Everything posted by தமிழ் சிறி
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
இவ்வளவு காலமும்... "வனவாசம்" போயிருந்தீர்களா. 🤣
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
மியாவ்.... எனக்குத் தெரிந்தால், எல்லாருக்கும் தெரிந்த மாதிரித்தான். 😂
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நீங்கள் பதிந்த கருத்து, எனக்குத் தெரிகின்றது.
-
சுவிட்சர்லாந்தில் பேருந்து தீ விபத்து : யாழ் இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு!
காலை 5 மணிக்கு நடந்த சம்பவம் போல் தெரிகின்றது. வேலைக்குப் போன ஆட்களாக இருக்கலாம்.
-
காத்தான்குடி கடற்கரையில் கரையொதுங்கிய மர்மப் பொருள்!
காத்தான்குடி தலிபான்களுக்கு... ஈரானில் இருந்து ஆயுதங்கள் வந்து இறங்கி உள்ளது போலுள்ளது.
-
சுவிட்சர்லாந்தில் பேருந்து தீ விபத்து : யாழ் இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு!
இவர்... தனக்குத்தானே தீ வைத்தார் என்று, எந்த ஊடகத்திலும் வரவில்லை. மேலுள்ள செய்தியில் கூட... "குறித்த பேருந்தில் பயணித்த ஒருவர்" தீ ... வைத்ததாகவே குறிப்பிடப் பட்டுள்ளது. உண்மை எது என்று தெரியவில்லை. அதே நேரம் அந்த பேரூந்தில் பயணித்த, வேறு தமிழ்ப் பெண் ஒருவரும் தீ காயங்களுக்கு உள்ளாகி மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாக சில செய்திகளில் உள்ளது.
-
அதிமுகவில் இணைந்தார், நாம் தமிழர் கட்சி காளியம்மாள் - பழனிசாமி முன்னிலையில் ஐக்கியம்!
அன்று அவர் தவழ்ந்து.. முதல் அமைச்சராக பதவி பெற்று இருக்காவிடில், அடுத்த சில மாதங்களில், அரசியலில் இருந்தே காணாமல் போயிருப்பார். அதன் பின் அவர் இரண்டு முறை முதலமைச்சராக 10 வருடங்கள் இருந்தது ஒரு சாதனைதான். அரசியலில் அதிரடி முடிவை எடுப்பவர்கள்... உயர் பதவிக்கு சென்ற வரலாறுகள் பல. அதில் இதுவும் ஒன்று. அம்புட்டுத்தான். 😂
-
காத்தான்குடி கடற்கரையில் கரையொதுங்கிய மர்மப் பொருள்!
காத்தான்குடி கடற்கரையில் கரையொதுங்கிய மர்மப் பொருள்! மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி கடற்கரையில் பாரியளவிலான மர்மப்பொருள் ஒன்று கரையொதுங்கியுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஐ. பி அழககோன் தெரிவித்தார். நேற்று மாலை குறித்த மர்மப் பொருள் கரையொதுங்கியுள்ளது . சுமார் 25 அடி நீளமும், 4 ஆடி உயரமும் கொண்ட இந்த மர்மப் பொருள் ரெஜிபோர்மினால் காணப்படுகிறது. கப்பல் தரைதட்டும்போது அதன் பாதுகாப்பிற்கு பயன்படும் தடுப்பு ஆணையாக இது இருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. குறித்த மர்மப்பொருள் தொடர்பான விசாரணைகளை கடற்படையினர் மேற்கொண்டு வருவதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார். குறித்த மர்மப்பொருள் தொடர்ந்தும் காத்தான்குடி கடற்கரையில் காணப்படுகிறது.இதனை பார்வையிட பொதுமக்கள் கூடி வருகின்றனர். https://athavannews.com/2026/1468417
-
‘அரச சுபநேரக் குழுவை’ நியமிக்க, முடிவுக்கு வந்த காலக்கெடு! இன்று முற்பகல் விகாரையில் ஆலோசனை!
அரசாங்க கலாச்சார அமைச்சே... சுபநேரக் குழு என்று, ஒரு அமைப்பை நடத்தி வந்துள்ளது. யாழ் களத்தில் தான்... சாத்திரம், சம்பிரதாயம், சுப நேரம் என்று.... திராவிட பெரியார் வழித்தோன்றல்களின் "அலப்பறை" தாங்க முடியவில்லை. 🤣
-
அதிமுகவில் இணைந்தார், நாம் தமிழர் கட்சி காளியம்மாள் - பழனிசாமி முன்னிலையில் ஐக்கியம்!
