Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. டித்வா புயல் அனுரவை பலப்படுத்தியிருக்கிறதா? நிலாந்தன். ரணில் விக்கிரமசிங்கவால் “எல்போர்ட்” அரசாங்கம் என்று அழைக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு டித்வா புயல் ஒரு சோதனையாக வந்திருக்கிறது. கடந்த 14 மாதங்களாக தற்காப்பு நிலைக்குத் தள்ளப்பட்டிருந்த எதிர்க் கட்சிகள் நுகேகொடவில் ஒர் ஆர்ப்பாட்டப் பேரணியை ஒழுங்குப்படுத்தி மெல்லத் தலைதூக்க முயற்சித்தன.அந்தப் பேரணி திறந்துவிட்ட வாய்ப்புகளைவிட அதிக வாய்ப்புகளை டித்வா புயல் எதிர்க்கட்சிகளுக்கு திறந்து விட்டிருக்கிறது. இது ஒரு எல்போர்ட் அரசாங்கம் என்று நிரூபிப்பதற்கு இந்த சந்தர்ப்பத்தை எதிர்க்கட்சிகள் பயன்படுத்துகின்றன. எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை பின்வருமாறு தொகுத்துக் கூறலாம்.முதலாவது குற்றச்சாட்டு, அரசாங்கம் முன்னெச்சரிக்கையோடு நடக்கவில்லை என்பது. இதில் ஓரளவுக்கு உண்மை உண்டு. இந்திய வானிலை ஆய்வு மையம் புயல் தொடர்பாக நொவம்பர் 13 ஆம் திகதியே எச்சரித்திருந்தது. நவம்பர் 26வரை அனைத்துத் தகவல்களும் இலங்கையுடன் பரிமாறப்பட்டுள்ளன என்று “இந்தியன் எக்ஸ்பிரஸ்” இணையத்தளம் கூறுகிறது.மேலும் உத்தியோகப்பற்றற்ற விதத்தில் யாழ் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை தலைவராகிய பேராசிரியர் பிரதீபராஜா நொவம்பர் மாதக் கடைசியில் வரக்கூடிய புயலைக் குறித்து முன்னெச்சரிக்கை விடுத்திருந்தார். அவரைப்போலவே தமிழகத்தைச் சேர்ந்த வானிலை முன்னறிவிப்பாளர் செல்வக்குமார் தன்னுடைய யூடியூப் தளத்தில் புயலின் வருகையைக் குறித்து எச்சரித்திருந்தார்.ஆனால் இந்த எச்சரிக்கைகளை அரசாங்கமோ அல்லது சம்பந்தப்பட்ட திணைக்களங்களோ ஏன் கவனத்தில் எடுக்கவில்லை? புயல் நாட்டைத் தாக்கப்போகிறது என்பதனை வளிமண்டலவியல் திணைக்களம் உரிய நேரத்தில்,உரிய வேகத்தில் எச்சரித்திருக்கவில்லை என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. இரண்டாவது குற்றச்சாட்டு,அரசு திணைக்களங்களுக்கு இடையே ஒருங்கிணைப்பு இருக்கவில்லை என்பது. பாதிக்கப்பட்ட மக்களும் அதனைச் சுட்டிக்காட்டுகிறார்கள்.சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் இந்த விடயத்தில் முழு அளவுக்கு ஒருங்கிணைப்போடு செயற்பட்டு இருந்திருந்தால் இழப்பின் அளவைக் குறைத்திருக்கலாம் என்று சுட்டிக்காட்டப்படுகிறது.குறிப்பாக வளிமண்டலவியல் திணைக்களம்,நீர்பாசனத் திணைக்களம்,அனர்த்த முகாமைத்துவத் நிலையம் போன்றன இந்த விடயத்தில் மக்களை எச்சரிக்கத் தவறி விட்டதாகவும்,தங்களுக்கிடையில் ஒருங்கிணைப்போடு செயல்படவில்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அனுராத ஜெயரட்ன,ரவூப் ஹக்கீம் போன்றவர்கள் நாடாளுமன்றத்தில் வைத்துச் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகளை ஒரே வேளையில் திறக்கப்பட்டதால் ஏற்படக்கூடிய வெள்ளப்பெருக்கைக் குறித்து சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் மக்களை எச்சரிக்கத் தவறியமை போன்ற பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்த விடயத்தில் திணைக்களுங்களுக்கு இடையில் ஒருங்கிணைப்பு இல்லாதது சேதத்தை அதிகப்படுத்தி இருப்பதனால் வருங்காலத்தில் நதிப் படுக்கைகளுக்கு என்று அதிகார சபை ஒன்றை உருவாக்கும் யோசனையை ரவூப் ஹக்கீம் நாடாளுமன்றத்தில் முன் வைத்திருக்கிறார். மூன்றாவது குற்றச்சாட்டு,முன்னெச்சரிக்கை உணர்வோடு வருமுன் காக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்து இருந்திருந்தால் சேதத்தின் அளவைக் குறைத்திருக்கலாம் என்பது. பருவ மழையின்போது மண் சரிவு ஏற்படும் பிரதேசங்கள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டிருக்கின்றன.மழை வீழ்ச்சி அதிகரிக்கும் போது மண் சரிவு அபாயம் உண்டு என்பது சம்பந்தப்பட்ட எல்லா அரசுக்கு கட்டமைப்புக்களுக்கும் தெரியும் என்பதால் வரக்கூடிய ஆபத்தை முன்கூட்டியே அனுமானித்து பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய பிரதேசங்களில் இருந்து மக்களை முன்கூட்டியே இடம்மாற்றி இருந்திருந்தால் சேதத்தின் அளவை குறைத்து இருக்கலாமா என்ற கேள்வி உண்டு. இந்த விடயத்தில் அரசாங்கம் அனர்த்த காலம் ஒன்றை நோக்கி வினைத்திறனோடு செயல்படவில்லை என்றும் அனர்த்தத்தின் போதும் அதன் பின்னரும் நிலைமைகளைச் சரியாக முகாமை செய்யவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை அடுக்குகின்றன. எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை, அவை வழமையான எதிர்ப்பு அரசியல் என்ற பெட்டிக்குள் தூக்கிப் போட்டுவிட முடியாது. அதே சமயம் நுகேகொட பேரணிக்குப்பின் அரசங்கத்தை விமர்சிப்பதற்கு கிடைத்த அதிகரித்த வாய்ப்பாக புயலுக்கு பின்னரான அரசியற் சூழலை எதிர்க்கட்சிகள் பயன்படுத்துகின்றன என்பதும் உண்மை. எவ்வளவுதான் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்திருந்தாலும்,வானிலை மாற்றங்களை மிகத் துல்லியமாக எதிர்வுகூற முடியாது என்று அரசாங்கத்திற்கு ஆதரவான தமிழ் புத்திஜீவிகள் சமூக வலைத்தளங்களில் எழுதி வருகிறார்கள். தொழில்நுட்பம் அதிகம் வளர்ச்சியடைந்த நாடுகளில்கூட இயற்கை அனர்த்தங்களைக் குறித்து மிகச்சரியாகக் கணிக்க முடிவதில்லை என்றும் அவ்வாறு கணிப்பிட்டு இருந்தாலும் அழிவுகளை முழுமையாகத் தடுக்க முடிவதில்லை என்று அவர்கள் வாதிடுகிறார்கள். அதில் உண்மை உண்டு. ஆனால் இந்திய வானிலை அவதானிப்பு மையம் உரிய காலத்தில் எச்சரித்திருந்த போதிலும் துறைசார் வல்லுநர்கள் சிலர் உள்நாட்டிலும் அயல் நாட்டிலும் உத்தியோகப்பற்றற்ற விதத்தில் இதுதொடர்பாக எச்சரிக்கைகளை விடுத்திருந்த போதிலும் சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் ஏன் அதனை கவனத்தில் எடுக்கத் தவறின? இப்பொழுது அழிவு நடந்து விட்டது.இனி இறந்த காலத்தைப் போஸ்ட் மோர்ட்டம் செய்து கொண்டிருப்பதை விடவும்,மண்ணில் புதைந்திருப்பவர்களை எப்படி மீட்பது? உடைந்து தொங்கும் பாலங்களை எப்படிச் சீரமைப்பது? சிதைந்துபோன வாழ்வை எப்படி மீளக் கட்டியெழுப்புவது? என்பதுதான் முதன்மைச் சவால். நாட்டின் முழுக் கவனமும் புயலுக்குப் பின்னரான மனிதாபிமான நிலவரங்களின் மீது குவிந்திருக்கின்றது.