Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

nunavilan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by nunavilan

  1. கவுண்டமணி -- செந்திலின் நகைசுவை காட்சி.
  2. விவேக் வைரமுத்துவாக அசத்தும் காட்சி ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
  3. பாடல்: இதழே இதழே படம்: இதயகனி
  4. வடிவேலுவின் நகைசுவை பகுதி
  5. பாடல்: என்னை விட்டால் யாருமில்லை படம்: நாளை நமதே
  6. பாடல்:பத்துக்குள்ளே நம்பர் ஒண்ணு சொல்லு உன் நெஞ்சுக்குள்ளே யார் என்று சொல்வேன்
  7. விஜய் -- விவேக் நகைசுவை பகுதி. ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
  8. பாடல்: கண்ணும் கண்ணும் கலந்து வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தில் இருந்து ஒரு நாட்டிய பாடல்
  9. விவேக்கின் நகைசுவை பகுதி. ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
  10. பாடல் : பளிங்கினால் ஒரு மாளிகை படம் : வல்லவன் ஒருவன் பாடியவர் : எல்.ஆர். ஈஸ்வரி இசை : வேதா வேதா என்கிற எஸ்.வேதாச்சலம் தமிழ்த் திரை இசையமைப்பாளர்களுள் கொஞ்சம்வித்தியாசமானவர். தான் எங்கிருந்து பாடலை நகலெடுக்கிறேன் என்ற விஷயத்தையெல்லாம் மறைக்க அவர் முயற்சி செய்ததே இல்லை. அந்தக் காலங்களில் (1950௬0) ஹிந்திப் பாடல்களை நேரடியாகத் தமிழில் தந்தவர் வேதா. பளிங்கினால் ஒரு மாளிகை பருவத்தால் மணி மண்டபம் உயரத்தில் ஒரு கோபுரம் உன்னை அழைக்குது வா.. பளிங்கினால் ஒரு மாளிகை பருவத்தால் மணி மண்டபம் உயரத்தில் ஒரு கோபுரம் உன்னை அழைக்குது வா இருப்பதோ ஒரு நாடக மேடை இரவு நேரத்தில் மல்லிகை வாடை திறப்பதோ ஒரு சிந்தனை கதவு தேடி எடுத்தால் ஆனந்த உறவு உறவு...உறவு..உறவு..உறவு.. பளிங்கினால் ஒரு மாளிகை பருவத்தால் மணி மண்டபம் உயரத்தில் ஒரு கோபுரம் உன்னை அழைக்குது வா நாளை வருவது யாருக்கு தெரியும் நடந்து பார்த்தால் நாடகம் புரியும் காலை பொழுது ஊருக்கு விடியும் கன்னி நினைக்கும் காரியம் முடியும் முடியும்....முடியும்...முடியும். ..முடியும்.. பளிங்கினால் ஒரு மாளிகை பருவத்தால் மணி மண்டபம் உயரத்தில் ஒரு கோபுரம் உன்னை அழைக்குது வா http://www.youtube.com/watch?v=_c740hqKM2g
  11. தொடக்கத்தில் உள்ள பாடல் இவ்வரிகளை கொண்டு தொடங்குவதால் அதுவே தலைப்பாக போடப்பட்டுள்ளது.
