Everything posted by கிருபன்
-
தலைவர் பிரபாகரனின் திருமண விவகாரம் - காக்கா அண்ணா சீற்றம்
**தேசியத் தலைவர் பிரபாகரன் – மதிவதனி திருமணம் : அவதூறுகளுக்கு எதிரான வரலாற்று விளக்கம்** கடந்த ஜனவரி மாதம் 23ஆம் திகதி, தந்தை பெரியார் திராவிடக் கழகம் ஏற்பாடு செய்த நிகழ்வில், தொல். திருமாவளவன் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் உரையாற்றினார். அந்த உரையின் 42ஆம் நிமிடத்திலிருந்து 46ஆம் நிமிடம் வரையான மூன்று நிமிடங்களுக்கு மேலான பகுதியில், தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களை தான் நேரில் சந்தித்து உரையாடியதாக நினைவுகூர்ந்த திருமாவளவன், அந்த உரையாடலில், தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் மதிவதனி அம்மையாரை காதலித்ததையும், அதனால் எழுந்த சிக்கல்களையும், அதனைத் தொடர்ந்து அவர் எடுத்த நடவடிக்கைகளையும் பல நிமிடங்கள் தன்னிடம் பேசினார் எனப் பதிவு செய்துள்ளார். அந்த உரையில் அவர், “மதிவதனியை நான் காதலித்ததால் அவரது தந்தையே எங்களது காதலை ஏற்றுக்கொள்ளவில்லை” என பிரபாகரன் கூறியதாகவும், மேலும், “இந்த காதலின் காரணமாக வல்வெட்டித்துறையில் 14 பேரை நான் சுட்டுக் கொன்றேன்” என்று தன்னிடம் பிரபாகரன் தெரிவித்ததாகவும் மிகவும் அபாண்டமான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதோடு மட்டுமல்லாமல், “மதிவதனி சார்ந்த சமூகத்தைச் சேர்ந்தவன் நான் அல்ல என்பதனால் இந்த மண்ணில் என்னைத் தலைவராக ஏற்கத் தயக்கம் இருந்தது; அது காலப்போக்கில் மாறிவிட்டது” என்றும் கூறியதாக, முற்றிலும் பொய்யான ஒரு வரலாற்றைப் பதிவு செய்துள்ளார். ⸻ அவதூறுக்கு எதிரான விளக்கம் திருமாவளவனின் இந்த அவதூறுகளுக்கு எதிராக, நான் ஏற்கனவே எனது கண்டனக் காணொளி மூலம் பதிவு செய்திருந்தேன். அதனைத் தொடர்ந்து, வரலாறு அறியாத பலர் தேசியத் தலைவர் அவர்களின் திருமண வரலாற்றை உண்மையான முறையில் அறிந்து கொள்ளும் பொருட்டு, அந்தச் சம்பவங்களின் சுருக்கமான ஆனால் துல்லியமான வரலாற்றை இங்கே பதிவாக வழங்குகிறேன். ⸻ 1983–84 : மாணவர் போராட்டப் பின்னணி ஆயுதப் போராட்டம் மும்முரம் அடைந்த 1983ஆம் ஆண்டு காலகட்டத்தில், சிங்கள தேசமெங்கும் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ச்சியாக இடம்பெற்றன. இதன் காரணமாக, தெற்கு இலங்கையில் கல்வி கற்று வந்த தமிழ் மாணவர்களுக்கு தெற்கில் பாதுகாப்பு இல்லை என்ற நிலை உருவானது. இதனைத் தொடர்ந்து, தெற்கு பல்கலைக்கழகங்களில் பயின்ற தமிழ் மாணவர்கள், “தாம் வடக்கில் உள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலேயே கல்வியைத் தொடரும் வசதிகளை செய்து தர வேண்டும்” என்று சிங்கள அரசிடம் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், அந்த வேண்டுகோளுக்கு சிங்கள அரசு செவிசாய்க்கவில்லை. ⸻ யாழ் பல்கலைக்கழக உண்ணாவிரதம் இதன் பின்னணியில், 1984ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் நாள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில், பேராதனை (Peradeniya) மற்றும் கடுப்பொத்த (Katupotha) பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஐந்து மாணவர்களும் நான்கு மாணவிகளுமாக ஒன்பது பேர் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர். சிங்கள அரசு பல்கலைக்கழக வளாகத்திற்குள் புகுந்து உண்ணாவிரதம் இருந்த மாணவர்களை கைது செய்து சிறையில் அடைக்கக்கூடிய நிலை உருவானது. அதோடு, உண்ணாவிரதத்தின் ஆறாம் நாளில் ஒரு மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையை எட்டினார். ⸻ இந்தியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவர்கள் இந்தச் சூழ்நிலையில், விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தலையிட்டு, அந்த மாணவ, மாணவிகளை உண்ணாவிரதப் பந்தலிலிருந்து பாதுகாப்பாக அழைத்து இந்தியாவிற்கு கொண்டு சென்றனர். இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்ட மாணவ, மாணவிகள் முதலில் மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். மாணவர்களில் ஜனகன் மற்றும் படிகலிங்கம் ஆகியோர் புலிகள் இயக்கத்தில் இணைந்தனர். மற்ற மாணவர்கள் தங்களது விருப்பப்படி வேறு வழிகளில் சென்றனர். ⸻ மாணவிகள் குறித்து பிரபாகரனின் முடிவு மாணவிகளை மதுரையிலேயே வைத்திருக்கவும், பயிற்சி முகாம்களுக்கு அனுப்பவும் பிரபாகரன் அவர்கள் விரும்பவில்லை. எனவே, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த • மதிவதனி • வினோஜா • ஜெயா • லலிதா ஆகிய நான்கு மாணவிகளும், திருவான்மியூரில் உள்ள பாலசிங்கம் – அடேல் தம்பதிகளின் இல்லத்துக்கு அனுப்பப்பட்டனர். ⸻ மதிவதனி : பின்னணி பிரபாகரன் அனுப்பிய நான்கு பெண்களில், “மதி” என அழைக்கப்பட்ட மதிவதனி அம்மையார், ஒல்லியான உடல் அமைப்பும், வெளிர்ந்த நிறமும், இனிய முகமும், விளையாட்டுத் தன்மையும் கொண்டு அனைவரையும் ஈர்த்தார் என, “The Will to Freedom” என்ற நூலில் அடேல் பாலசிங்கம் குறிப்பிட்டுள்ளார். மதிவதனி அம்மையார், புங்குடுதீவின் மடத்துவெளி கிராமத்தைச் சேர்ந்தவர். இந்து மதத்தைப் பின்பற்றும், பக்தியுள்ள குடும்பத்தில் ஏரம்பு – சின்னம்மாள் தம்பதிகளுக்கு மகளாகப் பிறந்தவர். அவரது தந்தை கிராமத்தில் “ஏரம்பு மாஸ்டர்” என அறியப்பட்ட ஆசிரியராக இருந்தார். இத்தகைய குடும்பச் சூழலில் வளர்ந்ததால், மதிவதனி அம்மையாருக்கு பக்தி, மென்மை, பரிவு, அறிவு இயல்பாகவே இருந்தது; அவர் கல்வியிலும் சிறந்து விளங்கினார். ⸻ கல்வி மற்றும் உண்ணாவிரதம் கால்நடை மருத்துவப் படிப்பிற்குத் தேர்வு பெற்றிருந்த அவர், குடும்பத்தின் விவசாயப் பின்னணியின் தாக்கத்தால் வேளாண்மை அறிவியல் படிப்பைத் தேர்ந்தெடுத்தார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த காலத்திலேயே தமிழ் மாணவர்கள்மீது தாக்குதல்கள் நடந்தபோது, இரண்டாம் ஆண்டு பயின்று வந்த அவர், வீட்டிற்கு திரும்பி பெற்றோருடன் தங்கி இருந்த நிலையில்தான் உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அவ்வாறு உண்ணாவிரதத்தை ஆரம்பித்த மதிவதனி அம்மையார், மேலே குறிப்பிட்டபடி திருவான்மியூரில் உள்ள பாலசிங்கம் – அடேல் இல்லத்திற்கு வந்து சேர்ந்தார். ⸻ திருவான்மியூர் இல்லத்தின் சூழல் சமூக அழுத்தங்களுக்கிடையே, அந்த நான்கு பெண்களின் வருகையால் திருவான்மியூர் இல்லம் மகிழ்ச்சியும் உயிர்ப்பும் நிறைந்த இடமாக மாறியது. சமையல் பொறுப்பை அந்த நால்வரும் ஏற்றுக்கொண்டனர். பாலசிங்கம் அவர்கள் யாழ்ப்பாண உணவுகளை ரசித்துச் சாப்பிட்டார். பிரபாகரன் அவர்கள் அந்த இல்லத்திற்கு வருகை தரும் நாட்களில் சிறப்பான உணவுகளும் தயாரிக்கப்பட்டன. ⸻ காதல் உருவான தருணம் இயல்பாகவே சுறுசுறுப்பும் குறும்புத்தனமும் கொண்ட மதிவதனி அம்மையார், “ஹோலி பண்டிகை” நாளில் வீதியில் மக்கள் ஒருவர்மீது ஒருவர் வர்ணம் கலந்த நீரை ஊற்றுவதை கவனித்தார். அதே “ஹோலி பண்டிகை” நாளில், பிரபாகரன் அவர்கள் அந்த இல்லத்திற்கு வந்தபோது, மதிவதனி அம்மையார் மஞ்சள் பொடியைக் கரைத்து வைத்திருந்த நீரை, வேறு ஒரு முக்கிய அலுவலுக்காகச் செல்லத் தயாராக வெள்ளை வெளீரென்ற சட்டையுடன் வந்திருந்த பிரபாகரன் அவர்கள் கதவைத் திறந்தவுடன் அவர் மீது ஊற்றினார். இதனை எதிர்பாராத பிரபாகரன் அவர்கள், இவ்வாறான உரிமையை தன்னுடன் எவரும் எடுத்துக்கொண்டதில்லை என்பதால் சற்று அதிர்ச்சி அடைந்தார். தனது சட்டையை பயன்படுத்த முடியாத கோபத்தில், மதிவதனியைத் திட்டிவிட்டார். இதனால், மதிவதனி அம்மையார் அழுதுகொண்டே ஓடினார். பின்னர், தானும் அவசரப்பட்டு பேசிவிட்டேன் என மனம் நெகிழ்ந்து, தனியே அழுதுகொண்டிருந்த மதிவதனியைச் சமாதானப்படுத்திய அந்தக் கணத்தில்தான் காதல் பொறி பிறந்தது. மதிவதனி அம்மையாரின் காதலை பிரபாகரன் அவர்கள் ஏற்றுக்கொண்டதோடு, தனது காதலையும் வெளிப்படுத்தினார். ⸻ திருமணத்திற்கான முடிவு இந்தக் காதல், பிரபாகரனுக்கு அமைப்பிற்குள்ளும் வெளியிலும் சில சிக்கல்களை உருவாக்கியது. சில மூத்த உறுப்பினர்கள், இது ஒழுக்கக் கோட்பாட்டை மீறுவதாக கருதினர். அந்தக் கடினமான காலத்தில், பாலசிங்கம் – அடேல் தம்பதிகள் பிரபாகரனுக்குத் துணை நின்றனர். திருமணம் மனித உணர்வுகளுக்குத் தேவையான ஒன்று என்றும், விதிகளில் நெகிழ்வு இருக்க வேண்டும் என்றும் பாலசிங்கம் அவர்கள் தெரிவித்தார். மேலும், திருமணம் ஒரு பொதுவிதியாக அமைக்கப்பட வேண்டும் என்றும் அவர் முன்மொழிந்தார். ⸻ பெற்றோர் சம்மதம் திருமண ஏற்பாடுகளை ஒழுங்கு செய்யும் முன்னர், மதிவதனி அம்மையாரின் பெற்றோருக்கு செய்தி தெரிவிக்கப்பட்டு அவர்களது சம்மதமும் பெறப்பட்டது. ஆரம்பத்தில், “உன் வாழ்க்கை எப்போதும் அபாயத்தில் இருக்கும்” என்று தந்தை ஏரம்பு எச்சரித்தபோதும், “அவருக்காக உயிர் தியாகம் செய்யத் தயார்” என்று மதிவதனி அம்மையார் கூறியதை அடுத்து, அவரது தந்தை ஏரம்புவும் பூரண சம்மதம் தெரிவித்தார். ⸻ திருமணம் 1984ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி, தமிழ்நாட்டில் உள்ள திருப்போரூர் முருகன் கோவிலில், மிக எளிமையான முறையில், மாப்பிள்ளைத் தோழனாக கே.பி. இருக்க, மதிவதனி – பிரபாகரன் திருமணம் நடைபெற்றது. இதுவே வரலாறு. ⸻ முடிவுரை இத்தகைய தெளிவான வரலாறு இருக்க, தமிழ்நாட்டில் உள்ள அரசியல் தேவைக்காக திருமாவளவன் பேசிய அவதூறுக் கருத்துக்கள் கண்டிக்கத்தக்கவை. இந்தியாவின் தமிழ்நாட்டைப் போலவே, உலகெங்கும் வாழும் தமிழர்களுக்குள் சாதியைச் சாட்டும் கௌரவக் கொலைகள் நிகழாத நிலையில், தமிழ்நாட்டில் கோலோச்சும் சாதிய விஷத்தை உலகத் தமிழர்களிடையே விதைப்பது மிகவும் தவறானது. மேலும், தமிழ் ஈழத்தில், விடுதலைப் புலிகளால் மட்டுமல்ல, தமிழீழ விடுதலைக்காக போராடிய எந்த ஒரு இயக்கத்தினாலும் கூட சாதியக் கொலைகளோ, அதற்கான மரண தண்டனைகளோ ஒருபோதும் வழங்கப்படவில்லை என்பதையும் இங்கே உறுதியாகத் தெரிவித்து, திருமாவளவனின் கருத்துக்கு ஈழத் தமிழனாக எனது கண்டனத்தைப் பதிவு செய்து, தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் வாழ்க்கையும் போராட்டமும் சாதி மதங்களைத் தாண்டிய ஈழத் தமிழ் மக்களின் விடுதலை அரசியலின் சாட்சி. அதை அபாண்டங்களால் மாசுபடுத்த முடியாது. கனடா ஈழமுரசு பதிரிகைக்காக சுவாமி சங்கரானந்தா🙏 https://www.facebook.com/share/1Ew2BqFC3G/?mibextid=wwXIfr
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இன்றைய இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி ஷிம்ரொன் ஹிட்மெயரின் அதிரடியான 64 ஓட்டங்களுடன் 5 விக்கெட்டுக்களை இழந்து 182 ஓட்டங்கள் எடுத்திருந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ஸ்கொட்லாந்து அணி தொடர்ச்சியாக விக்கெட்டுகள் சரிந்ததாலும் 17 ஓவரில் ரொமாரியோ ஷெப்பேர்ட் எடுத்த ஹற் ட்ரிக்காலும் 18.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 147 ஓட்டங்களுடன் சுருண்டது. ரொமாரியோ ஷெப்பேர்ட் 3 ஓவர்களில் 20 ஓட்டங்களைக் கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தினார். முடிவு: மேற்கிந்திய தீவுகள் அணி 35 ஓட்டங்களால் வெற்றியீட்டியது மேற்கிந்திய தீவுகள் அணி வெல்லும் எனக் கணித்த 20 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். ஸ்கொட்லாந்து அணி வெல்லும் எனக் கணித்த மற்றைய மூவருக்கும் புள்ளிகள் இல்லை!
-
சமஷ்டி நூற்றாண்டும் தமிழரசுக்கட்சியும்.!
