Everything posted by நிழலி
-
தேசிய மாவீரர் வாரம் தொடக்கம்
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். மாவீரர் பற்றிய நினைவுக் குறிப்புகளை, மகத்தான தியாகங்களை எம் பிள்ளைகளுக்கும் கற்றுக் கொடுப்போம். முக்கியமாக புலம்பெயர் நாடுகளில் இருக்கும் எம் பிள்ளைகளுக்கு அவர்களுக்கு புரிகின்றமாதிரி, ஏன் இவர்கள் போராட போனார்கள், எவ்வாறான சூழ்நிலையில் எம் ஊரும் அங்குள்ளவர்களும் இன்றும் அன்றும் இருந்தனர்/இருக்கின்றனர், எவ்வாறான தியாகங்களை இவர்கள் புரிந்தார்கள் போன்றனவற்றை அறியக் கொடுக்க வேண்டும். மாவீரர் தினத்துக்கு அஞ்சலி செலுத்தும் போது கண்டிப்பாக பிள்ளைகளையும் கூட்டிக் கொண்டு போகுதல் வேண்டும். மாவீரர் பாடல்களை அவர்களுக்கும் கேட்கும் விதமாக போடவேண்டும்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் தமிழரசு
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாத்திக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எல்லாருக்கும் பிறந்த தின வாழ்த்து தெரிவிப்பது நல்ல விடயம் தான். அனைவரையும் சமமாக மதிப்பது நல்லது தான். ஆனால் ஒரு பதிவையும் எழுதாத அல்லது பல காலமாக பதிவிடாது காணாமல் போனவர்களை வாழ்த்தும் போது அப்படி செய்யாமல் தொடர்ந்து பதிவுகளை இட்டு களத்துடன் இணைந்து நிற்பவர்களின் பிறந்த தின வாழ்த்தும் அடிபட்டு போகாதா? களத்துடன் தொடர்ந்து இணைந்து இருப்பவர்களின் பிறந்த தினம் வரும்போது வாழ்த்துகையில் 'பிறந்த நாள் வாழ்த்து திரி' முன்னுக்கு வரும் போது "இன்று களத்தில் தொடர்ந்து இருக்கும் முக்கியமான ஒரு உறவுக்கு பிறந்த தினமாக்கும்" என என்று ஆவலுடன் வந்து வாழ்த்துபர்கள் பலர். இதனால் இது நாள் வரைக்கும் ஒரு உயிர்ப்புடன் இந்த திரி இருந்தது என்று நினைக்கின்றேன்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்த நாள் வாழ்த்துக்கள் விசு அண்ணா.... இருக்கும் நான்கு பிள்ளைகளுடன் இன்னுமொன்றையும் இந்த வயதில் பெத்து துள்ளி விளையாட என் மேலதிக வாழ்த்துகள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்த நாள் வாழ்த்துகள் ஜீவா
-
ஈகைச்சுடர் லெப்.கேணல் திலீபன்
திலீபன் அண்ணா மரணத்தை வென்ற ஒருவர் என்பதுக்கும் மேலாக அந்த மரணத்தையே ஒவ்வொரு அணுவிலும் உணர்ந்த பேரியக்கத்தின் பேர் சொல்லும் ஒற்றை நாடி அவன் *********** அவன் சுவாசித்த காற்றின் எச்சத்தை சுவாசித்த பெருமை கொண்ட சந்ததி நான் என்று சொல்லிக் கொள்வதில்தான் எத்தனை சந்தோசம் எனக்கு!!
