Everything posted by கிருபன்
-
முல்லைத்தீவில் யாழ். பல்கலைக்கழகப் பீடம்
முல்லைத்தீவில் யாழ். பல்கலைக்கழகப் பீடம் முல்லைத்தீவு மாவட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு ஒதுக்கப்பட்ட காணியில் அபிவிருத்திப் பணிகளைப் படிப்படியாக ஆரம்பிப்பதற்கும், காணி ஆக்கிரமிப்பைத் தடுக்கும் வகையில் எல்லைகளை இட்டு வேலி அமைப்பதற்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகம் இணக்கம் தெரிவித்துள்ளது. முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட விடயத்துக்கு அமைவாக, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனின் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்று (09) மாலை நடைபெற்ற விசேட கலந்துரையாடலிலேயே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டது. கடந்த 27.01.2026 அன்று நடைபெற்ற முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு ஒதுக்கப்பட்ட காணியில் நீண்டகாலமாக எவ்வித அபிவிருத்திப் பணிகளும் முன்னெடுக்கப்படவில்லை எனவும், இதனால் அக்காணியைத் தனிநபர்கள் ஆக்கிரமிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன. இது தொடர்பில் ஆராய்ந்து உடனடித் தீர்வு காண்பதற்காக ஆளுநர் தலைமையில் இக்கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. (a) https://www.tamilmirror.lk/செய்திகள்/முல்லைத்தீவில்-யாழ்-பல்கலைக்கழகப்-பீடம்/175-372256
-
அமெரிக்க ராணுவத்தின் அதிரடி – மீண்டும் ஒரு ரஷ்ய எண்ணெய் கப்பல் பிடிப்பு!
அமெரிக்க ராணுவத்தின் அதிரடி – மீண்டும் ஒரு ரஷ்ய எண்ணெய் கப்பல் பிடிப்பு! adminFebruary 10, 2026 சர்வதேச கடற்பரப்பில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது. சமீபத்திய தகவல்களின்படி, தடைகளை மீறிச் சென்ற ரஷ்யாவின் ‘நிழல் கப்பல் படை’ (Shadow Fleet) சார்ந்த ‘அக்விலா II’ (Aquila II) என்ற எண்ணெய் கப்பலை அமெரிக்கப் படைகள் இந்தியப் பெருங்கடலில் இடைமறித்துக் கைப்பற்றியுள்ளன. கரீபியன் கடலில் இருந்து இந்தியப் பெருங்கடல் வரை நீண்ட தூரம் இந்த கப்பலைப் பின்தொடர்ந்துச் சென்ற அமெரிக்க ராணுவம், வெற்றிகரமாக அதன் கட்டுப்பாட்டைத் தன்வசம் கொண்டு வந்துள்ளது. 💡 இச்சம்பவம் குறித்து அமெரிக்கத் தரப்பு வெளியிட்ட அறிக்கையில், “அது தப்பியோடியது, நாங்கள் பின்தொடர்ந்தோம்… எங்களை விட வேகமாக உங்களால் ஓட முடியாது, அதற்குள் உங்கள் எரிபொருள் தீர்ந்துவிடும்” என அதிரடியாகக் குறிப்பிட்டுள்ளது. ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம், வெனிசுலா மற்றும் ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளைத் தீவிரப்படுத்தும் நோக்கில் முன்னெடுத்துள்ள ‘மரைடைம் குவாரன்டைன்’ (Maritime Quarantine) நடவடிக்கையின் ஒரு பகுதியாக இது பார்க்கப்படுகிறது. இக்கப்பல் சட்டவிரோதமாக எண்ணெய் கடத்தலில் ஈடுபட்டதாகவும், சர்வதேசப் பாதுகாப்பு விதிகளுக்கு முரணாகச் செயல்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் ‘மரைனேரா’ (Marinera) என்ற மற்றொரு ரஷ்யக் கொடி ஏந்திய கப்பல் அட்லாண்டிக் பகுதியில் அமெரிக்காவால் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. 🌍 இந்த நடவடிக்கை சர்வதேச எரிபொருள் சந்தையில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என்பதோடு, உலக நாடுகளுக்கிடையிலான அரசியல் உறவுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://globaltamilnews.net/2026/228778/
-
பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு
இது கள்ளமாடு பிடிக்கிற கூட்டம் போலிருக்கு
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நாளை செவ்வாய் 10 பெப் பிரித்தானிய நேரப்படி மூன்று போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 10) முதல் சுற்று குழு A:செவ்வாய் 10 பெப்: 5:30 AM, டெல்லி, நமீபியா எதிர் நெதர்லாந்து NAM எதிர் NED 06 பேர் நமீபியா அணி வெல்வதாகவும் மற்றைய 17 பேர் நெதர்லாந்து அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர். நமீபியா செம்பாட்டான் ஈழப்பிரியன் வாதவூரான் கிருபன் கோஷான் சே நந்தன் நெதர்லாந்து ஏராளன் வசீ புலவர் சுவைப்பிரியன் அல்வாயன் நியூ பலன்ஸ் வாத்தியார் கறுப்பி வீரப் பையன்26 சுவி அஹஸ்தியன் கந்தப்பு நியாயம் எப்போதும் தமிழன் ரசோதரன் பிரபா நிலாமதி இப்போட்டியில் போட்டியில் யாருக்கு புள்ளிகள் கிடைக்கும்? 11) முதல் சுற்று குழு D:செவ்வாய் 10 பெப்: 9:30 AM, சென்னை, நியூஸிலாந்து எதிர் ஐக்கிய அமீரகம் NZ எதிர் UAE அனைவரும் நியூஸிலாந்து அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர். இந்தப் போட்டியில் எல்லோருக்கும் புள்ளிகள் கிடைக்குமா அல்லது முட்டைகள் பரிமாறப்படுமா? 12) முதல் சுற்று குழு A:செவ்வாய் 10 பெப்: 1:30 PM, கொழும்பு (SSC), பாகிஸ்தான் எதிர் ஐக்கிய அமெரிக்கா PAK எதிர் USA 22 பேர் பாகிஸ்தான் அணி வெல்லும் எனவும் ஒருவர் மாத்திரம் ஐக்கிய அமெரிக்கா அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். ஐக்கிய அமெரிக்கா நிலாமதி இந்தப் போட்டியில் @நிலாமதி அக்காவுக்கு அதிர்ஷ்டம் கிடைக்குமா?
