Everything posted by Thumpalayan
-
அரச அறிவிப்புகள் அனைத்தும் மும்மொழிகளிலும் கட்டாயம் - அதிரடி அறிவிப்பு
சிறந்த அறிவிப்பு. நடைமுறைப்படுத்துவார்கள் என நம்புவோம். இப்போது அரச அலுவலகங்களில் பதவி உயர்வு கிடைக்க மூன்று மொழிகளிலும் தேர்ச்சி அவசியம் என்ற நடைமுறை இருக்கிறது. தனிச் சிங்கள அறிவிப்புக்களையும் அரசாங்க சுற்று நிரூபங்களையும் பார்க்கும் போது பயங்கரக் கோபம் வருவதுண்டு. சிங்களம் நன்கு தெரிந்திருந்தாலும் வேணுமெண்டு தமிழிலோ ஆங்கிலத்திலோ கதைத்தும் இருக்கிறேன். சிறிலங்கன் விமான சேவையில் தமிழர்கள் அபூர்வம். சில தமிழ் விமானிகள் இருந்தார்கள். குறிப்பாக மட்டக்களப்பிலிருந்து ஒருவர். அழகு தமிழிலே அறிவிப்புக்களை செய்திருக்கிறார். தமிழர்கள் இப்படியான துறைகளை தெரிவு வேண்டும். இல்லாவிட்டால் தமிழை ஆங்கிலத்தில்/சிங்களத்தில் எழுதி வாசிப்பதை நிறுத்த முடியாது.
-
எம் தேசியதலைவர் பிரபாகரன் பிறந்த தினம் இன்று!......அகவை 71
ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும், ஒப்பற்ற ஒரு உதாரண தலைவர். வாழ்த்துக்கள் அண்ணை
-
கழிவிலிருந்து மின்சார உற்பத்தி திட்டத்தை முன்வைத்த வடக்கு ஆளுநர்!
சுயநலம் மிக்க எம்மவர்கள்தான் பிரச்சனை. அதைவிட குப்பை அள்ளுவதற்கு உரிய வாகனங்களோ, குப்பைத் தொட்டிகளோ இல்லை. சுத்திகரிப்பு தொழிலாளர்களுக்கும் உரிய பாதுகாப்பு கையுறைகள், காலணிகள் இல்லை. பருத்தித்துறையில் நகரசபை தற்போது பல நல்ல வேலைத்திட்டங்களை செய்கிறார்கள். ஆனால் மக்களின் ஒத்துழைப்பு கிடைப்பது கடினமாகவே இருக்கிறது.
-
கழிவிலிருந்து மின்சார உற்பத்தி திட்டத்தை முன்வைத்த வடக்கு ஆளுநர்!
இதே முறையில் சிங்கப்பூரில் மின்சாரம் உற்பத்தி செய்கிறார்கள். சிறிய நாடான சிங்கப்பூரில் land fill முறை முடியாதது. பின்னர் வரும் சாம்பலை பாவித்து சிறிய தீவுகளை உருவாக்குகிறார்கள். சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வாயுக்களை வடிகட்டி அகற்ற முடியும் என நினைக்கிறேன். வடமாகாணத்துக்கு ஏற்ற முறை, ஆனால் எரிப்பதற்கு போதுமான அளவு திண்மக் கழிவுகள் இருக்கிறதோ தெரியவில்லை.
-
கழிவிலிருந்து மின்சார உற்பத்தி திட்டத்தை முன்வைத்த வடக்கு ஆளுநர்!
கழிவுகளை எரிப்பதன் மூலம் நீராவி உடற்பத்தியாக்கி அதன் மூலம் செய்வார்கள் என நினைக்கிறேன்.
