-
Posts
33807 -
Joined
-
Days Won
157
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by கிருபன்
-
எல்லோருக்கும் அதிஷ்டம் அடித்தால் போட்டி ஏன்?😂 சறுக்கு மரத்தில் ஏறாமல் மேலே போகமுடியாது! இறுதி நாளுக்குப் பின்னரும் 36 ஆரம்பச் சுற்றுப் போட்டிகள் இருக்கின்றன! எத்தனை பேர் கடைசி நேரத்தில் பங்குபற்றினாலும் ஒருவர்தான் முதல்வர்😃 விதிகளின்படி பையன் ஏற்கனவே போட்டியில் குதித்துவிட்டார்! கால்பந்து விளையாடும்போது பந்து அப்படி இப்படிப் போனால் மீளவும் முயன்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியும். ஆனால் கிரிக்கெட்டில் இன்னொரு சான்ஸ் இல்லை. ஒரு தருணம் கவனம் பிசகினால் அதை மீளவும் கேட்கேலாது! டெஸ்ட் போட்டியில் மூன்று நாள் காத்திருந்து முதல் பந்தில் அவுட்டாக வேண்டும் என்று விதியிருந்தால் அதை மாற்றமுடியாது!
-
முல்லையில் மாணவ சிப்பாய்கள் படையணி பயிற்சி முகாம் செல்வன் தேசிய மாணவச் சிப்பாய்கள் படையணி பயிற்சி முகாம், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ப்ரமித்த பண்டார தென்னக்கோனால் இன்று திறந்து வைக்கப்பட்டது. முல்லைத்தீவு பாதுகாப்புப் படை கட்டளைத் தலைமையகத்தின் கீழ் நந்திக்கடல் பகுதியில் உருவாக்கப்பட்ட இராணுவப் படையணி பயிற்சிப் பாடசாலையானது தேசிய மாணவச் சிப்பாய்கள் படையணி பயிற்சிப் பாடசாலையாக அமைப்பதற்காக இராணுவத்தினரால் தேசிய மாணவச் சிப்பாய்கள் படையணிக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது. இதற்கிணங்க, இப்பயிற்சிப் பாடசாலையை தேசிய மாணவச் சிப்பாய்கள் படையணி பயிற்சிப் பாடசாலையாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ப்ரமித்த பண்டார தென்னக்கோன் இன்று திறந்து வைத்தார். ஏற்கனவே பல்வேறு இடங்களில் பயிற்சிகளை நிறைவு செய்த மாணவர்களுக்கு இதன்போது சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில், கல்விப் பணிமனை அதிகாரிகள், இராணுவ உயர் அதிகாரிகள், வடக்கு - கிழக்கைச் சேர்ந்த பல பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். (க) https://newuthayan.com/article/முல்லையில்_மாணவ_சிப்பாய்கள்_படையணி_பயிற்சி_முகாம்
-
ஊர்காவற்றுறை தாக்குதல் - உண்மையில் நடந்தது என்ன இனியபாரதி யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறையில் உள்ள தமது வீட்டுக்கு விருந்துக்கு வந்தவர்கள் மீது ஊரிலுள்ள சிலர் மதுபோதையில் தாக்குதல் நடத்தி, அவர்கள் மீது பொய்க் குற்றச்சாட்டுக்கள் சுமத்தி பொலிஸாரிடம் பிடித்துக்கொடுத்துள்ளதாக பாதிக்கப்பட்ட வீட்டார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, தாக்குதலாளிகளுக்கு ஆதரவாகப் பொலிஸாரும் நடந்து கொண்டதாக குற்றம்சாட்டியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: ஊர்காவற்றுறை மெலிஞ்சி முனைப்பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர், யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியைச் சேர்ந்த தனது நண்பனான இளைஞனை தனது வீட்டுக்கு விருந்துக்கு வருமாறு கடந்த 04 ஆம் திகதி அழைத்துள்ளார். அதனையடுத்து, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன், தனது நண்பர்களான மேலும் மூவருடன் முச்சக்கரவண்டியில் ஊர்காவற்றுறைக்குச் சென்றுள்ளனர். தம்மை விருந்துக்கு அழைத்த இளைஞனின் வீட்டுக்கு முன்னால் முச்சக்கரவண்டியை நிறுத்திவிட்டு, நால்வரும் வீட்டினுள் சென்று அமர்ந்து உரையாடிக்கொண்டிருந்த வேளை, ஊரைச் சேர்ந்த சிலர் மதுபோதையில் அங்கு வந்து வெளியூரைச் சேர்ந்தவர்கள், யாரின் அனுமதி பெற்று ஊருக்குள் வந்தார்கள் என முரண்பட்டு, அவர்களின் முச்சக்கரவண்டி கண்ணாடிகளை உடைத்துள்ளனர். அவ்வேளை, இளைஞனை விருந்துக்கு அழைத்த இளைஞன் தாக்குதலாளிகளைத் தடுக்க முற்பட்ட வேளை இளைஞன் மீது தாக்குதல் மேற்கொண்டு அவர்களின் வீட்டின் மீதும் தாக்குதலை மேற்கொண்டு, யாழிலிருந்து சென்ற இளைஞர்கள் மீதும் தாக்குதல் மேற்கொண்டு, அவர்களைப் பிடித்து ஊர்காவற்றுறை பொலிஸாரிடம், தம்மைத் தாக்க யாழிலிருந்து வந்ததாகக் கூறி பிடித்துக்கொடுத்துள்ளனர். பொலிஸார் அவர்களைக் கைது செய்த வேளை யாழிலிருந்து சென்ற இளைஞர்கள் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்து இருந்தமையால், அவர்களைச் சட்ட மருத்து அதிகாரி முன்பாக முன்னிலைப்படுத்தி சிகிச்சை வழங்கியதுடன், மருத்துவ அறிக்கையையும் பெற்றிருந்தனர். பின்னர் பொலிஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணைகளை முன்னெடுத்த வேளை யாழைச் சேர்ந்த இளைஞர்கள் மீது வழக்குத் தொடர்வதற்கான எந்த முகாந்திரமும் இல்லாத நிலையில் 04 ஆம் திகதி பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளனர். அவ்வேளை, ஊரில் தமது வீட்டினை தாக்கி, தமது வீட்டுக்கு வந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தி, அவர்களின் முச்சக்கரவண்டியை சேதமாக்கியமை தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பினர் முறைப்பாடு செய்துள்ளனர். குறித்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில், ஊரைச் சேர்ந்த ஒருவர், யாழ்ப்பாணத்திலிருந்து வந்த நபர்கள் தங்களின் வீட்டிற்குள் புகுந்து தம்மைத் தாக்க வந்ததாக பரஸ்பர முறைப்பாடு வழங்கியுள்ளார். முதல் முறைப்பாட்டுக்கு விசாரணைகளை முன்னெடுக்காத பொலிஸார், இரண்டாவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்து, முதல் நாள் பொலிஸ் பிணையில் விடுவித்த இளைஞர்களை பொலிஸ் நிலையம் அழைத்து மீளக் கைது செய்து நேற்றைய தினம் 06 ஆம் திகதி நீதிமன்றில் முற்படுத்தியிருந்தனர். இதன்போது, கைது செய்யப்பட்ட நபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, பிணை விண்ணப்பம் செய்ததையடுத்து மன்று அவர்களுக்குப் பிணை வழங்கியுள்ளது. அதேவேளை, முதலாவது முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுக்குமாறு மன்று பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது. மண்டைதீவு பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற வன்முறைச் சம்பவத்தில் ஈடுபட்ட கும்பல் ஒன்று தமக்கு ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் ஆதரவு உள்ளதாக பெயர் குறிப்பிட்டு கூறிய சம்பவம் தொடர்பில் பொலிஸ் உயர் அதிகாரிகள் விசாரணைகளை எதிர்கொண்டு வரும், பொலிஸ் உத்தியோகத்தரே ஊர்காவற்றுறை சம்பவத்திலும் விசாரணை அதிகாரிகளில் ஒருவராக இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (க) https://newuthayan.com/article/ஊர்காவற்றுறையில்_உண்மையில்_நடந்தது_என்ன
-
தமிழ்த் தேசிய கட்சிகளை ஓரணியாக்கும் பொறுப்பை ஏற்றது ஜ. த. தே. கூட்டணி புதியவன் அரச தலைவர் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்களுடன் பேசுவதற்கான பொறுப்பை ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி ஏற்றுள்ளது. அத்துடன், இந்த மாதத்துக்குள் இதுதொடர்பான பேச்சுக்களை ஆரம்பிக்கவும் அந்தக் கட்சி திட்டமிட்டுள்ளது என்று அந்தக் கட்சியின் பேச்சாளர் சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்தார். ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகளின் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள் குறித்து அறிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். நேற்று வவுனியா - கோவில் புளியங்குளத்தில் தனியார் விடுதியில் நடந்த இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீரமானங்கள் வருமாறு: அரச தலைவர் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை நிறுத்தும் விடயத்தை கொள்கை ரீதியாக ஏற்றுக்கொள்வது. என்றும் இதற்காக தமிழ்த் தேசிய சிந்தனை கொண்ட ஏனைய கட்சிகளான இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் பேசி அவர்களின் அபிப்பிராயங்களையும் அறிந்து இந்த விடயத்தை தொடர்ந்து முன்னகர்த்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. அத்துடன், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி கட்சிக்கு மாவட்டந்தோறும் குழுக்களை அமைத்து கட்சியை வலுப்படுத்துவது என்றும் இதில், பெண்களின் வகிபாகத்தையும் உறுதிப்படுத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. (க) https://newuthayan.com/article/தமிழ்த்_தேசிய_கட்சிகளை_ஓரணியாக்கும்_பொறுப்பை_ஏற்றது_ஜ._த._தே._கூட்டணி
-
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழக முதல்வருக்கு அனுப்பிய கடிதம் - நிலாந்தன் கடந்த 19ஆம் திகதி தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை கொண்ட 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட ஒரு கூட்டுக் கடிதம் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய உப தூதரகத்தில் கையளிக்கப்பட்டது. திருச்சி சிறப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்த மூன்று அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு தமிழக முதல்வரிடம் அக்கூட்டுக் கடிதம் கோரிக்கை விடுத்திருந்தது. திருச்சி சிறப்பு முகாமில் உள்ள ஈழத்தமிழர்களின் நலன்களைக் கவனிக்கும் ஒரு வழக்கறிஞரின் பங்களிப்போடு அக்கூட்டுக் கடிதம் தயாரிக்கப்பட்டது. கடந்த 17 ஆம் தேதி உத்தியோகப் பற்றற்ற விதத்தில் தமிழக முதல்வரிடம் கையளிக்கப்பட்டது. பின்னர் 19ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் உள்ள உபதூதரகம் ஊடாக அனுப்பப்பட்டது. தமிழ்த்தேசிய நிலைப்பாட்டை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் 12பேர் ஒன்றாக இணைந்து அப்படி ஒரு கடிதத்தை அனுப்பியமை முக்கியமான ஒர் அடைவு. உடல்நலக் குறைவு காரணமாக சம்பந்தர் கையெழுத்திடவில்லை. 2021ஆண்டும் ஒரு கூட்டுக் கடிதம் தயாரிக்கப்பட்டது. அந்த ஆண்டு நடக்கவிருந்த ஐநா மனித உரிமைகள் கூட்டத் தொடரை முன்னிட்டு அந்த ஆண்டு ஜனவரி மாதம் அக்கடிதம் அனுப்பப்பட்டது. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளின் பின் மீண்டும் 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து ஒரு கூட்டுக் கடிதத்தை தமிழக முதல்வருக்கு அனுப்பியிருக்கிறார்கள். அதிகம் கவனத்தை ஈர்க்காத அந்த முயற்சி மகத்தானது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் சிறப்பு முகாம் கைதிகளின் விடயத்தில் ஒன்றிணைந்த அதே கட்சிகள் ஏனைய எல்லா விடயங்களிலும் ஒன்றிணையும் என்று கற்பனை செய்யத் தேவையில்லை. தமிழரசுக் கட்சிக்குள் நடப்பவை முழுத் தமிழ் அரசியலுக்கும் பொருந்தும். தமிழ் மக்களுக்கு இப்பொழுது எதிரிகள் வெளியில் இல்லை . சொந்த வீட்டுக்குள்தான் இருக்கிறார்கள். ஒரு தேர்தல் ஆண்டில் தமிழ் மக்கள் ஒருமித்து முடிவெடுக்க முடியாத ஒரு நிலை. ஜனாதிபதி தேர்தல் தொடர்பில், தமிழ் மக்கள் மத்தியில் மூன்று விதமான முடிவுகள் காணப்படுகின்றன. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தேர்தலைப் புறக்கணிக்கின்றது. ஆனால், அந்த முடிவை மக்கள் மயப்படுத்த வேண்டும் என்று அக்கட்சி சிந்திக்கவில்லை. அதாவது தன்னுடைய முடிவு சரி என்று மக்களை ஏற்றுக்கொள்ளச் செய்து தேர்தலைப் புறக்கணிக்கும் ஒரு மக்கள் மக்கள் ஆணையைப் பெற அக்கட்சி முயற்சிக்கவில்லை. தமிழரசுக் கட்சி இரண்டாகி நிற்கிறது. ஒரு பிரிவு சஜித்தோடு நிற்பதாகத் தோன்றுகிறது. மற்றொரு பிரிவு தமிழ்ப் பொது வேட்பாளருக்குக் கிட்டவாக நிற்கிறது. குத்துவிளக்கு கூட்டணிக்குள், ஈபிஆர்எல்எப் தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற முடிவை எப்பொழுதோ எடுத்துவிட்டது. ஏனைய கட்சிகள் அது தொடர்பாக தமது உத்தியோகபூர்வ நிலைப்பாடுகளை அறிவிக்கவில்லை. விக்னேஸ்வரன்,பொது வேட்பாளரை ஏற்றுக்கொள்கிறார். இப்படியாகத் தமிழ்த் தரப்பில் மூன்று நிலைப்பாடுகள் உண்டு. ஆனால் அவை நிலைப்பாடுகள்தான். கருத்துருவாக்கம் என்ற செயற்பாட்டுக்கும் அப்பால் என்பதற்கும் அப்பால் அதை நோக்கிய கட்டமைப்புகள் எவையும் இதுவரை உருவாக்கப்படவில்லை. அதாவது கிட்டத்தட்ட ஆறு மாதங்களில் வரக்கூடிய ஒரு தேர்தலை எதிர்கொள்வதற்கு தமிழ்த் தரப்பு இப்படித்தான் தயாராகக் காணப்படுகின்றது. அதேசமயம் தென்னிலங்கையில் பிரதான கட்சிகள் ஜனாதிபதித் தேர்தலை நோக்கி திட்டமிட்டு உழைக்கின்றன. ஜேவிபிதான் முதலில் உற்சாகமாக உழைக்க தொடங்கியது. “அரகலய”வின் விளைவு அது. அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பிய பசில் அதிகரித்து எதிர்பார்ப்போடு உழைத்து வருகிறார். அமெரிக்காவிலிருந்து வந்த பசில் தமது பேர பலத்தை அதிகரிக்கும் நோக்கத்தோடு கருத்து தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தலை முதலில் வைப்பதற்குப் பதிலாக பொதுத் தேர்தலை முதலில் வைக்க வேண்டும் என்று அவர் கூறுகிறார். ஏனென்றால் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் மக்களுக்கு முற்கற்பிதங்களை ஏற்படுத்தும். முன் முடிவுகளை உருவாக்கும். ஒரு வெற்றி அலையானது தொடர்ந்து அடுத்தடுத்த தேர்தல்களிலும் எதிரொலிக்கும். எனவே ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் பொதுத் தேர்தலிலும் மக்கள் வாக்களிக்கக்கூடும். ஒரு ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெறுவாராக இருந்தால், அவர் பொருளாதாரத்தை மறுசீரமைப்பதற்காக கிடைத்த வெற்றியாக அது காட்டப்படும். அதனால் ரணிலின் பேரபலம் அதிகரிக்கும். அதன்பின் நடக்கக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் தாமரை மொட்டுக் கட்சி, ரணிலோடு பேரம் பேசி வேண்டிய அமைச்சுகளைப் பெறுவது கடினமாகலாம். எனவேதான் முதலில் ஒரு பொதுத் தேர்தலை வைக்க வேண்டும் என்று அவர்கள் கேட்கிறார்கள். ஒரு ஜனாதிபதித் தேர்தலில் ரணில் வெற்றி பெறுவாராக இருந்தால் அது அவருடைய சொந்தக் கட்சியின் வாக்கு வங்கியால் அல்ல என்பது அவருக்கே தெரியும். தாமரை மொட்டுக்களின் பலமின்றி வெற்றிபெற முடியாது என்ற நிலைதான் இப்பொழுதுவரை உண்டு. அவருடைய சொந்தக் கட்சியின் பலம் அவருக்கு குறைவு. எனவே அவருடைய சொந்தப் பலம் எது என்பதனை அவருக்கு உணர்த்தும் விதத்தில் ஒரு பொதுத் தேர்தலை முதலில் வைத்தால் அதில் ரணில் தன்னுடைய சொந்தப் பலம் எது என்பதைக் கண்டுபிடித்து விடுவார். அப்பொழுது அவருடைய பேரம் குறைவாக இருக்கும். அந்த நேரத்தில் ராஜபக்சங்கள் அவருடன் பேரம் பேசுவது இலகுவாக இருக்கும். நாமலை பிரதமராக நியமிக்கும்படி கேட்கலாம். எனவே முதலில் ஜனாதிபதித் தேர்தல் நடந்தால் அதில் ரணிலுக்குப் பேர பலம் அதிகரிக்கும். முதலில் நாடாளுமன்றத் தேர்தல் நடந்தால் அதில் ரணிலின் பேரம் குறையும். எனவே ரணிலின் பேரத்தைக் குறைப்பதுதான் ராஜபக்சகளின் திட்டம். இதை இன்னும் ஆழமாகச் சொன்னால் அடுத்த நாடாளுமன்றத்தையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதுதான் அவர்களுடைய திட்டம். எனவே ராஜபக்சத்தை தங்களுடைய பேரபலத்தை நிரூபிப்பதற்குத் தயாராகி வருகிறார்கள் என்று பொருள். இதை அதன் சாராம்சத்தில் சொன்னால், ராஜபக்சக்கள் தற்காப்பு நிலையில் இருந்து வலிந்து தாக்கும் நிலையை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள் என்று பொருள். கடந்த 2021 ஆம் ஆண்டு “அரகலய”வின் பொது அவர்கள் பின்வாங்கும் நிலையில் இருந்தார்கள். சொந்தத் தேர்தல் தொகுதிகளிலேயே அவர்களுக்குப் பாதுகாப்பு இருக்கவில்லை. படை முகாம்களில் அவர்கள் அடைக்கலம் தேட வேண்டி வந்தது. ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய வெளிநாடு ஒன்றுக்கு தப்ப வேண்டி வந்தது. ஆனால் அவ்வாறான தற்காப்பு நிலையில் இருந்து இப்பொழுது வலிந்து தாக்கும் ஒரு நிலையைத் தாங்கள் அடைந்து விட்டதாக அவர்கள் நம்புகிறார்கள். எனவே அதை நோக்கித்தான் அவர்கள் திட்டமிடுகிறார்கள். கோட்டாபயவின் புத்தகமும் அந்த அடிப்படையில் எழுதப்பட்டதுதான். ஆனால் அமெரிக்காவிலிருந்து வந்த பசில் நினைத்தபடியெல்லாம் அரசியலை நகர்த்த முடியாது என்பதைத்தான் அண்மையில் அமெரிக்காவுக்கு சென்று வந்த மைத்திரியின் சர்ச்சைக்குரிய கூற்று வெளிப்படுத்துகின்றதா? மைத்திரி கூறுகிறார், ஈஸ்டர் குண்டு வெடிப்புத் தொடர்பாக தனக்கு ரகசியங்கள் தெரியும் என்று. அவர் ஏன் அவ்வாறு கூறுகிறார் ? அதுவும் ஒரு ஜனாதிபதித் தேர்தல் வர இருக்கும் பின்னணியில் ஏன் அப்படிக் கூறுகிறார்? ஏனென்றால், ஈஸ்டர் குண்டு வெடிப்பைப்பற்றிப் பேசினால் அதன் விளைவின் விளைவுகள் ராஜபக்சக்களைத்தான் பாதிக்கும். ராஜபக்சக்கள் தற்காப்பு நிலையில் இருந்து வலிந்து தாக்கும் நிலைக்கு முன்னேறுவதை, மேற்கு நாடுகள் விரும்பவில்லையா? அப்படிப் பார்த்தால், மைத்திரி கிளப்பிய சர்ச்சையும் “சனல் நாலு” வீடியோவை போன்றதுதானா? இதை இன்னும் கூர்மையான வார்த்தைகளில் சொன்னால், ராஜபக்சக்களை அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்குச் சவாலாக எழாதபடி பார்த்துக் கொள்வதுதான் மேற்கு நாடுகளின் திட்டமா ? அதாவது ரணிலுடைய வழிகளை இலகுவாக்கிக் கொடுத்தல்? மேற்கு நாடுகளும் மேற்கத்திய பெரு நிறுவனங்களாகிய பன்னாட்டு நாணய நிதியம் போன்றனவும் ரணில் பதவியில் தொடர்ந்துமிருப்பதைத்தான் விரும்புவதாகத் தெரிகிறது. மேற்கத்திய பாரம்பரியத்தில் வந்த அவரைக் கையாள்வது இலகுவானது என்று அவை நம்புகின்றன. கத்தியின்றி ரத்தமின்றி,தேர்தலின்றிக் கிடைத்த ஆட்சிமாற்றத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கும் தொடர விரும்புகின்றன. எனவே மேற்கு நாடுகளின் விருப்பத் தெரிவு ரணில்தான். ராஜபக்சக்கள் தாம் வலிந்து தாக்கும் நிலைக்கு வளர்ந்து விட்டதாக நம்பினாலும்கூட, தங்களுக்குப் பொருத்தமான முன் தடுப்பு ரணில் விக்கிரமசிங்கதான் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். எனவே, அவர்கள் ரணிலுடன் தமது பேரத்தை அதிகப்படுத்த விரும்பினாலும், ரணிலை விட்டால் அவர்களுக்கு வேறு தெரிவில்லை. அப்படித்தான் மகா சங்கத்திற்கும், படைத்தரப்புக்கும். அதாவது உள்நாட்டிலும் அனைத்துலக அளவிலும் மேற்கு நாடுகள் மத்தியிலும் ரணில் விக்கிரமசிங்கவுக்குத்தான் அதிகம் வரவேற்புக் காணப்படுகின்றது. அதனால்தான் ராஜபக்சக்கள் அவருடைய வழிகளைத் தடுக்காமல் இருக்க மைத்திரி அவ்வாறு பேச வைக்கப்படுகின்றாரா? ஆயின், இந்த விடயத்தில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன? ரணில் விக்கிரமசிங்க எல்லாப் பேரரசுகளையும் சம தூரத்தில் வைத்துக் கையாளக்கூடிய ஒருவர். அப்படிப்பட்ட ஒருவர் இந்தியாவைப் பொறுத்தவரையிலும் கையாளக் கடினமானவர். அப்படிப் பார்த்தால் இந்தியா ரணிலை ஒரு விருப்பத் தெரிவாக எடுக்க முடியாது. அது ரணிலுக்கும் விளங்கும். அதனால்தான் அவர் ஜனாதிபதித் தேர்தலில் இந்தியா தனக்கு எதிராகப் போகாமல் தடுப்பதை நோக்கமாகக் கொண்டு இந்தியாவுடன் குறிப்பிடத்தக்க அளவுக்கு இணங்கிப் போக முயற்சிக்கின்றார். யாழ்ப்பாணத்தின் மூன்று தீவுகளிலும் இந்திய நிறுவனங்களுக்கு மீளப் புதுப்பிக்கும் எரிசக்தி திட்டங்களை வழங்கும் உடன்படிக்கைகள் கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி கையெழுத்திடப்பட்டன. அதுபோலவே ராமர் பாலம் என்ற விடயத்திலும் ரணில் உண்மையாக இருக்கிறார் என்ற ஒரு தோற்றம் வெளிக்காட்டப்படுகிறது. ராமர் பாலத்தை கட்டப் போவதாக ரணில் இந்தியாவை நம்ப வைக்கின்றார். தன்னை நம்பத் தயாரற்ற ஒரு பக்கத்து பேரரசுக்கு நாட்டை முழுமையாகத் திறக்கத் தயார் என்று காட்ட ரணில் முற்படுகிறாரா? இந்தியப் பொருளாதாரம் அண்மை ஆண்டுகளில் வளர்ச்சி கண்டு வருகிறது. தமிழகத்திலும் அதுதான் நிலைமை. இவ்வாறு ஒரு பெரிய பொருளாதாரத்தோடு சிறிய இலங்கைத் தீவை நிலத்தால் இணைத்தால், இலங்கைத் தீவு விழுங்கப்பட்டு விடும் என்ற ஒரு பயத்தை சிங்கள மக்கள் மத்தியில் இலகுவாகத் தூண்ட முடியும். இந்த விடயத்தை ரணில் எப்படிக் கையாள்வாரோ தெரியவில்லை. ஆனால் அவர் ஒரு நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி. பாலங் கட்டத் தயார் என்று சொன்னதிலிருந்து அவர் பின்வாங்க முடியுமா இல்லையா என்பது இந்தியா அந்த விடயத்தை எப்படிக் கையாளப்போகிறது என்பதில்தான் தங்கியிருக்கின்றது. புதுடில்லி ஜேவிபியை அழைத்து கதைத்தமையும் ரணில் மீது அழுத்தத்தைப் பிரயோகிக்கும் நோக்கிலான ஒரு நடவடிக்கைதான். ரணிலுக்கு எதிராகக் கையாளப்படத்தக்க சக்திகளை இந்தியா அரவணைக்கிறது என்று பொருள். எதுவாயினும், அடுத்த ஜனாதிபதித் தேர்தல் வரையிலும் இந்தியா தனக்கு நெருக்கடிகளைத் தரக்கூடாது என்று ரணில் கருதுவதால், அவர் இந்தியாவை எப்படியும் சுதாகரிக்கத்தான் முயற்சிப்பார். இவ்வாறாக தென்னிலங்கையில் ஜனாதிபதித் தேர்தலை நோக்கி கட்சிகள் வியூகங்களை அமைத்து உழைத்து வருகின்றன. தமிழ்த் தரப்பிலோ பிரதான கட்சி நீதிமன்றத்தில் இருந்து வீட்டுக்கு வரமுடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது. ஒரு கட்சி புறக்கணிப்பு என்று சொல்லிவிட்டு ஒதுங்கி விட்டது. தமிழ்ப் பொது வேட்பாளரை முன்னிறுத்தும் கட்சிகள் கருத்துருவாக்கம் என்ற கட்டத்தைத் கடந்து அதற்கான கட்டமைப்பு சார்ந்த நடவடிக்கைகளில் இன்னமும் இறங்கவில்லை. தமிழ்ப் பொது வேட்பாளர் என்பது கடந்த வாரக் கட்டுரையில் கூறப்பட்டது போல, தமிழ் ஐக்கியந்தான். கடந்த 15 ஆண்டுகளாக முடியாமல் போன காரியம் அது.கடந்த மாதம் தமிழக முதல்வருக்கு அனுப்பப்பட்ட கூட்டுக் கடிதத்தைப் போல, அரிதாக ஏதாவது நடக்கும். மற்றும் படி கடந்த 15 ஆண்டுகளாக தமிழ்மக்களை ஒரு தேசமாகத் திரட்டுவதில் எல்லாக் கட்சிகளுமே தோல்வியடைந்து விட்டன. இந்த லட்சணத்தில் ஒரு பொதுத் தமிழ் வேட்பாளரை நோக்கி இதே கட்சிகளை எப்படி ஒருங்கிணைப்பது? அல்லது கட்சிகளைக் கடந்து மக்கள் அமைப்புகள் அதை முன்னெடுக்க வேண்டுமா ? https://www.nillanthan.com/6677/
-
சமூகவலைத் தளங்களில் வரும் வெறுப்புக் காணொளிகளை Report செய்து அவர்களை வெளியிடுபவர்களுக்கு மேடை இல்லாமல் பார்க்கவேண்டும். ஆனால் மிகமோசமாக கதைக்கும் ஒருவரைப் இன்னும் பலர் சமூகவலைத் தளங்களில் பின்தொடர வைக்கும் இலவச விளம்பரம்தான் அவரைப் பற்றி வரும் பதிவுகள். இந்தத் திரி யாழில் வந்ததற்கு பின்னர் குறைந்தது 3 - 4 பேராவது யாழிலிருந்து அந்த உதிரிப் பெண்ணை சமூகவலைத் தளங்களில் பின்தொடர்வார்கள்! மேலும் அந்த பெண்ணை பொது இடத்தில் வைத்து அடித்து எந்தப் படிப்பினையையும் அவருக்குக் கொடுக்கவில்லை. தாமும் அவரைப் போல தரம் தாழ்ந்து, தலைவருக்கும் புலிகளுக்கும் அவமானத்தைத்தான் கொடுத்துள்ளார்கள். வீதியில் நாயின் மலம் 💩 இருந்தால் அதை விலத்தி நடப்பதுபோல சமூகவலைத் தளங்களில் கொட்டப்படும் மலங்களில் இருந்து தூர விலகவேண்டும். ஆனால் சிலர் மலநாற்றத்தை முகர்ந்து பின் தொடர்கின்றனர்!
-
ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?