தி.மு.க. வில் சேர்ந்து... ஸ்ராலின், உதயநிதி, இன்பநிதி என்று... பரம்பரை அடிமை சேவகம் செய்வததை விட... ஒறிஜினல் தமிழன் பழனிச்சாமி கட்சியில் சேர்ந்தது ஓகே. 😂
-
கருத்து படங்கள்
- ‘அரச சுபநேரக் குழுவை’ நியமிக்க, முடிவுக்கு வந்த காலக்கெடு! இன்று முற்பகல் விகாரையில் ஆலோசனை!
‘அரச சுபநேரக் குழுவை’ நியமிக்க, முடிவுக்கு வந்த காலக்கெடு! இன்று முற்பகல் விகாரையில் ஆலோசனை! கலாசார திணைக்களம் 2024 ஆம் ஆண்டில் ‘அரச சுபநேரக் குழுவை’ கலைத்ததோடு, அரசாங்கம் இதுவரையில் மீண்டும் ஒரு சுபநேரக் குழுவை நியமிக்கவில்லை. இம்முறை புத்தாண்டு சுபநேரங்கள் போயா குழுவின் உறுப்பினர்களாலேயே அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அரச சுபநேரக் குழுவொன்றை நியமிக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்து ஜோதிடர்கள் குழுவொன்று கடந்த செவ்வாய்க்கிழமை (10) அரசாங்கத்திற்கு தமது அதிருப்தியை வெளியிட்டது. இதற்கிடையில், ஜோதிடர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் அடங்கிய குழுவொன்று புத்தசாசன அமைச்சுக்கு சென்று அரச சுபநேரக் குழுவை உடனடியாக மீளச் செயற்படுத்துமாறு கோரிக்கை விடுத்திருந்தது. இவ்வாறானதொரு பின்னணியில், அரச சுபநேரக் குழுவை ஸ்தாபிக்க அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்காவிடின், தமது கட்சியின் தலையீட்டின் மூலம் மக்களுக்கான புத்தாண்டு சுபநேர பத்திரத்தை முன்வைப்பதாக ‘சர்வஜன அதிகாரம்’ அறிவித்திருந்தது. இதற்கமைவாக, ‘சர்வஜன அதிகாரம்’ அரசாங்கத்திற்கு வழங்கிய காலக்கெடு இன்றுடன் முடிவடைந்துள்ள நிலையில், உறுதியளித்தபடி அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய புத்தாண்டு சுபநேர பத்திரம் ஒன்றை தயாரிக்குமாறு, பெபிலியான சுனேத்ரா மகா தேவி பிரிவென் ரஜமகா விகாரையின் பரிவேணாதிபதி பேராசிரியர் வண. மெதகொட அபயதிஸ்ஸ தேரரிடம் அவர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய, இன்று (14) அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ‘சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் , நாடாளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர உள்ளிட்ட குழுவினர் இன்று முற்பகல் குறித்த பிரிவெனாவுக்குச் சென்று பேராசிரியர் வண. மெதகொட அபயதிஸ்ஸ தேரரை சந்தித்தனர். இதற்கிடையில், பேராசிரியர் வண. மெதகொட அபயதிஸ்ஸ தேரரின் அழைப்பின் பேரில் 17 ஜோதிடர்கள் இன்று சுனேத்ரா மகா தேவி பிரிவெனாவுக்கு வருகை தந்து கலந்துரையாடியதுடன், அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய புத்தாண்டு சுபநேர பத்திரத்தை தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதன்படி, அனைவரினதும் இணக்கப்பாட்டையடுத்து குறித்த புத்தாண்டு சுபநேர பத்திரம் வெளியிடப்பட்டது. https://athavannews.com/2026/1468407- ஈரான் உச்ச தலைவர் குறித்து தகவல் வழங்கினால் 10 மில்லியன் அமெரிக்க டொலர் பணப் பரிசு – அமெரிக்கா அறிவிப்பு
ஈரானின் அதி உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியை காட்டிக் கொடுத்தால்... 10 மில்லியன் டொலர் என்பது மிகவும் 👎 குறைந்த தொகை. அந்தப் பிசாத்துக் காசை அமெரிக்காவே வைத்திருக்கட்டும். 😂- போரில் வெற்றி பெற்றதாக ட்ரம்ப் அறிவிப்பு; எண்ணெய் கப்பல்களை தீக்கிரையாக்கும் ஈரான்!