-
ஈகைச்சுடர் லெப்.கேணல் திலீபன்
"செந்தமிழ் ஈழத்தின் விடுதலை தாருங்கோ திலீபனின் பசி அடங்கும்" என்ற பாடலின் உட்புக முடியா உணர்வுக் குவியலில் மீண்டும் சிக்கிக் கொள்ளும் ஒரு நினைவு நாள் எனக்கு அப்போது 13 வயது இருக்கும் என்று நினைக்கின்றேன். பசி என்றால் என்ன என்று தெரியாமல் என் அப்பன் என்னை வளர்க்கும் போது ஒரு யுகத்தின் பசி உணர்வை தன் இரைப்பையுள் கொண்டு எமக்குள்ளும் விடுதலை பசியை ஊட்டியவன் திலீபன் அவனது சாவு ஏற்படுத்திய மரண வலி இன்றும் என்னுள் உணர முடிகின்றது ****************** இன்று செந்தமிழ் ஈழத்தின் அனைத்து கதவுகளிலும் எதிரியின் துவக்கு நுனி எட்டிப் பார்க்கின்றது திலீபன் அண்ணா ஒவ்வொரு வீதி தோறும் ஒவ்வொரு படலை தோறும் ஒவ்வொரு வாசல் தோறும் அகோரமாய் பசிக்கும் தன் வயிறு தாங்கி வந்து போகின்றான் உங்களுக்கு அவனை அடையாளம் தெரிகின்றதா ஒற்றுக் கோவணம் கூட இன்றி ஆன்மா எல்லாம் காயங்கள் சுமந்து அகோரப் பசியில் வந்து நிற்கின்றான் சொல்லுங்கள் மக்களே சொல்லுங்கள் அவன் கனவின் ஒவ்வொரு மூலையிலும் நாம் தீப்பிடிக்க மறுத்து கருக்கிய சம்பவங்களை சொல்லுங்கள் அவனது அகோரப் பசிக்கும் தகிக்கும் தாகத்துக்கும் பெறுமதி இன்றி எதிரியின் காலை நாம் தொழும் சோகத்தையேனும் சொல்லுங்கள் அவனது நினைவு தினம் கூட நினைவை விட்டு அகன்ற தினமாய் போன் வாழ்வின் இருப்பை சொல்லுங்கள் ************* "செந்தமிழ் ஈழத்தின் விடுதலை தாருங்கோ திலீபனின் பசி அடங்கும்"
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
என்றும் பதினாறு போல் துள்ளிக் குதித்து கும்மாளம் போடும் கு.சா. வுக்கு இனிய பிறந்த தின வாழ்த்துகள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
மகனுக்கு வாழ்த்து சொன்ன அனைவருக்கும் அன்பான நன்றிகள் எதுக்கும் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கட்டும் என்று மகனை நயாகரா நீர்வீழ்ச்சிக்கு கொண்டு சென்று பிரதான நீர் வீழ்ச்சிக்கும் முன் மழை கொட்டி கொண்டு இருக்க Cake வெட்டினோம். இனி என் மகன் எப்ப இந்த நீர்வீழ்ச்சிக்கு போனாலும் ஆறாவது பிறந்த தினம் அன்று கேக் வெட்டிய நினைவுகள் வந்து போகும்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று கிருபனின் பிறந்த தினம் என்றும் ஒரு பட்சி சொல்லுது.... அப்படியே, என் புத்திரனின் பிறந்த தினமும் இன்றுதான்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அர்ஜுனுக்கு பிறந்த தின வாழ்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சாந்தி ஆச்சிக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள். இந்த வயதில் உணர்ச்சி அதிகம் பட்டு பிரஷரை ஏற்றிக் கொள்ளாமல்,இன்னும் பகைவர்களையும் எதிரிகளையும் கூட்டாமல் எடுத்த பெரிய காரியங்களை வெற்றிகரமாக முடிக்க என் வாழ்த்துகள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்த நாள் வாழ்த்துகள் ஈ-மகள் !!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
புரட்சிகர தழிழ்தேசியனுக்கு என் அன்பான பிறந்த தின வாழ்த்துகள் !!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நிலாமதி அக்காக்கு என் இனிய பிறந்த தின வாழ்த்துகள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாதவூரானுக்கு பிறந் தின வாழ்த்துகள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஒரு சின்ன டவுட்டோட...பிறந்தநாள் வாழ்த்துகள் சுஜிக்கு