கிருபன் replied to பிழம்பு's topic in வண்ணத் திரை
அகன்ற திரையில் தமிழ் டப்பிங்கில் பார்த்தேன். மிகவும் அசலான மலையாள சினிமா. அத்துடன் தொழில்நுட்பமும் சிறப்பாகக் கையாளப்பட்டுள்ளது. ——— ஆடுஜீவிதம் - சுவாலையின் சுவை தெய்வீகன் மீட்சியற்ற கொடும் பொறியில் சிக்கிய அப்பாவிப் புலம்பெயரி ஒருவனின் விடுதலைக்கான போராட்டமும் அதன் பின்னணியில் அவன் அனுபவித்த வாதைகளையும் நுட்பமாக விவரித்த நாவல் பென்யாமின் எழுதிய ஆடுஜீவிதம். மலையாளத்தில் மாத்திரம் நூறு தடவைகளுக்கு மேல் பதிப்பிக்கப்பட்ட நாவல். ஐந்துக்கும் மேற்பட்ட பிறமொழிகளில் மொழிபெயர்கக்ப்பட்டது. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த நாவலில் நிகழும் பல சம்பவங்களும் பாத்திரங்களின் மன அமைப்புக்களும் அவற்றின் முரண்களும் ஆடுஜீவிதம் என்ற புலம்பெயர் களத்தில் கதையுடைய பிரதிக்கு கூடுதல் பலம் சேர்ப்பவை. சவுதியில் வேலை செய்வதற்காக கேரளத்திலிருந்து போயிறங்கும் நஜீப் என்ற இளம் குடும்பஸ்தன், கூடச்சென்ற ஹக்கீம் என்ற இளைஞனோடு விமானநிலையத்தில் வைத்து ஆட்டுப்பண்ணை நடத்துபவன் ஒருவனால் கூட்டிச்செல்லப்படுகிறான். பாலை நிலப் பண்ணையொன்றில் கொண்டுபோய் அடைத்தபிறகுதான், தான் அடிமையாகக் கொண்டுவரப்பட்டதை நஜீப் உணர்கிறான். ஆடு மேய்ப்பவனாக அவன் அனுபவிக்கின்ற தொடர் துயரத்திலிருந்து தப்புவதற்கு ஒரு வழி பிறக்கிறது. அருகிலிருந்த இன்னொரு பண்ணையில் அடிமையாக அடைக்கப்பட்டிருந்த அவனது தோழன் ஹக்கீமுடனும் புதிய அடிமை இப்ராஹிம் என்பவனோடும் அங்கிருந்து தப்புகிறார்கள். கதையின் நாயகன் நஜீப் எவ்வாறெல்லாம் நரக வாதைப்பட்டு, ஈற்றில் இந்தியா திரும்புகிறான் என்பது இந்த நாவிலின் சுருக்கம். நாவலின் முக்கிய பகுதிகளை கதைப்புள்ளிகளின் அடிப்படையில் வகுத்தால் - நஜீப் மீதான அவனது அரேபிய முதலாளியின் கொடுமை அடிமையாகப் பணிபுரியும் பண்ணையென்றாலும், நஜீபுக்கும் அவன் வளர்க்கும் ஆடுகள் - ஒட்டகங்களுக்கும் இடையான உறவின் இறுக்கம். பணனையிலிருந்து தப்பும்போது எதிர்கொள்ளும் கொடுந்துயரை, பாலை நிலத்தின் நுட்பமான அவதானங்களின் ஊடாக நில வரைவியல் சார்ந்து முன்வைப்பது. நஜீபின் இறைபக்தி இந்த உணர்வுபூர்வமான பகுதிகளைச் சுற்றித்தான் இந்த ஒட்டுமொத்த நாவலும் விரிகிறது. "ஆட்டுப் பண்ணையில் அடிமையாக வாழ்ந்த தனது வாழ்வும் அங்கிருந்த ஆட்டின் வாழ்வும் ஒன்றே. அங்கு தானும் ஒரு ஆடுதான்" - என்ற நஜீபின் வலிநுரைக்கும் வாக்குமூலத்தோடு நாவல் நிறைவுறுகிறது. ஆடுஜீவிதம் நாயகன் மாத்திரமல்ல, உலகின் அத்தனை நாடுகளிலும் புலம்பெயரிகளாகத் தங்கள் வாழ்க்கையை ஒப்புக்கொடுத்தவர்கள் அனைவருமே, ஆடுஜீவிதத்தில் வருகின்ற ஆடுதான். இது புலம்பெயரிகள் ஒவ்வொருவருக்கும் தெரியும். அரேபியப் பண்ணையில் ஆண்மை சிதைக்கப்பட்டு, முடிந்தவரையில் பாலும் கம்பளியும் எடுக்கப்பட்ட பின்னர், தேர்ந்த ஆடுகள் இறைச்சிக்கு அனுப்பப்டுவதைப் போலவும் எஞ்சியவற்றின் இறப்புக்களுக்கு கணக்கே இல்லை என்பது போலவும்தான் புலம்பெயரி ஒவ்வொருவனுடைய வாழ்வுக்கும் சாவுக்கும் வெளிநாட்டு மண்ணில் எஞ்சியுள்ள பெறுமானம். இந்த உண்மையை ஒவ்வொரு நாடும், வெவ்வேறு கலைச்சொற்களால் போர்த்திக்கொல்லாம். ஆனால், உண்மை வேறானது. ஈழத்தமிழர்களின் புலம்பெயர் வாழ்வு இவ்வாறான பல லட்சம் ஆடுகளால் ஆனது. கரை சேர்ந்த நாடுகள் ஒவ்வொன்றிலும் தொண்ணூறுகளிலிருந்து கணக்கெடுத்தால், இவ்வாறான பல ஆடுஜீவிதத் தொடர்களை எழுதிவிடக்கூடிய கதைகளைக் கொண்டது. எயார் போர்ட் கதைகள், ஏஜென்ஸி கதைகள், படகுக் கதைகள், பழம்பிடுங்குவதற்கு ஏற்றிச்செல்லப்பட்டவர்களின் பண்ணைக் கதைகள் என்று பல்லாயிரம் திரைப்படங்கள் எடுத்துவிடப்போதுமானவை. இந்தப் புலம்பெயர் வாழ்வின் கூட்டுவலியின் பிரதியாக ஆடுஜீவிதம் திரைப்படம் எம் முன் விரிகிறது. ஒரு புலம்பெயரியாக நாவலின் தீவிரத்தையும் நஜீபின் ஒவ்வொரு உணர்வையும் காட்சிக்குள் யதார்த்தபூர்வமாகப் பொருந்திக்கொண்ட கதையையும் ப்ரிதிவிராஜின் நடிப்பினையும் திரையில் மிகவும் ரசித்தேன். நாவலில் உள்ள அத்தனை காட்சிகளையும் நீட்டி முழக்கும் வசதியிருந்தால், ஒரு தொடராகவே ஆடுஜீவிதத்தை இன்னும் விரித்துக்கொள்ளலாம். ஆனால், இரண்டரை மணிநேரத் திரைப்படத்திற்குள் நாவலின் கதைமையத்தை எவ்வாறு நுட்பமாகப் பார்வையாளனிடம் கொண்டுசெல்வது என்ற சவாலை இயக்குனர் திறம்படக் கையாண்டிருக்கிறார். திரைப்படத்திற்காக நாவலிலிருந்து வெட்டிய நீக்கிய பகுதிகளை ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவே இருந்தது. அதுபோல, விரித்துச்சொல்லப்படவேண்டிய பல விடயங்களை அர்த்தபூர்வமான ஒற்றைக் காட்சிகளால் குறிப்புணர்த்திய இடங்களும் திரைக்கதைக்கு தீவிரத்தன்மையைக் கொடுத்திருந்தது. உதாரணமாக, மழைக்கு அஞ்சும் பண்ணை முதலாளி, அவனைச் சுடக்கூடிய வாய்ப்பிருந்தும் நஜீப் துப்பாக்கியைத் திருடாமல் விட்டுவிடுவது, ஆடுகளின் ஆண்மை நீக்கம் போன்ற பல காட்சிகள் கிட்டத்தட்ட இந்தத் திரைக்கதைக்குத் தேவையற்றவை. ஆனால், ஆடுகளுக்கும் நஜீபிற்கும் இடையில் காலப்போக்கில் உருவான உறவு மிகவும் நெருக்கமானது. தனது மகனுக்குச் சூட்டுவதற்காக எண்ணியிருந்த பெயரை புதிதாய் பிறந்த ஆட்டுக்குட்டிக்கு வைத்துக்கொண்டளவு ஆடுகளுக்கும் அவனுக்குமான பிணைப்பு வலியது. ஆனால், அந்த உறவின் பெறுமானத்தை, தப்பியோடுவதற்கு முன்னரும் ஆடுகளுக்கும் ஒட்டகத்திற்கும் தீவனம் போடுகின்ற காட்சியின் மூலம் ப்ரிதிவிராஜின் நடிப்பு இலகுவாக உணர்த்திவிடுகிறது. தப்பிச்செல்லும் பாலையின் கொடூரத்தை ஹக்கீம் பலியாகும் காட்சி ஆத்மார்த்தமாகச் சொல்லிவிடுகிறது. பாலையின் தன்மைகள் ஓரளவுக்கு சூடானியன் இப்ராஹிமின் வழியாக காட்சியாகின்றன. இவ்வாறு நாவலின் பல இடங்கள் யதார்த்தத்தை மீறாமலும் திரையின் இலக்கணத்தோடு ஒத்துப்போனதும் கச்சிதமாயிருந்தது. 'ஆடுஜீவிதம்' திரைப்படம், நாவலில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு துளியிலிருந்து விரிவான கடல் அல்ல. நாவல் எனும் கடலையே ஏறக்குறைய தனக்குள் போதுமானளவு ஏற்றுக்கொண்டிருக்கிறது. ஆடுஜீவிதம் - நிறைந்த அனுபவத்தை அருளிய திரைப்படம். https://www.theivigan.co/post/10009 -
விவாகரத்து – கையாள்வது எப்படி? மறுமணம் சரியானதா? KaviApr 06, 2024 09:36AM சத்குரு விவாகரத்து மோசமான ஒரு விஷயமா? விவாகரத்தை எப்படி கண்ணியமாக கடந்து செல்வது? விவாகரத்துக்குப் பின்பு, மறுமணம் செய்துகொள்வது சரியா? மறுமணத்தினால் குழந்தைக்கு ஏற்படும் விளைவுகள் என்ன? இத்தனை கேள்விகளுடன், இந்தப் பதிவில், விவாகரத்தின் எல்லாக் கோணங்களையும் உள்ளடக்கியுள்ள சுவாரஸ்யமான மேலும் பல அம்சங்களுக்கு சத்குரு பதில் தருகிறார். விவாகரத்துக்கான காரணங்கள் கேள்வியாளர் : திருமணம், சோர்வை ஏற்படுத்தும் ஒரு யுத்தகளமாகும் போது, விவாகரத்து செய்துகொள்வது மேலானதுதானே? பதில் நம்மால் மற்றொரு நபருடன் சண்டையிடாமல் வாழமுடிந்தால், அப்போது விவாகரத்து என்ற கேள்வியே எழாது. நீங்கள் வீதியில் செல்லும் யாரோ ஒருவருடன் சண்டையிடவில்லை, ஒரு காலத்தில் அற்புதமானவர் என்று யாரை நீங்கள் நினைத்தீர்களோ அவருடன் சண்டையிடுகிறீர்கள். இந்த சண்டையானது, அந்த நபர் திடீரென்று அசிங்கமானவர் ஆகிவிட்டார் என்ற காரணத்தினால் அல்ல. இந்த சண்டை ஏன் எழுந்துள்ளது என்றால், நாம் வளர்ந்து வரும் நிலையில், நமக்குள் சில மாற்றங்கள் நிகழ்கின்றன. ஆனால், அதை நாம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறோம். இரண்டு நபர்கள், இரண்டு திசைகளில் வளர்வது சரியானதுதான். இணைந்திருப்பதற்கு ஒரே விதமாக நாம் இருக்கவேண்டியது இல்லை. இருவரும் ஒரே விஷயங்களை விரும்பவேண்டும், ஒரே விஷயங்களைச் செய்யவேண்டும் அல்லது ஒரே விதமாக உணரவேண்டும் என்ற அவசியமில்லை. அவர்கள் வெவ்வேறு வழிகளில் வித்தியாசமாக இருந்துகொண்டும், இணைந்து வாழமுடியும். உங்களுடன் இணைந்திருப்பதற்கு, மற்றவரும் உங்களைப் போலவே இருக்கவேண்டும் என்று நினைப்பதில் ஒருவிதமான முதிர்ச்சியின்மை இருக்கிறது. உலகில் எங்குமே, இரண்டு தனிமனிதர்கள் அச்சு அசலாக ஒரே விதமாக இல்லை. இரண்டு தனிமனிதர்களுக்கு இடையில், வாழ்வின் சில அம்சங்களில் சில வித்தியாசங்கள் இருக்கும். ராபர்ட் ஒவன் என்ற அமெரிக்க நூலாசிரியர் கூறினார்,” உலகத்தில் இருக்கும் அனைவரும் வினோதமானவர்களாகவே இருக்கின்றனர், என்னையும் உங்களையும் தவிர. ஆனால் நீங்களும்கூட சிறிது வினோதமானவர்தான்” தயவுசெய்து உங்கள் மனதை உற்றுப்பாருங்கள். உங்கள் காரண அறிவின் பாதையில் நீங்கள் சென்றால், உலகத்தில் ஒருவரும் சரியானவர் இல்லை. உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு மிகவும் அன்பான நபரை சற்று நெருங்கிச் சென்று, அந்த நபருடன் உங்களுக்கு எத்தனை அடுக்குகள் எதிர்ப்பு இருக்கிறது என்று சோதனை செய்து பாருங்களேன். வீதியில் செல்லும் மனிதரை மறந்துவிடுங்கள், உங்கள் வாழ்க்கையில் இருக்கும் நெருங்கிய நபரிடம்கூட உங்களுக்கு பல அடுக்குகளில் எதிர்ப்பு இருக்கிறதல்லவா? ஆகவே, அதன் பொருள் என்னவென்றால், உலகில் ஒருவரும் உங்களுக்கு சரியானவர் இல்லை. ஒருவரும் சரியில்லை என்றால், இதில் சரி அல்லது சரியில்லை என்பதெல்லாம் கிடையாது. அது என்னவென்றால் நீங்கள் உளவியல் ரீதியாக பாதிப்படைந்து கொண்டிருக்கிறீர்கள். ஏற்கனவே அதை நோக்கி நீங்கள் முதல் அடியை எடுத்துவைத்துள்ளது போல் தோன்றுகிறது. அந்த நோக்கில் நீங்கள் மேலும் முன்னேறினால், அது மேலும் பெரிய பிரச்சனைகளைக் கொண்டுவரும். இரண்டு வெவ்வேறு நபர்கள், இரண்டு வித்தியாசமான புரிதல்களுடன் செயல்படுவதில் தொந்தரவு எதுவும் இல்லை. அடிநாதமான காதல் உணர்ச்சிதான் இருவரையும் இணைத்து வைத்திருக்கிறது. எல்லாவற்றையும் விட, நீங்கள் இருவரும் பரஸ்பரம் மற்றவரின் நல்வாழ்வுக்கான தேடுதலில் இணைந்தீர்கள். நாம் இதைப் புரிந்துகொள்வோம். காதல் என்று இப்போது வழக்கத்தில் இருப்பதெல்லாம் பொதுவாகவே பரஸ்பர இலாப திட்டமாகத்தான் இருக்கிறது. உங்களுக்கென்று சில தேவைகள் உள்ளன, மற்றொரு நபருக்கும் சில தேவைகள் உள்ளன. இந்தத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக, இருவரும் இணைகின்றீர்கள். அந்தத் தேவைகள் உடலியல், உளவியல், உணர்ச்சி, சமூகம் அல்லது பொருளாதாரம் என்று பல்வேறு நிலைகளில் இருக்கக்கூடும். உங்களது ஏதோ ஒரு தேவை சரிவர நிறைவேறாமல் போகும் அந்தக் கணமே, அது முடிந்துவிடுகிறது. அப்படித்தான் நீங்கள் வாழ்க்கையில் பயணப்பட்டுக் கொண்டு இருக்கிறீர்கள். உறவு நிலையில் அங்கே வேறெதுவும் இருப்பதில்லை. இன்னொரு நபரிடமிருந்து நீங்கள் மிகச் சிறந்ததைப் பெற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள், மற்றொரு நபரும் உங்களிடமிருந்து மிகச் சிறந்ததைப் பிழிந்தெடுத்துக்கொள்ள விரும்புகிறார். இது ஒரு யுத்தம்தானே தவிர, காதல் உறவு அல்ல. காதல் என்பது உங்களைப் பற்றியது நீங்கள் எதனைக் காதல் என்று அழைக்கிறீர்களோ, அது யாரோ ஒருவரைப் பற்றிய விஷயம் அல்ல, அது உங்களைப் பற்றியது, உங்களுக்குள் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்பதைப் பற்றியது. உங்கள் உடல் இனிமையாக இருந்தால், இதை நாம் ஆரோக்கியம் மற்றும் இன்பம் என்று அழைக்கிறோம். உங்கள் மனம் இனிமையாக இருந்தால், இதை நாம் மகிழ்ச்சி மற்றும் ஆனந்தம் என்கிறோம். உங்களுடைய உணர்ச்சிகள் மிகவும் இனிமையாக இருந்தால், இதை நாம் அன்பு அல்லது நேசம் என்று அழைக்கிறோம். உங்கள் சக்தி நிலைகள் மிகவும் இனிமையாக இருந்தால், இதை நாம் பரவசம் என்று அழைக்கிறோம். இவைகள் உங்களுக்குள் நீங்கள் எப்படி இருப்பது என்பதற்கான சில வழிகள். இதற்கு வேறு எவருடனும் எதுவும் செய்வதற்கில்லை, ஆனால் நீங்கள் இதை யாரோ ஒருவருடன் தொடர்புபடுத்துகிறீர்கள். யாரோ ஒருவர் உங்கள் மனம், உணர்ச்சி மற்றும் உடலை இனிமைப்படுத்த வேண்டும் என்று இருந்தால், நீண்ட காலத்திற்கு இது நிகழப்போவதில்லை. எந்த மனிதரும் அதை என்றென்றும் ஒரே நிலையில் தொடர்ந்து வைத்திருக்கமுடியாது. ஒருவேளை அவர்கள் உங்களைச் சந்தித்த புதிதில், மூன்று நாட்களுக்கு, உங்கள் மனம், உணர்ச்சி மற்றும் உடலை இனிமையாக வைத்திருப்பதற்கு எல்லாவற்றையும் செய்வார்கள், ஆனால் அதையே ஒருவராலும் நீடித்திருக்கச் செய்யமுடியாது. அது எந்த மனிதருக்கும் சாத்தியமே இல்லை. ஆகவே, உங்கள் மனம், உணர்ச்சி மற்றும் உடலை இனிமையாக வைத்திருப்பது எப்படி என்பதை நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். உங்களது உணர்ச்சிகள் இனிமையின் வழியில் இருந்தால், நீங்கள் உங்கள் இயல்பிலேயே அன்பாக இருப்பதுடன், வேறுபாடுகள் என்னவாக இருந்தாலும், எல்லாம் சரியாக இருக்கிறது. அது இல்லையென்றால், ஒவ்வொரு சிறு வித்தியாசமும் ஒரு பெரிய பிரச்சனையாக இருக்கிறது. உங்களுக்குள் ஒருவிதமான இனிமை இருக்கும்போதுதான், மற்றவர்கள் உங்களுடன் நெருக்கமான வட்டத்தில் இருக்கமுடியும். https://minnambalam.com/featured-article/how-to-deal-with-divorce-is-remarriage-right-by-sadhguru-article-in-tamil/
