Everything posted by நியாயம்
-
உச்சம் தொட்ட மரக்கறி விலைகள்!
எனது வினாவும் மக்களினால் தமது காய்கறி தேவையின் குறிப்பிடத்தக்களவு பகுதியை வீட்டுதோட்டம் மூலம் பூர்த்தி செய்யமுடியாதா?
-
க.பொ.த உயர்தர பரீட்சை சம்பந்தமான செய்திகள்
ஒரு சிலரின் பொறுப்பற்ற செயலால் எத்தனை பேருக்கு சிரமம். சோதனை எடுக்கும் பிள்ளைகள் தான் பாவம்.
-
செங்கடலிற்கு ஹெளத்தி கிளர்ச்சியாளர்களிற்கு எதிராக கப்பலை அனுப்புவதா ? ஆராய்கின்றது இலங்கை கடற்படை
சாமி, மக்கள் நலனில் அரசுக்கு அக்கறை என்றால் நாட்டின் சொத்துக்களை தின்று ஏப்பம் விட்ட திருட்டு கூட்டத்தை அடக்கலாம். இதைவிடுத்து இவ்வளவு கடல் மைல் தூரங்களுக்கு படையை அனுப்ப தேவை இல்லை.
-
செங்கடலிற்கு ஹெளத்தி கிளர்ச்சியாளர்களிற்கு எதிராக கப்பலை அனுப்புவதா ? ஆராய்கின்றது இலங்கை கடற்படை
கடற்படையினருக்கு தேவையான எரிபொருள், உணவு, ஆயுத வழங்கல், இதர தேவைகள் எல்லாம் யாரோ கொடுக்கப்போகின்றார்கள். இங்கே நங்கூரமிட்டுள்ள கப்பலையும், வெட்டியாக உள்ள கடற்படையினரையும் அங்கு அனுப்புகின்றார்கள் போல. அரசுக்கு பொருட்செலவு ஏற்படுமா என்று தெரியவில்லை. ஆனால், தேவையில்லாத எதிரிகளை உருவாக்குகின்றார்கள். ஐநா படைகளில் பங்குபற்றியது போல இது எடுக்கப்படமுடியாது என நினைக்கின்றேன்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
எனக்கும் வேலை செய்கின்றது
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
இப்போது காணொளி தோன்றுகின்றது. நன்றி! யூரியூப்பில் இணைப்பு முகவரி எடுக்கும்போது முன்பு நகல் செய்தேன். இப்போது வட்சப் பகிர்வு இணைப்பை சொடுக்கி அதை இங்கு இணைக்கும் போது காணொளி தோன்றுகின்றது. முதலாவது முறையில் முகவரி சுருக்கப்பட்டு உள்ளதோ தெரியாது.
-
பில் கிளின்டன் முதல் இளவரசர் ஆண்ட்ரூ வரை - பாலியல் விவகாரத்தில் அடிபடும் பிரபலங்கள்!
அவர் தற்கொலை செய்யவில்லை கொலை செய்யப்பட்டார் எனவும், அதற்கு முன்பும் தற்கொலை முயற்சி செய்யவில்லை அவர் தாக்கப்பட்டார் எனவும் தாம் சந்தேகிப்பதாக அவரது ஒரேயொரு சகோதரர் கூறுகின்ற உரையாடல் கேட்டேன். எது உண்மை எது பொய் என்று கடவுளுக்குத்தான் வெளிச்சம்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
அதைத்தான் ஐயா நானும் செய்கின்றேன். நீங்கள் இணைத்தால் காணொளி தோன்றுகின்றது. நான் இணைத்தால் வெறும் இணைப்பு மட்டுமே காண்பிக்கின்றது. உங்கள் கை ராசியான கைபோல. அல்லது இணைப்பை கொடுக்கும்போது ஏதாவது மந்திரிக்க வேண்டுமோ? அல்லது நான் கைத்தொலைபேசி ஊடாக கருத்து பதிவதால் காணொளி ஒளிந்து மறைகின்றதோ?