-
மத்திய கிழக்கில் தலைவறைவாகிய 7 இலங்கைப் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சரணடைய இணக்கம் - ஆனந்த விஜேபால
துபாய், துருக்கி, தாய்லாந்து - இந்த நாடுகள் தங்கள் நாட்டில் குற்றம் நடக்காமல் வேறு நாடுகளில் நடந்தால் கண்டும் காணாமல் விடுவார்கள், அதோட இந்த நாடுகளில் ஆள்மாறாட்டம் செய்து வேற பெயர்களில் கள்ள கடவுசீட்டு முதல் ஆவணங்களை எடுப்பது இலகு. இப்படியான தாதாக்கள் பெரும்தொகை கறுப்பு பணத்தை இந்த நாடுகளில் முதலிடுகிறார்கள், செலவளிக்கிறார்கள். சில நாடுகள் விட்டுப்பிடிப்பார்கள். ஹக்கான் அய்க் என்பவரை தேடிப்பாருங்கள். துருக்கியிலே பல மில்லியன்கள் முதலீட்டு பல சொகுசு கார்களை வாங்குமட்டும் விட்டு வைத்திருந்தார்கள். அவுஸ் ஆளை மடக்கித் தூக்கினவுடன் அனைத்தும் துருக்கி அரசுடைமையாகிவிட்டது. அவுசிலேயே போலீசில் இருந்து நீதிபதிகள் வரை (பலர் கொடுத்த தீர்ப்புகள் அடிப்படையில்) வாங்குபவர்கள் மற்ற நாடுகளில் இதைவிட அதிகமாக செய்வார்கள்.
-
மத்திய கிழக்கில் தலைவறைவாகிய 7 இலங்கைப் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சரணடைய இணக்கம் - ஆனந்த விஜேபால
அவுஸ்திரேலியாவிலும் பல முக்கிய தாதாக்கள் துபாய், துருக்கி, லெபனான், தாய்லாந்து போன்ற நாடுகளிலே ஒளித்திருந்து கொண்டு நடவடிக்கைகளை இயக்குகிறார்கள். இப்படியான ஒரு தாதா தனது இன்ஸ்டாகிராமில் போட்ட தகவலின் அடிப்படையில் அவுஸ் போலீஸ் இங்கிருந்து துருக்கி போய் தூக்கிக்கொண்டு வந்தார்கள்.
-
யூடியூபர் சாலிய டி ரணவக்க தாய்லாந்தில் கைது!
பயங்கர துவேசி , அத்துடன் ராஜபக்ஸ விசுவாசி. இறுதி யுத்தத்தில் வெள்ளைக் கொடியோடு சரணடைந்தவர்கள் காணாமல் ஆக்கப்பட்டதற்கு முக்கிய சூத்திரதாரி/சாட்சி. தட்டுற மாதிரி தட்டினால் வாயை திறப்பார்!
-
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகர உயிரிழப்பு!
இந்த சூட்டு சம்பவங்கள் பாதாள உலக தலைமைகளில் வந்த வெற்றிடத்தால் நடக்கிறது. மகிந்த கோத்தா டீம் பாதாள உலகை கண்டு கொள்ளாமலும், தங்களுடைய தேவைகளுக்கு பயன்படுத்திக் கொண்டும் இருந்தார்கள். ஜெவீபி சில பெரிய பாதாள உலக தலைகளை தூக்கினார்கள். மகிந்த தனது ரகசியங்களை பாதுகாக்க இன்னும் சிலரை போட்டார். பலர் வெளிநாடுகளுக்கு ஓடிவிட்டார்கள். எஞ்சியவர்கள் தங்களுக்குள் அடிபடுகிறார்கள். களையெடுக்கப் பட வேண்டியவர்களே.
-
இஷாரா செவ்வந்தி மற்றும் நால்வர் அதிரடி கைது.
அனுர விரும்பினாலும் ஒன்றுமே முடியாது. ஆனால் மகிந்த குரூப்புக்கு இருக்கு ஆப்பு. ஒருவரின் சொல் பேச்சையும் கேக்காமல் விஜேராமயில இருந்த மகிந்தவை எழுப்பி அனுப்பியதே ஒரு வெற்றி. அதோட மகிந்த அரசில் இருந்த பல ஊழல் அமைச்சர்கள் எம்பி இப்ப சிறையில. பந்து பல கால்களுக்கு மாறித்தான் கோல் அடிக்க முடியும். அண்ணை, வெள்ளவத்தை தானே எங்கட இதய பூமி. சண்முகாசில காலம்பிற மசாலா தோசை, றோயல் பேக்கரில மத்தியானம் சோறு கறி, இரவு ஒமேகால ஒரு பியர், சவொயில படம், தமிழ்ச்சங்க புத்தக வெளியீடு, கடற்கரையில ஒரு நடை. அங்கால தெற்குப்பக்கம் தள்ளிப் போனா உதெல்லாம் கஸ்டமண்ணை. ஒருகாலத்தில விக்கவேணும் எண்டாலும் உடனேயே விக்கலாம், காசையும் வெளிநாட்டிலேயே வாங்கி எடுக்கலாம்.
