Jump to content

Kavallur Kanmani

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    1057
  • Joined

  • Last visited

  • Days Won

    8

Everything posted by Kavallur Kanmani

  1. உண்மையில் ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன். நீண்ட நாட்களின் பின் தனியின் சுய ஆக்கம் அதிலும் அனுபவப் பதிவு படகுப்பயணம் அருமையாக தந்துள்ளீர்கள். முடிவு தெரியும் வரை இப்படியான எத்தனைபேர் தம் உயிரையே இழந்திருப்பார்கள் என நினைத்துப் பார்க்க வேதனையாக உள்ளது. கடவுள் துணையால் தப்பி விட்டீர்கள். எழுத்தோட்டமும் மிக நன்றாக உள்ளது. உங்கள் குழந்தைகளுக்கும் எம் வாழ்த்துக்கள்.
  2. நிழலியின் மழைக் கவிதை மிக அருமை. கவிதை அவரவர் தேடலில் பதில் தருவதாய் அமைந்துள்ளது . இக் கவிதையைப் படித்தபோது நான் சில காலத்தின்முன் எழுதிய மழைக்கவிதை ஞாபகம் வந்தது. தேடி எடுத்தேன் உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக.. அந்த மழைநாளுக்காய் காத்திருந்தேன் கடைசிவரை அந்த மழை எனக்காகப் பொழிய மறுத்து விட்டது மழை பொழியும் மனம் குளிரும் என்று காத்திருந்த ஒவ்வொரு வினாடியும் ஏமாற்றம்தான் எனக்காகக் காத்திருந்தது வானம் கருக்கொண்டு மேகம் கறுத்துக் கிடந்தது இடி இடித்தது மின்னல் மின்னியது காற்றும் பலமாகத்தான் வீசியது ஆனாலும் அந்த மழை மட்டும் வரவேயில்லை வானம் வசப்படுமென்று காத்துக் காத்து மனம் காய்த்துப் போனது வானம் வெளுத்து மேகம் கலைந்து பூமி காய்ந்து கிடந்தது கடைசி வரை அந்த மழை எனக்காக மண்ணில் பொழிய மறுத்து விட்டது
  3. தமிழ்சிறி குடும்பத்தினருக்கு எம் ஆழ்ந்த இரங்கல்கள். மைத்துனரின் ஆன்ம சாந்திக்காகப் பிராத்திக்கின்றோம்
  4. நீண்டநாட்களின் பின் இன்றுதான் இத் திரி கண்ணில் பட்டது. தமிழ்சிறி குணமாகி மீண்டும் வேலைக்கு போவதையிட்டு மிகவும் மகிழ்ச்சி. உறவுகள் அனைவரும் உங்கள் நலனுக்காகப் பிராத்தித்தார்கள். உங்கள் உடல் நலனில் கவனமுடன் தொடர்ந்து வேலை செய்யுங்கள்.
  5. சுவி இன்றுதான் நீண்டநாட்களின்பின் யாழை எட்டிப் பார்க்க நேரம் கிடைத்தது. தையல் கடையை முழுவதுமாக ஒரே மூச்சில் படித்து முடித்தேன். நானும்தான் வீட்டில் தைத்துக் கிழிக்கிறேன். நாம் எவ்வளவுதான் தைத்துக் கிழித்தாலும் எழுதிக்கிழித்தாலும் உங்களுக்கே உரிய தனித்துவமான நகைச்சுவையுடன் கூடிய எழுத்தாற்றல் எமக்கு வராது. எம்மைச் சுற்றி நடப்பனவற்றை மிகவும் கூர்ந்து அவதானித்து அனுபவித்து எழுதியுள்ளீர்கள். தொடர்ந்து ஆக்கங்களை தாருங்கள் பாராட்டுக்கள்.
