Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. நடுக்கம், உதறல் எல்லாம் குளிருக்குள் மட்டும்தான் 😄
  2. மன்னாரில் தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்பம் பயிற்சி ஆரம்பம். adminMarch 9, 2026 தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்பம் பயிற்சியானது நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (8) மன்னாரில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஆசிரியர் மெல்சின் தலைமையில் தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்பம் கலை விழா ஆரம்பித்து வைக்கப்பட்டது. கடந்த 35 ஆண்டுகளாக சிலம்பம் மற்றும் பல பாரம்பரிய கலைகளில் அனுபவம் பெற்றவருமான பிரபல ஆசான் சூசைநாதர் யசோதரன் அவர்கள் VMCT கலை மன்றத்தின் இயக்குநர் பொறியியலாளர் சூசைப்பிள்ளை விமலேஸ்வரன் அவர்களது நெறிப்படுத்தலில் VMCT கலை மன்றத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டது. மேற்படி ஆரம்ப விழாவில் மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டதுடன் சிலம்பு பயிற்சிகள் தலைமை ஆசிரியர் அன்ரன் பெசன்பேர்க் மெல்சின் தலைமையில் வார இறுதி நாள் சனிக்கிழமைகளில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது #MannarSilambam #TraditionalArt #VMCTArtClub (VMCT #MartialArtsTraining #TamilCulture https://globaltamilnews.net/2026/230218/
  3. யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி 2026 இறுதி நிலைகள்: T20 உலகக் கிண்ணத் தொடரில் வெற்றி பெற்ற அணிகளையும், சாதனை படைக்கும் பல அணிகளையும் சரியாகக் கணித்தும், யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி 2026 இல் இறுதி நேரத்தில் பதில்களைப் பதிந்ததில் முந்தியதின் அடிப்படையில் வெற்றியைத் தட்டிச் செல்லும் அதிகம் உரையாடாத @Newbalance க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! வெற்றியைத் தட்டிச் செல்லும் @Newbalance க்கு துபாயில் உள்ள உலகின் உயரமான கட்டடத்தில் இருந்து பெற்ற தங்க நாணயத்தின் நிழல்பிரதி தரப்படுகின்றது! இரண்டாவது இடத்தைப் பிடித்த @கந்தப்பு வுக்கும், மூன்றாம் இடத்தில் உள்ள @நியாயம் க்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்! கூடவே தொடர்ச்சியாக முதல் மூன்று இடங்களில் பலநாட்கள் நின்ற @alvayan , @கந்தப்பு க்கும் வாழ்த்துக்கள். அத்துடன் பல நாட்கள் சுமைதாங்கியாக இறுதி நிலையில் நிற்கும் @வாதவூரான் க்கும் நன்றி பல! போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கும், திரியை கலகலப்பாக வைத்திருக்க உதவிய அனைவருக்கும், குறிப்பாக @செம்பாட்டான் @வீரப் பையன்26, @goshan_che @ரசோதரன், @vasee , @suvy ஐயா, @ஈழப்பிரியன் ஐயா போன்றோருக்கு நன்றி பல. விடுமுறையில் மத்திய கிழக்கில் நின்றபோது புள்ளிகளைக் கணிக்கவும், நிலைகளை சரியாக வரிசைப்படுத்தவும் உதவிய @செம்பாட்டான் க்கு பிரத்தியேகமான நன்றிகள்!
  4. யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி சாதனைகளின் தரவுகளுக்கான கேள்விகள் 80) இலிருந்து 85) வரைக்கான கணிப்புக்களும், சரியான பதில்களும் கீழே தரப்பட்டுள்ளன. ---------------------------------------------------------- 80) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) Yuvraj Singh Samra (CAN) - 110 ஒருவரும் சரியாகக் கணிக்கவில்லை என்பதால் புள்ளிகள் கிடையாது! போட்டியாளர் பதில் செம்பாட்டான் Mitchell Marsh ஏராளன் Abhishek Sharma வசீ Quinton de Kock புலவர் Aiden Markram சுவைப்பிரியன் Steve Smith அல்வாயன் Abhishek Sharma ஈழப்பிரியன் Daryl Mitchell நியூ பலன்ஸ் Suryakumar Yadav வாத்தியார் Phil Salt கறுப்பி Aiden Markram வாதவூரான் Ishan Kishan வீரப் பையன்26 Quinton de Kock சுவி Aiden Markram கிருபன் Abhishek Sharma கோஷான் சே Ben Duckett அஹஸ்தியன் Abhishek Sharma கந்தப்பு Abhishek Sharma நியாயம் Abhishek Sharma எப்போதும் தமிழன் Ishan Kishan ரசோதரன் Travis Head பிரபா Ishan Kishan நிலாமதி Abhishek Sharma நந்தன் Abhishek Sharma 81) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 80 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) Yuvraj Singh Samra (CAN) - 110 ஒருவரும் சரியாகக் கணிக்கவில்லை என்பதால் புள்ளிகள் கிடையாது! போட்டியாளர் பதில் செம்பாட்டான் IND ஏராளன் SA வசீ SA புலவர் AUS சுவைப்பிரியன் ENG அல்வாயன் SA ஈழப்பிரியன் NZ நியூ பலன்ஸ் IND வாத்தியார் ENG கறுப்பி AUS வாதவூரான் IND வீரப் பையன்26 IND சுவி IND கிருபன் ENG கோஷான் சே AFG அஹஸ்தியன் ENG கந்தப்பு IND நியாயம் IND எப்போதும் தமிழன் IND ரசோதரன் AUS பிரபா PAK நிலாமதி AUS நந்தன் IND 82) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Romario Shepherd (WI) - 5/20 Econ: 6.66 ஒருவரும் சரியாகக் கணிக்கவில்லை என்பதால் புள்ளிகள் கிடையாது! போட்டியாளர் பதில் செம்பாட்டான் Mitchell Santner ஏராளன் Jasprit Bumrah வசீ Jasprit Bumrah புலவர் Jasprit Bumrah சுவைப்பிரியன் Jos Buttler அல்வாயன் Jasprit Bumrah ஈழப்பிரியன் Adam Zampa நியூ பலன்ஸ் Rashid Khan வாத்தியார் Rashid Khan கறுப்பி Jasprit Bumrah வாதவூரான் Wanindu Hasaranga வீரப் பையன்26 Jasprit Bumrah சுவி Varun Chakaravarthy கிருபன் Mohammad Nawaz கோஷான் சே Rachin Ravindra அஹஸ்தியன் Marco Jansen கந்தப்பு Adam Zampa நியாயம் Varun Chakaravarthy எப்போதும் தமிழன் Arshdeep Singh ரசோதரன் Kuldeep Yadav பிரபா Jasprit Bumrah நிலாமதி Kuldeep Yadav நந்தன் Jasprit Bumrah 83) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 82 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) Romario Shepherd (WI) - 5/20 Econ: 6.66 சரியாகக் கணித்தவர்கள்: சுவைப்பிரியன் சுவி போட்டியாளர் பதில் செம்பாட்டான் SL ஏராளன் AUS வசீ AUS புலவர் AUS சுவைப்பிரியன் WI அல்வாயன் AUS ஈழப்பிரியன் PAK நியூ பலன்ஸ் AFG வாத்தியார் AFG கறுப்பி AUS வாதவூரான் PAK வீரப் பையன்26 IND சுவி WI கிருபன் NZ கோஷான் சே PAK அஹஸ்தியன் IND கந்தப்பு IND நியாயம் IND எப்போதும் தமிழன் IND ரசோதரன் IND பிரபா IND நிலாமதி IND நந்தன் AUS 84) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Sanju Samson (IND) ஒருவரும் சரியாகக் கணிக்கவில்லை