Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஞ்சித்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ரஞ்சித்

  1. மரியோபுல் பகுதியில் ரஸ்ஸிய ராணுவத்தால் கொல்லப்பட்ட உக்ரேனியப் பொதுமக்களின் எண்ணிக்கை 21,000 இனைத் தாண்டியிருப்பதாக அந்நகர மேயர் கூறுகிறார். தொலைக்காட்சியூடாக செய்தியாளர்களுக்குப் பேசிய மரியோபுல் நகர மேயர், மரியோபுல் பகுதியினுள் ரஸ்ஸிய ஆக்கிரமிப்பாளர்கள் புகுந்ததிலிருந்து இதுவரையில் குறைந்தது 21,000 பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அதிகளவில் அப்பாவி உக்ரேனியர்களை ரஸ்ஸியர்கள் இவ்விதம் கொன்றுவருவது இனவழிப்பாகக் கருதப்படக்கூடியது என்றும் அவர் மேலும் கூறினார். அல் ஜசீரா தொலைக்காட்சியூடாக பேசிய பொய்ச்செங்கோ, "வீதிகளில் கொல்லப்பட்டு வீசப்பட்ட எமது மக்களை ரஸ்ஸிய ராணுவத்தினர் தற்போது அவசர அவசரமாக அப்புறப்படுத்தி வருகின்றனர். இவ்வாறு சேகரிக்கப்படும் எமது மக்களின் உடல்களை அவர்கள் ரகசியமாக எரித்துவருவதன் மூலம் இனவழிப்பிற்கான சாட்சியங்களை அழித்துவருகிறார்கள். மரியோபுல் மீது தாம் நடத்திவரும் இனவழிப்பினை, போர்க்குற்றங்களை ரஸ்ஸியர்கள் மறைத்துவருகிறார்கள்" என்று அவர் கூறினார். இவ்வாறே, இப்பிராந்தியத்தின் பாதுகாப்பிற்குப் பொறுப்பான பவ்லோ கிரிலெங்கோ, சீ என் என் செய்திச் சேவையுடன் பேசுகையில், "மரியோபுல் பகுதியில் கொல்லப்பட்ட அப்பாவி உக்ரேனியர்களின் எண்ணிக்கை 21,000 என்பது சரியான கணிப்புத்தான்" என்று உறுதிப்படுத்தினார். "மரியோபுல்லில் இன்று நிலவும் நிலைமை மிகவும் கவலைக்குரியது. எம்மக்களில் எத்தனைபேர் இதுவரையில் கொல்லப்பட்டார்கள் என்பதனை துல்லியமாக எம்மால் கூறமுடியாது. தொடர்ச்சியான ஆக்கிரமிப்பிற்குள்ளும், முற்றான முற்றுகைக்குள்ளும் அகப்பட்டிருக்கும் எமது மக்களின் அவலம் வெளியே தெரியாதது. ஆனால், அங்கிருந்து வெளியேறியவர்கள், ரஸ்ஸியர்களால் பலவந்தமாக இழுத்துச் செல்லப்பட்டவர்கள் ஆகியவர்களின் எண்ணிக்கையுடன் எமது மக்கள் தொகையினை ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது சுமார் 20,000 இற்கும் 22,000 இற்கும் இடையிலான மக்கள் ரஸ்ஸிய ராணுவத்தால் கொல்லப்பட்டிருக்கலாம் என்பதை அறிந்துகொண்டோம்" என்று அவர் மேலும் கூறினார். ஆனால், ஐ நா மனிதவுரிமைகள் அமைப்பு மரியோப்புல்லில் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை வெறும் 2,000 மட்டுமே என்று கூறுகிறது. உண்மையான இழப்புக்கள் குறித்த தகவல்கள் தமக்குக் கிடைக்கும்வரை தம்மால் உக்ரேன் அரசு கூறும் எண்ணிக்கையினை உறுதிப்படுத்த முடியாது என்று கூறும் ஐ நா, உண்மையில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை தமது கணிப்பீட்டினைக் காட்டிலும் மிக அதிகமாக இருக்கும் என்பதனையும் மறுப்பதற்கில்லை என்றும் கூறியிருக்கிறது. இது, முள்ளீவாய்க்கால் யுத்தத்தில் அன்றைய ஐ நா அதிகாரிகளான ஜோன் ஹோம்ஸும், விஜய் நம்பியாரும் கொல்லப்பட்ட தமிழர்களின் உண்மையான எண்ணிக்கையினை வேண்டுமென்றே குறைத்து மதிப்பிட்டதுடன், சிங்கள அரசாங்கம் வெளியிட்ட பொதுமக்கள் இறப்புக்கள் எனும் எண்ணிக்கையினையே தமது உத்தியோகபூர்வ எண்ணிக்கையாக இவர்கள் இருவரும் அறிவித்ததுடன், ஐ நா மனிதவுரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளையினை உண்மையான பொதுமக்கள் இறப்புக் குறித்து அடக்கி வாசிக்கும்படி அழுத்தம் கொடுத்தார்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது. கிரிலெங்கோ பொதுமக்கள் படுகொலைகள் குறித்துப் பேசும்போது, "ரஸ்ஸிய ராணுவம் இரசாயனத் தாக்குதல்களில் ஈடுபட்டுவருகிறது என்பது எமக்குத் தெரியும். எமது மக்களில் பலர் மூச்சுத்திணறலுக்கு உள்ளாகி இறந்திருக்கிறார்கள்" என்று கூறினார். இந்தத் தாக்குதல் குறித்து பென்டகன் விசாரித்துவருவதாகக் கூறியிருக்கிறது. "கடந்த இரவு ரஸ்ஸிய ஆளில்லா விமானம் ஒன்றிலிருந்து இதுவரை நாம் அறிந்திராத வெடிகுண்டுகள் நகர் மீது ஏவப்பட்டன. இத்தாக்குதல் நடைபெற்ற பகுதியில் இருந்த பொதுமக்கள் பலர் உடனடியாகவே மூச்சுத்திணறலுக்கு உள்ளாகினர். இது நிச்சயமாக இரசாயன ஆயுதமாக இருக்கும் என்றே நாம் நம்புகிறோம்" என்றும் அவர் கூறினார்.
  2. ரஸ்ஸிய சர்வாதிகாரி புட்டின் தனது ஆதரவாளர்களிடையே பேசும்போது தனது ராணுவத்தை மரியோபுல் இரும்புத் தொழிற்சாலைமீது தாக்குதலை மேற்கொள்ளவேண்டாம் என்று கட்டளையிட்டுள்ளதாக கூறினார். தனது பாதுகாப்பு அமைச்சர் சேர்கி ஷொகு தமது ராணுவம் இன்னும் ஆயிரக்கணக்கான உக்ரேனிய ராணுவத்தினருடம் சண்டையிட்டு வருவதாக அறிவித்த சில மணிநேரத்தின்பின்னரே சர்வாதிகாரி புட்டினின் மேற்படி அறிக்கை வெளிவந்திருந்தது. "இரும்புத் தொலிற்சாலையினுள் உள்நுழைவது சாத்தியமற்றது. பல சுரங்கப் பாதைகளையும், நிலக்கீழ் வலையமைப்பையும் கொண்ட அத்தொழிற்சாலையினுள்நுழைந்து போராடுவதைக் காட்டிலும், அப்பகுதியைச் சுற்றி முற்றான முற்றுகையினைக் கொண்டுவருவதன் மூலம், இன்னமும் உள்ளிருந்து போராடும் உக்ரேனியர்களை அடிபணியவைக்க முடியும்" என்று புட்டின் கூறினார். மேற்குலக ராஜதந்திரிகளின் கணிப்பின்படி தொழிற்சாலையினைச் சூழ்ந்து சுமார் 5000 முதல் 10,000 வரையான ராணுவத்திணரை ரஸ்ஸியா நிறுத்தியிருப்பதாக நம்புகிறார்கள். உள்ளிருந்து எதிர்த்துச் சண்டையிடும் உக்ரேனியர்களின் எண்ணிக்கை ரஸ்ஸிய ஆக்கிரமிப்பாளர்களின் எண்ணிக்கையின் மூன்றில் ஒரு பங்கே இருப்பதனால், மேலதிக ஆக்கிரமிப்புப் படைகளை ரஸ்ஸியா டொன்பாஸ் பகுதியில் தம்மை எதிர்த்துச் சண்டையிடும் உக்ரேனிய வீரர்களுக்கெதிரான சண்டையில் பாவிக்க சர்வாதிகாரி புட்டின் முயலக்கூடும் என்று அவர்கள் எதிர்பார்க்கின்றனர். டொன்பாஸ் பகுதியில் ரஸ்ஸிய ஆக்கிரமிப்பாளர்கள் ஆரம்பித்திருக்கும் புதிய நில ஆக்கிரமிப்பு குறைந்தது ஒருவருடமாவது செல்லும் என்று நம்பப்படுகிறது. மரியோபுல் பகுதியை தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவிட்டதாக சர்வாதிகாரி புட்டினும் அவரது ஆதரவாளர்களும் கூற ஆரம்பித்திருப்பதை எள்ளிநகையாடியிருக்கும் உக்ரேனிய அதிபர், "அவர்களால் அசோவ்டல் பகுதியை ஒருபோதுமே முழுவதுமாகக் கைப்பற்ற முடியாது. அது அவர்களுக்கு நன்றாகவே புரிந்திருக்கிறது. நாம் அவர்களுக்கு மிகக் கடுமையான இழப்புக்களை அங்கே ஏற்படுத்தியிருக்கிறோம்" என்று கூறுகிறார். மரியோபுல் நகர மேயர் மேலும் கூறுகையில், "குறைந்தது ஒரு லட்சம் உக்ரேனியர்களை ரஸ்ஸிய ராணுவம் தனது ஆக்கிரமிப்பில் வைத்திருக்கிறது. மேலும் 40,000 உக்ரேனியர்களை அவர்களது விருப்பத்திற்கு மாறாக ரஸ்ஸியாவினுள் இழுத்துச் சென்றிருக்கிறது. இன்னும் ஒரு லட்சம் பேர் ரஸ்ஸிய முற்றுகைள்ளிருந்து தப்பித்து வெளியேறி இருக்கின்றனர். இன்னும் பல்லாயிரக்கணக்கானோர் ரஸ்ஸிய "புலநாய்வு" முகாம்களில் அடைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டு வருகிறார்கள்" என்று கூறுகிறார். முள்ளிவாய்க்கால் இனக்கொலை முடிந்த நாட்களில் சிங்கள ராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்டு பிடிக்கப்பட்ட 280,000 பொதுமக்கள் முட்கம்பி வேலிகளுக்குள் அடைத்து புலிகளைத் தேடுகிறோம் என்கிற பெயரில் பல ஆண்களையும் பெண்களையும் இழுத்துச் சென்று கொன்றும், பாலியல் வன்புணர்விற்குப் பின்னர் படுகொலை செய்தும் தமது வக்கிரத்தைக் காட்டிய சிங்கள மிருகங்களுக்கு நிகரான அட்டூழியங்களை சர்வாதிகாரி புட்டினின் ஆக்கிரமிப்பு ராணுவம் மரியோபுல் மக்கள் மீது நடத்தி வருகிறது என்பது தெளிவாகிறது.