-
இஷாரா செவ்வந்தி மற்றும் நால்வர் அதிரடி கைது.
எனக்கு ஜெவிபி யை ஆரம்பித்தில் இருந்தே பிடிப்பதில்லை, ஆனால் இப்போது அவர்களின்நடவடிக்கைகளில் வித்தியாசம் தெரிகிறது. எல்லா அரசியல் கடசிகளையும் குற்றம் சொல்லிக் கொண்டிருந்தால் ஒன்றுமே செய்ய முடியாது. இருந்த தேய்வுகளில் அனுர சிறந்த தெரிவு. யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழர்களுக்கு தீர்வு வரப்போவதில்லை. செம்மணிக்கு நீதி கிடைக்கப்போவதில்லை, காணாமல் போனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கப் போவதில்லை. இப்போதைய நிலையில் மக்களின் பொருளாதாரம் மேம்பாட்டு, வேலைவாய்ப்புகள் உருவாக்குவதே தேவையானது. காலா காலமாக புரையோடிப் போயிருந்த ஊழல் கலாச்சாரம் கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. போலீஸ் உட்பட தவறு செய்தாலும் முறையிட முடிகிறது. நீதித்துறை ஓரளவு சுயாதீனமாக இயங்குகிறது. சுற்றுலாத்துறை உட்பட நாட்டின் அந்நிய செலாவணி நன்கு அதிகரித்திருக்கிறது. நாட்டை விட்டுப் போன பலர் திரும்ப வருகிறார்கள். அந்நிய முதலீடுகள் வருகின்றன. நாடு முன்பை விட சுத்தமாக இருக்கிறது. காசிருந்தா வெள்ளவத்தையில் ஒரு பிளட் எடுத்து விடுங்கோ, ஓய்வு காலங்களை ஊரிலயும் கொழும்பிலயும் கழிக்கலாம்
-
சிஸ்ட்டர் அன்ரா
வாசிக்க கடினமான பதிவு. சில தகப்பன்மாரின் கடுமையான போக்குகளால் பிள்ளைகளின், குறிப்பாக மகன் மாரின் வாழ்க்கைகள் அழிந்து போகின்றன. எனது நெருங்கிய நண்பன்/ வகுப்புத் தோழன். அவனது அப்பா நீதிமன்றத்தில் வேலை செய்பவர், கொஞ்சம் கடுமையான போக்குடையவர். அவனது அண்ணா உயர்தரம் படிக்கும் போது ஒரு பிள்ளையை காதலிக்க தொடங்கினார். அந்த அண்ணா படிப்பிலே மிகவும் திறமைசாலி. மருத்துவம் போகக்கூடியளவு கெட்டிக்காரன். ஒருநாள் தந்தை இந்தக் காதல் விவகாரத்தால் அவருக்கு அடித்து விட்டார். அந்த அண்ணாவும் கோவத்தில் இயக்கத்திற்கு போய்விட்டார். இறுதியாக அவர் வீரச்சாவு. எனது நண்பனும் கெட்டிக்காரன், ஆனால் உயர்தரத்தில் பல்கலை போக முடியவில்லை. இறுதியாக வெளிநாடு போய்விட்டான். அந்த தகப்பனின் நடவடிக்கையால் இறுதியில் கிடைத்த பலன் ஒன்றுமில்லை. காதல், குழப்படி, குடி, புகை தாண்டிதான் அனைவரும் வளரவேண்டும். எனக்கு கிடைத்த அப்பா ஒரு வரம். நாங்கள் மூன்று ஆண் பிள்ளைகள். எங்களை அவர் டேய் என்று கூட ஒருநாளும் கூப்பிட்டது கிடையாது. அடித்திருக்கிறார், ஆனால் அது காரணத்தோடான அடி. இண்டைக்கும் எனக்கு ஏதாவது ஆலோசனை தேவை என்றால் முதலில் கேட்பது அப்பாவைத்தான். இன்னும் இருபது வருடங்களின் பின்னர் அவர் போய்விடுவார். அந்த வெற்றிடத்தை நினைக்கக் கூட முடியவில்லை. உங்கள் அன்ராவின் இறுதி நிகழ்வுக்கு நீங்கள் கண்டிப்பாக போயிருக்க வேண்டும். உங்கள் வாழ்விற்கு ஒளியேற்றி வைத்த அந்த தெய்வத்திற்கு நீங்கள் கொடுத்திருக்கக் கூடிய இறுதி மரியாதை அது. அது உங்களுக்கும் ஒரு முடிவினை, ஆத்ம திருப்தியினை கொடுத்திருக்கும்.