-
தமிழரசுக் கட்சி வழக்கு ஏப்ரல் 24 க்கு ஒத்திவைப்பு – எதிராளிகள் ஆட்சேபனைகளை தெரிவிக்க அவகாசம் April 5, 2024 இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகத்துக்கு எதிராக அதன் உறுப்பினர் ஒருவர் தாக்கல் செய்த வழக்கில் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. தவிர்ந்த ஏனைய எதிராளிகள் அறுவரும், தங்களின் ஆட்சேபனைகளை எழுத்தில் சமர்ப்பிப்பதற்காக கால அவகாசம் கோரியமையை அடுத்து எதிர்வரும் 24 ஆம் திகதி வரை அவகாசம் வழங்கி அந்தத் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்தது நீதிமன்றம். திருகோணமலை மாவட்ட நீதிபதி மா.கணேசராஜா முன்னிலையில் இந்த வழக்கு இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, ஏழு எதிராளிகளில் ஒருவரான சுமந்திரன் தமது தரப்பு ஆட்சேபனைச் சமர்ப்பணங்களை எழுத்தில் சமர்ப்பித்தார். ஏனைய எதிராளிகள் தமது ஆட்சேபனை சமர்ப்பணங்களை சமர்ப்பிக்காத நிலையில் தாங்களும் அதனை முன்வைப்பதற்குக் கால அவகாசம் கோரினர். அதற்கு அவகாசம் வழங்கி வழக்கை 24ஆம் திகதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். இந்த வழக்கு இன்று எடுத்துக்கொள்ளப்பட்ட போது எதிராளியான சுமந்திரன் முதல் தடவையாக நீதிமன்றில் முன்னிலையானார். அவர் தமக்காகத் தாமே சமர்ப்பணம் செய்தார். கடந்த 17ஆம் திகதி வவுனியாவில் நடைபெற்ற கட்சியின் அரசியல் குழு, கட்சியின் நிலைப்பாட்டை நீதிமன்றத்தில் வெளிப்படுத்தும்படி தம்மை வழிப்படுத்தி இருப்பதால் அதன் அடிப்படையில் தான் இந்த ஆட்சேபனைச் சமர்ப்பணங்களை முன் வைக்கின்றார் என சுமந்திரன் தெரிவித்தார். வழக்காளி கட்சி மீது சுமத்திய குற்றச்சாட்டுகளையும் தவறுகளையும் அப்படியே ஏற்றுக்கொள்வது கட்சியின் முடிவல்ல என்பதையும், கட்சியின் உண்மையான நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும்படி அரசியல் குழு தன்னை வழிப்படுத்தி இருக்கின்றது என்றும் சுமந்திரன் நீதிமன்றத்தில் சொன்னார். வழக்காளியும், ஏனைய எதிராளிகளும் இந்த உறுப்பினரின் விண்ணப்பம் தொடர்பில் ஆட்சேபனை ஏதும் தங்களுக்கு இருக்குமாயின் அதனைத் தெரிவிப்பதற்கு கால அவகாசம் கோரியதனால் அதற்கும் 24ஆம் திகதி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டது. https://www.ilakku.org/தமிழரசுக்-கட்சி-வழக்கு-ஏ/
-
வவுனியாப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கான தெரிவில் அற்புதராஜா முன்னிலை.. வவுனியாப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கான தெரிவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பொறியியல் பீடப் பேராசிரியர் அ. அற்புதராஜா புள்ளிகளின் அடிப்படையில் முன்னிலை பெற்றிருக்கிறார். தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் தம்பு மங்களேஸ்வரனின் பதவிக் காலம் எதிர்வரும் ஜூலை 13 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், அந்தப் பல்கலைக்கழகத்தின் பதிவாளரால் துணைவேந்தர் பதவிக்காகக் கடந்த மாதம் விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. பெரும்பான்மை இனப் பேராசிரியர் ஒருவர் உட்பட நான்கு விண்ணப்பங்கள் கிடைத்திருந்தன. அவை கடந்த மாதம் இடம்பெற்ற விசேட பேரவைக் கூட்டமொன்றில் சமர்ப்பிக்கப்பட்ட போது, அவற்றில், பெரும்பான்மை இனப் பேராசிரியரின் விண்ணப்பம் பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்றறிக்கைக்கேற்பச் சமர்ப்பிக்கப்படவில்லை என நிராகரிக்கப்பட்டது. விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்ட மூவரும் நேற்று, 5 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விசேட பேரவைக் கூட்டத்தில் தமது எதிர்காலத் திட்டங்கள் குறித்து விளக்கமளித்தனர். அதனைத் தொடர்ந்து பேரவை உறுப்பினர்கள் விண்ணப்பங்களை மதிப்பீடு செய்து புள்ளிகளை வழங்கினர். பெறப்பட்ட புள்ளிகளின் அடிப்படையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பொறியியல் பீடத்தின் இலத்திரனியல் மற்றும் மின்னியல் துறைப் பேராசிரியர் அ. அற்புதராஜா முதல் நிலையிலும், வவுனியா பல்கலைக்கழகப் பிரயோக விஞ்ஞான பீடத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் திருமதி அனந்தினி நந்தகுமாரன், வியாபாரக் கற்கைகள் பீட சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் அ. புஸ்பநாதன் ஆகியோர் முறையே இரண்டாம், மூன்றாம் இடங்களையும் பெற்றுள்ளனர். இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களைத் தெரிவு செய்வதற்கான பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சுற்றறிக்கையின் படி, புள்ளிகளின் அடிப்படையில் முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்களின் விபரங்கள் பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழு, கல்வி அமைச்சு ஆகியவற்றினூடாக அரசதலைவருக்கு அனுப்பி வைக்கப்படும். பல்கலைக் கழகச் சட்டத்தின் படி அரசதலைவருக்குள்ள அதிகாரத்தின் அடிப்படையில், பேரவையினால் முன்மொழியப்பட்ட மூவரில் இருந்து ஒருவரைத் துணைவேந்தராக அரசதலைவர் தெரிவு செய்து, நியமனம் செய்வார். https://newuthayan.com/article/வவுனியாப்_பல்கலைக்கழகத்_துணைவேந்தர்_பதவிக்கான_தெரிவில்___அற்புதராஜா_முன்னிலை..
-
கனடாவில் தமிழ் இளைஞன் ஒருவர் கைது! Vhg ஏப்ரல் 05, 2024 43 வயதான சுரேஷ் நித்தியானந்தன் ரொரன்ரோ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். Don Mills ரயில் நிலையத்திற்கு அருகில் பெண் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். பெண் மீது தாக்குதல் கடந்த (30-03-2024)ஆம் திகதி ரயில் நிலையத்திற்கு அருகில் பெண் ஒருவரை தாக்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபருக்கு எதிராக நான்கு குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன. அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் எதுவும் நீதிமன்றத்தில் இதுவரை நிரூபிக்கப்படவில்லை. காயம் அடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கனடா பொலிஸார் தெரிவித்துள்ளனர். அந்தப்பெண் ஈழத்தமிழர்களின் போராட்டத்தை மிக இழிவாக தகாத வார்த்தைகளால் பேசிய ஒரு இலங்கை பெரும்பான்மை இன பெண் என கூறப்படுகிறது. https://www.battinatham.com/2024/04/blog-post_73.html Toronto man, 43, facing multiple charges in Don Mills Station assault probe Woman allegedly assaulted while walking with her children, police say Published Apr 01, 2024 • Suresh Nithiyananthan, 43. Photo by Toronto Police A 43-year-old Toronto man has been charged in connection with an alleged assault of a woman walking with her children near Don Mills Station over the weekend. Suresh Nithiyananthan is charged with assault with a weapon, assault causing bodily harm, uttering death threats and mischief/damage to property not exceeding $5,000. Police said that on Saturday at about 12:26 p.m., the victim was walking when a man made a comment toward her children, which prompted the victim to reply to the suspect. The man then allegedly kicked the woman before grabbing an object, striking her multiple times over the head and threatening to kill her. The victim dropped her phone, which ended up being broken, during the alleged assault. The suspect fled on foot. Anyone with information is asked to contact the police at 416-808-3300 or Crime Stoppers anonymously at 416-222-TIPS (8477) or 222tips.com. https://torontosun.com/news/local-news/toronto-man-43-facing-multiple-charges-in-don-mills-station-assault-probe
-
பாரிஸ் இலக்கியச் சந்திப்பும் கூக்குரல் இட்டோரும்
கிருபன் replied to கிருபன்'s topic in இலக்கியமும் இசையும்
உங்கள் யூகம் கூட ஒழுங்காக வேலை செய்யவில்லை! 🤪 -
பலர் கலந்துகொண்டால்தான் சுவாரசியமாக இருக்கும்! இந்த முறை சறுக்கு மரம் எப்படி வேலை செய்கின்றது என்று பார்ப்போம்😂
-
ரணில் விக்கிரமசிங்க: One Man Government April 4, 2024 — கருணாகரன் — இலங்கை அரசியலில் One Man Government ஆகச் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார் ரணில் விக்கிரமசிங்க. மட்டுமல்ல, அரசியல், பொருளாதாரம், பண்பாடு என அனைத்தையும் தீர்மானிக்கும் ஒரே ஆளாகியுள்ளார். ரணில் என்ன நினைக்கிறாரே அதுவே நடக்கிறது. அதுவே நடக்கக் கூடிய சூழலும் உள்ளது. அவரை மீறி எதுவும் இல்லை என்ற நிலை. இதைக் கட்டுப்படுத்தவோ இடையீடு செய்யவோ முடியாமல் எதிர்க்கட்சிகள் படுத்து விட்டன. எதிர்ப்பு அரசியல் என்பது காணாமலே போய் விட்டது. அங்கங்கே மெல்லிய தொனியில் அனுங்கலாகக் கேட்கும் குரலைத் தவிர, வேறெதுவும் இலங்கையில் இல்லை. நெடுங்காலமாக இலங்கை அரசியலில் செல்வாக்குச் செலுத்தி வந்த ஐக்கிய தேசியக் கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் உடைந்து, சிதறிச் சிறுத்து விட்டன. ஐ.தே.க உடைந்து ஒரு பகுதி ஐக்கிய மக்கள் சக்தி என சஜித் பிரேமதாசவின் தலைமையில் இயங்குகிறது. மற்றப்பகுதி ரணில் விக்கிரமசிங்கவோடு. சிறிலங்கா சுதந்திரக் கட்சி இரண்டாகப் பிளவுண்டு ஒரு அணி பொதுஜன பெரமுன என ராஜபக்ஸக்களின் செல்வாக்கோடு செயற்படுகிறது. மற்றது மைத்திரிபால சிறிசேனவின் கீழ். அதிலும் ஒரு துண்டு தனியாகச் செயற்படவுள்ளதாக சொல்லிக் கொண்டிருக்கிறது. ஆயுதப்போராட்ட அரசியல், தேசிய நீரோட்ட அரசியல் என்ற பாராளுமன்ற ஜனநாயக அரசியல் ஆகிய இரண்டு வழி அனுபவங்களையும் கொண்ட ஜே.வி.