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து அணி, ஜோர்ஜ் முன்சீயின் அதிரடியான 84 (54 பந்துகளில்) ஓட்டங்களோடும், பிரெண்டன் மக்முல்லன் ஆட்டமிழக்காமல் வேகமாக எடுத்த 41 (18 பந்துகளில்) ஓட்டங்களுடனும் 4 விக்கெட்டுகளை இழந்து 207 ஓட்டங்களை அள்ளிக் குவித்தது. பதிலுக்குத் துடுப்பாடிய இத்தாலி அணியில் பென் மனென்டியின் 52 (31 பந்துகளில்) ஓட்டங்களைத் தவிர பிறர் சோபிக்காததால் 16.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 134 ஓட்டங்களை மாத்திரம் எடுத்தது. முடிவு: ஸ்கொட்லாந்து அணி 73 ஓட்டங்களால் வெற்றியீட்டியது ஸ்கொட்லாந்து அணி வெல்லும் எனக் கணித்த 18 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். இத்தாலி அணி வெல்லும் எனக் கணித்த ஐவருக்குப் புள்ளிகள் இல்லை. இன்றைய இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஓமான் அணி, மெதுவாக ஆடியதாலும் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்ததாலும் 19.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 103 ஓட்டங்களுடன் சுருண்டுகொண்டது. பதிலுக்குத் துடுப்பாடிய ஸிம்பாப்வே அணி பிரயன் பென்னிட்டின் ஆட்டமிழக்காமல் எடுத்த 48 (36 பந்துகளில்) ஓட்டங்களுடன் 13.3 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 106 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. முடிவு: ஸிம்பாப்வே அணி 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது ஸிம்பாப்வே அணி வெல்லும் எனக் கணித்த 21 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். ஓமான் அணி வெல்லும் எனக் கணித்த இருவருக்குப் புள்ளிகள் இல்லை. இன்றைய மூன்றாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி எய்டன் மார்க்ரமின் அதிரடியான 59 (32 பந்துகளில்) ஓட்டங்களுடனும், டேவிட் மில்லர் ஆட்டமிழக்காது வேகமாக எடுத்த 39 (23 பந்துகளில்) ஓட்டங்களுடனும், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆட்டமிழக்காமல் மின்னல் வேகத்தில் எடுத்த 34 (19) ஓட்டங்களுடனும் 4 விக்கெட்டுகளை இழந்து 213 ஓட்டங்களை அள்ளிக் குவித்தது. பதிலுக்குத் துடுப்பாடிய கனடா அணியில் நவ்னீத் தலிவால் மாத்திரமே 64 (49) ஓட்டங்களை எடுத்து ஆட்டத்தில் சோபித்தார். மற்றையோர் விரைவாக விக்கெட்டுகளை இழந்ததால் இறுதியில் 8 விக்கெட்டுகளை இழந்து 156 ஓட்டங்களை மாத்திரமே எடுக்கமுடிந்தது. முடிவு: தென்னாபிரிக்கா அணி 20 ஓட்டங்களால் வெற்றியீட்டியது அனைவரும் தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனக் கணித்தமையால் தலா இரு புள்ளிகள் கிடைக்கும். இன்றைய மூன்று போட்டிகளின் முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்: நீங்கள் மட்டும்தான் தெரிவு செய்யவில்லை. இப்போது தெரிவு செய்தாலும் சேர்த்துக்கொள்ளப்படும் 😁
- IMG_5138.jpeg
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நாளை திங்கள் 09 பெப் பிரித்தானிய நேரப்படி மூன்று போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 7) முதல் சுற்று குழு C:திங்கள் 09 பெப்: 5:30 AM, ஏடென் கார்டன்ஸ், ஸ்கொட்லாந்து எதிர் இத்தாலி SCOT எதிர் ITA 18 பேர் ஸ்கொட்லாந்து அணி வெல்வதாகவும் மற்றைய ஐந்து பேர் இத்தாலி அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர். இத்தாலி சுவைப்பிரியன் வாதவூரான் கிருபன் கோஷான் சே ரசோதரன் இப்போட்டியில் போட்டியில் யாருக்கு புள்ளிகள் கிடைக்கும்? 8) முதல் சுற்று குழு B:திங்கள் 09 பெப்: 9:30 AM, கொழும்பு (SSC), ஓமான் எதிர் ஸிம்பாப்வே OMA எதிர் ZIM இருவர் மாத்திரம் ஓமான் அணி வெல்லும் எனவும் மற்றைய 21 பேரும் ஸிம்பாப்வே அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். ஓமான் சுவி கோஷான் சே இந்தப் போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்? 9) முதல் சுற்று குழு D:திங்கள் 09 பெப்: 1:30 PM, அஹமதாபாத், கனடா எதிர் தென்னாபிரிக்கா CAN எதிர் SA அனைவரும் தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர். இந்தப் போட்டியில் எல்லோருக்கும் புள்ளிகள் கிடைக்குமா அல்லது முட்டைகள் பரிமாறப்படுமா?
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இன்றைய மூன்றாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சிறிலங்கா அணி 15 ஆவது ஓவரில் 100 ஓட்டங்களை எடுத்திருந்தாலும் இறுதி ஐந்து ஓவர்களில் அயர்லாந்து இறுக்கமாக பந்து வீசாததாலும் தடுப்பில் தவறுகள் விட்டதாலும், குசல் மெண்டிஸின் ஆட்டமிழக்காது எடுத்த 56 (43 பந்துகளில்) ஓட்டங்களுடனும் கமிண்டு மெண்டிஸின் புயல்வேக 44 (19 பந்துகளில்) ஓட்டங்களுடனும் 6 விக்கெட்டுகளை இழந்து 163 ஓட்டங்களை எடுத்திருந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய அயர்லாந்து அணி சிறந்த துவக்கத்துடன் ஆரம்பித்தாலும் தொடர்ச்சியாக விக்கெட்டுகள் சரிந்ததால் 19.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 143 ஓட்டங்களை மாத்திரமே எடுக்கமுடிந்தது. முடிவு: சிறிலங்கா அணி 20 ஓட்டங்களால் வெற்றியீட்டியது சிறிலங்கா அணி வெல்லும் எனக் கணித்த 21 பேருக்குத் தலா இரு புள்ளிகள் கிடைக்கும். அயர்லாந்து அணி வெல்லும் எனக் கணித்த இருவருக்கு புள்ளிகள் கிடையாது. இன்றைய மூன்று போட்டிகளின் முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்:
- IMG_5124.jpeg
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி, குல்படின் நைப்பின் அதிரடியான 63 (35) ஓட்டங்களோடு 6 விக்கெட்டுகளை இழந்து 182 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்குத் துடுப்பாடிய நியூஸிலாந்து அணி டிம் செய்ஃபேர்ட்டின் வேகமான 65 (42) ஓட்டங்களோடு 17.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 183 ஓட்டங்களை எடுத்து வெற்றியிலக்கையடைந்தது. முடிவு: நியூஸிலாந்து அணி 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது நியூஸிலாந்து அணி வெல்லும் எனக் கணித்த 21 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். ஆப்கானிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்த இருவருக்கு புள்ளிகள் இல்லை. இன்றைய இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, ஜேக்கப் பெத்தெல் 55 (35), ஹரி புரூக் 53 (32) ஆகியோரின் அதிரடி ஆட்டங்களுடனும், வில் ஜக்ஸ் ஆட்டமிழக்காமல் எடுத்த புயல்வேக 39 (18) ஓட்டங்களோடும் 7விக்கெட்டுகளை இழந்து 184 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்குத் துடுப்பாடிய நேபளம் அணி திபேந்திர சிங் ஐரீ 44 (29), ரோஹித் பெளடேல் 39 (34) ஆகியோரின் வேகமான ஓட்டங்களுடனும், லோகேஷ் பாம் ஆட்டமிழக்காமல் எடுத்த 39 (20) ஓட்டங்களுடனும் வெற்றி இலக்கை அண்மித்தாலும், இறுதி ஓவரில் சாம் கரனின் இறுக்கமான பந்து வீச்சால் வெற்றி இலக்கிற்கு 10 ஓட்டங்கள் எடுக்கவேண்டிய நிலையில் 5 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து, இறுதியில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. முடிவு: இங்கிலாந்து அணி 4 ஓட்டங்களால் வெற்றியீட்டியது இங்கிலாந்து அணி வெல்லும் எனக் கணித்த 22 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். நேபாளம் அணி வெல்லும் எனக் கணித்த @ரசோதரன் க்கு புள்ளிகள் இல்லை.