சமஷ்டி நூற்றாண்டும் தமிழரசுக்கட்சியும்.! February 6, 2026 — அழகு குணசீலன் — இலங்கை அரசியலில் சமஷ்டி சிந்தனை பிறந்து நூறாண்டுகளாகிறது. சிங்கள தேசியவாத, நாயக்க வம்ச ஆளுமை எஸ்.டபிள்யூ. ஆர்.டி.பண்டாரநாயக்கா இலங்கை சமூக, பொருளாதார, அரசியல் பன்மைத்துவ கட்டமைப்புக்கு சமஸ்டி- கூட்டாட்சி முறைமையே பொருத்தமானது என்று 1926 இல் கருத்துருவாக்கத்தில் ஈடுபட்டார். அதற்கான அவசியத்தையும், நியாயத்தையும் முன்வைத்தார். இலங்கைத் தீவை கண்டி, கரையோரம், வடக்கு கிழக்கு என்று சுயாட்சி பிராந்தியங்களாக பிரித்து கூட்டாட்சி அரசியல் கட்டமைப்பை நிறுவுவது அவரது கருத்தாக இருந்தது. அப்போது சமஷ்டி முறைமையானது இன ஒற்றுமையை பாதிக்கும் வகையிலான ஒரு இனவாத கருத்தியல் என்று ஜேம்ஸ்.ரட்ணம் பண்டாரநாயக்காவின் கருத்துக்கு எதிராக பேசியும், எழுதியும் விவாதத்தில் ஈடுபட்டார். இதனால் சிங்களவர் தமிழரை ஒரு சிறுபான்மை தேசிய இனமாக அங்கீகரித்து இலங்கைத்தீவின் ஆட்சி அதிகாரத்தை பகிர்ந்து கொள்ள முன்வந்ததற்கு மட்டும் அன்றி அதை இனவாதம் என்று தமிழரே எதிர்த்ததற்கும் – தட்டிக்கழித்ததற்கும்- நிராகரித்ததற்குமான சமஷ்டி நூற்றாண்டு இந்த 2026. இந்த நூற்றாண்டு குறித்து நிலமும், புலமும் அறிந்த பத்திரிகையாளர் டி.பி.எஸ்.ஜெயராஜ் கொழும்பு பத்திரிகை ஒன்றுக்கு எழுதிய கட்டுரை இலங்கை அரசியல் பரப்பில் அதிக கவன ஈர்ப்பை பெற்றுள்ளது. வரலாற்றை திரும்பிப் பார்ப்பதற்கும், கலந்துரையாடல்களுக்கும், தமிழர் அரசியலில் மாற்று அணுகுமுறை தேவை என்ற கருத்தையும் இன்றைய தலைமுறைக்கு சொல்லியிருக்கிறது. 1949 இல் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தலைமையில் தமிழரசுக்கட்சி -சமஷ்டி கட்சி நிறுவப்ப்பட்டு இதே சமஷ்டிக்கோரிக்கையை வடக்கு கிழக்கு தமிழர்களுக்கு ஒரு அரசியல் கோரிக்கையாக முன் வைத்தது. அந்த தமிழ்த்தரப்பு சமஷ்டி கருத்தியலும் முக்கால் நூற்றாண்டை கடந்து விட்டது. தமிழரசுகட்சியானது தற்போது எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தான் சமஷ்டியின் தந்தை என்ற கோதாவில் அற்ப அரசியல் செய்வதுடன், பண்டா- செல்வா ஒப்பந்தத்தை கிழித்தெறிந்ததையே அரசியல் முதலீடாக கொண்டிருக்கிறது. சிங்கள, பௌத்தர்களின் எதிர்ப்பால் பண்டாரநாயக்கா 1957 யூலை 26 இல் ஒப்பமிடப்பட்ட, நகலை கிழித்தெறிந்ததை பிரச்சாரம் செய்யும் தமிழரசுக்கட்சி, முதலில் சமஷ்டி யோசனையை முன்வைத்தது ஒரு சிங்களத்தலைமை என்பதையும், அதை நிராகரித்தது தமிழர் தரப்பே என்பதையும் அடக்கி வாசிக்கிறது. அண்மைய செய்திகள், பதிவுகளின் படி சமஷ்டி கோரிக்கையை கொண்டு இழுக்க புதிய அரசியல் அணுகுமுறை – ஒரு மாற்று அரசியல் பாதை அவசியம் என்பதை தமிழரசுக்கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருக்கிறார். “பண்டாரநாயக்காவின் சமஷ்டி நூற்றாண்டை மையமாகவைத்து அதற்கான வேலைத்திட்டம் ஒன்றை இந்த வருடத்தில் ஆரம்பிக்க உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார் சுமந்திரன். அவரது இந்த கருத்து அந்த வேலைத்திட்டம் குறித்து தெளிவாகவோ, ஆழமாகவோ பேசவில்லை. எப்படியாயினும் தமிழர் அரசியலில் ஒரு மாற்று அணுகுமுறை காலத்தின் கட்டாயம். எம்.ஏ.சுமந்திரனின் கருத்தில் தென்னிலங்கை சிங்கள மக்கள் மத்தியில் ‘சமஷ்டி’ குறித்து நிலவும் ‘அச்சத்தை’ போக்குவதும், ‘தீர்வு’ ஒன்றை எட்டும் நிலையில் அதற்கான சர்வஜனவாக்கெடுப்பில், அரசாங்க தரப்புடன் இணைந்து மேடையேறும் போது சமஷ்டிக்கான, சர்வஜன வாக்கெடுப்பில் வெற்றி பெறுவது ஒன்றும் கஷ்டமான காரியம் அல்ல என்றும் அவர் கூற வருகிறார் என்றே கொள்ள வேண்டும். “சிங்களக் கட்சி எதுவும் சமஷ்டி என்ற சொல்லை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆகையால் பெயர்ப் பலகையில் தொங்கிக் கொண்டிருக்காமல் அர்த்தமுள்ள விதத்தில், மீளப்பெற முடியாத அதிகாரப்பகிர்வு முறையை அடையவேண்டும்.அதற்கு நிட்சயமாக எதிர்த்தரப்பு கட்சிகளின் ஆதரவையும் பெற வேண்டும்”. “இந்தியா இந்தப்பிராந்திய வல்லரசு என்பதையும் தாண்டி ஒரு உலக வல்லரசாக மாறியுள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இதற்கான முக்கிய காரணம். மிக அண்டை நாடான இந்தியாவின் வளர்ச்சியை எமதாக்கி கொள்ள வேண்டும். அதற்கு இந்தியாவின் பங்களிப்பு எமது அரசியலிலும் கட்டாயமாக இருக்கவேண்டும். அது தமிழ் மக்களுக்கு ஒரு போதும் கேடாக அமையாது”. சுமந்திரன் பத்தியாளர் சிவராசா கருணாகரன் உடனான நேர்காணல் கூறிய இரண்டு கருத்துக்களும் மிகவும் முக்கியமானவை மட்டும் அன்றி பிராந்திய அரசியல் ஜதார்த்தம் கொண்டவை. ஆனால் இந்தியாவை பயன் படுத்தல் என்பதில் – அதன் வரையறையில் தமிழ்த்தேசிய பாராளுமன்ற அரசியல் பரப்புக்கு உள்ளேயும், வெளியேயும், புகலிடச் சூழலிலும் முரண்பாடான நிலைப்பாடுகள் உண்டு என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இதில் முக்கியமான இன்னொரு விடயம் என்னவெனில் சுமந்திரன் “இந்தியாவை பயன்படுத்தல்” என்ற கருத்தோடு தென்னிலங்கை தீவிர சிங்கள பௌத்த பேரினவாதத்தை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறார் என்பதுதான். சிங்கள மக்களுக்கு சமஷ்டி குறித்து இருக்கும் அச்சத்தை அகற்ற சுமந்திரனின் இந்தியாவை பயன்படுத்தல் எந்தளவுக்கு உதவப்போகிறது? அதுவும் இலங்கைக்கும் -இந்தியாவுக்குமான உறவானது முற்றிலும் பொருளாதார நலன் சார்ந்த உறவாக நாளாந்தம் மாறிக்கொண்டிருக்கின்ற நிலையில், இனப்பிரச்சினை தீர்வுக்கான ஒரு அரசியல் அழுத்தம் இந்தியாவில் இருந்து எதிர்பார்க்கக்கூடியதா? இதை சிங்கள தேசம் குறிப்பாக தென்னிலங்கை முற்போக்கு சக்திகள் கூட இந்திய அழுத்தத்தை எப்படி நோக்கப் போகிறார்கள்? சுமந்திரனின் ‘இந்தியாவை பயன்படுத்தல்’ என்ற கருத்து சிங்கள மக்களுக்கு மேலும் அச்சத்தை ஏற்படுத்தி, சிங்கள, பௌத்த பேரினவாதத்தின் பக்கம் சிங்கள மக்களை அணிதிரட்டமாட்டாது என்பதற்கு என்ன உத்தரவாதம்? இந்தியாவுக்கு இலங்கையின் பொருளாதார நெருக்கடி காலம், இயற்கை அனர்த்த நிவாரண முகாமைத்துவ உதவிக்காலம், சர்வதேச நாணய நிதிக்கு இலங்கைக்கு சார்பாக பிணை நின்றகாலம்…. என்ற பல வாய்ப்புகள் இனப்பிரச்சினை குறித்து குறைந்த பட்சம் அர்த்தமுள்ள தீர்வு குறித்து பேச பல சந்தர்ப்பங்கள் கிடைத்தன. ஆனால் வடக்கு,கிழக்கு தமிழ்தேசிய அரசியல்வாதிகள் கொழும்புக்கு படையெடுத்து இந்தியப் பிரதிநிதிகளை சந்திக்கும் போது தமிழ் தேசியத்தின் பலவீன அரசியல் பற்றியே அதிகம் அறிவுறுத்திய இருக்கிறது. இந்த பலவீனம் காரணமாகவும், கொழும்பின் பலம் காரணமாகவும் தான் டெல்லியிடம் ஈழத்தமிழர்கள் தங்கியிருக்கிறார்கள் என்பதை இந்திய வெளியுறவுத்துறை புரிந்து இருக்கிறதா? கொழும்பினதும், தமிழ்தரப்பினதும் பலவீனங்களை இதுவரை இந்திராகாந்தி, ராஜீவ்காந்தியினால் மட்டுமே பயன்படுத்த முடிந்திருக்கிறது. அதையும் புலிகளும், புலிக்குபயந்த கட்சிகளும், அமைப்புக்களும், அவர்களை நியாயப்படுத்திய தாயக, புகலிட சக்திகளுமே கெடுத்தார்கள். பண்டாரநாயக்காவுக்கு ஒரு தமிழரான ஜேம்ஸ் இரட்ணம் போன்று ராஜீவ்காந்திக்கு ஒரு தமிழ் அமைப்பாக புலிகள் குறுக்கே நின்றார்கள். இதனால் சிங்களதேசமே அனைத்துப் பயன்களையும் அள்ளியது. இந்த புள்ளியில் சுமந்திரனின் ” அது தமிழ்மக்களுக்கு ஒரு போதும் கேடாக அமையாது.” என்ற வார்த்தைகளை அழுத்திக் கூறவேண்டியுள்ளது. தமிழ் மக்களுக்கு விளைவிக்கப்பட்ட கேட்டுக்கு புலிகளும், ஜே.வி.பி.யும் பங்குதாரர்கள். இந்திய – இலங்கை சமாதான உடன்படிக்கைக்கு எதிரான தங்கள் நடவடிக்கையை ஜே.வி.பி. இந்திய மேலாதிக்கத்திற்கு எதிரானது என்றும், இனவாதம் இல்லை என்றும் நியாயப்படுத்துவது அரசியல் அபத்தம். இன்றைய பிராந்திய, உலகப் பொருளாதார ஒழுங்கில் இந்திரா – ராஜீவ்காந்தி காலங்கள் மீண்டும் உயிர்த்தெழப்போவதில்லை. அதுமட்டுமின்றி இந்திய பொருளாதார மேலாதிக்கத்தை தவிர்த்து ஓடுவதை அநுர அரசாங்கத்தினாலும் நினைத்துபார்க்க முடியாது. சிங்கள, பௌத்த மேலாதிக்க அதிகாரத்தை பாதுகாக்க எந்த மேலாதிக்க சக்திகளோடும் கூட்டுச்சேர தயார் என்பதை நிரூபிக்க ஜே.வி.பி/என்.பி.பி. அரசாங்கத்திற்கு சில மாதங்களே தேவைப்பட்டன. எம்.ஏ.சுமந்திரனின் கடந்த 15 ஆண்டுகால பாராளுமன்றமன்ற அரசியல் உட்கட்சி ஜனநாயகம் மட்டும் அன்றி வெளிப்படைத்தன்மையும் அற்றது. ” … அவர்கூறுகின்ற பெயர்ப் பலகையில் தொங்கிக்கொண்டிருக்காமல்….. என்கின்ற அந்த பலகைக்கு பின்னால் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கும், மதியாபரணம் ஆபிரகாம் சுயந்திரனுக்கும் இடையிலான கருத்து மோதல் ஒழிந்து இருக்கிறது. இது ஒற்றையாட்சி – ஏக்கயராட்சிய வரைவிலக்கண அரசியல் வித்துவ செருக்கு. ஏக்கயராட்சியவுக்கு வேறு பெயர் சமஷ்டி என்று தமிழ்மக்களுக்கு காட்டும் அதேவேளை சிங்கள மக்களுக்கு அதை மறைக்கும் வெளிப்படைத்தன்மையற்ற அரசியல் ஏமாற்றே சுமந்திரன் கூறுகின்ற பலகை கதை. சிங்கள மக்களையும், அவர்களின் அரசியல் தலைமைகளையும் கூட்டாட்சிக்கு பதிலாக ஏக்கயராட்சிய என்ற வார்த்தையை பிரதியீடு செய்து ஏமாற்றலாம் என்று சுமந்திரன் நினைப்பது அரசியல் சிறுபிள்ளைத்தனம். இந்த ஒழித்து பிடித்து விளையாடும் அரசியலை விட்டு விட்டு சிங்கள மக்களின் நம்பிக்கையை இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு பெறவேண்டுமானால் அரசியல் நேர்மையுடன் தமிழரசுக்கட்சி / தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மற்றும் சகல தமிழ் கட்சிகளும், தங்கள் பங்குக்கு செய்யவேண்டிய வேறு அரசியல் வேலைகள் நிறையவே உள்ளன. அதை அவர்கள் செய்யவேண்டும். 1. திம்புக்கோட்பாடு, வட்டுக்கோட்டை பிரகடனம் போன்றவை சிங்கள மக்களுக்கு தங்கள் எதிர்காலம் குறித்து அச்சத்தை ஏற்படுத்துகின்ற முக்கிய விடயங்கள். இவற்றை தமிழரசுக்கட்சி மீளப்பெற்று தமிழ்த்தரப்பு நல்லெண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும். பிரிவினையற்ற ஒன்றுபட்ட நாட்டுக்குள் வாழவே விரும்புகிறோம் என்பதை உறுதிப்படுத்துகின்ற ஒரு செயலாக இது அமையும். 2.வடக்கு , கிழக்கு மாகாணங்களை இணைப்பது போன்ற இனியும் சாத்தியமற்ற போலிக்கோரிக்கைகளை முன் வைப்பதை தவிர்த்தல், மற்றும் அங்கு வாழும் சகல இன மக்களுக்கும் அந்த உரிமையை பிரகடனம் செய்தல். இதில் முக்கியமானது வடக்கு கிழக்கு தமிழர்தாயகம், தமிழ்மக்களின் பாரம்பரிய பிரதேசம் என்ற வார்த்தையாடல்களையும் தவிர்த்துக்கொள்வதாகும். இது பாரம்பரியமாக வாழும் முஸ்லிம்களின் நம்பிக்கையை பெறுவதற்கும் உதவும். 3. திம்புக்கோட்பாடு பேசுகின்ற மலையக மக்கள் குறித்த விடயங்களுக்கு ஆதரவாக செயற்படுவது வேறு அதை கையில் எடுத்து அரசியல் செய்வது வேறு. பதுளை மற்றும் வடமேற்கு கரையோரங்களை உள்ளடக்கிய தமிழீழ வரைபடத்தை வாபஸ் பெறுவதுடன், மலையக மக்களின் அரசியல் தீர்மானங்களை அவர்களிடமே விட்டு விடல். 4. கொழும்பில் ஒரு தமிழரசுக்கட்சி கிளை பெயர்ப்பலகை இருக்கிறது. செயற்படுகிறது (?), ஆனால் கொழும்பு தமிழர்கள், “தமிழர்கள்” என்ற உணர்வோடு இருந்தாலும், அவர்களின் அரசியல் தென்னிலங்கை சார்ந்தது. இவர்களால் வடக்கு, கிழக்கு தமிழர்களின் அரசியலை தீர்மானிக்க முடியாது என்பது கடந்த காலங்களில் பல முறை நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால் தானே “கொழும்பார்கள்” வடக்கு கிழக்கில் அரசியல் செய்கிறார்கள். 5. தென்னிலங்கை சகல முற்போக்கு சக்திகளுடன் மட்டும் அன்றி அரசாங்கம், எதிர்கட்சி தரப்புகளுடன் தமிழ்தரப்பு நல்லெண்ணத்தை பேணவேண்டும். இதனை தமிழ்மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளான காணி, நிர்வாக, மொழி மற்றும் கலாச்சார பண்பாட்டு வாழ்வுரிமை, மனித உரிமைகளை விட்டுக் கொடுக்கவேண்டும் என்று அர்த்தப்படுத்தத்தேவையில்லை. 6. மாகாணங்களுக்கு பொலிஸ் நிர்வாக உரிமை கிடைக்குமாயின் அது விரும்பத்தக்கது. ஆனால் அது சிங்கள மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் ஒன்றாக உள்ளது. அதற்கு மாற்றாக இன விகிதாரசாரத்தை பேணும் வகையில் பொலிஸ்சேவை ஆட்சேர்ப்பு இடம்பெறுமாயின் இந்தப் பிரச்சினையை தீர்க்க முடியும். மேலும் முப்படைகளிலும் இதனை கோர முடியும். 7. ஜனாதிபதி அநுரகுமார தனது சுதந்திர தின உரையில் இந்த நாட்டில் இனவாதத்திற்கும், தீவிரவாதத்திற்கும் இடமில்லை என்று மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளார். இந்த கருத்துக்கு தமிழரசுக்கட்சி எதிரானது அல்லவே. ஆனால் சிறுபான்மை தேசிய இனம் ஒன்று தனது இருப்புக்காக பெரும்பான்மை அடக்குமுறை, ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடுவதை இனவாதம் என்று அரசாங்கமும், சிங்கள தீவிரவாதிகளும் முத்திரை குத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதேவேளை அரசாங்க வேலைத்திட்டங்களை தமிழ்தரப்பு ஒட்டுமொத்தமாக இனவாதமாகவும் நோக்க கூடாது. 8. தமிழரசுக்கட்சியும் ஆதரித்த யாழ்.பல்கலைக்கழக மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கரிநாள் பேரணியில் வட்டுக்கோட்டை பிரகடனம், சுயநிர்ணய உரிமை கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த வகையான அரசியல் சிங்கள மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துமே அன்றி நல்லிணக்கத்திற்கு உதவாது. காலாவதியான வட்டுக்கோட்டை தீர்மானத்தை மனப்பாடம் செய்து மீட்டல் செய்வதில் இனியும் அர்த்தம் இருக்கிறதா…? ஆக, எம்.ஏ. சுமந்திரன் கூறியுள்ள சமஷ்டி நூற்றாண்டின் அவரது வேலைத்திட்டம் சாத்தியமற்ற அரசியல் செயற்பாடுகளை நிராகரித்து நடைமுறைச்சாத்தியமான , ஜதார்த்த அரசியலுடன் கூடிய காலத்திற்கு பொருத்தமான வேலைத்திட்டமாக அமையவேண்டும். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜே.வி.பி/ என்.பி.பி அரசாங்கம் இந்த நாட்டு மக்கள் அனைவரும் ‘இலங்கையர்’ என்ற இலக்கை அவர்களின் முகவரி, கடவுச்சீட்டு, அடையாள அட்டை ஊடாக அடையமுடியாது. அனைத்து மக்களினதும் குறிப்பாக சிறுபான்மை மக்களின் இதயங்களில் “நாங்களும் இலங்கையர்” என்ற உணர்வு ஏற்படும் வகையில் செயற்பட வேண்டும். இல்லையேல் சமஷ்டிக்கு நூறுவயது என்பதற்கும், இந்த நாட்டில் இனிமேல் இனவாதத்திற்கும், தீவிரவாதத்திற்கும் இடமில்லை என்று ஒரு காலத்தில் இவை இரண்டையும் சுமந்து இருந்தவர்கள் கூறுவதில் எந்த ஒரு அரசியல் அர்த்தமும் இல்லை. https://arangamnews.com/?p=12657
-
தலைவர் பிரபாகரனின் திருமண விவகாரம் - காக்கா அண்ணா சீற்றம்
