Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

vanangaamudi

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

  1. DNA மூலம் ஒருவருக்கு யூத பின்னணி இருக்கிறதா என்பதை உறுதியாக அடையாளம் காண முடியாது. ஏனெனில் யூத மதம் என்பது ஒரு மதம் மற்றும் கலாச்சார அடையாளம் ஒரு மரபணு பண்பு அல்ல.
  2. யாழ் மா நகரசபைக்குள் ஒரு கறுப்பாடு இல்லாமல் சபையின் பதிவேடுகளில் மாற்றம் செய்யப்பட்டிருக்க முடியாது. அது போக சிவஞானம் அவர்கள் உண்மையில் நடந்தது என்ன என்பதை விளக்கி இந்த விடயத்தில் தான் அறிந்தவற்றை தெட்ட தெளிவாக பொதுவெளியில் சொல்லவேண்டும். ஆதனத்தின் விலாசம், அந்த இடத்தில் இப்போது இருக்கும் வியாபார இஸ்தாபனத்தின் பெயர், கட்டிடத்தை கொள்வனவுசெய்த காலத்தில் நகரசபையில் யார் யார் பொறுப்பில் இருந்தார்கள் என்ற விபரம் துல்லியமாக குறிப்பிட வேண்டும். அதை விடுத்து கிழக்கு மேற்கு என்று குறிப்பிடுவது வேலைக்கு ஆகாது.
  3. எதிரி நாட்டின் எல்லையில் ஒன்று அல்லது பல நட்பு நாடுகள் இருந்தால் எதிரியை அணு ஆயுதம் கொண்டு தாக்குவது சாத்தியமா என்பதும் சிந்திக்கவேண்டிய ஒரு விடயம். முந்திகொண்டால் ஓரளவுக்கு எதிரியை வெல்லலாம் ஆனாலும் மொத்தத்தில் சிக்கல்தான். எதிர்காலத்தில் அணு ஆயுத போர் வந்தால் அதில் பாதிக்கப்படுவோர் பலர் அந்த போரில் சம்பந்தப்படாத நாடுகளை சேர்ந்தவர்களாகவும் இருப்பார்கள். உலகின் மொத்த அணு ஆயுத கையிருப்பு அனைத்தும் பயன்படுத்தப்பட்டால் நாடுகளை மட்டுமல்ல இந்த உலகத்தையும் சூரிய குடும்பத்தின் அனைத்து கிரகங்களையும் கூட அழிக்கலாம்.
  4. திரும்பவும் கற்காலத்துக்கே போறமா? கடைகாரர்களுக்கு சாப்பாட்டுக் கோப்பையை ஒழுங்கா சுத்தமா கழுவி பயன்படுத்தணும் என்று அறிவுறுத்தலுடன் அதை செய்ய கற்றுகுடுங்கப்பா. வாழை இலையை அறுத்து எடுத்துவந்து சுத்தம் பண்ணும் செலவுக்கு ஒரு சாப்பாட்டுக் கோப்பையை சுகாதராமான முறையில் இலகுவாக சுத்தம்பண்ணி மீண்டும் பயன்படுத்தலாம். இந்த லஞ்ச் சீற் ஒரே கோப்பையை திரும்ப திரும்ப பலர் பாவிக்கும் போது சுகாதார பாதுகாப்புக்காகப் பயன்படுத்துவதாக எண்ணுகிறேன். நான் படித்த காலத்தில் வாழை இலையைப் பயன்படுத்தி சாப்பிட்டதாக ஞாபகம்.
  5. அண்ணே நல்லா தேடி பாருங்க. ஏதாவது கோப்பு புத்தகங்கள், அத்தாட்சி கடிதங்கள், புலனாய்வு குறிப்புகள் மற்றும் குற்றவியல் தடையங்களைத்தான் இந்த கள்வர்கள் எடுத்து சென்றிருப்பார்கள். ராசபக்சாக்கள், பாதல் உலக கோஸ்டிகள் இப்படி செய்திகளில் போய்க்கிட்டு இருக்கிற இந்த நேரத்தில மின்சார கம்பியை திருட என்று திருடன் போலிஸ் நிலையத்தில், அதுவும் போலிஸ் மா அதிபரின் காரியாலத்தில் கதைவை உடைத்து ஒருபோதும் நுழைய மாட்டான்.
