Everything posted by ரஞ்சித்
- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
யாழ் நூலக எரிப்பு யாழ்ப்பாணம் நூலகம் பிரிகேடியர் வீரதுங்கவின் சுற்றிவளைப்பு மற்றும் தேடியழித்தல் இராணுவ நடவடிக்கைகளினால் போராளிகள் அடங்கி ஒடுங்கிவிட்டார்கள் என்று நினைத்த ஜெயார், தனது அரசியல் இருப்பினை மேலும் பலப்படுத்தும் முகமாக விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவினால் பிரேரிக்கப்பட்ட மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கான நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த விழைந்தார். இந்த விசேட ஆணைக்குழு ஜெயாரினால், நீதியரசர் விக்டர் தென்னாக்கோன் தலைமையில் 1979 ஆம் ஆண்டு ஆடி மாதம் 8 ஆம் திகதி அமைக்கப்பட்டிருந்தது. தனது பிரேரணைகளை ஆணைக்குழு 1980 ஆம் ஆண்டு சித்திரை மாதம் ஒரு அறிக்கையாகச் சமர்ப்பித்திருந்தது. தென்னக்கோனின் இந்த அறிக்கையில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருக்கும், தமிழ்ப் போராளி அமைப்புக்களுக்கும் இடையே உருவாகி வந்த விரிசலும் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது. மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கான அறிவிப்பை ஜெயார் வெளியிட்டிருந்த காலப்பகுதியில் , 1979 ஆம் ஆண்டின் பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கெதிராக தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைமை எதுவித நடவடிக்கைகளையும் எடுக்காதது குறித்து அக்கட்சியின் இளைஞர் பிரிவு தனது ஆட்சேபணையினை வெளியிட்டிருந்தது. வட மாகாணத்தின் பலவிடங்களிலும் தமது தலைமையினை விமர்சித்து சுலோககங்கள் எழுதப்பட்டிருந்தன. "நீங்கள் பெற்றுத்தருவதாகக் கூறிய ஈழம் இதுதானோ?" என்று ஒரு வாசகம் தலைமையைக் கேள்வி கேட்டிருந்தது. தந்தை செல்வாவின் இளைய மகனும், இந்தியக் கைக்கூலியுமான எஸ் சி சந்திரகாசன் 1979 ஆம் ஆண்டு மார்கழி 27 ஆம் திகதி அவசரகாலச் சட்டம் தற்காலிகமாக முடிவிற்குக் கொண்டுவரப்பட்ட வேளை மாவை சேனாதிராஜா சிறையிலிருந்து வெளியே வந்தார். வெளியே வந்ததும், சுதந்திரன் அமைப்பினரோடு சேர்ந்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வந்தார். சுதந்திரன் பத்திரிக்கை தந்தை செல்வாவினால் தனது சமஷ்ட்டிக் கட்சியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்வதற்காக உருவாக்கப்பட்டது. பின்னர் இப்பத்திரிக்கை தமிழர் ஐக்கிய முன்னணியின் கொள்கைகளையும் முன்னெடுத்துச் சென்றிருந்தது. 1977 ஆம் ஆண்டு தந்தை செல்வாவின் மரணத்திற்குப் பின்னர் அவரது இளைய மகனான எஸ் சி சந்திரகாசன் நடத்தி வந்தார். 1980 ஆண்டு சித்திரை 2 ஆம் திகதி இப்பத்திரிக்கை மிகவும் காரசாரமான தலையங்கத்தைத் தாங்கி வெளிவந்தது. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைமையினைக் கடுமையாக விமர்சித்திருந்த இப்பத்திரிக்கை, போலியான மாவட்ட அபிவிருத்திச் சபைகளைக் காட்டி தமிழரை ஏமாற்றாமல் தாம் உறுதியளித்தவாறு சுதந்திரத் தனிநாடு நோக்கிய பயணத்தை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தது. அக்காலத்தில் சுதந்திரன் பத்திரிக்கையின் ஆசிரியராக கோவை மகேசனே செயற்பட்டு வந்தார். கோப்பாயைச் சேர்ந்த மகேஸ்வர ஷர்மா தனது பெயரைக் கோவை மகேசன் என்று மாற்றியிருந்தார். அரசியல் மடல் எனும் தலைப்பில் அவர் எழுதிவந்த தீவிர அரசியல் கட்டுரை பலராலும் விரும்பிப் படிக்கப்பட்டு வந்தது. அவ்வாறானதொரு அரசியல் கட்டுரையில் மாவட்ட அபிவிருத்திச் சபைகள் தொடர்பாகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்த கோவை மகேசன் அதனை எள்ளி நகையாடியுமிருந்தார். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரின் உத்தியோகபூர்வப் பத்திரிக்கையாக இருந்தபோதும், கோவை மகேசனின் அரசியல் கட்டுரைப்பகுதியில் தலையிடுவதில்லை என்கிற தந்தை செல்வாவின் முடிவினால் அமிர்தலிங்கமோ அல்லது முன்னணியின் தலைவர்களோ கோவை மகேசன் முன்வைத்து வந்த விம்ர்சனங்களை கட்டுப்படுத்த முடியாமல்ப் போயிற்று. மேலும், முன்னணியினரின் கருத்துப்படி கோவ மகேசனுக்கு தந்தை செல்வாவின் மகனான சந்திரகாசனின் பலமான ஆதரவு இருந்தமையும் இதற்கான காரணங்களில் ஒன்றாக இருந்தது என்கிறர்கள். ஆகவே, கோவை மகேசனின் கடுமையான விமர்சனங்களுக்குப் பதிலளிக்க அமிர்தலிங்கம் உதயசூரியன் எனும் பெயரில் இன்னொரு பத்திரிக்கையினை ஆரம்பித்தார். அப்பத்திரிக்கையை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் உத்தியோகபூர்வ பத்திரிக்கை என்றும் அவர் அழைக்கத் தொடங்கினார். அப்பத்திரிக்கை பறவைகளே பறவைகளே எனும் தலைப்பில் விசேட பகுதியொன்றைத் தாங்கி வெளிவந்தது. இப்பகுதியை கோவை மகேசனின் விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் ஒரு களமாக அமிர்தலிங்கம் பாவித்து வந்தார். இவ்விரு பத்திரிக்கைகளினதும் ஏட்டிக்குப் போட்டியான அரசியல் விவாதங்கள் வாசகர்களான தமிழ் மக்களை பெரிதும் ஈர்த்திருந்தன. உதாரணத்திற்கு, கோவை மகேசன் ஒருமுறை சுதந்திரனில் பின்வருமாறு எழுதியிருந்தார், "சோறு வேண்டாம் சுதந்திரமே வேண்டும் பாலம் வேண்டாம் ஈழமே வேண்டும்" அதற்கு உதயசூரியனில் பதிலளித்த அமிர்தலிங்கம் பின்வருமாறு எழுதுகிறார், "சோறும் வேண்டும் சுதந்திரமும் வேண்டும் பாலமும் வேண்டும் அந்தப் பாலத்தை வைத்தே ஈழத்தை உருவாக்கும் விவேகமும் வேண்டும்". அவ்வேளை மாவை சேனாதிராஜாவும், உணர்வெழுச்சிகொண்ட இளையவர்களான ஈழவேந்தன், தர்மலிங்கம் ஆகியோரை உள்ளடக்கிய கோவை மகேசன் அமைப்பும் ஒருங்கிணைந்து வெளியிட்ட தீர்மானத்தில் 1980 ஆம் ஆண்டு வைகாசி 31 ஆம் திகதிக்குள் தனிநாடு நோக்கிய பயணத்தை முன்னணியினர் ஆரம்பிக்காதுவிடில், தாம் பிரிந்து சென்று அதனைச் செய்யப்போவதாக அச்சுருத்தியிருந்தனர். சிறிது நாட்களின் பின்னர், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரால் ஒருபோதுமே செயலில் இறங்கமுடியாது என்று விமர்சித்துவிட்டு மாவை சேனாதிராஜா அக்கட்சியிலிருந்து விலகிச் சென்றார். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கும், அதன் இளைஞர் பிரிவுக்கும் இடையிலான விரிசல் 1980 ஆம் ஆண்டு மேதினத்தில் அப்பட்டமாக வெளித்தெரிந்தது. அன்றைய நாளை முன்னணியினர் வழமையான மேதின பேரணியாக அனுஷ்ட்டித்தபோது, அதில் பங்கேற்ற தமிழ் இளைஞர் பேரவையினர், முன்னணியினரின் தலைமைப்பீடத்திற்கெதிராகக் கடுமையான கண்டனங்களை முன்வைத்தனர். "தமிழ் மக்களுக்கு உறுதியளித்ததன்படி எப்போது தமிழ் ஈழத்திற்கான பாராளுமன்றத்தை உருவாக்கப்போகிறீர்கள்?", "உங்கள் பாராளுமன்றப் பதவிகளைத் தூக்கியெறிந்துவிட்டு தனிநாட்டிற்கான விடுதலைப் போராட்டத்தை உடனே ஆரம்பியுங்கள்", "அதிகாரப் பலம் தளபதியையே பாதை மாற வைத்துவிட்டதோ?" என்று சுலோகங்கள் எழுப்பப்பட்டன. இது அமிர்தலிங்கத்திற்கு சினத்தை ஏற்படுத்தியது. ஆகவே, பேரணியின் நிறைவில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் மிகவும் ஆக்ரோஷமாக அவர் பேசினார். அவ்வுரையில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைமையினை விமர்சிப்பவர்கள் மீதும், போராளிகள் மீதும் கடுமையான விமர்சனங்களை அவர் முன்வைத்தார். போராளி அமைப்புக்களை எள்ளி நகையாடிய அமிர்தலிங்கம், "சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது" என்று பகிரங்கமாக ஏளனம் செய்தார். தொடர்ந்து உரையாற்றிய அமிர்தலிங்கம், "நீங்கள் சிறு குழுக்களாக அலைந்து திரிகிறீர்கள். நீங்கள் அழிவுகளையே எம்மீது கொண்டுவரப்போகிறீர்கள்" என்று கடிந்தும் கொண்டார். அப்போது தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவராக இருந்த சிவசிதம்பரம் அமிர்தலிங்கத்தின் நிலைப்பாட்டை ஆதரித்துப் பேசினார். தலைமையினை விமர்சிப்பவர்களைப் பார்த்து, "அமிர்தலிங்கத்தை அகற்றிவிட்டு உங்களால் எதையாவது சாதிக்க முடியுமா?" என்று அவர் கேட்டார். உங்களின் ஆதரவிற்கு நன்றியண்ணா
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
இயக்கத்தை விட்டு வெளியேறிய பிரபாகரன் பிரபாகரனின் நிலைப்பாட்டிற்குத் தன்னை முழுமையாக அர்ப்பணித்தார் பாலசிங்கம். ஆனால், பிரபாகரனுக்கும் உமா மகேஸ்வரனுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் சிக்கலை எப்படியாவது தீர்த்துவிடவேண்டும் என்று அவர் தொடர்ந்தும் முயற்சிசெய்தார். ஆகவே, மத்திய குழுவின் முதலாவது தீர்மானத்தின்படி உமாவும் ஊர்மிளாவும் தமக்கிடையே இருக்கும் பாலியல் உறவினை ஒத்துக்கொண்டு வெளிப்படையாகத் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று அவர்களை பாலசிங்கம் கேட்டார். ஆனால், இதனை உமாவும், ஊர்மிளாவும் முற்றாக மறுத்துவிட்டனர். சரி, உடனடியாக இல்லாவிட்டாலும், குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகாவது திருமணம் முடிப்பதாக ஒப்புதல் தாருங்கள் என்று கேட்டார் பாலசிங்கம். அதற்கும் அவர்கள் இருவரும் மசியவில்லை. பாலசிங்கம் கூறுவதுபோல் எதிர்காலத்தில் திருமணம் முடிக்க தாம் ஒத்துக்கொண்டால், தாம் குற்றமிழைத்தவர்கள் என்பதை ஒத்துக்கொள்வதாக இருக்கும் என்பதால், தாம் ஒருபோதும் பாலசிங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்கப்போவதில்லை என்று அவர்கள் கூறிவிட்டனர். உமாவின் ஆதரவாளர்கள் பாலசிங்கத்தை, பிரபாகரன் உமா மகேஸ்வரனுக்கு எதிராகத் தூண்டிவிடுவதாக விமர்சிக்கத் தொடங்கினர். பாலசிங்கத்திற்கு சிறப்பான தங்குமிட வசதிகளைச் செய்துகொடுத்ததன் மூலம், அவரை தன்பக்கத்திற்குப் பிரபாகரன் இழுத்துவைத்திருக்கிறார் என்றும் குற்றஞ்சாட்டினர். ஆனால், பாலசிங்கத்திற்கு ஒழுங்குசெய்யப்பட்டிருந்த தங்குமிடம் எவ்வளவு அசெளகரியமானதென்பதை பாலசிங்கத்தின் சந்திப்பின்போதே பிரபாகரன் முதன் முதலில் அறிந்துகொண்டார். ஆகவே, பாலசிங்கம் தம்பதிகள் தங்குவதற்கென்று ஓரளவிற்கு வசதியான விடுதியொன்றினைத் தேடுமாறு தனது சகாக்களுக்குப் பணித்தார் பிரபாகரன். புதிதாக ஒழுங்குசெய்யப்பட்ட விடுதி குறித்து அடேல் திருப்தி தெரிவித்தததுடன், அதனை ஒழுங்கு செய்தமைக்காக பிரபாகரனுக்கு நன்றியும் தெரிவித்தார். தனது போராளிகளின் செளகரியங்கள் குறித்து பிரபாகரன் கொண்டிருந்த அக்கறையே ஏனைய போராளித் தலைவர்களிடமிருந்து அவரை வேறுபடுத்திக் காட்டியது. தனது போராளிகளுக்கு சிறந்த உணவு, சுத்தமான உறைவிடம், தரமான குடிநீர் ஆகியவற்றை வழங்குவதில் பிரபாகரன் கவனமெடுத்துச் செயற்பட்டு வந்தார். அவரின் பரம வைரிகளான இலங்கை இராணுவத்தினர் இதுகுறித்துக் குறிப்பிடுகையில், "பிரபாகரனின் இந்த அக்கறையே புலிப் போராளிகளை உத்வேகத்துடன் போராட ஊக்குவித்திருந்தது" என்று கூறுகிறார்கள். அருளர் தனது அனுபவம் பற்றிக் குறிப்பிடுகையில், பூந்தோட்டம் பயிற்சி முகாமிற்கு ஒருமுறை பிரபாகரனைச் சந்திக்க மதிய வேளைக்குப் பின்னர் அவர் போயிருந்தார். காட்டிற்குச் சென்ற பிரபாகரன் இரு காட்டுக் கோழிகளை வேட்டையாடி வந்து அவருக்குச் சமைத்து உணவளித்ததாக கூறுகிறார். மேலும் தண்ணீரைக் கொதிக்கவைத்துக் குடிப்பது பிரபாகரனின் வழக்கம். தனது போராளிகளுக்கும் இதனையே பிரபாகரன் சொல்லிவந்தார். தன்னோடு எப்போதுமே கொதிக்கவைத்து ஆறிய நீரைப் போத்தலில் இட்டு வைத்துக்கொள்வார் பிரபாகரன். தனது பாதுகாப்பு நடவடிக்கைகளில் கொதித்தாறிய நீரை எடுத்துவைத்துக்கொள்வதும் ஒரு அங்கமாக இருந்தது. பிரபாகரனும், பாலசிங்கமும் அடிக்கடி சந்தித்துக்கொள்ளத் தொடங்கியதுடன், கருத்துக்களையும் பரிமாறிக் கொள்ளத் தொடங்கினர். தமிழ்நாட்டுப் பாராளுமன்ற உறுப்பினர்களின் தங்கும் விடுதியில் செஞ்சி ராமச்சந்திரனின் அறையில் பாலசிங்கம் நடத்திய அரசியல் வகுப்புக்களில் பிரபாகரனும் கலந்துகொள்வார். உமாவும் இந்த வகுப்புகளில் கலந்துகொண்டதுண்டு. பாலசிங்கத்தின் வகுப்பில் அவர் சொல்வதைக் கவனமாகக் கேட்டுக்கொண்டிருக்கும் பிரபாகரன் ஒருபோதும் அவரைக் குறுக்கிட்டுக் கேள்வி கேட்டதில்லை என்று கூறும் அடேல் பாலசிங்கம், உமாவோ அடிக்கடி பாலசிங்கத்தைக் குறுக்கிட்டு அடுக்கடுக்காகக் கேள்விகளைக் கேட்டு வந்ததாகவும் குறிப்பிடுகிறார். சிலவேளைகளில் பாலசிங்கம் கூறுவதைத் தவறென்றும் உமா வாதாடியதாகவும், இது பாலசிங்கத்தை பலமுறை எரிச்சலடைய வைத்திருந்ததாகவும் அடேல் கூறுகிறார். பிரபாகரன் நோக்கி பாலசிங்கம் சாய்வதற்கும் பிரபாகரனின் இந்த நற்குணம் ஒரு காரணமாக அமைந்திருந்ததாகவும் அடேல் மேலும் கூறுகிறார். பிரபாகரனுக்கும், உமா மகேஸ்வரனுக்கும் இடையிலான பிணக்கினைத் தீர்க்கமலேயே பாலசிங்கம் லண்டன் திரும்பினார். உமாவை இயக்கத்தை விட்டு வெளியேறுமாறு பிரபாகரன் தொடர்ந்தும் அழுத்தம் கொடுத்து வந்தார். இப்பிணக்கு நீட்டிக்கப்பட்டு வந்தமையினால் சலிப்படைந்த சில மூத்த உறுப்பினர்கள் உமாவிடம் சென்று பிரபாகரனை நேரில் சந்தித்து பிணக்கினை சுமூகமாகத் தீர்க்கும்படி கேட்டுக்கொண்டார்கள். அவர்களின் அந்த சமரச முயற்சியும் தோல்வியைச் சந்தித்தது. ஊர்மிளாவின் பாதம் மீது பிரபாகரன் காறி உமிழ்ந்தபோது ஊர்மிளா அழத் தொடங்கியதுடன், "என்னை ஏன் இங்கு அழைத்து வந்தீர்கள்? இப்படி என்னை நடத்துவது நியாயமா?" என்று அவர் கேட்டார். பிரபாகரனின் செயலுக்காக அவர் ஊர்மிளாவிடம் மன்னிப்புக் கோரவேண்டும் என்று சில மூத்த உறுப்பினர்கள் கேட்டனர், பிரபாகரன் மறுத்துவிட்டார். பிரபாகரனின் கோரிக்கையான இயக்கத்தை விட்டு விலக வேண்டும் என்பதை பிடிவாதமாக மறுத்துவிட்ட உமா, பிணக்கு இன்னமும் ஆளமாகக் காரணமானர். இயக்கத்திற்குள் உருவாகிவந்த சிக்கலை தீர்ப்பதற்கு பிரபாகரன் 1980 ஆம் ஆண்டின் ஆரம்பப்பகுதியில் மீண்டும் இலங்கைகு வந்தார். ஊரில் இருந்த தனது ஆதரவாளர்களைத் தூண்டிவிட்ட உமா மகேஸ்வரன், தனது முன்னைய புகார்களான போராட்டத்தின் வழிமுறை, உள்ளக ஜனநாயகம் குறித்துத் தொடர்ந்தும் வாக்குவாதப்படும்படி கோரியிருந்தார். அவரின் திட்டத்தின்படி அவரது ஆதரவாளர்கள் இவற்றிற்கு மீளவும் உயிர்கொடுத்து அமைப்பினுள் சர்ச்சைகள் தொடர்ச்சியாக உருவாகக் காரணமாக இருந்தனர். உமா இன்னுமொரு சர்ச்சையினையும் உருவாக்கினார். அதாவது பிரபாகரன் அமிர்தலிங்கத்தின் கட்டளைப்படியே ஆடுவதாக அவர் குற்றஞ்சாட்டினார். இது ஓரளவிற்கு உண்மைதான், பிரபாகரன் அமிர்தலிங்கம் மீது அபிமானம் வைத்திருந்தார். அமிர்தலிங்கத்திற்கும் பிரபாகரனைப் பிடித்திருந்தது. ஈழத்திற்காகப் பிரபாகரன் கொண்டிருந்த அர்ப்பணிப்பை மெச்சிய அமிர்தலிங்கம், ஆயுதப்போராட்டம் ஒன்றினைத் தலைமைதாங்கி நடத்தும் ஆளுமை பிரபாகரனிடம் இருப்பதாக முழுமையாக நம்பியிருந்தார். அமிர்தலிங்கத்துடன் சிறந்த நட்புறவைப் பிரபாகரன் பேணிவந்தார். தமிழ் மக்களின் உரிமைகளுக்காக அமிர்தலிங்கம் செய்த தியாகங்களை பிரபாகரன் பெரிதும் மதித்தார். ஈழ விடுதலைக்காக அமிர்தலிங்கம் கொண்ட அர்ப்பணிப்பை மெச்சிய பிரபாகரன், "இந்த குணாம்சமே எம் இருவரையும் பிணைத்து வைத்திருக்கிறது, இந்த பொதுவான இலட்சியம் உயிர்ப்புடன் இருக்கும்வரை எமது சிநேகம் தொடர்ந்திருக்கும்" என்று தன்மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும்போது பிரபாகரன் தனக்கும் அமிர்தலிங்கத்திற்கும் இருக்கும் சிறப்பான சிநேகம் குறித்து குறிப்பிட்டிருந்தார். பிரபாகரன் மீது விமர்சனங்களை முன்வைப்பவர்கள் பழைய சம்பவங்கள் குறித்து தொடர்ந்தும் பேசி வந்ததுடன், அவரின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தவும் முயன்று வந்தனர். பற்குணராஜா மற்றும் மைக்கேல் (மட்டக்களப்பு) ஆகியோரின் கொலைகள் பிரபாகரனின் தவறுகளாலேயே நடத்தப்பட்டதாகக் அவர்கள் கூறினர். பற்குணராஜாவே அல்பேர்ட் துரையப்பா கொல்லப்பட்டபின்னர் தப்பிச்செல்லும்போது காரை ஓட்டிச் சென்றவர் என்பதுடன், ஆரம்பக் காலங்களில் புலிகளுக்கும் ஈரோஸ் அமைப்பிற்கும் இடையே உறவினை ஏற்படுத்துவதில் முக்கியமானவராகவும் கருதப்பட்டவர். அவரும், மைக்கேலும் மத்திய குழுவின் ஒருமித்த தீர்மானத்திற்கமைய இயக்க ஒழுக்கத்தை மீறியதற்காகக் கொல்லப்பட்டிருந்தனர். மத்திய குழுவின் இந்த முடிவினை முதலில் ஆதரித்து வக்களித்த நாகராஜ இறுதியில் அக்கொலைகளுக்கான பழியினைப் பிரபாகரன் மீது சுமத்தினார். புலிகள் இயக்க ஆரம்ப உறுப்பினர்களின் தகவல்களின்படி பற்குணராஜாவை வவுனியாவிற்கு அழைத்துச் சென்று கொன்றதே நாகராஜா தான் என்று கூறுகிறார்கள். பிரபாகரன் இலங்கைக்கு மீள வந்ததன் பிறகு, உருவாகிவந்த சிக்கலான சூழ்நிலைபற்றி விவாதிக்க, யாழ்ப்பாணத்திலும், வவுனியாவிலுமாக மத்திய குழு இருமுறை கூடியிருந்தது. இரு கூட்டங்களும் மிக காரசாரமாக இடம்பெற்றிருந்தன. முதலாவதாக யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் மத்திய குழுவிற்கு புதியதாக 5 உறுப்பினர்கள் தேர்வுசெய்யப்பட்டனர். இயக்கத்தின் நடவடிக்கைகளுக்கு தானே இறுதியான முடிவினை எடுப்பேன் என்று பிரபாகரன் மத்திய குழுவினரிடம் உறுதிபடத் தெரிவித்தார். மற்றையவர்கள் இதனை எதிர்த்தார்கள். அனைத்து முடிவுகளும் கூட்டாகவே எடுக்கப்படவேண்டும் என்று அவர்கள் கோரினார்கள். அதற்கு ஏளனத்துடன் பதிலளித்த பிரபாகரன், "அப்படியானால், நாமும்கூட இன்னொரு அரசியல்க் கட்சியாக மாறிவிடுவோம். பேசிக்கொண்டிருப்பதுடன், செயலில் ஒருபோதும் இறங்கப்போவதில்லை" என்று கூறினார். வவுனியாவில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய நாகராஜா, பரா மற்றும் ஐய்யர் ஆகியோர் புலிகள் இயக்கத்தை பாரிய போராட்ட அமைப்பாக மாற்றவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். பிரபாகரனைப் பொறுத்தவரை அக்கோரிக்கை மிகையானதாகத் தெரிந்தது. ஆயுதப் போராட்ட கரந்தடிப்படை ஒன்றினை உருவாக்கும் தனது திட்டங்கள் உடையத் தொடங்குவதாக பிரபாகரன் உணரத் தலைப்பட்டார். இதனால் அவர் வெறுப்படைந்தார். கண்களில் கண்ணீருடனும், தழுதழுத்த குரலுடனும் பிரபாகரன் பின்வருமாறு கூறினார், "இந்த இயக்கத்திற்காக நான் பல விடயங்களைச் செய்திருக்கிறேன். ஆனால், எவரும் அதனை உணர்ந்துகொண்டுள்ளதாகத் தெரியவில்லை. இன்றுடன் நான் புலிகள் அமைப்பிலிருந்து விலகிக்கொள்கிறேன்" என்று கூறிவிட்டு வெளியேறி நடக்கத் தொடங்கினார். அங்கிருந்த பலருக்கு அது பாரிய அதிர்ச்சியைக் கொடுத்ததுடன், சிலர் அவரின் கைகளைப் பற்றிச் செல்லவேண்டாம் என்று வேண்டத் தொடங்கினர். ஆனால், பிரபாகரன் எவரின் சொல்லையும் கேட்கத் தயாராக இருக்கவில்லை. கூட்டத்தில் இருந்த ஒருவர் தனது கைத்துப்பாக்கியினை பிரபாகரனிடம் நினைவுச் சின்னமாகக் கொடுக்க முனைய, பிரபாகரன் அதனை ஏற்க மறுத்து விட்டார். அவர் வெளியேறி சென்றார். வெறுங்கைய்யுடன், ஆனால் புதிய சரித்திரம் ஒன்றினைப் படைக்கும் திடமான உறுதியுடன் அவர் சென்றார். அங்கிருந்து சென்ற பிரபாகரன், தின்னைவேலியில் அமைந்திருந்த தனது மாமனாரின் வீட்டில் சிறிது காலம் தங்கியிருந்து தனது எதிர்காலம் குறித்துச் சிந்தித்து வந்தார். தன்னுடன் ஆரம்பத்தில் இணைந்த தோழர்களும், சேர்த்த ஆயுதங்களுமின்றி பிரபாகரன் இருந்தபோதிலும், தான் அப்படியே தொடர்ச்சியாகப் பயணிக்க முடியாதென்பதை அவர் உணர்ந்தே இருந்தார். தன்னுடன் சேர்ந்து பயணிக்க அர்ப்பணிப்புள்ள சில இளைஞர்களையும், சில ஆயுதங்களையும் சேகரித்துக்கொண்டு, தனது உறவினர்கள் தலைமையேற்று நடத்திவரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்துடன் கூட்டணியொன்றினை அமைத்து சேர்ந்து பயணிக்கலாம் என்று அவர் எண்ணினார். தனது மாமனாரின் உதவியுடன், அவரது வீட்டில் டெலோ இயக்கத்தின் தங்கத்துரை, குட்டிமணி மற்றும் நடேசுதாசன் ஆகியோருடன் இதுகுறித்துப் பேசுவதற்காக கூட்டமொன்றினை ஒழுங்குசெய்தார். தங்கத்துரையிடம் மிகவும் உணர்ச்சிவசப்பட்டுப் பேசிய பிரபாகரன், "நான் அன்று உங்களின் தம்பியாக விட்டு விலகிச் சென்றேன். இன்று அதே தம்பியாக உங்களிடம் மீளவும் வந்திருக்கிறேன்" என்று கூறினார். பிரபாகரன் தனித்துச் சுதந்திரமாகச் செயற்பட தாம் அனுமதியளிப்பதாகவும், அவருக்கு சில ஆயுதங்களைத் தரவிரும்புவதாகவும் குட்டிமணி கூறினார். மதுரை மீனாட்சியம்மன் ஆலயம் பிரபாகரனை தமது இயக்கத்தினுள் மீள உள்வாங்குவதன் மூலம் இரு அமைப்புக்களும் சேர்ந்தியங்கலாம் என்று தங்கத்துரை தீர்மானித்தார். தமிழ்நாட்டில் டெலோ அமைப்பினருக்குப் பயிற்சியளிக்க உருவாக்கப்படடவிருந்த முகாம்களுக்கு பொறுப்பாக பிரபாகரனை நியமிக்கலாம் என்கிற தங்கத்துரையின் விருப்பத்திற்கு பிரபாகரனும் சம்மதித்தார். திருச்சிக்குச் சென்ற பிரபாகரன் பயிற்சி முகாம்களை உருவாக்கினார்.அவரும், அவரின் தோழர்களும் இணைந்து காட்டிற்கு அருகில் அமைந்திருந்த மேய்ச்சல் நிலங்களைத் துப்பரவு செய்து கொட்டகைகளை அமைத்தனர். தமது உணவைத் தாமே தயாரித்ததுடன், பாய்களில் படுத்துறங்கினர். பிரபாகரன் இரண்டாவது முகாமை மதுரையில் உருவாக்கினார். இந்திய ராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற அதிகாரிகளின் உதவியினை பயிற்சிகளுக்குப் பிரபாகரன் பயன்படுத்தினார். புலேந்திரனுடன் சந்தோஷம் மாஸ்ட்டர் ஆனாலும் பிரபாகரனின் மனது அமைதியடையவில்லை. யாரோ ஒருவரின் அமைப்பிற்கு பயிற்சிகளை ஒருங்கிணைப்பதும், பயிற்றுவிப்பதும் அவருக்கு உவப்பானதாக இருக்கவில்லை. தான் தனித்துச் செயற்பட வேண்டும் என்று அவர் விரும்பினார். தனக்கு விசுவாசமான அமைப்பொன்று தனக்குத் தேவை என்பதை அவர் உணர்ந்தார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டதாரியான அரியாலையைச் சேர்ந்தவரும் பின்னாட்களில் திருகோணமலை மாவட்டத்தின் புலிகளின் தளபதியாகப் பணியாற்றியவருமான சந்தோஷம் என்னிடம் அன்றைய காலம் குறித்துக் கூறுகையில், பிரபாகரன் 1978 இலிருந்து 1980 வரையான காலப்பகுதியில் இரு முக்கியமான விடயங்களைக் கற்றுக்கொண்டதாக என்னிடம் கூறினார். முதலாவது , தனக்கு முற்று முழுதான விசுவாசத்தைக் காட்டும் அமைப்பொன்றினை உருவாக்க வேண்டும் என்பது. இரண்டாவது, இயக்கத்தின் அனைத்துத் தீர்மானங்களையும் எடுக்கும் அதிகாரம் தன்னிடத்திலேயே இருக்க வேண்டும் என்பது. சந்தோசம் மேலும் என்னுடன் பேசுகையில், ஆரம்பத்தில் தன்னுடன் இணைந்த பல உறுப்பினர்களிடமிருந்து பெருமளவு பிரச்சினைகளை பிரபாகரன் எதிர்கொண்டதாகக் கூறினார். "அவர்களில் பெரும்பாலானவர்கள் பேச்சில் மட்டுமே ஆர்வம் கொண்டவர்களாக இருந்தனர். ஒரு சின்னப்பிரச்சினையினைக் கூடத் தீர்க்க முடியாமல் விதண்டாவாதங்களில் ஈடுபட்டிருந்தனர். ஒவ்வொருவரும் தத்தமது திசையிலேயே இயக்கம் இயங்கவேண்டும் என்று ஒருவருக்கொருவர் எதிராகச் செயற்பட்டனர். அப்படியானவர்களைக் கொண்டு எந்த விடுதலை இயக்கமும் வெற்றிபெற முடியாது" என்று பிரபாகரன் தன்னிடம் கூறியதாகக் கூறினார். முத்துக்குமாரசாமி தலைமையில் தமிழ் விடுதலைக் கழகம் என்கிற பெயரில் சில காலம் மட்டுமே அமைப்பாகவிருந்து, செயற்பாடுகள் ஏதுமின்றி காணாமற்போன ஒரு குழுவினர் குறித்துப் பிரபாகரன் கடுமையான விமர்சனங்களைக் கொண்டிருந்ததாகவும், சமூக சீர்திருத்தம் ஒன்றின்மூலமே அவர்கள் விடுதலையினை வேண்டி நின்றதாகவும் கூறினார். தனக்கு விசுவாசமாகவிருந்த முன்னாள் போராளிகள் சிலருடன் பிரபாகரன் மீண்டும் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டார். பேபி சுப்பிரமணியம், பண்டிதர், ராகவன், கிட்டு, செல்லக்கிளி மற்றும் சீலன் ஆகியோர் அவருடன் இருந்தனர். அத்துடன் ஆயுதங்களையும் சேகரிக்கத் தொடங்கினார் பிரபாகரன். அவர் முதலில் வாங்கிய ஆயுதம் 0.38 மி மீ கைத்துப்பாக்கியாகும். 