  3. மரியோபுல் மீதான அழித்தொழிப்பின்போது படுகொலைசெய்யப்பட்ட ஆயிரக்கணக்கான அப்பாவிகளை பாரிய புதைகுழிகளில் போட்டு மூடிமறைத்து வருகிறது சர்வாதிகாரி புட்டினின் ஆக்கிரமிப்பு ராணுவம் செய்மதிகளூடாக எடுக்கப்பட்ட பல புகைப்படங்கள் மரியோபுல் பகுதிகளில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான அப்பாவிகளை ரஸ்ஸிய ராணுவம் பாரிய குழிகளில் புதைத்துவருவது தெரிந்திருக்கிறது. முள்ளிவாய்க்கால் இனவழிப்பின்போது யுத்த சூனிய வலயத்தில் அகப்பட்ட குறைந்தது மூன்று லட்சம் மக்களை கொன்றொழித்துவந்த சிங்கள ராணுவம் பலரை அவர்கள் பதுங்கியிருந்த பதுங்கு குழிகளுக்குள்ளும், இன்னும் பலரை பாரிய புதைகுழிகளிலும் மூடி தனது போர்க்குற்றங்களுக்கான சாட்சியங்களை இறுதிநாட்களில் அழித்துவந்தது. அதற்கு நிகரான சாட்சிய அழித்தல்களையே ரஸ்ஸியா தற்போது மரியோபுல்லில் செய்துவருகிறது. மரியோபுல்லின் தெருக்களில் கொல்லப்பட்டு வீசப்பட்டிருந்த அப்பாவி உக்ரேனியர்களின் உடல்களை ரஸ்ஸிய ராணுவத்தின் பாரவூர்திகள் சேகரிக்கத் தொடங்கியிருக்கின்றன. இவ்வாறு சேகரிக்கப்படும் உக்ரேனியர்களின் உடல்கள் மன்ஹுஷ் எனும் பகுதியில் அமைந்திருக்கும் பழைய சேமக்காலைக்கு அருகில் ரஸ்ஸியாவினால் தோண்டப்பட்டு வரும் பாரிய மனிதப் புதைகுழிகளில் கொட்டப்பட்டு மூடப்படுவதாக மரியோபுல்லின் நகர மேயர் வாடிம் போய்செங்கோ கூறுகிறார். "ஆக்கிரமிப்பாளர்கள் தமது போர்க்குற்றங்களை மறைப்பதில் இப்போது ஈடுபட்டிருக்கிறார்கள். பழைய சேமக்காலைக்கும் எரிபொருள் களஞ்சியசாலைக்கும் இடையே அமைந்திருக்கும் நிலத்தில் 30 மீட்டட் நீளத்தில் பல குழிகளை தோண்டிவரும் ரஸ்ஸிய ராணூவம் அவற்றில் எமது மக்களைப் புதைக்கத் தொடங்கியிருக்கிறது" என்று கூறுகிறார். கடந்த வியாழன் அன்று இப்பகுதியை தனது செய்மதிகள் மூலம் படம்பிடித்த அமெரிக்க நிறுவனமான மக்ஸார் டெக்னோலொஜி, அப்பகுதியில் பாரிய மனிதப் புதைகுழிகள் இருப்பதை உறுதிப்படுத்தியிருக்கிறது. இரு வாரங்களுக்கு முன்னர்வரையில் வெற்று நிலமாக இருந்த இப்பகுதியில் தற்போது ரஸ்ஸியா குறைந்தச்து 200 புதைகுழிகளை தோண்டியிருப்பதை செய்மதிகள் தெளிவாகப் படம்பிடித்திருக்கின்றன. மன்ஹுஷ் பகுதியில் எடுக்கப்பட்ட, இருவாரங்களுக்கு முன்னரான செய்மதிப்படங்களை தற்போது எடுக்கப்பட்டிருக்கும் செய்மதிப் படங்களோடு ஒப்பிடுகையில் இந்த பதுங்குழிகள் அண்மையில் ரஸ்ஸியாவினால் அமைக்கப்பட்டவை என்பது தெளிவாகிறது. இப்பகுதியில் ரஸ்ஸிய ஆக்கிரமிப்புப் படை இனக்கொலையினை ஆரம்பித்த நாளிலிருந்து இதுவரையில் குறைந்தது 20,000 மக்கள் கொல்லப்பட்டிருப்பதை தம்மால் உறுதிப்படுத்த முடியும் என்று மேயர் கூறுகிறார். கொல்லப்பட்ட பலரின் உடல்கள் தற்போது அவசர அவசரமாக ரஸ்ஸியர்களீனால் அகற்றப்பட்டு வருவதுடன், பலர் நடமாடும் தகன வாகனங்களில் ஏற்றப்பட்டு உடனுக்குடன் எரிக்கப்படுவதாகவும் அவர் கூறுகிறார். "மரியோபுல் பகுதியை தாம் உக்ரேனிலின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்திருக்கிறோம்" எனும் சர்வாதிகாரியும், போர்க்குற்றவாளியுமான புட்டினின் பிதற்றலைக் கடுமையாகச் சாடும் மேயர், "நாம் எமது பிரதேசத்திலிருந்து முற்றாக விலகவில்லை. எமது வீரர்கள் இன்னும் அப்பகுதியில் இருக்கும் இரும்புத் தொழிற்சாலையில் இருந்து போராடி வருகிறார்கள், அவர்களுடன் இன்னும் 1000 பொதுமக்களாவது அங்கே தஞ்சம் அடைந்திருக்கிறார்கள் " என்று அவர் கூறுகிறார். "உண்மையாகவே அங்கு முற்றுகைக்குள் அகப்பட்டிருக்கும் அப்பாவிகளின் எண்ணிக்கை எமக்குத் தெரியாது. அவர்களை எம்மால் இதுவரையில் மீட்க முடியவில்லை. ஒரு நாள் யுத்த நிறுத்தம் ஏற்பட்டால்க் கூட நாம் அவர்களை வெளியே பாதுகாப்பாக அழைத்துவரமுடியும். மிகவும் கடுமையான சூழ்நிலையிலும், பலத்த காயங்களுடனும், உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் ஏதுமின்றி அவதிப்படும் எம்மக்கள் மீது புட்டினின் படைகள் கொடுமையான தாக்குதல்களைக் கட்டவிழ்த்து விட்டிருக்கின்றன" என்றும் அவர் கூறினார்.
  4. மரியோபுல் வைத்தியசாலை மீதான விமானத் தாக்குதல் பங்குனி 9 ஆம் திகதியன்று மரியோபுல் மருத்துவமனை மீது ரஸ்ஸியா விமானத் தாக்குதலை மேற்கொண்டது. தெளிவாக அடையாளப்படுத்தப்பட்டு, தொடர்ச்சியாக இயங்கிவந்த இந்த பிரதான வைத்தியசாலையினையே ரஸ்ஸிய விமானப்படை இலக்குவைத்துத் தாக்கியது. தாக்குதலின்போது வைத்தியசாலை முற்றாகச் சேதமாக்கப்பட்டதுடன் பலர் காயங்களுக்கு உள்ளானார்கள். ஒரு கர்ப்பிணிப் பெண்ணும் அவளது பிறவாத சிசிவும் இத்தாக்குதலில் கொல்லப்பட்டனர். ரஸ்ஸியாவினால் வேண்டுமென்றே நடத்தப்பட்ட வைத்தியசாலை மீதான தாக்குதல் போர்க்குற்றமாகவும், இனவழிப்பின் கூறுகளைக் கொண்டிருப்பதாகவும் கணிக்கப்படுகிறது. மரியோபுல்லின் மக்கள் குடியிருப்புப் பகுதிமீது நடந்த கடுமையான பல்குழல் எறிகணைத் தாக்குதல் பங்குனி 2 ஆம் திகதி, 15 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக மரியோபுல்லின் மக்கள் செறிந்துவாழும் குடியிருப்புக்களை நோக்கி ரஸ்ஸிய ராணுவம் மிகக் கடுமையான பல்குழல் எறிகணை வீச்சினை நடத்தியது. நகர்ப்பகுதியின் இடதுபக்கம் இத்தாக்குதல்களினால் முற்றாக சிதைத்தழிக்கப்பட்டது. மேலும் பூரண முற்றுகைக்குள்ளாக்கப்பட்டிருக்கும் மரியோபுல் வெளித்தொடர்புகள் அனைத்துமிலிருந்து முற்றாகத் துண்டிக்கப்பட்டிருப்பதுடன், நகருக்கான நீர் விநியோகம், மின்சாரம், உணவு வழங்கல்கள், எரிவாயு என்பனவும் ரஸ்ஸிய ஆக்கிரமிப்பாளர்களால் முற்றாகத் தடுக்கப்பட்டுள்ளன. போதிய நீர்வசதியின்றி 6 வயதுச் சிறுமி உட்பட இன்னும் சிலர் நோய்வாய்ப்பட்டு இறந்திருக்கின்றனர். செய்மதியூடாகப் பெறப்பட்ட ஒளிப்படங்களின்படி மரியோபுல் நகருக்கு ஏற்பட்டிருக்கும் அழிவின் அளவு வெளித்தெரிய ஆரம்பித்திருக்கிறது. பங்குனி 9 ஆம் திகதி எடுக்கப்பட்ட இந்தச் செய்மதிப் புகைப்படங்களில் மக்கள் குடியிருப்புக்களாக இருந்த பல்லடுக்குத் தொடர்மாடிகள், கடைத்தொகுதிகள், வங்கிகள், மக்கள் கூடும் முற்றங்கள் என்பன மிகக் கடுமையான சேதத்தினைச் சந்தித்திருக்கின்றன என்பது தெரியவந்திருக்கிறது. மரியோபுல் நகர நிர்வாகத்தினர் இந்தத் தாக்குதல் பற்றிக் கூறும்போது நகரின் 90 வீதமான கட்டிடங்கள் இலக்குவைக்கப்பட்டுத் தாக்கப்பட்டிருப்பதாகவும், இவற்றுள் 30 - 40 வீதமான கட்டிடங்கள் பாவிக்கமுடியாதளவிற்கு முற்றாக அழிக்கப்பட்டுவிட்டதாகவும் கூறுகின்றனர். "நகரின் எந்தப் பக்கம் திரும்பினாலும் கண்ணுக்குத் தெரிவது எரியுண்டு கோதுகளாகத் தெரியும் மக்களின் குடியிருப்புக் கட்டிடங்கள் மட்டும் தான்" என்று தாக்குதலின் பின்னர் அங்கு சென்ற ரொயிட்டர்ஸ் செய்தியாளர் கூறுகிறார். பங்குனி 16 அன்று பி பி ஸி வெளியிட்ட செய்தியில் இந்நகர் மீதான ரஸ்ஸியாவின் தொடர்ச்சியான செல்த்தாக்குதல்களால் மரியோபுல் நகரும், சுற்றியுள்ள பகுதிகளும் முற்றாகப் பாழடைந்த நிலம் போலக் காட்சியளிக்கிறது என்று கூறியது. ட்ரோன்கள் மூலம் எடுக்கப்பட்ட ஒளிப்படங்களூடாக மரியோபுல் மீது நடத்தப்பட்ட அகோரம் தெரிவதாகவும், பல கட்டிடங்களிலிருந்து தீயும், கரிய புகை மண்டலமும் இன்னும் வெளிவந்துகொண்டிருப்பதாகவும் அது கூறியது. கட்டிட இடிபாடுகளால் நிரப்பட்ட தெருக்கள், அடையாளம் தெரியாது உருக்குக்லைந்து போன வாகனங்கள், பிரதேசத்திலிருந்து மேலெழும் புகை மண்டலம்..இவை எல்லாமே மரியோபுல் நகரைச் சுடுகாடு போல ஆக்கிவிட்டிருந்தது என்று அது மேலும் கூறியது. யுத்தங்களின்பொழுது மக்களின் அவலங்களை அவதானித்து ஆவணப்படுத்தும் ஐ.எஸ். டபிள்யூ அமைப்பு இத்தாக்குதல் பற்றிக் கூறுகையில், "மரியோபுல் நகரத்தின் அடையாளமே தெரியவில்லை. அங்கே எந்தவி மக்கள் குடியிருப்பும் எழுந்து நிற்கவில்லை, எல்லாமே முற்றாக அழிக்கப்பட்டு மண்ணோடு மண்ணாகக் கிடக்கின்றன. பொதுமக்களை இலக்குவைத்து ரஸ்ஸியா நடத்தும் இந்தத் தாக்குதல் முற்றான போர்க்குற்றம் அன்றி வேறில்லை" என்று கூறுகிறது.
  5. ரஸ்ஸிய ராணுவத்தின் கண்மூடித்தனமான தாக்குதலில் பாதிக்கப்பட்ட இடங்கள் சிலவற்றின் விபரங்கள் டொனெட்ஸ்க் ஒப்லாஸ்ட் மாசி 24 ஆம் திகதி, ரஸ்ஸிய ராணுவமும், ரஸ்ஸிய ஆதரவுபெற்ற கிளர்ச்சிக்காரர்களும் முற்றுகைக்குள்ளாக்கப்பட்ட துறைமுக நகரான மரியோபுல் மீது மிகக் கடுமையான ஏவுகணை மற்றும் பல்குழல் எறிகணை வீச்சினை மேற்கொண்டிருந்தனர். இப்பகுதியில் முற்றுகைக்குள்ளாக்கப்பட்டுள்ள மக்களுக்கான உணவு மற்றும் மருத்துவ வசதிகளை ரஸ்ஸியா முற்றாகத் தடுத்துவிட்டு நடத்திய இத்தாக்குதலில் பெருமளவு பொதுமக்கள் பலியானார்கள். வன்னிக் கொலைக் களத்தில் எமது உறவுகளுக்கான உணவையும் மருந்தையும் முற்றாகத் தடுத்து நிறுத்தி அவர்கள் மீது இலங்கை ராணுவம் மேற்கொண்ட அழித்தொழிப்புத் தாக்குதலுக்கு நிகரானது இத்தாக்குதல். மரியோபுல் முற்றுகைக்குள் நாளாந்தம் பலியிடப்படும் பொதுமக்களின் அவலங்கள் தொடர்பாக பிரிதொரு இணைப்பில் மேலும் பேசலாம். மரியோபுல் நாடக அரங்கு மீதான ரஸ்ஸியாவின் ஏவுகணைத் தாக்குதல் பங்குனி 16 அன்று, டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் அமைந்திருந்த நாடக அரங்கு மீது ரஸ்ஸிய ராணுவம் கடுமையான குண்டுவீச்சுத் தாக்குதலினை மேற்கொண்டது. மரியோபுல் பகுதியில் இருந்த இந்த நாடக அரங்கினை வான்குண்டுவீச்சில் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் ஒரு காவல்க் கட்டிடமாக மரியோபுல் நகர நிர்வாகம் பாவித்து வந்தது. மரியோபுல் மீதான் முற்றுகை ஆரம்பித்த நாட்களிலிருந்து சுமார் 1200 பொதுமக்கள் இந்த அரங்கினுள் தஞ்சம் அடைந்திருந்தனர். ரஸ்ஸியாவின் தாக்குதலில் இந்த நாடக அரங்கு ஏறக்குறைய முழுவதுமாக அழிக்கப்பட்டது. போரிலிருந்து தம்மைக் காத்துக்கொள்ளவென்று மக்கள் தஞ்சமடையும் இடங்களை இலக்குவைத்துத் தாக்குவது போர்க்குற்றங்களுக்குள் அடங்குகிறது என்பது குறிப்பிடத் தக்கது. தாக்குதல் நடந்த சில நாட்களின் பின்னர் கருத்துத் தெரிவித்த மீட்புப் பணியாளர்கள், கட்டிட இடிபாடுகளுக்கிடையேயும், இன்னமும் எரிந்துகொண்டிருக்கும் கட்டிடப் பகுதிக்குள்ளும் பெருமளவு பொதுமக்கள் அகப்பட்டிருப்பதாகவும், கொல்லப்பட்ட மக்களின் முற்றான எண்ணிக்கை தெரிய சில வாரங்களாவது ஆகும் என்று கூறினர். அத்துடன், இப்பகுதிமீது ரஸ்ஸியா தொடர்ச்சியாக நடத்திவரும் மூர்க்கத்தனமான எறிகணைத் தாக்குதல்களால் இடிபாடுகளிடையே அகப்பட்டிருப்போரை உயிருடன் மீட்பதற்கான சாத்தியங்கள் குறைந்துவருவதாகவும் அவர்கள் கூறினர். இந்த நாடக அரங்கு உக்ரேன் நாட்டு மக்களின் கலாசாரத் தொன்மை வாய்ந்த கட்டிடமாகக் கருதப்பட்டு வந்தது. அதனாலேயே இக்கட்டிடத்தைக் குறிவைத்து ரஸ்ஸியா தாக்கியதாக நம்பப்படுகிறது. பங்குனி 14 அன்று இக்கடிடத்தை படமெடுத்த செய்மதிகள் இக்கட்டிடத்தின் இரு புறங்களில் "சிறுவர்கள்" என்று ரஸ்ஸிய மொழியில் தெளிவாக அடையாளப்படுத்தப்பட்டிருந்தன. குண்டுவீச்சிலிருந்து சிறுவர்களையும் பொதுமக்களையும் காத்துநிற்கும் இக்கட்டிடத்தினை ரஸ்ஸிய ராணுவம் தாக்குதலில் இருந்து தவிர்ப்பதற்காகவே இவ்வாறு செய்யப்பட்டிருந்தது. மரியோபுல் பகுதியில் இருந்த மிகப்பெரிய குண்டுவீச்சு காப்புக் கட்டிடமான இந்த அரங்கினை ரஸ்ஸியா திட்டமிட்டே தாக்கி அழித்திருக்கிறது. பின்னர் கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி சிறுவர்கள் உட்பட குறைந்தது 300 பொதுமக்கள் வரை கொல்லப்பட்டிருப்பதை மரியோபுல் நகர நிர்வாகம் தெரிவித்திருந்தது. ஆனால், தனது தாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டது வெளித்தெரிய ஆரம்பித்ததையடுத்து, இவ்வரங்கம் உக்ரேனிய சிறப்புப் படையணியான அசோவ் பட்டாலியனின் தளமாகப் பாவிக்கப்பட்டதாக ரஸ்ஸியா அப்பட்டமாகப் பொய்யுரைத்தது. ஆனால், தாக்குதல் நடந்த சில மணிநேரத்தில் அங்கு சென்ற சர்வதேச ஊடகவியலாளர்கள் ரஸ்ஸியாவின் குற்றச்சாட்டினை முற்றாக மறுத்ததோடு, அப்பகுதியில் உக்ரேனிய ராணுவத்தினரின் பிரசன்னமோ அல்லது ராணுவ வாகனங்களின் பிரசன்னமோ இருக்கவில்லையென்பதை உறுதிப்படுத்தியிருந்தார்கள். வன்னிக்கொலைக்களத்தில் செஞ்சோலைச் சிறார்களின் இல்லத்தைக் குண்டுவீசி அழித்து 58 சிறுமிகளைக் கொன்றுவிட்டு புலிகளின் பாசறையென்று கதிர்காமரும் சிங்களமும் நியாயப்படுத்தியது நினைவிற்கு வருகிறது.