நாட்டுக்கு உள்ளிருந்தும் வெளியில் இருந்தும் அதிகளவு மனிதாபிமான உதவிகள் கிடைக்கின்றன. தமிழ்ப் பகுதிகளில் உயிர் இழப்பு ஒப்பீட்டளவில் குறைவு.ஆனால் சொத்திழப்பு உண்டு.அடிக்கட்டுமானங்கள் சேதமடைந்துவிட்டன.முல்லைத்தீவு மாவட்டம் சில நாட்கள் துண்டிக்கப்பட்டிருந்தது.மன்னாரில் 15000க்கும் குறையாத கால்நடைகள் கொல்லப்பட்டு விட்டன.திருகோணமலையிலும் மலையகத்திலும் கால்நடைகள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டிருக்கின்றன.புயலுக்குப்பின் கிட்டத்தட்ட ஒரு கிழமை கழித்து இக்கட்டுரை எழுதப்படுகையிலும்கூட கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை முழுமையாகக் கிடைக்கவில்லை.இது அனர்த்தத்தின் பாரதூரத் தன்மையைக் காட்டுகின்றது. அதனால்தான் உலக சமூகம் இலங்கைக்கு உதவ முன் வந்திருக்கிறது முதலில் உதவ வந்தது இந்தியா.அதிகம் உதவியதும் இந்தியா.அதைத் தொடர்ந்து பெரும்பாலான அயல்நாடுகளும் உட்பட உலக சமூகம் தாராளமாக உதவி செய்து வருகிறது.அனர்த்த காலம் இலங்கை மீதான அனுதாபத்தை அதிகப்படுத்தியிருக்கிறது.இந்த அனுதாபம் ஒரு விதத்தில் அனுர அரசாங்கத்தைப் பலப்படுத்தக் கூடியது. அரசாங்கம் அறிவித்திருக்கும் இழப்பீடுகளின் பருமன் அது மக்களுடைய நம்பிக்கையை வெல்வதற்கு முயற்சிக்கிறது என்பதைக் காட்டுகின்றது. இதற்கு முன்பு ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களின் போது முன்னிருந்த அரசாங்கங்கள் அறிவித்திராத பெருந்தொகை இழப்பீட்டுத் தொகையை அரசாங்கம் அறிவித்திருக்கிறது.அதன் மூலம் மக்கள் மத்தியில் அரசாங்கத்தின் மீதான அபிமானத்தைக் கட்டியெழுப்ப முடியும். இது வெறும் வாக்குறுதிதான் என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.நடைமுறையில் அரசாங்கம் எவ்வளவு தொகையைக் கொடுக்கப் போகிறது என்பதனைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ஆனாலும் அறிவிக்கப்பட்டிருக்கும் இழப்பீட்டுத் தொகை ஒப்பீட்டளவில் பெரியது. மேலும்,சிதைந்த நகரங்களையும் வாழ்வையும் மீளக்கட்டியெழுப்பும் முயற்சியில் அரச நிறுவனங்களோடு பொது மக்களும் தன்னார்வமாக இணைந்து வருகிறார்கள்.பாதிக்கப்படாத பகுதியைச் சேர்ந்த மக்கள், அல்லது ஒப்பீட்டளவில் அதிகம் பாதிக்கப்படாத பகுதியைச் சேர்ந்தவர்கள, தாங்களாகத் திரண்டு,தன்னார்வமாக முன்வந்து,ஏனைய பகுதிகளுக்கு உதவுகிறார்கள். மண் சரிவில் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் உதவுகிறார்கள்.சேறு படிந்த தெருக்களை,வீடுகளைக் கழுவிச் சுத்தமாக்குகிறார்கள்.பொதுமக்கள் மத்தியில் இருந்து நிவாரணங்களைத் திரட்டி, பாதிக்கப்பட்ட மக்களை நோக்கிக் கொண்டு போகிறார்கள். இந்த மனிதாபிமானத் தன்னார்வச் சூழல் அரசாங்கத்துக்கு அனுகூலமானது. குறிப்பாக வடக்கிலிருந்து தமிழ் அரசியல்வாதிகளும் தன்னார்வலர்களும் மலையகத்தை நோக்கி உதவிகளோடு போகிறார்கள்.புயல் ஓய்ந்த கையோடு தனித்து விடப்பட்ட அல்லது துண்டிக்கப்பட்ட முல்லைத்தீவை நோக்கி யாழ்ப்பாணத்தில் இருந்து தன்னார்வலர்களும் அரசியல் செயற்பாட்டாளர்களும் போனார்கள். தங்களால் இயன்ற நிவாரணங்களைக் கொடுத்தார்கள். உதவிகளைச் செய்தார்கள்.இப்பொழுது மலையகத்தை நோக்கிப் போகிறார்கள். அனர்த்த காலம் தமிழ் மக்களுக்கு இடையிலான சகோதரத்துவத்தை உணர்வு பூர்வமாகப் பலப்படுத்தியிருக்கிறது- அது மட்டுமல்ல அனுர அரசாங்கத்தையும் அது பலப்படுத்தக்கூடிய வாய்ப்புகள் தான் அதிகமாகத் தெரிகின்றன. https://athavannews.com/2025/1455496
  2. தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் திருடப்பட்ட புறாக்களுடன் ஒருவர் கைது! தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் இருந்து 32 புறாக்கள் திருடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவர் 15 புறாக்களுடன் கல்கிசைப் பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று (06) இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தெஹிவளை, நெதிமால, டி.பி. ஜயதிலக்க மாவத்தையில் வசிக்கும் 24 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர். நீதிமன்ற உத்தரவின் பேரில் தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் பராமரிப்பிற்காக ஒப்படைக்கப்பட்டிருந்த 32 வெளிநாட்டுப் புறாக்கள் கடந்த ஒக்டோபர் மாதம் 04 ஆம் திகதி திருடப்பட்டிருந்த நிலையில் அந்தப் புறாக்கள் சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட போது, விமான நிலையத்தில் வைத்து பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டது. விசாரணைகள் முடிவடையும் வரை அவை பராமரிப்பிற்காக தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் ஒப்படைக்கப்பட்டிருந்த போதே குறித்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக நிர்வாகத்தினர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர். இது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில், கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் குழுவினர் மேற்கொண்ட விசாரணைகளின் போது இந்தச் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். https://athavannews.com/2025/1455494
  3. சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 627 ஆக அதிகரிப்பு! டித்வா புயலினால் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 627 ஆக அதிகரித்துள்ளதாகவும் அனர்த்தங்களால் 190 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. நிலையம் இன்று (7) மதியம் வெளியிட்ட அறிக்கையில் இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. நிலவிய சீரற்ற வானிலையால் நாட்டின் 25 மாவட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ளதோடு 611,530 குடும்பங்களைச் சேர்ந்த 2,179,138 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 27,663 குடும்பங்களைச் சேர்ந்த 89,857 பேர் 956 பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. 4,517 வீடுகள் முழுமையாகவும், 76,066 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளதாக அந்த நிலையம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. https://athavannews.com/2025/1455492
