள் மற்றும் வறுமை அகலட்டும் என்றும் பிரார்த்திக்கிறேன். இலங்கை வாழ் மற்றும் உலக வாழ் அனைத்து இந்து சகோதர சகோதரிகளுக்கும், அவர்களின் எண்ணங்கள் ஈடேறி, மகிழ்ச்சியும் அமைதியும் மலரும் இனிய மகா சிவராத்திரி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் தனது வாழ்த்துச் செய்தில் குறிப்பிட்டுள்ளார். https://adaderanatamil.lk/news/cmlnmawji0002356nobgnjlbl
  11. திருகோணமலையில் பணமோசடி: பலர் பாதிப்பு! சிறிலங்கா டெலிகொம் (SLT) நிறுவனத்தின் ஊழியர்கள் எனத் தம்மை அடையாளப்படுத்திக்கொண்டு, பொதுமக்களின் வங்கி விபரங்களைப் பெற்று பணத்தைச் சூறையாடும் பாரிய மோசடி ஒன்று திருகோணமலை பகுதியில் இடம்பெற்று வருகின்றது. கடந்த வியாழக்கிழமை (12) இவ்வாறானதொரு மோசடிக்கு இலக்காகி தம்பதியினர் ஒருவர் பெரும் தொகையை இழந்துள்ளனர். திருகோணமலையைச் சேர்ந்த ஒருவருக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய மர்ம நபர்கள், தாம் ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்திலிருந்து பேசுவதாகக் கூறியுள்ளனர். பணமோசடி "நீங்கள் நீண்டகாலமாக எமது வாடிக்கையாளராக இருப்பதால், உங்கள் கணக்கில் 1,20,000 ரூபா பெறுமதியான 'ஸ்டார் பொயின்ஸ்' (Star Points) சேர்ந்துள்ளது. அதனைப் பணமாக மாற்றி உங்கள் வங்கிக் கணக்கில் வைப்பிலிட வங்கி விபரங்களைத் தாருங்கள்" என நயமாகப் பேசியுள்ளனர். குறித்த தொகையை இரண்டு கணக்குகளில் பிரித்து வைப்பிலிடுவதாகக் கூறி, பாதிக்கப்பட்ட நபரின் வங்கி விபரங்களையும் அவரது மனைவியின் வங்கி விபரங்களையும் பெற்றுள்ளனர். அத்துடன், கணக்கின் பாதுகாப்பு இலக்கங்கள் மற்றும் ‘பின்’ (PIN) இலக்கங்களையும் நைச்சியமாகப் பேசிப் பெற்றுக்கொண்டுள்ளனர். சிறிது நேரத்தில், இருவருடைய வங்கிக் கணக்குகளிலும் இருந்த பணத்தில், எடுக்க முடியாத மீதித் தொகையான 2,000 ரூபாவைத் தவிர மற்ற அனைத்துப் பணமும் திருடப்பட்டுள்ளதை அவர்கள் உணர்ந்துள்ளனர். இது குறித்து திருகோணமலை சிறிலங்கா டெலிகொம் அலுவலகத்திற்குச் சென்று விசாரித்த போதே, தாங்கள் மோசடி செய்யப்பட்டதை அவர்கள் உறுதிப்படுத்திக் கொண்டனர். அறிவுறுத்தல் "விடயம் தெரிந்த நானே அவர்களின் பேச்சில் மயங்கி அனைத்து விபரங்களையும் வழங்கிவிட்டேன்" என பாதிக்கப்பட்ட நபர் மிகுந்த கவலையுடன் தெரிவித்துள்ளார். இதேபோன்ற மோசடி அழைப்புகள் மற்றும் பண இழப்புகள் தொடர்பாக திருகோணமலை சிறிலங்கா டெலிகொம் அலுவலகத்திற்குப் பல முறைப்பாடுகள் தொடர்ச்சியாகக் கிடைத்து வருவதாகத் தெரியவருகிறது. முகம்தெரியாத நபர்களிடம் இருந்து வரும் இவ்வாறான அழைப்புகளை நம்பி, உங்களது வங்கி கணக்கு இலக்கம், இரகசிய குறியீட்டு இலக்கம் (PIN), கடவுச்சொல் (Password) அல்லது OTP இலக்கங்களை எக்காரணம் கொண்டும் வழங்க வேண்டாம் எனத் நிறுவனங்களும் பாதுகாப்புத் தரப்பினரும் எச்சரிக்கின்றனர். இது போன்ற மோசடிகளுக்கு யாராவது உள்ளாகியிருந்தால் அல்லது சந்தேகத்திற்கிடமான அழைப்புகள் வந்தால் உடனடியாக அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். https://tamilwin.com/article/money-laundering-many-affected-in-trinco-1771071728?itm_source=article
  12. நேபாளத்தை வீழ்த்திய மேற்கிந்தியத் தீவுகள் சுப்பர் 8 சுற்றில் விளையாட தகுதிபெற்றது Published By: Digital Desk 3 15 Feb, 2026 | 05:14 PM (நெவில் அன்தனி) மும்பை வான்கேட் விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை (15) நடைபெற்ற நேபளாத்துக்கு எதிரான சி குழு போட்டியில் 9 விக்கெட்களால் மிக இலகுவாக வெற்றியீட்டிய மேற்கிந்தியத் தீவுகள், ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண சுப்பர் 8 சுற்றில் பங்குபற்ற தகுதிபெற்றது. அதேவேளை, 3ஆவது நேரடி தோல்வியைத் தழுவிய நேபாளம் முதல் சுற்றுடன் வெளியேறுகிறது. இன்றைய போட்டியல் சிரேஷ்ட வீரர் ஜேசன் ஹோல்டர் பதிவுசெய்த 4 விக்கெட் குவியல், ஷாய் ஹோப் குவித்த ஆட்டம் இழக்காத அரைச் சதம் என்பன மேற்கிந்தியத் தீவுகளை இலகுவாக வெற்றிபெறச் செய்தன. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட நேபாளம் 20 ஓவர்களும் தாக்குப்பிடித்து 8 விக்கெட்களை இழந்து 133 ஓட்டங்களைப் பெற்றது. 15 ஓவர்கள் நிறைவில் நேபாளம் 6 விக்கெட்களை இழந்து 73 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்தது. எனினும் சிரேஷ்ட வீரரும் அனுபவசாலியுமான திப்பேந்த்ர சிங் அய்ரீ, 8ஆம் இலக்க வீரர் சோம்ப்கால் காமி ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் பெறுமதிமிக்க 54 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை கௌரவமான நிலையில் இட்டனர். அய்ரீ பொறுமையுடன் துடுப்பெடுத்தாடி 3 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 58 ஓட்டங்களைப் பெற்றார். சோம்ப்பால் காமி 26 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். அவர்களைவிட லோக்கேஷ் பாம் (13), ஆசிப் ஷெய்க் (11), குல்சான் ஜா (11) ஆகியோரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர். பந்துவீச்சில் ஜேசன் ஹோல்டர் 27 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றினார். 134 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் 15.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 134 ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றியீட்டியது. அணித் தலைவர் ஷாய் ஹோப் 44 பந்துகளில் 5 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் உட்பட 61 ஓட்டங்களுடனும் ஷிம்ரன் ஹெட்மயர் 32 பந்துகளில் 4 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் உட்பட 46 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். அவர்கள் இருவரும் பிரிக்கப்படாத இரண்டாவது விக்கெட்டில் 91 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். ஆரம்ப வீரர் ப்றெண்டன் கிங் 22 ஓட்டங்களைப் பெற்றார். ஆட்டநாயகன்: ஜேசன் ஹோல்டர். https://www.virakesari.lk/article/238735
  13. ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் நவால்னி விஷம் கொடுத்துக் கொலை ; பிரித்தானியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் பகிரங்கக் குற்றச்சாட்டு! Published By: Digital Desk 3 15 Feb, 2026 | 03:42 PM ரஷ்யாவின் மிக முக்கியமான எதிர்க்கட்சித் தலைவராக விளங்கிய அலெக்ஸி நவால்னி (Alexei Navalny), இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிறையில் உயிரிழந்தமைக்கு 'தவளை விஷமே' காரணம் என பிரித்தானியா உள்ளிட்ட 05 ஐரோப்பிய நாடுகள் அதிரடி ஆதாரங்களை வெளியிட்டுள்ளன. மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய பிரிட்டன் வெளிவிவகார செயலர் யவெட் கூப்பர், நவால்னியின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளை ஆய்வு செய்ததில் 'எபிபாடிடைன்' எனப்படும் மிக அரிதான நரம்பு விஷம் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இந்த நச்சு தென்னமெரிக்காவின் காடுகளில் வாழும் ஒரு வகை விஷத் தவளைகளில் இருந்து எடுக்கப்படுபவை. இது மார்ஃபினை விட 200 மடங்கு அதிக வீரியம் கொண்டது. இது உடலில் சென்றால் தசைப் பிடிப்பு, பக்கவாதம், சுவாச செயலிழப்பு ஏற்பட்டு மிக விரைவாக மரணம் நிகழும். பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி, ஸ்வீடன் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த அரிதான நச்சுத்தன்மை கொண்ட