Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

nunavilan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by nunavilan

  1. பாடல்:எனதுயிரே (கலவை பாடல்)(remix) படம்: பீமா ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
  2. பாடல்: போகாதே படம்:தீபாவளி இசை: யுவன் சங்கர் ராஜா ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
  3. பாடல்: என் அன்பே என் அன்பே பாடியவர்: சங்கர் மகா தேவன் இசை: யுவன் சங்கர் ராஜா ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
  4. பாடல்: மனசுக்குள் மனசுக்குள் படம்: அஞ்சாதே பாடியவர்: சுவேதா இசை: சுந்தர் சி. பாபு மனசுக்குள் மனசுக்குள் புதுமழை விழுகிறதே முழுதாய் நனைந்தேன் கருவிழி இரண்டுமே கருவரையாகிறதே உனை நான் சுமந்தேன் ஒரு காதல் இளம் புயல் நெஞ்சில் வீசியதால் அழகானேன் புதிதாய் பிறந்தேன் (மனசுக்குள்..) இதுவரை காதலை இதயத்தில் பூட்டினேன் இதயத்தை திறந்தின்று விடுதலை தருகிறேன் வெட்கங்களின் இரகசியம் உணர்ந்தேன் அந்த நொடியினில் உனக்குள்ளே தொலைந்தேன் உயிர்த் தேடல் நிகழ்கின்ற கூடல் நாடகத்தில் உன்னிடம் நான் படித்தேன் படைத்தேன் (மனசுக்குள்..) இரவெல்லாம் சூரியன் ஒளிர்வதைக் காண்கிறேன் பகலெல்லாம் பனித்துளி சிதறியும் வேர்க்கிறேன் நீ அருகினில் இருக்கின்ற நேரம் மின்னல் அருவிகள் நரம்பினில் பாயும் தினம் மோதல் நிகழ்கின்ற காதல் போர்க்களத்தில் உன்னிடம் நான் பேபி என்பேன் (மனசுக்குள்..)
  5. பெண்மொழி'கள்! பெண்களுக்காக செலவு செய்யாத ஆண்கள் உயிரோடு இருந்து என்ன பிரயோஜனம்? ஆம்பிள்ளை என்று நிரூபிக்க உன்னிடம் வேறு எதுவுமே இல்லையா? பெட் காஃபி வேண்டும் என்றால் சமையல் அறையில் தூங்கு! தீய்ந்த வாசனை வருகிறதா? சமையல் ரெடி என்று அர்த்தம்! ஆண்களுக்கும் உணர்ச்சிகள் உண்டுதான். ஆனால் அது அவர்கள் பிரச்னை! நீ போய்த் தொலைந்தால்தானே நான் உன்னைப் பிரிந்து ஏங்க முடியும்? செத்த பிறகு ஆண்கள் எல்லாரும் சொர்க்கத்துக்கும் பெண்கள் எல்லாரும் நரகத்துக்கும் போனால் என்ன ஆகும்? சொர்க்கம் நரகமாகும், நரகம் சொர்க்கமாகும்! புத்திசாலி ஆண்கள் முட்டாள் பெண்களைக் காதலிப்பதுண்டு. ஆனால் புத்திசாலிப் பெண்கள் முட்டாள் ஆண்களைக் காதலிப்பதில்லை. ஆண்கள் ஏன் பெண்களின் கண்ணைப் பார்த்து பேசுவதில்லை? ஏனென்றால் அவர்கள் பார்க்கும் இடத்தில் இருப்பவை கண்கள் இல்லை! என் சமையலைக் குறை சொல்லாதே! அப்புறம் நான் உன்னிடம் `வேறு எதிலாவது' குறை சொல்வேன்!
  6. சேப்பலின் பராசக்தி இந்திய அணியின் கோச் சேப்பல் மீது வரும் ஆறாம் தேதி விசாரனை நடக்க இருக்கிறதாம்.அப்போது அவர் வீராவேசமாக பராசக்தி வசனம் பேசினால் எப்படி இருக்கும்? இதோ இப்படித்தான் இருக்கும்.... ------------- நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளைச் சந்தித்து இருக்கிறது. புதுமையான பல மனிதர்களைக் கண்டிருக்கிறது.ஆகவே, இவ்வழக்கு விசித்திரமுமல்ல, வழக்காடும் நான் புதுமையான மனிதனுமல்ல. வாழ்க்கைப் பாதையிலே சர்வ சாதாரணமாகக் காணக்கூடிய ஜீவன் தான். இந்திய அணியிலே குழப்பம் விளைவித்தேன். கங்கூலியை அணியை விட்டு தூக்கினேன் . குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன், இப்படியெல்லாம். நீங்கள் எதிர்பார்ப்பீர்கள், நான் இதையெல்லாம் மறுக்கப்போகிறேன் என்று. இல்லை நிச்சயமாக இல்லை. அணியிலே குழப்பம் விளைவித்தேன். கிரிக்கட் அணியே கூடாது என்பதற்காக அல்ல. இந்திய கிரிக்கட் அணி கொடியவர்களின் கூடாரமாய் இருக்கக் கூடாது என்பதற்காக. கங்கூலியை அணியை விட்டு தூக்கினேன். அவன் கேப்டன் என்பதற்காக அல்ல. கேப்டன்ஷிப் பகல் வேஷமாகிவிட்டதைக் கண்டிப்பதற்காக. உனக்கேன் இவ்வளவு அக்கரை? உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை? என்று கேட்பீர்கள். நானே பாதிக்கப்பட்டேன். சுயநலம் என்பீர்கள். என் சுயநலத்தில் பொது நலமும் கலந்திருக்கிறது. ஆகாரத்துக்காக அழுக்கைச் சாப்பிட்டு தடாகத்தைச் சுத்தப்படுத்துகிறதே மீன் - அதைப் போல. என்னைக் குற்றவாளி குற்றவாளி என்கிறார்களே,இந்தக் குற்றவாளியின் வாழ்க்கைப் பாதையிலே கொஞ்சதூரம் பின்னோக்கி நடந்து பார்த்தால் அவன் கடந்து வந்துள்ள காட்டாறுகள் எவ்வளவு என்று கணக்கு பார்க்க முடியும். பாட்டொலிக்கும் குயில்கள் இல்லை என் பாதையில். படமெடுக்கும் பாம்புகள் நெளிந்திருக்கின்றன. தென்றலைத் தீண்டியதில்லை நான். ஆனால் தீயைத் தாண்டியிருக்கிறேன். கேளுங்கள் என் கதையை, நீதிபதி அவர்களே, தீர்ப்பு எழுதுவதற்கு முன் தயவுசெய்து கேளுங்கள். ஆஸ்திரேலியாவில் க்வீன்ஸ்லாண்டில் பிறந்தவன் நான். பிறக்க ஒரு நாடு பிழைக்க ஒரு நாடு. கிரிக்கட் கோச்சகளின் தலையெழுத்துக்கு நானென்ன விதிவிலக்கா? சிட்னி அது என் கிட்னியை வளர்த்தது. என்னை உயர்ந்தவனாக்கியது. இந்திய அணீயை உயர்த்த வந்தேன். அதில் தோல்வியுற்று உங்கள் முன் நிற்கிரேன். இதோ குற்றவாளிக் கூண்டிலே உங்கள் முன் நிற்கிறானே இந்த ஜாலக்காரன் டெண்டுல்கர். இவன் வலையில் விழுந்தவர்களில் நானும் ஒருவன். டெண்டுல்கரை ஓப்பனிங் பேட்ஸ்மேனாக்கினேன். அடாது மழையிலும் விடாது டக் அடித்தபோதும் உலக கோப்பையை நம்பி அவனை விட்டுவைத்திருந்தேன். கடைசியில் பைத்தியமாக மாறினேன். காண வந்த கிரிக்கட் நங்கையைக் கண்டேன். கண்ணற்ற ஓவியமாக. ஆம், ஜான் ரைட்டை இழந்த அணியாக. அணியின் பெயரோ இந்திய அணி. மங்களகரமான பெயர். ஆனால்,வெற்றிதான் எப்போதும் பெற்றதில்லை. செழித்து வளர்ந்த அணி சீரழிந்துவிட்டது. துப்புகெட்ட கேப்டன். கண்களிலே நீர். இந்திய அணி அலைந்தது. இந்திய அணிக்காக நானும் அலைந்தேன். இந்திய அணிக்கு கருணை காட்டினர் பலர். அவர்களிலே புக்கிகள் சிலர் அவளுடைய காதலைக் கேட்டனர். சூதாட்ட வழக்கிலே ஈடுபட்டு உங்கள் முன் நிற்கிறானே இக்கொடியவன் ஜடேஜா. இவன் சூதாட்டத்தால் என் அணியை விற்க முயன்றான். நான் தடுத்திராவிட்டால் இந்திய அணி அப்போதே தற்கொலை செய்து கொண்டிருக்கும். ஸ்பான்சர்களும் அணிக்கு கருணை காட்ட முன்வந்தார்கள். பிரதி உபகாரமாக டீவி உரிமையைக் கேட்டனர். ஸ்பான்சர்களின் வலையில் விழுந்த வீரர்களும் அணிக்கு துரோகம் செய்தனர். அதில் தலையானவன் இந்த கங்கூலி. ஜென்மஜென்மத்துக்கும் கேப்டனாக இருக்கும் உரிமையைக் காணிக்கையாகக் கேட்டிருக்கிறான். வங்கத்தின் பெயரால், ரவீந்திரநாத் தாகுரின் பெயரால். இந்திய அணி உலகத்தில் புழுவாகத் துடித்தபடியாவது உயிரோடு இருந்திருக்கும். அந்த அணியை ஜிம்பாப்வேயிடம் கூட தோற்க தூண்டியது இந்த கங்கூலிதான். இந்திய அணியை இரக்கமற்ற கேப்டனிடம் விட்டுச் செல்ல நான் விரும்பவில்லை. என் அணி ஆதரவற்றுத் துடித்துச் சாவதைக் காண நான் விரும்பவில்லை. நானே கங்கூலியைத் துரத்தி விட்டேன். கேப்டனைத் துரத்துவது விந்தையல்ல. உலக உத்தமர் காந்தி, அஹிம்சா மூர்த்தி ஜீவகாருண்ய சீலர். அவரே நேதாஜியை காங்கிரஸ் தலைமையை விட்டு நீக்கியிருக்கிறார். காங்கிரஸ் கஷ்டப்படுவதைக் காணச் சகியாமல்..