Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. 🚩 சர்ச்சையில் அமைச்சர்: கொட்டும் மழையில் குடை பிடித்தபடி தேசியக் கொடி ஏற்றம்! adminDecember 27, 2025 யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு தின நிகழ்வின் போது நடந்த இந்தச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது. ஆழிப்பேரலையின் 21-வது ஆண்டு நினைவேந்தல் மற்றும் தேசிய பாதுகாப்பு தின நிகழ்வுகள் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. நிகழ்வின் ஆரம்பத்தில் கொட்டும் மழையில் நனையாமல் இருப்பதற்காக, கடற்தொழில் அமைச்சர் ஒரு கையால் குடை பிடித்தபடி தேசியக் கொடியை ஏற்றியுள்ளார். அதன் போது கூட மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் மற்றும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதிப்பணிப்பாளர் ரி. என். சூரியராஜா ஆகியோரும் உடனிருந்தனர். தேசியக் கொடியை ஏற்றும் போது அதற்குரிய கௌரவத்தை அளிக்க வேண்டும் என்றும், மழையில் நனைந்தாவது கொடியை ஏற்றியிருக்க வேண்டும் அல்லது குடையை மற்றவர்கள் பிடித்திருக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் விமர்சித்து வருகின்றனர். தேசியக் கொடி ஏற்றப்படும் போது கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குமுறைகள் மீறப்பட்டதாகப் பலரும் சுட்டிக்காட்டி வருகின்றனர். https://globaltamilnews.net/2025/225069/
  2. 2026 ஐ அபிவிருத்தியின் புதிய அத்தியாயமாக மாற்றியமைப்போம் adminDecember 27, 2025 அண்மைய இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, புதிய அபிவிருத்தி அத்தியாயத்தை நோக்கி வடக்கு மாகாணத்தை நகர்த்துவதாக ஆளுநர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். இக்கூட்டத்தில், அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்த பாதிப்புகள் குறித்தும், அதற்காக முன்னெடுக்கப்பட்டு வரும் நிவாரண மற்றும் தீர்வு நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது. அத்தோடு, மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதிகளின் பயன்பாடு மற்றும் திட்டங்களின் முன்னேற்றங்கள் குறித்தும் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநரால் மூன்று முக்கிய முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டன. 1. தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையை மத்திய சுகாதார அமைச்சின் கீழ் கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக, அங்குள்ள புற்றுநோய் சிகிச்சைப் பிரிவை மட்டும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையுடன் இணைப்பது குறித்து முக்கிய கவனம் செலுத்தப்பட்டது. 2. கல்வித்துறையை மேம்படுத்தும் நோக்கில், வட்டுக்கோட்டை வலயக் கல்வி அலுவலகத்தை புதிதாக உருவாக்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. 3. மத்திய சுகாதார அமைச்சின் நிதியுதவியுடன், பெண் நாய்களுக்கான கருத்தடை சிகிச்சை (Sterilization) மேற்கொள்ளும் விசேட பொறிமுறைக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் சி.சிறீதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அர்ச்சுனா இராமநாதன் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் அரச உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். https://globaltamilnews.net/2025/225074/
  3. கூகிள் ஷீற்றில் formula எல்லாம் கவனமாகப் பாவித்து சுப்பர் 8 , அரையிறுதி, இறுதிப் போட்டிகளுக்கு தெரிவுகளின்படி சரியாக அணிகள் வருமாறு செய்திருந்தேன்! சிலவற்றுக்கு copilot உதவி தேவைப்பட்டது! எனவே, போட்டியாளர்கள் ஷீற்றில் அணிகளைத் தெரிவு செய்யவேண்டியதும், மஞ்சள் நிறப் பெட்டிக்குள் விருப்பமான அணிகளை சுருக்கிய வடிவில் தருவதும்தான் வேலை. ஆனாலும் @ஏராளன் , @vasee X, Y என்று பதிந்துள்ளனர்! இந்த X, Y களை நான் பார்த்துப் போடவேண்டும்! எனது வேலையை இலகுவாக்க கூகிள் ஷீற்றில் மஞ்சள் பெட்டிக்குள் விருப்பமான அணிகளை சுருக்கிய வடிவத்தில் (உதாரணம் AFG ஆப்கானிஸ்தான் எனில்) தந்தால் நல்லது.🙏🏽
  4. யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026 கேள்விக்கொத்து அதிகபட்ச புள்ளிகள் 208 போட்டி முடிவு திகதி வெள்ளி 06 பெப் 2026 பிரித்தானிய நேரம் இரவு 10 மணி. கூகிள் ஷீற்: https://docs.google.com/spreadsheets/d/1H2HazXerKgB9Ts372VbC-dq8hvn6F9BWuRdki4K_pQc/edit?usp=sharing முதல் சுற்றுப் போட்டி கேள்விகள் 1) முதல் 40) வரை. 1) முதல் சுற்று குழு A:சனி 07 பெப்: 5:30 AM, கொழும்பு (SSC), நெதர்லாந்து எதிர் பாகிஸ்தான் NED எதிர் PAK 2) முதல் சுற்று குழு C:சனி 07 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், பங்களாதேஷ் எதிர் மேற்கிந்தியத் தீவுகள் BAN எதிர் WI 3) முதல் சுற்று குழு A:சனி 07 பெப்: 1:30 PM, வாங்கெடே, இந்தியா எதிர் ஐக்கிய அமெரிக்கா IND எதிர் USA 4) முதல் சுற்று குழு D:ஞாயிறு 08 பெப்: 5:30 AM, சென்னை, ஆப்கானிஸ்தான் எதிர் நியூஸிலாந்து AFG எதிர் NZ 5) முதல் சுற்று குழு C:ஞாயிறு 08 பெப்: 9:30 AM, வாங்கெடே, இங்கிலாந்து எதிர் நேபாளம் ENG எதிர் NEP 6) முதல் சுற்று குழு B:ஞாயிறு 08 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), சிறிலங்கா எதிர் அயர்லாந்து SL எதிர் IRE 7) முதல் சுற்று குழு C:திங்கள் 09 பெப்: 5:30 AM, ஏடென் கார்டன்ஸ், பங்களாதேஷ் எதிர் இத்தாலி BAN எதிர் ITA 8) முதல் சுற்று குழு B:திங்கள் 09 பெப்: 9:30 AM, கொழும்பு (SSC), ஓமான் எதிர் ஸிம்பாப்வே OMA எதிர் ZIM 9) முதல் சுற்று குழு D:திங்கள் 09 பெப்: 1:30 PM, அஹமதாபாத், கனடா எதிர் தென்னாபிரிக்கா CAN எதிர் SA 10) முதல் சுற்று குழு A:செவ்வாய் 10 பெப்: 5:30 AM, டெல்லி, நமீபியா எதிர் நெதர்லாந்து NAM எதிர் NED 11) முதல் சுற்று குழு D:செவ்வாய் 10 பெப்: 9:30 AM, சென்னை, நியூஸிலாந்து எதிர் ஐக்கிய அமீரகம் NZ எதிர் UAE 12) முதல் சுற்று குழு A:செவ்வாய் 10 பெப்: 1:30 PM, கொழும்பு (SSC), பாகிஸ்தான் எதிர் ஐக்கிய அமெரிக்கா PAK எதிர் USA 13) முதல் சுற்று குழு D:புதன் 11 பெப்: 5:30 AM, அஹமதாபாத், ஆப்கானிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா AFG எதிர் SA 14) முதல் சுற்று குழு B:புதன் 11 பெப்: 9:30 AM, கொழும்பு (RPS), அவுஸ்திரேலியா எதிர் அயர்லாந்து AUS எதிர் IRE 15) முதல் சுற்று குழு C:புதன் 11 பெப்: 1:30 PM, வாங்கெடே, இங்கிலாந்து எதிர் மேற்கிந்தியத் தீவுகள் ENG எதிர் WI 16) முதல் சுற்று குழு B:வியாழன் 12 பெப்: 5:30 AM, பல்லேகல, சிறிலங்கா எதிர் ஓமான் SL எதிர் OMA 17) முதல் சுற்று குழு C:வியாழன் 12 பெப்: 9:30 AM, வாங்கெடே, இத்தாலி எதிர் நேபாளம் ITA எதிர் NEP 18) முதல் சுற்று குழு A:வியாழன் 12 பெப்: 1:30 PM, டெல்லி, இந்தியா எதிர் நமீபியா IND எதிர் NAM 19) முதல் சுற்று குழு B:வெள்ளி 13 பெப்: 5:30 AM, கொழும்பு (RPS), அவுஸ்திரேலியா எதிர் ஸிம்பாப்வே AUS எதிர் ZIM 20) முதல் சுற்று குழு D:வெள்ளி 13 பெப்: 9:30 AM, டெல்லி, கனடா எதிர் ஐக்கிய அமீரகம் CAN எதிர் UAE 21) முதல் சுற்று குழு A:வெள்ளி 13 பெப்: 1:30 PM, சென்னை, நெதர்லாந்து எதிர் ஐக்கிய அமெரிக்கா NED எதிர் USA 22) முதல் சுற்று குழு B:சனி 14 பெப்: 5:30 AM, கொழும்பு (SSC), அயர்லாந்து எதிர் ஓமான் IRE எதிர் OMA 23) முதல் சுற்று குழு C:சனி 14 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், பங்களாதேஷ் எதிர் இங்கிலாந்து BAN எதிர் ENG 24) முதல் சுற்று குழு D:சனி 14 பெப்: 1:30 PM, அஹமதாபாத், நியூஸிலாந்து எதிர் தென்னாபிரிக்கா NZ எதிர் SA 25) முதல் சுற்று குழு C:ஞாயிறு 15 பெப்: 5:30 AM, வாங்கெடே, நேபாளம் vd மேற்கிந்தியத் தீவுகள் NEP எதிர் WI 26) முதல் சுற்று குழு A:ஞாயிறு 15 பெப்: 9:30 AM, சென்னை, நமீபியா எதிர் ஐக்கிய அமெரிக்கா NAM எதிர் USA 27) முதல் சுற்று குழு A:ஞாயிறு 15 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), இந்தியா எதிர் பாகிஸ்தான் IND எதிர் PAK 28) முதல் சுற்று குழு D:திங்கள் 16 பெப்: 5:30 AM, டெல்லி, ஆப்கானிஸ்தான் எதிர் ஐக்கிய அமீரகம் AFG எதிர் UAE 29) முதல் சுற்று குழு C:திங்கள் 16 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், இங்கிலாந்து எதிர் இத்தாலி ENG எதிர் ITA 30) முதல் சுற்று குழு B:திங்கள் 16 பெப்: 1:30 PM, பல்லேகல, அவுஸ்திரேலியா எதிர் சிறிலங்கா AUS எதிர் SL 31) முதல் சுற்று குழு D:செவ்வாய் 17 பெப்: 5:30 AM, சென்னை, கனடா எதிர் நியூஸிலாந்து CAN எதிர் NZ 32) முதல் சுற்று குழு B:செவ்வாய் 17 பெப்: 9:30 AM, பல்லேகல, அயர்லாந்து எதிர் ஸிம்பாப்வே IRE எதிர் ZIM 33) முதல் சுற்று குழு C:செவ்வாய் 17 பெப்: 1:30 PM, வாங்கெடே, பங்களாதேஷ் எதிர் நேபாளம் BAN எதிர் NEP 34) முதல் சுற்று குழு D:புதன் 18 பெப்: 5:30 AM, டெல்லி, தென்னாபிரிக்கா எதிர் ஐக்கிய அமீரகம் SA எதிர் UAE 35) முதல் சுற்று குழு A:புதன் 18 பெப்: 9:30 AM, கொழும்பு (SSC), நமீபியா எதிர் பாகிஸ்தான் NAM எதிர் PAK 36) முதல் சுற்று குழு A:புதன் 18 பெப்: 1:30 PM, அஹமதாபாத், இந்தியா எதிர் நெதர்லாந்து IND எதிர் NED 37) முதல் சுற்று குழு C:வியாழன் 19 பெப்: 5:30 AM, ஏடென் கார்டன்ஸ், இத்தாலி எதிர் மேற்கிந்தியத் தீவுகள் ITA எதிர் WI 38) முதல் சுற்று குழு B:வியாழன் 19 பெப்: 9:30 AM, கொழும்பு (RPS), சிறிலங்கா எதிர் ஸிம்பாப்வே SL எதிர் ZIM 39) முதல் சுற்று குழு D:வியாழன் 19 பெப்: 1:30 PM, சென்னை, ஆப்கானிஸ்தான் எதிர் கனடா AFG எதிர் CAN 40) முதல் சுற்று குழு B:வெள்ளி 20 பெப்: 1:30 PM, பல்லேகல, அவுஸ்திரேலியா எதிர் ஓமான் AUS எதிர் OMA முதல் சுற்று குழு A: 41) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) IND ?? PAK ?? USA ?? NED ?? NAM ?? 42) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 41) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) குழு A: முதலிடம் - ? (2 புள்ளிகள்) குழு A: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) 43) முதல் சுற்று குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! அணி? முதல் சுற்று குழு B: 44) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) AUS ?? SL ?? IRE ?? ZIM ?? OMA ?? 45) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) குழு B: முதலிடம் - ? (2 புள்ளிகள்) குழு B: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) 46) முதல் சுற்று குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! அணி? முதல் சுற்று குழு C : 47) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) ENG ?? WI ?? BAN ?? NEP ?? ITA ?? 48) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 47) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) குழு C: முதலிடம் - ? (2 புள்ளிகள்) குழு C: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) 49) முதல் சுற்று குழு C போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! அணி? முதல் சுற்று குழு D : 50) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) NZ ?? SA ?? AFG ?? CAN ?? UAE ?? 51) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 50) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) குழு D: முதலிடம் - ? (2 புள்ளிகள்) குழு D: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) 52) முதல் சுற்று குழு D போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! அணி? சுப்பர் 8 சுற்றுப் போட்டி கேள்விகள் 53) முதல் 64) வரை. X1 IND USA NED NAM X2 AUS IRE ZIM OMA X3 WI BAN NEP ITA X4 SA AFG CAN UAE Y1 ENG BAN NEP ITA Y2 NZ AFG CAN UAE Y3 PAK USA NED NAM Y4 SL IRE ZIM OMA 53) சுப்பர் 8: குழு 2:சனி 21 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS) Y2 எதிர் Y3 54) சுப்பர் 8: குழு 2:ஞாயிறு 22 பெப்: 9:30 AM, பல்லேகல, Y1 எதிர் Y4 55) சுப்பர் 8: குழு 1:ஞாயிறு 22 பெப்: 1:30 PM, அஹமதாபாத் X1 எதிர் X4 56) சுப்பர் 8: குழு 1:திங்கள் 23 பெப்: 1:30 PM, வாங்கெடே, X2 எதிர் X3 57) சுப்பர் 8: குழு 2:செவ்வாய் 24 பெப்: 1:30 PM, பல்லேகல Y1 எதிர் Y3 58) சுப்பர் 8: குழு 2:புதன் 25 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS) Y2 எதிர் Y4 59) சுப்பர் 8: குழு 1:வியாழன் 26 பெப்: 9:30 AM, அஹமதாபாத் X3 எதிர் X4 60) சுப்பர் 8: குழு 1:வியாழன் 26 பெப்: 1:30 PM, சென்னை, X1 எதிர் X2 61) சுப்பர் 8: குழு 2:வெள்ளி 27 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS) Y1 எதிர் Y2 62) சுப்பர் 8: குழு 2:சனி 28 பெப்: 1:30 PM, பல்லேகல, Y3 எதிர் Y4 63) சுப்பர் 8: குழு 1:ஞாயிறு 01 மார்ச்: 9:30 AM டெல்லி, X2 எதிர் X4 64) சுப்பர் 8: குழு 1:ஞாயிறு 01 மார்ச்: 1:30 PM, ஏடென் கார்டன்ஸ் X1 எதிர் X3 சுப்பர் 8 குழு 1: 65) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) X1 ?? X2 ?? X3 ?? X4 ?? 66) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 65) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) சுப்பர் 8: குழு 1: முதலிடம் - ? (3 புள்ளிகள்) சுப்பர் 8: குழு 1: இரண்டாமிடம் - ? (2 புள்ளிகள்) 67) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! அணி? சுப்பர் 8 குழு 2: 68) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) Y1 ?? Y2 ?? Y3 ?? Y4 ?? 69) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 68) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) சுப்பர் 8: குழு 2: முதலிடம் - ? (3 புள்ளிகள்) சுப்பர் 8: குழு 2: இரண்டாமிடம் - ? (2 புள்ளிகள்) 70) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! அணி? அரையிறுதிப் போட்டிகள்: அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 66)க்கும் 69) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும். 71) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 1: புதன் 04 மார்ச்: 1:30 PM, ஏடென் கார்டன்ஸ்/கொழும்பு (RPS), சுப்பர் 8 குழு 1 முதல் இடம் எதிர் சுப்பர் 8 குழு 2 இரண்டாவது இடம் * பாகிஸ்தான் அரையிறுதிக்குத் தெரிவானால் அரையிறுதிப் போட்டி 1 இல் விளையாடும். எனவே, இந்தத் தெரிவைக் கவனமாகப் பதியுங்கள் 72) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 2: வியாழன் 05 மார்ச்: 1:30 PM, வாங்கெடே, சுப்பர் 8 குழு 2 முதல் இடம் எதிர் சுப்பர் 8 குழு 2 இரண்டாவது இடம் * பாகிஸ்தான் அரையிறுதிக்குத் தெரிவானால் அரையிறுதிப் போட்டி 1 இல் விளையாடும். எனவே, இந்தத் தெரிவைக் கவனமாகப் பதியுங்கள் இறுதிப் போட்டி: இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 71)க்கும் 72) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும். 73) உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) ஞாயிறு 08 மார்ச்: 1:30 PM, அஹமதாபாத்/கொழும்பு (RPS) அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி உலகக் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்: 74) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அணி? 75) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அணி? 76) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? 77) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 76 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? 78) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? 79) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 78 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? 80) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) வீரர்? 81) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 80 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? 82) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? 83) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 82 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? 84) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? 85) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 84 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி?
  5. யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026 கூகிள் ஷீற்றில் தரவேற்றப்பட்டுள்ளது. பின்வரும் இணைப்பின் மூலம் பதில்களைத் தெரிவு செய்யலாம். https://docs.google.com/spreadsheets/d/1H2HazXerKgB9Ts372VbC-dq8hvn6F9BWuRdki4K_pQc/edit?usp=sharing பின்வரும் வர்ணப் பெட்டிகளில் உள்ளவற்றை விரும்பிய குழுநிலை போட்டிகளில் வெற்றிபெறும் அணிகளின் பெயர்களை சுருக்கிய வடிவில் தந்தால், சுப்பர் 8 சுற்றுப் போட்டிகளில் உள்ள கேள்விகள் தானாகவே சரியான அணிகளை காட்டும். குழு A: முதலிடம் - ? (2 புள்ளிகள்) Group A - First குழு A: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) Group A - Second அதே போன்று அரையிறுதிப் போட்டிக்கு தெரிவாகும் அணிகள், இறுதிப் போட்டிக்குத் தெரிவாகும் அணிகள் எல்லாவற்றையும் சரியாகக் காட்டும் (என நினைக்கின்றேன்). எனவே கூகிள் ஷீற் மூலம் பதில்களைத் தெரிவு செய்து பதியுங்கள். இது பதில்களைத் தரவேற்றும் வேலையை இலகுவாக்கும். ஒருவர் கூகிள் ஷீற்றில் பதில்களை தட்டச்சும் செய்யும் வேளை இன்னொருவரும் தட்டச்சு செய்தால் பதில்கள் மாற்றம் அடையலாம். எனவே, கூகிள் ஷீற்றை பிரதிசெய்து உங்கள் கணக்கில் பதில்களைத் தெரிவு செய்து பின்னர் யாழில் பதியுங்கள்.