விஷம் ரஷ்யாவின் இயற்கையில் எங்கும் காணப்படுவதில்லை. நவால்னி சிறையில் இருந்தபோது அவருக்கு இந்த விஷத்தைச் செலுத்த ரஷ்ய அரசுக்கு மட்டுமே வாய்ப்பும், நோக்கமும் இருந்தது. எனவே அவரது மரணத்திற்கு கிரெம்ளின் மாளிகையே முழுப் பொறுப்பு." தமது கணவர் கொல்லப்பட்டதற்கான அறிவியல் பூர்வ ஆதாரம் கிடைத்துள்ளமை தொடர்பில் அலெக்ஸி நவால்னியின் மனைவி யூலியா, "முதல் நாளிலிருந்தே என் கணவர் விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டார் என்பதில் நான் உறுதியாக இருந்தேன். தற்போது அதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது. புட்டின் ஒரு கொலைகாரர், அவர் இதற்காகப் பதில் சொல்லியே ஆகவேண்டும்," எனத் தெரிவித்துள்ளார். இந்தக் குற்றச்சாட்டுகளை ரஷ்யா வழக்கம் போல மறுத்துள்ளது. இது மேற்கத்திய நாடுகளின் திட்டமிடப்பட்ட "தகவல் யுத்தம்" எனவும், தங்கள் நாட்டுப் பிரச்சினைகளில் இருந்து திசைதிருப்பவே இத்தகைய பொய்களைப் பரப்புவதாகவும் ரஷ்ய வெளிவிவகார அமைச்சு குற்றம்சாட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/238718
  14. மகா சிவராத்திரி விரதம் இன்று Feb 15, 2026 - 06:15 AM இந்து தர்மத்தில் சிவபெருமானுக்குரிய முக்கிய விரதங்களில் மிகவும் மகத்தான விரதமாக மகா சிவராத்திரி கருதப்படுகின்றது. ஒவ்வோர் ஆண்டும் மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதியன்று இந்த விரதம் அனுட்டிக்கப்படுகின்றது. 2026-ஆம் ஆண்டில், இவ்விரதமானது இன்று (15) நாடு முழுவதும் பக்திப் பெருக்குடன் அனுசரிக்கப்படுகிறது. சிவராத்திரி கொண்டாடப்படுவதற்குப் பின்னால் பல்வேறு புராணக் கதைகள் உள்ளன. பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும் இடையில் "யார் பெரியவர்?" என்ற போட்டி எழுந்தபோது, சிவன் ஒரு பெரும் ஜோதிப் பிழம்பாகத் தோன்றினார். அதன் அடி மற்றும் முடியைக் காண முடியாதபடி நின்ற அந்த நாளை 'சிவராத்திரி' என்கிறோம். அதேநேரம் சிவபெருமானும் அன்னை பார்வதியும் மணந்து கொண்ட புனிதமான இரவாகவும் இது கருதப்படுகிறது. தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது வெளிவந்த 'ஆலகால' விஷத்தை, உலகைக் காக்க சிவன் உண்டார். அந்த விஷம் அவர் தொண்டையிலேயே தங்கிவிட, அவர் மயக்கமடையாமல் இருக்க தேவர்கள் இரவு முழுவதும் விழித்திருந்து வழிபட்ட இரவே சிவராத்திரி என்றும் பல்வேறு புராணக் கதைகளில் சொல்லப்படுகின்றது. "சிவராத்திரி" என்றால் "சிவனின் இரவு" என்று பொருள். இந்த நாளில் அடியவர்கள் மனதையும் புலன்களையும் கட்டுப்படுத்தி, இறைச் சிந்தனையோடு விழித்திருப்பது ஆன்மீக முன்னேற்றத்தைத் தரும். "ஒருவர் தன் வாழ்நாளில் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் அனைத்தும் இந்த ஒரு நாள் விரதத்தினால் நீங்கும்" என்பது ஐதீகம். உடல் தூய்மைக்காகவும் மன ஒருமைப்பாட்டிற்காகவும் உணவு உட்கொள்ளாமல் இருப்பது. இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருப்பது. இது அறியாமை எனும் உறக்கத்திலிருந்து விடுபட்டு ஞானம் பெறுவதைக் குறிக்கும். சிவலிங்கத்திற்கு பால், தயிர், தேன், நெய், இளநீர் மற்றும் சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்வது. இரவு முழுவதும் 'ஓம் நமசிவாய' என்ற மந்திரத்தை உச்சரிப்பது. மகா சிவராத்திரி என்பது நம்முள்ளே இருக்கும் ஆன்மாவைத் தரிசிப்பதற்கான ஒரு வாய்ப்பு. சிவமே அன்பு, அன்பே சிவம் என்ற தத்துவத்தை உணர்ந்து, ஆணவம், கன்மம், மாயை ஆகியவற்றை விடுத்து இறைவனிடம் சரணடைவதே இந்த நன்னாளின் உண்மையான நோக்கமாகும். இன்றைய தினம் இலங்கையில் உள்ள பல சிவாலயங்கள் மற்றும் ஏனைய ஆலயங்களிலும் சிவராத்திரி விரத விசேட பூஜை வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmln0wmgf0001356ndg6bsfps
  15. கட்டாய குடும்ப கட்டுப்பாடு: யாழ் வந்த அமெரிக்க வைத்தியர் வெளியிட்ட உண்மைகள்! யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி வளாகத்தில் (CTRB), ஒரே நாளில் சத்திரசிகிச்சை முடித்து வீடு திரும்பத்தக்க வகையிலான புதிய நிலையம் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. யாழ். மருத்துவ பீடம், போதனா வைத்தியசாலை, உயர்கல்வி அமைச்சு மற்றும் சர்வதேச மருத்துவ சுகாதார அமைப்பு ஆகியவற்றுடன் புலம்பெயர் அமைப்புகளின் பங்களிப்போடு இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. சிறிய வகை சத்திரசிகிச்சைகளுக்காக நோயாளர்கள் நீண்டகாலம் காத்திருப்பதைக் குறைப்பதும், அதீத மருத்துவச் செலவுகளைத் தவிர்ப்பதுமே இந்த நிலையத்தின் பிரதான நோக்கமாகும். இந்நிகழ்வில் அமெரிக்காவில் உள்ள சர்வதேச மருத்துவ சுகாதார அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வைத்திய கலாநிதி காருண்யனும் கலந்துகொண்டிருந்தார். இந்தத் திட்டம் குறித்து அவர் தெரிவித்த விரிவான கருத்துகளுடன் வருகின்றது ஐபிசி தமிழின் அகளங்கம் நிகழ்ச்சி... https://ibctamil.com/article/jaffna-medical-faculty-ctrb-new-surgery-center-1771115955
  16. போதைப்பொருள் வியாபாரத்தில் முப்படையினர் மற்றும் காவல்துறையினர் : காவல்துறை மா அதிபர் அதிர்ச்சி தகவல் போதைப்பொருள் வியாபாரத்தில் காவல்துறையினர் மற்றும் முப்படையைச் சேர்ந்த அதிகாரிகளும் ஈடுபட்டு வருவதாக காவல்துறை மா அதிபர் அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டுள்ளார். நச்சுத்தன்மை வாய்ந்த போதைப்பொருள் ஒழிப்பு குறித்து தனமல்விலவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றபோது காவல்துறை மா அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், திட்டமிட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் தொடர்பான எந்தவொரு தகவலையும் நேரடியாகத் பொதுமக்கள் எனக்கு தெரிவிக்க முடியும். 100க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் கைது "இந்த போதைப்பொருள் வியாபாரம் ஒவ்வொரு மூலையிலும் இந்தக் கடத்தல்காரர்களால் நிறைந்துள்ளது. அவர்கள் மற்ற அரசு நிறுவனங்களிலும் இருந்தனர். அவர்கள் காவல்துறையிலும் இருந்தனர். நேற்று முன்தினம், ஒரு காவல்துறை அதிகாரி 700 கிராம் எடையுடன் பிடிபட்டார். அவர் ஒரு காவல்துறை அதிகாரி என்பதால் மட்டும் சட்டம் இலகுவாக அமல்படுத்தப்படுவதில்லை. சட்டம் முழுமையாக அமல்படுத்தப்படுகிறது. இதன் விளைவாக, 100க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை சேவையிலிருந்து நீக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. முப்படைகளைச் சேர்ந்த சில அதிகாரிகளும் இந்தத் தொழிலில் மேலும், பொது சேவையில் உள்ள வேறு சில அதிகாரிகளும், முப்படைகளைச் சேர்ந்த சில அதிகாரிகளும் இந்தத் தொழிலில் உள்ளனர். அதே நேரத்தில், அவர்கள் அதற்கு அடிமையாகி உள்ளனர். காவல்துறையில் ஒரு குறிப்பிட்ட பிரிவு இருந்தது. போதைப்பொருள் சோதனை நடத்திய பிறகு அந்தப் பிரிவை சேவையிலிருந்து நீக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. போதைக்கு அடிமையானவர்கள் காவல்துறையில் இருக்க முடியாது காவல்துறையில் எவ்வளவு குறைவானவர்கள் இருந்தாலும், நாங்கள் அந்த வேலையைச் செய்கிறோம். ஒரு போதைப்பொருள் கடத்தல்காரர் காவல்துறையில் இருக்க முடியாது. போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் காவல்துறையில் இருக்க முடியாது. போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் இருக்கும் அதிகாரிகள் இருந்தால், தயவுசெய்து அந்தத் தகவலை எனக்கு வழங்கவும். போதைப்பொருள் "சமூகத்தில் எவ்வளவு கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் தொடர்புடையது என்பது உங்களுக்குத் தெரியும். என்னுடைய கைபேசி 24 மணி நேரமும் பொதுமக்களுக்குத் திறந்திருக்கும்."என்றார். https://ibctamil.com/article/100-police-officers-arrested-for-drug-offences-1771091254