  6. இலங்கையில் உள்ள முஸ்லிம்கள் இஸ்லாமியர்களா, மூர்களா, சுன்னியா அல்லது சியா இனத்தவர்களா. அரேபிய குடியேறிகளின் வழித்தோன்றலா, தமிழரா அல்லது சிங்களவர்களா? இல்லை இந்திய கண்டத்திலிருந்து வந்த குடியேறிகளா? இவர்கள் தனி தனியான தமக்குள் ஒன்றுசேரமுடியாத குழுக்கள் என்றால் எப்படி ஒரு தேசிய இனமாக ஏற்றுக்கொள்வது? எப்படி இவர்களை அடையாளப்படுத்துவது?
  7. பல நாடுகள் தமது கொடிகளில் வாள், ஈட்டி, கோடரி, கேடயம் மற்றும் சூலம் போன்ற பழங்காலத்து ஆயுதங்களை கொண்டிருந்தாலும் ஆபிரிக்கா கண்டத்தில் உள்ள மொசாம்பிக் நாடு மட்டுமே உலகத்திலேயே தனது தேசியக்கொடியில் துப்பாக்கியின் படத்தை பயன்படுத்தி அமைத்துள்ளது. தமிழ் ஈழத்தின் புலிகொடி ஒரு விடுதலை இயக்கத்தின் அடையாளக்கொடி. காலப்போக்கில் அதுவே தேசியக்கொடியாக மாற்றப்பட்டது குறித்தும் அக்கொடி எதிர்கால நடைமுறைகளுக்கு சாத்தியப்படுமா என்பதிலும் பல சாராரால் சர்ச்சைக்குரிய விடயமாக பார்க்கப்பட்டது. தமிழீழக் கொடி ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் கொடியாக சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இந்தக் கொடி முன்மொழியப்பட்ட தமிழீழ அரசின் விருப்பத்தின் அடையாளமாகவும், பிற நாடுகளில் உள்ள தமிழ் புலம்பெயர்ந்தோரால் பரவலாகப் பயன்படுத்தப்படும் அதே வேளையில், அது ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசைஅன்றி, அரசியல் இலக்கைக்கை மட்டுமே குறிக்கிறது. இது சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்படாததற்கான காரணம்: தமிழ் ஈழம் ஒரு இறையாண்மை கொண்ட அரசு இல்லை தமிழ் ஈழம் ஒரு இயற்பியல் அரசாக இல்லை, மேலும் அந்தக் கொடி அதற்கான அரசியல் விருப்பத்தை மட்டுமே குறிக்கிறது. அது ஒரு அரசியல் இயக்கத்தின் சின்னம். கொடி என்பது உலகளவில் தமிழர்களுக்கான கலாச்சார மற்றும் அடையாள சின்னமாகும், இது பெரும்பாலும் கலாச்சார நிகழ்வுகள் மற்றும் அரசியல் பேரணிகளில் காட்டப்படும், ஆனால் அது சர்வதேச சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேசியக் கொடியின் அந்தஸ்தைப் பெறவில்லை. கொடி 1990 இல் தமிழீழ விடுதலைப் புலிகளால் முன்மொழியப்பட்ட அரசின் தேசியக் கொடியாக நியமிக்கப்பட்டது. இருப்பினும், அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உட்பட பல நாடுகளால் புலிகள் ஒரு பயங்கரவாத அமைப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது, இது அதன் பரந்த சர்வதேச ஏற்றுக்கொள்ளலை சிக்கலாக்குகிறது. சுருக்கமாக, தமிழீழக் கொடி புலம்பெயர்ந்தோருக்கு ஒரு குறிப்பிடத்தக்க சின்னமாகவும் அவர்களின் அரசியல் அபிலாஷைகளின் காட்சி பிரதிநிதித்துவமாகவும் உள்ளது, ஆனால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய அரசின் கொடியாக அதற்கு சர்வதேச அங்கீகாரம் இல்லை.