  6. மோகன் குடும்பத்தினருக்கு எம் ஆழ்ந்த இரங்கல்கள். அப்பாவின் ஆன்ம சாந்திக்காகப் பிராத்திக்கின்றோம்.
  7. அன்னையின் இழப்பின் துயரில் நாமும் பங்கேற்கிறோம் .ஆழ்ந்த இரங்கல்கள்
  8. யாழ்கள உறவுகள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். துன்பங்கள் விலகி இன்பங்கள் பெருகிடவும் நலமாக வளமாக மனநிறைவாக வாழ்ந்திடவும் இறையருள் வேண்டி வாழ்த்துகின்றேன்.
  9. யாழ்கள உறவுகள்' அனைவருக்கும் இனிய நத்தார் புத்தாண்டு வாழ்த்துக்கள். காற்றும் குளிரும் கோரத் தாண்டவமாடினும் ஆலயத்துக்கு சென்று திருப்பலியில் பங்கேற்று வந்து விட்டோம். கிறீஸ்து பிறப்பு அனைவர் வாழ்விலும் சாந்தியும் சாமாதானமும் அன்பும் நிறைவாக தர வேண்டி வாழ்த்துகின்றோம். நன்றிகள் நிலாமதி
  10. ஆரூரனின் முயற்சிக்கும் திறமைக்கும் தன்னம்பிக்கைக்கும் தலை வணங்குகின்றோம். பாராட்டுக்கள்
  11. ஆடலுடன் பாடல் அருமையான இசைநிகழ்ச்சி பகிர்வுக்கு நன்றிகள்
  12. நேற்றைய தினம் இத் துயரச் செய்தியை அறிந்ததிலிருந்து மனம் மிகவும் வேதனையாக உள்ளது. என்ன சொல்லி குடும்ப உறப்பினர்களைத் தேற்றுவது வாழ்நாள் முழுவதும் வலியுடன் வாழ்வதே விதியாகிப் போனபின் இறைவன்தான் அவர்களுக்கு ஆறுதலைக் கொடுக்க வேண்டும். இன்றைய நாட்களில் வாலிபப் பிள்ளைகள் (எனது பிள்ளைகள் உட்பட) வாகனம் ஓட்டும் பொழுது கவனச் சிதறலுடன்தான் ஓட்டுகிறார்கள். நான் வாகனத்துள் இருந்தால் பலமுறை எச்சரித்தபடிதான் இருப்பேன். இளம் கன்று பயமறியாது. இந்த விபத்தில் பாரவூர்தி ஓட்டினரின் பிழைதான். என்றாலும் பிள்ளைகள் ஒருகணம் இருபுறமும் கவனித்து எடுத்திருந்தால் என்று என் மனம் ஏக்கத்துடன் நினைக்கிறது. இனி என்ன சொல்லி என்ன? அந்த இளம் குருத்துக்களின் ஆன்மா சாந்தியடையட்டும்.
  13. அழகான அர்த்தமுள்ள கவிதை வாழ்த்துக்கள் உதயன்
  14. நிலாமதி நீங்கள் மருத்துவமனையில் இருந்து வீடு வந்ததை அறிந்து சந்தோசம். பூரண நலம் பெற இறைவனை வேண்டுகின்றேன்.
  15. ஒரே மூச்சில் படித்து முடித்தேன். மீண்டும் பள்ளிக்குப் போன உணர்வு. மிகவும் அழகான எழுத்து நடை. அனுபவப் பதிவை மிகவும் அழகாக விவரித்து எழுதிய விதம் ரசித்து வாசிக்கக்கூடியதாய் உள்ளது. ஆசிரியர்கள் எமது வாழ்க்கையில் எம்மால் மறக்க முடியாதவர்கள். அதிலும் சில ஆசிரியர்கள் எம் மனதில் நிலையான இடத்தினை பிடித்திருப்பார்கள். இப்பதிவை வாசிக்கும்போது இளமைக்கால நினைவுகள் மனதில் நிழலாடியது. நீண்ட நாட்களின்பின் நல்லதொரு ஆக்கத்தினை படிக்கக் கிடைத்தது.தொடர்ந்து உங்கள் பதிவுகளை எதிர்பார்க்கிறோம்
