Everything posted by தமிழ் சிறி
-
இரசித்த.... புகைப்படங்கள்.
இரண்டு வீடுகளுக்கு உள்ள வேலியின் கீழ்... குனிந்து நுழைந்து அடுத்த வீட்டிற்கு செல்ல, முன்னைய யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் இந்தப் பொட்டு அமைத்து இருப்பார்கள். எங்கள் வீட்டிலும் இப்படி ஒன்று இருந்தது. இப்போ... மதில்கள் எல்லாம் வந்து, அயல் வீடடையும் அந்நியமாக்கி விட்டது. ###################### ################# போர்க் காலத்தில் நாம் அவசரத்திற்கு ஓட... கை கொடுத்த பொட்டு, கடப்பு... இன்றும் சில இடங்களில் உள்ளது. வேலியின் கீழ்ப் பகுதியை வெட்டி அதற்குள்ளால் போனால் அது பொட்டு. வேலியின் மேல் அரைப் பகுதியை வெட்டி அதற்கு மேலாகக் கடந்து போனால் அது கடப்பு. Babu Babugi
-
யோகர் சுவாமிகள்.
தவத்திரு யோகர் சுவாமிகளின் குருபூஜை தினம் இன்று. ( பங்குனி ஆயிலியம்) ஈழத்தின் சரித்திரப் பிரசித்தி பெற்ற மாவிட்டபுரத்திலே அம்பலவாணர் என்னும் சைவப் பெரியார் ஒருவர் வாழ்ந்தார். இவரது மனைவி சின்னாச்சி அம்மையார் இவர்களது பூர்வ புண்ணிய விசேடத்தினாலே 29.05.1872 இல் அவிட்ட நட்சத்திரத்தில் ஓர் ஆண்மகவு பிறந்தது. பெற்றோர் இக்குழந்தைக்கு யோகநாதன் என்று நாமகரணம் சூட்டினர். அம்பலவாணர் மஸ்கெலியா என்ற மலைப் பிரதேசத்தில் கடை ஒன்று நடத்தி வந்தார். யோகநாதனுடைய கல்வி விடயத்தை யோசேப்பு கவனித்து வந்தார். அதனால் யோகநாதன் மாவிட்டபுரத்தைவிட்டு கொழும்புத்துறையில் வாழ வேண்டிய சூழ்நிலை உருவானது. அக்காலத்தில் சைவப் பாடசாலைகள் மிக மிகக் குறைவு. அதனால் யோகநாதனின் கல்வி கத்தோலிக்கப் பாடசாலையிலேயே ஆரம்பமானது. இளமையில் துடுக்குடையவராயும், புத்தி யுக்தி உள்ளவராயும் வாழ்ந்து வந்தார். யோகநாதனுக்கு வயது எட்டாயிருக்கும் போது தாயார் இறந்துவிட்டார். சிறிய தந்தையார் யோகநாதனுடைய கல்வியில் மிகுந்த ஊக்கம் காட்டினார். ஆங்கிலக் கல்வி கற்கும் பொருட்டு சம்பத்திரிசியார் கல்லூரியில் இணைக்கப்பட்டார். பகலில் சிறிய தகப்பனார் வீட்டிலும், மாலையில் யாழ்ப்பாணம் கச்சேரிக்கு அருகாமையிலுள்ள தந்தை வழி மாமியாராகிய முத்துப்பிள்ளை அவர்களுடைய இல்லத்துக்கும் போய்விடுவார்கள். எட்டாம் வகுப்பு வரை ஆங்கிலம் கற்றார். அம்பலவாணர் யோகனை அழைப்பித்து தேயிலைத் தோட்டம் ஒன்றிலே வேலைக்கு அமர்த்தினார். மலையகத்தின் இயற்கைச் சூழ்நிலை யோகனின் மனதைக் கவர்ந்தது. ஒருநாள் யோகநாதன் சிவனொளிபாதம் சென்று சூரியன் உதிக்கும் காட்சியினைக் கண்டு மகிழ்ந்து வந்தார். சிவனொளி பாதம் சென்று வந்த யோகநாதன் இயற்கையின் சூழலிலே தமது மனதைப் பறிகொடுத்து விட்டார். அதனால் தன்பாட்டிலேயே பேசத் தொடங்கினார். இது எல்லாம் உண்மை. எனது உடம்பு சிவன் சொத்து. சிவனுக்கே அது சொந்தம். அவனையே தேடிப் போனேன். இந்த விபரீத எண்ணங்களைக் கண்ட தந்தையார் இவரை யாழ்ப்பாணத்திற்கே அனுப்பிவைத்தார். யோகர் சும்மா இருக்கமாட்டார். உத்தியோகம் தேடித்திரிவார். இரணைமடுக்குளம் கட்டுமான வேலை நடைபெற்ற காலம் அங்கு சென்ற போது பிறவுண் என்ற பொறியியலாளர் பண்டகசாலை பாதுகாவலர் என்ற உத்தியோகத்தை இவருக்கு