பி ஐம்பது ஆண்டுகளைக் கடந்தும் குழந்தையாகத்தான் தவழ்ந்து கொண்டிருக்கிறது. இன்னும் அதனால் எழுந்து நடக்க முடியவில்லை. தமிழ்த்தரப்பின் அரசியற் குரலைக் காணவே இல்லை. அது ஆழக்கிணற்றுக்குள்ளிருந்து ஒலிப்பதைப்போல யாருக்குமே பெரிதாகக் கேட்பதில்லை. அதற்குள் ஆயிரத்தெட்டுப் பிரிவினைகள். ஒரு காலம் ஈழ விடுதலை இயக்கங்கள் பெருகிக் கிடந்ததைப்போல இப்பொழுது தமிழ்த்தேசியக் கட்சிகள் பெருகிக் கிடக்கின்றன. ஈழவிடுதலை இயக்கங்களிலிருந்து பெற்ற அனுபவமோ என்னவோ தெரியவில்லை. இப்பொழுது தமிழ் மக்களும் தமிழ் அரசியற் குரலைப் பெரிதாகக் கவனத்திற் கொள்வதில்லை. அதற்கு உருவேற்றுவதற்குச் சிலர் உடுக்கடிகாரர்களைப்போல எப்படியெல்லாமோ முயற்சிக்கிறார்கள். ஆனால், சனங்கள் சன்னதங்கொள்வதைக் காணோம். பட்டறிவாக இருக்கலாம். பதிலாகப் பலரும் தம்மை விட்டாற் காணும் என்ற நிலையில், இன, மத பேதமின்றி நாட்டை விட்டுத் தப்பியோடுகிறார்கள். உயர் பதவியிலுள்ளவர்கள் கூட பதவியாவது மண்ணாவது என அரசு வழங்கியிருக்கும் ஐந்தாண்டுகள் ஊதியமற்ற விடுமுறையைப் பயன்படுத்திக் கொண்டு வெளியே பறக்கிறார்கள். போர்க்காலத்தில் நாட்டை விட்டு வெளியேறியோரின் தொகையை விட இப்பொழுது வெளியேறுவோரின் தொகை அதிகம் என்று சொல்கின்றன புள்ளிவிவரங்கள். உண்மையும் அதுதான். கடவுச் சீட்டுப் பெறும் அலுவலகமும் வெளிநாட்டுத் தூதுவரகங்களும் சனங்களால் நிரம்பி வழிகின்றன. எஞ்சியிருப்போரில் பலரும் இனியும் காலத்தைக் கடத்த முடியாது என்று இலங்கைத் தேசிய அரசியலில் கலந்தும் கரைந்தும் போகிறார்கள். இதனால்தான் அங்கயன் ராமநாதன், சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்), டக்ளஸ் தேவானந்தா போன்றோர் அதிகூடிய வாக்குகளைப் பெறுகிறார்கள். நாடு யுத்த நெருக்கடியிலிருந்து மீண்டு பொருளாதார நெருக்கடிக்குள் சிக்குண்டிருக்கிறது. எல்லாவற்றுக்கும் காரணம் தேசியப் பிரச்சினைகளில் ஒன்றான இனவாதம் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதை விட்டுத் தொலைப்பதற்கு யாரும் தயாரில்லை. அரசியல் கட்சிகளும் சரி, அரசியல் ஆய்வாளர்கள், பத்தியாளர்கள், ஊடகவியலாளர்கள், மதத் தலைவர்கள், மத பீடங்கள், புத்திஜீவிகள், அறிவு மையங்கள், விளிம்புகள் என எல்லா இடங்களிலும் எல்லாத் தரப்புகளிலும் இனவாதம் தாராளமாக ஊறிப்போய்க் கிடக்கிறது. மூன்றுவேளை சாப்பாட்டைப் போல இனவாதம் பலருக்கும் அவசியமான – பழக்கமான ஒன்றாகி விட்டது. அதை விட்டால் உயிரே போய் விடும் என்று எண்ணுகிறார்கள். சமாதானத்தை விட, அமைதியை விட, சுபீட்சமான எதிர்காலத்தை விட, அந்நிய தலையீடுகள், ஆக்கிரமிப்புகளை விட, பிற சக்திகளிடம் முழந்தாழில் நின்று கையேந்துவதை விட, நாடு கடனில் மூழ்குவதை விட, அரை வயிறு பட்டினி கிடப்பதை விட இனவாதம் ருசிக்கிறது எல்லோருக்கும். இந்த மாதிரி மூடத்தனம் வேறில்லை. என்னதான் சொல்லுங்கள். நாங்கள் மூடர்களாகவும் முட்டாள்களாகவும் இருந்து விட்டுப் போகிறோம். நம்முடைய முயலுக்கு ஒன்றரைக் கால்தான் என்பதிலிருந்து எவரும் முன்னகரத் தயாரில்லை. இந்தப் பைத்தியக்காரத்தனத்துக்கு எந்த வைத்தியமுமில்லை. இந்தச் சூழலில்தான் தான் ஒரு சிறந்த ஜனநாயகவாதி. அரசியல், பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க வந்த ஆபத்பாந்தகர். இனவாதத்துக்கு எதிரான பேர்வழி. அமைதியின் நேசன். மூழ்கும் நாட்டை மீட்க வந்த ஒரேயொரு மாலுமி என்று தோற்றம் காட்டுகிறார் ரணில் விக்கிரமசிங்க. நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி பதவியிலிருக்கும் ரணில் இன்று சர்வ வல்லமை பொருந்திய பெருந்தலைவர். 50 ஆண்டுகளுக்கு மேலான அரசியல் அனுபவம் ரணில் விக்கிரமசிங்கவுக்குத் தாராளமாகக் கை கொடுக்கிறது. சர்வதேச நாடுகளின் ஆதரவு ஒரு பக்கம் அவருக்குக் கிடைக்கிறது என்றால், சர்வதேச நாடுகளை லாவகமாகக் கையாளும் அவருடைய கலை இன்னொரு பக்கமாகக் கைகொடுக்கிறது. இதனால் ரணில் விக்கிரசிங்கவை எவராலும் எதுவும் செய்ய முடியவில்லை. பலருக்கும் அவர் மீது பொருமல்கள் உண்டு. ஆனால், அடுப்படிக்குள் புகைவதைப்போல அடிவயிற்றில் புகைவதோடு எல்லாம் அடங்கிப் போகின்றன. அறுதிப் பெரும்பான்மையை பாராளுமன்றத்தில் வைத்திருக்கின்ற ராஜபக்ஸக்களின் ‘பொது ஜன பெரமுன’ கூட ரணிலை எதுவும் செய்ய முடியாதுள்ளது. மட்டுமல்ல, ரணிலுக்குச் சவால் விட்டுக் கொண்டு ஐக்கிய மக்கள் சக்தியை உருவாக்கி, ஒரு பெரும் அணியாகத் திரண்டிருக்கும் சஜித்தின் கூட்டணியினாலும் ரணிலை ஆட்ட முடியவில்லை. இவ்வளவுக்கும் இந்தச் சீமான் ஒரு வாக்கைக் கூட, தான் இப்பொழுது வகிக்கும் பதவிக்காகப் பெற்றவரில்லை. ஏன், இதற்காக நடத்தப்பட்ட ஜனாதிபதித் தேர்தலிலேயே போட்டியிட்டதுமில்லை. ஆனால், அவரே நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி – நாட்டின் அதிபராகி ஆட்டுவிக்கிறார். இலங்கை அரசியல் சாசனத்தின்படி ஜனாதிபதிக்கே உச்ச அதிகாரமுண்டு. அமைச்சரவையும் பாராளுமன்றமும் முப்படைகளும் என முழு நாடுமே ஜனாதிபதிக்குக் கீழேதான். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தித் தனக்கு எதிரான திசையிலிருந்தவர்களை வைத்தே வெற்றிகரமாக ஆட்சியை நடத்துகிறார். அமைச்சரவையில் உள்ள அத்தனை பேரும் எதிரணியைச் சேர்ந்தவர்கள். இருந்தாலும் ரணிலுக்குக் கட்டுப்பட்ட பெட்டிப் பாம்புகளாகவே இருக்கின்றனர். இதற்கெல்லாம் காரணம், இவர்கள் அனைவரும் பலவீனமான நிலையில், கடந்த காலத்தில் தவறுகளை இழைத்தவர்களாக இருப்பதேயாகும். இந்தத் தவறுகளிலிருந்து தப்பித்துக் கொள்ள வேண்டுமென்றால், தவிர்க்க முடியாமல் ரணிலை ஆதரித்தே ஆக வேண்டும். அவருடைய கால்களைப் பிடித்தே ஆக வேண்டும். ராஜபக்ஸக்களைக் காப்பாற்றி வைத்திருப்பதே ரணில்தான். இந்த நிலையிலிருந்து நாடு மீள்வதென்றால், பல காரியங்கள் நடக்க வேண்டும். முதலில் பொருளாதார நெருக்கடி தீர வேண்டும். இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். அதற்கு அரசியலமைப்பில் மாற்றம் வேண்டும். அதற்கு மக்களின் மனதிலும் அரசியற் கட்சிகள் – அரசியல்வாதிகளின் மனதிலும் மதவாதிகளின் தலைக்குள்ளும் மாற்றம் நிகழ வேண்டும். அதற்கு ஏற்றமாதிரிப் பல தரப்பிலும் வேலைகள் நடக்க வேண்டும். சமாதானத்தின் மீதும் தீர்வின் மீதும் விருப்பமும் உறுதிப்பாடும் வேண்டும். ஜனநாயக ரீதியான – மாண்புடைய தேர்தல் நடக்க வேண்டும். இப்படிப் பலவும் நடப்பது அவசியம். பொருளாதார நெருக்கடியை வைத்தே ரணில் தன்னைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். ரணிலை விட்டால் பொருளாதார நெருக்கயைக் கையாளக் கூடிய வேறு ஆட்களில்லை என்றமாதிரியே நாட்டின் பெரும்பான்மையான சனங்கள் எண்ணுகிறார்கள். ஏன் அரசியற் கட்சிகள், பிற தலைவர்களுக்கும் கூட அப்படியான எண்ணம்தான். ஆனாலும் ரணில் விக்கிரசிங்கவை வீழ்த்தி விட வேண்டும் என்றே ஒவ்வொருவரும் யோசிக்கிறார்கள். இதற்காக அவர்கள் குறுக்கு வழியில் பயணிப்பதைப்போல தேர்தலை எதிர்பார்க்கிறார்கள். தேர்தல் நடந்தால் எல்லாம் சரியாகி விடும் என்று சிந்திக்கிறார்கள். இதுதான் சிரிப்புக்கிடமான சங்கதி. ஒரு தேர்தல் அல்ல ஒன்பது தேர்தல் நடந்தாலும் பிரச்சினைகள் தீராது. ஏனென்றால் நாட்டின் பிரச்சினைகளுக்குத் தேர்தல் மூலமாகத் தீர்வைக் காணவே முடியாது. தீர்வு காண வேண்டிய வேலைகளில் தேர்தல் மூலமான அதிகார மாற்றமும் ஒன்றாக இருக்கலாமே தவிர, அதுதான் தீர்வைப் பெற்றுத்தரும் என்று சொல்வதற்கில்லை. இதற்கு முன்பும் பல தேர்தல்கள் நடந்திருக்கின்றன. பல விதமான வாக்குறுதிகளின் மத்தியில்தான் அந்தத் தேர்தல்களும் அவற்றின் வெற்றியும் அமைந்தது. மக்களும் பெரும் எதிர்பார்ப்புகளோடுதான் வாக்களித்திருக்கிறார்கள். ஆட்சி பீடம் ஏறியவர்கள் மாபெரும் பிரகடனங்களோடு கதிரையில் அமர்ந்தனர். இரண்டு மாதம் சென்றதும் பழையபடி வேதாளம் முருங்கையில் ஏறிய கதையே நிகழ்ந்தது. அதிகம் ஏன், யுத்தம் முடிந்தபோது நாட்டிலுள்ள பெரும்பான்மையோரிடம் இனிப் பிரச்சினை இல்லை என்ற எண்ணமே மேலோங்கியிருந்தது. ஆனால் நடந்தது என்ன? அதற்குப் பிறகுதான் ஆயிரத்தெட்டுப் பிரச்சினைகளும் பொருளாதார நெருக்கடியும் அந்நியத் தலையீடுகளின் அதிகரிப்பும். இன்று நாடு இருக்கின்ற நிலை? தேர்தலினால் சிலவேளை ரணில் விக்கிரமசிங்கவைத் தோற்கடிக்கலாம். நாட்டின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது நடக்கும் என்றில்லை. அதற்கு ஏற்கனவே சொல்லப்பட்டதைப்போல பல காரியங்கள் நடக்க வேண்டும். அதற்கான திடசங்கற்பம் ஒவ்வொருவரிடமும் ஏற்பட வேண்டும். அதற்கு நாட்டையும் மக்களையும் நேசிக்கும் ஒரு பண்பு உருவாக வேண்டும். அரசியல் வணிகத்திலிருந்து கட்சிகளும் தலைவர்களும் அரசியல்வாதிகளும் ஊடகவியலாளரும் விடுபட வேண்டும். தனி நலனை விட பொது நலன் என்ற சிந்தனை எழ வேண்டும். தேசப்பற்றும் மக்களின் மீதான மதிப்பும் ஒரு அலைபோல மேற்திரள வேண்டும். இதை முன்னெடுக்கும் ஒரு அணி அல்லது தலைமை உருத்திரள வேண்டும். இப்போதிருப்பவை சவலைகள். இவற்றினால் எதையுமே செய்ய முடியாது. இதை அவை நன்றாக நிரூபித்துள்ளன. இவற்றை விட இருக்கின்ற One Man Army அல்லது One Man Government பரவாயில்லை. இதை நான் சொல்லவில்லை. சனங்கள் சொல்கிறார்கள். 00 https://arangamnews.com/?p=10600
-
பாரிஸ் இலக்கியச் சந்திப்பும் கூக்குரல் இட்டோரும் — ராகவன் — கடந்த மார்ச் 30-31 இல் நிகழ்ந்த இலக்கியச் சந்திப்பில் நூல்கள் பற்றிய விமர்சனங்கள் அறிமுகங்கள் அத்துடன் பாலஸ்தீனப் பிரச்சனை, இன முரண்பாடு, மலையக மக்கள், பால் நிலை வேறுபாடுகள், LGBTQ, சாதியம் போன்ற பல்வேறு விடய தானங்கள் பேசப்பட்டன. விவாதங்கள் நிகழ்ந்தன. இரண்டாம் நாள் மாலை நிகழ்விற்கு நாலு பேர் புதிதாக வந்திருந்தனர். அவர்கள் நால்வரும் ஒரே இடத்தில் அமர்ந்திருந்தனர். ஒருவர் யோகு அருணகிரி. மற்றவர் கார்வண்ணன். மூன்றாமவர் நெய்தல் நாடன். மற்றவர் பெயர் தெரியாது. டெலோன் மாதவன் என்ற இரண்டாம் தலைமுறையை சேர்ந்த பிரான்ஸு நாட்டு அறிஞர் பேச அழைக்கப்பட்டிருந்தார். அவர் புவியியலில் டாக்டர் பட்டம் பெற்றவர். தமிழ் மொழி அவருக்கு தெரிந்திருப்பினும் அவரது மொழியாளுமை பிரஞ்சு மொழியில் தான். அவரது தாய் மொழி பிரஞ்சு மொழி என்றே கூறலாம். புவியியலில் மானிட புவியியல் என்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கும் நிலப்பரப்புக்குமான உறவுகளை ஆய்வது. அதுவே மாதவனின் துறைசார் தேர்ச்சி. தனக்கு முடிந்தளவில் தமிழில் ஒர் அறிமுகத்தை அவர் செய்தபின் நிர்மலா அவரது ஆய்வை தமிழில் வாசித்தார். அவரது ஆய்வுக்கட்டுரை புலம்பெயர் தமிழ் இனப்பிரதேசங்களின் இயக்கவியல் பற்றியது. கோலாலம்பூர், பாரிஸ் மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தமிழர்கள் தமது கலாசார பாரம்பரியங்களை நிலைநாட்ட முயற்சிப்பது, அதன் விளைவான புவியியல் மாற்றங்கள் போன்ற விடயங்களை ஆய்வு செய்த கட்டுரை அது. அது தவிர 2002 சமாதான ஒப்பந்த காலத்தில் அவர் இடப்பெயர்வு சம்பந்தமான சமூக, புவியியல் ஆய்வொன்றையும் யாழ் குடா நாட்டில் மேற்கொண்டிருந்தார். சாதிய அடையாளத்தை வைத்து ஒதுக்கும் முறை ஒழிந்து கொண்டு வரும் நிலை இருப்பினும், சாதிய அமைப்பு முறை ஒழிந்ததால் சாதிய யதார்த்தம் அருகிவிட்டதென பொருள் கொள்ள முடியாது. அகமணம், சாதிப்பற்று போன்ற காரணிகள் சாதியத்தை நிலை நிறுத்துகின்றன. அத்துடன் புலம் பெயர்ந்தோரிடமிருந்து வரும் பணம் சாதிய பிரிவினைக்கான உந்து சக்தியாக தொழிற்படுகிறது என்கிறார் அவர். மாதவன், தமிழர்களிடம் உள்ள மதம், சாதி இந்த இரண்டு விடயங்களையும் முன்வைத்து, அவை எவ்வாறு தொழிற்படுகின்றன என்ற தனது கள ஆய்வை மேற்கொண்டார். அதில் அவர் குறிப்பிடுவதானது – அடிமை குடிமை முறை கொண்ட சாதிய அமைப்பு முன்னர் இருந்தது. அத்துடன் சாதிய அமைப்பு ஆழமாக யாழ்ப்பாணத்தில் இருந்தது. ஆனால் தேசிய விடுதலை போராட்டம் காரணமாக நிகழ்ந்த இடப்பெயர்வு, விடுதலைப்புலிகள் சாதிய வேறுபாடுகள் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு குந்தகமானவை என்ற கருத்தியலை கொண்டிருந்தமை, சாதிய வேறுபாடுகளை எதிர்க்கும் சட்டங்களை கொண்டுவந்தமை, விடுதலைப்புலிகளில் ஒடுக்கப்பட்ட சாதிகளை சேர்ந்தவர்கள் இணைந்தமை போன்ற விடயங்களால் சாதிய வேறுபாடுகள் அற்ற நிலை ஒன்று தோன்றியது. அத்துடன் தொழில் சார் சாதிய அமைப்பு முறையிலிருந்த மாற்றங்களும் சாதியத்தை ஆட்டம் காண வைத்தன. ஆனால் விடுதலைப்புலிகள் அரசுடன் பேச்சுவார்த்தை நிகழ்த்தி சமாதான சூழல் ஒன்று உருவாகையில் சாதியம் மீண்டும் தலையெடுத்தது என்பதாகும். அதற்கான முக்கிய காரணங்களாக இரண்டு விடயங்களை அவர் பார்க்கிறார். ஒன்று அகமணமுறை. – இளைஞர்கள் நிகழ்ந்த மாற்றங்களினால் சாதிய வேறுபாடுகளை பொருட்படுத்தா நிலை ஏற்பட்ட போதிலும் திருமணம் என்று வரும் போது பெரும்பாலும் பெற்றாரின் சொற்கேட்டு சாதிக்குள் திருமணம் செய்வது. மற்றது யுத்ததால் பெரும்பாலான வெள்ளாளர்கள் புலம்பெயர்ந்து வெளி நாடுகளில் உழைத்த பணத்தை உற்றார் உறவினர்களுக்கு அனுப்பியதால் சமாதான காலத்தில் மீண்டும் தமது இருப்பை உறுதி செய்ய ஆதிக்க சாதியினர் குறித்த பகுதிகளில் காணிகள் வாங்கி வீடுகள் கட்டி வாழ்வதால் ஏற்பட்ட சமூக புவியியல் மாற்றங்கள் பற்றி அவர் ஆய்வு செய்தார். நளவர்களில் ஒரு பகுதியினர் புலம்பெயர்ந்து சென்றதால் அவர்களது சமூக பொருளாதார முன்னேற்றத்தையும் அவர் குறிப்பிடுகிறார். பள்ளர், பறையர் போன்றவர்களின் பொருளாதார நிலை காரணமாக அவர்களின் சமூகங்களிலிருந்து புலம் பெயர்ந்தோர் பெரிதும் இருக்கவில்லை என்றும் குறிப்பிடுகிறார். தேசிய விடுதலைப்போராட்டத்தால் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பினும் சாதியத்தின் நீடிப்பு தொடர்கிறதென்றும் குறிப்பிட்டார். முடிவில், யுத்தத்திற்கு முன்னரான சாதிய அமைப்பு யுத்தத்திற்கு பின்னராக மாறி வருகிறது. காதல் திருமணங்கள் மற்றும் சாதி சார் தொழில்கள் மாறிவருதல் போன்றவற்றால் சாதி ரீதியான புவியியல் சார்ந்த சாதிய ஒதுக்கல்கள் படிப்படியாக மறைந்து வருகின்றதென அந்த ஆய்வுக்கட்டுரையை