-
பஞ்சமா தந்திரங்கள்? - நிலாந்தன்
பஞ்சமா தந்திரங்கள்? - நிலாந்தன் கட்சிக்குள் சிறீதரனை மதிப்பிறக்கம் செய்வதில் சுமந்திரன் தொடர்ந்து முன்னேறி வருகிறார். முக்கால் நூற்றாண்டு கால வயதைக் கொண்ட கட்சிக்குள் முதன்முதலாக தலைவருக்காக நடந்த ஒரு தேர்தலில் தெரிவு செய்யப்பட்டவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தலைமைப் பொறுப்பை ஏற்க விடாமல் தடுக்கப்பட்டு வருகிறார். இரண்டு ஆண்டுகளாக தொடர்ச்சியான தந்திரமான புத்திசாலித்தனமான நகர்வுகளின் ஊடாக ஓரங்கட்டப்பட்டு வருகிறார். சிறீதரனை கட்சிக்குள் சுற்றிவளைக்கும் வேலையை கடந்த இரண்டு ஆண்டுகளாக சுமந்திரன் அணி செய்து வருகிறது. சிறீதரன் எவ்வாறு கட்சிக்குள் ஓரங்கட்டப்படுகிறார்? 75 ஆண்டு கால வயதை கொண்ட கட்சிக்குள் முதன்முதலாக நடந்த தலைவர் தேர்தலில் தெரிவு செய்யப்பட்டவர் செயற்பட முடியாதபடி வழக்குப் போடப்பட்டது. அடுத்ததாக கட்சிக்குள் தீர்மானம் எடுக்கும் பொறுப்புகளில் அவருக்கு எதிரானவர்கள் அல்லது அவருடைய எதிர் அணியின் பக்கம் சாயக்கூடியவர்கள் படிப்படியாக நகர்த்தப்பட்டார்கள். இதன்மூலம் கட்சித் தீர்மானங்கள் சிறீதரனை ஓரங்கட்டும் விதத்தில் அமைவது உறுதி செய்யப்பட்டது. அவ்வாறு பொறுப்பான பதவிகளை சிறீதரனின் எதிரணி கையில் எடுத்ததன்மூலம் கட்சியின் அடிமட்டக் கட்டமைப்பை படிப்படியாக சிறீதரனுக்கு எதிரானதாக வடிவமைக்கும் வேலைகள் தொடங்கின. அடுத்ததாக சிறீதரனின் சொத்துக்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள். அவர் மதுச் சாலை அனுமதி பெற்றுக் கொடுத்ததாகக் குற்றச்சாட்டுக்கள். இது தொடர்பான முறைப்பாடுகளைச் செய்வதற்கு தென்னிலங்கையைச் சேர்ந்த ஒருவர் பயன்படுத்தப்படடார். அதேசமயம் கட்சித் தேர்தலிலும் நாடாளுமன்ற தேர்தலிலும் தோற்ற காரணத்தால் மீடியா வெளிச்சத்தில் இருந்து ஒதுக்கப்பட்டிருந்த சுமந்திரன், கட்சிக்குள் பொறுப்பான பதவியைப் பெற்றதன்மூலம் மீண்டும் ஊடகங்களுக்கு முன் அடிக்கடி தோன்றும் வாய்ப்புகள் அதிகரித்தன. யார் தூதரகங்களை நெருங்கிச் செல்வது, குறிப்பாக யார் இந்தியாவின் இதயத்தில் இடம் பிடிப்பது என்பதிலும் போட்டி. அரசியலமைப்புப் பேரவையில் சிறீதரன் அரசாங்கத்திற்கு ஆதரவாக 8 தடவைகள் வாக்களித்துள்ளார் என்ற குற்றச்சாட்டை கட்சிக்கு உள்ளேயும் கட்சிக்கு வெளியே பகிரங்கமாகவும் திரும்பத்திரும்ப கூறுவதன் மூலம் கட்சிக்குள் மட்டுமல்ல சமூகத்துக்குள்ளும் அவரை மதிப்பிறக்கம் செய்ய முயற்சிக்கப்பட்டது. அதைவிட முக்கியமாக அவருடைய தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கேள்விக்கு உள்ளாக்க முயற்சிக்கப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டின் இறுதி விளைவாகத்தான் இப்பொழுது கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் பதவியில் கை வைக்கப்பட்டிருக்கிறது. சிறீதரன் கட்சிக்குள் மட்டும் சுற்றிவழிக்கப்படவில்லை. நாடாளுமன்றத்திலும் சிங்கள நாடாளுமன்ற உறுப்பினராகிய தயாசிறீ கட்சியின் உள் மோதல்களைப் பிரதிபலித்தார். தமிழ் மக்கள் மத்தியில் உள்ள நீண்ட பாரம்பரியத்தை கொண்ட மூத்த கட்சி ஒன்றுக்குள் ஏற்பட்ட உள் முரண்பாட்டை ஒரு சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர் ஊடாகப் பேச வைத்தமை என்பது தமிழ்த் தேசிய வரலாற்றில் இதுதான் முதல் தடவை. இவை தவிர சிறீதரனின் அணிக்குள் இருப்பவர்கள் கழட்டி எடுக்கப்படுகிறார்கள். அவர்கள் ஊடகச் சந்திப்புகளை நடத்தி சிறீதரனை அவமானப்படுத்துகிறார்கள். ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்யும் உள்நாட்டு அலுவலர் என்னிடம் கேட்டார், “ஹை புரொபைலில்” இருப்பவர்கள்கூட சிறீதரனுக்கு எதிரான குற்றச்சாட்டுகளைப் பிரதிபலிப்பதாகத் தெரிகிறது. ஏன் இப்படி” என்று. சிறீதரனுக்கு எதிரான பிரசார அணிக்குள் பிரபலமானவர்கள் லோயர்கள், ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகள், சமூகத்தில் நல்ல பொறுப்புகளை வகிப்பவர்கள், சமூகத்தில் மதிப்புக் கெட்டவர்கள், தாயகத்தில் இருப்பவர்கள், புலம்பெயர்ந்து வாழ்பவர்கள்…. என்று ஒரு பெரிய அணி இறக்கப்பட்டுள்ளது. மெய்யான முகநூல் கணக்குகள், பொய்யான முகநூல் கணக்குகள் என்று சமூக வலைத்தளங்களில் இரண்டு அணிகளும் பணம் செலுத்தி பிரச்சாரம் செய்து வருகின்றன என்ற பொதுவான அவதானிப்பு உண்டு. கடந்த இரண்டு ஆண்டுகளாக இவ்வாறு சிறீதரனுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர்ச்சியான நடவடிக்கைகளைத் தொகுத்துப் பார்த்தால் ஒரு விடயம் தெளிவாகத் தெரிகிறது. சிறீதரனுக்கு எதிராக மிக நுட்பமான, மிகப் புத்திசாலித்தனமான, மிகத் தந்திரமான, சதி சூழ்ச்சிகள் நிறைந்த ஒரு வியூகம் வகுக்கப்பட்டிருக்கிறது. தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் ஓர் உட்கட்சி முரண்பாட்டைக் கையாள்வதற்கு இவ்வளவு தந்திரமும் இவ்வளவு புத்திசாலித்தனமும் இதற்கு முன் பிரயோகிக்கப்பட்டதில்லை. இதேயளவு தந்திரத்தை, புத்திசாலித்தனத்தை சிங்கள பௌத்த அரசு கட்டமைப்புக்கு எதிராகவும் ஏன் பயன்படுத்த முடியவில்லை? இதேயளவு தந்திரத்தை, ராஜதந்திரத்தை, புத்திசாலித்தனமான கணிதபூர்வமான நகர்வுகளை ஏன் வெளிநாடுகள், ,பேரரசுகளுடனான அணுகுமுறைகளில் கைக்கொள்ள முடியவில்லை? தமிழ்ச் சமூகத்தில் சாதாரணமாக குடும்பத்துக்குள்ளேயே கணவன், மனைவிக்கும்-தாய்க்கும் இடையே சுழித்தோட முயற்சிப்பான். சிலசமயம் சகோதரர்களே ஒருவர் மற்றவரைச் சுழித்துக் கொண்டு ஓடுவதுண்டு. சமூகத்தின் மிகச்சிறிய அலகாகிய குடும்பத்துக்குள் இவ்வாறு மைக்ரோ தந்திரத்தை முன்னெடுக்கும் ஒரு சமூகமானது, தனது வெளியுறவுகளில் குறிப்பாக வெளிநாடுகளை அணுகும் விடயத்தில் ஏன் அவ்வாறு ராஜதந்திரமாக நடந்து கொள்வதில்லை? தமிழ் மக்கள் அதிகமாகப் பார்க்கும் திரைத் தொடர்களில் பெரும்பாலானவை பெண் மைய திரை நாடகங்களே. இதில் வரும் நாயகிகள் செய்யும் தந்திரம் சில சமயம் அரசியல்வாதிகள் செய்யும் தந்திரத்தை