அந்த முறையைத்தான் கையாண்டிருக்கிறேன் நான். இது எப்படி குற்றமாகும்? வெளிநாட்டிலிருந்து பிறந்த நாட்டுக்கு வந்த கோச்க்கு தக்க பாதுகாப்பில்லை. ஆனால் இந்திய அணி விட்டுக் கொடுத்திருந்தால், புக்கிகளின் பள்ளியறையிலே ஒரு நாள் மானத்தை விலை கூறியிருந்தால் - ஸ்டார்டீவியின் மடியிலே ஒரு நாள் - இப்படி ஓட்டியிருக்கலாம் நாட்களை.இதைத் தானா இந்த நீதிமன்றம் விரும்புகிறது? சூதாட்டம் என் அணியை மிரட்டியது. பயந்து ஓடினாள். ஸ்பான்ஷர்ஷிப் பணம் என் அணியைத் துரத்தியது. மீண்டும் ஓடினாள். கங்கூலி ரசிகர்களின் வங்கபக்தி என் அணியைத் துரத்தியது. மெக்ராத்தின் பவுன்சர் என் அணியைத துரத்தியது. ஓடினாள் ஓடினாள் வெஸ்ட் இண்டீசின் வெஸ்ட் எண்டுக்கே ஓடினாள். வெஸ்ட் எண்டிலே கியூபா இருந்ததால் திரும்பி வந்துவிட்டாள். அந்த ஓட்டத்தைத் தடுத்திருக்க வேண்டும். வாட்டத்தைப் போக்கியிருக்க வேண்டும். இன்று சட்டத்தை நீட்டுவோர் செய்தார்களா? வாழவிட்டார்களா என் இந்திய அணியை? சரத்பவார்: குற்றவாளி யார் யார் வழக்கிற்கோ வக்கீலாக மாறுகிறார். யார் வழக்கிற்குமில்லை. அதுவுமென் வழக்குதான். என் அணியின் வழக்கு. அணியின் மானத்தை அழிக்க எண்ணிய மாபாவிக்குப் புத்தி புகட்ட கோச் வாதிடுவதிலென்ன தவறு? கங்கூலியை அணியை விட்டு தூக்க முயன்றது ஒரு குற்றம். ஷேவாக்கை தூக்காமல் விட்டது ஒரு குற்றம்.நான் கங்கூலியை அறிக்கையால் தாக்கியது ஒரு குற்றம். இத்தனைக் குற்றங்களுக்கும் யார் காரணம்? ரஞ்சிகோப்பையை கஞ்சிக்கில்லாமல் அலையவிட்டது யார் குற்றம்? விதியின் குற்றமா? அல்லது விதியின் பெயரைச் சொல்லி வயிறு வளர்க்கும் வீணர்களின் குற்றமா? பணம் பறிக்கும் புக்கிகளின் கூட்டத்தை வளரவிட்டது யார் குற்றம்? பஞ்சத்தின் குற்றமா? அல்லது பஞ்சத்தை மஞ்சத்திற்கு வரவழைக்கும் வஞ்சககர்களின் குற்றமா? கிரிக்கட்டின் பெயரால் நடிகைகளுடன் காமலீலைகள் நடத்தும் போலிவீரர்களை நாட்டிலே நடமாட விட்டது யார் குற்றம்? கிரிக்கெட்டின் குற்றமா? அல்லது கிரிக்கெட்டின் பெயரைச் சொல்லி போர்டு நடத்தும் கயவர்களின் குற்றமா? இக்குற்றங்கள் களையப்படும்வரை சேப்பல்களும், திராவிட்களும் குறையப்போவதில்லை. இதுதான் எங்கள் வாழ்க்கை ஏட்டில் எந்தப் பக்கம் புரட்டினாலும் காணப்படும் பாடம். பகுத்தறிவு. பயனுள்ள அரசியல் தத்துவம்.
  7. பாடல்: ஊரெங்கும் உன் சோகம் பாடும்
  8. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சுவி அண்ணா.
  9. மனைவி : ஏங்க..உங்களோட நண்பருக்குப் பார்த்த பொண்ணு நல்லாயில்லன்னு நீங்க கொஞ்சம் எடுத்துச் சொல்லக்கூடாதா? கணவன் : ஆசை தோசை அப்பளம் வடை...அவன் மட்டும் எனக்குச் சொன்னானா? **** ராமு : நண்பா... .தினமும் காலையில எழுந்திருச்சி எனக்கு போன் பண்ணுடா.. வேணு : அடடா..என்னே ஒரு நட்பு. ராமு : அதெல்லாம் ஒண்ணுமில்லடா. தினமும் காலையில நரி ஊளையிடறதக் கேட்டா நல்லதுன்னு சொன்னாங்க. **** தபால்காரர் : என்னய்யா இது..பின்கோடு போடவேண்டிய இடத்தில் "சரோஜா சாமான் நிக்கோலா" அப்படின்னு எழுதியிருக்கே? வெங்கட்பிரபு : ஹி..ஹி..சென்னை - 600028 தான் அப்படி எழுதி இருக்கேன். ***** வாத்தியார் : உனக்குப் பக்கத்துல ஒரு பையன் தூங்கிக்கிட்டு இருக்கான். அவனை எழுப்பிவிடு. மாணவன் : அட போங்க சார். தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது மட்டும் நானா? ***** டைரக்டர் : இந்தக் காட்சில நீங்க 100 அடி உயரத்துல இருந்து நீச்சல் குளத்துல குதிக்கணும். நடிகர் : எனக்கு நீச்சல் தெரியாதே. டைரக்டர் : கவலைப்படாதீங்க சார்ஸகுளத்துல தண்ணியே இருக்காது. ***** நேரமாகியும் வீட்டுக்குத் திரும்பாத கணவன் மீது கோபத்தில் இருக்கிறாள் மனைவி. கணவன் தொலைபேசுகிறான். கணவன் : டியர் இன்னிக்கு ராத்திரி என்ன டிபன்? மனைவி : (கடுங்கோபத்துடன்) ஒரு டம்ளர் விஷம் கணவன் : ஓகே டியர். நான் வர கொஞ்சம் லேட்டாகும். நீ சாப்பிட்டு படுத்துக்கோ. ***** நபர் : மருந்தை எதுக்கு ரோட்டுல கொட்டி தடவுறீங்க? ஜோன்ஸ் : டாக்டர்தான் சொன்னார், அடிபட்ட எடத்துல மருந்தைத் தடவுங்கன்னு. நபர் : ??!! **** மாணவன் : சார்... என்னுடைய எக்ஸாம் ரெஜிஸ்டர் நம்பர்(exam register number) என்ன? ஆசிரியர் : 148766 மாணவன் : சார்..வேற நல்ல பேன்ஸி(fancy) நம்பரா குடுங்க சார். **** இரண்டு காதலர்கள் தற்கொலை செய்ய முடிவெடுத்து மலை உச்சிக்குச் சென்றனர். இருவரும் கண்ணை மூடிக்கொண்டு குதிக்கத் தயாராகினர். காதலன் முதலில் குதிக்க, காதலி 'காதலுக்குக் கண்ணில்லை என்பதை உணர்ந்துவிட்டேன்' என்று கூறிக்கொண்டு பின்வாங்கி விட்டாள். பாதாளத்திற்குப் போய்க்கொண்டிருந்த காதலன், 'தெரியும்டீ உங்களப்பத்தி' என்று கூறிக்கொண்டு முதுகில் மறைத்து வைத்திருந்த பாராசூட்டை விரித்துக்கொண்டு பறந்தான்.
  10. பூமிக்கும், சூரியனுக்கும் உள்ள தூரம் 150 மில்லியன் கிலோ மீட்டர் (1 மில்லியன் என்பது 10 இலட்சம்) இந்த தூரத்தை ஒரு மணிக்கு ஆயிரம் கிலோ மீட்டர் செல்லும் ஒரு ஜெட் விமானத்தில் நிற்காமல் பயணித்தால் பதினேழு வருடங்களில் கடக்கலாம். - ஒட்டிப்பிறந்த இரட்டையர்களுக்குக்கூட கைரேகைகள் ஒரே மாதிரி இருக்காது. - கபில்தேவ் நடத்தும் ஓட்டலின் பெயர் ஹோட்டல் சிக்ஸர். - ஆப்கானியப் பெண்களுக்காக சமீபத்தில்தான் ஒரு பத்திரிக்கை துவங்கப்பட்டது அதன் பெயர்: ரோஜ் (நாள்). - டைப்ரைட்டர் Keyboard-ல் ஒரே ஒரு வரிசையில் உள்ள எழுத்துக்களை மட்டும் பயன்படுத்தி தட்டச்சு செய்யக்கூடிய பெரிய வார்த்தை Type Writer. - நவீன விமானங்களில் பயன்படுத்தப்படும் எரிபொருள் தூய்மைப்படுத்தப்பட்ட கெரஸின்தான். - டெட்-ஸீ (Dead Sea)யில் உள்ள உப்பு சதவிகிதம் மிக அதிகம். அதில் குதித்தால் முழ்க மாட்டோம். - மலரின் வாசனைக்குக் காரணம் அதன் இதழ்களிலுள்ள எண்ணெய்ச் சத்துக்கள் தான். - ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு குறையும் போது பசி ஏற்படும். - லிபியா பாலைவனத்தில் நிழலிலேயே 1360 பாரன்ஹீட் வெப்பம் இருக்கும். - அமெரிக்க அதிபர்களில் MBA படிப்பு முடித்த முதல் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ். - ஒரு யூனிட் இரத்தம் என்பது 350 மில்லிலிட்டர். - கரையான்களுக்கு கண்கள் கிடையாது. அதன் இரத்தத்தில் ஹீமோக்ளோபின் கிடையாது. - விஞ்ஞானி ஜன்ஸ்டீனின் மூளையை பிரின்ஸ்டன் மருத்துவமனையில் ஆராங்ச்சிக்காய பாதுகாத்து வருகிறார்கள். - உலகின் மிகப்பெரிய பள்ளிக்கூடம் கல்கத்தாவில் உள்ள South Point High School. - நிலவில் அதிகமாக காணப்படும் பொருள் டைட்டானியம். - சாரே ஜஹான் ஸே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா பாடலை எழுதியவர் முகமது இக்பால். - இந்தியாவின் முதல் மிருகக்காட்சிசாலை 1855-ம் ஆண்டு சென்னையில் அமைக்கப்பட்டது. - 90ரூபாய் (90 கியாத்) நோட்டு அச்சடிக்கும் ஒரே நாடு மியான்மிர் இங்கு 9 என்ற எண் மிகவும் புனிதமானது. - பெங்களுர் இந்தியாவின் பூந்தோட்டம் என்று அழைக்கப்படுகிறது. - ஆசியாவில் மட்டுமே சந்தன மரம் பயிராகிறது. - ரத்தத்தைப் பரிசோதித்து அது ஆணின் ரத்தமா, பெண்ணின் ரத்தமா என்று சொல்ல முடியாது. - பொருளாதாரத்தின் தந்தை என்றழைக்கப்படுபவர் ஆடம் ஸ்மித். - அரபிக்கடலின் ராணி என்று அழைக்கப்படும் நகரம் கொச்சி. - தேனீக்கள் ஒரு லிட்டர் தேன் உருவாக்க பத்து இலட்சம் பூக்களிலிருந்து பூந்தேன் சேகரிக்க வேண்டும். - உப்பு நீரைக் குடிநீராக மாற்ற உதவும் வேதிப்பொருள் செலினியம். - பழங்களை செயற்கை முறையில் பழுக்க வைக்க பயன்படுத்தப்படும் வாயு எத்திலீன். - ஜெர்மனியில் உள்ள வால்ஸ்வேகன் வெர்க் (Volkswagen work) உலகின் மிகப்பெரிய வாகனத் தயாரிப்புக்கூடம். ஒரு நாளைக்கு 4600 வாகனங்களைத் தயாரிக்க முடியும். - அக்வா ரிஜியா என்னும் திரவத்தில் தங்கம் கரையும். - தொடர்ந்து பலமணி நேரம் கம்ப்யூட்டரில் உட்கார்ந்திருந்தால் கைகளுக்கும் தோள்களுக்கும் வரும் நோயின் பெயர் கார்பல் டனல் சிண்ட்ரோம். - விஞ்ஞானம், தொழில்நுட்பத்தில் சாதனை புரிபவர்களுக்கு அளிக்கப்படும் விருது – பட்நாகர் விருது. - மிகக்குறைந்த வயதில் பத்ம விருது பெற்றவர் (செஸ்) விஸ்வநாதம் ஆனந்த் - ஐரோப்பாவைத் தவிர உலகின் எல்லாக் கண்டங்களின் பெயர்களும் Aல் ஆரம்பித்து Aல் முடியும். - இந்தியாவின் தலைநகரமான டில்லியின் பழைய பெயர் இந்திரப் பிரஸ்தம் - கண்டமாகவும், நாடாகவும் இருப்பது ஆஸ்திரேலியா மட்டுமே. - அணுக்கதிர் வீச்சால்கூட பாதிக்கப்படாத ஒரே உயிரினம் கரப்பான் பூச்சி. நன்றி: சுவனப்பாதை மாதஇதழ்
  11. கு.மா அண்ணா, புத்தன் மற்றும் இன்று பிறந்த நாளை கொண்டாடும் கள உறவுகளுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
  12. பாடல்: சர்க்கரை நிலவே படம்: யுத்(youth) சக்கரை நிலவே பெண் நிலவே காணும் போதே கரைந்தாயே நிம்மதி இல்லை ஏன் இல்லை நீ இல்லையே (சக்கரை நிலவே ...) மனம் பச்சை தண்ணீ தான் பெண்ணே அதை பற்ற வைத்தது உன் கண்ணே என் வாழ்கை என்னும் காட்டை எரித்து குடை காய்ந்தாய் கொடுமை பெண்ணே கவிதை பாடின கண்கள் காதல் பேசின கைகள் கடைசியில் எல்லாம் பொய்கள் என் பிஞ்சு நெஞ்சு தாங்குமா ? (சக்கரை நிலவே ...) காதல் என்ற ஒன்று அது கடவுள் போல உணர தானே முடியும் அதில் உருவம் இல்லை காயம் கண்ட இதயம் ஒரு குழந்தை போல வாயை மூடி அழுமே அந்த வார்த்தை இல்லை அன்பே உன் புன்னகை எல்லாம் அடி நெஞ்சில் சேமிதேன் கண்ணே உன் பொன்னகை எல்லாம் கண்ணீராய் உருகியதே வெள்ளை சிரிப்புகள் உன் தவறா ? அதில் கொள்ளை போனது என் தவறா ? பிரிந்து சென்றது உன் தவறா ? நான் புரிந்து கொண்டது என் தவறா ? ஆண் கண்ணீர் பருகும் பெண்ணின் இதயம் சதையல்ல கல்லின் சுவரா ? (கவிதை பாடின ...) நவம்பர் மாத மழையில் நான் நனைவேன் என்றேன் எனக்கும் கூட நனைதல் மிக பிடிக்கும் என்றாய் மொட்டை மாடி நிலவில் நான் குளிப்பேன் என்றேன் எனக்கும் அந்த குளியல் மிக பிடிக்கும் என்றாய் சுகமான குரல் யார் என்றால் சுசீலா ' வின் குரல் என்றேன் எனக்கும் அந்த குரலில் ஏதோ மயக்கம் என நீ சொன்னாய் கண்கள் மூடிய புத்தர் சிலை என் கனவில் வருவது பிடிக்கும் என்றேன் தயக்கம் என்பது சிறிதும் இன்றி அது எனக்கும் எனக்கும் தான் பிடிக்கும் என்றாய் அடி உனக்கும் உனக்கும் எல்லாம் பிடிக்க என்னை ஏன் பிடிக்காது என்றாய் ? (சக்கரை நிலவே ...)
  13. பாடல்: ஆத்தாடி அடி ஆத்தாடி படம்: சண்டை
  14. பாடல்: என் காதல் படம்: புன்னகை பூவே இசை: யுவன் சங்கர் ராஜா
  15. பாடல்: விசிலடிக்கும் வதனா வதனா
  16. அன்புள்ள நண்பர்களுக்கு நான் யாகூ குழுமங்களில் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல்கள் சிலவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.. சமீபத்தில் ஒரு நாள் திருவள்ளுவரைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்த போது " என்ன ஐயா , இப்படிக் கல்லைத் தூக்கிப் போட்டுவிட்டீரே ? "என்று கேட்டேன். அவர் அப்போது நூல் பஞ்சம் காரணமாக கைத்தறியைச் சும்மா போட்டுவிட்டு ,சத்தியாகிரகம் செய்யலாமா ? இல்லை மந்திரிகளுக்குக் கறுப்புக் கொடி காட்டலாமா ? என்று யோசித்துக் கொண்டிருந்தார். ஆகையால் நான் கூறியதற்குத் தவறாகப் பொருள் செய்து கொண்டு, "சேச்சே, கல்லைத் தூக்கிப் போடுகிறதாவது , அது யார் செய்கிற வேலை ? மந்திரிகள் மீது கல்லைத் தூக்கிப் போடுவது என்றால் அப்புறம் நாட்டிலே இருக்கும் பஞ்சம் போதாதென்று , கல்லுக்கும் பஞ்சம் வந்துவிடுமே ? " என்றார். "ஐயையோ அப்படி ஒன்றும் சொல்லவில்லையே , என் தலையிலே கல்லைத் தூக்கிப் போட்டுவிட்டீர்களே என்றல்லவா சொன்னேன் " அடடா , கல்லுக்குக் காயம் பட்டுவிட்டதா ? என்றார் திருவள்ளுவர். இல்லை, இல்லை , உம்முடைய குறள் ஒன்றைச் சொல்லவந்தேன். "தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று " என்பதாக ஒரு குறள் பாடியிருக்கிறீர்கள் அல்லவா ? அதைத் தான் குறிப்பிட்டேன்.ஒருவன் தோன்றும் போதே எப்படி ஐயா புகழோடு தோன்ற முடியும் ? சீசர் என்ன ,நெப்போலியன் என்ன, ஹிட்லர் என்ன , மக் ஆர்தர் என்ன இப்படிப்பட்டவர்கள் எல்லாம் கூட பிறந்து , பிறகு தோலைக் கடித்துத் துருத்தியைக் கடித்து , அப்புறம் தானே வேட்டை நாய்களாகியிருக்கிறார்கள் . பிறக்கும் போதே புகழோடு தோன்றிய ஒரே ஒருவரைப் பற்றித் தான் காவிய இதிகாசங்களிலே கூட கேள்விப்பட்டிருக்கிறோம் . துரியோதனன் பிறக்கும் போது பதினாறாயிரம் நரிகள் ஏக காலத்தில் சுருதி பேதம் செய்து ராகமாலிகை எல்லாம் பாடினவாம் ! துரியோதனனைப் போல் எல்லோரும் எப்படிப் பிறக்க முடியும் ? தோன்றினால் புகழோடு தோன்ற வேண்டும் இல்லாவிட்டால் தோன்றாமல் இருக்க வேண்டும் என்றால் எப்படி அது சாத்தியம் ? தோன்றாமல் இருப்பது நம்முடைய வசத்தில் இருக்கிறதா ? " என்று என்று சராமாரியாகப் பொழிந்தேன் . வள்ளுவர் திக்குமுக்காடிப் போனார். தகவல்: கல்கி வளர்த்த சிரிப்பு அலைகள் 000000000000000000000000000000000000000000000000 மனிதர்களைத் தேவர்களாக்கக் கூடிய தலைசிறந்த உணர்ச்சிகளுள் தலை சிறந்தது காதல்.வாழ்க்கையில் சிறிது காலமாவது அதை அனுபவித்தவர்கள் இனிய சுபாவமும் , தாராள மனமும் கொண்டவர்களாயிருப்பார்கள். அந்த உணர்ச்சியை அனுபவித்து அறியாதவர்களோ அசூசையும் துவேஷமும் பொங்கும் உள்ளத்தினராய் எப்போதும் கடுகடுப்பாகவே இருப்பார்கள் . காதலில் ஒரே ஒரு குறை உண்டு . அதில் தேக தத்துவமும் கலந்திருக்கும் காரணத்தினால் அதுநெடுங்காலம் நீடித்து நிற்பதில்லை.நாளடைவில் அதனுடைய வலிமை குன்றி விடுகிறது .