Everything posted by கிருபன்
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது : முதல்வர் வாழ்த்து!
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது : முதல்வர் வாழ்த்து! 14 Mar 2026, 6:43 PM கவிஞர் வைரமுத்துவுக்கு ஞானபீட விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பாரதிய ஞானபீட அமைப்பு வைரமுத்துவுக்கு ஞான பீட விருதை இன்று அறிவித்துள்ளது. சுமார் 24 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் மொழிக்கு இந்த விருது கிடைத்துள்ளது. இதற்கு முன்பு தமிழில் 1975-ல் அகிலனுக்கும், 2002-ல் ஜெயகாந்தனுக்கும் இந்த விருது வழங்கப்பட்டது. இதுகுறித்து வைரமுத்து சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “24 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழுக்கு ஞானபீட விருது கிடைத்திருக்கிறது. இது எனக்குக் கிடைத்த விருதைவிட, தமிழ் மொழிக்குக் கிடைத்த மகுடமாகவே கருதுகிறேன்” என்றார். கடந்த காலங்களில் ஞானபீட விருதில் தமிழ் மொழி புறக்கணிக்கப்படுவது குறித்துத் தான் தொடர்ந்து குரல் கொடுத்து வந்ததை குறிப்பிட்டு பேசிய வைரமுத்து, “தகுதியுள்ள படைப்புகள் இருந்தும் காலதாமதம் ஆனது வருத்தமளித்தாலும், இப்போது வழங்கப்பட்டிருப்பது நீதி நிலைநாட்டப்பட்டதாக உணர்கிறேன். இந்த விருது என் பேனாவுக்கு இன்னும் கூடுதல் பொறுப்பைத் தந்திருக்கிறது. வாழ்நாள் முழுவதும் தமிழுக்காகவே என் எழுத்துக்கள் இயங்கும்” என்றார். இந்நிலையில் வைரமுத்துவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார். ” தமிழைத் தன் கவித்திறத்தால் ஆளும் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு ஞானபீட விருது! காலையில்தான் கவிப்பேரரசைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தேன். சற்றுநேரத்தில் இந்த இனிய செய்தி வந்தடைந்து, அந்தச் சந்திப்பின் இனிமையை இன்னும் கூட்டியிருக்கிறது! தமிழில் இதுவரையில் அகிலனும் ஜெயகாந்தனும் மட்டுமே பெற்றிருந்த இவ்விருது, மரபுக் கவிதைகளிலும் நவீனத்திலும் விளையாடி, தமிழ் இலக்கிய உலகில் புதுமைகள் படைத்து ஆளும் நம் கவிப்பேரரசின் கைசேர்ந்து அவரையும் நம்மையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியிருக்கிறது. தலைவர் கலைஞர் இருந்திருந்தால் கவிப்பேரரசை உச்சிமுகர்ந்து பாராட்டியிருப்பார். அவரிடத்தில் நான் நின்று கவிப்பேரரசு வைரமுத்துவை வாழ்த்துகிறேன்!” என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஏற்கனவே வைரமுத்து 7 முறை தேசிய விருதுகளையும், ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ நாவலுக்காக சாகித்ய அகாடமி விருதையும், மற்றும் மத்திய அரசின் பத்மஸ்ரீ, பத்மபூஷண் விருதுகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. https://minnambalam.com/jnanpith-award-for-vairamuthu/
-
தமிழ்க் கட்சிகளை ஒருங்கிணைப்பது : சட்டத்தரணிகளால் முடியுமா? - நிலாந்தன்
தமிழ்க் கட்சிகளை ஒருங்கிணைப்பது : சட்டத்தரணிகளால் முடியுமா? - நிலாந்தன் கொழும்பில் தமிழ் சட்டத்தரணிகள் பேரவை என்ற அமைப்பு தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகளை ஒரு மேசையில் அமர்த்தியிருக்கிறது. அந்தச் சந்திப்பின் விளைவாக வெளிவந்த செய்திகளின்படியும், உத்தியோகபூர்வ அறிக்கையின்படியும், அரசாங்கம் ஒரு புதிய யாப்பை உருவாக்குமாக இருந்தால் அதைத் தமிழ்க் கட்சிகள் ஒன்றாக எதிர்கொள்வது என்று முடிவெடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த முடிவின்படி சமஸ்டி அடிப்படையிலான ஒரு தீர்வை நோக்கி உழைப்பது என்றும், அதற்காக இலங்கையில் வாழும் சமூகங்களுக்கு இடையிலான சமூக ஒப்பந்தம் ஒன்றை முதலில் எழுதிக்கொள்ளவேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. நல்ல விஷயம். சட்டத்தரணிகளே பெரும்பாலும் தமிழ் அரசியலைக் கையாளும் ஒரு மிதவாதப் பாரம்பரியத்தில், சட்டத்தரணிகளின் அமைப்பு ஒன்று இவ்வாறு கட்சிகளை ஒருங்கிணைக்க முன்வந்திருப்பது சில சமயம் பயன்பொருத்தமாக அமையலாம். கடந்த 16 ஆண்டுகளாக தமிழ்க் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சிகளில் சிவில் சமூகங்கள்,மதத் தலைவர்கள்,மறைமுகமாக தூதரகங்கள் போன்ற பல்வேறு தரப்புகள் முயற்சித்திருக்கின்றன.ஆனால் இந்த முயற்சிகள் எவையும் முழுவெற்றி பெறவில்லை மட்டுமல்ல,அண்மையில் சுவிட்சர்லாந்து தூதரகத்தின் அனுசரணையோடு ஏற்பாடாகியிருந்த ஒரு சந்திப்பு பின்னர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 16 ஆண்டுகால ஈழத்தமிழ் அனுபவத்தைத் தொகுத்துப் பார்த்தால் தமிழ்க் கட்சிகளை ஒன்றாக்கவேண்டும் என்ற முயற்சி தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது. விக்கிரமாதித்தன்-வேதாளம் கதைபோல தன் முயற்சியில் மனம்தளராத குடிமக்கள் சமூகங்கள் தொடர்ந்து தமிழ்க் கட்சிகளை ஒருங்கிணைப்பதில் ஆர்வம்காட்டி வருகிறார்கள். இதில் ஒரு தொடர்ச்சியைக் காணலாம்.அதேசமயம் தமிழ்க் கட்சிகளை ஒன்றிணைக்க வேண்டியதன் அவசியத்தை குடிமக்கள் சமூகங்கள் எப்பொழுதும் உணர்ந்துள்ளன என்பதையும் இது காட்டுகிறது. இது முதலாவது தொகுக்கப்பட்ட அனுபவம். இரண்டாவது தொகுக்கப்பட்ட அனுபவம்,இந்த முயற்சிகள் எல்லாவற்றையும் ஏதோ ஒரு கட்டத்தில் குழப்பியது பெரும்பாலும் தமிழரசுக் கட்சிதான். அதற்கு பிரதான காரணம் என்னவென்றால், அதுதான் உள்ளதில் பெரிய கட்சி.எனவே தானே முதன்மை வகிக்கவேண்டும் என்று அது எப்பொழுதும் எதிர்பார்க்கின்றது. தானே தலைமை தாங்கும் கட்சி என்றும் அது மார் தட்டிக் கொள்கிறது. அதனால் ஒருங்கிணைப்பு முயற்சிகள் தன்னைப் பலவீனப்படுத்தக்கூடாது என்ற முன்எச்சரிக்கை எப்பொழுதும் அந்தக் கட்சியிடம் உண்டு. அதைவிட முக்கியமாக, இந்தச் சமாதான முயற்சிகளை முன்னெடுக்கும் சிவில் சமூகங்கள் பெரும்பாலும் கஜேந்திரக்குமாருக்கு நெருக்கமானவை என்றும் தமிழரசுக் கட்சியிடம் ஒரு முற்கற்பிதம் உண்டு. இதில் ஒருபகுதி உண்மையுண்டு. எனவே தேர்தல்கள்மூலம் தனது முதன்மையை நிரூபிக்க முடியாத தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியியானது,சிவில் சமூகங்களுக்கு ஊடாக தன்னை முன்னுக்கு கொண்டுவர முயற்சிக்கிறது என்று தமிழரசுக்கட்சி நம்புகின்றது. அதனால் கட்சிகளை ஒருங்கிணைக்க முற்படும் சிவில் அமைப்புகளை தமிழரசுக் கட்சி சந்தேகத்தோடு பார்க்கின்றது அல்லது ஒரு வித ஒவ்வாமையோடு பார்க்கின்றது. அதன் விளைவாக அந்த ஒருங்கிணைப்பு முயற்சிகள் ஏதோ ஒரு கட்டத்தில் குழப்பப்படுகின்றன. கடைசியாக சுவிட்சர்லாந்து தூதரகத்தின் அனுசரணை முயற்சிகள் இடைநிறுத்தப்பட்டதையும் இந்தப் பின்னணிக்குள் வைத்துத்தான் விளங்கிக் கொள்ள வேண்டும். எனவே கடந்த 16 ஆண்டுகளாக தமிழ்க் கட்சிகளை ஒருங்கிணைக்க முடியாமல் போனதற்கும் தமிழ் ஐக்கியத்தை பாதுகாக்க முடியாமல் போனதற்கு அடிப்படைக் காரணம் தமிழரசுக் கட்சியின் முடிவெடுக்கும் அதிகாரத்தில் இருப்பவர்கள்தான். அவர்கள் தங்களை முதன்மைக் கட்சி என்று கூறிக் கொண்டால் அவர்கள்தானே அதற்குப் பொறுப்பு? எனவே கட்சிகளை ஒருங்கிணைக்கும் வேலைகளில் ஈடுபடுகிறவர்கள் முதலில் செய்ய வேண்டியது என்னவென்றால்,தமிழரசுக் கட்சிக்குள் தீர்மானிக்கும் அதிகாரத்தோடு இருப்பவர்களை தமது வழிக்குக் கொண்டு வருவதுதான். இப்படிப்பட்ட தொகுக்கப்பட்ட அனுபவங்களின் அடிப்படையில் சிந்தித்தால், இப்பொழுது சட்டத்தரணிகள் அமைப்பு முன்னெடுக்கும் முயற்சிகளில் இரண்டு விடையங்கள் தீர்மானகரமானவைகளாகத் தெரிகின்றன. முதலாவது,இந்த முயற்சியை முன்னெடுக்கும் சட்டத்தரணிகளில் பிரதானிகளாகக் காணப்படுபவர்களுக்கும் கட்சிகளின் முக்கியஸ்தர்களாகக் காணப்படும் சட்டத்தரணிகளுக்கும் இடையிலான உறவு எப்படி இருக்கிறது என்பது. அதிலும் குறிப்பாக சுமந்திரனுக்கும் தமிழ் சட்டத்தரணிகள் பேரவையில் பிரதானிகளாகக் காணப்படுபவர்களுக்கும் இடையிலான உறவு சுமுகமானதா என்பது. ஏனென்றால் அவர்கள் ஒரே துறைக்குரியவர்கள். இரண்டாவது விடயம்,இதற்குமுன் முன்னெடுக்கப்பட்ட ஒருங்கிணைப்பு முயற்சிகள் தோற்றுப் போனதற்கு ஒரு காரணம், சிவில் சமூகங்களிடம் அழுத்தங்களைப் பிரயோகிக்கும் பலம் இருக்கவில்லை என்பதுதான். தமிழ் சட்டத்தரணிகள் பேரவைக்கு அவ்வாறான சக்தி உண்டா?ஏனென்றால் தனியாக அனுசரணை மட்டும் செய்வதனால் அதாவது சம்பந்தப்பட்ட தரப்புகளை ஓரிடத்தில் உட்காரவைத்து அவர்களுக்கு இடையில் இருக்கக்கூடிய முரண்பாடுகளைத் தீர்க்கும் விடயத்தில் ஒர் இடை நடுவராகச் செயல்படுவது என்பது அனுசரணை மட்டும்தான். இதற்குமப்பால் சிலவேளை அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டிவரலாம்.அதற்கு ஒரு பலம் வேண்டும்.கடந்த 16 ஆண்டுகளிலும் தமிழ்ப் பரப்பில் எந்த ஒரு சிவில் சமூகத்துக்கும் அப்படிப்பட்ட பலம் இருக்கவில்லை. இப்பொழுதும் தமிழ் சட்டத்தரணிகள் பேரவைக்கு அவ்வாறு அழுத்தங்களைப் பிரயோகிக்கும் சக்தி இருக்கிறதா? ஒரே துறைக்கு உரியவர்கள் என்பதனால் கட்சித் தலைவர்கள் அவர்கள் சொல்வதை சிலசமயம் செவிமடுக்கலாம். அல்லது தொழில்சார் போட்டி பொறாமை, ஈகோக்கள் இதில் செல்வாக்குச் செகுத்தலாம்.”