விடவும் கணிதபூர்வமானதாக இருக்கும். நமது வீடுகளில் அதிகம் பார்க்கப்படுவது இந்த தந்திர நாடகங்கள்தான். ஏற்கனவே நமது சிறுவர் கதைப் புத்தகங்களில் பஞ்ச தந்திரம் என்ற கதைத் தொகுதி உண்டு. பஞ்சதந்திரத்தில் தொடங்கி தொலைத் தொடர் தந்திரங்கள் வரையிலும் தந்திரங்களை வாசிக்கின்ற, பார்க்கின்ற ஒரு சமூகம், வீட்டுக்குள் குடும்பத் தந்திரத்தை வெற்றிகரமாகப் பயிலும் ஒரு சமூகம்,சமூகத்தின் சிறிய நிறுவனங்களாகிய சனசமூக நிலையங்கள், ஆலய அறங்காவல் சபைகள், திருச்சபைகள், பழைய மாணவர் சங்கங்கள், பாடசாலைகள் அலுவலகங்களில் “ஸ்டாஃப் ரூம்கள்” போன்ற பெரும்பாலான நிறுவனங்களுக்குள் வெற்றிகரமாக அணிகளை உருவாக்கி தந்திரம் செய்யும் ஒரு சமூகம், ஏன் அரசியல் அரங்கில் மட்டும் வெளிநாடுகளோடும் வல்லரசுகளோடும் தந்திரமாக புத்திசாலித்தனமாக நடக்க முடியவில்லை? தமிழ் மக்கள் மத்தியில் தோன்றிய சிந்தனையாளரும் ஆன்மீகவாதியும் படைப்பாளியும் ஆகிய மு.தளையசிங்கம் கூறுவார் “சத்திய தந்திரம்” என்று. மகாபாரதத்தில் கிருஷ்ணரின் தந்திரங்கள் இல்லையென்றால் பாண்டவர்கள் வென்றிருக்கவே முடியாது. மகா பாரதத்தை அத்தகைய அர்த்தத்த்தில் சொன்னால் அது கிருஷ்ண தந்திரந்தான். எனவே சத்தியத்துக்காகப் போராடுகிறவர்கள் தந்திரம் பயில வேண்டும் என்ற பொருளில் தளையசிங்கம் அதை சத்திய தந்திரம் என்று அழைத்தார். ஆனால், தமிழ்ச் சமூகத்தின் பஞ்ச மகாதந்திரங்கள் சொந்தச் சமூகத்துக்குள்ளேயே, சொந்தக் குடும்பத்துக்குள்ளையே, ஒரே பாடசாலைக்குள்ளேயே, ஒரே ஸ்டாஃப் ரூமுளுக்குள்ளேயே, ஒரே அறக்கட்டளைகளுக்குள்ளேயே, ஒரே திருச்சபைகளுக்குள்ளேயே, ஒரே கட்சிக்குள்ளேயே மட்டும் தானா? வெளி உலகத்தோடு இல்லையா? https://www.nillanthan.com/8113/
-
தையிட்டி; கிவுல் ஓயா; கரிநாள் - நிலாந்தன்
தையிட்டி; கிவுல் ஓயா; கரிநாள் - நிலாந்தன் கடந்த வாரம் மூன்று ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. முதலாவது ஆர்ப்பாட்டம் தையிட்டியில். அது வழமையாக நடப்பது. இரண்டாவது ஆர்ப்பாட்டம், கிவுல் ஓயா அபிவிருத்தி திட்டத்திற்கு எதிரான நெடுங்கேணிப் போராட்டம். மூன்றாவது ஆர்ப்பாட்டம், 78ஆவது சுதந்திர தினம் என்று கூறப்படுவதை கரிநாளாகப் பிரகடனப்படுத்தி யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்த பேரணி. மிகக்குறுகிய கால இடைவெளிக்குள் நடந்த இந்த மூன்று ஆர்ப்பாட்டங்களையும் தொகுத்துப் பார்ப்போம்.தையிட்டியில் கடந்த பௌர்ணமி நாளன்று மிகக்குறைந்த எண்ணிக்கையானவர்களே காணப்பட்டார்கள். அதிலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்தவர்களே அதிகம். ஆனால் கடந்த ஆண்டின் இறுதியில் நடந்த ஆர்ப்பாட்டங்களில் அதிகளவு எண்ணிக்கையானவர்கள் அங்கே வந்திருந்தார்கள். அந்த ஆர்ப்பாட்டங்களை தமிழரசுக் கட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கும் பிரதேச சபை முன் நின்று ஒழுங்கமைத்தது. அது ஒப்பீட்டளவில் அனைத்துக் கட்சி பரிமாணத்தைக் கொண்ட ஒரு போராட்டம். அரசியல்வாதிகளும் செயல்பாட்டாளர்களும் அங்கே காணப்பட்டார்கள். அடுத்த போராட்டம், கிவுல் ஓயா அபிவிருத்தி திட்டத்திற்கு எதிரானது. இந்த போராட்டத்தை பெருளவுக்கு ஒருங்கிணைத்தது தமிழரசு கட்சிக்குள் காணப்படும் சுமந்திரன் அணியைச் சேர்ந்தவர்கள். சுமந்திரன் அதனை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு தன் கட்சிக்காரர்களும் உட்பட பெருமளவிலான ஆட்களை அங்கே கொண்டு வருவதற்காக உழைத்தார். ஆயிரத்தை தாண்டாத ஜனத்தொகை அங்கே வந்திருந்தது. தமிழரசுக் கட்சியோடு இப்பொழுது உறவாடி வரும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் அங்கு காணப்பட்டார்கள். ஆனால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை மையமாகக் கொண்ட தமிழ்த் தேசியப் பேரவையைச் சேர்ந்தவர்களை அங்கே காண முடியவில்லை. நெடுங்கேணிப் போராட்டம் நடந்து கொண்டிருந்த அதே காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் ரில்கோ விருந்தினர் விடுதியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் கடல் தொழிலாளர் சங்கங்களுக்கும் இடையே ஒரு சந்திப்பு இடம்பெற்றது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பிரமுகர்கள் அந்தச் சந்திப்பில் காணப்பட்டார்கள். நீரைக் கொடுத்து நிலத்தைப் பறிக்கும் நீர் முகாமைத்துவத் திட்டமாகிய கிவுல் ஓயாத் திட்டதுக்கு எதிராகத் தமிழ் மக்கள் போராட வேண்டும். எனவே அந்தப் போராட்டத்திற்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. அதேசமயம் அதற்குள் உட்க்கட்சிப் போட்டிகள் சார்ந்த உள்நோக்கங்களும் உண்டு. சுமந்திரனைப் பொறுத்தவரை இதுபோன்ற போராட்டங்களை ஒழுங்குபடுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். அவருடைய எதிரணி அவரை தமிழ்த் தேசிய நீக்கம் செய்பவர் என்று குற்றம்சாட்சி வருகிறது. எனவே தான் நிலப் பறிப்புக்கும் சிங்கள பௌத்த மயமாக்கலுக்கும் எதிரான மக்கள் போராட்டங்களை ஒருங்கிணைப்பார் என்பதனை அவர் நிரூபிக்க வேண்டியிருக்கிறது. மேலும்,கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் கட்சிக்குள் தன்னுடைய தவிர்க்க முடியாமையை நிரூபிப்பதற்காக எல்லாவிதமான முயற்சிகளையும் முன்னெடுத்து வருகிறார். அந்த அடிப்படையில் ஒரு பதில் செயலாளராக கட்சியின் கீழ்மட்டக் கட்டமைப்பை அவர் பெருமளவுக்கு தன்னால் கையாளப்படத் தக்கதாக வடிவமைத்தும் வருகிறார். அதன் விளைவாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அவர் முன்னைய தேர்தலை விட அதிக முன்னேற்றங்களைக் காட்ட முடிந்தது. ஆனால் தமிழரசுக் கட்சியின் வாக்குத்தளம் எனப்படுவது தனிய அதன் கீழ்மட்ட கட்டமைப்புப் பலம் மட்டுமல்ல. அதைவிட ஆழமான பொருளில் அது தமிழ் இன உணர்வுகளின் மீது கட்டியெழுப்பப்பட்ட ஒரு வாக்குத் தளம். அந்த வாக்குத்தளத்தைக் கைப்பற்றுவது என்று சொன்னால் தன்னை புத்திசாலியான ஒரு தலைவராகக் காட்டிக் கொண்டால் மட்டும் போதாது. அதைவிட முக்கியமாக தமிழ் இன உணர்வுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு தலைவர் என்றும் நிரூபிக்க வேண்டும். எனவே இவ்வாறான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு உண்டு. அடுத்த உள்நோக்கம்,தமிழ்த் தேசியப் பேரவையைத் தனிமைப்படுத்துவது. அண்மை மாதங்களாக “எக்கிய ராஜ்ய” என்ற தீர்வு முன் வரைபை முன்வைத்து தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி அவர் மீது குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வருகிறது. இதனால் தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் அணிக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையிலான உறவுகள் முன்னரை விட அதிகம் பகை நிலைக்குச் சென்று விட்டன. அதோடு,சிறீதரனை முன்னணி நெருங்கி வருவதும் சுமந்திரனை ஆத்திரப்படுத்துகிறது.