1970 இல் தயாரிக்கப்பட்ட 0.38 கொல்ட் வகை துப்பாக்கி ஜி - 3 ரக ரைபிள் அத்துப்பாக்கியினை இந்தியர் ஒருவரிடமிருந்து 300 ரூபாய்களுக்கு அவர் வாங்கினார். பின்னர் ஓய்வுபெற்ற இந்திய இராணுவ அதிகாரி ஒருவரிடமிருந்து 3000 ரூபாய்களுக்கு ஜி - 3 ரக ரைபிள் ஒன்றினை வாங்கினார். அப்பணத்தைச் சேகரிப்பதற்கு அவர் அதிகம் சிரமப்பட வேண்டியிருந்தது. இந்தத் துப்பாக்கியைக் கொள்வனவு செய்வதில் பிரபாகரனுடன் சேர்ந்து செயற்பட்ட கிட்டு, விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வ மடலான "விடுதலைப் புலிகள்" இல் பேட்டியளிக்கும்போது ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதில் சிரமங்களைச் சந்தித்த பிரபாகரன், "நாம் இப்படியே ஆயுதங்களைக் கொள்வனவு செய்துகொண்டிருக்க முடியாது. எதிர்காலத்தில் எதிரியிடமிருந்தே நாம் ஆயுதங்களைக் கைப்பற்ற வேண்டும்" என்று பிரகடணம் செய்ததாகக் கூறியிருக்கிறார். அச்செவ்வியில் கிட்டு மேலும் கூறும்போது, எதிரியிடமிருந்து ஆயுதங்களைக் கைப்பற்றுவது என்பது எமது கொள்கையில் ஒரு திருப்புமுனையான தீர்மானமாக இருந்தது. அதன் பின்னர் தாக்குதல்களின்போது எதிரியின் ஆயுதங்களைக் கைப்பற்றுவதென்பது முக்கிய கடமையாகவும் ஆகிப்போனதென்றும் கூறுகிறார். தலைவருடன் கிட்டு, சொர்ணம் மற்றும் போராளிகள் பிரபாகரன் தனது அமைப்பினை மீளுருவாக்கம் செய்வதிலும், தங்கத்துரையும் குட்டிமணியும் தமது போராளிகளுக்கு பயிற்சியளிப்பதிலும் மும்முரமாக ஈடுபட்டிருக்க 1980 ஆம் ஆண்டு பெரும்பாலும் சம்பவங்கள் அற்ற அமைதியான ஆண்டாகவே கடந்து சென்றது. இந்த அசாதாரண அமைதி ஜெயாருக்கும், அமிர்தலிங்கத்திற்கும் மிகவும் தவறான செய்தியொன்றைச் சொல்லியிருந்தது. ஜெயாரைப்பொறுத்தவரை வீரதுங்கவின் சுற்றிவளைப்பு மற்றும் தேடியழித்தல் நடவடிக்கைகள் தமிழ் ஆயுதக் குழுக்களை முழுமையாக ஒடுக்கிவிட்டதாக நினைத்திருந்தார். அதேவேளை, அமிர்தலிங்கமும் ஜெயாரின் ராணுவ நடவடிக்கைகளால் போராளி அமைப்புக்கள் பலவீனமாகிவிட்டதாகவும், ஆகவே இனிமேல் அவர்களைத் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவது சுலபமாகிவிடும் என்றும் நம்பத் தலைப்பட்டார்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரனைச் சந்தித்த பாலசிங்கம் பாலசிங்கம் தமிழ்நாட்டிற்கு வந்திறங்கிய இரவு இரு சந்திப்புக்களில் கலந்துகொண்டார். முதலாவது உமா மகேஸ்வரனுடனும் அவரது குழுவுடனும் இடம்பெற்றது. புலிகள் இயக்கத்திற்காக பாலசிங்கம் உருவாக்கியிருந்த துண்டுப்பிரசுரங்கள் பற்றியே அந்தச் சந்திப்பு இடம்பெற்றிருந்தது. புலிகள் பற்றிய பாலசிங்கத்தின் ஆவண்ங்கள் உமா மகேஸ்வரனின் வேண்டுகோளுக்கு அமையவே எழுதப்பட்டன. ஒவ்வொரு அத்தியாயத்தையும் எழுதியவுடன் உமாவுக்கு அதனை அனுப்பிவைத்த பாலசிங்கம், உமா அவற்றைத் திருத்திச் சரி பிழை பார்த்தபின்னர் மீண்டும் பாலசிங்கத்திற்கு இறுதிவடிவமாக்க அனுப்பி வைப்பது வழமை. ஆகவே, அன்றைய சந்திப்பு ஒரு உத்தியோகபூர்வ சந்திப்பாகவே இருந்தது. அடேல் பாலசிங்கம் ஆனால், பிரபாகரனுடனான பாலசிங்கத்தின் சந்திப்பு வித்தியாசமானதாக இருந்தது. மிகவும் தோழமையாக, நட்புறவுடன் அச்சந்திப்பு இடம்பெற்றிருந்தது. சரித்திரத்தின் இரு முக்கிய கதாப்பாத்திரங்களின் முதலாவது சந்திப்பாக அது அமைந்தது. நள்ளிரவளவில் அச்சந்திப்பு நிகழ்ந்தது. பெரிய ஆர்ப்பாட்டம் ஏதுமின்றி பிரபாகரனும், பேபி சுப்பிரமணியமும் சந்திப்பிற்கு வந்திருந்தார்கள். பிரபாகரன் நீளக் காற்சட்டையும், மென்மையான நிறத்தில் அச்சிடப்பட்ட மேற்சட்டையினையும் அணிந்திருந்தார். பேபி சுப்பிரமணியம் வழமை போல வெண்ணிற வேட்டியும், நஷணல் மேலாடையும் அணிந்திருந்தார். கூடவே தன்னுடன் ஒரு பை நிறைய ஆவணங்களையும், அரசியல் கட்டுரைகளையும் எடுத்து வந்திருந்தார். அடேல் பாலசிங்கம் தான் எழுதிய விடுதலைக்கான வேட்கை எனும் புத்தகத்தில் இந்தச் சந்திப்புக் குறித்து எழுதும்பொழுது, அன்று தான் பிரபாகரனிடம் அவதானித்த ஆளுமையின் பண்புகள் எப்படி அவரை உலகத்தின் தலைசிறந்த்ச கெரில்லாத் தலைவராக உருவாக்கியிருந்தது என்பதுபற்றி எழுதுகிறார். "பயங்கவராதிகள் என்றழைக்கப்பட்ட, இளமையான, அப்பாவிகளாகத் தோற்றமளித்த அந்த இரு இளைஞர்களையும் பார்த்தபோது ஒருகணம் எனது கண்களை என்னால் நம்பமுடியாது போய்விட்டது. அவர்கள் பற்றி நான் அறிந்துகொண்டவைக்கும் அவர்களின் உருவ அமைப்புக்களுக்கும் இடையே எந்த ஒற்றுமையினையும் நான் காணவில்லை. சற்றுக் குட்டையான, நேர்த்தியாக உடையணிந்து காணப்பட்ட அந்த இரு இளைஞர்களைப் பார்த்தபோது, மிகவும் அப்பாவிகளாகத் தெரிந்தார்கள்" என்று அவர் எழுதுகிறார். பிரபாகரன் நேர்த்தியாக உடை அணிந்திருந்தார். பின்னர் வல வருடங்களாக பிரபாகரனின் விடுதலைப் பயணத்தில் பயணித்த அடேல் பின்வருமாறு கூறுகிறார், "தலைமுடியினை சீராக வாருவது அவருக்கே உரித்தான ஒரு பண்பு. உடையணிதல் என்பது வழக்கமான சம்பிரதாயங்கள் போன்று உடுத்தோமா, கிளம்பினோமா என்பது போல அல்ல பிரபாகரனுக்கு. அவரைப்பொறுத்தவரையில் அது ஒரு நிகழ்வு. அன்றிரவு எம்மைச் சந்திக்க வந்தபோது அவர் முழுமையாக ஆயுதம் தரித்திருந்தார். மிகவும் தளர்வான மேற்சட்டைக்குள் இடுப்பில் பத்திரமாக செருகப்பட்டிருந்த அவரது பிரத்தியேக ஆயுதத்தை கூர்ந்து கவனித்தாலன்றி, சாதாரணமாகத் தெரிந்துவிடாது. தனது மேலாடையினை இலகுவாக கழற்றி தனது ஆயுதத்தை துரிதமாக வெளியே எடுக்கும்வகையில் அழுத்தப் பொத்தான்களை அவர் தனச்து மேலாடைக்குப் பாவித்திருந்தார்". பிரபாகரனின் இளமையான முகம் நேர்த்தியாகச் சவரம் செய்யப்பட்டு, பிரகாசமாகவும் தெளிவாகவும் இருந்தது. அவரின் ஊடுருவிப் பார்க்கும், அகன்ற கறுத்த விழிகள் பற்றி அடேல் பின்வருமாறு எழுதுகிறார், " அவர் உங்களைக் கூர்ந்து பார்க்கும்போது அவரது பார்வை உங்களின் உள்ளத்தை ஊடுருவிப் போவது உங்களுக்குப் புலப்படும். அவரது பார்வையின் ஆளம் அவரின் மனதையும், எண்ணங்களையும் வெளிக்காட்டும். பிரபாகரனுடனான எனது வாழ்க்கையில் அவரது ஆள ஊடறுத்து நோக்கும் பார்வை பல விடயங்களை எனக்குச் சொல்லித் தந்திருக்கிறது". தலைவருடன் எங்கள் தேசத்தின் குரல் அந்தச் சந்திப்பு நள்ளிரவில் இருந்து அதிகாலைவரை தொடர்ந்தது. அடேலைப் பொறுத்தவரை பிரபாகரனும் பாலசிங்கமும் ஒருவரை ஒருவர் அனுமானிக்கவும், கணிப்பிடவும், புரிந்துகொள்ளவும் அந்தச் சந்தர்ப்பத்தைப் பாவித்துக்கொண்டார்கள் என்று எழுதுகிறார். ஒவ்வொருவரும் ஈழம் எனும் தனிநாட்டிற்காக எவ்வளவு அர்ப்பணிப்புடன் இருக்கிறார் என்பதை நாடிபிடித்தறிவதே அவர்கள் இருவரினது நோக்கமாக இருந்தது. பாலசிங்கத்தின் முகபாவனைகள் ஊடாகவும், அவரை அரசியல் ரீதியிலான கேள்விகளைக் கேட்பதன் மூலமாகவும் அளவிடத் தொடங்கினார் பிரபாகரன். தன்னுடன் பேசும்போது, பாலசிங்கத்தின் முகபாவனையின்போது அசைந்த ஒவ்வொரு தசையினையும் பிரபாகரன் கூர்ந்து கவனித்தார். பாலசிங்கத்தின் பின்புலம், அவரது நம்பிக்கைகள் குறித்து பிரபாகரன் அறிந்துகொள்ள விரும்பினார். சேகுவேரா மற்றும் மாஒ சேதுங் ஆகியோர் பற்றிய கட்டுரைகளை பாலசிங்கம் மொழிபெயர்த்தது பற்றியும், தானாக எழுதிய அரசியற் கட்டுரைகள் பற்றியும் பிரபாகரன் கேட்டுத் தெரிந்துகொண்டார். சரித்திரப் பெருமைமிக்க உறவொன்றினை அன்று ஆரம்பித்துக்கொண்ட அவர்கள் இருவரும் அதனை இறுதிவரை தொடர்ச்சியாகப் பேணிவந்தனர். அந்தச் சந்திப்பு நிறைவுபெறும் நேரம் வந்ததும், பாலசிங்கம் இரு விடயங்கள் குறித்து பேசலாம் என்று எண்ணினார். முதலாவது பிரபாகரனுக்கும் உமா மகேஸ்வரனுக்கும் இடையிலான முறுகல் நிலையினைச் சரிசெய்வது. இரண்டாவது புலிகளின் உறுப்பினர்களுக்கு அரசியல்ப் பாடங்களை நடத்துவது. அரசியல்ப் பாடங்களை எடுப்பதற்கு உடனேயே சம்மதித்த பிரபாகரன், தானும் அதில் கலந்துகொள்ள விரும்புவதாகக் கூறினார். ஆனால், முறுகல் நிலையினைத் தளர்த்துவது குறித்துப் பிடிவாதமாக இருந்தார். "தனது கொள்கைகளை காற்றில்ப் பறக்கவிட்ட ஒருவருடன் என்ன சமரசம் வேண்டிக் கிடக்கிறது?" என்று அவர் பாலசிங்கத்திடம் கேட்டார். "இது எமது போராட்டத்தையே அழித்துவிடும்" என்ற அவரே தொடர்ந்தார். தமிழர்கள் மிகவும் பலவீனமான நிக்லையில் இருப்பதாகப் பிரபாகரன் கூறினார். அடிமை வாழ்வை நோக்கி தமிழர்கள் தள்ளப்பட்டுவருவதாக அவர் கூறினார். அரச படைகளைக் கொண்டும், தமது சனத்தொகைப் பலத்தைக் கொண்டும் ஆளும் சிங்கள வர்க்கம் தமிழர்களை அடிமைகளாக நடத்த எத்தனிக்கிறது என்று அவர் கூறினார். தமிழர்களின் சமாதான வழியிலான போராட்டங்கள் முற்றாகத் தோற்றுவிட்டன என்று அவர் கூறினார். பெரும்பான்மையினரின் விருப்பங்களை சிறுபான்மையினர் மேல் திணிக்கும் அளவிற்கு சனநாயகம் விபச்சாரப் பொருளாக மாறியிருப்பதாக அவர் கூறினார். ஆகவே, தமிழர்களுக்கு முன்னாலிருக்கும் ஒரே வழி ஆயுத ரீதியிலான போராட்டம் மட்டுமே என்று பாலசிங்கத்திடம் அவர் எடுத்துக் கூறினார். பாலசிங்கம் உடனடியாகப் பிரபாகரனின் பேச்சில் கவரப்பட்டுப் போனார். தனது பின்வரும் கூற்றின்மூலம் பிரபாகரன் பாலசிங்கத்தை தன்பக்கம் இழுப்பதில் பூரண வெற்றி கண்டார். "இலங்கை அரசாங்கம் ஒரு அடக்குமுறை அரசாகும். இந்த அரசு சிங்கள இனவாதிகளின் கைகளில் சிக்கியிருக்கிறது. தமிழர்களை அடக்குமுறைக்கு உட்படுத்த தனது ஆயுதங்களான இராணுவத்தையும், பொலீஸாரையும் அது பாவிக்கிறது. ஆகவே, தமிழர்களின் முன்னால் உள்ள முதலாவது எதிரிகளாக இருப்பது சிங்கள இராணுவமும், பொலீஸும்தான். தமிழர்களின் சமாதான ரீதியிலான போராட்டங்களையும், வன்முறை ரீதியிலான போராட்டங்களையும் இவை கொடுமையாக நசுக்கி வருவதோடு, சிங்களவரின் கீழ் முற்றான அடிபணிதலுக்கும் தள்ளி வருகின்றனர்". "இராணுவமும், பொலீஸாரும் தமது எதிரிகள் என்பதை தமிழர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். அவர்களுக்கெதிராக அவர்கள் போராட வேண்டும்". "ஆயுதப் போராட்டம் ஒன்றினை ஆரம்பிக்கும் முகமாக தமிழர்கள் ஒன்றுதிரளவேண்டும். கற்பித்தல் வழிகள் மூலமும், பிரச்சாரம் மூலமும் இதனைச் செய்வதென்பது சாத்தியமில்லாததுடன், நேர விரயமும் ஆகும். இராணுவம் மீதும் பொலீஸார் மீதும் மிகவும் கடுமையாகத் தாக்க வேண்டும். அவர்கள் பதிலுக்கு தமிழர்கள் மீது தாக்குதலை மேற்கொள்வார்கள். இது மக்களை தமது தேசம் மீது, விடுதலை மீது அக்கறை கொள்ளவைக்கும். மக்கள் போராளிகளிடம் அடைக்கலம் தேடி வருவார்கள்". "இராணுவத்தையும், பொலீஸாரையும் தமிழர்களின் எதிரிகளாகக் காட்டுவதன் மூலம், போராளிகளை அவர்களின் பாதுகாவலர்களாக காட்ட முடியும். இதன்மூலம் ஆயுதப்போராட்டத்தை வளர்த்தெடுக்க முடியும்". "மக்களின் நம்பிக்கையினை வளர்த்தெடுப்பதும், அதனைத் தக்கவைப்பதும் மிகவும் கடிணமான ஒரு காரியம். ஒழுக்கமே இவை எல்லாவற்றிற்கு மிக அவசியமானது. மக்களின் காவலர்கள் ஒழுக்கமின்றிச் செயற்பட முடியாது. ஒழுக்கமின்றிப் போனால், எமது ஆயுதப் போராட்டம் முற்றாக உருக்குலைந்துபோகும்". என்று பிரபாகரன் பாலசிங்கத்திடம் கூறினார்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
புலிகளுக்குள் ஏற்பட்ட பிளவு உமா மகேஸ்வரனிற்கும் ஊர்மிளாவுக்கும் இடையிலான பாலியல் உறவு உமா மகேஸ்வரனும் ஊர்மிளாவும் பாலியல் ரீதியில் தொடர்பில் உள்ளார்கள் என்று தோழர்கள் தன்னிடம் கூறியபோது பிரபாகரனால் அதனை நம்பமுடியவில்லை. ஆனால், அச்செய்தி உண்மைதான் என்று அறிந்தபோது அவர் மிகவும் கோபமடைந்தார். இயக்கத்தின் தலைவரான ஒருவரே தான் கடைப்பிடிக்கவேண்டிய ஒரு கொள்கையினை மீறுவதென்பது பிரபாகரனினால் நினைத்துப்பார்க்க முடியாத ஒரு குற்றமாகக் கருதப்பட்டது. உமாவை இயக்கத்திற்குள் கொண்டுவந்து, அவரையே அரசியல்த் தலைவராக உருவாக்குவதில் பிரபாகரன் ஆற்றிய பங்கு அளப்பரியது. பிரபாகரனுக்கெதிரான பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட இந்த நகர்வு காரணமாக அமைந்திருந்தது. வெளியார் ஒருவரை இயக்கத்திற்குள் கொண்டுவந்தது மட்டுமல்லாமல், அவரையே தலைவராகவும் அமர்த்தியது இயக்கத்திற்குள் இருந்த பல மூத்த உறுப்பினர்களுக்கு உவப்பானதாக இருக்கவில்லை. அது பிரபாகரனின் இரண்டாவது பிழை என்று அவர்கள் முணுமுணுத்து வந்திருந்தார்கள். முதலாவது தவறு எதுவென்றால், செட்டி தனபாலசிங்கத்தை புதிய தமிழ்ப் புலிகள் அமைப்பின் தலைவராக பிரபாகரன் நியமித்திருந்தது அவர்களால் சுட்டிக் காட்டப்பட்டது. செட்டி வங்கிக்கொள்ளைப் பணத்தைச் சுருட்டிக்கொண்டதுடன், இறுதியில் புலிகள் பற்றிய தகவல்களை பொலீஸாருக்கு வழங்கும் உளவாளியாகவும் மாறிப்போனார். செயலில் இறங்கும் போராளிகளை எப்போதுமே மதித்து வந்த பிரபாகரன், செட்டியின் செயல்த்திறனிற்காக அவர்மீது நம்பிக்கை வைத்திருந்தார். உமா மகேஸ்வரன் விடுதலைப் போராட்டம் குறித்து முற்றான முற்றான அர்ப்பணிப்புடன் செயற்பட்டமையினாலும், அமிர்தலிங்கம் உமாவையும் இயக்கத்திற்குள் சேர்த்துக்கொள்ளுங்கள் என்று பிரபாகரனிடம் கேட்டிருந்தமையினாலும் பிராபாகரன் உமாவை இயக்கத்தினுள் சேர்த்திருந்தார். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் இளைஞர் பிரிவான தமிழ் இளைஞர் பேரவையின் கொழும்புக் கிளையின் காரியாதரிசியாக இயங்கிவந்த உமா, அமைப்பு வேலைகளில் மிகவும் ஈடுபாட்டுடன் உழைத்து வந்தார். உமா சர்வதேச விடுதலைப் போராட்டங்கள் பற்றி அதிகளவு விடயங்களைத் தெரிந்து வைத்திருந்ததாலும், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மிகவும் தேர்ச்சி பெற்று விளங்கியதாலும், தன்னை விடவும் 10 வயது அதிகமாக இருந்ததனாலும் பிரபாகரன் அவரை தலைவராக பதவியில் அமர்த்தினார். தன்னைக் காட்டிலும் சிறந்த பேச்சாற்றல் கொண்டவராக உமா காணப்பட்டதும், அவரே தலைவராக இருக்கத் தகுதியானவர் என்று பிரபாகரன் முடிவெடுத்தமைக்கு இன்னுமொரு காரணம். . 1978 ஆம் நடைபெற்ற மத்திய குழுக் கூட்டம் ஒன்றிற்கு உமாவையும் தன்னுடன் அழைத்துச் சென்றிருந்த பிரபாகரன், அங்கிருந்தவர்களுக்கு அவரை அறிமுகம் செய்து வைத்த பின்னர், அவரைத் தலைவராக பரிந்துரை செய்வதாகக் கூறினார். உமா கொண்டிருந்த சர்வதேசத் தொடர்புகள் மற்றும் அவரது தொடர்பாடல் ஆற்றல் ஆகியவற்றை இயக்கம் உபயோகித்துக்கொள்ள முடியும் என்று பிரபாகரன் அங்கிருந்தவர்களிடம் கூறினார். புலிகள் இயக்கத்தின் கொள்கைகளை தான் முற்றாகக் கடைப்பிடிக்கப்போவதாக உறுதியளித்த உமா, குடும்ப வாழ்க்கை, பாலியலுறவு, மாற்றியக்கங்களுடன் சேர்தல் அல்லது புதிதாக இன்னொரு இயக்கத்தை ஆரம்பித்தல், மதுபானம் புகைப்பிடித்தல் ஆகியவை உட்பட இன்னும் பல விடயங்களை முற்றாகத் தவிர்த்து இலட்சியத்திற்காக உழைப்பேன் என்று அவர் உறுதியளித்தார். உமாவிற்கும் ஊர்மிளாவுக்கும் இடையிலான பாலியல் உறவு உறுதிப்படுத்தப்பட்டபோது, இயக்கத்தில் தலைமைப் பொறுப்பிலிருந்து உடனடியாக விலகுமாறு உமாவிடம் கூறினார் பிரபாகரன். "நீங்கள் இயக்கத்தின் தலைவராக இருக்கிறீர்கள். நீங்களே இயக்கத்தில் தடைசெய்யப்பட்ட ஒரு விடயத்தைச் செய்தீர்களென்றால், மற்றையவர்கள் என்னதான் செய்யமாட்டார்கள். நான் கட்டி வளர்க்கும் இயக்கத்தை நீங்கள் அழிக்க நான் ஒருபோதும் இடமளிக்க மாட்டேன். ஆகவே உடனடியாக விலகிச் செல்லுங்கள்" என்று உமாவைப் பார்த்து கர்ஜித்தார் பிரபாகரன். ஆனால், உமா மாறவில்லை. தனது எதிரிகள் தனக்கெதிராக சதித்திட்டம் ஒன்றை நடத்திவருவதாகவும், தான் எந்தத் தவறும் இழைக்காததால் , தலைமைப் பொறுப்பிலிருந்து விலகப்போவதில்லை என்றும் பிடிவாதம் பிடித்தார். உமாவின் காரணங்களை பிரபாகரன் ஏற்கும் நிலையில் இல்லை. யாழ்க்குடா நாட்டில் வீரதுங்கவின் அட்டூழியங்கள் பெருகிவந்த நிலையில், இயக்கத்தின் மத்திய குழு 1979 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் கூடியது. அங்கு கூடிய மத்தியகுழு உமாவிடம் இரண்டு தெரிவுகளை முன்வைத்தது, 1. திருமணம் முடியுங்கள் அல்லது 2. தலைமைப் பொறுப்பிலிருந்து இராஜினாமாச் செய்யுங்கள். என்பவையே அவையிரண்டும். ஆனால், உமா இதில் எதனையும் ஏற்கத் தயாராக இருக்கவில்லை. இதனால், உமாவை இயக்கத்திலிருந்து விலக்கும் முடிவினை மத்திய குழு எடுத்தது. மத்திய குழுவின் ஏனைய மூன்று உறுப்பினர்களான பரா, நாகராஜா மற்றும் ஐய்யர் ஆகியோர் உமாவை விலக்கும் முடிவிற்கு ஆதரவாக நின்றார்கள். இயக்கத்தின் தலைவர் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இயங்கவேண்டும் எனும் பிரபாகரனின் கொள்கையினை அவர்கள் முற்றாக ஆமோதித்தார்கள். "தலைமைப்பொறுப்பில் இருக்கும் ஒருவர் மீது எள்ளளவு சந்தேகம் வரினும், அவர் உடனடியாக விலக வேண்டும்" என்று நாகராஜா வாதாடினார். 1984 ஆம் ஆண்டு, பிரபாகரன் முதன்முதலாக வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்குப் பேட்டியளித்திருந்தார். அந்தச் செய்தியாளரான அனித்தா பிரதாப்பிடம் பேசும்போது "ஒரு புரட்சிகர அமைப்பின் தலைவராக இருப்பவர் தனது அமைப்பின் ஒழுக்கத்திற்கு தன்னை முற்றாக அர்ப்பணித்தவராக இருக்கவேண்டும். தலைவரே அடிப்படை விதிகளையும், கொள்கைகளையும் மீறிச் செயற்படும்போது , இயக்கத்திற்குள் குழப்பகரமான சூழ்நிலை தோன்றுவதோடு, ஈற்றில் அதுவே இயக்கத்தை முற்றாக அழித்து விடும்" என்று கூறினார். மேலும், இயக்கத்திற்குள் உருவான பிரச்சினையினை, தான் புலிகள் இயக்கத்திற்கும், உமா மகேஸ்வரன் எனும் தனிநபருக்கும் இடையிலான வேறுப்பாடக் கருதுவதாகக் கூறினார். "இந்தப் பிரச்சினைக்கு நான் எந்தவிதத்திலும் பொறுப்பேற்க முடியாது. உமா மகேஸ்வரனே இந்த பிரச்சினையை உருவாக்கினார். இயக்கத்தின் ஒழுக்கக் கோட்ப்பாட்டினை மீறியவர் உமா மகேஸ்வரனே. ஆகவே, ஒழுக்காற்று நடவடிக்கையாக அவரை மத்தியகுழுவினூடாக இயக்கத்திலிருந்து வெளியேற்றினோம். இந்த இயக்கத்தை ஆரம்பித்தவன் என்கிற வகையிலும், உமா மகேஸ்வரனை இயக்கத்திற்குள் கொண்டுவந்தவன் என்கிற வகையிலும், மத்திய குழு எடுத்த முடிவை நடைமுறைப்படுத்துவதைத்தவிர எனக்கு வேறு எந்த வழிகளும் இருக்கவில்லை" என்றும் கூறினார் பிரபாகரன். அனித்தா பிரதாப் மேலும், புலிகளின் லண்டன் அலுவலகத்துடன் தொடர்புகொண்டு, உமா பற்றிய குற்றச்சாட்டுக்கள பற்றி விளக்கமளித்தார் பிரபாகரன். லண்டனில் வசித்துவந்த புலிகளின் உறுப்பினரான கிருஷ்ணனிடம் பேசும்போது, உமா ஈழம் எனும் இலட்சியத்திற்கு தகுதியற்றவர் என்று கூறினார். "ஒழுக்கமற்ற ஒரு தலைவனால், மக்களை விடுதலை நோக்கி அழைத்துச் செல்ல முடியாது" என்று அவர் கூறினார். இதனைக் கேட்டுவிட்டு பின்னர் பேசிய கிருஷ்ணன், "பிரச்சினையினைப்பேசித் தீர்க்கலாம், நான் அன்டன் ராஜாவை உவ்விடம் அனுப்புகிறேன்" என்று பிரபாகரனிடம் கூறியிருக்கிறார். உமா பதவி விலகுவதற்குப் பிடிவாதமாக மறுத்துக்கொண்டே இருந்தார். இது நீண்ட உள் விவாதங்களுக்கு வித்திட்டது. சில மூத்த உறுப்பினர்கள் பிரபாகரன் தொடர்ந்தும் உமாவை வற்புறுத்தத் தேவையில்லை என்று எண்ணம் கொண்டிருந்தனர். சூழ்நிலைகளின் தாக்கத்தால் உமா தவறு செய்திருப்பதால், அவரை மன்னித்து ஏற்றுக்கொள்ளலாம் என்று அவர்கள் எண்ணத் தலைப்பட்டனர். ஆனால், பிரபாகரன் அசரவில்லை. "ஒழுக்கம் என்று வரும்போது விட்டுக்கொடுப்புகளுக்கு இடமில்லை. எல்லோரும் இயக்க விதிகளை முழுமையாகப் பின்பற்றியே ஆகவேண்டும்" என்று தனது முடிவில் உறுதியாக நின்றார் பிரபாகரன். கிருஷ்ணன் இந்தப் பிரச்சினைக்குச் சுமூகமான தீர்வொன்றை எட்டவே விரும்பினார். கிருஷ்ணனும், அன்டன் ராஜாவும் அப்போதுதான் மூன்றாம் உலக விடுதலைப் போராட்ட அமைப்புக்களிடம் தொடர்பினை ஏற்படுத்தி புலிகள் பற்றியும் அவர்களது போராட்டம் பற்றியும் விழிப்புணர்வினை உருவாக்கும் நடவடிக்கைகளில் லண்டனில் ஈடுபடத் தொடங்கியிருந்தனர். உமா மகேஸ்வரனையே புலிகளின் தலைவராகவும் அவர்கள் அறிமுகப்படுத்தியிருந்தனர். "நாங்கள் மீண்டும் ஒருமுறை அவர்களிடம் போய், எமது தலைவர் இயக்க விதிகளுக்கு முரணாக பாலியல் உறவில் ஈடுபட்டதனால் அவரை விலக்கிவிட்டோம் என்று எம்மால் சொல்ல முடியாது" என்று கிருஷ்ணன் பிரபாகரனிடம் கெஞ்சினார். தாம் எதிர்நோக்கும் இந்தச் சிக்கல் குறித்து சென்னையில் பிரபாகரனைச் சந்தித்தபோது அன்டன் ராஜா விளங்கப்படுத்தினார். "இது ஒரு பெரிய பிரச்சினையா?" என்று பிரபாகரனைப் பார்த்துக் கேட்டார் அன்டன் ராஜா. இதைக் கேட்டதும் கோபமடைந்த பிரபாகரன், "லண்டனில் வாழும் உங்கள் போன்ற ஆட்களுக்கு இது ஒரு பிரச்சினையாகத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், இங்கு, எமது சமூகத்தில் இது ஒரு பெரிய பிரச்சினைதான். இயக்கத்தில் சேரும் தமது பெண்பிள்ளைகளை தலைவர்கள் பாலியல் வன்புணர்ந்து வருகிறார்கள் என்று தெரிந்தால், எந்தப் பெற்றோராவது தமது பெண்பிள்ளைகளை இயக்கத்திற்கு அனுப்புவார்களா?" என்று ஆவேசத்துடன் அன்டன் ராஜாவைப் பார்த்துக் கேட்டார். ஊர்மிளா என்று அறியப்பட்ட கந்தையா ஊர்மிளாதேவியே புலிகள் இயக்கத்தின் முதலாவது பெண்போராளியாகும். தமிழ் இளைஞர் பேரவையின் கொழும்புக் கிளையில் ஈடுபாட்டுடன் பணிபுரிந்து வந்த ஊர்மிளா, உமாவுடன் நெருங்கிப் பழகிவந்தார். உமாவின் பரிந்துரையின் பேரிலேயே ஊர்மிளா புலிகள் இயக்கத்திற்குள் இணைத்துக்கொள்ளப்பட்டார். அன்டன் ராஜாவை பல வருடங்களுக்குப் பின்னர் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. என்னிடம் பேசிய அவர், "பிரபாகரன் கேட்ட கேள்விக்கு என்னிடம் பதில் இருக்கவில்லை, நான் லண்டனுக்கே திரும்பிச் சென்றுவிட்டேன்" என்று கூறியிருந்தார். பிரபாகரனுக்கும் உமா மகேஸ்வரனுக்கும் இடையே ஏற்பட்டிருந்த பிரச்சினையினை தீர்க்கும் தனது முயற்சியை லண்டன் அலுவலகம் கைவிட விரும்பவில்லை. ஆகவே, இன்னொருமுறை முயன்று பார்க்கலாம் என்று கிருஷ்ணன் எண்ணினார். இம்முறை, தன்னுடன் மத்தியஸ்த்தத்திற்கு இன்னுமொருவரையும் அழைத்துச் சென்றார் கிருஷ்ணன். அவர்தான் அன்டன் பாலசிங்கம். தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆயுத ரீதியிலான போராட்ட முன்னெடுப்பினை நியாயப்படுத்தி பிரசுரங்களையும், புத்தகங்களையும் பாலசிங்கம் வெளியிட்டு வந்ததனால் பிரபாகரனால் மிகவும் மதிக்கப்பட்டவராக இருந்தார். ஆனால், அந்தக் கட்டத்தில் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்திருந்தது. மத்தியகுழுவினரால தன்னை விலக்குவதாக எடுக்கப்பட்ட முடிவினை முற்றாக நிராகரித்திருந்த உமா, பின்னர் தானே புலிகள் இயக்கத்தின் தலைவர் என்றும், தனது இயக்கமே உண்மையான புலிகள் இயக்கம் என்றும் உரிமை கோரத் தொடங்கினார். உமாவின் விசுவாசிகளில் ஒருவரான சுந்தரம் என்று அழைக்கப்பட்ட எஸ் சிவசண்முகமூர்த்தி, புலிகளால் சேமித்துவைக்கப்பட்ட ஆயுதங்களைத் திருடி வேறிடங்களுக்கு மாற்றத் தொடங்கியபோது, உமாவின் உரிமைகோரலுக்கான காரணம் வெளித்தெரியவந்தது. இது பிரபாகரனை மிகவும் சினங்கொள்ள வைத்திருந்தது. உடனே செயலில் இறங்கிய பிரபாகரன் ஏனைய மறைவிடங்களிலிருந்து ஆயுதங்களை அப்புறப்படுத்தியதுடன், அவை உமாவின் கைகளுக்குக் கிடைப்பதையும் தவிர்த்துவிட்டார். 1979 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில், புலிகள் இயக்கத்தினுள் ஏற்பட்ட பிரச்சினையைத் தீர்க்கும் நோக்குடன், பாலசிங்கத்தையும், அவரது இரண்டாவது மனைவியான அவுஸ்த்திரேலியப் பெண்மணி அடேலையும் அழைத்துக்கொண்டு மும்பாயூடாக சென்னைக்குப் பயணமானார் கிருஷ்ணன். அக்காலத்தில் தமிழ்நாட்டில் புலிகள் இயக்கம் மிகவும் இரகசியமாகவே இயங்கிவந்தது. பாலசிங்கம் உள்ளே நுழைவதை மீனாம்பாக்கம் விமான நிலைய அதிகாரிகள் அதிகம் விரும்பியிருக்கவில்லை. அவர்களை அழைத்துச் செல்ல வந்திருந்த பேபி சுப்பிரமணியம் தூரத்தில், மக்களுடன் மக்களாக நின்று நடப்பதை உன்னிப்பாக அவதானித்துக்கொண்டு நின்றார். பின்னர் ஒருவாறு சுங்க அலுவல்களை முடித்துக்கொண்டு கிருஷ்ணனுன், பாலசிங்கம் தம்பதிகளும் வாடகை வண்டியொன்றில் ஏறி அவர்களுக்கென்று முன்பதிவு செய்யப்பட்டிருந்த விடுதி ஒன்றிற்குச் சென்றனர். மிகவும் அழுக்காக, துப்பரவின்றி, ஒழுகும் மலசலகூடத்தைக் கொண்டிருந்த அந்தச் சிறிய அறையில் பாலசிங்கம் தம்பதிகளைத் தங்கவைத்துவிட்டு கிருஷ்ணன் அவசர அவசரமாகப் பிரபாகரனைச் சந்திக்கச் சென்றார்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