  6. வைத்தியசாலைகள் மற்றும் மருத்துவ நிலையங்கள் மீதான ரஸ்ஸியாவின் திட்டமிட்ட தாக்குதல்கள் உக்ரேனில் செயற்பட்டுவரும் ஐ நா மனிதவுரிமைகள் கண்காணிப்பகம் பங்குனி 26 ஆன்று வெளியிட்ட அறிக்கையில் குறைந்தது 74 வைத்தியசாலைகள், மருத்துவ நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதை உறுதிசெய்திருக்கிறது. இவற்றுள் 61 வைத்தியசாலைகள் உக்ரேன் அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் ரஸ்ஸிய வான்படை மற்றும் ஏவுகணைகளைக்கொண்டு தாக்கப்பட்டிருக்கின்றன. இத்தாக்குதல்களில் பலத்த சேதமடைந்த வைத்தியசாலைகளில் இஸியம், மரியோபுல், ஒவ்ருச், வொல்னொவாகா, வூலெடார் ஆகிய வைத்தியசாலைகளைக் குறிப்பிட முடியும். அதேபோன்று ரஸ்ஸிய ராணுவத்தின் துணையுடன் போராடும் கிளர்ச்சிக் காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ள 9 வைத்தியசாலைகளும் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கின்றன. மேலும் 4 வைத்தியசாலைகள் உக்ரேனிய அரசின் கட்டுப்பாடின் கீழ் அல்லாமலும், ரஸ்ஸிய ராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் அல்லாமலும் இருக்கும் பகுதிகளில் தாக்கப்பட்டிருக்கின்றன. இன்றுவரைக்கும், குறைந்தது 6 சிசுப் பராமரிப்பு நிலையங்களும், மகப்பேற்று மருத்துவமனைகளும், 10 சிறுவர் வைத்தியசாலைகளும் ரஸ்ஸிய ராணுவத்தால் முற்றாகவோ அல்லது பகுதியாகவோ அழிக்கப்பட்டிருக்கின்றன. மாசி 24 ஆம் திகதியன்று, வுலெடார் வைத்தியசாலை மீது ரஸ்ஸியா கொத்தணிக் குண்டுகளை ஏவித் தாக்கியதில் குறைந்தது 4 பொதுமக்கள் கொல்லப்பட்டதோடு இன்னும் 10 பேர் காயங்களுக்கு உள்ளானார்கள். இத்தாக்குதலில் வைத்தியசாலையின் ஒரு பகுதி அழிக்கப்பட்டதோடு, வெளியே நின்றிருந்த பல நோயாளர் காவுவண்டிகளும் தீக்கிரையாக்கப்பட்டன. பங்குனி 8 ஆம் திகதி அன்று இஸியம் பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டிருந்த மத்திய மருத்துவமனை மீது ரஸ்ஸியா தாக்குதல் நடத்தி முற்றாக அழித்திருந்தது. மேலும் பங்குனி 11 அன்று இதே பகுதியில் அமைந்திருந்த மனநலம் குன்றியோரைப் பராமரிக்கும் மருத்துவமனைமீது ரஸ்ஸியா நடத்திய தாக்குதலில் இந்த மருத்துவமனையும் கடுமையான சேதங்களுக்கு உள்ளானது. இவ்வாறே பங்குனி 9 ஆம் திகதி, தெளிவாக அடையாளமிடப்பட்டிருந்த மரியோபுல் மருத்துவமனையினை ரஸ்ஸியா இலக்குவைத்துத் தாக்கியது. இத்தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் ஒருவரும் அவரது பிறவாத சிசுவும் கொல்லப்பட்டதுடன், இன்னும் 17 பேர் படுகாயங்களுக்கு உள்ளானார்கள். புதுக்குடியிருப்பு, புதுமாத்தளன் மருத்துவமனைகள் தெளிவாக அடையாளம் காணப்பட்டபோதும், செஞ்சிலுவைச் சங்கத்தின் தகவல்களைப் பாவித்து இலங்கை ராணுவம் இவ்வைத்தியசாலைகள் மீது நடத்திய தாக்குதல்களுக்கு நிகரானது ரஸ்ஸியாவின் இத்தாக்குதல்கள். பங்குனி 30 ஆம் திகது உலக சுகாதார ஸ்த்தாபனம் வெளியிட்ட அறிக்கையில்,"மாசி 24 முதல் ரஸ்ஸியா நடத்திவரும் தாக்குதல்களில் குறைந்தது 82 வைத்தியசாலைகள், மகப்பேற்று மருத்துவமனைகள், சிறுவர் மருத்துவமனைகள், மனநிலை குன்றியோர் கண்காணிப்பகங்கள் உட்பட பல மருத்துவ நிலைகள் தாக்கப்பட்டுள்ளதுடன், நோயாளர்களும், வைத்திய உதவியாளர்களும் இத்தாக்குதல்களின்போது கொல்லப்பட்டிருக்கின்றனர்" என்று உறுதிப்படுத்தியிருக்கிறது. மேலும் வைத்தியசாலைகளில் கொல்லப்பட்ட மக்கள் மற்றும் வைத்திய சேவையாளர்களீன் எண்ணிக்கை தமக்குக் கிடைத்த ஊர்ஜிதப்படுத்தப்பட்ட தகவல்களின்படி 72 என்று கூறும் சுகாதார ஸ்த்தாபனம், உண்மையில் இத்தாக்குதலின் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை இதனைக் காட்டிலும் அதிகமாக இருக்கலாம் என்றும் கூறுகிறது. இதே காலப்பகுதியில் வைத்தியசாலைத் தாக்குதல்களில் காயப்பட்டவர்களின் எண்ணிக்கை 43 என்றும் அது கூறுகிறது. இறுதியாக இத்தாக்குதல்களின் எண்ணிக்கையினை மதிப்பிட்டிருக்கும் உலக சுகாதார ஸ்த்தாபனம், இன்றுவரை 91 வைத்தியசாலைகளை ரஸ்ஸிய ராணுவம் முற்றாகவோ அல்லது பகுதியாகவோ அழித்திருப்பதை உறுதிப்படுத்தியிருக்கிறது. ஒரு நாட்டின் வைத்தியசாலைகள் போரின்போது தவிர்க்கப்படவேண்டிய பகுதிகள் என்று இருக்க, அவற்றின்மீதான ரஸ்ஸியாவின் வேண்டுமென்று திட்டமிட்ட ரீதியில் நடத்தப்படும் தாக்குதல்கள் , இலங்கையின் முள்ளிவாய்க்கால் இனவழிப்பில் சிங்கள ராணுவம் மேற்கொண்ட தாக்குதல்களுக்கு நிகரானவை. இவை போர்க்குற்றங்களாகக் கணிக்கப்படக் கூடியவை.
  7. உக்ரேனின் கலாசாரத் தொன்மை வாய்ந்த கட்டிடங்கள் மீது வேண்டுமென்றே தாக்குதலினை நடத்தியமை உக்ரேனின் மக்கள் அடர்த்தியாக வாழும் பகுதிகள் மீது மக்களின் பாதுகாப்புக் குறித்து சட்டை செய்யாது ரஸ்ஸிய நடத்திவரும் சகட்டுமேனித் தாக்குதல்களினால் உக்ரேனின் பல கலாசாரத் தொன்மை வாய்ந்த கட்டிடங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. இவற்றுள், புராதன நினைவாலயங்கள், கலையம்சம் பொருந்திய சிற்பங்கள், புராதன தேவாலயங்கள் மற்றும் உக்ரேன் மக்களின் கலாசாரத்தினை, வரலாற்றினை எடுத்தியம்பும் பல கட்டிடங்கள் அடங்குகின்றன. தமிழர் தாயகத்தின் பல கலாசாரத் தொன்மை வாய்ந்த கட்டிடங்களையும் அடையாளங்களையும் சிங்கள அரசு இலக்குவைத்து அழித்தமைக்கு ஒப்பானது ரஸ்ஸியாவின் இந்த திட்டமிட்ட கலாசார அழிப்பு. ரஸ்ஸியாவினால் உக்ரேனில் அழிக்கப்பட்ட கலாசாரத் தொன்மை வாய்ந்த கட்டிடங்களில் மரியோபுல்லில் அமைந்திருக்கும் குயின்ட்ஸி கலை நூதனசாலை, சேர்னிவ் பகுதியில் அமைந்திருந்த சோவியத் ஒன்றிய காலத்து திரையரங்கு மற்றும் புராதன சிற்பக்கலைகளுடன் வடிவமைக்கப்பட்டிருந்த நூலகம், தலைநகர் கியிவில் அமைந்திருந்த நாஜிகளால் கொல்லப்பட்ட உக்ரேனியர்களின் நினைவாலயம், சைடொமிர் பிராந்தியத்தில் அமைந்திருந்த மரத்தால் முழுதுமாக நிர்மாணிக்கப்பட்டிருந்த 19 ஆம் நூற்றாண்டு தேவாலயம், இவன்கிவ் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சரித்திர தொன்மைவாய்ந்ததும், உக்ரேனிய மக்களின் தனித்துவமான கலாசாரத் தொன்மையினைக் கொண்டிருந்ததுமான நூதணசாலை ஆகியவை குறிப்பிடத் தக்கவை. உக்ரேனில் ரஸ்ஸியா நடத்திவரும் திட்டமிட்ட கலாசார அழிப்புப் பற்றி அறிக்கை ஒன்றினை பங்குனி 1 இல் வெளியிட்டிருக்கும் யுனெஸ்கோ அமைப்பு, ஆக்கிரமிப்பு ஆரம்பித்த முதல் இரு வாரங்களுக்குள் உக்ரேனின் கலாசாரத் தொன்ப்மையினையும், தனித்துவத்தையும் எடுத்தியம்பிய 98 சரித்திர கட்டிடங்கள், புராதன தேவாலயங்கள், நூதணசாலைகள் ஆகியவை முற்றாக அழிக்கப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தியிருக்கிறது. ஒரு இனத்தின் கலாசாரப் பாரம்பரியம் மிக்க சொத்துக்களுக்கான பாதுகாப்பென்பது சர்வதேசச் சட்டங்களில் முக்கியமானதென்பதுடன், இவற்றின் மீதான தாக்குதல்கள் மனிதாபிமானத்திற்கெதிரான தாக்குதல்களாகக் கணிக்கப்படுகின்றன. ஜெனீவா சாசனத்தின்படி கலாசாரத் தொன்மை மிக்க கட்டிடங்கள் சொத்துக்கள் போரின்போது இரு தரப்பாலும் பாதுக்காக்கப்படவேண்டும் என்கிற நியதி இருப்பதுடன், இவற்றின் மீதான தாக்குதல்கள் அவ்வினத்தின் மீதான தாக்குதல்களாகக் கணிக்கப்படக் கூடியவை என்று சொல்கின்றது. ஒரு இனத்தின் கலாசாரத்தினை, வரலாற்றினை, அவர்களின் கலை பண்பாட்டு விழுமியங்களை பறைசாற்றுகின்ற கட்டிட அமைப்புக்கள், சொத்துக்கள் மீதான தாக்குதல்கள் இனவழிப்பாகக் கருத்தப்படுவதுடன், இதற்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாதிக்கப்படும் தரப்பு வழக்குத் தொடர்வதற்கான சாத்தியங்களும் இருக்கின்றது. தமிழர் தாயகத்தில் இருந்த பல நூற்றுக்கணக்கான புராதன கோயில்களும், சின்னங்களும் சிங்கள ஆக்கிரமிப்பில் வேண்டுமென்றே இலக்குவைக்கப்பட்டு அழிக்கப்பட்டிருக்கின்றன. முள்ளிவாய்க்கால் யுத்தத்தின்போது எமது கலாசாரச் சின்னங்கள் ராணுவத்தால் திட்டமிட்டு அழிக்கப்பட்டதுடன், ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் சிங்கள பெளத்தம் முளைக்கத் தொடங்கியிருக்கிறது. ஆகவே ஈழத்தமிழினம் சந்தித்த கலாசார இனவழிப்பை உக்ரேனும் தற்போது சந்தித்து வருகிறது. எமது முள்ளிவாய்க்காலினை ஒத்த, உக்ரேனில் ரஸ்ஸியா நடத்தும் போர்க்குற்றங்களும் இனவழிப்பும் பற்றிய விபரங்கள் தொடரும்.........