கட்சிக்குள் காணப்படும் உள் முரண்பாடுகளை முன்னணி கையாள முயற்சிக்கிறது என்று அவர் நம்புகிறார். இப்படிப்பட்டதோர் பின்னணிக்குள்தான், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு ஏதோ ஓர் இணக்கத்துக்கு வர அவர் முயற்சிக்கிறார். அதன் மூலம் பேரவையைத் தனிமைப்படுத்தலாம் என்றும் சிந்திக்கிறார். அதற்கு இது போன்ற போராட்டங்கள் தேவை. அடுத்த உள்நோக்கம்,மாகாண சபைத் தேர்தல் என்று ஒன்று நடந்தால், அதில் தமிழ் மக்களின் பாரம்பரிய வாக்களிப்புக் கோலத்தின் அடிப்படையில் சிந்தித்தால், தமிழரசுக் கட்சிக்குத்தான் வெற்றி வாய்ப்புகள் அதிகம். அந்த வாய்ப்புகளை மேலும் உறுதிப்படுத்திக் கொள்வதற்கு ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு உறவை வைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. அதே சமயம் அந்த உறவு தேர்தலில் தமிழ்த் தேசியப் பேரவையை தனிமைப்படுத்த உதவும். மேற்சொன்ன உள்நோக்கங்களும் கிவுல் ஓயா போராட்டத்தில் பின்னணியில் இருந்தன. என்றாலும் நிலப் பறிப்புக்கும் சிங்கள பௌத்த மயமாக்கலுக்கும் எதிராக தமிழ்த் தேசிய உணர்வுகளை கொதி நிலையில் வைத்திருப்பது என்று பார்த்தால் அந்தப் போராட்டத்திற்கு காலகட்ட முக்கியத்துவம் உண்டு. மேலும் அந்தப் போராட்டத்தை ஒழுங்கமைத்தது சுமந்திரன் அணி என்ற போதிலும் அதில் சிறீதரன் அணியும் கலந்து கொண்டது. ஒரு பொது விடயத்தில் உட்கட்சி முரண்பாடுகளை ஒதுக்கிவிட்டு சிறீதரன் அவ்வாறு கலந்து கொண்டமை வரவேற்கத்தக்கது. ஆனால் அந்தப் போராட்டத்தின் பின்னணியில், அடுத்தடுத்த நாள், சிறீதரனுக்கு எதிரான மற்றொரு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அவருடைய நாடாளுமன்றக் குழுத் தலைமைப் பதவி பறிக்கப்பட்டு விட்டது. கிவுல் ஓயா போராட்டத்திற்கு அடுத்தடுத்த நாள்,அதாவது 04ஆம் திகதி பல்கலைக்கழக மாணவர்கள் கரிநாள் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார்கள். அதுதொடர்பாக அவர்கள் கட்சி முக்கியஸ்தர்களை சந்தித்தும் வந்தார்கள். ஆனால் இந்தச் சந்திப்புகளில் சுமந்திரன்,சிவஞானம் போன்றவர்கள் உள்ளடக்கப்படவில்லை என்று தெரிகிறது. அதனால் கிளிநொச்சி ஆர்ப்பாட்டத்தில் சுமந்திரன்,சிவஞானம் போன்றவர்களைக் காண முடியவில்லை. எனினும் ஏனைய தமிழரசுக் கட்சி முக்கியஸ்தர்கள் பலர் அங்கே காணப்பட்டார்கள். கிளிநொச்சியில் உள்ள சுமந்திரன் அணியைச் சேர்ந்தவர்களும் காணப்பட்டார்கள். ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த சிலரும் காணப்பட்டார்கள். மட்டக்களப்பில் கரி நாள் அவர்களைவிட காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகப் போராடும் சங்கங்களைச் சேர்ந்தவர்களும், ஏற்கனவே இதுபோன்ற ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ளும் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களும் அங்கு அதிகமாகக் காணப்பட்டார்கள். கிழக்கிலும் அதுபோன்ற ஓர் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதாவது கரிநாள் போராட்டம் ஒப்பீட்டளவில் தாயகம் தழுவியதாகக் காணப்பட்டது. இப்படிப் பார்த்தால் கடந்த கிழமை மிகக்குறுகிய நாள் இடைவெளிக்குள் நடந்த மூன்று ஆர்ப்பாட்டங்களிலும் பெரியது கிளிநொச்சி ஆர்ப்பாட்டந்தான். அது ஒப்பீட்டளவில் பெரியது, எழுச்சிகரமானது;வடக்கு கிழக்காக தாயகம் கழுவியதாக காணப்பட்டது. அனைத்துக் கட்சி பரிமாணத்தை அதிகமாகக் கொண்டது. யாழ் பல்கலைக்கழகத்தின் புதிய மாணவர் தலைவர்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களும் காணாமல் ஆக்கப்பட்டவருக்காகப் போராடும் அமைப்புக்களும் இந்தப் போராட்டத்தை ஒருங்கிணைத்திருந்தார்கள். மாணவர்கள் முன்னணிக்கு வரும்பொழுது கட்சி பேதங்களைக் கடந்து பெருந் திரளைக் கொண்டுவர முடியும் என்பதற்கு அது ஆகப்பிந்திய ஓர் உதாரணம் ஆகும்.கட்சிகளால் பிரிக்கப்பட்டிருக்கும் மக்களும் தொண்டர்களும் கட்சி கடந்து ஒருங்கிணைக்கப்படும்போது இனமாகத் திரள்வார்கள் என்ற நம்பிக்கையைப் பலப்படுத்திய ஆர்ப்பாட்டம் அது. https://www.nillanthan.com/8121/
-
உங்கள் மொழியில் பேசலாம் எனக்கூறும் அரசாங்கமே அவ்வுரிமையை மறுக்கிறது ; வெலிஓயா சம்பவம் தொடர்பில் தமிழரசுக்கட்சி கடும் விசனம்