  4. வைத்தியசாலையில் கோமா நிலையில் சிகிச்சை பெறும் கைதியின் சகோதரிக்கு எதிராக சிறைச்சாலை நிர்வாகம் முறைப்பாடு! யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வரும் விளக்கமறியல் கைதியின் சகோதரிக்கு எதிராக , யாழ்ப்பாண சிறைச்சாலை நிர்வாகத்தினரால் , யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பை சேர்ந்த இளைஞன் ஒருவர் முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியல் கைதியாக யாழ்ப்பாண சிறைச்சாலையில் ,தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த நவம்பர் மாதம் 11ஆம் திகதி முதல் இன்றைய தினம் வரையில் யாழ் . போதனா வைத்தியசாலையில் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த நிலையில் சிகிச்சை பெற்று வரும் இளைஞனின் சகோதரி நேற்று முன்தினம் யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது , கடந்த 08ஆம் திகதி தனது சகோதரன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தான் சகோதரனிடம் கேட்ட போது அவரை அடித்ததாக கூறியதாக சகோதரி கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் , குறித்த இளைஞன் சிறைச்சாலையில் , விழுந்தமையால் தான் தலையில் காயமடைந்ததாகவும் , சிறைச்சாலைக்குள் யாரும் அவரை தாக்கவில்லை என்றும் சிறைச்சாலை நிர்வாகம் ஊடகங்களுக்கு பதில் அளித்திருந்தது. அதனை அடுத்து நேற்றையதினம் , இளைஞனை சிறைச்சாலைக்கு தாக்கியதாக ஊடகங்களில் கருத்து தெரிவித்தமைக்கு எதிராக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் யாழ்ப்பாண சிறைச்சாலை நிர்வாகத்தினர் குறித்த சகோதரிக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளனர் https://athavannews.com/2025/1455462
  5. கோவாவில் விடுதியொன்றில் தீ விபத்து – 25 பேர் உயிரிழப்பு! வடக்கு கோவாவில் செயல்பட்டு வந்த இரவு விடுதியில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா இரண்டு லட்சம் ரூபா நிவாரணமாக வழங்கவுள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். வடக்கு கோவாவின் அர்போரா கிராமத்தில் உள்ள பாகா பகுதி கடற்கரையில் இயங்கி வந்த இரவு விடுதி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளதுடன் அவர்களில் பலர் சுற்றுலாப் பயணிகள், விடுதி ஊழியர்கள் என கண்டறியப்பட்டுள்ளனர். இதேவேளை, தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மீட்பு பணி்களில் ஈடுபட்டு வருகின்றனர். தீ விபத்து சமையல் அறை பகுதியில் நிகழ்ந்துள்ளது. இருப்பினும் தீ விபத்திற்கான காரணம் இதுவரை கணடறியப்படவில்லை என கோவா காவல்துறை தலைவர் அலோக்குமார் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1455456
  6. சூடானில் ஆயுத குழுக்களின் ட்ரான் தாக்குதலில் பாடசாலை மாணவர்கள் உட்பட 50பேர் உயிரிழப்பு! சூடானில் பாடசாலை , மருத்துவமனை மீது ஆயுத குழுவினர் ட்ரோனை ஏவி தாக்குதல் நடத்தியதில் 33 குழந்தைகள் உள்ளிட்ட 50 பேர் உயிரிழந்துள்ளனர். சூடானில் அந்நாட்டு ராணுவத்திற்கும், ரேபிட் சப்போர்ட் போர்சஸ்(ஆர்எஸ்எப்) எனப்படும் ஆயுதமேந்திய குழுவினருக்கும் சமீப காலமாக மோதல் நிலவுகிறது. இந்நிலையில் கோர்டோபான் மாகாணத்தில் உள்ள கலோகி நகரில் உள்ள ஒரு சிறுவர்கள் பாடசாலை , மருத்துவமனை மீது ஆயுத குழுவான ஆர்எஸ்எப், நேற்றுமுன்தினம் இரவு ட்ரோன் ஏவியது. இந்த தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டனர். ஆயுத குழுவினர்,முதலில் பாடசாலையை தாக்கியதுடன் பின்னர் பொதுமக்கள் உணவுக்காக உதவி வாங்க கூடியிருந்த இடத்தில் இரண்டாவது தாக்குதலை நடத்தியதாகவும் 50 பேர் இதில் கொல்லப்பட்டனர் எனவும் குழந்தைகள் 33 பேர் உள்ளடங்குவதாகவும் இந்த தாக்குதலுக்கு குறித்த அமைப்பினர் பொறுப்பேற்கவில்லை எனவும் சூடான் மருத்துவர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. https://athavannews.com/2025/1455473
  7. தமிழகத்திலிருந்து ஒருதொகை நிவாரண பொருட்கள் வழங்கிவைப்பு! டித்வா புயல் தாக்கத்தினால் பாரிய இழப்புகளை எதிர்நோக்கியுள்ள இலங்கை மக்களுக்காக தமிழ் நாடு அரசாங்கமும் நிவாரண உதவிகளை அனுப்பி வைத்துள்ளது. இதேவேளை, 950 தொன் நிவாரண பொருட்கள் இவ்வாறு தமிழ் நாடு மக்கள் சார்பாக இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் குறித்த நிவாரணப் பொருட்களை தாங்கி வரும் கப்பலை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சென்னை துறைமுகத்தில் இருந்து இன்று (6) கொடியசைத்து அனுப்பி வைத்தார். சென்னையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட நிவாரண பொருட்களில் 10 ஆயிரம் போர்வை, 10 ஆயிரம் துண்டு, 5 000 வேஷ்டி, 5 000 சேலை, 1,000 தார்பாலீன் ஆகியவையும், 650 டன் பருப்பு, சர்க்கரை, பால்மா பொதிகள் ஆகியவையும் உள்ளடங்குகின்றன. தூத்துக்குடியில் இருந்து 300 தொன் பருப்பு மற்றும் சர்க்கரை ஆகியவை அனுப்பப்படுகிறது. https://athavannews.com/2025/1455431