  8. அணுமின் நிலையங்களை இலக்குவைத்து தாக்குதல் நடத்தியமை பங்குனி 3 ஆம் திகதி, ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான சப்போரிச்சியா மின் நிலையம் அமைந்திருக்கும் பகுதியை நோக்கி இரண்டு ரஸ்ஸியத் தாங்கிகளும், 10 கனரக ரஸ்ஸிய வாகனங்களும் முன்னேறிவந்தன. நிலையத்திற்கு வெளியே காவலில் ஈடுபட்டிருந்த உக்ரேனிய ராணூவத்திற்கும் ஆக்கிரமிப்பாளர்களுக்குமிடையே துப்பாக்கிச் சமர் ஆரம்பித்தது. இச்சமரின்போது, அணுமின் நிலையத்தைக் குறிவைத்து ரஸ்ஸியப் படை தாக்கத் தொடங்கியது. இத்தாக்குதலில் கனரக துப்பாக்கிகள், மோட்டார்கள், ராக்கெட் உந்துகணைகளைச் செலுத்தி ரஸ்ஸிய ராணுவம் தாக்குதல் நடத்தியது. ரஸ்ஸிய ராணுவத்தின் தாக்குதல்களின் விளைவாக அணுமின் நிலையத்தைன் உட்பகுதியில் தீப்பிடித்துக்கொண்டதுடன், ஏனைய காடிடங்களுக்கும் கடுமையான சேதம் ஏற்பட்டது. அங்கு ஏற்பட்ட தீ பின்னர் கட்டுக்குள் கொன்டுவரப்பட்டபோதும் கூட, அந்நிலையம் கடுமையான சேதத்தினைச் சந்தித்தது. தமது அணுமின் நிலையத்தின் மீது தாக்குதல் ஒன்றினை நடத்தி, பாரிய அழிவு ஒன்றினை ஏற்படுத்தவே ரஸ்ஸியா முயன்றதாக உக்ரேன் அரசு அறிவித்திருந்தது. இத்தாக்குதலின்போது ரஸ்ஸியாவினால் ஏவப்பட்ட எறிகணைகள் நிலையத்தின் பயிற்சிப் பட்டறைகள் மீது வீழ்ந்து வெடித்தபோதே தீப்பற்றிக்கொண்டதாக நிலைய அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். ஆனால், தம்மீது அணுமின் நிலையத்திலிருந்து தாக்குதல் நடத்தியதாலேயே தாம் திருப்பித் தாக்கியதாகவும், அணுமின் நிலையத்தை உக்ரேனியர்களே தீவைத்துக் கொழுத்தியதாகவும் ரஸ்ஸியா மறுத்திருந்தது. இந்த தாக்குதல் சம்பவத்தைப் பார்க்கும்போது முள்ளிவாய்க்கால் யுத்த சூனிய வலயத்திற்குள் கனரக ஆயுதங்களை நகர்த்திய புலிகள் அங்கிருந்து தம்மீது தாக்கியதாலேயே தாம் திருப்பித் தாக்கியதாகவும், மக்களை புலிகளே கொன்றதாகவும் இலங்கை அரசு கூறியது நினைவிற்கு வருகிறது. ஜெனீவா சாசனத்தின்படி மக்களின்பாவனைக்கென்று இயங்கும் அணுசக்தி மின்நிலையங்கள் மீது தாக்குதல் நடத்துவது தவறானது என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும் கூட, ரஸ்ஸியா இதனை உதாசீனம் செய்தே இந்த மின் நிலையம் மீது தாக்குதலினை மேற்கொண்டிருக்கிறது.
  9. தனது ஆக்கிரமிப்பு யுத்த முற்றுகைக்குள்ளாக்கப்பட்டிருக்கும் மக்களை வெளியேற்றக்கூடிய மனிதாபிமான பாதைகளைவேண்டுமென்றே தடுத்து மூடிய ரஸ்ஸியா மரியோபுல் மீதான முற்றுகையின்பொழுது, உள்ளே அகப்பட்டிருக்கும் மக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு பல சர்வதேச அமைப்புக்களும் நாடுகளும் முயன்றன. இவ்வாறான முயற்சிகளின் விளைவாக ரஸ்ஸியா தன்னால் முற்றுகைக்குள்ளாக்கப்பட்டிருக்கும் பகுதியிலிருந்து மக்கள் சிலரை வெளியேற்ற இணக்கியபோதும், அவ்வாறு திறக்கப்பட்ட பாதுகாப்பான வழிகள் மீது கடுமையான எறிகணை வீச்சினை நடத்தி மக்கள் வெளியேறுவதைத் தடுத்து நிறுத்தியதுடன் அவ்வாறு தப்பிச் செல்ல முற்பட்ட மக்களையும் கொன்றுதள்ளியது. பங்குனி 5 ஆம் நாளன்று, ஐந்து மணித்தியால யுத்த நிறுத்தம் ஒன்றிற்கு ரஸ்ஸியா இணங்கியபோதும்கூட, மக்கள் பாதுகாப்பாக வெளியேற முற்பட்ட வேளையில் யுத்த நிறுத்தத்தையும் மீறி மக்கள் செல்லும் பாதை நெடுகிலும் மிகக் கடுமையான செல்த் தாக்குதலை நடத்தியது. இதனால் இந்த முயற்சியையும் யுத்த நிறுத்த கால எல்லைக்குள்ளேயே கைவிடவேண்டியதாகியது. மறுநாள் சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைமையில் மீண்டும் மக்களை வெளியேற்ற எடுத்த முயற்சியையும் ரஸ்ஸியாவின் கடுமையான தாக்குதல்கள் முறியடித்திருந்தன. மேலும், பங்குனி 7 ஆம் திகதி சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம் ரஸ்ஸியாவினால் பாதுகாப்பானது என்று அறிவிக்கப்பட்ட மக்கள் வெளியேற்றப்பாதையினைப் பரிசோதித்தபோது, அப்பாதை முழுதும் ரஸ்ஸிய ராணுவம் கண்ணிவெடிகளைப் புதைத்துச் சென்றிருந்ததைச் சாட்சியப்படுத்தியிருக்கிறது. சிலவேளை ரஸ்ஸியா மக்களை மீட்கவே மனிதாபிமான மீட்பு நடவடிக்கையினை நடத்துகிறது (இலங்கை அரசும் அவ்வாறுதான் தமிழர்களை புலிகளிடமிருந்து மீட்க யுத்தம் செய்வதாக அறிவித்திருந்தது) என்று நம்பும் சிலருக்கு ரஸ்ஸியாவின் இந்த செயல் முள்ளிவாய்க்காலில் தானே அறிவித்த யுத்த சூனிய வலயங்கள் மீது சிங்கள ராணுவம் நடத்திய தாக்குதல்கள் நடக்கவில்லையோ என்கிற சந்தேகத்தினை ஏற்படுத்தலாம். கருணா துரோகம் செய்யவில்லையென்று தற்போது நம்பத் தொடங்கியிருக்கும் இவர்களுக்கு இலங்கையின் முள்ளிவாய்க்கால் கொலைகளும், ரஸ்ஸியாவின் மரியோபுல் கொலைகளும் நியாயப்படுத்தப்படக்கூடியவைதான் என்று தோன்றினாலும் ஆச்சரியப்படுதற்கில்லை.
  10. சிலரின் சில்லறைத்தனங்களைப் பார்க்கும்போது சிரிப்பதைத்தவிர வேறு எதையும் செய்யத் தோன்றுவதில்லை. இன்று உக்ரேனில் நடப்பது 2009 இல் முள்ளிவாய்க்காலில் எமக்கு நடத்தப்பட்டதுதான் என்பதே இத்திரியின் தலைப்பு. ஆனால், எனக்குச் சேறுபூசி, “துரோகியாக்கும்” ஆசையில் திரியின் தலைப்புக் கூட சிலருக்கு மறந்து போயிற்று. ரஸ்ஸியாவின் போர்க்குற்றங்கள் பற்றி மேலும் தொடர்வதற்கு இன்னும் இன்னும் அதிகமான ஊக்கத்தை இக்கருத்துக்கள் தருகின்றன என்பதுமட்டும் நூறுவீதம் உண்மை.
  11. உக்ரேனிய பொதுமக்கள் மீது ரஸ்ஸியா நடத்திவரும் பரவலான கொத்தணிக் குண்டுத்தாக்குதல்கள் உக்ரேன் மீதான தனது ஆக்கிரமிப்பு ஆரம்பித்த நாளிலிருந்து ரஸ்ஸிய ராணுவம் பல நாடுகளில் தடைசெய்யப்பட்ட கொத்தணிக் குண்டுகளை பாரிய அளவில் பொதுமக்கள் மீது பாவித்து வருகிறது. இத்தாக்குதல்களில் உடனடியாகவே பலநூற்றுக்கணக்கான பொதுமக்கள் பலியாகிவருவதுடன், உடனேயே வெடிக்காத பலகொத்தணிக் குண்டுகளால் நீண்டகாலப்போக்கில் பாரிய ஆபத்தினையும் பொதுமக்கள் எதிர்கொள்ளவேண்டி ஏற்பட்டிருக்கிறது. ரஸ்ஸியாவோ, உக்ரேனோ 2008 இன் கொத்தணிக்குண்டுகளைத் தடைசெய்யும் ஆவணத்தில் கையொப்பம் இடாது இருப்பினும் கூட, சர்வதேச மனிதநேயச் சட்டங்களின்படி பொதுமக்கள் செறிவாக வாழும் பகுதிகள் மீது கொத்தணிக் குண்டுகளை இலக்கற்று, எழுந்தமானமாகப் பாவிப்பது தடைசெய்யப்பட்டே இருக்கிறது. மாசி 24 ஆம் திகதி காலை 10:30 மணிக்கு வொலெடார் பகுதியில் அமைந்திருக்கும் வைத்தியசாலைப் பகுதிமீது ரஸ்ஸியா 9 - எம் - 79 ரக ஏவுகணைத் தாக்குதலை நடத்தியபோது உடனடியாகவே நான்கு பொதுமக்கள் கொல்லப்பட்டதாக சர்வதேச மன்னிப்புச்சபை கூறுகிறது. "சர்வதேச மனிதநேயச் சட்டங்களையும், சர்வதேச மனிதவுரிமைச் சட்டங்களையும் அப்பட்டமாக மீறும் ரஸ்ஸியாவின் போர்வெறிக்கு இது மறுக்கமுடியாத சாட்சியாகும்" என்று மன்னிப்புச்சபை மேலும் கூறுகிறது. இத்தாக்குதல் பற்றி மனிதவுரிமைக் கண்காணிப்பகம் கூறுகையில், "இத்தாக்குதலில் ரஸ்ஸியா 9 - என் - 123 ரக ஏவுகணையொன்றைப் பாவித்திருக்கிறது. இதில் ஐம்பது 9 - என் - 24 ரக துணைக் குண்டுகள் உள்ளன. இவை ஒவ்வொன்றிலும் தனித்தனியாக 316 வெடிகுண்டுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன" என்று விபரமளித்திருக்கிறது. வைத்தியசாலையில் பணிபுரிந்த உத்தியோகத்தர்கள், ஒளிப்படங்கள், மீதமாக வீழ்ந்துகிடந்த வெடிக்காத குண்டுகள், வெற்றுக் கூடுகள் என்பவற்றை வைத்தே மன்னிப்புச்சபை இக்குண்டுகள் பற்றிய விபரங்களை ஆராய்ந்து வெளியிட்டிருக்கிறது. சர்வதேச மன்னிப்புச்சபை ரஸ்ஸியாவிடம் முன்வைத்த கோரிக்கையில், "சர்வதேசச் சட்டத்திற்குப் புறம்பாக, பொதுமக்களை சகட்டுமேனிக்குக் கொன்றும், காயப்படுத்தியும் வரும் கொத்தணிக்குண்டுத்தாக்குதல்களை உடனேயே நிறுத்துங்கள்" என்று கேட்டிருக்கிறது. ஆனால், இந்தவேண்டுகோளினை உதாசீனம் செய்த ரஸ்ஸிய அரச பேச்சாளர் டிமிட்டிரி பெச்கோவ், "இந்தவகையான ஆயுதங்களை உக்ரேனிய ராணுவத்தினரே பாவிக்கின்றனர், அவர்களே தமது சொந்த மக்களைக் கொல்கின்றனர்" என்று ஏளனமாகப் பதிலளித்திருக்கிறார். மாசி 25 ஆம் திகதி ஒக்டிர்க்கா பகுதியில் அமைந்திருந்த பாலர்பள்ளி மீது ரஸ்ஸியா நடத்திய ஏவுகணைத் தாக்குதல் பற்றி சர்வதேச மன்னிப்புச்சபை கருத்துத் தெரிவிக்கையில், "ரஸ்ஸிய ராணூவம் 220 மில்லி மீட்டர் பி எம் - 27 உறகன் ரக ஏவுகணைகளைப் பாவித்தே இத்தாகுதலினை நடத்தியது. பொதுமக்களும் சிறுவர்களும் தஞ்சமடைந்திருந்த இப்பாலர் பள்ளிமீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட 3 பொதுமக்கள் ஸ்த்தலத்திலேயே கொல்லப்பட்டதுடன் பலர் கடுமையான காயங்களுக்கும் உள்ளானார்கள். ஆளில்லாத வேவு விமானம் மூலம் பெறப்பட்ட ஒளிப்படத்திலிருந்து பெறப்பட்ட தகவல்களின் படி இவ்வகையான 4 ஏவுகணைகள் பாலர் பள்ளியின் கூரைப்பகுதியில் வீழ்ந்து வெடித்ததோடு, மேலும் மூன்று ஏவுகணைகள் பாலர்பள்ளியின் முன்றலில் வீழ்ந்து வெடித்துள்ளன. அத்துடன், பாலர்பள்ளியின் முன்றலில் குறைந்தது இரு பொதுமக்களாவது இறந்து கிடக்கக் காணப்பட்டதுடன், பெருமளவு இரத்தக்கறைகளும் காணப்பட்டன. மேலும் இத்தாக்குதலில் பாவிக்கப்பட்ட 9 எம் 27 கே ரக ஏவுகணையின் எஞ்சிய பாகங்கள் பாலர் பள்ளியிலிருந்து 200 மீட்டர்கள் தொலைவில் கிடந்திருப்பதையும் சர்வதேச மன்னிப்புசபை சாட்சிப்படுத்தியிருக்கிறது. ஒக்டிர்க்கா பகுதியின் மேற்கில் நிலைகொண்டிருக்கும் ரஸ்ஸியப் படைகளே இந்த ஏவுகணையினை ஏவியிருக்கின்றன. ரஸ்ஸியா இந்த ஏவுகணைகளை பொதுமக்கள் மீது பாவிப்பதானது பாரிய போர்க்குற்றமாகும்" என்றும் கூறுகிறது. பங்குனி 4 ஆம் திகதி மனிதவுரிமைக் கண்காணிப்பகம் வெளியிட்ட அறிக்கையில் கார்க்கிவ் பகுதியில் பொதுமக்கள் செறிவாக வாழும் பகுதிகள் மீது ரஸ்ஸிய ராணுவம் குறைந்தது 3 தடவைகளாவது கொத்தணிக்குண்டுத் தாக்குதல்களை நடத்தியதாகக் கூறுகிறது. மேலும் பங்குனி 18 ஆம் நாளன்று கொத்தணிக் குண்டுகளால் கார்க்கிவ் பகுதிகளில் கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 450 ஐத் தாண்டியிருப்பதாகவும், இன்னும் பலநூற்றுக்கணக்கானோர் இத்தாக்குதல்களில் காயமடைந்திருப்பதாகவும் கூறுகிறது. இவ்வாறே பங்குனி 7, 11 மற்றும் 13 ஆம் திகதிகளில் மைகொலைவ் பகுதிகள் மீது ரஸ்ஸியா நடத்திய கொத்தணிக்குண்டுத் தாக்குதல்களில் பலர் கொல்லப்பட்டிருப்பதோடு, ராணுவ நடவடிக்கைகள் ஏதுமற்ற நகர்ப்பகுதிக் கட்டிடங்கள் கடுமையாகச் சிதைக்கப்பட்டிருப்பதாகவும் கண்காணிப்பகம் கூறுகிறது.