-
வடக்கு ரயில் மார்க்கத்தில் ரயில் சேவை நேரங்களில் மாற்றம்
உந்த தனிச் சிங்கள சுற்றறிக்கைகளை பாக்க எனக்கு விசர் தான் வாறது. அரச மொழி மூண்டு, இந்த யாழ்தேவியை அதிகம் பாவிப்பவர்கள் தமிழர்கள். மூன்று மொழியும் நன்கு தெரிந்த ஒருவரையாவது அரச வேலையில் இணைக்க முடியாத நிலையிலா சிறிலங்கா இருக்கிறது?
-
முள்ளியவளை பகுதியில் திடீரென உருவாக்கப்பட்ட பௌத்த விகாரை வடிவிலான உருவம்
சிங்களம் படிப்பிச்சா படிப்பிச்சிட்டு போங்கோ. உந்த புத்த தோரணங்கள் தேவையில்லாத ஆணி. நாளைக்கு அவன் வந்து விகாரை ஒண்டை கட்டுவான், தொல்பொருள் திணைக்களமும் வந்து புத்த சமய எச்சங்களை கண்டுபிடிப்பார்கள்.
-
சங்கு - சைக்கிள் சந்திப்பு!
தமிழ் தமிழ் எண்டு கதை மட்டுமே. அதென்ன, ஏப்ரல், யூன்?
-
வவுனியாவில் விபத்து; கணவன் பலி; மனைவி, மகன், மாமனார் படுகாயம்
அநியாய, தவிர்த்திருக்கப்பட வேண்டிய மரணங்கள். ஆத்துமா சாந்தியடைவதாக.
-
வவுனியாவில் விபத்து; கணவன் பலி; மனைவி, மகன், மாமனார் படுகாயம்
நெல்லியடி IIS இல் O/L எடுத்த பின்னர் இவரிடம் கணனி படித்திருக்கிறேன். அநியாயச் சாவு. ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன். மனைவியினதும் மகனினதும் நிலை மிகவும் கவலைக்கிடம் என கேள்விப்பட்டேன். பூரண சுகமடைய வேண்டுகிறேன். விமானத்தால் இறங்கி காரை எடுத்துக்கொண்டு வெளிக்கிட்டிருக்கிறார்கள். கட்டுநாயக்க பகுதியிலேயே பல அறைகள், சிறிய கொட்டல்கள் மலிவாக எடுக்கலாம். தங்கி வெளிக்கிட்டிருக்கலாம். யாழ் கொழும்பு தனி வாகனப் பயணங்கள் இரவில் கூடவே கூடாது. இங்கிருந்து போகும் எம்மவர்களும் யாழ்ப்பாணத்தில் இருந்து வான் எடுப்பிச்சு உடனேயே கிளம்புவார்கள். வான் சாரதி அப்போது தான் யாழில் இருந்து எட்டு மணித்தியாலம் ஓடி வந்திருப்பார். இன்னொரு எட்டு மணித்தியாலத்துக்கு அவரால் எப்படி ஓட முடியும்?
-
தமிழினப் படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று : முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு ரவிகரன் நந்திக்கடலில் அஞ்சலி
அண்ணைக்கும், போராளிகள், மக்களுக்கும் அஞ்சலிகள்
-
நீலன் திருச்செல்வமும் சந்திரிக்காவும் கொண்டுவந்த "தீர்வுப் பொதி" எப்படிப்பட்டது?
