Everything posted by தமிழ் சிறி
-
போலித் தகவல்களை நிறுத்துங்கள்! பாகிஸ்தான் காலாவதியான பொருட்களை வழங்கியதா ?
பாகிஸ்தானியர்கள்... தம் நாட்டிலேயே, காலாவாதியான உணவுகளைத்தான் எப்போதும் சாப்பிடுவார்கள் போலுள்ளது. மகனுடன் வேலை செய்யும் ஒரு பாகிஸ்தான்காரன், தனது நாட்டிற்கு சுற்றுலா சென்று விட்டு திரும்பி வரும் போது, அங்கிருந்து கொண்டு வந்த "கரம் மசாலா" பக்கற் ஒன்றை கொடுத்துள்ளான். மகனும் அதனை பெரிய புளுகத்துடன் கொண்டு வந்து, எமக்கு காட்ட, நாம் முன் எச்சரிக்கையுடன் அதன் திகதியை பார்க்க... அது, காலாவதியாகி இரண்டு வருடம் கடந்து இருந்தது. 😂 இத்தனைக்கும்... அந்தப் பாகிஸ்தான்காரன் பொறுப்புள்ள பதவியில் இருப்பவன். அப்படி இருந்தும்.... ஒரு பொருளை மற்றவர்களுக்கு கொடுக்கும் போது, தரமானதாக கொடுக்க வேண்டும் என்ற அறிவு, இல்லாமல் போய் விட்டது.
-
அமெரிக்காவின் அமைதி திட்டத்தை மறுத்தால், உக்ரைனின் மேலும் பல பகுதிகள் கைப்பற்றப்படும் – புடின் எச்சரிக்கை!
"பேச்சுவார்த்தை நடத்தக்கூட ஐரோப்பாவில் யாரும் இருக்கமாட்டார்கள்!" - விளாடிமிர் புதின் அமெரிக்காவின் 28 அம்ச உக்ரைன் அமைதித் திட்டத்தை ஏற்க மறுக்கும் ஐரோப்பிய நாடுகள், ”உக்ரைனுக்கு நியாயமற்ற சமாதானத்தை திணிக்கக் கூடாது,” எனக்கூறி சமாதானத் திட்டத்தில் மாற்றங்களைச் செய்துள்ள நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார். DW தமிழ் அப்படி போடு, அருவாளை.... 😂
-
இரசித்த.... புகைப்படங்கள்.
- யாழ்ப்பாண சர்வதேச சதுரங்கப் போட்டி 2025 – உலகத் தரத்துடன் தொடக்கம்.
யாழ்ப்பாண சர்வதேச சதுரங்கப் போட்டி 2025 – உலகத் தரத்துடன் தொடக்கம். இலங்கை – யாழ்ப்பாண மாவட்ட சதுரங்கச் சங்கம் (JDCA) தலைமையில் மூன்றாவது யாழ்ப்பாண சர்வதேச சதுரங்கப் போட்டி 2025 இன்று (டிசம்பர் 3) யாழ்ப்பாணத்தில் சிறப்பாகவும், அமைதியான சூழலிலும், யாழ் மாவட்ட சதுரங்கச் சங்கத் தலைவர் எந்திரி ந. நந்தரூபன் தலைமையில் ஆரம்பமாகியது. இப்போட்டி வரும் டிசம்பர் 7 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதோடு குறித்த போட்டிற்கு ஆதவன் தொலைக்காட்சி , ஆதவன் வானொலி, தமிழ் எப்.எம் மற்றும் ஒருவன் ஆகியன ஊடக அனுசரணை வழங்குகின்றமை சிறப்பம்சமாகும். இன்றைய தொடக்க நிகழ்வில், பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞான பீட சீரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ளு. அறிவழகன், கௌரவ விருந்தினராக இந்திய துணைத் தூதரக அதிகாரி திரு சங்கரன் ராஜகோபால், சிறப்பு விருந்தினராக வைத்திய கலாநிதி ளு. சிவன்சுதன் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர். யாழ்ப்பாணத்தின் பண்பாட்டு பெருமை மிக்க நிலத்தில் உலகத் தரத்திலான சதுரங்கத்தை வெளிப்படுத்தும் இந்தப் போட்டி, இலங்கை சதுரங்க வரலாற்றில் புதிய மைல்கல்லாக திகழ்கிறது. மொத்தம் ரூ. 