என்பதால் புள்ளிகள் கிடையாது! போட்டியாளர் பதில் செம்பாட்டான் Abhishek Sharma ஏராளன் Hardik Pandya வசீ Kuldeep Yadav புலவர் Abhishek Sharma சுவைப்பிரியன் Suryakumar Yadav அல்வாயன் Hardik Pandya ஈழப்பிரியன் Babar Azam நியூ பலன்ஸ் Jasprit Bumrah வாத்தியார் Suryakumar Yadav கறுப்பி Hardik Pandya வாதவூரான் Abhishek Sharma வீரப் பையன்26 Abhishek Sharma சுவி Hardik Pandya கிருபன் Tilak Varma கோஷான் சே Tilak Varma அஹஸ்தியன் Aiden Markram கந்தப்பு Abhishek Sharma நியாயம் Abhishek Sharma எப்போதும் தமிழன் Quinton de Kock ரசோதரன் Suryakumar Yadav பிரபா Suryakumar Yadav நிலாமதி Suryakumar Yadav நந்தன் Abhishek Sharma 85) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 84 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) Sanju Samson (IND) சரியாகக் கணித்தவர்கள்: வசீ புலவர் ஈழப்பிரியன் நியூ பலன்ஸ் வாத்தியார் கறுப்பி வாதவூரான் வீரப் பையன்26 சுவி கிருபன் அஹஸ்தியன் கந்தப்பு நியாயம் எப்போதும் தமிழன் ரசோதரன் நிலாமதி போட்டியாளர் பதில் செம்பாட்டான் AUS ஏராளன் AUS வசீ IND புலவர் IND சுவைப்பிரியன் ENG அல்வாயன் AUS ஈழப்பிரியன் IND நியூ பலன்ஸ் IND வாத்தியார் IND கறுப்பி IND வாதவூரான் IND வீரப் பையன்26 IND சுவி IND கிருபன் IND கோஷான் சே NZ அஹஸ்தியன் IND கந்தப்பு IND நியாயம் IND எப்போதும் தமிழன் IND ரசோதரன் IND பிரபா AUS நிலாமதி IND நந்தன் PAK
  5. யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி சாதனைகளின் தரவுகளுக்கான கேள்விகள் 74) இலிருந்து 79) வரைக்கான கணிப்புக்களும், சரியான பதில்களும் கீழே தரப்பட்டுள்ளன. ---------------------------------------------------------- 74) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) IND 256/4 சரியாகக் கணித்தவர்கள்: ஏராளன் வசீ அல்வாயன் நியூ பலன்ஸ் வாத்தியார் கறுப்பி வாதவூரான் சுவி கிருபன் கோஷான் சே கந்தப்பு நியாயம் எப்போதும் தமிழன் ரசோதரன் பிரபா நிலாமதி நந்தன் போட்டியாளர் பதில் செம்பாட்டான் ENG ஏராளன் IND வசீ IND புலவர் SA சுவைப்பிரியன் IRE அல்வாயன் IND ஈழப்பிரியன் ENG நியூ பலன்ஸ் IND வாத்தியார் IND கறுப்பி IND வாதவூரான் IND வீரப் பையன்26 PAK சுவி IND கிருபன் IND கோஷான் சே IND அஹஸ்தியன் ENG கந்தப்பு IND நியாயம் IND எப்போதும் தமிழன் IND ரசோதரன் IND பிரபா IND நிலாமதி IND நந்தன் IND 75) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) SL 95/10 சரியாகக் கணித்தவர்: நந்தன் போட்டியாளர் பதில் செம்பாட்டான் ITA ஏராளன் ITA வசீ ITA புலவர் ITA சுவைப்பிரியன் USA அல்வாயன் ITA ஈழப்பிரியன் CA நியூ பலன்ஸ் CAN வாத்தியார் ITA கறுப்பி ITA வாதவூரான் ITA வீரப் பையன்26 OMA சுவி OMA கிருபன் UAE கோஷான் சே UAE அஹஸ்தியன் ITA கந்தப்பு OMA நியாயம் ITA எப்போதும் தமிழன் OMA ரசோதரன் NAM பிரபா OMA நிலாமதி NAM நந்தன் SL 76) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Sahibzada Farhan (PAK) - 383 ஒருவரும் சரியாகக் கணிக்கவில்லை என்பதால் புள்ளிகள் கிடையாது! போட்டியாளர் பதில் செம்பாட்டான் Abhishek Sharma ஏராளன் Travis Head வசீ Aiden Markram புலவர் Abhishek Sharma சுவைப்பிரியன் Abhishek Sharma அல்வாயன் Travis Head ஈழப்பிரியன் Babar Azam நியூ பலன்ஸ் Jos Buttler வாத்தியார் Sanju Samson கறுப்பி Abhishek Sharma வாதவூரான் Abhishek Sharma வீரப் பையன்26 Abhishek Sharma சுவி Abhishek Sharma கிருபன் Dewald Brevis கோஷான் சே Suryakumar Yadav அஹஸ்தியன் Aiden Markram கந்தப்பு Abhishek Sharma நியாயம் Suryakumar Yadav எப்போதும் தமிழன் Abhishek Sharma ரசோதரன் Suryakumar Yadav பிரபா Ishan Kishan நிலாமதி Suryakumar Yadav நந்தன் Abhishek Sharma 77) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 76 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) Sahibzada Farhan (PAK) - 383 ஒருவரும் சரியாகக் கணிக்கவில்லை என்பதால் புள்ளிகள் கிடையாது! போட்டியாளர் பதில் செம்பாட்டான் AUS ஏராளன் IND வசீ AUS புலவர் AUS சுவைப்பிரியன் AUS அல்வாயன் IND ஈழப்பிரியன் SA நியூ பலன்ஸ் ENG வாத்தியார் IND கறுப்பி AUS வாதவூரான் IND வீரப் பையன்26 IND சுவி AUS கிருபன் IND கோஷான் சே NZ அஹஸ்தியன் IND கந்தப்பு IND நியாயம் IND எப்போதும் தமிழன் IND ரசோதரன் IND பிரபா IND நிலாமதி IND நந்தன் IND 78) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Jasprit Bumrah (IND) - Wickets: 14, Ave: 12.42, Econ: 6.21 சரியாகக் கணித்தவர்கள்: செம்பாட்டான் புலவர் நியூ பலன்ஸ் வாத்தியார் வீரப் பையன்26 சுவி கோஷான் சே போட்டியாளர் பதில் செம்பாட்டான் Jasprit Bumrah ஏராளன் Arshdeep Singh வசீ Jacob Duffy புலவர் Jasprit Bumrah சுவைப்பிரியன் Varun Chakaravarthy அல்வாயன் Varun Chakaravarthy ஈழப்பிரியன் Jofra Archer நியூ பலன்ஸ் Jasprit Bumrah வாத்தியார் Jasprit Bumrah கறுப்பி Varun Chakaravarthy வாதவூரான் Adil Rashid வீரப் பையன்26 Jasprit Bumrah சுவி Jasprit Bumrah கிருபன் Varun Chakaravarthy கோஷான் சே Jasprit Bumrah அஹஸ்தியன் Varun Chakaravarthy கந்தப்பு Adam Zampa நியாயம் Varun Chakaravarthy எப்போதும் தமிழன் Varun Chakaravarthy ரசோதரன் Kuldeep Yadav பிரபா Shaheen Shah Afridi நிலாமதி Varun Chakaravarthy நந்தன் Varun Chakaravarthy 79) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 78 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) சரியாகக் கணித்தவர்கள்: வசீ அல்வாயன் நியூ பலன்ஸ் வாத்தியார் கறுப்பி வீரப் பையன்26 கிருபன் கோஷான் சே கந்தப்பு நியாயம் எப்போதும் தமிழன் ரசோதரன் பிரபா நிலாமதி நந்தன் போட்டியாளர் பதில் செம்பாட்டான் NZ ஏராளன் AUS வசீ IND புலவர் AUS சுவைப்பிரியன் PAK அல்வாயன் IND ஈழப்பிரியன் AUS நியூ பலன்ஸ் IND வாத்தியார் IND கறுப்பி IND வாதவூரான் PAK வீரப் பையன்26 IND சுவி ENG கிருபன் IND கோஷான் சே IND அஹஸ்தியன் SA கந்தப்பு IND நியாயம் IND எப்போதும் தமிழன் IND ரசோதரன் IND பிரபா IND நிலாமதி IND நந்தன் IND கேள்விகள் 79) வரைக்கான பதில்களின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை: @Newbalance முதல்வர் நாற்காலியை பதில்களைப் பதிந்ததில் முந்தியதின் அடிப்படையில் கைப்பற்றியுள்ளார்!