முடிபு 1) நீலன் தயாரித்த தீர்வுத்திட்டம் 1995, நீலனின் கொலை 1999, சமாதானப் பேச்சுவார்த்தை 2001 2) தீர்வுத் திட்டத்தை தயாரித்த காரணத்தால் நீலன் படுகொலை செய்யப்பட்டார் 3) சில வருடங்களில் அதே போன்ற தீர்வுக்கு புலிகளின் பாலசிங்கத்தார் தலைமையிலான குழு இணங்கியது. 4) நீலனை கொலை செய்ததால் தமிழர்களுக்கு நன்மையை விட தீமையே அதிகம்
-
நீலன் திருச்செல்வமும் சந்திரிக்காவும் கொண்டுவந்த "தீர்வுப் பொதி" எப்படிப்பட்டது?
அப்போ இவற்றை எல்லாம் தெரிந்து (சிங்கள அரசு ஒப்பந்தத்தை கிழித்து எறியும், பவுத்த மத பீடங்கள் ஓத்துக்கொள்ளாது) கொண்டு ஏன் தலைவர் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்திட்டார்?
-
நீலன் திருச்செல்வமும் சந்திரிக்காவும் கொண்டுவந்த "தீர்வுப் பொதி" எப்படிப்பட்டது?
2002 இல் சமாதான ஒப்பந்தம் எழுதியிருக்கவிட்டால் புலிகள் தொடர்ந்தும் இருந்திருக்கக் கூடும். ஆனால் அவர்களுக்கு அந்த பிரேக் தேவைப்பட்டது. மக்களுக்கும் தான், தொடர்ந்து கொண்டிருந்த யுத்தமும் இழப்புக்களும் மக்களை சோர்வையடை செய்தது. அப்படி இயக்கம் இருந்திருந்தாலும் யாழ்ப்பாணத்தை கைப்பற்றி தக்கவைப்பதற்கு தேவையான ஆளணி அவர்களிடம் இருக்கவில்லை. கைவசமிருந்த நிலங்களை தக்கவைப்பதே பெரும் சிரமமாக இருந்த காலம். வன்னிப்பரப்பில் இருந்தும் கிழக்கில் இருந்தும் மட்டுமே புதியவர்களை இணைக்க முடிந்தது. 1995 இன் பின்னர் யாழ்குடாவிலிருந்து இணைந்தவர்கள் வெகு சிலரே. புலிகள் பலவீனமாக இருந்தாலும் ரணிலால் நிச்சயமாக வென்றிருக்க முடியாது. கோத்தாபய போல கெலியை எடுத்துக்கொண்டு போய் சண்டைக் களத்தில் இறங்கி இராணுவ தலைவர்களுடன் கலந்தாலோசிக்கும் வல்லமை கொண்ட பாதுகாப்பு அமைச்சர் ரணிலிடம் இருக்கவில்லை. அமுல் செய்ய முடியாத திட்டங்கள் என்று எவ்வாறு கூற முடியும்? இங்கேதான் பிழை விட்டார்கள். கிடைப்பதை வாங்கி அதிலிருந்து மேலும் பேரம் பேசியிருக்க முடியும். அதைவிட சர்வதேச ரீதியாக "இலங்கை அரசாங்கம் இந்த அரசியல் சாசனத்தை அமுல் படுத்த வேண்டும்" என்ற ரீதியில் அழுத்தம் கொடுத்திருக்கலாம். வளர்த்தால் குடும்பி, அடிச்சால் மொட்டை என்ற நிலைப்பாட்டால் யாருக்கு லாபம்? கோசான் சொன்னது போல அவர்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்துப் பார்த்திருக்கலாம். உலக அரசியல், பொருளாதாரம், நாளுக்கு நாள் மாற்றமடைந்து கொண்டே வருகிறது. அதற்கேட்ப போராட்ட வடிவங்களும் மாற்றமடைய வேண்டும். ஏதாவது உலக நாடுகளுடன் ஒரு டீலை பேசுவது போல. இப்போ சேலன்ஸ்கி செய்வதும் இந்த டீல் அரசியல் தான். தலைவர் கொண்ட கொள்கையில் உறுதியானவர், எந்த டீலையுமே பேச விரும்பவில்லை. தமிழீழம், சுயஆட்ச்சி