அதற்குப் பிறகும் மணவாழ்க்கை சந்தோசமாய் நடக்க வேண்டுமானால் இன்னும் சில நிபந்தனைகளும் நிறைவேற வேண்டும். புருஷனும் மனைவியும் ஏறக்குறைய ஒத்த அறிவு நிலையில் இருக்க வேண்டும் . புருஷன் கம்பனையும் காளிதாசனையும் ஆராய்ந்து கொண்டிருக்கும் பொழுது , மனைவி அடுத்த வீட்டுக்காரியின் காதுத் தோட்டையும் கைவளையலையும் ஆராய்ந்து கொண்டிருப்பவளாய் இருந்தால் அவர்களுடைய இல்வாழ்க்கை லட்சிய இல்வாழ்க்கையாக முடியாது . தகவல்: கல்கி கட்டுரைகள் 0000000000000000000000000000000000000000000000000000000 ராஜாஜி அவர்கள் சேலத்தில் வக்கீலாகப் பணிபுரிந்த பொழுது ,தனது வேலைக்காரர் ஒருவரை அழைத்து , ஒரு தபால் உறையில் (Postal Cover) தபால் தலை (Stamp) ஒன்றை ஒட்டி எடுத்து வருமாறு கூறினாராம் . சிறிது நேரத்தில் அந்த வேலைக்காரர் , தபால் தலை ஒன்றை ஒட்டி ராஜாஜியிடம் கொடுத்தாராம்.அந்த தபால் உறையை வாங்கிப் பார்த்த ராஜாஜி , வேலைக்காரரிடம் "நாங்கள் பிரிட்டிஷ் மன்னனை கவிழ்ப்பதற்காக எவ்வளவோ பாடுபடுகிறோம்.ஆனால் நீ அவரை ஒரு நிமிடத்தில் கவிழ்த்துவிட்டாயே .. ! " என்று கூறி , வாய்விட்டுச் சிரித்தாராம் . அந்த வேலைக்காரர் பிரிட்டிஷ் மன்னனின் உருவம் பொதித்த தபால் தலையை , தலைகீழாக(Upside down) ஒட்டியிருந்தாராம் . தகவல் : உலகைக் கவர்ந்த உன்னத நிகழ்ச்சிகள் - பூவை.எஸ்.ஆறுமுகம் 000000000000000000000000000000000000000000000000000000 இலக்கிய கூட்டமொன்றில் கண்ணதாசன் அவர்கள் , " கண்ணன் என் மன்னன் , அவன் கானத்தைக் கேட்டால் பட்டமரம் தளிர்க்கும் " என்று பேசிக் கொண்டிருந்தாராம் . முன் வரிசையில் அமர்ந்திருந்த ஒருவர் எழுந்து " கண்ணன் வாசிக்கும் புல்லாங்குழல் கூட பட்டமரம் தானே ? , கண்ணபிரான் கைகளில் இருந்தும், அது மட்டும் ஏன் தளிர்க்கவில்லை " என்று கேட்டாராம். உடனே கண்ணதாசன் அவர்கள் , " கண்ணன் கானத்தைக் கேட்டால் பட்டமரம் தளிர்க்கும் , ஆனால் புல்லாங்குழல் கண்ணனின் கையிலேயே பட்டுக் கொண்டிருக்கிறது ,பெருமாளின் கரம் பட்டால் மீண்டும் பிறவி கிடையாது , நேராக மோட்சம் தான் ! அதனால் தான் புல்லாங்குழல் தளிர்க்கவில்லை " என்று கூறினாராம் . (தகவல் : கேள்விகளும் உங்கள் பாக்யராஜின் பதில்களும் : பாகம் 2) 00000000000000000000000000000000000000000000000000000 ராயர்காபிகிளப்பில் வால்டேர் குறித்தான இழையில் நான் அனுப்பிய மடல்.. அன்புள்ள பாலாஜி மற்றும் இந்திராபார்த்தசாரதி அவர்களுக்கு , வால்டேர் குறித்தான தங்களின் கடிதங்கள் பல்வேறு விடயங்களைத் தாங்கி வந்துள்ளன. மிக்க நன்றி . வால்டேர் குறித்த வேறு முக்கிய புத்தகங்கள் இருந்தால் சொல்லுங்கள்.- பாஸ்டன் பாலாஜி சிந்தனைச் சிற்பி சி.பி . சிற்றரசு அவர்கள் எழுதிய உலகைத் திருத்திய உத்தமர்கள் என்ற புத்தகத்தில் வால்டேரைப் பற்றிய ஒரு சிறு கட்டுரை இருக்கிறது .நான் அந்தக் கட்டுரையிலிருந்து உள்வாங்கிய சில செய்திகளை மட்டும் இங்கே பகிர்ந்துகொள்கிறேன். அதற்கு முன்னால் ஒரு குட்டித் துணுக்கு சொல்லிவிடுகிறேன் .சாக்ரடீஸின் நண்பர் ஒருவர், சாக்ரடீஸிடம் " உன்னிடம் ஒரு செய்தி கூறவேண்டும் " என்றாராம் . உடனே சாக்ரடீஸ் " நீ என்னிடம் அந்த செய்தியையைக் கூறுவதற்கு முன் அதை வாய்மை ,நன்மை , இனிமை என்னும் மூன்று சல்லடைகளால் சலித்துவிட்டுப் பிறகு கூறு" என்றாராம் .உடனே அவருடைய நண்பர் " அம் மூன்று சல்லடைகளால் சலித்தால் கூறுவதற்கு ஒன்றுமே இல்லை " என்றாராம் . நான் கூறப் போகும் செய்திகள் சல்லடைகளில் சலித்ததோ , இல்லை சலிக்காததோ ... ஆனால் படிக்கப் போகின்றஉங்களுக்கு சலிக்காது :-) என்ற நம்பிக்கையில் தட்டிவிடுகிறேன் . கோர்வையாக இருக்கவேண்டும் என்பதற்காக, கட்டுரையின் சில வரிகளை நீக்கியும், கொஞ்சம் மாற்றியும் ,இடைச்செருகலாய் எனது வரிகள் ஒன்றிரண்டைச் சேர்த்தும் இங்கே இடுகிறேன் . 0 வால்டேர் பிறந்தவுடன்(21-11-1694) மிகவும் மெலிந்து காணப்பட்டார் ,அவர் ஒரு நாளைக்குமேல் உயிர் வாழ மாட்டார் என்று சிலர் கூறினார்கள் .ஆனால் 84ஆண்டுகள் இந்தப் புவியில் வாழ்ந்தார் (1694 - 1778) வால்டேரின் வாழ்க்கையில் நடந்த சில சுவையான சம்பவங்கள் ..... ஆர்மண்ட் (Armand) என்பவர் வால்டேரின் அண்ணன் ஆவார் , அவர் ஜேன்சனிசம் என்ற மதசீர்திருத்த இயக்கத்தில் சேர்ந்து அதன் கருத்துக்களை எழுதிக்கொண்டிருந்தார்." என்ன தொழில் செய்யப் போகிறாய் ? " என்று கேட்ட தந்தையிடம் , இலக்கிய தொழில்செய்யப் போகிறேன் " என்று கூறியிருக்கிறார் வால்டேர் . வால்டேரின் தந்தைக்கு தன் மகன்களின் போக்கு பிடிக்கவில்லை , "எனக்கு இரண்டு முட்டாள்கள் பிறந்திருக்கிறார்கள், ஒருவன் வசன முட்டாள் (ஆர்மண்ட்), மற்றொருவன் கவிதை முட்டாள் (வால்டேர்) , அவர்களை எப்படியாவது திருத்துங்களேன் "என்று தன் நண்பர்களிடம் சதா புலம்பிக் கொண்டேயிருப்பாராம் . கொள்கைவாதிகளைக் காட்டிலும் காரிய வாதிகளே சிறந்தவர்கள் என்று அவர் கொண்டிருந்த கொள்கையை தன் இரு மகன்களும் சேர்ந்து தவிடுபொடியாக்குவதை இவரால் சகித்துக் கொள்ள முடியவில்லை. நுண்கலையில் (Fine Arts) கைதேர்ந்த நினாந்தி எல்வென்கொல் என்பவர் ,வால்டேருக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறதென்று உணர்ந்து , அவருக்குக் கல்வியும் போதித்து , சாகும் போது தனக்குத் தேவையான நூல்களை வாங்கிக் கொள்வதற்காக 2000 பிராங்குகளை வால்டேருக்கு எழுதி வைத்தார் . பாரீஸைத் தலை நகரமாகக் கொண்ட ப்ரான்ஸை ஆண்ட மன்னனை , அவனுடைய மதமும் ஆண்டு கொண்டிருந்தது . பதினான்காம் லூயி இறந்து பதினைந்தாம் லூயி பட்டத்திற்கு வந்த நேரம்.அவனுக்குத் தக்க வயது வராத காரணத்தினால் ஒரு மடையனைக் கார்டியனாக்கி இருந்தார்கள் ; ஊரெல்லாம் சிரித்தது , அவன் அரசனுக்குத் தெரியாமல் லாயத்திலிருந்த குதிரைகளை விற்றுவிட்டான்.இதையறிந்த வால்டேர் கிண்டலாக " அரச சபையிலே அன்றாடம் கூடிக் கலையும் கழுதைகளிலே பாதியை விற்றிருந்தால் கூட எவ்வளவோ கண்ணியமாகவும், மேலாகவும் இருந்திருக்கும் " என்று சொன்னார் . இதைக் கேட்ட கார்டியன் வால்டேரை பாஸ்டிலி சிறையிலடைத்தான் . "உலகத்தில் மனிதர்கள் சிரிக்கத் தெரியாமலும் , பிறரை சிரிக்கவைக்கத் தெரியாமலும் இருந்தால் பாதிப் பேர் தூக்குப் போட்டுக் கொண்டு மாண்டு போவார்கள் "என்கிறார் வால்டேர் ஓரிடத்தில். வால்டேருடைய நண்பர்களின் வற்புறுத்தலாலோ,கார்டியனின் மனமாற்றத்தாலோ சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார் வால்டேர் ,சிறையை விட்டு வெளியே வந்தவுடன் துன்ப இயல் நாடகம் ஒன்றையும் , ஒடிப்பி(oedipe) என்ற மற்றொரு நாடகத்தையும் எழுதி அரங்கேற்றினார் . அதுவரை வால்டேரை " ஒரு உதவாக் கரை " என்று சொல்லிக் கொண்டிருந்த அவருடைய தந்தையே , நாடகத்தைப்பார்த்துவிட்டு வால்டேரை வெகுவாகப் பாராட்டினார் . இவருடைய நாடகத்தை சில மதகுருமார்கள் வெறுத்தார்கள் , " ஒருவன் நாடகத் தொழிலை விட்டுவிட்டேன் என்று சொன்னாலன்றி அவனைப் புதைக்க , கல்லறையில் இடம் தருவதில்லை ; மதச் சடங்குகளும் இல்லை " என்று கூறினார்கள் . பிரெஞ்சு நாட்டின் புகழ் வாய்ந்த நடிகை ஏட்ரியன் லெக் ரூவியா என்பவள் நோய்வாய்ப்பட்டு மரணப்படுக்கையிலே கிடக்கிறாள் , அருகில் வால்டேர் நின்று கண்ணீர் உகுத்துக் கொண்டிருந்தார்.