24 இலட்சம் பரிசுத் தொகை வழங்கப்படுவது, இதுவரை நாட்டில் நடைபெற்ற எந்த சர்வதேச சதுரங்கப் போட்டியிலும் இல்லாத மிக உயர்ந்த பரிசாகும். கடந்த ஆண்டுகளின் சிறப்பான சாதனையாளர்கள் இந்தப் போட்டி முதன்முதலில் 2023 ஆம் ஆண்டு அறிமுகமானது. முதல் JICC 2023 சாம்பியன்: இந்தியா – நாக்பூரைச் சேர்ந்த IM Anup Deshmukh இரண்டாவது JICC 2024 சாம்பியன்: இந்தியா – மும்பையைச் சேர்ந்த IM Nubairshah Shaikh தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் இந்திய வீரர்கள் சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றியதை அடுத்து, இந்த ஆண்டும் இந்தியாவின் பல முன்னணி வீரர்கள் வருகை தந்துள்ளதால் போட்டியில் அதிக ஆவல் நிலவுகிறது. இந்த ஆண்டின் சிறப்பு அம்சங்கள் இந்த ஆண்டு JICC பல்வேறு நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தியாவிலிருந்து 20-க்கும் மேற்பட்ட உயர்தர ரேட்டிங் வீரர்கள் பங்கேற்கின்றனர். மலேசியா, பங்களாதேஷ், செக் குடியரசு உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் போட்டியாளர்கள் இணைந்துள்ளனர். இந்த ஆண்டு புதிதாக சேர்க்கப்பட்ட பிரிவுகள்: Mechalite and Corporate Sector School Category (Open & Women’s) Higher Education Sector ஒவ்வொரு பிரிவிலும் வெற்றியாளர்களுக்கு பரிசுத் தொகைகள், கோப்பைகள், பதக்கங்கள் வழங்கப்படவுள்ளன. உள்ளூர் வீரர்களுக்கான உயர்வான வாய்ப்பு யாழ்ப்பாண சர்வதேச சதுரங்கப் போட்டியின் முக்கிய சாதனைகளில் ஒன்று, உள்ளூர் வீரர்களுக்கு FIDE Rating பெறும் வாய்ப்பை வழங்குவதாகும். 2024 ஆம் ஆண்டில் மட்டும் 72 புதிய வீரர்கள் தங்கள் முதல் சர்வதேச ரேட்டிங்கைப் பெற்றுள்ளனர். இந்த ஆண்டு மேலும் பல வீரர்கள் தங்கள் ரேட்டிங்கை மேம்படுத்தவும் அல்லது புதிதாகப் பெறவும் எதிர்பார்க்கப்படுகின்றனர். போட்டியின் பெருமை மற்றும் தாக்கம் சாதாரண விளையாட்டு நிகழ்வைத் தாண்டி, இது யாழ்ப்பாணத்திற்கும் இலங்கைக்கும் ஒரு முக்கிய மைல்கல். சர்வதேச தரத்திலான போட்டி அனுபவத்தை நாட்டிற்கு கொண்டு வருவது உள்ளூர் திறமையாளர்களை உலக அரங்கிற்கு அறிமுகப்படுத்துவது. நாடுகளுக்கிடையேயான கலாச்சார நட்புறவை வலுப்படுத்தும் மேடையாக அமைவது. யாழ்ப்பாணம் அறிவு, பண்பாடு, சிந்தனை ஆகியவற்றின் மையமாக இருப்பதை மீண்டும் நிரூபிக்கும் வகையில், இந்தப் போட்டி மிகுந்த சிறப்புடன் நடைபெற்று வருகிறது. யாழ்ப்பாண சர்வதேச சதுரங்கப் போட்டி 2025 இலங்கை இளைஞர்களுக்கு சர்வதேச மேடையைத் திறக்கிறது. உலகத்துடன் போட்டியிடும் திறனை உருவாக்குகிறது. யாழ்ப்பாணத்தை உலக சதுரங்க வரைபடத்தில் மேலும் உயர்த்துகிறது. அடுத்த சில நாட்களில் பல அதிரடி ஆட்டங்கள் சதுரங்க ரசிகர்களை கவரும் என்பதில் ஐயமில்லை. . இப்போட்டியின் பரிசளிப்பு வைபவம் டிசம்பர் 7 ஆம் தேதி மாலை 7 மணிக்கு நடைபெறும். https://athavannews.com/2025/1455021- அமெரிக்காவின் அமைதி திட்டத்தை மறுத்தால், உக்ரைனின் மேலும் பல பகுதிகள் கைப்பற்றப்படும் – புடின் எச்சரிக்கை!
