-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிந்திய பிறந்த நாள் வாழ்த்துகள் யாயினி.
-
ஈரானின் கார்க் தீவை கைப்பற்றும் சாத்தியம் உள்ளது - ட்ரம்ப்
Did Iran supplied arms to Sri Lanka? இந்த கேள்வியை Gemini யிடம் கேட்டுப் பார்த்து உங்களை update செய்து கொள்ளவும். நன்றி
-
ஈரானின் கார்க் தீவை கைப்பற்றும் சாத்தியம் உள்ளது - ட்ரம்ப்
என்னது, ஈரானால் வேறு நாடுகளுக்கு ஆயுதம் கொடுக்க முடியாதா? அப்ப ரஷியாவுக்கு Shahed வகை ட்ரோன்கள் மற்றும் இராணுவ உபகரணங்கள் ஆயுதங்களை வழங்கும் செயலுக்கு பெயர் என்ன? அத்துடன் ஹிஸ்புல்லா அமைப்புக்கு ஏவுகணைகள் உட்பட பெருமளவு ஆயுதங்களை வழங்குவது யார்? இன்று இஸ்ரேல் மீது ஏவப்படும் ஏவுகணைகளில் கிள்ஸ்ரர் குண்டுகளும் உள்ளன என காணொளி ஆதாரங்கள் நிறைய உள்ளன்வே. ஈரான் இலங்கை யின் உற்ற நண்பன் என ஏற்றுக் கொள்வது ஈரானை ஆதரிக்கும் உங்களுக்கு அறச் சீற்றத்தை தரும் என்பதால் ஏற்க மறுக்கின்றீர்கள் என நினைக்கிறேன். ஓம் பாஸ், நெதன்யாஹுவின் கொட்டம் அடக்கப்பட வேண்டும்.
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
விஜய் கூறிய லிஸ்டில் அந்த ரோல்ஸ்ரோய் கார் விபரம் ஏதும் இல்லை. அத்துடன் 250 கோடி சம்பளம் பெறுவதாக அவரே கூறுகின்றார் எனும் போது அவர் காட்டிய இந்த சொத்தின் பெறுமதி மிகக் குறைவு அல்லவா? இன்னும் ஒன்றை அவதானித்தேன். வாங்கிய அனைத்தும் அவர் பெயரில் தான் உள்ளது. சங்கீதாவின் பெயரோ பெற்றோரின் பெயரோ, 18 வயதுக்கு மேல் உள்ள மகனது பெயரோ இல்லை. சங்கீதா இந்திய பிரஜை இல்லை என்பதால் அவர் பெயரில் சொத்து வாங்க முடியாமல் இருக்கலாம், ஆனால் மற்றவர்கள்..?
-
ஈரானின் கார்க் தீவை கைப்பற்றும் சாத்தியம் உள்ளது - ட்ரம்ப்
அமெரிக்கா: தமிழ் மக்களின் நியாயமான போராட்டங்களை பயங்கரவாத முத்திரை குத்தி இறுதிவரைக்கும் தமிழின அழிப்பிற்காக துணை நின்ற, இந்தியாவுக்கு நிகரான நாடு. ஈரான்: இறுதி யுத்த காலத்தில் கிளஸ்ரர் குண்டுகளை இலங்கைக்கு விற்ற நாடு. ரஷ்யாவும் ஈரானுமே இலங்கைக்கு இவ்வகையான குண்டுகளை கொடுத்தது. இருவரும் அடிபடும் போது எந்த தரப்பு தோற்றாலும், எந்தத் தரப்புக்கு இழப்புகள் அதிகம் ஏற்பட்டாலும் மகிழ்ச்சி தான். ஆனால் உந்த காஸ் (gas / petrol) விலைதான் விசரை ஏற்றுது
-
இஷாரா செவ்வந்திக்கு சிஐடி பிரிவுக்குள் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்!
செவ்வந்திக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். இப்படிக்கு செயலாளர் க.செ.ர.ச
-
நீளீரா - Trailer
'Based on the memories of a War Child' என்ற வாசகத்துடன் நீளிரா திரைப்படம் வருகிறது. ஈழம் சார்ந்த கதைக்களம். இதனை எழுதி இயக்கியிருப்பவர் சோமிதரன். ஊடகவியலாளர் என்பது அவருடைய தொடக்க கால அடையாளம். யாழ் நூலக எதிர்ப்பு தொடர்பாக 'எரியும் நினைவுகள் - Burning memories' சுவடிப் படத்தினை (Ducumentary film) 2006இல் உருவாக்கியவர். அந்தச் சுவடிபடத்திலேயே அவருடைய கலை நுட்பத்தின் சில அம்சங்களைக் காண முடிந்தது. பாலு மகேந்திராவிடமும் மற்றும் சில தமிழக முன்னணி இயக்குனர்களிடம் திரைக்கலை பயின்றவர். ஒரு நல்ல படைப்பை குறிப்பாக திரைப்படத்தை உருவாக்குவது என்பது மேதமை மிக்க கலைப் பார்வையோடு, திரைத் தொழில்நுட்பம், கதை அறிவு (story knowledge), சமூக-உலக பார்வையையும் கோரிநிற்கிறது என்பது என்னுடைய நம்பிக்கை, அபிப்பிராயம். சோமிதரன் இத்தகைய ஆளுமைகளை தன்னகத்தே கொண்டவர் என்ற மதிப்பீடும் அவதானிப்பும் எனக்குண்டு. நீளிரா முன்னோட்டமும் அந்த நம்பிக்கையைத் தருகின்றது. திரைப்படம் ஏப்ரல் மூன்றாம் திகதியிலிருந்து திரைக்கு வருகிறது. படத்தைப் பார்த்தபின் அதனை விமர்சன பூர்வமாக அணுகலாம். வாழ்த்து சோமிதரன் Somee Tharan & குழுவினர் - ரூபன் சிவராஜா https://www.facebook.com/share/1CParquwWA/
-
நீளீரா - Trailer
- சிரித்துக் கொண்டே அழுகிறோம்!- தி.மு.க கூட்டணியில் ம.தி.மு.க புலம்பல்!