  12. கடந்த மாசி மாதம் 26 ஆம் திகதி பேசிய உக்ரேனிய பிரதமர் டெனிஸ் ஷிமையல் ரஸ்ஸிய ராணுவம் போர்க்குற்றங்களில் ஈடுபட்டுவருவதற்கான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாகப் பகிரங்கமாகக் கூறியிருந்தார். பங்குனி முதலாம், இரண்டாம் நாட்களில் மரியோபுல் பகுதியில் மக்கள் செறிவாக வாழும் பகுதிகள் மீது தொடர்ச்சியாக 15 மணித்தையாலங்கள் கடுமையான ஷெல்வீச்சினை மேற்கொண்டிருக்கிறது. இத்தாக்குதளின் மூலம் இப்பகுதியிலிருந்த பெரும்பாலான கட்டிடங்கள் முற்றாக அழிக்கப்பட்டிருப்பதுடன், குறைந்தது 100 பொதுமக்களாவது நேரடியான குண்டுவீச்சுக்களீல் அகப்பட்டும், கட்டிட இடிபாடுகளுக்கிடையே சிக்குண்டும் கொல்லப்பட்டதாக மரியோபுல்லின் உதவி முதல்வர் சேர்கி ஒர்லோவ் கூறுகிறார். பங்குனி 3 ஆம் திகதி ஐ நா மனிதவுரிமைகள் அமைப்பின் அறிக்கை உக்ரேனில் ரஸ்ஸியா நடத்திவரும் தாக்குதல்களில் குறைந்தது 1006 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதை தாம் உறுதிப்படுத்துவதாகக் கூறியதுடன், உண்மையில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை இதனைக் காட்டிலும் பலமடங்கு அதிகமாக இருக்கலாம் என்றும் கூறியிருக்கிறது. உலக சுகாதார ஸ்த்தாபனம் வெளியிட்ட அறிக்கையில் உக்ரேனில் இயங்கிவந்த பல வைத்தியசாலைகள் மீது ரஸ்ஸியா தாக்குதல் நடத்தியிருப்பதை உறுதிப்படுத்தியிருப்பதுடன், இவ்வமைப்பின் இயக்குநர் நாயகம் டெட்ரோஸ் அதனொம் ஜிப்ரேஸுஸ் பேசும்போது, "வைத்தியசாலைகள் மீதும், வைத்திய சேவகர்கள் மீதும் தாக்குதல் நடத்துவது சர்வதேசச் சட்டங்களை மீறும் ஒரு நடவடிக்கை, மனிதநேயச் சட்டங்களை மீறும் ஒரு செயல்" என்று கடிந்துகொண்டிருக்கிறார். பங்குனி 24 ஆம் திகதி, சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்ட அறிக்கையில், "ரஸ்ஸியா தொடர்ச்சியாக சர்வதேச மனிதநேயச் சட்டங்களை வேண்டுமென்றே மீறி, பொதுமக்கள் மீதும், பொதுமக்கள் அமைவிடங்கள் மீதும் வேண்டுமென்றே திட்டமிட்டு தாக்குதல்களை நடத்தி வருகிறது" என்று ரஸ்ஸியாவைக் கடுமையாகக் குற்றஞ்சாட்டியிருக்கிறது. மேலும் பொதுமக்கள் அடைக்கலமாகியிருந்த வைத்தியசாலைகள், பாடசாலைகள் மீது வேண்டுமென்றே ரஸ்ஸிய ராணுவம் நடத்திவரும் தாக்குதல்களை ஒளிப்படச் சாட்சிகளாக சர்வதேச மன்னிப்புச் சபை ஆவணப்படுத்திவருவதுடன், இலக்கற்று, சகட்டுமேனிக்கு பாரிய அழிவுகளை ஏற்படுத்தும் கனரக ஆயுதங்களையும், கொத்தணிக் குண்டுகளையும் மக்கள் செறிவாக வாழும் பகுதிகள் மீது ரஸ்ஸியா தொடர்ச்சியாகப் பாவித்துவருவதையும் ஆவணப்படுத்தியிருக்கிறது.
  13. உக்ரேன் மீது நடத்தப்படும் எழுந்தமானமான தாக்குதல்கள் மற்றும் பொதுமக்கள் மீது நடத்தப்படும் வலிந்த தாக்குதல்கள் சர்வதேச மனிதவுரிமைகள் அமைப்புக்கள் மற்றும், உக்ரேனில் இயங்கிவரும் ஐ நா மனிதவுரிமைகள் கண்காணிப்பகத்தின் தகவல்களின்படி, உக்ரேன் மீதான ஆக்கிரமிப்பின் ஒரு பகுதியாக எழுந்தமானமான தாக்குதல்கள் , பொதுமக்கள் கட்டட அமைப்புக்களான குடிமனைகள், வைத்தியசாலைகள், பாடசாலைகள் மற்றும் சிறுவர் பள்ளிகள் மீதான வலிந்த தாக்குதல்கள் என்பன இடம்பெற்றுவருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மாசி மாதம் 25 ஆம் திகதி, சர்வதேச மன்னிப்புச்சபை வெளியிட்ட அறிக்கையில், "மக்கள் அதிகமாகச் செறிந்துவாழும் நகர்ப்பகுதிகள் மீது, பொதுமக்கள் இறப்பினைச் சற்றும் சட்டை செய்யாது, பாரிய ஆயுதங்களான பாலிஸ்ட்டிக் ஏவுகனைகள் அடங்கலான பாரிய உயிரிழப்புக்களையும் அழிவுகளையும் ஏற்படுத்தும் கனரக ஆயுதங்களைக் கொண்டு ரஸ்ஸியா தாக்கி வருகிறது" என்று குற்றஞ்சாட்டியிருக்கிறது. ஆனால், இத்தாக்குதல்களை முற்றாக மறைத்த ரஸ்ஸிய ராணுவம், துல்லியமாக இலக்குகளைத் தாக்கும் திறன்கொண்ட ஆயுதங்களையே தாம் பாவித்ததாக கூறிவருகிறது. ரஸ்ஸியாவின் மறுப்பினை கண்டித்திருக்கும் மனிதவுரிமைக் கண்காணிப்பகம் வூலெடார், கார்கிவ், உமான் ஆகிய பகுதிகளில் ரஸ்ஸியா மேற்கொண்ட மிலேச்சத்தனமான தாக்குதல்கள் போர்க்குற்றங்கள் ஆகும் என்று கூறுகிறது....
  14. அண்ணை, உங்களோட இன்னொரு வாதத்திற்கு வருகிற நோக்கம் எனக்கு இல்லை. அப்பாவிகள் கொல்லப்படுவதால் அதனை எழுதுகிறேன். நீங்கள் கூறியபடி, அப்பாவிகள் எங்கு கொல்லப்பட்டாலும் அதுபற்றி நாம் பேச வேண்டும். ஆகவே, நான் இதுவரை சிரியாவிலோ, பாலஸ்த்தீனத்திலோ, ஈராக்கிலோ, ஆப்கானிஸ்த்தானிலோ கொல்லப்பட்ட லட்சக்கனக்கான மக்களின் அவலங்கள் தொடர்பாக குரல் கொடுக்காமைக்காக வருந்துகிறேன். இனி அந்தத் தவறைச் செய்யப்போவதில்லை. எமக்கு நடந்த இனவழிப்புப் போன்று இனி எங்கு நடந்தாலும் நாம் பேசவேண்டும். அவ்வளவுதான் நான் உங்களுக்குக் கூறவிரும்புவது. உங்களுடனோ, இன்னும் இங்கு எழுதும் இன்னும் சிலருடனோ இன்னொரு கசப்பான வாதத்திற்கு வரும் நோக்கம் எனக்கு சற்றும் இல்லை. உங்களுக்குக் காட்டமாகப் பதில் எழுதும் நோக்கம் கூட எனக்கில்லை. எனது உணர்வின் பால் உந்தப்பட்டே இதனைச் செய்கிறேன். உலக அரசியல் பற்றி நான் கவலைப்படவில்லை. வணக்கம்.
  15. உக்ரேனில் ரஸ்ஸிய ஆக்கிரமிப்பாளர்களால் இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் பற்றிய தொகுப்பு தற்போது உக்ரேன் மீது ரஸ்ஸியா நடத்திவரும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் போர்க்குற்றங்களாகக் கருதப்படக்கூடியவை, மனிதநேயத்திற்கெதிரான குற்றங்களாகக் கருதப்படக்கூடியவை என்று சர்வதேச மனிதவுரிமை அமைப்புக்களாலும், செயற்பாட்டாளர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகின்றன. சர்வதேச நியமங்களினை மீறி ரஸ்ஸிய ராணுவம், இலங்கையில் தமிழர்களுக்கெதிராக சிங்கள இனவழிப்பு ராணுவம் புரிந்த மிருகத்தனமான படுகொலைகளுக்கு நிகராக உக்ரேனியர்கள் மீது மேற்கொண்டுவரும் அட்டூழியங்கள் கருதப்படக்கூடியவை என்றால் அது மிகையில்லை. ரஸ்ஸிய ஆக்கிரமிப்பு ராணுவம் உக்ரேனில் புரிந்துவரும் முக்கியமான மனிதவுரிமைகளுக்கு எதிரான, சர்வதேசச் சட்டங்களுக்கு முரணான செயற்பாடுகளைப் பார்க்கலாம். 1. சிவிலியன்கள் செறிந்து வாழும் பகுதிகள் மீது, அதியுச்ச மக்கள் அழிவை மட்டுமே நோக்காகக் கொண்டு வேண்டுமென்றே நடத்தப்படும் கடுமையான குண்டுவீச்சுக்கள். 2. குறைந்தது 110 நாடுகளில் பாவிப்பதற்குத் தடைசெய்யப்பட்டுள்ள கொத்தணிக்குண்டுகளை மக்கள் செறிந்துவாழும் நகர்ப்பகுதிகள் மீது தொடர்ச்சியாகப் பாவித்து வருதல். இவற்றிற்கு மேலதிகமாக பரந்த நிலப்பரப்பில் தாக்கத்தினை ஏற்படுத்துகின்ற வாயுக் குண்டுகள், ஏவுகணைகள் மற்றும் பல்குழல் உந்துகணைச் செலுத்திகளைப் பாவித்து பெருமளவு உயிரிழப்புக்களை நோக்கமாகக் கொண்டு ஏவப்படும் தாக்குதல்கள். 3. பொதுமக்களின் வாழிடங்கள், வைத்தியசாலைகள், பாடசாலைகள், பாலர் பள்ளிகள், அணுமின் நிலையங்கள், கலாசாரத் தொன்மை கொண்ட கட்டடங்கள், பாரம்பரிய தேவாலயங்கள் உட்பட்ட மக்களின் பாவனைக்கென்று இருந்த கட்டடங்கள் மீதான திட்டமிட்ட தாக்குதல்கள். 4. தன்னால் ஆக்கிரமிக்கப்பட்டுவரும் உக்ரேனின் நிலப்பகுதியில் வாழும் மக்களை விருப்பத்திற்கு மாறாக, கட்டாயமாக ரஸ்ஸியாவினுள் நாடு கடத்துதல். 5. உக்ரேனியர்களைக் கொல்வதை தமது படைநடவடிக்கையின் ஒரு நோக்கமாகக் கொன்டு செயற்படும் ரஸ்ஸிய ராணுவத்தால் கொல்லப்பட்ட பல்லாயிரக்கனக்கான உக்ரேனியர்களின் மரணங்கள். உதாரணத்திற்கு ரஸ்ஸிய ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட பூச்சா பாகுதியை விட்டு ஆக்கிரமிப்பாளர்கள் நீங்கியபின்னர் அங்கே கண்டெடுக்கப்பட்ட குறைந்தது 500 அப்பாவிகளின் சடலங்களும், அவர்கள் கொல்லப்பட்ட விதமும் ரஸ்ஸிய ராணுவம் போர்க்குற்றங்களிலும், மனித நேயத்திற்கெதிரான குற்றங்களிலும் ஈடுபட்டிருக்கின்றனன் என்பதை உறுதிப்படுத்தியிருக்கின்றன. இவை தவிரவும் ரஸ்ஸிய ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட பகுதிகளில் தற்போது கண்டுபிடிக்கப்படும் பாரிய மனித புதைகுழிகள், மற்றும் உக்கிரமான ஆக்கிரமிப்பும் அழித்தொழிப்பும் நடைபெற்றுவரும் மரியோபுல்லில் இதுவரை கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான அப்பாவிகள் பற்றி வெளித்தெரிய ஆரம்பித்திருக்கும் விபரங்களும் ரஸ்ஸிய ராணுவம் போர்க்குற்றங்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றதென்பதையே சுட்டி நிற்கிறது. 6. ரஸ்ஸியாவினால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் வசித்துவந்த ஊடகவியலாளர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்களைக் கைதுசெய்தது மற்றும் கொடுமைப்படுத்திவருவது. இதுவரை 24 ஊடகவியலாளர்களும், 21 மனிதவுரிமைச் செயற்பாட்டாளர்களும் இவ்வாறு ஆக்கிரமிப்பு ரஸ்ஸிய ராணுவத்தால் தடுத்துவைக்கப்பட்டுள்ளதுடன், பலர் கடுமையான சித்திரவதைகளுக்கும் உள்ளாகியிருக்கின்றனர். சர்வதேச மனிதவுரிமை அமைப்புக்களின் துணையோடு, உக்ரேனில் ரஸ்ஸிய ராணூவத்தால் நடத்தப்பட்டு வரும் போர்க்குற்றங்களை ஆவணப்படுத்திவரும் உக்ரேனின் மனிதவுரிமை அமைப்பும், நீதிபதிகளும் இதுவரையில் குறைந்தது 2500 சாட்சியங்களை ஆவணப்படுத்தியுள்ளதுடன், பல நூற்றுக்கணக்கான ரஸ்ஸியப் போர்க்குற்றவாளிகளின் பெயர்களையும் வெளியிட்டிருக்கின்றது. உக்ரேனில் ரஸ்ஸியா புரிந்துவரும் போர்க்குற்றங்கள் மற்றும் இனவழிப்போடு ஒப்புநோக்கக் கூடிய குற்றங்களுக்காக, இம்மாதம் 7 ஆம் திகதியிலிருந்து, ஐ நா மனிதவுரிமைச் சபை ரஸ்ஸியாவை தனது அமர்வுகளிலிருந்து நீக்கியிருக்கிறது. உக்ரேனில் ரஸ்ஸியாவின் போர்க்குற்றங்களும், மனிதநேயத்திற்கெதிரான குற்றங்களும், இனவழிப்பின் வழிசெல்லும் குற்றங்களும் தொடரும்.................................