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
யூரியூப் காணொளிகளை இங்கு நேரடியாக இணைக்க முடியுமா? இணைக்கலாம் என்றால் அந்த மந்திர வித்தையை யாராவது சொல்லி தாருங்கள்.
-
செங்கடலிற்கு ஹெளத்தி கிளர்ச்சியாளர்களிற்கு எதிராக கப்பலை அனுப்புவதா ? ஆராய்கின்றது இலங்கை கடற்படை
உள்ள பிரச்சனைகள் போதாது என்று.. வேலியில போற ஓணானை வேட்டிக்குள் பிடிச்சு விட்டால்..
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
வாஸ்தவம் தான். இணைய உலகில் புகுந்த ஆரம்பத்தில் நாங்கள் ஒரு மின்னஞ்சலை அனுப்பிவிட்டு அது போய் சேர்ந்துவிட்டது எனும் (செண்ட்) செய்தி காண்பிக்கும்வரை நீண்டநேரம் பொறுமையுடன் பார்ப்போம். டயல் அப் இண்டர்நெட் நிலவியபோது பலவிதமான சத்தங்கள் எல்லாம் நெட்வேர்க் ஊடாக கேட்க ஒரு பக்கத்தை பார்ப்பதற்கும், புரட்டுவதற்கும் இடையில் அது லோட் செய்யும்போது அந்த இடைப்பட்ட நேரத்தில் பலவித காரியங்களை செய்துவிடுவோம். இப்போது எல்லாம் வேகமாகத்தான் உள்ளது. இருபத்து ஐந்து வருடங்கள் முன்புடன் ஒப்பிடும்போது இப்போது அசுரவேகம் என கூறவேண்டும். இருந்தும் என்ன பயன்? எமது வாழ்க்கை தரம் முன்னேறி உள்ளதா? உலகில் அமைதி நிலவுகின்றதா? மனிதன் முன்பை விட மகிழ்ச்சியாக வாழ்கின்றானா? எல்லாம் சிந்திக்கவேண்டிய விடயங்கள். இப்போது ஒரு சில நிமிடங்களில் எவ்வளவோ தகவல்களை பரிமாறுகின்றோம், தரவேற்றுகின்றோம், இறக்குகின்றோம். தகவல்கள் அசுர வேகத்தில் பரிமாறப்படுகின்றன. இருந்தும் என்ன பயன்? பல வினாக்கள் எழுகின்றன.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
மெதுவாக இயங்குவதும் நல்லதுதான். கருத்தை எழுதும்போது கொஞ்சம் நிதானமாக சீர்தூக்கி சிந்தித்து எழுதுவதற்கு வாய்ப்பு கிடைக்கும். ரொம்ப வேகமாக இயங்கி என்னதான் எழுதி கிழிக்கப்போகின்றோம்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் @ஏராளன் 🎂🎈
-
துவாரகா உரையாற்றியதாக...
கார்த்திக் அவர்களின் கருத்துக்களை கூறுகின்ற அவர் பேட்டியுள்ள காணொளிகளில் அவரை மட்டம் தட்டியும், அவமதித்தும் பல பின்னூட்டங்கள் வைக்கப்படுகின்றன. துவாராகா என தன்னை அடையாளப்படுத்திய பெண்மணி பற்றிய தற்போதைய தகவல் என்ன? அவர் மீது ஆள்மாறாட்ட குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும், பின்னர் கடத்தப்பட்டதாகவும் செய்திகள்/கருத்துக்கள் முன்பு வந்தன.
-
துவாரகா உரையாற்றியதாக...
இதுகள் பெரிய பொலிஸ் பிரச்சனையாக வருமே. அதுவும் சுவிஸ் பொலிஸ் பொல்லாதது என அறிந்தேன். அந்தந்த நாட்டில் உள்ளவர்கள் சட்டத்தை தம் கையில் எடுக்காமல் தத்தம் நாட்டு ஒழுங்குகளுக்கு அமைய செயற்படுவது எல்லோருக்கும் நல்லது.
-
துவாரகா உரையாற்றியதாக...