உக்ரேன் போர்; ட்ரம்ப் தூதர்களுடன் புட்டின் 5 மணிநேர கலந்துரையாடல்! உக்ரேனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சாத்தியமான அமைதி ஒப்பந்தத்தில் ரஷ்யாவும் அமெரிக்காவும் ஒரு சமரசத்தை எட்டவில்லை என்று கிரெம்ளின் புதன்கிழமை தெரிவித்துள்ளது. ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும் டொனால்ட் ட்ரம்பின் உயர்மட்ட தூதர்களுக்கும் இடையே ஐந்து மணி நேர கிரெம்ளின் சந்திப்புக்குப் பின்னர் இந்த சமரசம் ஏற்படவில்லை. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பாவின் மிக மோசமான மோதலை முடிவுக்குக் கொண்டுவருவது தனது ஜனாதிபதி பதவியின் முழுமையான வெளியுறவுக் கொள்கை நோக்கங்களில் ஒன்றாகும் என்று ட்ரம்ப் பலமுறை தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி சில சமயங்களில் புட்டின் மற்றும் உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஆயோரை பாராட்டியும் திட்டியும் உள்ளார். https://athavannews.com/2025/1454988- கருத்து படங்கள்
- 22 மாவட்டங்களை தேசிய பேரிடர் பாதித்த பகுதிகளாக அறிவித்து வர்த்தமானி வெளியீடு!
22 மாவட்டங்களை தேசிய பேரிடர் பாதித்த பகுதிகளாக அறிவித்து வர்த்தமானி வெளியீடு! 22 மாவட்டங்களை “தேசிய பேரிடர் பாதிக்கப்பட்ட பகுதிகள்” என்று அறிவித்து ஒரு அசாதாரண வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க இறப்புப் பதிவு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் பகுதி II இன் பிரிவு 9 இன் விதிகளின்படி, நவம்பர் மாதம் ஏற்பட்ட டித்வா சூறாவளியின் விளைவுகளால் ஏற்பட்ட மண்சரிவுகள் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நாட்டின் 22 நிர்வாக மாவட்டங்கள் “தேசிய பேரிடர் பாதிக்கப்பட்ட பகுதிகள்” என்று வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த வர்த்தமானியை பதிவாளர் ஜெனரல் சசிதேவி ஜலதீபன் வெளியிட்டுள்ளார். https://athavannews.com/2025/1454913- வணக்கம்உறவுகளே
வணக்கம் நித்திலா, உங்களை…. யாழ்.களத்தில் மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி. தொடர்ந்து இணைந்திருங்கள்.- கருத்து படங்கள்
- இலங்கைக்கு ரஷ்யா துணை நிற்கும் – ஜனாதிபதி புட்டின் இரங்கல்!