  6. யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026 அதிகபட்ச புள்ளிகள் 208 முதல் சுற்றிலும் சுப்பர் 8 சுற்றிலும் போட்டியில் வெல்லும் அணியின் பெயரைக் குறிப்பிடவேண்டும். ஒவ்வொரு சரியான விடைக்கும் முடிவின் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்படும் வெற்றி (Win) - 2 தோல்வி (Loss)- 0 முடிவில்லை (No Result) - 1 சமநிலை (Tie) - 1 குறிப்பு: Super Over உள்ளதால் போட்டிகள் சமநிலையில் முடிய வாய்ப்பில்லை வெல்லும் அணியின் பெயரைக் குறிப்பிடவேண்டும். இல்லாவிட்டால் முடிவில்லை அல்லது சமநிலை* (மேலுள்ள குறிப்பைப் பார்க்கவும்) என்று குறிப்பிடவேண்டும். அணிகளை சுருக்கிய வடிவில் தந்தால் வசதியாக இருக்கும். அணிகள்: A1 இந்தியா IND A2 பாகிஸ்தான் PAK A3 ஐக்கிய அமெரிக்கா USA A4 நெதர்லாந்து NED A5 நமீபியா NAM B1 அவுஸ்திரேலியா AUS B2 சிறிலங்கா SL B3 அயர்லாந்து IRE B4 ஸிம்பாப்வே ZIM B5 ஓமான் OMA C1 இங்கிலாந்து ENG C2 மேற்கிந்தியத் தீவுகள் WI C3 பங்களாதேஷ் BAN C4 நேபாளம் NEP C5 இத்தாலி ITA D1 நியூஸிலாந்து NZ D2 தென்னாபிரிக்கா SA D3 ஆப்கானிஸ்தான் AFG D4 கனடா CAN D5 ஐக்கிய அமீரகம் UAE முதல் சுற்றில் பங்கு பற்றும் 20 அணிகளும் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் 5 அணிகள் விளையாடுகின்றன. ஒவ்வொரு குழுவிலும் தரநிலைகளில் முதலாவதாகவும் இரண்டாவதாகவும் வரும் இரு அணிகளும் சுப்பர் 8 சுற்றுக்கு முன்னேறவுள்ளன. சுப்பர் 8 சுற்று போட்டிகளுக்குத் தேர்வாகும் அணிகள் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் முதல் சுற்றில் முதலாவதாக வரும் இரு அணிகளும், இரண்டாவதாக வரும் இரு அணிகளும் இடம்பெறுகின்றன. அரையிறுதித் போட்டிகளில் குழு 1 இல் முதல் இரு இடங்களில் வரும் அணிகளும், குழு 2 இல் முதல் இரு இடங்களில் வரும் அணிகளும் பின்வருமாறு மோதும். சுப்பர் 8 குழு 1 முதல் இடம் எதிர் சுப்பர் 8 குழு 2 இரண்டாவது இடம் சுப்பர் 8 குழு 2 முதல் இடம் எதிர் சுப்பர் 8 குழு 2 இரண்டாவது இடம் அரையிறுதிப் போட்டிகளில் வெல்லும் அணிகள் 08 மார்ச் அன்று இறுதிப் போட்டியில் அஹமதாபாத்தில் அல்லது கொழும்பு (RPS) இல் நடைபெறும் இறுதிப் போட்டியில் T20 உலகக் கிண்ண கிரிக்கெட் வெற்றிக் கிண்ணத்திற்காக மோதும். போட்டி விதிகள் போட்டி முடிவு திகதி வெள்ளி 06 பெப் 2026 பிரித்தானிய நேரம் இரவு 10 மணி. ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும். சகல கேள்விகளுக்கும் பதில்கள் முழுமையாகத் தரப்படவேண்டும். பதில் அளித்த பின்பு திருத்தங்களை அதே நாளில் மாத்திரம் செய்யலாம். அதன் பின்னர் திருத்தவேண்டி ஏற்படின் போட்டி நடத்துபவரிடம் முன்னரே அனுமதி பெறவேண்டும். ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள் பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களுக்குள் முதலிடம் பெறுவார். போட்டி நடாத்துபவரைத் தவிர்த்து குறைந்தது 10 பேராவது போட்டியில் பங்குபற்றவேண்டும். யாழ் களப் போட்டியில் பங்குபற்றி வெற்றிகனியைப் பறிக்க வாழ்த்துக்கள்
  7. யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026 வணக்கம், T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர் இந்த வருடம் இந்தியாவிலும் சிறிலங்காவிலும் நடைபெற உள்ளது. போட்டிகள் 07 பெப் 2026 அன்று முதல் சுற்று குழு நிலைகளில் ஆரம்பித்து 08 மார்ச் 2026 அன்று இறுதிப் போட்டியில் முடிவுறுகின்றது. முதல் சுற்று: முதல் சுற்றில் பங்கு பற்றும் 20 அணிகளும் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் 5 அணிகள் விளையாடுகின்றன. அவை தரநிலைப்படி கீழே தரப்பட்டுள்ளன: குழு A: A1 இந்தியா IND A2 பாகிஸ்தான் PAK A3 ஐக்கிய அமெரிக்கா USA A4 நெதர்லாந்து NED A5 நமீபியா NAM குழு B: B1 அவுஸ்திரேலியா AUS B2 சிறிலங்கா SL B3 அயர்லாந்து IRE B4 ஸிம்பாப்வே ZIM B5 ஓமான் OMA குழு C : C1 இங்கிலாந்து ENG C2 மேற்கிந்தியத் தீவுகள் WI C3 பங்களாதேஷ் BAN C4 நேபாளம் NEP C5 இத்தாலி ITA குழு D : D1 நியூஸிலாந்து NZ D2 தென்னாபிரிக்கா SA D3 ஆப்கானிஸ்தான் AFG D4 கனடா CAN D5 ஐக்கிய அமீரகம் UAE முதல் சுற்றில் விளையாடும் அணிகளுக்கு இடையிலான போட்டிகள் 07 பெப் முதல் 20 பெப் வரை நடைபெறவுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் தரநிலைகளில் முதலாவதாகவும் இரண்டாவதாகவும் வரும் இரு அணிகளும் சுப்பர் 8 சுற்றுக்கு முன்னேறவுள்ளன. சுப்பர் 8 சுற்று: சுப்பர் 8 சுற்று போட்டிகளுக்குத் தேர்வாகும் அணிகள் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் முதல் சுற்றில் முதலாவதாக வரும் இரு அணிகளும், இரண்டாவதாக வரும் இரு அணிகளும் இடம்பெறுகின்றன. அவை கீழே உள்ளவாறு பிரிக்கப்படும். குழு 1: X1 இந்தியா X2 அவுஸ்திரேலியா X3 மேற்கிந்தியத் தீவுகள் X4 தென்னாபிரிக்கா குழு 2: Y1 இங்கிலாந்து Y2 நியூஸிலாந்து Y3 பாகிஸ்தான் Y4 சிறிலங்கா சுப்பர் 8 சுற்றில் மேலுள்ள அணிகளில் சில தெரிவாகாத பட்சத்தில் அவற்றின் இடத்தை (X1..X4, Y1...Y4) முதல் இரு இடத்திற்கு வரும் பிற அணிகளில் ஒன்று எடுத்துக்கொள்ளும். உதாரணமாக குழு C இல் சுப்பர் 8 க்கு பங்களாதேஷ் தெரிவாகியும் மேற்கிந்தியத் தீவுகள் தெரிவாகாமலும் இருந்தால் X3 இடத்தை பங்களாதேஷ் எடுத்துக்கொள்ளும். சுப்பர் 8 சுற்றில் விளையாடும் அணிகளுக்கு இடையிலான போட்டிகள் 21 பெப் முதல் 01 மார்ச் வரை நடைபெறவுள்ளன. நொக்கவுட் போட்டிகள் அரையிறுதிப் போட்டிகள்: அரையிறுதித் போட்டிகளில் குழு 1 இல் முதல் இரு இடங்களில் வரும் அணிகளும், குழு 2 இல் முதல் இரு இடங்களில் வரும் அணிகளும் பின்வருமாறு மோதும். சுப்பர் 8 குழு 1 முதல் இடம் எதிர் சுப்பர் 8 குழு 2 இரண்டாவது இடம் சுப்பர் 8 குழு 2 முதல் இடம் எதிர் சுப்பர் 8 குழு 2 இரண்டாவது இடம் முதலாவது அரையிறுதிப் போட்டி 04 மார்ச் அன்று ஏடென் கார்டன்ஸில் அல்லது கொழும்பு (RPS) இலும், இரண்டாவது அரையிறுதிப் போட்டி 05 மார்ச் அன்று வாங்கெடேயிலும் நடைபெறவுள்ளன. * பாகிஸ்தான் அரையிறுதிப் போட்டிக்குத் தெரிவானால் பாகிஸ்தான் அணி விளையாடும் போட்டி கொழும்பில் நடைபெறும். இல்லையேல் கொல்கத்தா ஏடென் கார்டன்ஸில் நடைபெறும். இறுதிப் போட்டி: அரையிறுதிப் போட்டிகளில் வெல்லும் அணிகள் 08 மார்ச் அன்று அஹமதாபாத்தில் அல்லது கொழும்பு (RPS) இல் மோதவுள்ளன. * பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்குத் தெரிவானால் இறுதிப் போட்டி கொழும்பில் நடைபெறும். இல்லையேல் அஹமதாபாத்தில் நடைபெறும். கேள்விக்கொத்து பின்னர் வெளியிடப்படும்.
  8. நீண்ட கதை என்பதால் படிக்க மிகவும் நேரம் எடுத்தது. எனினும் எமது போராட்டத்தினுள் வாழ்ந்தவர்களுக்கு முக்கியமான கருப்பொருள். நானும் எனது கண்முன்னே இயக்கம் ஒரு பெண்ணை சரியாகச் சுடாமல் அந்தப் பெண் தவழ்ந்தவாறே “தண்ணீர்” கேட்டதையும், ஒரு முதியபெண் இரங்கிக் கொடுத்த தண்ணீரைக் குடிக்கும்போது இயக்கம் மீண்டும் வந்து நெஞ்சில் இரத்தம் கொப்பளிக்க “சரியாகச்” சுட்டதையும் நேரில் பார்த்திருந்தேன். சுட்டவர் சுடப்பட்டவரை நேரே கண்ணைப் பார்க்காமல் தலையைத் திருப்பிச் சுட்டதுதான் எப்போதாவது நினைவில் வரும். மற்றும்படி ஒபரேசன் லிபரேசன் காலத்தில் இராணுவத்தால் கொல்லப்பட்ட பலரின் உடல்களை “புதினம்” பார்த்திருந்தேன். ஆனால் அவைகள் தொந்தரவு செய்யும் அளவுக்கு நினைவுகளில் வருவதில்லை. Google AI tool Gemini ஐ கீழே உள்ளவாறு கேட்டேன்.. நான்: பின்வரும் இணைப்பில் உள்ள நீண்ட சிறுகதையை கதைகள் படிப்பதில் ஆர்வமுள்ளவர்களுக்கு ஏற்ற வகையில் சுருக்கி, இக்கதையின் நிறை குறைகளை ஒரு தேர்ந்த இலக்கிய விமர்சகர் போன்று விமர்சிக்கமுடியுமா? https://akazhonline.com/?p=11045 Gemini: கருணாகரன் எழுதிய "அமரசிறி" என்னும் சிறுகதையின் சுருக்கமும், ஒரு இலக்கிய விமர்சகர் பார்வையில் அக்கதைக்கான விமர்சனமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கதைச்சுருக்கம் இலங்கையின் போர்க்காலச் சூழலையும், போருக்குப் பிந்தைய மனவடுக்களையும் மையமாகக் கொண்டு இக்கதை நகர்கிறது. உளநல மருத்துவரான மேகதாஸ், தனது நண்பரான ஒரு எழுத்தாளரை (கதையின் சொல்லியை) சந்தித்து ஒரு விசித்திரமான வேண்டுகோளை விடுக்கிறார். தனது நோயாளி ஒருவரின் கதையைச் சிறுகதையாகவோ அல்லது கட்டுரையாகவோ எழுதி வெளியிட வேண்டும் என்றும், அதன் மூலம் சிங்கள மொழியில் யாரேனும் அதை மொழிபெயர்த்து அந்தத் தகவல் சம்பந்தப்பட்ட நபர்களைச் சென்றடைய வேண்டும் எனவும் கேட்கிறார். அந்த நோயாளியின் பெயர் ஞானச்செல்வன். முன்னாள் போராளியான இவர், போர்க்காலத்தில் 'அமரசிறி' என்ற சிங்களச் சிப்பாயைச் சிறைபிடித்த நினைவுகளால் மனதளவில் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார். போர்க்களத்தில் எதிரியாகச் சந்தித்தாலும், அமரசிறியிடம் ஏற்பட்ட மனிதாபிமான உரையாடல்களும், அவர் காட்டிய குடும்பப் புகைப்படமும் ஞானச்செல்வனின் மனதில் ஆழமாகப் பதிந்துவிடுகின்றன. ஆனால், போரின் இறுக்கமான சூழல் காரணமாக அமரசிறியைக் கொல்லவேண்டிய கட்டாயம் ஞானச்செல்வனுக்கு ஏற்படுகிறது. ஆண்டுகள் கடந்தும், அந்தக் கொலைக்குரிய குற்றவுணர்ச்சி (Guilt) ஞானச்செல்வனைத் தூங்கவிடாமல் வதைக்கிறது. அமரசிறியின் முகம் நினைவிலிருந்து மங்கிக்கொண்டே போவது அவருக்கு மேலும் பதற்றத்தைத் தருகிறது. ஓவியர் ஒருவரைக்கொண்டு அமரசிறியின் முகத்தை வரைய முயல்கிறார். மருத்துவரிடம் தனது நினைவுகளை அழிக்குமாறு கெஞ்சுகிறார். ஆனால் மருத்துவர் மேகதாஸ், "உங்களை மட்டும் குணப்படுத்த முடியாது, அமரசிறியின் குடும்பமும் இந்தக் காயத்தின் ஒரு பகுதி" என்று கூறி, அமரசிறியின் குடும்பத்தைக் கண்டறிந்து அவர்களிடம் மன்னிப்புக் கோருவதே அல்லது உண்மையைச் சொல்வதே முழுமையான நிவாரணம் என்று வழிகாட்டுகிறார். அமரசிறியின் குடும்பத்தைத் தேடும் ஒரு முயற்சியாகவே இக்கதை எழுதப்படுகிறது. இலக்கிய விமர்சனம் நிறைகள் (Strengths): 1. ஆழமான உளவியல் பார்வை: வழக்கமான போர்க்காலக் கதைகளைப் போல வெறும் வன்முறையையோ அல்லது இழப்பையோ மட்டும் பேசாமல், இக்கதை 'குற்றவுணர்ச்சி' (Survivor’s Guilt) என்ற உளவியல் சிக்கலை மிக நுட்பமாகக் கையாளுகிறது. எதிரியைக் கொல்வது வீரமாகக் கருதப்படும் போர்க்களத்தில், அந்த எதிரியை ஒரு சக மனிதனாகப் பார்த்த பிறகு ஏற்படும் மனப்போராட்டத்தை ஆசிரியர் மிக நேர்த்தியாக வெளிப்படுத்தியுள்ளார். 2. கதாபாத்திர வார்ப்பு: ஞானச்செல்வனின் பாத்திரம் மிக அழுத்தமாகப் படைக்கப்பட்டுள்ளது. அவன் ஒரு கொலையாளி என்பதைத் தாண்டி, அவனுக்குள் இருக்கும் மென்மையான மனிதன் படும் வேதனை வாசகனைக் கலங்கடிக்கிறது. அதேபோல் மருத்துவர் மேகதாஸ், வெறும் மருத்துவராக மட்டுமல்லாமல், சமூகத்தின் காயங்களை ஆற்ற நினைக்கும் ஒரு தத்துவவாதியாகவும் மிளிர்கிறார். "வலி என்பது ஒரு விளக்கு. அது உங்களை மட்டும் ஒளி வீசிப் பார்க்கச் சொல்வதில்லை; அது பாதிக்கப்பட்டவர்களின் இருளையும் ஒளி வீசிப் பார்க்கச் சொல்கிறது" போன்ற வசனங்கள் கதையின் தரத்தை உயர்த்துகின்றன. 3. மனிதம் பேசும் களம்: இனம், மொழி, தேசம் ஆகியவற்றைக் கடந்து மனிதநேயத்தை முன்னிறுத்துவது இக்கதையின் மிகப்பெரிய பலம். சிங்களச் சிப்பாயான அமரசிறியை ஒரு எதிரியாகச் சித்தரிக்காமல், அவனும் ஒரு குடும்பத் தலைவன், அவனுக்கும் கனவுகள் இருந்தன என்பதை ஞானச்செல்வனின் நினைவுகள் வழியே கடத்திய விதம் சிறப்பு. 4. கதை சொல்லும் முறை: கதைக்குள் கதை (Story within a story) என்ற உத்தியை ஆசிரியர் பயன்படுத்தியுள்ளார். இது கதைக்கு ஒரு ஆவணத் தன்மையையும் (Documentary feel), நம்பகத்தன்மையையும் கொடுக்கிறது. ஒரு தேடுதலுக்கான கருவியாக இக்கதை படைக்கப்பட்டிருப்பது வாசிப்பனுபவத்தை மேன்மைப்படுத்துகிறது. குறைகள் (Weaknesses): 1. நீளமான முன்னுரை: கதையின் ஆரம்பத்தில் வரும் மருத்துவக் கல்லூரி விரிவுரைக்காட்சிகள் மற்றும் சூழல் விவரிப்புகள் கதைக்குத் தேவையான பின்புலத்தை அமைத்தாலும், அவை சற்று நீளமாக இருப்பது போன்ற உணர்வைத் தருகின்றன. வாசகன் நேரடியாக மையக்கருவிற்குள் நுழைய இது சற்று தாமதப்படுத்துகிறது. 2. நாடகத்தன்மை: சில இடங்களில் மருத்துவர் பேசும் வசனங்கள் இயல்பான உரையாடலாக இல்லாமல், வாசகனுக்குப் போதிப்பது போன்ற தொனியில் (Didactic tone) அமைகின்றன. குறிப்பாக, ஓவியம் வரையும் காட்சிகள் மற்றும் அதைச் சார்ந்த விவரிப்புகள் இன்னும் கொஞ்சம் இயல்பாக இருந்திருக்கலாம். முடிவுரை: "அமரசிறி" ஒரு சாதாரண சிறுகதை அல்ல; அது போருக்குப் பிந்தைய மனசாட்சியின் குரல். போர் முடிந்துவிட்டாலும், அது மனித மனங்களில் ஏற்படுத்தும் வடுக்கள் வாழ்நாள் முழுவதும் தொடரும் என்பதை இக்கதை ஆணித்தரமாக உணர்த்துகிறது. ஒரு தேர்ந்த இலக்கியப் படைப்பாகவும், அதே சமயம் ஒரு வரலாற்று ஆவணமாகவும் இக்கதை முக்கியத்துவம் பெறுகிறது. வாசிப்பவர்களின் மனதில் ஈரம் கசியவைக்கும் ஒரு கனமான படைப்பு இது.