உச்சநீதிமன்றத்தைப் பணியவைத்த ஜெயார் இவையெல்லாவற்றைக் காட்டிலும் உச்சநீதிமன்றத்துடன் ஜெயார் நடந்துகொண்ட விதமே மிகவும் மோசமாகக் காணப்பட்டது. 1978 ஆம் ஆண்டு விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை ஜெயார் அமைத்ததிலிருந்தே இந்தப் பிணக்கு உருவானது. இந்த ஆணைக்குழு சிறிமாவையும், அவரது அமைச்சரவையில் முக்கியவராகக் கருதப்பட்ட பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்கவையும் விசாரிக்கவே உருவாக்கப்பட்டிருந்தது. இந்த ஆணைக்குழுவின் சட்டபூர்வமான தன்மையினைக் கேள்விகேட்டு சிறிமாவோ உச்ச நீதிமன்றில் வழக்கொன்றைத் தாக்கல் செய்திருந்த அதேநேரம், பீலிக்ஸ் பண்டாரநாயக்கவோ இந்த ஆணைக்குழுவிற்கும் அதன் நீதிபதிகளுக்கும் எதிரான அதிகார வினாப் பேராணைகளை தாக்கல் செய்திருந்தார். இந்த ஆணைக்குழுவின் நீதிபதிகளில் ஒருவரான அல்விஸ், ஊழலில் ஈடுபட்டு நிரூபிக்கப்பட்ட கொழும்பு நகர மேயரான ஏ எச் எம் பெளசியுடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டார் என்பதை முன்வைத்து, விசாரணைக் குழுவில் இடம்பெற அல்விஸுக்குத் தகமை கிடையாதென்று வாதிட்டிருந்தார். அல்விஸின் மகனிடமிருந்து பெளசியின் மகளுக்கு கொள்வனவுசெய்யப்பட்ட நிலத்திற்கு பெளசி பணம் செலுத்தியது மற்றும் அல்விஸின் மகனின் வீடொன்றில் வாடகைக்கு பெளசியின் மனைவி அமர்ந்துகொண்டது ஆகிய இரு நடவடிக்கைகளிலும் அல்விஸே பெளசியின் மகன் சார்பில் சட்டத்தரணியாகச் செயலாற்றியிருந்தார். ஏ எச் எம் பெளசி பீலிக்ஸின் வழக்கினை விசாரித்த பிரதம நீதியரசர்களான சமரகோன், விமலரட்ண மற்றும் கொலின் தொம்மே ஆகியோர் அளித்த தீர்ப்பின்படி ஜெயாரின் விசேட ஆணைக்குழுவின் நீதிபதி அல்விஸ் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஒரு நீதிபதியாகத் தொழிற்பட தகுதியற்றவர் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ஜெயார், அல்விஸை நீதியரசர்கள் விமலரட்னணைக்கும், கொலின் தொம்மேக்கும் எதிராக, "தன்மீதான தனிப்பட்ட காரணங்களுக்காக தனக்கெதிராகத் தீர்ப்பளித்தார்கள்" என்கிற குற்றச்சாட்டுடன் ஜனாதிபதியான தன்னிடம் முறைப்பாட்டு மனுவொன்றினைத் தருமாறு கூறினார். தனது எடுபிடியான காமிணி திசாநாயக்காவைக் கொண்டு பாரளுமன்றத்தில் அல்விஸின் மனுவை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று தீர்மானம் ஒன்றையும் ஜெயார் கொண்டுவந்தார். மேலும், ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டில் பேசும்போது, தான் நீதித்துறைக்கும் சட்டங்களுக்கும் மேலானவர் என்றும், தான் விரும்பியதைச் செய்யும் அதிகாரம் தனக்கிருப்பதாகவும் பேசினார். ஈவிரக்கமற்ற கொலைகாரன் என்று அறியப்பட்ட பொலீஸ் அத்தியட்சகர் பிரேமதாச உடுகம்பொல தான் கூறியதுபோலவே செய்யவும் தலைப்பட்டார் ஜெயார். 1982 ஆம் ஆண்டு சர்வஜன வாக்கெடுப்பிற்கான பிரச்சாரங்கள் நடைபெற்றுவந்த வேளையில் மதகுருக்களின் குரல் எனும் பெயரில் சில பெளத்த பிக்குகளும், கத்தோலிக்க குருக்களும் எதிர்க்கட்சியின் வேட்பாளரான ஹெக்டர் கொப்பேக்கடுவவுக்கு ஆதரவாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த அமைப்பின் தலைவராக தெரமிடிபொல ரட்னசார தேரோ எனும் பிக்கு கடமையாற்றினார். இந்த அமைப்பால் வெளியிடவென அச்சடித்து வைக்கப்பட்டிருந்த 20,000 துண்டுப்பிரசுரங்களையும், அச்சகத்தையும் இழுத்து மூடினார் பொலீஸ் அத்தியட்சகர் உடுகம்பொல. இதற்கெதிராக உச்ச நீதிமன்றில் வழக்கொன்றைத் தாக்கல் செய்த ரட்னசார தேரர், பேச்சுச் சுதந்திரத்தின் மீதான தலையீடு என்று தனது அமைப்பின் துண்டுப்பிரசுரங்கள் பொலீஸாரால் கையகப்படுத்தப்பட்டதைக் குற்றஞ்சாட்டியிருந்தார். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், உடுகம்பொல செயல்ப்பட்ட விதம் பேச்சுச் சுதந்திரத்திரத்தைப் பறிக்கும் செயல் என்றும், பாதிக்கப்பட்ட மனுதாரருக்கு நட்ட ஈடாக 10,000 ரூபாய்களையும், வழக்கிற்கான செலவுகளையும் உடுகம்பொல செலுத்தவேண்டும் என்றும் தீர்ப்பளித்தது. இதற்குப் பதிலளிக்கும் விதமாகச் செயற்பட்ட ஜெயார், உடுகம்பொலவை சிரேஷ்ட்ட பொலீஸ் அத்தியட்சகராகப் பதவியுயர்வு கொடுத்ததுடன், வழக்கின் இழ்ப்பீட்டுச் செலவுகளை அரசே வழங்கும் என்றும் கூறினார். விவியேன் குணவர்த்தன ஜெயாரின் இந்த செயல், அரசுக்குச் சார்பாக தாம் எதைச் செய்தாலும், அரசு தமக்குப்பின்னால் நிற்கும் எனும் தைரியத்தைப் பொலீஸாருக்குக் கொடுத்திருந்தது. இதன்படி, சரியாக ஒரு வாரத்திற்குப் பின்னர் கொள்ளுப்பிட்டிய பொலீஸார் சட்டத்தை தம் கைகளில் எடுத்துச் செயற்பட்டிருந்தனர். 1982 ஆம் ஆண்டு, பங்குனி 8 ஆம் நாள், உலக பெண்கள் தினத்தை முன்னிட்டு லங்கா சம சமாஜக் கட்சியின் உறுப்பினர் விவியேன் குணவர்த்தன தலைமையிலான பெண்கள் குழுவினர் கொள்ளுப்பிட்டியில் அமைந்திருந்த அமெரிக்க தூதுவராலயத்திற்கு மனுவொன்றைனைக் கையளிக்கச் சென்றிருந்தனர். அது ஒரு அமைதியான ஊர்வலமாகத்தான் இடம்பெற்றிருந்தது. தமது மனுவினை அமெரிக்க உயர்ஸ்த்தானிகரின் பிரதிநிதியிடம் கையளித்துவிட்டு திரும்பும் வழியில் அவர்கள் மேல் பாய்ந்து தாக்குதல் நடத்திய கொள்ளுப்பிட்டிய பொலீஸார், அவர்கள் கொண்டுவந்திருந்த பதாதைகளைப் பறித்து கிழித்தெறிந்தனர். பெண்கள்மீது பொலீஸாரால் நடத்தப்பட்ட தாக்குதலைப் படம்பிடித்த புகைப்படக் காரர் ஒருவரும் கடுமையாகத் தாக்கப்பட்டுக் கைதுசெய்யப்பட்டார். பேரணியில் பொலீஸார் நடந்துகொண்ட விதம் பற்றிப் பேசுவதற்காக விவியேன் கொள்ளுப்பிட்டிய பொலீஸ் நிலையத்திற்குச் சென்றார். பொலீஸ்நிலையத்தில் கடுமையாகத் தாக்கப்பட்ட விவியேன், பொலீஸாரினால் கீழே விழுத்தப்பட்டு கால்களால் உதைக்கப்பட்டார். பின்னர் அவரையும் பொலீஸார் கைதுசெய்திருந்தனர். உச்ச நீதிமன்றில் பொலீஸாரின் அடாவடித்தந்திற்கெதிராக வழக்கொன்றைத் தாக்கல் செய்தார் விவியேன். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்று, விவியேனின் கைது சட்டத்திற்குப் புறம்பானதென்றும், இழப்பீடாக 2500 ரூபாய்களை பொலீஸார் செலுத்த வேண்டும் என்றும் மேலும் விவியேன் மீதும், பேரணி மீதும் தாக்குதல் நடத்திய பொலீஸார் அனைவரின்மீதும் பொலீஸ் மா அதிபர் சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறித் தீர்ப்பளித்தது. ஆனால், உச்ச நீதிமன்று தீர்ப்பளித்த மறுநாளான ஆனி 9 ஆம் திகதி, பேரணி மீது தாக்குதல் நடத்திய பொலீஸ் குழுவின் அதிகாரியான உதவிப் பொலீஸ் பரிசோதகர் ஜெயாரின் உத்தரவின் பெயரில் பதவியுர்வு வழங்கப்பட்டது. தீர்ப்பு வழங்கப்பட்டு இருநாட்களின் பின்னர், தீர்ப்பினை வழங்கிய மூன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகளினதும் வீடுகளுக்கு அரச வாகனங்களில் சென்ற காடையர்கள், அவர்களைக் கொல்லப்போவதாக மிரட்டியதுடன், ஆபாசமாகவும் திட்டிவிட்டுச் சென்றனர். காடையர்கள் தமது வீடுகளைச் சுற்றி கோஷமிட்டுக்கொண்டிருக்கும்பொழுது, பொலீஸாரின் உதவியினை நீதிபதிகள் தொலைபேசி மூலம் கேட்க எத்தனித்தபோது, பொலீஸாரின் அனைத்துத் தொலைபேசி இணைப்புக்களும் மெளனமாக காணப்பட்டன. சர்வதேச நீதிபதிகளின் அமைப்பின் தலைவர் போல் சைகிரெட் இந்த பொலீஸ் அத்துமீறல்கள் குறித்தும், நீதித்துறை எதிர்நோக்கியிருந்த அச்சுருத்தல்கள் குறித்தும் ஜெயாரிடம் வினவினார். இதற்குப் பதிலளித்த ஜெயார், இரு பொலீஸ்காரர்களினதும் பதவியுயர்விற்கு தானே பரிந்துரை செய்ததாகவும், நட்ட ஈடுகளை செலுத்தும்படி அரச திறைசேரிக்கு தானே உத்தரவிட்டதாகவும் கூறியதுடன், பொலீஸாரின் மனவுறுதியை நிலைநாட்ட இவை அவசியமாகச் செய்யப்படவேண்டியன என்றும் வாதிட்டிருந்தார். போல் சைகிரெட்டின் கூற்றுப்படி, உச்ச நீதிமன்ற நீதியரசர்களுக்கு சரியான பாடமொன்றினைப் புகட்டவேண்டும் என்று ஜெயார் திடசங்கற்பம் பூண்டிருந்ததுடன், தனது நிறைவேற்றதிகாரம் பொருந்திய ஜனாதிபதிப் பதவிக்கு உச்ச நீதிமன்றும், நீதியரசர்களும் அடிபணிந்திருக்கவேண்டும் என்றும் எதிர்ப்பார்த்தார் என்றும் கூறினார். இந்த நிகழ்வுகளின் அடிப்படையிலிருந்தே தமிழர்கள் மீது ஜெயார் கட்டவிழ்த்து விடவிருக்கும் அக்கிரமங்கள் நோக்கப்படல் வேண்டும். தலைவருடன் இந்தியச் செய்தியாளர் அனித்தா பிரதாப் ஜெயாரை ஆதரிப்பவர்கள், பாராளுமன்றத்தில் இருக்கும் கழுகுகள் சிலவற்றின் அழுத்தத்தினாலேயே ஜெயார் தமிழருடன் கடுமையாக நடந்துகொள்ள வேண்டியதாகியது என்று ஜெயாரின் கொடுங்கோண்மையினை நியாயப்படுத்தி வந்தனர். ஆனால், ஜெயார் குறித்த பிரபாகரனின் கணிப்போ மிகவும் வித்தியாசமானது. 1984 இல் முதன் முதலாக பிரபாகரன் சர்வதேச ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில், "ஜெயார் தனது விருப்பத்தின்படியே நடக்கிறார். அவரிடம் எல்லா அதிகாரங்களும் குவிந்து கிடக்கின்றன. பாராளுமன்றத்தில் இருக்கும் கழுகுகளும், பெளத்த பிக்குகளும் அவருக்குப் பக்கபலமாக பின்னால் நிற்கின்றனர்" என்று அந்தச் செய்தியாளரான அனீட்டா பிரதாப்பிடம் கூறியிருந்தார். மேலும், "ஜெயவர்த்தனா உண்மையான பெளத்தனாக இருந்திருந்தால், நான் ஆயுதம் தூக்கவேண்டிய தேவை இருந்திருக்காது " என்றும் அவர் கூறினார். பிரபாகரனின் கணிப்பு எவ்வளவு உண்மையானது என்பது இத்தொடரினைத் தொடர்ந்து படிக்கும்போது தெளிவாகும்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
தன்னை எதிர்ப்பவர்களுக்கு பாடம் புகட்டுதல் தனது ஆட்சியை எதிர்க்கும் எந்தத் தமிழருக்கும் பாடமொன்றினைப் புகட்டவேண்டும் என்று ஜெயார் திடசங்கற்பம் பூண்டிருந்தார். ஜெயவர்த்தனவின் அரசாட்சியின் இலக்கணமே தன்னை எதிர்ப்பவர்களுக்குக் கடுமையான பாதிப்பினை ஏற்படுத்தும் பாடத்தினைப் புகட்டுவதுதான். தன்னை எதிர்த்த தமிழர்களுக்கு, சுதந்திரக் கட்சியினருக்கு, தொழிற்சங்கவாதிகளுக்கு மற்றும் உச்ச நீதிமன்ற நீதியரசர்களுக்கு ஜெயாரினால் பாடம் புகட்டப்பட்டது. 1993 இலிருந்து 1994 வரையான காலப்பகுதியில் லங்கா கார்டியன் எனும் ஆங்கிலப் பத்திரிக்கையில் ஆர்டன் என்பவரால் வன்முறைகளையே தனது ஆயுதமாக நம்பி ஜெயவர்த்தன புரிந்த ஆட்சி ஆளமாக அலசப்பட்டிருந்து. தனது அரசியல் எதிரிகளான சுதந்திரக் கட்சியையும், எதிரிகளான தமிழர்களையும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரையும் ஜெயவர்த்தனா எவ்வாறு வன்முறைகள் மூலம் அடக்கி ஆண்டார் என்பதை நாம் பார்த்திருக்கிறோம். மக்களின், தொழிற்சங்கங்களின் நீதியான கோரிக்கைகள் கூட ஜெயாரினால் மிகவும் மூர்க்கத்தனமாக வன்முறைகள் கொண்டு அடக்கப்பட்டன. தனது குண்டர்களான ஜாதிக சேவக சங்கமய அமைப்பினரைப் பாவித்து தொழிற்சங்கப் போராட்டக்காரர்கள் மீது வன்முறைகளை ஏவிவிட்டார். தொழிற்சங்கங்கள் வழமையாக இடதுசாரிகளின் பின்புலத்திலேயே இயங்கிவந்தன. இத்தொழிற்சங்கங்கள் உழைக்கும் வர்க்கத்தின் நலன்களுக்காக செயற்பட்டன. ஜெயார் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக வந்தவுடன் தனது கட்சியின் தொழிற்சங்கமாக ஜாதிக சேவக சங்கம யவை உருவாக்கியதுடன் இதன் தலைவராக பிரபல இனவாதியான சிறில் மத்தியூ நியமிக்கப்பட்டார். இத்தொழிற்சங்கம் சிங்கள தேசியவாத அடிப்படையில் உருவாக்கப்பட்டதுடன் சிங்கள மக்களின் உரிமைகளுக்காகப் போராடுவது அதன் முக்கிய நோக்கமாக உருவாக்கப்பட்டது. மகதிர் மொஹம்மட் சிறில் மத்தியூ, மலேசிய அதிபரான மகதிர் மொஹம்மட்டின் பூமி புத்ரா கட்சியின் அடிப்படையினைப் பின்பற்றி ஜாதிக சேவக சங்கமயவை வழிநடத்தினார். மகதிர் மொஹம்மட் ஒரு காலத்தில் எழுதிய தனது சுயசரிதையான "மலே மக்களின் தடுமாற்றம்" எனும் புத்தகத்தில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். சுதந்திர வர்த்தகப் பொருளாதாரத்தை ஆதரித்துவந்த மகதிர், தனது நாட்டின் மக்களான மலேயர்களுக்கு ஏனைய இன மக்களைக் காட்டிலும் பொருளாதார நலன்களை அனுபவிக்கும் உரிமை வழங்கப்படவேண்டும் என்றும் , வர்த்தகப் போட்டியிலிருந்து மலே மக்கள் பாதுகாக்கப்படவேண்டும் என்றும் அவர் கூறினார். இஸ்லாம் மதத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும் என்றும், அம்மதத்தைப் பரப்புவதற்கு முன்னுரிமை வழங்கப்படவேண்டும் என்றும் அவர் கருதினார். மலே மக்களே மலேசியாவின் பூர்வகுடிகள் என்று அவர் கூறியதுடன், மலே மக்களுக்கு மலேசியாவை விட்டால் வேறு நாடொன்றில்லை என்றும் அவர் வாதிட்டார். மேலும், மலேசியாவில் வாழும் சீனர்கள் சீனாவுக்கும், அங்குவாழும் இந்தியர்கள் இந்தியாவுக்குச் செல்லமுடியும் என்றும் அவர் வாதிட்டார். மகதிர் முகம்மட்டின் பூமி புத்ரா கட்சியின் கொள்கைகள் மலேசியாவைக் காட்டிலும் இலங்கைக்கே பொருந்தும் என்று சிறில் மத்தியூ கூறினார். மலேசியச் சனத்தொகையில் மலே மக்கள் 53 வீதமும், சீனர்கள் 35 வீதமும், தமிழர்கள் 10 வீதத்திற்குச் சற்றுக் குறைந்த எண்ணிக்கைய்லும் வாழ்ந்துவருகின்றனர். ஆனால், இலங்கையிலோ சிங்களவர்கள் 74 வீதமாக இருக்க தமிழர்களின் எண்ணிக்கை வெறும் 17 வீதம் மட்டுமே என்று மத்தியூ வாதாடினார். சனத்தொகை எண்ணிக்கையில் தமிழர்கள் மிகவும் குறைந்த இருந்தபோதும் தொழில் ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் இந்த வீதாசாரத்தைக் காட்டிலும் மிக அதிகமான தாக்கத்தை தமிழர்கள் கொண்டிருப்பதாக மத்தியூ கருதினார். தமிழர்கள் வேண்டுமென்றால் தமிழ்நாட்டிற்குத் திருப்பிச் செல்ல முடியும், ஆனால் சிங்களவர்களுக்கு இலங்கையை விட்டால் வேறு நாடு கிடையாது என்று மத்தியூ வாதாடினார். ஆகவே சிங்களவரின் மேன்மை வன்முறைகளற்ற வழிமுறைகளிலோ அல்லது வன்முறைகள் மூலமாகவோ அடைந்தே தீரவேண்டும் என்று அவர் வாதிட்டார். ஜாதிக சேவக சங்கம தனது இனவாத வன்முறைகளுக்காக தனது தொழிற்சங்கமான ஜாதிக சேவக சங்கமயவினை மத்தியூ தயார்ப்படுத்தினார். கொள்ளுப்பிட்டிய பகுதியில் அமைந்திருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் சிறி கோத்தாவின் பின்புறத்தில் இருந்த மைதானத்தில் இச்சங்கத்தைச் சேர்ந்த குண்டர்கள் பயிற்சிகளில் ஈடுபட்டனர். அரச அதிகாரிகளை அச்சுருத்தி வந்த இத்தொழிற்சங்கக் குண்டர்களுக்கு அரசால் வாகனங்கள் வழங்கப்பட்டிருந்தன. பிறின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் மானுடவியல் பேராசிரியராகக் கடமையாற்றிய பேராசிரியர் ஞானரத் ஒபேசேகர அவர்கள் இத்தொழிற்சங்கக் குண்டர்களின் செயல்ப்பாட்டினை மிகவும் விரிவாக இரு தலைப்புக்களான, "அரசியல் வன்முறைகளும் இலங்கையின் ஜனநாயகத்தின் எதிர்காலமும்" மற்றும் "இலங்கையில் சமூக உரிமைகளுக்கான அமைப்பு" ஆகியவற்றில் அரச ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்ட 35 வன்முறைகளை ஆராய்ந்திருந்தார். சிறி கோத்தா இதனைப் படிக்கும் ஒருவருக்கு இலங்கையில் ஏற்படுத்தப்பட்டு வந்த வன்முறைக் கலாசாரத்துடனான அரசியல் சூழ்நிலையினை ஓரளவிற்குப் புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும். இச்சூழ்நிலை மேலும் மோசவடைவதை இனிவரும் அத்தியாயங்களில் பார்க்கலாம். 1977 ஆம் ஆண்டுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிபெற்றதன் பின்னர், அரச வானொலியான இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், அங்குபணிபுரிந்து வந்த எதிர்க்கட்சியான சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்களை பணிநீக்கம் செய்தது. இதனால் பாதிக்கப்பட்ட கலைஞர்களும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களும் ஆர்ப்பாட்டம் ஒன்றினை ஒழுங்கு செய்திருந்தனர். ஆனால், போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்திறங்கிய ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற்சங்கக் குண்டர்கள் வாட்களாலும், தடிகளாலும் ஆர்ப்பாட்டக்காரர்களை அடித்து விரட்டினர். அப்படி விரட்டப்பட்டவர்களில் பிரபல சிங்கள நாடகக் கலைஞர் பேராசிரியர் எதிரிவீர சரத்சந்திரவும் ஒருவர் என்பது குறிப்பிடத் தக்கது. 1978 ஆம் ஆண்டு ஆனி மாதம் 15 ஆம் திகதி காலை 9:30 மணிக்கு தமது கோரிக்கைகளுக்கு இணங்கவில்லை என்ற காரணத்தினால் துல்கிரிய ஆடைத்தொழிற்சாலை தலைவர்களான நால்வரை சுமார் 400 பேர் அடங்கிய ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற்சங்கக் குண்டர்கள் அடித்து விரட்டியதுடன், அவர்கள் தமது பதவிகளை இராஜினாமச் செய்யும்படியும் வற்புறுத்தப்பட்டு, ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவான நான்கு அதிகாரிகள் அவ்விடங்களுக்கு நியமிக்கப்பட்டனர். 1980 ஆம் ஆண்டு ஆடி 4 ஆம் திகதி, மகரகமை ஆசிரியர் கலாசாலையில் வசதிகளை மேம்படுத்தக் கோரி ஆசிரியர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் மீது இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேரூந்தில் வந்திறங்கிய ஜாதிக சேவக சங்கமய குண்டர்கள் இறப்பர் நார்களாலும், சைக்கிள் சங்கிலிகளைக் கொண்டும் கடுமையான தாக்குதலை நடத்தினர். பெண் ஆசிரியர்கள் நிலத்தில் இழுத்து வீழ்த்தப்பட்டு அவர்கள் மேல் கழிவு எண்ணெய் ஊற்றப்பட்டது. ஜெயவர்த்தனா எவ்வாறு ஒரு தொழிற்சங்கத்தைப் பயன்படுத்தி இன்னொரு தொழிற்சங்கத்தை வன்முறையால் அடக்கினார் என்பதை ஆர்டன் தெளிவாகப் பதிவுசெய்திருக்கிறார். ஜெயாரினால் கொண்டுவரப்பட்ட திறந்த பொருளாதாரக் கொள்கையினால் பணவீக்கம் கடுமையாக அதிகரித்து பல தொழிலாளர்களின், குறிப்பாக அரச ஊழியர்களின் சம்பளம் கடுமையான சரிவினைச் சந்தித்தது. ஆகவே, எதிர்க்கட்சியின் ஆதரவு பெற்ற ஒருமித்த தொழிற்சங்கங்களின் சம்மேளனம் தொழிலாளிகளுக்கு மாதாந்தம் 300 ரூபாய்கள் சம்பள உயர்வு கோரி அரசுக்கு வேண்டுகோள் ஒன்றினை 1980 ஆம் ஆண்டு பங்குனியில் முன்வைக்கத் தீர்மானித்தது. இதனை வலியுறுத்தி ஆனி 5 ஆம் திகதி அடையாள ஆர்ப்பாட்டமாக அரைநாள் வேலை நிறுத்தத்தில் அது ஈடுபட்டது. இதற்குப் பதிலளிக்க விரும்பிய ஜெயார், தனது கட்சியின் தொழிற்சங்கத்தை ஆனி 5 ஆம் திகதியை கூட்டுறவுக்கான நாளாக அனுஷ்ட்டிக்குமாறு கேட்டுக்கொண்டதுடன், எதிர்க்கட்சி தொழிற்சங்கங்கள் தமது தொழிற்சங்கப் பணியாளர்களுக்கு இடையூறாக இருப்பதாகவும், மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் இயங்கும் அரசின் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிப்பதாகவும் குற்றஞ்சாட்டினார். எதிர்க்கட்சியின் ஆர்ப்பாட்டம் மீது தாக்குதல் நடத்துவதற்காகவே ஜெயார் இதனைச் செய்ததோடு, அன்றைய வன்முறையில் பல எதிர்க்கட்சி தொழிற்சங்க உறுப்பினர்கள் காயமடைந்ததோடு சோமபால எனும் தொழிற்சங்கவாதியும் குண்டர்களால் அடித்துக் கொல்லப்பட்டார். ஆடி 5 ஆம் திகதி இரத்மலானை ரயில்வே தொழிற்சாலையில் பணிபுரிந்துவந்த 12 ஊழியர்கள் ஆனி 5 ஆம் அன்று பணிக்கு வராமையினால் பதவிநீக்கம் செய்யப்பட்டனர். ரயில்வே தொழிற்சங்கங்கள் நிர்வாகத்துடன் பேசி சூழ்நிலையினைத் தணிக்க முயற்சித்தன. ஆனால், பிடிவாதமாக பேச மறுத்த நிர்வாகம் தாம் மேலிடத்து உத்தரவின் பேரிலேயே தொழிலாளர்களை பதவிநீக்கம் செய்ததாகத் தெரிவித்தது. இதையடுத்து ஆடி 7 ஆம் திகதி ரயில்வே தொழிற்சாலை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதுடன், பணிநீக்கம் செய்யப்பட்ட 12 ஊழியர்களுக்கும் மீளவும் பணிக்கு அமர்த்தப்பட வேண்டும் என்றும், தமது சம்பளம் அதிகரிக்கப்படவேண்டும் என்றும் கோரினர். இதற்கும் நிர்வாகம் பதிலளிக்காது விடவே, ரயில்வே தொழிற்சங்கங்கள் ஆடி 14 ஆம் திகதி பொது வேலை நிறுத்தம் ஒன்று பற்றி ஜனாதிபதிக்கு அறிவித்ததுடன், ஆடி 18 வேலை நிறுத்தம் ஆரம்பிக்கும் என்றும் கூறியது. ஜெயவர்த்தன இதற்குப் பதிலளிக்கும் விதமாக அரசு ஆடி 16 அத்தியாவசியச் சேவைகள் சட்டத்தை அமுல்ப்படுத்தியது. இதன்படி அரச மற்றும் தனியார் அத்தியாவசிய சேவைகளில் தொழில் புரிபவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடியாதென்றும், அவ்வாறு வேலைநிறுத்தம் செய்தால் அவர்கள் தமது பதவிகளை தாமே இராஜினாமாச் செய்தவர்களாகக் கருதப்படுவார்கள் என்று அரசு அறிவித்தது. ஆனால், தொழிற்சங்கம் கூறியதன்படி வேலை நிறுத்தம் ஆடி 18 ஆரம்பித்தது. அன்றைய தினம் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்ட ஜெயார், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட அனைவரும் தமது பதவிகளை இழந்துவிட்டதாகவும், எக்காரணம் கொண்டும் அரசு அவர்களை மீளவும் பணிக்குச் சேர்த்துக்கொள்ளாது என்றும் அறிவித்தார். மேலும் பல தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் இறங்கினாலும் கூட, இதனால் எந்தப் பலனும் கிடைக்காது போயிற்று. ஒரு சாதாரண சம்பள உயர்வுக் கோரிக்கை ஜெயாரினால் ஊதிப் பெருப்பிக்கப்பட்டு, தொழிற்சங்கங்களுக்கும் தனக்குமிடையிலான மோதலாக உருவாக்கப்பட்டு, ஈற்றில் மிகவும் ஈவிரக்கமற்ற முறையில் வேலைநிறுத்தப் போராட்டம் நசுக்கப்பட்டுப் போனது. இவ்வாறே ஜெயார் தனது ஆட்சிக் காலத்தில் தொழிற்சங்கங்களை நசுக்கி வந்திருந்தார். ஜெயாரினால் பணிநீக்கம் செய்யப்பட்ட பல தொழிலாளர்கள் பின்னர் தற்கொலை செய்துகொண்டனர் என்பது குறிப்பிடத் தக்கது.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களிடம் முன்வைக்கப்பட்ட வேண்டுகோள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி புலிகளுக்காக பணம் சேர்க்கிறதென்றும், சிவசிதம்பரத்தின் இலங்கை வங்கிக் கணக்கிற்கு வெளிநாடுகளிலிருந்து தமிழ் மக்கள் பணம் அனுப்பிவருகிறார்கள் என்றும் சங்கர் ராஜி சிவசிதம்பரத்திற்கு அனுப்பிவைத்த பணத்தைக் காட்டி அரசாங்கம் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தது. ஈழம் எனும் தனிநாட்டினை உருவாக்க எடுக்கும் முயற்சிகளுக்கு உதவும்படி புலம்பெயர் தமிழ் மக்களிடம் அமிர்தலிங்கமும், சிவசிதம்பரமும் இணைந்து எழுதிய கடிதம் ஒன்றும் அரசாங்கத்திடம் சிக்கியிருந்தது. இக்கடிதத்தினையும் வைத்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கெதிரான பிரச்சாரத்தினை அரசாங்கம் முடுக்கிவிட்டிருந்தது. 1979 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 14 ஆம் திகதி எழுதப்பட்ட இக்கடிதம் புலம்பெயர் தமிழர்களை நோக்கி பின்வரும் வேண்டுகோளினை முன்வைத்திருந்தது, அன்பான நண்பர்களே, எமது விடுதலைப் போராட்டம் முக்கியமான தருணம் ஒன்றை அடைந்திருக்கும் வேளையில் தாயகத்திலும், சர்வதேச நாடுகளின் தலைநகரங்களிலும் வாழ்ந்துவரும் ஒவ்வொரு தமிழரும் தமது பங்கினை செய்யவேண்டிய தேவை வந்திருக்கிறது. லண்டனை மையமாகக் கொண்டு இயங்கிவரும் ஈழத்தமிழர்கள் இதுவரை செய்துவந்த முயற்சிகள் போல், இன்னும் பல விடயங்களில் அவர்கள் செயற்பட முடியும் என்றும், எமக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டிய சுதந்திரத்திற்காகவும், எம்மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் மனிதவுரிமை மீறல்கள் மற்றும் அரச செயற்பாடுகளில் திட்டமிட்ட வகையில் புகுத்தப்பட்டிருக்கும் புறக்கணிப்பிற்கு எதிராகவும் சர்வதேச அளவில் தொடர்ந்தும் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும் என்று வேண்டிக்கொள்கிறோம். லண்டனில் இருந்து இயங்கிவரும் எமது சகோதரகள் இதுவரை காலமும் எடுத்துவந்த தம்மாலான முயற்சிகளுக்கு நாம் நன்றிகூறும் அதேவேளை, எமது புலம்பெயர் தமிழர் சமூகம் குழுக்களாகப் பிரிந்து இயங்குவதையும், தனிமனிதர்களுக்கிடையிலான பிணக்குகளால் பிரிந்து நின்று செயற்படுவதையும் பார்த்துக் கவலையடைகிறோம். எமக்கு முன்னால் நடந்த சரித்திரம் எமக்கு ஒரு பாடமாக இருக்கின்றது. நாம் எடுத்துக்கொண்ட அனைத்து முயற்சிகளும், முன்னெடுக்கப்பட்ட அனைத்துச் செயற்பாடுகளும் எமக்குள் ஒற்றுமையின்மையால் எமக்குக் கிடைக்கவேண்டிய சுதந்திரம் கைநழுவிப் போவதற்குக் காரணமாக அமைந்தது என்பதையும் பார்த்திருக்கிறோம். நாம் இன்று தாயகத்திலும் இதனைக் காண்கிறோம். பலமான தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி இன்று இந்த ஐக்கியத்தின் அவசியத்தை வேண்டி நிற்கிறது. இந்த வேண்டுகோளினை புலம்பெயர்ந்து வாழும் எமது சகோதர்களிடம் மிகவும் தாழ்மையாக முன்வைக்கிறோம். சரியான திசையில் முன்னெடுத்து வைக்கப்பட்ட எமது முயற்சிகளில் ஒன்றாக ஈழ விடுதலை அமைப்பு மற்றும் தமிழர் விடுதலைப் பரணி ஆகிய அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து முடிவுகளை எடுப்பதற்கும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரூடாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் முன்வந்திருக்கின்றன. தனிநபர்களாகவும், குழுக்களாகவும் ஈழம் எனும் பொது இலட்சியம் நோக்கிச் செயற்படும் அனைவரையும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினருடன் சேர்ந்து செயற்படுமாறு வேண்டிக்கொள்கிறோம். தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவானது ஜனநாயக ரீதியில் செயற்படும் என்று நாம் நம்புவதுடன், அனைவரும் தமது கருத்துக்களை முன்வைக்கும் சுதந்திரமும், சுதந்திரமான முறையில் கருத்துக்களை விவாதித்து கருத்தொருமைப்பாட்டிற்கு வரும் வழிமுறைகளையும் கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கிறோம். நாம் பலதரப்பட்ட, கடுமையான கடைமைகளையும் சவால்களையும் எதிர்நோக்கி நிற்கிறோம். எமது இலட்சியமான விடுதலை நோக்கிய பயணம் மிக நீளமானது. அதனை அடைவதற்கு எம்மிடம் இருக்கும் வளங்கள் மிகவும் குறைந்தவை. எம்மிடமிருக்கும் மட்டுப்படுத்தப்பட்ட வளங்களையும், பொன்னான நேரத்தையும் எமக்கிடையே வரும் தனிப்பட்ட பிரச்சினைகளில் செலவழிக்காதிருப்போமாக. எம்மிடம் இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து, எமது நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து, தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஊடாக எமது பணிகளை முன்னெடுப்போமாக. இக்கடித்தத்தை கைப்பற்றிக்கொண்ட அரசாங்கம், இதனை வைத்து அமிர்தலிங்கத்தையும், சிவசிதம்பரத்தையும் அச்சுருத்தி அடிபணியவைத்து, மாவட்ட சபைகளுக்கான சட்டவாக்கல் நடவடிக்கைகளுக்கு அவர்களை உடன்பட வைப்பதன் மூலம் சர்வதேசத்தில் தமிழர்களை தனது அரசு அரவணைத்து நடப்பதாக பிரச்சாரப்படுத்தலாம் என்று எண்ணியது. அதேவேளை போராளி அமைப்புக்களுக்குள் , குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குள் சில உள்முறண்பாடுகள் உருவாவதையும் அரசாங்கம் அறிந்துகொண்டது. யாழ்க்குடாநாட்டில் வீரதுங்கவால் முன்னெடுக்கப்பட்ட கொடூரமான படுகொலைகளும், சித்திரவதைகளும் போராளி அமைப்புக்கள் மீது கடுமையான அழுத்தத்தினைப் பிரயோகித்திருந்தன. பாதுகாப்பான மறைவிடங்களுக்கான தேடலும், உணவினைப் பெற்றுக்கொள்ளும் வழிமுறைகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. போராளி அமைப்புக்களுக்கு உற்ற துணையான இருந்த ஆதரவாளர்களும் தற்போது உதவுவதற்கு அஞ்சினர். இவ்வைகையான அழுத்தங்கள் போராளி அமைப்புக்களின் தலைமைப்பீடங்களுக்குள் கருத்து வேறுபாடுகளை உருவாக்கத் தொடங்கின. ஆவணியில் இடம்பெற்ற புலிகளின் மத்திய குழுக் கூட்டத்திலும் இந்த கருத்து வேறுபாடுகள் தலைக்காட்டத் தொடங்கின. உமா மகேஸ்வரன் தலைமையிலான