  6. இன்றைய T20 உலகக் கிண்ண கிரிக்கெட் 2026 இல் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட இந்திய அணி சஞ்சு சாம்சனின் புயல்வேக 89 (46 பந்துகள்) ஓட்டங்களுடனும், இஷன் கிஷனின் மின்னல்வேக 54 (25 பந்துகள்) ஓட்டங்களுடனும், அபிஷேக் ஷர்மாவின் அபாரமான அதிரடியான 52 (21 பந்துகள்) ஓட்டங்களுடனும், ஷிவம் டுபேயின் ஆட்டமிழக்காத கடுகதியான 26 (08 பந்துகள்) ஓட்டங்களுடனும் 5 விக்கெட்டுகளை இழந்து 255 ஓட்டங்களை அள்ளிக் குவித்தது. பதிலுக்குப் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி ஆரம்பத்தில் இருந்தே ஓட்டவிகிதத்தைத் தக்கவைக்க வேகமாக அடித்தாட முயன்றனர். ரிம் செய்ஃபேர்ட்டின் அதிரடியான 52 (26 பந்துகள்) ஓட்டங்கள், மிச்சல் சன்ட்னரின் வேகமான 43 (35 பந்துகள்) ஓட்டங்களைத் தவிர மற்றையோர் விரைவாக விக்கெட்டுகளைப் பறிகொடுத்தமையால், குறிப்பாக ஜஸ்ப்ரிற் பும்ராவின் துல்லியமான பந்துவீச்சால் விக்கெட்டுகள் சரிய 19 ஓவர்களிலேயே சகல விக்கெட்டுகளையும் இழந்து 159 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. ஜஸ்ப்ரிற் பும்ரா 4 விக்கெட்டுகளை 15 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்துச் சாய்த்திருந்தார். முடிவு: இந்திய அணி 96 ஓட்டங்களால் வெற்றியீட்டி T20 கிரிக்கெட் 2026 க்கான உலகக் கிண்ணத்தைச் சுவீகரித்துக்கொண்டது. யாழ்களப் போட்டியாளர்களில் இந்திய அணியின் வெற்றியை சரியாகக் கணித்த 14 பேருக்கு தலா 5 புள்ளிகள் கிடைக்கின்றன. மற்றைய 09 பேருக்குப் புள்ளிகள் கிடையாது! இன்றைய இறுதிப் போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலைகள்: @கந்தப்பு மீண்டும் முதல்வர் நாற்காலியில் அமர்ந்துள்ளார்! குறிப்பு: யாழ்களப் போட்டியின் வெற்றியாளர் அடுத்த 12 கேள்விகளுக்கான பதில்களின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுவார்!
  7. RESULT IND 255/5 NZ (19/20 ov, T:256) 159 India won by 96 runs வெற்றியை கொண்டாட ஒருத்தரையும் காணேல்லை!😬
  8. LIVE IND 255/5 NZ (8.2/20 ov, T:256) 72/5 New Zealand need 184 runs in 70 balls. CRR: 8.64 • RRR: 15.77 • Last 5 ov (RR): 40/3 (8.00)
  9. LIVE IND 255/5 NZ (4.5/20 ov, T:256) 47/3 New Zealand need 209 runs in 91 balls. CRR: 10.07 • RRR: 13.
  10. LIVE IND (18.6/20 ov) 231/5 NZ New Zealand chose to field. CRR: 12.15 • Last 5 ov (RR): 40/4 (8.00)
  11. LIVE IND (15.5/20 ov) 204/3 NZ New Zealand chose to field. CRR: 12.88 • Last 5 ov (RR): 68/2 (13. LIVE IND (15.6/20 ov) 204/4 NZ New Zealand chose to field. CRR: 12.88 • Last 5 ov (RR): 68/2 (13.60)
  12. 5 நாள் ஹொலிடே. 3 ஆம் நாளே ஹொலிடேயில் தம்பரும் நெத்தன்யாஹுவும் சேர்ந்து ஆயத்துல்லாவை போட்டிட்டினம். இன்னும் 5 நாள் நிற்கவேண்டியிருந்தது.. மொத்தம் பத்து நாட்கள்! மூன்று மடங்கு செலுத்தவேண்டி வந்தது.. அத்துடன் ஹொட்டேல், சாப்பாடு என்று செலவுகள்.. விமான நிலையத்தில் கேற் எங்கே என்று தெரியாமல் திணறிய இந்தியர்களுடன் ஒப்பிடும்போது எனக்கு ஒரு பிரச்சினையுமில்லை! சாம்சன் 30 க்குள் அவுட் ஆவார்!
  13. வாழ்நாள் போராளிகளும் தேர்தல் அரசியலும் : நல்லகண்ணுவைக் கற்பது - நிலாந்தன் தமிழ்நாட்டில் மூத்த கொம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு இயற்கை எய்தி சில நாட்களில் நடிகர் விஜய்யின் மனைவி விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை அணுகிய செய்தி வெளிவந்தது. நல்லகண்ணுக்கு அஞ்சலிகள்,வணக்கங்கள் புகழுரைகள், இரங்கள் உரைகள் போன்றன வெளிவந்து கொண்டிருந்த ஒரு பின்னணிக்குள்,விஜயினுடைய விவாகரத்து செய்தியும் வெளிவந்தது. தமிழ்கூறும் நல்லுலகில் அதிகம் வைரல் ஆகியது எதுவென்று பார்த்தால் விஜயின் விவாகரத்துச் செய்தி தான். நமது காலத்தில் வாழ்ந்து மறைந்த ஒரு முன்னுதாரணம் மிக்க இலட்சியவாதி, அரசியல்வாதி, செயற்பாட்டாளர் நல்லகண்ணு எனலாம். அவருக்கு அஞ்சலி செலுத்திய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவரை “வாழ்நாள் போராளிக்கு வீரவணக்கம்” என்று கூறி முழக்கமிட்டார். நல்லகண்ணுவைப் போல நல்ல மனிதர்களை அரசியலில்,அரசியல் செயற்பாட்டில் காண்பது அரிது. அவர் 101 ஆண்டுகள் உயிர் வாழ்ந்தார். தமிழ்நாட்டில் அதிக காலம் சிறையில் இருந்த கொம்யூனிஸ்டுகளில் அவரும் ஒருவர். தன்னுடைய வாழ்நாளில் அவர் என்றைக்குமே தனியார் மருத்துவமனைக்குச் சென்றதில்லை. இறுதி நாள் வரையிலும் அவர் அரச மருத்துவமனைக்குத்தான் சென்றார். தனக்கென்று பெரிய அளவில் சொத்துக்களைச் சேர்த்ததில்லை.தன் குடும்பத்துக்கும் சேர்த்ததில்லை. தனக்கு கிடைத்த பரிசுகளையும் நன்கொடைகளையும் அவர் பொது நலனுக்கே செலவழித்தார். 101 ஆண்டுகள் ஏறக்குறைய ஒரு சன்னியாசியைப்போல அவர் வாழ்ந்தார். உண்மையாகவே ஒரு வாழ்நாள் போராளியாக வாழ்ந்தார். ஆனால் துயரம் என்னவென்றால், அவருடைய மிக நீண்ட வாழ்நாளில் அவர் என்றைக்குமே தமிழகத்தில் எந்த ஒரு தேர்தலிலும் வெற்றி பெற்றதில்லை. அவரைப் போன்ற நேர்மையான ஒரு செயற்பாட்டாளரை தமிழ்நாடு என்றைக்குமே தனது பிரதிநிதியாகத் தெரிவு செய்யவில்லை. ஏன் ? அவரை வாழ்நாள் போராளி என்று கூறுகிறார்கள்.