தலைவர் பிரபாகரனின் திருமண விவகாரம் - காக்கா அண்ணா சீற்றம் சனி, 07 பெப்ரவரி 2026 11:26 AM தலைவர் பிரபாகரனின் திருமண வாழ்வு தொடர்பாக திருமாவளவன் கூறிய கருத்துக்கள் இதுவரை அவர் மீது எமது மக்கள் வைத்துள்ள மதிப்புகளை சுக்குநூறாக்கியுள்ளது என புலிகளின் மூத்த போராளி காக்கா அண்ணா என அழைக்கப்படும் மனோகரன் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் கூறுகையில் தலைவரின் திருமண வாழ்கை தொடர்பான விடயத்தில் 14 பேரை தான் சுட்டுக்கொன்றதாக தன்னிடம் தெரிவித்தார் என திருமாவளவன் கூறியமை எமது மக்கள் கூட்டத்தினரை பற்றி என்ன கருதுகிறார் என சினக்க வைக்கிறது. அவ்வாறயின் 14 பேரில் சடலங்களைக் கடந்தா தனது வாழ்வை தலைவர் கட்டியமைத்தார்? மேலும் நாட்டுப் பேச்சாளர் என்று ஒருவருக்கு மதிப்பளிக்கும் போது அவரது போராட்ட பங்களிப்பு சமூகத்துடனான உறவாடல் போன்ற விடயங்கள் மிக ஆழமாக பரிசீலித்த பின்னே அறிவிக்கப்படுகின்றது. மகள் ஒரு பட்டதாரி ஆவாள் என்ற கனவுடன் இருந்த மதிப்புக்குரிய ஏரம்பு ஐயாவுக்கு அது கலைந்து போனதில் ஆரம்பத்தில் ஏமாற்றமாக இருந்திருக்கலாம். ஆனால் பாலச்சந்திரன் என்ற தனது மகன் மாவீரர் என்ற நிலையை அடைந்த பின்பும் எந்தெந்த வழிகளில் எமது இனத்திற்கு உதவலாம் என மாவீரர் விடயங்களில் திருமண ஏற்பாடுகள் உட்பட எவ்வளவு அக்கறையுடன் செயல்பட்டார் என்பதை நான் நன்கு அறிவேன். தமிழக அரசியலில் எவ்வாறான நிலைப்பாடுகள் இருந்தாலும் எவரையும் பகைக்காத போக்கே பொதுவாக இருந்து வந்துள்ளது தன்னை எல்லோரையும் விட மேலாக கருதி சில அந்தரங்கங்களை பகிர்ந்து கொண்டார் தலைவர் என கற்பனையாகவோ தவறாக விளங்கியோ கூறுவது இதுவரை இவர் மீது நம்பிக்கை கொண்ட தமிழர்களை மனம் நோக வைத்துள்ளது. அந்தவகையில் இத்தகைய தவறான தமது கருத்துக்களை திருமாவளவன் மீளப் பெற வேண்டும். அதற்காக வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்பது ஈழத் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும் என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://jaffnazone.com/news/54835
-
தமிழரசில் சிறீதரனைத் தவிர மற்றைய 7 எம்.பிக்களுடன் சுமந்திரன் சந்திப்பு!; சிறீநேசனுடன் கருத்து மோதல்
தமிழரசில் சிறீதரனைத் தவிர மற்றைய 7 எம்.பிக்களுடன் சுமந்திரன் சந்திப்பு!; சிறீநேசனுடன் கருத்து மோதல் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முக்கிய கூட்டமென்று நடைபெற்றது. கட்சியின் 8 எம்.பிக்களில் சிறீதரனைத் தவிர மற்ற ஏழு பேரும் கலந்துகொண்டனர். அவர்களுக்கும் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையிலான சந்திப்பே இடம்பெற்றது. தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுவின் செயலாளர் என்ற முறையில் எஸ்.குகதாசன் இந்தக் கூட்டத்துக்கு ஒழுங்கு செய்திருந்தார் எனத் தெரிகின்றது. நாடாளுமன்றக் குழு இதற்கு முன்னர் இதேபோன்று தமது குழுவின் ஒரு சக உறுப்பினரான சிறீதரனுடன் இத்தகைய சந்திப்பு ஒன்றை சில தினங்களுக்கு முன்னர் நடத்தி இருந்தார் எனக் கூறப்படுகின்றது. அந்தச் சந்திப்பில் சாணக்கியன் எம்.பி. கலந்துகொள்ளவில்லை. அடுத்த கட்டக் கூட்டமே நேற்றுமுன்தினம் நடைபெற்றிருக்கின்றது. கட்சிக்குள் நிலவும் இழுபறி நிலைகள், குழப்பங்கள் குறித்து இரு தரப்புகளுடன் பேசி சுமுகநிலையை ஏற்படுத்தும் ஒரு திட்டம் என்ற பெயரிலேயே இந்த நடவடிக்கை நாடாளுமன்றக் குழுவால் முன்னெடுக்கப்பட்டது. முதலில் சிறீதரனுடனும், பின்னர் சுமந்திரனுடனும் கலந்தாலோசனை நடத்த நாடாளுமன்றக் குழு தீர்மானித்து இந்த நடவடிக்கையை எடுத்ததாகக் கூறப்படுகின்றது. கட்சிக்குள் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பாக கட்சியின் வழக்கு, சிக்கல்கள், அரசமைப்புக் கவுன்ஸிலில் சிறீதரனின் செயற்பாடு, சிறீதரனை நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியில் இருந்து நீக்குவதற்கு அரசியல் குழு எடுத்த தீர்மானம் ஆகியவை பற்றி எல்லாம் இந்தச் சந்திப்பில் விலாவாரியாகப் பேசப்பட்டதாக அறியவந்தது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மேற்படி விடயங்களில் இடம்பெற்ற முழு சம்பவங்களையும் சுமந்திரன் விளங்கப்படுத்தினார் எனத் தெரியவந்தது. இந்தச் சந்திப்பின் போது இடையிடையே சிறீநேசனுடன் சுமந்திரன் முரண்பட்டுக் கருத்து மோதல் பட்டார் எனத் தெரிகின்றது. எனினும் கட்சியின் நிலைமை என்ன, சிறீதரன் ஆற்றிய செயற்பாடு யாது என்பவை பற்றி மிகத் தெளிவாகச் சுமந்திரன் விளக்கம் அளித்துள்ளார் எனக் கூட்டத்தில் பங்குபற்றிய எம்.பி. ஒருவர் தெரிவித்தார் என்று தமிழ்ப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. https://akkinikkunchu.com/358888/
-
மார்ச் மாதத்திற்குள் போர் நிறுத்தம்? - யுக்ரைன் விவகாரத்தில் வேகம் காட்டும் ட்ரம்ப்
மார்ச் மாதத்திற்குள் போர் நிறுத்தம்? - யுக்ரைன் விவகாரத்தில் வேகம் காட்டும் ட்ரம்ப் 07 February 2026 யுக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக மிகச் சிறந்த பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். யுக்ரைன் விவகாரத்தில் தற்போது இடம்பெற்று வரும் பேச்சுவார்த்தைகள் மிகவும் சாதகமாக இருப்பதாகவும், இதன் மூலம் விரைவில் "ஏதாவது ஒரு நல்ல விடயம் நடக்கலாம்" என்றும் ட்ரம்ப் செய்தியாளர்களிடம் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அபுதாபியில் இடம்பெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தைகளின் விளைவாக, யுக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே 314 போர்க்கைதிகளை பரிமாறிக்கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்துள்ளன. எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் இரு நாடுகளுக்கும் இடையே ஒரு சமாதான ஒப்பந்தத்தை எட்டுவதை அமெரிக்கா இலக்காகக் கொண்டுள்ளது. எனினும், யுக்ரைனின் நிலப்பரப்பு தொடர்பான சிக்கல்கள் இன்னும் தீர்க்கப்படாததால், இந்த காலக்கெடு நீட்டிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. எட்டப்படும் எந்தவொரு அமைதி ஒப்பந்தமும் யுக்ரைன் மக்களிடம் பொது வாக்கெடுப்புக்கு விடப்பட வேண்டும் என்றும், அதனுடன் இணைந்து அங்கு தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்றும் அமெரிக்க மற்றும் யுக்ரைன் தரப்பு அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். இந்தப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான உயர்மட்ட இராணுவத் தொடர்புகளை மீண்டும் ஆரம்பிக்க இரு நாடுகளும் இணங்கியுள்ளன. தமது இரண்டாவது பதவிக்காலத்தில் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதாக உறுதியளித்திருந்த ட்ரம்ப், தற்போது அதற்கான இராஜதந்திர நகர்வுகளைத் தீவிரப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. https://hirunews.lk/tm/445114/ceasefire-by-march-trump-shows-momentum-on-ukraine-issue
-
தரம் 9 வரை கல்விச் சீர்திருத்தத் திட்டம்!
தரம் 9 வரை கல்விச் சீர்திருத்தத் திட்டம்! ஐந்து பிரதான தூண்களை அடிப்படையாகக் கொண்டு கல்விச் சீர்திருத்தங்களை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், அடுத்த 3 ஆண்டுகளில் ஏனைய தரங்களுக்கும் இச்சீர்திருத்தங்கள் விரிவுபடுத்தப்படும் என்றும் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். கல்விச் சீர்திருத்தத்திற்கான தேசிய இயக்கத்தின் இரத்தினபுரி மாவட்ட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இந்த ஆண்டில் 1 மற்றும் 6 ஆம் தரங்களுக்கான கல்விச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும், அடுத்த ஆண்டில் 2 மற்றும் 7 ஆம் தரங்களுக்கான சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். மேலும், 2028 ஆம் ஆண்டில் 3 மற்றும் 8 ஆம் தரங்களுக்கும், 2029 ஆம் ஆண்டில் 4 மற்றும் 9 ஆம் தரங்களுக்கும் கல்விச் சீர்திருத்தங்களை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதன்படி, அடுத்த சில ஆண்டுகளில் தரம் 9 வரையிலான முழுமையான பாடத்திட்டங்கள் மறுசீரமைக்கப்படவுள்ளன. இந்தச் சீர்திருத்தங்களுக்குத் தேவையான பாடத்திட்டங்களை உருவாக்குவதில் கல்வி நிபுணர்கள் இணைந்துள்ளதாகவும், முதலாம் தரத்திற்கான சீர்திருத்தங்கள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். எவ்வாறாயினும், 6 ஆம் தரத்திற்கான பாடத்திட்ட மாற்றங்கள் மாத்திரம் அடுத்த ஆண்டு வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார். 21 ஆம் நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள்ளக்கூடிய பிரஜைகளை உருவாக்குவதே இந்தச் சீர்திருத்தங்களின் பிரதான நோக்கமாகும் என்றும் அமைச்சர் ஜயதிஸ்ஸ வலியுறுத்தினார். https://adaderanatamil.lk/news/cmlbz0812000k356np5y299h9
-
எம்.பி.க்களின் ஓய்வூதிய இரத்து சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம்: உயர் நீதிமன்றம்!
நாடாளுமன்ற ஓய்வூதியம் ரத்து – சட்டமூலம் குறித்த உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியானது! adminFebruary 7, 2026 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை நீக்குவது தொடர்பான “நாடாளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்)” சட்டமூலம் குறித்து உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை சபாநாயகர் நேற்று (வெள்ளிக்கிழமை, 06) நாடாளுமன்றத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவித்தார். அரசியலமைப்பின் 121(1)ஆம் உறுப்புரையின் கீழ் இந்த சட்டமூலம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தது. எனினும் இந்த சட்டமூலம் அல்லது அதன் எந்தவொரு ஏற்பாடும் அரசியலமைப்புடன் முரண்படவில்லை என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த நிலையில் அரசியலமைப்புக்கு முரணாக இல்லாத காரணத்தினால், இதனைப் நாடாளுமன்றத்தின் சாதாரண பெரும்பான்மை (Simple Majority) மூலம் நிறைவேற்ற முடியும் என நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. உயர் நீதிமன்றத்தின் இந்த முழுமையான தீர்மானத்தை நேற்றைய நாடாளுமன்ற கூட்ட நடவடிக்கைகள் பற்றிய அதிகார அறிக்கையில் (Hansard) பதிவிடுமாறு சபாநாயகர் கட்டளையிட்டார். இந்த தீர்மானத்தின் மூலம் நாடாளுமன்ற ஓய்வூதிய நீக்கச் சட்டமூலத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான சட்ட ரீதியான தடைகள் நீங்கியுள்ளன. https://globaltamilnews.net/2026/228569/
-
யாழ்.போதனாவில் “நாள் சத்திர சிகிச்சை நிலையம்” ஆரம்பிப்பு!
யாழ்.போதனாவில் “நாள் சத்திர சிகிச்சை நிலையம்” ஆரம்பிப்பு! adminFebruary 7, 2026 யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் “யாழ்ப்பாணம் – நாள் சத்திர சிகிச்சை நிலையம்” நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் இந்த யாழ்ப்பாணம் நாள் சத்திரசிகிச்சை நிலையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடம், போதனா வைத்தியசாலை மற்றும் சுகாதார அமைச்சு ஆகியவற்றுடன் இணைந்து சர்வதேச அமைப்புகளான IMHO, JMFOA மற்றும் புலம்பெயர் உறவுகளின் ஆதரவுடன் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆரம்ப விழாவில் சுகாதார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் நாயகம், போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி, மருத்துவபீடப் பீடாதிபதி பேராசிரியர் இ.சுரேந்திரகுமாரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். பகல்நேர அறுவை சிகிச்சை (Day Surgery) என்பது ஒரு நோயாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சை செய்துகொண்டு, அதே நாளில் ( 24மணித்தியாலங்களுக்குள் ) வீடு திரும்புவதைக் குறிக்கும். இதனைத் தமிழில் “நாள் சத்திரசிகிச்சை” அல்லது “அன்றே வீடு திரும்பும் அறுவை சிகிச்சை முறை” என்று அழைப்பார்கள். இதனால் நோயாளிகளுக்கு தங்குமிடம் தேவையில்லை நோயாளி இரவு முழுவதும் மருத்துவமனையில் தங்கியிருக்க வேண்டிய அவசியம் இல்லை. நோயாளி தனது வீட்டிலேயே தங்கி ஓய்வெடுப்பதால் மனதளவில் விரைவாகக் குணமடைய முடிகிறது. மருத்துவமனையில் தங்கும் கட்டணங்கள் இல்லாததால் இது சிக்கனமான முறையாகும். பொதுவாக நுண்துளை அறுவை சிகிச்சை (Laparoscopy) போன்ற நவீன முறைகள் மூலம் இது செய்யப்படுகிறது. மருத்துவமனையில் நீண்ட நேரம் தங்கியிருக்காததால், பிற நோய்த்தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது. இது போன்ற நிலையங்கள் (JDSC போன்றவை) சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அறுவை சிகிச்சைகளை மிக வினைத்திறனாக மேற்கொள்ள உதவுகின்றன இது வெறும் ஆரம்பம் மட்டுமே! எதிர்காலத்தில் மருத்துவ சுற்றுலா (Medical Tourism) மற்றும் விரிவான சிகிச்சை முறைகளை நோக்கி எமது வடக்கு மாகாணத்தின் சுகாதாரத் துறை அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது என வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. https://globaltamilnews.net/2026/228569/
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி ஆரம்பத்தில் வேகமாக ஓட்டங்களை எடுத்திருந்தாலும் பாகிஸ்தான் அணியின் இறுக்கமான பந்துவீச்சால் 19.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 147 ஓட்டங்களையே எடுத்திருந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி அதிரடியான துவக்கத்துடன் ஓட்டங்களை எடுத்திருந்தாலும் விக்கெட்டுகள் சரிய இறுதி இரு ஓவர்களில் 29 ஓட்டங்கள் எடுக்கும் நிலையில் இருந்தது. 19 வது ஓவரில் ஃவகீம் மூன்று சிக்ஸர்களுடன் 24 ஓட்டங்களை எடுத்ததால் 19.3 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 148 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. முடிவு: பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது பாகிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்த 21 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். மற்றைய இருவருக்கும் புள்ளிகள் இல்லை!
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பாகிஸ்தான் வெல்லுது. 19 வது ஓவரில் 24 ரண்ஸ்!
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
உலகக்கிண்ணப் போட்டிகள் GMT நேரப்படி 07 பெப் 05:30 க்கு ஆரம்பிக்கவுள்ளன. நாளை சனி மூன்று போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 1) முதல் சுற்று குழு A:சனி 07 பெப்: 5:30 AM, கொழும்பு (SSC), நெதர்லாந்து எதிர் பாகிஸ்தான் NED எதிர் PAK 21 பேர் பாகிஸ்தான் அணி வெல்வதாகவும் இருவர் மாத்திரம் நெதர்லாந்து அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர். நெதர்லாந்து கறுப்பி சுவி முதலாவது போட்டியில் யார் புள்ளிகள் எடுப்பார்கள்? 2) முதல் சுற்று குழு C:சனி 07 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், ஸ்கொட்லாந்து எதிர் மேற்கிந்தியத் தீவுகள் SCOT எதிர் WI மூன்று பேர் ஸ்கொட்லாந்து அணி வெல்வதாகவும் 20 பேர் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர். ஸ்கொட்லாந்து சுவி கோஷான் சே நந்தன் இரண்டாவது போட்டியில் யார் புள்ளிகள் எடுப்பார்கள்? 3) முதல் சுற்று குழு A:சனி 07 பெப்: 1:30 PM, வாங்கெடே, இந்தியா எதிர் ஐக்கிய அமெரிக்கா IND எதிர் USA அனைவரும் இந்திய அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர்! எல்லோருக்கும் புள்ளிகள் கிடைக்குமா அல்லது முட்டையா!