பெரும்பான்மையான மத்திய குழு உறுப்பினர்கள் பிரபாகரனை இரு முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக விமர்சித்திருந்தனர். முதலாவது இயக்கத்தின் கட்டமைப்பு, இரண்டாவது போராட்ட வழிமுறை. இரத்திணசபாபதி கடந்தவருடம் முன்வைத்திருந்த அதேவகையான கருத்துக்களையே இம்முறை மத்தியகுழு உறுப்பினர்களும் முன்வைத்தனர். அவர்களைப்பொறுத்தவரை இயக்கத்தின் கட்டமைப்பு மக்களை அடிப்படையாகக் கொண்டிருக்கவேண்டும் என்று விரும்பினார்கள். இப்படிச் செய்வதன் மூலம் இராணுவத்தினர் போராளிகளைக் கண்டுபிடிப்பதைக் கடிணமாக்கிவிடலாம் என்று அவர்கள் வாதாடினர். மறைந்திருந்து தாக்கிவிட்டு மறையும் உத்தி, தலைமைப்பீடத்தை இராணுவத்தினரின் இலக்காக மாற்றிவிடும் என்று அவர்கள் கூறினர். ஆனால், பிரபாகரன் தனது வழிமுறையில் தீர்மானமாக இருந்தார். மக்களை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கும் போராட்டம் என்பது மக்களின் பின்னால் ஒளிந்திருந்து நடத்தும் போராட்டமாகும் என்று அவர் கூறினார். ஆகவே, வெற்றிகரமான விடுதலைப் போராட்டம் மக்களின் பின்னால் ஒளிந்து நின்று நடப்பதிலிருந்து வெளியேறி நடைபெறவேண்டும் என்று அவர் வாதிட்டார். மிகவும் சிக்கலான தாக்குதல்களுக்கான பொறுப்பினை தலைவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், மக்கள் அவர்களின் பின்னால் ஒன்றுதிரண்டு துணைநின்றால் போதுமானது என்றும் அவர் கூறினார். இந்தத் தருணத்தில் தான் பிரபாகரனுக்கும் உமா மகேஸ்வரனுக்கும் இடையிலான பிணக்கு ஆரம்பித்தது. இப்பிணக்கின் அடிப்படை போராட்டத்தில் கோட்பாடுகளிலிருந்தே ஆரம்பமானது. உமாமகேஸ்வரன் மார்க்ஸிய கோட்பாடுகளைக் கொண்டிருந்தவேளை பிரபாகரன் தேசியவாத நிலைப்பாட்டினைக் கொண்டிருந்தார். உமா மகேஸ்வரன் தத்துவார்த்த ரீதியில் கருத்துக்களை முன்வைத்தாலும், அவற்றை முன்வைக்கும்போது மற்றையவர்களின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள மறுத்து வாதாடும் மனோநிலையினைக் கொண்டிருந்தார். தனது கருத்துக்களை மற்றையவர்கள் மீது திணிக்க அவர் முயன்றார். பிரபாகரனோ யதார்த்தவாதியாக இருந்ததுடன், மற்றையவர்களின் கருத்துக்களைச் செவிமடுக்க ஆர்வம் காட்டியிருந்தார். மற்றையவர்களின் கருத்துக்களைச் செவிமடுத்து ஏற்றுக்கொள்வதிலும் பிரபாகரன் தன்னை ஒரு சிறந்த தலைவராக வெளிப்படுத்தியிருந்தார். இயக்கத்தின் இரு பிரதான தலைவர்களுக்கிடையே இருந்த இந்த முரண்பாடான நிலைப்பாடு இயல்பாகவே இயக்கத்திற்குள் பிளவினை உருவாக்கக் காரணமாகியது. ஆனாலும், புலிகள் இயக்கத்திலிருந்து உமாமகேஸ்வரன் வெளியேற்றப்பட்டதற்கான காரணம் இயக்கத்தின் ஒழுக்க விதிகளுக்கு முரணாக உமா மகேஸ்வரன் நடந்துகொண்டதால் உருவானது. புலிகளின் களையெடுத்தல் தொடர்பான உரிமை கோரலினை தட்டச்சுச் செய்த ஊர்மிளா எனும் பெண்ணுடன் உமா மகேஸ்வரன் வைத்திருந்த பாலியல் ரீதியான தொடர்பே இதற்கான ஒற்றைக் காரணமாக அமைந்தது. உமா மகேஸ்வரன் அரசாங்கத்தால் முடுக்கிவிடப்பட்டிருந்த பயங்கரவாத நடவடிக்கைகளும், புலிகளின் தலைமைப் பீடத்திற்குள் உருவாகியிருந்த கருத்து முரண்பாடும், போராளி அமைப்புக்களின் தலைவர்கள் தமிழ்நாட்டில் தஞ்சமடையத் தொடங்கியிருந்தமையும் யாழ்க்குடா நாட்டில் போராளிகளால் மேற்கொள்ளப்பட்ட வன்முறைச் சம்பவங்களில் தொய்வினை ஏற்படுத்தியிருந்தது. ஆகவே மார்கழி 31 ஆம் திகதி வீரதுங்க, அரச படைகளின் தளபதியான ஜனாதிபதி ஜெயாருக்கு அனுப்பிவைத்த செய்தியில் தனக்கு இடப்பட்ட ஆணையான பயங்கரவாதத்தை முற்றாக அழித்தலை தான் செவ்வணே செய்து முடித்திருப்பதாகத் தெரிவித்திருந்தார். இதனைக் கொண்டாடும் முகமால கொழும்பு முகத்துவாரத்தில் அமைந்திருந்த "ரொக் ஹவுஸ்" எனப்படும் உல்லாச விடுதியில் பாரிய களியாட்ட நிகழ்வொன்றினை ஒழுங்குசெய்தார் வீரதுங்க. அவரின் வெற்றியை பாராட்டும் விதமாக ஜெயாரும் இந்த களியாட்ட நிகழ்வில் பங்கேற்றிருந்தார். வீரதுங்கவினால் ஈட்டப்பட்ட வெற்றிக்குச் சன்மானமாக அப்போது பதவியிலிருந்த இராணுவத் தளபதி டெனிஸ் பெரேரா ஓய்வுபெறும்பொழுது, வீரதுங்கவே இராணுவத்தளபதியாக நியமிக்கப்படுவார் என்று ஜெயவர்த்தன அறிவித்தார். ஆனால், அனுபவத்திலும், தகமை அடிப்படையிலும், ஏனைய இராணுவத் தளபதிகளால் பரிந்துரை செய்யப்பட்டவருமான ஜஸ்டஸ் ரொட்ரிகோ எனப்படும் தளபதிக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டிய இராணுவத் தளபதி எனும் தகமையினை உதாசீனம் செய்த ஜெயார், தனது மருமகனான "காளைமாடு" வீரதுங்கவுக்கு வழங்க முடிவுசெய்தார். இலங்கையின் ராணுவத்தின் சரித்திரத்தில் அரசியல்வாதிகளால் தீர்மானிக்கப்பட்ட முதலாவது இராணுவ பதவியுயர்வு நிகழ்வு இதுவே என்பது குறிப்பிடத் தக்கது. வீரதுங்கவை இராணுவத் தளபதியாக நியமித்ததன் மூலம் இராணுவத்தின் மீதும், பொலீஸார் மீதும் தான் கொண்டிருந்த அதிகாரத்தினை மேலும் பலப்படுத்திக்கொண்டார் ஜெயவர்த்தன. இராணுவத் தளபதி வீரதுங்க ஜெயவர்த்தனவின் மருமகன் என்பதும், பொலீஸ் மா அதிபர் அனா செனிவிரட்ண வீரதுங்கவின் மைத்துனர் என்பதும் இங்கே குறிப்பிடத் தக்கது.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
மக்கள் வாழிடங்களிடையே அமைக்கப்பட்ட சித்திரவதைகளின் தலைமைக் காரியாலயம் வீரதுங்கவின் பயங்கரவாதத்தின் மூலம் யாழ்ப்பாணக் குடாநாட்டு முற்றுகைக்குள் கொண்டுவரப்பட்டது. தனக்கு மிகவும் நெருக்கமான, தமிழர் எதிர்ப்பு மனோபாவம் கொண்ட சில அதிகாரிகளையும் சேர்த்துக்கொண்டு, யாழ்நகரின் இதயப்பகுதிகளில் ஒன்றான சுண்டுக்குளி பழைய பூங்காவில் தனது பாதுகாப்புப் படைகளின் தலைமைப் பீடத்தை அமைத்தார் "காளைமாடு" வீரதுங்க. 1979 ஆம் ஆண்டின் ஆடி மாதம் , மூன்றாம் வாரத்தில் இந்தச் சித்திரவதைக் கூடம் வீரதுங்கவினால் அமைக்கப்பட்டது. இப்பகுதியின் பாதுகாப்புக் கெடுபிடிகள் கடுமையாக்கப்பட்டதுடன், இப்பகுதியில் வசிப்பவர்களுக்கென்று அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு, இப்பகுதிக்குள் வந்துசெல்வோர் அவதானிக்கப்பட்டு வந்ததுடன் அனுமதியும் கடுப்படுத்தப்பட்டது. ஒருகாலத்தில் அரசாங்கத்தின் இராணுவப் பேச்சாளராகக் கடமையாற்றிய முனசிங்கவுடன் செய்தியாளன் என்கிற வகையில் நான் அவ்வப்போது சில விடயங்கள் குறித்துப் பேசும் சந்தர்ப்பம் கிடைத்திருந்தது. பலாலியில் இயங்கிவந்த இராணுவப் புலநாய்வுத்துறையின் பொறுப்பாளராக பணிபுரிந்த முனசிங்க இந்த விசேட அடையாள அட்டை குறித்துக் கூறுகையில், "மூன்று விதமான அடையாள அட்டைகள் அப்பகுதியில் வசித்துவந்த மக்களுக்கு இராணுவத்தால் வழங்கப்பட்டன. சிவப்பு, வெள்ளை, பச்சை ஆகிய மூன்று நிறங்களில் இவை விநியோகிக்கப்பட்டன. சிவப்பு நிற அடையாள அட்டைகளை வைத்திருப்போர் சுதந்திரமாக இப்பகுதிக்குள் வந்து செல்ல முடியும். இவர்கள் ராணுவ தலைமைப் பீடத்திற்குள்ளும், பழைய பூங்கா சித்திரவதைக் கூடத்திற்குள்ளும் சுதந்திரமாகச் சென்றுவர முடியும். வெள்ளை அடையாள அட்டை வைத்திருப்போர், தலைமைக் காரியாலயத்திற்கு முன்னால் இருக்கும் இரண்டாம் நிலை காவலரண் வரையே செல்ல முடியும். இந்தத் தலைமைக் காரியாலயம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பிரித்தானிய அரச பிரதிநிதிகளின் உத்தியோகபூர்வ வாசஸ்த்தலமாக விளங்கியிருந்தது" என்று கூறினார்.. பழைய பூங்காவின் அருகில் அமைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணத்து மன்னன் சங்கிலியனின் சிலை முனசிங்க வடமாகாணத்திற்கான இராணுவ அதிகாரிகளின் உதவித் தலைவராகவும், இராணுவத்தின் பொறுப்பதிகாரியாகவும் பணியாற்றிய மூத்த தளபதி. உளவுப்பிரிவிற்கு பச்சை அடையாள அட்டை வழங்கப்பட்டிருந்தது. இதுபற்றி முனசிங்க தனது புத்தகம் ஒன்றில் இவ்வாறு கூறுகிறார், ஒரு ராணுவ வீரனின் பார்வையிலிருந்து : "எனக்கு பச்சை அடையாள அட்டையொன்று வழங்கப்பட்டிருந்தது. அதனைப் பாவித்து, பிரதான வாயிலின் உட்பக்கமாக அமைந்திருந்த ராணுவக் காவலரண் வரையே செல்லமுடியும். இதற்கப்பால் செல்லவேண்டுமென்றால் நியமனம் ஒன்றை முன்பதிவு செய்தபின்னரே செல்ல முடியும்". "1979 இல், இராணுவத் தலைமையகம் இப்பகுதியில் அமைக்கப்பட்டதன் பின்னர் யாழ்ப்பாணத்தில் பல இளைஞர்களை கைதுசெய்து விசாரணைக்கு இழுத்துவந்தோம். அவர்கள் அனைவருமே விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டனரா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஆனால், ஒரு விடயம் மட்டும் எனக்கு மிகத் தெளிவாகப் புரிந்திருந்தது, யாழ்ப்பாணத்து மக்கள் மிகவும் அச்சத்துடன் வாழ்ந்துவந்தார்கள். பழைய பூங்காவில் நடக்கும் கொடூரமான சித்திரவதைகள் பற்றி அவர்கள் தமக்குள் பேசிவந்தார்கள். இரவானதும் இப்பகுதியின் தெருக்கள் வெறிச்சோடி விட்டிருக்கும்". ஆனால், முனசிங்கவிற்கு அங்கு நடந்தவைபற்றி நிச்சயம் தெரிந்திருக்கும் என்று நான் நம்புகிறேன். ஏனென்றால், அரச பயங்கரவாதம் தலைவிரித்தாடிய அந்தக் கொடூரமான மாதங்களான ஆடி முதல் மார்கழி வரையான காலப்பகுதியில் அவர் யாழ்ப்பாணத்திலேயே இருந்தார். வட மாகாண ஒட்டுமொத்தத் தளபதி வீரதுங்க மற்றும் வடமாகாண ராணுவத் தளபதி ரணதுங்க ஆகியோரின் கீழ் முனசிங்க அக்காலப்பகுதியில் செயற்பட்டு வந்தார். மேலும், இந்த நடவடிக்கைகளுக்காக இராணுவத்தின் விசேட பிரிவொன்றும் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்பட்டிருந்தது. தனக்கு வழங்கப்பட்ட விசேட ராணுவப் பிரிவை தனது திட்டத்திற்கு முழுமையாக வீரதுங்க பயன்படுத்திக்கொண்டார். கிராமங்கள் சுற்றி வளைக்கப்பட்டதுடன், இராணுவத்தினர் மிகக்கொடூரமாக போராளிகளைத் தேடி அழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். பல நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்கள் இந்தத் தேடியழிக்கும் நடவடிக்கைகளில் கைதுசெய்யப்பட்டு, கடுமையான சித்திரவதைகளின் பின்னர் கொல்லப்பட்டு, யாழ்ப்பாணத்து வீதிகள் வீசியெறியப்பட்டனர். இந்த சித்திரவதை முன்னெடுப்புக்கள் போராளிகள் மீது கடுமையான அழுத்தத்தைப் பிரயோகித்திருந்தன. 1979 ஆம் ஆண்டி முதல் அரைப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வன்முறைகளுக்குக் காரணமானவர்கள் குட்டிமணியும், தங்கத்துரையுமே என்று அரசு நம்பியதால், அவர்களே வீரதுங்கவின் பிரதான இலக்காக இருந்தார்கள் என்று முனசிங்க கூறுகிறார். மார்கழி 5 ஆம் திகதி இடம்பெற்ற தின்னைவேலி வங்கிக் கொள்ளையின் பின்னர் பிரபாகரன் சற்று அமைதியாகிவிட்டிருந்தார். தனது கெரில்லா அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகளை கட்டியெழுப்பும் பணியில் அவர் மும்முரமாக ஈடுபட்டிருந்தார். வவுனியா பூந்த்தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த தனது பயிற்சி முகாமில் தங்கியிருந்த பிரபாகரன் ஆயுதங்களைச் சேகரிப்பதிலும் தனது போராளிகளுக்கு பயிற்சியளிப்பதிலும் தனது நேரத்தைச் செலவிட்டு வந்தார். அதைவிடவும் அவருக்கு மேலும் சில பிரச்சினைகள் இருந்தன. முதலாவது ஈரோஸ் அமைப்புடனான பிணக்கு. சங்கர் ராஜீ நான் முன்னர் இத்தொடரில் குறிப்பிட்டது போல, ஈரோஸ் அமைப்பு லெபனானில் பலஸ்த்தீன விடுதலை இயக்கத்துடன் பயிற்சி தொடர்பாக இணக்கப்பாட்டிற்கு வந்திருந்தது. ஆகவே, ஆக்காலப் பகுதியில் ,செயற்பட்டு வந்த தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் ஆகியவையும் இந்தப் பயிற்சிகள் மூலம் பலன் பெறவேண்டும் என்று ஈரோஸ் அமைப்பு விரும்பியிருந்தது. வன்னியில் தங்கியிருந்த அருளர் மற்று சங்கர் ராஜீ ஆகிய ஈரோஸ் முக்கியஸ்த்தர்கள் பிரபாகரனிடமும் உமா மகேஸ்வரனிடமும் லெபனான் பயிற்சிகள் குறித்துப் பேசி அவர்களின் விருப்பத்தினையும் பெற்றிருந்தனர். புலிகளின் மத்திய குழு இதுபற்றிக் கலந்தாலோசித்து, முதலாவதாக லெபனான் பயிற்சிக்குச் செல்வதற்கு உமா மகேஸ்வரனையும், விஜேந்திராவையும் தெரிவு செய்தது. இவர்களுக்கான பயிற்சிகள் தரமானதாக இருக்கும் பட்சத்தில் மேலும் சில போராளிகளை அனுப்பி வைக்கலாம் என்று பிரபாகரன் கூறினார். மேலும், இந்தப் பயிற்சிகள் மூலம் ஆயுதங்களைத் தருவிப்பதற்கான வழியொன்றும் தமக்குக் கிடைக்கும் என்று பிரபாகரன் எண்ணினார். ஆகவே, லெபனான் பயிற்சிக்காக ஈரோஸ் அமைப்பிற்கு ஒரு லட்சம் ரூபாய்களைப் பிரபாகரன் வழங்கியிருந்தார். சுமார் மூன்று மாதகால லெபனான் பயிற்சியை முடித்துக்கொண்டு உமா மகேஸ்வரனும், விஜேந்திராவும் நாடு திரும்பியிருந்தார்கள். அங்கு வழங்கப்பட்ட பயிற்சி அவர்களுக்குத் திருப்தியைத் தந்திருக்கவில்லை. லெபனானில் நடைபெற்ற சண்டைகளில் அவர்கள் பங்கேற்க விடப்படவில்லை என்பதுடன், புதிய ரக ஆயுதங்களைக் கையாளவும் அனுமதிக்கப்படவில்லை. "பெரும்பாலான நேரங்களில் நாம் முகாமில் தூங்கினோம், பெரிதாக எதனையும் கற்றுக்கொள்ளவில்லை" என்று அவர்கள் கூறினார்கள். இதனை மத்தியகுழுவில் உமாமகேஸ்வரன் முறைப்பாடாக முன்வைத்தார். அவர்கள் எந்த ஆயுதங்களையும் தம்முடன் கொண்டுவந்திருக்கவுமில்லை. பணவிடயத்தில் மிகவும் கண்டிப்பானவராக விளங்கிய பிரபாகரன், ஈறோஸ் அமைப்பினரை அழைத்து, பயிற்சி ஒப்பந்தத்தினை முடிவிற்குக் கொண்டுவந்ததுடன் மீதிப்பணத்தைத் திருப்பிச் செலுத்துமாறும் கேட்டார். ஈரோஸ் அமைப்பு அப்பணத்தை முற்றாகச் செலவழித்திருந்ததுடன், அதனை மீளச் செலுத்தும் முகாந்திரங்களும் அதற்கு இருக்கவில்லை. அனால், பிரபாகரன் விடாப்பிடியாக மீதிப்பணத்தினைச் செலுத்துமாறு அழுத்தம் கொடுக்கவே, அவருக்கும் ஈரோஸ் அமைப்பின் சங்கர் ராஜீக்கும் இடையே பிணக்கொன்று உருவாகியது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை சங்கர் ராஜீ ஏமாற்றிவிட்டதாக பிரபாகரன் கருதியதால், புலிகளின் மத்திய குழுவின் முன்னால் வந்து ஈரோஸ் பக்க நியாயத்தைக் கூறவேண்டும் என்று சங்கர் ராஜீயை அவர் கேட்டார். ஆனால், சங்கர் ராஜி இதனை முற்றாக நிராகரித்து விட்டார். ராஜி இதுதொடர்பாக என்னிடம் பின்னர் பேசும்போது, "பிரபாகரன் இந்தப் பிரச்சினையை அமிர்தலிங்கத்திடம் கொண்டுபோனார். அமிர்தலிங்கம் ஒரு இணக்கப்பட்டை ஏற்படுத்தினார். நான் 285 ஸ்டேர்லிங் பவுண்ட்ஸ் பணத்தை சிவசிதம்பரத்திற்கு அனுப்பி வைத்தேன்" என்று கூறினார்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
சித்திரவதைக் கூடமாக மாறிய யாழ்ப்பாணக் குடாநாடு செயலில் இறங்கிய அரச பயங்கரவாதம் 1979 ஆம் ஆண்டு ஆடி 13 ஆம் திகதி இரவு யாழ்ப்பாணம் முதன் முதலாக அரச பயங்கரவாதத்தின் முழு வீச்சினையும் கண்டுகொண்டது. நள்ளிரவு வேளை இலக்கத்தகடற்ற இரு வாகனங்கள் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிக்கிளம்பின. இவ்வாகானங்களில் அவசரப்பட்டு ஏறிக்கொண்ட பொலீஸ் குழுவொன்று தனது கொலை வேட்டைக்காக பயணித்துக்கொண்டிருந்தது. யாழ்ப்பாண நகருக்கு வெளியே இருந்த நவாலி எனும் சிற்றூரை நோக்கி பிரிட்டிஷ் தயாரிப்பான ஏ - 40 கார்வண்டியொன்று மிக வேகமாகச் சென்றுகொண்டிருந்தது. மற்றைய ஜீப் வண்டி யாழ்நகரின் எல்லையில் அமைந்திருந்த, நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட்ட முடமாவடி நோக்கி விரைந்துகொண்டிருந்தது. இன்பம் மற்றும் செல்வம் ஆகிய பெயர்களைக் கொண்ட இரு இளைஞர்களின் வீட்டின் முன்னால் அந்த ஏ - 40 கார் நின்றது. அந்தக் காரிலிருந்து திடு திடுப்பென்று மூன்று பொலீஸ்காரர்கள் காக்கிக் காற்சட்டையும், வெண்ணிற டீ சேர்ர்ட்டுக்களும் அணிந்தபடி இறங்கினர். அந்த இளைஞர்கள் இருவரும் துரையப்பாவின் கொலையுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்று சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டிருந்தவர்கள். ஆனால், அவர்களை மேலும் விசாரிக்கவேண்டும் என்று கூறி மூன்று பொலீஸ் குண்டர்களும் அவர்களை தமது காரில் இழுத்து ஏற்றினார்கள். பின்னர் அதே பகுதியில் வாழ்ந்துவந்த பாலேந்திரா எனும் இளைஞரையும் அவர்கள் இழுத்து ஏற்றிக்கொண்டார்கள். யாழ்ப்பாணக் குடாநாடு ஜீப் வண்டியில் சென்ற பொலீஸார் முதலில் ஆயுர்வேதக் கல்லூரியில் பயின்றுவந்த இந்திரராஜா எனும் இளைஞரை அவரது வீடு அமைந்திருந்த நல்லூர், பருத்தித்துறை வீதி, இரண்டாம் ஒழுங்கைப் பகுதியில் வைத்து கைதுசெய்து வண்டியில் ஏற்றிக்கொண்டனர். அங்கிருந்து கிளம்பிய அந்தப் பொலீஸ் குழு பின்னர் முடமாவடியில் வாழ்ந்துவந்த தபாலதிபரான செல்வதுரையின் வீட்டிற்குச் சென்றது. பொலீஸாரிடம் பேசிய செல்வதுரை தனது இரு மகன்களான ராஜேஸ்வரனும், பரமேஸ்வரனும் சாவகச்சேரிப் பகுதியில் அவர்களது மனைவிமார்களின் வீட்டில் வசித்து வருவதாகக் கூறினார். அந்த சகோதரர்கள் இருவரும் சோதிடரான சந்திரசேகரத்தின் இரு மகள்களை மணமுடித்திருந்தனர். மறுநாள் காலை பண்ணைப் பாலத்தினருகில் உருக்குலைந்த நிலையில் 27 வயது நிரம்பிய இன்பம் எனப்படு விஸ்வஜோதி இரத்திணம் மற்றும் 29 வயது நிரம்பிய செல்வம் எனப்படும் செல்வரட்ணம் ஆகியோரது உடல்கள் கண்டெடுக்கப்பட்டு யாழ் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டன. அவர்களின் உடல்களில் கடுமையான சித்திரைவதைக் காயங்களும், துப்பாக்கிச் சூட்டுக் காயங்களும் காணப்பட்டன. அவர்களின் மண்டையோடுகள் அடித்து நொறுக்கப்பட்டிருந்தன. இந்திரராஜா மூன்று நாட்களுக்குப் பின்னர் யாழ் வைத்தியசாலையில் பொலீஸார் கையளிக்கப்பட்ட பின்னர் இறந்துபோனார். அவரது உடலில் இருந்த காயங்கள் அவர் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாகியிருக்கிறார் என்பதைப் பறைசாற்றியது. அவசரகாலச் சட்டத்தின்படி பொலீஸாராலும், இராணுவத்தாலும் கொல்லப்படும் நபர்களின் மரணம் தொடர்பாக எவரும் விசாரிக்கமுடியாது என்கிற கட்டுப்பாடு இருந்தபோதிலும், யாழ் வைத்தியசாலை அதிகாரிகள், பொலீஸாரால் கடுமையான சித்திரவதைகளின் பின் சுட்டும் அடித்தும் கொல்லப்பட்ட இன்பம், செல்வம் மற்றும் இந்திரராஜா ஆகியோரின் மரண விசாரணைகளைச் செய்திருந்தனர். யாழ்ப்பாண நீதவான் இந்திரராசாவின் மரணம் தொடர்பாக 1980 ஆம் ஆண்டு தை 8 ஆம் திகதி வழங்கிய தீர்ப்பில், "உடலில் ஏற்பட்ட பல காயங்களின் விளைவாகவும் அதிர்ச்சியின் காரணமாகவும் இந்திரராசவுக்கு கடுமையான இரத்தப் போக்கும் , இருதயச் செயலிழப்பும், சிறுநீரகப் பாதிப்பும் ஏற்பட்டிருப்பதால் மரணமடைந்திருக்கிறார். பொலீஸாரின் கடுமையான தாக்குதல்களாலேயே இவர் கொல்லப்பட்டிருக்கிறார் என்பதற்குப் போதுமான ஆதாரங்கள் இருக்கின்றன. இவரது மரணம் ஒரு திட்டமிட்ட கொலை என்று தீர்ப்பளிக்கிறேன்" என்று கூறியிருந்தார். ஏனைய இரு இளைஞர்களான இன்பம், செல்வம் ஆகியோரின் மரண விசாரணை அறிக்கைகளும் இதனையே கூறின. அன்று நள்ளிரவு பொலீஸாரால் கைதுசெய்யப்பட்ட ஏனைய மூன்று இளைஞர்களான ஆர்.பாலேந்திரா, எஸ்.ராஜேஸ்வரன், எஸ்.பரமேஸ்வரன் ஆகியோர் தடயங்களின்றி காணாமலாக்கப்பட்டனர். வடமாகாணத்திலிருந்து காணாமலாக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானோரின் பட்டியலில் பாலேந்திராவின் பெயர் இன்னமும் இருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது. இக்கொலைகள் நடைபெற்று சரியாக இரு நாட்களின் பின்னர் வீரதுங்க யாழ்ப்பாணம் சென்று வடமாகாண இராணுவத் தளபதியாக பொறுப்பெடுத்துக்கொண்டார். தனது நியமனம் கிடைத்த நாளே தனது பிறந்தநாள் என்பதால், அந்நாளில் பதவியேற்பதைத் தவிர்த்துவிட்டார். தனது நியமனத்தையும், பிறந்தநாளையும் வெகு விமர்சையாக அவர் கொண்டாடினார். வீரதுங்க யாழ்ப்பாணத்திற்குச் சென்று பொறுப்பெடுத்தவுடன், தமிழ் இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான படுகொலைகள் பலமடங்கு அதிகரித்தன. போராளிகள் என்று சந்தேகிக்கப்படுவோர் கைதுசெய்யப்பட்டு கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர். போராளிகள் என்று காட்டிக்கொடுக்கப்பட்ட பல இளைஞர்கள் கொல்லப்பட்டு யாழ்ப்பாணமெங்கும் பொதுமக்களின் கண்களில் படும்படி வீசியெறியப்பட்டனர். யாழ்ப்பாணக் குடாநாட்டில் இராணுவத்தினரின் விசாரணை என்பது "சித்திரவதைகளின் பின்னர் கொன்றுவிடுவதே" என்று ஆகிப்போனது. பலநூற்றுக்கணக்கான இளைஞர்கள் இக்காலப்பகுதியில் கைதுசெய்யப்பட்டுக் காணாமலாக்கப்பட்டனர். யாழ்ப்பாணம் பழைய பூங்காவின் பிற்பகுதியில் இராணுவக் கூடாரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றினை அப்பகுதி மக்கள் சித்திரவதைக் கூடாரங்கள் என்றே அழைத்துவந்தனர். பத்திரிக்கையாளர்களிடமும், மனிதவுரிமை அமைப்புக்களிடமும் பேசிய சுண்டுக்குளிப் பகுதி மக்கள் இரவுவேளைகளில் இந்த கூடாரங்கள் இருக்கும் பகுதியில் இருந்து அழுகுரல்களும், ஓலங்களும் தொடர்ச்சியாகக் கேட்டு வந்ததாகவும், தமிழ் இளைஞர்கள் வலியினால் துடி துடித்துக் கதறுவதை தாம் பலமுறை கேட்டதாகவும் கூறியிருந்தனர். இந்த அவலங்களால் தாம் மிகுந்த அச்சமுற்று இரவுகளைக் கழித்து வருவதாகவும் கூறினர். யாழ்ப்பாணத்து மக்கள் ஒவ்வொரு காலைகளிலும் உருக்குலைக்கப்பட்ட நிலையில் கொன்று எறியப்பட்ட தமது இளைஞர்களின் உடல்களைக் கண்டனர். யாழ்ப்பாண மக்களை அச்சுருத்தி பணியவைக்கவே இந்தக் கொலைகளை இராணுவத்தினர் செய்துவந்தனர். உருக்குலைக்கப்பட்டு கிடந்த தமிழ் இளைஞர்களின் உடல்களை வெளிப்படையாக பொதுமக்களின் பார்வைக்கு வைத்ததன் மூலம் இராணுவம் தமிழ் மக்களுக்கு கூறிய செய்தி, "போராளி அமைக்களில் இணைந்தாலோ அல்லது அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தாலோ உங்களுக்கும் இதே நிலைதான் ஏற்படும்" என்பதுதான். பொதுமக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் வீசி எறியப்பட்ட உடல்கள் அனைத்துமே இறந்திருக்கவில்லை. யாழ்ப்பாணம் டச்சுக் கோட்டைக்கு முன்னால் இருந்து யாழ் சிறைச்சாலை காவலர்களால் கண்டெடுக்கப்பட்டு யாழ்வைத்தியசாலையில் கையளிக்கப்பட்ட ஜெயெந்திரனின் உடலில் இன்னமும் உயிர் இருந்தது. அவர் இன்னமும் கஷ்ட்டப்பட்டு சுவாசித்துக்கொண்டிருந்தார். அவரைப் பரிசோதித்த வைத்தியர் ஜெயெந்திரன் இறக்கவில்லை என்பதனை உறுதிப்படுத்தினார். உடுவில் பகுதியிலிருந்து இராணுவத்தால் கடத்திச் செல்லப்பட்ட ஜெயெந்திரன், மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு பின்னர் அதுலத் முதலியின் விசாரணைக் குழுவின் முன்னால் சாட்சியமளிக்கும் வரை உயிரோடு இருந்தார். அதுலத் முதலியின் விசாரணைக் குழு ஆடி 13 ஆம் திகதி காணமலாக்கப்பட்ட 6 இளைஞர்கள் தொடர்பாக விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது. பொலீஸாரின் கொடூரங்கள் பற்றி அதுலத் முதலியின் குழுவின் முன்னால் சாட்சியமளித்த இன்னொருவர் கொக்குவில் மேற்கைச் சேர்ந்த நகைத் தொழிலாளரான மதியாபரணம் என்பவர். நடுத்தர வயது கொண்டிருந்த மதியாபரணம் அவர்கள் துப்பாக்கிகளைத் திருத்துவதற்கான சட்டரீதியான அனுமதிப் பத்திரத்தைக் கொண்டிருந்தவர். ஆனைக்கோட்டைப் பொலீஸ் நிலையத்தின் துப்பாக்கிகளை அவர் பழுதுபார்த்து வந்தார். அங்கு பணிபுரிந்த பொலீஸ் அதிகாரிகளை அவருக்கு நன்கு தெரிந்திருந்தது. ஒருநாள் இரவு, அவரது நண்பரான சந்திரன் என்பவர் தனது நண்பர் ஒருவரின் பொலீஸாருடனான பிரச்சினை ஒன்றைத் தீர்ப்பதற்கு உதவிநாடி மதியாபரணத்தைச் சந்திக்க வந்திருந்தார். மூவரும் பொலீஸ்நிலையம் நோக்கிச் சென்றபின், சந்திரன் தனது சைக்கிளில் வெளியே காத்துநிற்க மதியாபரணமும், சந்திரனின் நண்பரும் உள்ளே சென்றனர். மதியாபரணமும் சந்திரனின் நண்பரும் தமது வேலை முடிந்து பொலீஸ்நிலையத்திற்கு வெளியே வந்தபோது அங்கே சந்திரனைக் காணவில்லை. அவரது உடல் மறுநாள் செம்மணி சுடலையின் கிணற்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டிருந்தது. மதியாபரணம் இதனை மனிதவுரிமை செயற்பாட்டாளர்களிடமும் அதிகாரிகளிடமும் கூறினார். அவரைப் பழிவாங்க நினைத்த பொலீஸார், அவரையும் கைதுசெய்து சிறையில் அடைத்து, அவர் தொடர்ந்தும் தமது அக்கிரமங்கள் பற்றிப் பேசுவதைத் தடுத்தனர். பொலீஸாரின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த காலத்தில் ஒருநாள் இரவு தமது ஜீப் வண்டி பழுதடைந்துவிட்டதனால், மதியாபரணத்தை தமது ஜீப் வண்டியத் தள்ளுமாறு பொலீஸார் கேட்டனர். அப்போது ஜீப்பின் பின்பகுதியில் நான்கு உடல்களை அவர் கண்டார். அவற்றுள் ஒன்று ராஜேஸ்வரனுடையது. ஆனால், அவர் இன்னமும் இறந்திருக்கவில்லை. அவரை தனது மடியில் தூக்கிவைத்து காப்பற்ற மதியாபரணம் முனைந்தவேளையில், அவரது மடியிலேயே ராஜேஸ்வரனின் உயிர் பிரிந்தது. இந்தச் சம்பவத்தை மதியாபரணம் அதுலத் முதலியின் ஆணைக்குழுவின் முன்னால் கூறினார். அவர் தொடர்ந்தும் சாட்சியமளிகையில், காணமலாக்கப்பட்ட இளைஞர்களின் உடல்களை பொலீஸார் யாழ்ப்பாணம் கேரதீவுச் சாலையின் பகுதியொன்றில் புதைத்ததாகக் கூறினார். "பொலீஸார், தமிழ் இளைஞர்களின் உடல்களை வீதியின் அருகில் புதைத்துக்கொண்டிருக்கையில், நேரதாமதத்தினால் யாழ்ப்பாணம் - கேரதீவு பேரூந்து அவ்வழியால் வந்துகொண்டிருந்தது. பேரூந்திலிருந்த மக்கள் அனைவரும் வெளியே தலைகளை நீட்டி பொலீஸார் இளைஞர்களைப் புதைத்துக்கொண்டிருப்பதைக் கண்டார்கள். இதனால் கொதிப்படைந்த பொலீஸார் என்னை அங்கேயே விட்டு விட்டு அவசரத்துடன் கிளம்பிச் சென்றார்கள்" என்று அதுலத் முதலியின் குழுவின் முன்னால் கூறினார். ஆனால் மதியாபரணத்தின் வாக்குமூலத்தை உறுதிப்படுத்தமுடியாத தகவல்கள் என்று ஆணைக்குழு ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. ஆகவே, இந்தச் சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அதே பொலீஸாரிடம் ஆணைக்குழு கேட்டுக்கொண்டது. இந்த ஆணைக்குழுவின் முக்கிய தோல்வி, ராஜேஸ்வரன் மற்றும் பரமேஸ்வரன் ஆகியோரது காணாமற்போதல்கள் பற்றிய அவர்களது மாமனாரான சந்திரசேகரத்தின் வாக்குமூலத்தை ஆணைக்குழு ஏற்றுக்கொள்ள மறுத்ததுதான். அவர்களின் தந்தையாரான செல்வதுரையின் வாக்குமூலத்தினை ஆணைக்குழு ஏற்றுக்கொண்டாலும் கூட, அவரது பிள்ளைகள் இருவரும் கைதுசெய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டது சாவகச்சேரியிலிருந்த அவர்களது மாமனாரின் வீட்டில் இருந்துதான் என்பதும், இதற்கு அவர்களது மாமனாரே கண்ணால் கண்ட சாட்சியம் என்பதும் குறிப்பிடத் தக்கது. ஆணைக்குழு முன்னால் சந்திரசேகரம் வாக்குமூலமளிக்க எடுத்துக்கொண்ட முயற்சிகள் எல்லாம் வேண்டுமென்றே தடுக்கப்பட்டன. சாவகச்சேரிப் பாராளுமன்ற உறுப்பினரான வி.என். நவரட்ணத்தை சந்திரசேகரம் இதுகுறித்து உதவுமாறு கோரி அணுகியபோது, "இது என்னுடைய பிரச்சினையில்லை, நான் தலையிட முடியாது" என்று கூறி கையை விரித்துவிட்டார். அதுலத் முதலியின் ஆணைக்குழுவில் சிவசிதம்பரம் ஒரு உறுப்பினராக இருந்தபோதும் ஜெயாருடன் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருக்கு உருவாகி வந்த நட்பைப் பாதித்து விடும் என்பதனால சந்திரசேகரத்தின் வாக்குமூலத்தை ஏற்றுக்கொள்ளவைக்க எந்த முயற்சியிலும் அவர் ஈடுபட விரும்பவில்லை.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
