Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெருமாள்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

  1. அரசியலமைப்பு பேரவையில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் பதவிவிலக வேண்டும் என்று பணிப்புரை வழங்குவதென இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் அரசியல் குழு தீர்மானித்துள்ளதாக கட்சியின் பதில் செயலாளர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசுக்கட்சியின் அரசியல் குழுக்கூட்டம் வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள தாயகம் அலுவலகத்தில் இன்று(03) இடம்பெற்றது. இதன்பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்… பகிரங்கமாக சவால் அரசாங்கம் எல்லைமீள் நிர்ணயம் செய்தபின்னர் தான் மாகாணசபை தேர்தல் என்று கூறுவதை நாம் ஏற்கமுடியாது. தேர்தல் முறை மறுசீரமைப்பு என்பது ஒரு விடயம். ஆனால் மறுசீரமைப்பு செய்யப்படவில்லை என்பதற்காக தேர்தலே நடத்தாமல் இருப்பது ஏற்க முடியாத ஒரு விடயம். அதனை அரசுக்கு சொல்லியிருக்கிறோம். அப்படி பார்த்தால் கடந்த இரு நாடாளுமன்ற தேர்தல்கள் நடாத்தியிருக்க முடியாது. எனவே தேர்தலை உரிய காலத்தில் நடாத்துவது அடிப்படையான விடயம். அரசானது தேர்தலுக்கு முகம் கொடுக்க பயந்துகொண்டு மாகாணசபை தேர்தலை காலவரையின்றி பிற்போட்டுக்கொண்டிருப்பதாக தெரிகின்றது. முடிந்தால் மாகாணசபை தேர்தலை உடனடியாக நடாத்துங்கள் என்று பகிரங்கமாக சவால் விடுக்கின்றோம். வடகிழக்கில் அரசின் செல்வாக்கு பாரிய அளவு சரிவடைந்துள்ளது. மக்கள் தெளிவடைந்துள்ளனர். அதனை நடத்தினால் மண் கௌவ்வுவீர்கள் என சவாலாக கூறுகின்றோம். நல்லூர் பிரதேசசபை உறுப்பினர் அத்துடன் பயங்கரவாத தடுப்புச்சட்டம் முற்றுமுழுதாக நீக்கப்படவேண்டும். மாற்றீடாக எந்த சட்டமும் தேவையில்லை என்று எங்களை விட தீவிரமாக இருந்தவர்கள் இந்த ஜேவிபியினர். கடந்தகாலங்களில் மாற்று வரைபுகள் வந்தபோது இவர்கள் அந்த கூட்டங்களுக்கே வரமாட்டார்கள். அதனை நீக்குமாறு நாங்கள் நடாத்திய போராட்டங்களில் ஒவ்வொரு மாவட்டங்களில் இருந்தும் அவர்கள் சார்ந்த முக்கியமான ஒருவர் பங்கு கொண்டிருந்தார். எனவே ஆட்சிக்கு வந்தவுடன் இருப்பதை விட மோசமான ஒரு வரைபு தற்போது வெளிவந்துள்ளது. பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாப்பதற்காகவாம் என்று கூறப்படுகின்றது. இது ஒரு நகைப்பிற்குரிய விடயம். அவ்வாறு எனில் மக்களை பாதுகாப்பதற்காக இல்லை. இதனை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. அதில் உள்ள விடயங்கள் தொடர்பாக கட்சி சில கலந்துரையாடல்களை நடாத்தும்.