  9. ஈழத்தில் திராவிடச் சிந்தனையும் தி.மு.கவும்! ஷோபாசக்தி இந்தியப் பெருநிலப் பரப்பிலிருந்து பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து நிகழ்ந்த தெற்கு நோக்கிய புலப்பெயர்வே இலங்கைத் தீவின் தமிழ் – சிங்களம் பேசும் மக்களின் நிலைத்த குடிசன வரலாறு. இனம், மதம், பண்பாடு, மொழி ஆகியவற்றின் அடிப்படையில் இரு நிலங்களுக்கும் இடையே பெரும் ஒற்றுமையுண்டு. நிலையான தேசங்கள் தோன்றாத பண்டைய காலத்திலும் பின்னர் காலனியக் காலத்திலும் இலங்கைத் தீவின் வரலாறு எப்போதும் இந்தியப் பெருநிலத்துடன் இணைத்தே எழுதப்பட்டிருக்கிறது. கண்டி அரசின் கடைசி நான்கு மன்னர்களும் மதுரை நாயக்கர்கள் என்பதும், யாழ்ப்பாண அரசின் கடைசி மன்னர்கள் ஆரியச் சக்கரவர்த்திகள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கவை. சுதந்திரத்திற்குப் பின்னான இலங்கையின் உள்நாட்டு அரசியலிலும் பொருளியலிலும் போரிலும் இந்திய ஒன்றிய அரசின் தலையீடும் கட்டுப்பாடும் இன்றுவரை வலுவாகவே இருக்கின்றது. எனவே, இந்தியப் பெருநிலப் பரப்பில் நிகழ்ந்த எந்த அரசியல் – பண்பாட்டு மாற்றங்களும் இலங்கையிலும் வலுவான பாதிப்பைச் செலுத்தியுள்ளன. இந்த வகையில், தமிழகத்தில் தோன்றிய திராவிட இயக்கக் கருத்தியல் இலங்கைத் தமிழர்களிடையேயும் உடனடியாகவே பரவத் தொடங்கியது. 1925-இல் ஈ.வெ.ரா. பெரியாரால் தொடக்கப்பட்ட சுயமரியாதை இயக்கத்தின் கருத்தியலை உள்வாங்கி, 1927-இல் யாழ்ப்பாணத்தில் ‘திராவிடன்’ பத்திரிகை வெளியாகத் தொடங்கியது. ‘திராவிட வித்தியா அபிவிருத்தி சங்கம்’, ‘திராவிட வித்தியாசாலை’ ஆகியவை யாழ்ப்பாணத்தில் நிறுவப்பட்டன. வடமராட்சியில், தமிழறிஞரும் பகுத்தறிவாளருமான கந்தமுருகேசனாரின் தலைமையில் இளைஞர் திரள் திராவிட இயக்கச் சிந்தனைகளுடன் செயற்பட்டது. இவர்களால் ‘திராவிடர் கலை மன்றம்’ என்ற வாசகசாலை ஆரம்பிக்கப்பட்டு ‘திராவிட நாடு’ ,’குடியரசு’ போன்ற பத்திரிகைகள் தமிழகத்திலிருந்து வரவழைக்கப்பட்டன. 4 பெப்ரவரி 1938-இல் ‘புலோலி’ கிராமச் சங்கத் தேர்தலில் ‘துறையா’ வார்ட்டில் சுயமரியாதை இயக்கத்தின் சார்பில் முருகப்பர் வேலுப்பிள்ளை போட்டியிட்டு வெற்றியீட்டியுள்ளார். இவர் புரோகித மறுப்புச் சங்கத்தின் தலைவருமாவார். அதேபோன்று ‘ஆலடி’ வார்ட்டில் சுயமரியாதை இயக்கத்தின் சார்பில் ப.கதிர்காமர் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார். இந்தச் செய்தியை 10 ஏப்ரல் 1938 தேதியிடப்பட்ட ‘குடியரசு’ பத்திரிகை வெளியிட்டுள்ளது. தொகுத்துப் பார்க்கும்போது ஈழத் தமிழர்களிடையே தமிழ்த் தேசியச் சிந்தனைகளும் இடதுசாரிச் சிந்தனைகளும் அறிமுகமாவதற்கு முன்பே திராவிட இயக்கச் சிந்தனைகள் அறிமுகமாகியிருந்தன எனக் கருதக் கூடியதாகவே உள்ளது. 1932-இல் கொழும்பில் ‘இலங்கை சுயமரியாதை இயக்கம்’ ஆரம்பிக்கப்பட்டது. இதே வருடத்தில்தான் பெரியார் இலங்கைக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கொழும்பு, கண்டி, நாவலப்பிட்டி, ஹட்டன், யாழ்ப்பாணம், பருத்தித்துறை ஆகிய இடங்களில் உரைகளை நிகழ்த்தினார். அந்த உரைகளில் தேசம், தேசியம், சாதி, மதம் போன்றவற்றைக் கடுமையாகத் தாக்கி விமர்சித்துப் பேசி, பகுத்தறிவையும் சுயமரியாதையையும் ஒடுக்கப்பட்டவர்களின் ஒற்றுமையையும் பெரியார் வலியுறுத்தினார். ‘தேசியம் ஒரு கற்பிதம்’ என்ற எண்ணத்தை முன்வைத்தார். இதற்கு 50 வருடங்கள் கழித்துத்தான் பெனடிக்ட் ஆண்டர்ஸனின் ‘Imagined Communities’ என்ற புகழ்பெற்ற நூல் வெளியாகி, தேசியம் என்பது கட்டமைக்கப்பட்ட கருத்தாக்கம் என்றவாறான சிந்தனை 1990-களில் தமிழில் விவாதிக்கப்பட்டது. “தோழர்களே! கடவுள், மதம், ஜாதியம், தேசியம், தேசாபிமானம் என்பவைகள் எல்லாம் மக்களுக்கு இயற்கையாக தானாக ஏற்பட்ட உணர்ச்சிகள் அல்ல. சகல துறைகளிலும் மேல்படியிலுள்ளவர்கள் தங்கள் நிலை நிரந்தரமாயிருக்க ஏற்படுத்திக்கொண்டிருக்கும் கட்டுப்பாடான ஸ்தாபனங்களின் மூலம் பாமர மக்களுக்குள் புகுத்தப்பட்ட உணர்ச்சிகளேயாகும். இந்தப்படி புகுத்தப்படவேண்டிய அவசியமும், காரணமும் என்னவென்று பார்த்தால் அவை முற்றும் பொருளாதார உள் எண்ணத்தையும், அந்நியர் உழைப்பாலேயே வாழவேண்டும் என்கின்ற உள் எண்ணத்தையும் கொண்ட பேராசையும், சோம்பேறி வாழ்க்கைப் பிரியமுமேயாகும்” என்று தனது கொழும்பு உரையில் பெரியார் குறிப்பிட்டார். 1944-இல் இந்தியாவில் சுயமரியாதை இயக்கமும் நீதிக்கட்சியும் இணைக்கப்பட்டு ‘திராவிடர் கழகம்’ தோற்றுவிக்கப்பட்டபோது, இலங்கை சுயமரியாதை இயக்கமும் ‘திராவிடர் கழகம்’ எனப் பெயர் மாற்றிக்கொண்டது. 1949-இல் பேரறிஞர் அண்ணாவின் தலைமையில் திராவிடர் கழகத்திலிருந்து வெளியேறியவர்கள் தி.மு.கவை நிறுவியபோது, இலங்கையிலும் அவ்வாறே திராவிடர் கழகத்திலிருந்து ஏ.இளஞ்செழியனின் தலைமையில் ‘இலங்கை திராவிடர் முன்னேற்றக் கழகம்’ (இ.தி.மு.க.) தோற்றம் பெற்றது. இ. தி.மு.க. இலங்கைக்கான அரசியலையே முதன்மையாக முன்னெடுத்தது. ‘திராவிட முன்னேற்றக் கழகம்’ என்று திராவிட நாட்டையே முன்வைத்துத் தமிழக தி.மு.க. பெயரிட்டிருப்பதால், இலங்கையைத் தாயகமாகக் கொண்டவர்களுக்கு அது பொருந்தாது எனக் கருதிய இ. தி.மு.கவினர் ‘திராவிடர் முன்னேற்றக் கழகம்’ என்றே தமது இயக்கத்தின் பெயரை வைத்துக்கொண்டனர். இயக்கக் கொள்கைகளான சாதியொழிப்பு, பெண் விடுதலை, மொழிப்பற்று மற்றும் பண்பாட்டு முன்னெடுப்புகளை தி.மு.கவைப் பின்பற்றியே இ. தி.மு.கவினர் அமைத்துக்கொண்டனர். தமிழகத்தில் வெளியாகிய தி.மு.க பத்திரிகைகளின் தொடர்ச்சியாகவே இலங்கையிலும் 1950 – 1971 காலப்பகுதியில் ‘திராவிடமணி'(கொழும்பு) ‘நாம்’ (பதுளை) ‘ஈழமுரசு’ (மட்டக்களப்பு) ‘இனமுழக்கம்’ (யாழ்ப்பாணம்) ‘எரிமலை’ (அக்கரைப்பற்று) போன்ற முப்பத்தைந்துக்கும் மேற்பட்ட திராவிடச் சிந்தனைப் பத்திரிகைகள் வெளியாகின. மலையகத் தோட்டத் தொழிலாளர்களிடையே இ.தி.மு.க கிளைகளை அமைப்பதற்குத் திராவிட இயக்க சினிமாக்கள் உதவின எனச் சொல்லும் ஆய்வாளர் பெ.முத்துலிங்கம் “பராசக்தி திரைப்படம் மலையக சினிமாக் கொட்டகைகளில் திரையிடப்பட்டது. தென்னிந்தியாவிலிருந்து இலங்கை, பிஜி, மலேசியா, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளுக்குச் சென்ற தமிழர்களின் அவலநிலை பற்றி இப்படத்தில் குரலெழுப்பப்படுவதுடன் சீர்திருத்தக் கருத்துகளையும் கடவுளின் பெயரால் மேற்கொள்ளப்படும் அட்டூழியங்களுக்கு எதிரான காட்சிகளையும் இப்படம் கொண்டிருந்தது” எனச் சுட்டிக்காட்டுகிறார். 1951 டிசம்பரில் முதல் மாநில தி.மு.க மாநாடு சென்னையில் நடத்தப்பட்டபோது, இ. தி.மு.க. பிரதிநிதிகள் கலந்துகொண்டதுடன், இ.தி.மு.கவால் திரட்டப்பட்ட நிதியையும் மாநாட்டுக்கு அளித்தனர். காலத்திற்குக் காலம் தமிழகத் திராவிட இயக்கத்தினர் இ.தி.மு.கவின் அழைப்பின்பேரில் இலங்கைக்கு வந்து நாடு முழுவதும் பரப்புரைக் கூட்டங்களில் சொற்பொழிவாற்றினார்கள். இவ்வாறு இலங்கை வந்தவர்களில் பேராசிரியர் க. அன்பழன், ஆசிரியர் கி.வீரமணி, சி.பி. சிற்றரசு, கலைவாணர் என் .எஸ்.கிருணன், ஏ.வி.பி. ஆசைத்தம்பி, நாவலர் இரா. நெடுஞ்செழியன், நாஞ்சில் மனோகரன் போன்ற பலர் இருந்தார்கள். இலங்கையில் தமிழ் மொழிக்குச் சமவுரிமை கோரியும், இலங்கையில் வாழும் இந்திய வம்சாவழியினருக்குக் குடியுரிமை கோரியும், தமிழகத்தில் நிகழ்ந்த இந்தித் திணிப்புக்கு எதிராகவும் இ.தி.மு.க பலமுனைப் போராட்டங்களை முன்னெடுத்த போதெல்லாம், தமிழக தி.மு.கவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைத்தது. இந்தப் போராட்டங்களுக்கு ஆதரவளித்து தமிழக தி.மு.க. தலைவர்கள் அறிக்கைகளையும் செய்திகளையும் வெளியிட்டார்கள். யாழ் குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கிளைகளை அமைத்திருந்த இ.தி.முக 1957 டிசம்பரில் சாதியொழிப்பை முன்வைத்து சமூக சீர்திருத்த மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்தத் திட்டமிட்டபோது, அந்த மாநாட்டுக்குத் தமிழகத்திலிருந்து நாவலர் நெடுஞ்செழியன், ஈ.வி.கே. சம்பத், பேராசிரியர் க.அன்பழகன் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர். எனினும், அவர்கள் மூவரையும் இலங்கை வர இந்திய அரசு அனுமதிக்கவில்லை. இக்காலகட்டத்தில், இலங்கையில் நிலவும் ஒற்றையாட்சி முறைக்கு மாற்றாகத் தமிழ் -சிங்கள கூட்டாட்சி முறையை முன்வைத்துப் போராடிக்கொண்டிருந்த ‘இலங்கை தமிழரசுக் கட்சி’க்கும் இ.தி.மு.கவுக்கும் இடையே தோழமை நிலவியது. இரு அமைப்புகளும் பல தருணங்களில் சேர்ந்து செயற்பட்டன. இ.தி.மு.க 1960-இல் பண்டாரவளையில் நடத்திய கலாசார மாநாட்டில் தமிழரசுக் கட்சித் தலைவர்களான சாம் தம்பிமுத்து, எம். திருச்செல்வம், செனட்டர் மு. மாணிக்கம் ஆகியோர் கலந்துகொண்டார்கள். 1961-இல் தமிழரசுக் கட்சியினர் யாழ்ப்பாணத்தில் நடத்திய சத்தியாக்கிரகப் போராட்டத்தில் பொதுச்செயலாளர் ஏ. இளஞ்செழியனின் தலைமையில் இ.தி.மு.க பங்கெடுத்தது. நுவரெலியாவில் இ.தி.மு.க நடத்திய கூட்டத்தில் அ.அமிர்தலிங்கம், எம்.சிவசிதம்பரம், மங்கையர்க்கரசி போன்ற தமிழரசுக் கட்சியினர் கலந்துகொண்டார்கள். இந்தக் கூட்டத்தின் முடிவில் தமிழரசுக் கட்சியுடன் கூட்டாகச் செயற்படுவது என இ.தி.மு.க. தீர்மானம் நிறைவேற்றியது. 1962 ஏப்ரலில், ஹட்டன் நகரத்தில் மொழியுரிமை – மலையக மக்களின் குடியுரிமை ஆகியவற்றை முன்வைத்து இ.தி.மு.க நடத்திய இரண்டாவது மாநில மாநாட்டில் தமிழரசுக் கட்சித் தலைவர் எஸ்.ஜே. வி. செல்வநாயகம் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார். கூட்டாட்சி கோரிப் போராடிக்கொண்டிருந்த தமிழரசுக் கட்சியுடனான இ.தி.மு.கவின் அரசியல் கூட்டு சிங்கள இனவாத அரசியல்வாதிகளுக்குக் கலக்கத்தைக் கொடுத்தது. திராவிட நாடொன்றை உருவாக்க முயலும் தமிழக தி.மு.க செயற்பாட்டின் ஓர் அங்கமே இ.தி.மு.கவின் இந்த நடவடிக்கை எனக்கூறி இ.தி.மு.கவைத் தடை செய்யுமாறு சிங்கள இனவாத அரசியல்வாதிகள் கூக்குரலிட்டார்கள். பெயர்பெற்ற சிங்கள இனவாதிகளான கே.எம்.பி. ராஜரத்ன, ஆர்.ஜி.சேனநாயக்க, கம்யூனிஸ்ட் கட்சியின் பேர்ஸி விக்ரமரத்ன ஆகியோர் நாடாளுமன்றத்தில் இ.தி.மு.வை தடைசெய்யுமாறு கோரினார்கள். இவர்கள் இ.தி.மு.கவை, தமிழக தி.மு.கவின் நேரடிக் கிளை என்றும் அது இலங்கையைத் தமிழகத்துடன் இணைக்க முயல்கிறது என்றும் சொன்னார்கள். 1962 ஜூலை 22-ஆம் தேதி, ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அரசால் அவசரகாலச் சட்டத்தின்கீழ் இ.தி.மு.க. தடைசெய்யப்பட்டது. இந்தத் தடையைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் தமிழரசுக் கட்சியின் அ.அமிர்தலிங்கம் நீண்ட உரையாற்றினார். அந்த உரையில் “இவர்கள் குறிப்பிடும் பூதம் என்ன என்பதை நான் குறிப்பிட வேண்டியிருக்கிறது. இந்தத் திராவிட முன்னேற்றக் கழகம் என்பது இன்று நேற்றுத் தோன்றிய ஓர் இயக்கமல்ல. நான் இலங்கைச் சர்வகலாசாலையில் 1946- 1947 ஆண்டளவில் கல்வி கற்றுக்கொண்டிருந்த காலத்திலேயே இலங்கை திராவிடர் கழகம் இருந்தது. இவர்களது நோக்கம் இலங்கையில் வாழ்கின்ற மலைநாட்டுத் தமிழர்கள் மத்தியில் சாதியின் பெயரால் காணப்படும் பேதங்களை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதாகும்…மலைநாட்டுத் தமிழ் மக்கள் தன்மானம் பெற்றவர்களாகப் பகுத்தறிவுப் பாதையில் செல்ல வேண்டும் என்ற நோக்கத்துடனேயே இலங்கையில் தி.மு.க இயங்கி வருகிறது” என்றார். இலங்கை சமசமாஜக் கட்சியும் இந்தத் தடையைக் கண்டித்து “மலையக மக்களின் அடிப்படை உரிமையான குடியுரிமை இலங்கை அரசால் மறுக்கப்படுவதே இ.தி.மு.கவின் வளர்ச்சிக்கு முதன்மையான காரணம்” என்றது. இ.தி.மு.கவின் மீதான தடை 1963-இல் நீக்கப்பட்டது. 1965-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின்போது, இடதுசாரிக் கட்சிகள் ஸ்ரீமாவோ – சாஸ்திரி ஒப்பந்தத்திற்கு ஆதரவளித்தார்கள். தமிழரசுக் கட்சியினர் அந்த ஒப்பந்தத்தை எதிர்த்தார்கள். எனவே, இ.தி.மு.க. பொதுத் தேர்தலில் தமிழரசுக் கட்சிக்கு ஆதரவு நிலையெடுத்து வடக்கு – கிழக்கில் பரப்புரையை மேற்கொண்டது. எனினும், தேர்தலின் பின்பு தமிழரசுக் கட்சி டட்லி சேனநாயக்கவின் அரசு அமைய ஆதரவு கொடுத்ததால், தமிழரசுக் கட்சியுடனான உறவை இ.தி.மு.க முறித்துக்கொண்டது. 1968-இல் இ.தி.மு.க தன்னை அரசியல் கட்சியாக நிறுவிக்கொண்டது. அதே வருடத்தில் அக்டோபர் 14-ஆம் தேதி, பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழாவை கொழும்பில் நடத்தியது. இவ்விழாவில் தமிழகத்திலிருந்து வருகை தந்திருந்த தி.மு.கவினரும் கலந்துகொண்டார்கள். இந்நிகழ்வை திரிபுபடுத்தி இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் ‘எத்த’ நாளிதழ் “ஸ்ரீமாவோ – சாஸ்திரி ஒப்பந்தத்தின்படி திருப்பி அனுப்ப வேண்டியுள்ள இந்தியர்களைத் தடுத்து, இலங்கை திராவிட முன்னேற்றக் கழகத்தை வளர்த்து, தென்னிந்தியாவையும் வட இலங்கையையும் ஒன்றிணைத்து திராவிட இராச்சியத்தை உருவாக்குவதற்கான சதி அம்பலமாகியுள்ளது. இந்திய தி.மு.கவின் தலைவர் அண்ணாதுரையின் பிறந்தநாளைக் கொண்டாடும் தோரணையில் இலங்கை வந்துள்ள அண்ணாதுரை குழுவினர் இதற்கான அமைப்பு வேலைகளை நடாத்திச் செல்கின்றனர்” என்று எழுதியது இ.தி.மு.க. யாழ் மாவட்டத்தின் நான்காவது மாநில மாநாட்டை 18.09.1969-இல் நடத்தியது. அன்றைய தினம் முற்றவெளியில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய இ.தி.மு.க பொதுச்செயலாளர் ஏ. இளஞ்செழியன் “தமிழ் மக்களின் நியாயமான போராட்டங்களை சாத்வீகப் போராட்டத்தின் மூலம் பெற முடியாவிடின், புரட்சி ஒன்றின் மூலம் பெறவிரும்பினால் தமிழ் மக்கள் கெரில்லா யுத்தத்திற்குத் தம்மைத் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும். காவல்நிலையங்களைத் தகர்த்தல், ஆயுதப் பயிற்சி முகாம் அமைத்தல் வேண்டும்” என்று கூறினார். எனினும் “அதற்கான தேவை தற்போது இல்லை” என்றும் குறிப்பிட்டார். ஈழநிலத்தில் முதன்முதலாக ‘கெரில்லா போராட்டம்’ என்ற சொல்லாடல் இ.தி.மு.கவாலேயே உச்சரிக்கப்பட்டிருக்கிறது. இந்த உரையைச் சிங்கள அரசியல்வாதிகள், பத்திரிகைகள் மட்டுமல்லாமல் தமிழ் காங்கிரஸ் தலைவர் ஜீ.ஜீ. பொன்னம்பலம் உள்ளிட்ட தமிழ் அரசியல்வாதிகளும் ஒட்டுமொத்தமாகக் கண்டித்தார்கள். மறுபடியும் இ.தி.மு.க. மீது தடை கோரப்பட்டது. 1971-இல் ஜே.வி.பி. நடத்திய ஆயுதக் கிளர்ச்சியைத் தொடர்ந்து ஏ.இளஞ்செழியனும் இ.தி.மு.கவின் பல உறுப்பினர்களும் கைதுசெய்யப்பட்டார்கள். இ.தி.மு.கவை ஒரு பிரிவினைவாதச் சக்தியாகவும், தமிழக தி.மு.கவின் திராவிட நாடு கொள்கையை முன்னெடுக்கும் இலங்கைக் கிளையாகவுமே இலங்கை அரசு, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, ஜே.வி.பி, சிங்கள ஊடகங்கள் போன்றவை தொடர்ச்சியாகச் சித்திரித்துக்கொண்டிருந்தன. இது இ.தி.மு.கவுக்கு பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்தியது. உண்மையில் இ.தி.மு.க, தமிழக தி.மு.கவின் நேரடிக் கிளை என இ.தி.மு.வோ அல்லது தி.மு.கவோ ஒருபோதும் சொல்லியதில்லை. இரண்டு இயக்கங்களுக்குமிடையே அரசியல் – கலாசார கூட்டிணைவு உள்ளது என்றே இரு இயக்கங்களுமே பிரகடனப்படுத்தியிருந்தன. தமிழகத்தில் தி.மு.கவில் பிளவு ஏற்பட்டு, எம். ஜி. ஆர் அ.தி.மு.கவை தோற்றுவித்தார். இந்தப் பிளவின் தாக்கம் இலங்கையிலும் நிச்சயமாக எதிரொலித்து இ.தி.மு.கவைப் பலவீனப்படுத்தியிருக்கும். இன்னொருபுறத்தில் இ.தி.மு.கவின் பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து ஏ.இளஞ்செழியன் விலகி ‘இளம் சோசலிஸ முன்னணி’ என்ற அமைப்பை உண்டாக்கினார். இந்தப் அமைப்பு ட்ராட்ஸ்கிய அரசியலை முன்னெடுத்தது. 1972-இல் இலங்கையில் புதிய அரசியல் சாசனம் ஏற்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து தமிழ் இளைஞர்களிடையே தோன்றிய தமிழ்த் தேசியவாதப் பேரலை, 1976-இல் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தமிழீழப் பிரகடனம், இளைஞர்களின் ஆயுதப் போராட்ட முன்னெடுப்பு ஆகியவற்றால் இலங்கையின் அரசியல் சூழல்கள் மாறின. உள்நாட்டுப் போர் இலங்கையின் மீது இறங்கிக்கொண்டிருந்தது. அவசரகாலச் சட்டமும் பயங்கரவாதத் தடைச் சட்டமும் அமலுக்கு வந்தன. இவையெல்லாம் இ.தி.மு.க. தொடர்ந்தும் வீறுடன் இயங்குவதற்கான சூழலை நாட்டில் இல்லாமல் செய்தன. எழுபதுகளின் இறுதியில் இ.