  8. அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஜனாதிபதியின் விசேட அறிவித்தல்! நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் இயற்கை அனர்த்தங்கள் காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் மற்றும் இழப்பீடுகளை வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்தினார். இதன்போது, பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை கருத்திற்கொண்டு, எதிர்வரும் டிசம்பர், ஜனவரி மற்றும் பெப்ரவரி ஆகிய மூன்று மாதங்களுக்கு விசேட மாதாந்த கொடுப்பனவு வழங்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார். அதன்படி, இரண்டுக்கு மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குடும்பத்திற்கு 50,000 ரூபாவும் மற்றும் இரண்டு உறுப்பினர்கள் மாத்திரம் உள்ள குடும்பத்திற்கு 25,000 ரூபாவும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதேபோல், வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்கள், சேதமடைந்த தமது வீட்டு உபகரணங்களை மீண்டும் கொள்வனவு செய்வதற்காக ரூபா 50,000 வழங்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார். தற்போது நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள மக்கள் தொடர்ந்தும் அங்கேயே தங்கியிருக்க விரும்பினால், அவர்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளும் அரசாங்கத்தினால் செய்து கொடுக்கப்படும் எனவும், மாறாக, முகாம்களிலிருந்து வெளியேறி வாடகை வீடுகளில் வசிக்க விரும்புவோருக்கு, 6 மாத காலத்திற்கு மாதாந்தம் 25,000 ரூபாய் வாடகைக் கொடுப்பனவாக வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். மேலும், அனர்த்தத்தினால் நெல், சோளம் உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கு, ஒரு ஹெக்டேர் நிலப்பரப்பிற்கு 150,000 ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும் என ஜனாதிபதி அறிவித்துள்ளார். https://athavannews.com/2025/1455365
  9. பிரித்தானியாவை விட்டு செல்லும் வெளிநாட்டினர்: முதலிடத்தில் இந்தியர்கள்; 2ம் இடத்தில் சீனர்கள்! பிரித்தானியாவில் தங்கியிருந்த வெளிநாட்டினர், வரலாறு காணாத வகையில் வெளியேறி வருகின்றனர். அதில், இந்தியர்களே முதலிடத்தில் உள்ளனர். வேலைக்காகவும், கல்விக்காகவும் வெளிநாட்டினர் அதிகம் செல்லும் நாடுகளில் பிரித்தானியா முன்னணியில் உள்ளது. அதுவே அந்நாட்டிற்கு பிரச்னையாகவும் மாறியுள்ளது. 39 சதவீதம் வெளிநாட்டினர் எண்ணிக்கை அதிகரித்ததால், உள்ளூர் மக்கள் சிரமப்படுவதாக பிரித்தானிய அரசு கூறியது. இதனால், முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேட்டிவ் அரசு கடுமையான விசா விதிகளை அறிமுகப்படுத்தியது. இதனால், பிரித்தானியாவின் நிகரக் குடியேற்றம் வெகுவாகக் குறைந்தது. பிரித்தானியாவுக்கு வரும் வெளிநாட்டினரின் எண்ணிக்கை மற்றும் அங்கிருந்து கிளம்பும் வெளிநாட்டினரின் எண்ணிக்கைக்கு இடையே இருக்கும் வித்தியாசமே நிகர குடியேற்றம் எனப்படுகிறது. இது தான் இப்போது சரிந்து வருகிறது. இங்கிலாந்து தேசிய புள்ளிவிபர அலுவலகத்தின் தகவலின்படி, 2023ல், 9.44 லட்சமாக இருந்த நிகர குடியேற்றம், 2025ல், 2.04 லட்சம் -ஆக குறைந்துள்ளது. இரு ஆண்டுகளில் ஏழு லட்சம் பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். மேலும், 2025 ஜூன் வரையிலான காலத்தில், பிரித்தானியாவை விட்டு வெளியேறியவர்களில் இந்தியர்களே முதலிடத்தில் உள்ளனர். மாணவர் விசாக்களில் இருந்த 45,000 பேர், பணி விசாக்களில் இருந்த 22,000 பேர் உட்பட, 75,000 பேர் வெளியேறியுள்ளனர். அடுத்தபடியாக, 42,000 சீனர்கள் வெளியேறியுள்ளனர். இதே போல், விசா வழங்குவதும் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் வரை 32 லட்சம் விசாக்கள் வழங்கப்பட்ட நிலையில், நடப்பாண்டில் 31 லட்சமாக குறைந்துள்ளது. குறிப்பாக, பணி விசாக்கள் 39 சதவீதம் வரை சரிந்துள்ளது. இதற்கு மத்தியிலும், 2025 ஜூன் வரையிலான காலத்தில், வேலை, படிப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக 1.5 லட்சம் பேர் பிரித்தானியா சென்றுள்ளனர். வெளிநாட்டினரின் இருப்பு குறைந்தது பிரதமர் கெய்ர் ஸ்டாமர் அரசுக்கு பெரும் நிம்மதியாக அமைந்துள்ளது. ஆனால், திறன்வாய்ந்த உழைப்பாளர்கள் வெளியேறுவது, பிரித்தானியாவின் நீண்டகால பொருளாதார வளர்ச்சிக்கு தீங்கு விளைவிக்கும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். https://athavannews.com/2025/1455387
  10. இங்கிலாந்தில் 38 நோயாளிகள் மீது பாலியல் துஸ்பிரயோகம் – முன்னாள் வைத்தியருக்கு எதிராக குற்றச்சாட்டு! இங்கிலாந்தில் 38 நோயாளிகள் மீது பாலியல் வன்கொடுமை செய்ததாக முன்னாள் மருத்துவர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. முன்னாள் மருத்துவர் (Nathaniel Spencer ) நதானியேல் ஸ்பென்சர் மீது அவர் கவனித்துக் கொண்ட 38 நோயாளிகளைப் பாலியல் ரீதியாகத் தாக்கியதாகக் கூறப்படும் பல கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. 2017 மற்றும் 2021 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் இந்தச் சம்பவங்களில், 13 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சம்பந்தப்பட்ட பாலியல் தாக்குதல் மற்றும் ஊடுருவல் மூலம் தாக்குதல் என மொத்தம் 45க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளன. இந்தக் குற்றங்கள் அவர் (Royal Stoke University Hospital) ராயல் ஸ்டோக் மற்றும் (Russells Hall Hospital) ரஸ்ஸல்ஸ் ஹால் மருத்துவமனை ஆகிய இரண்டு மருத்துவமனைகளில் மருத்துவராகப் பணிபுரிந்தபோது நடந்ததாகக் கூறப்படுகிறது. (Staffordshire Police) ஸ்டாஃபோர்ட்ஷயர் காவல்துறை நடத்திய விரிவான மற்றும் சிக்கலான விசாரணைக்குப் பின்னர் , பொது நலனைக் கருத்தில் கொண்டு இந்த வழக்குகளைத் தொடர முடிவு செய்யப்பட்டது. இதேவேளை, சந்தேகநபரான Spencer இந்த பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் தொடர்பாக 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார். https://athavannews.com/2025/1455384
  11. நாட்டினை மீள கட்டியெழுப்புதல் நிதிக்கு வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களால் 700 மில்லியன் ரூபா பங்களிப்பு! ‘இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புதல்’ நிதியானது வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களிடமிருந்து சுமார் 700 மில்லியன் ரூபாயைப் பெற்றுள்ளதாக நிதி, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளார். புள்ளிவிவரங்களை அறிவித்த அவர், இலங்கை வங்கியின் கீழ் இயங்கும் கணக்கின் மூலம் இதுவரை 30,470க்கும் மேற்பட்ட பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார். மேலதிகமாக, இலங்கை மத்திய வங்கியில் பராமரிக்கப்படும் கணக்குகளில் வெளிநாட்டு நாணய வைப்புத்தொகை கிட்டத்தட்ட 61 மில்லியன் ரூபா நிதிக்கு பங்களித்துள்ளது. 33 நாடுகளிலிருந்து பணம் அனுப்பப்பட்டுள்ளது. இதில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்பும் அடங்கும். செவ்வாய்க்கிழமை (02) நிலவரப்படி, சூறாவளி பேரழிவைத் தொடர்ந்து தேசிய மீள்கட்டமைப்பு முயற்சிகளை ஆதரிப்பதற்காக 19,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள் நிதியை வைப்பீடு செய்துள்ளனர். பேரிடருக்குப் பிந்தைய நாட்டின் மீள்கட்டமைப்பினை ஆதரிப்பதற்காக வெளிநாடுகளில் உள்ள இலங்கை சமூகங்கள் திரண்டு வருவதால், பங்களிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் அவர் கூறினார். https://athavannews.com/2025/1455204