ஈரானிய யுத்தத்தில் வெற்றி பெறுவதாக ட்ரம்ப் உரிமை கோரல்: தெளிவான 'வெளியேறும் திட்டம்' இல்லையென சர்வதேச நாடுகள் கவலை! அமெரிக்கா - ஈரானிய யுத்தம் ஆரம்பமாகி 12 நாட்கள் கடந்துள்ள நிலையில், கள யதார்த்தம் மற்றும் யுத்தத்தின் இறுதி இலக்கு குறித்து அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் முரண்பாடான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை மற்றும் உள்நாட்டில் சரிந்து வரும் செல்வாக்கு ஆகியவற்றிற்கு மத்தியில், இந்த யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான தெளிவான 'வெளியேறும் திட்டம்' (Exit Strategy) வெள்ளை மாளிகையிடம் இல்லை என எதிர்க்கட்சிகள் மற்றும் சர்வதேசக் கூட்டாளிகள் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர். மாறிவரும் யுத்த இலக்குகளும் காலக்கெடுவும் யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட போது "ஈரான் நிபந்தனையற்ற முறையில் சரணடைய வேண்டும்" என முழங்கிய அதிபர் ட்ரம்ப், தற்போது ஒரு புதிய ஆட்சி மாற்றத்தை (Regime Change) ஏற்றுக்கொள்வது போன்ற மென்மையான தொனியில் பேசத் தொடங்கியுள்ளார். யுத்தத்தின் தற்போதைய நிலை குறித்து செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்த அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத், "இது யுத்தத்தின் ஆரம்பமா, நடுப்பகுதியா அல்லது முடிவா என்பதை அதிபர் ட்ரம்ப்பே தீர்மானிப்பார்" எனக் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான தெளிவற்ற அறிக்கைகள், 12 நாட்களைக் கடந்து நீடித்து வரும் இந்த மோதல் ஒரு முடிவற்ற திசையை நோக்கிச் செல்கின்றதோ என்ற அச்சத்தை உலக நாடுகளிடையே ஏற்படுத்தியுள்ளது. பொருளாதார முடக்கம் மற்றும் ஹோர்மூஸ் நீரிணை அமெரிக்கப் படைகள் ஈரானியக் கடற்படையை முற்றுமுழுதாக அழித்துள்ளதாகக் கூறினாலும், உலகளாவிய எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியான ஹோர்மூஸ் நீரிணை (Strait of Hormuz) தொடர்ந்து முடக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் குண்டுவீச்சுகள் நிறுத்தப்படாத வரை, ஒரு லீற்றர் எரிபொருளைக் கூட குறித்த கடல் வழியாகச் செல்ல அனுமதிக்கப்போவதில்லை என ஈரானியப் புரட்சிகரக் காவல் படை சூளுரைத்துள்ளது. ஈரானின் தேசிய பாதுகாப்பு அதிகாரி அலி லாரிஜானி இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில், "ட்ரம்பின் வெற்று மிரட்டல்களுக்கு ஈரானிய மக்கள் அஞ்சப்போவதில்லை; எங்களை அழிக்க நினைப்பவர்கள் தாமே அழிந்து போவார்கள்" எனப் பதிலடி கொடுத்துள்ளார். உள்நாட்டு எதிர்ப்பு மற்றும் சர்வதேசக் கூட்டாளிகளின் அதிருப்தி. யுத்தத்தைத் தொடங்கியதன் மூலம் அமெரிக்கா தற்போது பாதுகாப்பு அற்ற நாடாக மாறியுள்ளதாக 50 சதவீதமான அமெரிக்க மக்கள் கருத்துக்கணிப்புகளில் தெரிவித்துள்ளனர். மேலும், ட்ரம்பின் முடிவுகளை 60 சதவீதமான மக்கள் நம்பத் தயாராக இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியா மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளின் தலைவர்கள் ட்ரம்ப்பின் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில், யேர்மனிய அதிபர் பிரெட்ரிக் மெர்ஸ், "இந்த யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான கூட்டுத் திட்டம் ஏதும் அமெரிக்காவிடம் இல்லை என்பது கவலையளிக்கின்றது" எனத் தெரிவித்துள்ளார். பாடசாலைத் தாக்குதலும் ஏவுகணை சர்ச்சையும் யுத்தத்தின் முதல் நாளில் தெற்கு ஈரானில் உள்ள பெண் பிள்ளைகள் பாடசாலை ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 165 பேர் உயிரிழந்தமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறித்த தாக்குதலை ஈரான் மீது சுமத்த அதிபர் ட்ரம்ப் முயற்சித்த போதும், அமெரிக்காவின் 'டோமாஹாக்' (Tomahawk) ஏவுகணையே அங்கு வீழ்ந்து வெடித்ததாக ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஈரானிடம் டோமாஹாக் ஏவுகணைகள் இருப்பதாக அதிபர் ட்ரம்ப் தவறான தகவலை வெளியிட்டமை குறித்து அமெரிக்க செனட் சபை உறுப்பினர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். "உண்மை என்னவென்று தெரியாமல் வாய்க்கு வந்ததைப் பேசுவது ஒரு வல்லரசு நாட்டின் அதிபருக்கு அழகல்ல" என எதிர்க்கட்சித் தலைவர்கள் சாடியுள்ளனர். TubeTamil Media- அதிமுகவில் இணைந்தார், நாம் தமிழர் கட்சி காளியம்மாள் - பழனிசாமி முன்னிலையில் ஐக்கியம்!