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இதுவரை போட்டியில் கலந்து கொண்ட 23 பேரின் பதில்கள் தரவேற்றப்பட்டுள்ளது. வெற்றிபெற வாழ்த்துக்கள்! செம்பாட்டான் ஏராளன் வசீ புலவர் சுவைப்பிரியன் அல்வாயன் ஈழப்பிரியன் நியூ பலன்ஸ் வாத்தியார் கறுப்பி வாதவூரான் வீரப் பையன்26 சுவி கிருபன் கோஷான் சே அஹஸ்தியன் கந்தப்பு நியாயம் எப்போதும் தமிழன் ரசோதரன் பிரபா நிலாமதி நந்தன் @நந்தன் இறுதியாக வரும் அணிகளுக்கு பதில்கள் தரவில்லை எனினும் அவரின் தரவுகள் கூகுள் ஷீற்றில் இருந்தமையால் அவற்றை பிரதிசெய்துள்ளேன். இந்த முறை 🦀க்கு வெற்றி கிட்டுமா?🤪 முதலாவதாக வந்தாலும் ஆச்சரியமில்லை😄! அநேகமாக எல்லோரும் இந்தியா மீது பந்தயம் கட்டி உள்ளனர். சறுக்கச் சான்ஸ் அதிகம்.😁
-
மக்கள் பிரதிநிதித்துவத்தின் தார்மீகப் பொறுப்பும் ஓய்வூதிய சர்ச்சையும்
மக்கள் பிரதிநிதித்துவத்தின் தார்மீகப் பொறுப்பும் ஓய்வூதிய சர்ச்சையும் Veeragathy Thanabalasingham on February 6, 2026 Photo, THE PARLIAMENT OF SRI LANKA முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் தான் பெற்று வந்த ஓய்வூதியத்தை நிறுத்தினால் சாகப்போவதாக ஜனதா விமுக்தி பெரமுனவின் (ஜே.வி.பி.) முன்னாள் முக்கிய தலைவர்களில் ஒருவரும் 1999 ஜனாதிபதி வேட்பாளருமான நந்தன குணதிலக கடந்த ஓகஸ்டில் செய்த எச்சரிக்கை தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தது. தன்னை ஒரு ‘கெரில்லா’ என்று வர்ணித்த அவர் தன்னந் தனியாளாக சாகப் போவதில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். ஓய்வூதியம் நிறுத்தப்படும் பட்சத்தில் வாழ்வாதாரத்தை இழந்தால் வேறு பலரையும் கொலை செய்துவிட்டுத் தானும் உயிரை மாய்ப்பதற்கு ‘தற்கொலைத் தாக்குதலை’ நடத்துவதற்கு அவர் திட்டமிட்டிருந்தாரோ தெரியவில்லை. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இல்லாமல் செய்வதற்கான சட்டமூலத்தை அவரது முன்னாள் தோழர்களின் அரசாங்கம் ஜனவரி 7ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து அது குறித்து அரசியல் அரங்கில் ஒரு விவாதம் மூண்டிருக்கும் வேளையில், குணதிலக உயிருடன் இல்லை. குறுகியகால சுகவீனத்துக்குப் பிறகு ஜனவரி 18ஆம் திகதி அவர் காலமானார். தனது வாழ்வின் இறுதியில் மருத்துவச் செலவைக் கூட செலுத்த முடியாத நிலையில் அவர் இறந்ததாக கூறப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதிகள் அரச செலவில் அனுபவித்து வந்த ஆடம்பரமான வரப்பிரசாதங்களை இல்லாமல் செய்த சட்டம் நிறைவேற்றப்பட்டு ஐந்து மாதங்கள் கடந்த நிலையில், சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் நாடாளுமன்ற உறப்பினர்களின் ஓய்வூதியத்தை நீக்குவதற்கான சட்டமூலத்தை ஆட்சேபித்து பல மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களையும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தையும் இல்லாமல் செய்வதாக 2024 தேசிய தேர்தல்களில் நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு தங்களுக்கு இருக்கிறது என்று அரசாங்கத் தலைவர்கள் கூறுகிறார்கள். சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்ட அன்றைய தினமே தற்போது ஓய்வூதியத்தை பெறுகின்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் அதற்காக அரசாங்கத்துக்கு ஏற்படுகின்ற செலவினங்கள் பற்றிய விபரங்களை அரசாங்க உறுப்பினர் காமினி இரத்நாயக்க நாடாளுமன்றத்தில் வெளியிட்டார். பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசாங்கமே சட்டம் ஒன்றைக் கொண்டுவந்து நாடாளுன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை 1976ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தியது. இலங்கையின் மூத்த இடதுசாரி தலைவர்களில் ஒருவரான கலாநிதி என்.எம். பெரேரா அப்போது நிதியமைச்சராக இருந்தார். குறைந்தபட்சம் ஐந்து வருடங்கள் தொடர்ச்சியாக நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. காமினி இரத்நாயக்க வெளியிட்ட விபரங்களின் பிரகாரம் தற்போது 330 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியத்தைப் பெற்று வருகிறார்கள். இதற்கு மேலதிகமாக, மரணமடைந்த 182 நாடாளுமன்ற உறுப்பினர்களின் விதவை மனைவிமாரும் ஓய்வூதியத்தைப் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களில் தங்கியிருந்த ஏழு பேர் அரச கொடுப்பனவுகளைப் பெறுகின்றார்கள். ஓய்வுபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக மாதந்தம் 23,541,645 ரூபாவும் விதவைகளுக்காக 11,025,216 ரூபாவும் தங்கியிருந்தவர்களுக்காக 420,121 ரூபாவும். அரசுக்கு செலவாகுவதாக அவர் சபையில் கூறினார். ஓய்வூதியத்தை நீக்கும் சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதத்தை இம்மாத இறுதியளவில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த ஓய்வுதிய ஒழிப்பு திட்டம் தொடர்பில் தனது விசனத்தை வெளிப்படுத்தியிருக்கும் முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய சகல கட்சிகளினதும் பிரதிநிதிகள் கொண்ட குழுவொன்றுடன் ஆராய்ந்து சட்டமூலத்துக்கு ஒரு மனிதாபிமான பரிமாணத்தை கொடுக்கக்கூடிய திருத்தங்களைச் செய்யுமாறு ஜனாதிபதி அநுர குமார திசநாயக்கவிடம் கேட்டிருக்கிறார். ஜெயசூரியவை போன்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வசதி படைத்த வாழ்க்கைப் பின்புலத்தைக் கொண்டவர்கள் என்பதால் அவர்கள் வாழ்வாதாரத்துக்காக ஓய்வூதியத்தில் தங்கியிருப்பவர்கள் அல்ல. ஓய்வூதியத்தை சமூக சேவைக்கு தன்னால் செலவிடக்கூடியதாக இருப்பதை போன்று பல முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களினால் செய்யமுடியாது என்றும் அவர்களின் ஓய்வூதியம் நிறுத்தப்பட்டால் அவர்கள் பெரும் இடர்பாட்டுக்கு உள்ளாகும் ஆபத்து இருக்கிறது என்றும் அவர் கூறியிருக்கிறார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டமைப்பின் பதில் தலைவராக இருக்கும் ஜெயசூரிய ஜனாதிபதிக்கு கடந்த வாரம் எழுதிய கடிதம் ஒன்றில் ஊழல்வாதிகள் என்று அடையாளம் காணப்பட்டிருக்கும் அரசியல்வாதிகள் சார்பில் தான் பேசவில்லை என்பதை குறிப்பிடத்தவறவில்லை. பொதுவில் அரசியல்வாதிகளை பழிபாவத்துக்கு அஞ்சாத பேர்வழிகளாகவே மக்கள் நோக்குகிற அளவுக்கு இலங்கையின் அரசியல் ஊழல்மயமாகியிருக்கிறது என்பதால் ஜனாதிபதியிடம் தன்னால் முன்வைக்கப்படும் கோரிக்கை மக்களினால் எவ்வாறு நோக்கப்படும் என்பதில் ஜெயசூரிய கொண்டிருக்கும் கரிசனை கடிதத்தில் தெளிவாக பிரதிபலித்தது. “சகல முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஊழல்வாதிகள் என்று அழைப்பது நியாயமானதல்ல. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஜே.வி.பியின் 30 முன்னாள் உறுப்பினர்கள் உட்பட மக்களின் நம்பிக்கையையும் நல்லெண்ணத்தையும் பெற்ற நேர்மையான இடதுசாரி அரசியல்வாதிகள் பலரும் அடங்குகிறார்கள். “எதிர்கால ஓய்வூதியத்தை பற்றி அக்கறைப்படாமல் வாழ்க்கையின் சிறந்த பருவத்தில் அரசாங்க சேவையில் இருந்து விலகி அரசியலுக்கு வந்த பலர் இருக்கிறார்கள். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இல்லாமல் செய்தால் அவர்கள் பெரும் கஷ்டத்தை எதிர்நோக்க வேண்டியிருக்கும். தற்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிப்பவர்களும் எதிர்காலத்தில் அதே கஷ்டத்துக்கு ஆளாக வேண்டியிருக்கும். “நாடு சுதந்திரமடைந்த நேரத்தில் தனவந்தர்கள், நிலச்சுவாந்தர்கள் மற்றும் சமூகத்தின் உயர்மட்டத்தில் இருந்தவர்களும் அரசியலில் முதன்மை வாய்ந்தவர்களாக விளங்கினார்கள். 1956ஆம் ஆண்டில் இடம்பெற்ற சமூக மாற்றம் அந்த நிலைவரத்தை பெருமளவுக்கு மாற்றியமைத்து சாதாரண மக்களும் அரசியல் வாய்ப்புக்களில் நியாயமான பங்கைப் பெறுவதற்கு வழிசமைத்தது. “நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய உரிமையை இல்லாமல் செய்தால் முறைகேடாக சொத்தைக் குவிக்கும் முதலாளித்துவவாதிகளும் பெரும் வர்த்தகர்கள் மற்றும் ஊழல்வாதிகளும் மீண்டும் அரசியல் களத்தை ஆக்கிரமிக்கும் சூழ்நிலை உருவாகும். சமுதாயத்தின் நலன்களுக்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய பிறகு மன அமைதியுடன் வாழ்வதற்காக மக்கள் பிரதிநிதிகளுக்கு பல வசதிகளை வழங்குவது பல நாடுகளில் பாரம்பரிய நடைமுறையாக இருக்கிறது” என்று முன்னாள் சபாநாயகர் கடிதத்தில் தெரிவித்திருக்கிறார். நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் தொடர்பிலான விவாதம் நேர்மை மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பில் பல கேள்விகளை எழுப்புகிறது. பொதுமக்கள் பாதூரமான பொருளாதார இடர்பாட்டுக்கு உள்ளாகியிருக்கும் நிலையில், அதுவும் குறிப்பாக நான்கு வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட முன்னென்றுமில்லாத பொருளாதார வீழ்ச்சியில் இருந்து நாட்டை மீட்பதற்காக விதிக்கப்பட்டிருக்கும் கடுமையான வரிகள் உட்பட பல்வேறு சிக்கன நடவடிக்கைகளின் விளைவான நெருக்குதல்களினால் அவலப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு நேரத்தில் அரசியல்வாதிகள் வரப்பிரசாதங்களை அனுபவிப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. அரச சேவை ஊழியர்கள் தங்களது 60 வயதுவரை 25 – 30 வருடங்கள் பணியாற்றிய பிறகு பெறுகின்ற ஓய்வூதியங்களை விடவும் பெருமளவுக்கு அதிகமான ஓய்வூதியத்தை அரசியல்வாதிகள் வெறுமனே ஒரு ஐந்து வருடங்கள் நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்த பிறகு வாழ்நாள் பூராவும் பெறுவதை மக்கள் ஒரு முறைகேடாகவே நோக்குகிறார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்களாக வருவதற்கு முன்னர் பெரும்பாலான அரசியல்வாதிகளிடம் இருந்த சொத்துக்களையும் பல வருடங்களாக நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்த பிறகு அவர்களிடம் இருக்கும் சொத்துக்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது அரசியலை அவர்கள் மக்கள் சேவையாக அன்றி செல்வத்தைக் குவிப்பதற்கான ஒரு வழிமுறையாகவே பயன்படுத்துகிறார்கள் என்பது தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும். உலகின் பல நாடுகளிலும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் வசதிகள் வழங்கப்படுவது நடைமுறையாக இருந்து வருகிறது. எமது அயல் நாடான இந்தியாவில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதாந்தம் 25 ஆயிரம் ரூபாவை ஓய்வூதியமாகப் பெறுகிறார்கள். முதல் ஐந்து வருடங்களுக்கு அப்பால் நாடாளுமன்றத்தில் அவர்கள் அங்கம் வகித்த ஒவ்வொரு வருடத்துக்கும் 2 ஆயிரம் ரூபா மேலதிகமாக வழங்கப்படுகிறது. இந்தியா, இலங்கை போன்று அரசியலிலும் ஆட்சிமுறையிலும் ஊழலும் முறைகேடுகளும் தலைவிரித்தாடிய நாடுகளில் அரசியலைப் பயன்படுத்தி பெரும் தனவந்தர்களாக மாறிய எத்தனை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த ஓய்வூதியங்களை பெறுகிறார்கள் என்பது முக்கியமான ஒரு கேள்வி. அதேவேளை, தென்கிழக்காசியாவில் மிகவும் வறிய நாடுகளில் ஒன்றான கிழக்கு திமோரில் அரச அதிகாரிகள் அனுபவிக்கும் ஆடம்பரமான சலுகைகளுக்கு எதிராக மாணவர்கள் தலைமையில் இடம்பெற்ற போராட்டங்களை அடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை ஒழிப்பதற்கான சட்டம் கடந்த செப்டெம்பரில் நிறைவேற்றப்பட்டது என்பது கவனிக்கத்தக்கது. மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைக் காண்பதற்கு தங்களுக்குள் கருத்தொருமித்துச் செயற்படமுடியாத அரசியல்வாதிகள் தங்களுக்கான வரப்பிரசாதங்களை அதிகரிப்பதற்கு நாடாளுமன்றத்தில் ஒன்றுபட்டு சட்டங்களை நிறைவேற்றிய பல சந்தர்ப்பங்களை நாம் கண்டிருக்கிறோம். தவறான ஆட்சிமுறைக்கும் ஊழலுக்கும் எதிராக இலங்கையின் வரலாறு முன்னென்றும் கண்டிராத 2022 மக்கள் கிளர்ச்சிக்குப் பிறகு ஆட்சிக்கு வந்திருக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் அத்தகைய நடவடிக்கைகள் இடம்பெறுவதற்கு பெரும்பாலும் வாய்ப்பில்லை. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இல்லாமல் செய்யும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் திட்டம் தொடர்பில் கரு ஜெயசூரிய போன்ற தலைவர்கள் அரசாங்கத்திடம் முன்வைத்திருக்கும் கோரிக்கையை நாட்டு மக்கள் சாதகமான முறையில் நோக்க முடியாத அளவுக்கு இலங்கையின் அரசியல் வர்க்கம் ஊழல் நிறைந்ததாக இருந்து வந்திருக்கிறது. இதன் விளைவாக தவிர்க்க முடியாத வகையில் நேர்மையான அரசியல்வாதிகள் பாதிக்கப்படுகிறார்கள் என்பது உண்மை. முன்னாள் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் காலஞ்சென்ற சாம் விஜேசிங்க தனது இறுதிக்காலத்தில் ஆங்கிலப்பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் கூறிய ஒரு கதையை இச்சந்தர்ப்பத்தில் நினைவுமீட்டுவது மிகவும் பொருத்தமாக இருக்கும். புதிதாக நாடாளுமன்றத்துக்குத் தெரிவானவர்களுக்கு நாடாளுமன்ற நடைமுறைகள் குறித்து விளக்கமளிப்பதற்காக ஏற்பாடுசெய்யப்படும் பயிற்சிப் பட்டறைகளில் விரிவுரை நிகழ்த்துவதற்கு விஜேசிங்க அழைக்கப்படுவது வழமை. ஒரு பயிற்சிப் பட்டறையில் புதிய உறுப்பினர்களிடம் நாடாளுமன்றத்துக்கு வந்த நோக்கம் குறித்து அவர் கேட்டபோது, அவர்கள் எல்லோருமே மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காகவே வந்திருப்பதாகக் கூறினார்களாம். அப்போது விஜேசிங்க, ‘இல்லை, நீங்கள் குறுகிய காலத்திறகுள் பணம் குவிப்பதற்காகவே நாடாளுமன்றத்துக்கு வந்திருக்கிறீர்கள்’ என்று நேரடியாகவே கூறிவிட்டாராம். வீரகத்தி தனபாலசிங்கம் https://maatram.org/articles/12579
-
தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீட்டை முழுமையாகப் புனரமைக்கும் தீர்மானம்
தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீட்டை முழுமையாகப் புனரமைக்கும் தீர்மானம் February 5, 2026 யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை பிரதேசத்திலுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீட்டை முழுமையாகப் புனரமைத்து அதனை அவரின் சகோதரிக்கு ஒப்படைக்க வேண்டுமென்று வல்வெட்டித்துறை பிரதேச சபையில் முன்வைக்கப்பட்ட யோசனை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த யோசனை வல்வெட்டித்துறை பிரதேச சபையின் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தால் சபைக்கு முன்வைக்கப்பட்டது. இந்த யோசனையை சபைக்கு முன்வைத்து சபையில் உரையாற்றிய அவர், ‘‘உலகில் அநேகமான தலைவர்களின் வீடுகள் இவ்வாறு புனரமைக்கப்பட்டு அடுத்த சந்ததியினர் பார்வையிடுவதற்காகப் பாதுகாக்கப்படுவதால் சகலரும் பிரபாகரனின் வீடென்று கூறும் அந்த வீட்டை முழுமையாக புனரமைக்க வேண்டும் என்று தெரிவித்தார். அந்த வீட்டின் பாதுகாப்பு மற்றும் நடத்துகைக்காக அந்த வீட்டை புனரமைப்புப் பணிகளின் பின்னர் பிரபாகரனின் சகோதரிக்கு வழங்குவது மிகவும் ஏற்புடைய செயற்பாடாக இருக்குமென சிவாஜிலிங்கம் சுட்டிக்காட்டி முன்வைத்துள்ள அந்த யோசனைக்கு சபையில் ஏகமனதாக விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது. www.ilakku.orgதலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீட்டை முழுமையாகப் புனரமை...யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை பிரதேசத்திலுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீட்டை முழுமையாகப் புனரமைத்து அதனை அவரின்
-
அரசிடம் விலை போன பாராளுமன்ற உறுப்பினரும்! ஆபத்தை உணராத மட்டக்களப்பு பண்ணையாளர்களும்!