மத குருக்கள் வந்தார்கள் , தான் செய்த நடிப்புத்தொழிலுக்காக வருந்தி மன்னிப்புக் கேட்டாலன்றி மதச் சடங்குகளோ , கல்லறையில் இடமோ கொடுக்க முடியாது என்று பயமுறுத்தினர் . என்றாலும் அவள் " என்னை ஆளாக்கி , பேரும் புகழும் பணமும் சம்பாதித்துக் கொடுத்த அந்தத் தொழிலுக்காக மன்னிப்பு கேட்க முடியாது என்று மறுத்து விட்டாள் . சிறிது நேரத்தில் இறந்தும் போய்விட்டாள் , உறவினர்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அடக்கம் செய்வதற்காக ஆயத்தம் செய்து கொண்டிருந்த பொழுது ,போலீஸ் புகுந்து தடியாலடித்து எல்லோரையும் விரட்டிவிட்டு பிணத்தை ஒரு குப்பை மேட்டில் போட்டு சுண்ணாம்புத் தண்ணீரை கொதிக்க கொதிக்க அந்த சடலத்தின் மேல் ஊற்றி அது பஞ்சுபஞ்சாகப் போகும் வரை தடியால் அடித்துவிட்டுப் போய்விட்டார்கள் . இதைக் கண்ட பிறகு தான் வல்டேர் , இனி மதக் கொடுமைகளை ஒழித்தாலன்றி சமுதாயம் தன்மானத்தோடு வாழ முடியாது என்ற முடிவுக்கு வந்தார் .அவர் எழுதிய நாடகங்கள் நடிக்கத் தொடங்கிய இரண்டொரு நாட்களில் தடை போடப்படும் . காரணம் , முன்பு அந்த நடிகையின் மீது நடத்தப் பட்ட கோரக் கொடுமைக்குப் பிறகு , சமுதாய மூடவழக்கங்களைத் தாக்கி நாடகங்கள் அமைத்ததன் விளைவுதான் . முப்பதாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் இறந்த லிஸ்பன் பூகம்பம்,அதனால் உதித்த கண்மூடித்தனமான கடவுள் நம்பிக்கைகுறித்த கிண்டல், போரில் தோற்றதற்காக சுட்டு தண்டிக்கப்பட்டஉற்ற நண்பனின் பிரிவு, ஆகியவற்றை உள்ளடக்கி எழுதப்பட்டCandide-இன் விமர்சனம். - பாஸ்டன் பாலாஜி Candide என்ற கதை எழுதுவதற்குக் காரணமாயிருந்தது லிஸ்பன் பூகம்பம் ,1756 நவம்பர் திங்களில் ஏற்பட்ட இந்த பூகம்பத்தில் 30,000 பேர் உயிரிழந்தனர் ,கிருத்துவமதத்தின் முக்கியமான திருவிழாவான (All Saints Day) அன்று தான் இந்த பூகம்பம் நடந்தது . இதை ,லிஸ்பன் மக்கள் செய்த குற்றம் என்றனர் மத குருமார்கள் . அதை எதிர்த்து தீப்பொறி பறக்க ஒரு கவிதை எழுதி ,இது கடவுளின் குற்றம் என்று சுட்டிக் காட்டினார் வால்டேர் . வால்டேர் கூர்மையான அறிவாளி. பிரபுக்களோடு அவருக்கு ஒருவிதமான love-hate relationship இருந்தது. பிரஷ்யா நாட்டுமன்னன் Federickக்குக்கும் அவருக்குமிடையே இருந்த நட்பை உதாரணமாகச் சொல்லலாம்.அதிகாரமும் செல்வாக்குமுடைய எல்லாரையும்போல பிரஷ்ய மன்னனுக்கு தான் கவிஞன் என்ற எண்ணம் ஆழமாக இருந்தது.தன்னுடைய கவிதைகளை விருந்தாளியாக வந்திருந்த வால்டேரிடம் கொடுத்துப் படிக்கச் சொன்னான்.அரசனிடம் அவை பற்றிப் பாராட்டிக் கூறிவிட்டு, அவர் தம் நண்பனிடம் கூறியிருக்கிறார்:' The king has sent me his dirty linen to wash' - இந்திரா பார்த்தசாரதி நோகன் பிரபு கலந்து கொண்ட ஒரு விருந்தில் வால்டேரும் கலந்து கொண்டு தன் நண்பர்களோடு உரக்கப் பேசிக் கொண்டிருந்தாராம் . " யார் அவன் ? நான் இருக்கிறேன் என்று தெரியாமல் உரக்கப் பேசிக் கொண்டிருக்கிறான் " என்று நோகன்பிரபு கேட்டாராம் . உடனே வால்டேர் " பிரபு அவர்களே , ஏதோ குடும்ப கவுரத்திற்காக பிரபு பட்டம் பெற்றிருக்கிற தங்களைப் போலல்லாமல் சுயமாகவே சிந்தித்துச் சம்பாதித்து வாழ்க்கையை மேம்படுத்திக் கொண்ட ஒரு கனவான் " என்று சுடச் சுட பதிலளித்தாராம் . இதனால் ஆத்திரம் அடைந்த நோகன் பிரபு , ஆட்களை விட்டு அவரை நையப்புடைத்தாராம் . ஆனால் அப்போதும் , " வால்டேரை எங்கு வேண்டுமாலும் அடியுங்கள் , ஆனால் அவன் தலையில் மட்டும் அடிக்காதீர்கள் . ஏனென்றால் அந்தத் தலையிலிருந்து இன்னும் எவ்வளவோ வரவேண்டியிருக்கிறது "என்று நோகன் பிரபு கூறினாராம். 0 பிரஷ்ய நாட்டு மன்னன் ஆதரவில் சிறிது காலம் வாழ்ந்தார் வால்டேர் . அது சமயம் மன்னனிடம் சிலர் வால்டேரைத் துரத்திவிடுமாறு கேட்டுக் கொண்டிருந்தார்கள் . அதற்கு பிரெடெரிக் மன்னன் " அதிகமாகப் போனால் வால்டேர் இன்னும் ஓராண்டு காலம் இங்கே இருக்க வேண்டியதிருக்கும் . அதன் பிறகு ஆரஞ்சுப்பழத்தை பிழிந்த உடன் தோலை எறிந்து விடுவதைப் போல் எறிந்து விடலாம்" என்று கூறியிருக்கிறார். இந்தச் செய்தி வால்டேருக்கும் எட்டியது.இருந்தாலும் இதைக் காட்டிக் கொள்ளாமல் , அறிந்து கொள்ளாதவர் போலே நடந்து கொண்டனர் .ஆனால் பகை மட்டும் வளர்ந்து கொண்டே போனது . 0 வால்டேர், என்னுடைய வணிகமெல்லாம் நான் நினைப்பதை மக்களுக்குச் சொல்வதுதான் என்று கூறினார் , (My trade is to say what I think ) . தனது தள்ளாத வயதிலும் (83) இரேனி(Irene) என்ற ஒரு நாடகத்தை எழுதி , அது நடிக்கப்படுவதைத் தானே உட்கார்ந்து பார்த்து விட்டு படுக்கையில் படுத்துவிட்டார் . மரணம் நெருங்குவதையும் அறிந்து கொண்டார்.இதையறிந்த ஒரு மத குரு வால்டேரின் அருகில் வந்து ,தங்களுக்கு ஆத்ம விடுதலை அளிக்க வந்திருக்கிறேன் எனறார் . உடனே வால்டர் அவரிடம் ," தாங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் ? " என்று கேட்டார் . அதற்கு அந்த மதகுரு நான் கடவுளிடமிருந்து நேராக வருகிறேன் என்றார் . உடனே வால்டேர் அதற்கான அத்தாட்சியைக் காட்டுங்கள் என்று கேட்டார் .மதகுரு தலை குனிந்த படியே திரும்பி விட்டார் . 0 மனித சுதந்திரத்தைப் பற்றி எழுதிய ரூஸோ, தம் வாழ்நாள் முழுவதும் ஒரு பணிப்பெண்ணுடன் இருந்தார். அவளுக்கு சிநேகிதி அல்லது மனைவி என்றஅந்தஸ்து தரவேயில்லை. அவர்காலத்திய அவர் நண்பர்கள் அவளை வேலைக்காரி என்றே நினைத்தார்கள். நம்முடைய இந்தக் காலத்திய 'புரட்சிச் சிந்தனையாளர்' களின் சொந்த வாழ்க்கையும் இப்படித்தான். - இந்திரா பார்த்தசாரதி " மனிதர்களைப் பற்றிச் சிந்திப்பது மனிதனின் கடமை " என்று சொன்னவர் சாக்ரடீஸ் . மனிதர்கள் எங்கும் சுதந்திரமாகவே பிறக்கிறார்கள் , ஆனால் என்றும் தளைகளால் பூட்டப் பட்டிருக்கிறார்கள் " என்று சொன்னவர் ரூசோ( 1712-1778) ,மகத்தான பிரெஞ்சுப் புரட்சிக்கு எழுத்துக்கள் என்ற வல்லமை மிக்க வெடிகுண்டுகளால் சமுதாய ஒப்பந்தம் (Socail Contract - 1762- Jean Jacques Rousseau ) என்ற நூலை ஆக்கித் தந்தவர் ரூசோ . ரூசோவின் இளமை அவ்வளவு சுவையுள்ளதாகவோ , மேன்மை பொருந்தியதாகவோ , பெண்களிடத்தில் நடந்து கொள்ள வேண்டிய இங்கிதம் நிறைந்ததாகவோ ,சிறந்த படிப்பாளி என்று சொல்லத்தக்க அளவிலோ இருந்ததில்லை . எந்த சீமாட்டியாவது இவனை விருந்துக்கு அழைத்தால் , உணவை சுவைப்பதை விட உணவிட்டவளின் அங்க அசைவுகளையே பார்த்துக் கொண்டிருப்பானாம் .