ஒரே உறைக்குள் இரண்டு வாள்கள் இருப்பதில்லை”. எனவே,மேற்சொன்ன இரண்டு அடிப்படைகளிலும் சிந்தித்தால் தமிழ் சட்டத்தரணிகள் பேரவையின் முயற்சி வெற்றி பெறுமா? கடந்த 74 ஆண்டு கால தமிழ்த் தேசிய அரசியலை “அப்புக்காத்து அரசியல்” அல்லது “கறுப்புக் கோட்டு அரசியல்” என்று அழைப்பதுண்டு.ஏனென்றால் சட்டத்தரணிகள்தான் அங்கே பெரும்பாலும் பிரதானிகளாகக் காணப்பட்டார்கள்.வாதாடும் திறமையுள்ளவர்கள்தான் நாடாளுமன்றத்தில் வாதாடி தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பார்கள் என்று தமிழ்மக்கள் அப்பாவித்தனமாக நம்பிய காலம் அது.ஆனால் சட்டத்தரணிகளின் அரசியல் கடந்த 75 ஆண்டுகளாக தமிழ் மக்களை எங்கே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது? கட்சிக்குள்ளேயே ஒருவர் மற்றவருக்கு எதிராக வழக்கு போடுவது; தங்களுக்கு எதிராக விமர்சிப்பவர்களை வழக்கு போடுவோம் என்று விரட்டுவது; அல்லது வழக்கு போடுவது… போன்ற விடயங்களில்தானே ஒரு பகுதி தமிழ் சட்டத்தரணி அரசியல்வாதிகள் தமது திறமைகளைக் காட்டுகிறார்கள்? ஆனால் நீதிக்கான தமிழ் மக்களின் போராட்டத்தில் உள்நாட்டு நீதியின் விரிவைப் பரிசோதிக்கும் விடயங்களில் இவர்கள் வெற்றிகள் எத்தனை? ஆயுதப் போராட்டத்திற்கு முன்னரான அப்புக்காத்து அரசியலில், “தமிழர் விடுதலை கூட்டணி” ஒரு முக்கிய அடைவு. தேர்தல் தோல்விகளின் விளைவாக ஏற்பட்ட ஓர் ஐக்கியம் என்று அதுதொடர்பாக விமர்சனங்கள் இருந்தாலும், தமிழ்க் கட்சித் தலைவர்கள் தங்களுக்கு இடையில் ஓர் உடன்பாட்டுக்கு வந்து அவ்வாறு ஓர் ஐக்கிய முன்னணியை உருவாக்கியமை குறிப்பிடத்தக்கது. ஆனால் ஆயுதப் போராட்டத்திற்குப் பின்னரான கடந்த 16 ஆண்டுகளிலும் ஏற்கனவே இருந்த பலமான கூட்டு ஆகிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிதைக்கப்பட்டு விட்டது.தமிழரசுக் கட்சியும் இரண்டாக நிற்கிறது. கடைசியாக நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சிக்குக் கிடைத்த அதேயளவு ஆசனங்கள்தான் அரசாங்கத்துக்கும் கிடைத்தன. அது வெற்றி அல்ல.தோல்வி. அதை வெற்றியாகக் கொண்டாடுவது அதைவிடப் பெரிய தோல்வி.இப்படிப்பட்ட ஒரு தோல்விகரமான பின்னணியில்,தாங்களாக இணைய முடியாத தமிழ்க் கட்சிகளை சட்டத்தரணிகளே ஒருங்கிணைக்க முன்வந்திருப்பது வெற்றியளிக்குமா? https://www.nillanthan.com/8200/
-
அரசியல் தூஷணம் - நிலாந்தன்
அரசியல் தூஷணம் - நிலாந்தன் அண்மையில் சுமந்திரனின் பிறந்த நாள் அன்று ஒரு பெண் அரசியல் செயற்பாட்டாளர், சுமந்திரனுக்கு விசுவாசமானவர், முகநூலில் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்திருந்தார். அதில் அவர ” உன்னுடைய எதிரி யாரைக் கண்டு பயப்படுகிறானோ, அவன்தான் உனக்குத் தலைவர்” என்ற பொருள்பட எழுதி வாழ்த்தியிருந்தார். அவர் அவ்வாறு எழுதியதை இக்கட்டுரை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் அவ்வாறு வாழ்த்த அவருக்கு உரிமை உண்டு. அதேசமயம் அதற்கு எதிராக எழுத மற்றவர்களுக்கும் உரிமை உண்டு. ஆனால் அதற்கு ஒரு பண்பாட்டு எல்லைக்கோடு உண்டு. தனது தாய்க்கு எதிராக, சகோதரிக்கு எதிராக, மனைவி அல்லது காதலிக்கு எதிராக மற்றவர்கள் எதை எழுதக்கூடாது என்று ஒருவர் எதிர்பார்க்கிறாரோ, அதை அவரும் இன்னொரு பெண்ணுக்கு எதிராக எழுதக் கூடாது. இதுதான் பண்பாட்டு எல்லைக்கோடு. ஆனால் அந்தப் பெண் மீது கொட்டப்பட்ட தூஷணத்தை, விஷத்தை தொகுத்து பார்த்தால் அவை தமிழ்த் தேசிய பண்பாட்டு இதயத்தின் செழிப்பைக் காட்டவில்லை. சீரழிவைத்தான் காட்டின. அவர் ஒரு குடும்பப் பெண். பொது வாழ்வுக்கு வந்துவிட்டார் என்பதற்காக அவரைக் கண்டபடி தாக்கினார்கள். ஆனால் தேசியவாத அரசியல் என்பது பாலியல் சமத்துவத்தின் மீதுதான் கட்டி எழுப்பப்படுவது. சகபாலரை மதிக்கத் தெரியாத ஒருவர்; சகபாலரை அந்த தேசிய ஆன்மாவின் பண்பாட்டு எல்லைகளைத் தாண்டி விமர்சிக்கும் ஒருவர், தன்னைத் தேசியவாதி என்று கூறிக்கொள்ள முடியாது. அப்படியானால் அந்தப் பெண் தனக்கு எதிராக தூஷணத்தைக் கக்கிய நபர்களுக்கு எதிராக நிகழ் நிலை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கலாமா?அதுபோன்ற அவதூறுகளுக்கு எதிராகத்தான் சாணக்கியன் நிகழ் நிலை பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடுத்தவரா? தமிழரசுக் கட்சி நிகழ் நிலைப் பாதுகாப்புச் சட்டத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. சுமந்திரன் அதற்கு எதிராக கருத்து தெரிவித்திருக்கிறார். ஏன் சாணக்கியனே நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தியிருக்கிறார். ஆனால் இப்பொழுது தன்னை அவதூறு செய்தவர்களுக்கு எதிராக அந்த சட்டத்தின் கீழ் வழக்கு தொடுத்திருக்கிறார். இதில் ஓர் அக முரண்பாடு உண்டு. இதுதொடர்பாக தமிழரசுக் கட்சி தன் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டும். மேலும், சாணக்கியன் நாடாளுமன்றத்தை உட்கட்சி முரண்பாடுகளைப் பிரதிபலிக்கும் மேடையாகப் பயன்படுத்துகிறார் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. கடந்த வாரம் நாடாளுமன்ற சிறப்பு உரிமைகளை ஒரு பாதுகாப்புக் கவசமாகப் பயன்படுத்தி அவர் தெரிவித்த கருத்துக்கள் எந்த வகை அரசியல் கலாச்சாரத்தைச் சேர்ந்தவை? இடதுசாரிகள் முரண்பாடுகளைக் கையாளும்போது “நேச முரண்பாடு; பகை முரண்பாடு” என்று பிரிப்பார்கள். தாய்ப் பூனை இரையைக் கவ்வுவதற்கும் குட்டியை கவ்வுவதற்கும் இடையில் உள்ள வித்தியாசம் என்று அதை விளங்கப்படுத்துவார்கள். ஆனால் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளில் ஒரு பகுதியினர் நாடாளுமன்றத்தில் உட்கட்சிச் சண்டைகளைப் பேசுகிறார்கள். உட்கட்சி முரண்பாடுகளை வழக்குகளின் மூலம் கையாளப் பாக்கிறார்கள். சட்ட நடவடிக்கை என்ற விடயத்தை தமது அரசியல் எதிரிகளுக்கும் தம்மை விமர்சிப்பவர்களுக்கும் எதிரான ஆயுதமாகப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் அரசியல்வாதி ஒருவருக்கு எதிரான அவதூறு எனப்படுவது இப்போதுள்ள தமிழ்த் தேசிய அரசியல் சூழலில், ஒரு சட்டப் பிரச்சினை மட்டுமல்ல. அதை விட ஆழமான பொருளில் அது ஒர் அரசியல் பண்பாட்டு பிரச்சினை. தமிழ் தேசிய அரசியல் விமர்சன பாரம்பரியத்தின் சீரழிவை இது காட்டுகின்றது. இதை இன்னும் ஆழமான வார்த்தைகளில் சொன்னால், தமிழ் தேசிய அரசியலின் ஜனநாயக இதயம் நோய்க்கூறானதாக மாறி வருகிறது என்பதனை அது காட்டுகிறது. பெண்கள் அல்லது தனிப்பட்ட முறையில் அவமானப்படத் தயாராக இல்லாதவர்கள் தமது பொதுவாழ்வுக்காக தமது நிம்மதியைத் தொலைக்கத் தயாராக இல்லாதவர்கள் போன்ற பலரும் அரசியலில் ஈடுபடத் தயங்குவதற்கு இது ஒரு பிரதான காரணம். தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்ட தலைமைத்துவப் போட்டிக்குப் பின்னரான கடந்த இரண்டு ஆண்டுகளிலும் இந்தப் போக்கு மேலும் அதிகரித்து வருகிறது. கடந்த 16 ஆண்டுகால தமிழ்த் தேசியக் கூட்டு உளவியல் என்பது கொந்தளிப்பானது. அவமானகரமான ஒரு கூட்டுத் தோல்விக்கும் கூட்டு இழப்புக்கும் கூட்டுக் காயங்களுக்கும் பின்னரான கூட்டு உளவியலானது கொந்தளிப்பானதாகத்தான் இருக்கும். அது யாரையும் நம்பாது. யாராவது சமூகத்தில் மினுங்கிக் கொண்டு வந்தால் அவரை எச்சரிக்கை உணர்வோடு அல்லது எரிச்சலோடு பார்க்கும். யாரையாவது தாக்க நினைத்தால் அவரை எங்கே தாக்கினால் வலிக்குமோ அங்கே தாக்கும். சமூக வலைத்தளங்களின் சுதந்திரச் சூழல் அதற்கு இடம் கொடுக்கின்றது. சமூக வலைத்தளங்களின் எழுச்சியோடு ஒருபுறம் குரலற்ற மக்களுக்கு குரல் கொடுக்க இடம் கிடைத்திருக்கிறது. அதேசமயம் வெறுப்பவர்களை,விஷம் கக்கிகளை, தூஷணம் கொட்டிகளை, பொது வெளியில் கழியும் வெறுப்பர்களை அது பரவலாகியுள்ளது. குழுக்கள் ஆக்கியுள்ளது. இந்தப் போக்கு கடந்த 16 ஆண்டுகளாகதான் இருந்து வருகிறது என்பதல்ல. ஆயுதப் போராட்டத்திலும் இருந்தது. தமிழ்த் தேசிய அரசியலில் அதிகமாக சூழ்ச்சி கோட்பாடுகள் உற்பத்தி செய்யப்பட்ட காலகட்டம் அதுதான். விமர்சனங்கள் துப்பாக்கி முனையில் அல்லது பச்சை மட்டைகளால் தீர்க்கப்பட்டதுண்டு. ஆயுதப் போராட்டத்திற்கு முன்னரான மிதவாத அரசியலிலும் அது இருந்தது. கொள்கை எதிரிகளை துரோகிகள் ஆக்குவது ; அல்லது காசுக் கள்ளர்கள் ஆக்குவது; பாலியல் குற்றவாளிகளாகச் சித்தரிப்பது; அவர்களுடைய அந்தரங்கத்தை மறைமுகமாகப் பேசுவது; அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை அருவருப்பான உவமைகளுக்கு ஊடாகக் கூறுவது… போன்றன அங்கேயும் இருந்தன. அதிலும் குறிப்பாக அங்கே மல முட்டிப் பாரம்பரியம் இருந்தது. தனது கட்சி எதிரியின் வீட்டு முற்றத்தில் மலம் நிரம்பிய மண் முட்டியைக் கொண்டு போய் உடைத்து விடுவது. அதே மல முட்டிகளோடு, மொட்டை கடிதங்களோடு, முகமூடிகளோடு ஒரு பகுதியினர் இப்பொழுது சமூக வலைத்தளங்களில் வெறுப்பை, விஷத்தைக் கக்கியபடி திரிகிறார்கள். இவர்கள் மத்தியில் படித்தவர்கள் உண்டு; லோயர்கள் உண்டு;மருத்துவர்கள் உண்டு; ஆசிரியர்கள் உண்டு; அரசியல் செயற்பாட்டாளர்கள் உண்டு; கட்சிகளில் பொறுப்பான