உங்கள் மொழியில் பேசலாம் எனக்கூறும் அரசாங்கமே அவ்வுரிமையை மறுக்கிறது ; வெலிஓயா சம்பவம் தொடர்பில் தமிழரசுக்கட்சி கடும் விசனம் 08 Feb, 2026 | 11:58 AM இந்நாட்டில் மொழி உரிமை அதிமுக்கியமானது. ஒவ்வொருவருக்கும் தத்தமது மொழியில் பேசும் உரிமை உண்டு என ஜனாதிபதி அடிக்கடி கூறுகின்றார். ஆனால் நடைமுறை யதார்த்தம் அவ்வாறானதாக இல்லை என்பதற்கு மணலாறு (வெலிஓயா) ஒரு உதாரணமாகும். அரசாங்கம் சொல்வது ஒன்றும், செய்வது வேறொன்றுமாக இருக்கின்றது. மொழி உரிமை மிகமுக்கியம் எனக் கூறிக்கொண்டு, மறுபுறம் அவ்வுரிமை மறுக்கப்படுகின்றது என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் கடும் விசனம் வெளியிட்டுள்ளார். வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவின் ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் கடந்த 3 ஆம் திகதி நடைபெற்ற நிலையில், அக்கூட்டம் வழமைக்கு மாறாக தனிச்சிங்கள மொழியில் மாத்திரமே நடைபெற்றமை குறித்து நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைக்கையிலேயே சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் கூறியதாவது, மணலாறு பகுதிக்குரிய ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் கடந்த 3 ஆம் திகதி நடைபெற்றது. மணலாறு தற்போது வெலிஓயா எனப் பெயர் மாற்றப்பட்டிருப்பது குறித்து அனைவருக்கும் தெரியும். இந்தக் கூட்டத்தில் வவுனியா வடக்கு மற்றும் கரைத்துரைப்பற்று பிரதேச சபை என்பவற்றின் தவிசாளர்கள் கலந்துகொள்வது வழமையாகும். ஒவ்வொரு முறையும் இக்கூட்டத்துக்கு வவுனியா வடக்கு தவிசாளர் கிருஷ்ணவேனி சமுகமளிப்பார். இக்கூட்டத்தில் பங்கேற்பவர்களில் அநேகமானோர் தமிழர்களாவர். அதன்படி இந்தக் கூட்டம் இதுவரை காலமும் மொழிபெயர்ப்புடனேயே நடைபெற்றுவந்தது. ஆனால் இம்முறை இக்கூட்டம் நடைபெறவதற்கு முதல்நாள் கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிராக சகலரும் இணைந்து ஒரு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தோம். இத்தகைய பின்னணியில் மறுநாள் இந்தக் கூட்டம் நடைபெற்றபோது வவுனியா வடக்கு பிரதேசசபையின் தவிசாளருக்கு வழமையாக ஆசனம் ஒதுக்கும் இடத்தில் ஆசனம் ஒதுக்கப்படவில்லை. மாறாக ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருடன் அமரமுடியாது எனவும், ஆகவே கீழே அமருமாறும் கூறப்பட்டது. இருப்பினும் இருக்கையை வழமைக்கு மாறாக மாற்றமுடியாது எனக் குறிப்பிட்ட தவிசாளர் மேடையிலேயே அமர்ந்தார். அதன் பின்னர் இக்கூட்டம் முழுமையாக தனிச்சிங்கள மொழியில் மாத்திரமே நடைபெற்றது. மொழிபெயர்ப்பு கோரிய போதிலும், அது வழங்கப்படவில்லை. ஆகையினால் தவிசாளர் கூட்டத்திலிருந்து வெளியேறினார். தேசிய சுதந்திரதினக்கொண்டாட்ட நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, பாராளுமன்றத்தில் சபை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட தாம் அனைவரும் இனவாத செயற்பாடுகளில் ஈடுபடுவது கிடையாது எனவும், மாறாக நாம் நடத்திய போராட்டமே இனவாதப் போராட்டம் எனவும் கூறியிருந்தார். அவ்வாறிருக்கையில் வவுனியா வடக்கு தவிசாளரையும், அங்கிருந்த மக்களையும் புறக்கணித்து, மொழிபெயர்ப்பு இல்லாமல், கூட்டத்தைத் தனிச்சிங்களமொழியில் நடத்தியமையை எவ்வாறு வர்ணிப்பது என்பதே இப்போது எமக்கு இருக்கும் கேள்வியாகும். இதனை இனவாதம் என்பதா? இல்லாவிடின் வேறு எவ்வாறு கூறுவது? எனக் கேள்வி எழுப்பினார். https://www.virakesari.lk/article/238141
-
பாடசாலைகளில் முறையற்ற வசூலிப்புக்களை தடுப்பதற்கு சுற்றறிக்கையை வெளியிடுங்கள் - இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை
பாடசாலைகளில் முறையற்ற வசூலிப்புக்களை தடுப்பதற்கு சுற்றறிக்கையை வெளியிடுங்கள் - இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை 08 Feb, 2026 | 01:08 PM (நமது நிருபர்) பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும் முறையற்ற பண வசூலிப்பு நடவடிக்கைகளை உடனடியாகத் தடுப்பதற்கு அரசாங்கம் முறையான சுற்றறிக்கையை வெளியிட வேண்டுமெனஇலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். கொழும்பிலுள்ள இலங்கை ஆசிரியர் சங்கக் காரியாலயத்தில் நேற்று சனிக்கிழமை (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துவெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்தும் கருத்துவெளியிடுகையில், பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் மற்றும் கல்வி அமைச்சரான கலாநிதி ஹரினி அமரசூரிய பாடசாலைகளில் இனிமேல் பண வசூலிப்பு இடம் பெறாது எனத் தெரிவித்துள்ளார். ஆனால் தற்போதைய நிலையில் முழுப் பாடசாலைக் கட்டமைப்பும் பெற்றோரின் பணத்திலேயே இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதே கசப்பான உண்மையாகும். 2015ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின்படி பாடசாலையின் முழுச் செலவையும் மாணவர்களின் எண்ணிக்கையினால் பிரித்து பெற்றோரிடம் அறவிடும் முறைமையே தற்போதும் தொடர்கிறது. குறிப்பாக, பிரபல்யமான பாடசாலைகளில் வர்ணம் பூசுதல் தளபாடங்கள் திருத்தம் செய்தல் போன்ற காரணங்களைக் கூறி ஒவ்வொரு மாணவரிடமிருந்தும் 3000 முதல் 5000 ரூபா வரை பணம் அறவிடப்படுகிறது. இவ்வாறான வசூலிப்புகள் பாடசாலை வங்கிக் கணக்குகளில் இடப்படாமல் வகுப்புக் குழுக்கள் என்ற பெயரில் தனிப்பட்ட பெற்றோரின் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றன. இதன் மூலம் பாடசாலை நிர்வாகம் இதற்கும் தமக்கும் தொடர்பில்லை எனக் காட்டிக்கொள்ள முற்படுகிறது. கல்வி அமைச்சரின் வெற்று வார்த்தைகளால் மட்டும் இதனைத் தடுத்துவிட முடியாது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைப் போன்று ' எனது வாய்ச் சொல்லே சுற்றறிக்கை' என்று கூறாமல் கல்வி அமைச்சு உத்தியோகபூர்வமாக ஒரு சுற்றறிக்கையை வெளியிட வேண்டும் . அந்தச் சுற்றறிக்கையை மீறுபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நிபந்தனையும் அதில் உள்ளடக்கப்பட வேண்டும். அத்துடன் பல முன்னணிப் பாடசாலைகளின் கணக்குகளில் பல கோடி ரூபா பணம் நிலையான வைப்பிலிடப்பட்டுள்ளது. இந்தப் பணம் எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்து முறையான கணக்காய்வு நடத்தப்பட வேண்டும். இலவசக் கல்வி என்பது உண்மையாகவே நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமாயின் பெற்றோர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள இந்த நிதிப் பாரம் உடனடியாக நீக்கப்பட வேண்டும். முறையான திட்டமிடல் இன்றி அவசர அவசரமாக முன்னெடுக்கப்படும் இச் செயற்பாடுகள் மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் எனவும் சகல தரப்பினருடனும் கலந்துரையாடியே இத்தகைய மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/238150