  8. நாட்டின் புராதன சைவ சமய சின்னங்களை பராமரிக்கவும் அதில் புனரமைப்பு கட்டுமானம் என்பவற்றை மேற்கொள்ளவும் உரிய முறையில் அரச மற்றும் தொல்லியல் திணைக்களத்தின் அனுமதிகளை முன்கூட்டியே பெற்றுக்கொண்டு முன்னெச்சரிக்கையுடன் பணிகள் நடைபெற என் வாழ்த்துக்கள்.
  9. அனைவருக்கும் புரியும்படியாக இதைவிட சிறப்பாக யாரும் சொல்ல முடியாது. இந்திய கார்களுக்கு மட்டுமல்ல அனைத்து சிறிய மலிவான வாகனங்களுக்கும் இது பொருந்தும். ஜப்பான் போன்ற முன்னேறிய நாடுகளில் வாகன உற்பத்தியாளர்கள் புதிய கார்களை உருவாக்கும்போது அவற்றின் வடிவமைப்பில் aerodynamics (காற்றியக்கவியல்) என்னென்ன தாக்கங்களை உருவாக்கும் என்பதை பல்வேறு கட்டங்களாக ஆய்வுகூடங்களில் வைத்து பரிசோதித்து பார்த்தபின் உரிய மாற்றங்களை செய்வார்கள். இந்திய தயாரிப்புகளில் இந்த பரிசோதனைகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பதற்கு நம்பிக்கையான சான்றுகள் உண்டா என்பது தெரியவில்லை. காற்றியக்கவியலுக்கு இசைவாக வடிவமைக்காப்படாத வாகனங்கள்வேகமாக செலுத்தப்படும்போது அதை ஒரு விமானம் ஓடுபாதையில் ஓடி வேகமெடுத்து தரையைவிட்டு உயர்ந்து கிளம்ப தயாராவதை ஒப்பிடலாம். வேகமாக செலுத்தப்படும் மேற்சொன்ன வாகனங்களின் சக்கரங்கள் காற்றியக்கவியல் காரணமாக படிப்படியாக உயர்த்தப்பட்டு தரையில் முட்டாமல் அந்தரத்தில் செல்லவேண்டி ஏற்படலாம். இதனால் வேகமாக செல்லும் இந்த வாகனங்களில் உள்ள பிரேக் இயங்காமல்போக வாகனம் விபத்துக்குள்ளாவதையும் சாரதியால் தவிர்க்கமுடியாமல் போகலாம். வாகனங்களில் உள்ள பிரேக் சிறப்பாக இயங்குவதற்கு சில்லுகள் எப்போதும் தரையை இறுக்கமாக தொட்டு நிற்கவேண்டியது அவசியம்.
  10. செய்தியில் தெளிவில்லை, இங்கு சொல்ல வந்தது இலண்டன் அருங்காட்சியகமா (London museum) அல்லது இலண்டனில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகமா(British museum)
  11. வைத்தியர் சுதர்சன் அவர்களை இழந்து தவிக்கும் அவரது உறவினர் நண்பர்கள் பயனாளிகள் அனவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். வைத்தியர் சுதர்சன் பல காலம் இலைமறை காயாய் இருந்து சேவை செய்துள்ளார் போல் தெரிகிறது. எமது கலச்சாரத்தில் மனிதர்களை வாழும்போதே போற்றுவதற்கு பழக்கப்பட்டவர்களுமில்லை. இப்படி எத்தனை நல்ல மனிதர்கள் எங்கள் சமூகத்தில் இன்னும் எமது இனத்துக்காக சேவைசெய்கிறார்களோ தெரியவில்லை.