பதவிகளை வகிப்பவர்கள் உண்டு;தலை முழுக்க நரைத்த வயது போனவர்கள் உண்டு. ஆனால் ஒரு நல்ல விடயம் பெண்கள் இதில் குறைவு. இது அரசியல்வாதிகள் அல்லது அரசியல் செயற்பாட்டாளர்கள் மத்தியில் மட்டுமல்ல, சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மத்தியிலும் உண்டு. படைப்பாளிகள், ஊடகவியலாளர்கள்,அறிவு ஜீவிகள் மத்தியிலும் உண்டு. இலக்கியவாதிகள் தங்களுக்கு இடையே மோதும்போது எதிர்த் தரப்பின் இடுப்புக்கு கீழே அடிப்பது என்பது நீண்ட காலமாக இருந்து வருகிறது. யாருக்கு எங்கே அடித்தால் அதிகம் வலிக்குமோ அந்த உயிர் நிலையில் அடிப்பது. அதாவது பிறப்பு உறுப்பில் அடிப்பது. அல்லது பிறப்பு உறுப்போடு சம்பந்தப்பட்ட விடையங்களை, உறவுகளைத் தாக்குவது. தமிழ் மக்கள், அரசாங்கத்தை பொறுப்புக் கூற வேண்டும் என்று கேட்கிறார்கள். ஆனால் தமிழ் மக்கள் மத்தியில் பொதுவெளியில் துருத்திக் கொண்டு தெரியும் பலரும் எதிர்த் தரப்பை விமர்சிக்கும்போது தமது மூப்பை,படிப்பை,சமூகப் பொறுப்பை, தமது மதத்தின் வழியாக தாங்கள் கற்றுக்கொண்ட அறத்தை ஒழுக்கத்தைப் பிரதிபலிக்கும் வார்த்தைகளை ஏன் பயன்படுத்துவதில்லை? தாங்கள் சமூக வலைத்தளங்களில் எழுதுகின்ற அல்லது தங்களுடைய குருட்டு விசுவாசிகளை ஏவி எழுதுகின்ற விடியங்களை தங்களுடைய பெற்றோர் தங்களுக்கு ஏடு தொடங்கியவர், ஞானஸ்தானம் கொடுத்தவர், தங்களுடைய மனைவி பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள் பார்த்தால் தங்களைப்பற்றி என்ன நினைப்பார்கள் என்ற பண்பாட்டுக் கூச்சம்,பொறுப்பு இவர்களுக்கு ஏன் இல்லாமல் போனது? இது ஒரு கூட்டு உளவியல் நோயாக பெருகி வருகிறது. இதை மருத்துவர்கள் மட்டும் குணப்படுத்த முடியாது. சட்ட நடவடிக்கைகளால் மட்டும் தீர்த்து விட முடியாது. பதிலாக இது ஒரு பண்பாட்டுப் பிரச்சினை.ஒரு கூட்டுப் பிரச்சினையை கூட்டாகத்தான் தீர்க்க வேண்டும்.ஆனால் துயரம் என்னவென்றால் அதைத் தீர்க்க வேண்டிய பொறுப்பில் இருப்பவர்களே அதாவது அரசியல்வாதிகளே இந்தப் பண்பாட்டுச் சீரழிவுக்கு முக்கிய பொறுப்பு என்பதுதான். ஈழத்தமிழ் அரசியல் பரப்பில் மட்டுமல்ல,உலகப்பரப்பில்,உலகப் பேரரசு அமெரிக்காவின் ஜனாதிபதி டிரம்ப் எப்படித் தோன்றுகிறார்? என்ன பேசுகிறார்? அண்மை ஆண்டுகளில் உலகில் அதிகம் விமர்சிக்கப்பட்டவர் அவர்தான். உலகம் பூராகவும் அவருக்கு எதிராக மீம்ஸ்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. குறிப்பாக கடந்த இரண்டு கிழமைகளுக்கு மேலாக நடந்து கொண்டிருக்கும் போரில் அவர் ஒரு கொடிய “கொமெடி பீஸ்” ஆக உருவகிக்கப்படுகிறார். மீம்ஸ் உருவாக்கிகள் அவருடைய மகனுக்கும் வட கொரியத் தலைவரின் மகளுக்கும் திருமணம் செய்து வைத்துப் பிள்ளையும் பெற்றுக் கொடுத்து விட்டார்கள். இவ்வாறு உலகப் பரப்பில் தன்னையும் தனது குடும்பத்தையும் அவதூறு செய்யும் சமூக வலைத்தளப் பாவனையாளர்களுக்கு எதிராக அவர் என்ன செய்யலாம் என்று நமது அரசியல்வாதிகளிடம் ஆலோசனை கேட்டால் என்ன? https://www.nillanthan.com/8193/
-
வளமான நாடு - அழகான வாழ்க்கை திட்டத்தில் காரைநகர் பாதை புனரமைப்பு
வளமான நாடு - அழகான வாழ்க்கை திட்டத்தில் காரைநகர் பாதை புனரமைப்பு ஞாயிறு, 15 மார்ச் 2026 09:38 AM வளமான நாடு - அழகான வாழ்க்கை' என்ற தொனிப்பொருளின் கீழ், மறுமலர்ச்சிக்கான பாதையாக யாழ். மாவட்டத்தில் 117.04 மில்லியன் ரூபா செலவில் காரைநகர் சுற்றுவட்ட வீதியின் புனரமைப்புப் பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்வில் அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க, இ.சந்திரசேகர், வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், எஸ்.ஸ்ரீபவானந்தராஜா, ஜெ.றஜீவன், காரைநகர் பிரதேச சபையின் தவிசாளர், யாழ். மாவட்ட மேலதிக மாவட்டச் செயலர், காரைநகர் பிரதேச செயலாளர், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மாகாணப் பணிப்பாளர், மாவட்ட பிரதம பொறியியலாளர், பிரதேச சபையின் செயலாளர் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் பங்கேற்றனர். https://jaffnazone.com/news/55586
-
வடக்கு மாகாணத்திலுள்ள வீதிகள் அனைத்தும் மூன்று ஆண்டுகளுக்குள் புனரமைக்கப்படும்
வடக்கு மாகாணத்திலுள்ள வீதிகள் அனைத்தும் மூன்று ஆண்டுகளுக்குள் புனரமைக்கப்படும் ஞாயிறு, 15 மார்ச் 2026 09:46 AM வடக்கு மாகாணத்திலுள்ள வீதிகள் அனைத்தும் மூன்று ஆண்டுகளுக்குள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க, இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோரின் முழுமையான ஒத்துழைப்புடன் புனரமைக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். காரைநகர் சுற்றுவட்ட வீதியின் புனரமைப்புப் பணிகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், நான் யாழ். மாவட்டச் செயலாளராகப் பணியாற்றிய காலத்தில் இந்த வீதியைப் புனரமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் பல தடவைகள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், அன்றைய சூழலில் அதனை நிறைவேற்ற முடியவில்லை. சுமார் 40 ஆண்டுகளின் பின்னர் இந்த அரசாங்கத்தால் இவ்வீதிக்கு விடிவு கிடைத்து, மக்களின் நீண்டகாலக் கனவு நனவாகியுள்ளமை பெரும் மகிழ்ச்சியளிக்கின்றது. காரைநகர் பிரதேசம் சுற்றுலாத்துறைக்குப் பிரபல்யமானதொரு இடமாகும். இதுவரை காலமும் இந்த மோசமான வீதியூடாகவே சுற்றுலாவிகள் கசூரினா கடற்கரைக்கு வந்து சென்றனர். இதனால் சுற்றுலாத்துறைக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இவ்வீதி புனரமைக்கப்படுவதன் ஊடாக எதிர்காலத்தில் சுற்றுலாவிகளின் வருகை பலமடங்கு அதிகரிக்கும். அமைச்சர் பிமல் ரத்நாயக்க எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்திலேயே எமது மாவட்டத்துக்குப் பன்முகப்படுத்தப்பட்ட நிதியை ஒதுக்கியவர். நான் மாவட்டச் செயலாளராக இருந்தபோது அந்த நிதியின் ஊடான திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளேன். அண்மையில் ஏற்பட்ட 'டித்வா' பேரிடரால் எமது மாகாண வீதிக் கட்டமைப்பு கடுமையாகப் பாதிக்கப்பட்டது. எனினும், அரசாங்கத்தின் புத்திசாதுரியமான நடவடிக்கையால் வீதிகளைத் தற்காலிகமாகச் சீர்செய்வதற்கு உடனடியாக நிதி விடுவிக்கப்பட்டது. தற்போது அவற்றை நிரந்தரமாகப் புனரமைப்பதற்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாகாண சபையின் ஊடாக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களும் மத்திய அரசாங்கத்தின் நிதியொதுக்கீட்டின் கீழேயே நடைபெறுகின்றன. எனவே, அரசாங்கத்தின் முழுமையான ஒத்துழைப்புடன் இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குள் வடக்கின் வீதிப் புனரமைப்புப் பணிகளை முழுமையாக நிறைவு செய்ய முடியும் என நம்புகின்றேன், என்றார். https://jaffnazone.com/news/55587
-
ஈரானுடன் உடன்படிக்கை செய்யத் தயாரில்லை: ட்ரம்ப் அறிவிப்பு
ஈரான் போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளது; ஆனால் உடன்படிக்கைக்கு நான் தயாரில்லை – அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 15 Mar, 2026 | 02:28 PM ஈரான் அரசாங்கம் போர் நிறுத்த உடன்படிக்கைக்கு விருப்பம் தெரிவித்துள்ள போதிலும், அதற்கான நிபந்தனைகள் திருப்திகரமாக இல்லாததால் இப்போதைக்கு அமைதி உடன்படிக்கை செய்துகொள்ளப் போவதில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். NBC செய்திச் சேவைக்கு சனிக்கிழமை வழங்கிய 30 நிமிட தொலைபேசி நேர்காணலின் போது அவர் இதனைத் திட்டவட்டமாக அறிவித்தார். ஈரானின் முக்கிய எண்ணெய் முனையமான கார்க் தீவு மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த ட்ரம்ப், "நாங்கள் அத்தீவை முற்றாக அழித்துவிட்டோம், விளையாட்டிற்காக இன்னும் சிலமுறை அங்கு தாக்குதல் நடத்துவோம்" எனத் தெரிவித்துள்ளார். ஈரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணை உற்பத்தித் தளங்கள் இன்னும் இரண்டு நாட்களில் முழுமையாகத் துடைத்தெறியப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரானின் புதிய உயரிய தலைவர் மொஜ்தபா காமினி உயிருடன் இருக்கிறாரா என்பது தொடர்பில் தமக்கு சந்தேகம் உள்ளதாகவும் அவர்தெரிவித்துள்ளார். சர்வதேச அளவில் மசகு எண்ணெய் விலை அதிகரித்து வருவது குறித்து கவலைப்படத் தேவையில்லை எனத் தெரிவித்த ட்ரம்ப், ஹோமுஸ் நீரிணையைப் பாதுகாக்க சீனா, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து செயற்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் பெற்றோல் விலை ஒரு கலன் 3.66 டொலராக உயர்ந்துள்ள போதிலும், போர் முடிந்தவுடன் அது முன்னெப்போதையும் விடக் குறையும் என அவர் உறுதியளித்துள்ளார். உக்ரேன் போர் தொடர்பில் பேசிய ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி புட்டினை விட உக்ரேன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி உடன்படிக்கை செய்துகொள்வதற்கு மிகவும் கடினமானவராக இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார். எண்ணெய் விலையைக் கட்டுப்படுத்த ரஷ்யா மீதான தடைகளைத் தற்காலிகமாக நீக்கியுள்ளதை அவர் நியாயப்படுத்தியுள்ளார். ட்ரோன்களை வீழ்த்துவதற்கு உக்ரேன் வழங்க முன்வந்துள்ள உதவியை நிராகரித்த அவர், "எமக்கு ஜெலென்ஸ்கியின் உதவி தேவையில்லை" எனத் தெரிவித்துள்ளார். சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கட்டார் ஆகிய நாடுகள் தேவையற்ற முறையில் ஈரானால் தாக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட ட்ரம்ப், அவர்களுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும் எனத் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/241031