-
கிழக்கின் முக்கிய சுற்றுலாத்தலத்தில் கட்டாக்காலி நாய்களின் தொல்லை: சுற்றுலாப் பயணிகளும் உடற்பயிற்சியாளர்களும் கடும் அவதி
கிழக்கின் முக்கிய சுற்றுலாத்தலத்தில் கட்டாக்காலி நாய்களின் தொல்லை: சுற்றுலாப் பயணிகளும் உடற்பயிற்சியாளர்களும் கடும் அவதி 08 Feb, 2026 | 03:41 PM கிழக்கு மாகாணத்தின் பிரபல்யமான சுற்றுலாத்தலங்களில் ஒன்றான காத்தான்குடி கடற்கரையில், நூற்றுக்கணக்கான கட்டாக்காலி நாய்களின் தொல்லையினால் அங்கு வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும், காலை மற்றும் மாலை வேளைகளில் உடற்பயிற்சிக்காக வரும் பொதுமக்களும் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்திற்குச் சுற்றுலா வரும் அதிகளவிலான உள்நாட்டுப் பயணிகள் காத்தான்குடி கடற்கரைக்கு வருகை தருகின்றனர். இங்கு அவர்களின் வசதிக்காக 50-க்கும் மேற்பட்ட வரவேற்பு மண்டபங்களும், தங்குமிட விடுதிகளும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இவ்வாறான நிலையில், காத்தான்குடி கடற்கரைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உடற்பயிற்சியாளர்களுக்குக் குறித்த கட்டாக்காலி நாய்களினால் பெரும் அச்சுறுத்தலான நிலை ஏற்பட்டுள்ளது. சில சந்தர்ப்பங்களில் இவை மனிதர்களைக் கடித்துக் காயப்படுத்தியுள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். எனவே, பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, குறித்த நாய்களைக் கட்டுப்படுத்துவதற்கான உரிய நடவடிக்கைகளை நகர சபை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எடுக்க வேண்டும் எனச் சுற்றுலாப் பயணிகளும் உடற்பயிற்சியாளர்களும் கோரிக்கை விடுக்கின்றனர். https://www.virakesari.lk/article/238159
-
ஸ்ரீடெலோ கட்சியின் தலைவர் பி.உதயராசா கைது
ஸ்ரீடெலோ கட்சியின் தலைவர் பி.உதயராசா கைது 08 February 2026 ஸ்ரீடெலோ கட்சியின் தலைவர் பி.உதயராசா கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அதன்படி, 07 நாட்கள் தடுப்புக் காவலில் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு எமது செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளது. போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில், நீர்கொழும்பு, கொச்சிக்கடை பகுதியில் பி.உதயராசா கைது செய்யப்பட்டுள்ளார். பேலியகொடை பகுதியில் கடந்த மாதம் 29 ஆம் திகதி 04 கிலோ 423 மில்லிகிராம் கொக்கேய்ன் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது. இந்த போதைப்பொருள் கடத்தல் சம்பவத்துடன் ஸ்ரீடெலோ கட்சியின் தலைவர் பி.உதயராசா தொடர்புப்பட்டுள்ளார் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேல்மாகாணத்தின் வடக்கு குற்றத் தடுப்புப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், கொழும்பில் இடம்பெற்றதாக கூறப்படும் பல முக்கிய குற்றச் செயல்களுடன் பி.உதயராசா தொடர்புபட்டுள்ளார் என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. https://hirunews.lk/tm/445276/sridelo-party-leader-p-udayarasa-arrested
-
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி யாழில் போராட்டம்
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி யாழில் போராட்டம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக ரத்துச் செய்யுமாறும், அதற்குப் பதிலாக கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டத்தை நிறுத்துமாறு கோரியும் யாழ்ப்பாண நகரில் இன்று (06) கவனயீர்ப்புப் போராட்டமொன்று நடைபெற்றது. அத்துடன் லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணைக்கு, அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு காரணங்களைக் கூறி நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறுவதற்குப் போராட்டக்காரர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அரசாங்கம் இந்த விடயத்தில் நீதியை நிலைநாட்ட உடனடியாக முன்வர வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். யாழ் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் பலத்த கோஷங்களை எழுப்பினர். இதில் யாழ்ப்பாணத்தை மையப்படுத்திய சமூக உரிமைகளுக்கான இயக்கம் மற்றும் தென்னிலங்கையைச் சேர்ந்த சிங்களச் சகோதரர்களும் ஒன்றிணைந்து பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmlaxmt2f0000356ng17zf1vu
-
டித்வா உதவிக்காக 22 மில்லியன் டொலர் நாட்டுக்கு - ஐ.நா
டித்வா உதவிக்காக 22 மில்லியன் டொலர் நாட்டுக்கு - ஐ.நா இலங்கைக்கான மனிதாபிமான முன்னுரிமைத் திட்டத்திற்கு இதுவரை 22.4 மில்லியன் அமெரிக்க டொலர் உதவி கிடைத்துள்ளதாக கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகம் தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, கடந்த டிசம்பர் மாதம் முதல் 2026 ஏப்ரல் வரையான காலப்பகுதிக்குள் டித்வா' புயல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக 35.3 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை எதிர்பார்க்கும் மனிதாபிமான முன்னுரிமைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அதற்கமைய, ஐக்கிய நாடுகள் சபைக்கு அவுஸ்திரேலியா, கனடா, ஜேர்மனி, ஜப்பான், நியூசிலாந்து, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் மற்றும் நாடுகளிடமிருந்து நிதியுதவி கிடைத்துள்ளது. கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் அண்மைய தரவுகளின்படி, 25 மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் இதுவரை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட 216,000 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை மனிதாபிமான முன்னுரிமைத் திட்டத்தின் கீழ் கல்வி, உணவு, போசணை, பாதுகாப்பு, சுகாதாரம், தங்குமிடம் மற்றும் விவசாயம் ஆகிய துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. கடந்த இரண்டு தசாப்தங்களில் இலங்கையில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளம் மற்றும் மண்சரிவு சேதங்கள் 'டித்வா' புயலினால் ஏற்பட்டதோடு, இது நாட்டின் 25 மாவட்டங்களிலும் உள்ள சுமார் 2.2 மில்லியன் மக்களைப் பாதித்தது. அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் தகவல்படி, 2025 டிசம்பர் 29 ஆம் திகதியாகும் போது புயல் காரணமாக 646 பேர் உயிரிழந்துள்ளதுடன், 173 பேர் காணாமல் போயுள்ளனர். புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குத் தேவையான நிவாரணப் பணிகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுவதுடன், அதற்கு ஐக்கிய நாடுகள் சபை, மனிதாபிமான பங்காளிகள், சர்வதேச மற்றும் தேசிய சிவில் சமூக அமைப்புகள் மற்றும் தனியார் துறையினதும், இருதரப்பு மற்றும் பலதரப்பு உதவிகளின் ஆதரவும் கிடைக்கிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளை இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்கு தேவையான திட்டங்களைத் தயாரித்தல் மற்றும் நடைமுறைப்படுத்தல் ஆகியவற்றை அனர்த்த முகாமைத்துவ நிலையம், அமைச்சுக்கள், மாவட்ட மற்றும் பிரதேச அதிகாரிகளால் மேற்கொள்ளப்படுகின்றன. https://adaderanatamil.lk/news/cmldqjgy6000d356ng4c71y94
-
மத்திய கிழக்கு விவகாரம்: வாஷிங்டனில் ட்ரம்ப் – நெதன்யாகு முக்கிய சந்திப்பு! ஈரானுக்கான மிரட்டலா?
மத்திய கிழக்கு விவகாரம்: வாஷிங்டனில் ட்ரம்ப் – நெதன்யாகு முக்கிய சந்திப்பு! ஈரானுக்கான மிரட்டலா? adminFebruary 8, 2026 அடுத்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை வாஷிங்டனில் சந்தித்துப் பேசவுள்ளார். மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்கள் மற்றும் ஈரான் உடனான அணுசக்தி பேச்சுவார்த்தைகள் குறித்து இந்த சந்திப்பில் விரிவாக ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏவுகணைத் திட்டங்கள் மற்றும் பிராந்தியத்தில் அதன் செல்வாக்கைக் கட்டுப்படுத்துவது குறித்து நெதன்யாகு அழுத்தம் கொடுக்க வாய்ப்புள்ளது. காசாவில் அமைதியை நிலைநாட்ட அதிபர் ட்ரம்ப் முன்வைத்துள்ள இரண்டாம் கட்டத் திட்டங்கள் (Phase 2) குறித்து இரு தலைவர்களும் விவாதிக்க உள்ளனர். இஸ்ரேலின் பாதுகாப்புத் தேவைகள் மற்றும் அமெரிக்காவின் இராணுவ ஆதரவு குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம். கடந்த சில மாதங்களாகவே ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவி வரும் மோதல் போக்குக்கு மத்தியில், இந்த சந்திப்பு சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ________________________________________ வரும் புதன்கிழமை நடைபெறவுள்ள இந்த சந்திப்பு, ஈரான் மீதான ‘அதிகபட்ச அழுத்தம்’ (Maximum Pressure) கொள்கையை மீண்டும் உறுதிப்படுத்தும் ஒரு முயற்சியாகவே பார்க்கப்படுகிறது. குறிப்பாக, ஓமனில் நடைபெற்று வரும் மறைமுக பேச்சுவார்த்தைகளில் இஸ்ரேலின் கவலைகளையும் உள்ளடக்க வேண்டும் என்பதில் நெதன்யாகு உறுதியாக உள்ளார். https://globaltamilnews.net/2026/228657/
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
@ரசோதரன் க்கு யோகம் அடிக்கப்போகின்றதா?😱
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நான் கார் ஓடத் தொடங்கின காலத்தில் இருந்து ட்ரைவர் சீட்டுக்குப் பக்கத்தில் ஒரு ஸ்க்ரூ ட்ரைவர் வைச்சிருக்கிறன்😬
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நாளை ஞாயிறு 08 பெப் பிரித்தானிய நேரப்படி மூன்று போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 4) முதல் சுற்று குழு D:ஞாயிறு 08 பெப்: 5:30 AM, சென்னை, ஆப்கானிஸ்தான் எதிர் நியூஸிலாந்து AFG எதிர் NZ இருவர் மாத்திரம் ஆப்கானிஸ்தான் அணி வெல்வதாகவும் மற்றைய 21 பேர் நியூஸிலாந்து அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் வாதவூரான் ரசோதரன் இப்போட்டியில் போட்டியில் யாருக்கு முட்டை கிடைக்கும்? 5) முதல் சுற்று குழு C:ஞாயிறு 08 பெப்: 9:30 AM, வாங்கெடே, இங்கிலாந்து எதிர் நேபாளம் ENG எதிர் NEP 22 பேர் இங்கிலாந்து அணி வெல்லும் எனவும் ஒரே ஒருவர் மாத்திரம் நேபாளம் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். நேபாளம் ரசோதரன் இந்தப் போட்டியில் @ரசோதரன் புள்ளிகள் எடுக்கும் யோகம் இருக்கின்றதா? 6) முதல் சுற்று குழு B:ஞாயிறு 08 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), சிறிலங்கா எதிர் அயர்லாந்து SL எதிர் IRE 21 பேர் சிறிலங்கா அணி வெல்லும் எனவும் இருவர் மாத்திரம் அயர்லாந்து அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். அயர்லாந்து நிலாமதி நந்தன் இந்தப் போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இன்றைய மூன்று போட்டிகளின் முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்:
- IMG_5120.jpeg
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இன்றைய மூன்றாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி சிறந்த தொடக்கத்துடன் ஆரம்பித்தாலும் நட்சத்திர வீரர்கள் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்ததனால் ஒரு கட்டத்தில் 6 விக்கெட் இழப்பிற்கு 77 ஓட்டங்களோடு இருந்தது. எனினும் சூர்யகுமார் யாதவின் ஆட்டமிழக்காமல் அதிரடியாக எடுத்த 84 ஓட்டங்களுடன் இறுதியில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 161 ஓட்டங்கள் எடுத்திருந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ஐக்கிய அமெரிக்கா அணி தொடர்ச்சியாக விக்கெட்டுகள் சரிந்ததாலும் வேகமாகப் பின்தொடர முடியாததாலும் இறுதியில் 8 விக்கெட்டுகளை இழந்து 132 ஓட்டங்களை மாத்திரமே எடுக்கமுடிந்தது. முடிவு: இந்திய அணி 29 ஓட்டங்களால் வெற்றியீட்டியது அனைவரும் இந்திய அணி வெல்லும் எனக் கணித்தமையால் தலா இரு புள்ளிகள் கிடைக்கும்.