தமிழர்களைக் குறிவைத்து உருவாக்கப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டம் லலித் அதுலத் முதலியின் மேற்பார்வையில் உருவாக்கப்பட்ட இத்தடைச் சட்டத்தில் பயங்கரவாதம் எனும் சொற்பதத்திற்கான விளக்கம் வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டது. இங்கிலாந்துச் சட்டத்தின் படி பயங்கரவாதம் எனும் சொல்லிற்கு பின்வருமாறு விளக்கம் கொடுக்கப்பட்டிருந்தது, "அரசியல் ரீதியிலான முடிவுகளை நோக்கி நடத்தப்படும் வன்முறைகள்". இலங்கை உருவாக்கிய 1979 இல் உருவாக்கிய சட்டம் முன்னர் உருவாக்கப்பட்ட சட்டத்திற்கான திருத்தங்கள் என்று மட்டுமே கூறியிருந்தது. இச்சட்டத்தின்படி குற்றங்களும் தண்டனைகளும் பின்வருமாறு பட்டியலிடப்பட்டிருந்தன, தமிழ் மக்கள் மேல் குரூரமான அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டிருந்த இந்தச் சட்டத்தின் சில பகுதிகளை இங்கே குறிப்பிட விரும்புகிறேன், 1. ஒரு குறித்த நபருக்கு மரணத்தை விளவிக்கும் அல்லது ஒரு குறித்த நபரைக் கடத்தும் அல்லது ஒரு குறித்த நபர் மீது தாக்குதலை நடத்தும் எந்த ஒரு நபரும் குற்றத்தடுப்புச் சட்டத்தின்படி மரண தண்டனையினை அல்லது 7 வருடங்களுக்குக் குறையாத சிறைத்தண்டனையினைப் பெற்றுக்கொள்வார். 2. ஒரு குற்றத்திற்கான சாட்சியாக இருக்கும் ஒரு நபரை கொல்லும் அல்லது கடத்திச் செல்லும் அல்லது அந்தச் சாட்சி மீது தாக்குதல் நடத்தும் எவரும் குற்றத்தடுப்புச் சட்டத்தின் பிரகாரம் மரண தண்டனையினை அல்லது 7 வருடங்களுக்குக் குறையாத சிறைத்தண்டனையினைப் பெற்றுக்கொள்வார். 3. ஒரு குறித்த நபருக்கு அச்சுருத்தல் விடுப்பது அல்லது சாட்சியொன்றிற்கு அச்சுருத்தல் விடுப்பது, அரச சொத்துக்களைக் கொள்ளையடிப்பது, திணைக்களங்கள், பொதுமக்கள் கூட்டுத்தாபனங்கள், வங்கிகள், பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் ஆகியவற்றைக் கொள்ளையடிப்பது, அல்லது இந்த அரச சொத்துக்களைக் கையாடுவது, சட்டத்திற்குப் புறம்பான வகையில் ஆயுதங்களை, தோட்டாக்களை, வெடிமருந்துகளை, அவற்றின் உதிரிப்பாகங்களை இறக்குமதி செய்வது அல்லது தயாரிப்பது மற்றும் இவற்றினைப் பாவிப்பது அல்லது பாவிப்பதற்கு உத்தேசித்திருப்பது , பாதுகாப்புப் பகுதியொன்றில் ஆயுதங்களை, வெடிபொருட்களை, உதிரிப்பாகங்களை வைத்திருப்பது, அவற்றைப் பாவிப்பது அல்லது பாவிக்க உத்தேசித்திருப்பது, 4. இனங்கள், மதங்கள், சமூகங்களுக்கெதிரான வார்த்தைகளை, சொற்களை, பிரசுரங்களை இனங்களுக்கிடையே பகைமையினை வளர்க்கும்படி பாவிப்பது, அல்லது பாவிக்க உத்தேசித்திருப்பது 5. சட்டத்திற்குப் புறம்பான வகையில் பெருந்தெருக்கள், வீதிகள், பொதுமக்கள் பாவிக்கும் சொத்துக்களில் இருக்கும் அறிவிப்புப் பலகைகள் உள்ளிட்ட ஏனைய அறிவித்தல்களை அழிப்பது, மாற்றம் செய்வது, சேதப்படுத்துவது, 6. குற்றச்சாட்டிற்குள்ளான ஒரு நபரை மறைத்துவைப்பது அல்லது அவர கைதுசெய்யப்படுவதைத் தடுப்பது அல்லது கைது நடவடிக்கைகளுக்குக் குந்தகம் விளைவிப்பது, ஆகிய குற்றச்செயல்களில் ஈடுபடும் எந்த ஒருவரும் இச்சட்டத்தின்படி தண்டணைக்குள்ளாவார். 7. இவ்வாறு குற்றவாளிகளால் இலக்குவைக்கப்படும் குடிமக்கள் நாட்டின் ஜனாதிபதியாகவோ, பிரதம மந்திரியாகவோ, அமைச்சர்களாகவோ, பாராளுமன்ற உறுப்பினர்களாகவோ, உள்ளூர் அதிகாரிகளாகவோ, இராணுவம் மற்றும் பொலீஸ் உறுப்பினர்களாகவோ, சட்டத்துறையில் செயலாற்றுபவர்களாகவோ இருப்பர். இதற்குத் தண்டனையாக மரண தண்டனையினை அல்லது 7 வருடங்களுக்குக் குறையாத சிறைத்தண்டனையினைப் பெற்றுக்கொள்வார். 8. சட்டத்தின் பகுதி 2 மற்றும் பகுதி 3 இன் அடிப்படையில் குற்றச்செயல்களில் ஈடுபடும் ஒருவரின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் அரசுடமையாக்கப்படும். இந்த குற்றவாளியால் ஏற்படுத்தப்பட்ட அனைத்துக் கொடுக்கல் வாங்கல்களும் முறையற்றவை என்று பிரகடணப்படுத்தப்படும். 9. ஒரு நபர் குற்றமொன்றைச் செய்யவிருக்கிறார். அல்லது குற்றத்தைச் செய்துவிட்டார் என்று தெரிந்தும் அதனை மறைத்தல், அவரது நகர்வுகளை அதிகாரிகளுக்கு வழங்க மறுத்தல், குற்றவாளியினது மறைவிடங்கள் பற்றிய தகவல்களை வழங்க மறுத்தல் ஆகிய குற்றங்களில் ஈடுபடுவோருக்கு ஏழு வருடங்களுக்கு உட்பட்ட வகையில் சிறைத்தண்டனை வழங்கப்படும். 10. மேலும், குற்றச்செயல்களில் ஈடுபடும் தனிநபரோ, அமைப்போ, நிறுவனமோ இதேவகையான தண்டனைக்கு உள்ளாகும். தமிழ் மக்களை இலக்குவைத்தே இந்தச் சட்டம் கொண்டுவரப்படுகிறது என்பதை நன்றாகத் தெரிந்திருந்தும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, இச்சட்டத்தினை எதிர்க்க முன்வராமல் மெளனம் காக்கத் திட்டமிட்டது. முன்னணியினருக்கு தனது மகிழ்வான முகத்தை அப்போது காட்டிக்கொண்டிருந்த ஜெயவர்த்தனவைக் கோபப்பபடுத்திப் பார்க்க முன்னணியின் எந்த உறுப்பினரும் தயாராக இருக்கவில்லை. இச்சட்டம் தொடர்பான பாராளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு எதிர்ப்பதை விடுத்து, விவாதத்தில் கலந்துகொள்ளாது விடுவதன் மூலம் ஜெயாரை சாந்தப்படுத்திய முன்னணியினர், தமிழ் இளைஞர்களைச் சாந்தப்படுத்த இச்சட்டத்தினை விமர்சித்து அறிக்கையொன்றினை மட்டும் வெளியிட்டனர். மேலும், தமது கட்சியின் மத்திய குழுவில்க் கூட இச்சட்டம் பற்றிய விவாதங்களை நடத்த தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைமை மறுத்துவிட்டது. ஆனால், பாராளுமன்றத்தில் இச்சட்டத்தினை எதிர்க்கட்சியாகவிருந்த சுதந்திரக் கட்சி எதிர்த்து வாக்களித்தது. வெறும் 8 உறுப்பினர்களை மட்டுமே கொண்டிருந்த அக்கட்சியினால் இச்சட்டத்தினைத் தடுத்து நிறுத்தவியலாமல்ப் போய்விட்டது. இந்தக் கொடூரமான சட்டம் நாட்டிலிருந்த மனிதவுரிமைகள் செயற்ப்பாட்டாளர்களினதும், பல நீதிபதிகளினதும் கண்டனத்திற்குள்ளானது. கண்டனத்துக்குள்ளாக்கப்பட்ட இச்சட்டத்தின் சில பகுதிகளாவன, 1. பொலீஸாருக்கு வழங்கப்பட்ட வாக்குமூலங்கள் சாட்சியமாகப் பாவிக்கப்படக்கூடியன. 2. குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவர் வைத்திருந்த எந்தப் பொருளும், ஆவணமும் அவருக்கெதிராக சாட்சியமாகப் பாவிக்கப்படும். 3. ஒருவர் குற்றவாளியாக இருக்கலாம் என்று அமைச்சர் சந்தேகப்படுமிடத்து, அந்த நபர் குறைந்தது 18 மாதங்களுக்கு விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட முடியும்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
ஜெயவர்த்தனவிடம் அடைக்கலமாகிப்போன அமிர்தலிங்கமும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியும் தமிழருக்கான சுயநிர்ணய உரிமையினை மார்க்ஸிச - லெனினிஸக் கொள்கையின் அடிப்படையில் உருவாக்கவேண்டும் அல்லது வேண்டாம் என்கிற பாரிய சர்ச்சையொன்று தமிழ் மற்றும் சிங்கள இடதுசாரி அறிவுஜீவிகள் மத்தியில் ஏற்பட்டிருந்தது. சிங்கள இடதுசாரிகளைப் பொறுத்தவரை தமிழர்கள் சுயநிர்ணய உரிமைக்குத் தகுதியுடையவர்கள் ஆனபோதும் கூட நாட்டைப் பிரித்து தனியான நாடொன்றினை உருவாக்கும் நிலைப்பாட்டை அவர்கள் கடுமையாக எதிர்த்தார்கள். பாலசிங்கம் தனது இரண்டாவது பிரசுரத்தில் இவ்வாறு எழுதினார், "சோசலிசத் தமிழீழம் நோக்கி". அடக்குமுறைக்குள்ளாக்கப்பட்ட மக்கள் என்கிற வகையில் தமிழர்கள் பிரிந்துசெல்வதற்கு உரித்துடையவர்கள் என்று அவர் எழுதினார். தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட இப்புத்தகத்தின் பிரதியொன்று பிரபாகரனுக்கும் கிடைத்தது. பாலசிங்கம் எழுதிய இப்புத்தகத்தை பிரபாகரன் படித்தபோது அதன்பால் மிகுந்த ஈடுபாடு கொண்டதாக "சுதந்திர வேட்கை" எனும் புத்தகத்தில் பாலசிங்கத்தின் துணைவியார் அடேல் பாலசிங்கம் குறிப்பிடுகிறார். பாலசிங்கத்தின் தாத்துவார்த்த ரீதியிலான ஆய்வுகள் லண்டனில் இயங்கிவந்த புலிகளின் செயற்பாட்டாளர்களான கிரிஷ்ணன், ஆர் ராமச்சந்திரன் (அன்டன் ராஜா) ஆகியோருடன் அன்டன் பாலசிங்கம் நெருங்கிப் பழகும் வாய்ப்பினை ஏற்படுத்தியிருந்தது. பாலசிங்கத்தை அடிக்கடி சந்தித்துக்கொண்ட இவர்கள், புலிகளின் செயற்பாடுகள் குறித்து அவருக்குத் தொடர்ச்சியாக அறிவூட்டியும் வந்தார்கள். அத்துடன் தமது அறிக்கைகள், துண்டுப்பிரசுரங்கள் ஆகியவற்றை வெளியிடுவதற்கு பாலசிங்கத்தின் உதவியினையும் நாடத் தொடங்கினார்கள். தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்த்துறை, உலக இளைஞர் மாநாட்டில் தமிழரின் போராட்டம் தொடர்பான அறிக்கையொன்றினை வெளியிடத் தீர்மானித்தது. இதற்கு பாலசிங்கத்தின் உதவியை உமா மகேஸ்வரன் நாடினார். பாலசிங்கம் எழுதிய அந்த அறிக்கை ஆங்கிலம், ஸ்பானிஷ், பிரெஞ்சு, ஜேர்மனிய, போத்தூகேய மற்றும் தமிழ் மொழி ஆகிய ஆறு மொழிகளில் வெளியாகியது. இந்த அறிக்கை, மாநாட்டிற்கு வந்திருந்த அனைத்துலகப் பிரதிநிதிகள், இராஜதந்திரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள், பத்திரிக்கையாளர்கள் போன்ற பலதரப்பட்டவர்களுக்கும் விநியோகிக்கப்பட்டது. போரும் சமாதானமும் விளையாட்டு புலிகளை சர்வதேச அளவில் பிரபல்யப்படுத்தும் உமா மகேஸ்வரனின் திட்டம் தொடர்ந்தும் செயற்படுத்தப்படுவதில் சிக்கல்கள் தோன்றியது. 1979 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் பிரபாகரனுக்கும் உமா மகேஸ்வரனுக்கும் இடையில் இலங்கையில் தோன்றியிருந்த கருத்து வேறுபாடே இதற்குக் காரணமாக அமைந்தைருந்தது. காளைமாடு - வீரதுங்க எதிர்க்கட்சியினருடன் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் சேர்ந்தால் தமிழருக்கெதிரான இன்னொரு வன்முறைக் கலவரத்தை உருவாக்குவேன் என்று அச்சுருத்தி, அந்த முயற்சியைத் தவிடு பொடியாக்கியிருந்த ஜெயவர்த்தன, தனது போர் விளையாட்டுக்களை முன்னெடுப்பதில் உறுதியுடன் செயற்படத் தொடங்கினார். 1979 ஆம் ஆண்டு ஆடியில் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றின் மூலம் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை அவர் நடைமுறைப்படுத்தினார். இந்தச் சட்டம் பாராளுமன்றத்தால் ஆடி 20 ஆம் நாள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1979 ஆம் ஆண்டின் இறுதிக்குள் வடமாகாணத்திலிருந்து தீவிரவாதத்தை முற்றாக அழித்துவிடவேண்டும் என்கிற கட்டளையுடன் தனது மருமகனான, "காளை மாடு" என்றழைக்கப்பட்ட திஸ்ஸ வீரதுங்கவை வடமாகாணத்திற்கான இலங்கை இராணுவத்தின் தலைமை அதிகாரியாக அவர் ஆடி 14 இல் நியமித்தார். ஜெயவர்த்தன, காளைமாட்டு வீரதுங்கவிற்கு இட்ட ஆணை இவ்வாறு கூறியிருந்தது "தீவிரவாதத்தையும், அதன் அனைத்து விதமான வடிவங்களையும் இந்த நாட்டிலிருந்து, குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து, நாட்டின் அனைத்துச் சட்டங்களின் பிரகாரம் முற்றாக அழித்தொழிப்பதற்கு நீர் பொறுப்பாக நியமிக்கப்பட்டிருக்கிறீர். இந்நாட்டின் சட்டத்தை மதிக்கும் அனைத்து மக்களையும் உமது இந்த நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு நான் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். உம்மால் மேற்கொள்ளப்படும் இந்த பயங்கரவாத அழிப்பு நடவடிக்கை 1979 ஆம் ஆண்டு மார்கழி 31 ஆம் திகதிக்குள் முற்றுப்பெறவேண்டும்". வீரதுங்கவின் இராணுவ நடவடிக்கைக்கு ஏதுவாக ஆடி 12 ஆம் திகதி, யாழ்ப்பாண மாவட்டத்தில் பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் சரத்து 14 இனைப் பாவித்து அவசரகால நிலைமையினை ஜெயவர்த்தன பிரகடணப்படுத்தினார். இந்தச் சட்டத்தின் மூலம் சந்தேகத்திற்கிடமான எவரையும் உடனேயே சுட்டுக் கொல்லும் அதிகாரமும், அவர்களது உடல்களை விசாரணையின்றி எரித்துவிடும் அதிகாரமும் பொலீஸாருக்கும், இராணுவத்தினருக்கும் வழங்கப்பட்டது. பொலீஸாரினதும், இராணுவத்தினதும் மதிப்பீட்டின்படி யாழ்ப்பாண மாவட்டத்தில் இயங்குவதாகக் கணிக்கப்பட்ட சுமார் 200 போராளிகளுக்கெதிராகவே ஜெயவர்த்தனவின் இந்த இராணுவ நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டது. தமிழ் பொலீஸ் பரிசோதகர் குருசாமியின் இழப்பிற்குப் பின் யாழ்ப்பாணத்தில் இயங்கிவந்த பொலீஸ் உளவுப்பிரிவு சரிவைச் சந்தித்திருந்தது. அதேவேளை, பலாலி இராணுவ முகாமில் கப்டன் முனசிங்க தலைமையில் உருவாக்கப்பட்டு வந்த இராணுவப் புலநாய்வுப் பிரிவு செயற்படும் நிலைக்கு வந்திருந்ததுடன், அப்பிரிவு யாழ்ப்பாண இராணுவத் தளபதி பிரிகேடியர் ரணதுங்கவின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கத் தொடங்கியது. இராணுவம் முறுக்கேற்றப்பட்ட நிலையிலும், அந்த இராணுவ நடவடிக்கைகளுக்கான சட்டப் பாதுகாப்புக்கள் பலமாக இடப்பட்ட நிலையிலும், ராணுவ தீர்வில் வெகு இறுமாப்புடன் இருந்த ஜெயவர்த்தன, தனது கவனத்தை அரசியல்க் களம் நோக்கித் திருப்பத் தொடங்கினார். தன்னால் அடிபணியவைக்கப்பட்ட அமிர்தலிங்கத்தையும், அவரது தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரையும் தொடர்ந்தும் தமிழருக்கெதிரான கலவரம் பற்றி அச்சத்தில் வைத்திருக்க தனது பிரதமரான ரணசிங்க பிரேமதாசாவை ஜெயவர்த்தன பாவித்தார். இந்தச் செய்தியை பதியும்படி நான் பணிக்கப்பட்டிருந்தேன். நான் அமிர்தலிங்கத்துடனும் சிவசிதம்பரத்துடனும் பல சந்திப்புக்களில் கலந்துகொண்டேன். அவர்கள் மிகுந்த பதற்றத்துடனும், அதேவேளை கவலையுடனும் காணப்பட்டார்கள். "தமிழர்களால் இனியொரு இனக்கலவரத்தைச் சந்திக்க முடியாது" என்று அவர்கள் என்னிடம் திரும்பத் திரும்பக் கூறினார்கள். இனங்களுக்கிடையிலான பதற்றநிலையினைத் தவிர்ப்பதற்கு இருபகுதியினரும் இணைந்து சில நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்று பிரேமதாச முன்னணியினரிடம் ஆலோசனை கூறினார். அதற்கு உடனடியாகவே அமிர்தலிங்கம் ஒப்புக்கொண்டார். பாராளுமன்றத்தின் பிரதமரின் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தின் பின்னர் பிரேமதாசவுடன் இணைந்து அறிக்கையொன்றினை முன்னணியினர் தயாரித்தனர். நாட்டு மக்களிடம் முன்வைக்கப்பட்ட அந்த வேண்டுகோள் இப்படிக் கேட்டிருந்தது, "நாம் இந்த நாட்டு மக்களிடம் வேண்டுவது யாதெனில், தீய சக்திகளின் வதந்திகளாலும், நடவடிக்கைகளாலும் ஆட்கொள்ளப்பட்டு விடாது, அமைதியையும் நிதானத்தையும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதுதான். பாராளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் அனைத்து அரசியல், மதத் தலைவர்கள், சமூக சேவைகள் அமைப்புக்கள் ஆகியோரிடமும் நாம் மக்களிடையே அமைதியையும் சமாதானத்தையும், சட்டம் ஒழுங்கினையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த தம்மாலான சகலதையும் செய்யவேண்டும் என்றும், தமது தேர்தல்த் தொகுதிகள், கிராமங்கள் மட்டத்தில் வதந்திகள் பரவுவதைத் தடுத்து மக்களுக்கும் சொத்துக்களுக்கும் சேதம் விளைவதைத் தடுக்க வேண்டும் என்றும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்" "தமது சொந்த விருப்பு வெறுப்புகளுக்காக பதற்றமான சூழ்நிலையினை உருவாக்கி மக்கள் மீது இனரீதியான வன்முறைகளை ஏவிவிடக் காத்திருப்போரிடமிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கும் நாம் எம்மாலான சகலதையும் செய்வோம் என்று உறுதியெடுக்கிறோம்". "எமது நாட்டை உலுக்கிவரும் பிரச்சனைகள் அனைத்திற்கும் சமாதான ரீதியில் தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று திடமாக நம்பும் அதேவேளை, அரசியல் லாபத்திற்காக சில விஷமிகள் விரித்துவரும் வலையில் சிக்கிக்கொள்ளவேண்டாம் என்றும் மக்களைக் கேட்டுக்கொள்கிறோம்" "நாகரீகமடைந்த மக்கள் கூட்டம் என்கிற வகையில், எமக்குள் ஏற்பட்டிருக்கும் பிணக்குகளை சமாதான வழிகளில் எம்மால் தீர்த்துக்கொள்ள எமது மதங்களோடு இணைந்த பாரம்பரியங்கள் எமக்கு எப்போதும் துணைநிற்கும் என்பதை நாம் சர்வதேசத்திற்குப் பாடமாக எடுத்துக் கூறுவோம்". இந்த ஒருங்கிணைந்த வேண்டுகோளிற்கே ஒரு அரசியல்க் காரணம் இருந்தது. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரை எப்படியாவது தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர ஜெயவர்த்தன முயன்று வந்தார். பயங்கரவாதத் தடைச் சட்டம் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவிருந்த ஆடி 19 ஆம் திகதி, தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் உருவாக்கம் பற்றிக் கலந்துரையாடுவதற்கு தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருக்கும், எதிர்க்கட்சியான சுதந்திரக் கட்சிக்கும் அழைப்பு விடுத்தார் ஜெயவர்த்தன. இந்த அழைப்பினை உடனடியாக தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி ஏற்றுக்கொள்ள, எதிர்க்கட்சியோ அழைப்பை நிராகரித்திருந்தது. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் தனது அழைப்பிற்குச் சாதகமாகப் பதிலளித்ததையடுத்து, அதற்குப் பிரதிபலனாக ஜெயார் சில விடயங்களைச் செய்யப்போவதாக அறிவித்தார். வவுனியாவில் சிங்களவர்கள் பெரும்பான்மையினராக வாழும் மூன்று உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளை அநுராதபுரம் மாவட்டத்துடன் இணைத்துக்கொள்ளும் தனது முடிவினை நடைமுறைப்படுத்தப்போவதில்லை எனும் அறிவிப்பு மற்றும் லலித் அத்துலத் முதலி தலைமையில் உருவாக்கப்படும் பாராளுமன்றத் தெரிவிக்குழுவினூடாக யாழ்ப்பாணத்தில் கொல்லப்பட்ட இளைஞர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளுதல் ஆகியவற்றை செய்யப்போவதாக ஜெயவர்த்தன முன்னணியினரிடம் தெரிவித்தார். ஜெயவர்த்தனவை எப்படியாவது மகிழ்வித்துவிட வேண்டும் என்று தீவிரம் காட்டிய தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி தாம் அதுவரை பகிஷ்கரித்து வந்த பாராளுமன்ற அமர்வுகளில் இனிக் கலந்துகொள்ளப்போவதாக அறிவித்தது. தனது போர் விளையாட்டு வெற்றிபெற்று வருவது கண்டு பூரிப்படைந்த ஜெயவர்த்தன, தமிழர்களுக்கு நீதிவழங்கத் தான் தயாராக இருப்பதாகவும், பேராசிரியர் ஏ.ஜே.வில்சனுடனான தனது கலந்துரையாடல்களின் அடிப்படியில் மாவட்ட அதிகார சபைகள் தொடர்பாக விசாரிப்பதற்கு ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றினை நியமிக்கப்போவதாகவும் அறிவித்தார். இந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற பிரதம நீதியரசர் ஏ.ஜே. விஜேகோனும், ஏனைய உறுப்பினர்களாக கலாநிதி. ஏ.ஜே. வில்சன், கலாநிதி. ஜே.ஏ.எல். குரே, கலாநிதி நீலன் திருச்செல்வம் மற்றும் ஏ.சி.எம்.அமீர் ஆகியோரும் நியமிக்கப்பட்டனர். இது ஜெயவர்த்தனவின் மிகச்சிறந்த தந்திர நகர்வாகக் கருதப்பட்டது. இதன்மூலம் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரை தனது அரசாங்கத்துடன் மிக நெருக்கமாக அவர் வரிந்துகொண்டார். இதன்மூதல் தமிழ்ப் போராளிகளுக்கும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருக்கும் இடையே நிரந்தரப் பிரிவை அவர் உருவாக்கினார். இதன்மூலம் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் முற்றான தோல்வியையும் அவர் உறுதிப்படுத்தினார்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பாலா அண்ணா இந்த இளைஞர் விழா நிகழ்வினைத் தமக்குச் சாதகமாகப் பாவித்த புலிகள் தமிழீழ விடுதலைப் போராட்டம் பற்றிய துண்டுப்பிரசுரங்களை அங்கு வந்திருந்த வேறு நாட்டு இளைஞர்களிடம் விநியோகித்தனர். இந்தத் துண்டுப் பிரசுரம் அன்டன் ஸ்டனிஸ்லோஸ் பாலசிங்கம் எனும், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆனால் வெளிநாடொன்றில் வாழ்ந்துவந்த இளைஞர் ஒருவரால் எழுதப்பட்டிருந்தது. ஆரம்பத்தில் வீரகேசரி பத்திரிக்கையின் உதவி ஆசிரியராகவும் பின்னர் கொழும்பில் இயங்கிவந்த பிரித்தானியாவின் உயர்ஸ்த்தானிகராலயத்தின் மொழிபெயர்ப்பாளராகவும் செயற்பட்டு வந்தவர் அன்டன் பாலசிங்கம். பின்னர் தனது குடும்பத்துடன் லண்டனுக்கு புலம்பெயர்ந்து வாழ்ந்துவரும் காலத்தில் அவரது துணைவியார் கடுமையான சிறுநீரகக் கோளாறினால் மரணமானார். அதன்பிறகு, அவுஸ்த்திரேலியாவைச் சேர்ந்த தாதியான அடேலை பாலசிங்கம் மணமுடித்தார். இவர்கள் இருவரும் லண்டன் பலகலைக் கழகத்தில் சமூகவியல் கற்கை நெறிக்கான காலத்தில் சந்தித்திருந்தனர். வட்டுக்கோட்டைத் தீர்மானம், தனிநாடொன்றினை உருவாக்குவதற்கான மக்கள் ஆணை, 1977 ஆம் ஆண்டுத் தேர்தல், அதன்பின்னரான தமிழர் மீதான வன்முறைகள், புலிகளின் வெளிப்படுத்தல், அவ்ரோ விமானம் மீதான தாக்குதல் ஆகிய விடயங்கள் லண்டனில் வாழ்ந்துவந்த பல தமிழ் இளைஞர்களை உற்சாகப்படுத்தியிருக்க , அவர்கள் 33 வயது நிரம்பிய, தமது பல்கலைக்கழகத்தின் மூத்த மாணவரான பாலாவைச் சூழ்ந்துகொண்டு ஊர் நிலவரங்கள் பற்றிப் பேசத் தொடங்கினர். அந்த இளைஞர்களில் ஒருவரான ஞானசேகரன் தமிழர்களின் பிரச்சினை குறித்து கட்டுரை ஒன்றை வரையும்படி பாலாவைக் கேட்டார். அவர் கேட்டுக்கொண்டதன்படியே பாலா செய்தார். பாலா எழுதிய துண்டுப்பிரசுரம் இப்படிக் கூறியது, "தமிழ்த் தேசியப்பிரச்சினை தொடர்பாக". பாலசிங்கத்தின் இந்த முயற்சி அவரை லண்டனில் வாழ்ந்துவந்த புலிகளியக்க தொடர்பாளர்கள் மற்றும் ஈரோஸ், டி.எல்.ஒ ஆகிய ஏனைய அமைப்பின் செயற்பாட்டாளர்களுடனும் நெருக்கத்தை ஏற்படுத்த உதவியது.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