மக்களுக்காகவே வாழ்ந்தவர் என்று கூறுகிறார்கள். இலட்சியத்தை விட்டுக் கொடுக்காதவர் என்று போற்றுகிறார்கள். ஆனால் அவரை என்றைக்குமே தேர்லில் வெற்றி பெற வைக்கவில்லை. ஏன்? நல்லவர்கள் அரசியலுக்கு வந்தால்தானே நாடு உருப்படும்? அரசியலில் நேர்மையானவர்கள், கண்ணியமானவர்கள் காவிவேடம் பூணாத உண்மையான சந்நியாசிகளின் தொகை அதிகரித்தால்தான் நாடு உருப்படும். ஆனால் தமிழ்கூறும் நல்லுலகம் நல்லகண்ணுகளை விடவும் நடிகர்களைத்தானே எதிர்பார்ப்போடு பார்க்கிறது? வாழ்நாள் போராளிகள், வாழும் காலத்தில் போற்றப்படாமல் இறந்தபின் ஏன் போற்றப்படுகிறார்கள்? வாழும் காலத்தில் அவர்களுடைய அருமை ஏன் தமிழ் சமூகத்துக்குத் தெரியாமல் போகிறது? வாழ்ந்து மறைந்த பின் தான் அவருக்கு சிலை வைத்துப் பட்டம் சூட்டிக் கொண்டாடுகிறார்கள். ஆனால் மேற்கு வங்கத்தில், திரிபுராவில்,கேரளத்தில் ஓரளவுக்கு நேர்மையான இடதுசாரி தலைவர்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு திரிபுராவில் அவ்வாறு தெரிவு செய்யப்பட்ட ஒரு முதலமைச்சரைப் பற்றிய செய்திகளை சமூக வலைத்தளங்களில் பார்க்கமுடிந்தது. அவர் மிக எளிமையாக வாழ்ந்தார். சொத்துச் சேர்க்கவில்லை. அரச போகங்களை அதிகம் அனுபவிக்கவில்லை. அவருடைய மனைவி ஒர் அரச ஊழியர். முச்சக்கர வண்டியில்தான் அலுவலகத்துக்கு சென்றார்.அரசு வாகனத்தில் சென்றதில்லை. அப்படிப்பட்ட எளிமையான ஒருவரை திரிபுரா மக்கள் தமது தலைவராகத் தெரிவு செய்தார்கள். ஆனால் இந்திய மாநிலங்களில் அதிகம் கல்வியறிவுடைய மாநிலங்களில் ஒன்றாகக் கணிக்கப்படும் தமிழ்நாட்டில் ஏன் நல்லகண்ணுகள் தேர்தலில் வெற்றிபெற முடியவில்லை ? நடிகர்களுக்காகத் தீக்குளிக்கும் ஒரு சமூகம். நடிகர்களுக்காக மீசையை வழித்துக் கொள்கிற, மொட்டை அடித்துக் கொள்கிற ஒரு சமூகம். நடிகர்களைப் பார்க்கப்போய் நசிந்து சாகும் ஒரு சமூகம். அரசியலில் நடிக்க மறுத்து நேர்மையாக வாழ்ந்த மனிதர்களை ஏன் அவர்கள் வாழும் காலத்திலேயே போற்றத் தவறுகிறது ? இது சமூகத்தின் கோளாறா?அல்லது நேர்மையான அரசியல் செயற்பாட்டாளர்கள் தேர்தல் அரசியலில் வெற்றிபெறத் தேவையான தந்திரங்களையும் வியூகங்களையும் கற்றுக்கொள்ளத் தயாரில்லையா? அல்லது அவர்களால் அவற்றைக் கற்றுக்கொள்ள முடியவில்லையா? இதில் இரண்டாவது விடயம்தான் அதிகம் விவாதிக்கப்பட வேண்டியது. இது தமிழ்கூறும் நல்லுலகில் மட்டுமல்ல உலகின் பல பாகங்களிலும் அவதானிக்கப்பட்ட ஒரம்சம். தேர்தல்மைய அரசியலில் நேர்மையானவர்கள் தங்களைப் பொருத்திக் கொள்வதற்கு அல்லது சுதாகரித்துக் கொள்வதற்கு ஒன்றில் விரும்புவதில்லை. அல்லது அவர்களுக்கு முடியவில்லை. ஆசிய,ஆப்பிரிக்க, லத்தின் அமெரிக்க தேர்தல் ஜனநாயகங்களில் மட்டுமல்ல மேற்கத்திய தேர்தல் ஜனநாயகங்களிலும் அந்த நிலைமை உண்டு. பொதுவாக புத்திசாலித்தனத்திற்கும் ஜனரஞ்சகத்துக்கும் பொருந்தி வருவது குறைவு. இதில் புத்திசாலித்தனத்தை ஜனரஞ்சகமாக விற்கத் தெரிந்தவர்கள் அரிதாக வெற்றி பெறுகிறார்கள். பெரும்பாலான அறிஞர்களும் நேர்மையானவர்களும் தேர்தல்மைய அரசியலில் தேர்தல் போட்டிகளில் இறங்கி அசிங்கப்பட வேண்டியிருக்கும் என்று கருதுகிறார்கள். அதனால் பெரும்பாலும் பின்வாங்குகிறார்கள். அதுமட்டுமல்ல, தலைமைத்துவம் எனப்படுவது தனிய அறிவு மட்டுமல்ல. தியாகம் மட்டும் அல்ல. வீரம் மட்டும் அல்ல. அது ஒரு கலப்பு ஒழுக்கம். அறிவு கூடியவர்கள் பல சமயங்களில் இதயத்தால் செழிப்பில்லாதவர்களாக இருப்பார்கள். அறிவு கூடியவர்கள் பல சமயங்களில் தலைமைத்துவ பண்பு இல்லாதவர்களாக இருப்பார்கள். புத்திசாலிகள் பல சமயங்களில் இதயம் இல்லாதவர்களாக இருப்பார்கள். உன்னதமான தலைமை என்பது அறிவும் இதயமும் இணைந்து மேல் எழுவது. அது மிக அரிது. நான் திரும்பத்திரும்ப கூறும் ஒரு நடைமுறை உதாரணம் உண்டு. தூய தங்கத்தை வைத்து ஆபரணம் செய்ய முடியாது. அதில் செப்பைக் கலக்க வேண்டும். அதாவது தங்கத்தை பிரயோகநிலைக்குக் கொண்டு வருவதென்றால் அங்கே கலப்பு அவசியம். தூய தங்கத்தை வேண்டுமானால் அயர்ண் சேவில் வைக்கலாம். ஆனால் ஆபரணமாக்க முடியாது. அப்படித்தான் பொது வாழ்விலும் அரசியலிலும்.தங்களைத் தூய தங்கங்களாகக் கருதுபவர்கள், செப்போடு கலக்கத் தயாராக இல்லாதவர்கள், நடைமுறை அரசியலில் இறங்க முடியாது. தேர்தல்மைய அரசியலுக்கு என்று தொழில் திறன்கள் வேண்டும். தந்திரங்கள் வேண்டும்; உத்திகள் வேண்டும்; செல்வம் வேண்டும்;புகழ் வேண்டும்;தலைமைத்துவப் பண்பு வேண்டும். இவையனைத்தும் ஒன்றாக வாய்க்கப் பெற்றவர்கள் தேர்தல்மைய அரசியலில் வெற்றி பெறுகிறார்கள். தூய தங்கமாக இருப்பவர்கள் அல்லது தூய அறிஞர்களாக இருப்பவர்கள் தேர்தல்மைய அரசியலில் வெற்றிபெறாமல் போகும் இடங்கள் இவைதான். தமிழ்நாட்டில் நல்லகண்ணு மட்டுமல்ல,மணிப்பூரில் இரோமி சர்மிளா என்ற பெண் மக்களுக்காக நீண்ட நாட்கள் உண்ணாவிரதம் இருந்தவர். தேர்தல் கேட்டபோது அவருடைய மக்கள் அவரை குரூரமாக நிராகரித்தார்கள். ஈழத்தமிழர்கள் மத்தியிலும் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு அவயங்களை இழந்தவர்கள் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டார்கள். ஒருவருமே வெற்றி பெறவில்லை. அவர்களுக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்ட முன்னாள் இயக்கத்தவர் ஒருவர் சொன்னார், கிட்டத்தட்ட 15,000வீடுகளுக்கு ஏறி இறங்கியிருப்போம் என்று. ஆனால் அவர்கள் எந்தப் பெண்ணுக்காகப் பிரச்சாரம் செய்தார்களோ,எந்த மக்களுக்காக அந்தப் பெண் தன் ஒரு காலை இழந்தாரோ,அவருக்கு கிடைத்த வாக்குகள் மொத்தம் 2000. ஆனால் அர்ஜுனாவுக்கு