  12. புட்டினின் இந்திய விஜயம்; மோடியுடன் விரிவான பேச்சுவார்த்தை இன்று! புது டெல்லிக்கும் மொஸ்கோவிற்கும் இடையிலான இருதரப்பு மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், அரசு முறைப் பயணமாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, புது டெல்லி விமான நிலையத்தில் ரஷ்ய ஜனாதிபதியை நேற்று (04) மாலை வரவேற்றார். பழைய நண்பரை உற்சாகத்துடன் கட்டிப்பிடித்து, இறுக்கமான கைகுலுக்கினார் மோடி. இன்று தனது பயணத்தின் இரண்டாம் நாளில் புட்டின், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவைச் சந்தித்து மரியாதை செலுத்த உள்ளார். பின்னர், அனைத்து வருகை தரும் தலைவர்களைப் போலவே, அவர் மகாத்மா காந்தியின் நினைவிடமான ராஜ்காட்டுக்குச் சென்று மரியாதை செலுத்த உள்ளார். அதேநேரம் இன்றைய தினம், பிரதமர் மோடியும் ஜனாதிபதி புட்டினும் 23 ஆவது இந்தியா-ரஷ்யா உச்சிமாநாட்டிற்காக ஹைதராபாத் மாளிகையில் சந்தித்து, முக்கியமாக பாதுகாப்பு, எரிசக்தி மற்றும் திறமையான தொழிலாளர்களின் இயக்கம் ஆகியவற்றில் பொருளாதார ஒத்துழைப்பை ஆழப்படுத்துவது குறித்து விவாதிப்பார்கள். இதைத் தொடர்ந்து ஒப்பந்தங்கள் மற்றும் பகிரப்பட்ட நிகழ்ச்சி நிரல் குறித்த கூட்டு செய்திக்குறிப்பு வெளியிடப்படும். அதன் பின்னர், இரு தலைவர்களும் வணிகத் தலைவர்களைச் சந்திக்க உள்ளனர். மாலையில் புட்டின், ரஷ்யா திரும்புவதற்கு முன்பு, ஜனாதிபதி முர்மு அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் விருந்து உபசாரத்தையும் மேற்கொள்ளவுள்ளார். இந்த விஜயத்தில் ரஷ்யத் தலைவருடன் அவரது பாதுகாப்பு அமைச்சர் ஆண்ட்ரி பெலோசோவ் மற்றும் வணிக மற்றும் தொழில்துறையைச் சேர்ந்த பரந்த அளவிலான குழுவும் இணைந்துள்ளனர். இதில் ரஷ்ய அரசு ஆயுத ஏற்றுமதியாளரான ரோசோபோரோனெக்ஸ்போர்ட்டின் உயர் நிர்வாகிகள் மற்றும் தடைசெய்யப்பட்ட எண்ணெய் நிறுவனங்களான ரோஸ்நெஃப்ட் மற்றும் காஸ்ப்ரோம் நெஃப்ட் ஆகியவற்றின் தலைவர்களும் அடங்குவர். புட்டினின் இந்திய விஜயத்தின் முக்கியத்துவம் புட்டினின் இந்திய பயணத்தின் நேரம் குறிப்பிடத்தக்கது. ஏனெனில் இது இந்தியா-ரஷ்யா மூலோபாய கூட்டாண்மையின் 25 ஆண்டுகளைக் குறிக்கிறது. இது புட்டின் ஜனாதிபதியாக பதவியேற்ற முதல் ஆண்டில் தொடங்கியது. 2000 ஆம் ஆண்டு முதல், இரு நாடுகளும் ஆண்டுதோறும் உச்சிமாநாடுகளை நடத்தி வருகின்றன. இந்தியத் தலைவர்கள் ஒரு வருடம் மொஸ்கோவிற்கு வருகை தருகிறார்கள், அடுத்த ஆண்டு ரஷ்ய ஜனாதிபதி புது டெல்லிக்கு பயணிக்கிறார். இருப்பினும், 2022 ஆம் ஆண்டில் ரஷ்யாவின் உக்ரேன் மீதான முழு அளவிலான படையெடுப்பிற்குப் பின்னர், அந்த பாரம்பரியம் உடைக்கப்பட்டது. அந்த ஆண்டு, பிரதமர் மோடி உச்சிமாநாட்டிற்காக ரஷ்யாவுக்குச் செல்லவிருந்தார், ஆனால் உச்சிமாநாடு ஒத்திவைக்கப்பட்டது. அடுத்த ஆண்டு, உக்ரேன் போர் தொடர்பாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ரஷ்ய ஜனாதிபதிக்கு எதிராக பிறப்பித்த பிடியாணை காரணமாக, புட்டின் புது டெல்லியில் நடந்த G20 உச்சிமாநாட்டைத் தவிர்த்தார். இந்தியா சர்வதேதேச குற்றவியல் நீதிமன்றில் உறுப்பினராக இல்லாவிட்டாலும், மாநாட்டில் ரஷ்ய ஜனாதிபதியுடன் மேடையைப் பகிர்ந்து கொள்வது G20-இன் மேற்கத்திய உறுப்பினர்களை சங்கடப்படுத்தக்கூடும். இறுதியாக, 2024 ஆம் ஆண்டில், வருடாந்திர உச்சிமாநாடு மீண்டும் தொடங்கியது. பிரதமர் மோடி ரஷ்யாவிற்கு விஜயம் செய்தார், நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் புட்டின் அந்தச் செயலைத் திரும்பப் பெற்றார். இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் கொள்முதல் தொடர்பாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது பொருட்களுக்கு விதித்த தண்டனை வரிகளைக் குறைப்பதற்கான வர்த்தக ஒப்பந்தத்திற்காக புது டெல்லி அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள நேரத்தில் புட்டின் இந்தியாவில் உள்ளார். பல தசாப்தங்களாக இந்தியாவின் முன்னணி ஆயுத விநியோகஸ்தராக மொஸ்கோ இருந்து வருகிறது. மேலும் 2030 ஆம் ஆண்டுக்குள் வர்த்தகத்தை 100 பில்லியன் டொலர்களாக வளர்க்கும் முயற்சியில் மேலும் இந்தியப் பொருட்களை இறக்குமதி செய்ய விரும்புவதாகக் கூறியுள்ளது. சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்யா உக்ரேனை ஆக்கிரமித்த பின்னர் ஐரோப்பிய நாடுகள் ரஷ்ய எரிசக்தியை நம்பியிருப்பதைக் குறைத்ததிலிருந்து, இந்தியா தள்ளுபடி செய்யப்பட்ட ரஷ்ய மசகு எண்ணெயை வாங்குவதை அதிகரித்துள்ளது. மோடி-புட்டின் சந்திப்பு நிகழ்ச்சி நிரலில் என்ன உள்ளது? கப்பல் போக்குவரத்து, சுகாதாரப் பாதுகாப்பு, உரங்கள், இணைப்பு மற்றும் தொழிலாளர் இயக்கம் ஆகிய துறைகளில் பல ஒப்பந்தங்கள் இது தலைவர்களுக்கு இடையில் இன்று கைச்சாத்திடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றன. இது உறவுகள் மற்றும் வர்த்தகம் இரண்டிற்கும் உத்வேகம் அளிக்கும். கடந்த சில ஆண்டுகளாக புது டெல்லி மற்ற நாடுகளிலிருந்து வாங்கும் பொருட்களை பல்வகைப்படுத்த முயற்சித்த போதிலும், ரஷ்யா இந்தியாவின் மிகப்பெரிய இராணுவ வன்பொருள் விநியோகஸ்தராக இருந்து வருகிறது. 