Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிழலி

கருத்துக்கள பொறுப்பாளர்கள்
  • Joined

Everything posted by நிழலி

  1. மாற்றியாச்சு அன்புத்தம்பி
  2. சுண்டலுக்கு பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள். இந்த வருடமாவது தனக்கேற்ற பெண்ணைக் கண்டு பிடிச்சு கலியாணம் கட்ட என் மேலதிக வாழ்த்துக்கள்.
  3. மாற்றியாச்சு. அப்படியே நான் போற வழியில் புண்ணியத்தினையும் அனுப்பி வையுங்கள். பேச்சுத் துணைக்காவது இருக்கட்டும்.
  4. ஏற்கனவே ஒரு உறுப்பினர் இப் பெயரில் இணைந்து இருக்கின்றார். இன்னொரு பெயரை தாருங்கள்.
  5. குழந்தை மனம் கொண்ட என் நிலாமதி அக்காவுக்கு இனிய மனம்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
  6. பிறந்த நாள் வாழ்த்துக்கள் சுமே..
  7. யாயினி பாட்டிக்கு என் பிறந்த தின வாழ்த்துக்கள்!
  8. இன்று (மார்ச் 11) பிறந்த நாளைக் கொண்டாடும் யாழின் வித்தகர்களில் ஒருவரான இனிய கள உறவு புங்கையூரனுக்கு என் இனிய பிறந்த தின வாழ்த்துக்கள்.
  9. யார் பிசாசு என்று கட்டினவனுக்குத் தான் தெரியும். நாங்கள் எல்லாம் வீட்டில எலிகளாக்கும். வாழ்த்துக்கு நன்றி சுபேஸ். ம்.. ம்... கட்டினவனுக்குத் தான் தெரியும் மனிசி எப்படி பூஜிக்கின்றார் என்று.. வாழ்த்துக்கு நன்றி கு.சா அண்ணா வாழ்த்துக்கு நன்றி ammaa நன்றி தமிழரசு...
  10. அநேகமாக நாளைக்கு பிரச்சனைகள் தீரும் என்று நம்புகின்றோம். அப்படியும் தீர வில்லை என்றால் கதிர்காமக் கந்தனுக்கு மொட்டை அடித்து காவடி எடுத்துப் பார்க்கலாம் என்றும் எண்ணியுள்ளோம்.
  11. அண்மையில் பிறந்த நாள் கொண்டாடிய தமிழ் சிறி, நெடுக்கு, புலவர் மகன் ஆகியோருக்கும் என் இனிய பிறந்த தின வாழ்த்துக்கள்.
  12. சேர்வர் மாற்றத்தின் காரணமாகத்தான் யாழை பார்ப்பதில் பலருக்கு பிரச்சனைகள் வருகின்றன. வழக்கம் போன்று மோகன் பிரச்சனைகள் ஒவ்வொன்றாக தீர்த்துக் கொண்டு வருகின்றார். கூடிய விரைவில் சரியாகும்.
  13. சரி செய்ய முயல்கின்றோம்.. முகப்பில் இடும் இணைப்புகள் ஒவ்வொன்றும் இடும் பெட்டியின் நீளம் அகலம் என்பனவற்றை ஒற்றி தானாவே தீர்மானிக்கப்படுவதால், சில தலைப்புகள் முழுமையாக வருவதில்லை. ஆனால் அதனை கிளிக் பண்ணி உள்ளே செல்லும் போது முழுமையாக வாசிக்க முடியும். இந்த விளம்பரங்கள் நேரடியாக யாழுக்கு கிடைக்கும் விளம்பரங்கள் அல்ல. கிளிக் பண்ணி உள்ளே செல்லும் போது அது இன்னொரு தளத்துக்கே எடுத்துச் செல்கின்றது. எனவே இதற்கான இணைப்பினை யாழின் இன்னொரு பகுதி ஒன்றில் கொடுப்பது சரியான நடவடிக்கையாக இருக்காது. இப்போது இருக்கும் மரண அறிவித்தல் பகுதியை சற்று மேலே நகர்த்த முனைகின்றோம்.