அதிமுகவில் இணைந்தார், நாம் தமிழர் கட்சி காளியம்மாள் - பழனிசாமி முன்னிலையில் ஐக்கியம்! சென்னை: நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி காளியம்மாள் சென்னையில் இன்று (மார்ச் 13) காலை எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அவருக்கு கட்சியில் முக்கியப் பொறுப்பும், வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பும் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறையின் ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் பி.காளியம்மாள். தன்னுடைய அதிரடி பேச்சால் குறுகிய காலத்திலேயே பிரபலமடைந்தார். கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் வட சென்னை தொகுதி நாம் தமிழர் வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது 60,000 வாக்குகள் பெற்றார். அந்தத் தேர்தலின்போது அவரின் பேச்சுகள் சமூக வலைதளங்களில் வைரலாகின. அவர் கடந்த ஆண்டு பிப்ரவரியில் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகினார். அப்போது, “தமிழ்த் தேசியத்தை விதைக்கும் வகையில் எம் பயணம் தொடரும்” என அறிவித்திருந்தவர், எந்தக் கட்சியிலும் இணையாமல் இருந்தார். அவருடன் திமுக, அதிமுக, தவெக என அனைத்துக் கட்சிகளுமே பேச்சுவார்த்தையில் இருந்ததாகக் கூறப்பட்டது. இந்நிலையில், இன்று காலை அவர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்துள்ளார். பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்தப் பேட்டியில், “ஒரு தமிழனின் தலைமையில் இயங்கவே அதிமுகவில் இணைந்தேன். ஒரு சாதாரண குடும்பப் பின்னணியில் இருந்துவந்த எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்று நான் இன்று அதிமுகவில் இணைந்துள்ளேன்” என்றார். நாகையைச் சேர்ந்த காளியம்மாள் தனது ஆரம்ப காலத்தில் கடலோரப் பகுதி மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், 15 கடலோர மாவட்டங்களை ஒருங்கிணைத்து, ‘தமிழக மீனவ பெண் தொழிலாளர்கள் சங்கம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி, அதன் மாநில பொதுச் செயலாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட ஓராண்டு காலம் எந்தக் கட்சிக்கும் பிடி கொடுக்காமல் இருந்த காளியம்மாள் அதிமுகவில் இணைந்துள்ளது கவனிக்கத்தக்கது. காளியம்மாள் மேடைப் பேச்சுத் திறன் கொண்டவர். நாதகவில் இருந்தபோதே அவரது பேச்சால் அக்கட்சியின் தொண்டர்களைக் கட்டிப் போட்டதிலும், பெண்களை ஈர்த்ததிலும் அவருக்கு பங்கு இருந்தது. அதனாலேயே கட்சிக்குள் சீமான் அவருக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்க, பின்னாளில் அந்த முக்கியத்துவமே உரசலுக்கும் வித்திட்டது. பின்னர் நாதகவில் இருந்தே விலகினார். இப்போது அவர் அதிமுகவில் ஐக்கியமாகி உள்ளார். இது, அவரது ஆதரவாளர்களையும், நாதக அதிருப்தியாளர்களையும் ஈர்த்திட துணைபுரியும் என்பது அதிமுகவின் நம்பிக்கை. அத்துடன், அதிமுகவில் பெண் முகத்துக்கு பற்றாக்குறை என்பதைவிட துடிப்பான இளம் பெண்ணாக காளியம்மாள் இருப்பது மகளிரணிக்கு பெரும் பூஸ்டாக இருக்கும் என்று கட்சி கணித்துள்ளது.மகளிர் வாக்குகளைக் கவர, காளியம்மாளின் பேச்சு மிக முக்கிய அஸ்திரம் என்பதாலே அவருக்கு கட்சியில் முக்கியப் பொறுப்பு, தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வரை கொடுக்க அதிமுக தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. https://www.hindutamil.in/news/tamilnadu/ntk-former-cadre-kaliammal-joins-admk- போரில் வெற்றி பெற்றதாக ட்ரம்ப் அறிவிப்பு; எண்ணெய் கப்பல்களை தீக்கிரையாக்கும் ஈரான்!
- இலங்கையின் நிலத்தடிக்குள் ஒளிந்திருந்த மாபெரும் அதிசயம்!