  12. பாடல்களும் அதன் நையாண்டி பதில்களும் நான் யாரு எனக்கேதும் தெரியலையே! முதல்ல ஆடியன்ஸுக்கே தெரியலை. முன்னாலே வா.. ஒரு வார்த்தை பேச ஒரு வருஷம் காத்திருந்தேன் அய்யோ பாவம்! திக்கு வாய் போலிருக்குது! காலங்களில் அவள் வசந்தம் அப்போ கோலங்களிலே யாரு தேவயானியா? தீப்பிடிக்க தீப்பிடிக்க முத்தம் கொடுடா உங்கப்பா என்ன கேஸ் கம்பேனிலியா வேலை செய்றாரு? ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்டேன் மத்தவங்களுக்கெல்லாம் என்ன மூக்கிலுயா கேக்கும்? மரத்தை வச்சவன் தண்ணீ ஊத்துறான் மத்தவங்களேல்லாம் என்ன மண்ணெண்ணையா ஊத்துறாங்க? ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ? அவரை இப்ப யாசர்பாடிக்கு ட்ரான்ஸ்வர் பண்ணிட்டாங்க தூது வருமா தூது வருமா முன்னாடியிருந்து ரெண்டு தொடப்பம் வருமா? வேற பாட்டு பாடு நேத்து ராத்திரி யம்மா இன்னைக்கு ராத்திரு உங்கப்பாவா?? தகடுன்னா தமிழ்நாட்டுக்கு தெரியும் அப்போ அலுமினியம் ஆந்த்ரா வரைக்கும் தெரியுமா? மே மாசம் தொண்ணுதெட்டில் மேஜர் ஆனேனே! அப்போ எப்போ சுந்தர்ராஜன் ஆனீங்க? ஒளியிலே தெரிவது தேவதையா? டேய் நல்லா பாரு அது குண்டு பல்ப்பு என்ன சத்தம் இந்த நேரம்? அது ஒன்னும் இல்லை. வயிறு கொஞ்சம் சரியில்லை
  13. மீண்டுமொரு தென்னாலிராமன் கதை!!! கூன் வண்ணான் ஒரு போலிச்சாமியார் ஒருவன் விஜயநகரத்துக்கு வந்து சேர்ந்தான். அவன் மக்களுக்கு போதை மருந்தை விற்று பணத்தை ஏராளமாக சம்பாதித்துக் கொண்டிருந்தான். போதை மருந்தை உட்கொண்ட மக்கள் பலர் பைத்தியம் ஆனார்கள். பலர் மாண்டார்கள். இச்செய்தி தெனாலிராமனுக்கு எட்டியது. ஆகையால் போலிச் சாமியாரைத் தொலைத்துக் கட்ட முடிவு செய்தான். அதன்படியே சாமியாரை சந்தித்து அவனுடன் நட்புக் கொண்டான். தகுந்த சமயம் பார்த்து சாமியாரைக் கொன்று விட்டான். இச்செய்தி மன்னனுக்கு எட்டியது. தெனாலிராமனுக்கு ஆள் அனுப்பி அழைத்துவரச் செய்தார். ஏன் சாமியாரைக் கொன்றாய் என்று கேட்டார். அதற்குப் போதை மருந்தால் பலர் பைத்தியம் பிடித்து மாண்டனர். ஆகையால் தான் கொன்றேன் என்றான். போலிச்சாமியார் தவறு செய்து இருந்தாலும் அவனைக் கொல்ல உனக்கு ஏது அதிகாரம்? அதை என்னிடமல்லவா தெரிவித்திருக்க வேண்டும். அப்படி தெரிவித்திருந்தால் நானே அந்தப் போலிச் சாமியாருக்குத் தக்க தண்டனை கொடுத்திருப்பேன். இவ்விஷயத்தில் நீ தன்னிச்சையாக செயல் பட்டதற்கு உனக்கு மரணதண்டனை விதிக்கிறேன் என மன்னர் தீர்ப்புக் கூறினார். உடனே