Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+
  • Joined

  • Last visited

Everything posted by நன்னிச் சோழன்

  1. இது பழங்குடிகளான இருளர்கள் இனத்தால் பாவிக்கப்பட்ட கத்திவாள்(முன்) மற்றும் வாளாகும்(பின்):
  2. "தியாக தீபம்" அன்னை பூபதியின் நினைவாலயம் "வதைபட்டுக் கிடந்தவரை வாழ்விக்க வந்த படை வதைசெய்தல் கண்டு மனம் பொங்கினாள் - அவரை வழியனுப்பி வைத்திடவே முந்தினாள்" இதற்குள் அன்னாரின் பூதவுடல் உள்ளது.
  3. வேவுப்புலி லெப் கேணல் சிவகாமி மற்றும் அவருடன் வீரச்சாவடைந்த 5 போராளிகளுக்குமான நினைவுக்கல் மட்டு தென் தமிழீழத்தில் வீரச்சாவடைந்த வேவுப்புலி லெப் கேணல் சிவகாமி மற்றும் அவருடன் வீரச்சாவடைந்த ஐந்து போராளிகளுக்குமாக அமைக்கப்பட்டிருந்த வீரவணக்க நினைவாலயம்.
  4. மேஜர் ஜோன்சன் உள்ளிட்ட 29 போராளிகளின் நினைவாலயம் மட்டு படிமக்காலம்: 25/08/2003 25/08/1995 அன்று அம்பிளாந்துறையிலிருந்த விசேட அதிரடிப்படையினரின் படைமுகாம் தகர்ப்பின் போது வீரச்சாவடைந்த மேஜர் ஜோன்சன் உள்ளிட்ட 29 போராளிகளின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுச் சின்னம்.
  5. லெப். கேணல் எழிலவன் எ ஜீவனின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளின் போது 6/02/2002 இலுப்படிச்சேனை "உச்சிவரை முகர்ந்து உயிர் நனைய உறவாடிய உதயத்தின் காதலருக்காக" அன்னாரின் சிலையை அவரது தாயார் திறந்துவைக்கிறார்
  6. வவுணதீவு வெற்றி விழாவின் போது தரவை 06/03/2003 'லெப். கேணல் மதனாவின் திருவுருவப்படம் திரை நீக்கம் செய்யப்படுகிறது. சுற்றிவர பின்னாளில் வஞ்சகம் இழைத்தவர்கள் நிற்கின்றனர்'
  7. கரும்புலிகள் வீரவணக்க நினைவாலயம் சம்பூர், திருகோணமலை திருமலை மாவட்ட கரும்புலிகளுக்கான வீரவணக்க நினைவாலயம் தலைநகர் திருகோணமலையின் அரசியல்துறைப் பொறுப்பாளர் திரு எழிலன் அவர்களால் திறந்து வைக்கப்படுகிறது (5-6-2006).
  8. தலைநகரின் சம்பூர் பரப்பில் தவிபுவினரால் அமைக்கப்பட்டிருந்த ஒரு வீரவணக்க நினைவாலயம் (இதன் பெயர் அறிந்தவர்கள் ஆவணப்படுத்த தெரியப்படுத்துங்கள்)
  9. நிலாவெளி நினைவுத்தூண் கோபாலபுரம் சந்திப்பு, நிலாவெளி, கிண்ணியா, தலைநகர் ஜமாலியாவிலிருந்த தேச வஞ்சகர்களான ENDLFஇன் முகாமை அழித்துவிட்டு திரும்பிய போது திருமலைக் கடலில் ஏற்பட்ட படகு நேர்ச்சியில் 22 போராளிகள் நீரில் மூழ்கி வீரச்சாவடைந்தனர். அவர்களின் நினைவாய் எழுப்பப்பட்ட நினைவுத்தூண் இதுவாகும். 1990இல் சிறிலங்கா படையினரால் அழிக்கப்பட்ட இது 2003இல் மீளவும் திறக்கப்பட்டது. எனினும் இதன் முழுப் படம் (நினைவாலயத்துடனான) எனக்கு கிடைக்கப்பெறவில்லை. வெறும் தூணின் படமே கிடைத்துள்ளது.
