Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

nunavilan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by nunavilan

  1. பாடல்: துளி துளியாய் மிகவும் கவலையானது காட்சியில் வரும் இரு இளம் கலைஞர்களும் இன்று உயிரோடு இல்லை என்பது தான். ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
  2. பாடல்: நீ முத்தம் ஒன்று கொடுத்தால் படம்: போக்கிரி
  3. பாடல்: ஐயோ ஐயோ ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
  4. பாடல்: கண்ணன் வரும் வேளை படம்: தீபாவளி இசை: ஏ.ஆர் ரகுமான் (ஈஸ் தவறெனின் திருத்துங்கள்) ஜம்மு பேபிக்காக , பாவனாவின் அழகிய நடனத்துடன் கூடிய பாடல்
  5. மரியாதை ராமன் கதைகள் - நேர்மை கொண்ட உள்ளம் மரியாதை ராமன் தெனாலி ராமன் போல் விகடகவி அல்ல, அவர் மிகவும் புத்திசாலி, இளம் வயதிலேயே பெரியவங்களுக்கு புலப்படாத நுணுக்கமான விசயங்களையும் எளிதில் விடுவிப்பார். மரியாதை ராமனின் தீர்ப்புகள் அனைத்தும் புகழ்பெற்ற கதைகளாக மக்களிடம் பேசப்பட்டு வருகிறது, அதில் ஒன்று இதோ. மரியாதை ராமன் வசித்து வந்த ஊரில் சோமன் என்ற ஒரு பணக்காரன் இருந்தார். அவர் மிகவும் பொல்லாதவர் பணத்தாசைப் பிடித்தவர். தன்னிடம் வேலை செய்பவர்களுக்கு சரியான கூலி கொடுக்கமாட்டார். ஒரு முறை சோமன் தன் தோட்டத்தில் விளைந்த தேங்காய்களை சந்தையில் விற்று விட்டு, கிடைத்த பத்தாயிரம் ரூபாயுடன் தன்னுடைய மாட்டு வண்டியில் காட்டு வழியாக வீட்டுக்கும் வரும் போது தனது பணப்பையைத் தொலைத்துவிட்டார். வீட்டுக்கு வந்ததும் வண்டியில் பணப்பையை தேடி பார்த்து கிடைக்காமல் புலம்பி தள்ளினார். மாட்டு வண்டி ஓட்டி வந்தவர் முதல் அனைவரையும் கேட்டு பார்த்து கிடைக்காமல் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தார். அப்போ அவரது மனைவியார் “உங்க பணப்பையை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு தகுந்த சன்மானம் கொடுக்கிறேன் என்று சொல்லுங்க, கண்டிப்பாக யாராவது கொண்டு வந்து கொடுப்பாங்க" என்றார். ஆகா இது நல்ல திட்டமாக இருக்கிறதே என்று நினைத்து அடுத்த நாளே ஊர் முழுவதும் தண்டோரா போட்டு சொல்லிவிட்டார். ஊர் மக்களும் பணப்பை கிடைத்தால் கொடுத்து சன்மானம் வாங்கலாம் என்று நினைத்தார்கள். அப்படி தேடி பார்த்தும் யாருக்கும் பணப்பை கிடைக்கவில்லை. இந்த சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்கு பின்பு அருகில் இருந்த ஊரிலிருந்து அந்த ஊருக்கு ஒரு வழிப்போக்கர் வந்தார். அவர் பெயர் பூபாலன். மிகவும் நல்ல குணமுடையவர். ஏழையாக இருந்தாலும் கவுரவமாக வாழ பிரியப்படுபவர். தன்னால் முடிந்தவரை அடுத்தவர்களுக்கு உதவுபவர். அவர் விவசாயம் செய்த நிலத்தில் நிலத்தடி நீர் கிடைக்காததால் விவசாயம் சரியாக செய்யமுடியவில்லை, வேறு தொழில் செய்யவோ தன்னிடம் பணமும் அனுபவமும் இல்லை என்பதால் பக்கத்து ஊருக்கு சென்று ஏதாவது வேலை செய்து, சம்பாதித்து பின்னர் தொழில் தொடங்க நினைத்து வந்தார். போகிற வழியில் காட்டுப்பாதையில் இருந்த அம்மன் கோயிலுக்கு போய் வேண்டிக் கொண்டார். அப்படி காட்டுவழியில் போகும் போது அங்கே ஒரு புறா அடிப்பட்டு கீழே கிடந்தது, அதை பார்த்து இரக்கப்பட்ட பூபாலன் அந்த புறாவை தூக்கிக் கொண்டு அருகில் இருந்த குளத்திற்கு கொண்டு சென்று தண்ணீரை எடுத்து அந்த புறாவின் வாயில் ஊற்றினார், பின்னர் அந்த புறாவை அருகில் இருந்த மரக்கிழையில் வைத்துவிட்டு வந்தார். அவர் அப்படி வரும் போது பாதையின் ஓரத்தில் காலில் ஏதோ மாட்டியதை கண்டார், அது ஒரு பை. அதில் நிறைய பணமும் இருந்தது. அதை எடுத்தவுடன் பூபாலனுக்கு யாரோ பாவம், தன் பணப்பையை விட்டு விட்டு போயிட்டாங்க, அப்படி தொலைத்தவர் மனம் எத்தனை வேதனைப்படுமோ, எனவே விரைவில் அவரை கண்டுபிடித்து கொடுத்துவிட வேண்டும் என்று ஊருக்கு விரைந்தார். அப்போ ஊருக்குள் சென்ற போது அங்கே இருந்த கடையில் விசாரித்த போது கடைக்காரர் சோமனைப் பற்றி சொல்லி, அவர் தான் தொலைத்தவர், நீங்க இதை கொடுத்தால், கண்டிப்பாக சன்மானம் கொடுப்பார் என்றார். உடனே பூபாலனும் சோமன் வீட்டை தேடி பிடித்து சென்று பணப்பை கிடைத்த விபரத்தை சொன்னார், சோமனுக்கு சந்தோசம் தாங்கமுடியவில்லை. உடனே அந்த பணப்பையை வாங்கிக் கொண்டார், அதே நேரம் அவரது கெட்ட எண்ணமும் வெளிப்படத் தொடங்கியது. பணப்பை கிடைத்து விட்டது, பணமும் சரியாக இருக்குது, இப்போ ஏன் இவனுக்கு சன்மானம் கொடுக்க வேண்டும், சன்மானம் கொடுக்காமல் தப்பிக்க என்ன செய்யலாம் என்று யோசித்தார் சோமன். கெட்ட மனம் கொண்ட சோமன் பூபாலனைப் பார்த்து “நீ என்னை ஏமாற்றப் பார்க்கிறாய், நான் என்னுடைய பையில் வைர மோதிரம் ஒன்றையும் வைத்திருந்தேன், அது காணவில்லை, மரியாதையாக கொடுத்து விடு, உன்னை