தவிர எதிலுமே அவருக்கு விருப்பம் இருக்கவில்லை. தமிழீழம் சிறந்ததா? - ஆம் தமிழர்களுக்கு என்று ஒரு தேசம் நல்லது. அது உடனடியாக சாத்தியமாகுமா? இல்லை. இந்த இலக்கை அடைய சில நெளிவு சுளிவுகளை சந்திக்கத்தான் வேண்டும். அரசியல் ரீதியாக இலங்கையிலும் வெளிநாடுகளிலும் உறவுகளை வளர்த்திருக்க வேண்டும். உள்நாட்டில் இதற்காத்தான் தமிழரசுக் கட்சியை உருவாக்கினார்கள். ஆனால் அவர்களால் ஒரு சததுக்கும் பிரயோசனம் இருக்கவில்லை. அவர்களில் பலருக்கு சட்டப்புலமையோ அரசியல் அனுபவமோ இருக்கவில்லை. உதாரணத்துக்கு குதிரை கஜன். வெளிநாடுகளில் அரசியல் உறவுகளை எப்படி வளர்த்தார்கள் என்பது பற்றி எனக்கு தெரியாது ஆனால் பாலசிங்கத்தார் மட்டுமே ஓரளவுக்கு வெளிநாட்டு அரசாங்கங்களுடன் தொடர்பில் இருந்தார், அதைவிட இந்தியாவை பகைத்துக்கொண்டு எந்த அரசாங்கமும் இலங்கையில் எதுவுமே செய்யாது. ராஜீவ் காந்தியை, அதுவும் தமிழ் நாட்டில் வைத்து கொலை செய்திருக்காவிட்டால் ஒருவேளை இந்தியா உதவியிருக்கக் கூடும். சிங்களவர்களுக்கு இந்தியாவை பிடிப்பதில்லை. ஆனால் தங்கள் தேவைகளுக்கு வளைத்துப் போடுவார்கள். நாங்கள் அப்படி செய்திருக்க முடியாதா?
-
நீலன் திருச்செல்வமும் சந்திரிக்காவும் கொண்டுவந்த "தீர்வுப் பொதி" எப்படிப்பட்டது?
மூளையற்ற செயல். யூகோஸ்லாவியா, செக், ஆபிரிக்க நாடுகள் போன்ற சட்ட ஓட்டைகள் உள்ள, அரச அதிகாரிகளை “வாங்கக் கூடிய” நாடுகளில் தான் ஆயுத வியாபாரம் செய்தார்கள். புதியவர்கள், “பழசுகளுக்கு ஒண்டும் தெரியாது” எண்டு எல்லாவற்றையும் கவிழ்ததுக் கொட்டினார்கள்.
-
நீலன் திருச்செல்வமும் சந்திரிக்காவும் கொண்டுவந்த "தீர்வுப் பொதி" எப்படிப்பட்டது?
ஓ இப்ப ஞாபகம் வருகுது (வயசும் வட்டுக்க போகுதெல்லே - இப்ப 39). சமாதான காலத்தில் இயக்கம் வழங்கிய சொப்பிங் லிஸ்டில் இரண்டு பிரதானமான ஐட்டங்கள் இருந்தது. 1) மல்ரி பரல் - பிற்காலத்தில் சிறியது ஒன்று வைத்திருந்தார்கள் 2) கிபிர் அடிக்கிற மிசைல்
-
நீலன் திருச்செல்வமும் சந்திரிக்காவும் கொண்டுவந்த "தீர்வுப் பொதி" எப்படிப்பட்டது?
எனது ஞாபகப்படி இயக்கம் யாழ்பாணத்தை இந்தா பிடிக்கிறம் எண்டு முற்றுகைக்குள் கொண்டு வந்த பின்னரே வெளிநாட்டுத் தலையீட்டால் பின்வாங்கினார்கள். இதற்கும் சமாதான ஒப்பந்த காலத்திற்கும் இடையிலா அக்கினி கீல சண்டை நடந்தது?
-
நீலன் திருச்செல்வமும் சந்திரிக்காவும் கொண்டுவந்த "தீர்வுப் பொதி" எப்படிப்பட்டது?
இயக்கத்திற்கு சந்திரிகாவுடன் ஒத்துவரவில்லை. சந்திரிக்காவை கேலி செய்து சில இயக்கப்பாட்டுகளும் வந்தன. ஆனால் இதுவரை கிடைத்த தீர்வுத் திட்டங்களில் சந்திரிக்கா முன் மொழிந்த திட்டமே சிறந்தது.