இலங்கையின் நிலத்தடிக்குள் ஒளிந்திருந்த மாபெரும் அதிசயம்! தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் பிட்டபெத்தர பொலிஸ் நிலையத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட ஆழ்துளைக் கிணறு அகழ்வின் போது, இலங்கையின் மிகப்பெரிய நிலத்தடி நீர் ஆதாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தென் மாகாணத்திற்குப் பொறுப்பான புவியியலாளர் இந்திரஜித் கமகே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். ஒரு நிமிடத்திற்கு 10,000 லீற்றர் தொடர்ச்சியான நீர்வரத்தைக் கொண்ட நீர் ஊற்று ஒன்று இலங்கையில் கண்டறியப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். இதற்கு முன்னர் இலங்கையில் கண்டறியப்பட்ட மிகப்பெரிய நீர் ஆதாரம் மடு பகுதியில் அமைந்திருந்தது. அதன் நீர்வரத்து ஒரு நிமிடத்திற்கு 7,000 லீற்றராகக் காணப்பட்டது. பாறை அடுக்குகளை ஆய்வு செய்து, அந்த அடுக்குகளுக்கு இடையிலான இடைவெளிகள் ஊடாக நிலத்தடி நீர் இருக்கும் இடங்களை நவீன தொழில்நுட்பக் கருவிகள் மூலம் இனங்கண்ட பின்னரே இந்த அகழ்வுப் பணி முன்னெடுக்கப்பட்டது. இதன் மூலம் பிட்டபெத்தர, மொரவக்க மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் நீர்த்தட்டுப்பாட்டினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு எதிர்காலத்தில் குடிநீரை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. https://athavannews.com/2026/1468315- புதிய அரசியல் கட்சியின் பெயரை வெளியிட்டார் வி.கே.சசிகலா!
புதிய அரசியல் கட்சியின் பெயரை வெளியிட்டார் வி.கே.சசிகலா! அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (AIADMK) தலைவரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவின் உதவியலாளரான வி.கே. சசிகலா இன்று (13) தனது புதிய அரசியல் கட்சியின் பெயரை அறிவித்தார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78 ஆவது பிறந்த நாளான கடந்த பெப்ரவரி 24 ஆம் திகதி புதிதாக கட்சியை தொடங்கி உள்ளதாக சசிகலா அறிவித்தார். இந்த நிலையில் இன்று சென்னை போயஸ் கார்டனில் செய்தியாளர்களைச் சந்தித்த சசிகலா, கட்சியின் பெயரை அறிவித்தார். அதன்படி, தனது கட்சியின் பெயர் அனைத்து இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் (All India Puratchi Thalaivar Makkal Munetra Kazhagam) என்று தெரிவித்ததுடன், தனது கட்சியின் சின்னம் தென்னந்தோப்பு என்றும் அறிவித்தார். தனது புதிய கட்சியின் பெயரை அறிவிக்கும் போது அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட அவர், அக்கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆர். அவர்களை அன்புடன் நினைவு கூர்ந்தார். மக்களுக்கு சேவை செய்வதற்கும், திமுகவை எதிர்த்து நிற்பதற்கும் எம்.ஜி.ஆர். கட்சியை நிறுவினார் என்றும், ஏழைகளின் நலனுக்காக ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் நிறுவப்பட்ட கட்சி அது என்றும் அவர் குறிப்பிட்டார். ஒரு காலத்தில் அதிமுகவின் தற்காலிக பொதுச் செயலாளராகவும், முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய உதவியாளராகவும் இருந்த சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதை அடுத்து கட்சியில் இருந்து நீக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1468304- கருத்து படங்கள்
- செம்மணி புதைகுழி விசாரணை – மூன்றாம் கட்ட அகழ்வு ஏப்ரல் 20ல்!
செம்மணி புதைகுழி விசாரணை – மூன்றாம் கட்ட அகழ்வு ஏப்ரல் 20ல்! செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழி வழக்கு நேற்று (12) யாழ். நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. அதன்போது, புதைகுழியை சூழவுள்ள பகுதிகளை வாரத்தில் இரண்டு தினங்கள் சட்ட வைத்திய அதிகாரியின் நேரடி கண்காணிப்பில் துப்பரவு பணிகளை முன்னெடுக்க வேண்டும் என நல்லூர் பிரதேச சபைக்கு மன்று கட்டளையிட்டுள்ளது. அத்துடன் புதைகுழி பகுதியில் அகழ்வு பணிகளில் ஈடுபடுவர்களுக்காக மற்றும் பொருட்களை வைப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கொட்டகைகள் டித்வா புயல், அதனை தொடர்ந்து யாழில் பெய்த பருவ மழை காரணமாக சேதமடைந்துள்ளன. அவற்றினை அங்கிருந்து அகற்றி, புதிய கொட்டகைகளை அமைக்கவும், அகழ்வு பணிகளுக்கான தளபாடங்களை கடந்த அகழ்வு பணிகளுக்கு ஏற்பாடு செய்தது போன்று நல்லூர் பிரதேச சபை இம்முறையும் தளபாட வசதிகளுக்கு ஏற்பாடு செய்ய மன்று கட்டளையிட்டது. புதைக்குழி பகுதிக்கு நேரில் சென்று கள தரிசிப்பை மேற்கொள்வது என்றும் மன்றில் தீர்மானிக்கப்பட்டதற்கு அமைய நீதவான் எஸ்.லெனின்குமார், சட்ட வைத்திய அதிகாரி எஸ்.பிரணவன், சட்டத்தரணிகளான நிரஞ்சன், ரணித்தா, நல்லூர் பிரதே சபை செயலாளர் உள்ளிட்டோர் நேரில் சென்று புதைகுழியை பார்வையிட்டனர். அதன்போது புதைகுழிக்குள் தற்போதும் நீர் தேங்கி நிற்பதனால் எதிர்வரும் 28 ஆம் திகதி சட்ட வைத்திய அதிகாரியின் நேரடி கண்காணிப்பில் நீரினை வெளியேற்றும் நடவடிக்கைகளை முன்னெடுப்பது என்றும், ஏப்ரல் மாதம் 08 ஆம் திகதி குறித்த வழக்கு நீதிமன்றில் எடுக்கப்படும் எனவும், ஏப்ரல் 20 ஆம் திகதி மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை முன்னெடுப்பது எனவும் திகதிகள் இடப்பட்டன. https://athavannews.com/2026/1468255- “Work from home” தற்போது அவசியமில்லை – அரசாங்கம் தெரிவிப்பு!