தன் ஆட்களை அழைத்து ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் ஒரு குழியை வெட்டி அதில் தெனாலிராமனை கழுத்தளவு புதைத்து யானையை விட்டு தலையை இடறுமாறு பணித்தார். அவ்வாறே தெனாலிராமனும் குழியில் கழுத்தளவு புதைக்கப்பட்டான். பின் யானையைக் கொண்டு வர பணியாளர்கள் சென்று விட்டனர். அப்போது சிலகழுதைகளை ஓட்டிக்கொண்டு ஒரு கூன் வண்ணான் வந்து கொண்டிந்தான். ஒரு மனிதன் பூமிக்குள் கழுத்தளவு புதையுண்டு இருப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டான். பின் தெனாலிராமனிடம் வந்து ஐயா, தாங்கள் ஏன் இவ்வாறு புதையுண்டு இருக்கிறீர்கள் என்று கேட்டான். அதற்கு தெனாலிராமன் எனக்கு மிக நீண்ட நாட்களாகவே முதுகு கூன் விழுந்து விட்டது. அதனால் மிகவும் சிரமப்பட்டு நடந்து வந்தேன். நேற்று ஒரு வைத்தியரை ஆலோசனை கேட்டேன். அவர்தான் ஒருநாள் முழுவதும் இவ்வாறு இருந்தால் கூன் நிமிரிந்து விடும் என்று சொன்னார். நான் குழியில் புதையுண்டு ஒருநாள் ஆகப் போகிறது. ஆகையால் மண்ணைத் தோண்டி என்னை மேலே எடு என்றான். அதன்படியே கூன் வண்ணானும் மண்ணைத் தோண்டி தெனாலிராமனை மேலே தூக்கி விட்டான். இப்போது தெனாலிராமனைப் பார்த்தான். அவன் முதுகு கூன் இல்லாமல் நேராக நிமிர்ந்து நின்றான். இதை உண்மை என்று நம்பிய கூன் வண்ணான் அதே குழியில் அவனைக் கழுத்தளவு புதைக்கச் சொன்னான். தெனாலிராமனும் கூன் வண்ணானை அவ்வாறே செய்தான். உடனே தெனாலிராமன் அவ்விடத்தைவிட்டு ஒரே ஓட்டமாக ஓடி விட்டான். சிறிது நேரத்தில் பணியாட்கள் யானையுடன் அங்கு வந்தனர். யானையை விட்டு குழியில் புதையுண்ட மனிதனின் தலையை இடறச் செய்தனர். கூன் வண்ணான் தலை சின்னா பின்னமாகியது. அச்சமயத்தில் தன் அரண்மனை அதிகாரிகளும் போலிச் சாமியாரைக் கொன்றது நியாம்தான் அதனால் தெனாலிராமனைக் கொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர். அந்நேரத்தில் பணியாட்களும் அங்கு வந்து "தெனாலிராமனின் தலையை யானையை விட்டு இடறிவிட்டோம்" என்று தெரிவித்தனர். தெனாலிராமனின் மரணத்துக்கு மன்னர் வருந்திக் கொண்டிருக்கையில் மன¢னர் முன் தெனாலிராமன் தோன்றினான். தெனாலிராமனைக் கண்ட மன்னர் மகிழ்ந்தார். நீ யானையால் இறந்ததாகப் பணியாட்கள் தெரிவித்தார்களே........ பின் எப்படி உயிரோடு வந்தாய் என்று வினவினார். அதற்குத் தெனாலிராமன் நடந்தவற்றை விவரமாகக் கூறினான். மன்னரும் அவனுடைய சாமர்த்தியத்துக்கு மனமாரப் பாராட்டி பரிசு வழங்கினார்.