தி.மு.க. கலைந்துபோயிற்று. இ.தி.மு.கவின் துணை அமைப்புகளாகச் செயற்பட்ட ‘இலங்கை இளம் திராவிடர் முன்னேற்றக் கழகம்’, ‘கலைஞர் கருணாநிதி நற்பணி மன்றம்’ போன்றவையும் செயலிழந்தன. “இ.தி.மு.க. மூன்று தசாப்த வரலாற்றுடன் அஸ்தமித்த போதிலும், அது ஒரு வரலாற்றுத் தேவையைப் பூர்த்தி செய்துள்ளது. மலையக மக்களின் அடிப்படை மனித உரிமையான பிரஜாவுரிமைப் பிரச்சினை தொடர்பாக மக்கள் போராட்டத்தை இதுவே முன்னெடுத்தது. மலையக மக்கள் மத்தியில் நிலவிய அறியாமை நீங்கி விழிப்புணர்வு ஏற்படுவதற்கும் இ.தி.மு.கவே காரணமாக இருந்துள்ளது” என்று இ.தி.மு.கவை மதிப்பிடுகிறார் ஆய்வாளர் பெ. முத்துலிங்கம். 2 2012-இல், பெரவள்ளூர் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய கலைஞர் மு. கருணாநிதி “தமிழீழம் என்பது அய்ம்பது – அறுபது ஆண்டுகளுக்கு முன்பு தந்தை செல்வா அவர்கள் தலைமையில் உருவான கீதம். அந்தக் காலத்திலிருந்து அவரோடு இணைந்து திராவிட முன்னேற்ற கழகமும், தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், நானும், நம்முடைய நண்பர்களும் நின்றிருக்கிறோம்” என்றார். உண்மையிலேயே ‘தமிழீழம்’ என்ற கருத்தாக்கத்தின் துணையாக மட்டுமல்லாமல், அந்தக் கருத்தாக்கத்தின் தோற்றத்திற்கான ஒரு காரணமாகவும் தி.மு.க. இருந்திருக்கிறது. 1940 ஆகஸ்ட் 24 -இல், பெரியார் ‘நீதிக்கட்சி’ மாநாட்டில் தொடக்கிவைத்த ‘திராவிட நாடு’ முழக்கத்தை தி.மு.க. 1962-வரை முன்னெடுத்தது. ‘அடைந்தால் தனிநாடு இல்லையேல் சுடுகாடு’ போன்ற பலநூறு முழக்கங்கள் உருவாகின. தி.மு.க. உருவாகிச் சரியாக மூன்று மாதங்கள் கழித்து, இலங்கையில் எஸ்.ஜே. வி. செல்வநாயகத்தின் தலைமையில் ‘தமிழரசுக் கட்சி’ தொடக்கப்பட்டது. தமிழரசுக் கட்சியின் உருவாக்கத்தில் தி.மு.கவின் கருத்தியல் தாக்கம் கணிசமாகவே இருந்தது. தமிழரசுக் கட்சி முன்நிறுத்திய இனவுணர்வு, மொழிப்பற்று, சங்ககாலப் பெருமிதங்கள், பண்டைய தமிழ் அரசர்களின் காலத்தைப் பொற்காலமாகச் சித்திரிப்பது, மேடைகளில் முழங்கும் அடுக்குத் தமிழ், தீப்பொறியான பத்திரிகை எழுத்துகள் எல்லாமே தி.மு.கவிடமிருந்தே பெற்றுக்கொள்ளப்பட்டன. தமிழரசுக் கட்சி ஆதரவு ‘சுதந்திரன்’ பத்திரிகையில் தி.மு.க. மற்றும் தி.மு.க. தலைவர்களைக் குறித்த செய்திகள் தொடர்ச்சியாக வெளியாகின. அண்ணாவும் கலைஞரும் உலகத் தமிழினத்தின் தலைவர்களாகவும் சமூக மறுமலர்ச்சியாளர்களாகவும் கருதப்பட்டார்கள். ஈழத் தமிழ் அரசியலாளர்களின் முதன்மை நட்புச் சக்தியாக தி.மு.கவே இருந்தது. ஈழத் தமிழர்களின் இல்லங்களிலே பேரறிஞர் அண்ணாவின் படமும் கலைஞரின் படமும் தொங்கத் தொடங்கின. அண்ணாவின் பெயரால் படிப்பகங்களும் மன்றங்களும் உருவாகின. அண்ணாவின் உருவச் சிலைகள் நிறுவப்பட்டன. 1969-இல் யாழ்ப்பாண முற்றவெளியில் நிகழ்ந்த இ. தி.மு.க. மாநாட்டில் யாழ்.முற்றவெளிக்கு ‘அண்ணா நகர்’ எனப் பெயரிட வேண்டும் என்ற தீர்மானத்தை வேலணை வீரசிங்கம் முன்மொழிந்து அந்தத் தீர்மானம் பொதுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. தி.மு.க. பத்திரிகைகள் இலங்கையில் பரவலாகப் படிக்கப்பட்டன. தி.மு.க.இயக்கத் திரைப்படங்கள் – குறிப்பாக கலைஞர் எழுதியவை- இலங்கையில் கொண்டாடப்பட்டன. ஈழ அரசியலிலும் முன்னொருபோதும் இல்லாத அடைமொழிகள் ‘தந்தை’, ‘தளபதி’, ‘சொல்லின் செல்வர்’, ‘உணர்ச்சிக் கவிஞர்’ , ‘தீப்பொறி’ என்றெல்லாம் தோன்றின. தி.மு.கவின் மேடைப்பேச்சுப் பாணியைப் பின்பற்றி செ.இராசதுரை, ம.க.அ.அந்தனிசில், காசி ஆனந்தன், வண்ணை ஆனந்தன் என ஒரு பேச்சாளர் பட்டாளமே உருவானது. 1972-இல் தொடங்கப்பட்ட ‘தமிழர் விடுதலைக் கூட்டணி’யின் தேர்தல் சின்னமாக ‘உதயசூரியன்’ இருந்தது. 1970-களின் மத்தியில் ஈழ இளைஞர்கள் தனிநாட்டுக்கான ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்கத் தொடங்கினார்கள். இவர்களிடமும் தி.மு.கவின் கருத்தியல் தாக்கம் இருந்ததைப் புலிகள் இயக்கத்தின் நிறுவனர்களில் ஒருவரும் புலிகளின் முதலாவது மத்தியகுழு உறுப்பினருமான கணேசன் “அப்போது தூய தேசியவாதச் சிந்தனையுடனேயே செயற்பட ஆரம்பித்தோம். தமிழ் பிரச்சினைகள் பற்றிப் பேசுபவர்கள் அண்ணாதுரை, கருணாநிதி, தமிழரசுக் கட்சி என்பதே எமக்குத் தெரிந்திருந்தவை” என்று அவரது ‘ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்’ நூலில் குறிப்பிடுகிறார். எந்தவொரு தமிழகத் தலைவருக்கும் முன்னாலேயே கலைஞர் ஈழப் போராளிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டார். 1977-இல் பிரபாகரன் தனது 23-வது வயதில் கலைஞரைச் சந்தித்தார். காசி ஆனந்தனும் மாவை சேனாதிராஜாவும் அழைத்துச் சென்றிருந்தார்கள். பிரபாகரன் ஒருமுறை கலைஞருக்கு உதவி கோரி எழுதிய கடிதத்தில் “எங்களின் நம்பிக்கை நட்சத்திரம் நீங்கள்” என எழுதியிருந்தார். கலைஞர் மறைந்தபோது, வடக்கு – கிழக்கு முன்னாள் முதலமைச்சரான வரதராஜப்பெருமாள் “அவர் தமிழர்களின் மொழியை, கலைகளை, இலக்கியத்தை, ஊடகங்களை, அரசியலை, சமூகத்தை எனத் தமிழுலகின் பல பாகங்களையும் அய்ம்பது வருடங்களுக்கு மேல் ஆண்ட பேரரசன். அவரைத் தேர்தல் அரசியலுக்கு அப்பால் கௌரவமாக வழியனுப்பி வைப்பதே தமிழர்களுக்கு அழகு” என்று எழுதினார். கலைஞர் மு.கருணாநிதி அனைத்து ஈழப் போராளி இயக்கத் தலைவர்களுடனும் தொடர்ச்சியான உறவையும் உரையாடலையும் வைத்திருந்தார். ஈழப் பிரச்சினையின் அடிப்படை குறித்துத் தெளிவாகப் புரிந்து வைத்திருந்தார். தமிழகத்தின் பல்வேறு ஈழ ஆதரவாளர்களைப் போன்று வெறுமனே குருட்டுத்தனமாகப் புலிகளின் புகழைப் பாடுபவராகக் கலைஞர் ஒருபோதும் இருந்ததில்லை. ஈழத்தில் நிகழ்ந்த சகோதரப் படுகொலைகளுக்காகப் புலிகளைக் கண்டித்தார். புலிகளை எதிர்க்க வேண்டிய நேரத்தில் எதிர்த்தார். ஆனால், அந்த எதிர்ப்பு ஒருபோதும் வெறுப்பாக மாறியதில்லை. புலிகளின் அரசியல்துறைத் தலைவர் சு.ப. தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டபோது, கலைஞர் இரங்கல் கவிதையும் எழுதினார். இலங்கையில் தமிழர்கள் மீதான இன வன்முறை 1956-இல் ஆரம்பித்தது. இதன் பின் எத்தனையோ இன வன்முறைகள். அத்தனை வன்முறைகளையும் எதிர்த்து இந்தியாவிலிருந்து ஒலிக்கும் முதல் குரல் தி.மு.கவுடையதாகவே இருந்தது. 1956-இல் சிதம்பரத்தில் நடைபெற்ற தி.மு.க.பொதுக்குழுவில் ‘இலங்கைத் தமிழர்களின் உரிமைகள் காக்கப்பட வேண்டும்’ என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1958, 1977, 1981, 1983 என்றெல்லாம் இலங்கையில் தமிழர்களின் மீது இனரீதியான தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டபோது, தி.மு.க. இந்தத் தாக்குதல்களுக்கு எதிராகக் குரலை ஓங்கி ஒலித்துக்கொண்டேயிருந்தது. இந்திய ஒன்றிய அரசுக்கு இது குறித்துக் கடிதங்களை எழுதியது. ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகத் தமிழக மக்களை அணிதிரட்டியது. 1983-இல், வெலிகடைச் சிறைப் படுகொலைகளை தி.மு.க. கண்டித்து எட்டு இலட்சம் மக்களைத் திரட்டிச் சென்னையில் பேரணியை நடத்தியது. 1983 ஆகஸ்ட் 10-இல், மத்திய – மாநில அரசுகள் ஈழத் தமிழர் பிரச்னையில் போதிய கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தி, கலைஞரும் பேராசிரியர் அன்பழகனும் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவிகளைத் துறந்தனர். கலைஞர் 1985-இல் தமிழீழ ஆதரவாளர் அமைப்பை (டெசோ ) உருவாக்கினார். 1986-இல் மதுரையில் டெசோ அமைப்பின் சார்ப்பில் மாபெரும் இலங்கைத் தமிழர் ஆதரவு மாநாடு நடத்தப்பட்டது. வாஜ்பாய்,என்.டி.ராமராவ் போன்ற அனைத்திந்தியத் தலைவர்கள் கலந்துகொண்டனர். இலங்கைத் தமிழர்களுக்கு நிலையான உரிமை கிடைக்கும்வரை போராடுவது, ஈழப்போராளிகளுக்கு அடைக்கலம் கொடுப்பது, ஈழத் தமிழினத்தின் பாதுகாப்புக்காக எந்தவிதத் தியாகத்திற்கும் தயாராக இருப்பது, இந்தக் கடமைகளைச் செய்யும்போது மத்திய-மாநில அரசுகளின் அடக்குமுறைகளுக்கு ஆளாக நேர்ந்தாலும் அவற்றை இன்முகத்துடன் ஏற்பது என நான்கு தீர்மானங்கள் அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. தி.மு.கவினர் வெறும் அறிக்கைகளிலும் மேடைகளிலும் மட்டும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகச் செயற்பட்டவர்கள் அல்ல. ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகத் தி.மு.க. தனது தோற்றம் முதலே இயங்கியிருக்கிறது. எண்ணற்ற ஆர்ப்பாட்டங்களையும் மாநாடுகளையும் பேரணிகளையும் மனிதச் சங்கிலிப் போராட்டங்களையும் நடத்தியிருக்கிறது. தி.மு.கவினர் ஈழப் போராளிகளுக்குத் தமது வீடுகளிலும் சட்டமன்ற விடுதியிலும் அடைக்கலம் கொடுத்தார்கள். பல்வேறு இக்கட்டுகளிலிருந்து போராளிகளைக் காப்பாற்றினார்கள். இதற்காகத் தி.மு.கவினர் நீண்டகாலம் சிறைவாசத்தையும் அனுபவித்திருக்கிறார்கள். இந்திய அமைதிப்படை இலங்கையிலிருந்து திரும்பியபோது, அமைதிப்படையை வரவேற்க கலைஞர் மறுத்தார். “இந்திய இராணுவம் இலங்கையில் என் தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்த அய்ந்தாயிரம் பேர் கொல்லப்படக் காரணமாக இருந்தது என்பதை எண்ணித்தான், அந்தப் படையை வரவேற்க நான் செல்லவில்லை” என முதலமைச்சராகக் கலைஞர் கூறியது சட்டமன்றத்தில் பதிவாகியது. ஈழத்தில் இறுதி யுத்தம் நடந்த காலப்பகுதியில் தி.மு.க. ஆட்சியிலிருந்தது. யுத்தத்தை நிறுத்தக் கலைஞர் தன்னால் முடிந்தளவு முயற்சித்தார். தி.மு.க. முக்கியஸ்தர்கள் சிலரோடு புலிகள் கடைசிவரை தொடர்பை வைத்திருந்தார்கள். யுத்தத்தை நிறுத்துமாறு தி.மு.க. தொடர்ந்து குரல் கொடுத்தது. மனிதச் சங்கிலிகளையும் ஆர்ப்பாட்டங்களையும் பெருமளவில் நடத்தியது. இலங்கையில் தலையீடு செய்து போரை நிறுத்துமாறு ஒன்றிய அரசைக் கோரியது. 2009 ஏப்ரல் 27-ம் தேதி, மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் கலைஞர் யுத்த நிறுத்தம் கோரி உண்ணாவிரதத்தை மேற்கொண்டார். உண்ணாவிரதத்திலிருந்த கலைஞரை பிரதமர் மன்மோகன் சிங்கும், சோனியா காந்தியும் தொடர்புகொண்டு பேசினார்கள். இலங்கை அரசு கனரக ஆயுதத் தாக்குதல்களையும் விமானத் தாக்குதல்களையும் நிறுத்துவதாக உறுதியளித்தது. அந்த உறுதியளிப்பின் நகல் பிரணாப் முகர்ஜி மூலம் கலைஞரிடம் கையளிக்கப்பட்ட பின்பே கலைஞர் உண்ணாவிரத்தை முடித்துக்கொண்டார். எனினும், எப்போதும் போலவே இலங்கை அரசு இந்தமுறையும் தனது வாக்குறுதியைச் சீக்கிரமே மீறியது. ஒரு மாநில அரசாக தி.மு.க. ஈழப் பிரச்சினையில் தனது உச்சபட்ச அழுத்தத்தை ஒன்றிய அரசுக்குக்குக் கொடுத்திருக்கிறது. இந்தியாவில் வேறெந்தக் கட்சியோ இயக்கமோ ஒன்றிய அரசுக்கு இந்தளவுக்கு அழுத்தத்தைக் கொடுத்ததில்லை. இந்திய அரசியல் சாசனத்தில் ஒரு மாநில அரசினதும் முதல்வரினதும் அதிகார எல்லைகள் இவ்வளவே. இந்த அழுத்தங்கள் போதாது, தி.மு.க. மத்திய அரசிலிருந்து விலக வேண்டும் என்றெல்லாம் அப்போது சிலர் விமர்சித்தார்கள். இந்த விமர்சனம் சரியற்றதும் தொலைநோக்கற்றதுமாகும். தி.மு.கவின் பதினெட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை விலக்கிக்கொள்வதால் மத்தியில் காங்கிரஸ் அரசு கவிழ்ந்திருக்காது. மாறாக 1990-இல் நிகழ்ந்ததைப் போன்று தி.மு.க. ஆட்சி தமிழகத்தில் கலைக்கப்பட்டிருக்கக்கூடும். அது தி.மு.கவுக்கு மட்டுமல்ல தமிழகத்திற்கும் கேடாகத்தான் முடிந்திருக்கும். தி.மு.க. பதவி விலகியிருந்தாலும் ஈழத்தில் யுத்தம் தடுத்து நிறுத்தப்பட்டிருக்காது. ஏனெனில், அந்த யுத்தம் சர்வதேச அரசுகளின் நீண்டகாலத் திட்டத்துடன் புலிகளை அழிப்பதற்காக நடத்தப்பட்டது. யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக சர்வதேச அரசுகள் புலிகளுக்கு முன்வைத்த நிபந்தனைகளைப் புலிகளும் ஏற்றுக்கொள்ளாமல் மே 15-வரை போரிட்டுக்கொண்டிருந்தார்கள். ஈழத்தின் எந்த அரசியல் தலைவரோ, அறிவுச் சமூகமோ தி.மு.கவிடம் பதவி துறப்புக் கோரிக்கையை வைத்ததில்லை. புலிகள் கூட வைத்ததில்லை. அந்த நேரத்தில் வேறெவரையும் விடக் கலைஞர் தமிழக ஆட்சிப் பொறுப்பிலிருப்பதுதான் உகந்ததென அவர்கள் கருதினார்கள். 2009 மே மாதம் நிகழ்ந்த நாடாளுமன்றத் தேர்தலில், புலிகளின் தீவிர ஆதரவுத்தளமான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை தி.மு.கவோடு கூட்டணிக்குச் செல்லுமாறு புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அறிவுறுத்தியதாக 2019-இல் லண்டனில் நிகழ்ந்த ‘அமைப்பாய்த் திரள்வோம்’ நூலின் விமர்சனக் கூட்டத்தில் தொல். திருமாவளவன் தெரிவித்தார். போருக்குப் பின்னும் ஈழத் தமிழர் பிரச்சினையில் தி.மு.க. தீவிரமாகவே இயங்கியது. 2011 ஏப்ரல் 27- இல் நடைபெற்ற தி.மு.க உயர்நிலை செயற்திட்டக் குழு கூட்டத்தில் முதல் தீர்மானமாக ‘இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்களுக்காக அய்க்கிய நாடுகள் அமைப்பின் வாயிலாக அமைக்கப்பட்ட விசாரணைக் குழு, இலங்கைப் படையினர் ஈழத் தமிழர்கள் மீது நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலை உறுதி செய்திருக்கிறது. இலங்கை அரசின் போர்க் குற்றங்களுக்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளிலும் இந்திய அரசு உடனடியாக ஈடுபட வேண்டும்’ என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 2012 மார்ச் 1-இல் தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்ட அறிக்கையில் ‘அய்.நா மனிதவுரிமை ஆணையத்தில் கொண்டு வரவுள்ள தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெறும்போது, இந்திய அரசு எக்காரணம் கொண்டும் இலங்கை அரசை ஆதரிக்கக்கூடாது’ என்று வலியுறுத்தினார். தமிழகத்தில் வாழும் ஈழ அகதிகளுக்காகத் தி.மு.க பல்வேறு நலத்திட்டங்களை முன்னெடுத்திருக்கிறது. அப்போதைய தமிழக முதல்வர் கலைஞரின் வேண்டுகோளை ஏற்று எழுத்தாளரும் சட்டமன்ற உறுப்பினருமான து.இரவிக்குமார் ஈழ அகதிகள் முகாம்களைப் பார்வைட்டு 04.07.2006 அன்று முதல்வரிடம் ஓர் அறிக்கையைச் சமர்ப்பித்தார். அது குறித்து து. இரவிக்குமார் விகடன் இதழில் (11.10.2009) இவ்வாறு எழுதியிருந்தார்: “முதல்வர், உடனடியாக சில உத்தரவுகளைப் பிறப்பித்தார். தமிழ் அகதிகளுக்கு அதுவரை மத்திய அரசால் வழங்கப்பட்டு வந்த பணக்கொடை மிகமிகக் குறைவாக உள்ளது என்பதை அறிக்கையில் நான் சுட்டிக்காட்டியிருந்தேன்… அது மிகவும் குறைவு என்பதை உணர்ந்த முதல்வர் உடனடியாகப் பணக்கொடையை இரு மடங்காக உயர்த்தி ஆணையிட்டார். அது மட்டுமின்றி, அகதி முகாம்களின் நிலைமைகளைச் சீர்படுத்திடப் பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் முதல்வர் ஆணையிட்டார். முதல்வரிடம் வழங்கிய அறிக்கையில் நான் முன்வைத்திருந்த கோரிக்கைகள் பலவும் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளன. குடியுரிமை தொடர்பான எனது கோரிக்கையும் இன்று தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்டு மத்திய அரசிடம் அது தொடர்பாக வலியுறுத்துவதற்கு தமிழக முதல்வர் அவர்கள் நடவடிக்கை எடுத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.” ஈழ அகதி மாணவர்ளுக்கு மருத்துவம், பொறியியல், ஐ.டி.ஐ. போன்ற துறைகளில் தி.மு.க. அரசு இட ஒதுக்கீடுகளை வழங்கியிருந்தது. அதன்பின்பு ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க. அரசு, ஈழ அகதி மாணவர்களுக்கு 12-ஆம் வகுப்புக்கு மேல் படிக்க அனுமதி இல்லை என்று 03.09.1991-இல் ஆணை பிறப்பித்தது. மறுபடியும் தி.மு.க. ஆட்சிக்கு வந்துதான் இந்த ஆணையை விலக்கிக்கொண்டது. தி.மு.க என்ற 75 வருட வரலாறு கொண்ட கட்சியின்மீது வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. அந்த விமர்சனங்கள் பலவற்றில் நியாயமும் உண்டு. ஆனால், இலங்கைத் தமிழர்களின் பிரச்சினையைப் பொறுத்தளவில் தி.மு.க. மீதான எதிர் விமர்சனங்கள் செல்லுபடியவற்றவை என்றே நான் கருதுவேன். ஏனெனில், இலங்கைத் தமிழர்கள் மீதான ஒடுக்குமுறைகளையும் இனவழிப்புகளையும் முக்கால் நூற்றாண்டாகத் தொடர்ச்சியாகக் கவனமெடுத்துக் குரல் கொடுத்த இலங்கைக்கு வெளியிலுள்ள ஒரேயொரு கட்சியாக தி.மு.கவே இருக்கிறது. இலங்கையில் இருக்கும் சிங்கள முற்போக்குக் கட்சிகளோ, இடதுசாரி இயக்கங்களோ கூட இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக தி.மு.க. அளவுக்குப் போராடிய வரலாறு கிடையாது. இலங்கைத் தமிழர்களின் அரசியல் உரிமைகளுக்காக தி.மு.க. தன்னால் முடிந்த அனைத்தையுமே செய்திருக்கிறது. இலங்கைத் தமிழர்களின் வரலாற்றிலும் ஈழப் போராட்டத்திலும் தி.மு.கவின் மதிப்பு மிக்க பங்களிப்பு இன்னும் விரிவாகப் பேசப்பட வேண்டிய ஒன்றாகும். இன்னும் துல்லியமாகச் சொன்னால் ஈழத் தமிழர்கள் மீது நேர்மையான கரிசனம் கொண்டு ஈழத்திற்கு வெளியே செயலாலும் சிந்தனையாலும் தியாகங்களாலும் இயங்கிய ஒரேயொரு பேரியக்கம் தமிழகத் திராவிட இயக்கமேயாகும். கட்டுரையை எழுதப் பயன்பட்டவை: 1.எழுதாத வரலாறு – பெ. முத்துலிங்கம். 2. ஈழத்தில் பெரியார் முதல் அண்ணா வரை – நாவலர் ஏ.இளஞ்செழியன். 3.ஒரு பனஞ்சோலைக் கிராமத்தின் எழுச்சி – என்.கே.ரகுநாதன். 4.’நமது மலையகம்’ இணையத்தளம். 5.’நமது’ வலைத்தளம். (‘காலத்தின் நிறம் கருப்பு – சிவப்பு’ தொகுப்பு நூலுக்காக எழுதப்பட்ட கட்டுரை. நவம்பர் 2025). https://www.shobasakthi.com/shobasakthi/2025/12/26/ஈழத்தில்-திராவிடச்-சிந்த/