  16. சிறிது நேரத்தின்பின்பு, ரஸ்ஸிய ராணுவத்தினர் ஐந்து இளவயது ஆண்களை அங்கே இழுத்துக்கொண்டு வந்தார்கள். அவர்கள் அணிந்திருந்த சப்பாத்துக்களையும், மேலங்கிகளையும் கழற்றுமாறு அவர்களூக்குப் பணிக்கப்பட்டது. வீதியின் அருகே அவர்களை முழங்கால்களில் இருக்குமாறு ரஸ்ஸிய ராணுவம் பணித்தது. அவர்களின் பின்னால் நின்றுகொண்டிருந்த ரஸ்ஸிய ராணுவ வீரர்கள் அந்த இளைஞர்களின் டீ சேர்ட்டுக்களை அவர்களின் தலைகளுக்கு மேலே இழுத்துவிட்டார்கள். அதில் ஒரு இளைஞனின் பிடரியில் இயந்திரத் துப்பாக்கியால் சுட்டான் ஒரு ரஸ்ஸிய வீரன். சுடப்பட்ட அந்த இளைஞன் முன்னே சாயவும் அங்கிருந்த பெண்கள் எல்லாம் அலறத் தொடங்கினோம். மற்றைய நான்கு இளைஞர்களும் இன்னமும் முழங்காலில் இருந்துகொண்டிருந்தார்கள். அங்கிருந்த ரஸ்ஸிய அதிகாரி எங்களைப் பார்த்து இப்படிக் கூவினான், "நீங்கள் அச்சப்படத் தேவையில்லை, உங்களில் ஒருவரும் பிரச்சினையானவர்கள் இல்லை. ஆனால் இவர்கள் ஐந்துபேரும் தீண்டத் தகாதவர்கள். ஆகவே அவர்களை அழிக்கவே வந்திருக்கிறோம்". "பல மணி நேரத்திற்குப் பின் எம்மை எமது வீடுகளுக்கு போகச் சொன்னார்கள், நான் வரும்வரை அந்த நான்கு இளைஞர்களும் அங்கேயே முழங்காலில் இருத்தப்பட்டிருந்தார்கள். அந்த இரவு முழுதும் அப்பகுதியெங்கும் துப்பாக்கிச் சத்தம் கேட்டுக்கொண்டேயிருந்தது. அந்த நான்கு இளைஞர்களுக்கும் என்ன நடந்தது என்பதுபற்றி எனக்குத் தெரியாது" என்று அவர் கூறினார். "ஐந்து நாட்களின் பின்னர், அப்பகுதியிலிருந்து வெளியேற ரஸ்ஸிய ராணூவம் எம்மை அனுமதித்தது. அவ்வீதியால் நடந்துசெல்லும்போது அன்று கொல்லப்பட்ட அந்த இளைஞனின் உடல் அதே இடத்தில் அப்படியே கிடந்ததைக் கண்டேன். ஏனைய நால்வரையும் காணவில்லை" என்று அவர் மேலும் கூறினார். டிமடிரோ எனும் 40 வயது உக்ரேனியர் தனது அனுபவம் பற்றிக் கூறும்போது, "பங்குனி 7 ஆம் திகதி கடுமையான செல்வீச்சில் அழிக்கப்பட்டுக்கொண்டிருந்த எமது பகுதியான பூச்சாவிகிருந்து நாம் தப்பி ஓடினோம். எந்தப் பாதை பாதுகாப்பானது என்று எமக்குத் தெரிந்திருக்கவில்லை, ஆகவே நடந்து செல்வதென்று தீர்மானித்திருந்தோம். சுமார் 5 கிலோமீட்டர்கள் தொலைவில் இருக்கும் வொர்செல் கிராமத்திற்குச் செல்லும் வழிநெடுகிலும் தலைக்குமேலே வெண்ணிறத் துணிகளை அசைத்துக்கொண்டு உயிரைக் கையில்ப் பிடித்துக்கொண்டு ஓடி வந்தோம்". "வொர்சலில் இருந்த இரு மாடிக் கட்டிடம் ஒன்றில் அன்றிரவு நாம் தங்கினோம். எம்முடன் அங்கே தஞ்சமடைந்திருந்த பலர் காயப்பட்டிருந்தனர் ஒரு பெண்ணிற்கு நெஞ்சுப் பகுதியும், கால்களும் கடுமையாகச் சேதமடைந்திருந்தது. நாம் அங்கு செல்வதற்கு ஒரு நாளுக்கு முன்னமே அந்தப் பெண்ணை ரஸ்ஸிய ராணுவத்தினர் சுட்டதாக அவளின் உறவினர்கள் என்னிடம் கூறினர். இவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய ரஸ்ஸிய ராணுவம், கிர்னேட்டுக்களையும் கழற்றி வீசியிருந்தது. புகைக்குண்டுகளை ரஸ்ஸிய ராணுவம் இக்கட்டிடத்தினுள் வீசியபோது, மூச்சுத்தினறி வெளியே ஓடிவந்த அப்பாவிகள் மீது, வெளியே காத்திருந்த ரஸ்ஸிய ராணூவம் சரமரியான துப்பாக்கிச் சூட்டினை நடத்தியது. அத்தாகுதலில் தம்முடன் இருந்த 14 வயதுச் சிறுமி தலையில் சூடுபட்டுக் கொல்லப்பட்ட இப்பெண்ணின் நெஞ்சுப்பகுதியிலும், கால்களிலும் சூடு விழுந்தது. ஆனால், நாம் அங்கு சென்ற மறுநாள் காலையில் அப்பெண்ணும் உயிரிழந்துபோனாள்" என்று அவர் கூறினார். பங்குனி 4 ஆம் திகதி இர்பின் பிராந்தியத்தின் சபுச்சாயா எனும் கிராமத்திற்குள் நுழைந்த ரஸ்ஸிய ராணுவம் தன்னையும் தனது மகனையும் கொல்வதற்கு ஆயத்தப்படுத்தியதாக இன்னொரு கூறினார். "சுமார் பத்துப் பேர்வரை எமது நிலக்கீழ் அறையில் பதுங்கியிருந்தோம். 13 ரஸ்ஸிய ராணுவ வீரர்கள் திடுதிடுப்பென்று எமது வீட்டினுள் நுழைந்தனர். எம்மை படுத்திருக்குமாறு கோரிவிட்டு வீட்டைச் சல்லடை போட்டுத் தேடினர். எனது மகன் தற்காப்பு ராணுவத்தில் பணிபுரிகிறான் என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். அவனது பெயரைச் சொல்லி, எங்கே இருக்கிறான் என்று என்னைக் கேட்டனர். எனது மகன் வெளியே செல்லவும் அவனையும் என்னையும் இழுத்துக்கொண்டு செல்ல ஆயத்தமாகினர். அப்போது அங்கே வந்த அவர்களது அதிகாரி, "இவர்கள் இருவரையும் நிர்வாணமாக்கி, மரத்தில் கட்டிச் சுடுங்கள் " என்று கத்தினான். அவனது சொற்படி சில வீரர்கள் எங்களை வீட்டின் பின்னால் இழுத்துக்கொண்டு சென்றார்கள். ஆனால், அவர்காளீல் ஒருவனுக்கு எம்மைக் கொல்வதில் இஷ்ட்டமில்லை. எனது மகனின் உடலில் "வலதுசாரிகளின் இலச்சினை பச்சை குத்தப்பட்டிருகிறதா" என்று தேடிவிட்டு, எங்களைப் போகச் சொல்லி விட்டு விட்டான். அவனாலேயே நாம் உயிர் தப்பினோம்" என்று அவர் கூறினார். "எனது வீட்டிற்கு அருகிலிருக்கும் நீதிபதியொருவரின் வீட்டிற்குச் சென்ற ராணுவத்தினர் அவரது வீட்டின் கதவுகளை உடைத்து உள்ளே சென்றனர். பின்னர் அங்கிருந்த பெறுமதியான பல பொருட்களை அவர்கள் சூறையாடுவது தெரிந்தது. பொருட்களைச் சூறையாடிவிட்டு, வீட்டைச் சேதப்படுத்திய ரஸ்ஸிய ராணுவம் அங்கிருந்து அகன்றதும், நாமும், இன்னும் அங்கே அடைக்கலமாகி இருந்தோரும் இரு கார்களில் வேறு பாதுகாப்பான பகுதிக்குத் தப்பி வந்தோம்" என்றும் அவர் மேலும் கூறினார்.