“Work from home” தற்போது அவசியமில்லை – அரசாங்கம் தெரிவிப்பு! மத்திய கிழக்கு மோதல்களால் உலகளாவிய நெருக்கடி ஏற்பட்டாலும், தற்போது நாட்டில் வீட்டிலிருந்து வேலை செய்வது (Working from home) அவசியமில்லை என்று வர்த்தக, வணிப உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க நேற்று (12) தெரிவித்துள்ளார். அரசாங்கம் முன்னேற்றங்களை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், நிலைமை மோசமடைந்தால், பொது மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்யும் ஏற்பாடுகளை அறிமுகப்படுத்துவது குறித்து பரிசீலிப்பதாகவும் அமைச்சர் கூறினார். இந்த மோதல் உலகளாவிய விநியோகச் சங்கிலிகளை சீர்குலைத்து, கப்பல் செலவுகளை அதிகரித்து, சர்வதேச சந்தைகளில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை உயர்த்தியுள்ளது. குறிப்பாக உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் இதனால் உயர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். எரிபொருள் விலைகள் ஏற்கனவே உள்ளூரில் சரிசெய்யப்பட்டிருந்தாலும், ஏப்ரல் மாதத்திற்குள் புதிய ஏற்றுமதிகள் அதிக விலையில் வரும்போது மேலும் அதிகரிப்பு ஏற்படக்கூடும் என்றும் அமைச்சர் எச்சரித்தார். சில தனியார் எரிவாயு விநியோகஸ்தர்கள் விலைகளை அதிகரிக்க முயற்சித்ததாகவும், ஆனால் அரசாங்கம் நிலைமையைக் கண்காணித்து விலை நிலைத்தன்மையைப் பராமரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் மேலும் கூறினார். உலகளாவிய மோதல்கள் பற்றிய செய்திகள் வெளிவந்தவுடன் எரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசைகள் பெரும்பாலும் உருவாகின்றன என்பதைக் குறிப்பிட்டு, பீதியடைந்து வாங்குவதைத் தவிர்க்கவும், வளங்களை பொறுப்புடன் பயன்படுத்தவும் அவர் பொதுமக்களை வலியுறுத்தினார். https://athavannews.com/2026/1468239- இந்த ஆண்டின் மிகப்பெரிய போதைப்பொருள் பறிமுதல்!