  10. முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது! முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். 2001 ஆம் ஆண்டு இராணுவத்தால் அவரது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட துப்பாக்கி, 2019 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்ட குற்றவாளியான மாகந்துரே மதுஷிடம் முன்னெடுத்த விசாரணையின் போது கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைக்கு அமைய முன்னாள் அமைச்சர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. குறித்த துப்பாக்கியின் இலக்கங்களைப் பரிசோதித்த போது, அது டக்ளஸ் தேவானந்தாவிற்கு வழங்கப்பட்ட துப்பாக்கி என்பது கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில், அந்தத் துப்பாக்கி எவ்வாறு காணாமல் போனது என்பது குறித்து விளக்கம் அளிக்க அவர் தவறியுள்ளார். இதனடிப்படையில் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். https://adaderanatamil.lk/news/cmjmvpnmk035so29nsghseyvc
  11. முட்டி மோதாமலேயே வென்றான் காளமாடன்! Ko.Ragupathi திரையில் நீலச் சுவாலை கலை இலக்கியப் படைப்புகளையும் திரைப்படங்களையும் ‘கற்பனை’ எனக் கூறினாலும் அவற்றுக்குள் சமூகத்தின் எதார்த்தங்களும் இருக்கின்றன. இந்த அடிப்படையைக்கூட அறியாமல் ‘உன்குழலில்’ (YouTube) திரைப்படங்களை ‘மதிப்பிடு’கின்றனர். தனக்கு மாறுபட்ட அரசியல் நிலைப்பாட்டைக் கொண்ட ஒருவர் ‘பைச’னை வரவேற்றதால் அப்படத்தைச் சந்தேகத்துடன் பார்க்கச் சென்றதாக ‘உன்குழலர்’ ஒருவர் கூறியுள்ளார். ஜாதியக் கட்டமைப்பையும் தென்மாவட்டங்களின் ஜாதிய மோதல்களின் பின்னணியை மட்டுமன்றி, கபடியின் விதிகளைக்கூட அறியாதோர்தான் ‘பைச’னை ‘மதிப்பிட்டுள்ளனர்’. ‘விளையாட்டு வடிவம்’ (sports formula) திரைப்படத்துக்கு வெற்றியைத் தருமென்ற நம்பிக்கையில் ‘பைசன்’ உருவாக்கப்பட்டதாகச் சிலர் கருதுகின்றனர். திரைப்படங்கள் அரசியல் பொருளாதார ஆதாயத்துக்கான கலைத் தொழிலாக இருப்பதை மறுக்க இயலாதுதான். ஆனால் அதேசமயம், ‘சார்பட்டா பரம்பரை’ (2021), ‘ப்ளூ ஸ்டார்’ (2024), ‘லப்பர் பந்து’ (2024), ‘பைசன்’ (2025) போன்ற சமகால திரைப்படங்களை வெறும் வணிகச் செயலாகவும் குறுக்க இயலாது. ஜாதிய முரண்கள் விளையாட்டுகளிலும் விளையாடுவதை அத்திரைப்படங்கள் உரையாடுகின்றன. அவை வணிகச் செயலாக இருந்தாலும்கூட நமக்குச் சிக்கல் இல்லை. ஆர்ய ப்ராமண, ஜாதிதிராவிட இயக்குநர்கள் திரைப்படங்களை இயக்கி பெரும் முதலாளிகளாக மாறுகிறபோது ஆதிதிராவிட இயக்குநர்களும் அவ்வாறு மாறுவதில் எந்தத் தவறும் இருக்க இயலாது. தலித் இயக்குநர்கள் அவர்களின் சமூகத்தைப் படமாக்கிப் பணமாக்குகிறார்கள் எனக் குற்றம் சுமத்துவதே தலித் வெறுப்பு மனநிலைதான். பொதுவாகத் திரைப்படங்களின் ரசனைக்காகவும் பொழுதுபோக்குக்காகவும் எதிர்பார்ப்பு இருக்கும்; தலித் இயக்குநர்களின் திரைப்படங்கள்தான் ‘ஜாதி அரசியலுடன்கூடிய’ ரசனைக்காக எதிர்பார்க்கப்படுகின்றன; அவை சலசலப்பையும் விவாதத்தையும் உருவாக்குகின்றன. அம்பேத்கர் நூற்றாண்டையொட்டி வீரியமாக எழுந்த தலித் இலக்கியங்களும் பனுவல்களும் விளைவித்த விவாதம் முனை மழுங்கிய இக்காலத்தில் அது திரைத்துறையில் சுடர்விட்டு எரிகிறது. இதைப் பற்ற வைத்தது இயக்குநர் பா.இரஞ்சித்தும், அவருடைய நீலம் நிறுவனமும் என்ற கூற்று மிகை மதிப்பீடு அல்ல. ‘நான் யார்’ எனத் தன் அடையாளத்தை வெளிப்படுத்தியதும், ‘இதைப் பேசுவது எதற்காக’ எனத் தன் அம்பேத்கரிய அரசியலைப் பகிரங்கமாகப் பொதுவெளியில் அறிவித்ததும் ஜாதிய சமூகத்தில் அதிர்வை ஏற்படுத்தியது. நீலம் அறிமுகம் செய்த மாரி செல்வராஜ் ‘பரியேறும் பெருமாள்’ வழி ஜாதி உரையாடலைத் தொடங்கினார். தன்னுடைய மக்களின் வலியை, வேதனையைத் தொடர்ந்து திரைப்படமாக்குவேன் என அப்பட்டமாக அறிவிக்கிறார். அவர் பிறந்த சமூகத்துக்குள் ஒரு பிரிவினர் தலித் என்ற சொல்லையும், ஒடுக்கப்பட்டோர் என்ற சமகால எதார்த்த நிலையையும் மறுக்கின்றனர். தாங்கள் சேர, சோழ, பாண்டியர் ஆகிய மூவேந்தர் என்ற ‘அரசாண்டப் பரம்பரை’யினர் உரிமையைக் கோருகின்றனர். இவற்றின் தொடர்ச்சியாக அரசின் ‘பட்டியல் வகைமை’யிலிருந்தே வெளியேற வேண்டுமென்ற இயக்கத்தையும் முன்னெடுக்கின்றனர். இந்த நிலைப்பாடுகளுக்கு முரணாக மாரி செல்வராஜ் தானும் தன் சமூகத்தினரும் ஒடுக்கப்பட்ட, ஒடுக்கப்படுகிற அவலத்தைப் பேசுகிறார். ஒடுக்கப்படுகிற மக்களின் எந்தச் சிக்கல்களையும் எந்த வடிவங்களில் பேசினாலும் அவர்களைச் சுரண்டுகிற, ஏமாற்றுகிற, தாக்குகிற ஆதிக்க ஜாதிகளையும் பேசுவது தவிர்க்க இயலாது. இதனால் சுயஜாதியும், ஆதிக்க ஜாதிகளும் அவரைக் கண்டிக்கின்றனர். எழுகின்ற எதிர்ப்புகளை எதிர்கொண்டு எதார்த்தங்களை எடுத்துரைப்பேன் என அறிவிக்கும் மாரி செல்வராஜின் பெருங்கோபமும் அரசியலும் திரைப்படங்களாய் வெளிப்படுகின்றன. அவருடைய ‘பரியேறும் பெருமாள்’ (2018), ‘கர்ணன்’ (2021), ‘மாமன்னன்’ (2023), ‘வாழை’ (2024), ‘பைசன்’ (2025) ஆகிய ஐந்து திரைப்படங்களும் ஒடுக்குமுறைகளின் வெவ்வேறு வடிவங்களையும் அவற்றுக்கெதிராகப் போராடுவதையும் கருவாகக் கொண்டிருக்கின்றன. திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரானர் பல்கலைக்கழகத்தில் 2002ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரை ‘தமிழ்நாட்டில் தேவேந்திரகுல வேளாளர் இயக்கம், 1920 – 2000’ என்ற தலைப்பில் கா.அ.மணிக்குமார் நெறியாள்கையில் மேற்கொண்ட ஆராய்ச்சியால் முனைவர் பட்டம் பெற்ற நான், மாரி செல்வராஜின் திரைப்படங்களைத் தென்மாவட்டங்களின் ஜாதிய எதார்த்தத்தின் பின்புலத்தில்தான் மதிப்பிடுகிறேன். ‘பரியேறும் பெருமா’ளில் உரையாடலை முன்வைத்த மாரி செல்வராஜ், ‘கர்ண’னில் உரசலைத் தூண்டுகிறாரோ எனச் சிலர் விமர்சித்தபோது, “அத்திரைப்படம் சமூக எதார்த்தத்தை, வரலாற்றை, உண்மையைப் பேசுகிறது” என இடதுசாரி தோழர்கள் சிலரிடம் வாதித்தேன். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் விழுப்புரம் கிளை சார்பில் மதுசூதனன் ஏற்பாடு செய்த இணையக் கூட்டத்திலும் அவ்விவாதத்தை வலுப்படுத்தினேன். ‘கர்ண’னின் கருப்பொருள்தான் ‘மண்டேலா’ (2021) திரைப்படத்திலும் பேசப்பட்டிருப்பதால் ‘கர்ணனும் மண்டேலாவும் பொதுவுரிமையின் கலகக் குரல்கள்’ என்ற கட்டுரையைக் காலச்சுவடு (ஜூன் 2021) இதழில் எழுதினேன். ‘பைசன் என்ற காளமாடன்’ என்னுள் உணர்ச்சிவய மனநிலையையும் ஏற்படுத்தியது. காளமாடனை உருவாக்கிய தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் மர்காஷியஸ் பள்ளியில்தான் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை நானும் பயின்றேன். அப்பள்ளியின் கால்பந்தாட்டக் குழுவிலும் இடம்பெற்றேன். மர்காஷியஸ் கல்லூரியில் இளங்கலைப் பட்டத்தில் சேர்ந்தபோதும் கால்பந்தாட்டக் குழுவில் இணைந்து சில மாதங்கள் விளையாடினேன். கால்பந்தாட்ட வீரர்கள் அனைவருக்கும் பூட் கொடுத்த உடற்பயிற்சி ஆசிரியர் சில்வியா, அதை எனக்குத் தராதபோதுதான் பாகுபாட்டை உணர்ந்தேன். இதைக் கிறிஸ்துவ தேவேந்திர சமூகத்தைச் சேர்ந்த தேவா, தேவர் சமூகத்தைச் சேர்ந்த கணேசன் ஆகியோரிடம் கூறினேன். தேவா எனக்கு இலவசமாக பூட் தந்தார். பாகுபாடு இருப்பதை அவர்கள் ஒப்புக்கொண்டனர். அனுபவத்திலும் வயதிலும் என்னைவிட மூத்தவர்களான அவர்கள் நட்சத்திர வீரர்களாகப் பிரகாசித்ததால் “வேலியிட இயலாது நிலையில் இருந்தனர்.” இச்சிக்கலைக் கல்லூரியின் கபடி வீரர்களும், தேவேந்திரர் சமூகத்தைச் சேர்ந்த என் நண்பர்களுமான தேமாங்குளம் சுந்தர், செம்பூர் ஜூலியஸ் போன்றோரிடம் கூறினேன். கல்லூரியின் கபடி அணிக்குத் தேவேந்திரர் சமூக மாணவர்களே பலமானவர்கள் என்பதால் ஜாதிய பாகுபாடு இல்லை எனப் பதிலளித்தனர். நானும் அவ்வப்போது கபடி விளையாடினேன். மணத்தி கணேசனையும் கல்லூரியில் பயின்ற காலத்திலேயே அறிந்தேன். ஜாதி பாகுபாட்டால் குழுவிலிருந்து வெளியேறி விளையாடுவதையே முற்றிலும் நிறுத்தினேன். விளையாடிய நேரத்தைத் தட்டச்சும் சுருக்கெழுத்தும் படிக்கச் சென்றேன். முனைவர் பட்ட ஆராய்ச்சிக் காலத்தில் தலித் இலக்கிய எழுச்சியின் தாக்கத்தால் பள்ளி கல்லூரி அனுபவங்களுடன் வேறுசில பாகுபாட்டு அனுபவங்களையும் இணைத்து ‘அந்தப் பாவிகளைத் தண்டிப்பீராக!’ எனத் தலைப்பிட்டுக் குறுநாவல் எழுதினேன். அப்பிரதியைத் தொலைத்துவிட்டேன்! என் சுய அனுபவங்களால், பிற ஜாதியைச் சேர்ந்த அனைவருமே பாகுபாட்டைக் கடைபிடிப்பர்; பகையுடன் அணுகுவர் எனக் கூற இயலாது. ஏனென்றால், மர்காஷியஸ் பள்ளியிலும் கல்லூரியிலும் பிற சமூகத்தைச் சேர்ந்த நித்தியானந்தன் (விலங்கியல்), ஃப்ரடெரிக் (இயற்பியல்), பியூலா (தமிழ்), ஜாஸ்மின் (வரலாறு), கிறிஸ்டோபர் (வரலாறு), பீட்டர் (வரலாறு) போன்றோர் படிப்பில் என் ஆர்வத்தைக் கண்டு என்னை ஊக்கப்படுத்தினர்; அரவணைத்தனர். ஆசிரியர்களில் ஒரே ஜாதியைச் சேர்ந்த ஒருவர் விளையாட்டில் பாகுபாட்டையும், சிலர் படிப்பில் ஊக்கப்படுத்தலையும் பின்பற்றிய பின்னணியிலும், தேவேந்திரர் சமூக ஆராய்ச்சி அனுபவத்திலும்தான் காளமாடனை மதிப்பிடுகிறேன். மர்காஷியஸ் பள்ளியின் பிரார்த்தனை நேரத்தில் வகுப்பறையில் பிறரின் சாப்பாடு பாத்திரங்களைத் திறந்து தன் பசியை அடக்கும் காளமாடனைக் கண்டிக்கும் உடற்பயிற்சி ஆசிரியர் சந்தனராஜ், அவனுடைய கபடி ஆர்வத்தைக் கண்டுணர்கிறார்; அவனை அரவணைத்து, ஊக்கப்படுத்தி, வழிநடத்துகிறார். சந்தனராஜின் உடல்மொழியும் வார்த்தைகளும்கூட கனக்கச்சிதமாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களின் ஆசிரியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. இவரைப் போல் ‘கடா மீசை’யுடன் ஒர் உடற்பயிற்சி ஆசிரியர் நான் பயின்றபோது மர்காஷியஸ் பள்ளியில் இருந்தார். அவருடைய பெயர் மோகன் என்பது என் நினைவு. பிறர் உணவை உண்ணும் காட்சி இடம்பெற்றிருக்க வேண்டாம் எனச் சிலர் கூறுகின்றனர். பள்ளி, கல்லூரிகளில் அனுமதியுடன் அல்லது அனுமதியில்லாமல் பிறரின் உணவை உண்ணுவது இயல்பாக நடைபெறும். அந்தப் பிறர் நண்பர்களாகவும் வகுப்புத் தோழர்களாகவும் இருப்பர். இச்செயலைத் ‘திருட்டு’ என எவரும் கருதவில்லை. விளையாடிய காலங்களில் எனக்கும் இந்த அனுபவம் உண்டு. கொடும்பசியில் இருக்கும் விளையாட்டு வீரனுக்கு ஒருடிபன் பாக்ஸ் உணவு போதுமானது அல்ல; கூடுதலாகத் தேவைப்படுவது இயல்புதானே. அவனுடைய கொடும்பசிக்காகப் பச்சாதாபம் கொள்வதுதானே சரியாக இருக்க இயலும்! இதைப் போன்று, 300 பரோட்டாக்களைச் சாக்கு மூட்டையில் கொடுக்கும் காட்சியும் விமர்சிக்கப்படுகிறது. தென்மாவட்டக் கிறிஸ்துவ தேவாலயங்களில் வருடத்தில் ஏதாவது ஒரு குறிப்பிட்ட நாள் ‘அசனம்’ என்ற பெயரில் உணவு வழங்குவது இன்றுவரை பின்பற்றப்படுகிறது. இது சமத்துவத்துக்கான செயலாகத் தோன்றியிருக்கலாம். அதைப் புனிதமாகக் கருதுவர். அனைத்து ஜாதியினரும் வேறுபாடற்றுச் சமத்துவமாய் ‘அமர்ந்து’ உண்பதும், ‘அசனச் சோற்றைத்’ தோளிலிடும் துண்டுகளில் வாங்கி பொதிந்துச் செல்வதும் நடைபெறும். நகர்ப்புறங்களில் பிளாஸ்டிக் பைகளில் பார்சல் டீ வாங்கும் பழக்கமுடைய இக்காலத்தில் சாக்கு மூட்டை பரோட்ட சிக்கலானது அல்ல. தென்மாவட்டங்களில் ஏப்ரல், மே மாதங்களின் இரவு நேரங்களில் நடத்தப்படும் ‘மின்னொளி கபடி போட்டி’களைக் காண்பதற்கெனக் கூட்டம் கூடும். எங்கள் கிராமத்திலிருந்தும் சென்றிருக்கிறோம். ஒவ்வொரு கிராமங்களும் குழுக்களும் இதில் விளையாடினர். இது தனித்த ஜாதியாகவும், ஜாதிகள் கலந்தும் இருக்கும். சாத்தான்குளம், மெஞ்ஞானபுரம் கபடிக் குழுக்களில் முக்கியமான காளமாடன்கள் சிலர் இருந்தனர். தனியார் கம்பெனிகளும் கபடி குழுக்களைக் கொண்டிருந்தன. விளையாட்டுத் திறமையால் கபடி அணியில் சேர்க்கப்பட்டு அக்கம்பெனிகள் வேலையும் கொடுத்தன. பல்கலைக்கழக, மாநில அளவிலான வீரர்களுக்கு அரசு வேலை எளிதாகக் கிடைத்ததும் கால்பந்து, கபடி விளையாட்டுகளில் பங்கெடுப்பதற்கான முக்கியக் காரணமாக இருந்தது. இந்த நிலைக்கு முன்னேறுவது எளிதானது அல்ல. ஜாதி மோதல் கூர்மைபெற்ற 1990களில் ஜாதிகளுக்குள் பகை புகைந்தது; மோதல் வெடித்தது. நட்பும் பகையும் மின்னலாய் வந்துசென்று ஏற்படுத்திய தாக்கத்தின் பின்புலத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் விளையாட்டு வீரராகவும் நட்சத்திரமாகவும் உருமாறுவது கடினம். விளையாட்டில் பதுங்குதல், பாய்தல், பாதுகாத்தல் உள்ளிட்ட நுணுக்கங்களை வீரனுக்குக் கற்பிக்கும் ஆசிரியர் அவசியம். அவனுக்கு உணவு, உடை உட்பட சில பொருட்கள் வேண்டும். அவற்றை வாங்கும் பொருளாதாரச் ‘சக்தி’ ஒடுக்கப்பட்டோருக்கு இல்லை. இவை புற ஜாதிகளிடமிருந்து கிடைக்கின்றன. காளமாடன் கபடி வீரனாக உருவாவதிலும் அவனை அங்கீகரிப்பதிலும் ஜாதியின் உள்முரண்தான் முக்கியத் தடையாக இருக்கிறது. முந்தைய நான்கு படங்களிலும் ஜாதியின் புறமுரணைப் பேசிய மாரி செல்வராஜ், முதன்முதலாகக் காளமாடனில் அகமுரணைக் காட்சிப்படுத்தியுள்ளார். ஆசிரியரின் ஆதரவில் வயிறாற பரோட்டா உண்ணும்போதுதான், தன் முன்னே ஒருவர் அறுத்துக் கொல்லப்படுவதைக் கண்டு ‘காளமாடனே’ அஞ்சுகிறான்; பதறுகிறான். கொல்லப்பட்டது தன் ஜாதியைச் சேர்ந்தவர் என்றபோதிலும் அச்சம்பவத்தில் காளமாடன் சாட்சியாய் மாறி அவன் வாழ்க்கைத் திசை திரும்பாதிருக்க அந்த ஆசிரியர் காளமாடனைக் காப்பாற்றுகிறார். ஜாதி மோதலில் ஏதாவது ஒருவகையில் வழக்கில் சிக்கியவர்களின் வாழ்க்கை சீரழிந்ததைப் பார்த்தால் இக்காட்சியின் முக்கியத்துவம் விளங்கும். விளையாட்டும் வினையாவதை அனுபவத்தில் உணர்ந்த காளமாடனின் தந்தை பசுபதி, மகன் விளையாடுவதை மறுக்கிறார். அப்போதும் ஆசிரியர்தான் விளையாட உதவுகிறார். இக்காட்சிகள் ஒருவேளை ‘உண்மைச் சம்பவங்கள்’ என்றால், காளமாடனின் ஆசிரியருக்கு இந்த நாடே நன்றிக் கடன் பட்டிருக்கிறது! உள்ளூரின் உள்பகையால் ஊர்க் கபடிக் குழுவிலேயே காளமாடனை வீரனாக அங்கீகரித்துச் சேர்க்க மறுப்பதும் நிகழ்கிறது. ஒரேநேரத்தில் உள்பகையின் புறக்கணிப்பையும், புறஜாதியைச் சேர்ந்த பண்ணையாரின் ஆதரவையும் பெறுகிறான். வீரனின் திறமையைத்தான் பார்க்கிறார்; அவரின் ஜாதியை அல்ல. இதைப் புரிய வைக்க ஆசிரியரும் பண்ணையாரும் முயற்சிக்கின்றனர். இது காளமாடனின் தந்தைக்கு அச்சமாகவும் நம்பிக்கையற்றதாகவும் இருக்கின்றன. நம்பிக்கைக்குப் பின் ஏற்படும் ஜாதிய தாக்குதலால் காளமாடனைப் பண்ணையாரின் ஆட்கள் சந்தேகித்தாலும், ‘வீரன்’ துரோகம் செய்ய மாட்டான் எனப் பண்ணையார் நம்புகிறார்; அவனைப் பாதுகாப்பாக அனுப்புகிறார்; தொடர்ந்து விளையாட அறிவுறுத்துகிறார். அச்சமும் சந்தேகமும் ஜாதியம் உற்பத்தி செய்ததாகும். காளமாடன் கபடி நட்சத்திரமாகி இந்திய அணியில் சேர்வதற்குப் புறஜாதியினரின் ஆதரவுதான் முக்கியப் பங்காற்றுகிறது. ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் முன்னேற்றத்துக்கு அவர்களைச் சுரண்டுகின்ற ஆதிக்க ஜாதியினர்களே உதவுவார்களா? ஜாதிய அமைப்பு, ஜாதிகளுக்கிடையே பாகுபாட்டையும் பகையையும் விளைவித்தாலும் திறமைக்கான ஆதரவைப் பிற ஜாதிகளின் ‘தனிநபர்கள்’ கொடுக்கச் செய்கிறது. நான் பிறந்துவளர்ந்த கிராமத்தை என் தந்தை கோ.பெ.கோயில்பிள்ளை புதிதாக உருவாக்கிய காலத்தில், எங்கள் உறவினர்களுக்குத் தன் நெருங்கிய நண்பரான டி.கே.