  14. IE 11 இல் இப் பிரச்சனை இருக்கின்றது. இப்போதைக்குள்ள ஒரே இலகுவான மாற்று வழி IE11 இல் இருந்து 10 இற்கு downgrade பண்ண வேண்டியதுதான். அல்லது, Firefox அல்லது Chrome பாவியுங்கள்.
  15. மூதாதையர்களின் வழியொற்றி பெருவாழ்வு வாழும் ராஜவன்னியனுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
  16. என் பிறந்த தினத்துக்கு வாழ்த்து தெரிவித்த சுபேஸ், புங்கையூரன், குமாரசாமி, nunavilan, கறுப்பி, துளசி, தமிழ் சிறி (அந்த சிவாஸ் ரீகல் சூப்பர்), யாயினி (வாழ்த்து அட்டை அழகாக இருக்கு), மெசொபொத்தேமியா சுமேரியர் , வல்வை சகாறா, ராசம்மா ஆகிய தோழர் தோழிகளுக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றி. அடுத்த வருடம் 40 இனை எட்டிப் பிடிக்கின்றேன். இப்ப 30 இன் இறுதியில் நின்று கொண்டு இருக்கின்றேன். மனசு முழுதும் காதலும், அழகியலுமாக விரிந்து செல்கின்றது. வாழ்க்கைக்கு அர்த்தம் தரும் இரண்டு பிள்ளைகள், வாழ்க்கையையே தரும் மனைவி, அன்பான நண்பர்கள், நினைவில் நிற்கும் கள உறவுகள், என்றுமே எனக்காக உருகத் துடிக்கும் அம்மா, சிநேகிதியாக அக்கா என்று வாழ்க்கை ரம்மியமாக போகின்றது. கடந்து போகும் ஒவ்வொரு வருடமும், இன்னொரு வருடத்தினை வாழ்வதற்கான அவாவினை தந்து கழிகின்றது.
  17. இன்று தன் பிறந்த நாளை கொண்டாடும் கள உறவு கவிஞர் ஜெயபாலன் அண்ணாவுக்கு (பொயட்) என் இனிய பிறந்த தின வாழ்த்துகள். பல்லாண்டு வாழ்ந்து தமிழுக்கும் கவிதைக்கும் வளம் சேர்க்கட்டும்!!
  18. இந்த திரியில் தேவையில்லாத அரட்டைகளைத் தவிர்த்தால் எமக்கு நிர்வகிப்பதற்கு சுலபம். பெயர் மாற்றம் கேட்பவர்கள் கூடிய வரைக்கும் ஆங்கிலப் பெயர்களை, ஆங்கிலச் சொற்களை சேர்த்துக் கொள்வதை தவிர்க்கவும்.
  19. இன்று பிறந்த நாளை கொண்டாடும் தோழி வல்வை சகாறா , நண்பன் ரகுநாதனுக்கும், இசை ரசிகன் முத்துவுக்கும் என் மனங்கனிந்த பிறந்த தின வாழ்த்துகள். சகாறா, போன முறை உங்கள் கண்கண்ட தெய்வத்திடம் இருந்து இளையராஜா நிகழ்ச்சிக்கான ரிக்கெட் கிடைத்தது, இந்தமுறை என்ன கிடைத்தது? ரகுநாதன், பிறந்த நாளில் வழக்கம் போல ரென்ஷனாக இருக்கக் கூடாது...ஓக்கேயா.. கொஞ்சம் பாட்டுகளையும், சினிமாவையும், அழகிகளையும் ரசியுங்கள்.. முத்து சார், உங்களிடம் கேட்டு தரவிறக்கம் செய்ய நிறைய பழைய பாடல்கள் வைத்து இருக்கின்றேன்..