இலங்கைக்கு ரஷ்யா துணை நிற்கும் – ஜனாதிபதி புட்டின் இரங்கல்! இலங்கை முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவுகளால் ஏற்பட்ட உயிர் இழப்பு மற்றும் பெருமளவிலான சேதங்களுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். தனது இரங்கல் செய்தியில் அவர், மனித உயிரிழப்புகள் மற்றும் பரவலான சேதங்களுக்கு வருத்தம் தெரிவித்தார். இந்த கடினமான காலகட்டத்தில் ரஷ்யா இலங்கையுடன் துணை நிற்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் மற்றும் அன்புக்குரியவர்களுக்கு தனது அனுதாபங்களையும் ஆதரவையும் தெரிவிக்குமாறு ஜனாதிபதி திசாநாயக்கவை புட்டின் கேட்டுக்கொண்டார். அதே நேரத்தில் காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் – என்றும் குறிப்பிட்டுள்ளார். அண்மைய வரலாற்றில் மிக மோசமான இயற்கை பேரழிவுகளை எதிர்கொண்ட இலங்கையில் பெரிய அளவிலான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளைத் தொடர்ந்து வரும் நிலையில் ரஷ்ய ஜனாதிபதியின் இந்த செய்தி வந்துள்ளது. https://athavannews.com/2025/1454770- கருத்து படங்கள்
- கருத்து படங்கள்
- இரசித்த.... புகைப்படங்கள்.
அது… பாட்டி இல்லை. அப்பா. 😂 பாட்டியை… போன கிழமை, பூனை பிடிச்சுக் கொண்டு போட்டுது. 🤣- சிரிக்கலாம் வாங்க
- கருத்து படங்கள்
- மோசமான வானிலை; 43,991 பேர் பாதிப்பு, 56 பேர் உயிரிழப்பு
மோசமான வானிலை; 43,991 பேர் பாதிப்பு, 56 பேர் உயிரிழப்பு. தித்வா சூறாவளியால் ஏற்பட்ட தீவிர வானிலை காரணமாக 12,313 குடும்பங்களைச் சேர்ந்த 43,991 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.…(Full News in Athavan News) இன்று (28) காலை வரையான தகவலின்படி, மோசமான வானிலை தொடர்பான அனர்த்த சம்பவங்களில் 56 பேர் உயிரிழந்துள்ளனர். 14 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் 21 பேர் காணாமல் போயுள்ளனர். மேலும், பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நான்கு வீடுகள் முழுமையாகவும், 666 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2025/1454076- இரசித்த.... புகைப்படங்கள்.
- தமிழ் தேசத்தின் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்- சபையில் கஜேந்திரகுமார் mp வாழ்த்து!
தமிழ் இனத்தின் இறைவன் மேதகு பிரபாகரனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்- சபையில் ரவிகரன் MP வாழ்த்து! தமிழ் இனத்தின் இறைவன் மேதகு பிரபாகரனுக்கு இந்த உயரிய சபையில் பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என கூறிய தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான துரைராசா ரவிகரன், “ஆழக் கடல் எங்கும், சோழ மகராஜன் ஆட்சி புரிந்தானே அன்று, தமிழீழக் கடலெங்கும் எங்கள் கரிகாலன் ஏறி நடக்கின்றான் இன்று” என்ற பாடல் வரிகளையும் குறிப்பிட்டார். நாடாளுமன்றத்தில் புதன்கிழமை (26) அன்று இடம்பெற்ற 2026ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சிற்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் பேசுகையில், மேதகுவின் ஆட்சியில் தமிழர் தாயகப்பரப்பில் கடற்றொழில், விவசாயம் என்பன தன்னிறைவு பெற்றிருந்தன , போதைப்பொருட்கள் அறவே அற்ற, பாதுகாப்பான சூழல் இருந்ததது, காணி அபகரிப்புக்களும் இல்லை, எனவே, தமிழர் தாயகம் விவசாயத்திலும் செழித்திருந்ததது, நள்ளிரவிலும் பெண்கள் சுதந்திரமாக உலாவக்கூடிய நிலையிருந்தது. தாயகப் பரப்பில் மக்கள் தன்னிறைவு பெற்றுப் பாதுகாப்பாக வாழ்ந்தனர். எனவேதான் தமிழ் மக்கள் மேதகுவை இறைவனாகவும், அவரது ஆட்சிக் காலத்தினைச் சங்ககாலமாகவும் போற்றுகின்றனர். அந்த தமிழ் இனத்தின் இறைவனுக்கு இன்று (நேற்று) பிறந்தநாள். இந்த உயரிய சபையிலே மேதகுவுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார். https://athavannews.com/2025/1453959- தமிழ் தேசத்தின் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்- சபையில் கஜேந்திரகுமார் mp வாழ்த்து!