  17. நடப்பு ரி20 உலகக் கிண்ணத்தில் 3ஆவது நேரடி வெற்றியை ஈட்டிய முதலாவது அணி தென் ஆபிரிக்கா Published By: Vishnu 14 Feb, 2026 | 11:17 PM (நெவில் அன்தனி) நியூஸிலாந்துக்கு எதிராக அஹமதாபாத் நரேந்த்ர மோடி விளையாட்டரங்கில் சனிக்கிழமை (14) நடைபெற்ற ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண டி குழுப் போட்டியில் 7 விக்கெட்களால் தென் ஆபிரிக்கா வெற்றியீட்டியது. இதன் மூலம் இந்த வருட ரி20 உலகக் கிண்ண போட்டியில் 3ஆவது நேரடி வெற்றியை ஈட்டிய முதலாவது அணி என்ற பெருமையை தென் ஆபிரிக்கா பெற்றுக்கொண்டது. இந்த வெற்றியுடன் தென் ஆபிரிக்கா சுப்பர் 8 சுற்றில் விளையாட பெரும்பாலும் தகுதிபெற்றுக்கொண்டுள்ளது. அப் போட்டியில் மாக்கோ ஜென்சனின் 4 விக்கெட் குவியல், அணித் தலைவர் ஏய்டன் மார்க்ராமின் ஆட்டம் இழக்காத அரைச் சதம் என்பன தென் ஆபிரிக்காவின் வெற்றியை இலகுவாக்கின. முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 175 ஓட்டங்களைப் பெற்றது. மார்க் செப்மன் 48 ஓட்டங்களையும் டெரில் மிச்செல் 32 ஓட்டங்களையும் பின் அலன் 31 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் மாக்கோ ஜென்சன் 40 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றினார். சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் மாக்கோ ஜென்சன் பதிவு செய்த முதலாவது 4 விக்கெட் குவியல் இதுவாகும். 176 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 17.1 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 178 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. இந்த வருட ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் அதிகூடிய வெற்றி இலக்கை விரட்டிக் கடந்த அணி என்ற பெருமையை தென் ஆபிரிக்கா பெற்றுக்கொண்டது. ஏய்டன் மார்க்ராம் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய 44 பந்துகளில் 8 பவுண்டறிகள், 4 சிக்ஸ்கள் உட்பட 84 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். குவின்டன் டி கொக் (20), ரெயான் ரிக்கெல்டன் (21), டிவோல்ட் ப்ரவிஸ் (21), டேவிட் மில்லர் (24 ஆ.இ.) ஆகியோரும் துடுப்பாட்டத்தில் சிறப்பான பங்களிப்பை வழங்கினர். குவின்டன் டி கொக்குடன் ஆரம்ப விக்கெட்டில் 62 ஓட்டங்களைப் பகிர்ந்த ஏய்டன் மார்க்ராம், 2ஆவது விக்கெட்டில் ரெயான் ரிக்கெல்டனுடன் 40 ஓட்டங்களையும் பிரிக்கப்படாத 4ஆவது விக்கெட்டில் டேவிட் மில்லருடன் 47 ஓட்டங்களையும் பகிர்ந்தார். ஆட்டநாயகன்: மாக்கோ ஜென்சன் https://www.virakesari.lk/article/238666
  18. ரஷ்யாவில் வட்ஸ்அப் செயலிக்கு தடை Published By: Digital Desk 3 15 Feb, 2026 | 11:17 AM ரஷ்யாவில் வட்ஸ்அப் மீதான தடை உத்தியோகபூர்வமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக கிரெம்ளின் மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கிரெம்ளின் ஊடகப் பேச்சாளர் டிமிட்ரி பெஸ்கோவ், இந்த தீர்மானம் ஏற்கனவே எடுக்கப்பட்டு தற்போது முழுமையாக அமுல்படுத்தப்பட்டுள்ளது. ரஷ்யாவின் தேசிய சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறை விதிகளைப் பின்பற்ற வட்ஸ்அப் நிறுவனம் தொடர்ந்து மறுத்து வருகிறது. பயங்கரவாதம் மற்றும் குற்றச் செயல்களைத் தடுக்க, அரசு கோரும் தகவல்களை வழங்க 'மெட்டா' (Meta) நிறுவனம் மறுப்பு தெரிவிக்கிறது. ரஷ்ய சட்டப்படி, ஒரு வெளிநாட்டுத் தொழில்நுட்ப நிறுவனம் அங்கு செயல்பட வேண்டுமெனில், உள்ளூரில் ஒரு பிரதிநிதி அலுவலகத்தைத் திறக்க வேண்டும். வட்ஸ்அப் இதனைச் செய்யத் தவறியுள்ளது. வட்ஸ்அப்பிற்குப் பதிலாக ரஷ்யாவிலேயே உருவாக்கப்பட்ட 'MAX' என்ற தேசியச் செயலியைப் பயன்படுத்த மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். "MAX செயலி ஒரு சிறந்த தேசிய மாற்றாகும். இது குடிமக்களின் தினசரி தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது" என அவர் வலியுறுத்தியுள்ளார். ரஷ்யாவில் சுமார் 10 கோடி பயனர்கள் வட்ஸ்அப்பை பயன்படுத்தி வந்தனர். தற்போது நேரடி அணுகல் தடை செய்யப்பட்டுள்ளதால், பயனர்கள் இதனைப் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், பலர் 'விபிஎன்' (VPN) சேவைகளைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்தத் தடை ரஷ்யாவின் "டிஜிட்டல் இறையாண்மையை" பாதுகாப்பதற்கான ஒரு முக்கிய நடவடிக்கை என்று அந்நாட்டு அரசாங்கம் கருதுகிறது. https://www.virakesari.lk/article/238687
  19. சாமுராய் என்றால் அச்சமற்ற போர் வீரன் என்பது உண்மையா? உலகமே வியக்கும் ஜப்பான் வீரர்களின் வரலாறு பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் மேத்யூ வில்சன்‎ 4 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் இடைக்காலத்தின் தொடக்கத்தில் இருந்து, ஷோகன் முதல் ஸ்டார் வார்ஸ் வரை கலை, புனைகதை, திரைப்படங்கள் என சாமுராய்கள் பல வகைகளில் காட்டப்பட்டுள்ளனர். ஆனால், அவர்களின் உண்மை கதை நாம் அறிந்ததைவிட மிகவும் சிக்கலானது, ஆச்சரியம் நிறைந்தது. கலாசார வரலாற்றில், சாமுராய்களின் நீடித்த மரபு ஒரு தனித்துவமான நிகழ்வாக அறியப்படுகிறது. 18ஆம் நூற்றாண்டின் உக்கியோ-இ அச்சுகள் முதல் சமகால வீடியோ கேம்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் வரை வேறு எந்த இடைக்கால சமூகக் குழுவும் இவ்வளவு பிரபலமாக, இடைவிடாமல் கொண்டாடப்பட்டதாக இருக்கவில்லை. பிரபலமான கதைகள் பெரும்பாலும் காலப்போக்கில் மிகைப்படுத்தப்படுகின்றன. சாமுராய்கள் விஷயத்திலும் இதுவே நடந்துள்ளது. இந்தப் பழங்கால போர்வீரர்கள் எப்போதும் அச்சமற்றவர்கள், விசுவாசமானவர்கள், ஒழுக்கமானவர்கள், பிறரிடம் இருந்து உண்மையிலேயே வேறுபட்டவர்கள் என்று மக்கள் நம்பினர். ஆனால், பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் நடக்கும் ஒரு புதிய கண்காட்சி இந்தக் கருத்துகளில் பலவும் கட்டுக்கதைகள் என்பதைக் காட்டுகிறது. இந்தக் கண்காட்சி கற்பனைகளை அகற்றி, சாமுராய்களின் உண்மையான, சுவாரஸ்யமான வரலாற்றை வெளிப்படுத்த முயல்கிறது. சாமுராய் என்பவர்கள் உண்மையில் யார்? அவர்களின் கதை தொடங்கியது எப்படி? "அவர்கள் ஒன்றும் வரலாறு முழுவதும் ஒரே மாதிரியாக இருந்த தனித்துவமான மக்கள் குழு இல்லை" என்று கண்காட்சியின் கண்காணிப்பாளர் ரோசினா பக்லேண்ட் பிபிசியிடம் கூறுகிறார். "மேற்கத்திய நாடுகளில் சாமுராய்கள் போர்வீரர்கள் என்பதுதான் பொதுக் கருத்தாக உள்ளதாக நினைக்கிறேன். அவர்கள் போர் வீரர்கள்தான். இடைக் காலத்தில் அவர்கள் அப்படித்தான் தோன்றி அதிகாரப் பதவிக்கு உயர்ந்தார்கள். ஆனால், அது மட்டுமே முழு கதை இல்லை." சாமுராய்களின் தோற்றம் 10ஆம் நூற்றாண்டில், அவர்கள் முதன்முதலில் ஏகாதிபத்திய அரசவைகளுக்கு கூலிப் படையினராக ஆள் சேர்ப்பு செய்யப்பட்ட போதுதான் தொடங்கியது. அவர்கள் படிப்படியாக கிராமப்புற பிரபுக்களாக பரிணமித்தனர். ஆனால் பின்னர் மக்கள் நினைப்பதுபோல், அவர்கள் காலங்காலமாக மதிக்கப்படும் வீரமிக்க போர் வீரர்களாக இருக்கவில்லை. போரில் அவர்கள் பதுங்கியிருந்து ஏமாற்றுதல் போன்ற சந்தர்ப்பவாத தந்திரோபாயங்களைப் பயன்படுத்த முனைந்தனர். அவர்கள் பெரும்பாலும் மரியாதை அல்லது தன்னலமற்ற கடமை உணர்வைவிட நிலம் மற்றும் அந்தஸ்தின் வெகுமதிகளால் அதிகமாக உந்தப்பட்டனர். அவர்களின் தகவமைப்புக் கண்ணோட்டம், அவர்கள் பன்முக கலாசார தாக்கங்களையும் வெளிநாட்டு தொழில்நுட்பத்தையும் ஏற்றுக்கொண்டதைக் காட்டுகிறது. இது சாமுராய் அடையாளத்தின் மற்றோர் ஆச்சரியமான அம்சம். கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள ஒரு சாமுராய் உடையின் மார்புக் கவசம் போர்த்துகீசிய கவசத்தை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட ஒன்றாக உள்ளது. இது கூர்மையான முன்பக்கத்தையும் தோட்டாக்கள் பட்டுச் சிதற உதவும் சாய்வான பக்கங்களையும் கொண்டுள்ளது. 