-
இலங்கையில் தமிழன் அழிவதைக் கண்டு கவலைப்பட்ட உண்மைத் தமிழன் நான்: கருணாநிதி
சென்னை, ஏப்.8,2011 இலங்கை தமிழர்களுக்காக என்றைக்கும் போராட கூடியவர்கள் தி.மு.க.வினர் என்று முதல்வர் கருணாநிதி கூறினார். மேலும், "உண்மையான தமிழன், தமிழன் அழிகிறானே என்று கவலைப்பட்ட தமிழன் கருணாநிதி," என்றார் அவர். தென்சென்னை மாவட்ட தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் சிந்தாதிரிப்பேட்டையில் நேற்றிரவு நடந்தது. இந்தக் கூட்டத்தில் முதல்வரும் தி.மு.க. தலைவருமான கருணாநிதி கலந்துகொண்டு பேசுகையில், "இது வெறும் பிரசார பொதுக்கூட்டம் அல்ல. இன எழுச்சிக்கான போர் முரசு கொட்டுகின்ற கூட்டம். இனம் என்று சொன்னால் ஏழை எளியவர்களின் இனம். தமிழகத்திலே தி.மு.கழகம் சார்பில் எல்லா இடங்களிலும் நம்முடைய கூட்டணியினுடைய குரல் ஒலித்துக்கொண்டிருக்கிறது. இரண்டு நாளைக்கு முன்பு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சென்னை தீவுத்திடலிலே வந்து உரையாற்றினார். அவரிடம் சட்டமன்ற தேர்தலை பற்றி பேசவில்லை - சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அமையவிருக்கின்ற அரசு, அது தி.மு.கழக அரசாக இருந்தால் என்னென்ன கோரிக்கைகளை அம்மையாரே உங்களிடத்தில் வைக்கும் அந்த கோரிக்கைகளை நீங்கள் நிறைவேற்றி தரவேண்டும் என்ற என் நலனுக்காக அல்ல - யாருடைய நலனுக்காகவும் அல்ல - இந்த மாநிலத்தினுடைய நலனுக்காக தமிழனுடைய நலனுக்காக - தமிழ்நாட்டு மக்களின் நன்மைக்கான தேவைகளை எல்லாம் எடுத்து வைத்தேன். அப்பொழுது அங்கு நான் சொன்னேன், இலங்கையிலே வாழ்கின்ற எங்கள் தமிழர்கள் குடியமர்த்தப்படுவதிலே, பராமரிக்கப்படுவதிலே கால தாமதம் ஏற்படுகிறது. இலங்கை அரசு அவர்களுடைய தேவைகளை இன்னமும் முழுமையாக நிறைவு செய்யவில்லை. அங்கே சிங்களவர்களும், தமிழர்களும் சம நிலையிலே வாழ்வதற்கு சட்ட திருத்தத்தை கொண்டு வருவதாக இலங்கை அதிபர் சொல்லிய அந்த திருத்தத்தை கொண்டு வர ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். நான் என்னமோ இப்பொழுதுதான் இலங்கைத் தமிழர்களுக்காக கவலைப்படுவதைப் போல சில பத்திரிகைகளில் எழுதியிருக்கின்றார்கள். கேலி செய்திருக்கின்றார்கள், யார் யார் இலங்கை தமிழர்களுக்காக பாடுபடுகிறார்கள், இலங்கையிலே தமிழர்கள் கொல்லப்பட்ட போது ஒதுங்கி இருந்தவர்கள் யார்? தமிழர்கள் கொல்லப்பட்ட போது அது சரி, சரி என்று சொன்னவர்கள் யார்? இலங்கை தமிழர்கள் அங்கு வேதனைப்பட்டபோது "ஸ்கேல்'' வைத்து அளந்து பார்த்து இந்த பிரச்சினையை அணுகிய கம்யூனிஸ்ட் நண்பர்களானாலும் அதைப்பற்றி நான் கவலைப்படவே மாட்டேன் என்று சொன்ன அ.தி.மு.க. நண்பர்களானாலும் யோசித்து பார்க்க வேண்டும். தி.மு.கழகம் இலங்கை பிரச்னையில் எடுத்த நிலை என்ன? தமிழன் அங்கே வாழ வைக்கப்பட வேண்டும். தமிழன் அவர்களுடைய ஊர்களிலேயிருந்து விரட்டப்பட்ட தமிழன், அங்கே நடைபெற்ற போராட்டத்தினால் ஊரை விட்டு ஓடிய தமிழன் மீண்டும் அந்த ஊருக்கு வரவேண்டும், அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கின்ற பொறுப்பை இலங்கையிலே இன்றைக்கு இருக்கின்ற அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறோம் என்றால் கடந்த காலத்திலே, இன்றைக்கு எங்களை கேலி செய்கிறவர்கள் எப்படி நடந்து கொண்டார்கள். உங்களுக்கு நினைவிருக்கிறதா? சென்னை சட்டசபையில் ஒரு தீர்மானமே வந்தது, ஜெயலலிதா ஆட்சியில். ஆனால் நான் சொல்ல விரும்புகிறேன், அன்றைக்கு சென்னை சட்டமன்றத்தில், தமிழக சட்ட மன்றத்தில் தமிழக முதலமைச்சராக இருந்த அம்மையார் ஜெயலலிதா கொண்டு வந்த தீர்மானம் என்ன? அந்த தீர்மானத்தை தி.