அரசிடம் விலை போன பாராளுமன்ற உறுப்பினரும்! ஆபத்தை உணராத மட்டக்களப்பு பண்ணையாளர்களும்! February 6, 2026 மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர் கள் தங்களுக்கான மேய்ச்சல் தரை நிலங்களை கோரி பல வருடங்களாகப் போராட்டம் நடாத்தி வருகின்றனர். மறுபுறம் மட்டக்களப்பு எல்லையில் சிங்கள சட்டவிரோத குடியேற்றவாசிகளை குடியமர்த்த எடுக்கப்படும் முயற்சிகள் தற்போது மகாவலி பி வலய அபிவிருத்தித் திட்டம் ஊடாக நடைமுறைப்படுத்தப்படும் முயற்சிகள் நடை பெற்று வரும் நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களை அரசிடம் கொண்டு போய் அடகு வைக்கும் இரகசிய வேலைத் திட்டத்தை மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் முன்னெடுத்து வருகிறார். மட்டக்களப்பு எல்லையை ஊடறுத்து மட்டக்களப்பு மாவட்டத்தின் 70 வீத நிலப்பரப்பையும், பொலனறுவை, அம்பாறை மாவட்டத்தின் 30 வீத நிலப்பரப்பையும் இணைத்து மகாவலி அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக உருவாக்கப்பட்ட பி வலய திட்டம் தற்போது மெல்ல மெல்ல விஸ்வரூபம் எடுக்க தொடங்கியுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் மகாவலி பி வலய அபிவிருத்தி திட்டம் அதன் ஊடாக மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர் களுக்கு ஏற்படப்போகும் பிரச்சினைகள், இந்த திட்டத்திற்கு ஆதரவாக இரகசியமாக காய் நகர்த்தும் பாராளுமன்ற உறுப்பினர், மற்றும் சில குழுவினர் பற்றி தெளிவாக ஆராய வேண்டி உள்ளது. அண்மையில் கிபுல் ஓயா மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக 2500 குடும்பங்களை குடியேற்றம் செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கி உள்ள நிலையில், தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் விவசாய அபிவிருத்தி குடியேற்றம் என்ற பெயரில் சிங்கள மக்களை குடியேற்றி தமிழர் பிரதேசங்களை ஆக்கிரமிக்கும் சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்படி கிபுல் ஓயா மகாவலி அபிவிருத்தி திட்டம் ஊடாக முன்னெடுக்கப் பட உள்ளதாக தற்போது வடக்கில் உள்ள மக்கள் போராட்டங்களை நடாத்த தயாராகி வரும் நிலையில். இலங்கை வரலாற்றில் மகாவலி அபிவிருத்தி திட்டம் உருவாக்கப்பட்டதன் நோக்கம் விவசாய நிலங்களை அபி விருத்தி செய்வதற்கு என்று கூறப்பட்டாலும். மகாவலி அபிவிருத்தித் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ள காணி அதிகாரம், மற்றும் விகிதாசார அடிப்படையிலான விவ சாய குடியேற்றங்களை மேற்கொள்வதற்கு சட்ட ரீதியாக வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள். வடகிழக்கு தமிழ் மக்களின் நிலங்களில் சிங்கள மக்களை குடியேற்றுவதற்கான சட்ட ரீதியான அனுமதிகளைக் கொண்டுள்ளது. இந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மகாவலி அபிவிருத்தித் திணைக்களத்தின் பி வலய செயற் பாடுகள், அதனால் தமிழ் மக்களுக்கு ஏற்பட இருக்கும் ஆபத்துகள் குறித்து சிந்திக்காது மயிலத்தமடு பகுதிக்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பிரதிநிதிகளுடன் சென்று பொங்கல் விழா கொண்டாடும் அளவுக்கு மட்டக் களப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தேசிய மக்கள் சக்தி அரசுடன் உறவில் இருக்கின்றனர். அரசாங்கத்திடம் தங்களது உரிமைகளை கேட்டு போராடி வரும் பண்ணையாளர்கள், தங்களுக்கு ஏற்படப் போகும் ஆபத்தை அறியாது பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறினார். என்பதற்காக தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளை அழைத்து பொங்கல் விழா கொண்டாடி வருகின்றனர். தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களுடன் இணைந்து பொங்கல் விழா கொண்டாடி மகிழும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு போராட்டத்தின் வலி வேதனைகள் தெரிய வாய்ப்பில்லை. ஆனால் மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களின் போராட்டம் எதற்கானது அவர்கள் பட்ட வேதனைகள் துன்பங்கள் அவர்களுக்கு தெரியாதா? போராடி தமிழர்களின் நிலங்களை பாதுகாக்க வேண்டிய நீங்கள் பொங்கல் விழா கொண்டாடி அரசுடன் உறவு கொண்டாடுவதா? கிபுல் ஓயா சிங்கள வீட்டு திட்டம் முதல் மட்டக் களப்பு மயிலத்தமடு சிங்கள விவசாய குடியேற்ற திட்டம் வரை அனைத்துமே மகாவலி அபிவிருத்தி திணைக் களத்தின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படுவதை யாராலும் தடுக்க முடியாமல் போகலாம். மட்டக்களப்பு மாவட்டத்தில் எல்லைக் கிராமமான மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை நிலங்களை அரசாங்கம் மிகவும் திட்டமிட்ட வகையில் மகாவலி அபி விருத்தி திணைக்களத்தின் விவசாய அபிவிருத்திக் கான பகுதிகளாக அடையாளப்படுத்தி அதற்கான அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. சுமார் கிட்டத்தட்ட 25000 ஏக்கர் நிலப்பரப்பை கொண்ட மயிலத்தமடு மாதவனை காட்டுப் பிரதேசத்தில் வெறுமனே 3000 ஏக்கர் பரப்பளவிலான காணிகளை மட்டும் மேய்ச்சல் தரைக்கு ஒதுக்கீடு செய்து விட்டு மீதி உள்ள காணிகளை அரசாங்கம் என்ன செய்ய போகிறது என்ற கேள்வி எழுகிறது? மயிலத்தமடு மாதவனை மகாவலி அபிவிருத்தி திணைக்களத்தின் அதிகாரத்திற்குள் இருக்கும் வரை அது மட்டக்களப்பு மாவட்டத்திற்கு சொந்தமான காணிகள் என யாரும் உரிமை கொண்டாட முடியாது. அந்த வகையில் மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களுக்கு மூவாயிரம் ஏக்கர் காணிகளை வழங்கும் மகாவலி அபிவிருத்தி திணைக்களம், மீதம் உள்ள காணிகளை விவசாய நிலங்களாக மாற்றுவதற்கு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதாவது பொலநறுவை, அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களை ஒன்றிணைத்து விவசாய குடியேற்ற திட்டம் ஒன்றை மேற்கொள்வதற்கான ஆரம்பகட்ட அபிவிருத்தித் திட்டங்களை தற்போது மேற்கொண்டு வருகிறது. மயிலத்தமடு மாதவனை பகுதிகளில் தற்போது மகாவலி அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக, வீதி கள், குளங்கள், கால்வாய்கள் புதிதாக அமைக்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டு வருவதுடன். மயிலத்தமடு மாதவனை பகுதிகளை பொலநறுவை, அம்பாறை மாவட்டங்களுடன் இணைக்கும் வீதிகளும் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகிறது. இந் நிலையில் மகாவலி அபிவிருத்தி திணைக் களத்தின் மேற்படி அபிவிருத்தி திட்டங்களுக்கு தடையாக மேய்ச்சல் தரை நில பிரச்சினை காணப்படுவதால் மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லை அபகரிக்கப்படப் போகி றது என்பதை மறைத்து அதனை வெறுமனே மட்டக்களப்பு மாவட்ட பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரை பிரச்சினை என்ற வட்டத்துக்குள் அடையாளப்படுத்தி அவர்களுக்கான பிரச்சினைக்கு வெறும் மூவாயிரம் ஏக்கர் நிலங்களை வழங்கி தீர்வு காண பலர் முயற்சித்து வருகின்றனர். ஆனால் மகாவலி அபிவிருத்தி திணைக்களத்தின் விவசாய குடியேற்ற திட்டம் ஒன்றின் ஊடாக மயிலத்தமடு மாதவனை பகுதிகளில் உள்ள காணிகள் எதிர்காலத்தில் பகிர்ந்தளிக்கப்படப் போகிறது. அப்போது அந்த பகுதியில் விவசாய நடவடிக்கைக ளில் ஈடுபடும் குடியேற்ற வாசிகளுக்கும், மேய்ச்சல் தரை பண்ணையாளர்களுக்கும் இடையிலான முரண்பாடுகள் ஏற்படும் என்பதோடு நீதிமன்றம் ஊடாக மாடுகளை அடைத்து வளர்க்கும் பண்ணை முறையை நடைமுறைப்படுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்படலாம்? அதன் பின்னர் மயிலத்தமடு மாதவனை தமிழ் பண்ணையாளர்கள் மெல்ல மெல்ல நாட்டு இன மாடுகளை வளர்ப்பதை கைவிட்டு, பண்ணை மாடுகளை வளர்க்கு திட்டத்திற்கு உள் வாங்கப்படுவார்கள். இதற்காக இந்தியா , பாகிஸ்தான் பகுதிகளில் இருந்து மாடுகளை கொண்டு வந்து இலவசமாக கொடுப் பதற்கும், பண்ணையாளர்களிடம் இருந்து பால் கொள்வனவு செய்வது குறித்தும் ஏற்கனவே இந்திய நிறுவனம் ஒன்றுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று நிறைவடைந்துள்ளன. கடந்த அரசாங்கத்தில் கிழக்கு மாகாண முன் னாள் ஆளுநர் அனுராதா ஜெயம்பத் ஊடாக நடை முறைப் படுத்தப்பட இருந்த திட்டத்தை தற்போதைய அரசு, எமது பாராளுமன்ற உறுப்பினர் சிலரின் ஊடாக முன்னெடுப் பதற்கு தயாராகி வருகிறது. மிக முக்கியமாக மயிலத்தமடு மாதவனை பண் ணையாளர்களை கையாளும் சட்டத்தரணி ஒருவரும், பண்ணையாளர்களுடன் மிக நெருக்கமாக இருக்கும் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் இந்த திட்டத்தின் பின்னணியில் உள்ளனர். தேசிய மக்கள் சக்தி அரசுடன் மிக நெருக்கமாக செயற்படும் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரிடம் இந்திய நிறுவனம், தேசிய மக்கள் சக்தியின் கால்நடை விவசாய அமைச்சின் இணைப்பாளராக நியமிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட பிரதிநிதி, மற்றும் ஒரு சட்டத்தரணியும், அவருடன் சேர்ந்து மேய்ச்சல் தரை பிரச்சினையில் ஈடுபட்டுவரும் நிறுவனம் ஒன்றும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளி யாகியுள்ளன. இது குறித்து எதுவுமே அறியாத மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை பண்ணையாளர்கள் அவர்களு டன் பொங்கல் விழா நடாத்தி மகிழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர். மட்டக்களப்பு மாவட்ட எல்லைகளை மட்டும் அல்ல வடகிழக்கில் உள்ள தமிழர் தாயகப் பகுதிகளை அபகரிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி ஜே ஆர் ஜெயவர்த்தன தொடங்கி மகிந்த ராஜபக்ச , தற்போதைய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வரை தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்களை அபகரிப்பதற்கு சட்ட ரீதியான திணைக்களமாக மகாவலி அபிவிருத்தி திணைக் களத்தையே பயன்படுத்தி வருகின்றனர். இதற்கான சிறந்த உதாரணமாக கிபுல் ஓயா மகாவலி அபிவிருத்தி திட்டம், மட்டக்களப்பு மயிலத்தமடு மகாவலி அபிவிருத்தி திட்டம் மிகச் சிறந்த உதாரணமாகும். சலுகைகளுக்காக அரசாங்கத்திடம் அடிமையாகிப் போகும் நமது மக்கள் பிரதிநிதிகள் இருக்கும் வரை ஆயிரக்கணக்கான மாவீரர்களின் ,இலட்சக்கணக்கான தமிழ் மக்களின் உயிர் தியாகங்கள் மூலம் பாதுகாக்கப்பட்ட தமிழர்களின் நிலங்களை பாதுகாக்க முடியாத நிலை உருவாகி உள்ளது. https://www.ilakku.org/அரசிடம்-விலை-போன-பாராளும/
-
மட்டக்களப்பில் சடலத்துடன் போராட்டம்.!
மட்டக்களப்பில் சடலத்துடன் போராட்டம்.! Vhg பிப்ரவரி 05, 2026 மட்டக்களப்பு, வந்தாறுமூலைப் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கறடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈரளக்குளம் சமுளையடிப் பொத்தானை எனும் இடத்தில் கடந்த (16) ஆம் திகதி இரவு இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவ தினத்தன்று, குறித்த நபர் அவரது வயலில் இருந்தபோது குழுவாகச் சென்ற நபர்கள் சிலர் அவரை கூரிய ஆயுதங்களால் தாக்கியும் வெட்டியும் அடித்தும் உள்ளனர். இதில் படுகாயமடைந்தவர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு 20 நாட்கள் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (04.02.2026)ஆம் திகதி உயிரிழந்துள்ளார். இந்நிலையில் இன்று (05.02.2026)ஆம் திகதி உயிரிழந்தவரின் சடலத்தை சுமந்தவாறு அவரது உறவினர்கள் மரணித்தவருக்கு நீதி கிடைக்க வேண்டும் என கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அச்சத்தில் உதவாத அயலவர்கள் சம்பவத்தை ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும் எனத் தெரிவித்து, வந்தாறுமூலை அம்பலத்தடி சந்தியில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பின்னர் வந்தாறுமூலை பொது மயானத்தில் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. https://www.battinatham.com/2026/02/blog-post_170.html
-
நிபா வைரஸ் அச்சுறுத்தலை எதிர்கொள்ள இலங்கை நடவடிக்கை
நிபா வைரஸ் அச்சுறுத்தலை எதிர்கொள்ள இலங்கை நடவடிக்கை 06 Feb, 2026 | 12:55 PM இலங்கையில் நிபா வைரஸ் (NiV) பரவலைக் கண்டறியவும், அதற்குப் பதிலளிக்கவும் சுகாதாரத் துறை தனது தயார்நிலையைத் தீவிரப்படுத்தியுள்ளது. இலங்கையின் முதன்மை ஆய்வகமான வைத்திய ஆராய்ச்சி ஸ்தாபனம் (Medical Research Institute - MRI) நிபா வைரஸைக் கண்டறியும் திறனை அதீத தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தியுள்ளது. இதன் மூலம் வைரஸ் தொற்று சந்தேகத்திற்குரிய நபர்களுக்கு ஆரம்பத்திலேயே பரிசோதனைகளை மேற்கொண்டு வைரஸ் பாதிப்பை உறுதி செய்ய முடியும். இதற்காக நவீன தொழில்நுட்பக் கருவிகள் ஆய்வகத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என வைத்திய ஆராய்ச்சி ஸ்தாபனம் வட்டாரம் தெரிவித்துள்ளது. நிபா வைரஸ் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் ஒரு வகை நச்சுயிரி (Zoonotic disease) ஆகும். முக்கியமாக 'பழம் தின்னும் வௌவால்கள்' (Fruit bats) மூலம் பரவுகிறது. அசுத்தமான உணவு மற்றும் பாதிக்கப்பட்ட மனிதர்களுடனான நேரடித் தொடர்பின் மூலமும் இது பரவக்கூடும். இந்த வைரஸால் பாதிக்கப்படுபவர்களில் 40% முதல் 75% வரை உயிரிழக்க வாய்ப்புள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது மிகவும் ஆபத்தான தொற்றுநோய்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. தற்போது இந்த வைரஸிற்குச் சிகிச்சையளிக்கத் தடுப்பூசிகளோ அல்லது பிரத்யேக மருந்துகளோ இல்லை. தீவிரமான மருத்துவக் கண்காணிப்பு (Supportive care) மட்டுமே ஒரே வழி ஆகும். https://www.virakesari.lk/article/237974