இந்த ஆண்டின் மிகப்பெரிய போதைப்பொருள் பறிமுதல்! இலங்கை கடற்படையினரால் நேற்று டிக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட பல நாள் மீன்பிடிக் கப்பலில் இருந்து 478 கிலோ கிராம் படிக மெத்தம்பேட்டமைன் (ICE) மற்றும் 176 கிலோ கிராம் ஹெரோயின் உள்ளிட்ட மொத்தம் 654 கிலோ கிராம் போதைப்பொருள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். நாட்டின் தெற்கே உள்ள சர்வதேச கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பின்னர், போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களை கொண்டு சென்றதாக சந்தேகிக்கப்படும் இரண்டு பல நாள் மீன்பிடி இழுவை படகுகள் நேற்று (12) டிக்கோவிட்ட துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டன. தெற்கு கடற்கரைக்கு அப்பால் கடலில் தடுத்து நிறுத்தப்பட்ட இரண்டு இழுவைப் படகுகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் கையிருப்பின் பெறுமதி ரூ. 10 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர நேற்று உறுதிப்படுத்தினார். இதற்கிடையில், இரண்டு படகுகளிலும் இருந்த மொத்தம் 10 சந்தேக நபர்களையும் கடற்படையினர் கைது செய்தனர். இலங்கையின் தெற்கே சர்வதேச கடற்பரப்பில் நீண்ட தூர கடற்படைக் கப்பல்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட சிறப்பு கடற்படை நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான இழுவைப் படகுகள் அடையாளம் காணப்பட்டன. ஒரு இழுவைப் படகைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, 600 கிலோ கிராம்களுக்கு மேல் எடையுள்ள போதைப்பொருள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் ஏராளமான சாக்குப்பைகளை கடற்படை வீரர்கள் கண்டுபிடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அதே கப்பலில் இருந்து எட்டு கைத்துப்பாக்கிகள், மெகசின்கள், இரண்டு T-56 துப்பாக்கிகள் மற்றும் ஒரு M16 துப்பாக்கி ஆகியவற்றை கடற்படை மீட்டது. M16 துப்பாக்கி என்பது பொதுவாக பாதுகாப்புப் படைகளின் சிறப்பு உறுப்பினர்களால் மட்டுமே பயன்படுத்தப்படும் ஒரு ஆயுதம் என்று கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட இரண்டாவது பல நாள் மீன்பிடி இழுவைப் படகு, ஏனைய படகிற்கு கண்காணிப்பு மற்றும் உதவியை வழங்கியதாக சந்தேகிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் தென் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இரண்டு மீன்பிடி படகுகளும் சந்தேக நபர்களும் நேற்று டிக்கோவிட்ட மீன்வளத் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டனர். இந்த ஆண்டு இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட மிகப்பெரிய அளவிலான போதைப்பொருள் இதுவென்று இலங்கை கடற்படை கூறியுள்ளது. https://athavannews.com/2026/1468249- ரஷ்யாவில் எண்ணெய் கொள்வனவு செய்ய அமெரிக்க அனுமதி
ரஷ்ய எண்ணெயை வாங்குவதற்கான ட்ரம்பின் அனுமதியுடன் எண்ணெய் விலை சரிவு! ஈரான் போரினால் பாதிக்கப்பட்டுள்ள உலகளாவிய எரிசக்தி சந்தைகளை உறுதிப்படுத்துவதற்கான ஒரு படியாக, கடலில் சிக்கித் தவிக்கும் ரஷ்ய எண்ணெய் மற்றும் பெற்றோலியப் பொருட்களை வாங்குவதற்கு அமெரிக்கா நாடுகளுக்கு 30 நாள் உரிமத்தை வழங்கியது. இது ஈரான் போரினால் பாதிக்கப்பட்டுள்ள உலகளாவிய எரிசக்தி சந்தைகளை உறுதிப்படுத்துவதற்கான ஒரு படியாகும் என்று அமெரிக்க திறைசேரியின் செயலாளர் ஸ்காட் பெசென்ட் கூறியுள்ளார். ஈரான் மோதலினால் எண்ணெய் விலைகள் உயர்ந்து வருவதைத் தடுக்கும் முயற்சியாக, மூலோபாய பெற்றோலிய இருப்பில் இருந்து 172 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெயை அமெரிக்கா வெளியிடும் என்று அமெரிக்க எரிசக்தித் துறை கூறிய ஒரு நாள் கழித்து இந்த அறிவிப்பு வந்துள்ளது. அந்த வெளியீடு 32 நாடுகளைக் கொண்ட சர்வதேச எரிசக்தி நிறுவனத்தின் 400 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெயை வெளியிடுவதற்கான பரந்த உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாகும். 