முடிக்கிறார். அவரது ஆய்வை அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டிய அவசியம் ஏதும் கிடையாது. முக்கியமாக சாதி சார்ந்த தொழில்கள் அருகுவதால் சாதியம் விரைவில் ஒழிந்துவிடும் என்ற கருதுகோளை அவர் முன்வைப்பதில் சில பிரச்சனைகள் உண்டென்பதே எனது பார்வை. இது சமூக அறிவியல் ரீதியாக விவாதிக்கப்படவேண்டிய விடயம். ஆனால் ஒரு துறை சார் ஆய்வை ஒருவர் மேற்கொள்ளும் போது, அவரது உழைப்பை மதிப்பது அவசியம். அத்துடன் அவரது ஆய்வை உள்வாங்கி அதற்கான விமர்சனங்களை முன்வைப்பதே அறிவார்ந்த செயல். அவரது ஆய்வு பற்றிய எவ்வித அறிவார்ந்த பார்வையும் இன்றி, எவ்வித வாசிப்பும் இன்றி வந்தவர்களில் ஒருவரான நெய்தல் நாடன் அவரைப்பார்த்து சாதி அடிமை முறை இருப்பதாக எழுதியிருக்கிறீர்கள்; அதற்கான ஆதாரம் என்ன என்று கேட்டார். மாதவன் அடிமைமுறை சமகாலத்தில் இருப்பதாக சொல்லவில்லை. அத்துடன் மாதவனுக்கு தமிழ் புரிவது கடினம். எனினும் அவர் யாழ்ப்பாணம் பற்றிய மற்றவர்களின் ஆய்விலிருந்து தான் எடுத்தேன் என்றார். கார்வண்ணா எழுந்து தேசியம் பற்றி எழுதாமல் சாதியம் பற்றி எழுதியது தேசியத்தை வீழ்த்தும் சதி என்றவகையில் கூக்குரல் இட்டார். தேசியம் சமாதானத்துக்கு போன காலகட்டத்தில் சாதியம் மீண்டும் தலைதூக்கும் காரணிகளையே மாதவன் கண்டறிந்தார். அவரது ஆய்வானது சமூக புவியியல் மாற்றம் பற்றியது. எனவே தேசியம் பற்றி ஆய்வு செய்யவில்லை என கூக்குரல் இடுவது தற்குறித்தனமே. அதிருக்க அவர்கள் நான்கு பேரும் அவை நாகரீகத்துக்கு எவ்வித மதிப்பும் கொடுக்காமல் மற்றவர்களின் ஜனநாயக உரிமை பற்றி கரிசனை ஏதுமற்று தொடர்ந்து இடைமறிப்பு செய்து அவர்களது அறியாமையை வெளிப்படுத்தினர். அதனை பெரும் வீரமாகவும் நினைத்து புளங்காகிதம் அடைந்தனர். உண்மையில் மாதவன் விடுதலைப்புலிகளின் சாதி ஒழிப்பு சட்டங்களால் பாரியமாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன என்றே ஆய்வில் கண்டறிந்தார். ஒருவகையில் விடுதலைப்புலிகளின் சாதிய ஒழிப்பு நடவடிக்கைகளை விதந்துரைத்தார். இது பற்றி எவ்வித வாசிப்போ அறிவோ அற்று,ஒரு இரண்டாம் தலைமுறை புகலிட அறிவாளியை அவமானப்படுத்துவதாக நினைத்து அவர்கள் தம்மையே அவமானப்படுத்திக்கொண்டனர். சமாதான காலத்தில் சாதியம் மீளுருவாக்கம் அடைவதன் காரணிகளைத்தான் அவர் ஆய்ந்தார். இதனைக்கூட விளங்கமுடியா தற்குறிகளாகத்தான் இவர்களது நடவடிக்கை இருந்தது. அதன் பின்னர் சாதியம் பற்றிய கள நிலை உரை ஒன்றை தேவதாசன் ஆற்றினார். ஜேசிபி இயந்திரம் மூலமான தேர் இழுப்பிலிருந்து நல்லிணக்கபுர மதில் வரை விடயங்கள் பேசப்பட்டன. உரை முடிந்தவுடன் ஜேசிபியால் தேர் இழுத்ததற்கான காரணம் குடும்ப சச்சரவு என்று கார்வண்ணா கதை அளந்தார். இலக்கிய சந்திப்பில் இலக்கியத்தை பேசுவதை விடுத்து சாதி பற்றி எதற்கு பேச்சு என்று தனது அறியாமையை வெளிப்படுத்தினார். நிகழ்ச்சி ஒழுங்கமைப்பாளர்கள் இவர்கள் குறுக்கே குரல் எழுப்புவதை நிறுத்துமாறும் கைகளை உயர்த்தினால் ஒழுங்கு முறையில் அவர்களின் கேள்விக்கான நேரம் கொடுக்கப்படும் எனவும் பல முறை கூறிய போதும் அவர்கள் அதற்கு செவி சாய்க்கவில்லை. தொடர்ந்து கூச்சல் இட்டு தமது அறியாமையை நன்கு வெளிப்படுத்தினர். ஒன்று மட்டும் தெரிகிறது. வந்தவர்கள் நால்வரும் எந்த இயக்கப்பக்கமும் தலை வைத்தும் படுக்காமல் வெளி நாட்டில் இருந்து கொண்டு வீரம் பேசும் முக நூல் போராளிகள். விடுதலைப்புலிகளின் மோசமான அரசியலை மாற்றுக்கருத்தாளர்கள் கடுமையாக விமர்சித்தபோதும் விடுதலைப்புலிகளிற்கும் மற்றைய இயக்கங்களுக்கும் தமிழ் தேசிய கருத்தியலை வரித்துச் சென்றவர்களில் பெரும்பாலும் ஒரு பண்பு இருக்கும். அவர்கள் சேர்ந்து வாழப்பழகியவர்கள். அத்துடன் ஒரு கட்டுப்பாட்டை பேணியவர்கள். இவ்வாறு கூச்சலிட்டு குழப்பும் பண்பு அவர்களிடம் பெரும்பாலும் காணப்படுவதில்லை. என்னிடம் பல விடுதலைப்புலி உறுப்பினர்கள் தமது அரசியல் தஞ்ச கோரிக்கைக்காக வந்திருக்கின்றனர். மிகவும் பண்பாக நடப்பர். அதேபோல் தான் மற்றைய இயக்கங்களிலிருந்து வந்த பலரும். இந்த சந்திப்புக்கு விடுதலைப்புலிகளில் அங்கத்தவராக இருந்து விடுதலைப்புலிகளை இப்போதும் விட்டுக்கொடா நண்பர் ஒருவரும் வந்திருந்தார். அவர் நிகழ்ச்சி முடியும் வரை கண்ணியமாக இருந்தார். தனக்கு தரப்படும் நேரத்தில் அவர் கேள்விகளையும் கேட்டார். இந்தப்பண்பு தேசியம் என்று கூக்குரலிட்டவர்களிடம் இருக்கவில்லை. பிரபாகரன் மிக மோசமான சர்வாதிகார அமைப்பாக புலிகளை உருவாக்கி அதற்கு தலைமை தாங்கி அதனை ஒரு அழிவுப்பாதைக்கு கொண்டு சென்றிருப்பினும் அவர் சாதிய சமூக அமைப்பு தவறானதென்ற பார்வையை கொண்டிருந்தார். சாதி ஒழிப்பிற்கான சமூக நீதி அரசியலை விடுதலைப்புலிகள் எடுக்கவில்லை என்பது ஒரு புறம் இருக்க, விடுதலைப்புலிகள் அமைப்பு சாதியத்துக்கெதிரான சட்டங்களை கடைப்பிடித்தது. விடுதலைப்புலிகளின் காலத்தில் சாதியம் இல்லாவிட்டால் அவ்வாறான சட்டங்களின் தேவை ஏற்பட்டு இருக்காதென்பதை ஒரு சிறு குழந்தை கூட புரிந்து கொள்ளும். அத்துடன் பிரபாகரன் ‘வெள்ளாள சோசலிசம்’ என்று ஆதிக்க சாதிகள் சோசலிசம் பேசுவதை நகையாடினார். அவருக்கு சாதியம் சம்பந்தமான ஆழமான தேடல் இல்லை எனினும் சாதிய வேறுபாடு வெள்ளாள ஆதிக்கம் என்பது பற்றிய புரிதல் இருந்தது. வெள்ளாளர்கள் எவ்வாறு தொழில்வாய்ப்பு விடயங்களில் கரையாரை ஒதுக்கினார்கள் என தனது மாமா தனக்கு சொன்னதாக என்னிடம் கூறி இருக்கிறார். அத்துடன் வெள்ளாளரை வேரறுக்க பிறந்த பரசுராமன் நானே என்றும் ஒருமுறை எனக்கு சொன்னார். அதே போல் புலிகளின் ஆஸ்தான கவிஞர் புதுவையிடம் நண்பர் ஒருவர் சாதியம் பற்றி கேட்க அவர் சொன்னாராம் : சாதி வசை செய்வோருக்கு குண்டியில் அடிச்சு பிரயோசனமில்லை ; அது மண்டையில் இருக்கு என்று. யோகுவும் கார்வண்ணனும் புலியில் அங்கத்தவர்களாக இருந்து கொண்டு சாதி இப்போது இல்லை ; ஜேசிபி இயந்திரத்தை வைத்து ஆதிக்க சாதியினர் தேர் இழுத்தது வடம் பிடித்தால் தீட்டு என்பதற்காக இல்லை என கூறி இருப்பார்களாயின் அவர்களுக்கு ஆறு மாசம் சமையல் செய்ய பனிஸ்மண்ட் கிடைத்திருக்கும். அதன் பின்னும் தொடர்ந்தால் சீட்டு கிழிக்கப்பட்டிருக்கும். இலக்கிய சந்திப்புக்குழு இவர்களை வெளியேற்றாமல் தொடர்ந்து கத்தவைத்தது ஒரு நல்ல விடயம். இவர்களது உண்மை முகம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இவர்களின் முக நூல் பக்கம் சென்று பார்த்தால் இவர்களது அவதூறுகள், பெண்வெறுப்பு என்பவை வெள்ளிடை மலை. இலக்கிய சந்திப்பு காணொளியில் இவர்களது தற்குறித்தனத்தை காணலாம். https://arangamnews.com/?p=10597
-
@பையன்26 தவிர மற்றவர்களுக்கு உற்சாகத்தைக் காணவில்லை!
-
யாழ்ப்பாணத்தில் வசிக்கின்றார். நன்றி @ரசோதரன்
-
யாழில் கார்த்திகைப்பூ அலங்காரம் : விசாரணைக்கு அழைக்கும் பொலிஸார்!
கிருபன் replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
கார்த்திகைப் பூ விடுதலைப்புலிகளின் இலச்சினை அல்ல அது தமிழ்த் தேசியஇனத்தின் தாயகச்சூழலின் அடையாளம் -பொ. ஐங்கரநேசன் சுட்டிக்காட்டு!! (மாதவன்) கார்த்திகைப்பூவை சிறிலங்கா அரசு விடுதலைப்புலிகளின் இலச்சினையாகவே பார்க்கிறது. இதனாலேயே தெல்லிப்பளை யூனியன் கல்லூரியின் மெய்வல்லுநர் போட்டியில் இல்லமொன்றை அழகுபடுத்துவதற்காகக் கார்த்திகைப்பூவை வடிவமைத்த மாணவர்கள் காவல்துறையினால் அறிவிலித்தனமாக விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்கள். கார்த்திகைப்பூவை விடுதலைப்புலிகள் தேசிய மலராகத் தெரிவு செய்திருந்தார்கள் என்பதற்காக அது விடுதலைப்புலிகளை அடையாளப்படுத்தும் பூ அல்ல. அது தமிழ்த்தேசிய இனத்தின் தாயகச் சூழலின் அடையாளம் என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் சுட்டிக்காட்டியுள்ளார். தெல்லிப்பளை யூனியன் கல்லூரியின் மெய்வல்லுநர் போட்டியில் இல்லமொன்று கார்த்தகைப்பூவின் உருவத்தை உருவாக்கி வைத்திருந்தமையால் மாணவர்கள் சிலரும் கல்லூரி நிர்வாகமும் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக பொ.ஐங்கரநேசன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழர்கள் சுற்றுச்சூழலைக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று ஐந்திணைகளாக வகுத்து இயற்கையோடு இசைந்த வாழ்வை மேற்கொண்டு வந்தவர்கள், சங்கத் தமிழர்களால் காந்தள் என அழைக்கப்பட்ட கார்த்திகைப்பூ இப்போதும் தமிழ் வாழ்வுக்கு மிகவும் நெருக்கமான பூக்களில் ஒன்றாகவே இருந்து வருகிறது. சங்கக்கவி கபிலர் தொடங்கி தாயகக்கவி புதுவை இரத்தினதுரை வரை கார்த்திகைப் பூவைப் பற்றிப்பாடாத புலவர்களே இல்லையென்னும் அளவுக்குத் தமிழ் வாழ்வியலில் கார்த்திகைப்பூ மிகுந்த முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. இதன் காரணமாகவே இந்தியாவில் தமிழ்நாடு கார்த்திகைப்பூவைத் தனது மாநில மலராகத் தேர்வு செய்துள்ளது. சிறிலங்கா அரசு தனது பௌத்த பண்பாட்டுச் சூழலுக்கு அமைவாகத் தேசிய மலராக நீலோற்பலத்தையும் தேசிய மரமாக மெசுவா எனப்படும் நாகமரத்தையும் தெரிவு செய்துள்ளது. இலங்கைக் காடுகளில் ஒருபோதும் காணப்படாத சிங்கத்தைத் தேசியக் கொடியில் வாளேந்த வைத்த பின்னர் அதனால் இதுவரையில் இலங்கைக்குரிய தேசிய விலங்கொன்றைத் தெரிவு செய்ய முடியவில்லை. இலங்கைத் தேசிய அடையாளங்கள் தமிழ் மக்களை உள்வாங்காது பௌத்த, சிங்களப் பெரும் தேசியவாதத்தின் குறியீடுகளாக அமைந்ததன் விளைவாகவே விடுதலைப்புலிகள் தேசிய மலராக ஈழத்தமிழ்ச் சூழலின் அடையாளமாக விளங்கும் கார்த்திகைப்பூவைத் தெரிவுசெய்ய நேர்ந்தது. கார்த்திகைப்பூச்செடியிலுள்ள கொல்கிசின் என்னும் நச்சு இரசாயனம் அருமருந்துகளின் தயாரிப்பில் பயன்படுகிறது. இதன் பொருட்டுத் தமிழகத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் பயிரிடப்படும் கார்த்திகைப் பூச்செடியால் பலகோடி ரூபாய்கள் அந்நியச் செலாவணியாகக் கிடைத்து வருகிறது. ஆனால், கார்த்திகைப் பூச்செடியின் சிறப்புகளை சிறிலங்கா அரசு ஏற்றுக்கொள்ள மறுப்பதாலேயே கார்த்திகைப்பூவுக்கு உத்தியோகப்பற்றற்ற தடையைப் பேணிவருகிறது. இயற்கை அதன் பரிணாமப்பாதைக்குக் குறுக்காக நிற்கும் எதனையும் தூக்கியெறிந்து தன் பல்லினத்தை நிலைநிறுத்தும் பேராற்றல் பெற்றது என்பதை சிறிலங்கா அரசு நினைவிற்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். (ஏ) https://newuthayan.com/article/கார்த்திகைப்_பூ_விடுதலைப்புலிகளின்_இலச்சினை_அல்ல; -
தேர்தலுக்குள் கச்சதீவை மீட்டால் எங்கள் வாக்கு பா.ஜ.கட்சிக்கே – நாம் தமிழர் சீமான் April 3, 2024 தேர்தலுக்குள் கச்சதீவை மீட்டு கொடுத்தால் நானும் எனது கட்சியினரும் பா.ஜ.கவுக்கு வாக்களிக்கிறோம் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். அத்துடன், அன்று முதல் இன்று வரை இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுப்பவன் நான் மட்டுமே. இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்த கட்சிக்கு ஆதரவான காங்கிரஸ், தி.மு.க.வுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும் என்றும் கூறினார். தேனியில் பிரசாரத்தில் “சின்னம் முடக்கப்பட்ட போதும் எண்ணத்தை மாற்ற முடியாது என்ற அடிப்படை யில் அவர்கள் கொடுத்த சின்னத்துடன் களத்தில் நிற்கிறோம். தி.மு.க., அ.தி.மு.க., பாரதிய ஜனதா பெரிய கட்சி என்கின்றனர். ஆனால் தனித்து நிற்கபயப் படுகின்றனர். “கச்சதீவை மீட்காமல் 10 ஆண்டுகளாக கோமாவில் இருந்து விட்டு 10 நாட்களில் தேர்தல் வரவுள்ள நிலையில் இதுபற்றி பா.ஜ.க. பேசி வருகிறது. நான் 13 ஆண்டுகளாக கச்சதீவை பற்றி பேசி வருகிறேன். 6 மாதங்களுக்கு முன்பு மத்திய மந்திரி அமித்ஷாவிற்கு இது குறித்து கடிதம் எழுதினேன். தேர்தலுக்குள் கச்சதீவை மீட்டு கொடுத்தால் நானும் எனது கட்சியினரும் பா.ஜ.கவுக்கு வாக்களிக்கிறோம்” என்றும் அவா் தெரிவித்தாா். https://www.ilakku.org/தேர்தலுக்குள்-கச்சதீவை-ம/
-