இதை அவரே ஒப்புக் கொள்கிறார் . " நான் பதினைந்து , பதினாறு வயதிற்குள்ளாகவே கட்டுக்கடங்காத காமந்தகாரனாய்விட்டேன் " என்கிறான் ஓரிடத்தில். தன் இளம் வயதில் ரூசோ பொறுப்பில்லாமல் நடந்து கொண்ட காரணத்தினால் பாரீஸ் நகரத் தெருக்களில் திரிய வேண்டிய நிலமைக்குத் தள்ளப்பட்டார் .பிறகு சேவாய் நகரை அடைந்து பாண்ட் வீர் என்ற பாதிரியார் தயவில் அன்னெஸி நகரத்திலிருந்து , லாரண்ஸ் சீமாட்டியை அணுகி , பாதிரியார் கொடுத்த சிபாரிசு கடிதத்தைக் கொடுத்து அங்கு தங்கியிருந்தார் . அப்போது ரூஸோவுக்கு வயது 15 ,அந்த சீமாட்டிக்கு வயது 28 , தன்மேல் கருணை காட்டிய அவள் காதல் காட்டமாட்டாளா என்று ஏங்கினார் . அதை அவள் புரிந்து கொள்ளவுமில்லை . இப்படியே அலைந்த இவருடைய வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்பட்டது .ஒரு பிரபுவின் தயவால் ஓர் உணவு விடுதியில் தங்க வேண்டி வந்தது .அங்கே தெரஸ் என்ற வேலைக்காரி பணிபுரிந்து வந்தாள். அவளுக்கு எழுதப் படிக்கத் தெரியாது , அழகானவள் ,அவளிடம் ரூசோ கொண்ட நட்பு, காதலாக மாறி அவள் மூலம் இரண்டு குழந்தைகளைப் பெற்றார் . அந்தக் குழந்தைகள் ,சட்ட ரீதியான மனைவிக்குப் பிறக்காத காரணத்தால் , ஒரு அனாதை விடுதியில் விட்டுவிட்டார் . இவர் தான் பிளேட்டோ குழந்தைகளைப் பற்றி எழுதிய நூலைத் தழுவி (Emile) என்ற நூலை எழுதினார் .அதே ஆண்டு தான் (Social contrast) என்ற உலகப் புகழ் பெற்ற நூலை எழுதினார் . ஒரு கட்டத்தில் ரூசோவை கிருஸ்துவின் துரோகி என்று சொல்லி எங்கு சென்றாலும் கல்லால் அடித்து விரட்டினார்கள் . ஆனால் இங்கிலாந்து மட்டும் இவரை அன்போடு அழைத்துக் கொண்டது ." காலத்தின் மேல் குற்றமில்லை . மக்கள் மனோ நிலை தான் காரணம் "என்று ஷேக்ஸ்பியர் கூறியது போல் நமது நினைப்பே காலத்தின் நிலைக்களனாய் அமைந்து விடுகிறது . ஒரு காலத்தில் பாரீஸ் நகரத்து உயர் நீதி மன்றத்தின் முன்னால் தீயிட்டுக் கொழுத்தப் பட்ட சமுதாய ஒப்பந்தம் மற்றும் எமிலி ஆகிய நூல்களை உலக மக்கள் போற்றத் துவங்கியதைக் கண்டதும் , பிரான்சு நாடு ரூசோவை அழைத்துச் சிறப்பிக்கலாமா என்றெண்ணியது .ஆனால் ரூசோவின் மனத்தில் விழுந்திருந்த பழைய வடு மறையவில்லை.ஆதலால் , அவர் பிரான்சுக்கு செல்லவுமில்லை .இப்படி அண்டத்தையே கலக்கிய பேருருவமாய்த் திகழ்ந்த ரூசோ ,கிபி 1778 ஆம் ஆண்டு முகமெல்லாம் வீங்கி , தன் அறையில் மாண்டு கிடந்தார் .அவர் மரணத்தின் உண்மையான காரணம் மறைக்கப்பட்டு மருத்துவர்களும் ஊமையாக்கப் பட்டார்கள் . ஓஷோவின் வெற்றுப்படகு என்ற புத்தகத்திலிருந்து.... சாக்ரடீஸ் மிகவும் ஆழமாக , ஒவ்வொன்றையும் மிகவும் நுண்ணியமாகத் தெரிந்துகொள்வதற்கான கேள்விகளைக் கேட்டு வந்தார் . இதனால் ஏதென்ஸ் நகரிலுள்ள மக்கள் கோபமடைந்தார்கள் . சாக்ரடீஸ் மற்றவர்களை முட்டாளாக்குவதற்கான முயற்சியைச் செய்து கொண்டிருந்தார் . அவர்கள் சாக்ரடீஸைக் கொன்றனர். சாக்ரடீஸ் வாழ்ந்த காலத்தில் சீனாவில் சுவாங்தஸ¤ வாழ்ந்து வந்தார் . சாக்ரடீஸ் , சுவாங்தஸ¤ வைச் சந்தித்திருந்தால், இந்த ரகசியத்தைச் சொல்லியிருப்பார் . " யாரையும் முட்டாளாக்க முயற்சி செய்யாதே , ஏனெனில் முட்டாள்கள் அதை விரும்புவதில்லை ,பைத்தியக் காரனிடம் அவன் பைத்தியம் என்பதை நிரூபிக்காதே , ஏனெனில்எந்தப் பைத்தியமும் அதை விரும்புவதில்லை , கோபமடைவான் , ஆத்திரமடைந்து உன்னைக்கொல்ல வருவான் , நீ அவனை விட உயர்ந்தவன் என்பது நிரூபிக்கப்பட்டால் , அவன் உடனே பழிவாங்கி விடுவான் . நீ முட்டாளாக இருப்பது நல்லது , அப்பொழுது மற்றவர்கள் உன்னைப் பார்த்து சந்தோசம் அடைவர். இந்த நுணுக்கமான வழிமுறை மூலம் நீ மற்றவர்களை மாற்ற முடியும் , பிறகு உனக்கு எதிராக அவர்கள் இருக்க மாட்டார்கள் ." இதனால் தான் கீழை நாடுகளில் , முக்கியமாக இந்தியா , சீனா ,ஜப்பான் போன்ற நாடுகளில் கிரேக்க நாட்டில் சாக்ரடீஸை விஷமிட்டுக் கொன்றது போன்ற அசிங்கமான சமபவங்கள் நிகழவில்லை , இது ஜெருசலேமில் நிகழ்ந்தது - இயேசு சிலுவையில் அறையப்பட்டார் .இது ஈரானில் , எகிப்தில் மற்ற நாடுகளில் நிகழ்ந்தது - அனேக புத்திசாலிகள் கொல்லப்பட்டார்கள். இது மாதிரியான நிகழ்ச்சிகள் இந்தியாவிலோ , சீனாவிலோ ,ஜப்பானிலோ ஏற்படவில்லை . ஏனெனில் இந்த மூன்று நாடுகளிலும் உள்ள மக்கள் புத்திசாலியான மனிதனைப் போல் நடந்து கொள்வது பெருந்துன்பங்களை விளைவிக்கும் என்பதை உணர்ந்திருந்தார்கள் . முட்டாளைப் போல , பைத்தியக்காரனைப் போல நடந்து கொள்ளுங்கள் . இது தான் புத்தி சாலியின் முதல் படியாகும் , அப்பொழுது தான் நீங்கள் அவனைக் கண்டு பயப்படமாட்டீர்கள் . நீங்கள் எதற்கும் அலட்டிக் கொள்ளாமல் அமைதியாக இருப்பீர்கள் .
  17. அச்சமில்லை அச்சமில்லை மனமே http://www.youtube.com/watch?v=iINdfUsak8E...feature=related
  18. பழம் நழுவி பாலில் விழுந்து டம்பளர் உடைந்து போச்சு. ஏன்? விழுந்தது பலாப்பழம் ஆச்சே ஏண்டா மெதுவா லெட்டர் எழுதுற? எங்க அப்பாவுக்கு வேகமாக படிக்க வராது, அதான். உங்க வீட்டுல மொத்தமா எத்தனை பேரு? எங்க வீட்டுல மொத்தமா யாருமே இல்லைங்க எல்லோரும் ஒல்லி தான். நகை கடைக்காரனுக்கு பிடித்த சோப்? பொன் வண்டு. ஓட்டப்பந்தயத்துல கலந்துக்கப் போறேன்.. ஆசீர்வாதம் பண்ணு பாட்டி. பார்த்து மெதுவா ஓடிப்போ, வேகமாக ஓடி கைய, கால ஓடிச்சுக்கிடாதே. டேய் நாளைக்கு பெண் பார்க்க போறேன். கண்டிப்பா நீ வரனும்? ஒனக்கு ஒரு கஷ்டம் என்றால் நான் சும்மா இருப்பேனா. நீங்கள் எப்போதும் என்னசோப் உபேயகிக்கிறீங்க? நான் எப்போதும் சோப் உபேயாகிப்பதில்லை குளிக்கும் போது மட்டும் தான். அந்த ஆள் புத்தகத்்தை தின்கிறார் ஏன்? அவருக்கு அறிவு பசி அதிகமாயிடுச்சு. கி.பி. 5000ல் உலகம் எப்படியிருக்கும்? உருண்டையாகத்தான்... ஒரு குடிகாரன் கீழே குனிந்து எதையோ தேடிக் கொண்டிருந்தா ன். அதைக் கண்ட ஒருவன் நீ என்ன தேடுகிறாய்? என்று கேட்டான். என் கைக்கடிகாரம் கீழே விழுந்து விட்டது என்றான் குடிகாரன் வந்தவனும் தேடிப் பார்த்தான் கைக்கடிகாரம் அகப்படவில்லை. உண்மையிலேயே - நீ கைக்கடிகாரத்தை தொலைத்தது உண்மையா ஆமாம் எங்கே தொலைத்தாய்? அடுத்த தெருவில் தொலைத்தேன். அதை இங்கே ஏன் தேடுகிறாய்? அந்த தெருவில் லைட் இல்லை வெளிச்சமும் இல்லை என்றான். குடிகாரன். அவர் பயங்கர குடிகாரர்னு எதை வச்சு சொல்ற? அவர் வீட்டுக்கு பக்கத்துல அவரை நம்பி ஒரு ஊருகாய் கம்பெனியே இருக்குன்னா பாரேன். குன்னக்குடி வைத்தியநாதன் வயலினை கேட்டிருக்கீங்களா? நாம கேட்டா கொடுப்பாரா... உங்க வீட்டில் இன்று சாம்பாரா? எப்படி கண்டுபிடித்தீர்கள்? நான் மூக்காலும் உணர்ந்தவன். வருடத்தில் எத்தனை மாதத்தில் 28 நாட்கள் உள்ளது? எல்லாத மாதத்திலும் 28 நாள் உள்ளது. கச்சேரிக்கு போனவர்கள் யாரும் திரும்பி வரவில்லை ஏன்? இசையெனும் இன்ப