அந்த வரைபை முற்றாக எதிர்க்கிறோம். கட்சியில் இருந்து நீக்கம் நல்லூர் பிரதேசசபை உறுப்பினர் ஒருவர் கஞ்சா கடத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளார். இது ஒரு மோசமான குற்றச்சாட்டு. சட்டத்தின் முன் குற்றம் நிரூபிக்கப்படும் வரைக்கும் அவர் நிரபராதியாக இருந்தாலும் கூட ஒரு பொறுப்பான அரசியல் கட்சி என்ற ரீதியிலே இந்த செயற்பாட்டிற்கு இடம்கொடுக்க கூடாது. எனவே உடனடியாக அவரை கட்சியில் இருந்து நீக்குவது என்ற தீர்மானம் எடுத்திருக்கிறோம். அரியநேந்திரன் அத்துடன் எங்களுடைய இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் நடத்தை தொடர்பாக பேசியிருக்கிறோம். குறிப்பாக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அரியநேந்திரனை கட்சியின் நிகழ்வு ஒன்றில் முக்கியத்துவம் வழங்கியதான குற்றச்சாட்டு ஒன்று மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீநேசன் மீது இருந்தது. கட்சி தீர்மானத்திற்கு மாறாக செயற்ப்பட்டமையால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஒருவரே அரியநேந்திரன். அந்த தீர்மானத்துடன் இணைந்து செயற்ப்படவேண்டியது கட்சியில் இருக்கும் ஒவ்வொருவரின் கடமை.எனவே அவ்வாறு செயற்ப்பட இடமளிக்க முடியாது என்ற விடயத்தையும் வலியுறுத்தியுள்ளோம். சிறீதரன் மீது குற்றச்சாட்டு அத்துடன் தேசிய ரீதியில் ஒரு குற்றச்சாட்டு ஒன்று எமது நாடாளுமன்றக்குழுத்தலைவர் சிவஞானம் சிறீதரன் மீது முன்வைக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பு பேரவையில் அரசுடன் இணைந்து அனைத்திற்கும் வாக்களித்ததாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. விசேடமாக கணக்காளர் நாயகம் நியமனத்தில் ஒரு இராணுவ அதிகாரிக்கு சார்பாக வாக்களித்தார் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இழப்பீட்டிற்கான அலுவலகத்திற்கும் இராணுவ அல்லது பாதுகாப்புத்தரப்பின் பின்புலத்தை சேர்ந்த இரண்டு பேருக்கு சிறீதரன் சார்பாக வாக்களித்தமை மட்டுமல்லாமல் அவர்களை தெரிவுசெய்கின்ற நேர்முக பரீட்சையிலும் தேர்வுசெய்துள்ளார். என்ற குற்றச்சாட்டுக்கள் இருந்தது.அதனை அவர் மறுத்திருந்தார். ஆனால் அது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அந்த இருவரையும் நியமிக்கக்கூடாது என்று கட்சி ஜனாதிபதிக்கு கடிதம் எழுத வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டு எழுதிவைத்திருந்தோம். எனவே அது ஒரு தர்மசங்கடமான நிலைமையை கட்சிக்கு ஏற்ப்படுத்தியுள்ளது. இவர்களை நியமிக்க கூடாது என்று கட்சி கடிதம் எழுதியுள்ளது. ஆனால் கட்சியை சேர்ந்தவர் அவர்களை தெரிவுசெய்துள்ளார். அத்துடன் அதற்கு முன்னரும் கூட இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நியமனம் தொடர்பாக மத்தியகுழு கூட்டத்தில் அவரிடம் விளக்கம் கேட்டிருந்தோம். கூடிய புள்ளி எண்ணிக்கையை பெற்றவருக்கு அந்த பதவியை வழங்காமல் இரண்டாவதாக வந்தவருக்கு அரசாங்கம் கொடுத்தபோது அரசுடன் இணைந்து அவர் வாக்களித்ததாக சொல்லப்பட்டது. ஒழுக்காற்று விடயங்கள் அதற்கான நியாயப்பாடுகளை கட்சிக்கூட்டத்தில் அவர் சொல்லியிருந்தார். மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் பதவி தொடர்பான வாக்கெடுப்பிலும் அப்படி செயற்ப்பட்டதாக சொல்லப்பட்டிருந்தது. கணக்காளர் நாயகம் விடயத்தில் மூன்று தடவைகள் அவ்வாறு நடந்துள்ளது. இறுதியாகவே அந்த இராணுவ அதிகாரியும், அதற்கு முன்பு ஜனாதிபதி தனது நெருங்கிய