சும்மா விடமாட்டேன்” என்று கத்தினான். பூபாலனுக்கு ஒன்றுமே புரியவில்லை, ஒருவேளை இவர் சொன்னது போல் வைர மோதிரம் இருந்து தொலைந்து போயிருக்குமா, நாம் தான் எடுக்கவில்லையே, இவரிடம் சன்மானம் வாங்குவதை விட பிரச்சனையில் இருந்து தப்பிக்கலாம் என்று யோசித்தார். சோமனோ விடாமல் கத்தி ஆர்ப்பாட்டம் செய்தார், பூபாலன் பணப்பை கொண்டு வந்த செய்தியை ஊராருக்கு சொன்ன கடைக்காரர், கஞ்சப்பயல் சோமன் அப்படி என்னத்தான் பரிசு கொடுக்கப் போறான் என்று பார்ப்போம் என்று அனைவரையும் அழைத்து வந்தார். வந்த இடத்தில் பூபாலன் குற்றவாளி போல் நிற்பதை கண்ட ஊரார் சோமனை சும்மா விடக்கூடாது, இந்த பிரச்சனையை மரியாதை ராமனிடம் தான் கொண்டு சென்று தீர்ப்பு கேட்க வேண்டும் என்று சொன்னார்கள். சிறிது நேரத்தில் சோமன், பூபாலன், ஊர் மக்கள் அனைவரும் மரியாதை ராமன் முன்னால் போய் நின்றார்கள். சோமன் தான் பணப்பையும், அதில் இருந்த வைர மோதிரம் தொலைத்த கதையையும், பூபாலன் தான் பணப்பை கண்டுபிடித்த கதையையும் சொன்னார்கள். ஏற்கனவே சோமன் அறிவித்த தண்டோரா பற்றி மரியாதை ராமனுக்கு தெரியும், அப்போ தண்டோரா போடும் போது வைரமோதிரம் பற்றி ஒன்றும் சொல்லாததும் தெரிந்தது தான். ஆக மொத்தம் சோமன் ஏமாற்றுகிறான் என்பதை புரிந்துக் கொண்ட மரியாதை ராமன், சோமனுக்கு சரியான தண்டனை கொடுக்க நினைத்து இவ்வாறாக தீர்ப்பு கூறினார் “சோமன் தொலைத்த பையில் பணமும், வைர மோதிரமும் இருந்தது என்று அவரே சொல்லியிருக்கிறார். இப்போ பூபாலன் கொண்டு வந்த பையில் பணம் மட்டுமே உள்ளது, ஆக இது சோமனின் பையே இல்லை, வேற யாரோ தொலைத்த பை. அப்படி தொலைத்தவர் இதுவரை யாரும் புகார் கொடுக்கவில்லல, அவ்வாறு யாரும் புகார் கொடுக்காதவரை நம்ம ஊர் வழக்குப்படி கிடைத்த பணத்தில் 10 பங்கு அம்மன் கோயில் செலவுக்கு கொடுத்துவிட்டு, மீதியை எடுத்தவரே வைத்துக் கொள்ளலாம், ஆக பூபாலன் அந்த பணத்தை தன் சொந்த உபயோகத்து வைத்துக் கொள்ளலாம், சோமனின் பணம் மற்றும் வைர மோதிரம் கொண்ட பையை கண்டுபிடித்தவுடன் சோமனே சன்மானம் கொடுப்பார், சபை கலையலாம்”. மரியாதை ராமன் தீர்ப்பு சொன்னதும் சோமனுக்கு இதயமே நின்று போனது போல் ஆகிவிட்டது. பூபாலன் கிடைத்த பணத்தில் 10 சதவிதம் அம்மன் கோயிலுக்கு கொடுத்துவிட்டு, மீதியை தன் சொந்த ஊருக்கு கொண்டு சென்று தொழில் செய்து நலமாக வாழ்ந்து வந்தார்.