அரசியல் பச்சோந்தி வைகோவின் மதிமுக விற்கு எந்த ஒரு தொகுதியும் வழங்கியிருக்க கூடாது. தனித்து நின்றால் ஐந்து வாக்குகள் கூட இவர்களுக்கு கிடைக்காது.- தமிழ் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளை கண்டித்து மட்டக்களப்பில் போராட்டம்.!
நேரடியாக காவாலி அருச்சுனாவின் பெயரை போட்டி போராயிருக்கலாம். அருச்சுனா எனும் விஷச் செடி மலையகத் தமிழர்களை நாய்கள் என விளித்தும் கிளிநொச்சி மக்களை இழிவாக கதைத்தும் சமூகத்தில் உள்ள முக்கிய அமைப்புகள், கட்சிகள் பெரியளவில் கண்டிக்காமை கண்டனத்துக்குரியது. யாழ் பல்கலைக்கழக மாணவர் அமைப்பு, தமிழ் ஆசிரியர் சங்கம், இன்ன பிற சமூக அமைப்புகள் போன்றவையும் அமைதியாக உள்ளதன் காரணம் அவர்களும் மலைய தமிழர்களை இழிவாக கருதுவதாலா..- மீண்டும் எழுதப்படுமா எம்.ஜி.ஆர் வரலாறு?
விஜய்யை எம் ஜி ஆருடன் ஒப்பிடவே முடியாது. விஜயகாந்துடன் கூட ஒப்பிட முடியாது. மேற் சொன்ன இருவருக்கும் இருந்த தலைமைத்துவ பண்புகள், ஆளுமை, பேச்சுத் திறன், மக்களுடன் நெருங்கிப் பழகும் தன்மை, சுற்றியுள்ளவர்களின் தரம் என்பனவற்றுடன் விஜையை ஒப்பிட்டால் பெரும் இடைவெளி இருப்பதை உணர முடியும். ஒப்பிடவே முடியாத அளவுக்கு விஜைக்கு இவை எதுவுமே இல்லை என்பது தான் யதார்த்தம். கரூர் துயர சம்பவத்தினை கையாளுவதன் மூலம் விஜய்க்கு தன் ஆளுமையை, மக்கள் மீதான கரிசனையை வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதன்போது அவர் ஓடி ஒழிந்ததன் மூலம் தன்னை எப்படியான கோழை என வெளிக்காட்டி விட்டார். இதே போன்ற ஒரு துயர் சம்பவத்தை எம் ஜி ஆரோ விஜயகாந்தோ எப்படி கையாண்டிருப்பர் என யோசித்தால் புரியும். விஜய் நடிகர் கார்த்திக் (பழைய கார்த்திக்) போன்ற ஒருவர். ஒரே வித்தியாசம் கார்த்திக்கு விஜய் அளவுக்கு ரசிகர்கள் கிடையாது. விஜய் கட்சியை ஆரம்பித்த போது அவர் ரசிகர்கள் மட்டுமல்ல கட்சி சாராத மாற்றத்தை விரும்பிய ஒரு பெரும் மக்கள கூட்டம் அவருக்கு ஆதரவழித்தது. ஆனால் அவர் தன்னை அதன் பின் வெளிப்படுத்திய விதத்தை பார்த்த பின் வெறும் தீவிர ரசிகர் கூட்டத்தின் ஆதரவு மட்டுமே மிஞ்சி உள்ளது. அந்தக் கூட்டத்தில் எத்தனை பேர் ஒழுங்காக தேர்தல் அன்று வாக்களிக்கும் நிலையம் சென்று சரியாக வாக்களிப்பர் என்பது பெரிய கேள்விக் குறி.- ரோஜா முள்.
இன்னும் வீக்கம் குறையவில்லையா?- விடுமுறையில் வாங்கிய வில்லங்கமான நகை
மிச்சம் வருமா?- கொழும்பில் இருந்து சவுதியரேபியா வழியாக ஒரு நாள்
நல்ல துணிச்சலான பெண் தான் நீங்கள். நெடுங்காலத்தின் பின் கண்டது மகிழ்ச்சி.- இளம்தாய் உயிருடன் மீட்கப்பட்ட கிணற்றினுள் இருந்து அழுகிய சடலமொன்று கண்டுபிடிப்பு ; வயல் பகுதியில் இரண்டரை வயது குழந்தையும் மீட்பு
அத தெரண நேற்று வந்த தகவல்களையே வெவ்வேறு வார்த்தைகளை பயன்படுத்தி அப்படியே போட்டுவிட்டு, புதிய தகவல் வெளியானதாக செய்தியை வெளியிட்டு இருக்கின்றது. இலங்ககை தமிழ் / முஸ்லிம் ஊடகங்கள் எல்லாம், பொலிஸார் தரும் அறிக்கைகளையே செய்திகளாக தருபவை. கொஞ்சம் கூட நிருபர்களை சம்பவ இடங்களுக்கு அனுப்பி வைத்தோ, ஆராய்ந்தோ செய்திகளை வெளியிடுபவை அல்ல. கடும் சோம்பேறிக் கூட்டங்கள் இவர்கள். இவர்களை விட சிங்கள ஊடகவியலாளர்கள் பல மடங்கு மேல். - சிரித்துக் கொண்டே அழுகிறோம்!- தி.மு.க கூட்டணியில் ம.தி.மு.க புலம்பல்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.