வெள்ளத்தில் எல்லோரும் மூழ்கி விட்டார்கள். மிகவும் மக்கான ஊர் எது? மாமண்டூர். நம்ம கபாலி ரொம்ப சின்சியர் எப்படி சார்? நேத்து நைட் 12 மணிக்கு திருடிட்டு, ஒரு மணிக்கே வீட்டுக்கு வந்து மாமூல் கொடுத்துட்டு போறான். ஒவ்வொரு விரல்லியும் ஒரு சிகெரட் வெச்சு பிடிக்கிறாரே? நிறைய சிகெரட் பிடிப்பாருன்னு சொன்னனே அது இவர்தான். நேற்று அவனை ஒன்றுக்குமூ லாயக்கில்லை என்று கூறிய பிறகு எல்லோரும் மூக்கில் விரல் வைக்கும்படி ஒரு காரியம் செய்து விட்டான். அப்படி என்ன காரியம் செய்தான்? கால்வாயை குச்சியால் கலக்கி விட்டான். மெக்கானிக்கு பிடித்த சோப் எது? வீல் சோப். நாய் கடிக்கு முதலில் என்ன செய்யனும்? நாய்கிட்டே போய் காலை கொடுக்கனும். வயதான பாட்டி வீட்டிற்கு வெளியே எதையோ தேடிக்கொண்டிந்தார். அங்கு வந்தவர் என்ன தேடிக் கொண்டிருக்கீறீர்கள் என்றார்? வீட்டிற்கு உள்ளே போட்ட நைகைய தேடிக் கொண்டிருக்கிறேன் என்றார் பாட்டி? ஏன் வெளியே தேடிக் கொண்டிருக்கீறீர்கள் என்றர் அவர் ? உள்ளே மின்சாரம் கட் அதான் வெளியே தேடுகிறேன் என்றாராம். உள்ளாடை அணியும் ஊர் எது? வாணியம் பாடி சாப்பிடக்கூடிய ஆணி எது? பிரியாணி ஒரே வீட்ல பத்து தடவைக்கு மேலே திருடியிருக்கியே ஏன்? நான் அவங்க பேமிலி திருடன் எஜமான். உங்க வீட்டு கதவுல ராமசாமி இன் அவுட்னு போர்டு வெச்சிருக்கீங்கேள, அவர் ரொம்ப பிஸியா? ம்ஹும் கடன்காரங்களுக்கு உதவியா இதை வெச்சிருக்கார். உங்க வீடு எங்கே இருக்கு ஸார்? அடமான பேங்க்ல இருக்கு ஸார்? அந்த கடையில் குடை வாங்காதீங்க அது ராசில்லாத கடை வாங்கினா என்ன ஆகும்? மழையே வராது. எதுக்கு வேலைக்காரியை எட்டு மணிக்கு வரச் சொல்ற? ஏழு மணிக்கு தலைப்பு செய்திகள் சொல்லுவா எட்டு மணிக்கு பக்கத்து வீட்டுச் செய்தியெல்லாம் விரிவா சொல்லுவா. நான் நீச்சல் கத்துக்கேறன் எங்கே...? தண்ணியிலதான்...! தாத்தா இனிமே கம்பியூட்டர் படிச்சாத்தான் வேலை கிடைக்கும். அப்படி நீ படிச்சா கிடைக்காதா? நான் ஹார்லிக்சை அப்படியே சாப்பிடுவேன்? முட்டாள் பாட்டில் எப்படி ஜீரணமாகும். கப்பலே மூழ்கினாலும் கன்னத்துல கை வைக்க கூடாது? ஏன்? கன்னத்துல கை வைச்சா நீச்சல் அடிக்கடி முடியாதே. இவருக்கு நான் பொண்ணுதர்றேன். நீ பொண்ணு தர்றேன்னு பயங்கர போட்டி அப்படி என்ன வேலை செய்றாரு? தண்ணீர் லாரி வச்சிருக்காரு. குடி குடியை கெடுக்கும் படம் என்னாச்சு? ஊத்திக்கிச்சு டி.வி. வாங்கினால் 20 கைக்குட்டைகள் இலவசமாக கொடுக்கிறா ர்களே ஏன்? மெகா சீரியல் பார்க்கும் போது வரும் கண்ணீரை துடைக்கதான். ஆட்டோவில் பயணம் செய்த கிராமவாசி மீட்டரில் 30ரூ காட்டிய போதும் 15ரூ தான் தந்தார் ஏன்? டிரைவரும் ஆட்டோவில் வந்ததால் 50-50 பாதி பாதி. உன் பல்லழகைப் பார்த்துக்கிட்டே இருக்கலாம் போல் இருக்குன்னு என் காதலிகிட்டே சொன்னது தப்பாப் போச்சு என்னவாம்? பார்த்துகிட்டே இருங்கன்னு சொல்லி பல்செட்டை கழட்டி என் கையில கொடுத்துக்கிட்டு போயிட்டார். குடி குடியைக் கெடுக்குமாடா? நீ வாங்கிக் கொடுத்தா உன் குடி கெடும் நான் வாங்கிக் கொடுத்தா என் குடி கெடும். 100 வயதுவரை வாழ்வது எப்படிங்கற புத்தகத்தை கொடுத்தவரை திட்றாரே ஏன்? அவர்க்கு வயது 102. எலிக்கும், மவுசுக்கும் என்ன வித்தியாசம் எலிக்கு வால் பின்னாடி இருக்கும், மவுசுக்கும் வால் முன்னாடி இருக் கும். இங்கே ஒருத்தன் நாயா கத்திக்கிட்டிருக்கேன் எங்கடிபோன? உங்களுக்கு பிஸ்கட் வாங்க தாங்க போனேன். என்னால் என் நண்பர்கள் துன்பபப்படுவதைப் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. உடனே அவர்களுக்கு உதவி செய்வாயா? நான் கண்ணை மூடிக் கொள்வேன். இல்லாவிட்டால் அந்த இடத்தை விட்டு ஓடிடுவேன். குழந்தையை ஏன் பிரிட்ஜில் வைத்து பூட்ரீங்க வெளிய விட்டா கெட்டுப்போயிடும் அதான். மறதிக்கு பெயர் போன புகழ் பெற்ற ஓர் அறிஞர் இரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். டிக்கெட் சோதனையாளர் பயணிகளிடம் டிக்கெட்டைக் வாங்கி பார்த்து விட்டு அந்த அறிஞரிடம் வந்து அவருடைய டிக்கெட்டை கேட்டார். அறிஞர் அதை வைத்த இடம் தெரியாமல் தேடிக் கொண்டிருந்தார். அவர் யார் என்பதை அறிந்திருந்த டிக்கெட் சோதனையாளர் பரவாயில்லை நான் உங்களிடம் வார்த்தைகளை நம்புகிறேன். டிக்கெட் தேட வேண்டாம் என்று சொன்னார். அதற்கு அறிஞர் எனக்கு தற்போது பரிய சங்கடம் ஏற்பட்டிருக்கிறது. நான் இப்பொழுது எந்த ஊருக்கு போய்க் கொண்டிருக்கிறேன் என்பது தெரியவோ அந்த டிக்கெட் எனக்கு இப்பொழுது தேவைப்படுகிறது. பால் எப்போது வெட்கப்படும்? அதன் ஆடையை எடுத்தப்பின். காலில் சுத்தின பாம்பு கடிக்குமா? கடிக்காதா? ஏன் கேட்கிறே? உங்க கால்ல ஒரு பாம்பு சுத்தியிருக்கேன்னு கேட்டேன்...! இந்த காலத்துல பத்து ரூபாய்க்கு மதிப்பே இல்லாம போச்சு ஆமா சரியா சொன்னீங்க... தெரிஞ்சும் ஏன் என் கல்யாணத்துக்கு பத்து ரூபாய் மொய் வெச்சீங்க...! நீ என்ன பேஸ்ட் யூஸ் பண்ற? பாபுஸ் பேஸ்ட் நீ என்ன சோப் யூஸ் பண்ற? பாபுஸ் போப் அது என் புது பிராண்டா? அட பாபுன்றது என் ரூம் மேட்டோட பேருப்பா. ஜோதிடம் சொல்பவர், ஐந்து ரூபாய் தந்தால் 2 கேள்விகள் கேட்கலாம். என்று சொனார். இரண்டு கேள்விகளுக்கு ஐந்து ரூபாயா? என்று வந்தவர் கேட்டார் ஆமாம் உங்கள் இரண்டாவது கேள்வி என்ன? என்றார் ஜோதிடம் சொல்பவர். கோயில் உண்டியலை திருடியது உண்மையா? உண்மைதான் ஜட்ஜ் ஐயா, ஆனா அதுல இருந்த பணத்தை எடுத்துகிட்டு உண்டியலை திருப்பி வெச்சிட்டேன். ஹேலா நான் குமார் பேசுகிறேன். என் கடனை எப்ப திருப்பி தருவீங்க? சீத்தோட்ல மூன்று குமார்கிட்டே கடன் வாங்கி இருக்கேன். ஈரே ரட்டுல 3 குமார்கிட்டே கடன் வாங்கி இருக்கேன். பெருந்துறையில் 6 குமார்கிட்டே கடன் வாங்கியிருக்கேன். யாரே இருந்தாலும், தெளிவா விபரமா பேசுங்க குழப்பாதீங்க. ராமு - 10 ரூபாய் இருந்தா கொடு சோமு - என்னிடம் சுத்தமா ரூபாய் இல்லை ராமு - பரவாயில்லை, கொடு நான் சுத்தம் செய்து கொள்கிறேன். பூட்டைத் திறக்கணும்னா என்ன செய்யனும்? முதல்ல பூட்டை பூட்டணும்...! சாப்பிட முடியாத மீன் எது? விண்மீன் அதென்ன மாடில மேகக்கூட்டம் மாதிரி மேடை செட் அப்? அது நிச்சயதார்த்தமேடை. கல்யாணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்டுவது இல்லையா. பிக்பாக்கெட் ரங்காவின் கல்யாண வீட்டில் ஒரு சௌகரியம் இருக்கு? என்னது? மொய்ப்பணத்தை அவங்களே எடுத்துப்பாங்க. ஒரு பெண் குளத்தில் நீர் எடுப்பதற்காக 4 தெரு தாண்டி வந்து கொண்டிருக்கிறாள். திடீரென்று வீட்டிற்கு திரும்புகிறாள் ஏன்? குடத்தை கொண்டு போகவில்லை. டைம் இஸ் கோல்டுன்னு சொன்ன, நீ ஏன் ஒத்துக்க மாட்டேங்குற? அதை அடமானம் வைக்க முடியாதே அம்மா எப்போது ஐயா ஊர்ல இருந்து வருவாரு? ஏன் ராப்பிச்சை இதை தினமும் கேட்குறே? அவர் சமையல் சாப்பிட்டு பழக்கமாயிடுச்சே.