1542ஆம் ஆண்டு ஐரோப்பிய துப்பாக்கிகள் ஜப்பானுக்கு கொண்டு வரப்பட்ட பிறகு இந்த அம்சங்கள் அவசியமாயின. பட மூலாதாரம்,The Trustees of the British Museum படக்குறிப்பு,கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள ஒரு கவச உடை, துப்பாக்கி குண்டுகளை திசைதிருப்ப கூர்மையான முன்பக்கத்தையும் கோணலான பக்கங்களையும் கொண்டுள்ளது 'கலாசாரமே அதிகாரம்' ஏகாதிபத்திய வாரிசுரிமை தொடர்பான குழப்பமும் சண்டையும் நிலவிய காலத்தில் சாமுராய்கள் அரசியல் அதிகாரத்தைப் பெற்றனர். பின்னர் ஒரு வலுவான வம்சமான மினாமோட்டோ வம்சம், 1185இல் கட்டுப்பாட்டைக் கைப்பற்றி ஒரு புதிய அரசாங்கத்தை அமைத்தது. அதேநேரத்தில், பேரரசரின் ஏகாதிபத்திய அரசவை இன்னும் இருந்தது. காலப்போக்கில், வெவ்வேறு போர்வீரர் குடும்பங்கள் வம்சத் தலைவர்களுக்கு இடையிலான பல போர்களில் எழுச்சி பெற்று வீழ்ச்சியடைந்தன. ஆனால், வரலாற்று ஆசிரியர் பக்லேண்ட் விளக்குவது போல, அந்த நேரத்தில்கூட கலாசாரம் மிகவும் முக்கியமானதாக இருந்தது. ஏனெனில், கலாசாரமே மக்களுக்கு அதிகாரத்தை வழங்கியது. ஷோகன்கள் என்று அழைக்கப்படும் ராணுவ தலைவர்கள், பழங்குடி போர்வீரர்களின் கண்ணோட்டம் மற்றும் மனநிலையை வைத்துக்கொண்டு அதிகாரத்தை வெற்றிகரமாகப் பயன்படுத்த முடியாது என்பதை உணர்ந்தனர். எனவே, அவர்கள் தங்கள் ராணுவ வலிமையை அரசவை சமூகத்திற்குள் மிகவும் நுட்பமான, அதிநவீன அதிகாரத் தரகு முறைகளுடன் கூடுதலாக வழங்குவதற்கான வழிகளைக் கண்டறிந்தனர். அவர்களது அரசியல் கலைக்கான திட்டமிடுதல்கள் சீன தத்துவத்தை, முக்கியமாக கன்ஃபூசியஸின் கருத்துகளை, அடிப்படையாகக் கொண்டிருந்தது. "நியோ, கன்ஃபூசிய சிந்தனையில், ராணுவ சக்திக்கும் கலாசார திறனுக்கும் இடையே சமநிலையைக் கொண்டிருக்க வேண்டும்" என்கிறார் பக்லேண்ட். பட மூலாதாரம்,The Trustees of the British Museum இதன் விளைவாக, அரசவையில் இருந்த மக்கள், தூபத்தால் நிரப்பப்பட்ட ஆடம்பரமான அரண்மனை அறைகளுக்குள் கலாசார செல்வாக்கு மற்றும் கண்ணியமான ராஜதந்திரத்தின் அடிப்படையில் அதிக முயற்சிகளை எடுக்கத் தொடங்கினர். போர்க் கலையில் திறமையானவர்களாக இருப்பதுடன், சாமுராய்கள் ஓவியம், கவிதை, இசை நிகழ்ச்சி, நாடகம், தேநீர் விழாக்கள் போன்ற நுட்பமான கலைகளில் தேர்ச்சி பெற்றனர். அதற்கு எடுத்துக்காட்டாக கண்காட்சியில் இருக்கும், 19ஆம் நூற்றாண்டில் ஒரு சாமுராய் கலைஞரால் வரையப்பட்ட, ஆர்க்கிட் பூக்களைக் காட்டும் ஒரு ரசிகரின் ஓவியம் மிக அழகான, ஆச்சரியமான பொருட்களில் ஒன்றாக உள்ளது. தற்போது தயாரிப்பில் இருக்கும் டிஸ்னி/எஃப்எக்ஸ் தொடரான ஷோகன், சாமுராய் வரலாற்றில் நிகழ்ந்த ஒரு திருப்புமுனையின் கற்பனையான அணுகுமுறையை வழங்குகிறது. 1500களில், ஒரு வம்சத் தலைவரான டோகுகாவா இயாசு (தொடரில் கற்பனையான யோஷி டோரனாகாவால் குறிப்பிடப்படுகிறார்), 250 ஆண்டுகள் நீடித்த ஒரு வெற்றிகரமான அரசாங்கத்தை நிறுவினார். இதன் பொருள் ஜப்பானுக்குள் பெரிய போர்கள் எதுவும் இல்லை, சாமுராய்கள் வேறு புதிய பாத்திரங்களை வகிக்கத் தொடங்கினர் என்பதாகும். போர்க்களத்தை ஒழுங்கமைப்பதற்குப் பதிலாக, அவர்கள் அரசை நிர்வகித்தனர். "அவர்கள் அமைச்சர்கள், சட்டம் இயற்றுபவர்கள், வரி வசூலிப்பவர்களாக செயல்பட்டனர்" என்று பக்லேண்ட் கூறுகிறார். அவர்கள் அரசவை முழுவதும் பரவியிருந்த, "கோட்டை வாயில்களில் காவலர்களாக இருப்பது வரை" பல வேலைகளை ஏற்றுக்கொண்டனர். பட மூலாதாரம்,The Trustees of the British Museum படக்குறிப்பு,சாமுராய்களின் தோற்றம் 10ஆம் நூற்றாண்டில் தொடங்கியது. ஆனால் அவர்களைப் பற்றிய புராணக் கதைகள் பல நூற்றாண்டுகளாக நீடித்தன பெண் சாமுராய்கள் டோகுகாவா ஷோகுனேட் என்று அழைக்கப்படும் இந்தப் புதிய ஆட்சியின்போது, டைமியோக்களின் (ஜப்பானின் பிராந்திய பிரபுக்கள்) குடும்பங்கள் அவரது அதிகாரத் தளமான எடோ (டோக்கியோ) நகரில் வாழ வைக்கப்பட்டனர். "அவர்கள் ஒருவிதத்தில் பணயக் கைதிகளைப் போன்றவர்கள். ஷோகனுக்கு அருகில் இருப்பதால், அவரால் அவர்களைத் தொடர்ந்து கட்டுப்படுத்த முடியும்" என்று பக்லேண்ட் கூறுகிறார். இது சாமுராய்களின் கீழ்ப்படிதலையும் விசுவாசத்தையும் செயல்படுத்துவதற்கான ஒரு வழி. "உங்கள் மனைவியும் வாரிசும் எடோவில் இருந்தால் நீங்கள் பிராந்தியங்களில் எந்தச் சதியையும் செய்ய முடியாது. ஏனெனில், நீங்கள் அவர்களைப் பார்க்கும் வாய்ப்பை இழக்க நேரிடும் அல்லது அவர்கள் தூக்கிலிடப்படலாம்." இதன் விளைவாக, பக்லேண்டின் கூற்றுப்படி, சாமுராய் வட்டாரங்களில் பெண்களின் பங்கின் முக்கியத்துவம் அதிகரித்தது. "பெண்கள் தங்கள் கணவர்கள் இல்லாத நேரங்களில் இல்லங்களுக்கு தலைமை ஏற்று நடத்துகிறார்கள். ஒரு உயர் பதவியில் இருக்கும் சாமுராய் என்றால், அவரது வீட்டில் 40 முதல் 50 பேர் வரை இருக்கலாம். இதுவொரு சிறு தொழிலையே நடத்துவதைப் போன்றது." ஊழியர்கள், வர்த்தகர்களை மேற்பார்வை செய்வதோடு, அவர்கள் தங்கள் குழந்தைகளின் கல்வியையும் நிர்வகித்து, விருந்தினர்களுக்குத் தேவையான சடங்குகள், நடைமுறைகளைப் பராமரித்தனர். பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தின் கண்காட்சியில் உள்ள பல்வேறு பொருட்களான அங்கி, ஆசார கையேடுகள், அணிகலன்கள், இந்த சாமுராய் பெண்களின் வாழ்க்கைக் கதைகளை எடுத்துரைக்கின்றன. பட மூலாதாரம்,John C Weber collection/ Photo: John Bigelow Taylor படக்குறிப்பு,ஒரு பெண்ணின் ஆடம்பரமான தீயணைப்பு ஜாக்கெட் போன்ற பொருட்கள் சாமுராய் பெண்களின் வாழ்க்கைக் கதைகளைச் சொல்கின்றன டோகுகாவா ஷோகுனேட் ஆட்சிக் காலத்தில், நாடகங்கள், கவிதைகள், கலைப் படைப்புகள் கடந்த கால சாமுராய்களை சிறந்த நாயகர்களாகக் காட்டின. அவை அவர்களின் துணிச்சல், விசுவாசம் ஆகியவற்றை எடுத்துக் காட்டுகின்றன. பெரும்பாலான கதைகள் ஆண் போர் வீரர்களைப் புகழ்ந்தன. சில பெண் சாமுராய்களைப் பற்றிய கதைகளையும் கூறின. கடந்த 1852ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட உக்கியோ-இ அச்சு இத்தகைய பெண்களில் ஒருவரைக் காட்டுகிறது. மினாமோட்டோ வம்சத்தைச் சேர்ந்த ஒரு தளபதியின் மனைவியான டோமோ கோசனின் கதைதான் அது. இது 1184இல் நடந்த அவாசு போரில் அவரின் பங்கைக் காட்டுகிறது. அங்கு அவர் அச்சுறுத்தும் போர்வீரன் ஹச்சிரோ மோரிஷிகேவை கண்டுபிடித்து, அவரது குதிரையில் இருந்து கீழே தள்ளி, தலையை வெறும் கைகளால் துண்டித்ததாகக் கூறப்படுகிறது. இறப்பும் மறுபிறப்பும் மெய்ஜியின் ஆட்சிக் காலத்தில் (1868-1912), ஜப்பான் தனது எல்லைகளை சர்வதேச வர்த்தகத்திற்காகத் திறந்து, அதன் தொழில்கள், ராணுவம் மற்றும் சமூகத்தை நவீனமயமாக்கத் தொடங்கியது. அப்போது நடந்த ஒரு பெரிய மாற்றம் என்னவெனில், 1869இல் அதிகாரபூர்வமாக சாமுராய் வர்க்கம் முடிவுக்கு வந்தது. இது சாமுராய்களின் வரலாற்றில் ஒரு முக்கியமான திருப்புமுனையாகும். இதற்குப் பிறகு, சாமுராய் உருவம் புனைகதை போல மாறியதாக வரலாற்று ஆசிரியர் பக்லேண்ட் கூறுகிறார். மக்கள் சுமார் 25 ஆண்டுகளாக சாமுராய் உருவத்தை நிராகரித்தனர், ஆனால் பின்னர் கடந்த காலம் குறித்தான ஏக்கம் மக்களிடையே மீண்டும் அதன் மீதான ஆர்வத்தை ஏற்படுத்தியது. பட மூலாதாரம்,Courtesy of Lucasfilm படக்குறிப்பு,டார்த் வேடாரின் உடைகள் உள்பட, அசல் ஸ்டார் வார்ஸ் படத்திலுள்ள பல உடைகள் சாமுராய் கவசத்தால் ஈர்க்கப்பட்டவை ஜப்பானுக்கு வெளியிலும், மக்கள் சாமுராய்கள் மீது மிகுந்த ஆர்வம் காட்டினர். 