-
அரச ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை?
அரச ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை? மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் உருவாகியுள்ள நிலைமையை முன்கூட்டியே கணிக்க முடியாது எனவும், வளர்ந்து வரும் புதிய சவால்களைத் தொடர்ந்து கண்காணித்து ஒரு நாடாக அவற்றுக்குக் கூட்டு முயற்சியுடன் முகம் கொடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தற்போதைய சூழ்நிலையில் அத்தியாவசிய சேவைகளை முறையாகப் பேணுவதில் எழுந்துள்ள சவால்கள் குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் நிறுவனத் தலைவர்களுடன் இன்று (15) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். இந்தக் கலந்துரையாடலின் போது எரிபொருளைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதை உறுதிப்படுத்தும் நோக்கில், அரச ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். சுகாதார சேவைகளைத் தடையின்றி முன்னெடுப்பதில் விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், அதற்காக அத்தியாவசிய எரிபொருள் கையிருப்புகளைப் பிரதேச ரீதியாகப் பேணுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போதைய நெருக்கடிக்கு மத்தியில் கல்வி உள்ளிட்ட ஏனைய துறைகளை எவ்வாறு தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வது என்பது குறித்தும் இங்கு ஆலோசிக்கப்பட்டது. விவசாயம், மீன்பிடி மற்றும் கைத்தொழில் துறைகளுக்கான எரிபொருள் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக டிஜிட்டல் குறியீட்டு (QR) முறையை விரைவாக முறைப்படுத்துவதன் அவசியத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். https://adaderanatamil.lk/news/cmmrlcwe9001i356ppgca3jj3
-
பிரேத அறையில் பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெற்றதா?; டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டம்
பிணவறையில் யுவதியின் சடலத்தை வன்புணர்ந்த விவகாரம்: அதிரடி திருப்பம் டிக்கோயா-கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த 23 வயதுடைய யுவதியொருவரின் சடலத்திற்கு அந்த வைத்தியசாலையின் ஊழியர்கள் மூவர் பாலியல் ரீதியான இழிவுபடுத்தல்களை மேற்கொண்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஹட்டன் நீதவான் நீதிமன்றின் உத்தரவிற்கமைய, வைத்தியசாலையின் பாதுகாப்பு கேமரா (CCTV) தொகுதி பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் மூன்று ஊழியர்களும் ஏற்கனவே இருமுறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் நோர்வூட் பொலிஸார் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர். ஹட்டன் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் வீரசேகரவின் ஆலோசனையின் பேரில், பொலிஸ் பொறுப்பிலுள்ள CCTV தரவுகள் அரச பகுப்பாய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. வைத்தியசாலைக் குழுவினர் பரிசோதித்த காட்சிகளைத் தவிர மேலதிக ஆதாரங்கள் ஏதும் பதிவாகியுள்ளதா என்பதைக் கண்டறியவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு மீண்டும் 2026.05.18 அன்று ஹட்டன் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. அன்றைய தினம் சந்தேகநபர்கள் மூவரையும் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். இந்த அவமதிப்புச் சம்பவம் கடந்த மாதம் (23) ஆம் திகதி இரவு இடம்பெற்றுள்ளது. எனினும், இச்சம்பவம் குறித்து ஆரம்பத்தில் வைத்தியசாலை நிர்வாகம் விசாரணைகளை முன்னெடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இம்மாதம் (03) ஆம் திகதி பிரதேச மக்கள் வைத்தியசாலைக்கு முன்பாக பாரிய எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்து, முறையான விசாரணையைக் கோரிய பின்னரே நிர்வாகம் நடவடிக்கை எடுக்கத் தொடங்கியது. போராட்டத்தின் விளைவாக, வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி மற்றும் நிபுணத்துவ வைத்தியர்கள் உள்ளிட்ட மூவர் அடங்கிய விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டது. தற்போது குற்றம் சாட்டப்பட்டுள்ள மூன்று ஊழியர்களும் தற்காலிகமாக வைத்தியசாலையிலிருந்து நீக்கப்பட்டு, நுவரெலியா மாவட்ட பிராந்திய சுகாதார அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். https://www.tamilmirror.lk/மலையகம்/பிணவறையில்-யுவதியின்-சடலத்தை-வன்புணர்ந்த-விவகாரம்-அதிரடி-திருப்பம்/76-373917
-
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மூவர் பேராசிரியர்களாகப் பதவி உயர்வு
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மூவர் பேராசிரியர்களாகப் பதவி உயர்வு adminMarch 14, 2026 written by admin March 14, 2026 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடம், பொறியியல் பீடம் மற்றும் கலைப் பீடங்களைச் சேர்ந்த மூன்று சிரேஷ்ட விரிவுரையாளர்கள் பேராசிரியர் பதவிக்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். விஞ்ஞான பீடத்தின் இரசாயனவியல் துறைத் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி ஜசோதா பிரபாகர், பொறியியல் பீடத்தின் பல்துறைக் கற்கைகள் துறைத் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி பத்மநாதன் கதிர்காமநாதன், மற்றும் கலைப் பீடத்தின் ஆங்கில மொழி கற்பித்தல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளரான கலாநிதி திருநாவுக்கரசு கருணாகரன் ஆகியோருக்கு பேராசிரியர் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இந்த பதவி உயர்வுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேரவை இன்று ஒப்புதல் வழங்கியது. பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம் இன்று (சனிக்கிழமை) துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் நடைபெற்றது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு சுற்றறிக்கை நியமங்களுக்கு அமைவாக பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களின் மதிப்பீடு மற்றும் நேர்முகத் தேர்வு முடிவுகள் பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டதையடுத்து, திறமை அடிப்படையில் இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. https://globaltamilnews.net/2026/230472/
-
இராக்கில் விபத்துக்குள்ளான அமெரிக்க ராணுவ விமானம்
ஈராக் வான்வெளியில் அமெரிக்க எரிபொருள் நிரப்பு விமானம் விபத்து : தாக்குதல் காரணமல்ல என அறிவிப்பு Published By: Priyatharshan 13 Mar, 2026 | 09:58 AM அமெரிக்காவின் United States Central Command (USCENTCOM) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அமெரிக்காவின் Boeing KC-135 Stratotanker எரிபொருள் நிரப்பு விமானம் ஒன்று ஈராக் நாட்டின் மேற்குப் பகுதியில் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. USCENTCOM வெளியிட்ட செய்திக்குறிப்பில், “Operation Epic Fury” என்ற நடவடிக்கையின் போது இந்த சம்பவம் இடம்பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் இரண்டு விமானங்கள் தொடர்புடையதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் ஒன்றான KC-135 விமானம் மேற்கு ஈராக் பகுதியில் விழுந்ததாகவும், மற்றொரு விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் எதிரி தாக்குதல் அல்லது நட்பு படையினரின் தவறான தாக்குதல் காரணமாக ஏற்பட்டதல்ல எனவும் அமெரிக்க மத்திய கட்டளைத் தளம் தெளிவுபடுத்தியுள்ளது. விபத்துக்குள்ளான விமானத்தைச் சேர்ந்த பணியாளர்களை கண்டுபிடிக்கும் நோக்கில் மீட்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும், சம்பவத்தின் முழுமையான விவரங்களைத் திரட்டுவதற்கு அதிகாரிகளுக்கு கால அவகாசம் வழங்குமாறு USCENTCOM பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், இந்த விபத்து குறித்து சேவையாற்றும் இராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு தெளிவான தகவல்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/240856
-
யாழில் சட்டவிரோத இந்திய செய்மதித் தொலைக்காட்சி நிலையங்கள் முற்றுகை!