“மூவரையும் கைது செய்தால் உண்மை வெளிவரும்” கனகராசா சரவணன் ஈஸ்டர் குண்டுதாக்குதல் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திபால சிறிசேன, கருணா, பிள்ளையான் ஆகியவர்களுக்கிடையே ஏதே ஒன்று மறைந்திருக்கின்றது. ஆகவே இவர்கள் 3 பேரையும் கைது செய்து விசாரித்தால் இந்த குண்டுதாக்குதல் தொடர்பாக சரியான சூத்திரதாரி யார் என்பதை அறிய முடியும். எனவே இவர்களை உடன் கைது செய்து விசாரணை நடத்துமாறு பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார். மட்டக்களப்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். கருணா படையணி என்பது வழமையான செயற்பாடு. தேர்தல் நெருங்குகின்றது தேர்தலுக்கான நாடகம். கடந்த பாராளுமன்ற தேர்தலில் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை பூரண அதிகாரத்துடன் மீட்டுத்தருவதாக கூறி, தமிழ் தேசிய மக்களுக்கு வாக்களிக்க இருந்த மக்கள் எல்லாம் தன்பக்கம் திசைதிருப்பி வாக்குகளை சிதறடித்து அந்த மாவட்டத்தில் தமிழ் மக்கள் பிரதி நிதி ஒருவர் வராமல் செய்து முஸ்லீம் மக்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்க செய்த பெருமை செய்தவர். 2019 ம் ஆண்டு இடம்பெற்ற குண்டுதாக்குதல் தொடர்பாக தற்போது பலரின் வாயில் வித்தியாசமான செய்திகள் வந்துகொண்டிருக்கின்றது. பிள்ளையான் என்றழைக்கப்படும் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தனின் ஆலோசகராக இருந்து சுவிஸ்நாட்டில் தஞ்சமடைந்துள்ள ஆசாத்மௌலான சனல் 4 ஊடகத்தில் பிள்ளையானை குற்றவாளி என தெரிவித்துள்ளார். ஆனால் பிள்ளையான் இன்று குண்டு தாக்குதலை வைத்து ஒரு புத்தகத்தை வெளியிட்டிருக்கின்றார். இதே நேரத்தில் முன்னாள் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன காலத்தில் இந்த குண்டு தாக்குதல் இடம்பெற்றது. அவர் அப்போது வாய்திறக்காமல் ஜனாதிபதி பதவி இழந்து நீண்ட காலத்தின் பின் தற்போது வாயை திறந்து தனக்கு சூத்திரதாரியை தெரியும் என்று தெரிவித்துள்ளார். ஆகவே சட்டத்தின் மத்தியில் சாட்சியங்கள் மறைக்கப்பட்டாலும் குற்றம். இந்த சாட்சியம் ஏற்கனவே சொல்லப்படாது இருந்தது பாரிய குற்றம். ஆகவே அவர் மீது தீவிரமான விசாரணை நடாத்தப்பட்டு சரியான தகவலை தரவில்லை எனில் சட்டத்தின் முன் நடவடிக்கை எடுக்கவேண்டும். அதுதவிர ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பாக அசாத் மௌலான பிள்ளையான் தொடர்பாக தெரிவித்ததையும் பிள்ளையான் புத்தக வெளியிட்டுள்ளது தொடர்பாக கருணா கருத்து தெரிவித்துள்ளார் எனவே இவர்கள் எல்லோரும் கூட்டாக விசாரிக்கப்படவேண்டும் ஏதே ஒன்று இவர்களுக்குள் மறைந்திருக்கின்றது எனவே இந்த கருத்;துக்களை வெளியிட்டு குற்றம் சாட்டும் முன்னாள் ஜனாதிபதி மைத்திபால சிறிசேன, கருணா என்று அழைக்கப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் வி.முரளீதரன், பிள்ளையான் என அழைக்கப்படும் இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன், ஆகிய 3 பேரை அரசாஙகம் கைது செய்து சரியாக விசாரித்தால் இந்த குண்டுதாக்குதல் தொடர்பாக சரியான சூத்திரதாரி கைது செய்யப்படுவார். இது யார் என்பதை அறிய முடியும் எனவே ஜனபதிபதி விசேட குழு ஒன்றை அமைத்து அவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு அரசையும் ஜனாதிபதியையும் கோட்டுக் கொள்கின்றேன் என்றார். https://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/மூவரையும்-கைது-செய்தால்-உண்மை-வெளிவரும்/73-335493
-
முருகன், ரொபர்ட் பயஸ், ஜெயக்குமார் இன்று இலங்கை வருகின்றனர்
கிருபன் replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
ராபர்ட் பயஸ், முருகன், ஜெயக்குமார் இலங்கை புறப்பட்டனர் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 33 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த ராபர்ட் பயஸ், முருகன் மற்றும் ஜெயக்குமார் மூவரும் இன்று இலங்கைக்கு புறப்பட்டனர். இலங்கை தலைநகர் கொழும்பை சென்றடையும் மூவரையும் அவர்களது உறவினர்கள் வரவேற்க காத்துள்ளனர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991-ம் ஆண்டு மே மாதம் 21-ந் திகதி தமிழ்நாட்டில் படுகொலை செய்யப்பட்டார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஏராளமான தமிழ்நாட்டு தமிழர்களும் ஈழத் தமிழர்களும் (இலங்கை தமிழர்களும்) கைது செய்யப்பட்டனர். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தமிழர்களுக்கு ஆயுள் தண்டனையாகவும் குறைக்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற சட்டப் போராட்டங்களுக்குப் பின்னர் ஆயுள் தண்டனை அனுபவித்த பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன் ஆகிய தமிழ்நாட்டு தமிழர்களும் முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் என இலங்கைத் தமிழர்களும் விடுதலை செய்யப்பட்டனர். அதேநேரத்தில் ஈழத் தமிழர்களான முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோர் வெளிநாட்டவர் என்பதால் திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்த 4 பேரையும் உடனே இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டும்; அவர்கள் சொந்த மண்ணில் உறவினர்களுடன் இணைய வேண்டும் என கோரிக்கை எழுப்பப்பட்டது. இது தொடர்பான வழக்குகளும் நடைபெற்றன. இவ்வழக்கு விசாரணையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சாந்தன், இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட இருந்த நிலையில் உயிரிழந்தார். இதனையடுத்து ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் மற்றும் முருகன் ஆகியோரை இலங்கைக்கு அனுப்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கான ஆவணங்களையும் இலங்கை தூதரகம் வழங்கியது. இதனடிப்படையில் இன்று ராபர்ட் பயஸ், முருகன் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் இலங்கைக்கு புறப்பட்டனர். நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட ஈழ ஆதரவாளர்கள் மூவரையும் சென்னை விமான நிலையத்தில் வழி அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் மணி செந்தில் தமது சமூக வலைதளப் பக்கத்தில், எனது அன்பு அண்ணன் ராபர்ட் பயஸ் அவர்களுக்கு.. இன்றைய பொன்னான விடியலின் தொடக்கத்தில் நீங்கள் உங்கள் தாய் மண்ணில் கால் வைத்திருப்பீர்கள். 33 வருடங்களுக்கு முன்பாக பிரிந்த தாயின் கருவறைக்கு மீண்டும் ஒரு சேய் போய் சேர்ந்திருக்கிறது. நீங்கள் உங்கள் தாய் மண்ணை எவ்வளவு நேசித்தீர்கள் என்பதை நான் நன்கு அறிவேன். உங்களின் வாழ்க்கை வரலாற்று நூலான 'விடுதலைக்கு விலங்கு' எழுதிய காலங்களில் இன்று விடுதலை ஆவோம் என்ற நம்பிக்கை அன்று இல்லை. சிறைக்குள் இருந்து கொண்டே உங்கள் தாய் மண்ணைப் பற்றி நீங்கள் யோசித்துக் கொண்டே இருந்தீர்கள். உங்கள் நிலத்திலிருந்து நீங்கள் பிரிந்து நீண்ட காலம் ஆகிவிட்டாலும் உங்கள் உதட்டோரம் ஈழத்துத் தமிழை சற்றே தேக்கி வைத்திருந்தீர்கள். ஒரு நாள் என் தாய் மண்ணிற்கு திரும்புவேன் என்கிற உங்களது நம்பிக்கையை எழுத்தில் வடித்த உரிமையோடு இந்த இரவில் இன்பமுருகிறேன்.ஆம். உங்கள் நம்பிக்கையுடன் கலந்த என் எழுத்து நிஜமாகிவிட்டது. இவற்றையெல்லாம் நாம் சிந்தித்த நாட்களில் இதுவெல்லாம் நடக்குமா என்று கூட நமக்குத் தெரியாது. ஆனாலும் ஒரு மன உறுதி கொண்ட தீர்க்கதரிசி போல நீங்கள் விடுதலை நாளொன்றின் பொன் கிரகணங்களுக்காக காத்திருந்தீர்கள். உங்கள் மீது அது இன்று படும் பொழுதில் நான் கண்கலங்க உங்களை என் நினைவுகளால் முத்தமிடுகிறேன். சொந்த ஊருக்கு சென்றவுடன் குலதெய்வம் கோவிலுக்கு போய் வாருங்கள். நம் மூதாதை உங்களுக்காக அங்கே காத்துக் கொண்டிருப்பார். படையல் போடுங்கள். பரவசமாய் இருங்கள். பழையன கழித்து புது வாழ்வு ஒன்றை புத்துணர்ச்சியோடு வாழுங்கள். உங்கள் வலி துயர் தியாகம் ஆகியவற்றை உணர்ந்த எல்லாம் வல்ல தெய்வங்கள் உங்களை காப்பார்கள் என்று எழுதியுள்ளார். https://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/ராபர்ட்-பயஸ்-முருகன்-ஜெயக்குமார்-இலங்கை-புறப்பட்டனர்/150-335560 -
@பையன்26, அணியைக் குறிப்பிடவேண்டும். RCB என்று எடுக்கவா அல்லது வேறு அணியைப் போடவா?
-
ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?
கிருபன் replied to பிழம்பு's topic in வண்ணத் திரை
ஆடுஜீவிதம்: அசல் மலையாள சினிமா ஜெயமோகன் அண்மையில் திரையரங்கில் நான் தீவிரமான உணர்வெழுச்சியுடன் பார்த்தபடம் ஆடுஜீவிதம் (Goat Life) இதுதான் மெய்யான மலையாளப்படம். (தமிழில் மோசமான டப்பிங், ஆங்கிலத்தில் மோசமான சப்டைட்டில் என்று சொன்னார்கள். நான் பார்த்தது மலையாள மூலம்) 1954 ல் நீலக்குயில் என்னும் மலையாளப்படம் வெளிவந்தது. அதுதான் மெய்யான மலையாளப்பட இயக்கத்தின் தொடக்கப்புள்ளி. அந்தப்படத்தின் தாக்கத்தால் தமிழ் இலக்கியச் சூழலில் நீலக்குயில் என்னும் சிற்றிதழும் வெளிவந்தது. அன்றிலிருந்து இன்று வரை மலையாள பொதுரசனைச் சினிமாவுக்கு ஒரு மரபு உள்ளது. பி.பாஸ்கரன், கே.எஸ்.சேதுமாதவன், ஏ.வின்செண்ட், பி.என் மேனன், எம்.டி.வாசுதேவன் நாயர், பரதன், பத்மராஜன், ஏ.கே.லோகிததாஸ், மோகன், ஐ.வி.சசி,சிபி மலையில் என ஒரு நீண்ட ஆளுமைநிரை அதிலுண்டு. அவர்கள் உருவாக்கிய படங்கள் அனைத்துக்கும் பொதுவான ஒரு தன்மை உண்டு. அவை எளியவர்களின் வாழ்க்கையை நுணுக்கமாகச் சித்தரித்தவை. அன்றாடத்தின் இயல்புநிலையை மிகையில்லாமல் காட்டியவை. நாடகத்தனத்தை உதறி காட்சித்தன்மையை நோக்கிச் சென்றவை. மானுடவாழ்க்கையின் போராட்டம், அவலம், மானுடத்தின் உச்சநிலைகள், வெற்றிகள் ஆகியவற்றை பேசியவை அவை. அத்தகைய நூறு சிறந்தபடங்களை ஒரு நல்ல ரசிகன் சொல்லிவிடமுடியும் – நான் ஏற்கனவே ஒரு பட்டியல் இட்டிருக்கிறேன். கீழ்மையில் திளைத்து, கீழ்மையை கொண்டாடும் படங்களும் மலையாளத்தில் வந்ததுண்டு. அவை தமிழில் பெருவெற்றி பெற்றதுமுண்டு. ஆனால் அவை மலையாளப்படங்கள் அல்ல. மலையாளப்படம் என்றால் அந்த நூறுதான். அந்த வரிசையில் வரும் படம் ஆடுஜீவிதம். அசலான படம். மகத்தான படம். இன்னும் பலதலைமுறைக்காலம் மலையாளச் சினிமாவின் செவ்வியல்படைப்புகளில் ஒன்றாக இது கருதப்படும். நான் முன்வைப்பது மலையாளத்துவம் என இப்படத்தில் நான் சுட்டிக்காட்டும் சில கூறுகள்தான். இதை உலக சினிமாப்பரப்பிலேயே மலையாளத்தின் அடையாளம் என்று முன்வைக்க முடியும். மலையாளத்துவம் என இந்தப்படத்தில் உள்ளவை எவை. மிக எளிமையாக மூன்று விஷயங்களைச் சுட்டிக்காட்டுவேன். அ.சமரசமற்ற யதார்த்தம். இன்று இந்திய சினிமாக்களில் மலையாளம் தவிர்த்து எதிலும் இந்தப் படம் காட்டுவதுபோல கலைரீதியான முழுமைகொண்ட யதார்த்தத்தை எடுக்க முடியாது. முன்பு வங்கப்படங்களில் இந்த யதார்த்தம் இருந்தது. இன்று அந்த வங்கப்பட மரபு இந்தி ஆதிக்கத்தால் அழிந்துவிட்டது இந்த யதார்த்தத்தை இன்று மலையாளம் தவிர பிறமொழிகளில் கொண்டுவர முயன்றால் ரசிகர்கள் ஏற்பார்களா என்ற ஐயம் விவாதநிலையிலேயே எழும். அந்த ஐயம் மிகமிக நியாயமானதும்கூட. எந்த யதார்த்தம் என்றாலும் அதில் கொஞ்சம் கேளிக்கையை கலந்தாகவேண்டும் என்னும் கட்டாயம் இங்கே உண்டு. சமநிலை அம்சம் (Balancing element) என்று அதை திரைக்கதை விவாதத்தில் சொல்வோம். அவ்வாறு இங்கே சேர்க்கப்படும் கேளிக்கை அம்சம் மூன்று. ஒன்று, காதல் அல்லது கிளுகிளுப்பு. அது நம் மெல்லுணர்வை சீண்டுவது. இரண்டு தீவிரமான நேரடியான சவால்விடும் காட்சியும் அதனுடன் இணைந்த வன்முறைமுறையும். அது நம் அட்ரினலை தூண்டுவது. மூன்று செயற்கையான சில திருப்பங்கள். அது நம் தர்க்கத்தை தூண்டிவிளையாடுவது. இவை ஏதும் இல்லாமல் கதையோட்டம் நிகழும் என்றால் ‘கதை ஒரே போல போய்க்கொண்டிருக்கிறது’ என நம் சாமானிய ரசிகன் நினைப்பான். இந்தப்படத்தை தமிழில் எடுத்திருந்தால், இரண்டாம் பகுதியின் இருபதாம் நிமிடத்தில் பார்வையாளன் எதிர்பாராத ஒன்று நிகழும். புதிய ஒரு கதாபாத்திரம் நுழையும். அது ஒரு முக்கியமான நடிகராகவும் இருந்தால் தமிழ் ரசிகன் இரண்டாம் பகுதி ‘பிக்கப் ஆகிவிட்டது’ என்று சொல்வான். ஆனால் கலைரீதியாக சினிமா அங்கே தோற்றுவிடும். படம் உணர்த்த முயல்வது எதுவோ அதிலிருந்து திசைதிரும்பிவிடும். ஆடுஜீவிதத்தை தமிழில் அல்லது தெலுங்கில் அல்லது எந்த இந்திய மொழிகளிலும் இப்படியே எடுக்கவே முடியாது. படம் சலிப்பூட்டுகிறது, ஒரே துக்கமாக இருக்கிறது, கதை பரபரப்பாக நகரவில்லை, இரண்டாம் பாதியில் புதியதாக ஒன்றும் நிகழவில்லை, பாலைவனத்தை மட்டுமே காட்டுகிறார்கள் என்றெல்லாம் தமிழ் ரசிகன் உடனே சொல்லிவிடுவான். ஒரு படத்தின் உண்மையான தொடர்புறுத்தல் என்பது கதைச்சம்பவங்கள் வழியாகவோ, திருப்பங்கள் வழியாகவோ நிகழ்வது அல்ல. காட்சிவழியாக, அதாவது பார்வையாளனின் கண்வழியாக நிகழ்வது. அவ்வாறு நிகழவேண்டுமென்றால் கதைச்சம்பவங்கள் பெரிதாக இருக்கலாகாது. திருப்பங்கள் நிகழக்கூடாது. அவை காட்சிகளில் இருந்து பார்வையாளனை வெளியே விலக்கிவிடும். ஆனால் கண் வழியாக சினிமாவை உணரமுடியாத தொடக்கநிலை ரசிகன் காட்சிகளை நீண்டநேரம் பார்க்கமாட்டான், ஏதாவது நிகழவேண்டும் என எதிர்பார்ப்பான். ஏமாற்றத்தால் சலிப்புறுவான் ஆனால் இந்த சமரசமே அற்ற யதார்த்தம்தான் உண்மையான மலையாள சினிமா. இரண்டாம் பகுதியில் நம்மைச் சூழ்ந்துகொள்ளும் காட்சிகள் அளிக்கும் அழுத்தமும் அவை நம் கண் வழியாக கனவுக்குள் நுழைவதும்தான் மெய்யான சினிமா அனுபவம். நாம் உண்மையில் என்ன அனுபவத்தை அடைந்தோம் என்றே அப்போது உணரமாட்டோம், ஆனால் நீண்டநாள் நினைத்திருப்போம். ஆ. மானுடமேன்மை இந்தப் படம் மானுடனின் வற்றாத அக ஆற்றலைச் சித்தரிப்பது. எத்தகைய சூழலிலும் தன்னுள் இருந்து உருவாகும் ஆற்றலால் மானுடன் வென்றெழுவதைக் காட்டுகிறது இது. நட்பினூடாக, தாக்குப்பிடிப்பதனூடாக உருவாகும் மகத்தான மானுடத்தருணங்களை சித்தரிக்கிறது. மலையாளப் பெரும்படைப்புகளில் அத்தகைய மகத்தான மானுடத் தருணங்கள் பல முன்னரும் வெளிவந்துள்ளன. அந்த தருணத்தை நம்பி, அதையே உச்சகட்டமாக அமைத்து, அமைதியான முடிவுடன் படத்தை எடுப்பது இன்று மலையாளமன்றி இன்னொரு மொழியில் இயல்வதல்ல. எம்.