செல்லத்துரை நாடார் செய்த உதவிகளுக்காக ‘டிகேசி நகர்’ என என் தந்தை பெயரிட்டார். எனக்கும் பிற ஜாதியினரின் உதவிகள் முக்கியமானவை. எனவே, ஒடுக்கப்பட்டவர்களின் முன்னேற்றத்தில் பிற ஜாதி தனிநபர்களின் ஆதரவு கிடைப்பது இயல்பு. சுரண்டும் ஜாதிகளிலும் இரக்கமும் மனிதநேயமும் இருக்கின்றன. பண்ணையார் ‘திறமையை’ அங்கீகரிப்பதில் ஜாதியைப் புறக்கணிக்கும் வகையைச் சேர்ந்தவர். சுயஜாதித் தலைவரும் பண்ணையாரும் எதிரிகளாக இருந்தபோதிலும் காளமாடனின் விளையாட்டுத் திறமையை அங்கீகரிப்பதில் ஒத்தச் சிந்தனையுடன் இருக்கின்றனர்! அத்திறமையை அவனுடைய ஜாதியினர் அங்கீகரிக்க மறுக்கின்றனர்; இழிவாகப் பேசுகின்றனர். இதைக் கண்டிக்கும் ஜாதித் தலைவர், காளமாடன் அவனுடைய திறமையால்தான் நிற்கிறான்; அதுவே சமூகத்தின் பெருமை எனக் கூறுகிறார். இத்தகைய தனிநபர்கள், திறமையை ஜாதியிலிருந்து மதிப்பிடவில்லை; திறமையைத் திறமையாகப் பார்க்கிறபோது ஜாதியைப் புறக்கணிக்கின்றனர். உடற்பயிற்சி ஆசிரியரும், பண்ணையாரும், விளையாட்டுத் தேர்வுக்குழு நபரும் பிற ஜாதிகளைச் சேர்ந்தவர்கள் என்றபோதிலும் திறமையைத் திறமையாகப் பார்த்ததால் அத்திறமை தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதற்காகப் போராடுகின்றனர். இதனால் காளமாடன் நட்சத்திரமானான். திறமைதான் திறமையை அங்கிகரீக்கும்; திறமை ஜாதியையும் புறக்கணிக்கும் என்பதைத் தெளிவாகக் காட்சிப்படுத்தியது மாரி செல்வராஜின் தனித்திறமை! அது இப்படத்தின் தனிச்சிறப்பு! “நான் அல்ல, கண்ணகிநகர்தான் பிராண்ட்” எனக் கார்த்திகா அறிவித்த விளையாட்டின் ‘திறமை’ அரசியல்தான் காளமாடனின் அரசியலும். ஏககாலத்தில் காளமாடன் நிழலாகவும், கண்ணகிநகர் கார்த்திகா நிஜமாகவும் ஒடுக்கப்பட்டோரின் திறமைகளை வெளிச்சமாக்கியுள்ளனர். ஒடுக்கப்படும் சமூகங்களின் வலியை அவர்களை வதைப்பவர்களால் புரிந்துகொள்ளவே இயலாது என முன்வைக்கப்படும் விவாதத்துக்கு எதிராக அதைப் புரிந்துகொள்ள இயலும் என்று காளமாடன் பறைசாற்றுகிறான். பகையின் பரிமாணம் பள்ளிக்கூடத்திலிருந்து பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடி இந்தியாவுக்கு வெற்றியைத் தேடித் தரும்வரை காளமாடன் ஜாதிப் பாகுபாட்டை அனுபவித்ததாகக் காட்சிகள் இல்லை. காளமாடனைச் சுற்றி நிகழும் சம்பவங்கள் அவனைப் பாதிக்கின்றன; விளையாட்டுக்குத் தடைகளாக இல்லை. ஒருவன் தன்னைக் கட்டிப்பிடிப்பதாகவும் மற்றொருவன் கத்தியால் குத்துவதாகவும் இதனால் யாரிடம் பேசுவது, சிரிக்கிறது, பழகுவது என ஜாதியரசியல் தெரியாத வெள்ளந்தி அவன். கபடியில்தான் எவராலும் கட்டுப்படுத்த இயலாத காளமாடன், ஆட்டைப் பலியிட கோயிலுக்குச் செல்கிறபோது வேற்று ஜாதியைச் சேர்ந்தவராலும், கிராமத்தில் தன் காதலியின் அண்ணனாலும், இந்திய அணியில் விளையாடச் செல்கிறபோது காவலர்களாலும் தன் தந்தை தாக்கப்படுகிறபோது காளமாடன் சீறிப் பாய்ந்து எதிர்த்துத் தாக்குகிறான். தன் தந்தையைப் பாதுகாப்பதே இதன் நோக்கம்; வேறு அரசியல் இல்லை. உண்மையில் காளமாடனுக்கு அரசியல் தெரியவில்லை; குழந்தைப் பருவத்தில் ஒரு முத்தம் மட்டும் கொடுத்தவனுக்கு அதற்குப் பின் காதலும் வரவில்லை. மர்காஷியஸ் பள்ளியின் விளையாட்டு காலரியில் அமர்ந்து சைட் அடித்த காட்சிகளும் இடம்பெறவில்லை. இந்த அனுபவங்கள்கூட காளமாடனுக்கு இல்லை போலும்! வயதுக்கு மூத்தப் பெண்களைத் திருமணம் செய்ததும், குழந்தைக் கணவர் வழக்கமும் சில சமூகங்களில் இருந்தன. இவற்றைச் சிக்கலாக மாற்றியிருக்க வேண்டாம். தேசிய வீரனாகச் செல்கிறபோது அவனது தந்தை காவலர்களால் தாக்கப்படுவதும், காளமாடன் எதிர்த்துத் தாக்குவதும் அந்தச் சூழலுக்குத் தர்க்கமற்ற காட்சி. இந்திய அணிக்குத் தேர்வு செய்யப்பட்டவர் ஜாதிய மோதல் சூழலில் அரசின் உரிய ‘மரியாதையுடன்’ காவலர்களின் பாதுகாப்பிலேயே சென்றிருக்க முடியும். இவ்விடத்தில் காவல்துறையுடன் மோதலை ஏற்படுத்தியது அந்தச் சூழலுக்குத் தர்க்கமற்ற, பொருத்தமற்ற, அவசியமற்ற காட்சி. சில சண்டைக் காட்சிகளையும் தவிர்த்திருக்கலாம். காளமாடன் எப்போதுமே கோபத்துடனேயே இருக்கிறான். அவன் முகத்தில் சிரிப்பே இல்லை. ஒடுக்கப்படுகிற சமூகங்களை மகிழ்ச்சியாக்கும் அவர்களுக்கு இடையேயான கேலியையும் கிண்டலையும் காட்சிப்படுத்தாமல் அவற்றை மாரி செல்வராஜ் விலக்குவது விளங்கவில்லை; அது வியப்பாகவும் இருக்கிறது. ‘பைச’னில் காட்டப்பட்ட இரு ஜாதிகளுக்கும் இரண்டுக்கும் மேற்பட்ட தலைவர்கள் அக்காலத்தில் இருந்தனர். வாலிபர்களும் மாணவர்களும்கூட அவரவர் ஜாதி தலைவர்களுடன் தொடர்பில் இருந்தனர். வெவ்வேறு ஜாதி நபர்களுடன் நட்பாகவும் பழகினர். என் நண்பன் கண்ணன் பண்ணையாரைப் பார்க்கச் சென்றதாக அவ்வப்போது கூறியது என் நினைவில் உள்ளது. தென்மாவட்ட ஜாதி மோதல்களின் பரிணாமமும் பரிமாணமும் ஒற்றைத் தன்மை கொண்டவை அல்ல; அவை பன்மையானவை. இந்தப் படத்தின் ‘பகை’, தாமிரபரணி பாசனத்தின் தென்கிழக்குக் கடைகோடிக்கு உரித்தானது. இத்தாக்கம் பிற பகுதிகளில் இல்லை. பிற்காலத்தில் இது வேறுவடிவம் பெற்றது. ஆனால், “நான், நீங்க, தாத்தனுக்கும் தாத்தன் பிறக்கிறதுக்கு முன்னாடியே பகையும் பழியும் இருப்ப”தாகச் சித்திரிப்பது அவ்விரு ஜாதிகளுக்குமான பகை நிரந்தரமாக நீடிக்கிற தோற்றத்தைத் தருகிறது. இது சிக்கலுக்குரியது. பைசனின் கதைக்களம் நெல், வாழை என விவசாயமும் விற்பனையும் நிகழும் பகுதி. இவ்விரண்டும் வெவ்வேறு ஜாதியினரால் செய்யப்படுகின்றன. வியாபாரிகளும் விவசாயிகளும் ஒருவர் மற்றொருவரைச் சார்ந்து வாழ வேண்டிய நிலை இருப்பதால் இணக்கமும் பிணக்கமும் உண்டு. இங்கு நிலவுடைமையாளர்களாக இருந்த பிராமண, வெள்ளாள ஜாதிகள் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியக் காலத்திலேயே குடிபெயர்ந்து நவீன வாழ்க்கைக்குள் சென்றதால், அந்நிலத்தில் விவசாயம் செய்த தேவேந்திரர்கள் நிலவுடைமையாளர்களாகினர். அங்குச் சில இடங்களில் நாடார்களில் சிலரும் பண்ணையார்களாக இருந்தனர். காளமாடனின் கந்தசாமி, பண்ணையார்களின் பிரதிநிதியே. அவருடைய ஆட்களின் பொருளாதார நிலை அவரைப் போன்றது அல்ல. அந்த “ஆட்களின்” வீடுகளையும், உடற்பயிற்சி ஆசிரியரின் வீட்டையும், கிராமத்தையும் காட்சிப்படுத்தியிருந்தால் ஜாதியின் உண்மை நிலை பார்வையாளர்களுக்கு நன்கு புரிந்திருக்கும். பிற்காலத்தில்தான் பண்ணையார், ஜாதியின் பிரதிநிதியாக உருமாறுகிறார். அதற்கான அரசியல் பொருளாதார காரணிகள் வேறு. ஆராய்ச்சிக் காலத்தில் அப்பகுதிகளில் மேற்கொண்ட கள ஆய்வில் அங்கு பண்ணையார், பண்ணையாள் என்ற ‘வர்க்க’ முரண் இருப்பதை அறிந்தேன். வர்க்க முரண்தான் சமத்துவ உரிமைக்கான போராளியாகப் பாண்டியராஜாவையும் உருவாக்கியது. தஞ்சாவூர் மாவட்டத்தில் பண்ணையடிமை முறைக்கு எதிரான போராட்டத்துக்கு கம்யூனிஸ்ட்டுகள் தலைமை தாங்கியதால் பிற்காலங்களில் அது ஜாதிய மோதலாக உருவாகவில்லை. தென் மாவட்டங்களில் வர்க்க அணிதிரட்டலின் பலகீனத்தால் அது ஜாதிய மோதலாக உருமாறியது. இது மேலும் ஆய்வுக்கு உரியதுதான். இருப்பினும், மாரி செல்வராஜ் கூறுவதுபோல் அது முப்பாட்டன் காலத்துக்கும் முந்தைய பகை அல்ல. ஏனென்றால், பகை உருவாவதற்குப் பொருளாதார ஆதிக்கமும் (நிலவுடைமை, முதலாளித்துவம்) அல்லது இவ்வமைப்புகளின் அதிகாரத்தின் பிரதிநிதியாக இருப்பதும், இவற்றால் ஆளப்படுகிற குழுக்கள் இருப்பதும் அவசியம். இவ்வமைப்பு முரண்களை உருவாக்கும். ‘பைச’னில் கந்தசாமியைப் பிரதிநிதித்துவம் செய்கிற ஜாதியினர் அடிப்படையில் ஜாதிய கிராம கட்டமைப்புக்குள் இல்லை. அவர்கள் தனித்த கிராமங்களில் சுயமாக, சுதந்திரமாக வசிக்கின்றனர். தென்மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் இவ்விரு பிரிவினருக்கும் இடையேயான உறவு ஆதிக்கமும் சார்பு நிலையையும் கொண்டிருக்கவில்லை. கந்தசாமி பிரதிநிதித்துவம் செய்கிற ஜாதியில் பல பிரிவுகள் இருந்தன. அவர்களில் நிலவுடைமையாளர்களும் ஒரு பிரிவினர்; இவர்களுக்கும் விவசாயக் கூலிகளுக்குமான முரண் இயல்பானதே. இதுவும்கூட அந்தப் பகுதிகளுக்கு மட்டுமே உரியது. இது சுதந்திர இந்தியாவில் தோன்றிய முரண்தான். அது பாண்டியராஜா கொல்லப்படுவதுவரை நீடித்தது. ஒரு மூலையில் தோன்றிய வர்க்க முரண், அதற்குத் தொடர்பற்ற ஜாதிகளின் பகையாக மாறியதில் சில காரணிகள் உண்டு; இதைத் தனித்து விவாதிக்க வேண்டும். கந்தசாமிக்கும் பாண்டிராஜாவுக்கும் இடையிலான மோதலுக்கான அடிப்படைக் காரணத்தைக் காட்சிப்படுத்தாமல் மோதலை மட்டுமே காட்சிப்படுத்தியது, இரு ஜாதிகளுக்குமான “முப்பாட்டன் காலத்துப் பகை”யாகக் கூறுவது ஜாதியச் சிக்கலை மேலும் வலுப்படுத்துகிறது. காளமாடனுக்கே ஜாதியச் சிக்கல் புரியாதபோது, இதன் அரிச்சுவட்டை அறியாதோர் அதை விளங்குவது கடினம். ‘பைசன்’ என்ற பெயரைப்போல் உள்ளடக்கமும் அனைவரும் உள்வாங்கும் விதமாகக் காட்சியமைத்தல் அவசியம். பாண்டியராஜா, கந்தசாமி ஆதரவாளர்களாலும், கந்தசாமி காவலர்களாலும் கொல்லப்படுகிற சம்பவங்களுக்குப் பின்புலமாகச் செயல்பட்டது ஜாதியின் பிரதிநிதிகள்தான் என்பதைக் காட்சிப்படுத்தியுள்ளார். இவை, சுய ஜாதியினர் நம்பிக்கையானவர்கள் அல்லர்; அவர்கள் துரோகிகளாகவும் மாறுவர் என்பதற்குச் சாட்சி. ஒவ்வொரு துறைகளிலும் காளமாடன்கள் இயல்பிலேயே திறமையானவர்களாக இருப்பினும் அவர்கள் முட்டி மோதிதான் வெல்கிறார்கள். ஆனால், பைசன் என்ற காளமாடன் இதைச் செய்யாமலேயே வெற்றிபெறுகிறான். அவனுக்காகப் ‘பிறர்’தான் முட்டிமோதுகின்றனர்; அவன் விளையாட்டில்தான் காளமாடன். காளமாடன் பொதுச் சமூகத்தில் முன்வைக்கும் முக்கியக் கேள்வி: “சுயஜாதி அடையாள அணிதிரட்டல் அவசியமா?” https://theneelam.com/bison-review/
  12. ஈழத்தமிழர்களின் கல்வி மற்றும் கலாச்சார மையமாகத் திகழ்ந்த யாழ்ப்பாணம், இன்று ஒரு பாரிய சமூகச் சரிவைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, யாழ் இளைஞர்களிடையே பரவி வரும் சோம்பேறித்தனமும், அதற்குத் தீனி போடும் புலம்பெயர் உறவுகளின் ‘முட்டாள்தனமான’ பண உதவியும் ஒரு தலைமுறையையே அழிவின் விளிம்பிற்குத் தள்ளிக் கொண்டிருக்கின்றன. யாழ்ப்பாணத்தின் வீதிகளில் இன்று வேலைக்கு ஆட்கள் தேவை என்ற விளம்பரப் பலகைகளை சாதாரணமாகக் காணலாம். ஆனால், எங்கு பார்த்தாலும் இளைஞர்கள் "வேலை இல்லை" என்று புலம்பிக் கொண்டு வெட்டியாகத் திரிவதே யதார்த்தமாக உள்ளது. இன்று யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகங்களில் சிங்கள இளைஞர்களும், சூப்பர் மார்க்கெட்கள் மற்றும் புடவைக்கடைகளில் மலையக இளைஞர் யுவதிகளும் மிகவும் சுறுசுறுப்பாக வேலை செய்கிறார்கள். வெளிமாவட்ட இளைஞர்கள் வந்து யாழ்ப்பாணத்தின் பொருளாதாரத்தை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், உள்ளூர் இளைஞர்களோ, படித்து முடித்துவிட்டு எவ்வித இலக்கும் இன்றித் திரிகிறார்கள். ஆட்டோ ஓட்டலாமே? துணிக்கடையில் வேலை செய்யலாமே?" என்று கேட்டால், "அது எங்கள் தகுதிக்குக் குறைவானது" என்ற பதில் வருகிறது. வெளிநாட்டில் இருக்கும் உறவினர்களின் கௌரவம் பாதிக்கப்படுமாம்! வெளிநாடுகளில் கௌரவம் பார்க்கும் இந்த உறவினர்களில் பலர், அங்குள்ள அரசுகளை ஏமாற்றி, உடல் உழைப்பை வருத்தி, இரவு பகலாகக் கஷ்டப்பட்டுத்தான் பணம் சம்பாதிக்கிறார்கள். சிலர் மதுக்கடைகளிலும், சிகரெட் விற்பனை நிலையங்களிலும் வேலை செய்து, அடுத்தவர் உடல்நலனைச் சீரழிக்கும் தொழில்கள் மூலம் பணம் சம்பாதித்து இங்கே அனுப்புகிறார்கள். அங்கே அவர்கள் கஷ்டப்பட்டுச் சம்பாதிக்கும் பணத்தைப் பெற்றுக்கொண்டு, இங்கே கையில் லேட்டஸ்ட் iPhone, பல இலட்சம் ரூபாய் பெறுமதியான KTM மோட்டார் சைக்கிள் என ஆடம்பரமாகத் திரியும் இளைஞர்கள், உண்மையில் உழைக்கத் தயங்கும் கோழைகளாகவே இருக்கிறார்கள். உழைக்காமல் கைக்கு வரும் பணம், இயல்பாகவே இளைஞர்களை போதை மற்றும் மதுப் பழக்கத்திற்கு அடிமையாக்குகிறது. அதிகப்படியான பணப்புழக்கம், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் பயன்பாட்டை அதிகரித்துள்ளது. வெளிநாட்டிலிருந்து வரும் பணம் இவர்களை அறிவார்ந்தவர்களாக மாற்றாமல், சமூகத்திற்குப் பாரமான 'காவாலிகளாக' மாற்றிக் கொண்டிருக்கிறது. யாழ் இளைஞர்களை வேலைக்கு அமர்த்தினால், அவர்கள் சரியாக வேலை செய்வதில்லை, சம்பளம் அதிகமாகக் கேட்கிறார்கள், சிறு வேலைகளைச் சொன்னால் முறைக்கிறார்கள் போன்ற காரணங்களால், யாழ்ப்பாணத்து முதலாளிகளே இன்று பிற மாவட்ட இளைஞர்களையே விரும்புகின்றனர். வெளிநாட்டு உறவினர்களின் இந்த பண உதவி என்பது நிரந்தரமானது அல்ல. இந்தப் பரம்பரையுடன் இது முடிந்துவிடும். அடுத்த தலைமுறைப் புலம்பெயர் தமிழர்கள் தங்களின் சொந்தப் பிள்ளைகளுக்கே பணம் சேமிப்பார்களே தவிர, இங்கே இருக்கும் தம்பிக்கோ, மச்சானுக்கோ ஒரு சதம் கூடத் தரமாட்டார்கள். அப்பொழுது, இன்று கஷ்டப்பட்டு வேலை செய்யும் வெளிமாவட்ட இளைஞர்கள், யாழ்ப்பாணத்தின் அனைத்து வியாபார நிறுவனங்களின் உரிமையாளர்களாக மாறியிருப்பார்கள். இன்று ‘கௌரவம்’ பார்த்த யாழ் இளைஞர்கள், அன்று பிற இனத்தவர்களிடம் கையேந்தி நிற்கும் அல்லது கூலி வேலை செய்யும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள். இளைஞர்களே, வேலை என்பது இழிவு அல்ல. உழைக்காமல் உண்பதுதான் பேரிழிவு. எந்த வேலையாயினும் அதனை அர்ப்பணிப்புடன் செய்யுங்கள். புலம்பெயர் உறவுகளே! பணத்தை அனுப்பி உங்கள் உறவுகளைச் சோம்பேறிகளாக மாற்றாதீர்கள். அவர்களுக்குத் தூண்டிலைத் தந்து மீன்பிடிக்கக் கற்றுக் கொடுங்கள் , மாறாகத் தினமும் மீனைத் தந்து அவர்களை முடமாக்காதீர்கள். நமது பொருளாதாரம் நமது கைகளை விட்டுப் போய்க்கொண்டிருக்கிறது. விழித்துக் கொள்ளாவிட்டால், வரலாறு நம்மைச் சோம்பேறிகள் என்றுதான் பதிவு செய்யும். https://www.facebook.com/share/1DZd5Dn3j9/?mibextid=wwXIfr
  13. அன்புமணிக்கு ராமதாஸ் ’இறுதி’ எச்சரிக்கை! பத்திரிகைகளில் ’பொது விளம்பரம்’ வெளியீடு! 26 Dec 2025, 8:11 AM பாட்டாளி மக்கள் கட்சி (பாமக PMK) பெயரை பயன்படுத்தக் கூடாது என அன்புமணிக்கு அவரது தந்தையும் பாமக நிறுவனருமான டாக்டர் ராமதாஸ், நாளிதழ்களில் ‘பொது விளம்பரம்’ மூலம் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி இடையேயான மோதலில் கட்சிக்கு இருவரும் உரிமை கொண்டாடி வருகின்றனர். அண்மையில் டெல்லி உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை இருதரப்பும் தங்களுக்கு சாதகமாக முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் நாளிதழ்களில் இன்று, டாக்டர் ராமதாஸ் ‘பொது விளம்பரம்’ மூலம் அன்புமணிக்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார். அந்த விளம்பரத்தில் கூறப்பட்டுள்ளதாவது; “இதன் மூலம் பொதுமக்கள் அனைவருக்கும் கடைசியாகத் தெரிவிக்கப்படுவது என்னவென்றால், பாட்டாளி மக்கள் கட்சி தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் W.P.(C) No.18311/2025 வழக்கில், 04.12.2025 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பின் மூலம், மருத்துவர் அன்புமணிக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் என்ற உரிமையோ, கட்சியின் பெயர், கொடி, சின்னம் பயன்படுத்தும் உரிமையோ எதுவும் இல்லை என்பது சட்டப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன், தேர்தல் ஆணையம் 09.09.2025 மற்றும் 27.11.2025 அன்று பிறப்பித்த உத்தரவுகள் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டவை என்றும், சட்ட அதிகாரமற்றவை என்றும் உயர்நீதிமன்றம் தெளிவாக அறிவித்துள்ளது. எனவே, எந்த அரசியல் கட்சியும், தனிநபரும், அமைப்பும், மருத்துவர் அன்புமணி மற்றும் வேறு எவருடனும் பாட்டாளி மக்கள் கட்சி என்ற பெயரில் அரசியல், தேர்தல் அல்லது நிர்வாக நடவடிக்கைகள் மேற்கொண்டால், அது சட்டப்படி குற்றமாகும். மேற்கண்ட உயர்நீதிமன்றத் தீர்ப்பை மீறி தொடர்ந்து செயல்படுவோர் மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உட்பட சட்டப்படி கடுமையான நடவடிக்கை தவறாமல் மேற்கொள்ளப்படும் என்பதும் இதன் மூலம் கடைசியாக எச்சரிக்கப்படுகிறது. மக்களே… ஒரு உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள் நீதியின் முழக்கம் – உண்மை மறைக்க முடியாது இதன் மூலம் பொதுமக்கள் அனைவருக்கும் உறுதியாகத் தெரிவிக்கப்படுவது என்னவென்றால், பாட்டாளி மக்கள் கட்சி தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் W.P.