  6. பாடல்: உனக்குள் நானே படம்: பச்சைகிளி முத்துசரம் இசை: கரிஸ் ஜெயராஜ்
  7. வடிவேலுவின் நகைசுவை பகுதி ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
  8. பாடல்: அழகு குட்டி செல்லம் (றீ மிக்ஸ் பாடல்) பாடியவர்: சங்கர் மகா தேவன் ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
  9. பாடல்: காதல் வைத்து படம்: தீபாவளி இசை: யுவன் சங்கர் ராஜா
  10. வெளவால் தலைக் கீழாகத் தொங்குவது ஏன்? வெளவால்களின் இறக்கைகள்6 அங்குலம் முதல் 6 அடி வரை நீண்டிருக்கும். அவற்றின் கால்களுக்கு போதிய வலிமைக் கிடையாது. அதனால், வெளவால்களால் நீண்ட நேரம் நிற்கவோநடக்கவோ முடியாது. மற்ற பறவைகளைப் போல் இவற்றால் பூமியில் இருந்து மேலெழும்பி பறக்க முடியாது. அதற்க்கு அவற்றின் போதிய வளர்ச்சியற்ற கால்களும், அதிக கனமான இறக்கைகளும்தான் காரணம். தலைக் கீழாகத் தொங்குவது வெளவால்களுக்கு செளகரியமாக இருக்கிறது. ஆபத்தில் இருந்து தப்பிக்க உதவுகிறது. இவ்வாறு தொங்கும் போது வெளவால்களுக்கு அதிக அளவு சக்தி தேவைப்படுவதில்லை. உடனடியாகப் பறப்பதும் எளிதான விஷயமாக உள்ளது. நன்றி : தமிழ்ப் பத்திரிக்கை
  11. பாடல்: கண்கள் இரண்டால் படம்: சுப்பிரமணியபுரம் கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதேனே சின்ன சிரிப்பில் ஒரு கள்ள சிரிப்பில் என்னை தள்ளி விட்டு தள்ளி விட்டு ஓடி மறைந்தாய் பேச எண்ணி சில நாள் அருகில் வருவேன் பின்பு பார்வை போதும் என நான் நினைப்பேன் நகுழ்வேனே மாற்றி கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும் ஒரு வண்ண கவிதை காதல் தான ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே இதை இருளிலும் படித்திட முடிகிறதே இரவும் அல்லாத பகலும் அல்லாத பொழுதுகள் உன்னோடு கழியுமா தொடவும் கூடாத படவும் கூடாத இடைவெளி அப்போது குறையுமா மடியினில் சாய்ந்திட துடிக்குதே மறுபுறம் நாணவும் தடுக்குதே இது வரை யாரிடமும் சொல்லாத கதை கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதேனே சின்ன சிரிப்பில் ஒரு கள்ள சிரிப்பில் என்னை தள்ளி விட்டு தள்ளி விட்டு ஓடி மறைத்தாய் கரைகள் அண்டாத காற்றும் தீண்டாத மனதுக்குள் எப்போதோ நுழைந்திட்டாய் உடலும் அல்லாத உறவும் கொள்ளாத கடவுளை போல் வந்து கலந்திட்டாய் உன்னை இன்றி வேறொரு நினைவில்லை இனி இந்த ஊனுயிர் எனதில்லை தடையில்லை சாவிலும் உன்னோடு வாழ கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும் ஒரு வண்ண கவிதை காதல் தானா ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே இதை இருளிலும் படித்திட முடிகிறதே பேச எண்ணி சில நாள் அருகில் வருவேன் பின்பு பார்வை போதும் என நான் நினைப்பேன் நகுழ்வேனே மாற்றி கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதேனே சின்ன சிரிப்பில் ஒரு கள்ள சிரிப்பி ல் என்னை தள்ளி விட்டு தள்ளி விட்டு ஓடி மறைந்தாய்
  12. ஒரு இணைய தளத்தில் இருந்து பாடல் வரிகள் எடுக்கப்பட்டது. நிறைய எழுத்து பிழைகள் உண்டு.மன்னிக்கவும்.