  17. மறுநாள் காலை கொல்லப்பட்ட தமது பிள்ளைகளின் உடல்களை எடுப்பதற்குச் சென்ற தாய்மாரை ரஸ்ஸிய ராணுவம் தடுத்துவிட்டது. அதன் பின்னர் வந்த நாட்களில் இப்பகுதியெங்கும் மிகக் கடுமையான எறிகணை மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை இடைவிடாது ரஸ்ஸியா நடத்திக் கொண்டிருந்தது. பங்குனி மாதம் 7 ஆம் திகதி மீண்டும் அப்பகுதிக்குச் சென்ற அந்தத் தாய் தனது பிள்ளைகளின் உடல்களை எடுக்க அனுமதி தருமாறு ரஸ்ஸிய ராணுவத்தைக் கேட்டிருக்கிறார். "நாங்கள் அவர்களின் காவலரணில் சென்று கேட்கும்போது, அவர்கள் எங்களை சேமக்காலைக்குப் போகச் சொன்னார்கள். அதனைத் தொடர்ந்து கிராமத்திலிருந்த சுமார் 75 பேர்வரையில் சேமக்காலையில் கூடினோம். சிறிது நேரத்தில் எமது பிள்ளைகளின் உடல்களைக் கொண்டுவந்து கொடுத்தார்கள். அவர்களைத் தனித்தனி குழிகளில் புதைத்தோம்" என்று அவர் மேலும் கூறினார். தனது பிள்ளைகளுடன் கொல்லப்பட்ட ஏனைய நான்கு ஆண்களீனதும் பெயர்களை அத்தாயார் கூறினார். அவர்கள் வொலொடொமிர்40, ஒலெக்சாண்டர் 40, இன்டோர் 31 மற்றும் ஓலே 33. டெடானியா மேலும் பேசுகையில், "எமது கிராமத்திலிருந்து அனைத்துவீடுகளிலிருந்தும் விறகுகளை ரஸ்ஸிய ராணுவத்தினர் எடுத்துச் சென்றிருந்தனர். எமக்குச் சமைப்பதற்கோ அல்லது குளிரின்பொழுது தீமூட்டுவதற்கோ எந்த விறகையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை" என்று கூறினார். பங்குனி 4 ஆம் திகதி , தலைநகர் கியிவுக்கு 30 கிலோமீட்டர்கள் வடமேற்கே அமைந்திருக்கும் புச்சா பகுதியில் வீதியால் சென்றுகொண்டிருந்த அப்பாவி மனிதர் ஒருவரை ரஸ்ஸிய ராணுவம் சுட்டுக் கொன்றதையும், இன்னும் நால்வரை இழுத்துச் சென்று சுட ஆயத்தப்படுத்தியதையும் அப்பகுதி ஆசிரியர் ஒருவர் சாட்சியப்படுத்தியிருக்கிறார். "காலை 7 மணியிருக்கும், எமது வீதியால் ரஸ்ஸிய ராணுவத்தின் மூன்று யுத்தத் தாங்கிகளும் ரஸ்ஸிய வீரர்களை ஏற்றும் நான்கு டிரக் வண்டிகளும் செல்வதைப் பார்த்தேன். எமது வீடுகளுக்குள் நுழைந்துவிடுவார்களோ என்கிற அச்சத்தில் வீட்டின் மூலையில் பதுங்கிக் கொண்டேன். சிறிதுநேரத்தில் எனது வீட்டின் முன்கதவின் கண்ணாடி அடித்து நொறுக்கப்படுவது கேட்கிறது. சில நொடித்துளிகளீன் பின்னர், "வெளியே வாருங்கள், வீட்டினுள் கிரனேட்டுக்களை கழற்றி வீசப்போகிறோம்" என்று அதட்டும் ரஸ்ஸிய வீரன் ஒருவனின் குரல் கேட்கிறது. நான் தனியாகவே இருக்கிறேன், என்னைக் கொன்றுவிடாதீர்கள், நான் வெளியே வருகிறேன் என்று அலறிக்கொண்டு எனது கைகளை மேலே தூக்கியபடி நான் வீட்டிற்கு வெளியே வந்தேன்". "ஒரு அதிகாரியும் இரு ராணுவவீரர்களூமாக அங்கே மூன்று பேர் நின்றிருந்தனர். எனது கைபேசியைப் பறித்த அதிகாரி, அதனைப் பரிசோதிக்கத் தொடங்கினான். உள்ளே சென்று உனது அடையாளப் பத்திரங்களை எடுத்துக்கொண்டு வா என்று அதட்டினான். நான் அவற்றினை எடுத்துக்கொண்டு அவர்கள் பின்னால் நடக்க ஆரம்பித்தேன். வெளியே வரும்போது, என்னைப்போன்றே எனது அயலவர்களையும் ரஸ்ஸிய ராணுவத்தினர் இழுத்துச் செல்வது தெரிகிறது". "எம்மை ஒரு பாரிய சேமிப்புக் கட்டிடத்திற்கு அழைத்துச் சென்றார்கள். கட்டிடத்திற்கு வெளியே இருந்த முன்றலில் எம் அனைவரையும் நிற்கவைத்தார்கள். அதில் அநேகமானவர்கள் பெண்கள், 50 வயதினைத் தாண்டிய சில ஆண்களூம் அங்கே இருந்தார்கள். சுமார் 30 ரஸ்ஸிய ராணுவ வீரர்கலும் அவர்களின் அதிகாரியும் அங்கே இருந்தனர். அங்கே இழுத்துவரப்பட்ட அனைவரினது அடையாள ஆவணங்களை வாங்கிப் பார்த்துக்கொண்டிருந்த ரஸ்ஸியர்கள், உங்களில் யார் யார் பிரதேச தற்பாதுகாப்பு ராணூவத்தில் இருக்கிறீர்கள் என்று கேட்டனர்". "அங்கிருந்த பெண்களீல் கர்ப்பிணிப் பெண்ணொருத்தி இருந்தாள். இயற்கை உபாதையினைக் கழிக்க அவள் பாடாதபாடு பட்டுக் கொண்டிருக்க, அவளை மலசல கூடத்திற்கு அழைத்துச் செல்ல அனுமதி கோரினேன். நீண்ட அந்தக் கட்டிடத்தில் முடிவில் இருந்த மலசல கூடத்தை ஒரு ரஸ்ஸிய வீரன் காட்டினான். நானும், அப்பெண்ணும் நடந்துசெல்லும்போது ஒரு பகுதியில் மிகப்பெருமளவில் குருதியோடிக்கிடந்ததைக் கண்டோம். அப்பகுதியிலிருந்த சுவர்கள், கதவுகள் எங்கு இரத்தக்கறை பீய்ச்சிட்டுக் கிடந்தது. கடுமையான குளிரில், திறந்த வெளியில், சரியான மேலாடைகள் இன்றி எம்மை இருத்தி வைத்திருந்தது ரஸ்ஸிய ராணுவம்" என்று அவர் மேலும் கூறினார்.
  18. உக்ரேனியப் பொதுமக்கள் மீதான கூட்டுப் படுகொலைகாளும் ஏனைய வன்முறைகளூம் மாசி மாதம் 27 ஆம் திகதி சேர்னிவ் பிராந்தியத்தின் ஸ்டேரி பைகீவ் கிராமத்தினுள் புகுந்த ரஸ்ஸியப்படையினர் அங்கு தென்பட்ட 6 ஆண்களை கூட்டாக இழுத்து வந்து தலையில் சுட்டுப் படுகொலை செய்துள்ளனர். இப்படுகொலைகளுக்கு சாட்சியாகத் திகழும் டெட்டியானா இப்படுகொலைகள் குறித்து மனிதவுரிமைக் கண்காணிப்பகத்திடம் புகாரளிக்கையில், "எனது கிராமத்திற்கும் ஸ்டேரி பைகீவுக்கும் இடையில் இருந்த ஒற்றைத் தொடர்பான பாலத்தினத் தகர்த்த ரஸ்ஸிய ராணுவம் இவ்விரு கிராமங்கள் மீதும் மிகக் கடுமையான ஏவுகணைத் தாக்குதலை மேற்கொண்டவாறே அப்பகுதியினை ஆக்கிரமித்துக்கொண்டது. ரஸ்ஸிய ராணூவத்தின் கனரக வாகனத் தொடரணி அவ்வூருக்குள் நுழைவதை நான் கண்ணுற்றேன். உள்நுழைந்த சில நிமிடங்களில் இந்தப் படுகொலைகளை ரஸ்ஸிய ராணுவம் புரிந்தது" என்று கூறுகிறார். "கிராமத்தின் அநேகமான மக்கள் கடுமையான எறிகணை வீச்சிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள தமது நிலக்கீழ் பதுங்கு குழிகளுக்குள் தஞ்சம் அடைந்திருந்தனர். இதனையடுத்து ஒவ்வொரு வீடு வீடாகச் சென்ற ரஸ்ஸிய ராணுவத்தினர் வீடுகளுக்குள் இருந்த ஆண்களை வெளியே இழுத்து வந்தனர். அவர்களில் அறுவரை தலையில் சுட்டுக் கொன்றனர்" என்று அவர் மேலும் கூறினார். இந்த அறுவரில் இருவர் சகோதரர்கள். இன்னொருவருக்கு வெறும் 20 வயதே ஆகியிருந்தது. இந்த ஆண்களை இழுத்துச் செல்லும்போது, பின்னால் அழுது மன்றாடிக்கொண்டு வந்த தாய்மாரையும் சகோதரிகளையும் மிரட்டிய ரஸ்ஸியப் படையினர், "எம்மைப் பின் தொடர வேண்டாம், இவர்களை விசாரித்துவிட்டு உங்களிடமே திருப்பியனுப்புவோம்" என்று கூறியிருக்கின்றனர். ஆனால், கிராமத்தின் சிறிய மூலையொன்றிற்கு தமது பிள்ளைகள் இழுத்துச் செல்லப்படுவதையும் பின்னர் மறைவான இடமொன்றில் நிரலாகச் சுட்டுக் கொல்லப்பட்டதை வேதனையுடன் பலர் பார்த்ததாக டெட்டியானா மேலும் கூறுகிறார். தனது 20 வயது மகனைப் பறிகொடுத்த தாயார் கூறுகையில், "அவர்கள் எனது மகனையும் எனது மைத்துனரையும் எங்களிடமிருந்து இழுத்துச் சென்றார்கள். எம்மை மிரட்டி, அங்கேயே இருக்குமாறு அவர்கள் பணித்துவிட்டே அவர்களை இழுத்துச் சென்றார்கள். அவர்களை இழுத்துக்கொண்டு எங்கே சென்றார்கள் என்பதை நான் அறியேன். எனது மகனையும் மைத்துனரையும் போலவே இன்னும் சில ஆண்களை அவர்கள் இழுத்துச் செல்வதை பலர் பார்த்திருக்கிறார்கள். அவர்களுக்கு என்ன நடக்கப்போகிறதென்பதை உணர்ந்துகொண்ட நான் அருகிலிருக்கும் ரஸ்ஸிய ராணுவத்தின் காவலரணுக்கு ஓடிச்சென்று எனது பிள்ளைகள் எங்கே என்று அவர்களிடம் வேண்டினேன். அதற்கு அங்கு நின்ற ரஸ்ஸிய ராணுவத்தினர். "கலங்க வேண்டாம், அவர்களை சும்மா விசாரித்து மிரட்டுவதற்காகவே அழைத்துச் சென்றிருக்கிறார்கள் , விரைவில் அனுப்பிவைப்பார்கள்" என்று ஏளனத்துடன் கூறியிருக்கிறார்கள். அந்தக் காவலரணிலிருந்து ஒரு 50 மீட்டர்கள் போயிருக்கமாட்டோம், எங்களின் பின்னால் தொடர்ச்சியான துப்பாக்கிச் சத்தம் கேட்கத் தொடங்கியது. சத்தம் வந்த திசைநோக்கி ஓடிச்செல்ல எத்தனித்த எம்மை ரஸ்ஸிய ராணுவம் தடுத்துவிட்டது. மறுநாள் காலை அவ்விடத்திற்குச் சென்றபோது, வயல் வெளியொன்றிற்கு அருகிலிருந்த பாழடைந்த கட்டிடம் ஒன்றில் எனது மகனும், ஏனைய ஐந்துபேரும் சடலங்களாகக் கிடந்ததை நாம் கண்டோம்" என்று வேதனையுடன் கூறுகிறார். "கட்டிடத்தினுள் மூவரும், அதற்கு வெளியே ஏனைய மூவருமாக அவர்கள் கொல்லப்பட்டுக் கிடந்தார்கள். அவர்களின் தலைப்பகுதியில் சுட்டே ரஸ்ஸிய ராணுவம் அவர்களைக் கொன்றிருக்கிறது. அவர்களின் கைகள் பின்னால் கட்டப்பட்டிருந்தன. எனது மகனின் சடலத்திலிருந்து அவரது தொலைபேசி, பணம், ஏனைய ஆவணங்கள் என்பவற்றை ரஸ்ஸிய ராணுவத்தினர் திருடியிருந்தார்கள்" என்று அவர் மேலும் கூறினார்.
  19. ஆக்கிரமிப்பாளனின் கொலைகளைப் பற்றி எழுதுவதற்கு நான் அவனின் செய்திகளைப் படித்தால் முடியாது. அப்படியிருந்தால், என் மக்கள் மீதான இனக்கொலைபற்றி அறிவதற்கு இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தையும், லங்கா புவத்தையும்தான் நான் படித்திருக்க வேண்டும். தமிழ்நெட்டை அல்ல. நான் தமிழெட்டை மட்டுமே படித்ததற்கு ஒரு காரணம் இருந்தது. அதே காரணம் தான் இங்கேயும்.