-
’’45 பவுனைவிட நேர்மைதான் முக்கியம்” பத்மாவுக்கு மலேசிய அமைச்சர் பாராட்டு
’’45 பவுனைவிட நேர்மைதான் முக்கியம்” பத்மாவுக்கு மலேசிய அமைச்சர் பாராட்டு சென்னையில் குப்பையில் கிடந்த 45 சவரன் நகையை உரியவரிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளர் பத்மாவை மலேசிய அரசு கவுரவித்துள்ளது. அவருக்கு தங்க மோதிரத்தையும் பரிசாக அனுப்பியுள்ளது. குப்பையில் கிடந்த 45 பவுன் தங்கத்தை உரியவரிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளர் பத்மாவுக்கு அன்றாடம் பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில் தற்போது கடல் கடந்தும் அவருக்கு கவுரவம் தேடி வருகிறது. பத்மாவின் செயலால் நெகிழ்ந்து போன மலேசிய அரசின் சட்டத் துறை அமைச்சர் குலசேகரன், தனது உதவியாளர் வடிவுக்கரசியை சென்னை அனுப்பியிருந்தார். அவரிடம் பத்மாவுக்கு அணிவிக்குமாறு கூறி மோதிரத்தையும் பரிசாக கொடுத்துள்ளார். இதையடுத்து சென்னை வந்த வடிவுக்கரசி, நேராக பத்மா இருப்பிடத்தை தேடி வந்து அவருக்கு பாராட்டுகளை தெரிவித்ததுடன் அமைச்சர் கொடுத்த மோதிரத்தையும் அணிவித்தார். மேலும் அமைச்சருக்கு வீடியோ கால் போட்டு பத்மாவை பேச வைத்தார். அப்போது பத்மாவுக்கு அமைச்சர் குலசேகரன் பாராட்டுகளை தெரிவித்தார். இதனால் பத்மா நெகிழ்ந்து போனார். திருவல்லிக்கேணியைச் சேர்ந்த 48 வயது பத்மா, தூய்மைப் பணியாளர். கடந்த ஜனவரி 11 அன்று, தி.நகர் வண்டிக்காரன் பகுதியில் பணியிலிருந்தபோது, சாலையில் கிடந்த ஒரு பையைக் கண்டெடுத்தார். அதில் 45 பவுன் தங்க நகைகள் இருந்தன. உடனடியாக, அந்த நகைகளை பாண்டி பஜார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். விசாரணையில், அவை நங்கநல்லூரைச் சேர்ந்த 46 வயது பரமேஷுக்குச் சொந்தமானது எனத் தெரியவந்து, உரியவரிடம் நகைகள் ஒப்படைக்கப்பட்டன. இந்நேர்மைக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் ரூ.1 லட்சத்துக்கான காசோலை வழங்கினார். தொடர்ந்து, சென்னை மத்திய கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் அலுவலகம், பத்மாவின் புகைப்படத்துடன் கூடிய 'மை ஸ்டாம்ப்' அஞ்சல் தலையை வெளியிட்டுச் சிறப்பித்தது. இச்செயல் பல தரப்பிலும் பாராட்டுக்களைப் பெற்றது. இதனிடையே, கடந்த இரு தினங்களுக்கு முன்பு ரஜினிகாந்த் பத்மாவை அழைத்து "முன்களப் பணியாளரான பத்மாவின் செயலை அங்கீகரித்து, அவருக்கு நடிகர் ரஜினிகாந்த் தங்கச் சங்கிலி அணிவித்து கௌரவித்தார். அந்த வகையில் தற்போது நடிகர் பார்த்திபனும், பத்மாவை பாராட்டியுள்ளார். பத்மாவுக்கு காலணியை அணிவித்த பார்த்திபன், அவருக்கு பாத பூஜை செய்து கௌரவப்படுத்தினார். பாதணியை பார்த்திபன் கீழே வைத்து அணிய சொன்ன போது பத்மா, நெகிழ்ச்சி அடைந்தார். பின்னர் அவருக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டினார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: தங்கத்தின் மதிப்பு ஏற ஏற, மனிதத்தின் மரியாதை குறைந்துகொண்டே போய், ஒரு கிராம் ஒரு லட்ச ரூபாயை நெருங்கும்போது, லட்சக்கணக்கான உயிர்கள் கொல்லப்படுவது உறுதியாகிவிடும். வருடத்தில் 360 நாளாவது உழைக்கும் துப்புரவு பணியாளர் திருமதி பத்மா அவர்கள், குப்பையில் கிடந்த 360 கிராம் நகையை உரியவரிடம் சேர்ப்பித்து, அந்த ஒரு செயலின் மூலம் உலகமகா உன்னத மனுஷியாக அவதாரம் எடுத்திருக்கிறார். என்னை Chief Guest-ஆக அழைத்த எத்திராஜ் கல்லூரிக்கு, நான் வெறும் Guest-ஆகவும் Chief-ஆக திருமதி பத்மாவை அழைத்துச் சென்று, பாதணி அணிவித்து, பாத பூஜை செய்து, புடவை போர்த்தி, 'உலக அழகி' என்ற கிரீடம் சூட்டி நான் பேரழகன் ஆனேன்... இவ்வாறு தெரிவித்திருந்தார். இவ்வாறு பத்மாவுக்கு நாளுக்கு நாள் பாராட்டுகளும் கௌரவங்களும் குவிந்து வரும் நிலையில் மலேசியாவில் இருந்தும் பாராட்டு மழை பெய்துள்ளது. மலேசிய அமைச்சர் குலசேகரன் பத்மாவுக்கு தங்க மோதிரம் அணிவித்து பாராட்டுகளை தெரிவித்துள்ளார். https://www.tamilmirror.lk/செய்திகள்/45-பவுனைவிட-நேர்மைதான்-முக்கியம்-பத்மாவுக்கு-மலேசிய-அமைச்சர்-பாராட்டு/175-372088
-
🚨யாழில். மணல் கடத்தலில் ஈடுபட்ட முன்னாள் காவல்துறை உத்தியோகஸ்தர் – 20 கிலோ மீட்டர் துரத்தி சென்று கைது செய்த காவல்துறையினா்
🚨யாழில். மணல் கடத்தலில் ஈடுபட்ட முன்னாள் காவல்துறை உத்தியோகஸ்தர் – 20 கிலோ மீட்டர் துரத்தி சென்று கைது செய்த காவல்துறையினா் adminFebruary 6, 2026 யாழ்ப்பாணத்தில் காவல்துறையினாின் கட்டளையை மீறி 20 கிலோமீட்டர் தூரம் துரத்திச் செல்லப்பட்ட முன்னாள் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரின் கைது சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட ஒருவரைகாவல்துறையினர் சினிமா பாணியில் துரத்திச் சென்று பிடித்துள்ளனர். பருத்தித்துறையில் மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனத்தை காவல்துறையினா் நிறுத்தச் சொன்னபோது, சாரதி வாகனத்தை நிறுத்தாமல் அதிவேகமாகச் செலுத்தி தப்பியோடியுள்ளார். சுமார் 20 கிலோமீட்டர் தூரம் காவல்துறையினா் அந்த வாகனத்தைத் துரத்திச் சென்றுள்ளனர். ஒரு கட்டத்தில் வாகனத்தை வீதியில் நிறுத்திவிட்டு சாரதி ஓட முயற்சித்தபோது காவல்துறையினா் அவரை மடக்கிப் பிடித்தனர். கைது செய்யப்பட்ட நபரை விசாரித்தபோது, அவர் ஒரு முன்னாள் காவல்துறை உத்தியோகத்தர் என்பது தெரியவந்தது. ஏற்கனவே சட்டவிரோத செயல்களுக்காக அவர் காவல்துறை சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டவர் என்பதும் அம்பலமானது. கைது செய்யப்பட்ட நபர், தனக்கு காவல்துறை திணைக்களத்தில் இருந்த பழைய தொடர்புகள் மற்றும் செல்வாக்கைப் பயன்படுத்தி நீண்டகாலமாக சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார். தற்போது அவர் தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. https://globaltamilnews.net/2026/228485/
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இதுவரை போட்டியில் கலந்து கொண்ட 20 பேரின் பதில்கள் தரவேற்றப்பட்டுள்ளது. வெற்றிபெற வாழ்த்துக்கள்! செம்பாட்டான் ஏராளன் வசீ புலவர் சுவைப்பிரியன் அல்வாயன் ஈழப்பிரியன் நியூ பலன்ஸ் வாத்தியார் கறுப்பி வாதவூரான் வீரப் பையன்26 சுவி கிருபன் கோஷான் சே அஹஸ்தியன் கந்தப்பு நியாயம் எப்போதும் தமிழன் ரசோதரன் போட்டியில் கலந்துகொள்ள இன்னும் ஒரே ஒரு நாள் மாத்திரம் உள்ளது. ஆர்வம் உள்ளவர்கள் விரைவில் இன்றே உங்கள் பதில்களைத் தாருங்கள்.. பஸ்ஸைத் தவற விடவேண்டாம்.😆 @தமிழ் சிறி ஐயா, @குமாரசாமி ஐயா, @நிலாமதி அக்கா, @நந்தன் , @நீர்வேலியான் , @பிரபா , @theeya
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
@goshan_che பதில்கள் இடையில் அப்படி இப்படி உள்ளன 😆 ஆனால் அப்படியே தரவேற்றியுள்ளேன். வெற்றிபெற வாழ்த்துக்கள்
-
ஆண்குறிகள் அழுக்கானவை - நீலாவணை இந்திரா
கதையை கிளுகிளுப்புக் கதை என்று படிக்காமல் இருந்தால் சரி 🆗
-
ஆண்குறிகள் அழுக்கானவை - நீலாவணை இந்திரா
ஆண்குறிகள் அழுக்கானவை நீலாவணை இந்திரா 1 கோதுமை ரொட்டியென நிலத்தைச் சூடேற்றிக் கொண்டிருக்கும் சூரிய வெப்பம் தகிக்கின்ற பட்டப்பகலில் நான் அக்காட்சியைக் கண்டேன். ரோமன் ஃபாதரின் முகம் வழக்கத்தை விடவும் அதிகமாக விகாரமடைந்திருந்தது. அவர் கைகளில் இருந்த சவுக்கு மரக்கம்பின் முனையில் சிறுதுளி இரத்தம் அப்பியிருந்ததைக் கூட என்னால் கவனிக்கமுடிந்தது. வெயில் கொதித்துக் கொண்டிருக்கும் அந்த நண்பகலில், ஒழுங்காகவும் ஒழுங்கின்றியும் கட்டப்பட்டிருக்கும் கல்லறைகளுக்கு நடுவில் குச்சானை முட்டுக்காலில் வைத்திருந்தார். பள்ளிக்கூடம் விட்டுத்திரும்பிய நீலக்களிசனைக் கூட மாற்றாமல் கிழிக்கப்பட்ட சட்டையுடன் முகமெங்கும் அழுது வடித்த கண்ணீர்க்கறையுடன் வானத்தைப் பார்க்கும் படியாக அவன் இருந்தான். அவனது களிசனில் மூத்திரம் ஒழுகியிருந்தது. முன்னால் சில துண்டுப் பத்திரிகைகளும் அதில் அரைகுறை ஆடைகளுடனான நடிகைகளது புகைப்படமும் இருந்தது. சில மாதங்களுக்கு முன்பு நஞ்சு குடித்துச் செத்துப்போன டேவிட்டின் கல்லறைக்கு மேல் பெரு மணலைப் பரப்பி வைத்திருந்த ஃபாதர், அவனை முட்டுக் காலில் இருத்திய விதத்தைப் பார்க்க எனக்கு அழுகையாக வந்தது. அவர் அவனை எதற்காகவோ திட்டிக்கொண்டிருந்ததையும் வேசியின் மகன் என்று உரத்துக் கூறியதையும், நான் மறைவில் இருந்து கவனித்துக் கொண்டிருந்தேன். அவன் நிச்சயமாகக் கையும்களவுமாகப் பிடிபட்டிருக்க வேண்டும். (சுயமைதுனம் செய்யும் போதே ஃபாதர் அவனைக் கண்டிருக்கவேண்டும்.) நிலத்தில் விழுந்த பனம்பழம் போன்ற தொத்திப்பான முகத்தையுடைய குச்சான், மெலிந்த தேகமுடையவன், எண்ணை அப்பிய முகத்துடன், கிறிஸ்துமஸ் இற்கு வழங்கப்படும் சட்டையை வருடம் முழுக்கப் போட்டுக் கொண்டு அலையும் எங்களைப் போன்றவர்களுள் அவனும் ஒருவன். அவனைச் சரியாக அடையாளம் காட்ட வேண்டுமென்றால் அவனது சூத்தாமட்டியின் மீது ஏறியிருக்கும் தசைத்துண்டத்தில் அதிகளவு மயிர்களுடன் ஒரு மாங்காய் மச்சம் இருக்கும் குறளி வித்தைக்காரனானவன், தனது சகோதரி மேர்லினுடன் தேவாலயத்தின் விடுதியில் தான் வசித்துவருகின்றான். அப்துல்லாஹ் தான் முதன் முதலாக எங்களுக்குச் சுயமைதுனம் செய்யப் பழக்கிவிட்டவன். ஆண்குறியிலுள்ள தோலை மேலும், கீழுமாக அசைக்கையில், அதிலிருந்து வெண்ணிறமாக திரவம் பீச்சியடிக்கும் போதெல்லாம் உடலுக்குள் ஏற்படும் கிளர்ச்சியை எங்களால் விவரிக்க முடியவில்லை. அதிலிருந்து நாங்கள் அடிக்கடி அதனைத் திரும்பத் திரும்பச் செய்ய ஆசைப்பட்டோம். அப்துல்லாஹ்வின் கரைவலைத் தோணியின் மறைவில், தேவாலயத்தின் பின்புறமுள்ள கல்லறைகளுக்குள் உள்ள பனை மரங்களுக்கிடையில், சவுக்குமரப் பற்றைக்குள், கடலை ஒட்டியிருந்த பாறைகளின் மறைவில் என நானும் குச்சானும் தனித்தனியாகவோ, சேர்ந்தோ சுயமைதுனம் செய்து கொண்டோம். எங்களுக்குள் அது அலாதியான ஒரு ஆசையைத் தூண்டிவிட்டது. சாப்பாடு, தண்ணீர் போல நாங்கள் தினமும் அதனை செய்து கொண்டோம். பள்ளி லைப்ரரியில் இருந்து பழைய நாளிதழ்களில் உள்ள நடிகைகளின் புகைப்படங்களைக் கிழித்துக் கொண்டு வந்தோம். அதைப் பார்த்துக் கொண்டே செய்வதற்கும் பழகியிருந்தோம். அப்படியொரு நாளிதழ் புகைப்படத்தில் வெள்ளையாக இருந்த நடிகையை குச்சான் விரும்பத் தொடங்கினான். அவளைப் போன்ற ஒரு பெண்ணைத்தான் காதலிப்பேன் என்றும் கூறிக் கொள்வான். அவன் தனது அம்மா மர்யத்தையோ அப்பாவையோ பார்த்ததில்லை. ஆனால் இந்த நடிகையைப் பார்க்கும் போதெல்லாம் எனது அம்மாவின் பழைய புகைப்படத்தைப் பார்ப்பது போன்றே இருக்கும் என்று குச்சான் சொல்வான். ஒரு தடவை கூட அந்தப் புகைப்படத்தை அவன் பிரிந்ததே இல்லை. தனக்கு விருப்பமான கணிதப்புத்தகத்தினுள் அதை ஒழித்து வைத்திருந்தான். 