2018 ஆம் ஆண்டு சுமார் $5.4 பில்லியன் மதிப்புள்ள ஒப்பந்தத்தின் கீழ் மூன்று S-400 தரையிலிருந்து வான் ஏவுகணை அமைப்புகளைப் பெற்ற பின்னர், மேலும் இரண்டு S-400 தரையிலிருந்து வான் ஏவுகணை அமைப்புகளை விரைவாக வழங்க இந்தியா ரஷ்யாவை வலியுறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உக்ரேனில் நடந்த போருடன் தொடர்புடைய விநியோகச் சங்கிலி இடையூறுகளுடன் இந்த தாமதம் இணைக்கப்பட்டுள்ளது. புட்டினின் வருகையின் போது எந்த ஒப்பந்தமோ அறிவிப்பும் எதிர்பார்க்கப்படவில்லை என்றாலும், மேலதிகமாக S-400 அலகுகள் அல்லது மேம்படுத்தப்பட்ட மாறுபாட்டைப் பெறுவதற்கான சாத்தியக்கூறுகளையும் இந்திய அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர். மே மாதம் பாகிஸ்தானுடனான ஒரு குறுகிய இராணுவ மோதலின் போது S-400 பயனுள்ளதாக நிரூபிக்கப்பட்டது என்று இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகின்றனர். இந்தியாவின் ரஷ்ய தயாரிப்பான Su-30MKI போர் விமானங்களை மேம்படுத்துதல் மற்றும் முக்கியமான இராணுவ வன்பொருள் விநியோகங்களை விரைவுபடுத்துதல், கூட்டுப் பயிற்சிகள் மற்றும் பேரிடர் நிவாரணத்தில் ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல் குறித்தும் பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றன. மொஸ்கோ தனது ஸ்டெல்த் போர் விமானமான Su-57 ஐ இந்தியாவிற்கு விற்பனை செய்வதில் ஆர்வமாக உள்ளது. ஆனால், புது டெல்லி ஏனைய வெளிநாட்டு விநியோகஸ்தர்களுக்கு அதன் விருப்பங்களைத் திறந்து வைத்துள்ளது. அமெரிக்காவின் நிலைப்பாடு மொஸ்கோவின் போர் இயந்திரத்திற்கு நிதியளிக்க உதவும் என்று கூறும் தள்ளுபடி செய்யப்பட்ட ரஷ்ய எண்ணெயை இந்தியா வாங்குவதை வொஷிங்டன் விமர்சித்து வருகிறது. ஆகஸ்ட் மாதம், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்திய இறக்குமதிகளுக்கு மேலதிகமாக 25 சதவீத வரிகளை விதித்தார். பதிலடியாக மொத்த வரிகளை 50 சதவீதமாக உயர்த்தினார். எனினும், அதன் 1.4 பில்லியன் மக்களின் வளர்ந்து வரும் எரிசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு இந்தியா தனது இறக்குமதியை அவசியம் என்று பாதுகாத்துள்ளது. இந்த விடயம் விரிவான விவாதத்திற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. https://athavannews.com/2025/1455208
  13. ரஷ்யா, டான்பாஸ் பகுதியை வலுக்கட்டாயமாகக் கைப்பற்றும் – புட்டின் எச்சரிக்கை! உக்ரேனின் கிழக்கு டான்பாஸ் பகுதியில் இருந்து உக்ரேன் படையினர் வெளியேற வேண்டும், இல்லையெனில் மொஸ்கோ குறித்த பகுதியை கைப்பற்றும் என்று என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மீண்டும் எச்சரித்துள்ளார். அதேநேரம், உக்ரேனில் போரை எவ்வாறு முடிவுக்குக் கொண்டுவருவது என்பது குறித்த எந்தவொரு சமரசத்தையும் அவர் நிராகரித்தார். இது குறித்து கருத்து தெரிவித்த அவர், குறித்த பகுதிகளை வலுக்கட்டாயமாக விடுவிப்போம், இல்லையெனில் உக்ரேனிய படைகள் இந்தப் பகுதிகளை விட்டு வெளியேறும் – என்றார். டான்பாஸின் 85% பகுதியை மொஸ்கோ கட்டுப்பாட்டில் கொண்டுள்ளது. அதேநேரம், உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, டான்பாஸ் பகுதியை விட்டுக்கொடுக்கும் திட்டத்தை நிராகரித்துள்ளார். அமெரிக்க அமைதித் திட்டம் குறித்து விவாதிக்கும் தனது பேச்சுவார்த்தையாளர்கள், செவ்வாய்க்கிழமை (02) மொஸ்கோவில் நடந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் ரஷ்யாவின் தலைவர் “போரை முடிவுக்குக் கொண்டுவர விரும்புவார்” என்று நம்புவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியதை அடுத்து புட்டினின் இந்தக் கருத்துக்கள் வந்துள்ளன. ரஷ்யா 2022 பெப்ரவரியில் உக்ரேன் மீது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியது. மேலும் தற்போது மொஸ்கோ உக்ரேன் பிரதேசத்தில் சுமார் 20% கட்டுப்பாட்டினை கொண்டுள்ளது. மோதல்களினால் கடுமையான உயிரழப்புகள் ஏற்பட்டுள்ள போதிலும், அண்மைய வாரங்களில், தென்கிழக்கு உக்ரேனில் ரஷ்ய படையினர் மெதுவாக முன்னேறி வருகின்றன. https://athavannews.com/2025/1455232
  14. கோப்பாய் – நல்லூர் பிரதேச சபை எல்லையில் வெள்ள பிரச்சனை குறித்து தரப்பினர் விளக்கம்! நல்லூர் பிரதேச சபை – கோப்பாய் பிரதேச சபை எல்லையில் வெள்ள வாய்க்காலுக்குள் மண் அணை போடப்பட்டது தொடர்பிலோ , மதகுக்குள் வெள்ள நீரை விட , தற்காலிக வாய்க்கால் வெட்டப்பட்டமை தொடர்பில்லோ கோப்பாய் பிரதேச சபைக்கு எந்த தகவலும் தெரியாது என கோப்பாய் பிரதேச சபை தவிசாளர் தியாகராசா நிரோஷ் தெரிவித்துள்ளார். நல்லூர் பிரதேச சபை ஆளுகைக்குள் உள்ள வெள்ள நீர் வடிந்தோடுவதற்காக தற்காலிகமாக அமைக்கப்பட்ட வெள்ளநீர் வாய்க்காலை மண் அணை போட்டு தடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் , ஆராய்வதற்கு சம்பவ இடத்திற்கு இன்றைய தினம் கோப்பாய் தவிசாளர் சென்றிருந்த போது , வெள்ளம் வடிய வாய்க்கால் அமைத்த தரப்பினரும் , அதனை தடுத்த தரப்பினரும் அங்கு கூடியிருந்தனர். வாய்க்கால் தொடர்பில் பிரதேச சபைக்கு தெரியாது. அதன் போது முதலில் இந்த வாய்க்கால் தொடர்பில் கோப்பாய் பிரதேச சபைக்கு எதுவும் தெரியாது. அதாவது வெட்டினதும் தெரியாது , மூடினதும் தெரியாது. இது பிரதேச சபைகளுக்கு இடையிலான மோதல் இல்லை என்பதனை தெளிவு படுத்துவதாக தெரிவித்தார். வாய்க்காலை மூடிய தரப்பு அதன் பின்னர் வாய்க்காலை தாம் தான் மூடியதாக அப்பகுதியை சேர்ந்த சிலர் தெரிவித்தனர். தமது பகுதிக்குள் 4 அடிக்கு மேல் வெள்ளநீர் நிற்கிற நிலையில், புதிதாக ஒரு பகுதி வெள்ள நீரை மேலும் எமது பகுதிக்கு அனுப்புவதனை ஏற்க முடியாது. அதனாலயே மூடினோம். எந்த வெள்ளநீர் எமது பிரதேசத்தால் செல்வதில் எமக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் செம்மணி நீரேந்து பிரதேசம் வரையில் ஒழுங்கான வடிகால் அமைப்பை செய்து. அதனூடாக வெள்ள நீரை வெளியேற்ற வேண்டும். அதனை விடுத்து தாழ் நிலங்களில் வசிக்கும் எமது காணிகளுக்குள் வெள்ளநீரை மடைமாற்றி விட கூடாது என தெரிவித்தனர். மூன்று வருடங்களாக தான் வெள்ளம் அதேநேரம் , வெள்ள வாய்க்கால் அமைக்கப்பட்ட பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவிக்கும் போது , கடந்த மூன்று வருடங்களாக தான் வெள்ளத்தால் பாதிக்கப்படுகிறோம். யாழ்ப்பாணத்தையே உலுக்கிய நிஷா புயலின் போது கூட