தமிழ் தேசத்தின் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்- சபையில் கஜேந்திரகுமார் mp வாழ்த்து! ஈழ தமிழ் தேசத்தின் தலைவரும் உலக தமிழர்களின் தலைவருமான தலைவர் பிரபாகரனுக்கு 72 வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சபையில் இன்று வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் தனது சபை விவாதத்தை ஆரம்பித்தார். https://athavannews.com/2025/1453961- கருத்து படங்கள்
- இம்ரான் கான் எங்கே? வதந்திகளால் பாகிஸ்தானில் சர்ச்சை!
இம்ரான் கான் எங்கே? வதந்திகளால் பாகிஸ்தானில் சர்ச்சை! தற்போது ராவல்பிண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், காவலில் உயிரிழந்து விட்டதாக ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட சமூக ஊடகக் கணக்குகள் உறுதிப்படுத்தப்படாத தகவலை வெளியிட்டுள்ளன. இது குறித்து ஆப்கான் டைம்ஸ் தனது எக்ஸ் பதிவில், முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் ராவல்பிண்டியின் அடியாலா சிறையில் “கொலை செய்யப்பட்டார்” என்ற ஆதாரங்களில் இருந்து தகவல் கிடைத்ததாகக் கூறியதைத் தொடர்ந்து இந்த வதந்திகள் தொடங்கின. எனினும், இந்தக் கூற்றுகள் அனைத்தும் ஆதாரமற்றவை மற்றும் சரிபார்க்கப்படாதவை – எந்த நம்பகமான நிறுவனத்தாலும் அல்லது துறையாலும் உறுதிப்படுத்தப்படவில்லை. இம்ரான் கானின் குடும்பத்தினர் சிறையில் அவரைச் சந்திக்க அனுமதிக்கப்படவில்லை என்றும், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்றும் செய்திகள் வெளியான சிறிது நேரத்திலேயே இந்த வதந்திகள் வந்துள்ளன. அடியாலா சிறைக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட அவரது சகோதரிகள், அவரைச் சந்திக்கக் கோரி தாக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. இம்ரான் கானின் மூன்று சகோதரிகள் – நோரீன், அலீமா மற்றும் உஸ்மா – அரசியல் தலைவர் அடியாலா சிறைக்குள் “கொடூரமாக தாக்கப்பட்டதாக” குற்றம் சாட்டினர், அங்கு அவர் அடிக்கடி சிறை அதிகாரிகளால் தவறாக நடத்தப்பட்டதாகவும் துன்புறுத்தப்பட்டதாகவும் முறைப்பாடு அளித்துள்ளனர். 72 வயதான முன்னாள் கிரிக்கெட் வீரர், ஊழல் வழக்குகளில் தண்டிக்கப்பட்டு 2023 முதல் சிறையில் உள்ளார். Athavan Newsஇம்ரான் கான் எங்கே? வதந்திகளால் பாகிஸ்தானில் சர்ச்சை!தற்போது ராவல்பிண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், காவலில் உயிரிழந்து விட்டதாக ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட சமூக ஊடகக் கணக்குகள் உறுதிப்படுத்தப்- ஹொங்கொங்கில் குடியிருப்பு கட்டிடங்கள் தீக்கரை; 44 பேர் உயிரிழப்பு, 279 பேர் மாயம்!