  10. கரும்புலிகளின் நினைவுத்தூண் தலைநகர் 28/03/2004 தலைநகரின் தம்பலகாமத்தை பிறப்பிடமாகக் கொண்ட கரும்புலி மறவர்களின் நினைவாக எழுப்பப்பட்ட தூண் இதுவாகும். தலைநகரின் தம்பலகாமம் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவாக பேரணி செய்த போது கொழும்புத் துறைமுகத்தினுள் ஊடுருவி தாக்கிய 9 கடற்கரும்புலிகளுள் ஒருவரான தம்பலகாமத்தைச் சேர்ந்த கடற்கரும்புலி கப்டன் சுபாஸ் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவிக்கிறார், சம்பந்தன் அவர்கள். இஞ்சால் தெரிவது திருமலை துறைமுகத்தினுள் ஊடுருவித் தாக்கிய கடற்கரும்புலி மேஜர் மதுசாவின் திருவுருவப்படமாகும்.
  11. நினைவுத்தூண் இதுவே வரலாற்றில் மாவீரர்களுக்கென எழுப்பப்பட்ட முதலாவது பொதுவான நினைவுத்தூணாகும். இருந்தவிடம்: பத்திரகாளி கோவிலடி, திருநெல்வேலி, யாழ்ப்பாணம் உயரம்: 28 அடி செய்தோர்: திர்சிகா கலைக்கூடம் உதவியோர்: பத்திரகாளி கோவிலடி இளைஞர்கள் எழுப்பப்பட்டது: மாவீரர் வாரம், 1990 வடிவ விரிப்பு: உச்சியில் வகை-56 துமுக்கியினையும் அடியில் நான்கு வாசல்களையும் உடைய இதன் தூணின் நான்கு பக்கங்களிலும் ஈழப்போர் தொடர்பான பல காட்சிகள் சட்டப்படங்களாக காட்சிப்பட்டிருந்தன. திராவிடக் கட்டிடக்கலையில் இத்தூண் அமைக்கப்பட்டிருந்தது. அழிக்கப்பட்டது: யாழை 'சூரியகதிர்-1' நடவடிக்கை மூலம் சிங்களவர் கைப்பற்றிய போது
  12. நிழற்படங்கள் சிறிலங்கா படைத்துறையில் உறுப்பினராகயிருந்த முஸ்லிம்களின் படிமங்கள் இதில் உள்ளவர்கள் தரைப்படை, காவல்துறை, ஊர்காவல்படை என்று பற்பல படைத்துறைக் கிளைகளில் பணியாற்றி புலிகளுடனான பல்வேறு காலகட்ட மோதல்களில் கொல்லப்பட்டனர். இவர்கள் அனைவரும் திருமலை மூதூரைச் சேர்ந்தோராவர். இவற்றின் படிமப்புரவு மூதூரைச் சேர்ந்த திரு. இஹ்ஷான் ஜே.எம்.ஐ முகமது என்பவருக்கே சொந்தமானதாகும்.
  13. நிழற்படங்கள் சிறிலங்கா படைத்துறையில் உறுப்பினராகயிருந்த முஸ்லிம்களின் படிமங்கள் (2023 செப்டெம்பரில் முதற்பக்கத்தில் பதிந்திருந்ததை இங்கு மாற்றுகிறேன்) இதற்குள் ஊர்காவல் படையிலும் சிறப்பு பணிக்கடப் படை (Special Task Force) என்ற சிறப்பு அதிரடிப்படையிலும் உறுப்பினர்களாக இருந்த முஸ்லிம்களில் எனக்குக் கிடைத்த சிலரினது படிமங்களைப் பதிவேற்றியுள்ளேன். சிறப்பு பணிக்கடப் படை என்ற சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த நவாஸ். இவன் புலிகளுடனான சமர் ஒன்றில் கொல்லப்பட்டான். 'இவனது பெயர் றசாக் என்பதாகும். போர்க்காலத்தில் இவன் ஒரு ஊர்காவல்படையினன் ஆவான்.'