எங்கள் வளவுக்குள் வெள்ளம் நிற்கவில்லை. தற்போது வெள்ளம் நிற்க காரணம் பருத்தித்துறை வீதி புனரமைப்பின் போது இந்த பிரதேசத்தில் இருந்த நான்கு மதகுகள் முற்றாக மூடி விட்டார்கள். தற்போது தற்காலிக வாய்க்கால் வெட்டிய இடத்தில் கூட வடிகால் வாய்க்கால் இருந்தது. வீதி அகலிக்கும் போது , மூடி விட்டார்கள். அதுமட்டும் இன்றி , தற்காலிக வாய்க்காலை அமைத்து வெள்ளநீரை விட்ட மதகு புனரமைப்பின் போது மதகுக்கு அருகால் , மண் போட பட்டு தற்காலிக வீதியை அமைத்திருந்தனர். மதகு கட்டி முடிக்கப்பட்டதன் பின்னர் , அந்த மண் பாதையை அகற்றாமல் சென்று இருந்தனர். அதனை அடுத்து அதற்கு அருகில் உள்ள தனியார் , அப்பகுதியை சுவீகரித்து மதிலையும் கட்டி விட்டார். அதனால் வீதியால் வழிந்தோடி வந்த நீர் தனியாரின் மதிலினாலும் , மதகு கட்டுவதற்காக போடப்பட்ட மண் மேட்டினாலும் நீர் ஓடாது எமது பகுதியில் தேங்கி நிற்கிறது. அதனாலயே இம்முறை மதகு வரையில் சுமார் 30 மீட்டர் தூரம் வாய்க்கால் போன்று , மண்ணை வெட்டி விட்டோம். என தெரிவித்தனர். வீதி புனரமைப்பின் போது மதகுகள் பாலங்களை மூடி விட்டார்கள் அதனை தொடர்ந்து தவிசாளர் தெரிவிக்கையில் , குறித்த வீதியில் காணப்பட்ட மதகுகள் மூடப்பட்டுள்ளன. அது தொடர்ப்பில் நாம் RDA யிடம் கேட்டோம். அதற்கு அவர்கள் தமக்கு வீதிக்கு மாத்திரமே நிதி கிடைப்பதாகவும் , மதகுகள் பாலத்திற்கு வேறாக ஒதுக்கப்படும். இந்த இடத்தில் ஒரு மதகுக்கு மாத்திரமே நிதி ஒதுக்கப்பட்டது என தெரிவிக்கின்றனர். எமது பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் தான் அதிக நீரேந்து பிரதேசங்கள் காணப்படுகின்றன. அவற்றில் இந்த பகுதியில் இருந்து வெளியேறும் நீர் , செம்மணி பகுதியில் உள்ள நீரேந்து பிரதேசங்களில் தேங்கும். தற்போது அப்பகுதி மத்திய அரசின் அனுமதிகளுடன் மண் போட்டு நிரப்பபட்டு வருகிறது. மத்திய அரசு காலம் காலமாக அபிவிருத்தி எனும் பெயரில் நீரேந்து பிரதேசங்களையே நிரவி கட்டடங்களை கட்டி வருகிறது. அவற்றினை மக்கள் பிரதிநிதிகள் எதிர்ப்பார்கள் என்பதால் தான் , மாகாண சபை , உள்ளூராட்சி தேர்தலைகளை தாமதப்படுத்தி வருகின்றனர். தற்போது கூட இந்த வெள்ள நீர் எமது பகுதியால் வெளியேறுவதில் எமக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் செம்மணி பகுதியில் இருந்து வடிகால் அமைப்பினை செய்து உரிய முறையில் வெளியேற்ற வேண்டும். ஒரு பகுதி மக்கள் பாதிக்கப்படுகின்றனர் என உடனடியாக எடுக்கப்படும் நடவடிக்கையால் இன்னொரு தரப்பு மக்கள் பெரும் பாதிப்பை எதிர்கொள்ள கூடாது. அந்தவகையில் நேற்றைய தினம் இந்த இடத்திற்கு கடற்தொழில் அமைச்சர் வருகை தந்து , பார்த்துள்ளார். அவர் கூறிய சில கருத்துக்கள் தவறாக இருந்தாலும் , அவர் இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தி உள்ளதால் , உடனடியாக மத்திய அரசிடம் இருந்து நிதியினை பெற்று இப்பகுதியில் எந்த தரப்பு மக்களும் பாதிக்கப்படாமல் இருக்க உரிய வடிகால் அமைப்புக்களை மேற்கொண்டு உரிய முறையில் வெள்ள நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். https://athavannews.com/2025/1455174
  15. மோடி சார்.... விகாரை கட்டுவதற்கு, ஒரு கப்பல் செங்கலும் தந்து உதவும் படி வேண்டுகின்றோம். இப்படிக்கு, ஆமத்துறு. 😂
  16. வரலாறு, சித்திரக்கலை பாடங்களிலிருந்து தமிழர்களின் வரலாறு குறித்த விடயங்கள் நீக்கப்படவில்லை – பிரதமர்! வரலாறு மற்றும் சித்திரக்கலை ஆகிய பாடங்களிலிருந்து தமிழர்களின் வரலாறு மற்றும் கலைப் படைப்புகள் குறித்த விடயங்கள் நீக்கப்படவில்லை எனப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் பத்மநாதன் சத்தியலிங்கம் மற்றும் சிவஞானம் சிறீதரன் ஆகியோரின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது மேலும் விளக்கமளித்த பிரதமர், யாழ்ப்பாண மாவட்டத்தின் எழுவைதீவில் இரண்டு பாடசாலைகள் உள்ளன. 1999ஆம் ஆண்டிலிருந்து இந்தப் பாடசாலைகள் பரீட்சை நிலையங்களாகப் பயன்படுத்தப்படவில்லை. இந்தப் பாடசாலைகளின் மாணவர்கள் சாதாரண தரப் பரீட்சைக்காகக் காரைதீவில் அமைந்துள்ள சென். அந்தோனிஸ் கல்லூரியின் பரீட்சை நிலையத்திலேயே தோற்றுகின்றனர். எழுவைதீவிலுள்ள பாடசாலைகளில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்த எண்ணிக்கையாக இருப்பதால், அவை பரீட்சை நிலையங்களாகப் பேணப்படவில்லை. புள்ளிவிவரப்படி, 2022இல் 10 மாணவர்களும், 2023இல் 8 மாணவர்களும், 2024இல் 5 மாணவர்களுமே சாதாரண தரப் பரீட்சைக்காக விண்ணப்பித்துள்ளனர். எனவே, இந்தப் பாடசாலைகள் பரீட்சை நிலையங்களாகப் பயன்படுத்தப்படாமல், மிக அண்மையிலுள்ள பரீட்சை நிலையத்திற்கு மாணவர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும், அந்த மாணவர்களுக்குக் காரைதீவுத் தீவில் அமைந்துள்ள பரீட்சை நிலையத்திற்குச் செல்லத் தேவையான போக்குவரத்து வசதிகள் குறித்தும் நாம் கவனம் செலுத்துகின்றோம். அதேபோல், தற்போது நடைமுறையிலுள்ள வரலாற்றுப் பாடத்தில் தமிழ் மன்னர்கள் குறித்து உள்ளடக்கப்பட்டுள்ளது. பத்தாம் தரத்தின் ஏழாவது பாடத்தில் அதற்கென ஓர் அத்தியாயம் ஒதுக்கப்பட்டுள்ள அதேவேளை, பத்தாம் தரத்தின் பத்தாவது பாடத்தில் யாழ்ப்பாண இராச்சியம் பற்றிய ஓர் அத்தியாயமும் சேர்க்கப்பட்டுள்ளது. அதில் சங்கிலி மன்னன் ஆட்சி செய்த காலம் குறித்தும் உள்ளடக்கப்பட்டுள்ளது. புதிய கல்வி மறுசீரமைப்பின் கீழ், நாம் தற்போது ஆறாம் ஆண்டுக்கான வரலாறு பற்றிய புதிய பாடத்திட்டங்களைத் தயாரித்துள்ளதுடன், அதில் சங்கிலி இராச்சியத்தின் படமும் சேர்க்கப்பட்டுள்ளது. வரலாற்றை ஒரு பாடமாகக் கற்பிக்கும்போது சிங்களம் மற்றும் தமிழ் எனப் பிரித்துக் கற்பிக்கப்படுவதில்லை. இலங்கையின் வரலாறு என்ற வகையில் பல்வேறு காலப் பகுதிகளில் மன்னர்கள் மற்றும் இராச்சியங்கள் குறித்துக் கற்பிக்கப்படுகின்றன. இலங்கையின் வரலாற்றைப் பாதுகாப்பதிலும், காட்சிப்படுத்துவதிலும் முன்னோடியான தேசிய அருங்காட்சியகத் திணைக்களம், தமிழர் வரலாற்றைக் காட்சிப்படுத்துவதற்காகக் காட்சிக்கூடங்களில் இடங்களை ஒதுக்கியுள்ளது. கொழும்பு