  14. நாய் வாடகைக்கு கிடைக்குமா? ஒருவர் டீக்கடையில் உட்கார்ந்து இருந்தபோது, இரண்டு பிணங்கள் சுடுகாட்டுக்கு கொண்டு செல்லப்படுவதைப் பார்த்தார். அவற்றுக்குப் பின்னே நாயுடன் ஒருவர் நடந்து செல்ல, அவருக்குப் பின்னே சுமார் 500 பேர் ஒருவர் பின் ஒருவராக செல்லக் கண்டார். இது அவருக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. நாய் வைத்திருந்தவரை அணுகி, “இது போன்ற பிண ஊர்வலத்தை எத்தனையோ முறை பார்த்திருக்கிறேன். ஆனால் இந்த அளவுக்கு வரிசையாக யாரும் சென்றதில்லை? ஆமாம், யாருடைய ஊர்வலம் இது?” “முதலில் செல்வது எனது மனைவி.” “என்ன ஆயிற்று அவருக்கு?” “எனது நாய் அவரைக் கடித்து கொன்று விட்டது” “இரண்டாவது பிணம்?” “அது என் மாமியாருடையது. என் மனைவியைக் காப்பாற்றச் சென்ற அவரையும் கொன்றுவிட்டது” உடனே முதலாமாவர் ஆர்வத்துடன் கேட்டார், “இந்த நாய் எனக்கு வாடகைக்குக் கிடைக்குமா?” அதற்கு அவர் சொன்னார், “வரிசையில் போய் நில்லுங்கள்” --------------------------------------------------------------------------------------------------------------------------------- ஜெருசலேத்தில் மனைவி ஒரு கணவனும், மனைவியும் ஜெருசலேத்திற்கு சுற்றுலா சென்றனர். அங்கு அவர்கள் இருந்தபோது, மனைவி இறந்துவிட்டாள். அங்கிருந்த ஒருவர், ‘உனது மனைவியை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல வேண்டுமென்றால், 5,000 டாலர் செலவாகும். இங்கேயே அடக்கம் செய்துவிட்டால் 150 டாலர் மட்டும்தான் செலவாகும்” என்றார். ஆனால் கணவன் சொந்த ஊருக்கே கொண்டு செல்லப்போவதாகக் கூறினான். “மனைவி மீது அவ்வளவு பாசமா?” “இல்லே, ரொம்ப நாளைக்கு முன்பு இங்க ஒருத்தரை (யேசு) புதைச்சாங்க. அவர் 3 நாள் கழிச்சி உயிரோடு வந்துட்டாரு. அந்த ரிஸ்க்கை எடுக்க நான் விரும்பலை”
  15. காசேதான் கடவுளடா பட நகைசுவை காட்சி.
  16. கவுண்டமணி --கமல் நகைசுவை காட்சி. ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
  17. பாடல்: நினைத்து நினைத்து
  18. கட்டாயம் பார்க்கவேண்டிய( மிமிகிரி) ஒன்று.மற்றவர்கள் போல பேசுவது என்பது மிகவும் கஸ்டமானது.
  19. மனிதர்கள் வாழ்வதற்கு தகுதியில்லாத அண்டார்டிகா பகுதியில் தன்னந்தனியாக உலாவிக் கொண்டு ஒரு பெரிய ஜஸ் கட்டியை ஆராய்ந்து கொண்டு இருந்தார் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி. அவரை நமது அண்டார்ட்டிக் பகுதி அதி சிறப்பு நிருபரான பண்டாரம் மின்னல் வேகத்தில் பாய்ந்து சென்று பேட்டி எடுத்தார். அப்பேட்டியில் சுப்பிரமணிய சுவாமி பல திடுக்கிடும் தகவல்களை அள்ளி விசினார். இதோ அவரது பேத்தலின் ஸாரி