நண்பரையும் பின்னர் இரண்டாம் நிலையில் இருக்கும் ஒருவரையும் பரிந்துரை செய்திருந்தார். இருப்பினும் அந்த மூன்றும் நிறைவேறவில்லை. ஏனெனில் எதிர்கட்சி உறுப்பினர்கள் இருவரும் சிவில் சமூகத்தை சேர்ந்த மூவரும் சேர்ந்து அந்த பிரேரணைகளிற்கு எதிராக வாக்களித்திருந்தனர். அவர்களுக்கு சார்பாக சிறீதரனின் வாக்கு உட்பட நான்கு வாக்குகள் கிடைத்தது. எனவே அரசுடன் இணைந்து இந்த வாக்கெடுப்பில் கலந்துகொண்டது தொடர்பான குற்றச்சாட்டு அவருக்கு இருந்தது. ஏற்கனவே இது தொடர்பாக நாடாளுமன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பிரச்சனையை எழுப்பியிருந்தார். சிறீதரன் பிரதிநிதித்துவப்படுத்துவது பிரதான எதிர்க்கட்சி தவிர்ந்த மற்றய எதிர்க்கட்சிகளின் பிரதிநிதி. எனவே அப்படியாக இருப்பவர் எல்லா விடயங்களிலும் கண்ணை மூடிக்கொண்டு அரசுக்கு சார்பாக வாக்களிப்பது தொடர்பான குற்றச்சாட்டு எட்டாவது தடவையாக நடந்துள்ளது. எனவே கட்சியையும் சங்கடப்படுத்தாமல் அவரையும் சங்கடத்திற்கு உட்படுத்தாமல் இருப்பதற்காக அரசியலமைப்பு பேரவையில் இருந்து அவர் பதவிவிலக வேண்டும் என்று பணிப்புரை வழங்குவதாக தீர்மானம் எடுத்துள்ளோம் என்றார். அத்துடன் கட்சியின் ஒழுக்காற்று விடயங்கள் தொடர்பாக பிரதேச சபை உறுப்பினர்களுக்கு சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. கட்சியின் உத்தரவு மீறப்படும் சந்தர்ப்பத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது அவர்களுக்கு ஞாபகமூட்டப்பட்டிருக்கின்றது. https://tamilwin.com/
  2. பேர்மிங்கம் ,லேச்ட்டேர், ஈஸ்ட்காம் இந்த இடங்களில் நடக்கும் கூத்துக்களை வீடியோ எடுத்து சமூக வலைதளம்களில் பகிர்ந்து அதை பற்றிய விவாதங்கள் பெரிதாக பரவியதன் பின்பே உண்மையான புலம்பெயருக்கு ஆப்பு விழுந்தது . அத்துடன் ஐரோப்பாவில் அங்கும் இங்கும் தொங்கிகொண்டு இருந்த கள்ளர் காடையர் கூட்டமும் இவ்வளவு சுதந்திரம் இருக்குதா என எண்ணுமளவுக்கு வெறி பிடித்து பிரான்ஸ் கடற்கரையில் இங்கிலாந்துக்குள் அகதிகள் எனும் போர்வையில் ஊடுருவ தவமாய் தவம் இருக்க தொடங்கினார்கள் . இவற்றுக்கு எல்லாம் காரணம் தேடினால் விடை இலகுவானது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று .
  3. இங்கு இங்கிலாந்தில் முஸ்லிம்கள் அதிகார பதவிகளுக்கு வந்தார்கள் அவ்வளவுதான் கதை பேர்மிங்கம் லேச்ட்டேர் ஈஸ்ட்காம் போன்ற இடம்கள் தற்போதைய நிலை சொல்லும் கதை .
  4. காலை உணவு காறாத்தல் பான் கூட தேவையில்லை தமிழன் நிம்மதியாய் இருக்க கூடாது என்ற அடிப்படை சிங்கள இனவாதமே காலை உணவு . கிடைக்கிற வருட வருமானத்தில் 4௦ வீதத்துக்கு மேல் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டவே போகுது என்ற விடயமும் வரும் புதிய அரச சிங்கள தலைவர்கள் நாடு நாடாய் பறந்து இலங்கை இறையாண்மையை அடகு வைத்தே பிச்சை எடுத்துத்தான் இலங்கை அரசு இயங்குது என்ற உன்மை சாதாரண இனவாத சிங்களவனுக்கு தேவையில்லை அவர்களை பொறுத்தவரை 1௦௦௦ வருடங்களுக்கு மேல் புரையோடி வளர்ந்து போன தமிழர் எதிர்ப்பு இனவாத மிருகத்துக்கு தீனி போட்டால் சரி .