  14. நிழற்படங்கள் சிறிலங்கா படைத்துறையில் உறுப்பினராகயிருந்த முஸ்லிம்களின் படிமங்கள் (2023 செப்டெம்பரில் முதற்பக்கத்தில் பதிந்திருந்ததை இங்கு மாற்றுகிறேன்) தமிழ்நெற்றில் சூலை 5, 2009 அன்று "Eastern armed Muslim groups surrender weapons" என்ற தலைப்பில் வெளியான செய்தியிலிருந்து: 2009 ஜூலை 4 பிற்பகல் 3:00 மணியுடன் முடிவடைந்த சிறிலங்காக் காவல்துறையினரால் விடுக்கப்பட்ட பொது மன்னிப்பின் வழிவகையில் காத்தான்குடி ஜும்மா மீரா மசூதியில் அன்றைய நாள் பிற்பகலில் சில முஸ்லிம் ஆயுததாரிகளால் (ஜிகாதிகள் மற்றும் ஊர்காவல் படையினர்) தம்மிடம் உள்ள சில ஆயுதங்கள் ஒப்படைக்கப்பட்டன. அவற்றின் காட்சிகள் சிலவற்றை கீழே இணைத்துள்ளேன். இந்நிகழ்வானது கிழக்கு துணைக் காவல்துறை மா அதிபர் எடிசன் குணதிலக மற்றும் மாகாண அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்றது. அன்றைய நாள் 16 வகை- 56 தாக்குதல் துமுக்கிகள், ஒரு வக்- 81 துணை இயந்திரச் சுடுகலன், நான்கு .303 துமுக்கிகள், இரண்டு துணை இயந்திரச் சுடுகலன்கள், ஒரு வேட்டைச்சுடுகலன், ஒரு 9 மிமீ கரச்சுடுகலன், 16 கைக்குண்டுகள் மற்றும் பெருமளவு கணைகள் என்பன ஒப்படைக்கப்பட்டன. முஸ்லிம் ஜிஹாதிகள் சுமார் 250 வகை- 56 தாக்குதல் துமுக்கிகளை வைத்திருப்பதாக புலனாய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன, அவற்றுள் ஒரு பகுதியே காலக்கெடு முடிவடைந்த நிலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குணதிலக கூறினார். படிமப்புரவு: தமிழ்நெற், சூலை 5, 2009 படிமப்புரவு: army.lk, சூலை 5, 2009 | இவ்வலைத்தளத்திலிருந்து கிடைத்த படிமங்களை "படிம ஆதாரம்" என்ற வகையின் அடிப்படையில் சேர்த்திருக்கிறேனே ஒழிய பரப்புரைக்காகப் பாவிக்கப்படும் சிங்களத் தரைப்படையின் அலுவலசார் வலைத்தளத்தை எவ்வகையிலும் ஒழுங்குமுறையானது என்றெண்ணி அல்ல. முஸ்லிம் ஆயுததாரி ஒருவன் தனது துமுக்கியை ஒப்படைக்கிறான். படிமப்புரவு: சண்டே ரைம்ஸ், சூலை 5, 2009
  15. வான்புலிகளின் செஸ்னா ஸ்கைமாஸ்ரர் வகை வானூர்தி பற்றிய தகவலை பதிவேற்றியுள்ளேன். மேலும் வான்புலிகளின் வால்கனெர் பி68.ஆர் அல்லது பி.68சியின் படிமங்களையும் பதிவேற்றியுள்ளேன், "வான்புலிகள் இன் படிமங்கள் | LTTE Sky Tigers Images" க்குள்.
  16. இதனுள் தமிழீழ நடைமுறையரசின் படைத்துறையால் உள்நாட்டில் விளைவிக்கப்பட்ட பல்வேறு விதமான கண்ணிவெடிகளின் தகவல் உள்ளது. இந்த திரியினைச் சொடுக்கி அதனைக் காணவும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.