மு.கழகம் ஆதரிக்கவில்லை, ஏற்றுக்கொள்ளவில்லை, அதை ஆதரித்து பேசவும் இல்லை. நடுநிலை வகித்தோம். அந்தத் தீர்மானம் இலங்கையிலே இருக்கின்ற பிரபாகரனை கைது செய்து கொண்டு வந்து, சென்னையிலே விசாரணை நடத்த வேண்டும்-தீர்மானம் போட்டது யார்? தி.மு.கழக அரசா? நெஞ்சிலே கை வைத்து சொல்லுங்கள், நெஞ்சு இருந்தால் கை வைத்து சொல்லுங்கள். நாங்களா அந்த தீர்மானம் போட்டோம், இல்லையே. இலங்கையிலே ராஜபக்சேயினுடைய ராணுவத்தால் தமிழர்கள் கொல்லப்பட்டபோது, நான் கண்ணீர் விட்டு கவிதை எழுதினேன், கட்டுரை தீட்டியிருக்கிறேன், மேடையிலே தீர்மானம் போட்டோம். அப்போது அம்மையார் ஜெயலலிதா என்ன சொன்னார்? இந்த போராட்டத்திலே சாகிறவர்கள் எல்லாம் விடுதலை வீரர்கள் அல்ல, விடுதலைப்புலிகள் அல்ல என்று சொன்னார். சொல்லிவிட்டு அப்படியே புலிகளாக இருந்தாலும் இலங்கையிலே இருக்கிற தமிழர்களாக இருந்தாலும் இதற்காக நாம் கவலைப்பட தேவையில்லை. ஏனென்றால் போர் என்றால் ஜனங்கள் செத்து மடிவது சகஜம்- யார் சொன்னது, இலங்கை தமிழர்களை பார்த்து. ஜனங்கள் என்று சொல்லி , அவர்கள் செத்து மடிவது சகஜம் என்று சொன்ன ஜெயலலிதா, இன்றைக்கு இலங்கை தமிழர்களுக்கு நெருக்கமான உறவாக இருந்தால் அதைவிட அதிகமாக இலங்கை தமிழர்களுக்காக இங்கே பேசிய இன்னமும் பேசிக்கொண்டிருக்கிற சில நெடுமரங்களுக்கு அவர் வழிகாட்டியாக ஆகிவிட்டார். தி.மு.கழகத்தை பொறுத்தவரையில் அதுவும் அந்த கட்சியினுடைய தலைவராக இருக்கிற என்னை பொறுத்தவரையில் இன்று நேற்றல்ல-அறிஞர் அண்ணாவுடன் இணைந்து 1956 ஆம் ஆண்டு இலங்கையிலே ஈழத்தமிழர்களுக்காக போர்க்கொடி ஏந்திய தந்தை செல்வா அவர்களை ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றியவர்கள் நாங்கள். அதைப்போலவே விடுதலைப்புலிகள் ஜெகன், குட்டிமணி, தங்கதுரை இவர்களெல்லாம் என்னோடு நெருக்கமாக இருந்து அங்கே நடைபெறுகின்ற, அந்த விடுதலைப்போராட்டத்திற்கான ஆதரவை தமிழக மக்கள் மூலமாக கோரி பெற்றார்கள். சகோதர யுத்தத்தால் அந்த போராட்டம் தோல்வியிலே முடிந்தது. இப்படி முடிந்துவிட்டதே என்ற ஏக்கம் எனக்கு இன்றைக்கும் உண்டு. அதனால்தான், அந்த ஏக்கத்தைப் போக்கிக்கொள்ள - இங்கே பிரதமர் வரும் போதெல்லாம், பிரதமரை காணும் போதெல்லாம் நம்முடைய அன்புக்குரிய சோனியா காந்தி அம்மையார் இங்கு வரும் போதெல்லாம் அவரிடத்திலே நான் பகிரங்கமாகவும், தனியாகவும் எடுத்துச் சொல்வது - இலங்கையிலே இருக்கின்ற தமிழர்களை காப்பாற்றுங்கள். அவர்கள் ஏதோ சில கலவரங்களால், பாதிக்கப்பட்டவர்கள் என்று எண்ணாமல், சுதந்திரப் போராட்டத்தில், விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் - அவர்களுக்கு நல்வாழ்வு அளிக்க முன்வாருங்கள் என்று கேட்கிற அந்த விளக்கம்தான் இந்த கருணாநிதிக்கு இன்றைக்கும் உண்டு. இதைச்சொல்வதற்கு காரணம், திராவிட முன்னேற்ற கழகம் இன்று நேற்றல்ல - உலகத்திலே எந்த ஒரு மாநிலத்திலும், எந்த ஒரு நாட்டிலும் அன்னியப்பட்டு கிடக்கிற அடித்தளத்து மக்களை சாதாரண - சாமான்ய மக்களை, விடுதலை முழக்கமிடுகின்ற மக்களை ஆதரிக்கின்ற இயல்பு கொண்டது என்பதும், வரலாறு கொண்டது என்பதும் எல்லோரும் அறிந்த ஒன்று. அப்படிப்பட்ட வரலாற்றுக்குரிய தி.