கிடைத்தவை அதைவிடப் பல மடங்கு. அப்படியென்றால் தமிழ்மக்கள் யார் தங்களுக்குத் தலைவர்களாக வரவேண்டும் என்று விரும்புகிறார்கள் ? ஆயுதப் போராட்ட அரசியலும் தேர்தல்மைய அரசியலும் ஒன்று அல்ல. இலட்சியவாத அரசியலும் தேர்தல்மைய அரசியலும் ஒன்று அல்ல என்பதைத்தான் மனிதகுல வரலாறு தொடர்ச்சியாக நிரூபித்து வந்திருக்கிறது. இங்கேதான் நல்ல கண்ணுகள் தம் சொந்த மக்களாலேயே தெரிவு செய்யப்படாமல் போகிறார்கள். அல்லது இறந்த பின் அதிகம் போற்றப்படுகிறார்கள். இதில் ஈழத் தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் எதுவென்றால், 2009க்குப் பின்னரான ஈழத்தமிழ் மிதவாத அரசியலானது இன்னமும் சரியான ஒரு தடத்தில் ஏறவில்லை. ஒரு பகுதியினர் அதனை ஆயுதப் போராட்டத்தின் தொடர்ச்சியாக,இலட்சிய வாதமாகப் பார்க்கிறார்கள். ஆனால் தமிழ் மக்கள் அவர்களுக்கு வாக்களிப்பது குறைவு. இதன்பொருள்,தமிழ்மக்கள் இலட்சியவாதத்திற்கு எதிரானவர்கள் என்பதல்ல. இங்கே தவறு தமிழ்மக்களில் இல்லை.மாறாக இலட்சியவாதிகளால் தங்களுடைய அரசியலை தேர்தல் மொழியில் மொழிபெயர்க்கத் தெரியவில்லை என்பதுதான். தமது இலட்சியங்களை நிறுவனமயப்படுத்த முடியவில்லை என்பதுதான். அதற்குத் தேவையான கட்டமைப்புகளையும் அவர்கள் கட்டி எழுப்பத் தவறுகிறார்கள். அண்மையில் தமிழகத்தில் மேற்படிப்புக்காகச் சென்ற ஒரு கிறிஸ்தவ மதகுரு விடுமுறையில் வந்தபோது சொன்னார் “அங்கே கிராம மட்டத்தில் வட்டச் செயலர் என்ற பொறுப்பு எவ்வளவு முக்கியமானது, வினைத்திறன் மிக்கது?”என்று.கீழிருந்து மேலோக்கி வாக்காளர்களை கட்சி மயப்படுத்துகின்ற வேலையை வட்டச் செயலர்கள் செய்கிறார்கள். தமிழ்த்தேசிய கட்சிகளில் எத்தனை அவ்வாறான கீழ்மட்டக் கட்டமைப்புகளைக் கொண்டிருக்கின்றன? தமிழரசுக் கட்சியிடம் ஓரளவுக்கு உண்டு. அதனால்தான். அந்தக் கட்சி வடக்கு-கிழக்கு தழுவிய ஒப்பீட்டளவில் அதிக வெற்றிகளைப் பெறுகின்றது. எனவே தமிழ்த் தேசிய அரசியலில் தூய்மைவாதம், இலட்சியவாதம் பேசுகின்ற கட்சிகள் முதலில் செய்ய வேண்டியது தங்களுக்குள்ள மக்கள் ஆதரவை நிறுவனமயப்படுத்துவது;கட்சி மயப்படுத்துவது;அதற்கு வேண்டிய கட்டமைப்புகளை உருவாக்குவது. இதற்குத் தமிழக உதாரணங்கள் கூடத் தேவையில்லை. தாயகத்திலேயே ஒருகாலம் ஆயுதப் போராட்டம் அவ்வாறான கட்டமைப்புகளைக் கொண்டிருந்தது. கிராம மட்டத்தில் கிராமியப் பொறுப்பாளர்கள் அல்லது வட்டாரப் பொறுப்பாளர்கள் இருப்பார்கள். அவர்களுக்கு பொறுப்பாக ஏரியா பொறுப்பாளர் இருப்பார். அவருக்கு மேல்,மாவட்டப் பொறுப்பாளர் இருப்பார். அவருக்கு மேல் அரசியல் துறைப் பொறுப்பாளர் இருப்பார். இது அரசியல் துறைக்கு மட்டுமல்ல,நிதித்துறை, படைத்துறை, புலனாய்வுத் துறை முதலாக எல்லாத் துறைகளுக்கும் இருந்தது. இந்த கட்டமைப்புகளுக்கு ஊடாகத்தான் எண்பதுகளில் எல்லா இயக்கங்களும் வளர்ச்சிபெற்றன. எனவே தமிழ்த் தேசிய அரசியலை பாரம்பரிய தொழில்சார் அரசியலாகக் கருதாமல், புரட்சிகரமான மிதவாத அரசியலாகக் கருதுபவர்கள், பயில்பவர்கள் முதலில் செய்யவேண்டியது கட்டமைப்புச் சார்ந்து சிந்திப்பதுதான். எதையும் கட்டமைப்புக்குள்ளால் சிந்தித்தால்தான் நல்லகண்ணுகளை தலைவர்கள் ஆக்கலாம். கெட்டகண்ணுகளை பொதுவாழ்வில் இருந்து தோற்கடிக்கலாம். https://www.nillanthan.com/8184/
  14. ஓநாய்களும் ஆட்டுக்குட்டிகளும் ஈழத் தமிழர்களும் - நிலாந்தன் ஒரு சிறுவர் கதையிலிருந்து தொடங்குவோம். ஓநாய் ஒன்று நீரோடையில் நீர் அருந்த வந்தது. அங்கே ஒர் ஆட்டுக்குட்டி நீர் அருந்தி கொண்டிருந்தது. ஓநாய் ஆட்டுக் குட்டியைப் பார்த்துச் சொன்னது “டேய் நீதான் போன மாதம் என்னை கேவலமான வார்த்தைகளால் திட்டியது. அதற்குத் தண்டனையாக உன்னை இப்பொழுது நான் கொன்று சாப்பிடப் போகிறேன்” என்று. அதற்கு ஆட்டுக்குட்டி சொன்னது “ஐயா நான் போன மாதம் பிறந்திருக்கவே இல்லை” என்று. ஓநாய் சொன்னது “அப்படியென்றால் அது உன்னுடைய அம்மாவாக இருக்கும். உன்னுடைய அம்மாவைத் தண்டிப்பதற்காக இப்பொழுது உன்னைச் சாப்பிடப் போகிறேன்.” என்று கூறி ஆட்டுக்குட்டியின் மீது பாய்ந்து அதைக் கொன்று தின்றது. இந்தக் கதைக்குள் இருக்கும் செய்தி என்னவென்றால், கொல்வது என்று தீர்மானித்தால் அதற்கு ஒரு காரணம் தேவை. அதுதான் இப்பொழுது ஈரானில் நடக்கிறது. முன்பு ஈராக்கில் நடந்தது; லிபியாவில் நடந்தது. ஈரானை அடிக்க வேண்டும், அதன் எதிர்ப்பை நசுக்க வேண்டும். ஈரான் கீழ்ப்படிந்தால் மேற்காசியா சுருண்டு விடும். எனவே ஈரானை நசுக்க வேண்டும். ஈரான் அணுகுண்டு தயாரித்துக் கொண்டிருக்கிறது. எனவே அதைத் தடுக்க வேண்டும் என்பது பிரதான குற்றச்சாட்டு. ஈரான் ஏன் அணுகுண்டை வைத்திருக்கக் கூடாது? அது பாரசீக நாகரிகத்தின் வழித்தோன்றல். பாரசீக நாகரிகமானது இப்போதிருக்கும் பெரும்பாலான ஐரோப்பிய,அமெரிக்க நாடுகளை விடவும் மூத்தது. ஒரு மூத்த நாகரீகம் அணுகுண்டை ஏன் வைத்திருக்கக் கூடாது? இதுதொடர்பாக ஓமானின் அனுசரணையோடு நடந்த பேச்சுவார்த்தைகள் தொடர்பில் பீட்டர் கிர்னஸ் என்பவர் எக்ஸ் தளத்தில் எழுதியுள்ளார். ஓமான் நாட்டின் வெளிவிவிகார அமைச்சின் ராஜதந்திர உதவியாளரான அவர் கூறுவதின்படி, ஈரான் அமெரிக்காவோடு உடன்பாட்டுக்குச் சம்மதித்த பின்னர்தான் அமெரிக்கா ஈரானைத் தாக்கியிருக்கிறது. அதாவது ஈரான் அணுகுண்டு உற்பத்தியைக் கைவிடும் விடயத்தில் அமெரிக்காவோடு ஏதோ ஒரு சமரசத்துக்கு வரத் தயாராக இருந்தது. பேச்சுவார்த்தைகளில் இணக்கம் காணப்பட்டிருந்த