  20. ஜெயபாலன் அண்ணா, நீங்கள் இதனை தொடர்ந்து எழுதுவதில் இருந்து தெரிகின்றது. நீங்கள் உயிரோடு இருப்பது தொடர்பாக நிழலிக்கு விருப்பம் இல்லை என்று தொடர்ந்து காட்ட முனைகின்றீர்கள் என்று. அனுதாபம் தேட முயலும் உங்களுடன் இதற்கு மேலும் விவாதிப்பதில் அர்த்தம் இல்லை என்று நம்புகின்றேன். அத்துடன், கைதாகிய பின் எரிக்சொல்க்ஹெய்ம் சொல்ல முன்பே முஸ்லிம்கள் சொல்ல முன்பே உங்களுக்கு கைபேசியில் வெளிநாட்டவர்களுடன் உரையாட விட்ட சிங்களம் உங்கள் உயிருக்கு ஆபத்தினை விளைவிக்காது என்பதும் எங்களுக்குத் தெரிந்தே தானிருந்தது. அதே போன்று, உங்களுக்கு உதவியவர்களின் பாதுகாப்பை இரண்டு வார இடைவெளிக்குள் இரண்டாம் அறிக்கை எழுதுவதற்குள் முற்றிலுமாக உறுதிப்படுத்தக் கூடிய இலகுவான நெகிழ்வான இராணுவச் சூழ்நிலை அங்கு இல்லை என்பதும் எனக்குத் தெரியும். நன்றி வணக்கம்
  21. அன்பான ஜெயபாலன் அண்ணா, உங்கள் விரிவான பதிலுக்கு மிகவும் நன்றி. நான் உங்களுக்கு எழுதிய விடயங்கள் உங்களுக்கு புரிகின்ற விதமாக எழுதவில்லையோ என்று சந்தேகம் வருகின்றது. இப்பொழுது சுருக்கமாக சொல்ல முயல்கின்றேன். நீங்கள் கைது செய்யப்பட்டு விட்டதாக உங்கள் முகநூலில் வந்த தகவலைக் கண்டதில் இருந்து விடுதலையாகிய செய்தி வரும் வரைக்கும் உங்கள் விடுதலையை மிகவும் விரும்பிய உறவுகளில் நானும் இருந்தேன். எந்த விதமாகினும் விடுதலையாக வேண்டும் என்பதே எனது எண்ணமுமாக இருந்தது. அதே நேரத்தில், உங்கள் விடுதலையை விரும்பிய காரணத்துக்காக முதல் அறிக்கை என்று நீங்கள் வெளியிட்டு இருக்கும் அறிக்கையை நான் ஆதரிக்க வேண்டும் என்று அர்த்தம் இல்லை. உங்கள் முதல் அறிக்கையினை கண்டித்து விமர்சிப்பதால் மட்டுமே நான் அதி தீவிர தமிழ் தேசியத்தினை வலியுறுத்துகின்றவராக நீங்கள் நிறுவ முயல்வது தவறு. என் எழுத்துகள் என்றுமே அதி தீவிர தமிழ் தேசியத்தை வலியுறுத்துவன அல்ல. அத்துடன் புலம்பெயர்ந்த ஒருவர் தாயகத்துக்கு செல்வதை ஒரு தவறான விடயமாக பார்க்கும் சிந்தனையும் என்னிடம் இல்லை. என்னைக் கேட்டால் தாயகத்திற்கு ஒவ்வொரு புலம்பெயர்ந்த தமிழரும் தன் பிள்ளைகளுடன் சென்று காட்டி அந்த மண்ணுடனான நேரடி பரிச்சயத்தினை பேண வேண்டும் என்பதையே வலியுறுத்துவேன் (இதன் அர்த்தம் சுற்றலாவாக செல்வது அல்ல). எனவே நீங்கள் தாயகம் சென்றதோ அல்லது மீண்டும் அங்கு செல்ல நினைப்பதோ தவறு என்று ஒரு இடத்திலும் குறிப்பிட வில்லை, அப்படி எண்ணவும் இல்லை. நீங்கள் அங்கு சென்று