மு.க. அதன் தலைவர் என்ற முறையில், நான் இந்த போராட்டத்திலே எத்தகைய முடிவு எடுக்க வேண்டியிருந்தது என்பதையும், எத்தகைய குழப்பங்களையெல்லாம் அப்போதிருந்த அ.தி.மு.க. ஆட்சி விளைவித்தது என்பதையும், தயவு செய்து எண்ணிப்பார்க்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றேன். உண்மையான தமிழன், தமிழன் அழிகிறானே என்று கவலைப்பட்ட தமிழன் கருணாநிதி. தி.மு.க.வில் உள்ள தமிழர்கள் - இலங்கையிலே இருக்கின்ற தமிழர்களுக்காக என்றைக்கும் கண்ணீர் விடுபவர்கள் - என்றைக்கும் பரிந்து பேசக்கூடியவர்கள் - என்றைக்கும் போராடக் கூடியவர்கள் என்பதை உணர்ந்து அப்படிப்பட்ட தமிழர்களால் நடத்தப்படுகின்ற இந்தப் பேரியக்கத்தின் பிள்ளைகளாக உள்ள ஜனநாயக முற்போக்குக் கூட்டணியினுடைய வேட்பாளர்களை ஆதரித்து வெற்றி பெறச் செய்தால் நான் சொன்ன இந்த வார்த்தைகளுக்கு மதிப்பு," என்றார் முதல்வர் கருணாநிதி. vikatan.com
-
தமிழகம் கருத்துக் கணிப்புகளில் முடிவு: அதிமுக கூட்டணி அமோக வெற்றி
அதிமுக கூட்டணிக்கு வெற்றி: லயோலா கருத்துக் கணிப்பு எதிர்வரும் 2011 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்று லயோலா கல்லூரி மாணவர்கள் நடத்திய கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. அதிமுக ஆட்சிக்கு வரும் என்று 51.1 சதவீத வாக்காளர்களும், திமுக வுக்கு அந்த வாய்ப்பு இருப்பதாக 36.7 சதவீத வாக்காளர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு தேர்தலின் போதும் லயோலா கல்லூரியின் மக்கள் ஆய்வகம் மாநில அளவில் பொது மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தி முடிவுகளை வெளியிடுவது வழக்கம். அதன்படி, மார்ச் மாதம் 21ம் தேதி தொடங்கி 29ம் தேதி வரையிலும் பேராசிரியர் ராஜநாயகம் தலைமையில் தமிழகத்தில் உள்ள 117 சட்டமன்ற தொகுதிகளில் கள ஆய்வு நடத்தி இன்று அதற்கான முடிவுகள் வெளியிடப்பட்டது. லயோலா கல்லூரி கருத்துக் கணிப்பு முடிவுகளின் முக்கிய அம்சங்கள்: * தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் பொது மக்கள் இன்று வாக்கு அளிப்பதாக இருந்தால் எந்த கட்சிக்கு வாக்களிப்பீர்கள் என்று கேட்கப்பட்டதற்கு பதில் அளித்த வாக்காளர்கள் அதிமுக அணிக்கு 48.6 சதவீதம் பேரும், திமுக அணிக்கு 41.7 சதவீதம் பேரும் ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். முடிவு செய்யவில்லை என்று 8.2 சதவீதமும் பிறருக்கு வாக்களிப்பதாக 1.5 சதவீத பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். * சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலில் அதிமுக அணி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றும் என்று 51.1 சதவீதம் பேர் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். இதில், அதிமுக தனித்து வெற்றி பெறும் என்று 25.9 சதவீதம் பேரும், அணியுடன் இணைந்து பெரும்பான்மை பெறும் என்று 25.2 சதவீதம் பேரும் கூறியுள்ளனர். * திமுக அதிக பெரும்பான்மை இடங்களை பெறும் என்று கருத்து தெரிவித்துள்ள 36.7 சதவீதம் மக்களில் திமுக தனித்து வெற்றி பெறும் என்று 