இந்த காணொளியில் கூறப்படுவது என்ன?
-
துவாரகா உரையாற்றியதாக...
மேற்கண்ட மாவீரர் தின உரையை நானும் கேட்டேன். நீங்கள் விசயம் அறிந்தவர்கள் தான் எனக்கு அறிவூட்ட வேண்டும். நேற்று ஓர் பாடல் கேட்டேன். பாடுபவரும் ஒரு தலைவரின் புதல்விதான். இவர் ஏதாவது திட்டங்கள் முன்னெடுத்தால் பங்களிப்பது பற்றி பரிசீலிக்கலாம். https://youtu.be/r-Nw7HbaeWY?si=GJOVTNgjYzdhDaHD தலைவர் தமையன் புதல்வனின் பேட்டி அவர் கதைத்த விதம் மனதை ஈர்த்துள்ளது. எவ்வளவு பொறுப்பாக, பணிவுடன், அழகு தமிழில் பேசுகின்றார்!
-
துவாரகா உரையாற்றியதாக...
அந்தப்பிள்ளை வேலுப்பிள்ளை பிரபாகரனை எப்படி உச்சரிக்கின்றது என கேட்கும் முன்னரே காணொளி காணாமல் போய்விட்டதே. அந்தக்குரலை மீண்டும் கேட்க இனி ஒரு வருடம் பொறுக்க வேண்டுமா?
-
துவாரகா உரையாற்றியதாக...
இவர் தலைவர் தமையனது புதல்வரா? சார்ஸ் அன்ரனியின் சாயல் உள்ளது. அருமையான காணொளி. நேரக்கரம் மீடியா/சாந்தி அக்காவிற்கு நன்றி!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் பையன்! 🎂🎈
-
சகோதரி யாயினியின் தந்தை காலமானார்
ஆழ்ந்த அனுதாபங்கள்! 🙏
-
திண்ணை
முன்பு திண்ணை, இனி நாற்சந்தியில் கேட்பதற்கு பெயர் ரகசியமா? தனிமடல் எதற்கு உள்ளது? திண்ணை அனைவரினதும் பார்வைக்கு திறந்து விடுவது புதிய கருத்தாளர்கள் இணைவதை ஊக்குவிக்கும் என நினைக்கின்றேன். யாழ் இணையத்தை முன்னேற்றுவதற்கு தேவையான விளம்பரங்களையும் அவ்வப்போது திண்ணையில் காண்பிக்கலாமே.
- பெயர் மாற்றங்கள்.
-
பெயர் மாற்றங்கள்.
வணக்கம் இணையவன், எனது பெயரை நியாயம் என்று மாற்றி தர முடியுமா? கருத்துக்களத்தை பார்வையிட்ட சமயம் ஒரு உரையாடலுக்கு பதில் எழுத ஒரு பெயரை உருவாக்கினேன். இந்தப்பெயர் இப்போது சற்று நீண்டபெயராக தோன்றுவதால் அதை சுருக்க விரும்புகின்றேன். நன்றி!
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
பல விடயங்களில் இஸ்ரேல் - இலங்கை பிணக்குகள் ஒற்றுமைப்பட்டதும் சமாந்தரமானதும் ஆகும். இதை இங்கே ஒரு சிலர் புரிந்து அந்த கோணத்தில் சிந்திக்கின்றார்கள். எமக்கு இலங்கை/தாயக பிரச்சனைகள், போர், அவலங்கள், சாவுகள் நேரடி அனுபவம் உள்ளதால் இஸ்ரேல் பாலஸ்தீனம் பிரச்சனை சற்று ஆழமாக நோக்கவும், கிரகிக்கவும் முடிகின்றது. நேரடி அனுபவம் இல்லாதவர்கள், போரின் வலி தெரியாதவர்கள், புத்தகங்களை வாசித்தும், சமூக ஊடகங்களை பார்த்தும் செய்திகள் பார்ப்பவர்கள் நிச்சயம் மாற்று கருத்தை கூறுவார்கள்.