2 சிம்னி விளக்கு ஒளிர்ந்து கொண்டிருக்கும் கருக்கல் பொழுதொன்றில் கடல் பெரும் பூதம் போலக் காட்சியளித்தது. மர்யம் சிவப்புக் கற்கள் பதித்து வைத்திருந்த தனது தங்கத் தோடுகள் இரண்டையும் கழற்றிவைத்துவிட்டு கண்ணாடியின் முன்னால் அமர்ந்திருந்தாள். இரசமிழந்து தேய்ந்து போயிருந்த உடைந்த கண்ணாடியின் மீதிருந்த பல்லியொன்று அவளது நிர்வாணத்தைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தது. அவளது கழுத்தின் கீழே கண்டித்துப் போயிருந்த இரத்த வடுக்கள் தென்பட்டன. முலைகள் இரண்டும் பருமனில் பெரிதாகியிருந்தன. சகாயப்பனை திருமணம் செய்த போதிருந்த நீளமான முடி அவளிடமிருக்கவில்லை. அவை கொட்டப்பட்டிருந்தன. இடது காதுக்கு மேலால் சிறுநரையுடன் மொட்டையாகத் தலை தெரிந்தது. பெரும்பாலும் இப்போதெல்லாம் அவளிடம் வருபவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. இளம் வயதாக இருந்தாலும் தொடர்ந்தும் அரிசிக்கும், சாளை மீன்களுக்காகவும் உடலை விற்றுக் கொண்டிருப்பவளிடம் தேகச்சத்து குறைந்து போயிருந்ததே அதற்கான காரணமாயிருந்தது. கண்ணாடியின் முன்னால் அமர்ந்திருந்த மர்யம் கைகள் இரண்டையும் உடலோடு சேர்த்து இறுகப்பற்றிக் கொண்டு எழுந்தாள். அன்று குளிர் மிகவும் அதிகமாக இருந்தது. கிழிந்த பாயில் படுத்துக் கொண்டிருந்த மேர்லின் மீது தன்னுடைய போர்வையை எடுத்துப் போர்த்தினாள். அவளுக்குத் தூக்கம் வருவதாக இல்லை. பைபிளை எடுத்துப் புரட்டினாள். மத்தேயு 11 வசனம் 28 ல் ‘வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்’ என்கிற வசனத்தை வாசித்தவள் மெலிதாகப் புன்னகைத்துக் கொண்டாள். ரோமன் ஃபாதரேர் அவள் சேர்ச்சின் தாழ்வாரத்தில் இளைப்பாறுவதைக் கூட அனுமதிப்பதில்லை. அப்படியிருக்கையில் தேவாலயத்திற்குள் உள்ள தேவனால் இரட்சிக்கப்படுதல் நடைபெறாத காரியமாகவே இருந்தது. அவள் ஒரு விபச்சாரி என்பது அனைவருக்கும் பட்டும் படாமலும் தெரிந்திருக்க, அவள் தேவாலயத்திற்குள் வரக்கூடாதென்பதும் ஊரில் இருக்கும் வரைக்கும் கல்லறைத்தோட்டத்தில் ஊழியம் செய்ய வேண்டுமென்பதும் தேவாலய நிர்வாகத்தால் ஏற்படுத்தப்பட்டிருந்த சட்டமாயிருந்தது. இந்த நிலையில்தான் மர்யத்திற்கும் ஜேக்கப்பிற்குமான சந்திப்பு நிகழ்ந்தது. அந்தக் கடற்கரையோரக் கிராமத்திற்கு வருகை தந்திருந்த தொண்டு நிறுவனத்தின் ஊழியனாக அவன் இருந்தான். அவுஸ்திரேலியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஜேக்கப்; கிறிஸ்தவத் தொண்டு நிறுவனமொன்றின் கணக்காளராக இருந்தான். சுனாமியால் சிதிலமடைந்த தேவாலயத்தினைப் புனரமைப்புச் செய்து மீளவும் ரோமன் ஃபாதர் மூலம் கிறிஸ்தவச் சபைக்கு ஒப்புக் கொடுக்கும் பணி அவனுக்கு வழங்கப்பட்டிருந்தது. இதனால் எப்போதும் கடுகடுப்பாக இருக்கும் ஃபாதர் அவனிடம் மட்டுமே குழைந்து குழைந்து பேசுவார். அதிக வளர்த்தியுடன் இருந்தவன் நவீன முறையில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் தேவாலயத்தின் நில வரைபடமொன்றைத் தன்னோடு எப்போதும் வைத்திருந்தான். அதனுடன் தேவாலய ஊழியர்கள் தங்குவதற்கென ஒரு தங்குமிடமும், சமையலறையும் அதற்கான தாழ்வாரமும் கூடவே கட்டப்பட்டுக் கொண்டிருந்தது. வேலைத்தளத்தைப் பார்வையிடுவதுடன் அதற்கான பணத்தினை வங்கியிலிருந்து பெற்று வழங்குவதும் பின்னர் தினக் கணக்குகளைக் குறித்து வைத்து வாரம் ஒரு முறை குறித்த தொண்டு நிறுவனத்தின் மேலாளருக்குக் கணினி மூலம் அறிவிப்பதும் அவனது வேலையாக இருந்தது. அந்த ஊரில் இருந்த எல்லோரும் ஜேக்கப்பை வெள்ளைக்கார பொஸ் என்றே அழைத்தார்கள். மர்யமும் அவனை அப்படியே அழைத்தாள். ‘வெள்ளைக்கார பொஸ் தேத்தண்ணி குடிக்கிறீங்களா?’ கட்டிட வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தவன் மர்யத்தின் கேள்விகளால் உந்தப்பட்டு ‘என்ன?’ என்பது போல விழிகளை உயர்த்தினான். மர்யம் தனது கைகள் இரண்டையும் மேல் கீழாகத் தேத்தண்ணியை ஆற்றுவது போல் சைகை காட்டியபடி வெறும் குவளையொன்றை வாயருகே வைத்து ஊதி ஊதி தேநீரை அருந்துவது போல் பாவனை செய்தபடி தேநீர் வைத்திருக்கும் பிளாஸ்க்கைக் காட்டினாள். அவனும் மனதுவிட்டுச் சிரித்துக் கொண்டே ஆம் என்றபடி தலையாட்ட அவள் ஒரு குவளைத் தேநீரை அவனுக்கு வழங்கினாள். இஞ்சியின் ரசம் ஏறியிருந்த தேநீரைப் பருகியவன் சீனி அதிகம் என்றாலும் சுவையாக இருக்கிறது என்று ஆங்கிலத்தில் கூற எதுவும் அறியாதவளாக மர்யம் சிரித்தபடி முகத்தைத் துடைத்தவாறே விடைபெற்றாள். ஜேக்கப் இற்கான உணவைத் தயாரிக்கவென இருந்த தேவாலயச் சமையற்காறி ரோசம்மா, மேல் வருத்தங்கண்டு வரமுடியாமல் போகவே அந்த வேலைக்காக மர்யம் நியமிக்கப்பட்டாள். ஜேக்கப்பிடம் பணிவாக நடந்துகொள்ள வேண்டும், வேண்டிய வேலைகளைச் செய்து கொடுக்க வேண்டும். அடிக்கடி தொந்தரவு செய்யக்கூடாது, அவனது நீண்ட மேலங்கியை ஸ்திரி பண்ணிக்கொடுக்க வேண்டும், அதிகம் பேசக்கூடாது. வெள்ளைக்காரர்களுக்கு அதிகம் பேசும் கறுப்பர்களைப் பிடிப்பதில்லை. ஆகவே கவனமாக இருக்கவேண்டும் என்கிற ரோமன் ஃபாதரின் பல நிபந்தனைகளுடன், அவள் அவனது வசிப்பிடத்திற்குள் நுழைந்த போது, ஜேக்கப் தனது குளியலறையில் குளித்துக் கொண்டிருந்தான். விடுதியில் யாரும் இல்லாததால் அவனது குளியலறைக்கதவு தாழ்ப்பாள் இடாமலே இருந்தது. முழு நிர்வாணத்துடன் அவன் குளித்துக் கொண்டிருந்த கோலம் மர்யத்திற்கு விநோத அனுபவமொன்றை ஏற்படுத்தியது. மெல்லிய பாடலொன்றை உரத்துப்பாடிக் கொண்டிருந்தவன் தனது முகத்தில் விழும் நீரை கழுத்தளவு வளர்ந்த தலை மயிர்கள் மீது கைகளால் தடவிக்கொண்டே குளித்துக் கொண்டிருந்தான். பக்கவாட்டில் சிலுவையில் அறையப்படாத இயேசு நாதராக இருந்தவன் பாடலின் சந்தத்திற்குப் பொருத்தமில்லாத குரல்வளத்தோடு அலட்டிக் கொண்டிருந்தது, ரசிக்கும் படியாக இல்லாதது போல அவனுக்கு வேறு விதமான உடலமைப்பும் இருந்ததையும் மர்யம் கவனித்தாள். தொடைகளிலோ, மார்பிலோ மயிர்கள் இல்லாத வழவழப்பான தேகத்தை ஜேக்கப் கொண்டிருந்தான். மார்பு சற்று இறக்கமாயிருந்தது. பெண்களுக்கான மார்பின் அளவில் பாதிக்கும் குறைவான அளவு கீழ் நோக்கியதான மார்பகங்களும் வழக்கத்திற்கு மாறான இடுப்பும் அவனுக்கிருந்தது. ஆண்குறி மிகவும் சிறியதாக இருந்தது. அந்த ஊரில் இருக்கும் ஆண்கள் பலரிலும் சிறிதான ஆண்குறி அவனுடையதாக இருந்தது. அடர்ந்து திரண்ட மயிர்களில் கீழிருக்கும் அடர்த்தியான வீங்கியபடியிருக்கும் சகாயப்பனின் நீண்ட ஆண்குறி ஸ்கலிதம் அடைந்தபின் சுருங்கிவிடும் அளவிலும் சிறிதான அளவில் அது இருந்தது. கடல் நீரின் உப்புத்திரண்டிருக்கும் ஆண்குறிகள் பலவற்றை அவள் உள்ளெடுத்துக் காறி உமிழ்ந்த தருணங்களையெல்லாம் அவனது உறுப்பு அவளுக்கு ஞாபகப்படுத்தியது. தலையைத் திருப்பி அவளை ஒரு கணம் அவன் பார்த்தான். எந்த சலனமுமின்றி அவனது இடுப்பின் கீழ் ஆராய்ச்சி நடாத்திக் கொண்டிருந்த மர்யத்தை ஒரு நிமிடம் உற்றுப்பார்த்தவன் உஷ்…. என்று சத்தம் எழுப்ப சுய நினைவுக்கு வந்தவள் சற்று பார்வையை வேறுபக்கமாகத் திருப்பிக் கூரையை வெறித்தாள். ஈரமான தலையுடன் வெளியேறியவன் என்ன என்பது போல சைகை செய்ய பூனைக் கண்களுடன் இருந்த மர்யம் இன்னுமொரு பூனைக் கண்களுடன் இருந்தவனை உற்றுப்பார்த்தாள். சமையல் வேலைகளுக்காக வந்திருக்கிறேன் என்றவள் “கோக்கி” சமைக்க என்றாள். எனக்குத் தமிழ் தெரியும் என்றவனை ஆச்சரியம் மேலிடப் பார்த்தாள் மர்யம். அவனை நிர்வாணத்துடன் பார்த்தது குறித்து எதுவும் அலட்டிக்கொள்ளாதவன் உடைகளை மாற்றிவிட்டு மேசையின் மீதிருந்த மாம்பழத்துண்டுகளை உண்டுவிட்டு வெளியேறினான். விடுதி புழுதி படிந்து கிடந்தது. ஆங்காங்கே புத்தகங்கள் சிதறிக்கிடந்தன. மேசை மீதிருந்த சீனிப்பேணியைச் சுற்றி வட்டமிட்டு பின்னர் நேர்கோடாய் நகரும் எறும்புகள் சமையற்கட்டை நோக்கிப் பயணித்தன. கருகிய வாழைப்பழத்தோல்கள் நிலத்தில் கிடந்தன. ரோசம்மாள் வராததால் அவ்விடுதி சொற்பத்துக்குள்ளே ஜேக்கப்பால் குழப்பி வைக்கப்பட்டிருந்தது. எல்லாவற்றையும் தலைகீழாகப் புரட்டினாள் மர்யம். அறையைக் கூட்டித் துப்பரவு செய்தபின் பின் கிணற்று நீரை வாளியில் அள்ளி எடுத்துக்கொண்டு தரை முழுவதையும் கழுவிச்சுத்தம் செய்தாள். ஜேக்கப்பினுடைய உடைகளை முழுமைக்குமாகத் துவைத்துக் காயப் போட்ட பின்னர் சமையல் வேலைகளைச் செய்துவிட்டு வீட்டின் முற்றத்தில் வந்து அமர்ந்து கொண்டாள். தாமதமாக வருகை தந்த ஜேக்கப், தனது கையில் ஒரு டைரியையும், ஆங்கில நூலொன்றையும் வைத்திருந்தான். உடனே மேலங்கியை மாற்றிவிட்டு உணவு மேசையில் அமர்ந்தவனுக்கு உணவு பரிமாற எத்தனித்தாள் மர்யம். அவளை இடைமறித்தவன் நீயும் உட்காரு சாப்பிடலாம் என்றான். அவள் ஒருவித ஆச்சரியப் பார்வையை அவன் மீது செலுத்தினாள். அதை உணர்ந்து கொண்டவன். ஆங்கிலத்தில் சிற் என்றான். தனித்து விடப்பட்டிருந்த செம்மறியாடொன்றை இழுத்துக் கட்டியது போன்ற மனநிலையில் அவளிருந்தாள். அவனது தமிழ் உச்சரிப்புக்கள் வேறுவிதமாக இருந்ததையும் மர்யம் கவனிக்கத் தவறவில்லை. ‘நீ சில்வியா பிளாத் படித்திருக்கிறாயா?’ என்றான். ‘இல்லை’ என்றாள் மர்யம். சில்வியா பிளாத்தின் டியூலிப் கவிதையை விவரிக்கத் தொடங்கியவன் அவை ரோஜா மலர்களிலும் அழகானவை. குளிர்காலம் வரும் போது அவை இன்னும் அழகாக இருக்கும். எப்போதெல்லாம் எனக்கு மனம் உறுத்தலாக இருக்கிறதோ அப்போதெல்லாம் டியூலிப் மலர்களுள்ள தோட்டத்தில் கவிதைகளுடன் நான் அமர்ந்து விடுவேன். அந்தப் பொழுது மிகவும் ஆசுவாசமாக இருக்கும். இன்றைய உணவு ரொம்பச் சுவையாக இருந்தது என்றவன், சில இனிப்புக்களைக் கொடுத்துச் சென்று வா என்று அவளை வழியனுப்பி வைத்தான். 3 தேவாலயமும், விடுதியும் கட்டிமுடிக்கப்பட்டுக் கையளிக்கப்படவிருந்த நாட்களுக்கு முன்னராகவே ஜேக்கப்பிற்கும் மர்யத்திற்கும் இடையில் இனம்புரியாதவொரு அன்பும், உறவும் காணப்பட்டது. திராட்சை வைனையும், தென்னஞ்சாராயத்தையும் அருந்திக்கொண்டிருந்த மாலைப்பொழுதொன்றில் மேர்லினை நலம் விசாரித்தவன் தானும் அவளைப்போலவே வாழ ஆசைப்பட்டதைக் கூறினான். நிறைவெறியில் தலைமுத்திய தனது தந்தையைப் பற்றி ஏகத்திற்குத் திட்டித்தீர்த்தவன் தமிழும், ஆங்கிலமும் கலந்தபடி தனது கதையைக் கூறத் தொடங்கினான். ‘மர்யம் உன்னை நான் காதலிப்பதாக நீ நினைக்கிறாயா?’ என ஆரம்பித்தவன் அவளது பதிலைக் கேட்காமலே ‘இல்லை’ என்றான். அப்படியென்றால் உன்னுடன் செக்ஸ் வைக்க விரும்புகிறேனா என்று கேட்டவன் அதற்கும் அவளைப் பதில் கூற விடாமல் ‘நிச்சயமாக இல்லை… ஆம் நிச்சயமாக இல்லை’ என்று தலையை இருபக்கமாக ஆட்டியபடி பேசினான். சவுத் வேல்சில் தான் பிறந்தேன். சரியாகச் சொன்னால் அங்கே கடற்கரையோரமாகக் கழிமுகம் இருக்கும் யம்பா எனும் சிறுநகரம். அழகான நகரமது. எனது தந்தை அங்கிருந்த தபால் நிலையத்தில் கடைநிலை ஊழியராக இருந்தார். அங்கு வரும் பொதிகளைப் பக்கத்திலுள்ள இலூக்கா, பலினா, லிஸ்மோர் ஆகிய நகரங்களுக்கு விநியோகிப்பது அவரது வேலையாக இருந்தது. ஓரளவு திக்கிப் பேசும் அவரின் கோபத்தின் இரண்டாவது இலக்காக நான் இருந்தேன். ஆம்… முதல் இலக்காக எனது அம்மா இருந்தாள். எழுபதுகளின் பின்னர் அதிகமாகப் பயிரிடப்பட்ட கரும்புத் தோட்டமொன்றில் கரும்பு வெட்டும் வேலை அவளுடையது. தினமும் நீராவிப் படகொன்றில் பயணித்துக் கரும்புத் தோட்டத்திற்குச் சென்று விடுவாள். அங்கு நீள் வரிசையில் இருக்கும் கரும்புகளை வெட்டிய பின்னர், உருட்டிச் செல்லப்படும் சக்கர வண்டிகளில் ஏற்றிவிட்டு மீளவும் வெட்டச் சென்று விடுவாள். கரும்பு வெட்டு இல்லாத நாட்களில் தொழிற்சாலையில் இருக்கும் உபரி வேலைகளுக்காகவும் அவள் செல்வதுண்டு. பாடசாலை விடுமுறைவிடும் நாட்களில் நானும் அவளுடன் கரும்புத் தோட்டத்திற்குச் செல்வது வழக்கமாய் இருந்தது. அகலமான பாத்திகளின் இடையே நீள் வரிசையில் நடப்பட்டிருக்கும் கரும்புகள் உங்கள் ஊரிலுள்ள கிளிசரியாத் தடிகளைப் போன்று மொத்தமாகக் காணப்படும். அவற்றை அம்மா வெட்டித்தர, ஒவ்வொரு கரும்பாக நான் சக்கர வண்டியில் போடுவேன். அவள் என்னை வேலை செய்ய விடுவதேயில்லை. எனது உள்ளங்கை வியர்க்கும் போது அவற்றை தனது உள்ளங்கைகளால் அழுத்தித் துடைத்து விடுவாள். பின்னர் சிறுதானியங்களை அவித்த நீரை நானும் அவளும் பருகுவோம். அது ஒரு விலை குறைந்த சூப் போன்று இருக்கும். அங்கிருந்து பயணமாகி வீட்டிற்கு வரவும், அப்பா வரவும் சரியாக இருக்கும் என்று கூறிய ஜேக்கப் தலையின் மேல் சுழலும் மின்விசிறியை உற்று நோக்கினான். நான் ஒரு ஆண் போன்று இல்லாதது அவருக்குக் கோபத்தை ஏற்படுத்தியிருந்தது. எனது நடவடிக்கைகளில் ஒருவிதப் பெண் தன்மை இருந்தது. அதற்கான காரணம் எனக்குத் தெரியவில்லை. வைத்தியர்கள் அது ஹார்மோன் பிரச்சினையாக இருக்கலாம் என்றார்கள். நான் முழுமையாக ஆணாக இருக்கவில்லை என்பதை நானே உணர்ந்தேன். ஆனால், நான் ஒரு முழுமையான பெண்ணும் இல்லை என்பதையும் உணர்ந்தேன். என்னோடு படித்த பையன்களது பிறப்புறுப்பு போன்று என்னுடையது இருக்கவில்லை, உடலும் இருக்கவில்லை ஆனால் திருநங்கை எனும் அளவிற்கும் நான் இருக்கவில்லை இப்படியான ஒரு உடலியல் பிரச்சனை எனக்குள் இருக்கிறதை என்னுடைய பதின்ம வயதின் ஆரம்பத்திலேயே நான் அறிந்து கொண்டேன். எனக்கு ஆண்களின் மீது ஈர்ப்பு வரவில்லை, பெண்களின் மீது சுத்தமாக வரவேயில்லை. இந்தச் சமூகத்தைக் குறித்தான ஒருவித அச்சம் என்னிடம் இருந்து கொண்டேயிருந்தது. அதை விடவும் தனது பெல்ட்டினால் அடிக்கும் அப்பாவிடம் அதிக பயம் இருந்தது. ஆணின் நடத்தைகள் கைவரப்பெறாத என்னை அவர் திட்டியபடியே இருந்தார். இதற்காகவே நான் ஆண் போன்று நடிக்கப் பழகிக்கொண்டேன். அவ்வப்போது அந்த நடிப்பு தோற்றுப்போகும் வேளையிலெல்லாம் நான் மீண்டும் தாக்கப்பட்டேன். என்னால் அம்மாவும், அம்மாவின் கண்ணீரால் நானும் திரும்பத் திரும்ப உடலளவிலும் மனதளவிலும் தாக்கப்பட்டோம். நான் முழுமையற்ற ஆணாகவும், முழுமையற்ற ஆண் உறுப்புடனும் பிறந்தது குறித்து வெட்கப்பட்டேன். என்னுடைய உடல் சார்ந்து எனக்குக் கழிவிரக்கம் உண்டானது. அதை நான் வெறுத்தேன். அப்பாவையும் வெறுத்தேன். ஆண்களையும், ஆண்மையையும் வெறுக்கத்தொடங்கினேன். நான் நேசித்தது அம்மாவை மட்டும்தான் என்றான். அப்பாவின் அதிகாரத்தில் இருந்து தப்பிக்கவே நான் திருச்சபையின் விடுதியில் சேர்ந்தேன். அப்பாவிடம் இருந்து விடுதலை பெற்றதொரு உணர்வு இருந்தாலும் அம்மாவை இழந்தது குறித்து வருத்தமடைந்தேன். அங்கிருந்து பல நாடுகளுக்குச் சென்றேன். தனிமையில் வாழ்ந்தேன். இந்தியாவில் இரண்டு வருடத்திற்கும் மேலாக இருந்தேன். தமிழை நன்கு பேசவும், கொஞ்சம் வாசிக்கவும் கற்றுக் கொண்டேன். கச்சத்தீவு தேவாலயத்திற்குச் சென்றிருக்கிறேன். அங்கிருந்து இங்கு வந்தேன் என்றவன் தனது வைனின் இறுதிமிடறையும் பருகினான். யாரும் எனது தனிமைக்கு ஆறுதலாக இருக்கவில்லை என்று அவளது