பேட்டியின் முழு விபரம். (இது ஒரு கற்பனைன்னு தனியா உங்களுக்கு சொல்லனுமா ?) பண்டாரம்: என்ன சார் ரொம்ப நாளாக தமிழ் நாட்டுல நீங்க இல்லை. மக்கள் நகைச்சுவை கருத்துக்கள் இல்லாம தவிக்கிறாங்களாமே? சுப்பிரமணியசுவாமி: எந்த மடையன் தமிழ்நாட்டுல இருப்பான். எங்க போனாலும் வெயில் கொளுத்துது. யாரைக் கேட்டாலும் தண்ணியில்லனு சொல்லுறானுங்க. ஒரு பக்கம் வை.கோ. விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரிக்க தேவையில்லாமல் நடைபயணம் போறாரு. மற்றொரு பக்கம் கருணாநிதி ஏ.சி. அறையில உட்கார்ந்துக்கிட்டு தனது மகன், பேரன் சோடப்பூட்டி தயாநிதி நடத்துற சைக்கிள் பயணத்தை டி.வியில பார்த்துண்டு சேலத்துல மண்டல மாநாடு போடறாரு. இந்தக் கொடுமைய எதிர்த்து மாட்டு வண்டி பயணம் போகும் படி ஜெயலலிதாவுக்கு லெட்டர் போட்டேன். ஈமெயில் அனுப்பினேன். யாரும் கேட்கல, உருப்படாத ஆளுங்களா இருக்காங்க என்னத்த சொல்ல. அது தான் கோபத்துல இந்தப்பக்கம் நடந்தே வந்துட்டேன். ஆனா இங்க வந்தப்புறம் தான் தெரியுது. இத்தாலிக்கு சோனியா காந்தி இங்கு இருந்தும் பனிக்கட்டி கடத்தி இருக்காங்கன்னு ஒரு குரங்கு சொன்னது. எனக்கு எப்படி எல்லாம் ஆதாரம் சிக்குதுனு பாருங்க. இந்தியா போன உடனே கேஸ் போட்டு கலக்கப் போகிறேன் பாருங்கள். பண்டாரம்: பாராளுமன்றத்துல பாரதீய ஜனதா கட்சி இப்படி அமளி பண்ணிக்கிட்டு இருக்காங்களே இதுக்கு எல்லாம் என்ன காரணம். நீங்க இல்லாத காரணமா சார்........? சுப்பிரமணியசுவாமி: பாராளுமன்றத்துல அமளி நடக்குறதுக்குக் காரணமே பாரதீய ஜனதாவுக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் இடையில ரகசிய ஒப்பந்தம் ஏற்பட்டு இருக்குது. பாரதீய ஜனதா கட்சி கம்யூனிஸ்ட் காரங்களுக்கு ஏகப்பட்ட பணம் லஞ்சமா கொடுத்து இருக்காங்கனு எனக்கு செக் குடியரசு நாட்டில் இருந்து ஒரு தகவல் வந்து இருக்குது. இது ஒரு கூட்டு சதி. இந்த விஷயத்தை சொல்லலாமுனு சோனியா காந்திக்கு போன் செய்தேன். ஆனால் அவருக்குப் பதில அவரோட பேரன் போனை எடுத்து என்னிடம் பேசுகிறார். இந்த கூத்த யாரிடம் சொல்ல. அது தவிர நாடாளுமன்றக் கூட்டம் நடக்கும் பொழுது வாஜ்பாய் எப்படி எல்லாம் மறைமுக சைகை செய்யுறாருனு கூர்ந்து பார்த்தாலே தெரியும். இத எல்லாம் யாரு பார்க்குற. எல்லாம் செம்பறியாட்டுக் கூட்டம் மாதிரி கேண்டினில் ஓசியில பிரியாணி சாப்பிட்டுட்டு வர்றாங்க. இதுக்காகவே பெரிய போராட்டம் நடத்தலாமுனு யோசிக்கிறேன். கூட்டம் சேருமா என்பது தான் என்னோட கவலை. இது தவிர பாராளுமன்றத்துல நான் இல்லாத காரணத்தினாலும் அதிகமா சத்தம் போடுறாங்க என்ற உண்மைய சொன்ன