1899ஆம் ஆண்டு நிட்டோப் இனாசோ எழுதிய புஷிடோ: தி சோல் ஆஃப் ஜப்பான் போன்ற புத்தகங்கள் பிரபலமடைந்தன. இந்தப் புத்தகம் பரவலாக வாசிக்கப்பட்டதாக வரலாற்று ஆசிரியர் பக்லேண்ட் கூறுகிறார். "தியோடர் ரூஸ்வெல்ட் கூடத் தனது நண்பர்களுக்குக் கொடுக்க சில பிரதிகளை வாங்கினார். முதல் சீன-ஜப்பானிய போரில் ஜப்பான் வெற்றி பெற்ற பிறகும், பின்னர் போரில் ரஷ்யாவை தோற்கடித்த பிறகும் ஜப்பானின் வெற்றியை விளக்க மக்கள் இந்தப் புத்தகத்தைப் பயன்படுத்தினர்." 20ஆம் நூற்றாண்டில், ஜப்பானுக்குள் சாமுராய்களின் உருவம் மாற்றப்பட்டு, ராணுவ பிரசாரம் மற்றும் தேசத்தின் சின்னம் உள்படப் பல்வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, சாமுராய்களின் கதைகள் மீண்டும் மறுபிறவி எடுத்தன. இந்த முறை அவை திரைப்படங்களின் கருப்பொருளாக உருவெடுத்தன. இந்தப் படங்களின் பின்னால் இருந்த இயக்குநர்களில் மிகவும் பிரபலமானவர் அகிரா குரோசாவா. அவரது காட்சிக் கதை சொல்லல் மற்றும் அதிரடி காட்சிகளைக் கையாளும் திறமை அமெரிக்க சினிமாவில் தீர்க்கமான தாக்கத்தை ஏற்படுத்தியது. குரோசாவாவின் செவன் சாமுராய் (1954), தி மேக்னிஃபிசென்ட் செவன் (1960) என்ற பெயரில் மீண்டும் உருவாக்கப்பட்டது. மேலும் யோஜிம்போ(1961), எ ஃபிஸ்ட்ஃபுல் ஆஃப் டாலர்ஸ் (1964) உருவாவதற்கான ஊக்கத்தை அளித்தது. பின்னர், தி லாஸ்ட் சாமுராய் (2003), 47 ரோனின் (2013) போன்ற தனது சொந்த சாமுராய் திரைப்படங்களையும் ஹாலிவுட் தயாரித்தது. சாமுராய்களின் பிரபலத்தன்மை மிகச் சமீபத்தில் மேற்கூறிய ஷோகன் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் வெற்றியால் உறுதி செய்யப்பட்டது. இது ஆங்கிலேயே எழுத்தாளர் ஜேம்ஸ் கிளாவெல் எழுதிய 1975 நாவலை அடிப்படையாகக் கொண்டது. கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது போல, அசல் ஸ்டார் வார்ஸ் திரைப்படமான எ நியூ ஹோப் (1977) அகிரா குரோசாவாவின் தி ஹிடன் ஃபோர்ட்ரஸ் (1958) திரைப்படத்தால் ஈர்க்கப்பட்டு உருவாக்கப்பட்டது. டார்த் வேடார் கதாபாத்திரத்தின் கவச உடை உள்படப் பல உடைகள் சாமுராய் கவசத்தின் தாக்கத்தைக் கொண்டிருந்தன. சாமுராய்களின் உண்மையான வரலாறு, மாற்றம் மற்றும் தழுவலை அடிப்படையாகக் கொண்ட கதையாகும். அவர்கள் இடைக் காலத்தில் கூலிக்குப் பணியாற்றும் வீரர்களாகத் தொடங்கி, பின்னர் படித்த அதிகாரிகளாகவும் கலையை ஆதரிப்பவர்களாகவும் உருவெடுத்தனர். ஆனால், சாமுராய்களின் கதை பல ஆண்டுகளாக கலை, திரைப்படங்கள், வீடியோ கேம்கள், கதைகள் மூலம் மக்களிடையே அவர்கள் மீதான ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. "சாமுராய்களை பற்றிய புதிய யோசனைகள் மற்றும் கதைகளை உருவாக்கப் பார்வையாளர்கள் உத்வேகம் பெறுவார்கள் என்று பிரிட்டிஷ் அருங்காட்சியகம் நம்புகிறது" என்று வரலாற்று ஆசிரியர் பக்லேண்ட் கூறுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cpv8n3xp41eo
  20. அண்ணை, நான் வேறு சிலரிடமும் 1 மலசலகூடம் கட்டுவதற்கான செலவுத் திட்டம் கேட்டுப் பார்க்கிறேன். காரைநகர் கொட்டப்புலம் பகுதி சற்று கல் உள்ள பகுதியாம், வேறு இடங்கள் மணல் தரை என கூறுகிறார்கள். 4 லட்சம் லாபம் உழைப்பதற்காக கேட்கிறார்கள், 2 லட்சம் தொடக்கம் 2.5 லட்சம் போதும் என பல தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் தெரிவித்தவர்கள். பிரதேச செயலக திட்டமிடல் உத்தியோகத்தர் வீட்டு உரிமையாளர்களிடம் 2 லட்சம் ரூபா(படிப்படியாக) தந்தால் அவர்களே ஆள் பிடித்து பொருட்கள் வாங்கி கட்ட முடியுமா எனக்கேட்டபோது சம்மதித்தவர்களாம். ஏனைய ஒப்பந்தகாரர்களின் விபரங்களைப் பார்த்தபின் வரும் வாரத்தில் ஒரு தெளிவான முடிவை எடுத்து பணிகளைத் தொடங்கலாம். @வாத்தியார் அண்ணை, @goshan_che அண்ணை, @குமாரசாமி அண்ணை, @Kavi arunasalam ஐயா உங்கள் கருத்துகளையும் சொல்லுங்க.
  21. நடப்பு ரி20 உலகக் கிண்ணத்தில் அதிகூடிய மொத்த எண்ணிக்கை குவித்த அயர்லாந்து இலகுவாக ஓமானை வீழ்த்தியது Published By: Vishnu 14 Feb, 2026 | 11:01 PM (நெவில் அன்தனி) ஓமானுக்கு எதிராக எஸ்.எஸ்.சி. மைதானத்தில் சனிக்கிழமை (14) நடைபெற்ற ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் சாதனைமிகு மொத்த எண்ணிக்கையைக் குவித்த அயர்லாந்து 96 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து 20 ஓவர்களில் 5 விக்கெட்களை மாத்திரம் இழந்து 235 ஓட்டங்களைக் குவித்து நடப்பு உலகக் கிண்ணத்தில் அதிகூடிய மொத்த எண்ணிக்கைக்கான சாதனையை நிலைநாட்டியது. ஓமானுக்கு எதிராக இலங்கை பெற்ற 225 ஓட்டங்கள் என்ற சாதனையை அயர்லாந்து முறியடித்தே புதிய சாதனை நிலைநாட்டியது. அத்துடன் ரி20 உலகக் கிண்ண வரலாற்றில் அயர்லாந்து பெற்ற அதிகூடிய மொத்த எண்ணிக்கையாகவும் இது பதிவானது. அயர்லாந்து துடுப்பாட்டத்தில் அசத்திய லோக்கன் டக்கர் 51 பந்துகளில் 10 பவுண்டறிகள், 4 சிக்ஸ்கள் அடங்கலாக 94 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். டக்கர், கெரத் டிலேனி ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 101 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். இது ரி20 உலகக் கிண்ண வரலாற்றில் 5ஆவது விக்கெட்டுக்கான அதிகூடிய இணைப்பாட்டமாகும். கெரத் டிலேனி 30 பந்துகளை எதிர்கொண்டு 3 பவுண்டறிகள்., 4 சிக்ஸ்களுடன் 56 ஓட்டங்களைக் குவித்தார். ஜோர்ஜ் டொக்ரெல் 9 பந்துகளில் 5 சிக்ஸ்களை வீளாசி 35 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் ஷக்கீல் அஹ்மத் 33 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தினார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஓமான் 18 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 139 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. 11ஆவது ஓவரில் ஓமான் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 97 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையில் இருந்தது. ஆரம்ப வீரர் ஆமிர் கலீம் 50 ஓட்டங்களையும் ஹமாத் மிர்ஸா 46 ஓட்டங்களையும் பெற்றதுடன் இருவரும் 3ஆவது விக்கெட்டில் 73 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை நல்ல நிலையில் இட்டனர். ஆனால், கடைசி 8 விக்கெட்கள் 42 ஓட்டங்களுக்கு சரிந்தன. பந்துவீச்சில் ஜொஷ் லிட்ல் 18 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் பெறி மெக்காத்தி 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மெத்யூ ஹம்ப்றீஸ் 27 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: லோக்கன் டக்கர் https://www.virakesari.lk/article/238665