  13. படம்: சக்கரைகட்டி பாடல்:மருதாணி விழியில் ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"> மருதாணி விழியில் என் ? அடி போடி தீபாளி கங்கை என்று கானலை காட்டும் - காதல் கானல் என்று கங்கையை காட்டும் வாழும் பயிர்க்கு தாநீர் வேண்டும் காதல் கதைக்கும் கண்ணீர் வேண்டும் மருதாணி விழியில் ஏன்? அடி போடி தீபாளி காதல் மண் மீது சாயாது நிஜமான காதல் தான் நிலையான பாடல் தான் அதன் ஓசை எந்நாளும் ஓயாது மருதாணி மருதாணி விழியில் ஏன்? அவன் இதய வீட்டில் வாழு , காதலே <> போலே பொக்கிஷம் போலே அவன் செமிதான் காணவில்ல இன்னொரு பாதி மருதாணி மருதாணி மருதாணி விழியில் ஏன்? அடி போடி தீபாளி S1 -- அவன் இதய வீட்டில் வாழும் அவள் தேகம் எங்கு போகும் என அவன் மறந்திட மாட்டன் சற்று நேரம் சற்று தூரம் காதலி கை நகம் எல்லாம் பொக்கிஷம் போலே அவன் சேமிப்பான் ஒருதிக்கஹ வாழ்கிற ஜாதி உணரவில்லை இன்னொரு பாதி மருதாணி விழியில் ஏன்? மருதாணி விழியில் ஏன்? அடி போடி தீபாளி காதல் மண் மீது சாயாது நிஜமான காதல் தான் நிலையான பாடல் தான் அதன் ஓசை எந்நாளும் ஓயாது S2: --- அவள் அவன் காதல் நெஞ்சில் கண்டாலே சிறு குற்றம் அவன் நெஞ்சம் தாய் பால் போலே எந்நாளும் பரி சுத்தம் ஆத்திரம் நேத்திரம் மூட - பாலையும் கல்லை அவள் பார்கிறாள் ஆக மொத்தம் அவசர கோலம் - ஒ அவளுகிதை காட்டும் காலம் மருதாணி... மருதாணி.... மருதாணி விழியில் ஏன்? அடி போடி தீபாளி கங்கை என்று கானலை காடும் - காதல் கானல் என்று கங்கையை காட்டும் வாழும் பயிர்க்கு தாணீர் வேண்டும் காதல் கதைக்க கண்ணீர் வேண்டும் மருதாணி விழியில் ஏன்? அடி போடி தீபாளி காதல் மண் மீது சாயாது நிஜமான காதல் தான் நிலையான பாடல் தான் அதன் ஓசை எந்நாளும் ஓயாது மருதாணி... மருதாணி... விழியில் ஏன்? மருதாணி. மருதாணி ....மருதாணி ... விழியில் ஏன்?
  14. பாடல்: போறாளு பொண்ணு தாயி படம்: கருத்தம்மா இசை: ஏ.ஆர்.ரகுமான்
  15. பாடல்: என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு படம்: காதலிக்க நேரமில்லை(புதியது)
  16. பாடல்: உலகமெங்கும் ஒரே மொழி
  17. பல்குரல் நிகழ்ச்சி ஒன்று
  18. Bush - All mixed up In case you don't know the new leader of China is called Hu He. Read on.............. George: Condi! Nice to see you. What's happening? Condi: Sir, I have the report here about the new leader of China. George: Great. Lay it on me. Condi: Hu is the new leader of China. George: That's what I want to know. Condi: That's what I'm telling you. George: That's what I'm asking you. Who is the new leader of China? Condi: Yes. George: I mean the fellow's name. Condi: Hu. George: The guy in China. Condi: Hu. George: The new leader of China. Condi: Hu. George: The Chinaman! Condi: Hu is leading China. George: Now whaddya' asking me for? Condi: I'm telling you Hu is leading China. George: Well, I'm asking you. Who is leading China? Condi: That's the man's name. George: That's who's name? Condi: Yes. George: Will you or will you not tell me the name of the new leader of China? Condi: Yes, sir. George: Yassir? Yassir Arafat is in China? I thought he was in the Middle East. Condi: That's correct. George: Then who is in China? Condi: Yes, sir. George: Yassir is in China? Condi: No, sir. George: Then who is? Condi: Yes, sir. George: Yassir? Condi: No, sir. George: Look, Condi. I need to know the name of the new leader of China.Get me the Secretary General of the U.N. on the phone. Condi: Kofi? George: No, thanks. Condi: You want Kofi? George: No. Condi: You don't want Kofi. George: No. But now that you mention it, I could use a glass of milk.And then get me the U.N. Condi: Yes, sir. George: Not Yassir! The guy at the U.N. Condi: Kofi? George: Milk! Will you please make the call? Condi: And call who? George: Who is the guy at the U.N? Condi: Hu is the guy in China. George: Will you stay out of China?! Condi: Yes, sir. George: And stay out of the Middle East! Just get me the guy at the U.N. Condi: Kofi. George: All right! With cream and two sugars. Now get on the phone.