உங்களை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. பண்டாரம்: தமிழ் சினிமா பற்றி என்ன நினைக்கிறீங்க? ஆபாசமாக அதிக படம் வருதே இது எல்லாம் உங்க கண்ணுக்குத் தெரியலையா? சுப்பிரமணியசுவாமி: நான் சின்னப்பையனாக இருக்கும் பொழுதே தமிழ் சினிமாவை ஒழிக்க வேண்டும் என குரல் கொடுத்துக் கிட்டு இருக்கேன். ஆனால் அதை யாரு கேட்குறா சொல்லுங்கள். கருணாநிதியை கேட்டால் நான் வசனம் எழுதுறதால தான் ஆட்சியைப் பிடிக்க முடியுதுனு சொல்றாரு. ஜெயலலிதாவைக் கேட்டால் சசிகலாவை விட்டு துளைத்து விடுவேன் என்று என்னோட பி.ஏ சந்திரலேகவுக்கு மிரட்டல் விடுறாங்க. ஆனால் தரமணியில எம்.ஜி.ஆர் திரைப்பட நகரம் மாற்றப்பட்டதற்கு நான் தான் காரணம். அதே மாதிரி ரஜினி தன்னோட ஜக்குபாய் படத்தை நிறுத்தி வைத்து இருப்பதற்கும் நான் தான் காரணம். படத்தை எடுத்தா முத்திரைத் தாள் மோசடியில் ரஜினியைப் பற்றி உலக நாடுகள் விசாரிக்க வேண்டும் என்று ஜா.நா சபையில மனு கொடுக்கப் போறாத ஒரு கடிதம் போட்டேன். அதனால தான் ரஜினி பயந்து போய் ஜக்குபாயை எடுக்காம போட்டு இருக்காரு. இப்படி என்னால முடிந்த சமூக சேவைகளை யாருக்கும் தெரியாம செய்து கொண்டு தான் இருக்கிறேன். கேப்டன் விஜயகாந்த ஏதோ அரசியலுக்கு வரப் போறதா சொன்னாரு என்ன ஆச்சுனு தெரியல. அவரு அரசியலுக்கு வந்து புது கட்சி ஆரம்பிக்குறதுக்குப் பதில என்னோட ஜனதா கட்சிக்கு தலைவராக வரலாம். ஏன் என்றால் என் கட்சிக்கு செலவு செய்ய காசு இல்லை. பண்டாரம்: இந்தியாவுக்கு ஒலிம்பிக்குல முதல் வெள்ளி பதக்கம் கிடைச்சு இருக்குதே அதைப் பத்தி என்ன நினைக்கிறீங்க? சுப்பிரமணியசுவாமி: துப்பாக்கி சுடுவதில் இந்தியா பதக்கம் வாங்கி இருக்குறது எல்லாம் என்னைய மாதிரி ஆளுங்க இருக்குறதுனால தான். ஆனால் மத்த போட்டியில பாருங்க எல்லாம் மண்ணக்கவ்வுறானுங்க. சின்ன நாடான கியூபா கூட பதக்கத்தை அள்ளுது. ஆனால் நம்ம ஆளுங்க நல்லா சாம்பார் வடையை சாப்பிட்டுட்டு பதக்கம் வாங்காம சோகமாக இருக்காங்க. இதுக்கு இரண்டு பேர் காரணம். ஒன்று மத்திய அரசு நிலையில்லாதது. மற்றொன்னறு என்னிடம் ஆலோசனை கேட்காதது. என்னிடம் ஆலோசனை கேட்டு இருந்தால் பின்லேடனிடம் சொல்லி நான்கு பதக்கம் வாங்கிக் கொடுத்து இருப்பேன். பண்டாரம்: தமிழ்நாட்டுல அ.தி.மு.