  19. பாடல்: துளி துளியாய் மிகவும் கவலையானது காட்சியில் வரும் இரு இளம் கலைஞர்களும் இன்று உயிரோடு இல்லை என்பது தான். ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
  20. பாடல்: நீ முத்தம் ஒன்று கொடுத்தால் படம்: போக்கிரி
  21. பாடல்: ஐயோ ஐயோ ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
  22. பாடல்: கண்ணன் வரும் வேளை படம்: தீபாவளி இசை: ஏ.ஆர் ரகுமான் (ஈஸ் தவறெனின் திருத்துங்கள்) ஜம்மு பேபிக்காக , பாவனாவின் அழகிய நடனத்துடன் கூடிய பாடல்
  23. மரியாதை ராமன் கதைகள் - நேர்மை கொண்ட உள்ளம் மரியாதை ராமன் தெனாலி ராமன் போல் விகடகவி அல்ல, அவர் மிகவும் புத்திசாலி, இளம் வயதிலேயே பெரியவங்களுக்கு புலப்படாத நுணுக்கமான விசயங்களையும் எளிதில் விடுவிப்பார். மரியாதை ராமனின் தீர்ப்புகள் அனைத்தும் புகழ்பெற்ற கதைகளாக மக்களிடம் பேசப்பட்டு வருகிறது, அதில் ஒன்று இதோ. மரியாதை ராமன் வசித்து வந்த ஊரில் சோமன் என்ற ஒரு பணக்காரன் இருந்தார். அவர் மிகவும் பொல்லாதவர் பணத்தாசைப் பிடித்தவர். தன்னிடம் வேலை செய்பவர்களுக்கு சரியான கூலி கொடுக்கமாட்டார். ஒரு முறை சோமன் தன் தோட்டத்தில் விளைந்த தேங்காய்களை சந்தையில் விற்று விட்டு, கிடைத்த பத்தாயிரம் ரூபாயுடன் தன்னுடைய மாட்டு வண்டியில் காட்டு வழியாக வீட்டுக்கும் வரும் போது தனது பணப்பையைத் தொலைத்துவிட்டார். வீட்டுக்கு வந்ததும் வண்டியில் பணப்பையை தேடி பார்த்து கிடைக்காமல் புலம்பி தள்ளினார். மாட்டு வண்டி ஓட்டி வந்தவர் முதல் அனைவரையும் கேட்டு பார்த்து கிடைக்காமல் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தார். அப்போ அவரது மனைவியார் “உங்க பணப்பையை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு தகுந்த சன்மானம் கொடுக்கிறேன் என்று சொல்லுங்க, கண்டிப்பாக யாராவது கொண்டு வந்து கொடுப்பாங்க" என்றார். ஆகா இது நல்ல திட்டமாக இருக்கிறதே என்று நினைத்து அடுத்த நாளே ஊர் முழுவதும் தண்டோரா போட்டு சொல்லிவிட்டார். ஊர் மக்களும் பணப்பை கிடைத்தால் கொடுத்து சன்மானம் வாங்கலாம் என்று நினைத்தார்கள். அப்படி தேடி பார்த்தும் யாருக்கும் பணப்பை கிடைக்கவில்லை. இந்த சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்கு பின்பு அருகில் இருந்த ஊரிலிருந்து அந்த ஊருக்கு ஒரு வழிப்போக்கர் வந்தார். அவர் பெயர் பூபாலன். மிகவும் நல்ல குணமுடையவர். ஏழையாக இருந்தாலும் கவுரவமாக வாழ பிரியப்படுபவர். தன்னால் முடிந்தவரை அடுத்தவர்களுக்கு உதவுபவர். அவர் விவசாயம் செய்த நிலத்தில் நிலத்தடி நீர் கிடைக்காததால் விவசாயம் சரியாக செய்யமுடியவில்லை, வேறு தொழில் செய்யவோ தன்னிடம் பணமும் அனுபவமும் இல்லை என்பதால் பக்கத்து ஊருக்கு சென்று ஏதாவது வேலை செய்து, சம்பாதித்து பின்னர் தொழில் தொடங்க நினைத்து வந்தார். போகிற வழியில் காட்டுப்பாதையில் இருந்த அம்மன் கோயிலுக்கு போய் வேண்டிக் கொண்டார். அப்படி காட்டுவழியில் போகும் போது அங்கே ஒரு புறா அடிப்பட்டு கீழே கிடந்தது, அதை பார்த்து இரக்கப்பட்ட பூபாலன் அந்த புறாவை தூக்கிக் கொண்டு அருகில் இருந்த குளத்திற்கு கொண்டு சென்று தண்ணீரை எடுத்து அந்த புறாவின் வாயில் ஊற்றினார், பின்னர் அந்த புறாவை அருகில் இருந்த மரக்கிழையில் வைத்துவிட்டு வந்தார். அவர் அப்படி வரும் போது பாதையின் ஓரத்தில் காலில் ஏதோ மாட்டியதை கண்டார், அது ஒரு பை. அதில் நிறைய பணமும் இருந்தது. அதை எடுத்தவுடன் பூபாலனுக்கு யாரோ பாவம், தன் பணப்பையை விட்டு விட்டு போயிட்டாங்க, அப்படி தொலைத்தவர் மனம் எத்தனை வேதனைப்படுமோ, எனவே விரைவில் அவரை கண்டுபிடித்து கொடுத்துவிட வேண்டும் என்று ஊருக்கு விரைந்தார். அப்போ ஊருக்குள் சென்ற போது அங்கே இருந்த கடையில் விசாரித்த போது கடைக்காரர் சோமனைப் பற்றி சொல்லி, அவர் தான் தொலைத்தவர், நீங்க இதை கொடுத்தால், கண்டிப்பாக சன்மானம் கொடுப்பார் என்றார். உடனே பூபாலனும் சோமன் வீட்டை தேடி பிடித்து சென்று பணப்பை கிடைத்த விபரத்தை சொன்னார், சோமனுக்கு சந்தோசம் தாங்கமுடியவில்லை. உடனே அந்த பணப்பையை வாங்கிக் கொண்டார், அதே நேரம் அவரது கெட்ட எண்ணமும் வெளிப்படத் தொடங்கியது. பணப்பை கிடைத்து விட்டது, பணமும் சரியாக இருக்குது, இப்போ ஏன் இவனுக்கு சன்மானம் கொடுக்க வேண்டும், சன்மானம் கொடுக்காமல் தப்பிக்க என்ன செய்யலாம் என்று யோசித்தார் சோமன். கெட்ட மனம் கொண்ட சோமன் பூபாலனைப் பார்த்து “நீ என்னை ஏமாற்றப் பார்க்கிறாய், நான் என்னுடைய பையில் வைர மோதிரம் ஒன்றையும் வைத்திருந்தேன், அது காணவில்லை, மரியாதையாக கொடுத்து விடு, உன்னை சும்மா விடமாட்டேன்” என்று கத்தினான். பூபாலனுக்கு ஒன்றுமே புரியவில்லை, ஒருவேளை இவர் சொன்னது போல் வைர மோதிரம் இருந்து தொலைந்து போயிருக்குமா, நாம் தான் எடுக்கவில்லையே, இவரிடம் சன்மானம் வாங்குவதை விட பிரச்சனையில் இருந்து தப்பிக்கலாம் என்று யோசித்தார். சோமனோ விடாமல் கத்தி ஆர்ப்பாட்டம் செய்தார், பூபாலன் பணப்பை கொண்டு வந்த செய்தியை ஊராருக்கு சொன்ன கடைக்காரர், கஞ்சப்பயல் சோமன் அப்படி என்னத்தான் பரிசு கொடுக்கப் போறான் என்று பார்ப்போம் என்று அனைவரையும் அழைத்து வந்தார். வந்த இடத்தில் பூபாலன் குற்றவாளி போல் நிற்பதை கண்ட ஊரார் சோமனை சும்மா விடக்கூடாது, இந்த பிரச்சனையை மரியாதை ராமனிடம் தான் கொண்டு சென்று தீர்ப்பு கேட்க வேண்டும் என்று சொன்னார்கள். சிறிது நேரத்தில் சோமன், பூபாலன், ஊர் மக்கள் அனைவரும் மரியாதை ராமன் முன்னால் போய் நின்றார்கள். சோமன் தான் பணப்பையும், அதில் இருந்த வைர மோதிரம் தொலைத்த கதையையும், பூபாலன் தான் பணப்பை கண்டுபிடித்த கதையையும் சொன்னார்கள். ஏற்கனவே சோமன் அறிவித்த தண்டோரா பற்றி மரியாதை ராமனுக்கு தெரியும், அப்போ தண்டோரா போடும் போது வைரமோதிரம் பற்றி ஒன்றும் சொல்லாததும் தெரிந்தது தான். ஆக மொத்தம் சோமன் ஏமாற்றுகிறான் என்பதை புரிந்துக் கொண்ட மரியாதை ராமன், சோமனுக்கு சரியான தண்டனை கொடுக்க நினைத்து இவ்வாறாக தீர்ப்பு கூறினார் “சோமன் தொலைத்த பையில் பணமும், வைர மோதிரமும் இருந்தது என்று அவரே சொல்லியிருக்கிறார். இப்போ பூபாலன் கொண்டு வந்த பையில் பணம் மட்டுமே உள்ளது, ஆக இது சோமனின் பையே இல்லை, வேற யாரோ தொலைத்த பை. அப்படி தொலைத்தவர் இதுவரை யாரும் புகார் கொடுக்கவில்லல, அவ்வாறு யாரும் புகார் கொடுக்காதவரை நம்ம ஊர் வழக்குப்படி கிடைத்த பணத்தில் 10 பங்கு அம்மன் கோயில் செலவுக்கு கொடுத்துவிட்டு, மீதியை எடுத்தவரே வைத்துக் கொள்ளலாம், ஆக பூபாலன் அந்த பணத்தை தன் சொந்த உபயோகத்து வைத்துக் கொள்ளலாம், சோமனின் பணம் மற்றும் வைர மோதிரம் கொண்ட பையை கண்டுபிடித்தவுடன் சோமனே சன்மானம் கொடுப்பார், சபை கலையலாம்”. மரியாதை ராமன் தீர்ப்பு சொன்னதும் சோமனுக்கு இதயமே நின்று போனது போல் ஆகிவிட்டது. பூபாலன் கிடைத்த பணத்தில் 10 சதவிதம் அம்மன் கோயிலுக்கு கொடுத்துவிட்டு, மீதியை தன் சொந்த ஊருக்கு கொண்டு சென்று தொழில் செய்து நலமாக வாழ்ந்து வந்தார்.
  24. பாடல்: உனக்குள் நானே படம்: பச்சைகிளி முத்துசரம் இசை: கரிஸ் ஜெயராஜ்
  25. வடிவேலுவின் நகைசுவை பகுதி ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.