டி வாசுதேவன் நாயர் மற்றும் லோகிததாஸின் கிளாஸிக்குகள் போல நிறைய மலையாளப்படங்கள் ஒரே வசனத்தில் படத்தின் உச்சம் நிகழ்பவை. இந்தப்படமும் அப்படித்தான். செயற்கையான இறுதிப் பரபரப்பு, மிகையான உணர்ச்சிவெளிப்பாடு ஆகியவை இல்லாத உச்சகட்டம் கொண்டது ஆடுஜீவிதம். மானுடம் வெளிப்படும் ஒரு மௌனத்தருணம், அவ்வளவுதான். அதுதான் படம். இ. தொழில்நுட்பம் நம்மில் பலர் பெருஞ்செலவில் எடுக்கப்படும் பிற இந்தியத் திரைடங்களின் தொழில்நுட்ப நேர்த்தி குறைவான செலவுள்ள மலையாளப் படங்களில் இருக்க வாய்ப்பில்லை என்ற எண்ணம் கொண்டவர்கள். அது உன்மை அல்ல. அடூர் கோபாலகிருஷ்ணன், அரவிந்தன் போன்ற கலைப்பட இயக்குநர்களின் மிகக்குறைந்த செலவில் எடுக்கப்பட்ட படங்களில்தான் ஒளிப்பதிவின் அற்புதங்கள், படத்தொகுப்பின் புதிய பாய்ச்சல்கள் நிகழ்ந்துள்ளன. அத்துடன் மலையாள நடிகர்களின் ஊதியம் மிகக்குறைவு என்பதனால் படத்திற்குச் செலவழிப்பது மிகுதி. ஆகவே பெரிய நிபுணர்கள் பணியாற்றமுடியும். அத்துடன் அந்த தொழில்நுட்பத்தை ஆடம்பரத்தைக் காட்டுவதற்குப் பதிலாக யதார்த்தத்தை உருவாக்க பயன்படுத்துவார்கள். மலையாளப்படங்களில் பணியாற்றிய ஒளிப்பதிவு மேதைகள், படத்தொகுப்பு மேதைகள், மகத்தான இசையமைப்பாளர்கள் பலர் உண்டு. (மார்க்கஸ் பட்லே, மெல்லி இரானி, பாலு மகேந்திரா, அசோக் குமார் முதல் சந்தோஷ் சிவன் வரையிலான ஒளிப்பதிவாளர்கள், ரிஷிகேஷ் முகர்ஜி முதலான படத்தொகுப்பாளர்கள்; சலீல் சௌதுரி, பாம்பே ரவி போன்ற இசையமைப்பாளர்கள் ; தேவதாஸ், ரசூல் பூக்குற்றி போன்ற ஒலித்தொகுப்பாளர்கள், கிருஷ்ணமூர்த்தி போன்ற கலை இயக்குநர்கள்) மலையாளப்படம் இந்திய திரையுலகின் உச்சகட்ட தொழில்நுட்ப சாத்தியங்களை நிகழ்த்தியது என்பதே உண்மை. ஆடுஜீவிதமும் அப்படிப்பட்ட படம்தான். ஒலிப்பதிவு, ஒளிப்பதிவு, கலையமைப்பு என எல்லா தளத்திலும் இது ஒரு சாதனை. பிசிறற்ற தொழில்நுட்பம் துருத்திநிற்காமல் கதையுடன் இணைவதே சிறந்த சினிமாவை ஆக்குகிறது. இதுதான் மெய்யான மலையாளப்படம். மலையாளிகளுக்கென ஓர் ஆளுமை உண்டு. great explorers and survivers அவர்களைச் சொல்லலாம். அந்த உளநிலையை காட்டியமையால் ஒரு மகத்தான மலையாளப்படமாக திகழ்கிறது ஆடுஜீவிதம். https://www.jeyamohan.in/198730/ -
கச்சத்தீவு விவகாரத்தில் கருணாநிதி செய்த துரோகம் நாளை வெளியிடப்படும்- அண்ணாமலை இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே கடல் பகுதியில் உள்ள சிறிய தீவு தான் கச்சத்தீவு. சுமார் 285 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த தீவு ராமேசுவரத்தில் இருந்து 12 மைல் தூரத்திலும், இலங்கை யாழ்ப்பாணம் நெடுந்தீவில் இருந்து 10.5 மைல் தொலைவிலும் இருக்கிறது. கடந்த 1974-ம் ஆண்டு இந்திராகாந்தி பிரதமராக இருந்த போது இந்தியா-இலங்கை இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. தற்போது கச்சத்தீவு இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. நீண்ட காலமாக மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கி சித்ரவதை செய்வதும், சிறைபிடித்து செல்வதும் தொடர்கதையாக நடந்து வருகிறது. இதையடுத்து கச்சத்தீவை மீண்டும் மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசியல் கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர. ஒவ்வொரு பாாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலின் போதும் கச்சத்தீவு விவகாரத்தை தி.மு.க., அ.தி.மு.க போன்ற கட்சிகள் கையில் எடுத்து பிரசாரம் செய்து வருகிறது. நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்திலும் இந்த பிரச்சனை எதிரொலித்து இருக்கிறது. இந்த நிலையில் சச்சத்தீவு தொடர்பாக அண்ணாமலை தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேள்வி கேட்டு இருந்தார். இதற்கு பதில் கொடுக்கப்பட்டு உள்ளது. இதற்கான ஆவணங்களை பெற்ற அண்ணாமலை அதில் கூறப்பட்டுள்ள தகவலை பகிர்ந்துள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- 1969-ம் ஆண்டு இலங்கைக்கு கச்சத்தீவை கொடுக்க எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அப்போது இந்திரா காந்தி இலங்கையுடன் நல்ல நட்புணர்வுடன் இருக்க விரும்பினார். 1968-ம் ஆண்டு அப்போதைய இலங்கை பிரதமர் டட்லி சேனா நாயக்கா இந்திரா காந்தியுடன் இது பற்றி பேச்சுவார்த்தை நடத்தினார். 1973-ம் ஆண்டு கொழும்பில் நடந்த வெளியுறவு செயலர் அளவிலான பேச்சுவார்த்தை நடந்தது. 1974-ம் ஆண்டு வெளியுறவுத்துறை செயலாளர் கேவல் சிங் மூலம் அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதியிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் கச்சத்தீவுக்கு இலங்கை உரிமை கொண்டாடி வருவதை நிரூபிக்கும் வகையில் ஆதாரங்கள் எதையும் தரவில்லை என்றும் கேவல் சிங் தெரிவித்தார். அந்த சமயம் கச்சத்தீவை இலங்கை உரிமை கோரிய நிலையில் ராமநாதபுரம் ராஜாவுக்கு சொந்தமானது என்ற ஆவணங்களை தமிழக அரசு காட்டவில்லை. இறுதியாக 1974-ம் ஆண்டு கச்சச்தீவை இலங்கைக்கு இந்திரா காந்தி தாரை வார்த்து கொடுத்ததாக தகவல் அறியும் உரிமை சட்ட பதிலில் இடம்பெற்று உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கச்சத்தீவு தொடர்பாக திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இன்று பிரசாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கச்சத்தீவை பற்றி தொடர்ச்சியாக பேசிக்கொண்டிருக்கிறோம். 1968-ல் பிரதமராக இருந்த இந்திராகாந்தியும், இலங்கை பிரதமராக இருந்த செனாயும் போட்ட ரகசிய ஒப்பந்தம்தான் கச்சத்தீவு. 1948ம் ஆண்டு வரை கச்சத்தீவு ராமநாதபுரம் மன்னரின் கட்டுப்பாட்டில் இருந்தது. 1974ம் ஆண்டு கச்சத்தீவு முழுமையாக இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டு விட்டது. எதற்காக கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது என்ற ஆவணங்களை தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பெற்றுள்ளோம். இதை படித்தால் ஒவ்வொரு குடிமகனுக்கும் ரத்தம் கொதிக்கும். நேரு பிரதமராக இருந்தபோது பைல் நோட்டிங் எழுதுகிறார். இந்த குட்டி தீவுக்கு நான் எந்தவிதமான மரியாதையும் தரப்போவதில்லை. வேறு ஒரு நாட்டிற்கு தர தயாராக இருக்கின்றேன். இது 10-5-1961 ல் நேரு எழுதிய பைல் நோட்டிங். முழுமையாக கச்சத்தீவு நம்மிடம் தான் இருக்க வேண்டும் என பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் தெரிவித்தும், இலங்கையில் அரசியல் சூழ்நிலை சரியில்லை என்பதால் இந்த பிரச்சனையை தள்ளி போட்டுக்கொண்டே சென்றார்கள். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பெறப்பட்ட முதல் பகுதி இன்று வெளியாகி உள்ளது. நாளை இதன் இரண்டாம் பகுதி வெளியாகும் போது கலைஞர் கருணாநிதி கச்சத்தீவு விவகாரத்தில் செய்த துரோகம் குறித்து பேசுவோம். நாட்டின் எல்லையை சுருக்கியது காங்கிரஸ் கட்சி. 1960-ல் இருந்து ஒவ்வொரு செங்கல்லாக பிரித்து கச்சத்தீவை இலங்கைக்கு காங்கிரஸ் கட்சி தாரை வார்த்துவிட்டது. இன்று வெளியாகி உள்ள தகவல் அறியும் உரிமை சட்டத்தின் முதல் பகுதி மூலம் காங்கிரஸ் எப்படி துரோகம் செய்துள்ளது என்பது தெரிய வருகிறது. நாளை வெளியாகும் இரண்டாவது பகுதியில் கலைஞர் கருணாநிதி செய்த துரோகம் என்ன என்பது தெரியும். ஆர்ட்டிக்கிள் 6 ன் படி கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவாக்கப்பட்டாலும் இந்திய மீனவர்கள் அங்கு மீன்பிடிக்கலாம் என தெரிவிக்கிறது. ஆனால் தற்போது ஆர்ட்டிக்கிள் 6 இல்லாத காரணத்தினால் மீனவர்கள் தற்போது கச்சத்தீவுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. நாளை மக்களின் பார்வைக்காக இரண்டு பகுதியாக வெளியாகி உள்ள தகவல் அறியும் உரிமை சட்டத்தின் அனைத்து ஆவணங்களையும் தருகிறோம். கச்சத்தீவை இலங்கைக்கு எப்படி தாரை வார்த்து கொடுத்தார்கள் என யாருக்கும் தெரியாது. எனவே மக்கள் முதலில் கச்சத்தீவை எப்படி கொடுத்தார்கள் என்பதை தெரிந்து கொள்ளட்டும். இதற்கு நிரந்தர தீர்வு என்பது எல்லையை நம் நாட்டுக்குள் கொண்டு வர வேண்டும். கச்சத்தீவை தாண்டி நெடுந்தீவு வரை நாம் சென்றோம்… ராமநாத சுவாமி கோவில் சிவபெருமானுக்கு நெடுந்தீவிலிருந்து பால் கொண்டுவரப்பட்டது. கச்சத்தீவை மீட்பது எங்கள் கோரிக்கை மட்டுமல்ல. கண்டிப்பாக மீட்போம் என கங்கணம் கட்டியுள்ளோம். 3 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் பட்டித்தொட்டி எல்லாம் சுற்றி இருக்கிறேன். ஏசி ரூமில் அமர்ந்து கொண்டு அரசியல் செய்யும் அரசியல்வாதி நான் இல்லை. இவ்வாறு அவர் கூறினார். https://akkinikkunchu.com/?p=272571
-
இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவுக்கு எதிராக மக்கள் போராட்டம்- ‘உடனே பதவி விலக வேண்டும்’ பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீதான இஸ்ரேலின் போர் 6-வது மாதத்தை நெருங்கியுள்ளது. இதில் காசாவில் குழந்தைகள், பெண்கள் உள்பட 32 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இதற்கிடையே ஹமாஸ் அமைப்பினரிடம் உள்ள இஸ்ரேல் பிணைக் கைதிகளை மீட்டு கொண்டு வரக்கோரி இஸ்ரேலில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் இஸ்ரேலில் நேற்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக பெரும் போராட்டம் நடந்தது. டெல்அவில், ஜெருச லேம், சிசேரியா ரானானா, ஹெர்ஸ்லியா ஆகிய நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் சாலைகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். காசாவில் உள்ள அனைத்து பிணைக் கைதிகளை மீட்டு கொண்டு வர கோரியும், பிரதமர் நெதன்யாகு பதவி விலக கோரியும் கோஷங்களை எழுப்பினார்கள். பொதுத் தேர்தலை உடனே நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேரணியாக சென்றனர். அவர்கள் அரசு அலுவலகங்களை முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். ஜெருசலேமில், பிரதமர் நெதன்யாகு வீடு முன்பு ஏராளமானோர் திரண்டு போராட்டம் நடத்தினர். அப்போது பிணைக் கைதிகளை மீட்க தவறிவிட்டதாக குற்றம் சாட்டினர். சில இடங்களில் போராட்டக்காரர்கள், போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சாலையில் பொருட்களை போட்டு தீ வைத்து போராட்டக்காரர்கள் கொளுத்தினர். இந்த போராட்டங்கள் காரணமாக இஸ்ரேலில் நேற்று இரவு பரபரப்பு நிலவியது. டெல்அவிலில் இன்று அதிகாலை போராட்டம் முடிவுக்கு வந்ததாகவும், 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையே இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினர் இடையே இன்று மீண்டும் போர் நிறுத்தத்திற்கான பேச்சு வார்த்தை எகிப்தில் தொடங்குகிறது. https://akkinikkunchu.com/?p=272568