க அரசைக் கவிழ்க்க சதி நடக்குதாமே உண்மையா? உங்களுக்கு தெரியாம இருக்காதே? சுப்பிரமணியசுவாமி: கவிழ்க்க அது என்ன கப்பலா? கருணாநிதி தன்னையே அதி புத்திசாலியா நினைக்குறாரு. பிகாருல ஆட்சிய கவிழ்க்கப் போன முந்தைய அரசுகளை குறை சொல்லிக்கிட்டு இருந்தாரு. இப்போ தமிழ்நாட்டுல ஆட்சியக் கவிழ்க்கனுமுனு எல்லா ஏற்பாடும் செய்து கொண்டு இருக்காரு. ஆட்சிய கவிழ்க்க அவரு எல்லாரிடமும் யோசனை கேட்டுக்கிட்டு இருக்காரு. என்னிடம் சொன்னால் ஒரு டீ பார்ட்டி வைத்து ஒரு நிமிடத்தில் கவிழ்த்தி விடுவேன். ஆனால் என்னிடம் யோசனை கேட்டு அடுத்து வருகின்ற தேர்தலில் எனக்கு 3 தொகுதி ஒதுக்கச் சொல்லுங்க, தமிழக அரசை கவிழ்த்தி விடலாம். இல்லாவிட்டால் சர்பத் பார்ட்டி வைத்து மத்திய அரசை கவிழ்க்க வேண்டிய சூழ்நிலை வந்துவிடும். என்னை யாரும் குறை சொல்லக் கூடாது. பண்டாரம்: ஒட்டு மொத்த இந்திய தேசத்தின் நலனுக்காக போராட்டம் எதாவது நடத்துற எண்ணம் இருக்கிறதா? சுப்பிரமணியசுவாமி: ஒட்டு மொத்த தேசத்துக்கும் போராட்டம் நடத்த நான் என்ன காந்தியடிகள் இல்லை. ஆனால் என்னால் சிங்கப்பூராக மாற்றப்பட்ட மதுரை தொகுதியில் இட்லிக் கடை வைக்கக் கூடாதுன்னு அடாவடி பண்ணுதாங்கனு இப்ப கூட புறாவிடம் தூது அனுப்பியுள்ளனர். மதுரைக்குப் போன உடனே பெரிய அளவில இட்லிக் கடைகளை திறந்து போராட்டம் நடத்தப் போகிறேன். முடிந்தால் நியூஸ் கலெக்ஷனுக்கு வந்து சப்போர்ட் பண்ணுங்க. சாப்பிட இட்லி தர்றேன். சரி சார் உங்களின் போராட்டம் வெற்றியடைய வாழ்த்துக்கள். செய்தியை அனுப்பிட்டு உங்களை வந்து சந்திக்கிறேன் என்று சொல்லி விட்டு எஸ்கேப் ஆனார் பண்டாரம்.
  20. மதுரை முத்து -பிரபு மேடை நகைசுவை நிகழ்ச்சி
  21. Movie Name: Karna (1995) Singer: Balasubramanyam S P, Janaki S Music Director: Vidya Sagar Lyrics : Vairamuthu மலரே மௌனமா மௌனமே வஎதமா மலர்கள் பேசுமா பேசினால் ஓயுமா அன்பே (மலரே) பாதி ஜீவன் கொண்டு தேகம் வாழ்ந்து வந்ததோ மீதி ஜீவன் உன்னை பார்த்த போது வந்ததோ அதேசுகம் உள்ளூறுதே ஏனோ மனம் தள்ளாடுதே (2) விரல்கள் தொடவா விருந்தைத் தரவா மார்போடு கண்கள் மூடவா (மலரே) கனவு கன்டு எந்தன் கண்கள் மூடிக் கிடந்தேன் காற்று போல வந்து கண்கள் மெல்லத் திறந்தேன் காற்றே எனைக் கிள்ளாதிரு பூவே என்னைத் தள்ளாதிரு (2) உறவே உறவே உயிரின் உயிரே புது வாழ்கை தந்த வள்லலே (மலரே)
  22. முத்து --அரவிந் மேடை நகைசுவை காட்சி.
  23. படம் : சென்னை 600028 பாடியவர்கள் : எஸ்.பி.பி. சரண், வெங்கட்பிரபு இசை : யுவன்ஷங்கர்ராஜா இயக்கம் : வெங்கட்பிரபு பல்லவி ======= யாரோ யாருக்குள் இங்கு யாரோ யாரென்று கண்டு யார் சொல்வாரோ கடல்கொண்ட மழைநீரை இனம்காண முடியாது யாரோ யாருக்குள் இங்கு யாரோ யாரென்று கண்டு யார் சொல்வாரோ கடல்கொண்ட நதிநீரை அடையாளம் தெரியாது உண்ணும் சோறு நூறாகும் ஒன்றுக்கொன்று வேறாகும் உப்பில்லாமல் என்னாகும் உப்பைப் போல நட்பை எண்ணுவோம் (யாரோ யாருக்குள்)

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.