  22. பாகிஸ்தான் வீரர் உஸ்மான் தாரிக்கை சமாளிக்க இந்தியா செய்ய வேண்டிய 'ஒரு விஷயம்' என்ன? பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் வித்யுத் சிவராமகிருஷ்ணன் முன்னாள் கிரிக்கெட் வீரர் 14 பிப்ரவரி 2026, 12:17 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த 2026 டி20 உலகக் கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடக்கப்போகிறது. இரண்டு அணிகளும் தங்களது முதல் இரு போட்டிகளையும் வென்று நம்பிக்கையோடு களமிறங்குவதால் நிச்சயம் ஒரு பரபரப்பான போட்டியை இவ்விரு அணிகளும் அரங்கேற்றலாம். எந்தவொரு இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலும் இரு அணிகளுக்குமே நிச்சயம் மிகப் பெரிய நெருக்கடி இருக்கும். உலகக் கோப்பை அரங்கில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தியிருக்கிறது. இம்முறையும் இந்திய அணியின் கையே ஓங்கியிருக்கும் என்று நான் நினைக்கிறேன். இந்திய அணிக்கு அனைத்து ஏரியாவுமே முழுமையாக இருக்கிறது. அதேசமயம் 'இழப்பதற்கு ஒன்றும் இல்லை' என்ற மனநிலையில் பாகிஸ்தான் அணி ஆடும்பட்சத்தில் அவர்களுக்கும் ஒரு நல்ல வாய்ப்பு அமையக்கூடும். அந்த அணியிலும் இளமையான, பயமற்ற வீரர்கள் இருக்கிறார்கள். பொதுவாக இலங்கை ஆடுகளங்கள் சுழற்பந்து வீச்சாளர்களுக்குச் சாதகமாக இருக்கும். இதுவுமே இந்தப் போட்டியின் முடிவில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இந்தியா கவனம் செலுத்தவேண்டிய இடங்கள் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான அணி இரண்டு போட்டிகளையும் வென்று இந்தத் தொடரைத் தொடங்கியிருக்கிறது. இருந்தாலும், ஒருசில விஷயங்களில் அவர்கள் கவனம் செலுத்தவேண்டும். இந்திய அணி மிகவும் அதிரடியாக ஆட நினைக்கிறது. அது அவர்களுக்கு சற்று பிரச்னைக்குரிய விஷயமாக மாறலாம். கடந்த இரண்டு போட்டிகளிலும் சில தருணங்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இந்திய அணி இழந்திருந்தது. அதனால், அவர்கள் சற்று கவனமாக இந்தப் போட்டியைக் கையாளவேண்டும். அதேபோல், ஃபினிஷிங்கில் அவர்கள் சற்று கவனம் செலுத்தவேண்டும். அங்கு பிரச்னை இருப்பதாகச் சொல்லமாட்டேன். அதேசமயம், அவர்கள் முழுமையன ஒரு செயல்பாட்டைக் கொடுக்கவில்லை. ஷிவம் துபே, அக்‌ஷர் பட்டேல், ரிங்கு சிங் ஆகியோர் கடைசி கட்டத்தில் என்ன செய்வார்கள் என்பது தெரியும். ஆனால், இந்த இரு போட்டிகளில் அவர்கள் அதை இன்னும் செய்யவில்லை. ஒருவகையில் இது நல்லது தான் என்று நினைக்கிறேன். ஏனெனில், போகப் போக தொடரின் முக்கியமான தருணத்தில் அவர்கள் தங்களின் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடும். கடைசி 5-6 ஓவர்களில் நெருக்கடியை சமாளித்து விளையாடுவது என்பது ஒரு கலை. அதை கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணி சிறப்பாகச் செய்திருக்கிறது. இந்த உலகக் கோப்பையிலும் அதை அவர்கள் செய்யத் தொடங்கவேண்டும். பொதுவாக இந்திய வீரர்கள் பந்தின் வேகத்தை நன்கு பயன்படுத்திக்கொண்டு ஆடும் திறன் பெற்றவர்கள். ஆனால், நமீபிய வேகப் பந்துவீச்சாளர்கள் மெதுவாகப் பந்துவீசி சவால் கொடுத்திருந்தனர். இந்திய பேட்டர்கள் அதற்குத் தகவமைத்துக்கொள்ளத் தவறவிட்டார்கள். பாகிஸ்தானுக்கு எதிராக இது நிகழாமல் பார்த்துக்கொள்வது அவசியம். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ரிங்கு சிங் அபிஷேக் இல்லாவிட்டால்.. இந்திய அதிரடி தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா உடல்நிலை பாதிப்பு காரணமாக நமீபியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடவில்லை. அவர் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடுவாரா என்பது இன்னும் சந்தேகமாகவே உள்ளது. ஒருவேளை இந்தப் போட்டியிலும் அபிஷேக் ஷர்மா ஆடவில்லை என்றால் இந்திய அணிக்கு அது மிகப் பெரிய இழப்பாக இருக்கும். ஆரம்பம் முதலே எதிரணி பந்துவீச்சாளர்கள் மீதும், எதிரணி மீதும் அவர் நெருக்கடியை ஏற்படுத்துவார். அந்த அதிரடியைப் பவர்பிளேவுக்குப் பின்பும் தொடர்கிறார். மிகவும் எளிதாக சிக்ஸர்கள் அடிக்கிறார். அவர் ஆடாமல் போனால் அது நிச்சயம் இந்திய அணிக்குப் பின்னடைவாக அமையும். மேலும், அது பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களுக்கும் சற்று நம்பிக்கையைக் கொடுக்கும். ஏனெனில் அவர் ஓப்பன்னிங்கில் ஆடும்போது 6 ஓவர்களில் 70-80 ரன்கள் வரை வந்துவிடும். அதனால், அவர் இல்லையெனில் அது பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். ஆசிய கோப்பை போட்டிகளில் அபிஷேக்கின் அதிரடி பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களுக்கு பெரும் தலைவலியாக இருந்தது. அதேசமயம் நமீபியாவுக்கு எதிரான போட்டியில் அதிரடியாக விளையாடி 8 பந்துகளில் 22 ரன்கள் அடித்தார் சஞ்சு சாம்சன். அவர், அபிஷேக் இடத்தை அவர் ஓரளவு நிரப்புவார் என்றாலும், இடது கை வீரர் அபிஷேக் ஏற்படுத்தக்கூடிய உளவியல் தாக்கத்தை இந்தியா தவறவிடும். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,நமீபியாவுக்கு எதிரான போட்டியில் அபிஷேக் ஷர்மா விளையாடவில்லை பாகிஸ்தான் ஆச்சர்யம் ஏற்படுத்தலாம் பாகிஸ்தான் ஒரு நல்ல அணி. அவர்களைக் குறைத்து மதிப்பிடவே முடியாது. முதல் போட்டியில் சேஸிங்கின்போது சற்று தடுமாறியிருந்தாலும், அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் அவர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். கடந்த 10 ஆண்டுகளில் அவர்கள் கணிக்க முடியாத ஒரு அணியாக இருந்திருக்கிறார்கள். எப்போது சிறப்பாக ஆடுவார்கள், எப்போது சொதப்புவார்கள் என்று சொல்ல முடியாது. அதனால் அந்த ஆச்சரியமளிக்கும் தன்மை ('surprise element') அந்த அணியிடம் எப்போதுமே இருக்கும். சாஹிப்சாதா ஃபரான் மிகச் சிறந்த ஃபார்மில் இருக்கிறார். பவர்பிளேவில் அதிரடியாக ரன் குவிக்கிறார். ஆரம்பத்தில் எதிரணி பந்துவீச்சாளர்கள் மீது அவர் நெருக்கடியை ஏற்படுத்துகிறார். அதை ஆசிய கோப்பையின்போதும் பார்த்தோம். அது அந்த அணிக்கு மிகவும் சாதகமான விஷயம். அதேசமயம் முதலில் பேட்டிங் செய்யும் அணி அதிக ரன்கள் எடுத்துவிட்டால், சேஸ் செய்வது பாகிஸ்தானுக்கு எளிதாக இருப்பதில்லை. இந்த இடத்தில் தான் பாபர் ஆசம் முக்கியத்துவம் பெறுவார். அவர் சமீபத்தில் அவ்வளவு சிறப்பான ஃபார்மில் இல்லை. அவர் அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதுவும் அவர்களுக்கு நம்பிக்கை கொடுக்கும். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,அமெரிக்காவுக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் உஸ்மான் தாரிக் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார் உஸ்மான் தாரிக் இந்தியாவுக்கு சவாலா? இந்த உலகக் கோப்பை தொடங்கப்பட்டதில் இருந்தே பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் உஸ்மான் தாரிக் பெரும் பேசுபொருளாக இருந்து வருகிறார். அவரது 'பௌலிங் ஆக்‌ஷன்' பற்றி நிறைய கேள்விகள் எழுப்பப்பட்டிருக்கின்றன. நிறைய விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. என்னைப் பொறுத்தவரை உஸ்மான் தாரிக்கின் 'பௌலிங் ஆக்‌ஷன்' சரியாகத்தான் இருக்கிறது. அவர் 'த்ரோ' செய்யவில்லை. அது 'சக்கிங்' கிடையாது. இதுபோன்ற பந்துவீச்சாளர்களை, குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் அடிப்பது சற்று கடினமாக இருக்கும். 