யாழில் சட்டவிரோத இந்திய செய்மதித் தொலைக்காட்சி நிலையங்கள் முற்றுகை! 13 Mar, 2026 | 10:32 AM யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் இந்திய செய்மதித் தொலைக்காட்சி சேவைகளை விற்பனை செய்து வந்த பல வணிக நிலையங்களை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளதுடன், பெருமளவிலான உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளனர். இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவுறுத்தலுக்கு அமைய, நேற்று வியாழக்கிழமை (12) இந்தச் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இலங்கையில் அனுமதியின்றி இந்திய செய்மதித் தொலைக்காட்சி சேவைகளை விற்பனை செய்பவர்கள் மற்றும் அதனைப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வழங்கப்பட்ட உத்தரவின் பேரில் யாழ்ப்பாண பொலிஸார் இந்தச் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர். இலங்கைக்குள் இந்திய செய்மதித் தொலைக்காட்சி சேவைகளைப் பார்ப்பதோ அல்லது அதற்காகப் பணம் செலுத்துவதோ தண்டனைக்குரிய குற்றமாகும் என அதிகாரிகள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர். குறிப்பாக, சன் டைரக்ட்,வீடியோகான்,டாடா பிளே,டிஷ் டிவி போன்ற சேவைகள் சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறான சட்டவிரோதச் சேவைகள் ஊடாக, இலங்கையிலிருந்து மில்லியன் கணக்கான ரூபா பணம் உத்தியோகபூர்வமற்ற வழிகளில் இந்தியாவிற்குப் பரிமாறப்படுவதாகவும், இதனால் நாட்டின் அந்நியச் செலாவணிக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்தச் சேவைகளை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களை மாத்திரமன்றி, அவற்றை வீடுகளில் பயன்படுத்தும் நபர்களையும் அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழு பொலிஸாருக்குப் பணித்துள்ளது. இதற்கமைய, யாழ்ப்பாணத்தின் ஏனைய பகுதிகளிலும் இவ்வாறான சோதனைகள் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/240858
-
வடமராட்சியில் மருமகனின் வெறியாட்டம் – மாமி உயிரிழப்பு! மாமன் ஆபத்தான நிலையில் . மனைவி பிள்ளைகள் அருந்தப்பு!
மாமியார் படுகொலை வழக்கு: மகனுக்கு உதவியதாக தந்தையும் கைது – இருவரும் விளக்கமறியலில் adminMarch 13, 2026 மாமியாரை படுகொலை செய்து, மாமனாருக்கு கடும் காயங்களை ஏற்படுத்திய தனது மகனுக்கு உதவியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் தந்தையும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கரவெட்டி பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் குடும்பத் தகராறு காரணமாக கடந்த புதன்கிழமை தனது மனைவியின் தாயாரை வாளால் வெட்டி படுகொலை செய்ததுடன், மனைவியின் தந்தையையும் படுகொலை செய்யும் நோக்கில் தாக்கி கடும் காயங்களை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதாக பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகஸ்தராக பணியாற்றும் குறித்த நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட வாளை மறைத்து வைக்க உதவியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் அந்த நபரின் தந்தையாரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினர், அவர்களை நேற்று (வியாழக்கிழமை) பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினர். விசாரணையைத் தொடர்ந்து, இருவரையும் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. https://globaltamilnews.net/2026/230414/
-
யாழ். பழைய பூங்கா உள்ளக விளையாட்டு அரங்கு கட்டுமானம்: இடைக்காலத் தடையை நீடித்தது மேல் நீதிமன்றம்
யாழ். பழைய பூங்கா உள்ளக விளையாட்டு அரங்கு கட்டுமானம்: இடைக்காலத் தடையை நீடித்தது மேல் நீதிமன்றம் adminMarch 13, 2026 யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் உள்ளக விளையாட்டு அரங்கு அமைப்பதற்கான கட்டுமான பணிகளுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை தொடர்ந்து நீடிக்க மேன்முறையீட்டுக்கான மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இரண்டு நீதிபதிகளை கொண்ட அமர்வு நேற்றைய தினம் (வியாழக்கிழமை) இந்த உத்தரவை வழங்கியுள்ளது. யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் உள்ளக விளையாட்டு அரங்கு ஒன்றை அமைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைக்கு எதிராக யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம் முதலில் இரண்டு வாரங்களுக்கு இடைக்காலத் தடை உத்தரவை வழங்கியிருந்தது. ஆனால், அந்த இரண்டு வார காலம் நிறைவடைந்த பின்னர், இடைக்காலத் தடை உத்தரவை நீடிக்காமல் நீதிமன்றம் கட்டளை வழங்கியது. இதற்கு எதிராக மனுதாரர்கள் சார்பில் வடக்கு மாகாண மேன்முறையீட்டுக்கான மேல் நீதிமன்றத்தில் மேன்முறையீடும் மீளாய்வு மனுவும் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் சமர்ப்பித்து வாதாடியிருந்தார். இந்த நிலையில், மேன்முறையீடு மற்றும் மீளாய்வு மனுக்கள் மீதான விசாரணை முடியும் வரை உள்ளக விளையாட்டு அரங்கு கட்டுமானத்திற்கு எதிரான இடைக்காலத் தடை தொடர்ந்து அமலில் இருக்கும் என மேன்முறையீட்டுக்கான மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், மீளாய்வு மனுவுக்கு பதில் மனுத் தாக்கல் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டு, வழக்கு எதிர்வரும் ஏப்ரல் 30ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் மேன்முறையீட்டு மனுவை தொடர்ந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டுமா என்பது குறித்து நீதிமன்றம் தீர்மானிக்கவுள்ளது. https://globaltamilnews.net/2026/230417/
-
நிதித் துஸ்பிரயோகம் – வடக்கு ஆளுநர் உள்ளிட்ட மூவருக்கு எதிராக முறைப்பாடு!
நிதித் துஸ்பிரயோகம் – வடக்கு ஆளுநர் உள்ளிட்ட மூவருக்கு எதிராக முறைப்பாடு! adminMarch 11, 2026 வடமாகாண ஆளுநர் உள்ளிட்ட மூவருக்கு எதிராக நிதிக்குற்ற புலனாய்வு பிரிவில் வேலணை பிரதேச சபை உறுப்பினர் முறைப்பாடு செய்துள்ளார். வேலணையை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் நோக்குடன் 2016ஆம் ஆண்டு மண்டைதீவில் 77 மில்லியன் ரூபாய் நிதியில் “எக்கோ ரூரிசம்” திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. உரிய முறையிலான திட்டமிடல் இல்லாமை உள்ளிட்ட பல காரணங்களால் அந்த திட்டம் தோல்வியடைந்தது. அத்துடன் 50 மில்லியன் ரூபாய் பெறுமதியான பொருட்கள் பாவனை இன்றி அழிந்து போயுள்ளன என குறித்த திட்டத்திற்கு எதிராக பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில் குறித்த திட்டத்தில் ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளன எனவும் , அரச நிதி வீண் விரயம் செய்யப்பட்டுள்ளதாகவும் , அதற்கு அப்போதைய யாழ் மாவட்ட செயலர் நா.வேதநாயகன் (தற்போதைய வடமாகாண ஆளுநர்), அந்த திட்டம் நடைமுறைப்படுத்திய கால பகுதியில் வேலணை பிரதேச செயலர்களாக கடமையாற்றிய தெ.சுகுணரதி மற்றும் ஆ. சோதிநாதன் ஆகிய மூவருக்கும் எதிராகவே முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. https://globaltamilnews.net/2026/230329/
-
வடமராட்சியில் மருமகனின் வெறியாட்டம் – மாமி உயிரிழப்பு! மாமன் ஆபத்தான நிலையில் . மனைவி பிள்ளைகள் அருந்தப்பு!