  5. அப்படியே அரச உதவிகளில் தங்கி இருந்து ஒழுங்கா வேலை வெட்டிக்கு போகாமல் கைகாசுக்கு வேலைக்கு சென்று விட்டு இரவுகளில் மப்பும் மந்தாரமாய் சமூக ஊடகங்களை பாவிப்பவர்களுக்கும் தடை கொண்டு வந்தால் உலகில் பாதி பிரச்சனை முடிவுக்கு வந்து விடும் .
  6. அனுரா சும்மா சொல்லகூடாது நல்லாத்தான் அரசியல் செய்கிறார் . விட்டால் வத்திகானில் கூட சிங்கள புத்தரை பிரதிச்ட்டை பண்ணுவினம் .
  7. தையிட்டியில் போராடும் மக்களிடம் கள்ள உறுதி தான் உள்ளது என்று அர்ச்சுனா சொன்னதை ஏற்க முடியாது. முடிந்தால் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தையிட்டியில் போராடுபவர்களின் காணி உறுதி பொய் என்பதை நிரூபிக்கட்டும் என தையிட்டி காணி உரிமையாளர்கள் சவால் விடுத்துள்ளனர். யாழ்.ஊடக அமையத்தில் சட்டவிரோத தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்கள் நடத்திய ஊடக சந்திப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அர்ச்சுனாவை தொடர்பு கொள்ள முடியவில்லை மேலும் தெரிவிக்கையில், சிங்கள மக்களுக்காக தமிழ் மக்களின் காணிகளை அர்ச்சுனா பெற்றுக் கொடுக்க வேண்டாம். நீங்கள் எதிர்காலத்தில் இங்கு போட்டியிட்டும் வெல்லப் போவதில்லை. நீங்கள் தென் இலங்கையை நோக்கி நகரப் போகிறீர்கள். தையிட்டி மக்களின் காணிகள் பற்றி தேவையில்லாத கதைகளை சொல்ல வேண்டாம். நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தையிட்டி பிரச்சினையை அலசி ஆராய வேண்டும். எத்தனை பரப்பு ஒரு ஏக்கர் என்று தெரியாத ஒரு வழக்கறிஞரும், எல்லோரையும் எத்தனையாம் தரம் படித்தார்கள் என்று கேட்கிற நாடாளுமன்ற உறுப்பினரும் தையிட்டிக்கு வந்து ஆராய்ச்சி செய்கிறார்கள். அர்ச்சுனா இராமநாதனை தொடர்பு கொள்ள முடியவில்லை. செயலாளர் என்ற பெண்ணை தொடர்பு கொண்டு விளங்கப்படுத்தினேன். போராட்டத்தின் நிமித்தம் பிக்கு இறங்கி வந்திருக்கிறார். கொஞ்சம் காணியை விட்டு ஏமாற்றி விட நிற்கிறார்கள் இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா அங்கு போய் பேசுகிறார். ஆதாரங்களை கொண்டு வழக்கை போடுங்கள் 24 மணி நேரமும் நேரலை போட்டு செல்கிறார்கள். நாம் எந்த அலுவலகத்திற்கு சென்று அவர்களை சந்திப்பது? நாங்கள் போராடுவதாகவும் கத்துவதாகவும் அர்ச்சுனா தெரிவித்தார். சாவகச்சேரி வைத்தியசாலையில் போராடியே அர்ச்சுனா நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவானார். வைத்தியர் கேதீஸ்வரனுக்கும் வைத்தியர் பிரணவனுக்கும் வைத்தியர் சத்தியமூர்த்திக்கும் எதிராக ஆதாரங்கள் இருக்கிறது என்று சொல்லி பல விடயங்களை சொன்னார். அந்த ஆதாரங்களை கொண்டு முதலில் வழக்கை போடட்டும். அந்த வழக்கை நடத்தி விட்டு இங்கு வாருங்கள். நேரம் ஒரு நேரம் உளறாமல் செயல்படுங்கள். நீங்கள் தகுந்த வைத்தியராக இருந்தால் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு போகவில்லை என்று சொன்னால் எங்கள் பிரச்சினையில் இருந்து விலகுங்கள். கதைக்கும் போது நிதானமாக கதைக்க வேண்டும். உங்கள் வார்த்தை தடுமாறுகிறது. தமிழர் மரபை மீறி கதைக்கின்றீர்கள். கலாசாரத்தை மீறி கதைக்கின்றீர்கள். தேசிய தலைவரை பற்றி பேசுகிறீர்கள். அனைவரையும் எத்தனையாம் வகுப்பு