16.2 சதவீதம் பேரும், அந்த அணியினரோடு இணைந்து தான் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்ற முடியும் என 20.5 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். * தொகுதி அளவிலான விவரங்களை நுணுகி ஆராய்ந்து கருத்துக் கணிப்பு நடத்தியதில் 5 சதவீதத்துக்கும் அதிக மான வாக்குகளுடன் அதிமுக அணிக்கு 105 தொகுதிகள் வரை சாதகமாக இருப்பதாகவும், திமுக அணிக்கு சாத கமாக 70 தொகுதிகள் இருப்பதாகவும் இந்த கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. மீதமுள்ள 59 தொகுதிகளில் இரு அணிகளுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். * தேர்தல் ஆணையம் பொறுப்புடனும் பாரபட்சமற்ற வகையிலும் செயல்படுவதாக 60.5 சதவீதம் பேர் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். 24.7 சதவீதம் பேர் அந்த ஆணையம் அதிகார வரம்பை மீறி கண்டிப்புடன் செயல்படுவதாக தெரிவித்துள்ளனர். * திமுக மற்றும் அதிமுக அணிகளை ஒப்பிடும்போது தொகுதி பிரச்னைகளை தீர்ப்பதில் அதிமுக அணி கவனம் செலுத்தும் என்று 33.7 சதவீதம் பேரும், திமுக அணிக்கு சாதகமாக 21.9 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். * மதிமுக தேர்தலை புறக்கணித்திருப்பதாக அறிவித்திருப்பதால் யாருக்கும் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்று 53.6 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். அதிமுக அணிக்கு பாதிப்பு ஏற்படும் என்று 25.4 சதவீதம்பேர் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். * அரசியல் கட்சிகளின் தேர்தல் வியூகத்தில் எந்த அணி சிறப்பாக செயல்பட்டது என்பது குறித்த கருத்துக் கணிப்பில் தேர்தல் அறிக்கையில் திமுக அணிக்கு 49.4 சதவீத ஆதரவும், அதிமுக அணிக்கு 43.5 சதவீத ஆதரவும் இருப்பதாக அந்த கருத்துக் கணிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. * சுமூகமான தொகுதி பங்கீடு, சரியான வேட்பாளர்கள் தேர்வு, உட்கட்சி பூசல்கள் இல்லாதது, சிறுபான்மையினர் ஆதரவு, டிவி பத்திரிகை விளம்பரங்கள், சுவர், சுவரொட்டி பேனர்கள், தெருமுனை கூட்டங்கள் மற்றும் பொதுக்கூட்டங்கள், வாக்காளர்களுடன் நேரிடை சந்திப்பு, தலைவர்களின் பிரச்சாரம் ஆகிய தேர்தல் வியூகங்களில் பெரும்பாலானவற்றில் திமுகவே முன்னிலை பெற்றிருப்பதாகவும், ஒரு சில அம்சங்களில் மட்டுமே அதிமுக அணி முன்னிலை பெற்றிருப்பதாகவும் இந்த கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது. vikatan.com
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று தன் பிறந்த தினத்தை கொண்டாடும் தோழி யாயினிக்கு என் இனிய அன்பான பிறந்த தின வாழ்த்துகள்...
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று (19 /03 ) பிறந்த நாளை கொண்டாடும் இணையவணுக்கு பிறந்த தின வாழ்த்துகள் !!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நெடுக்ஸ் இற்கும் குட்டி புலவர்ஸ் இற்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
உறவுகள் அனைவரையும் தன் நகைச்சுவையால் மகிழ்விக்கும் 'தமிழ் சிறி' க்கும், சிறந்த ஆக்கங்களை இணைக்கும் வீணாவுக்கும் என் இனிய பிறந்த தின வாழ்த்துகள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சிறந்த நண்பன் நுணாவுக்கு என் இனிய பிறந்த தின வாழ்த்துகள்