அளித்தார். உங்கள் கடமையை மறவாதீர்கள் என்று எல்லோருக்கும் உபதேசித்த சுவாமிகள் நேர்மையாகவும் உண்மையாகவும் வேலை பார்த்தார். பொறியியலாளரிடம் ஒரு நன்மதிப்பை பெற்றுக்கொண்டார். யோகநாதன் கிளிநொச்சியை விட்டு மாவிட்டபுரம் திரும்பினார். அவருக்கு அப்போது வயது 32. தந்தையும் இறந்துவிட்டார். தாயை எட்டு வயதில் இழந்தார். தந்தையை வாலிப வயதில் இழந்தார். ஆனால் மாவிட்ட கந்தன் கருணையை இழக்கவில்லை. கீரிமலையிலும் மாவிட்டபுரத்திலும் மாறி மாறி வசித்தார். கீரிமலையிலிருந்து நடையிலேயே நல்லூருக்கு வருவார். ஆத்மீகத் தாகம் மேலிட்ட காலம். குரு ஒருவரை தேடி அலைந்த காலம். பற்றுக்கோடாக இருந்த இரு முதுகுரவரையும் இழந்த போது பற்றுக்கோடு ஒன்றை நாடினார். நல்லூர்த் தேரடியில் செல்லப்பா சுவாமிகளை சந்தித்தார். செல்லப்பா சுவாமிகளின் பார்வை இவரை காந்தமெனக் கவர்ந்தது. குருநாதனை சந்தித்த அனுபவத்தை அவரே கூறுகின்றார். கருத்தில் நினைந்துருகி கைகூப்புந் தொண்டர் வருத்தமெலாந் தீர்க்கும் வடிவேல்– திருத்தலத்தில் தேரடியில் தேசிகனைக் கண்டு தரிசித்தேன். ஆரடா நீ என்றான் அவன் விசர்ச் செல்லப்பா என்று மக்களால் ஏசப்பட்ட செல்லப்பா சுவாமிகளைச் சூழ ஒரு கூட்டம் கூடத் தொடங்கியிருந்த காலம் செல்லப்பா சுவாமிகளின் அரிய சீடர்கள் கதிரவேலுச்சாமியும், யோகநாதனும் ஆவர். பெரும்பாலும் மூவரும் ஒன்று கூடித்திரிவர். சண்டை போடுவர். சமையல் செய்வர். சமையல் முடியும் தருணத்தில் சட்டி பானையை உடைப்பர். இச்செயலைக் கண்டால் யார்தான் இவர்களைப் பைத்தியம் என்று கூறமாட்டார்கள். யோகர் சுவாமிகள்கொழும்புத்துறையில் சிற்றம்பலம் சம்பந்தர் என்னும் ஒரு சைவப் பெரியார் வளவில் றோட்டுப் பக்கமாக ஒரு இலுப்பை மரம். இந்த இலுப்பை மரத்தின் கீழேதான் யோகர் சுவாமிகளுடைய அருந்தவம் நடைபெற்றது. கொழும்புத்துறை வளவில் இருந்த கடையொன்றைத் திருநாவுக்கரவு என்பவர் திருத்தி அமைத்துக் குடிசை ஒன்று கட்டிக்கொடுத்து சுவாமிகளை அதில் தங்குமாறு அவரும் அவரது தாயாரும் அன்புடன் வேண்டிக் கொண்டனர். அவர்களுடைய அன்புக்கு கட்டுப்பட்ட சுவாமிகள் பூத உடலைவிட்ட உயிர் பிரியும் வரை அக்குடியையிலேயே வாழ்ந்து வந்தார்கள். சுவாமிகளை நாடி நாள் தோறும் கூட்டம் கூடத் தொடங்கியது. செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் பெருங்கூட்டம் திருமுறைகள் பாராயணம் இடம்பெறும். எல்லாத் தரங்களிலும் உள்ள மக்கள் ஒன்று கூடுவார்கள். ஆன்மீக தாகம் கொண்டவர்களும் வருவார்கள். தங்கள் இட்டல் இடைஞ்சல்களை தீர்த்துக் கொள்வதற்காகவும் வருவார்கள். சுவாமிகளை சோதித்துப் பார்க்கவும் வருவார்கள். சுவாமிகள் தம்மை நாடி வந்தவர்களுடைய உள்ளப்பாங்கை அறிந்து அவர்களுக்கேற்ற வகையில் புத்திமதிகள் கூறுவார்கள். சிலரை ஏசியும் துரத்துவார்கள். அதைப் பொருட்படுத்தாமல் தம்மைத் மேலும் மேலும் நாடி வந்தவர்களை அன்புடன் அணைத்து அருளுரை வழங்குவார்கள். அவர்களை ஏசுவதன் மூலம் அவர்கள் வினைகளைச் சுவாமிகள் தொலைத்து விடுவார்கள். இவ்வுண்மையை உணர்ந்த அடியார்கள் சுவாமிகளின் மறமயக் கருணையை நினைந்து நினைந்து ஆனந்த