படித்தது என கூறுகிறீர்கள். முன்னர் இந்த மண்ணை ஆண்டவர்கள் எத்தனையாம் தரம் படித்திருந்தார்கள் என்பதை தெரிந்திருந்தால் அது பற்றி கேட்க மாட்டீர்கள். வாகனத்துடன் கதைத்துக் கொண்டு நேரலை போட்டால் பொலிஸ் என்ன தண்டம் கொடுக்கும் என்று உங்கள் சகோதரை கேளுங்கள். ஆட்களை தனிப்பட்ட ரீதியாக தாக்க வேண்டாம். உங்கள் மீது மதிப்பு இருக்கிறது. நாடாளுமன்றத்தில் கத்துவதற்கு ஆள் தேவை. சரியான விடயத்திற்கு அதை செய்யுங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளனர். https://tamilwin.com/
  8. நான் எழுதுவது ஒரு அனாதையான இனத்துக்கு மீட்பார் என்று சொல்லி பின்கதவால் வந்த வல்லூறு ஒன்றின் கதை . உங்களை போன்றவர்களுக்கு கிரிகெட் விளையாட்டாய் நக்கலாய் போய் விட்டது அந்த மக்களின் மவுன வலி. இந்த சுமத்திர வல்லூறு வடகிழக்கு தமிழருக்கு கடந்த 14 வருடங்களில் ஒன்றையும் கிழித்து போடவில்லை இனியும் கிழிப்பார் என்று பள்ளிக்கூடம் போனவர்கள் நம்ப மாட்டார்கள் .
  9. இலங்கையை பிறப்பிடமாக கொண்ட பேராசிரியர் நிஷான் கனகராஜா பிரித்தானிய மன்னரின் 2026 ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு கௌரவப் பட்டியலில் 'நைட்' பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். பிரித்தானியாவின் லெய்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றி வரும் நிலையில் பட்டம் பெற்றுள்ளார். உயரிய விருது உயர்கல்வித் துறைக்கு அவர் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பு மற்றும் சமூக உள்ளடக்கல் கொள்கைகளை முன்னெடுத்தமைக்காக இந்த உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்ட இவர், யாழ். மார்ட்டின் வீதியில் வளர்ந்தவர். யாழ். பரி. யோவான் கல்லூரியின் பழைய மாணவரான இவர், 1985ஆம் ஆண்டு அந்தக் கல்லூரியின் தலைமை மாணவ தலைவராகவும் (Head Prefect) திகழ்ந்துள்ளார். இலங்கையில் தனது ஆரம்பக் கல்வியை முடித்த அவர், பின்னர் பிரித்தானியாவின் புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தனது இளங்கலை மற்றும் கலாநிதிப் பட்டங்களைப் பெற்றார். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தேசத்தின் சிறுவன் பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட பதவிகளை வகித்த அவர், 2019 ஆம் ஆண்டு லெய்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பொறுப்பேற்றுள்ளார். பிரித்தானியாவின் மிகவும் பன்முகத்தன்மை கொண்ட பல்கலைக்கழகங்களில் ஒன்றை நிஷான் கனகராஜா வழிநடத்தி வருகினறார். இந்த கௌரவம் குறித்து கருத்து தெரிவித்த அவர், "யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட ஒரு தேசத்திலிருந்து வந்த ஒரு சிறுவன், இன்று அரச குடும்பத்தினால் கௌரவிக்கப்படுவது என்பது ஒரு வியக்கத்தக்க பயணம். கல்வியின் மாற்றும் சக்தியினாலும், அது வழங்கும் வாய்ப்புகளினாலுமே இது சாத்தியமானது" என உருக்கமாக தெரிவித்துள்ளார். https://tamilwin.com/
  10. எந்த பக்கம் எண்டாலும் சுமனின் ஆட்கள் தானே வெளியில் எடுத்து விடுவது யாழ்ப்பாணத்தை போதை கலாசாரத்தை ஊக்குவிப்பது இந்த கபடவேடதாரி சுமத்திரன் தானே .