(C) No.18311/2025 என்ற வழக்கில், 04.12.2025 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பு, உண்மையை சட்டத்தின் முன் நிறுத்திய வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு ஆகும். போலிக்கு சட்டத்தில் இடமில்லை: போலி ஆவணங்களின் அடிப்படையில் கட்சித் தலைமை உரிமை கோரப்பட்ட முயற்சியும், அதனை அங்கீகரிக்க தேர்தல் ஆணையம் 09.09.2025 மற்றும் 27.11.2025 அன்று பிறப்பித்த உத்தரவுகளும், அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டவை என்றும், சட்ட அதிகாரமற்றவை என்றும் நீதிமன்றம் தெளிவாகத் தகர்த்தெறிந்துள்ளது. உண்மை இன்று சட்டமாகியது: இந்தத் தீர்ப்பின் மூலம், மருத்துவர் அன்புமணிக்கு, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் என்ற உரிமையோ, கட்சியின் பெயர், கொடி, சின்னம் பயன்படுத்தும் உரிமையோ எதுவும் இல்லை என்பது சட்டப்பூர்வமாகவும், நிரந்தரமாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மக்களை ஏமாற்றும் அரசியல் – இனி இல்லை: நீதிமன்றத் தீர்ப்பிற்குப் பிறகும், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஒருவர், பாட்டாளி மக்கள் கட்சியின் பெயரைப் பயன்படுத்தி கட்சி தன் கட்டுப்பாட்டில் இருப்பதுபோல் காட்டுவது, மக்களை ஏமாற்றும் சட்டவிரோத அரசியல் செயலாகும். இதனை மக்கள் அறிந்தே ஆக வேண்டும் என்பதற்காகவே, இந்த அறிவிப்பு மாவட்டம் தோறும் வெளியிடப்படுகிறது. இது ஒரு கட்சி அல்ல – இது ஒரு தியாக இயக்கம்: 1980 ஆம் ஆண்டு இயக்கம் தொடங்கி, மின்சாரம் இல்லாத காலம், சாலை இல்லாத கிராமங்கள், மேடு-பள்ளங்கள், வயல் வரப்புகள் வழியாக நடந்து, ராந்தல் விளக்கின் ஒளியில் மக்களின் துயரை கேட்டவன், 96,000-க்கும் மேற்பட்ட ஊர்களை காலால் அளந்தவன், தன்னலமின்றி உழைத்து ஒரு மக்கள் எழுச்சியை அரசியல் இயக்கமாக மாற்றியவன் – நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அய்யா அவர்கள். தியாகத்தின் சொத்து – விற்பனைக்கு அல்ல: அந்தத் தியாகத்தின் பயனாக உருவான பாட்டாளி மக்கள் கட்சி, இன்றும் என்றும் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அய்யா அவர்களிடமே உள்ளது. இந்த இயக்கம் பதவி பேராசைக்கோ, போலி ஆவணங்களுக்கோ ஒருபோதும் அடிமையல்ல. முடிவு எடுக்கும் அதிகாரம் யாரிடம்?: எனவே, பாட்டாளி மக்கள் கட்சியின் பெயரில் எடுக்கப்படும் எந்தவொரு தேர்தல் கூட்டணியும், அரசியல் முடிவும், நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அய்யா அவர்களிடமிருந்தே வர வேண்டும் என்பதே நீதிக்கும் நியாயத்திற்கும் ஒத்த உண்மை. இது எச்சரிக்கை – அலட்சியம் அல்ல: மருத்துவர் அன்புமணிக்கு, பாட்டாளி மக்கள் கட்சியின் பெயரில் எந்தவித அரசியல், தேர்தல் அல்லது நிர்வாக நடவடிக்கைகளையும் எடுக்க ஒரு துளி உரிமையும் இல்லை. அரசியல் கட்சிகள், தனிநபர்கள், அல்லது வேறு எந்த அமைப்பும், மருத்துவர் அன்புமணி மற்றும் வேறு எவருடனும் பாட்டாளி மக்கள் கட்சி என்ற பெயரில் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொண்டால், அது சட்டப்படி குற்றமாகும். நீதியை மீறினால் – விளைவுகள் கடுமையானவை: மேற்கண்ட உயர்நீதிமன்றத் தீர்ப்பை மீறி தொடர்ந்து செயல்படுவோர் மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தவறாமல் தொடரப்படும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://minnambalam.com/pmk-ramadoss-issues-final-warning-to-anbumani/
  14. யுத்தத்தினால் பெண்கள் தாம் விரும்பாத பாத்திரங்களையும் ஏற்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.- ஜி.எல்.பீரீஸ் வெள்ளி, 26 டிசம்பர் 2025 07:41 AM இலங்கை விவகாரத்தில் இந்தியா, நோர்வே உள்ளிட்ட நாடுகளின் செயற்பாடுகள் தொடர்பாக விமர்சனங்கள் அதிருப்திகள் காணப்பட்டாலும் அந்த விமர்சனங்களை செய்தவர்கள் கூட வௌிநாடுகளின் வகிபாகத்தை முழுமையாக நிராகரிக்கவில்லை என முன்னாள் அமைச்சரும் தகைசார் பேராசிரியரருமான ஜி.எல்.பீரீஸ் தெரிவித்துள்ளார். இலங்கை அரசியலின் சமாதானப் பேச்சுவார்த்தை காலகட்டத்தின் நிகழ்வுகளை ஆராய்ந்து ஜி.எல்.பீரீஸ் அண்மையில் எழுதி வெளியிட்ட "இலங்கை அமைதி செயல்முறை ஒரு உள்பார்வை" எனும் நூலிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த நூலில், யுத்தம் பெருமளவில் பாதித்த தரப்பினராக பெண்களே உள்ளனர். மிகுந்த வேதனைக்கும் மன அழுத்தத்திற்கும் மத்தியில் அவர்களின் வாழ்க்கை வெகுவாக மாற்றமடைந்தது. ஆண்கள் மத்தியில் மரணங்கள் மற்றும் காணாமலாக்கப்படுதல்கள் அதிகரித்தமையானது, விதவைகள் தலைமையிலான குடும்பங்களின் எண்ணிக்கையை அதிகரித்து அடிப்படை வாழ்வில் மாற்றங்களை வலிந்து திணித்தது. பொருளாதார சுமை அதிகரித்து அடக்குமுறையானது. குடும்பங்களை வழிநடத்தும் கட்டாயத்துடன் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் அங்கு அதிகரித்தன. பொருளாதார நெருக்கடி மட்டுமே தனித்த அல்லது ஆதிக்கம் செலுத்தும் காரணியாக அங்கு இருக்கவில்லை. முடிவற்ற பரவலான மற்றும் வாழ்க்கையை மாற்றும் தாக்கம் மற்றும் அழுத்தங்கள் ஊடுருவி, ஸ்தாபிக்கப்பட்டிருந்த சமூக நடத்தை முறைமைகளை அச்சுறுத்தும் காரணிகளாக அமைந்தன. தேவைகளே கண்டுபிடிப்புகளுக்கான தாயாகின்றன. தைரியம் மற்றும் மீண்டெழும் தன்மைக்குத் தங்களைத் தாங்களே தகுதியானவர்களாக வௌிப்படுத்திக் கொண்ட பெண்கள், துரதிஷ்டத்திலிருந்து வாய்ப்பினை அரிதாகவே பயன்படுத்திக் கொண்டனர். வடக்கு, கிழக்கு மாகாணங்களில், பாரம்பரிய உறவுகளின் ஆதரவின்றி பெண்கள் புதிய வாழ்க்கை முறையில் கடினமான சவால்களை எதிர்கொண்டனர். பொருளாதார வாழ்வாதாரத்திற்கும், கலாசார மற்றும் பண்பாடுகள் தொடர்பான ஆதரவிற்கும் புதிய வழிகளைத் தேட வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்பட்டது. இவை, பாரம்பரியத்தின் அடிப்படையில் உருவான சமூகக் கட்டமைப்பின் சுமையை குறைப்பதற்குப் பதிலாக, மேலும் அதிகரிக்கவே வழிவகுத்தன. வாழ்வாதாரப் போராட்டத்தில், பெண்கள் தாம் விரும்பாத பாத்திரங்களையும் ஏற்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இதனால் பாரம்பரிய மனப்பான்மையுள்ளவர்களுக்கும் இவர்களுக்கும் இடையிலான புரிதல் குறைந்ததால் புதிய சிந்தனையுடன் சமூகத்தை மறுசீரமைக்க வேண்டியேற்பட்டது. மறுகட்டமைப்பு மற்றும் அணுகுமுறைகளை மறுசீரமைக்கும் முழுமையான செயன்முறைக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இந்தியா ஒரு முக்கியமான காரணியாக இருந்தது. கடந்த நூற்றாண்டின் இறுதி இரண்டு தசாப்தங்களிலும் இலங்கை விவகாரங்களில் இந்தியாவின் கரிசனை அதிகரித்திருந்தது. 1987 ஆம் ஆண்டின் இந்தியா - இலங்கை உடன்படிக்கையில் இது தௌிவாக வெளிப்பட்டது.இது அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கு வழிகோலியது. உள்நாட்டின் சூழ்நிலைகள், இந்தியாவை சமாதானச் செயன்முறையில் முக்கிய வகிபாகத்தை முன்நகர்த்துவதில் தடுத்த போதிலும் இந்தியா அந்த விடயத்தில் நீடித்த கரிசனையை எப்போதும் காண்பித்தது. இந்திய அமைதிப்படை மற்றும் பிற நடவடிக்கைகள் குறித்த பரவலான அதிருப்தி காணப்பட்ட போதிலும், இலங்கையில் பெரும்பான்மையினரிடமும் , இந்தியாவின் உறுதியான பங்குபற்றலை வரவேற்க வேண்டும் என்ற கருத்து குறிப்பிடத்தக்களவில் இருந்தது. நோர்வே, மத்தியஸ்தம் வகித்து மேற்கொண்ட சில நடவடிக்கைகளை விமர்சித்தவர்களும், வௌிநாடுகளின் வகிபாகத்தை முழுமையாக நிராகரிக்கவில்லை. இலங்கையின் சூழலில் வெற்றிகரமான சமாதானப் பேச்சுவார்த்தைக்கு இதன் சில கூறுகள் அவசியம் என்பதை உண்மையில் உணர்ந்தமை மிகுந்த சுவாரஸ்யமானது என்றுள்ளது. இலங்கை அரசியலின் சமாதானப் பேச்சுவார்த்தை காலகட்டத்தின் நிகழ்வுகளை அலசி ஆராயும் முக்கிய நூலாக இவ் நூல் விளங்குவதுடன் சமாதான கால அரசியலையும் வரலாற்றையும் பேராசிரியர்,சிரேஷ்ட அரசியல் ஆளுமை,சட்டவியல் அறிஞர் என்னும் பன்முக ஆளுமை கொண்ட ஒருவரின் குறிப்பேட்டிலிருந்து அறிய விரும்பும் அரசியல் வரலாற்றுத் துறை கல்வியியலாளர்கள், இராஜதந்திரிகள், சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல்வாதிகள் என்னும் அனைவருக்கும் வரலாற்றின் முக்கிய அத்தியாயங்களை இந்த நூல் மீள் நினைவூட்டுகின்றது. ஆங்கிலமொழியிலான இந்த நூலின் ஆசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கொழும்பு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தரும் சட்டபீடத்தின் தகைசார் பேராசிரியருமாவார். ஓக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், லண்டன் பல்கலைக்கழம் உள்ளிட்ட உலகின் பல புகழ்பூத்த பல்கலைக்கழகங்கள் அங்கீகரித்த இலங்கையின் புகழ்பூத்த கல்விமான்களில் இவர் ஒருவராக திகழ்கின்றார். வௌிவிவகாரம், நீதி, அரசியலமைப்பு விவகாரம், இன விவகாரம், தேசிய ஒருமைப்பாடு, ஏற்றுமதி அபிவிருத்தி, சர்வதேச வர்த்தகம் மற்றும் கல்வி உள்ளிட்ட துறைகளில் நாட்டின் அமைச்சரவையில் பதவி வகித்த சிரேஷ்ட அரசியல் ஆளுமையாகவும் இவர் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது. https://jaffnazone.com/news/53599
  15. 21 ஆண்டுகள் கடந்தாலும் ஆறாத வடு - முல்லைத்தீவில் கண்ணீர் மல்க இடம்பெற்ற ஆழிப்பேரலை நினைவேந்தல் 26 December 2025 கடந்த 2004ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆழிப்பேரலை அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் 21ஆம் ஆண்டு நினைவேந்தல் முல்லைத்தீவு ஆழிப்பேரலை நினைவாலயத்தில் இன்று (26) உணர்வுபூர்வமாக இடம்பெற்றது. அந்தவகையில் உயிரிழந்தவர்களின் உறவுகள், தமது உயிரிழந்த உறவுகளுக்கு மலர் தூவி, தீபமேற்றி, உணவுப்பொருட்களைப் படையலிட்டு உணர்வுபூர்வமாக அஞ்சலிகளை மேற்கொண்டனர். அதேவேளை உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்தி வேண்டி மத வழிபாடுகளும் இடம்பெற்றிருந்தன. மேலும் இந்த அஞ்சலி நிகழ்வுகளில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://hirunews.lk/tm/437718/a-scar-that-has-not-healed-even-after-21-years-a-tearful-remembrance-of-the-tsunami-that-occurred-in-mullaitivu
  16. சுப்பர் சுற்றுக்கு seedings இல் முதல் இரண்டு நிலைகளிலும் இல்லாத அடுத்த இரு அணிகள் தெரிவானால் (சாத்தியம் பூச்சியம்) எப்படி அவைகளின் நிலை தெரிவாகும்?🫣 கேள்விக்கொத்து சிக்கலாக இருக்கும்.. அதற்கு வரும் பதில்கள் இடியப்பச் சிக்கலாக இருக்கும்😬
  17. வீட்டிலும் ஒரு மிருதங்கம் உறைக்குள் தூசு படியாமல் இருக்கின்றது. இத்தனைக்கும் நல்ல திறமை இருந்தும் கற்கவேண்டும் என்ற ஆர்வம் இல்லை! ஆர்வம் இல்லாதவற்றை திணிப்பது என் வழக்கம் இல்லை. இளைப்பாறும் காலத்தில் நொட்டிப் பழகலாம் என்று வைத்திருக்கின்றேன்😃
  18. “60 வயதுக்கு மேல் இளமையாக இருப்பது எப்படி?” – ஆரோக்கியத்திற்கான 5 எளிய மந்திரங்கள்! 25 Dec 2025, 6:57 AM “வயசாகிடுச்சு, இனிமே என்ன இருக்கு?” என்று மூலையில் முடங்கிவிடுபவரா நீங்கள்? 60 வயது என்பது வாழ்வின் முடிவுரை அல்ல; அது ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கம். பணி ஓய்வுக்குப் பிந்தைய இந்த ‘இரண்டாவது இன்னிங்ஸை’ (Second Innings) ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் கழிப்பது உங்கள் கையில் தான் இருக்கிறது. பெரிய அளவில் மெனக்கெடாமல், தினசரி வாழ்க்கையில் இந்த 5 எளிய மாற்றங்களைச் செய்தாலே போதும், நோயின்றி நூறாண்டு வாழலாம்! 1. அசைவே ஆரோக்கியம் (Keep Moving): முதுமையில் வரும் மூட்டு வலிக்கு முக்கியக் காரணம், ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பதுதான். தினமும் காலை அல்லது மாலையில் குறைந்தது 30 நிமிடங்கள் மிதமான நடைப்பயிற்சி (Walking) செய்யுங்கள். இது ரத்த ஓட்டத்தை சீராக்குவதுடன், எலும்புகளின் உறுதிக்கும் உதவும். “நடக்கும்போது மூச்சு வாங்குது” என்றால், வீட்டிற்குள்ளேயே அல்லது மொட்டை மாடியிலேயே சிறுகச் சிறுக நடங்கள். 2. தாகம் இல்லாவிட்டாலும் தண்ணீர் குடியுங்கள்: வயது ஏற ஏற, மூளையில் தாகத்தை உணர்த்தும் திறன் குறையத் தொடங்கும். இதனால் உடலில் நீர்ச்சத்து குறைந்து (Dehydration), சோர்வு மற்றும் மயக்கம் ஏற்படலாம். எனவே, தாகம் எடுக்கிறதோ இல்லையோ, குறிப்பிட்ட இடைவெளியில் தண்ணீர் அல்லது மோர், பழச்சாறு அருந்துவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். 3. உணவில் மாற்றம் அவசியம்: இளம் வயதில் சாப்பிட்டது போல எண்ணெய் மற்றும் காரம் நிறைந்த உணவுகளை இப்போது செரிப்பது கடினம். எளிதில் செரிமானமாகும் இட்லி, இடியாப்பம், வேகவைத்த காய்கறிகள் மற்றும் கீரைகளை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். முக்கியமாக, இரவு உணவை 8 மணிக்குள் முடித்துவிடுவது நல்லது. இது நெஞ்செரிச்சல் மற்றும் தூக்கமின்மையைத் தவிர்க்கும். 4. தனிமையைத் தவிருங்கள் (Socialize): உடல் ஆரோக்கியத்தை விட மன ஆரோக்கியம் மிக முக்கியம். தனிமை என்பது முதுமையின் மிகப்பெரிய எதிரி. உங்கள் பழைய நண்பர்களைச் சந்தித்துப் பேசுங்கள், பேரப்பிள்ளைகளுடன் விளையாடுங்கள் அல்லது ஆன்மீகக் கூட்டங்களில் கலந்து கொள்ளுங்கள். மனதை லேசாக வைத்துக்கொண்டாலே பாதி நோய்கள் குணமாகிவிடும். 5. மூளைக்கு வேலை கொடுங்கள்: உடலைப்போலவே மூளைக்கும் பயிற்சி தேவை. சுடோகு (Sudoku), குறுக்கெழுத்துப் போட்டிகள் அல்லது புத்தகம் படிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுங்கள். இது ஞாபக மறதி (Dementia) போன்ற பிரச்சனைகள் வருவதைத் தாமதப்படுத்தும். புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள வயது ஒரு தடையல்ல! முதுமை என்பது ஒரு நோய் அல்ல; அது வளர்ச்சியின் ஒரு கட்டம். மருந்துகளை விட, மகிழ்ச்சியும் நம்பிக்கையுமே உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும். இந்த 5 பழக்கங்களையும் இன்றே தொடங்குங்கள், முதுமையை வெல்லுங்கள்! https://minnambalam.com/5-simple-health-habits-for-people-over-60-senior-citizen-care-tips-healthy-aging/
  19. கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் மீது இந்துத்துவா கும்பல் தாக்குதல்! 25 Dec 2025, 10:55 AM நாட்டின் பல மாநிலங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை சீர்குலைக்கும் வகையில் இந்துத்துவா அமைப்புகள் தாக்குதல் நடத்தியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உலகம் முழுவதும் கிறிஸ்துவர்கள், இயேசு பிறந்த நாளை கிறிஸ்துமஸ் தினமாக கொண்டாடி வருகின்றனர். இந்தியாவிலும் கிறிஸ்துவர்கள் இப்புனித நாள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். கேரளா மாநிலம் பாலக்காட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை நடத்த எதிர்ப்பு தெரிவித்து பாஜக- ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் தாக்குதல் நடத்தியிருந்தனர். இது பதற்றத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் வட இந்தியாவின் பல மாநிலங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்களை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் இந்துத்துவா அமைப்பினர் ஈடுபட்டுள்ளனர். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அமைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவுகள், குடில்கள், கிறிஸ்துமஸ் தாத்தா உருவங்களை தாக்கியும் சேதப்படுத்தியும் இந்துத்துவா அமைப்பினர் அட்டூழியத்தில் ஈடுபட்டனர். வட இந்தியாவில் மத்திய பிரதேசம், பீகார், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களில் இத்தகைய வன்முறை சம்பவங்களில் இந்துத்துவா அமைப்பினர் ஈடுபட்டுள்ளனர். தனியார் பள்ளிகள், கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு விடுமுறை விடவும் கூட சில இடங்களில் இந்துத்துவா அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இத்தகைய வன்முறை சம்பவங்களால் பதற்றம் நிலவுகிறது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் மீதான இத்தகைய தாக்குதல்களுக்கு கேரளா முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். https://minnambalam.com/hindutva-mob-attacks-on-christmas-celebrations/