ஒரு பின்னணியில்தான் ஈரான் தாக்கப்பட்டிருக்கிறது. ஆயின், இங்கே பேச்சுவார்த்தைகள் எனப்படுகின்றவை ஈரான் உஷார் நிலையில் இருப்பதைத் தடுக்கும் தந்திர நோக்கத்தைக் கொண்டவையா? ஈரானின் அதிபர் இரும்பு கரம் கொண்டு நாட்டை ஆண்டார் என்று மேற்கு நாடுகள் கூறுகின்றன. பெண்களுக்கு உரிமை இல்லை. அரச எதிர்ப்பாளர்கள் ஈவிரக்கமின்றி வேட்டையாடப்படுகிறார்கள், உலகில் அதிகம் மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்ட நாடு…. போன்ற குற்றச்சாட்டுக்கள் உண்டு. அவற்றில் உண்மையுண்டு. ஆனால் அது ஈரானியர்களின் பிரச்சினை. அதற்காக ஈரானிய அதிபரை தண்டிப்பதற்கு வெளி நாடுகளுக்கு உரிமையும் இல்லை. அதேசமயம் போரின் தொடக்க நாளில் சில நிமிடங்களிலேயே கொமெய்னியும் அவருடைய குடும்பமும் அழிக்கப்படும் அளவுக்கு ஈரான் பலவீனமாக இருந்திருக்கிறது. அதன் எல்லாப் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் தகர்த்தெறியும் அளவுக்கு அமெரிக்காவும் இஸ்ரேலும் வலிமையாக இருந்திருக்கின்றன. ஈரானின் வலிமையை உடைப்பதில் அதன் உள் எதிரிகளுக்கும் பங்கு இருந்திருக்கிறது. உள்ளே இருப்பவர்கள் வழங்கிய தகவல்களை வைத்துத்தான் கொமெய்னியின் தலை குறி வைக்கப்பட்டிருக்கிறது. தன்னைத் தானே மூடும் சமூகங்கள் தம்மைத் தாமே காட்டிக் கொடுப்பவர்களை உற்பத்தி செய்கின்றன. எதுவாயினும் கடந்த மூன்று மாத காலப் பகுதிக்குள் அமெரிக்கா தன்னை உலகின் ஏகப் பெரு வல்லரசு என்று நிரூபிக்கும் இரண்டு நடவடிக்கைகளை வெற்றிகரமாக முடித்திருக்கிறது. முதலாவது வெனிசுலாவின் அதிபரை அவருடைய நாட்டுக்குள் இறங்கித் தூக்கியது. இரண்டாவது, ஈரானின் அதிபரும் உட்பட தீர்மானிக்கும் அதிகாரமுடைய உயர்மட்டத் தலைவர்களை போர் தொடங்கிய அன்றே தீர்த்துக் கட்டியது. இறமையுள்ள நாடு ஒன்றின் தலைவரை அந்த நாட்டுக்குள் இறங்கிக் கைது செய்கிறார்கள். மற்றொரு நாட்டின் தலைவரை குண்டு போட்டுக் கொலை செய்கிறார்கள். வெளிநாடுகளின் வான்பரப்புக்குள் ஆளில்லா விமானங்களை அத்துமீறி அனுப்பி ஆட்களைக் கொல்லுகிறார்கள்; இலக்குகளை அழிக்கிறார்கள். இப்பொழுது சொல்லுங்கள், இறையாண்மை எங்கே இருக்கிறது ? சுதந்திரம் எங்கே இருக்கிறது? நாடுகளின் ஆள்புல எல்லைகளுக்குப் பொருள் என்ன? 10 கோடி மக்களை கொண்ட ஈரானுக்கும் இது பொருந்தும். சிறிய இலங்கைத் தீவுக்கும் இது பொருந்தும். இலங்கைத் தீவின் 40 கடல் மைல் தொலைவில் வைத்து ஈரானியக் கப்பல் தாக்கி மூழ்கடிக்கப்பட்டிருக்கிறது. இது இந்தியாவின் செல்வாக்கு மண்டலம். அமெரிக்கா எதுவரை தான் வரமுடியும் என்பதனை அங்கே காட்டியிருக்கிறது. சிறிய இலங்கைத் தீவு சுதந்திரம், இறைமை என்றெல்லாம் வீரம் காட்டவில்லை. இந்தியா யாருடைய பக்கம்? இந்தியாவின் மௌனம் அதன் ராஜதந்திரமான வார்த்தைகள் எதை உணர்த்துகின்றன? ஈரானுக்கு அவர்கள் ஆதரவில்லை என்பதைத்தான். பாரசீகத்தைப் போலவே இந்திய பேரரசும் ஒரு பெரிய பண்பாட்டு நிலப்பரப்பு . ஆனால் ஒரு நாட்டின் ஆல்புல எல்லைக்குள் நுழைந்து அந்த நாட்டின் தலைவரைக் கொல்லும் காட்டு விதியை இந்தியா ஆதரிக்கின்றதா? எதிர்கின்றதா? இப்படிப்பட்டதோர் உலகச் சூழலில் அரசற்ற சிறிய மக்கள் கூட்டமாகிய ஈழத்தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டியவை எவை? ஒரு பகுதியினர் ஈரான் தாக்கப்படுவதை ரசிக்கிறார்கள். ஏனென்றால் ஈரான் இறுதிக் கட்டப் போரில் அரசாங்கத்தின் பக்கம் நின்றது. ஈரான் மட்டுமல்ல, கியூபா, வியட்நாம், பாலஸ்தீனம் போன்ற நாடுகளும் ஐநாவில் அரசாங்கத்தின் பக்கம்தான் நிற்கின்றன. கியூபா எப்பொழுதும் அமெரிக்காவின் பொருளாதாரத் தடையால் பாதிக்கப்படும் ஒரு நாடு. அங்கே மருத்துவ, பொருளாதாரத் தடை காரணமாக முதியவர்கள் இறந்து கொண்டிருப்பதாக ஒரு சிறுமி எழுதிய கடிதம் சமூகவலைத்தளங்களில் வாசிக்க கிடைத்தது. பொருளாதாரத் தடையால் அதிகம் பாதிக்கப்பட்ட மக்கள் என்ற வகையில் ஈழத் தமிழர்கள் கியூபாவின் பக்கம்தான் நிக்க வேண்டும். ஆனால் ஐநாவில் கியூபா ஈழத் தமிழர்களோடு நிற்பதில்லை. இன்னுமோர் உதாரணம். மேற்காசியாவில் அரசற்ற குர்திஷ் மக்கள் வெவ்வேறு நாடுகளால் பங்கிடப்படுகிறார்கள். அங்கெல்லாம் அவர்கள் இப்பொழுது அமெரிக்காவின் உதவியோடு அந்தந்த அரபு நாடுகளுக்கு எதிராக போராடுகிறார்கள். இந்த இடத்தில் அவர்கள் அறநெறியின் அடிப்படையில் அமெரிக்காவுக்கு எதிராக நிற்க வேண்டுமா? அல்லது எதிரியின் எதிரி எனக்கு நண்பன் என்று ராஜதந்திரமாக முடிவெடுக்க வேண்டுமா? எது சரி ?அறமா? விடுதலையா ? இந்த இடத்தில் அறமும் விடுதலையும் ஒன்றுடன் ஒன்று பொருந்தவில்லை. அரசற்ற சிறிய மக்கள் கூட்டத்துக்கு இதுதான் விதி. ஏன் இலங்கை போன்ற சிறிய நாடுகளுக்கும் இதுதான் விதி. போர் என்று வந்தால் அங்கே தர்மம்,நீதி நியாயங்கள் இருக்காது. வெற்றியை உறுதிப்படுத்துவது என்ற ஒரே இலக்கு மட்டும்தான் இருக்கும். அது ஒரு காட்டு விதி. அது நாகரீகமடைந்த மனிதர்களின் விதியல்ல.மனித குல நாகரீகம் என்பது போரைத் தவிர்ப்பது. ஆனால் விலங்குகளின் விதி அதுவல்ல. அங்கே வெல்வதுதான் பிழைக்கும். அதுதான் காட்டு விதி. இங்கே தொடக்கத்தில் கூறப்பட்ட சிறுவர் கதையில் இருப்பது அதுதான். ஓநாய்கள் பசியோடு திரியும் காட்டுக்குள்தான் ஆட்டுக் குட்டிகளும் வாழ்கின்றன; ஈழத் தமிழர்களும் வாழ்கிறார்கள். ஓநாய்களிடமிருந்தும், சிங்கங்களிடமிருந்தும், ட்ராகன்களிடமிருந்தும் ஈழத் தமிழர்கள் தப்பிப்பிழைக்க வேண்டும். தமது போராட்டத்தின் நீதிக்கும், தமது ராஜதந்திர இலக்கிற்கும் இடையே ஏதோ ஒரு சமநிலையைப் பேண வேண்டும். கிறீஸ்து தன் சீடர்களுக்குப் போதித்ததுபோல”இதயத்தில் புறாக்களைப்போல கபடமற்றவர்களாகவும். செயலில் பாம்புகளைப்போல எச்சரிக்கையுணர்வோடும்” போராட வேண்டும். https://www.nillanthan.com/8178/