வடமராட்சியில் மருமகனின் வெறியாட்டம் – மாமி உயிரிழப்பு! மாமன் ஆபத்தான நிலையில் . மனைவி பிள்ளைகள் அருந்தப்பு! adminMarch 12, 2026 யாழ்ப்பாணத்தில் குடும்ப தகராறு காரணமாக மாமியை வெட்டி படுகொலை செய்ததுடன் , மாமனாரையும் வெட்டி படுகாயங்களுக்கு உள்ளாக்கிய அரச உத்தியோகஸ்தரை காவற்துறையினர் கைது செய்துள்ளனர். வடமராட்சியில் நேற்றைய தினம் புதன்கிழமை (11.03.26) நடைபெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கரவெட்டி பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் குடும்ப தகராறு காரணமாக நேற்றைய தினம் மாலை கரவெட்டியில் உள்ள தனது வீட்டில், தனது இரண்டு பிள்ளைகளையும் ஒரு அறையில் பூட்டி வைத்து , மனைவி மீது தாக்குதல் மேற்கொண்டு, மனைவியை கத்தியால் குத்த முனைந்த வேளை , மனைவி, கணவனை கீழே தள்ளி விழுத்தி விட்டு , அறையில் இருந்த இரண்டு பிள்ளைகளையும் மீட்டுக்கொண்டு , வீட்டில் இருந்து தப்பியோடி அருகில் இருந்த கடையொன்றினுள் தஞ்சம் புகுந்துள்ளனர். அந்நிலையில், மனைவி, பிள்ளைகளை அழைத்துக்கொண்டு மந்திகை பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கே சென்று இருப்பார் என்ற எண்ணத்தில் , மனைவியின் தாய் வீட்டிற்கு சென்றவர் , அங்கே தனிமையில் இருந்த மனைவியின் தாயாருடன் தர்க்கப்பட்டு, அவரை வாளினால் வெட்டி படுகொலை செய்துள்ளார். பின்னர் அங்கிருந்து வெளியே வந்து அப்பகுதிகளில் தேடுதல்களை நடத்தியுள்ளார். அதன் போது, வீட்டில் இருந்து சற்று தொலைவில் உள்ள பழச்சாறு கடையொன்றில் மனைவியின் தந்தை நிற்பதனை அவதானித்து , அங்கு சென்று அவர் மீது மூர்க்கத்தனமாக வாள் வெட்டினை மேற்கொண்டுள்ளார். அதன் போது அங்கிருந்தவர்கள் அவரை மடக்கி பிடிக்க முற்பட்ட வேளை அங்கிருந்து தப்பி சென்றார். அதனை அடுத்து , அங்கிருந்தவர்கள் படுகாயமடைந்தவரை மீட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் , மேலதிக சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பருத்தித்துறை காவற்துறையினர் வடமராட்சி பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி உத்தியோகஸ்தரான படுகொலையானவரின் மருமகனை கைது செய்து காவல் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். சம்பவத்தில் யோகராசா சரஸ்வதி (வயது 67) என்பவரே உயிரிழந்ததுடன், அவரது கணவனான காசிப்பிள்ளை யோகராசா படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். https://globaltamilnews.net/2026/230357/
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இது கேள்விக்கொத்தை தயாரிப்பதில் சிக்கலை உருவாக்கும்! எனக்கு இன்னோர் ஹொலிடே அடுத்த மாதம் இருக்கு! @கந்தப்பு , ஒரு short form போட்டியை இந்தப் வருடம் நீங்கள் நடாத்தினால் நல்லது!
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நாளைதான் போட்டி விபரங்கள் வரும். 26 மார்ச் ஆரம்பிப்பார்கள். இதற்குள் கேள்விக்கொத்து தயாரித்தாலும் எத்தனை பேர் உடனடியாக பதில்கள் தருவார்கள்?
-
இன்றைய நாஜிகளின் சர்வதேச காடைத்தனம்
இன்றைய நாஜிகளின் சர்வதேச காடைத்தனம் Veeragathy Thanabalasingham on March 10, 2026 Photo, REUTERS மத்திய கிழக்கில் ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திவரும் போர் மத்திய கிழக்கைச் சூழ்ந்துகொண்டிருப்பது மாத்திரமல்ல, இந்து சமுத்திரப் பிராந்தியத்துக்கும் பரவும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. தென்னிந்தியாவின் விசாகபட்டினத்தில் சர்வதேச கடற்படைப் பயிற்சிகளில் பங்கேற்ற பின்னர் நாடு திரும்பிக்கொண்டிருந்த ஈரானிய போர்க்கப்பல் ஒன்று கடந்த வாரம் மத்திய கிழக்கில் இருந்து 2000 மைல்கள் தொலைவில் இந்து சமுத்திரத்தில் இலங்கையின் தென்கரையோரத்தில் இருந்து 40 கடல் மைல்களுக்கு அப்பால் அமெரிக்க நீர்மூழ்கியின் தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்டிருக்கிறது. இன்னொரு ஈரானியக் கப்பலை இலங்கை கடற்படை மனிதாபிமான அடிப்படையில் திருகோணமலை துறைமுகத்துக்குக் கொண்டு வந்திருக்கிறது. அண்மைய தசாப்தங்களில் வெள்ளை மாளிகையில் பதவியில் இருந்த ஜனாதிபதிகளில் படுமோசமான போர்வெறியராக விளங்கும் டொனால்ட் ட்ரம்பும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் இனப்படுகொலைச் சந்தேகநபராக அறிவிக்கப்பட்ட இஸ்ரேலிய பிரதமர் நெதான்யாகுவும் ஈரானுக்கு எதிராக விரைவாகப் போரைத் தொடங்கியிருக்கலாம். ஆனால், அந்தப் போருக்கு விரைவான முடிவு கிட்டப்போவதில்லை. போர் தொடங்கிய முதல்நாளன்றே ஈரானின் அதியுயர் ஆன்மீகத் தலைவர் அயத்தொல்லா அலி காமெனி குண்டுவீச்சில் கொல்லப்பட்டது குறித்து கொண்டாடிக் கொண்டிருக்கும் ட்ரம்ப் ஈரானின் அடுத்த ஆன்மீகத் தலைவரைத் தெரிவு செய்வதில் தன்னை ஈடுபடுத்த வேண்டும் என்று அறிவித்திருக்கிறார். புதிய ஆன்மீகத் தலைவராக கொலையுண்ட தலைவரின் மகன் மொஜ்ராபா காமெனி தெரிவாவதை அனுமதிக்க முடியாது என்பதே ட்ரம்பின் நிலைப்பாடாக இருக்கிறது. ஈரானில் அமையக்கூடிய அடுத்த அரசாங்கம் தனது பொம்மையாக இருப்பதை உறுதி செய்வதே அவரது நோக்கம். ஜனவரியில் வெனிசூலா ஜனாதிபதி நிக்கலஸ் மதுரோவை அமெரிக்கப் படைகள் நியூயோர்க்கிற்கு கடத்திச் சென்றதைத் தொடர்ந்து ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட துணை ஜனாதிபதி டெல்சி றொட்ரிகஸைப் போன்று வாஷிங்டனின் விருப்பங்களை நிறைவேற்றக்கூடிய ஒருவரை ஈரானில் பதவியில் அமர்த்துவதே ட்ரம்பின் திட்டம். அயத்தொல்லா காமெனியின் கொள்கைகளைப் பின்பற்றும் புதிய ஈரானியத் தலைவரை தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று அவர் அறிவித்திருக்கிறார். ஆனால், அத்தகைய ஒரு கையாளை இன்றைய ஈரானிய அரசாங்கத் தலைவர்கள் மத்தியில் கண்டுபிடிப்பது சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது. அயத்தொல்லா காமெனியின் மறைவையடுத்து ஈரானிய அரசு நிலை குலைந்து விடும் என்று எதிர்பார்த்த அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் இதுவரையில் ஏமாற்றமே கிடைத்திருக்கிறது. மிலேச்சத்தனமான குண்டுவீச்சுக்களை நடத்தி ஈரானில் அழிவுகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் ட்ரம்ப் அதேவேளை, அரசாங்கத்தைத் தூக்கியெறியுமாறு அந்த நாட்டு மக்களை கேட்கிறார். பாதுகாப்பு அமைச்சர் மற்றும் படைத்தளபதிகள் பலர் கொல்லப்பட்ட போதிலும் ஈரான், இஸ்ரேல் மீதும் அயல் அரபு நாடுகளில் உள்ள அமெரிக்கப் படைத் தளங்கள், சொத்துக்கள் மற்றும் தூதரகங்கள் மீது தொடர்ச்சியாக ஏவுகணைத் தாக்குதல்களை நடத்திக் கொண்டிருக்கிறது. ஆசியாவுக்கான வர்த்தகம் உட்பட உலகின் 20 சதவீதமான எண்ணெய் விநியோகத்துக்கு முக்கியமானதாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடிவிட்டது. போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு சில நாடுகள் மத்தியஸ்த முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதாக ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஸ்கியான் கடந்த வெள்ளிக்கிழமை கூறிய அதேவேளை, ட்ரம்ப் ஈரான் நிபந்தனையற்ற முறையில் சரணடைய வேண்டும் என்று கூறினார். நிபந்தனையற்ற சரணாகதியைத் தவிர, ஈரானுடன் வேறு எந்த உடன்பாட்டுக்கும் இடமில்லை என்பது அவரது நிலைப்பாடு. பாரிய தாக்குதல்களை நடத்துவதற்கு ஈரான் தீட்டிக்கொண்டிருந்த திட்டத்தை முறியடிப்பதற்காக முன்னெச்சரிக்கையாகவே தாக்குதல்களை தொடங்கியதாகக் கூறும் அமெரிக்காவும் இஸ்ரேலும் அவற்றின் குற்றச்சாட்டை நிரூபிக்க எந்தவொரு சான்றையும் உலகின் முன்வைக்கவில்லை. கடந்த வருடம் ஜூனில் நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதல்களில் ஈரானின் சகல அணுவசதிக் கட்டமைப்புக்களும் நிர்மூலம் செய்யப்பட்டு விட்டதாகவும் அதற்குப் பிறகு ஈரான் எந்த அணுத் திட்டத்தையும் கொண்டிருக்க முடியாது என்று கூறிய ட்ரம்ப், ஈரான் அணுவாயுதங்களை தயாரிப்பதை தடுக்கவே தாக்குதல்களை மீண்டும் ஆரம்பிக்க வேண்டியிருந்ததாக குறிப்பிட்டார். ஐக்கிய நாடுகள் சாசனத்தின் பிரகாரம் எந்தவொரு நாடும் அதற்கெதிராக உடனடியாக மேற்கொள்ளப்படக்கூடிய தாக்குதலுக்கு எதிராக தற்காப்புக்குப் படைபலத்தைப் பயன்படுத்துவது சட்டபூர்வமானது. அல்லாவிட்டால் பாதுகாப்புச் சபையின் அங்கீகாரத்துடன் மாத்திரமே தாக்குதலை நடத்த முடியும். அதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி போரைப் பிரகடனம் செய்வதற்கு காங்கிரஸின் அனுமதியைப் பெறவேண்டும். இந்த நிபந்தனைகளில் எந்தவொன்றையும் ட்ரம்ப் நிறைவேற்றவில்லை. ட்ரம்பின் போர் ஈரானை அழித்துக் கொண்டிருப்பது மாத்திரமல்ல இன்றைய பிரச்சினை. உலகின் உறுதிப்பாட்டுக்கு ஆதாரமாக இருக்கும் சட்ட