புஷ்பம் சொரிவார்கள். “எல்லோரும் ஒரு குலம், எல்லோரும் ஒரு இனம்” என்பது சுவாமிகள் தம்மை நாடி வருபவர் களுக்கு அடிக்கடி கூறும் உபதேச மாகும். ‘எனக்கும் உனக்கும் என்ன வித்தியாசம். எல்லோரும் சமம்’ என்றும் கூறுவார்கள். “நீயும் மனிதன் நானும் மனிதன் உங்கள் கடமையைப் போய்ச் செய்யுங்கள். இங்கே ஏன் வருகின்றீர்கள்? நாங்கள் பிச்சைக்காரர்கள், நாங்கள் சும்மா இருக்கின்றோம். எங்களைத் தொந்தரவு செய்யாதீர்கள்” என்று ஏசிக்கலைப்பதும் உண்டு. “கர்மவினையால் எமக்கு இப்பிறவி வந்தது. நாம் ஒன்றும் அறியோம். நாம் ஏன் இங்கு பிறந்தோம்? இப்பிறவியால் ஒரு பொல்லாப்பும் இல்லை. அதனால் பாதகமும் இல்லை. பிறப்பு வர இருந்தது. வந்துவிட்டது. நாங்கள் ஆத்மலாபத்தை நல்லாய்த் தேடிக் கொள்ளலாம்.” என்று உபதேசம் செய்தார்கள். சுவாமிகளுடைய உபதேசங்களை எலலோருக்கும் பரப்ப வேண்டும் என்று அடியார் கூட்டம் விரும்பியது. சுவாமிகளிடம் மாத வெளியீடு ஒன்று வெளியிடுவது பற்றி அடியார்கள் விண்ணப்பித்தார்கள். சுவாமிகளும் அதற்கிசைந்து நாம் எல்லோரும் சிவத் தொண்டர்கள். நாம் செய்வது சிவத்தொண்டு ஆகவே எமது வெளியீடும் ‘சிவத் தொண்டன்’ ஆக இருக்கட்டும் என்றார்கள். 1935ம் ஆண்டு மார்கழி மாதம் முதலாவது இதழாகிய சிவத்தொண்டன் திரு. க. கி. நடராசன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்தது. சிவத்தொண்டனுக்கு நிலையம் ஒன்று காங்கேசன்துறை வீதியில் 4-11-1953 இல் உருவானது. அந்த நிலைய மேல் மாடியில் இன்னும் தியான மண்டபத்தில் சுவாமிகளுடைய ஆன்மிக அலையை இன்னும் அனுபவிக்கலாம். சுவாமிகள் தமது அடியார்கள் எங்கெங்கு இருந்தார்களோ அங்கங்கெல்லாம் செல்வார். யாருக்கும் அறிவித்தல் கொடுக்க மாட்டார். இருந்தாற் போல் ஒரு அடியவருடைய வீட்டில் தோன்றுவார். கேள்வியுற்ற அடியவர்கள் எல்லோரும் அங்குவந்து கூடுவர். அவர்களுக்கெல்லாம் நல்லுபதேசம் கிடைக்கும். சிலசமயம் கண்மூடி சிவயோகத்திலே ஆழ்ந்து விடுவார். அன்பர்களும் தியானத்தில் மூழ்கி ஆனந்தம் பெறுவர். இரண்டு வருடகாலம் சுவாமிகள் கொழும்புத்துறை ஆச்சிரமத்தை விட்டு எங்கும் செல்லவில்லை. 24.03.1964 செவ்வாய்க்கிழமை அதிகாலை ஆயிலிய நட்சத்திரத்தில் சுவாமிகள் மகாசமாதி அடைந்தார்கள். சுவாமிகளுடைய குருபூசை ஆயிலிய நட்சத்திரத்தில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. எவ்வுயிரும் பெருமான் முன்னிலையென்று கருணை செய் கடவுள் உள்ளும் புறமும் உள்ளார். சுவாமிகளின் மறைவுக்குப் பின்னர் அவரது சீடர்களான மார்க்கண்டு சுவாமிகள், சந்த சுவாமிகள், செல்லத்துரை சுவாமிகள் போன்றோர் அவரது பணியை முன்னெடுத்துச் சென்றார்கள். Thivakara Sarma ·
-
அமெரிக்காவின் 2ஆவது F-35 ரக அதிநவீன போர் விமானம் ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டது
அமெரிக்காவிற்கு... அடி மேல் அடி விழுந்து கொண்டுள்ளது. 😂 அமெரிக்காவிற்கு... இன்னொரு வியட்நாம் தான், ஈரான். 🤣 வெட்கப் படாமல்... வெள்ளைக் கொடியுடன், ஈரானிடம் சரண் அடைவதே புத்திசாலித்தனம். 😂 🤣
-
கருத்து படங்கள்