2026 மார்ச் 12 ஆம் திகதி நிலவரப்படி கப்பல்களில் ஏற்றப்பட்ட ரஷ்ய மசகு எண்ணெய் மற்றும் பெற்றோலியப் பொருட்களை விநியோகிப்பதற்கும் விற்பனை செய்வதற்கும் அங்கீகாரம் அளிக்கும் இந்த உரிமம் 2026 ஏப்ரல் 11 ஆம் திகதி நள்ளிரவு வொஷிங்டன் நேரம் வரை செல்லுபடியாகும் என்று திறைசேரித் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட உரிமத்தின் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை தொடர்ந்து வெள்ளிக்கிழமை (13) காலை எண்ணெய் விலைகள் குறைந்ததுடன், இது விநியோக கவலைகளையும் தணித்தது. GMT நேரப்படி 01.23 மணியளவில் பிரெண்ட் ஃபியூச்சர்ஸ் மசகு எண்ணெய் 71 சென்ட்கள் அல்லது 0.71% குறைந்து ஒரு பீப்பாய்க்கு $99.75 ஆகவும், அமெரிக்க மேற்கு டெக்சாஸ் இடைநிலை (WTI) மசகு எண்ணெய் 88 சென்ட்கள் அல்லது 0.92% குறைந்து $94.85 ஆகவும் இருந்தது. முன்னதாக மார்ச் 5 அன்று அமெரிக்க திறைசேரி இந்தியாவிற்கு 30 நாள் விலக்கு அளித்தது, இதன் மூலம் கடலில் சிக்கித் தவிக்கும் ரஷ்ய எண்ணெயை புது டெல்லி வாங்க அனுமதித்தது. எரிசக்தி விலைகளைக் கட்டுப்படுத்தும் ஏனைய நடவடிக்கைகளுடன், வளைகுடாவில் கடல்சார் வர்த்தகத்திற்கான அரசியல் ஆபத்து காப்பீடு மற்றும் நிதி உத்தரவாதங்களை வழங்குமாறு ட்ரம்ப் ஏற்கனவே அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு நிதி நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், அமெரிக்க கடற்படை அப்பகுதியில் கப்பல்களைப் பாதுகாக்க முடியும் என்றும் கூறினார். விலைகளைக் கட்டுப்படுத்தும் மற்றொரு முயற்சியாக, எரிசக்தி மற்றும் விவசாயப் பொருட்கள் அமெரிக்க துறைமுகங்களுக்கு இடையில் சுதந்திரமாகச் செல்வதை உறுதி செய்வதற்காக, ஜோன்ஸ் சட்டம் எனப்படும் கப்பல் விதியை தற்காலிகமாகத் தள்ளுபடி செய்வது குறித்து ட்ரம்ப் நிர்வாகம் பரிசீலித்து வருவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இந்த விதியை விலக்குவது வெளிநாட்டு கப்பல்கள் அமெரிக்க துறைமுகங்களுக்கு இடையில் எரிபொருளை எடுத்துச் செல்ல அனுமதிக்கும், இது செலவுகளைக் குறைக்கும் மற்றும் விநியோகங்களை விரைவுபடுத்தும். வியாழக்கிழமை (12) நிலவரப்படி உலகளவில் 30 வெவ்வேறு இடங்களில் சுமார் 124 மில்லியன் பீப்பாய்கள் ரஷ்ய எண்ணெய்க் கப்பல்கள் கடலில் இருப்பதாக ஃபாக்ஸ் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1468242- போரில் வெற்றி பெற்றதாக ட்ரம்ப் அறிவிப்பு; எண்ணெய் கப்பல்களை தீக்கிரையாக்கும் ஈரான்!
இராணுவ இரகசியங்களை வெளியே சொல்லக் கூடாது.- சுவிட்சர்லாந்தில் பேருந்து தீ விபத்து : யாழ் இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு!
சுவிட்சர்லாந்தில் பேருந்து தீ விபத்து : யாழ் இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு! சுவிட்சர்லாந்தில் பேருந்தில் தீ பரவி ஏற்பட்ட விபத்தில் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட இளைஞன் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுவிஸ் தலைநகர் பெர்னில் இருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் உள்ள ஃப்ரிபோர்க்கின் மேற்கு வலயத்தில் சுமார் 5,000 மக்கள் வசிக்கும் கெர்சர்ஸின் மையத்திற்கு அருகிலுள்ள வீதியில் இடம்பெற்ற 6 பேர் உயிரிழந்ததுடள் 5 பேர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்த 6 பேரில், யாழ்ப்பாணம் - இணுவில் பகுதியைப் பூர்வீகமாகக் கொண்ட 30 வயதான தினேஸ் என்ற இளைஞனும் அடங்கியுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இறுதி அஞ்சலி செலுத்தினர் இந்த நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு சுவிட்சர்லாந்து ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த சம்பவம், விபத்தா, அல்லது பயங்கரவாத தாக்குதலா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதேவேளை குறித்த பேருந்தில் பயணித்த ஒருவர் தனக்கு தானே தீ மூட்டிக்கொண்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. IBC Tamilசுவிட்சர்லாந்தில் பேருந்து தீ விபத்து : யாழ் இளைஞன் பரிதா...சுவிட்சர்லாந்தில் பேருந்தில் தீ பரவி ஏற்பட்ட விபத்தில் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட இளைஞன் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தக...#################### ################# சுவிற்சர்லாந்தின் பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இணுவிலை பூர்வீகமாககொண்ட இளைஞர் தினேஸ் கனகரத்தினம் (தவராசா) சாவடைந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆழ்ந்த அனுதாபங்கள்! 😥 சுவிஸ் காவற்துறை தரப்பினால் இன்னமும் உத்தியோகபூர்வமாக அறிக்கை வெளியிடவில்லை. இது உறவுகளினூடாக கிடைத்த தகவல். Inuvaijur Mayuran வாழ வேண்டிய இள வயது. ஆழ்ந்த அனுதாபங்கள். - ‘அரச சுபநேரக் குழுவை’ நியமிக்க, முடிவுக்கு வந்த காலக்கெடு! இன்று முற்பகல் விகாரையில் ஆலோசனை!
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.