'அண்டர் தி பால் எலிவேஷன்' கிடைப்பது பேட்டர்களுக்கு சற்று சிரமமாக இருக்கும். பொதுவாக இந்த ஃபார்மட்டில் பேட்டர்கள் பந்துக்கு கீழே சென்று ஆடவிரும்புவார்கள். ஆனால், இவர் பந்துவீச்சில் அது மிகவும் கடினம். அதிலும் பௌன்ஸ் குறைவான ஆடுகளம் என்றால் அவர் பெரும் தாக்கம் ஏற்படுத்தக்கூடும். ஆனால், இந்திய அணி இவருக்கு ஏற்ற திட்டங்கள் வகுத்துக் களமிறங்குவார்கள் என்று நம்புகிறேன். அவருக்கு எதிராக முற்றிலும் 'டிஃபன்ஸிவாக' ஆடுவார்கள் என்று எண்ணவில்லை. அவர் பந்துவீச்சில் எப்படி ஸ்கோர் செய்யலாம் என்று நன்கு திட்டமிட வேண்டும். உஸ்மான் தாரிக் மீது நெருக்கடியை ஏற்படுத்த நல்ல பவர்பிளே தேவை. பவர்பிளேவில் இந்திய அணி 2 அல்லது 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டால், அதன்பிறகு தாரிக் போன்ற ஒரு பந்துவீச்சாளர் வந்து ஆதிக்கம் செலுத்தக்கூடும். அப்படியில்லாமல் பவர்பிளேவில் 55/0, 60/0 என்பதுபோன்ற ஸ்கோர் எடுத்தால், உஸ்மான் தாரிக் பந்துவீச வரும்போதே அவருக்கு நெருக்கடி ஏற்பட்டுவிடும். இதனால்தான், அபிஷேக் ஷர்மா இல்லாதது பின்னடைவு என்று நான் கருதுகிறேன். இருந்தாலும், நிச்சயம் இந்திய வீரர்கள் தாரிக்கின் வீடியோக்களைப் பார்த்திருப்பார்கள். அதனால் நல்ல திட்டத்தோடு வருவார்கள். சாதகம் யாருக்கு? பெரிய போட்டிகளில் மிகச் சிறப்பாக செயல்பட்ட வரலாறு இந்திய அணியிடம் இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளில், மிகமுக்கியமான போட்டிகளில் அவர்கள் மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அதைச் சீராகச் செய்திருக்கிறார்கள். ஆசிய கோப்பையில் துபை போன்ற மெதுவான ஆடுகளத்திலும் கூட இந்த இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. ஒருவேளை அபிஷேக் ஷர்மா ஆடாவிட்டால், ஃபரான் போன்ற பேட்டரும், உஸ்மான் தாரிக் போன்ற பந்துவீச்சாளரும் தங்களின் ஆகச்சிறந்த செயல்பாட்டைக் கொடுத்தால் இந்தப் போட்டியில் பாகிஸ்தான் பலம் கூடும். இலங்கையில் ஆடுவது ஒருவேளை சற்று சவால் கொடுக்கலாம். ஆஸ்திரேலியா - ஜிம்பாப்வே ஆட்டத்தில் ஆடுகளம் மெதுவாக இருந்தது. அதனால், இந்திய அணி ஆடுகளத்தின் தன்மையை அறிந்து அதற்கேற்ப எவ்வாறு தங்களைத் தகவமைத்துக்கொள்கிறார்கள் என்பதைப் பார்க்கவேண்டும். (இந்தக் கட்டுரையை எழுதிய வித்யுத் சிவராமகிருஷ்ணன், தமிழ்நாடு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்காக விளையாடியிருக்கிறார். 2000-ல் அண்டர் 19 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இவர் இடம்பெற்றிருந்தார். தற்போது வர்ணனையாளராக இருக்கிறார்.) - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c1w5q2gw9n1o
  23. சிறுநீரகப் பாதிப்பு : ஆரம்பத்திலேயே கண்டறிவதன் அவசியத்தை வலியுறுத்தும் சுகாதாரத் துறை 14 Feb, 2026 | 03:36 PM இலங்கையில் உள்ள சிறுநீரக நோயாளர்களில் சுமார் 10 சதவீதமானோர் தமக்கு அந்த நோய் இருப்பதனை அறியாமலேயே இருப்பதாக நாட்டின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிறுநீரகவியல், டயாலிசிஸ் மற்றும் மாற்று அறுவை சிகிச்சைக்கான தேசிய நிறுவனத்தின் (National Institute for Nephrology, Dialysis and Transplantation) விசேட நிபுணர் வைத்தியர் அர்ஜுன மாரசிங்க இது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார். உயர் இரத்த அழுத்தம் அல்லது நீரிழிவு நோயை முறையாகக் கட்டுப்படுத்தாத நபர்களுக்கு சிறுநீரக நோய் ஏற்படும் அபாயம் மிக அதிகமாக உள்ளது. பல நோயாளர்கள் தமக்கு நோய் இருப்பதை அறியாமல் இருப்பதாலும், நோய் முற்றிய பின்னரே அதனைத் கண்டறிவதாலும், அவர்களுக்கான சிகிச்சைகள் மிகவும் சிக்கலானதாக மாறுகின்றன. அதிக கொலஸ்ட்ரால் அல்லது இரத்தத்தில் அதிக சர்க்கரை அளவு உள்ளவர்கள் வழக்கமான சிறுநீரகப் பரிசோதனைகளை (Kidney Screenings) மேற்கொள்ள வேண்டும். https://www.virakesari.lk/article/238642
  24. "கணவரின் இறுதிச்சடங்குக்கு கூட செல்லவில்லை" - பிரிட்டனின் புதிய சட்டத்தால் இலங்கை மக்கள் சந்திக்கும் சவால்கள் கட்டுரை தகவல் பிபிசி சிங்கள மொழி சேவை‎ 14 பிப்ரவரி 2026, 02:56 GMT வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் "நாங்கள் இங்கே வந்தபோது 5 ஆண்டுகள் கழித்து குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என முடிவெடுத்து இருந்தோம். ஆனால் நிரந்தர குடியிருப்பு உரிமை பெற 10 முதல் 15 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்றால் குழந்தை பெற வேண்டும் என்கிற எங்கள் கனவை நிறைவேற்ற முடியாமல் போய்விடும்," என்கிறார் தற்போது பிரிட்டனில் வசித்து வரும் மகேஷ் கெலும். பிரிட்டனின் விசா விதிகளில் புதிய மாற்றங்கள் முன்மொழியப்பட்டுள்ள நிலையில் அங்கு தங்கியிருக்கும் வெளிநாட்டினருக்கு இதனால் ஏற்படும் தாக்கங்கள் பற்றி பிபிசி சிங்கள மொழி சேவையிடம் அவர் விளக்கினார். தற்போது வெளிநாட்டினருக்கு வழங்கப்பட்டு வரும் காலவரையற்ற குடியிருப்புக்கான அனுமதி (ILR) பெறுவதற்கான குறைந்தபட்ச கால அளவை 5 ஆண்டிலிருந்து 10 ஆண்டுகளாக உயர்த்தலாம் என பிரிட்டன் உள்துறை செயலர் முன்மொழிந்துள்ளார். இந்த முடிவு பிரிட்டனில் உள்ள வெளிநாட்டினரை பாதிக்கும் எனக் கூறப்படுகிறது. கடந்த 2021ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை பிரிட்டனுக்கு குடிபெயர்ந்துள்ள சுமார் 26 லட்சம் பேர் இந்தப் புதிய சட்டத்தால் பாதிக்கப்படும் நிலையில் உள்ளனர். ஆனால் இந்த விதிகள் ஏற்கெனவே நிரந்தர வேலைவாய்ப்பு உரிமம் பெற்றவர்களுக்குப் பொருந்தாது. காலவரையற்ற குடியிருப்புக்கான அனுமதியின் (ஐ.எல்.ஆர்) கீழ் ஒருவர் பிரிட்டனில் நிரந்தரமாக வசிக்கலாம், கட்டுப்பாடுகளின்றி வேலை செய்யலாம், பொது சேவைகளைப் பெற்றுக் கொள்ளலாம். பிரிட்டன் குடியுரிமை பெறுவதற்கும் இது முக்கியமான படி. தற்போது நடைமுறையில் உள்ள சட்டத்தின்படி, இந்த வசதியை 5 ஆண்டுகளில் பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள மாற்றங்களின்படி, இந்த காலவரம்பு 10 ஆண்டுகளாக உயர்த்தப்படலாம். பட மூலாதாரம்,Mahesh Kelum படக்குறிப்பு,மகேஷ் கெலும் கடந்த 2 ஆண்டுகளாகத் தனது மனைவியுடன் பிரிட்டனில் வசித்து வருகிறார். 'ஐ.எல்.ஆர் இல்லாமல் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது' பிரிட்டன் அரசின் இந்தப் புதிய விதிகளால் பாதிக்கப்படுபவர்களில் 2021ஆம் ஆண்டுக்குப் பிறகு அங்கு குடிபெயர்ந்த இலங்கை குடிமக்களும் அடங்குவர். புதிய மாற்றங்கள் குறித்து கவலை தெரிவிக்கும் மக்களிடம் பிபிசி சிங்கள மொழி சேவை பேசியது. மகேஷ் கெலும் கடந்த 2 ஆண்டுகளாகத் தனது மனைவியுடன் பிரிட்டனில் வசித்து வருகிறார். இங்கு குடிபெயர்ந்த பிறகு ஐ.எல்.