- அமெரிக்காவின் 2ஆவது F-35 ரக அதிநவீன போர் விமானம் ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டது
இரண்டு அமெரிக்கப் போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய ஈரான்! ஈரான் மற்றும் வளைகுடா வான் பரப்பில் இரண்டு அமெரிக்கப் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து, இரண்டு விமானிகள் மீட்கப்பட்டதாகவும், மூன்றாவது விமானி காணாமல் போயுள்ள நிலையில், அவரை தேடும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் ஈரான் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும், பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்ஸெத்தும் வளைகுடா வான்வெளி மீது தங்கள் படைகளுக்கு முழுமையான கட்டுப்பாடு இருப்பதாகக் கூறி வரும் நிலையில், ஈரான் வான்பரப்பில் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய விமானங்கள் இன்னமும் எதிர்கொள்ளும் அபாயங்களை இந்தச் சம்பவங்கள் அடிக்கோடிட்டுக் காட்டுவதாக அமைந்துள்ளன. இரு இருக்கைகள் கொண்ட முதல் அமெரிக்க F-15E ரக விமானம் ஈரானியத் தாக்குதலால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இரு நாடுகளின் அதிகாரிகளும் தெரிவித்தனர். இரண்டாவது விமானமான, A-10 வார்ஹொக் (Warthog) ரகப் போர் விமானம் ஈரானியத் தாக்குதலுக்கு உள்ளாகி குவைத்தின் மீது விழுந்து நொறுங்கியதில், விமானி வெளியே குதித்ததாக இரண்டு அமெரிக்க அதிகாரிகள் கூறினர். ஈரானியத் தாக்குதலுக்கு உள்ளான போதிலும் குறித்த விமானங்கள் ஈரானிய வான்வெளியை விட்டு வெளியேறிவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. விமானக் குழுவினருக்கு ஏற்பட்ட காயங்களின் அளவு தெளிவாகத் தெரியவில்லை. அதேநேரம், காணாமல் போன F-15E விமானக் குழு உறுப்பினரை தேடும் பணிகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன. ஈரானின் தென்மேற்குப் பகுதியில் எதிரியின் விமானம் விழுந்த இடத்திற்கு அருகிலுள்ள ஒரு பகுதியைத் தாங்கள் சல்லடை போட்டுத் தேடி வருவதாக ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படை கூறியுள்ளது. அதேநேரம், எதிரியின் படைகளை பிடிப்பவர்கள் அல்லது அவர்களை கொல்பவர்களுக்குப் பாராட்டு வழங்கப்படும் என்று பிராந்திய ஆளுநர் உறுதியளித்தார். https://athavannews.com/2026/1470940- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சகோதரி @யாயினிக்கு..., பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். 🙏- ஈரான் மின்சாரக் கட்டமைப்பு, பாலங்களைத் தகர்க்கப்போவதாக ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை
- கருத்து படங்கள்
- ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
- ஹோர்மூஸ் நீரிணையை 'திறக்க' போர் கப்பல்கள் ஏன் அனுப்பப்படவில்லை?
- அமெரிக்காவின் 2ஆவது F-35 ரக அதிநவீன போர் விமானம் ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டது
வீழ்ந்த விமானத்தின் விமானியை... அமெரிக்க விமானங்கள் தேடிக் கொண்டுள்ளது.- ஈரான் மின்சாரக் கட்டமைப்பு, பாலங்களைத் தகர்க்கப்போவதாக ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை
- தமிழ் ஏதிலி நாடு கடத்தல் குறித்து நீதிமன்றமே தீர்மானிக்கும் – கெரி ஆனந்த சங்கரி
தமிழ் ஏதிலி நாடு கடத்தல் குறித்து நீதிமன்றமே தீர்மானிக்கும் – கெரி ஆனந்த சங்கரி. சுமார் 16 ஆண்டுகளுக்கு முன்பு கடல் வழியாக கனடாவிற்கு வந்த தமிழ் ஏதிலி ஒருவரை இலங்கைக்கு நாடு கடத்தும் விவகாரத்தில், தாம் தலையிடப் போவதில்லை என கனடாவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் கேரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். 2010-ஆம் ஆண்டில் ‘எம்.வி. சன் சீ’ (M.V. Sun Sea) கப்பல் மூலம் கனடாவின் மேற்கு கடற்கரைக்கு வந்த 492 பேரில் ஒருவரான குமார் துரைசிங்கம் என்பவரின் எதிர்காலம் குறித்து நீதிமன்றமே தீர்மானிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இது குறித்து கருத்துத் தெரிவித்த அமைச்சர் ஆனந்தசங்கரி, “இந்த விவகாரம் தற்போது நீதிமன்றத்தின் முன் உள்ளது. நீதிமன்றமே இது குறித்து முடிவெடுக்கட்டும். கடந்த காலங்களில், ‘சன் சீ’ கப்பலில் வந்தவர்கள் இலங்கைக்குத் திரும்பக் கூடாது என நான் வாதிட்டுள்ளேன். ஏனெனில், அங்கு திரும்பிய ஒருவர் அரசாங்கத்தால் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. இருப்பினும், இந்த விவகாரத்தை விசாரிக்க கனடிய நீதிமன்றங்களே சரியான இடம் என்று நான் நம்புகிறேன்,” என்றார். குமார் துரைசிங்கத்தின் வழக்கறிஞர் கேஸ் போஸ்கேட் (Kes Posgate) கூறுகையில், குமார் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டால் அவர் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தார். முன்னதாக, இதே கப்பலில் வந்த சத்தியபவன் ஆசிர்வாதம் என்பவர் இலங்கைக்குத் திரும்பியபோது சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறி சத்தியக்கடதாசி தாக்கல் செய்திருந்ததை வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார். 2010-ஆம் ஆண்டு இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்த பிறகு, தாய்லாந்திலிருந்து புறப்பட்ட ‘எம்.வி. சன் சீ’ சரக்குக் கப்பல் மூலம் 492 தமிழர்கள் கனடாவிற்கு வந்தனர். இவர்களில் 63 சதவீதத்தினரின் ஏதிலி தஞ்சக் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. ஆனால், குமார் துரைசிங்கத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இருப்பினும், அவர் கடந்த 16 ஆண்டுகளாக ஸ்கார்பாரோ பகுதியில் தச்சராகப் பணியாற்றி கனடாவில் வசித்து வந்தார். அண்மையில் மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டைத் தொடர்ந்து, அவரை இலங்கைக்கு நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் முடுக்கிவிட்டுள்ளனர். “நான் 16 ஆண்டுகளாக இங்குள்ளேன், என்னைக் கனடியனாகவே உணர்கிறேன். இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டால் எனக்கு என்ன நடக்கும் என்று நினைத்தால் மிகுந்த அச்சமாக உள்ளது,” என குமார் துரைசிங்கம் கவலையுடன் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2026/1470898- பிள்ளையானை மீண்டும் தடுப்புக்காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு!