அருங்காட்சியகத்தின் கல் புராதனப் பொருட்கள் கூடங்களில், நான்கு தமிழ்த் தூண் கல்வெட்டுகளும், இரண்டு தமிழ்க் கல்வெட்டுக் கடிதங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்தக் கல்வெட்டுகள், இந்தியாவின் இராசராச மற்றும் இராஜேந்திராதிராச மன்னர்களின் இலங்கைப் பிரதிநிதிகளாலும் ஆரியச்சக்கரவர்த்தி ஆரியர்களாலும் நிறுவப்பட்ட கல்வெட்டுகளாகும். மேலும், கொழும்பு தேசிய அருங்காட்சியகத்தில் உள்ள தமிழ்க் கல்வெட்டுகள் குறித்த தகவல்களை உள்ளடக்கிய ஒரு நூல் பேராசிரியர் எஸ். பத்மநாதன் அவர்களால் எழுதப்பட்டுள்ளதுடன், திணைக்களத்தின் வெளியீட்டுப் பிரிவினால் விற்பனை செய்யப்படுகின்றது. அதேபோல, இந்து மதத்தைச் சேர்ந்த சிவன், பார்வதி, நடராசர், சுந்தரமூர்த்தி உள்ளிட்ட கல் மற்றும் வெண்கலச் சிலைகளும் சிற்பங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவை தவிர, யாழ்ப்பாண இராச்சியத்தில் பயன்படுத்தப்பட்ட சேது நாணயங்களின் தொகுப்பு ஒன்று பாதுகாப்பாகச் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. கொழும்பு தேசிய அருங்காட்சியகத்தில் உள்ள சங்க காலத்தைச் சேர்ந்த சோழ மற்றும் பாண்டிய நாணயங்கள் குறித்து கலாநிதி கிருஷ்ணமூர்த்தி மற்றும் சேனரத் விக்ரமசிங்க ஆகியோரால் எழுதப்பட்ட ஒரு நூலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. சித்திரக்கலை பாடமானது நடைமுறைச் செயற்பாடுகள் மற்றும் சிறந்த கலைப் படைப்புகளைக் கற்பதற்கான ஒரு பாடமாகும். இந்தப் பாடத்திட்டத்தைத் தயாரிக்கும்போது குறிப்பாகச் சர்வ தேசிய, சர்வ மத மற்றும் சர்வ பௌதிக கலைப் படைப்புகளை உள்ளடக்கிய சர்வதேசத் தரம் கவனத்தில் கொள்ளப்பட்டது. அத்தோடு, சித்திரக்கலை பாடத்தின் மறுசீரமைப்பின்போது இந்த விடயத்தில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் பிரதமர் அவர்கள் தெரிவித்தார். https://athavannews.com/2025/1455104
  17. நாட்டில் அனர்த்தம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 479ஆக அதிகரிப்பு! நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்த பேரிடர் நிலைமை காரணமாக ஏற்பட்ட அனர்த்த மரணங்களின் எண்ணிக்கை 479 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இன்று (03) பிற்பகல் வெளியிடப்பட்ட சமீபத்திய அறிவிப்பின்படி, 350 பேர் காணாமல் போயுள்ளனர். 448,817 குடும்பங்களைச் சேர்ந்த 1,586,329 பேர் மோசமான வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கண்டி மாவட்டத்தில் அதிகபட்சமான இறப்புகள் பதிவாகியுள்ளன. இதே நேரத்தில், நுவரெலியா மாவட்டத்தில் 89 இறப்புகளும், பதுளை மாவட்டத்தில் 83 இறப்புகளும், குருநாகலையில் 53 இறப்புகளும், கேகாலை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் 29 இறப்புகளும், மாத்தளை மாவட்டத்தில் 28 இறப்புகளும் பதிவாகியுள்ளன. இதற்கிடையில், கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 171 பேரும், நுவரெலியாவைச் சேர்ந்த 73 பேரும், கேகாலை மாவட்டத்தைச் சேர்ந்த 43 பேரும், பதுளையைச் சேர்ந்த 28 பேரும், குருநாகலைச் சேர்ந்த 27 பேரும் இன்னும் பேரிடர் காரணமாக காணாமல் போயுள்ளனர். https://athavannews.com/2025/1455085
  18. தமிழ் சினிமாவின் மூத்த தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் காலமானார்! தமிழ் சினிமாவின் மூத்த திரைப்பட தயாரிப்பாளரும், சென்னையில் உள்ள புகழ்பெற்ற ஏவிஎம் கலையரங்கின் தலைவருமான எம்.சரவணன், தனது 86 ஆவது வயதில் காலமானார். அவரது மறைவு குறித்த செய்தி திரைப்படத் துறையினர், ரசிகர்கள் மற்றும் தமிழ் அரசியல் தலைவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படும் பிரபல இயக்குனர்-தயாரிப்பாளர் ஏ.வி. மெய்யப்பனின் மகனாவார் சரவணன். நாட்டின் மிகப் பழமையான கலையரங்குகளில் ஒன்றான பிரபலமான ஏ.வி.எம் ஸ்டுடியோவை அவர் நிறுவினார். இன்று வரை சென்னையில் இது ஒரு அடையாளமாக இது உள்ளது. சரவணன் தனது தந்தை விட்டுச் சென்ற செழுமையான சினிமா பாரம்பரியத்தை எடுத்துக்கொள்வதில் மிகவும் பிரபலமானவர். இந் நிலையில் அவரது மறைவு, நவீன தமிழ் சினிமாவின் பரிணாம வளர்ச்சியிலிருந்து பிரிக்க முடியாத ஒரு மனிதரின் பெயரை திரைப்பட உலகம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. சரவணன் இன்று (04) காலை வயது மூப்பு தொடர்பான உடல்நலக்குறைவால் காலமானார். அவரது உடல் சென்னையில் உள்ள ஏவிஎம் கலையரங்கின் மூன்றாவது மாடியில் இன்று பிற்பகல் 3.30 மணி வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்படும். இந்த ஸ்டுடியோ – ஒரு நிறுவனமாக – அவரது தலைமையால் வடிவமைக்கப்பட்ட எண்ணற்ற தயாரிப்புகளின் தாயகமாக இருந்து வருகிறது. 1939 ஆம் ஆண்டு பிறந்த சரவணன், தனது தந்தை ஏ.வி. மெய்யப்பனிடமிருந்து ஏ.வி.எம். தயாரிப்பின் பொறுப்பைப் பெற்று, சினிமா உலகில் விரைவாக அடியெடுத்து வைத்தார். தனது சகோதரர் எம். பாலசுப்பிரமணியனுடன் சேர்ந்து, 1950களின் பிற்பகுதியில் கலையரங்கை வழிநடத்தத் தொடங்கினார். அந்தக் காலத்தின் மறக்கமுடியாத சில படங்களை மேற்பார்வையிட்டார். சரவணனின் பணி பல தசாப்தங்கள், வகைகள் மற்றும் தலைமுறைகளைக் கடந்து பரவியுள்ளது. அவரது நீண்ட தொழில் வாழ்க்கையில், சரவணன் பல காலகட்டங்களில் பல மைல்கல் படங்களை தாயரித்துள்ளார். அவற்றில் நானும் ஒரு பென் (1963), சம்சாரம் அது மின்சாராம் (1986), மின்சார கனவு (1997), சிவாஜி (2007), வேட்டைக்காரன் (2009), மற்றும் அயன் (2009) சூப்பர்ஹிட் திரைப்படங்களை நாம் பெயரிட்டுக் கொண்டே போகலாம். https://athavannews.com/2025/1455129
  19. தயாரித்த உணவுப் பொருட்களை எந்தக் காலத்திலும் காலாவதியாகி விட்டது என்று தூக்கி எறிய மாட்டார்கள். ஏதோ ஒரு விதத்தில், மறு சுழற்சியாக வாடிக்கையாளர் தலையிலேயே கட்டி விடுவார்கள் என்று நினைக்கின்றேன். "புது மொந்தையில் பழைய கள்ளு" 😂
  20. பாகிஸ்தான்காரருக்கு... லேபிள் மாத்துற "ரெக்னிக்" தெரியாது போலை இருக்கு. 😂 அவங்களை... தமிழ் கடைக்காரரிடம் "ட்ரெய்னிங்" எடுக்க விட வேணும். 🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.