கியூபாவிற்குச் சென்ற புலிகள் போராளி அமைப்புக்களின் முக்கியஸ்த்தர்கள் அமிர்தலிங்கத்தின் பேச்சிற்கு மதிப்புக் கொடுத்து வந்த நிகழ்வுகள் 1977 ஆம் ஆண்டுத் தேர்தலின் பின்னரும் நடந்தது. இந்தப் போராளி அமைப்புக்களின் தலைவர்களுள் பிரபாகரனே அனைவராலும் அதிகம் நேசிக்கப்பட்டார். மங்கயற்கரசி என்னிடம் ஒருமுறை பேசும்போது "பிரபாகரன் எங்களின் மகன்களில் ஒருவராக எங்களுக்குத் தெரிந்தார்" என்று கூறினார். " அவர் எமது வீட்டிற்கு வரும்போதெல்லாம் நான் அவர் விரும்பி உண்ணும் கோழிக்கறியைச் சமைப்பேன். அவர் எம்மிடமிருந்து விடைபெற்றுச் செல்லும்போது எனது மகன்களை முத்தமிடுவது போல அவரையும் முத்தமிட்டே அனுப்பிவைப்பேன்" என்று அவர் கூறினார். அமிர்தலிங்கத்தின் பிரத்தியேக காரியாதிரிசியான ஆர். பேரின்பநாயகம் பேசும்போது, பிரபாகரன் தமிழ்நாட்டில் தங்கியிருந்த நாட்களில் அவரைச் சந்திக்கச் செல்லும்போது அவருக்குப் பிடித்தமான கோழி இறைச்சிப் பொறியலை மங்கையற்கரசி எடுத்துச் செல்வது வழமை என்று கூறினார். அமிர்தலிங்கத்தின் வெள்ளிவிழா கொழும்பில் 2003 ஆம் ஆண்டு ஆவணி 24 ஆம் திகதி நடைபெற்றபோது பேசிய மங்கையற்கரசி பிரபாகரன் மீது தான் வைத்திருந்த பாசம் குறித்துப் பேசத் தவறவில்லை. அமிர்தலிங்கமும் பிரபாகரனை மிகவும் அன்புடனேயே நடத்தி வந்தார். பதிலுக்கு பிரபாகரன் அமிர்தலிங்கத்தைப் பெரிதும் மதித்து நடந்துவந்தார். 1981 ஆம் ஆண்டு ஜெயவர்த்தனவின் மாவட்ட சபை மந்திரிப்பொறுப்புக்கள் எனும் பொறிக்குள் அமிர்தலிங்கமும் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியும் விழும்வரை இந்த உறவு மாறாமலேயே இருந்து வந்தது. அமிர்தலிங்கத்தைப் பலப்படுத்துவதன்மூலம் பிரபாகரனைப் பலவீனமாக்குவதற்குப் பதிலாக, ஜெயவர்த்தனா அமிர்தலிங்கத்தைப் பலவீனப்படுத்தி பிரபாகரனைப் பலப்படுத்தியிருந்தார். இதுவே இலங்கையின் சரித்திரத்தில் திருப்புமுனையாக அமைந்தது. இதுபற்றிய தகவல்கள் இனிவரும் அத்தியாயங்களில் பேசப்படும். கியூபா நான் முன்னர் குறிப்பிட்டதுபோல, கியூபாவிற்குச் சென்ற தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரின் தூதுக்குழுவில் புலிகளின் உறுப்பினர்களும் இடம்பெற்றிருந்தனர். 1979 ஆம் ஆண்டு கியூபாவின் ஹவானாவில் உலக மாணவர் மற்றும் இளைஞர்களுக்கான விழா நடந்திருந்தது. இந்த விழாவிற்கு தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதனைக் கேள்விப்பட்ட உமா மகேஸ்வரன் அமிர்தலிங்கத்தை அணுகி இக்குழுவில் புலிகள் அமைப்பின் மூன்று உறுப்பினர்களையும் இணைத்துக்கொள்ள முடியுமா என்று கேட்டார். 1977 ஆம் ஆண்டு புலிகளுக்கும் முன்னணிக்கும் இடையே மேற்கொள்ளப்பட்டதாகக் கருதப்படும் ஒப்பந்தம் ஒன்றிற்கு அமைவாக முன்னணியின் அரசியல்த் தலைமையின் கீழ் இரகசிய ஆயுத அமைப்பாக புலிகள் இயங்குவார்கள் என்றும், அதற்குப் பதிலாக சர்வதேசத்து விடுதலை அமைப்புக்களிடமிருந்து பணம் முதலான உதவிகளைப் புலிகள் பெற்றுக்கொள்ள அமிர்தலிங்கம் உதவ ஒத்துக்கொண்டதாகவும் தெரியவருகிறது. ஆகவே, இவ்வாறான் இளைஞர் நிகழ்வொன்றிற்குச் செல்வதன் மூலம் ஏனைய கெரில்லா அமைப்புக்களின் பரிட்சயமும் தமக்கு ஏற்படும் என்று உமா அமிர்தலிங்கத்திடம் கூறியிருக்கிறார். இதுபற்றி பின்னர் நடந்த விசாரணைகளில் அரசை ஏமாற்றி புலிகளையும் தமது தூதுக்குழுவில் முன்னணியினர் அனுப்பியிருந்தனர் என்று பொலீஸார் குற்றஞ்சாட்டியுமிருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது. புலிகளின் இந்த வேண்டுகோளினை அமிர்தலிங்கம் ஏற்றுக்கொண்டார். மாவை சேனாதிராஜாவை தமது தூதுக்குழுவின் இளைஞர் அமைப்பின் தலைவராகவும் காசி ஆனந்தனை தமிழர் ஐக்கிய முன்னணியின் பிரதிநிதிகளின் தலைவராகவும் அமிர்தலிங்கம் நியமித்தார். தூதுக்குழுவின் ஏனைய மூன்று இடங்களையும் சிங்கநாயகம், சாந்தன் மற்றும் யோகேஸ்வரன் ஆகிய புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் நிரப்பினர். இது முன்னணிக்குள் சில கசப்புணர்வுகளை ஏற்படுத்தி விட்டிருந்தது. முன்னனியின் பிரதிநிதியாக இந்த நிகழ்விற்குச் செல்ல விரும்பிய வண்ணை ஆனந்தனுக்கு புலிகள் தமது குழுவில் இடம்பெற்றது மகிழ்வைக் கொடுக்கவில்லை. ஹவானாவில் இடம்பெற்ற விழா நிகழ்வின் போது காசி ஆனந்தன் தமிழில் கவிதை ஒன்றைப் படித்தார், பலமான சொண்டுகள் கொண்ட பறவைகள் நாங்கள் நாம் பாடுவதிலிருந்து தடுக்கப்பட்டிருக்கிறோம் அழகான சிறகுகள் கொண்ட பறவைகள் நாங்கள் ஆனால் பறப்பதிலிருந்து தடுக்கப்பட்டிருக்கிறோம் கூண்டில் அடைக்கப்பட்ட அடிமைகள் நாங்கள்
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரின் தூதுக்குழுவில் இடம்பெற்ற புலிகளின் உறுப்பினர்கள் தமிழ் ஆயுத அமைப்புகளோடு அமிர்தலிங்கத்திற்குத் தொடர்பிருக்கிறது என்கிற சன்சொனியின் குற்றச்சாட்டில் உண்மை இல்லாமலும் இல்லை. பாதுகாப்பு அமைச்சிற்கு பொலீஸார் வழங்கிய தகவல்களில் அமிர்தலிங்கத்தைச் சந்திக்க யாழ்ப்பாணத்திலிருந்த அவரது வீட்டிற்கு பிரபாகரன், உமா மகேஸ்வரன் மற்றும் தங்கத்துரை ஆகியோர் வந்து சென்றிருக்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 1974 முதல் 1980 வரையான காலப்பகுதியில் வழக்கப்பட்ட இவ்வாறான தகவல்கள் ஜெயவர்த்தன நிலையத்தில் இன்றுவரை இருக்கிறது. ஜெயவர்த்தனவின் குடும்பத்துடன் நெருக்கமான ஒருவரின் உதவியோடு இந்தத் தகவல்களைப் படிக்கும் வாய்ப்பு சில வருடங்களுக்கு முன்னர் எனக்குக் கிடைத்திருந்தது. புரட்சிசெய்யத் துடிக்கும் இளைஞர்களுடன் எப்போதுமே தொடர்பைப் பேணவேண்டும் என்பது தந்தை செல்வாவினால் அமிர்தலிங்கத்திற்குக் கொடுக்கப்பட்ட பணியாகும். தமிழர்களின் அரசியலின் தந்தை என்று அறியப்பட்ட தந்தை செல்வா ஆயுத அமைப்புக்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கவேண்டும் என்று விரும்பியிருந்தார். ஆயுத அமைப்புக்களின் விமர்சனங்கள், விருப்பு வெறுப்புக்களை உள்வாங்கி தமது கொள்கைகளிலும், செயற்பாட்டு முறைகளிலும் மாற்றங்களைச் செய்யவேண்டும் என்று தந்தை செல்வா விரும்பியிருந்தார். இளைஞர்களை வழிநடத்த அமிர்தலிங்கம், ராஜதுரை மற்றும் நவரட்ணம் ஆகியோரை செல்வா அமர்த்தினார். திருக்கோணேஸ்வரம் ஆலயம் புலிப்படை எனும் அமைப்பு 1961 ஆம் ஆண்டு, தெற்கில் மக்கள் விடுதலை முன்னணி ஆரம்பிக்கும் முன்னரே ஆரம்பிக்கப்பட்டு விட்டது. ஒரு அரச ஊழியர் உட்பட 20 பேர்வரையான இளைஞர்கள் புலிப்படையினை உருவாக்கியிருந்தார்கள். 1961 ஆம் ஆண்டு ஆவணி 12 ஆம் திகதி புலிப்படையின் உறுப்பினர்கள் சரித்திரைப் பழமை வாய்ந்த திருக்கோணேஸ்வரம் ஆலயத்தில் கூடினர். காலை வழிபாட்டில் ஈடுபட்ட பின்னர் அக்குழுவினர் மலைக்குச் சென்று, தனியான தமிழ் தாய்நாடொன்றிற்காகப் போராடுவது என்று சபதம் எடுத்துக்கொண்டனர். 1961 ஆம் ஆண்டு தமிழ் மக்களால் மேற்கொள்ளப்பட்ட சத்தியாக்கிரக நிகழ்வை சிறிமாவோ தனது இராணுவத்தைக் கொண்டு கலைத்தமையே இந்தக்குழுவினர் தனிநாடு நோக்கிப் பயணிக்கும் தேவையினை ஏற்படுத்தியிருந்தது. இந்தப் புலிப்படை மீன்பிடிக்காகவும், ஆயுதங்களைக் கொண்டுவருவதற்காகவும் ஒரு கப்பற் கம்பெனியொன்றை உருவாக்கியிருந்தது. சில துண்டுப்பிரசுரங்களை விநியோகித்ததுடன், மாணவர் மன்றங்கள் சிலவற்றையும் ஏற்படுத்திவிட்டு செயலற்றுப்போனது. இந்தக் குழுவின் செயற்பாடுகளை அமிர்தலிங்கமும், நவரட்ணமும் அவதானித்து வந்தபோதும், அவர்களின் செயற்பாடுகளில் தலையிட்டிருக்கவில்லை. பொலீஸாரும் இக்குழுவினரின் இருப்புக் குறித்து அதிக ஆர்வம் காட்டியிருக்கவில்லை. தமிழ் இளைஞர்கள் தம்மை மீளவும் ஒழுங்குபடுத்திய நிகழ்வு 1970 இல் இடம்பெற்றது. தமிழ் மாணவர் பேரவை எனும் அமைப்பு உருவாக்கப்பட்டு 1972 இல் தமிழ் இளைஞர் பேரவையாக மாற்றங்கண்டது. இந்த அமைப்பினை அமிர்தலிங்கமும், நவரட்ணமும் நெருங்கி அவதானித்து வந்ததுடன், இந்த அமைப்பினரும் அமிர்தலிங்கத்தை தமது "தளபதி" என்று கருதி வந்தனர். இளைஞர்கள் தமது விமர்சனங்களைப் பகிரங்கமாக முன்வைக்க வேண்டும் என்றும், தமது உணர்வுகளுக்கு அது வடிகாலாக அமையும் என்று அமிர்தலிங்கம் அவர்களிடம் கூறிவந்தார். ஒரு சில வன்முறைச் சம்பவங்கள் அவ்வப்போது இடம்பெற்று வந்தாலும், நிலமை கட்டுப்பாட்டிலேயே இருந்து வந்தது. ஆனால், இந்த செயற்பாடுகளை அரசு இனவாதப் புரட்சி என்று கருதியதாலும், அதனை அடக்க பொலீஸாரையும், இராணுவத்தினரையும் முடுக்கி விட்டதாலும் நிலைமை மாறத் தொடங்கியது. தமிழ் இளைஞர் பேரவையினரைத் தேடி வேட்டையாடிய பொலீஸார் அவர்களில் 42 பேரைக் கைது செய்தனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்ட அனைவருமே பிற்காலத்தில் ஆயுதப் போராளிகளாக மாற்றம்பெற்றனர். தங்கத்துரை, குட்டிமணி, பிரபாகரன், பாலக்குமார். பத்மநாபா, வரதராஜப் பெருமாள், சிறி சபாரட்ணம் ஆகியோர் அமிர்தலிங்கத்தை மதித்து வந்ததுடன், அவர் சொல்வதையும் கேட்டு வந்தனர்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
அமிர்தலிங்கத்தையும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரையும் குறிவைத்த ஜே ஆர் கைதேர்ந்த அரசியல் மூலோபாயவாதியாக விளங்கிய ஜெயவர்த்தன, சிங்களக் கடும்போக்குத் தேசியவாதிகளின் வாக்குகளை சிறில் மத்தியூவைக் கொண்டு பெற்றுவிட திட்டமிட்டுச் செயற்பட்டுவந்தார். ஒரு சிங்களத் தேசியத் தலைவராக வளரும்வரையில் மத்தியூ, ஜெயவர்த்தனவினால் ஊக்குவிக்கப்பட்டார். தமிழர்களை உசுப்பேற்றும் வெறித்தனம் கொண்டவராக மத்தியூ செயற்படவைக்கப்பட்டார். இந்தச் சதிகுறித்து அறிந்திராத அமிர்தலிங்கம், இயல்பாகவே வருத்தமடைந்து காணப்பட்டார். ஆகவே, மத்தியூ தன்மீது முன்வைத்துவந்த விஷமத்தனமான பிரச்சாரங்கள் குறித்தும் கேலிகள் குறித்தும் ஜெயவர்த்தனவிடம் முறையிடலானார் அமிர்தலிங்கம். மத்தியூவின் பேச்சுக்களால் தமிழ் மக்களின் உணர்வுகள் பாதிக்கப்பட்டு வருவதாகவும், இதனால் தமிழ் மக்கள் மத்தியில் தமிழர் விடுதலைக்கூட்டணியின் செல்வாக்குச் சரிந்துவருவதாகவும் கூறிக் கவலைப்பட்டார். "மத்தியூ எம்மை காலையும் மாலையும் வசைபாடி பேசி வரும் நிலையில், நாம் உங்கள் அரசாங்கத்தை எவ்வாறு ஆதரிக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?" என்று அவர் ஜே ஆரை வினவினார். அதற்கு ஜே ஆர் தந்த பதில் இப்படியிருந்தது, "மத்தியூ கூறுவதைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம். நான் தமிழ் மக்களுக்குச் சார்பாகச் செயற்படுகிறேன் என்று பிக்குகளும் சிங்களத் தேசியவாதிகளும் எனது அரசாங்கத்தைக் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இதற்குப் பதிலளிக்கும் முகமாகவே மத்தியூ தமிழர்களுக்கெதிரான பிரச்சாரத்தைச் செய்யவேண்டியிருக்கிறது" என்று கூறினார். அமிர்தலிங்கமும் சிவசிதம்பரமும் இதனைக் கேட்டதும் அமிர்தலிங்கம் கவலையடைந்தார். இதுகுறித்து அவர் என்னிடம் பேசுகையில், "ஜெயவர்த்தன அரசியல் விளையாட்டில் ஈடுபட்டு தமிழருக்கும் சிங்களவருக்கும் இடையே பகையுணர்வை வளர்க்கிறார். சிங்களவர்களுக்கு முன்னால் தன்னை ஒரு மீட்பராகக் காட்ட அவர் எத்தனிக்கிறார். தமிழர்களை நசுக்கக்கூடிய ஒரே தலைவர் தானே என்று சிங்களவர்களுக்குக் காட்ட நினைக்கிறார்" என்று கூறினார். ஜே ஆரின் பதிலின் பின்னர் அமிர்தலிங்கம் ஜே அர் மீது வெறுப்புக் கொண்டிருந்தார். ஆகவே, எதிர்க்கட்சியுடன் நெருங்கிவரும் இரகசிய நடவடிக்கையொன்றினை அமிர் மேற்கொண்டார். 1978 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் அவருக்கு இதற்கான சந்தர்ப்பம் ஒன்று கிடைத்தது. இலங்கை சம சமாஜக் கட்சியின் தலைவர்கள் அமிரையும், சிவசிதம்பரத்தையும் அவரது வீட்டில் சந்தித்து ஜெயவர்த்தனவுக்கெதிரான பரந்துபட்ட தேர்தல் கூட்டணியொன்றினை உருவாக்குவதுபற்றிக் கலந்துரையாடினர். ஆரம்பத்தில் இந்தக் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் நம்பிக்கையளிப்பவனவாகத் தெரிந்தன. தான் விட்ட பழைய தவறுகளைத் திருத்திக்கொள்ள சிறிமாவோ தயாராக இருப்பதாக சம சமாஜக் கட்சியின் தலைவர்கள் அமிரிடம் கூறினர். இந்த இரகசிய பேச்சுவார்த்தையினை அறிந்துகொண்ட ஜெயவர்த்தனா, கொழும்பிலிருந்த தமிழ் வர்த்தகப் புள்ளியொருவரூடாக அமிர்தலிங்கத்திற்குச் செய்தியொன்றினை அனுப்பினார். "நீங்கள் எதிர்க்கட்சியுடன் தொடர்ந்து இரகசியப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டால் கொழும்பில் தமிழருக்கெதிரான இன்னொரு கலவரம் வெடிக்கும்" எனும் எச்சரிக்கை தான் அது. இதனால் அச்சமடைந்த அமிர்தலிங்கம் எதிர்க்கட்சியினருடனான இரகசியப் பேச்சுவார்த்தைகளை இடைநடுவில் முறித்துக்கொண்டார். அமிர் கவலையடைய. சிவசிதம்பரமோ கலங்கிப் போனார். தனது நண்பர்களுடன் பின்னர் பேசிய அமிர்தலிங்கம், "தமிழர்களால் இன்னொரு இனக்கலவரத்தைத் தாங்கிக்கொள்ள முடியாது" என்று கூறியிருந்தார். எதிர்க்கட்சிக்கும், முன்னணிக்கும் இடையிலான இரகசியப் பேச்சுவார்த்தையினைக் குழப்புவது ஜெயவர்த்தனவின் திட்டத்தின் ஒரு பகுதி மட்டுமே. தமிழர்களுக்கெதிரான சிங்களவர்களின் கோபத்தினை ஊதிப் பெருப்பித்து ஈற்றில் தமிழ் ஆயுதக் குழுக்களை முற்றாக அழிப்பதே அவரது திட்டத்தின் மீதிப்பகுதியாக இருந்தது. 1977 ஆம் ஆண்டு ஆவணியில் இடம்பெற்ற தமிழருக்கெதிரான வன்முறையினை விசாரித்த சன்சொனி ஆணைக்குழ் வழங்கிய இறுதி அறிக்கையினைப் பாவித்து அமிர்தலிங்கம் மீது கடுமையான விமர்சனங்களை ஜெயவர்த்தன மேற்கொண்டார். பொலீஸாரினால் சோடிக்கப்பட்ட பொய்யான ஆதாரங்களை ஆணைக்குழுவின் முன்னால் வைத்து, அமிர்தலிங்கம் ஒரு இரத்த வெறிபிடித்த, சிங்களவருக்கெதிரான இனவாதியென்றும், அவரது கட்சியான தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியே தமிழ் ஆயுதக் குழுக்களின் வன்முறைகளின் பின்னால் இருந்ததென்றும் உள்நாட்டிலும், சர்வதேசத்திலும் ஜெயவர்த்தன பிரச்சாரம் செய்துவந்தார். பொன் சிவகுமாரனின் இறுதிச் சடங்கின்போதும், 1977 ஆம் ஆண்டின் தேர்தல்ப் பிரச்சாரங்களின்போதும் அமிர்தலிங்கமும் அவரது துணைவியார் மங்கையற்கரசி பேசிய பேச்சுக்களை அடிப்படையாக வைத்து அவர்களுக்கெதிரான பிரச்சாரம் முடுக்கிவிடப்பட்டது. தமிழ் இளைஞர்களை வன்முறையினை நோக்கித் தூண்டும் மனிதரே அமிர்தலிங்கம் என்று பிரச்சாரப்படுத்தப்பட்டது. தமிழ் ஆயுத அமைப்புக்களுக்குப் பின்னால் நின்று ஊக்குவிக்கும் சக்தியாக அமிர்தலிங்கத்தைக் காட்ட சாட்சியங்கள் முன்வைக்கப்பட்டன. அரசாங்கத்திற்கெதிரான நம்பிக்கையீனத்தை இளைஞர்களிடையே அமிர்தலிங்கம் ஏற்படுத்தி வருவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. இதற்கு ஆதாரமாக யோகேஸ்வரனின் பேச்சில் கூறப்பட்ட, "தமிழ் மக்களைப் பொறுத்தவரை இலங்கை அரசாங்கம் ஒரு அந்நிய அரசாங்கமாகும். தமிழ் மக்களை ஆள்வதற்கான எந்தவித அதிகாரமும் இந்த அரசாங்கத்திற்குக் கிடையாது" எனும் பகுதி இதற்கு சாட்சியமாக அரசால் பாவிக்கப்பட்டது. "சிங்களவருக்கெதிரான வன்மத்தை தமிழர்களிடையே முன்னணி வளர்த்து வருகிறது" எனும் குற்றச்சாட்டும் அரசால் முன்வைக்கப்பட்டு வந்தது. யாழ்ப்பாணத்தில் பெளத்த மதகுருவாக இருந்த வீரமுவே விமலபாரதி எனும் பிக்கு தன்னைத் தமிழ் இளைஞர்கள் தாக்கியதாகவும், "இனிமேல் நீ யாழ்ப்பாணத்தில் இருக்கத் தேவையில்லை" என்று கூறியதாகவும் பொய்வாக்குமூலம் கூறும்படி அரசால் கட்டாயப்படுத்தப்பட்டார். தனது பெளத்த நிலையத்தை தமிழர்கள் எரித்ததாகவும் அவர் ஆணைக்குழுவின் முன்னிலையில் கூறினார். இவ்வாறே யாழ்ப்பாணத்தில் வாழ்ந்துவந்த பல சிங்களவர்களும் தமது உடமைகள் எரிக்கப்பட்டு, தாம் அங்கிருந்து விரட்டப்பட்டதாக ஆணைக்குழுவின் முன்னால் கூறவைக்கப்பட்டார்கள். சிங்கள பஸ் சாரதியான தர்மசேன கூறுகையில், தனது பஸ்வண்டி பாதையிலிருந்து கடத்திச் செல்லப்பட்டு, தான் சுடப்பட்டதாகக் கூறினார். யாழ்ப்பாணத்தில் வசித்து வந்த சிங்களப் பெண்மணியான கருணாவதி கூறுகையில் தனது குடும்பம் உழவு இயந்திரம் ஒன்றில் ஏற்றப்பட்டு அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டதாகக் கூறினார். இந்த வன்முறைகள் எல்லாம் முன்னணியினரின் தூண்டுதலினாலேயே தமிழ் இளைஞர்களால் நடத்தப்பட்டதாக ஆணைக்குழுவின் முன்னால் கூறப்பட்டது. அமிர்தலிங்கம் மீண்டு கடுமையான அழுத்தங்களுக்கு உள்ளானார். ஆணைக்குழுவின் முன்னால் 1979, சித்திரை 30 அன்று சாட்சியமளித்த அமிர்தலிங்கம், ஜனநாயக வழிகள் மூலம் தமிழர்களுக்கான உரிமைகளைப் பெற்றுக்கொள்ளவே தனது கட்சி முயன்றுவருவதாகக் கூறினார். தனது கட்சி வன்முறைகளைத் தூண்டிவிட்டதாக பொலீஸார் கூறிய குற்றச்சாட்டினை அவர் முற்றாக மறுத்தார். ஆனால், அமிர்தலிங்கத்தின் விளக்கத்தை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்ட நீதிபதி சன்சொனி, அரசு மீதான தமிழர்களின் அவநம்பிக்கைக்கும், வன்முறைகளைத் தூண்டிவிட்டமைக்கும் அமிர்தலிங்கமே பொறுப்பு என்று தீர்ப்பளித்தார். மேலும், அமிர்தலிங்கம் தமிழ் ஆயுத அமைப்புக்களோடு ஒத்துழைத்துவருவதாகவும் குற்றஞ்சாட்டினார். அமிர்தலிங்கத்தைக் கொல்லுமளவிற்கு, அவர்மீதும், அவரது கட்சிமீதும் அரசால் திட்டமிட்டு முன்வைக்கப்பட்ட வந்த விஷமத்தனமான பிரச்சாரங்கள் சிங்களவர்களைத் தூண்டியிருந்தது. ஜெயவர்த்தனவின் செல்லப்பிள்ளைகளான பிரேமச்சந்திரவும், ஜெயக்கொடியும் 1979 ஆம் ஆண்டு ஆடி 3 ஆம் திகதி பாராளுமன்ற குழுக்கள் கூட்டத்தில் ஆற்றிய உரைகளில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கெதிராக அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று வெளிப்படையாகக் கோரிக்கை முன்வைத்தனர். இதற்குப் பதிலளித்த ஜெயவர்த்தன, இதனைச் செய்வதற்கான சட்டவாக்கல் நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும், அந்த மாதத்திலேயே அச்சட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
போராட்டத்துடன் தன்னை இணைத்துக்கொண்ட அன்டன் பாலசிங்கம் *************************************************************************************************** செய்திக்குறிப்பு : திரு சபாரட்ணம் அவர்களுக்கு அவரது வாசகர் ஒருவர் அனுப்பிய தகவல் ஒன்றினை சபாரட்ணம் இணைத்திருந்தார். அதன் விபரங்கள் கீழே. 1978 முதல் 1979 வரையான காலப்பகுதியில் புலிகளும் டெலோ அமைப்பும் இளைஞர்களுக்கான மென்பந்து கிரிக்கெட் ஆட்டங்களையும், உதைபந்தாட்டங்களையும் வட மாகாணத்தில் ஒழுங்கு செய்திருந்தனர். கல்வி உயர்தரப் பரீட்சை நடந்துவந்த காலப்பகுதியில் வடமராட்சியின் வதிரி, துன்னாலை மற்றும் கரணவாய் ஆகிய பகுதிகளில் இந்த ஆட்டங்கள் நடந்தன. யாழ்ப்பாணம் மற்றும் அதனோடு அண்டிய பகுதிகளிருந்து வந்த அணிகளுடன் வடமாராட்சி அணிகள் போட்டிகளில் கலந்துகொண்டனர். இந்தப் போட்டிகளில் கலந்துகொண்ட முக்கியமானவர்களில் பொன்னமான் (குகன் - யோகியின் சகோதரர்) யாழ் இந்துக்கல்லூரியில் பயின்றுவந்த திறமையான கிரிக்கெட் வீரர். அப்படியான போட்டியொன்றில் நான் பிரபாகரனைக் கண்டேன். போட்டியின் பின்னர் வீரர்களும், பார்வையாளர்களும் கலந்துரையாடுவதுடன் உணவுவகைகளையும் பகிர்ந்துகொள்வது வழக்கம். இப்படியான கலந்துரையாடல்களில் அரசியலும் வழமையாக இடம்பெறுவதுடன் ஒரேவகையான கருத்தினைக் கொண்டவர்கள் ஒன்றிணைந்து பயணிப்பதும் வழமையானது. கடல்ப்புறா எனும் சரித்திர நாவல் சோழர்களின் பெருமையினைப் பற்றியும், அவர்களின் கடலறிவு பற்றியும் பேசுகிறது. இந்த நாவலின்ன் பெரும்பகுதி கடாரம் எனப்படும் பகுதியினை மையப்படுத்தியே கூறப்படுகிறது. மேலும், அகூதா எனும் பிரபலமான பெயர் ஒன்றும் இக்கதையில் கூறப்பட்டிருக்கிறது. திரு பிரபாகரன் இந்த நாவலை வாசித்திருந்தார். சோழர்களின் கடல்வலிமை பிரபாகரனை மிகவும் கவர்ந்திருந்தது. இதனாலேயே கேர்ணல் சங்கர் முதலாவது கப்பலை புலிகளுக்காக அமைத்தபோது அதற்கு பிரபாகரன் கடல்ப்புறா என்று பெயரிட்டார். பின்னாட்களில், 1987 ஆம் ஆண்டு புலிகளின் மூத்த தளபதிகளான லெப்டினன்ட் கேணல்கள் குமரப்பாவும் புலேந்திரனும் கடல்ப்புறாவில் பயணித்துக்கொண்டிருந்தவேளை இலங்கைக் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர். நான் இந்தச் சம்பவம் பற்றிய அனைத்துத் தகவல்களையும் நன்கு அறிந்திருந்தேன். அதுலத் முதலியுடன் இக்காலப்பகுதியில் அடிக்கடி தொடர்புகொண்டு வந்திருந்தேன். அதுபற்றிய தகவல்களை இங்கே தருகிறேன், குமரப்பாவின் தற்கொலையோடு தொடர்புபட்ட விடயம் ஒன்றைப்பற்றியும், அது என்னை எவ்வளவு தூரத்திற்குப் பாதித்திருந்தது என்பது பற்றியும் கூறுகிறேன். காங்கேசந்துறை சீமேந்துத் தொழிற்சாலையில் பொறியியலாளராகப் பணியாற்றிவந்த ஒருவரின் மனைவி தனது கணவருக்கு என்ன நடந்தது என்பற்றி அறிந்துகொள்ள டெயிலி நியூஸ் காரியாலயத்திற்கு வந்திருந்தார். மூத்த ஆசிரியர் மணிக் டி சில்வா அவரை என்னிடம் அழைத்து வந்திருந்தார். அந்தப்பெண் எனக்கு முன்னால் அமர்ந்துகொண்டார். நான் யாழ்ப்பாண அரசாங்க அதிபரைத் தொடர்புகொண்டு கேட்டபோது, அந்த இளம் பொறியியலாளர் கொல்லப்பட்டு விட்டதாகக் கூறினார். அந்த பொறியியலாளரை நான் கண்டிருக்கிறேன், கைத்தொழில் அமைச்சரான சிறில் மத்தியூ காங்கேசந்துறைக்கு விஜயம் செய்தவேளை நானும் அவருடன் சென்றபொழுது அந்தப் பொறியியலாலறைச் சந்தித்திருந்தேன். அவர் இறந்த செய்தி எனக்குக் கண்ணீரை வரவழைத்தது. ********************************************************************************************* இனப் பூசலின் அரசியல் 1978 ஆம் ஆண்டின் அரசியலமைப்பின் மூலம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தன்னைப் பலப்படுத்திக்கொண்ட ஜெயவர்த்தனவின் பலம் சிறிமாவை மேலும் பலவீனப்படுத்தி மக்கள் முன் அவரது நம்பகத்தன்மையை வலுவிழக்கப்பண்ணியதன் மூலம் இன்னும் பலமடைந்து வந்தது. அவரது அடுத்த இலக்காக இருந்தது இரண்டாவது தடவையும் ஜனாதிபதியாகுவதுதான். புதிய அரசியலமைப்பின் மூலம் அவர் நாட்டின் தலைவராகவும், அரசாங்கத்தின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட தலைவராகவும், முப்படைகளின் பிரதான கட்டளையிடும் தளபதியாகவும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராகவும் தன்னை நிலைப்படுத்திக்கொண்டார். 1978 ஆம் ஆண்டு பங்குனி 20 ஆம் திகதி விசேட விசாரணை ஆணைக்குழுவொன்றை நியமித்து சிறிமாவின் அரசியல் நம்பகத்தன்மையினை வெகுவாக அழித்திருந்தார். 1970 இலிருந்து 1977 வரையான காலப்பகுதியில் பிரதமராக இருந்த சிறிமா அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டார் என்று ஜெயவர்த்தன குற்றஞ்சாட்டியிருந்தார். அவரது முதலாவது பதவிக்காலம் 1960 இலிருந்து 1965 வரை நடைபெற்றிருந்தது. அவருக்கெதிராக முன்வைக்கப்பட்டிருந்த முக்கியமான குற்றச்சாட்டு என்னவென்றால், அளவுக்கதிகமான விவசாயக் காணிகளை வைத்திருக்கும் நிலச் சுவாந்தர்களிடமிருந்து அவற்றினை கையகப்படுத்தி மக்களுக்குப் பகிர்ந்தளிக்கும் சட்டத்தினை சிறிமா கொண்டுவரவிருந்த சமயத்தில் தனக்குச் சொந்தமான தென்னங்காணிகளின் ஒருபகுதியினை அவர் தனியாருக்கு விற்றிருந்தார் என்பது. இதனால் அவரை ஒரு எமாற்றுப்பேர்வழி என்று மக்கள் அக்காலத்தில் தூற்றி வந்திருந்தனர். ஜே ஆர் இனால் நியமிக்கப்பட்ட மூன்று நீதிபதிகளான வீரரட்ண, சர்வானந்தா, அல்விஸ் ஆகியோர் அடங்கிய ஆணைக்குழுவினருக்கு, ஆணைக்குழு அமைக்கப்பட்ட ஆண்டிற்கு முன்னதாக நடைபெற்றதாகக் கூறப்படும் சம்பவம் ஒன்றினை விசாரிக்கும் அதிகாரம் இல்லையென்று சிறிமா தாக்கல் செய்த வழக்கினை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. ஆனால், சிறிமா ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்க தன்னாலான சகல முயற்சிகளையும் மேற்கொண்ட ஜெயவர்த்தன, நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அதிகாரங்களில் மாற்றங்களைக் கொண்டுவந்தார். 1978 ஆம் ஆண்டு கார்த்திகை 10 ஆம் திகதி பாராளுமன்றத்தில் ஜே ஆர் முன்வைத்த திருத்தத்தினை அமைச்சரவை ஏற்றுக்கொண்டது. இதன்மூலம் நிறைவேற்றதிகாரம் மிக்க ஜனாதிபதியினால் அமைக்கப்படும் விசேட விசாரணைக் குழுக்களின் தீர்ப்புக்களுக்கெதிராக மேல்முறையீடு செய்யமுடியாது என்ற திருத்தம் அரசியல் யாப்பில் இணைக்கப்பட்டது. 1982 இல் ஜெயவர்த்தனவினால் அரசியல் யாப்பில் சேர்க்கப்பட்ட ஜனாதிபதி விசாரணைக்குழு பற்றிய சட்டத் திருத்தம் தன்னை அடுத்துவரவிருந்த ஜனாதிபதித் தேர்தலில் பங்கெடுக்காது தடுக்கவே என்று கடுமையாகக் குற்றஞ்சாட்டிய சிறிமா, இந்த விசாரணைகளில் பங்குகொள்வதை நிராகரித்திருந்தார். தனது காரணத்தை விவரித்து சிறிமா எழுதிய கடிதத்தினை உதாசீனம் செய்த விசாரணை ஆணைக்குழு அவரது பிரசன்னம் இன்றியே விசாரணைகளை நடத்தினர். மூன்று நீதிபதிகளடங்கிய குழு, சிறிமா தனது அதிகாரத்தினைத் துஷ்பிரயோகம் செய்திருந்தார் என்று தீர்ப்பளித்திருந்தனர். 1980 ஆம் ஆண்டு புரட்டாதி 24 ஆம் திகதி பாராளுமன்றம் இந்த ஆணைக்குழுவின் தீர்ப்பினை முழுமையாக ஏற்றுக்கொண்டது. ஜோன் கொத்தலாவலை முன்னாள் பிரதமர் ஜோன் கொத்தலாவலை உட்பட பல பிரமுகர்களின் எதிர்ப்பிற்கு மத்தியிலும் சிறிமாவுக்கெதிரான சிவில்த் தடைகளை பாராளுமன்றத்தின் ஆதரவுடன் ஜெயவர்த்தன நடைமுறைப்படுத்தினார். சாதாரண பொதுமகன் ஒருவருக்கிருக்கும் உரிமைகள் பறிக்கப்பட்ட சிறிமா 7 வருடங்கள் அவதிப்பட்டிருந்தார். சிறிமாவுக்கெதிரான உரிமை மறுப்பு நடவடிக்கைகளை அமிர்தலிங்கம் கடுமையாகக் கண்டித்திருந்தார். ஆனால், சிறிமாவின் உரிமைகளுக்கெதிரான தீர்மானம் 139 இற்கு 19 வாக்குகள் என்கிற அடிப்படையில் பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியும், சுதந்திரக் கட்சியும் எதிர்த்து வாக்களித்தன. சிறிமாவின் மீதான உரிமை மறுப்பு நடவடிக்கை இரு கட்சி ஜனநாயக அரசியலினை ஒரு பக்கமாகச் சரிக்கவே எடுக்கப்பட்ட நடவடிக்கை என்றால் அது மிகையில்லை. சிறிமாவின் நெருங்கிய நண்பராக இருந்த இதிரா காந்தி, சிறிமா மீதான தடையினை ஜனநாயகத்திற்கெதிரான நடவடிக்கை என்று விமர்சித்திருந்தார். ஜெயவர்த்தனா அமெரிக்கா நோக்கிச் சாய்ந்துவருவதை உணர்ந்துகொண்ட இந்திரா, அதனை மாற்றுவதற்கு அடுத்த தேர்தலில் சிறிமா மீண்டும் பதவிக்கு வரவேண்டும் என்று விரும்பினார். ஆனால், அது நடைபெறாமல்ப் போய்விட்டது. சிறிமாவை அரசியலிலிருந்து முற்றாக அகற்றியதன் பின்னணியில், அமெரிக்காவின் பக்கம் நோக்கிச் சாய்ந்துவரும் இலங்கையை எப்படியாவது வழிக்குக் கொண்டு வந்திடலாம் என்று இந்திரா எதிர்பார்த்ததும் நிகழாது போய்விட்டது. புது தில்லியிலும், கொழும்பிலும் என்னுடன் பேசிய சில இந்திய அதிகாரிகள், சிறிமாவின் அரசியல் மீள்வருகை முற்றாக அழிந்துவிட்டதன் மூலம் இந்தியாவின் நலன்களுக்கு எவ்வகையான பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதைப்பற்றி தனக்கு விரிவான அறிக்கையொன்றினைச் சமர்ப்பிக்குமாறு இந்திரா தம்மைக் கேட்டிருந்ததாகவும், அந்த அறிக்கையில் அலசப்பட்ட விடயங்களிலிருந்து இலங்கையினை மீளவும் அணிசேரா நாடுகளின் அமைப்பிற்குள் எப்படிக் கொண்டுவரலாம் என்பதுபற்றிய திட்டங்களையும் வகுத்துக்கொண்டதாகவும் கூறியிருந்தனர். இந்த தேடுதல்களின் விளைவாகவே தமிழ் ஆயுத அமைப்புக்களுக்கு உதவுவதன் மூலம், அவர்களைக் கருவியாகப் பாவித்து, ஜெயவர்த்தனவின் அரசுமீது அழுத்தங்களைப் பிரயோகிக்கலாம் என்று இந்திரா முடிவெடுத்ததாகவும் கூறியிருந்தனர். சிறிமாவை 1982 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலி பங்குபற்றுவதிலிருந்து அகற்றுவது மட்டுமே ஜனநாயத்திற்கெதிரான செயலாக ஜெயவர்த்தனவினால் செயற்படுத்தப்படவில்லை. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரை தனக்கு அடிபணிய வைக்கவும் ஜெயவர்த்தன அதனைச் செய்தார். தமிழர் விடுதலைக் கூட்டணி பிரதான எதிர்க்கட்சியாகவும், அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவராகவும் பாராளுமன்றத்தில் அமர்ந்தபோது ஜெயவர்த்தனா அவர்களிடமிருந்து எதிர்பார்த்ததெல்லாம் தனக்கு அடிபணிந்து தான் செய்வதை ஆமோதிக்கக் கூடிய ஒரு பொம்மை எதிர்க்கட்சியைத்தான். ஆனால், தான் எதிர்பார்த்தது நடக்காது போகவே தமிழர்களுக்கு ஒரு பாடத்தைப் புகட்டவும், அமிர்தலிங்கத்தை அச்சுருத்தி தனக்கு அடிபணிய வைக்கவும் 1977 ஆம் ஆண்டு ஆவணிக் கலவரத்தை ஜெயவர்த்தனா திட்டமிட்டு நடத்தினார். தான் இரண்டாவது முறையும் ஜனாதிபதியாவதற்கு சிறிமாவின் சுதந்திரக் கட்சியினை முற்றாகப் பலவீனப்படுத்துவதும் தமிழர்களின் வாக்குகள் அனைத்தையும் தனக்கே விழும்படி பார்த்துக்கொள்வதும் அவசியம் என்பதை ஜெயவர்த்தனா உணர்ந்திருந்தார். இதனை விடவும், காலம் காலமாக சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்களாக இருந்துவரும் சிங்கள கடும்போக்குத் தேசியவாதிகளின் வாக்குகளையும் கவர்வதன் மூலம் 50 வீதத்திற்கு அதிகமான வாக்குகளைப் பெற்று தனது வெற்றியை உறுதிப்படுத்த முடியும் என்றும் அவர் தெரிந்துவைத்திருந்தார். புதிய அரசியலமைப்பின்படி தேர்தலில் முதலாவது சுற்றில் 50 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெறும் வேட்பாளரே ஜனாதிபதியாகமுடியும் என்று கூறப்பட்டிருந்தது குறிப்பிடத் தக்கது.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