  19. மிக பழைய பாடல் ஒன்று. சுசிலாவின் குரலில் மிகவும் இனிமையான பாடல். பாடல்:என்ன என்ன வார்த்தைகளோ இசை: விஸ்வநாதன் -- ராமமூர்த்தி படம்:வெண்ணிற ஆடை வரிகள்: கண்ணதாசன்
  20. பாடல்: நீயில்லை நிலவில்லை பாடியவர்: கரிகரன் இசை: சிற்பி <object width="425" height="350"><param name="movie" value="http://www.youtube.com/watch?v=xmWUv5-jf2o"></param><param'>http://www.youtube.com/watch?v=xmWUv5-jf2o"></param><param name="wmode" value="transparent"></param><embed src="http://www.youtube.com/watch?v=xmWUv5-jf2o" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"></embed></object>
  21. பாடல்: மாமரத்து பூ எடுத்து பாடியவர்: எஸ். என். சுரேந்தர்
  22. பாடல் : பல்லானது பல்லானது படம்: குருவி இசை: வித்தியாசமான வித்தியாசகர்
  23. சீன தேசத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட மண் அக்பருக்கும் பீர்பாலுக்குமமடிக்கடி ஏற்படும் மனவேறு அன்றைக்கும் ஏற்பட்டது. அக்பர் ஏதோ சொல்ல, அதற்கு பதிலாக பீர்பால் எதையோ சொல்ல... பேச்சு வளர்ந்து பெரிய சச்சரவில் கொண்டு போய் விட்டு விட்டது. மன்னர் கோபம் கொண்டார். "இனிமேல் என்னுடைய மண்ணில் நீ வாழக்கூடாது. எனது ஆளுகைக்கு உட்பட்ட மண்ணில் நீர் நடமாடுவதை குற்றமாக நான் கருதுகிறேன். அதனால் என் மண்ணணவிட்டு நீ வெளியேறி விடவேண்டும்!" என்று ஆணை பிறப்பித்தார். "சரி. உம்முடைய அதிகாரத்துக்கு உட்பட்ட மண்ணில் நான் வாழமாட்டேன்!" என்று வீராப்பாகச் சொன்ன பீர்பால் அங்கிருந்து வெளியாகி சீன நாட்டுக்கு சென்றார். சில ஆண்டுகள் கழித்து ஏராளமான மூட்டைகளுடன் தில்லி வந்து சேர்ந்தார்! ப்பீர்பால் ஏதோ ஒரு வெளிநாட்டுக்கு சென்று சிலகாலம் இருந்து விட்டு இப்போது மீண்டும் தில்லிக்கே வந்துவிட்டதை அக்பர் அறிந்தார். உடனே அவருக்கு சினம் வந்தது. தனது தலைமை அமைச்சரை அனுப்பி பீர்பாலைஉடனே அரசவைக்கு அழைத்து வரச் சொன்னார். பீர்பாலின் இல்லம் சென்ற அமைச்சரை அன்போடு வரவேற்று வீடு முழுவதையும் சுற்றிக் காட்டினார். "இது என்ன வீட்டுக்குள்ளும் வெளியிலும் மண்ணைக் கொட்டி வைத்திருக்கிறீர்களே?" என்று கேட்டார் அந்த அமைச்சர். "இந்த மண் சீன நாட்டில் இருந்து கொண்டு வந்தேன். ஒரு காரணத்திற்காகத்தான் பரப்பி வைத்திருக்கிறேன்!" என்று கூறினார். பின்னர் அந்த அமைச்சரின் வண்டியைப் பிந்தொடர்ந்து தன் வண்டியிலேயே அரசவை