  16. மேதகு என்ற பெயரே அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கிறது. நாட்டுப்புறக் கலைகளுக்கு முன்னுரிமை கொடுத்து படம் முழுவதும் வரலாற்றை காட்சிப்படுத்திய விதம் அருமை. நடிகர்கள் மிக அருமையாக பாத்திரப் படைப்புக்கேற்ற விதத்தில் தெரிவுசெய்யப்பட்டிருப்பது மிகச் சிறப்பு. பாடல் காட்சிகள் மிக அருமையாக காட்சிப்படுத்தி உள்ளனர். படக் குழுவினருக்கு பாராட்டுக்கள். நாம் கொடுக்கும் ஒரு சிறுதுளி பெரு வெள்ளமாக தொடர்ந்தும் வரலாற்றை ஆவணமாக்க உதவியாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் அனைவரும் செயற்படுவோம். தமிழுக்கும் அமுதென்று பேர் என்ற பாடலும் காட்சிகளும் மனதை விட்டு அகலவில்லை.
  17. பாடல் வரிகளும் காட்சியமைப்பும் இசையும் குரலும் அருமையாக உள்ளன. பாராட்டுக்கள் கோபி.
  18. நன்றிகள் சுவி. முன்பெல்லாம் பல தடவைகள் சென்று பார்க்கக்கூடியதாக கடல் கோட்டை இருந்தது. பின்பு கடற்படையின் கட்டுக்காவல்களை மீறி நாம் எமது கடற்கரைக்கே செல்ல முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. படித்து கருத்திட்டமைக்கு நன்றிகள்
  19. ஆகா அற்புதமான கவிதை. நீண்ட நாட்களின்பின் இன்றைய காலநிலையை அனுபவித்து வெளியே சென்ற நடைப்பயிற்சி செய்து வந்தேன். இந்த இளவேனிலுடன் எம் இன்னல்கள் மறைந்து இலைதுளிர்காலம்போல் எம் வாழ்வும் துளிர்க்க உங்கள் கவிதை இளவேனிலை வரவேறகிறது. நிழலியின் கவிதை அருமை.
  20. சில சமயங்களில் சட்டத்திற்கு அமைந்து நடக்காவிட்டால் பல பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டி ஏற்பட்டு விடுகிறது. அதிலும் இந்த காலக்கட்டத்தில் சமூகஅக்கறையுடன் நாம் செயற்படுவது அவசியம். படித்து கருத்திட்டமைக்கு நன்றிகள் சு.ப. சோமசுந்தரம்
  21. கருத்துக்கு நன்றிகள் உடையார். பசுமைநிறைந்த நினைவுகளை மீட்டியாவது மனத்திருப்தியடைவோம்.நனறிகள் நாம் இழந்தவைகள் எண்ணிலடங்காதவை. அந்த அமைதியான அழகான இயற்கையுடன் கூடிய இயல்பான வாழ்வை மட்டுமல்ல நாம் அனுபவித்த அத்தனை இன்பங்களையும் இழந்தவர்களாய் ....கருத்துக்கு நன்றிகள் புத்தன். நாம் இழந்தவைகள் எண்ணிலடங்காதவை. அந்த அமைதியான அழகான இயற்கையுடன் கூடிய இயல்பான வாழ்வை மட்டுமல்ல நாம் அனுபவித்த அத்தனை இன்பங்களையும் இழந்தவர்களாய் ....கருத்துக்கு நன்றிகள் புத்தன்.
  22. அன்னையாக அரவணைத்து மனைவியாக உடன் பயணித்து சகோதரியாக அன்பு செய்து மகளாக மடி தவழ்ந்து தோழியாக தோள் கொடுத்து வாழும் பெண்மையை போற்றுவோம் பகிர்வுக்கு நன்றிகள் நிலாமதி
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.