  12. ஶ்ரீதரன் தனதும் தனது மனைவியினதும் சொத்து/வருமான விபரத்தை 3 ஆண்டுகள் மட்டும் சமர்ப்பித்துள்ளார். அதில் கடைசியாக வழங்கப்பட்ட அறிக்கையில் 31 மார்ச் 2024 திகதி வரைக்கும் உள்ள விபரங்கள் அரைகுறையாகவே கொடுக்கப்பட்டுள்ளது. அறிக்கையின் இரண்டாம் பகுதி (Part B) யில் எந்த ஒரு கேள்விக்கும் பதில் வழங்கப்படவில்லை. பினாமிகள் பெயரில் வாங்கப்பட்ட சொத்துக்கள் முதலீடுகள் பற்றிய கேள்விகளுக்கு பதிலாக "None" என்று பதிலளித்துவிட்டு அல்லது வெறும் கோடுகளை மட்டும் போட்டுவிட்டு கடந்து சென்றுள்ளார். இங்கே கதைகள் அடிபடுவது போல வைன்ஷொப் அல்லது சுப்பர் மார்க்கெட் பற்றிய விபரம் எதுவும் அங்கு கொடுக்கப்படவில்லை. இலங்கையில் 4 இடங்களில் காணி/வீடு மற்றும் ஒரு விவசாய நிலம் என்பவற்றுடன் வங்கிகளிலும் தனியாரிடமும் பெற்று நிலுவையில் உள்ள கடன் தொகை மட்டும் ஏறக்குறைய 45 மில்லியன் ரூபாய்கள். கணவன் மனைவி இருவரினதும் மொத்த மாதவருமானம் சுமார் 5 இலட்சம் ரூபாய்கள்.
  13. மே 25 ஆம் தேதி இந்தியாவின் கேரள கடற்கரையிலிருந்து சுமார் 38 கடல் மைல் தொலைவில் MSC ELSA 3 என்ற கொள்கலன் கப்பல் மூழ்கியது. அந்தக் கப்பல் அபாயகரமான பொருட்கள் மற்றும் கப்பல் எந்திர டீசல் எரிபொருள் உட்பட 640 கொள்கலன்களை ஏற்றிச் சென்றது, மேலும் அதன் பாலாஸ்ட் அமைப்பின் செயலிழப்பே இதற்குக் காரணம் என்று சந்தேகிக்கப்படுகிறது. கடல் நீரில் கசிந்த எரிபொருள் மற்றும் ஆபத்தான சரக்குகளால் ஏற்படும் மாசுபாடு காரணமாக இந்த மூழ்குதல் பெரும் சுற்றுச்சூழல் மற்றும் பொது சுகாதாரக் கவலையை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தின் விவரங்கள்: கப்பல்: MSC ELSA 3, 28 ஆண்டுகள் பழமையான கொள்கலன் கப்பல். இடம்: கேரள கடற்கரையிலிருந்து சுமார் 38 கடல் மைல் தொலைவில் மூழ்கியது. சரக்கு: அபாயகரமான பொருட்களுடன் கூடிய 13 கொள்கலன்கள் மற்றும் கால்சியம் கார்பைடு கொண்ட 12 கொள்கலன்கள் உட்பட 640 கொள்கலன்கள். காரணம்: பாலாஸ்ட் அமைப்பின் செயலிழப்பு சந்தேகிக்கப்படுகிறது. விளைவுகள்: பிளாஸ்டிக் துகள்கள் (நுர்டில்ஸ்) உள்ளிட்ட கொள்கலன்கள் மற்றும் குப்பைகள் கேரள கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளன. கப்பல் முழ்கிய கடற்பிரதேசத்தில் எண்ணெய் படலங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் மனித ஆரோக்கியத்திற்கு ஆபத்தான பொருட்களின் தாக்கத்திலிருந்து பாதுகாப்பதற்காக கேரள அரசு அவசரகால நிலையை அறிவித்து, கரையில் கரையொதுங்கும் கொள்கலன்களைத் தவிர்க்குமாறு மக்களை வலியுறுத்தியுள்ளது. இந்திய கடலோர காவல்படை மற்றும் கடற்படை மீட்பு மற்றும் கட்டுப்பாட்டு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. சுற்றுச்சூழல் ஆய்வுகள் மற்றும் சுத்தம் செய்யும் நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. MSC