மாலை மரியாதை கோர்ட்டு சூட்டு என என்ன ஜாலியா வாழ்ந்த மனிசன்யா அவர்😌 பாவம் குளிக்கும்போதுகூட காதுல இருந்து Earbuds 🎧 ஐ கழட்ட மாட்டாரு🥲 அவரைப்போய்... 😂 🤣 Rajakulasingam Chandrakumar- ஈரான் பாலம் தாக்கப்பட்டதற்கு பதிலடியாக மத்திய கிழக்கில் 8 முக்கிய பாலங்கள் தாக்கி அழிக்கப்படும் - பட்டியல் வெளியிட்டது ஈரான்
"தாக்குதலில் சேதமடைந்த பாலங்களை எம்மால் மீண்டும் கட்டியெழுப்ப முடியும்; ஆனால் அமெரிக்காவைத் தண்டிப்பதற்கும், ஒழுங்குபடுத்துவதற்கும் கிடைத்துள்ள இந்த அரிய வாய்ப்பு மீண்டும் கிடைக்காது" என அவர் குறிப்பிட்டுள்ளார். -ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி- Ceylon Focus News 😂 🤣- 'உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் பிரதான சூத்திரதாரியை தேடிச்செல்லல்' மஹிந்த, மைத்திரி, கோட்டா,சஜித் பங்கேற்புடன் நூல் வெளியீடு
- பிள்ளையானை மீண்டும் தடுப்புக்காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு!
தலைமயிர் கறுப்பாகவும், தாடி வெள்ளையாகவும் உள்ளது. மறியலில்... தலைக்கு "டை" அடியும் நடக்குது போலுள்ளது. 😂- ஈரான் பாலம் தாக்கப்பட்டதற்கு பதிலடியாக மத்திய கிழக்கில் 8 முக்கிய பாலங்கள் தாக்கி அழிக்கப்படும் - பட்டியல் வெளியிட்டது ஈரான்
சபாஷ்... பலே... சரியான போட்டி. இப்படியே பேசிட்டு இருந்தா எப்படி... யார் பெரிசு என்று, அடித்துக் காட்டு(ங்க.) 😂- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
அரசியல்வாதி ஆகுவதற்கு உரிய தகுதிகள் அத்தனையும் இவருக்கு இருந்தாலும்.. இரண்டு பெண்டாட்டி, மூன்று பெண்டாட்டி இருந்தால்... இன்னும் சிறப்பாக இருக்கும். 😂- நாவற்குழியில் சிறுமியிடம் அத்துமீறிய பிக்கு விளக்கமறியலில்
இளநிலை பிக்குகள்... விகாரையில் பயிற்சி எடுக்க வரும் போதே.. ஆண்மை நீக்கம் செய்து (நலம் எடுத்து) சேர வேண்டும் என்ற சட்டத்தை, அரசு உடனடியாகயாக அமுல் படுத்த வேண்டும். அத்துடன்... இதுவரை, நலம் எடுக்கப் படாத... கிழட்டுப் பிக்குகளுக்கும் நலம் எடுக்க வேண்டி உள்ளது. ஊருக்குள் இவங்கள் தொல்லை தாங்க முடியவில்லை. @Kandiah57- பிள்ளையானை மீண்டும் தடுப்புக்காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு!
கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக... ராஜ வாழ்க்கை, வாழ்ந்த நான்... இப்போ பிச்சைக்காரன் மாதிரி இப்படியாயிட்டேன். 😂 🤣 நீண்ட நாட்களுக்குப் பின் வெளியில் வந்த பிள்ளையான் கைவிலங்குடன் அழைத்து வரப்பட்டு, மீண்டும் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.- குருக்கள்மடம் மனிதப் புதைகுழியில் முதற்கட்ட அகழ்வுப் பணிகள் மார்ச் 30 ஆரம்பம் - சட்டத்தரணி றாஸீ முஹம்மத் தெரிவிப்பு
புலிகள் 150 முஸ்லீம்களை... படு கொலை செய்து, குருக்கள்மடம் பகுதியில்.. புதைத்த மாதிரி கனவு கண்டோம். - காட்டான்குடி பாய்ஸ்.-- கருத்து படங்கள்
- பிள்ளையானை மீண்டும் தடுப்புக்காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு!
பிள்ளையானை மீண்டும் தடுப்புக்காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு! தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் இருந்த பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தன் என்பவரை , மீண்டும் தடுப்புக்காவலில் வைக்குமாறு கல்கிசை நீதவான் நீதிமன்றம் இன்று (02) உத்தரவிட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டு கிழக்கு மாகாண பல்கலைக்கழக உபவேந்தர் ஒருவர் காணாமல் போனமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் குறித்து, சட்ட மா அதிபரின் ஆலோசனை கிடைக்கும் வரை இவ்வாறு அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். https://athavannews.com/2026/1470794- எட்டு அரசு நிறுவனங்களை விற்கப் போவதில்லை என உயர் நீதிமன்றுக்கு அறிவிப்பு!
எட்டு அரசு நிறுவனங்களை விற்கப் போவதில்லை என உயர் நீதிமன்றுக்கு அறிவிப்பு! ஸ்ரீலங்கா டெலிகாம், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், காப்புறுதிக் கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா வைத்தியசாலை உள்ளிட்ட எட்டு அரச நிறுவனங்களை விற்பனை செய்வது தொடர்பான முந்தைய நிர்வாகத்தின் முடிவை தற்போதைய அரசாங்கம் செயல்படுத்தாது என்று சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். முன்மொழியப்பட்ட விற்பனையை எதிர்த்து கலாநிதி குணதாச அமரசேகர மற்றும் பிறர் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனு மீதான விசாரணையின் போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. நீதிபதிகள் அச்சல வெங்கப்புலி, மஹிந்த சமயவர்தன மற்றும் சம்பத் அபேய்கூன் ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன்பாக இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த மனுவில் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டவர்களில், முந்தைய அரசாங்கத்தின் அமைச்சரவையும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் அடங்குவர். சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான அரசு சட்டத்தரணி, தற்போதைய அரசாங்கம் நிறுவனங்களை விற்பனை செய்யும் நடவடிக்கையைத் தொடர வேண்டாம் என முடிவு செய்துள்ளதாகவும், மறுசீரமைப்பு முயற்சிகளை மேற்பார்வையிடுவதற்காக மட்டுமே ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மனுதாரர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி கனிஷ்க விதாரணா, அரசாங்கம் விற்பனை நடவடிக்கையைத் தொடரப் போவதில்லை என உறுதி செய்துள்ளதால், இந்த மனுவைத் தொடர்ந்து நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்று குறிப்பிட்டார். இரு தரப்பினரின் வாதங்களையும் பரிசீலித்த பின்னர், உயர் நீதிமன்ற அமர்வு மனு மீதான விசாரணையை நிறைவு செய்தது. https://athavannews.com/2026/1470852Important Information
By using this site, you agree to our Terms of Use.
- அமெரிக்காவின் 2ஆவது F-35 ரக அதிநவீன போர் விமானம் ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டது
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.