முறைமைகள் சகலதையும் அவர் பலவீனப்படுத்திக் கொண்டிருக்கிறார். வெனிசூலாவின் இறைமையை மீறி மதுரோவை கடத்திச் சென்றது குறித்து கண்டனங்கள் கிளம்பியபோது சர்வதேச சட்டங்களைப் பற்றி தனக்கு கவலையில்லை என்றும் இரண்டாவது உலகப்போருக்குப் பின்னர் உருவாக்கப்பட்ட உலக ஒழுங்கு (ஐக்கிய நாடுகள்) அமெரிக்காவுக்கு அநாவசியமான சுமையாக இருக்கிறது என்றும் அவர் கூறியது கவனிக்கத்தக்கது. முன்னெச்சரிக்கையாக படைபலத்தைப் பயன்படுத்துவது என்பது வழமையானதாக்கப்பட்டுவிட்டால், எந்தவொரு அரசும் தனக்கு நீண்டகால நோக்கில் அச்சுறுத்தலாக அமையக் கூடியது என்று சந்தேகிக்கும் எந்தவொரு நாட்டின் மீதும் விரும்பிய நேரத்தில் படை பலத்தைப் பிரயோகிக்கக்கூடும். இது பேராபத்தான ஆயுதங்கள் புழக்கத்தில் இருக்கின்ற இன்றைய யுகத்தில் பயங்கரமான முன்னுதாரணமாகிவிடும். சட்டவிரோதமான போர்கள் சர்வசாதாரணமாகிவிடும். தற்போதைய உலகை பல்துருவமயப்பட்டது என்ற ஒரு மாயையில் நாம் வாழ்ந்திருக்கிறோம் என்று தோன்றுகிறது. அதாவது, பல நாடுகள் பொருளாதார மற்றும் இராணுவ ரீதியில் ஒப்பீட்டளவில் பலம்பொருந்தியவையாக வளர்ந்துவிட்டதால் அமெரிக்கா போன்ற தனியொரு வல்லரசின் மேலாதிக்கத்தின் கீழானதாக உலக ஒழுங்கு இனிமேல் இருக்காது என்று நம்பினோம். எவ்வாறு, எந்த நேரத்தில் நடந்துகொள்வார் என்று முன்கூட்டியே கூறமுடியாத ட்ரம்பின் தலைமையின் கீழ் கடந்த ஒரு வருடத்துக்கும் அதிகமான காலமாக சர்வதேச சட்டங்களை மதிக்காமல் அமெரிக்கா செய்துவருகின்ற அடாவடித்தனங்களுக்கு எதிராக எதையும் செய்ய முடியாதவையாக உலக நாடுகள் பரிதாபகரமான ஒரு நிலையில் இருக்கின்றன. இரு மாதகால இடைவெளியில் அமெரிக்கா சீனாவின் நெருங்கிய இரு நேசநாடுகளில் ஆக்கிரமிப்பைச் செய்திருக்கிறது. வெனிசூலாவில் இருந்து மதுரோ கடத்திச் செல்லப்பட்டதையும் கடந்தவாரம் குண்டு வீச்சுக்களில் ஈரானிய ஆன்மீகத் தலைவர் கொல்லப்பட்டதையும் சர்வதேச சட்டமீறல் என்று கண்டனம் செய்யச் சீனாவினால் முடிந்ததே தவிர, வேறு எதையும் உருப்படியாகச் செய்ய முடியவில்லை. ரஷ்யாவின் நிலையும் அதுவே. இரு நாடுகளும் ஈரானுக்கு ஆதரவாக இராணுவ ரீதியான தலையீடுகளைச் செய்ய முடியாதவையாக இருக்கின்றன. ஒரு வாரம் கடந்துவிட்ட நிலையிலும் கூட, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஈரானுக்கு எதிரான அமெரிக்க — இஸ்ரேலிய போரை கண்டனம் செய்ய முன்வரவில்லை. அயத்தொல்லா காமெனியின் மறைவுக்கு காலந்தாழ்த்தியே இந்தியா அனுதாபம் தெரிவித்திருக்கிறது. புதுடில்லியில் உள்ள ஈரானியத் தூதரகத்துக்குச் சென்ற இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி அனுதாபப் புத்தகத்தில் கைச்சாத்திட்டார். ஈரானியத் தூதரகங்களுக்குச் சென்று அனுதாபப் புத்தகங்களில் கைச்சாத்திட வேண்டாம் என்று உலக நாடுகள் பலவற்றின் தலைநகரங்களில் உள்ள இந்தியத் தூதுவர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கின்ற அளவுக்கு அமெரிக்காவைப் புண்படுத்தக்கூடாது என்பதில் மோடி அரசாங்கம் கடுமையான கரிசனையுடன் இருக்கிறது. இலங்கையின் கரையோரத்துக்கு அப்பால் ஈரானியப் போர்க்கப்பல் அமெரிக்க நீர்மூழ்கியினால் மூழ்கடிக்கப்பட்ட சம்பவம் இந்து சமுத்திரத்தில் செல்வாக்கைச் செலுத்துவதில் இந்தியாவுக்கு இருக்கும் வல்லமை குறித்து கேள்விகளை எழுப்பியிருக்கிறது. கடற்படைப் பயிற்சிகளில் பங்கேற்ற ஈரானியப் போர்க்கப்பல் விசாகபட்டினத்தில் இருந்து புறப்பட்ட நேரத்தில் இருந்து அதை அமெரிக்க நீர்மூழ்கி கண்காணித்துக் கொண்டிருந்தது என்பது தெளிவானது. தனது செல்வாக்குப் பிராந்தியம் என்று இந்தியா உரிமை கோருகின்ற – கிரமமாக இந்தியக் கடற்படை ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற கடற்பிராந்தியத்தில் வெளிநாட்டு நீர்மூழ்கி ஒன்றின் பிரசன்னத்தை கண்டுபிடிக்கவும் தனது அழைப்பின் பேரில் பயிற்சிக்கு வந்த நேசநாடொன்றின் போர்க்கப்பலின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்தியாவினால் இயலவில்லை என்பது கோடிப்புறத்தில் இந்தியாவின் அதிகாரம் தொடர்பில் அசௌகரியமான கேள்விகளைக் கிளப்புகிறது. இது இவ்வாறிருக்க, கிறீன்லாந்து தீவை அமெரிக்காவுக்கு சொந்தமாக்கப் போவதாகவும் அதற்காக தேவையானால் படைபலத்தைப் பிரயோகிக்கவும் தயங்கப்போவதில்லை என்றும் ட்ரம்ப் அச்சுறுத்தியபோது அவர் சர்வதேச சட்டங்களை அவமதிக்கிறார் என்று குற்றஞ்சாட்டிய ஐரோப்பிய நாடுகள் பலவற்றின் தலைவர்கள் ஈரான் மீதான அமெரிக்காவின் ஆக்கிரமிப்பைக் கண்டனம் செய்யவோ அல்லது ஆன்மீகத் தலைவர் கொல்லப்பட்டதற்கு அனுதாபம் தெரிவிக்கவோ முன்வரவில்லை. இன்றைய ‘நாஜி’களான ட்ரம்பும் நெதான்யாகுவும் செய்யும் சர்வதேச காடைத்தனத்துக்கு எதிராக எதையும் செய்ய முடியாமல் உலக நாடுகள் பரிதாபகரமாக கைகட்டிப் பார்த்துக் கொண்டிருக்கின்றன. மத்திய கிழக்கின் புவிசார் அரசியல் முற்றுமுழுதாக இஸ்ரேலின் நலன்களினால் வடிவமைக்கப்படக்கூடிய சூழ்நிலையை தற்போதைய போர் ஏற்படுத்தக்கூடிய பேராபத்து இருக்கிறது. அதேவேளை, ட்ரம்ப் ஏற்கெனவே அச்சுறுத்திவருவதைப் போன்று வளங்களைச் சூறையாடுவதற்காக பல நாடுகளில் இராணுவத் தலையீடுகளைச் செய்வதைத் தடுக்க முடியாமலும் போகலாம். உலக நாடுகள் ட்ரம்பின் போர்வெறிக்கு எதிராக அணிதிரள வேண்டிய நேரம் வந்துவிட்டது. தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் மனித குலத்தை அழிவை நோக்கி நகர்த்திச் செல்லும். வீரகத்தி தனபாலசிங்கம் https://maatram.org/articles/12620
-
யாழ்.பல்கலை கறுப்பு கொடி விவகாரம் - துணைவேந்தர் , பதிவாளரிடம் 3 மணி நேர விசாரணை
யாழ்.பல்கலை கறுப்பு கொடி விவகாரம் - துணைவேந்தர் , பதிவாளரிடம் 3 மணி நேர விசாரணை adminMarch 10, 2026 சுதந்திர தினத்தன்று தேசிய கொடியை இறக்கி கறுப்பு கொடியேற்றியமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு கடந்த பெப்ரவரி மாதம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு பணித்திருந்தது. அதனைத் தொடர்ந்து, பல்கலைக்கழகத்தின் இன நல்லிணக்கப் பிரிவுக்குப் பொறுப்பான பேராசிரியர், மாணவர் ஒழுக்காற்று அதிகாரி மற்றும் தலைமைப் பாதுகாப்பு அதிகாரி ஆகியோரைக் கொண்ட குழுவொன்று விசாரணைகளை முன்னெடுத்தது. குறித்த விசாரணை அறிக்கையானது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டது. விசாரணைகளின் அடிப்படையில் கறுப்பு கொடியேற்றிய சம்பவத்துடன் நேரடியாகத் தொடர்புடையதாக 2 மாணவிகள் உள்ளிட்ட 30 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மாணவர்களிடம் பல்கலைக்கழக மட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது, சிறுபான்மைத் தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு உரிய மதிப்பு வழங்கப்படாத வரை இலங்கையின் சுதந்திரதினம் தமிழர்களுக்கு உகந்த நாளல்ல என்பதை வெளிப்படுத்தவே இந்தச்செயலில் ஈடுபட்டதாக மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது கொடியேற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில், இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை பல்கலைக்கழகத்தினுள் தமது வாகனத்தில் சென்று துணைவேந்தர் மற்றும் பதிவாளர் ஆகியோரிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணைகளை முன்னெடுத்து வாக்கு மூலங்களை பதிவு செய்துள்ளனர். காவல்துறையினா் வாகனத்துடன் பல்கலைக்கழக வளாகத்தினுள் சென்று , பல்கலைக்கழகத்தினுள் வைத்து துணைவேந்தர் மற்றும் பதிவாளர் ஆகியோரிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணைகளை மேற்கொண்டு வாக்கு மூலங்களை பெற்றுக்கொண்டமை தொடர்பில் மாணவர்கள் கண்டனம் தெரிவித்தனர். அதேவேளை சுதந்திர தினத்தன்று தேசிய கொடியை இறக்கி , கறுப்பு கொடியேற்றும் போது எடுக்கப்பட்ட காணொளிகளின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், அந்நேரம் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் உள்ளிட்டவர்களிடமும் , அடையாளம் காணப்பட்ட சில மாணவர்களிடமும் விசாரணைகளை முன்னெடுத்து , வாக்கு மூலங்களை பதிவு செய்ய குற்றத்தடுப்பு பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://globaltamilnews.net/2026/230304/
-
புத்துயிர் பெறவுள்ள கிட்டு பூங்கா