ஹொங்கொங்கில் குடியிருப்பு கட்டிடங்கள் தீக்கரை; 44 பேர் உயிரிழப்பு, 279 பேர் மாயம்! ஹொங்கொங்கில் பல தசாப்தங்களின் பின்னர் ஏற்பட்ட மிக மோசமான தீ விபத்தானது புதன்கிழமை (26) இரவு முழுவதும் கொழுந்து விட்டு எரிந்தது. இந்த அனர்த்தத்தினால் குறைந்தது 44 பேர் உயிரிழந்ததுடன், 279 பேர் காணாமல் போயுள்ளனர். மீட்புப் பணியாளர்கள் இன்னும் தீப்பரவிய உயரமான அடுக்குமாடி கட்டிடங்களில் இருந்து குடியிருப்பாளர்களை மீட்டு வருகின்றனர். நியூ டெரிட்டரிஸின் புறநகர்ப் பகுதியான தாய் போ மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு குடியிருப்பு கட்டிடங்களில் புதன்கிழமை பிற்பகல் இந்த தீ விபத்து தொடங்கியது. உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை (27) காலை வரை, தீ இன்னும் அணைக்கப்படவில்லை, மீட்புப் பணிகள் தொடர்ந்தன. அதேநேரம், தீ விபத்து தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மூன்று பேரை பொலிஸார் கைது செய்தனர். பலியான 44 பேரில் 40 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்து விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அனர்த்தத்தின் பின்னர் குறைந்தது 62 பேர் காயமடைந்தனர், பலர் தீக்காயம் மற்றும் சுவாசக் கோளாறினால் பாதிக்கப்பட்டனர். இதனிடையே சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் புதன்கிழமை, தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்ததுடன், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு அனுதாபங்களைத் தெரிவித்தார். https://athavannews.com/2025/1453973- பாபா வங்கா கணிப்பில் மீண்டும் சலசலப்பு ; 2026 இல் புடினின் எழுச்சியா?
மேற்கு… என்றுதான் உண்மையை சொல்லியிருக்கு. இப்போது, எந்த ஊடகமும் நடுநிலையான செய்திகளை வெளியிடுவது இல்லை.- காதலன் வீட்டில் லிவிங் டு கெதராக இருந்து அங்கிருந்த தாயின் 8 பவுன் தங்க நகைகளை திருடிச்சென்ற காதலி பொலிஸாரால் கைது #இலங்கை
வளர்ப்பு அப்பிடி. தாய், தகப்பனுக்கு பாராட்டுக்கள். 😂 கு.சா. ஒரு கிழமைக்கு இந்தப் பக்கம் தலை வைத்தும் படுக்க மாட்டார். 🤣- பெங்களூரு பாலியல் துன்புறுத்தல் வழக்கு: இன்ஸ்டாகிராம் நண்பரை நம்பி ஏமாந்த இலங்கை மாணவி!
பெங்களூரு பாலியல் துன்புறுத்தல் வழக்கு: இன்ஸ்டாகிராம் நண்பரை நம்பி ஏமாந்த இலங்கை மாணவி! பெங்களூருவில் பாலியல் துன்புறுத்தல் வழக்கு ஒன்று பதிவாகியுள்ளது. அந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர் இலங்கையைச் சேர்ந்தவர் ஆவார். பாதிக்கப்பட்ட மாணவி, இன்ஸ்டாகிராமில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரை சந்தித்து, பின்னர் ஆன்லைன் நட்பை வளர்த்துக் கொண்டதாக NDTV செய்தி வெளியிட்டுள்ளது. இன்ஸ்டாகிராமில் நட்பு வளர்ந்த பின்னர், 24 வயதான இலங்கை மாணவி வாட்ஸ்அப்பில் தொடர்பு கொள்ளப்பட்டார். வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் மீதான நம்பிக்கையை மாணவி பெற்றதால், அவர்கள் வீடியோ அழைப்புகள் மூலம் உரையாடலைத் தொடங்கினர். இந்த வீடியோ அழைப்புகளின் போது, தனது தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் தனிப்பட்ட வீடியோக்களை குற்றம் சாட்டப்பட்டவர் தனது அனுமதியின்றி ரகசியமாக பதிவு செய்ததாக இலங்கை மாணவி தனது பொலிஸ் முறைப்பாட்டில் கூறியுள்ளார். தனது தனிப்பட்ட வீடியோக்களை எடுத்த பின்னர், குற்றம் சாட்டப்பட்டவர் டிஜிட்டல் உள்ளடக்கத்தை நீக்குவதற்கு ஈடாக பணம் கோரியுள்ளார். இது தொடர்பில் கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கு அமைவாக பெங்களூரு பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். https://athavannews.com/2025/1453940Important Information
By using this site, you agree to our Terms of Use.
- யாழ்ப்பாண சர்வதேச சதுரங்கப் போட்டி 2025 – உலகத் தரத்துடன் தொடக்கம்.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.