ஆர் பெற்றவுடன் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்கிற முடிவில் இருவரும் இருந்தனர். ஆனால் இந்தப் புதிய சட்டம் அதற்குத் தடையாக அமையலாம் என அஞ்சுகின்றனர். "இங்கு வந்த பிறகு, நிரந்தர குடியுரிமை பெறாமல் குழந்தை பெற்றுக்கொள்வது கடினம் என்பதை உணர்ந்தோம். என் மனைவியின் பணிச் சூழலும் அதற்கு ஒரு காரணம், அவர் வாரத்தில் 6 நாட்கள் வேலை செய்கிறார், காலை 7 மணி தொடங்கி இரவு 8.45 வரை வேலை செல்லும்" என்று அவர் தெரிவித்தார். இத்தகைய பணிச் சூழலில் குழந்தையை வளர்ப்பது மிகவும் கடினம் என்பதால் 5 ஆண்டுகள் கழித்து குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என நினைத்திருந்தோம் எனக் குறிப்பிடுகிறார் மகேஷ். இந்த மாற்றங்களால் தனது எதிர்காலம் நிலையற்றதாக இருப்பதாகக் கூறும் மகேஷ், "இங்கே ஸ்பான்சர்ஷிப் கிடைப்பது மிகவும் கடினம். நீண்ட காலம் ஸ்பான்சர்ஷிப்பின் கீழ் இருப்பது நடைமுறையில் கடினமானது" எனத் தெரிவிக்கிறார். பட மூலாதாரம்,Kushani Suraweera படக்குறிப்பு,கடந்த 2023ஆம் ஆண்டு தனது மூன்று குழந்தைகளுடன் பிரிட்டனுக்கு குடிபெயர்ந்த குஷானி சுரவீரா 'நான் அனைத்தையும் தனியாக எதிர்கொள்ள வேண்டும்' கடந்த 2023ஆம் ஆண்டு தனது மூன்று குழந்தைகளுடன் பிரிட்டனுக்கு குடிபெயர்ந்த குஷானி சுரவீரா, விருந்தோம்பல் துறையில் மூத்த அலுவலராக வேலை செய்து வருகிறார். தனது குழந்தைகளுக்கு சிறந்த எதிர்காலத்தை வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் பிரிட்டனுக்கு குடிபெயர்ந்த அவர் நிரந்தர குடியிருப்பு உரிமை பெறும் காலம் நீட்டிக்கப்பட்டால் குழந்தைகளின் கல்விக்கான செலவுகளைச் சமாளிப்பது கடினமாகிவிடும் என்கிறார். "ஐந்து ஆண்டுகள் என்பதை 10 ஆண்டுகளாக மாற்றினால் பொருளாதார ரீதியாகவும் சரி மனநல ரீதியாகவும் சரி நான் நிறைய பிரச்னைகளைச் சந்திக்க நேரிடும். எங்கள் திட்டப்படி 5 ஆண்டுகளின் ஐ.எல்.ஆர் கிடைத்துவிடும் என்பதால் எனது கணவர் இலங்கையிலே இருந்தாலும் நாங்கள் இங்கு வந்தோம். நாங்கள் பேசி குழந்தைகளுக்கு சிறப்பானதைத் திட்டமிட்டோம். ஆனால் இறுதியில் அந்த வாய்ப்பு போய்விட்டது, இந்த 5 ஆண்டுகள் பத்தாக மாறினால் இவை அனைத்தையும் நான் தனியாகவே எதிர்கொள்ள வேண்டும்," என்றும் அவர் குறிப்பிட்டார். பிரிட்டனில் 5 ஆண்டுகள் இருந்த பிறகு இந்த வசதி தனக்குக் கிடைத்தால் தனது குழந்தைகள் பிரிட்டன் குழந்தைகள் செலுத்தும் அதே கட்டணத்தில் கல்வி பெற முடியும் என்கிறார் குஷானி சுரவீரா. அவ்வாறு நடக்கவில்லை என்றால் தனக்கு மிகப்பெரிய பொருளாதார பிரச்னை ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார். பட மூலாதாரம்,Kushani Suraweera படக்குறிப்பு,குஷானி சுரவீரா இலங்கையை விட்டுக் கிளம்பும் முன்பு விமான நிலையத்தில் எடுத்த புகைப்படம் 'கணவரின் இறுதிச் சடங்கிற்கு கூட செல்ல முடியவில்லை' குஷானி மற்றும் அவரது மூன்று குழந்தைகள் பிரிட்டனில் வசித்தபோது இலங்கையில் தொழில் செய்து வந்த அவரின் கணவர் மாரடைப்பால் உயிரிழந்தார். ஆனால் விசாவில் பிரச்னை ஏற்பட்டதால் தனது கணவரின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில்கூட தன்னால் கலந்துகொள்ள முடியவில்லை என்று கவலையுடன் தெரிவிக்கிறார். "நாங்கள் அவரின் இறுதிச் சடங்கிற்குச் செல்ல முடியவில்லை. அப்போது எங்களின் விசாவை புதுப்பிக்க வேண்டிய நேரமாக இருந்ததுதான் அதற்குக் காரணம். விசா புதுப்பிக்கும் காலத்தில் நாட்டைவிட்டு வெளியேறினால் விசா ரத்து செய்யப்படும். அதற்குப் பிறகு புதிய விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டும். புதிய சட்டத்தின்படி நாங்கள் உடன் யாரையும் அழைத்து வர முடியாது. அதனால்தான் நாங்கள் யாரும் எனது கணவரின் இறுதிச் சடங்கிற்குக்கூட செல்ல முடியவில்லை," என்று தெரிவித்தார் குஷானி. இந்தச் சூழலில் தற்போது பிரிட்டனில் வசிக்கும் வெளிநாட்டினரை பாதிக்காதவாறு புதிய சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றும் குஷானி கோரிக்கை வைக்கிறார். 'வேறு நாடுகளைத் தேடும் குழந்தைகள்' "இந்தச் சட்டம் தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்ட இரவு என் குடும்பத்தில் யாருக்குமே தூக்கம் வரவில்லை. அதிகாலை 4 மணி வரை விழித்திருந்த குழந்தைகள், நாம் திரும்பிச் செல்ல வேண்டுமா என்று கேட்டனர்," என பிபிசி சிங்கள மொழி சேவையிடம் தெரிவித்தார் காஞ்சனா ரனசிங்கே. இவர் கடந்த 4 ஆண்டுகளாக பிரிட்டனில் வசித்து வருகிறார். தனது மூன்று குழந்தைகள் மற்றும் கணவருடன் பிரிட்டனில் வசித்து வரும் காஞ்சனா, இந்தச் சட்டம் தொடர்பாக கேள்விப்பட்டதில் இருந்தே இதுவொரு உளவியல் சுமையாக இருந்து வருவதாகக் கூறுகிறார். தற்போது சுகாதாரத் துறையில் வேலை செய்து வரும் காஞ்சனா, இந்தப் புதிய சட்டத்தின் கீழ் ஐ.எல்.ஆர் வசதி செயல்பாட்டுக்கு வரும் காலம் 15 ஆண்டுகளாக நீட்டிக்கப்படும் என கருதுகிறார். பட மூலாதாரம்,Kanchana Ranasinghe படக்குறிப்பு,காஞ்சனா ரனசிங்கே கடந்த 4 ஆண்டுகளாக பிரிட்டனில் வசித்து வருகிறார். "எனது மூத்த மகள் பல்கலைக் கழகத்திற்குச் சென்றால் 2029இல் நாங்கள் மிகப்பெரிய பிரச்னையைச் சந்திப்போம். ஏனெனில் அவரின் விருப்பப்படி மருத்துவராக வேண்டுமென்றால் ஐ.எல்.ஆர் வசதி இல்லாமல் நாங்கள் மிகப்பெரிய தொகையைச் செலுத்த வேண்டியிருக்கும்," என்றும் அவர் தெரிவித்தார். இந்த அறிவிப்பு தங்களின் குழந்தைகளை கடுமையாகப் பாதித்துள்ளது எனக் குறிப்பிடும் அவர், "இந்த அறிவிப்பு வந்த அன்று இரவே எனது குழந்தைகள் என்னிடம் வந்து, 'அம்மா, எங்களுக்கு இலங்கை பிடிக்கும். எங்களுக்குச் சென்று திரும்ப வேண்டும். ஆனால் நாம் இலங்கையில் குடியேற முடியாது என அவர்கள் கூறுகிறார்கள்' எனத் தெரிவித்தனர். நாம் வேறு ஏதேனும் நாட்டுக்குச் செல்ல முடியுமா என்றும் குழந்தைகள் இணையத்தில் தேடி வருகின்றனர்" என்றும் கூறினார். பிரிட்டன் அரசிடம் எதிர்பார்க்கப்படும் நிவாரணம் என்ன? இந்தச் சூழலில் தற்போது பிரிட்டனில் வசிக்கும் இலங்கை குடிமக்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் சட்ட நிவாரணம் பெற ஒருங்கிணைந்து முயன்று வருகின்றனர். அதன் இணை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான சசிந்தா ஹெட்டிதாந்திரி பிபிசி சிங்கள சேவையிடம் பேசுகையில், "நாங்கள் பிரிட்டனில் உள்ள வெளிநாட்டினரைத் தவிர்த்துவிட்டு, இந்தச் சட்டம் அமலுக்கு வருகின்ற தேதியிலிருந்து செயல்படுத்துமாறு பிரிட்டன் அரசிடம் கோரிக்கை வைத்து வருகிறோம்" எனத் தெரிவித்தார். இந்தச் சட்டம் மக்களைப் பாதிக்கக்கூடாது எனத் தெரிவித்த அவர், "இந்தச் சட்டம் ஏப்ரல் 1ஆம் தேதி அமல்படுத்தப்பட்டால் அதற்கு முன்னர் நாட்டுக்குள் வந்தவர்களுக்குப் பழைய விதிகள் பொருந்த வேண்டும். இந்தப் புதிய சட்டம் அமலுக்கு வந்த பின்னர் நாட்டுக்குள் வருபவர்களுக்கு இந்தச் சட்டம் பொருந்துவதில் எந்தப் பிரச்னையும் இல்லை" எனக் குறிப்பிட்டார். எனினும், குறிப்பிட்ட மாற்றங்கள் இல்லாமல் புதிய சட்டம் அமலானால் சட்ட நிவாரணம் பெறுவதற்குத் தேவையான வழிகாட்டுதல்கள் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். புதிய சட்டத்தில் முன்மொழியப்பட்ட மாற்றங்கள் என்ன? தற்போது முன்மொழியப்பட்டுள்ள மாற்றங்களின்படி, ஐ.எல்.ஆர் பெறுவதற்கான காத்திருப்பு காலம் 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும். எனினும் பல்வேறு தகுதிகளின் அடிப்படையில் இந்தக் காலம் நீட்டிக்கப்படலாம் அல்லது குறைக்கப்படலாம். குறைந்தபட்சம் 12 ஆண்டுகளாக அரசின் பலன்களைப் பெற்று வரும் சட்டபூர்வ குடியேறிகள் 15 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேற முடிவெடுத்ததைத் தொடர்ந்து, சுகாதார விசா மற்றும் சோஷியல் கேர் விசா மூலம் பிரிட்டன் வந்தவர்கள் ஐ.எல்.ஆர் பெற விண்ணப்பிப்பதற்கு 15 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். இது முன்னர் 5 ஆண்டுகளாக இருந்தது. பன்னிரண்டு மாதங்களுக்கும் மேலாக அரசின் பலன்களைப் பெற்று வரும் புலம்பெயர்ந்தோர், குடியிருப்பு உரிமை பெற 20 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். இது தற்போது நடைமுறையில் இருப்பதைவிட 4 மடங்கு அதிகம். ஐரோப்பாவிலேயே அதிகமான காத்திருப்பு காலமாக இது உள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4gq5v92nvqo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.