ரேடியோத் தகவலின் மர்மம் சன்சொனி பார்க்கத் தவறியிருந்த இரண்டாவது விடயம் தான் யாழ்ப்பாணத்தில் பொலீஸாரால் தமிழ் மக்கள் மேல் ஆரம்பிக்கப்பட்ட வன்முறைகள் எவ்வாறு நாடுமுழுதுவதற்கும் பரவியது என்பது. தமிழ் மக்கள் மீது நாடு தழுவிய ரீதியில் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுவதற்குக் காரணமாக இருந்தது யாழ்ப்பாணம் ஆரிய குளத்தருகில் அமைக்கப்பட்டிருந்த நாக விகாரை தமிழர்களால் எரியூட்டப்பட்டு விட்டதாக யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பிற்கு பொலீஸார் அனுப்பிய ரேடியோத் தகவலே. இந்த ரேடியோச் செய்தி யாழ்ப்பாண பொலீஸ் அத்தியட்சகரிடமிருந்து பொலீஸ் மாதிபருக்கு ஆவணி 17 அன்று காலை 11 மணிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. "இன்று இலங்கை போக்குவரத்துச் சபை பஸ்கள் நான்கு எரிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்திலுள்ள நாகவிகாரை தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டிருக்கிறது. யாழ்ப்பாணத்திற்கு வரும் சிங்களவர்களைத் தாக்குவதற்காக ரயில்நிலையத்தில் பாரிய கூட்டம் ஒன்று காத்துக்கொண்டிருக்கிறது, நிலைமை மிக மோசமாக இருக்கிறது" என்று அந்த ரேடியோச் செய்தி அனுப்பப்பட்டிருந்தது. இந்த ரேடியோச் செய்தியில் அனுப்பப்பட்ட அத்தனை தகவல்களும் தவறானவை, பொய்யானவை. ஒரு போக்குவரத்துச் சபை பஸ்தன்னும் எரியூட்டப்படவில்லை. ஆணைக்குழுவின் முன்னால் பலர் அளித்த சாட்சியங்களில் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான சில பஸ்களை கடத்திக்கொண்டு யாழ்நகரின் நகைக்கடைகளுக்குச் சென்றது யாழ்ப்பாணப் பொலீஸாரே என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. நகைக்கடைகளை உடைத்த பொலீஸார் அவற்றைக் கொள்ளையடித்தனர். நாக விகாரை ஒருபோதுமே தாக்குதலுக்குள்ளாக்கப்படவில்லை. ரயிலில் வரும் பயணிகளைத் தாக்கவென ஒரு தமிழர் கூட புகையிரத நிலையத்தில் காத்துக் கிடக்கவில்லை. விசாரணைக் குழுவின் முன்னால் சாட்சியமளித்த போலீஸார் சிலர்கூட அனுப்பப்பட்ட ரேடியோத் தகவல் பொய்யானது என்று கூறியபோது சன்சொனி அதனை ஏற்றுக்கொண்டிருந்தார். அப்படியானால், இந்த பொய்யான செய்தி எங்கிருந்து உருவானது? இதன் பின்னால் இருந்தது யார்? ஆணைக்குழுவின் சாட்சியமளித்த பொலீஸ் கொன்ஸ்டபிள் குமாரசாமி, பொலீஸ் தலைமைக் காரியாலயத்தின் தலைமை அதிகாரி குணசேகர தன்னைப் பணித்தன்படியே தான் அந்தத் தகவலைத் தயார் செய்ததாகக் கூறியதுடன் அத்தகவலை ரேடியோ அறையில் பணிபுரியும் ரேடியோ இயக்குநரான ஜேக்கப்பிடம் கொடுத்துவிட்டதாகவும் கூறினார். மேலும் , குணசேகர தனக்குக் கூறியதன்படி தகவலை தான் எழுதிக்கொண்டிருக்கும்போது, குணசேகரவுடன் பொலீஸ் பரிசோதகர் குருசாமியும் அருகில் இருந்ததாக அவர் கூறியிருந்தார். பின்னர் ரேடியோ இயக்குநர் அத்தகவலை கொழும்பு பொலீஸ் தலைமைக் காரியாலயத்திற்கு அனுப்ப, அத்தகவல் நாட்டிலுள்ள அனைத்துப் பொலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டது. குணசேகர பொய்யான தகவலை குமாரசாமியைக் கொண்டு எழுதும்போது தான் அருகில் நிற்கவில்லை என்று முதலில் குருசாமி மறுத்திருந்தார். ஆனால், பாதிக்கப்பட்ட தமிழர் சார்பாக வாதாடிய வழக்கறிஞர் லெஸ்லி பார்லெட்ட் குருசாமியைக் குறுக்கு விசாரணை செய்தபோது, அத்தகவல் குணசேகரவால் தயார் செய்யப்படும்போது தானும் அருகில் இருந்ததை குருசாமி ஒப்புக்கொண்டதுடன், மேலிடத்திலிருந்து வந்த கட்டளையின்பேரிலேயே அத்தகவலைத் தாங்கள் தயார் செய்து அனுப்பியதாகவும் கூறினார். பொலீஸாரைத் தொடர்ச்சியாகக் குறுக்கு விசாரனை செய்த லெஸ்லி பார்லெட்ட் பின்வரும் விடயங்களைக் கண்டறிந்திருந்தார். "ஆவணி 17 ஆம் திகதி காலை, பொலீஸ் செயற்பாட்டு அறையில் குருசாமியும், குமாரசாமியும் கடமையில் இருந்தார்கள். காலை 11 மணியளவில் செயற்பாட்டு அறைக்குள் நுளைந்த குணசேகர, குமாரசாமியைப் பார்த்து நான் கூறுவதை அப்படியே எழுதுங்கள் என்று கட்டளையிட்டுவிட்டு பேசத் தொடங்கினார், "4 இ.போ.ச பஸ்வண்டிகள் எரியூட்டப்பட்டிருக்கின்றன. யாழ்ப்பாணத்தின் நாக விகாரை தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டிருக்கிறது. ரயில்களில் வரும் பயணிகளைத் தாக்குவதற்கு பாரிய குழு ஒன்று புகையிரதநிலையத்தில் காத்துக்கிடக்கிறது. நிலைமை மோசம்" என்று கூறிவிட்டு, இந்தத் தகவலை உடனடியாக பொலீஸ் மா அதிபருக்கு ரேடியோ மூலம் அறிவிக்குமாறு குணசேகர குமாரசாமியைப் பணிக்கிறார். அருகில் இருந்த குருசாமியும், குமாரசாமியிடம் அத்தகவலை உடனடியாக அனுப்புமாறு அழுத்தம் கொடுக்கிறார். அதன்பிறகு அத்தகவலை எடுத்துச் சென்று ரேடியோ அறையில் கடமையிலிருந்த ரேடியோ இயக்குநர் ஜேக்கப்பிடம், குமாரசாமி கொடுத்துவிடுகிறார். இறுதியாக ஜேக்கப்பினால் அத்தகவல் 11 மணிக்கு பொலீஸ் மாதி அபருக்கு அனுப்பப்படுகிறது". "இத்தகவலைப் பெற்றுக்கொண்ட கொழும்புப் பொலீஸ் தலைமையகத்தின் ரேடியோப் பிரிவு இத்தகவல் உண்மைதானா என்பதை உறுதிப்படுத்துங்கள் என்று யாழ்ப்பாண பொலீஸ் ரேடியோப் பிரிவிற்கு தகவல் அனுப்புகிறது. பொலீஸ் பரிசோதகர் குருசாமி உடனடியாக ரேடியோ அறைக்கு அழைக்கப்படுகிறார். குருசாமி 11:05 இற்கு அளித்த ரேடியோப் பதில் இப்படிக் கூறியது, " எனது தற்போதைய தகவலுக்கு மேலதிகமாக வேறு தகவல்கள் இல்லை, இத்தகவலை புறக்கணியுங்கள், வேறு தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் - இப்படிக்கு யாழ்ப்பாண பொலீஸ் அத்தியட்சகர்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. "காலை 11:20 இற்கு, யாழ்ப்பாண ரேடியோ அறைக்கு பொலீஸ் மா அதிபரிடமிருந்து பின்வரும் கட்டளை கிடைத்தது, "கடற்படையினர் நாக விகாரைக்குப் பாதுகாப்பு அளிப்பார்கள். நாக விகாரையின் பாதுகாப்பிற்கு காவலர்களை ஒழுங்கு செய்யுங்கள்" . இத்தகவலின் பின்னர் பொலீஸ் மா அதிபரிடமிருந்து வேறெந்த தகவல்களும் வரவில்லை. அதன்பிறகு யாழ்ப்பாணத்திலிருந்து வேறெந்த தகவலும் அனுப்பப்படவில்லை. யாழ்ப்பாணத்திலிருந்து அனுப்பப்பட்ட தகவல் தவறானது என்பதையும் போலீஸ் மா அதிபர் ஸ்டான்லி சேனநாயக்கவும் எவருக்கும் அறிவிக்கவில்லை. கடைசியாக ரேடியோவில் பகிரப்பட்ட தகவல் 11:20 இற்கு பொலீஸ் மா அதிபர் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பிய தகவல் மட்டும்தான். அத்தகவலில் யாழ்ப்பாணத்திலிருந்த இரு பிரதான பெளத்த விகாரைகளுக்கான பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறு கோரப்பட்டிருந்தது. அத்தகவல் எச்சரிக்கையுடன் அனுப்பப்பட்டிருந்தது. அதன்பிறகு பொலீஸ் ரேடியோ அலைவரிசயில் நிசப்தமே நிலவியது. இந்தச் செய்திகள் அனைத்தும் பொலீஸாரை ஆத்திரப்படவைக்க அவர்கள் எவ்வாறு தமிழ்மக்களுடன் நடந்துகொண்டார்கள் என்பதை விசாரணைக் குழுவிற்குக் கிடைத்த ஆதாரங்கள் விளக்கியிருந்தன. விசாரணைகளின்போது, பொய்யான பொலீஸ் செய்தியத் தயாரித்தது யாரென்பதை மறைக்க பொலீஸார் பகீரதப் பிரயத்தனத்தனத்தில் ஈடுபட்டிருந்தது அப்பட்டமாகத் தெரிந்தது. இந்தப் பொய்களை மறைக்கும் கைங்கரியம் குருசாமியிலிருந்து ஆரம்பமாகியிருந்தது. முதலில், அத்தகவல் தயாரிக்கப்படும்போது குணசேகரவுடன் தானும் குமாரசாமியின் அருகில் இருந்ததை அவர் மறுத்திருந்தார். பின்னர், குணசேகர அத்தகவலை தயாரிக்குமாறு குமாரசாமிக்குக் கட்டளையிடவில்லை என்று அவர் கூறினார். ஒருகட்டத்தில் அத்தகவலை யார் தயாரித்தார்கள் என்பதே தனக்குத் தெரியாது என்று அவர் கூறினார். ஆனால், குமாரசாமியுடன் சேர்ந்து தான் அத்தகவலை கொழும்பிற்கு அனுப்பி சரியாக 5 நிமிடங்களில் கொழும்பிலிருந்து தாம் அனுப்பிய தகவலை உறுதிப்படுத்துமாறு தகவலொன்று வந்ததாக அவர் ஒப்புக்கொண்டார். குமாரசாமி கைப்பட எழுதிய முதலாவது தகவலை தான் கண்ணுற்றதாகவும், பின்னர் அத்தகவல் தவறானது, மேலதிக தகவல்களுக்காகக் காத்திருங்கள் என்று கொழும்பிற்குத் தகவல் அனுப்பியதாகவும் குருசாமி கூறினார். குணசேகரவும் முதலில் அத்தகவலைத் தான் தயாரிக்கவில்லை என்று மறுத்தார். அத்தகவல் குறித்து முதன்முதலாக தான் கேள்விப்பட்டது புரட்டாதியில் விசாரணைக் குழுவினரூடாகத்தான் என்று கூறினார். வழக்கறிஞர் லெஸ்லி பாட்லெட், குருசாமியைக் குறுக்கு விசாரணை செய்தபோது, தனது மேலதிகாரிகளிடமிருந்து வந்த கட்டளையின்படி செயலாற்றியிருக்கும் குருசாமி, முதலில் அனுப்பப்பட்ட பொய்யான தகவலை திருத்திக்கொள்ளும் சந்தர்ப்பம் இருந்தபோதும் வேண்டுமென்றே தாமதித்து 10 நிமிடங்களின் பின்னரே அத்தகவல் தவறானது, வேறு தகவலுக்காகக் காத்திருங்கள் என்று கொழும்பிற்குத் தகவல் அனுப்பியிருக்கிறார். மேலும், மேலிடத்து அழுத்தத்தினால், குருசாமி தவறான தகவல்பற்றிய மேலதிக விபரங்களை கொழும்பிற்கு தெரிவிக்காதும் விட்டிருக்கிறார் என்று கூறினார். விசாரணைகளின் முடிவில் மனமுடைந்து அழுத குருசாமி, அத்தகவல் பொய்யானதென்று தனக்குத் தெரியும் என்றும், பொய்யொன்றையே தாம் செய்தியாக ரேடியோவூடாக அனுப்பியதாகவும் ஒப்புக்கொண்டார். இறுதியாக வாக்குமூலமளித்த குருசாமி, தனது மேலதிகாரிகளின் சதியே இவற்றிற்கான காரணம் என்று கூறியதுடன், தனக்கும் இச்சதிக்கும் தொடர்பில்லை என்றும் கூறினார். லெஸ்லி பார்லெட் முன்வைத்த தனது அறிக்கையில், பொலீஸ் ரேடியோச் சேவையூடாக வேண்டுமென்றே பொய்யான தகவலை அனுப்பிய பொலீஸ் அத்தியட்சகர் செனிவிரட்ணவும் ஏனைய உயர் அதிகாரிகளும் தண்டனையிலிருந்து எந்தவிதத்திலும் தப்பிக்க முடியாது என்று எழுதியிருந்தார். "பொய்யான தகவல் பரப்பப்பட்டபோது பொலீஸ் மா அதிபர் அனா செனிவிரட்ண, பொலீஸ் அத்தியட்சகர் ஏ. எஸ். செனிவிரட்ண, பொலீஸ் தலைமையக பரிசோதகர் குணசேகர ஆகியோர் தத்தமது செயற்பாட்டு அறைகளில் இருந்திருக்கின்றனர், ஆகவே இவர்களே இந்தப் பொய்யான தகவல் நாடு முழுவதற்கும் பரப்பப்படக் காரணமானவர்கள் என்பதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை" என்று லெஸ்லி பார்ட்லெட் முன்வைத்த அறிக்கையினை ஏற்றுக்கொள்ள மறுத்த சன்சொனி, இதனை நிரூபிக்கப் போதுமான ஆதாரங்கள் இல்லையென்று கூறினார். ஆகவே, இப்பொய்யான தகவலை யார் தயாரித்திருப்பார்கள் என்பதை தன்னால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் கூறி கையை விரித்துவிட்டார். மேலே குறிப்பிடப்பட்ட இரு முக்கியமான கேள்விகளுக்குமான பதிலை சன்சொனி தேடியிருந்தால், 1977 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் மீதான வன்முறைக்கு யார் காரணம் என்பதை மிக இலகுவாக அவரால் கண்டுபிடித்திருக்க முடியும். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் பரம வைரியும், ஆய்வாளருமான ராஜன் ஹூலின் கருத்துப்படி தமது புதிய அரசியல் எஜமானர்களான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்களின் கட்டளையின்பேரிலேயே பொலீஸார் இந்த வன்முறைகளைத் திட்டமிட்டு நடத்தினர் என்று கூறுகிறார். ஜெயவர்த்தனவின் ஆட்சியில், தமிழரின் விடுதலை வேட்கையினை அடக்குவதற்கு அவர்கள் மீதான இனவன்முறையே கட்டாயமான ஆயுதமாகப் பாவிக்கப்பட்டது. இதன்மூலம் தமிழ் மிதவாதிகளுடன் தொடர்பாடலைப் பேணுவதற்கான கதவினை அவர் இறுக மூடிக்கொண்டார். இரு வருடங்கள் கழித்து, 1979 ஆம் ஆண்டு பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிரான சட்டம் எனும் புதிய சட்டத்தினை உருவாக்கியதன் மூலம் ஜனநாயக வழியிலான தீர்விற்கான முழுக்கதவினையும் அடைத்துக்கொண்டதோடு, பொலீஸாருக்கும், இராணுவத்திற்கும் மிதமிஞ்சிய அதிகாரங்களை அள்ளி வழங்கி மிதவாதத் தமிழர்கள் மீது ஆயுத வன்முறையினையும் கட்டவிழ்த்து விட்டார்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பொலீஸ் பயங்கரவாதம் பொலீஸ் பயங்கரவாதி - அனா செனிவிரட்ண யாழ்ப்பாணத்தில் பொலீஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான பகையுணர்வு என்பது பல வருடங்களாக இருந்து வரும் ஒரு விடயம். குறிப்பாக 1974 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் 11 அப்பாவிகள் கொல்லப்படக் காரணமான பொலீஸாரின் அடாவடித்தனம் இடம்பெற்ற காலத்திலிருந்து இந்தப் பகைமையுணர்வு அதிகரித்தே வந்திருந்தது. ஆனால், பொலீஸாரின் தமிழ் மக்கள் மீதான இந்த வன்மத்தை சன்சொனி பார்க்க விரும்பவில்லை. மேலும், 1974 ஆம் ஆண்டுப் படுகொலையில் நீதிபதி கிரெஸ்டர் அளித்த தீர்ப்பில் பொதுமக்களின் கொலைக்கு பொலீஸாரின் நடவடிக்கைகளே காரணம் எனும் முடிவை பொய்யாக்க பொலீஸாருக்கு ஒரு சந்தர்ப்பத்தையும் சன்சொனி ஏற்படுத்திக் கொடுத்திருந்தார். மேலும், தமிழ் மக்களுக்கு சரியான பாடம் ஒன்றினைப் புகட்டவேண்டும் என்று செயலாற்றிய அனைத்துப் பொலீஸ் அதிகாரிகளும் பதவியுயர்வுகள் வழங்கிக் கெளரவிக்கப்பட்டார்கள். 1974 ஆம் ஆண்டு தமிழாராய்ச்சி மாநாட்டில் அப்பாவித் தமிழர்களைக் கொன்றதற்காக சிறிமாவினால் உதவி பொலிஸ் அத்தியட்சகரான சந்திரசேகரவிற்கு பதவியுயர்வு வழங்கப்பட்டது போன்றே, 1977 ஆம் ஆண்டு பொலீஸார் நடத்திய படுகொலைகளுக்காக அனா செனிவிரட்ண, ஜெயவர்த்தனவினால் பொலீஸ் மாதிபராக பதவியுயர்வு வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டார். இந்தப் பதவி உயர்வு பொலீஸார் மீதான குற்றச்சாட்டுக்களை சன்சொனி விசாரித்துவந்த நிலையிலேயே நடந்தேறியது என்பதும் குறிப்பிடத் தக்கது. மேலும் யாழ்ப்பாண பொலீஸ் அத்தியட்சகர் உதவிப் பொலீஸ் மாதிபராகவும், யாழ்ப்பாணத் தாக்குதல்களில் முன்னின்று செயலாற்றிய ரொனி குணசிங்க, ஏ எஸ் செனிவிரட்ணவின் உதவியாளராகவும் பதவியுயர்த்தப்பட்டனர். யாழ்ப்பாணத்தின் சந்தைப்பகுதியை பொலீஸார் எரித்துக்கொண்டிருந்தவேளை அப்பகுதிக்குச் சென்றிருந்த கொட்டடிப் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் வாக்குமூலம் பின்வருமாறு, " 15 ஆம் திகதி இரவு யாழ்ப்பான நகரின் பல பகுதிகளில் தீவைக்கப்பட்டிருப்பதாகவும், பொலீஸாரே கடைகளுக்குத் தீ வைப்பதாகவும் எமக்குச் செய்தி கிடைத்தது. பல இளைஞர்கள் அப்பகுதி நோக்கி அவசரமாகச் சென்றுகொண்டிருந்தனர். என்னை எக்காரணம் கொண்டும் வீட்டிற்கு வெளியே வரக்கூடாது என்று கூறிவிட்டு எனது மூத்த சகோதரனும் யாழ்நகரப்பகுதிக்கு விரைந்தார். ஆனால், நானும், எனது வயதினை ஒத்த சில நண்பர்களும் வைத்திய சாலை வீதியும், காங்கேசந்துறை வீதியும் சந்திக்கும் இடத்திலுள்ள வாய்க்கால் ஒன்றில் ஒளிந்துகொண்டு, எனது சகோதரனின் கண்ணில்ப் படாமல் நடப்பதை அவதானிக்கத் தொடங்கினோம். நாங்கள் பொலீஸாரையும் அவரது வாகனங்களையும் நகரத்தில் கண்டோம். சிலரிடம் ஆயுதங்கள் இருந்தன. தெய்வாதீனமாக அவர்கள் கண்களில் நாங்கள் படவில்லை". "சில மூத்தவர்கள் டயர்களை இழுத்துவந்து காங்கேசந்துறை வீதிக்குக் குறுக்கே குவியலாகப் போட்டு தீமூட்டினார்கள். பொலீஸார் நாம் இருந்த பக்கம் வருவதைத் தடுப்பதே அவர்களின் நோக்கமாக இருந்தது. அப்படியிருந்தும், நாமிருந்த பக்கத்திற்கு அருகில் வந்த பொலீஸார் வீதிகளின் பெயர்களைத் தாங்கி நின்ற பெயர்ப்பலகைகளை கீழே இழுத்து வீழ்த்தினார்கள். பெயர்ப்பலகைகள் பொறுத்தப்பட்டிருந்த தூண்களைக் கொண்டு எரிந்துகொண்டிருந்த டயர்களை ஒவ்வொன்றாக இழுத்துச் சென்று எரிபொருட்கள் சேமிக்கப்பட்ட கடைகள் மீதும், பழைய சந்தைமீதும் அவர்கள் எறிந்த போது அவை தீப்பிடிக்கத் தொடங்கின. நாம் அவர்கள் மீது கற்களை எறிய ஆரம்பித்தோம். எம்மைப்போன்றே பலரும் அவர்கள் மீது கற்களை எறிந்து தாக்குதல் நடத்தவே அவர்கள் ஓடிச்சென்று தமது வாகனங்களில் ஏறித் தப்பிச் சென்றார்கள்". "மறுநாள் காலை நான் பாடசாலைக்குச் செல்லும்போது, வங்கியின் காவலுக்கு வந்த இரு பொலீஸ்காரர்களிடமிருந்து அவர்களின் ஆயுதங்களைப் பொதுமக்கள் பறித்துக்கொண்டதாகக் கேள்விப்பட்டேன். அவர்களில் ஒருவர் தாக்கப்படுவதையும் நான் கண்டேன். எனது பாடசாலைப்பையிலிருந்த வட்டாரியினைக் கொண்டு அந்தப் பொலீஸ்காரரின் தொடையில் குத்தி விட்டு பாடசாலைக்குச் சென்றேன். ஒரு துப்பாக்கி பொதுமக்களால் அடித்து நொறுக்கப்பட்டிருந்தது. மற்றையதைப் பறித்தவர்கள் அதனை வெளியே வைத்துவிட்டு தேநீர் அருந்தச் சென்றவேளை அங்கு வந்த பொலீஸார் அதனை எடுத்துச் சென்றார்கள்" என்று கூறினார்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
வன்முறைக் கலாசாரத்தை நியாயப்படுத்திய நீதிபதி சன்சொனி சன்சொனி தனது விசாரணை அறிக்கையில் வன்முறைக் கலாசாரத்தை நியாயப்படுத்தியிருந்தார். விசாரணைகளின் இரு முக்கிய வினாக்களுக்கான பதிலை அவரால் இறுதிவரை கண்டறிய முடியாமற்போனதே அவரது விசாரணை முற்றாகத் தோல்வியடைவதற்குக் காரணமாகியது. ஆவணி 16 ஆம் திகதி அதிகாலை யாழ்ப்பாணச் சந்தைக்குத் தீ வைத்தது யாரென்பதையும், யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்த தமிழருக்கெதிரான வன்முறைகள் பின்னர் நாடு முழுதிற்கும் எவ்வாறு பரவின என்பதற்கும் அவரால் காரணங்களைக் கண்டறிய முடிந்திருக்கவில்லை. ஆவணி 16 ஆம் திகதி காலை யாழ்ப்பாணம் பழைய சந்தைப்பகுதிக்குத் தீவைத்தது யார்? இது நடந்த சூழ்நிலையினை மீளுருவாக்கம் செய்வதற்கு சன்சொனியினால் சேகரிக்கப்பட்ட ஆதராங்களை நாம் முதலில் பார்க்கலாம்ம். ஆவணி 15 ஆம் திகதி, பிற்பகல் புத்தூர் சந்தியூடாக சைக்கிள்களில் பயணம் செய்துகொண்டிருந்த மூன்று இளைஞர்களை பொலீஸார் மறிக்கின்றனர். பொலீஸார் தம்மை மறிக்கவே, தாம் வந்த சைக்கிள்களை எறிந்துவிட்டு அந்த இளைஞர்கள் தப்பியோடிவிட்டனர். அப்படித் தப்பியோடிய இளைஞர்களில் ஒருவர் தன்னிடமிருந்த கைத்துப்பாக்கியினால் பொலீஸாரை நோக்கிச் சுட்டுவிட்டே ஓடியிருக்கிறார். இச்சம்பவத்தின்போது பொலீஸ் கொன்ஸ்டபிள் பண்டாரவின் தொடைப்பகுதியில் காயம் ஏற்பட்டது. ஆவணி 15 பிற்பகல் நடந்த இந்த சம்பவம் குறித்து யாழ்ப்பாணப் பொலீஸ் அத்தியட்சகர் ஏ எஸ் செனிவிரட்ணவை கொழும்பு டெயிலி சண் பத்திரிகைக்காக யாழ்ப்பாண நிருபர் எல் ஏ சவரிமுத்து பேட்டி கண்டிருந்தார். செனிவிரட்ண இச்சம்பவம் குறித்து மிகுந்த ஆத்திரத்துடன் காணப்பட்டார். செய்தியாளரிடம் பேசிய பொலீஸ் அத்தியட்சகர், அரச ஊழியரான பண்டார மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்காக தமிழ் மக்கள் பாரிய விலையைச் செலுத்தவேண்டி வரும் என்று எச்சரித்திருந்தார். தமிழ் பொலீஸ் கொன்ஸ்டபிளான சட்டநாதப்பிள்ளை வழங்கிய வாக்குமூலத்தில், "இச்சம்பவம் நடந்த ஆவணி 15 ஆம் நாள் இரவு தனது வாசஸ்த்தலத்தில் பொலீஸார் அனைவரையும் அழைத்த யாழ்ப்பாணப் பொலீஸ் அத்தியட்சகர் செனிவிரட்ண, கூட்டம் ஒன்றினை நடத்தியிருந்தார். இக்கூட்டத்தில் பேசிய அத்தியட்சகர் தமிழரை மிகவும் இழிவாகப் பேசியிருக்கிறார். சிங்களப் பொலீஸாரின் மீது சுடுவதென்பது இனிமேல் பொறுத்துக்கொள்ளப்பட மாட்டாது என்று அவர் அங்கு பொலீஸாரின் முன்னிலையில் கூறியிருக்கிறார். அக்கூட்டம் முடிந்தபின் ஒரு தொகுதி பொலீஸார் தமது நடவடிக்கைப் புத்தகத்தில் புங்குடுதீவுக்குச் செல்கிறோம் என்று கூறிவிட்டு, யாழ்நகருக்குள் சென்று அங்கிருந்த பழைய சந்தைக்கு காலை 1:30 மணியளவில் தீவைத்தனர்" என்று அவர் கூறியிருந்தார். பொலீஸாரே யாழ்ப்பாணம் பழைய சந்தைக்குத் தீவைத்தனர் என்பதை அப்பகுதியில் வியாபார நிலையங்களை நடத்திவந்த வர்த்தகர்களும், ஏனையோரும் உறுதிப்படுத்தியிருந்தனர். அவர்களின் கூற்றுப்படி சுமார் 100 பேர் அடங்கிய பொலீஸ் குழுவொன்று வாகனங்களில் வந்திறங்கி சந்தைப்பகுதிக்குத் தீவைத்திருக்கிறார்கள். சந்தைக்குத் தீவைத்தவர்களின் தலைமுடி குட்டையாக வெட்டப்பட்டிருந்தது. அவர்கள் காக்கிக் காற்சட்டைகளை அணிந்திருந்தனர். அவர்களிடம் ஆயுதங்கள் இருந்தன. அவர்கள் சிங்களத்தில் தமக்குள் பேசிக்கொண்டார்கள். அவர்கள் பொலீஸ் வாகனங்களிலேயே வந்திறங்கியிருந்தார்கள். அவர்கள் வந்திறங்கிய பொலீஸ் வாகனங்கள் யாழ்ப்பாணம் பேரூந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்தன. அப்பகுதியில் வியாபார நிலையங்களை நடத்திவந்த பல வர்த்தகர்கள் இதுகுறித்து வழங்கியிருந்த வாக்குமூலங்களில் , சந்தைப்பகுதிக்கு பொலீஸார் தீவைக்கிறார்கள் என்கிற செய்திபரவியபோது, மக்கள் அப்பகுதிநோக்கி அணிதிரண்டதுடன், சந்தைக்குத் தீவைத்துக்கொண்டிருந்தவர்கள் மீது கற்களை வீசியும் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். பொலீஸார் சந்தையின் ஏனைய பகுதிகளுக்குள் நுழைந்து எரிப்பதை தடுப்பதற்கு மக்கள் வீதிகளில் டயர்களை எரித்து பொலீஸாரின் நடமாட்டத்தைத் தடுக்க முனைந்திருக்கிறார்கள். தமிழர்கள் அப்பகுதிக்கு அதிகமாக வருவதுகண்டு உசாரான பொலீஸார் தாம் வந்த வாகனங்களில் ஏறி பொலீஸ் நிலையம் நோக்கிச் சென்றிருக்கிறார்கள். ஆனால், இச்சட்சியங்களை முற்றாக மறுத்த சன்சொனி, "இவை போதுமானவையாக இல்லை, பொலீஸார் மீது வேண்டுமென்றே பழிசுமத்தும் நோக்கோடு கூறப்பட்ட குற்றச்சட்டுக்கள்" என்றும் கூறியிருந்தார். அப்படியானால் பழைய சந்தையினை எரித்தது யார்? உதவிப் பொலீஸ் மாதிபர நூர்டீன் தலைமையில் ஆதாரங்களைச் சேகரித்த குழு, யாழ்ப்பாணம் சந்தைப்பகுதியில் குழுவொன்று தீவைப்புச் சம்பவத்தில் ஈடுபடுவதாகத் தமக்குத் தகவல் கிடைத்ததாகவும், அதன்பின்னர் சட்டம் ஒழுங்கினை நிலைநாட்ட பொலீஸார் அங்கு சென்றதாகவும் கூறியிருந்தது. இதனையே சன்சொனி சாட்சியமாக ஏற்றுக்கொண்டார். சன்சொனி தனது அறிக்கையில், சந்தைப்பகுதியில் வன்முறையில் ஈடுபட்ட சமூக விரோதிகளை அடக்கவே பொலீஸார் அப்பகுதிக்குச் சென்றனர் என்று இதனை முடித்திருந்தார். சன்சொனி பல சாட்சியங்களை வேண்டுமென்றே உதாசீனம் செய்திருந்தார். மதிப்பிற்குரிய பிரமுகர்களான வைத்தியர் பாலசிங்கம், வர்த்த பெரும்புள்ளி எம் ஆர் ஜோசேப் ஆகியோர் கூறிய "பொலீஸாரின் அட்டூழியங்கள்" எனும் கருத்தை அவர் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. ஜோசேப் வழங்கிய வாக்குமூலத்தில் உதவிப் பொலீஸ் அத்தியட்சகர் தனது வாகனத்தில் யாழ்ப்பாணப் பேரூந்து நிலையம் நோக்கி வெகு வேகமாகப் பயணித்ததைக் கண்டதாகவும், அங்கு வன்முறைகளில் ஈடுபட்டிருந்த பொலீஸாரைப் பார்த்து, "அவர்களை நாய்களைப் போல் சுட்டுத் தள்ளுங்கள், நாங்களா அவர்களா என்று பார்த்துவிடலாம்" என்று கட்டளையிட்டதாகவும் கூறினார். சன்சொனி கேட்கமறுத்த கேள்விகளாவன, 1. வன்முறையில் ஈடுபட்ட குழு எதற்காக நகர்ப்பகுதியை அதிகாலை 1:30 மணிக்குத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது? 2. தமிழர்கள் தமது சொந்த நகரையே தீவைத்து எரிக்க வேண்டிய தேவை என்ன?