நோக்கி புறப்பட்டார். செல்லும் வழியில்... "இதென்ன வண்டிக்குள்ளும் இவ்வளவு மண்??" என்று கேட்டார் அந்த அமைச்சர். "எல்லாம் காரணமாகத்தான்!" என்று பதில் அளித்தார் பீர்பால். அரண்மனைக்குச் சென்றதும் அரசர் முன் நின்று வணங்கினார் பீர்பால். "என் உத்தரவையும் மீறி இன்னும் தில்லி நகரத்தில் உலவுகிறீர்? என்னுடடய உத்தரவை அலட்சியம் செய்கிறீர்! என்னை மதிக்காமல் இந்த மண்ணில் உம்மால் வாழ்ந்து விட முடியுமா?" என்று கோபத்துடன் கேட்டார் அக்பர். "மன்னர் பெருமானே! தங்கள் உத்தரவுக்குக் கீழ்ப்படிவதைத் தவிர வேறு எனக்கு ஒன்றும் தெரியாது. தங்களின் உத்தரவை அப்படியே பின்பற்றி வருகிறேன்!" என்று சொன்னார் பீர்பால் பவ்யமாக. "எங்கே நிறைவேற்றுகிறீர்? இப்போது தில்லியில் அல்லவா நீர் தங்கி இருக்கிறீர்?" என்றார் அக்பர் சினத்துடன். "தில்லியில் நான் தங்கி இருப்பது உண்மைதான். ஆனால் தங்களின் மண்ணில் நான் நடமாடவில்லை. அமைச்சரைக் கேட்டுப் பாருங்கள். அவரே என் வீட்டுக்கு வந்து பார்த்தாரே!" என்றார் பீர்பால். அக்பர் அமைச்சரை நோக்கினார்... உடனே அமைச்சர் பதில் அளித்தார்.. "மன்னர் அவர்களே! பீர்பால் தம் வீட்டுக்குள்ளும் வீட்டுக்கு வெளியிலும் மண்ணைக் கொட்டி பரப்பி இருக்கிறார். பயணம் செய்த வண்டியிலும்கூட மண்ணைக் கொட்டி இருந்தார். எதற்காக இப்படி எல்லாம் செய்திருக்கிறார் என்று எனக்கு விளங்கவில்லை. அவரைக் கேட்டேன்.. காரணமாகத்தான் என்று சொல்கிறார்!" அப்போது பீர்பால், "மன்னர் பிரான் அவர்களே,"என் வீட்டின் உள்ளும் வெளியிலும் நான் பயணம் செய்யும் வண்டியிலும் நான் உலவும் என் வீட்டுத் தோட்டங்களிலும் நான் கொட்டி பரவி இருப்பது சீன தேசத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட மண். அது தில்லியின் மண் அல்ல. தங்களுக்கு சொந்தமான மண்ணில் நடமாடக் கூடாது என்றீர்கள். அதனால்தான் சீன மண்ணில் நடமாடிக் கொண்டிருக்கிறேன். இது எவ்வாறு தங்கள் உத்தரவை மீறிய செயலாகும்?" என்று அப்பாவி போல் பதில் சொன்னார். பீர்பால் விளக்கம் கொடுத்ததும் அக்பர் உட்பட அவையினர் சிரித்தனர். மன்னருக்கு சினம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போயிற்று. வாய்விட்டுச் சிரித்தவாறே, "உம்மை எப்படி வழிக்குக் கொண்டு வருவது என்றே தெரியவில்லை!" என்று மகிழ்ச்சியுடன் சொல்லி தன் உத்தரவினை வாபஸ் வாங்கிக் கொண்டார் அக்பர்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.