புத்துயிர் பெறவுள்ள கிட்டு பூங்கா adminMarch 10, 2026 யாழ்ப்பாணம் கிட்டு பூங்காவை புனரமைப்பு செய்யும் முகமாக , பூங்காவை துப்புரவு செய்யும் பணிகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டது. விடுதலைப்புலிகளின் யாழ்ப்பாண மாவட்ட இராணுவத் தளபதியான கேணல் கிட்டு என அழைக்கப்படும் சதாசிவம்பிள்ளை கிருஷ்ணகுமார் உள்ளிட்ட புலிகளின் 10 போராளிகள் பயணித்த கப்பலை சர்வதேச கடற்பரப்பினுள் இந்திய கடற்படையினர் வழிமறித்து சரணடைய கோரிய நிலையில் ,16.01.1993 அன்று கப்பலுடன் வெடித்து சிதறி வீரகாவியமானார்கள். இந்நிலையில் கேணல் கிட்டுவின் நினைவாக யாழ்பாணத்தில் முத்திரை சந்தி பகுதியில் 1994ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் ” கிட்டு பூங்கா” திறந்து வைக்கப்பட்டது. யுத்தம் தீவிரமடைந்து 1995 ஒக்டோபர் 30ஆம் திகதி மக்கள் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறிய பின்னர் , கிட்டு பூங்கா முற்றாக அழிக்கப்பட்டது. அதனை அடுத்து “கிட்டு பூங்கா” புனரமைக்கப்பட்ட வேண்டும் என பல்வேறு தரப்பினராலும் கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டு வந்த போதிலும் , 2010ஆம் ஆண்டு கால பகுதியில் கிட்டு பூங்காவை , சங்கிலியன் பூங்கா என பெயர் மாற்றம் செய்து புனரமைக்க முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் பின்னர் அவை முழுமை பெறாது கைவிடப்பட்டது. பின்னர் பூங்கா புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்படாத போதிலும் , பூங்கா அமைந்திருந்த பகுதியில் அரசியல் பிரச்சார கூட்டங்கள் , கண்காட்சிகள், கூட்டங்கள் என்பன நடைபெற்று வந்தன. இந்நிலையில் தற்போது கிட்டு பூங்காவை புனரமைக்கும் பணிகளை மாநகர சபை முன்னெடுக்கவுள்ள நிலையில் , முதல்கட்டமாக பூங்காவை சுற்றி சுற்று மதில் கட்டி , அதனை பாதுகாப்பும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. அதனை முன்னிட்டே யாழ். மாநகர சபை உறுப்பினர்கள் , ஆணையாளர் , உள்ளிட்ட மாநகர சபை அதிகாரிகள் கலந்து கொண்டு துப்பரவு பணிகளை முன்னெடுத்தனர். https://globaltamilnews.net/2026/230307/
-
ஹோமுஸ் நீரிணை மூடல்: சர்வதேச ரீதியில் உணவு நெருக்கடி மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு ஏற்படும் – ஐநா கடும் எச்சரிக்கை
ஹோமுஸ் நீரிணை மூடல்: சர்வதேச ரீதியில் உணவு நெருக்கடி மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு ஏற்படும் – ஐநா கடும் எச்சரிக்கை 11 Mar, 2026 | 09:22 AM மத்திய கிழக்கு போரினால் ஹோமுஸ் நீரிணை மூடப்பட்டுள்ளமை, சர்வதேச ரீதியில் உணவுப் பொருட்களின் விலைகளை உயர்த்தி, மக்களின் வாழ்க்கைச் செலவை பாரியளவில் அதிகரிக்கும் என ஐக்கிய நாடுகளின் வர்த்தக மற்றும் அபிவிருத்தி சபை (UNCTAD) எச்சரிக்கை விடுத்துள்ளது. செவ்வாய்க்கிழமை (10) வெளியிடப்பட்ட புதிய ஆய்வறிக்கையில், இந்தப் பாதிப்பு குறிப்பாக ஆசிய நாடுகளையும் வறிய மக்களையும் மிகக் கடுமையாகத் தாக்கும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி போர் ஆரம்பித்தது முதல், ஹோமுஸ் நீரிணை ஊடாகப் பயணிக்கும் கப்பல்களின் எண்ணிக்கை 97 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. சர்வதேச ரீதியில் மசகு எண்ணெயில் 38 சதவீதமும், எரிவாயுவில் 29 சதவீதமும், திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவில் 19 சதவீதமும் இந்த நீரிணை ஊடாகவே கொண்டு செல்லப்படுகின்றன. தற்போது இது தடைப்பட்டுள்ளதால் எரிசக்தி விலைகள் (பெற்றோல், டீசல், எரிவாயு) அதிரடியாக அதிகரித்துள்ளன. சர்வதேச ரீதியில் கப்பல் மூலம் கொண்டு செல்லப்படும் உரங்களில் மூன்றில் ஒரு பங்கு (33%) இந்த நீரிணை ஊடாகவே விநியோகிக்கப்படுகிறது. இது முடங்கியுள்ளதால் உலகளாவிய உணவு உற்பத்தி பாதிக்கப்பட்டு, உணவுப் பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஹோமுஸ் நீரிணை ஊடாக அனுப்பப்படும் மொத்தப் பொருட்களில் 84 சதவீதம் ஆசிய நாடுகளையே சென்றடைகின்றன. இதனால் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட ஆசிய நாடுகள் எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களுக்காகப் பாரிய விலை உயர்வைச் சந்திக்க நேரிடும் என ஐக்கிய நாடுகளின் வர்த்தகம் மற்றும் அபிவிருத்தி குறிப்பிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/240685
-
மின்சார சபை ஊழியர்களை உடனடியாக பணிக்குத் திரும்புமாறு அறிவுறுத்தல்
மின்சார சபை ஊழியர்களை உடனடியாக பணிக்குத் திரும்புமாறு அறிவுறுத்தல் 11 Mar, 2026 | 10:27 AM நாட்டின் தேசிய மின்சார பரிமாற்ற அமைப்பைப் பராமரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். அவ்வாறு பணிக்கு வரத் தவறினால் அது கடும் ஒழுக்காற்று குற்றமாகக் கருதப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேஷனல் டிரான்ஸ்மிஷன் நெட்வொர்க் சர்வீஸ் புரொவைடர் (பிரைவேட்) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி என். எஸ். வெத்தசிங்க வெளியிட்ட அறிவிப்பில், நாட்டின் மின்சார பரிமாற்ற அமைப்பின் தொடர்ச்சியான செயல்பாட்டை எந்தவித தடையும் இன்றி பராமரிப்பது அவசியம் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 2024 ஆம் ஆண்டின் 36 ஆம் எண் இலங்கை மின்சாரச் சட்டத்தின் (திருத்தப்பட்டபடி) கீழ், இலங்கை மின்சார சபையின் முக்கிய செயல்பாடுகள் 2026 மார்ச் 9 முதல் அமுலுக்கு வரும் வகையில் நான்கு வாரிசு நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Beaches & Islands அறிக்கையின்படி, பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி அன்று வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி எண் 2477/47 இன் கீழ் மின்சாரம் தொடர்பான அனைத்து சேவைகளும் ஏற்கனவே அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஆரம்ப இடமாற்றத் திட்டத்தின் அடிப்படையில், தற்போதுள்ள மின்சார சபையின் அனைத்து ஊழியர்களும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு நியமிக்கப்படுவார்கள் என தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார். புதிய நிறுவனங்களின் கீழ் ஊழியர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வரும் நிலையில், தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதி செய்வதற்காக ஊழியர்கள் வழக்கம்போல தங்களது கடமைகளை தொடர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், அத்தியாவசிய சேவை விதிமுறைகளை மீறி சில ஊழியர்கள் பணிக்கு வரத் தவறியதுடன், தொழிற்சங்க நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “அத்தகைய செயல்பாடுகள் கடும் குற்றமாகக் கருதப்படும். அதற்கேற்ப ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்,” என அந்த அறிவிப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே, தேசிய மின்சார பரிமாற்ற அமைப்பின் தடையற்ற செயல்பாட்டை உறுதி செய்வதற்காக அனைத்து ஊழியர்களும் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என அதிகாரிகள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர். https://www.virakesari.lk/article/240688
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
விக்கெட்டுகளின் எண்ணிக்கை சமமாக இருந்தாலும், economy, strike rate இல் பும்ரா முன்னணியில் நிற்பதால் பும்ராதான் சிறந்த பந்துவீச்சாளர். அத்துடன் பும்ரா எட்டு மட்ச்களிலும், வருண் ஒன்பது மட்சுகளிலும் விளையாடியிருந்தனர். குறைந்த மட்சுகளில் பும்ரா விளையாடி ஒரே எண்ணிக்கையான விக்கெட்டுகளை வீழ்த்தியதும் இன்னோர் காரணம்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நடுக்கம், உதறல் எல்லாம் குளிருக்குள் மட்டும்தான் 😄
-
மன்னாரில் தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்பம் பயிற்சி ஆரம்பம்.
மன்னாரில் தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்பம் பயிற்சி ஆரம்பம். adminMarch 9, 2026 தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்பம் பயிற்சியானது நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (8) மன்னாரில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஆசிரியர் மெல்சின் தலைமையில் தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்பம் கலை விழா ஆரம்பித்து வைக்கப்பட்டது. கடந்த 35 ஆண்டுகளாக சிலம்பம் மற்றும் பல பாரம்பரிய கலைகளில் அனுபவம் பெற்றவருமான பிரபல ஆசான் சூசைநாதர் யசோதரன் அவர்கள் VMCT கலை மன்றத்தின் இயக்குநர் பொறியியலாளர் சூசைப்பிள்ளை விமலேஸ்வரன் அவர்களது நெறிப்படுத்தலில் VMCT கலை மன்றத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டது. மேற்படி ஆரம்ப விழாவில் மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டதுடன் சிலம்பு பயிற்சிகள் தலைமை ஆசிரியர் அன்ரன் பெசன்பேர்க் மெல்சின் தலைமையில் வார இறுதி நாள் சனிக்கிழமைகளில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது #MannarSilambam #TraditionalArt #VMCTArtClub (VMCT #MartialArtsTraining #TamilCulture https://globaltamilnews.net/2026/230218/