மற்றும் கப்பல் பணியாளர்கள் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்பு: சிந்தப்பட்ட எரிபொருள், பிளாஸ்டிக் மற்றும் அபாயகரமான பொருட்களால் நீண்டகால சுற்றுச்சூழல் சேதம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் கவலைக்குரிய விடயம். பொது சுகாதாரம்: கால்சியம் கார்பைடு போன்ற அபாயகரமான பொருட்களின் இருப்பு, அவற்றுடன் தொடர்பு கொள்ளக்கூடிய மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது. சுத்தம் செய்தல்: குப்பைகள் மற்றும் மாசுபடுத்திகளை சுத்தம் செய்வது ஒரு சவாலான பணியாகும், குறிப்பாக நீரோட்டங்களால் மேலும் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. மேலும் தகவல்: இந்த சம்பவம் இந்தியாவில் குறிப்பிடத்தக்க ஊடக கவனத்தையும் பொதுமக்களின் கவலையையும் உருவாக்கியுள்ளது. இலங்கை கடற்கரைகளிலும் பரவலான மாசுபாட்டிற்கான சாத்தியக்கூறுகள் குறித்து Mongabay தெரிவித்துள்ளது. இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல்படை பதிலடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. https://news.mongabay.com/2025/06/twin-ship-disasters-in-india-threaten-widespread-pollution-on-sri-lankan-coasts/
  14. காசாவில் இஸ்ரேலின் தொடர் குண்டுதாக்குதலால் முற்றிலும் அழிக்கப்பட்ட அல்லது தற்காலிகமாக செயலிழந்திருக்கும் வைத்தியசாலைகளை மீண்டும் புனரமைத்து அல்லது அதற்குப்பதிலாக தற்காலிக வைத்திய முகாம்களை நிறுவி அதன் மூலம் காசாவில் உள்ள சிறுவர்களுக்கு வேண்டிய உடனடி வைத்திய சேவைகளை மேலை நாடுகள் வழங்க வேண்டும். அதை விடுத்து அங்குள்ள குழந்தைகளையும் சிறுவர்களையும் தங்கள் தங்கள் நாடுகளுக்கு அழைத்து சென்று மருத்துவ உதவி வழங்க முன்வருவது காசாவில் இருந்து பலஸ்தீனியர்களை முற்றாக வெளியேற்றவேண்டும் என்ற இஸ்ரேலினதும் அமெரிக்காவினதும் நோக்கத்தை விரைந்து செயல்படுத்தும் திட்டத்துக்கு மறைமுகமாக முண்டு கொடுப்பதாகும். இப்படி பார்த்தால் காசாவில் உள்ள அனைத்து குழந்தைகளையும் தான் பிரிட்டனுக்கு கொண்டுசெல்லவேண்டிவரும். சிகிச்சை முடிந்தவுடன் அந்த குழந்தைகளை எங்கே கொண்டு சென்று விடுவார்கள். பிரிட்டனின் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் இன்னும் சில மாதங்களில் காசா பிரதேசம் சன நடமாட்டம் அற்ற ஒரு நிலமாக மாறப்போவது உறுதி. குழந்தைகளை வெளியேற்றும்போது அவர்களுடன் அவர்களது தாய்மார்கள் அல்லது முழு குடும்பமோ கூட வெழியேறுவது தடுக்கமுடியாது. பாலஸ்தீன மக்களை கொன்றுகுவித்து அவர்களுக்கு அன்றாட வாழ்க்கையை சீரழிக்கும் போர் நடவடிக்கைகளை இருதரப்பும் முதலில் கைவிட வேண்டும். அதற்கு சர்வதேச நாடுகள் ஒற்றுமையுடன் முன்வந்து ஒரு தீர்வினை முன்வைத்து செயலாற்றவேண்டும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.