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
சன்சொனி ஆணைக்குழு 1978 ஆவணியில் யாழ்ப்பாணப் பொலீஸார் மேற்கொண்ட அட்டூழியங்களை விசாரிக்கவென சன்சொனி ஆணைக்குழுவை ஜெயவர்த்தனா அமைத்தார். ஆனால், விசாரணைகளின் முடிவில் ஆணைக்குழுவினரால் கண்டறியப்பட்டதாகக் கூறப்பட்ட பல விடயங்கள் தமிழ் மக்களை கடுமையாக ஏமாற்றி விட்டிருந்தன. பாராளுமன்றத்தில் ஆவணி 18 ஆம் திகதி அமிர்தலிங்கம் செய்த முறைப்பாட்டின் பின்னர் பொலீஸாரின் அடாவடித்தனத்தை விசாரிக்க ஒரு ஆணைக்குழுவை ஜெயவர்த்தனா அமைக்கப்போவதாக அறிவித்தபோது தமிழர்கள் மகிழ்ச்சியடைந்தார்கள். ஆவணி 22 ஆம் திகதி பறங்கி இனத்தைச் சேர்ந்தவரும், மக்களால் பெரிதும் மதிக்கப்பட்டவருமான ஓய்வுபெற்ற முன்னாள் பிரதம நீதியரசர் சன்சொனியை ஜே ஆர் அணுகி யாழ்ப்பாணத்திலும் பின்னர் நாடு முழுவதும் தமிழ் மக்களுக்கெதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள் தொடர்பான விசாரணைகளுக்குத் தலைமை தாங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டபோது தமிழர்களின் மகிழ்ச்சி இரட்டிப்பாகியது. ஒற்றை நீதிபதியின் தலைமையில் உருவாக்கப்பட்ட இந்த விசாரணை ஆணைக்குழு மூன்று விடயங்கள் தொடர்பாக கவனம் செலுத்தும் என்று அறிவிக்கப்பட்டது. 1. இலங்கையில் 1977 ஆவணி மாதம் 13 ஆம் திகதியிலிருந்து புரட்டாதி மாதம் 15 வரையான காலப்பகுதியில் நடைபெற்ற வன்முறைகளுக்கான மூல காரணம் மற்றும் வன்முறைகள் நடைபெறுவதற்கான சூழ்நிலைகளை உருவாக்கியிருந்த புறக் காரணிகளைக் கண்டறிதல். 2. தனிநபரோ, அல்லது ஒரு குழுவோ அல்லது ஒரு அமைப்போ இந்த வன்முறைகளின் பின்னால் இருந்துள்ளதா என்று கண்டறிதல். 3. வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கான புணர்வாழ்வு, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் இவ்வாறான வன்முறைகள் இனிமேல் நடவாதிருப்பது ஆகியவற்றிற்கான பரிந்துரைகளை மேற்கொள்வது. தனது முதலாவது அமர்வினை 1978 ஆம் ஆண்டு மாசி மாதம் 8 ஆம் திகதி ஆரம்பித்த ஆணைக்குழு இறுதியாக 1979 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 10 ஆம் திகதியுடன் தனது விசாரணைகளை பூர்த்தி செய்துகொண்டது. யாழ்ப்பாணம், அநுராதபுரம், கொழும்பு, கண்டி, திருகோணமலை ஆகிய இடங்களின் இந்த விசாரணைகளுக்கான அமர்வுகள் இடம்பெற்றன. விசாரணைகள் சாட்சியங்களூடு பூரணப்படுத்தப்பட்டிருந்தது என்று கூறலாம். விசாரணைகளின் இறுதி அறிக்கை 1980 ஆம் ஆண்டு ஆடி 22 ஆம் திகதி ஜெயவர்த்தனவிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அதே வருடம் கார்த்திகை 4 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. ஆணைக்குழுவின் பிரதான குறிக்கோளாக இருந்தது வன்முறைகளுக்கான மூல காரணத்தையும், சூழ்நிலைகளையும் கண்டறிதல் மற்றும் வன்முறைகளின் பின்னாலிருந்த தனிநபர்கள் அல்லது அமைப்புக்களைக் கண்டறிதல் என்றே கூறப்பட்டிருந்தது. சுமார் 277 பக்கங்களைக் கொண்ட தனது அறிக்கையில் வன்முறைகளுக்கான மூல காரணம் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரின் தலைமைப்பீடமே என்று தீர்க்கமாக வரையறை செய்துகொண்டே தனது அறிக்கையினைச் சமர்ப்பித்திருந்தார். வன்முறைகள் உருவாவதற்கான சூழ்நிலையினை நாட்டில் உருவாக்கியது முன்னணியினர் தான் என்று குற்றஞ்சாட்டிய சன்சொனி, வன்முறைகளைச் செய்தவர்கள் யாரென்பதை எவ்விடத்திலும் குறிப்பிட்டிருக்கவில்லை. தனிநாட்டிற்கான கோரிக்கையினை தமிழ்த்தலைவர்கள் முன்வைத்து வந்தமையும், தமிழ் ஆயுத அமைப்புக்களை ஊக்குவித்து வந்தமையுமே சிங்கள மக்களின் ஒரு பிரிவினரை இதற்கெதிரான பழிவாங்கல் நிலைக்குத் தள்ளியிருந்ததாக சன்சொனி குறிப்பிட்டிருந்தார். இவ்வாறு கூறியதன் மூலம் ஒரு நாட்டில் சிறுபான்மையின மக்கள் தமக்கும் சம அந்தஸ்த்துக் கோரும்போது, அது பெரும்பான்மையின மக்களைக் கோபப்படுத்துமிடத்து, சிறுபான்மையின மக்களுக்கெதிரான வன்முறைகளில் பெரும்பான்மையின மக்கள் இறங்கலாம் எனும் புதிய சட்டத் தேற்றத்தை உருவாக்கியிருந்தார். இதனை இன்னும் சுருக்கமாகக் கூறினால், "நீங்கள் பெரும்பான்மைச் சமூகத்தை கோபப்பட வைத்தால் அதன் விளைவுகளுக்கு நீங்களே பொறுப்பாளிகள்" அல்லது "பெரும்பான்மைச் சமூகத்தைக் கோபப்படுத்தியதால் உங்களுக்கு நீங்கள் கேட்டது கொடுக்கப்பட்டிருக்கிறது" என்று பொருள். சன்சொனி மேலும் கூறுகையில், "இலங்கையின் மொத்த மக்களையும் பொறுத்தவரையில் தனிநாடு என்பது வெறுக்கத்தக்க ஒரு விடயமாகும். அதனை பெரும்பான்மையின மக்கள் இறுதிவரை எதிர்ப்பார்கள். வன்முறைகளோ, அல்லது வன்முறைகளுக்கான ஊக்கப்படுத்தல்களோ மேலும் மேலும் வன்முறைகளையே கொண்டுவரும் என்பதை நாம் மறக்கக் கூடாது. 1977 ஆவணியிலும் புரட்டாதியிலும் இடம்பெற்ற சம்பவங்கள் எங்களுக்குக் கற்றுத்தரும் பாடங்கள் இவைதான்" என்று கூறினார். இந்த அறிக்கையினை ஆராய்ந்த பலர் சன்சொனி கூறியிருப்பது 1977 ஆம் ஆண்டு ஆவணி 18 இல் பாராளுமன்றத்தில் ஜெயவர்த்தன நிகழ்த்திய தமிழர்களைச் சீண்டும் விதமான ஆணவப் பேச்சிற்குச் சற்றும் சளைத்தது இல்லை என்று கூறியிருந்தனர். பாராளுமன்றத்தில் அமிர்தலிங்கத்தின் அறிக்கைக்குப் பதிலளித்துப் பேசிய ஜெயவர்த்தன பின்வருமாறு பேசியிருந்தார், "நாட்டிலுள்ள பெரும்பான்மையான மக்களுக்கு இந்தப் பாராளுமன்றத்தில் இருக்கும் உறுப்பினர்களைப் போன்று, குறிப்பாக முன்வரிசயில் அமர்ந்திருக்கும் அதிகாரம் மிக்க உறுப்பினர்களுக்கு இருக்கின்ற பொறுமையோ சகிப்புத்தன்மையோ கிடையாது. தனியான நாடொன்றினை அமைக்கப்போகிறார்கள் என்று மக்கள் கேள்விப்படும்போது அவர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கப்போவதில்லை. இந்து சமுத்திரத்தின் திறவுகோல் திருகோணமலையென்று நெப்போலியன் ஒருமுறை சொன்னானாம், ஆகவே தமிழர்கள் தமது தனிநாட்டிற்குத் திருகோணமலையை தலைநகராக்கப் பார்க்கிறார்களாம். " "எது எப்படியிருந்தாலும், நீங்கள் தனிநாட்டுக்கான அறிக்கைகளை விடும்போது பத்திரிக்கைகள் அதனை நாடு முழுதும் கொண்டு செல்கின்றன. நீங்கள் வன்முறையினை விரும்பவில்லை என்று கூறிக்கொண்டே எதிர்காலத்தில் வன்முறையினைப் பாவிக்கலாம் என்று கூறும்போது, இலங்கையில் வாழும் மற்றைய மக்கள் என்ன செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறீர்கள்? உங்களுக்குப் போர் வேண்டும் என்றால், போர் செய்துபார்க்கலாம். உங்களுக்குச் சமாதானம் வேண்டுமென்றால், சமாதானம் செய்து பார்க்கலாம்" என்று ஜெயவர்த்தனா முழங்கியபோது அவரது கட்சியினர் பலத்த கரகோஷம் செய்தனர். கரகோஷங்களுக்குப் பின்னர் தொடர்ந்து பேசிய ஜெயவர்த்தன, "இதனை நான் சொல்லவில்லை, எனது மக்களே சொல்கிறார்கள். யாழ்ப்பாணத்தில் வன்முறைகள் நடக்கும்போது, சிங்களவர்கள் தாக்கப்படும்போது, அவர்களது கடைகள் எரிக்கப்படும்போது, அங்கிருந்து தப்பி ரயில்களில் ஏறி தென்பகுதிக்கு வரும் சிங்களவர்கள் தமக்கு நடந்தவற்றைச் சொல்கிறார்கள். இதன் விளைவாகவே பல தமிழ் உயிர்களும், முஸ்லீம் உயிகளும் பலியாகின. இவை நடந்திருக்கத் தேவையில்லை. அவை நடந்ததற்காக நான் வருந்துகிறேன்" என்று கூறி முடித்தார். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி மற்றும் தமிழ் ஆயுத அமைப்புக்களுக்கெதிராக கடுமையான விமர்சனங்களை தொடர்ச்சியாக முன்வைத்துவரும் ராஜன் ஹூல் என்பவர் சன்சொனியின் அறிக்கை பற்றிக் கூறும்போது, பாதிக்கப்பட்ட 952 பேரின் சாட்சியங்களை 298 அமர்வுகளில் விசாரித்தும், பாதிக்கப்பட்ட 275 வாக்குமூலங்களை விசாரணை செய்தும் முடிக்கப்பட்ட அறிக்கையினை ஒருவர் படிக்கும்போதும், இந்த அமர்வுகளைத் தொடர்ச்சியாக பார்த்தும் வரும் போதும், 1977 ஆம் ஆண்டில் ஜெயவர்த்தனவின் ஆக்ரோஷமான பேச்சினை உறுதிப்படுத்தும் வகையில் அறிக்கயினை வெளியிடவேண்டும் என்கிற அழுத்தம் சன்சொனி மீது பிரயோகிக்கப்பட்டிருந்தது என்பது இலகுவாகப் புரியவரும் என்று கூறுகிறார். சன்சொனி தனது அறிக்கையின் முழுவதிலும் தனிநாட்டிற்கான கோரிக்கையும், அதனை நோக்கிய வன்முறைகள் அல்லது வன்முறைகளுக்கான ஊக்கப்படுத்தல்களே இனவன்முறைக்குக் காரணமாக அமைந்தன என்று கூறிவந்தார். தம்மீது நடத்தப்பட்ட சிங்களக் காடையர்களின் தாக்குதல்களுக்கு தமிழர்களே பொறுப்பெடுக்க வேண்டும் என்று அவர் கூறினார். "வன்முறைகளுக்கான சூழ்நிலையினை நீங்களே உருவாக்கினீர்கள், அதனையே நீங்கள் பெற்றுக்கொண்டீர்கள் " என்று அவர் தமிழர்களைப் பார்த்துக் கூறினார். இதுதான் அவரது தீர்ப்பு. அவர் சொல்லாது விட்ட ஒரு விடயம் தான், "வன்முறைகளுக்கு நீங்கள் தகுதியுடையவர்கள் தான்" என்பது. "தமிழர்களுக்குச் சரியான பாடம் ஒன்றினைப் புகட்ட வேண்டும்" என்பதும் "தமிழர்கள் தாக்கப்படும்போது, மற்றையபக்கம் பார்த்துக்கொண்டு நில்" என்று பொலீஸாருக்குக் கட்டளையிடுவதுமே சுதந்திர இலங்கையில் அரசியல் இலட்சணமாகிவிட்டது. தமிழர்களால் முதன் முதலாக முன்னெடுக்கப்பட்ட அகிம்சை வழியிலான போராட்டத்திற்கும் சிங்களவர்கள் கொடுத்த பதில் இதுதான். 1956 ஆம் ஆண்டு ஆனி 5 ஆம் திகதி, தமிழுக்கும் உத்தியோகபூர்வ மொழி அந்தஸ்த்தினை வழங்குங்கள் என்று அன்றைய பிரதமர் பண்டாரநாயக்கவைக் கோரி, காலிமுகத்திடலில் கால்களை மடித்து பிரார்த்தனையில் ஈடுபட்ட சுமார் 200 தமிழர்கள் மீது சிங்களக் காடையர்கள் மிருகத்தனமாகத் தாக்குதல் நடத்தியபோது, அருகிலிருந்து பொலீஸார் எதுவுமே செய்யாது வேடிக்க பார்த்துக்கொண்டிருந்ததுடன், பலர் வேறு திசையில் பார்த்துக்கொண்டிருந்தனர். சத்தியாக்கிரகம் தமிழ் மக்கள் மீதான "பாடம் புகட்டும் தாக்குதல்களும்" பொலீஸாரின் பாராமுகமும் அன்று கொழும்பிலும், மறுநாள் கல்லோயாவிலும் இடம்பெற்றன. 1958 ஆம் ஆண்டு இதே "பாடம் புகட்டுதல்களும்" பாராமுகமும் இன்னும் பெரிய அளவில் இடம்பெற்றன. 1961 ஆம் ஆண்டின் சமஷ்ட்டிக் கட்சியினர் செய்த சத்தியாக்கிரக போராட்டத்தைக் கலைப்பதற்கும் சிறிமா இதே அரசியல் கலாசாரத்தையே பாவித்தார். ஜே ஆரை பொறுத்தவரை வன்முறை என்பது ஆர்ப்பாட்டங்களை அடக்க தேவையானதும், வீரியம் மிக்கதுமாகக் காணப்பட்டது. ஆடி, 1977 ஆம் ஆன்டு தனது அரசியல் எதிரிகள் மீது, குறிப்பாக சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள் மீது வன்முறையை ஏவிவிட்டார். தான் செய்யப்போவது குறித்து அவர் முன்னரே அறிவித்தும் இருந்தார். 1956 ஆம் ஆண்டின் சத்தியாக்கிரக நிகழ்வுபற்றி புத்தகம் ஒன்றினை எழுதிய எஸ் பொன்னையா, சிங்களவரின் அரசியல் கலாசாரம் வன்முறையினை அடிப்படையாகக் கொண்டது என்பதற்கான சாட்சியம் ஒன்றினை குறிப்பிட்டிருந்தார். 1956 ஆம் ஆண்டு, ஆனி 5 ஆம் திகதி, காலை 9:30 மணிக்கும் 10:00 மணிக்கும் இடையிலான நேரத்தில் பாராளுமன்றத்தில் தனது தனிச்சிங்களச் சட்டத்தினை பிரகடணப்படுத்த காரில் வந்துகொண்டிருந்தார் அன்றைய பிரதமர் எஸ் டபிள்யூ ஆர் டி பண்டாரநாயக்க. காலிமுகத்திடலில் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ளோரைக் கண்டதும் தனது காரினை அவர் நிறுத்தினார். சத்தியாக்கிரகிகள் மீது சிங்களக் குண்டர்கள் சரமாரியாகத் தாக்குதல் நடத்துவதைப் பார்த்து சிரித்துக்கொண்டே சில நிமிடங்கள் அவர் அங்கே நின்றிருந்தார். அங்கு கடமையில் நின்ற சிரேஷ்ட்ட பொலீஸ் அதிகாரியொருவர் பண்டாரநாயக்காவின் காரின் அருகில் வந்து, "தாக்குதல் நடத்தும் குண்டர்களைக் கலைத்து விடலாமா?" என்று கேட்டார். அதற்குப் பதிலளித்த பண்டாரநாயக்கா, "இல்லையில்லை, அவர்களைக் கலைக்க வேண்டாம். தமிழர்களுக்கு ஒரு பாடம் புகட்டப்பட வேண்டும்" என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றார். சிறிது நேரத்தின்பின்னர் தலையில் காயத்துடன் பாராளுமன்றம் வந்த அமிர்தலிங்கத்தைப் பார்த்து கேலியுடன் பேசிய பண்டாரநாயக்க, "போரில் ஏற்பட்ட விழுப்புண்களா?" என்று வினவினார். "தேர்தல்களின் பின்னர் சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டும் பொலீஸாருக்கு விடுமுறை வழங்குங்கள்" 1977 ஆம் ஆண்டுத் தேர்தல்களின் பின்னர், அரச திணைக்கள வாகனங்களில் நாடு முழுவதும் பவனி வந்த ஜே ஆரின் ஆதரவாளர்கள் ஜே ஆரின் வெற்றியைக் கொண்டாடியதோடு, எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் மீதும் தாக்குதல்களை மேற்கொண்டனர். பொலீஸார் இவற்றைக் கண்டும் காணாததுபோல பார்வையை வேறு பக்கம் திருப்பிக்கொண்டனர். ஆவணி 77 இல் நடந்தவை இதற்குப் பின்னர் இடம்பெற்ற வன்முறைகளே. 1980 ஆம் ஆண்டு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கங்கள் மீதும் இதே பாணியிலான அரசியல் வன்முறைகளை ஜே ஆர் ஏவி விட்டார். தொழிற்சங்க தலைவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டதோடு, பல தொழிற்சங்க உறுப்பினர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். 1981 இலும் 1983 இலும் தமிழர்களுக்கு மேலும் பல பாடங்கள் சிங்களவர்களால் கற்றுக்கொடுக்கப்பட்டன. 1984 ஆம் ஆண்டு, பிரதம நீதியரசரான ஹேமா பஸ்நாயக்கவுக்கும் பாடம் புகட்டப்பட்டது. ஜெயவர்த்தனவை விமர்சித்தார் என்பதற்காக அவரது உத்தியோகபூர்வ இல்லம் சுற்றிவளைக்கப்பட்டு காடையர்களால் தக்கப்பட்டு அவரும் அச்சுருத்தப்பட்டார்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
விசாரணைக் கமிஷன்களில் நம்பிக்கையிழந்த தமிழர்கள் நீதித்துறை மீதிருந்த தமிழர்களின் நம்பிக்கை இல்லாமற்போனது 1977 ஆம் ஆண்டு ஆவணியில் தமிழர்களுக்கெதிரான பொலீஸாரின் வன்முறைகளை மறைக்கத் துணைபோன குற்றத்திற்காக பொலீஸ் ஆய்வாளர் குருசாமி டெலோ அமைப்பினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அரசாங்கத்தால் அமைக்கப்படும் விசாரணைக் கமிஷன்களில் தமிழர்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதைப் பறைசாற்றும் ஒரு நிகழ்வாகவே குருசாமியின் தண்டனை நிகழ்ந்திருந்தது. முக்கியமாக கண்துடைப்பிற்காக அமைக்கப்பட்ட சன்சொனி விசாரணைக் கமிஷன் அரசு எதிர்பார்த்ததையே செய்துமுடித்திருந்தது. ஆவணி 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் பொலீஸார் மேற்கொண்ட அட்டூழியங்களைப் பாராளுமன்றத்தில் பதிவுசெய்து, அவைதொடர்பாக விசாரணை நடத்தவேண்டும் என்று அமிர்தலிங்கம் கேட்டுக்கொண்டதன் பின்னர் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி சன்சொனி தலைமையில் ஒரு விசாரணைக் கமிஷனை ஜெயவர்த்தன 1977 ஆம் ஆண்டு கார்த்திகை 9 ஆம் திகதி அமைத்திருந்தார். அமிர்தலிங்கத்தைப் பொய்யர் என்று நிறுவுவதற்கும், பொலீஸாரின் வன்முறை குறித்த அவரது தகவல்கள் யாவும் பொய்யானவை என்று நிறுவுவதற்கும் சன்சொனி விசாரணைக் கமிஷனை அரசும் பொலீஸாரும் மிக நேர்த்தியாகப் பாவித்துக் கொண்டனர். தனிநாட்டிற்கான கோர்ரிக்கையினை தமிழ் மக்களும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரும் தொடர்ச்சியாக முன்வைத்து வந்ததும், அதுநோக்கிய வன்முறைச் சம்பவங்களில் அவர்கள் ஈடுபட்டதும் சிங்கள மக்களை சினங்கொள்ள வைத்தது மட்டுமல்லாமல் ஆவணி வன்முறைகள் நடைபெறுவதற்கு ஏதுவான பதட்டமான சூழ்நிலையினை தமிழர்களே ஏற்படுத்தியிருந்தனர் என்றும் சன்சொனி கமிஷன் கூறியிருந்தது. முடிவாக, "நீங்கள் கேட்டுக்கொண்டதே உங்களுக்கு வழங்கப்பட்டது" என்று தமிழர்களுக்கு இந்தக் கமிஷன் பதிலளித்திருந்தது. சோல்பரி பிரபு ஆனால், இலங்கையின் நீதித்துரை மீதிருந்த நம்பிக்கையினை தமிழர்கள் ஏற்கனவே இழந்துவிட்டிருந்தனர். சோல்பரி அரசியலமைப்பின் பிரகாரம் சரத்து 29 இல் குறிப்பிடப்பட்டிருந்த சிறுபான்மையின மக்களுக்கான பாதுகாப்பினை வழங்குவதை இலங்கையின் நீதித்துறை முற்றாக மறுத்திருந்தது. சோல்பரி யாப்பின் சரத்து 29 இவ்வாறு கூறுகிறது, "ஒரு இனத்தையோ மதத்தையோ சார்ந்த ஒருவருக்கோ அல்லது ஒரு பிரிவினர்க்கோ வழங்கப்படும் அந்தஸ்த்து மற்றைய இன, மத பிரிவுகளைச் சேர்ந்த ஒருவருக்கோ அல்லது ஒரு பிரிவினருக்கோ வழங்கப்படும் அந்தஸ்த்தினைக் காட்டிலும் அதிகமாக இருக்க முடியாது" "பாராளுமன்றத்தி மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருக்குமிடத்து அரசியலமைப்பில் மாற்றங்களைச் செய்யவியலும்" சோல்பரி யாப்பின் பிரகாரம் நீதிக்கு முறணான வகையில் பிரஜாவுரிமை பறிக்கப்பட்ட பல லட்சம் மலையகத் தமிழர்கள் விடயத்தில் நீதித்துறை தலையீடு செய்து தவற்றினைத் திருந்த்திக்கொள்ள இருவேறு சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டிருந்தன. முதலாவது தமிழர்களுக்கெதிராக சிங்கள அரசுகள் கொண்டுவந்த பாகுபாட்டு முறைகளைத் திருத்தக்கூடிய சந்தர்ப்பம். பதுர்தீன் எனும் மனிதர் ஆரம்பித்த வழக்கில் இலங்கை பிரஜாவுரிமைச் சட்டத்தில் புகுத்தப்பட்ட "சாதாரண வதிவாளர்" எனும் பதத்தினை நீதித்துறை பாவித்த விதம் பற்றியது. அரச வழக்கறிஞர்களின் கூற்றுப்படி மனுதாரரின் மனைவியும் பிள்ளைகளும் குறைந்தது 7 வருடங்களாவது இலங்கையில் வாழ்ந்திருந்தால் மட்டுமே பிரஜாவுரிமைக்கு விண்ணப்பிக்கும் தகமையினைப் பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் வழக்கின் நீதிபதி பஸ்நாயக்கவோ, 7 வருடங்கள் தேவையில்லை, விண்ணப்பிக்கும் நேரத்தில் அவரது குடும்பம் அவருடன் இருந்தாலே போதுமானது என்று கூறி தீர்ப்பு வழங்கியிருந்தார். இதன்மூலம் சுமார் 50,000 தமிழர்கள் தமது பிரஜாவுரிமைகளை மீளப் பெற்றுக்கொள்ளும் வழி பிறந்திருந்தது. ஆனால் சுதாரித்துக்கொண்ட அரசு தனது பிரஜாவுரிமைச் சட்டத்தினை தனக்கு ஏற்றவகையில் மாற்றி இந்தச் சந்தர்ப்பத்தை இல்லாமலாக்கியது. இதன்மூலம் பல்லாயிரம் தமிழர்களுக்கு நீதித்துறையின் தலையீட்டினால் கிடைத்திருக்கவேண்டிய பிரஜாவுரிமை அரசால் தட்டிப் பறிக்கப்பட்டது. சோல்பரி அரசியலமைப்பினைப் பாவித்தே அரசு இதனைத் தனக்குச் சாதகமாக மாற்றியிருந்தது. சோல்பரி அரசியல் யாப்பின் பிரிவு 29 இன்படி முதன்முதலாக பதிவுசெய்யப்பட்ட வழக்கு கேகாலை மாவட்டத்தின் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயலாளர் கே ஜி எஸ் நாயர் என்பவரால் பதிவாளருக்கு எதிராகப் போடப்பட்டிருந்தது. தேர்தல் தொகுதியில் தன்னை ஒரு வாக்காளராக பதிவு செய்ய மறுத்தமைக்காகவே இந்த வழக்கு தாக்கல்செய்யப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி என் சிவஞானசுந்தரம், நாயரின் பெயர் வாக்காளர் பட்டியலில் மீளவும் சேர்க்கப்படவேண்டும் என்று தீர்ப்பு வழங்கினார். சோல்பரி யாப்பின் சரத்து 29 இன்படி ஒரு இனம் மற்றைய இனம் மீது நீதிக்குப் புறம்பான வகையில் சலுகைகளைப் பெறமுடியாது எனும் சரத்தினைப் பயன்படுத்தியே பிரஜாவுரிமைச் சட்டத்திற்கு மேலாகச் சென்று யாப்பின்பிரகாரம் நீதி வழங்கியிருந்தார். ஆனால், இந்த தீர்ப்பிற்கெதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கொன்றை குடியகல்வு - குடிவரவு ஆணையாளர் மதநாயக்க பதிவுசெய்தார். இந்த வழக்கை விசாரித்த மூன்று நீதிபதிகளான ஜயதிலக, புள்ளே மற்றும் சுவான் ஆகியோர் 1952 ஆம் ஆண்டு கேகாலை மாவட்ட நீதிபதியின் தீர்ப்பை உடைத்தெறிந்ததோடு பிரஜாவுரிமைச் சட்டம் எந்தவொரு இனப்பிரிவிற்கும் மற்றைய இனப்பிரிவுகளைக் காட்டிலும் அதிக சலுகைகள் வழங்கவில்லையென்றும், சோல்பரி யாப்பிற்கெதிராக பிரஜாவுரிமைச் சட்டம் பாவிக்கப்படவில்லையென்றும் தீர்ப்பு வழங்கினர். 1961 ஆம் ஆண்டு மார்கழியில் அரசால் வெளியிடப்பட்ட திறைசேரியின் சுற்று நிருபத்தின் அடிப்படையில் அரச சேவையில் எழுதுவிளைஞராகப் பணிபுரியும் ஒருவர் சம்பள உயர்வினைப் பெறவேண்டுமென்றால் சிங்கள மொழிப் பரீட்சையில் சித்தியடைந்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இதன் பிரகாரம் அரச எழுதுவிளைஞராக இருந்த சி. கோடீஸ்வரன் அவர்களின் வருடாந்த சம்பள உயர்வுகள் அவர் சிங்கள மொழிப் பரீட்சையினை எழுதாதனால் தடுத்துவைக்கப்பட்டிருந்தன. ஆகவே, சோல்பரி யாப்பில் கூறப்பட்டதற்கு முரணான விதத்தில் இந்த சுற்றுநிருபம் அனுப்பட்டுள்ளதென்றும், ஆகவே தனது சம்பள உயர்வுகள் தடையின்றித் தனக்குக் கிடைக்கப்பெறவேண்டும் என்றும் கோரி கோடீஸ்வரன் அவர்கள் வழக்கொன்றினைத் தாக்கல் செய்திருந்தார். இந்த சுற்று நிருபத்தை அனுப்பும்படி கட்டளையிட்டவர் அன்றிருந்த அரச சேவைகள் அமைச்சரான பீலிக்ஸ் ஆர் டயஸ் பண்டாரநாயக்க என்பதுடன், தனிச்சிங்களச் சட்டத்தின் அடிப்படையிலேயே இந்தச் சுற்றுநிருபம் சகல அரச நிறுவனங்களுக்கும் கூட்டுத்தாபனங்களுக்கும் அனுப்பப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத் தக்கது. பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க கொழும்பு நீதிமன்றத்தில் தனது வழக்கினைப் பதிவுசெய்த கோடீஸ்வரன் சிறுபான்மையினமான தமிழினத்திலிருந்து தான் வந்துள்ளதால் சிங்களம் தெரிந்தாலன்றி சம்பள உயர்வு தரமுடியாதென்பது சோல்பரி யாப்பிற்கெதிரான செயற்பாடு என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், தனிச் சிங்களச் சட்டத்தின் மூலம் தமிழர்களின் பாரம்பரிய வாழிடங்களில் பணிபுரியும் சிங்கள அதிகாரிகள் தமிழில் பணிபுரியத் தேவையில்லை என்கிற அனுமதி இருக்கின்ற அதேவேளை, தமிழர்களின் பூர்விக்கத் தாயகத்தில் தனது சொந்த மொழியான தமிழில் பணிபுரியும் தமிழர்கள் கட்டாயம் சிங்கள மொழியினைக் கற்றிருக்கவேண்டும் என்கிற அழுத்தம் இருப்பதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார். இது தமிழர்களைக் குறிவைத்தே கொண்டுவரப்பட்ட சதியென்றும் அவர் கூறியிருந்தார். ஆனால், இந்த வழக்கு அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்துகொண்ட அரச தலைமைச் சட்ட அதிகாரி, அரச பணியில் இருக்கும் ஒருவர் சம்பள உயர்வு தொடர்பாக அரசிற்கெதிராக வழக்குத் தக்கல் செய்யமுடியாது எனும் விவாதத்தை முன்வைத்து இவ்வழக்கிற்கெதிரான தடையொன்றினைக் கேட்டிருந்தார். அரச தலைமை சட்டவாளரின் தடைக் கோரிக்கையினை நிராகரித்த மாவட்ட நீதிபதி கோடீஸ்வரனுக்குச் சார்பாக தீர்ப்பளித்ததோடு சோல்பரி அரசியல் யாப்பிற்கு எதிராக தனிச் சிங்களச் சட்டம் இயங்குவதாகவும் குறிப்பிட்டிருந்தார். ஆனால், இத்தீர்ப்பிற்கெதிராக அரசு உச்சநீதிமன்றில் வழக்கொன்றைத் தாக்கல் செய்தது. அரசு சார்பில் வழக்காடிய வழக்கறிஞர்கள் கோடீஸ்வரனின் வழக்கு ஆங்கில சட்டங்களின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டிருப்பதால், சாதாரண ஊழியர் ஒருவர் அரசுக்கெதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடியாது என்று வாதாடினர். ஆனால் கோடீஸ்வரனின் சார்பில் வழக்காடிய வழக்கறிஞர் ரங்கனாதன் மூல வழக்கு ரோமன் டச்சுச் சட்டத்தின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டதால் அரச ஊழியர் ஒருவர் அரசிற்கெதிராக வழக்காட முடியும் என்று வாதாடினார். வழக்கின் முடிவில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், வழக்கு ஆங்கில சட்டத்தின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டிருப்பதால் ஊழியர் ஒருவர் சம்பள விடயங்கள் தொடர்பாக அரசிற்கெதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடியாது என்று தீர்ப்பளித்ததுடன் தனிச் சிங்களச் சட்டத்தினை இந்த நீதிமன்றத்தில் விவாதிக்கவேண்டிய தேவையும் இல்லையென்று கூறியிருந்தார். ஆனால் தொடர்ந்தும் போராடிய கோடீஸ்வரன், ஆளுநரால் நியமிக்கப்பட்ட நீதிபதிகள் முன்னிலையில் தனது வழக்கைக் கொண்டு சென்றார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் குழு, கோடீஸ்வரன் அரசிற்கெதிராக வழக்காடும் உரிமையினைப் பெற்றிருப்பதாகக் கூறித் தீர்ப்பளித்ததுடன், தனிச் சிங்களச் சட்டம் குறித்து வழக்கில் எதுவும் குறிப்பிடப்படாததால் இந்துதொடர்பாக தாம் தீர்ப்பெதுவும் வழங்கத் தேவையில்லை என்றும் கூறியது. மேலும், தேவையேற்படும் பட்சத்தில் உச்ச நீதிமன்றம் தனிச்சிங்களச் சட்டம் குறித்து விசாரிக்கலாம் என்று கூறியபோதும் இலங்கையரசு வழக்கை நீட்டிச் செல்வதில் ஆர்வம் காட்டியிருக்கவில்லை. கோடீஸ்வரன் விரும்பியிருந்தால் வழக்கினை மேலும் தொடர்ந்திருக்க முடியும். ஆனால், அரச நிர்வாக அமைச்சினால் விநியோகிக்கப்பட்ட சுற்று நிருபத்தில் மாற்றங்களைச் செய்து தமிழர்கள் அனைவருக்கும் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சம்பள உயர்வுகளை மீள வழங்க அரசு ஒத்துக்கொண்டதனால் அவரும் தொடர்ந்து வழக்காடுவதை நிறுத்திக்கொண்டார். இந்த மூன்று நீதிமன்றங்களிலும் முன்வைக்கப்பட்ட வாதங்களின்படி தனிச்சிங்களச் சட்டம் செல்லுபடியற்றதாக நிரூபிக்கப்பட்டதுடன், அதுதொடர்பாக விவாதங்களையும் இம்மூன்று நீதிமன்றங்களும் தவிர்த்தே வந்தன. ஆனாலும், இந்த நீதிமன்றங்களின் கருத்தினை உதாசீனம் செய்த அரசு தொடர்ந்தும் தனிச் சிங்களச் சட்டம் நடைமுறையில் இருக்கும் என்று அறிவித்ததுடன், நீதித்துறையின் சுயாதீனத்தையும் கேள்விக்குள்ளாக்கியது. 1970 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த சிறிமா, நீதிமன்ற தீர்ப்பினை மீறி, தனிச்சிங்களச் சட்டத்தினை 1972 ஆம் ஆண்டு யாப்பினுள் உள்வாங்கியதோடு, சோல்பரி அரசியல் யாப்பிலிருந்தும் விலகிக்கொண்டார். 1972 ஆம் ஆண்டு யாப்பின்படி பாராளுமன்றா அதிகாரம் பொறுந்திய அமைப்பாக மாறியதுடன், ஆளுநரூடாக வழக்குத் தாக்கல் செய்யும் பிரிவி செயன்முறையினையும் முற்றாக இல்லாமலாக்கியிருந்தது. அமிர்தலிங்கத்திற்கெதிராக பதிவுசெய்யப்பட்ட ட்றையள் அட் பார் வழக்கில் 1972 ஆம் ஆண்டின் குடியரசு யாப்பு இரு முக்கிய விடயங்களில் கேள்விக்குள்ளாக்கப்பட்டிருந்தது. வழக்கறிஞர் திருச்செல்வம் இதுதொடர்பாக வாதிடுகையில் சோல்பரி யாப்பின் பிரிவு 29.4 இன்படி பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மூலம் யாப்பின் சரத்துக்கள் மாற்றப்படலாமேயன்றி, யாப்பினை முற்றாக மாற்ற முடியாது என்று கூறியிருந்தார். அதற்குப் பதிலளித்த அரச தலைமை வழக்கறிஞர் ஐக்கிய முன்னணி அரசாங்கம் புதிய அரசியல் யாப்பினை உருவாக்கும் மக்கள் ஆணையினைப் பெற்றிருப்பதாகக் கூறினார். இந்த வழக்கை விசாரித்து மூன்று நீதிபதிகளும் இதுதொடர்பாக கருத்துத் தெரிவிக்க மறுத்ததுடன், திருச்செல்வம் முன்வைத்த இன்னுமொரு முக்கிய விடயத்தையும் வேண்டுமென்றே தட்டிக்கழித்தனர். திருச்செல்வத்தின் வாதத்தின்படி ஐக்கிய முன்னணி அரசாங்கம் மக்கள் ஆணையினைப் பெற்றிருந்தாலும் கூட, அது வெறுமனே சிங்கள மக்களின் ஆணை மட்டுமேயன்றி , இன்னொரு தேசிய இனமான தமிழ் மக்களின் ஆதரவு இந்த புதிய அரசியல் அமைப்புருவாக்கத்திற்குக் கிடைக்கவில்லை என்று வாதிட்டிருந்தார். தமிழ் மக்கள் சமஷ்ட்டி முறையிலான ஆட்சியொன்றிற்கு 1970 ஆம் ஆண்டு தேர்தல்களில் வாக்களித்திருந்தனர் என்பது இங்கே குறிப்பிடத் தக்கது. இந்தவிடயத்தை முற்றாகப் புறக்கணித்த மூன்று நீதிபதிகளும் அமிர்தலிங்கமும் ஏனையவர்களும் கைதுசெய்யப்பட்ட அவசரகாலச் சட்டம் காலவதியாகிவிட்டதனால், அவர்களைத் தொடர்ந்தும் தடுப்புக் காவலில் வைத்திருக்க முடியாது என்று மட்டுமே தீர்ப்பளித்தனர். மேலும், இந்த நீதிமன்றம் யாப்பின் பிரகாரம் உருவாக்கப்படாததனால், குடியரசு யாப்பின் ஏற்புடைமை குறித்து தம்மால் கருத்தெதுவும் கூறமுடியாதென்று கைவிரித்து விட்டனர். உயர் நீதிமன்ற தீர்ப்பிற்கெதிராக வழக்கொன்றைத் தாக்கல் செய்த அரச பிரதான வழக்கறிஞர், உயர் நீதிமன்றம் கூறுவதுபோல அவசரகாலச் சட்டம் வழக்கற்றுப்போனாலும் கூட, உச்ச நீதிமன்றத்தின் ஆணைப்படி அது இன்னமும் நடைமுறையிலேயே இருக்கிறது. ஆகவே இந்த நீதிமன்றமும் யாப்பின்படியே உருவாக்கப்பட்டிருக்கிறது, ஆகவே அமிர்தலிங்கத்திற்கெதிரான வழக்கு தொடர்ந்தும் நடைபெறவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், திடீரென்று சட்ட மாதிபர் வழக்கினை வாபஸ் வாங்கியதால் 1972 ஆம் ஆண்டு குடியரசு யாப்பின் ஏற்புடைமையினை உரசிப்பார்க்கும் சந்தர்ப்பம் ஒன்று அரசால் திட்டமிட்ட ரீதியில் தவிர்க்கப்பட்டிருந்தது. 1976 ஆம் ஆண்டு புரட்டாதி 20 ஆம் திகதி அமிர்தலிங்கத்திற்கெதிரான வழக்கின் தீர்ப்பு நீதிபதி ஜே. எப். ஏ. சோசா அவர்களால் வழங்கப்பட்டது. இந்த தீர்ப்புப்பற்றி தந்தை செல்வாவிடம் கேட்டேன். வெளிப்படையாக எதனையும் சொல்ல மறுத்த செல்வா அவர்கள் ஒரு விடயத்தைப் பொதுவாகச் சொன்னார். இலங்கையில் தமிழ் மக்கள் பாராளுமன்றத்தினூடாகவோ, நீதித்துறை ஊடாகவோ அல்லது அதிகாரத்திலிருப்பவர்களூடாகவோ தமக்கான நீதியை ஒருபோதுமே பெற்றுவிட முடியாதென்பது தெரிகிறது என்று மட்டும் கூறினார். "தமிழர்கள் இலங்கையின் நீதிமன்றங்கள் மீது நம்பிக்கையிழந்துவிட்டார்கள். சோல்பரி யாப்பின் பிரிவு 29 இன்படி சிறுபான்மையின மக்களுக்கான நலன்கள் பாதுகாக்கப்படுகின்றனவா என்பதைக் கண்டறிய இலங்கையில் உள்ள எந்த நீதிமன்றமும் தயாராக இல்லை" என்று தந்தை செல்வா கூறினார்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
நீங்கள் கூறுவது சரியாக இருக்கலாம் சோழன். ஆனால் இரத்மலானை விமானத் தகர்ப்பு என்று தேடினால் இதுதான் வருகிறது.
-
எங்கே கனவுகள் தொலைந்து போனதா-பா.உதயன்
அருமையான கவிதை உதயன். நன்றி !
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
குருசுவாமியின் கொலை அதிகரித்து வந்துகொண்டிருந்த முறுகல் நிலை, டெலோ அமைப்பினரால் பொலீஸ் பரிசோதகர் குருசுவாமி 1979 ஆம் ஆண்டு ஆடி 1 ஆம் திகதி கொல்லப்பட்டபோது மேலும் தீவிரமாகியது. 1977 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தி இடம்பெற்ற தமிழர்களுக்கெதிரான பொலீஸ் மற்றும் இராணுவத்தினரின் வன்முறைகளை விசாரிக்கவென்று அமைக்கப்பட்ட சன்சொனி விசாரணைக் கமிஷனின் முன்னால் அழைக்கப்பட்ட இரு தமிழ் பொலீஸ் அதிகாரிகளில் குருசுவாமியும் ஒருவர். மற்றைய அதிகாரியான தாமோதரம்பிள்ளை கமிஷனின் முன்னால் பேசும்போது யாழ்ப்பாண பொலீஸ் நிலையத்தைச் சேர்ந்தவர்களே யாழ்ப்பாணத்தில் கடைகளுக்கும் சந்தைக் கட்டிடத் தொகுதிக்கும் தீவைத்ததாகக் கூறினார். அவர்கள் எவரும் சீருடையில் இருக்கவில்லையென்றும், எவரும் தமது அடையாள இலக்கத் தகடுகளை அணிந்திருக்கவில்லை என்றும் மேலும் கூறினார். முன்னாள் பிரதம நீதியரசர் சன்சொனி யாழ்ப்பாணம் சந்தை ஆவணி 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் பொலீஸார் நடத்திய வன்முறைகளில் இருமுக்கிய விடயங்களில் பொலீஸாரைப் பாதுகாக்கும் வகையில் குருசுவாமி சாட்சியமளித்திருந்தார். முதலாவது, யாழ்ப்பாண பழைய சந்தைக்குத் தீமூட்டிய விவகாரம். இந்த தீவைப்புச் சம்பவத்தில் பொலீஸார் எவரும் ஈடுபடவில்லை என்று அவர் கூறினார். இரண்டாவது யாழ்ப்பாணத்தில் வாழும் சிங்களவர்கள் தாக்கப்படுவதாகவும், யாழ்ப்பாணத்தில் அமைந்திருக்கும் நாகவிகாரை தமிழர்களால் எரியூட்டப்பட்டதாகவும் வேண்டுமென்றே பொலீஸாரால் அனுப்பப்பட்ட செய்தி. யாழ்ப்பாணப் பொலீஸ் நிலையப் பொறுப்பதிகாரியான நாணயக்கார அனுப்பிய இந்த விஷமத்தனமான அறிவிப்பை அவர் செய்யவில்லை என்று குருசுவாமி கமிஷனிடம் கூறினார். யாழ்ப்பாண உதவிப் பொலீஸ் அத்தியட்சகர் ரொனி குணசிங்கவின் நெருங்கிய தோழரான குருசுவாமி தனது பொலீஸ் நண்பர்களைக் காப்பதில் மிகுந்த கவனம் எடுத்திருந்தார். குருசுவாமியின் வாக்குமூலம் பத்திரிக்கைகளில் வெளிவந்தபோது தமிழர்கள் மிகவும் ஆத்திரமடைந்தனர். பல தமிழர்கள் அவரைத் தமிழினத் துரோகி என்று அழைக்கத் தலைப்பட்டனர். தமிழர்களின் வெறுப்பினை அவர் சம்பாதித்துக்கொண்டதால் அவரின் பாதுகாப்பிற்கென்று தானியங்கிக் கைத்துப்பாக்கியொன்றும் அவருக்கு பொலீஸாரால் வழங்கப்பட்டது. நடராஜா தங்கவேல் (தங்கத்துரை) தங்கத்துரையின் அமைப்பு குருசுவாமியைக் கொல்லத் தீர்மானித்தது. குருசுவாமியைக் கொல்லும் பணி குட்டிமணி, ஜெகன் மற்றும் ஒபரோய் தேவனிடம் வழங்கப்பட்டது. கொழும்பில் அமைந்திருக்கும் உல்லாச விடுதியான ஒபரோய் ஹோட்டலில் சிலகாலம் தேவன் கடமையாற்றி வந்ததினால் அவர் ஒபரோய் தேவன் என்று அழைக்கப்பட்டு வந்தார். குருசுவாமியைச் சுட்டுக் கொல்லும் பொறுப்பு தேவனுக்கு வழங்கப்பட்டது. யாழ்ப்பாணம் ஓட்டுமடம் பகுதியில் குருசுவாமியின் இல்லம் அமைந்திருந்தது. குருசுவாமியைக் கொல்லும் குழு அவரது வீட்டை நெருங்கிய நேரத்தில், அருகிலுள்ள வீடொன்றில் திருமண நிகழ்வொன்று நடைபெற்றுக்கொண்டிருந்தது. ஒலிபெருக்கியில் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டுக்கொண்டிருக்க இன்னொரு புறத்தில் வெடிகளும் கொழுத்தப்பட்டன. குருசுவாமியின் வீட்டுக் கதவை குட்டிமணி தட்டினார். குருசுவாமி கதவினருகில் வரும்போது அவரைச் சுட்டுக் கொல்வதே தேவனுக்கு வழங்கப்பட்டிருந்த பணி. யன்னலின் அருகில் பதுங்கியிருந்த தேவன், வீட்டினுள் இருந்து கதவுநோக்கி குருசுவாமி வருவதைக் கண்டதும் பதட்டமடையத் தொடங்கினார். அவரை நடுக்கம் பற்றிக்கொண்டது. அதுவே தேவனின் முதலாவது கொலை. "சுடடா" என்று தேவனைப் பார்த்துக் கட்டளயிட்டார் குட்டிமணி. தேவனுக்கு இன்னமும் நடுக்கம் நின்றிருக்கவில்லை. "டேய், சுடடா" மீண்டும் குட்டிமணி தேவனைப் பார்த்துக் கத்தினார். இந்தமுறை தேவன் சுட்டார். அருகில் வெடிச்சத்தம் காதைப் பிளந்துகொண்டிருக்க, தாம் வந்த சைக்கிள்களில் ஏறி மறைந்தது குருசுவாமியைக் கொல்ல வந்த குழு.