கைதாகியதும் விடுதலையானதும் ஒரு சாதாரண நிகழ்வாக கொள்ள முடியவில்லை. சிங்களம் தன் மேலதிகாரத்தினை வெளிநாட்டில் இருந்து வெளிநாட்டு குடியுரிமை பெற்றுச் செல்கின்றவர்கள் மீதும் எந்தவித விட்டுக் கொடுப்பும் இல்லாமல் பிரயோகிக்கும் என்பதை மீண்டும் உலகுக்கு காட்டும் ஒரு செயல். கைதில் இருந்து விடுவிப்பு வரை நிகழ்ந்த ஒவ்வொரு சம்பவத்திலும், ஒவ்வொரு கிளைச் சம்பவங்களிலும் எந்த நெகிழ்வுத் தன்மையும் இல்லாமல் பேரினவாத அம்சம் நிறைந்து கிடக்கின்றது. ஆனால் உங்கள் முதல் அறிக்கை இந்த பேரினவாத அம்சங்களை வெளிக்காட்டுகின்றதா? மீண்டும் இதனை அழுத்திக் கேட்கின்றேன், உங்கள் முதல் அறிக்கை இந்த பேரினவாத அம்சங்களை அதன் அதே தீவிரத் தன்மையுடன் வெளிக்காட்டுகின்றதா? இல்லை என்று தான் நான் சொல்வேன். பேரினவாதத்தின் தீவிரத்தினை காட்டமல் விட்டது மட்டுமன்றி, அதனை நீர்த்துப் போகின்ற செயலைத்தான் உங்கள் அறிக்கை செய்கின்றது என்பதே என் முடிவு. முக்கியமாக அரச மேல்மட்டம் (உங்கள் அறிக்கையில் கோத்தா) நெகிழ்வுத் தன்மையுடன் இருப்பது போன்றும் அதன் கீழ் மட்டம் (உங்கள் அறிக்கையில் பொலிஸ் கான்ஸ்டபிள்) தான் பேரினவாதத்தின் தீவிரத்துடன் இருப்பது போன்றும் உங்கள் அறிக்கையின் அரசியல் பேசவில்லையா? இதைத்தான் நான் கடுமையாக விமர்சிக்க முயல்கின்றேன். ஜெயபாலன் என்ற தனிமனிதனுடன் எனக்கு எந்தவிதமான விரோதமும் இல்லை, 'உவன் எங்கள் சொத்து' என்று வாஞ்சையுடன் அழைக்கும் வண்ணம் தான் ஜெயபாலன் என்ற மனிதனுக்குள் புதைந்து கிடக்கும் நுட்பமான கவிஞன் இருக்கின்றான். அவனை எப்பவும் ஆராதிப்பேன். அவன் கவிதைகளை உரத்துப் படித்துக் காட்டி என் பிள்ளைகளுக்கும் கவிதாவுணர்வை கொண்டு வரப் பார்பேன். அந்தக் கவிஞனுடனும், ஜெயபாலன் என்ற தனிமனிதனுடனும் எனக்கு எந்தக் கோபமும் இல்லை. ஆனால் அவன் அரசியலில் கண்டிப்பாக கோபம் இருக்கின்றது. அந்த அரசியலை வெளிக்காட்டிக் கொண்டு இருக்கும் 'முதல் அறிக்கையில் கோபம் இருக்கின்றது. அதை கண்டிப்பாக தொடர்ந்து எதிர்பேன். அது தொடர்பாக தொடர்ந்து விவாதிக்கவும் விரும்புவேன் நன்றி நிழலி (மற்றது, குருபரன் குளோபல்செய்தித் தளத்தில் செய்தி போடும் முன் முகநூல் தகவலை வைத்து யாழில் உங்கள் கைதை செய்தியாக மணிவாசகன் போட்டு இந்தத் திரியை ஆரம்பித்து இருந்தார். ஆகவே உங்கள் கைதை செய்தியாக முதலில் உலகுக்கு கொண்டு வந்தது உங்கள் முகநூலும் எங்கள் யாழும் தான் )

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.