  15. கண்ணீர் சுமக்கும் கரங்கள்: நீதிக்கான பெண்களின் அறப்போராட்டம் March 8, 2026 10:29 am ஆளுமை மிக்க பெண்களின் சாதனைகளைக் கொண்டாடும் சர்வதேச மகளிர் தினம் இன்று! உலகம் முழுவதும் வெற்றிக் கொடி நாட்டிய மங்கையர் போற்றப்படும் வேளையில்… இலங்கையின் வடக்கு – கிழக்கு மண்ணில், முப்பது ஆண்டு கால யுத்தத்தின் வடுக்களைச் சுமந்து கொண்டு, இழந்த தம் உறவுகளுக்காகவும், மறுக்கப்பட்ட நீதிக்காகவும் வீதியோரக் கொட்டகைகளில் இன்றும் ஓயாது போராடும் வலிமை மிக்க பெண்களின் குரல்களை உலகம் கேட்கத் தவறிவிட்டதா? கண்ணீரை ஆயுதமாக்கி, நீதியைத் தேடி அலையும் அந்தத் தாய்மார்கள் மற்றும் கணவனைப் பறி கொடுத்த பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் வாழ்வியலை மையப்படுத்தி, சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, இலங்கையில் நீதிக்காகப் போராடும் பெண்களைச் சிறப்பிக்கும் விதமாக ஆதவன் வானொலியின் செய்திப் பிரிவு வழங்கும் ‘விசேட தொகுப்பு’ இது.. இன்று சர்வதேச மகளிர் தினம். உலகம் முழுவதும் பெண்களின் சாதனைகளும், வெற்றிகளும் கொண்டாடப்படும் வேளையில், ஈழத் திருநாட்டின் வடக்கு – கிழக்குப் பகுதிகளில் மௌனமான, ஆனால் வலிமையான ஒரு போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இது அதிகாரத்தைக் கைப்பற்றும் போராட்டமல்ல; இது இழந்த தங்கள் உறவுகளுக்காகவும், பறிபோன நீதிக்காகவும் வீதியில் இறங்கிப் போராடும் பெண்களின் குரல். முப்பது ஆண்டு கால யுத்தம் இலங்கையில் எத்தனையோ மாற்றங்களை ஏற்படுத்தியது. ஆனால், அந்த யுத்தம் பெண்களுக்குத் தந்த பரிசு ‘கைம்மை’. வடக்கு மற்றும் கிழக்கில் மட்டும் யுத்தத்தினால் கணவனைப் பறி கொடுத்த சுமார் 90,000-க்கும் அதிகமான பெண்கள் இன்று தலைமைத்துவப் பொறுப்பைச் சுமக்கிறார்கள். நேற்றுவரை வீட்டுக்குள் முடங்கிக் கிடந்த பெண்கள், இன்று தங்கள் குடும்பத்தைக் காக்கவும், பிள்ளைகளின் கல்விக்காகவும் வயல்களிலும், ஆலைகளிலும் வியர்வை சிந்துகிறார்கள். சமூகக் கட்டமைப்பு மாற்றமடைந்தாலும், “கணவனை இழந்தவள்” என்ற சமூகப் பார்வை இவர்களை இன்னும் காயப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறது. யுத்தம் முடிந்து 15 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால், இன்றும் வீதியோரங்களில் அமர்ந்து கண்ணீர் மல்கப் போராடும் பெண்களை நீங்கள் வவுனியாவிலும், கிளிநொச்சியிலும், முல்லைத்தீவிலும் காணலாம். இவர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள். தங்கள் கைகளில் மகனின் அல்லது கணவனின் புகைப்படத்தை ஏந்தியபடி, “எங்கள் உறவுகள் எங்கே?” என்று இவர்கள் கேட்கும் கேள்விக்கு இன்றுவரை பதில் இல்லை. இந்தத் தாய்மார்களில் பலர், நீதிக்காகப் போராடிக்கொண்டிருக்கும் போதே உயிரைத் துறந்துவிட்டார்கள். போராட்டக் களத்திலேயே சுமார் 200-க்கும் மேற்பட்ட தாய்மார்கள் மறைந்த செய்திகள் நம் மனதை உலுக்குகின்றன. சர்வதேச மகளிர் தினத்தில் இவர்களுக்கான நீதி எங்கே என்ற கேள்வி இன்றும் சர்வதேச சமூகத்தின் கதவுகளைத் தட்டிக்கொண்டிருக்கிறது. யுத்தத்தின் வடுக்கள் ஒருபுறமிருக்க, தற்போதைய பொருளாதார நெருக்கடி இந்தப் பெண்களை மேலும் ஒரு யுத்தத்திற்குள் தள்ளியுள்ளது. நுண்கடன் என்ற பெயரில் சிக்கவைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பெண்கள், இன்று அந்த கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் தற்கொலை வரை தள்ளப்படும் அவலம் தொடர்கிறது. தனது குடும்பத்தைப் பராமரிக்க வழியின்றி, அன்றாடத் தேவைக்காகப் போராடும் இந்தப் பெண்களுக்கு முறையான வாழ்வாதாரத் திட்டங்களோ அல்லது உளவியல் ரீதியான ஆலோசனைகளோ போதுமான அளவில் கிடைக்கவில்லை என்பது கசப்பான உண்மை. ஆனாலும், இந்தப் பெண்கள் சோர்ந்துவிடவில்லை. நில மீட்புப் போராட்டமாக இருந்தாலும் சரி, அரசியல் உரிமைகளாக இருந்தாலும் சரி, வடக்கு – கிழக்கில் பெண்களே இன்று முன்னிலையில் நிற்கிறார்கள். கேப்பாபுலவு முதல் முள்ளிவாய்க்கால் வரை நீதிக்கான தீபத்தை ஏந்தியிருப்பது இவர்கள்தான். இலங்கையின் வரலாற்றில் பெண்கள் வெறும் குடும்பத் தலைவிகளாக மட்டுமன்றி, சமூகத்தின் அரசியல் மற்றும் நீதித்துறை மாற்றங்களுக்கான முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ளனர் என்பதை இந்தப் போராட்டங்கள் நிரூபிக்கின்றன. சர்வதேச மகளிர் தினம் என்பது வெறும் வாழ்த்துகளுடன் முடிந்துவிடக் கூடாது. வடக்கு – கிழக்கில் நீதிக்காகப் போராடும் இந்தப் பெண்களின் கண்ணீருக்கு விடை கிடைக்க வேண்டும். அவர்களுக்குத் தேவையானது பரிதாபமல்ல, அங்கீகாரம் மற்றும் நீதி. அவர்களின் போராட்டம் வெற்றிபெறும் நாளில்தான் உண்மையான மகளிர் தினம் அர்த்தப்படும். நீதிக்காகப் போராடும் அனைத்துத் தமிழ் பெண்களின் உறுதிக்கும் oruvan இணையத்தளத்தின் வீர வணக்கங்கள் தொகுப்பு : தர்மராஜா ரஸ்மிலா https://oruvan.com/womens-struggle-for-justice-for-day/