கைகளைப்பற்றி முத்தமிடவும், மர்யத்தின் கண்களில் இருந்து வடிந்த கண்ணீர்த்துளியொன்று ஜேக்கப்பின் கைகளை நனைக்கவும், ரோமன் ஃபாதர் அவ்விடுதிக்குள் நுழையவும் சரியாக இருந்தது. தேவாலயமும், விடுதியும் திறக்கப்பட நாட்குறிக்கப்பட்டவுடன் அவுஸ்திரேலியாவில் இருந்து குறித்த தொண்டு நிறுவனத்தின் மேலாளர்களும், பணியாளர்களும் வருகை தந்திருந்தனர். தேவாலயத்திற்கு வெள்ளை நிறமும், முன்னான மேல் தளத்திற்கு நீல வண்ணமும் பூசப்பட்டிருந்தது. ரோமன் ஃபாதரின் தலைமையில் ‘அர்ச்சிப்பு’ நிகழ்விற்கான ஏற்பாடுகள் தடல்புடலாக நடந்தபடியிருக்க, ஊர் மக்கள் தேவாலயத்தின் முன்றலில் திரண்டிருந்தனர். வர்ண விளக்குகளால் ஆலயம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. முன் மண்டபத்தில் கருணை பொங்கிய இயேசுவைத் தாங்கிய அன்னை மரியாள் திருவுருவச்சிலை நிறுவப்பட்டிருந்தது. மெழுகுவத்திகளுடன் ஊர்வலமாக மக்கள் திரண்டிருந்தனர். மேர்லினோ ஜேக்கப் வாங்கிக் கொடுத்திருந்த புதிய சட்டையை அணிந்திருந்தாள். மர்யம் வாசலில் நின்றபடி கருணை கூர்ந்த கடவுளைத் தொழுது கொண்டிருந்தாள். கொரிந்தியார் 13:7 இல் உள்ளபடி அன்பு சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும் என்ற வாசகம் பதிக்கப்பட்டிருந்த வளைவை நோக்கி வெளிப்பட்ட ஜேக்கப், வாசலில் நின்று கொண்டிருந்த மர்யத்தின் கைகளைப் பிடித்து ஆலயத்திற்குள் அழைத்துவர ரோமன் பாஃதர் உள்ளிட்ட ஊரவர்கள் எரிச்சலுடன் அவனைப் பார்த்தனர். சமையற்காரி ரோசம்மாளைத் தாண்டி உள்ள வந்தவன் யாருடைய பதிலையும் எதிர்பார்க்காமல் நடத்தையில் பிழைத்த அகோலா, அகோலிபாளைத் தண்டித்தது போல் கர்த்தராகிய இயேசு இவளைத் தண்டிப்பதாக இருந்தால் அவளை தேவாலயத்தில் ஊழியம் செய்யும் நிலைக்கு வழியேற்படுத்தியிருக்கமாட்டார். அவளைக் கல்லெறிந்து கொல்லுமளவிற்கு இங்கு தூய்மையான ஆண்கள் எவருமில்லை. அவளது குடும்பத்தாரைத் தொண்டு நிறுவனம் தத்தெடுக்கிறது. இந்த ஆலயத்திற்குப் பாத்தியப்பட்டவளாகச் சாகும் வரை அவள் ஊழியம் செய்யட்டும். அவளுக்கான மாதச் சம்பளத்தை எங்கள் தொண்டு நிறுவனம் பார்த்துக்கொள்ளும். சமையல்காரி ரோசம்மாளுக்கு உதவியாகவும், சபை ஊழியர்களுக்கு வேண்டியதைச் செய்து கொடுக்கவும் அவளுக்கு இந்தத் திருச்சபை ஒப்புதல் அளிக்க வேண்டும். ரோமன் ஃபாதர் இதனை வழிமொழிவார் எனக்கூறவே சபை ஒரு கணம் துணுக்குற்று நின்றது. பசப்பி, வெள்ளைக்காரனை மயங்கிப் போட்டாள் என்று சில குரல்கள் அலை மோதப் புதிய தேவாலயத்தின் சுவர்களில் அவை எதிரொலித்து அடங்கின. மர்யம் கண்ணீர் மல்க ஜேக்கப்பின் கால்களில் விழவும் எதுவும் செய்ய முடியாத ஃபாதர் தேவனின் ஆசி அதுவென்றால் அப்படியே ஆகட்டும் என்று கூறவும், மெழுகுவத்திகள் கரைந்தொழுகிப் பலரது விரல்களைச் சுட்ட போதே திருப்பலி ஆரம்பமானது. சில தினங்களுக்குப் பின்னர் ஜேக்கப் அவுஸ்திரேலியா திரும்பிச் செல்ல வேண்டிய சூழல் வந்தது. இறுதியாக அவன் மர்யத்தைச் சந்திக்க வந்த போது அவள் அழுது கொண்டிருந்தாள். அவளை ஆசுவாசப்படுத்தியவன் அவளது புகைப்படமொன்றை அவளுக்குப் பரிசளித்தான். நான் எனது அம்மாவுடன் உன்னைக் காண மீண்டும் வருவேன் என்று ஜேக்கப் உறுதியளித்துச் சென்ற மூன்றே மாதத்தில் கர்ப்ப வாந்தியெடுத்தாள் மர்யம். மர்யத்திற்குத் தலைசுற்றலுடன், காய்ச்சலும் ஆரம்பமானது. ஊர் முழுக்க வெள்ளைக்காரனுடன் படுத்தெழும்பி விட்டாள் வேசை என்கிற பிதற்றல் கதைகள் அதிகம் உலாவத் தொடங்கின. விடுதியின் அறையில் அவளை வைத்திருப்பது ரோமன் ஃபாதருக்கு எரிச்சலைக் கிளப்பியது. அவளது வயிறு வளருகையில் தேகம் மெலிந்து சூம்பிப்போனது போலானது. சமையல்காரி ரோசம்மாள் மட்டும் அவளுக்கு ஆதரவாக இருந்தாள். மெல்ல மெல்ல இருமத்தொடங்கியவள் அடிக்கடி மூச்சிரைப்பிற்கு உள்ளானாள். இரத்தம் கலந்த சளி அவளுடலில் இருந்து வெளியானது. அதைக்குறித்து அவள் சட்டை செய்யாதிருந்தாள். இரவு முழுக்கக் கண்களை மூடியபடி இருந்தாள் பின் தீராத இருமலால் அவதிப்பட்டாள். பைபிளை வாசித்தபடி உளமாற தனது கணவன் சகாயப்பனை நினைத்துக் கர்த்தராகிய இயேசு என்னும் ஆண்டவர் தனக்குப் பாவமன்னிப்பு அளிப்பார் என்று புலம்பினாள். இருமல் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தது. தேய்பிறை நாளொன்றில் சமையல்காரி ரோசம்மாள் உதவியுடன் குறைமாதக் குழந்தையாகக் குச்சானைப் பெற்றெடுத்தவள் காச நோயால் பீடிக்கப்பட்டதை அறியாமலே சிலநாட்களின் பின் இருமி இருமிச் செத்துப் போனாள். விடுதியில் இடம் கிடைத்தாலும், கல்லறைத் தோட்டத்தில் இடம் கிடைக்காததால் கடற்கரையோரத்திலே அவளது சடலம் புதைக்க அனுமதிக்கப்பட்டது. ரோமன் ஃபாதர் தள்ளி நிற்க ரோசம்மாளும் சில மீனவர்களும் சேர்ந்து சடலத்தைப் புதைக்க குச்சானைக் கைகளில் ஏந்தியபடி மேர்லின் அழுது கொண்டிருந்தாள். அதன் பிறகு மர்யத்தின் அத்தனை வேலைகளையும் சேர்ச்சின் விடுதியில் தங்கியிருந்த மேர்லின் செய்து கொண்டே தனது தம்பியையும் ரோசம்மாளின் உதவியுடன் வளர்த்து வர எள்ளும் கொள்ளும் வெடிக்கும் முகத்துடன் அவளை அடிமை போல நடாத்தத் தொடங்கினார் ரோமன் ஃபாதர். 4 வழக்கம் போல குச்சானும், நானும் தும்பி பிடிக்கக் கிளம்பிக்கொண்டிருந்தோம். உலங்கு வானூர்தி போல படபடவெனச் சிறகடித்துக்கொண்டு திமிருடன் அலைகிற தும்பி, சிறு செடிகளுக்குள் புகுந்து புகுந்து பின்னர் ஏதாவது ஒரு செடியிலுள்ள இலையின் நுனியில் அமர்ந்திருந்து, தனது உடைந்த கண்ணாடிச்சில்லுகளை ஒட்ட வைத்திருப்பது போலிருக்கும் கண்களைச் சுழற்றி அங்குமிங்கும் இரைகௌவிகளை நோட்டமிட்டபடியிருக்கும். அப்போதுதான் குச்சான் தன்னுடைய வேலையைத் தொடங்குவான். அடிக்கடி வியர்த்துக் கொண்டிருக்கும் தனது உள்ளங்கையைச் சட்டையில் தடவியபடி முடிதும்பைச்செடிகளைக் கற்றையாகப் பிடித்து எடுத்துக் கொள்வான். முடிதும்மையின் பூக்கள் வெள்ளை நிறத்தில் கொள்ளை அழகுடையதாயிருக்தும் அவை மேர்லினைப் போல, எனது அம்மாவைப் போல, எனது அம்மாவைப்போலவே அந்தத் துண்டுப்பத்திரிகையில் இருக்கும் நடிகையைப் போல மென்மையானதும் அழகானதுமாகும் என்பான். மேர்லினுக்கு முடிதும்பைப்பூக்களை ரொம்பப் பிடிக்கும் அதை அவள் வட்டமிட்டுச் சேர்த்து இடியப்பம் போல செய்வதுண்டு. அதற்காகவென முடிதும்பைப்பூக்களைப் பத்திரப்படுத்திவிட்டு இலைகளுடன் கூடிய செடிகளை எடுத்து வைத்திருப்பான். பூனைக்கண்களையுடை குச்சான் மெல்ல மெல்ல பூனை போல நடக்கத் தொடங்குவான். தும்பியின் வால் நீட்டப்பட்டிருக்கும் திசையில் பணிந்து செல்வான். முடிதும்பைக்கற்றையைக் கண நேரத்தில் அதன் மீது போடுவான். ‘ஒரே அமுக்கு…. மாட்டிவிட்டது… மாட்டிவிட்டது…’ என்று கத்துவான். பின்னர் ஒவ்வொரு முடிதும்பைச்செடிகளாக விலக்க அது செடிகளுக்கிடையே உள்ள இடைவெளியினூடாகப் பறந்துவிடும். அன்றும் அப்படித்தான் பல பிரயத்தனங்களுக்குப்பிறகு தும்பியொன்றைப் பிடித்தவன். சொப்பின் பேக்குகள் நிறைய முடிதும்பைப்பூக்களை எடுத்துக் கொண்டு பெருங்கடலின் அலைவாக்கரையோரமாக ஓட்டமெடுத்தான். கத்திக்கூச்சலிட்டபடி வெறி கொண்டு ஓடினான். மேர்லின்… மேர்லின்… இன்று நான் பச்சைத்தும்பியொன்றைப் பிடித்துவிட்டேன் என்றபடி ஓடினான். அவன் கூடவே நானும் பற்களும் ஈறுகளும் தெரியும் படிச் சிரித்துக் கொண்டே ஓடினேன். வழக்கத்திற்கு மாறாக, தேவாலயத்தின் முன்பு மக்கள் திரண்டிருந்தனர். விடுதியின் தாழ்வாரத்தில் மேர்லின் குத்துக்காலிட்டிருந்தாள். அவளது தலைமுடி நறுக்கப்பட்டிருந்தது. ரோசம்மாள் செருப்பை எடுத்து ஆங்… ஆங்… என்றபடி ரோமன் ஃபாதரை மூச்சிரைக்க அடித்துக் கொண்டிருந்தாள். அவள் நிறைவெறியில் மூர்க்கத்துடன் இருக்கும் புருஷனொருவன் பொண்டாட்டியைப் போட்டு அடிப்பது போல அடித்துக்கொண்டிருந்தாள். அப்பாவிப் பெண்ணை நாசம் செய்துவிட்டாயே பாவி என்று கத்தினாள். இறைவனுக்குச் சாட்சியாய்த் தொண்டு செய்ய வந்தவன் செய்கிற காரியமா எனப் பெண்களில் சிலர் குமுறினர். அங்கிருந்தவர்கள் அடித்த அடியில் ஃபாதரின் நீண்ட வெள்ளை அங்கி கிழிந்திருந்தது. கிழிந்த சட்டையில் தாடை உடைந்ததால் கசிந்திருந்த இரத்தத் துளிகள் அப்பியிருந்தது. அவர் முட்டுக்காலில் இருத்தப்பட்டிருந்தார். டேவிட்டின் கல்லறை மீதிருந்த குச்சானை விடவும் பரிதாபமான நிலையில் அவர் இருந்தார். செருப்பை வைத்திருந்த ரோசம்மாள் அவரது முகத்தில் காறி உமிழ்ந்தாள். என்னை…. மன்னித்…. என்று ஏதோ சொல்லத் தொடங்க ஃபாதரின் முகத்தில் மீண்டும் ஒரு அடி விழ, அவர் நிலை தடுமாறி தரையோடு தரையாகச் சாய்ந்தார். அவரது ஆடை கிழிக்கப்பட முழு நிர்வாணமாக நின்றவர், தனது இரு உள்ளங்கைகளாலும் அழுக்கேறிய தனது பிறப்புறுப்பை மறைத்தபடி அழுதடங்கினார். பொலிசார் சற்று நேரத்திலே அங்கு வருகை தந்தனர். மேர்லினை ஆம்பியூலன்ஸில் ஏற்றியவர்கள் ஃபாதரை தூக்கி நிறுத்தினர். உச்சக்கட்ட வலியில் தள்ளாடிக் கொண்டிருந்த அவரை பொலீஸ் ஜீப்பை நோக்கி அழைத்துச் சென்றனர். அப்போதுதான் நான் அதனைக் கண்டேன். தனது பிருஷ்டங்களை மறைக்க முடியாமல் எதிர்த்திசையில் தலைகுனிந்தபடி நடந்து கொண்டிருந்த ஃபாதரின் சூத்தாமட்டியின் மீது ஏறியிருக்கும் தசைத்துண்டத்தில் அதிகளவு மயிர்களுடன் ஒரு மாங்காய் மச்சம் இருந்தது, குச்சானுக்கு இருப்பதைப் போலவே! illustration by Sam Weber பாக்கியராசா மிதுர்ஷன் எனும் இயற்பெயரையுடைய நீலாவணை இந்திரா என்பவர், இலங்கையைச் சேர்ந்தவர். கொழும்பு பல்கலைக்கழகத்தில் மூலக்கூற்று உயிரியல் பிரிவில் அணுத்தொழில்நுட்பத்தில் இளமாணிப் பட்டத்தை நிறைவு செய்துவிட்டு தற்போது அதே பல்கலைக்கழகத்தில் மூலக்கூற்று உயிரியல் மற்றும் உயிர்த் தொழிநுட்பப் பாடப்பரப்பில் தனது முதுமாணிப் பட்டத்திற்கான கற்கைநெறியினை மேற்கொள்கிறார். இவரது கக்கூஸ் வாளி எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு தடைப்பட்டு தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வெளியிட்ட இவரது இரண்டு கவிதைகள் கிழக்கின் கவிக்கோர்வையிலும், றெதிநெந்தா என்று பேசப்பட்ட சிறுகதையொன்று கிழக்கின் நூறு சிறுகதைகளில் நூறாவதாகவும் வந்துள்ளது. கிழக்குப் பண்பாட்டலுவல்கள் நூலின் அடிப்படையில் இவரே மிகவும் இளம்வயதுடைய கிழக்கு மாகாண சிறுகதை எழுத்தாளர் ஆவார். மேலும் விவாதங்களிலும், மேடைப்பேச்சுக்களிலும் செயற்பட்டு வருகிறார். https://thadari.com/penises-are-dirty-nilavanai-intira/
-
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை கொலை செய்ய முயற்சித்த நபருக்கு ஆயுள் தண்டனை ; நீதிமன்றம் தீர்ப்பு!
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை கொலை செய்ய முயற்சித்த நபருக்கு ஆயுள் தண்டனை ; நீதிமன்றம் தீர்ப்பு! 05 Feb, 2026 | 08:56 AM அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை கொலை செய்ய முயன்ற வழக்கில், குற்றவாளியான ரியான் ரூத்திற்கு ஆயுள் தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், புளோரிடாவில் உள்ள டிரம்பிற்கு சொந்தமான கோல்ஃப் மைதானத்தில் அவர் விளையாடிக் கொண்டிருந்த போது, புதர்களுக்கு இடையே துப்பாக்கியுடன் பதுங்கியிருந்த 60 வயதுடைய ரியான் ரூத் பாதுகாப்பு அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டார். உடனடியாக அவர் கைது செய்யப்பட்டு அவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை புளோரிடா நீதிமன்றத்தில் நீதிபதி ஐலீன் கேனன் முன்னிலையில் நடைபெற்றது. ரியான் ரூத் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து, வழக்கறிஞர் இல்லாமல் தனக்காகத் தானே வாதிட்டார். கடந்த செப்டம்பர் மாதம் நடந்த விசாரணையில் அவர் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டபோது, நீதிமன்றத்திலேயே பேனாவால் தனது கழுத்தைக் குத்திக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட கடிதத்தில், "இது ட்ரம்பை கொலை செய்ய நடந்த முயற்சி, ஆனால் நான் தோற்றுவிட்டேன்" என அவர் குறிப்பிட்டிருந்தது முக்கிய ஆதாரமாக அமைந்தது. புதன்கிழமை (04) நடைபெற்ற இறுதித் தீர்ப்பின் போது, நீதிபதி ஐலீன் கேனன், "உங்களது இந்த சதித் திட்டம் மிகவும் திட்டமிடப்பட்ட மற்றும் கொடூரமானது. ஒரு மனித உயிரைப் பறிக்க முயன்ற உங்களது செயல் ஜனநாயகத்திற்கு எதிரானது. நீங்கள் அமைதியானவரோ அல்லது நல்லவரோ அல்ல." எனத் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, ரியான் ரூத்திற்கு ஆயுள் தண்டனை மற்றும் துப்பாக்கி வைத்திருந்த குற்றத்திற்காகக் கூடுதலாக 07 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஆயுள் தண்டனை என்பதால் அவர் தனது வாழ்நாள் முழுவதும் சிறையிலேயே கழிக்க வேண்டியிருக்கும். இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக ரியான் ரூத்தின் புதிய வழக்கறிஞர் மார்ட்டின் ரோத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பென்சில்வேனியாவின் பட்லரில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதைத் தொடர்ந்து, இரண்டாவது கொலை முயற்சி இது என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/237849