  11. ஆப்பிள் ஐபோன் iPhone பயனர்கள் உடனடியாக தங்கள் சாதனங்களின் மென்பொருளை புதுப்பிக்க வேண்டும் என ஆப்பிள் நிறுவனம் அவசர பாதுகாப்பு எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. மிக தீவிரமான இரண்டு மென்பொருள் பாதுகாப்புக் குறைகள் (software vulnerabilities) கண்டறியப்பட்டுள்ளதுடன், அவை “மிகவும் நுணுக்கமான” சைபர் தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஆப்பிள் தெரிவித்துள்ளது.ஐபோன் பயனர்கள் இந்த வாரம் வெளியிடப்பட்ட பாதுகாப்பு அறிவிப்பில், Safari உலாவி மற்றும் iOS இயங்குதளத்தில் இயங்கும் அனைத்து மூன்றாம் தரப்பு உலாவிகளுக்கும் அடிப்படையாக உள்ள WebKit என்ற உலாவி இயந்திரத்தை இந்த குறைகள் பாதிப்பதாக ஆப்பிள் தெரிவித்துள்ளது. இந்த பாதுகாப்பு குறைகளை பயன்படுத்தி, ஒரு பாதிக்கப்பட்ட இணையதளத்தை பயனர் பார்வையிட்டாலே, அவருடைய சாதனத்தில் தீங்கு விளைவிக்கும் நிரல்கள் (malicious code) இயங்கும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த குறைகள் உண்மையில் தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதை ஆப்பிள் உறுதிப்படுத்தியுள்ள போதிலும், அவை பொதுவான பெருமளவு தாக்குதல்கள் அல்ல என்றும், குறிப்பிட்ட சில நபர்களை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் எனத் தோன்றுவதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது. “இந்த பாதுகாப்பு குறைகள், குறிப்பிட்ட சில இலக்கு நபர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மிக நுணுக்கமான தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற தகவல் எங்களிடம் உள்ளது,” என ஆப்பிள் தனது பாதுகாப்பு அறிவிப்பில் தெரிவித்துள்ளது. இந்த குறைகளை சரிசெய்யும் வகையில், iPhone, iPad மற்றும் பிற ஆப்பிள் சாதனங்களுக்கு அவசர மென்பொருள் புதுப்பிப்புகளை (emergency software updates) ஆப்பிள் வெளியிட்டுள்ளது. அனைத்து பயனர்களும் உடனடியாக புதிய புதுப்பிப்புகளை நிறுவ வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள சுமார் 1.8 பில்லியன் iPhone பயனர்களுக்கும் இந்த எச்சரிக்கை பொருந்தும் என சில தகவல்கள் வெளியானாலும், சைபர் பாதுகாப்பு நிபுணர்கள், இது பெருமளவு சாதனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்பதற்கான சான்று கிடையாது என தெரிவிக்கின்றனர்.எச்சரிக்கை மாறாக, இந்த பாதுகாப்புக் குறைகளின் தீவிரத்தையும், புதுப்பிக்கப்படாத சாதனங்களுக்கு ஏற்படும் அபாயத்தையும் இந்த எச்சரிக்கை எடுத்துக்காட்டுகிறது என அவர்கள் கூறுகின்றனர். இந்த தாக்குதல்களுக்கு பின்னால் யார் உள்ளனர் அல்லது யார் இலக்காக்கப்பட்டனர் என்பது குறித்து பாதுகாப்பு காரணங்களால் எந்த விவரங்களையும் ஆப்பிள் வெளியிடவில்லை. முன்னதாக அறியப்படாத மென்பொருள் குறைகள் (Zero-Day Vulnerabilities) உலகளவில் அதிகரித்து வரும் சூழலில் இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது. இவ்வகை குறைகள், திருத்தங்கள் வெளியிடப்படும் முன்பே ஹேக்கர்களால் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், சாதனங்களை எப்போதும் அண்மைய மென்பொருள் பாதுகாப்பு புதுப்பிப்புகளுடன் வைத்திருப்பது மிகவும் அவசியம் எனவும் ஆப்பிள் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. https://tamilwin.com/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.