  20. போருக்கான விதிமுறைகளில் வேண்டுமென்றே அப்பாவிகளைக் கொல்லுதல், பாலியல் வன்கொடுமை மற்றும் அதனோடு இணைந்த பாலியல் சித்திரவதைகளை போரில் ஒரு ஆயுதமாகப் பாவித்தல், சித்திரவதைகள், மனித நாகரீகமில்லாது மக்களையும் சரணடைந்தவர்களையும் நடத்துவது, மக்களின் சொத்துக்களைச் சூறையாடுவது, சொத்துக்களுக்கு வேண்டுமென்றே நாசத்தை ஏற்படுத்துவது என்பன தவிர்க்கப்படவேண்டிய, தடைசெய்யப்பட்ட குற்றங்களாகக் கருதப்படுகின்றன. இத்தகைய செயல்களைச் செய்யுமாறு கட்டளையிடுவோர், செயல்களைச் செய்வோர், செய்வதற்கு உடந்தையாக இருந்தோர் அனைவருமே போர்க்குற்ரவாளிகளாகக் கருதப்படுவர் என்கிறது சட்டம். அவ்வாறே தனக்குக் கீழ் இயங்கும் ராணுவ வீரர்கள் இவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபடுவது தெரிந்தும், அதனைத் தடுக்காது வேடிக்கை பார்த்த தளபதிகளும் போர்க்குற்றவாளிகளே என்கிற இச்சட்டம். "உக்ரேனில் அப்பாவிகளுக்கெதிரான பாரியளவிலான போர்க்குற்றங்களில் ஈடுபட்டு வரும் தனது ராணுவத்தினரின் போர்க்குற்றங்களை விச்சரிப்பதற்கு ரஸ்ஸியாவுக்கு கடப்பாடு இருக்கிறது" என்று வில்லியம் கூறுகிறார். "கொலைகள், பாலியல் வன்கொடுமைகளைக் கண்டும் காணாதது போல அவற்றை ஆமோதிக்கும் தளபதிகளும் போர்க்குற்றவாளிகள் தான்" என்றும் அவர் மேலும் கூறுகிறார். கார்க்கிவ் பாலியல் வன்கொடுமை பங்குனி 13 ஆம் திகதி ஒல்கா எனும் பெண்ணை இழுத்துச் சென்ற ரஸ்ஸிய வீரர்கள் அவரைக் கடுமையாகத் தாக்கியதோடு தொடர்ச்சியான பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கியிருக்கிறார்கள். கார்க்கிவ் பகுதியில் மலய ரொகான் எனும் கிராமத்தில் வசித்து வந்த 31 வயதுடைய பெண்ணே இவ்வாறு ரஸ்ஸிய ராணுவத்தால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியிருக்கிறார். மாசி 25 அன்று தமது கிராமத்திற்குள் புகுந்த ரஸ்ஸிய ராணுவத்தினர் , அக்கிராமத்தின் பாடசாலையில் தஞ்சமடைந்திருந்த 40 பெண்களையும் சிறுமிகளையும் அச்சுருத்தியிருக்கிறார்கள். தன்னுடைய 5 வயது மகள், தன்னுடைய தாய், தனது சகோதரி மற்றும் தன்னுடைய சகோதரருடன் ஒல்கா அங்கு தஞ்சமடைந்திருக்கிறார். நள்ளிரவு பாடசாலையின் கதவுகளை உடைத்துக்கொண்டு ரஸ்ஸிய ராணுவம் உள்நுழைதிருக்கிறது. தானியங்கித் துப்பாக்கி மற்றும் கைத்துப்பாக்கியுடன் நின்றிருந்த ஒரு ராணுவத்தினன், அங்கிருந்த எல்லோரையும் எழுது வரிசயில் நிற்குமாறு மிரட்டியிருக்கிறான். ஒல்காவும், தனது மகளின் கைகளைப்பிடித்துக்கொண்டு எழுந்து நின்றிருக்கிறார். தனது பிள்ளையைத் தருமாறு ரஸ்ஸிய வீரன் கேட்கவும் அவர் மறுத்திருக்கிறார். உடனே தனது சகோதரனை வா என்று இழுத்தெடுத்த அந்த வீரன் ஏனையவர்கள் எல்லோரையும் முழந்தாலிட பணித்திருக்கிறான். தனது சகோதரனை இழுத்துச் சென்ற அந்த வீரன் 2 மணித்தியாலங்களின் பின்னர் திரும்பவும் அங்கு வந்திருக்கிறான். சிறிது நேரத்தின் பின்னர் தன்னருகே வந்த அவன், தன்னைப் பின் தொடருமாறு மிரட்டத்த் தொடங்கியிருக்கிறான். பாடசாலையின் இன்னொரு அறைக்குள் தன்னை இழுத்துச் சென்ற அவன், துப்பாக்கி முனையில் தனது ஆடைகளைக் களையச் சொல்லியிருக்கிறான். துப்பாக்கியை தனது நெற்றிக்கு நேரேபிடித்தபடி தன்னுடன் உடலுறவு கொள்ளுமாறு வற்புறுத்திய அவன், பலமுரை அப்பெண்ணுடன் கட்டாய உடலுறவில் ஈடுபட்டிருக்கிறான். அவள் மறுத்த ஒவ்வொரு பொழுதிலும் துப்பாக்கியால் அவளருகில் சுட்டு அச்சுருத்தியே இதனைச் செய்திருக்கிறான். இப்படிப் பலமுறை அவளை வன்புணர்ந்த அவன், அருகிலிருந்த கதிரை ஒன்றில் இருக்குமாறு பணித்திருக்கிறான். நான் எனது உள்ளாடைகளை இனி அணியலாமா அவள் கேட்கவும், மேலாடையினை மட்டும் அணி, ஆனால் உடலின் கீழ்ப்பகுதிக்கு எதனையும் அணியக்கூடாது என்று மிரட்டியிருக்கிறான். தனது மகளை இப்படியே தன்னால் சென்று பார்க்கமுடியாது என்று அவள் கூறவும், உனது மகள் உயிருடன் வேண்டுமென்றால், இப்படியே போ என்று கூறி மிரட்டியிருக்கிறான். வெறும் 20 வயதே மதிக்கத்தக்க அந்த ராணுவ வீரன் திடீரென்று தனது கத்தியை உருவி அப்பெண்ணின் கழுத்தில் கீரத்தொடங்கவே அவள் பயத்தில் அலறியிருக்கிராள். அவளது அலறுலுக்கு மத்தியிலும் அவன் அப்பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு மறுபடியும் உள்ளாக்கியிருக்கிறான். தன்னை பாலியல் வன்கொடுமை புரிந்துகொண்டே தனது கத்தியினால் தனது கன்னம், உடலின் பாகங்கள் என்று பலவிடங்களிலும் கீறிய அவன், தனது முடியையும் வெட்டி எறிந்ததாகக் கூறுகிறாள் ஒல்கா. பாலியல் வன்கொடுமையின்போது தன்னை மீண்டும் மீண்டும் கடுமையாகத் தாக்கியதாக கண்காணிப்பகத்திடம் கூறிய ஒல்கா தனது காயங்களைச் சாட்சியாகக் காட்டியிருக்கிறாள். அதிகாலை வரை தன்னை அடைத்துவைத்து பாலியல் வன்கொடுமை புரிந்த பின்னர், அங்கிருந்து அவன் சென்றுவிட்டதாக அப்பெண் கூறுகிறாள். தன்னைக் கொலை செய்யவே தனியாக இழுத்துச் செல்கிறான் என்று தான் பயந்ததாகவும், ஆனால் தொடர்ச்சியான பாலியல் வன்கொடுமைக்குப் பிறகு தான் உயிர்வாழ்வது அதிஷ்ட்டம் தான் என்றும் அவள் கூறுகிறாள். இவ்வகையான பாலியல் வன்கொடுமைகளை ரஸ்ஸிய ராணுவம் மரியோபுள்ளில் இருக்கும் சில பகுதிகளிலும், சேர்னிவ் பகுதிகளிலும் செய்திருப்பதாகக் கூறும் கண்காணிப்பகம், இதுதொடர்பாகத் தமக்குக் கிடைத்த முறைப்பாடுகள் பலவற்றை தாம் விசாரித்து வருவதாகவும் கூறுகிறது. ரஸ்ஸியாவின் போர்க்குற்றங்கள் தொடரும்..... ஏ பி மற்றும் மனித உரிமைக் கண்காணிப்பகம்.
  21. மாசி மாதம் 27 ஆம் திகதி தனது மகன் உட்பட ஆறு பேரை ரஸ்ஸிய ராணுவம் இழுத்துச் சென்று கூட்டாகத் தலையில் சுட்டுக் கொன்றதை அத்தாயார் கண்டிருக்கிரார். 60 வயது மதிக்கத்தக்க தகப்பனையும் அவரது மகனையும் இழுத்துச் சென்று சுடமுயன்றவேளை, இன்னொரு ரஸ்ஸிய வீரனால் தாம் காப்பாற்றப்பட்டதாக அவர் கூறுகிரார். பங்குனி 6 ஆம் திகதி வொசல் எனும் கிராமத்தினுள் புகுந்த ரஸ்ஸியப்படை அங்கிருந்த வீட்டினுள் புகைக்குண்டுகளை வீசியெறிந்திருக்கிறது. உள்ளேயிருந்து வெளியே ஓடிவந்த தாயையும் அவரது 14 வயது மகளையும் அவர்களது வீட்டின் முன்றலிலேயே ரஸ்ஸிய ராணுவம் சுட்டுக் கொன்றுள்ளது. அவர்களுடன் கூடவிருந்த இன்னொரு உறவினர் சூட்டுக்காயங்களுடன் அவ்வீட்டினுள் கிடந்து இரண்டாம் நாள் உயிரிழந்ததாக சாட்சிகள் கூறுகின்றனர். பங்குனி 13 ஆம் ஆண்டு கார்க்கிவ் புறநகர்ப் பகுதியை ரஸ்ஸிய ராணுவம் ஆக்கிரமித்துக்கொண்டபோது, தனது குடும்பத்திலிருந்து தன்னை தனியே இழுத்துச்சென்ற ரஸ்ஸிய ராணுவ வீரர்கள் அருகிலிருந்த பாடசாலையில் வைத்து தன்மீது தொடர்ச்சியாகப் பாலியல் வன்கொடுமை புரிந்ததாக ஒரு பெண் கூறுகிறார். தன்னைக் கடுமையாகச் சித்திரவதை செய்த ரஸ்ஸிய ராணுவத்தினர் தனது தலைமுடியினை வெட்டி எறிந்ததோடு, முகம், கழுத்து, உடம்பில் ஏனைய பாகங்கள் என்று பலவிடங்களில் கத்தியால் கீறிக் காயப்படுத்தியதை கண்காணிப்பகத்திடம் காட்டியிருக்கிறார். ரஸ்ஸிய ராணுவம் ஆக்கிரமித்திருந்த பல பகுதிகளிலிருந்து வெளியே வந்த உக்ரேனியர்கள் கூறிய பொதுவான விடயம் தான் ரஸ்ஸிய ராணுவம் கொள்ளைகளில் ஈட்டுபட்டதென்பது. பல வீடுகளுக்குள் புகுந்த ரஸ்ஸிய ராணுவம் அங்கிருந்த உணவு, உடைகள் உட்பட பெறுமதியானவற்றைக் கொள்ளையடித்தபின்னர், வீடுகளை எரித்துவிட்டுச் சென்றிருக்கிறது. பெருமளவு வீடுகளில் சேமித்து வைக்கப்பட்டிருந்த எரிபொருட்களைக் கூட ரஸ்ஸிய ராணுவம் விட்டு வைக்கவில்லை.
  22. மனித உரிமைகள் கண்காணிப்பகம் அண்மையில் விடுத்திருக்கும் ரஸ்ஸியாவின் போர்க்குற்றங்கள் தொடர்பான அறிக்கை உக்ரேனில் தன்னால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளான செர்னிவ், கார்க்கிவ், கியிவ் ஆகிய பகுதிகளில் உக்ரேனிய மக்கள் மீது ரஸ்ஸிய ராணுவம் புரிந்துவருகின்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனிதநேயத்திற்கெதிரான குற்றங்கள் பலவற்றினை ஆவணப்படுத்தி வருகிறது. இவற்றுள் தொடர்ச்சியான பாலியல் வன்கொடுமைகள், ஆண்களைக் கூட்டமாக இழுத்துச் சென்று சுட்டுப் படுகொலை செய்தது, மாசி 27 முதல் பங்குனி 14 வரையான காலப்பகுதியில் பொதுமக்களைத் துன்புறுத்தியமை, அச்சத்தில் வைத்திருந்தமை ஆகியன அடங்கலான பல வன்முறைகளை ரஸ்ஸிய ராணுவம் புரிந்துள்ளது ஆவணமாக்கப்பட்டுள்ளது. அத்துடன், பொதுமக்களின் வீடுகளைச் சூறையாடிய ரஸ்ஸிய ராணுவம் உணவுப்பொருட்கள், உடைகள் மற்றும் விறகுகள் என்று பல்வேறுவிதமான உடைமைகளையும் கொள்ளையடித்துச் சென்றிருக்கின்றனர். இந்த வன்முறைகளில் ஈடுபட்டவர்கள் போர்க்குற்ரவாளிகள் என்று மனித உரிமைக் கண்காணிப்பகம் கூறுகிறது. "நாம் சேகரிக்கும் விபரங்கள் பேசக் கூசுபவை, வேண்டுமென்றே பொதுமக்களைக் குறிவைத்து மிகவும் குரூரமாக நடத்தப்பட்டவை" என்று மனிதவுரிமை கண்காணிப்பகத்தின் ஐரோப்பிய - மத்திய ஆசியாவுக்கான இயக்குனர் ஹியூ வில்லியம் தெரிவிக்கிறார். "அப்பாவி உக்ரேனியர்கள் மீதான கூட்டுப் பாலியல் வன்கொடுமைகள், கொலை, சித்திரவதை உட்பட்ட ஏனைய வன்முறைகள் போர்க்குறறங்களில் அடங்குவதால் அவை விசாரிக்கப்படுதல் அவசியம்" என்று அவர் கூறுகிறார். கண்காணிப்பகம் செவ்வி கண்ட 10 பொதுமக்களில் சிலர் நேரடியாகவே பாதிக்கப்பட்டவர்கள். சிலர் நேரடியான சாட்சிகள். இவர்கள் எல்லோருமே ரஸ்ஸியாவின் ஆக்கிரமிப்பின் கீழ் இருந்த பகுதிகளைச் சேர்ந்தவர்கள். பங்குனி 4 ஆம் திகதியன்று, தலைநகர் கியிவிலிருந்து 30 கிலோமீட்டர்கள் வட மேற்கில் அமைந்திருக்கும் புச்சா எனும் பகுதியை ஆக்கிரமித்துக்கொண்ட ரஸ்ஸிய ராணுவம் அங்கிருந்த 5 ஆண்களை இழுத்துச் சென்று அவர்களில் தலையில் சுட்டுக் கொன்றதைக் கண்ட சாட்சியொருவர் இதுபற்றிய தகவல்களை வழங்கியிருக்கிறார்.
  23. இங்கு ஒருவர் நான் எழுதிவிட்டு, கேள்விகளுக்குப் பயத்தில் காணாமல்ப் போய் ஒளித்துக்கொள்வதாகவும், பின்னர் வந்து சத்தமில்லாமல் எழுதுவதாகவும் விசனப்பட்டிருந்தார். அது துரோகத்தின் நாட்காட்டியில் நான் நேரம் கிடைக்கும்போது எழுதுவதை வைத்துக் கூறப்பட்ட ஒன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். என்ன செய்வது? செய்த துரோகம் அப்படி, பலவிடங்களிலும் தேடித்தான் எழுதவேண்டியிருக்கிறது. குறிப்பாக சிங்கள இனவாதிகளின் பக்கங்களிலிருந்து, அவர்களுக்குத்தானே கருணாவின் அருமை எங்களை விட நன்றாகத் தெரிகிறது, என்ன நான் சொல்வது? ஆகவே, இனியும் அங்கு நான் எழுதுவேன் என்பதைக் கூறிக்கொண்டு உக்ரேனுக்குள் செல்லலாம். உக்ரேனில் ரஸ்ஸியா புரிந்துவரும் போர்க்குற்றங்கள் தொடர்பான செய்தி ஆய்வு ஒன்றினை அடிப்படையாக வைத்தே இதனை எழுதுகிறேன். ஆனால், கடந்த இரு நாட்களில் புச்சா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுவரும் பல நூற்றுக்கணக்கான (ரஸ்ஸியாவினதும், ரஸ்ஸிய அனுதாபிகளினதும் பார்வையில் , நடிகர்கள்) ரஸ்ஸிய ராணூவத்தால் கொல்லப்பட்ட அப்பாவி உக்ரேனியர்களினதும் எண்ணிக்கை 400 ஐத் தாண்டிவிட்டிருக்கிறது என்பதையும், பல உக்ரேனியப் பெண்களை ரஸ்ஸிய ராணுவத்தினர் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கினர் (இது ரஸ்ஸியா உக்ரேனியப் பெண்களைத் தங்களது கண்களைப் போலக் காத்து நிற்கிறதெனும் ரஸ்ஸிய அனுதாபிகளின் நற்சான்றிதழ்களுக்கு மத்தியிலும்) என்கிற செய்தியையும் கூறிக்கொண்டே ஆய்வுக்குள் நுழையலாம்.
  24. இப்பிடியாவது எங்கடத் தாகயத்தைப் பிடிச்ச சனி குறையட்டும்!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.