  20. ஒற்றையாட்சிக்குள் தமிழரை முடக்கும் அரசின் நிகழ்ச்சி நிரலில் தமிழரசுக் கட்சி; இது தொடரும் வரை தமிழ் மக்களுக்கான கட்டமைப்பு சார்ந்த இனப்படுகொலையை தடுக்க முடியாது தேசிய மக்கள் சக்தியின் ஒற்றையாட்சிக்குள் தமிழ் மக்களை முடக்குகின்ற நிகழ்ச்சி நிரலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும் துணை போய்க்கொண்டிருக்கின்றன என்பதை பகிரங்கமாக கூறுகின்றோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், சர்வதேச சமூகம் ஜெனிவாவில் இலங்கை அரசின் கருத்துருவாக்கத்தினை நிராகரித்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது . இங்கு இனப் பிரச்சினை இருப்பதாகவும் இலங்கையில் உள்ள அத்தனை மக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்பட வேண்டும் என்பதுமே அதன் சாராம்சம். இலங்கை அரசாங்கம் இங்கு பயங்கரவாத பிரச்சினையே உள்ளதென சொன்ன போது சர்வதேச சமூகம் இல்லை, விடுதலைப் புலிகளின் போராட்டம் 70களில் தான் ஆரம்பித்தது. தமிழ் மக்களின் இனப்பிரச்சினை என்பது 48 ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பித்தது என்பதை தெரிவித்தது. தமிழ் மக்கள் இலங்கையில் உருவாக்கப்பட்ட எந்த அரசியலமைப்பையும் ஆதரிக்கவில்லை. தமிழ் மக்களின் அபிலாசைகள், உரிமைகள் அரசியலமைப்பில் நிராகரிக்கப்படுகின்றன என்று சொன்னால் இங்கு இனப்பிரச்சினை இருக்கிறது என்பதே அர்த்தம். எந்த ஒரு நாட்டிலும் ஒரு இனம் அந்த நாட்டின் அரசியலமைப்பை நிராகரித்தால் அங்கு இனப் பிரச்சினை உள்ளது என்பதே அர்த்தம். பிரித்தானியாவில் ஐரிஸ் மக்கள் அரசியலமைப்பை ஏற்றுக் கொள்ளவில்லை. அங்கு இனப் பிரச்சினை இருந்தது. அந்த அரசியலமைப்பை அங்கு திருத்தம் செய்து இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டு அரசியல் மாற்றங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில் தான்இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டது. அனைத்து இனங்களும் ஏற்றுக்கொள்ளும் அரசியல் தீர்வு நிறைவேற்றப்பட வேண்டும்.தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய அரசியல் அமைப்பு கொண்டு வரப்பட வேண்டும் என்பது தெளிவாக பதிவு செய்யப்படுகிறது.தமிழ் மக்களுக்கு பேரம் பேசக்கூடிய வல்லமையை சர்வதேசம் வழங்குகிறது. இனப்பிரச்சினைக்கு தீர்வை வழங்காமல் வெளிநாடுகள், சர்வதேசம் பெரிய அளவில் இங்கு முதலீடு செய்ய விரும்பாது. இனப்பிரச்சினை திரும்பவும் வந்து வெடிக்கும். ஸ்திரத்தன்மை இன்றி குழம்பும் என்ற நிலை உள்ளது.முதலீடு செய்வதாக இருந்தால் ஸ்திரத்தன்மை உறுதிப்படுத்தப்பட வேண்டிய நிலைமை வேண்டும். சர்வதேச நாணய நிதியம் கூட புதிய அரசியலமைப்பு ஊடாக இனப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்பதால்தான் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கூட பேச்சுக்காகவாவது புதிய அரசியலமைப்பை கொண்டு வரப் போவதாக சொல்ல வேண்டியுள்ளது. இவ்வாறான பின்ணணியில் இந்தியாவினுடைய பங்கு மிக மிக முக்கியம். அயல்நாடு. அயல் வல்லரசு. அந்த நாட்டினுடைய கருத்துக்களை மீறி மற்ற நாடுகள் இலகுவில் ஒரு முடிவு எடுக்க மாட்டார்கள்.எதிரி நாடுகள் இந்தியாவை மீறி செயற்படலாம். ஒத்துப் போகக் கூடிய மேற்கு நாடுகள் இந்தியாவுடன் ஒத்துப் போகவே விரும்புவார்கள். இந்தியாவை தமிழ் மக்கள் தங்கள் நிலைப்பாட்டுக்குள் உறுதியாகக் கொண்டு வருவது முக்கியம்.இந்திய -இலங்கை ஒப்பந்தம் கொண்டுவரப்பட்டதே தமிழ் மக்களுக்காகத் தான். அதற்கு இந்தியாவுக்கும் கடமை இருக்கிறது.அவ்வாறான நிலையில் இந்தியாவிடம் எதைக் கேட்பது என்பது முக்கியம்? இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருடனான சந்திப்பில் தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி தீர்வு மட்டுமே தமிழின பிரச்சினைக்குத் தீர்வு என தமிழ் தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்திய போது ஏனைய கட்சிகளான தமிழரசுக் கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி என்பன மாகாண சபை தேர்தலை நடத்துவதும் 13 ஆம் திருத்தத்தை அமுல்படுத்துவது மட்டுமே தேவை என வலியுறுத்தின. விசேடமாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம், 13ஆம் திருத்தம் இந்தியாவின் பிள்ளை. அதனை இந்தியா கைவிட விரும்பாது. 13ஆம் திருத்தத்தை நீக்குவதை விரும்பவில்லை. இலங்கை அரசு 13ஆம் திருத்தத்தையும் மாகாண சபையையும் நீக்க விரும்புகிறது. இந்தியா கொண்டு வந்த திருத்தம் என்றபடியால் 13ஆம் திருத்தத்தையும் மாகாண சபையையும் வைத்திருப்பது தான் அவசியம் என்ற அடிப்படையில் தான் பேசினார். 13ஆம் திருத்தத்திற்குள் இருக்கக்கூடிய அம்சங்கள் நடைமுறைப்படுத்துவதாக இருந்தால் தமிழ் மக்களுக்கு அதில் உள்ள அதிகாரங்கள் உண்மையில் அனுபவிப்பதாக இருந்தால் ஒற்றையாட்சி முறைக்குள் 13 ஆம் திருத்தம் முடக்கப்பட்டிருக்கிற வரைக்கும் தமிழ் மக்களுக்கு அதனை அனுபவிக்க முடியாது. இதனை உயர்நீதிமன்றம் தெளிவாக சொல்லியுள்ளது.. இதற்கு பின்னரும் 13ஆம் திருத்தத்தை அமுல்படுத்த கோருவது, அதில் ஏதோ இருக்கிறது. அதனால் அரசாங்கம் மறுத்து வருகின்றது என்ற பொய்யை தொடர்ந்து தமிழ் மக்கள் மத்தியில் விதைப்பதற்காகவே இது நடக்கின்றது என்பதை தெளிவாக கூறுகின்றோம். 13 ஆம் திருத்தம்தான் தீர்வு என இவர்கள் தேர்தல் காலத்தில் சொல்லி இருந்தால் மக்கள் தக்க பதிலை வழங்கியிருப்பார்கள். தேர்தல் காலத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி சொல்கின்ற சமஷ்டி ஆட்சியை விட தீவிர தமிழ் தேசியவாதிகள் என்று காட்டிக்கொண்டு 16 வருடங்களாக வாக்குகளைப் பெறுகின்றார்கள். மிக முக்கியமான சந்திப்பில் சமஷ்டியை வலியுறுத்தாமல் மாகாண சபை தான் வேண்டும் எனச் சொல்வது, தமிழ் மக்கள் வழங்கிய ஜனநாயக ஆணைக்கு நேர் மாறானது. அதனை நிராகரித்து துரோகம் செய்கின்ற வகையில் தான் அவர்கள் நடந்து கொண்டிருக்கிறார்கள். இதுதான் யதார்த்தம். இதை 2009 ஆம் ஆண்டு நாம் மக்களுக்கு சொன்னோம். அன்று நாங்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிகளாக இருந்த போது, போர் முடிந்து அடுத்தடுத்த நாட்களில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸை தவிர்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எனைய தலைவர்களான தமிழரசுக் கட்சி, ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர்கள் ஒற்றை ஆட்சிக்குள் இருக்கக்கூடிய 13ஆம் திருத்தத்தை தீர்வாக ஏற்றுக் கொள்வதற்கு முடிவெடுத்து விட்டார்கள் என்பதை அன்றைக்கு சொன்னோம். அதை நிரூபிக்கும் வகையில் இந்திய வெளிவார அமைச்சரின் சந்திப்புக்கு பிறகு தங்கள் வாயால் அதை ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். தேசிய மக்கள் சக்தியின் ஒற்றையாட்சிக்குள் தமிழ் மக்களை முடக்குகின்ற நிகழ்ச்சி நிரலில் தமிழரசுக் கட்சியும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும் துணை போய்க்கொண்டிருக்கின்றன என்பதை பகிரங்கமாக கூறுகின்றோம். தேசிய மக்கள் சக்தி 2024 ஆம் ஆண்டுக்குப் பின்னர், தமிழ் மக்கள் தமிழ் தேசிய நிலைப்பாட்டை கைவிட்டு விட்டார்கள் என்று சொன்னது.. அவர்கள் வந்து அதைச் சொன்னாலும் தமிழ் தேசிய நிலைப்பாட்டோடு வாக்கை பெற்றவர்களே ஒற்றை ஆட்சியை ஏற்றுக் கொள்வதற்கு இணங்குவது தேசிய மக்கள் சக்தி சொன்னது சரியானது என்பதை உலகமே ஏற்றுக் கொள்ளும். இதுதான் இன்றைக்கு இருக்கக்கூடிய நிலைமை. இதை மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் நாங்கள் அரசியல் தலைவர்களை சந்தித்ததன் முன்னேற்றத்தை கூட இந்த செயற்பாடுகள் இல்லாமல் செய்துவிடும். ஜனநாயகம் என்ற பெயரில் பார்த்தால் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு ஒரு உறுப்பினர் தான் உள்ளது. தமிழரசு கட்சிக்கும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கும் ஒன்பது உறுப்பினர்கள் உள்ளார்கள்.அந்த ஒன்பது உறுப்பினர்களும் மக்கள் தந்த ஆணைக்கேற்ப செயற்படவில்லை. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நிலைப்பாட்டை தேர்தல் காலத்துக்கு மட்டுமே சொல்கிறார்கள். அதற்குப் பிறகு அந்த நிலைப்பாட்டுக்கு நேர் மாறாக செயல்படுகிறார்கள். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சருடனான சந்திப்பில் சமஷ்டி என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை. எந்த ஒரு இடத்திலும் அதனை செய்யவில்லை.தமிழகத்தில் தமிழகத் தலைவர்கள் ஒரு நிலைப்பாட்டை எடுப்பதை தடுப்பதற்கு இவர்கள் செயல்படுகிறார்கள். இந்த போக்கு தொடரும் வரைக்கும் தமிழ் மக்களுக்கான கட்டமைப்பு சார்ந்த இனப்படுகொலையை தடுக்க முடியாது. ஒற்றையாட்சி முறைதான் கட்டமைப்பு சார்ந்த இன அழிப்பு முறைக்கு அடிப்படை. மாகாண சபை தேர்தல் நடக்காமலே மாகாண சபைகள் எல்லாம் இயங்குகின்றன என்று சொன்னால் மாகாண முதலமைச்சரும் மாகாண சபை உறுப்பினர்களும் ஏமாற்றமே. மாகாண ஆளுநருக்கு தான் சகல அதிகாரமும் உள்ளது. சட்டரீதியாக ஆளுநருக்கு ஆலோசனை வழங்குவது மட்டுமே அவர்களின் பொறுப்பு. அவர்கள் இல்லாமலே ஆளுநர் செயல்பட முடியும். அதுதான் தற்போது நடக்கிறது. தயவுசெய்து மக்கள் ஏமாற்றத்திற்கு விலை போகக்கூடாது. மக்கள் விலை போக, விலை போக கிடைக்கும் சந்தர்ப்பங்களை இழந்து கொண்டு போகிறோம். இதனால் தமிழ் மக்கள் அழிகிறார்கள். தமிழ் தேசிய மக்கள் முன்னணியையும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தையும் செல்வராஜா கஜேந்திரனையும் அழிப்பது மட்டுமல்ல நீங்களும் அழிகின்றீர்கள். அதனை மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் என்றார். https://akkinikkunchu.com/?p=353672
  21. இலங்கை போர்க்குற்றவாளிகளுக்கு எதிரான தடை விதிப்புக்கள் தொடரும்: பிரித்தானியா December 25, 2025 பிரித்தானிய அரசாங்கம் இலங்கை போர்க்குற்றவாளிகளுக்கு கடந்த மார்ச் மாதம் நால்வருக்கு எதிராக தடைகளை விதித்துள்ளது. இவ்விவகாரம் தொடர்பான நடவடிக்கைகள் முன்நோக்கியே நகர்கின்றன. தடை விதிப்புக்கள் தொடருமென வெளிவிவகார செயலாளர் வெற்றே கூப்பர் அறிவித்துள்ளார். பிரித்தானியப் பாராளுமன்றத்தின் வெளிவிவகாரக்குழு கூட்ட ம் கடந்த வாரம் இம்பெற்றிருந்த நிலையில் அங்கு கருத்துரைத்த உமா குமாரன் எம்.பி. இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தல் மற்றும் இலங்கையில் இடம்பெற்ற மனிதகுலத்துக்கு எதிரான மீறல்கள் தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்ளல் என்பன உள்ளடங்கலாக தமிழ்ச்சமூகத்துக்கான நீதி தொடர்பில் முன்னாள் வெளிவிவகார செயலாளர் டேவிட் லெமியிடம் தான் வலியுறுத்தியிருந்ததாகக் குறிப்பிட்டார். ‘ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள் மற்றும் வலிந்து காணாமலாக்கப்படல்கள் என்பன உள்ளடங்கலாக போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான மீறல்களில் இலங்கை இராணுவத்தினர் ஈடுபட்டிருக்கக்கூடும் என நம்புவதற்கு ஏதுவான ஆதாரங்கள் கண்டறியப்பட்டன. இலங்கையில் யுத்தம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு 15 வருடங்கள் கடந்திருக்கின்றன. ஆனால் போர்க்குற்றங்களிலும், இனப்படுகொலையிலும் ஈடுபட்டவர்களுக்கு எதிராக எந்தவொரு குற்றவியல் விசாரணைகளோ அல்லது சிறப்பு நீதிமன்ற விசாரணைகளோ மேற்கொள்ளப்படவில்லை’ என அவர் தீவிர கரிசனையை வெளிப்படுத்தினார். அதேபோன்று, ‘பாதிக்கப்பட்டோர், அவர்களது குடும்பத்தினர், தப்பிப்பிழைத்தோர் என யாருக்கும் செவிசாய்க்கப்படவில்லை. இந்நிலையில் குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்குவதற்கு இலங்கை அரசு தவறியிருப்பதுடன், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையைப் பாரப்படுத்துவதற்கு இடமளிக்கக்கூடிய ரோம சாசனத்தில் கைச்சாத்திடுவதற்கும், இவ்விவகாரம் சார்ந்த அரசியல் தன்முனைப்பை வெளிப்படுத்துவதற்கும் தவறியிருக்கின்றது. இவ்வாறானதொரு பின்னணியில் தமிழ்மக்களுக்குரிய நீதியையும், பொறுப்புக்கூறலையும் உறுதிப்படுத்துமாறு பிரித்தானியா இலங்கை அரசாங்கத்தின்மீது தொடர் அழுத்தங்களைப் பிரயோகிக்குமா?’ எனவும் உமா குமாரன் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் வெற்றே கூப்பர், தமிழ்ச்சமூகம் தொடர்பில் நீண்டகாலமாகத் தாம் கொண்டிருக்கும் நியாயபூர்வமான கரிசனைகள் தொடர்பில் பிரஸ்தாபித்தார். அத்தோடு மனித உரிமைகள் சார்ந்து நிலவும் கரிசனைக்குரிய விடயங்களுக்குத் தீர்வுகாணுமாறு தாம் இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தி வருவதாகவும், இருப்பினும் இதுசார்ந்த நிலையான நடவடிக்கைகள் அவசியம் எனவும் அவர் தெரிவித்தார். ‘மனித உரிமைகள் நிலைவரத்தை மேம்படுத்துவதற்கு அவசியமான செயற்திறன்மிக்க, நிலையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு நாம் இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் வழங்கியிருக்கின்றோம். அதுமாத்திரமன்றி கடந்த மார்ச் மாதம் நால்வருக்கு எதிராக பிரித்தானிய அரசாங்கம் தடைகளை விதித்தமையை நீங்கள் அறிந்திருப்பீர்கள். எனவே இவ்விவகாரம் தொடர்பான நடவடிக்கைகள் முன்நோக்கியே நகர்கின்றன’ என வெளிவிவகார செயலாளர் சுட்டிக்காட்டினார். அதனைப் பெரிதும் வரவேற்பதாகத் தெரிவித்த உமா குமாரன், போர்க்குற்றவாளிகளுக்கு எதிரான பிரித்தானிய அரசாங்கத்தின் தடைவிதிப்பு மேலும் பரவலாக்கப்படவேண்டியது அவசியம் என்று வலியுறுத்தினார். https://www.ilakku.org/sanctions-against-sri-lankan-war-criminals-to-continue-britain/
  22. முன்னாள் பெண் போராளி வெளிநாட்டில் உயிரிழப்பு.! Vhg டிசம்பர் 24, 2025 விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் பெண் போராளி ராஜநாயகம் துசியந்தி தீபவர்ணன் (வைதேகி ) ஆஸ்திரேலியாவில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. மறைந்த ராஜநாயகம் துசியந்தி தீபவர்ணன் (வைதேகி ) விடுதலை போராட்டக் களத்தில் கடற்புலிகள் மகளிர் படையணியில் இருந்தவர் என கூறப்படுகின்றது. போராட்ட காலத்தில் கடற்புலிகள் படையினை சேர்ந்த மகளிர் போராளி ராஜநாயகம் துசியந்தி தீபவர்ணன் (வைதேகி ) பல்துறை பணிகளிலும் இறுதிவரை பயணித்தவர் என்றும் கூறப்படுகின்றது. அதன் பின்னர் புலம்பெயந்து அவுஸ்திரேலியா அவர் சென்றதாகவும் , இந்நிலையில் சுகயீனம் காரணமாக ராஜநாயகம் துசியந்தி தீபவர்ணன் (வைதேகி ) நேற்று (23.12.2025) உயிரிழ்நதாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் மறைந்த முன்னாள் பெண் போராளி ராஜநாயகம் துசியந்தி தீபவர்ணன் (வைதேகி ) க்கு பலரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். https://www.battinatham.com/2025/12/blog-post_706.html
  23. கனடாவில் சிகிச்சைக்கு சென்ற யுவதியிடம் தமிழ் மருத்துவர் பாலியல் சேட்டை..! Vhg டிசம்பர் 24, 2025 கனடா ஸ்கார்பரோ ஒரு பல் மருத்துவர் நோயாளி மீது பாலியல் தாக்குதல் நடத்தப்பட்டதாக பல் மருத்துவரை டொராண்டோ பொலிசார் கைது செய்துள்ளனர். அக்டோபர் 18 ஆம் திகதி, ஃபின்ச் அவென்யூ கிழக்கு மற்றும் கென்னடி சாலை பகுதியில் உள்ள ஸ்கார்பரோவில் உள்ள ஒரு பல் மருத்துவரிடம், 21 வயது பெண் சிகிச்சை பெற்று வந்தபோது, பாலியல் தாக்குதல் நடந்ததாக பொலிசார் ஒரு அறிக்கையில் தெரிவித்தனர். டிசம்பர் 5 ஆம் திகதி குற்றம் சாட்டப்பட்டவர் டொராண்டோ காவல்துறையில் சரணடைத்தார். டொராண்டோவைச் சேர்ந்த 66 வயதான முத்துகுமாரு இளங்கோ என்ற மருத்துவர் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படவில்லை என்பதுடன் அவரால் பாதிக்கப்பட்டவர்கள் மேலும் இருக்கலாம் என்று புலனாய்வாளர்கள் நம்புகின்றனர். பல் மருத்துவமனையின் பெயர் “டொக்டர் இளங்கோ அண்ட் அசோசியேட்ஸ்” என்று பொலிசார் கூறுகின்றனர். இந்நிலையில் சந்தேக நபரான பல் மருத்துவரால் பாதிக்கபப்ட்டவர்கள் 416-808-4200 என்ற எண்ணில் போலீஸாரைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், அல்லது பெயர் குறிப்பிடாமல் குற்றத் தடுப்பாளர்களை அழைக்கலாம். https://www.battinatham.com/2025/12/blog-post_377.html
  24. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஏராளன்🎉🎂🎊🎈

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.