  16. முல்லைத்தீவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் March 8, 2026 3:30 pm சர்வதேச மகளிர் தினமான இன்று, முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கம், வட்டுவாகல் பாலத்தில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தது. இன்றுடன் தமது தொடர் போராட்டத்தின் ஒன்பதாவது ஆண்டில் கால் பதிக்கும் இவ்வுறவுகள், இறுதிப் போரின் போது கையளிக்கப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட தமது அன்புக்குரியவர்களுக்கு நீதி கோரி இந்தப் போராட்டத்தை நடத்தினர். இறுதிப் போரின் போது ஆயிரக்கணக்கானோர் இராணுவத்திடம் சரணடைந்த மற்றும் கையளிக்கப்பட்ட இடமான வட்டுவாகல் பாலம், வலி சுமந்த ஒரு அடையாளமாகப் பார்க்கப்படுகின்றது. அங்கு கூடியிருந்த பெருந்திரளான தாய்மார்கள் மற்றும் பெண்கள், காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளின் புகைப்படங்களை ஏந்தியவாறு சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கோஷங்களை எழுப்பினர். ‘எமது உறவுகளுக்கு என்ன நேர்ந்தது?’ என்ற கேள்விக்கு உரிய பதிலும், சர்வதேச ரீதியிலான நீதியும் கிடைக்க வேண்டும் என்பதே இவர்களின் பிரதான கோரிக்கையாக இருந்தது. https://oruvan.com/massive-protest-in-mullaitivu/
  17. கொக்குத்தொடுவாயில் தமிழர் காணிகளில் சிங்கள வர்த்தகரின் அத்துமீறிய உப்பளம் அமைக்கும் முயற்சி; ரவிகரன் கடிதம்! முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலுவலர் பிரிவில் குஞ்சுக்கால்வெளி பகுதியிலுள்ள தமிழ்மக்களின் பூர்வீக தனியார்காணிகளை, மகாவலி அதிகார சபை தென்பகுதியைச் சேர்ந்த சிங்கள வர்த்தகருக்கு சட்டவிரோதமாக குத்தகைக்கு வழங்கியுள்ளது. இந்நிலையில் மகாவலி அதிகாரசபையிடமிருந்து சட்டவிரோத குத்தகை அனுமதியைப் பெற்றுக்கொண்ட குறித்த பெரும்பான்மையின வர்த்தகர் தமிழ்மக்களின் தனியார்காணிகளில் அத்துமீறி நுழைந்து உப்பளம் அமைக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதால் இனமுறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த சட்டவிரோதமான அத்துமீறிய செயற்பாடுகளை உடனடியாக நிறுத்தத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மாகாவலி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகத்திற்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். தனியார் காணிகளில் அத்துமீறி உப்பளம் அமைத்தல் தொடர்பானது எனத் தலைப்பிடப்பட்டுள்ள குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, மேற்படி விடயம் தொடர்பாக, கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலுவலர் பிரிவு பகுதியில் அமைந்துள்ளதும் நில அளவையாளர் நாயகம் அவர்களால் பேணப்பட்டுவரும் TOPO PP70 இலக்க நில அளவை வரைபடத்தின் Inset 17, 18, 19 ஆகிய பகுதிகளுக்குரிய தமிழ் மக்களுக்குச் சொந்தமான தனியார் காணிகளும் அதற்கு இடைப்பட்ட மேய்ச்சல் தரை நிலங்களும் மகாவலி அதிகார சபையால் தென்பகுதியைச் சேர்ந்த ஒரு சிங்கள வர்த்தகருக்கு உப்பளம் அமைப்பதற்காக தற்பொழுது நாட்டில் நடைமுறையில் இருக்கும் சட்டங்களுக்கு முரணான வகையில் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மேற்படி நடவடிக்கை அப்பகுதிக்குரிய மக்களிடையே அதிருப்தியையும் இரண்டு இனங்களுக்கு இடையேயும் முறுகல் நிலையை தோற்றுவித்தது. மக்களின் முறைப்பாட்டைத் தொடர்ந்து கடந்த 2026.02.27 அன்று குறித்த பகுதிக்கு நேரில் சென்று மேற்படி அத்துமீறிய செயற்பாட்டை என்னால் உறுதிப்படுத்த முடிந்தது. இதன் தொடர்ச்சியாக, அதே நாள் (2026.02.27 மாலை 03.00 மணி) முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் மாவட்டச் செயலாளர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தனியார் காணிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் மேற்படி உப்பளச் செய்கையை அடுத்துவரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடைபெறும் வரையிலும் நிறுத்திவைக்குமாறு மகாவலி அதிகார சபைக்கு கடிதம் அனுப்பப்படும் என மாவட்டச் செயலாளர் அவர்களால் தெரிவிக்கப்பட்டது. எனினும், 2026.03.06 ஆம் நாளாகிய நேற்று தொடக்கம், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி குறித்த பகுதியில் மீண்டும் உப்பளம் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. என்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். தமிழ் மக்களுக்குச் சொந்தமான தனியார் காணிகளை இவ்வாறு பறித்தெடுக்க முயலும் நடவடிக்கைகள், அப்பகுதி மக்களிடையே மனவேதனையையும் அரசின் மீதும் அரச நிர்வாகத்தின் மீதும் நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்துகின்றன. எனவே சட்டத்துக்கு புறம்பாக மேற்கொள்ளப்படும் இவ் அத்துமீறிய செயற்பாடுகளை உடனடியாக நிறுத்தத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். எனக் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் குறித்த கடிதம் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் விசாயம், கால்நடை, காணிமற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த, முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் உபாலி சமரசிங்க, வடக்கு மாகாண ஆளுநர், முல்லைத்தீவு மாவட்டசெயலாளர், கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் ஆகியோருக்கும் பிரதியிடப்பட்டுள்ளது. https://akkinikkunchu.com/363276/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.