Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. அல்லைப்பிட்டியில் பொலிசாரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த சிறுவனின் கண்ணீர் அஞ்சலி பதாகை. 09.11.2008ஆம் ஆண்டே பிறந்துள்ளான். வாற நவம்பர் 09ஆம் திகதிக்கு பின்னரே 18 வயது. தற்போது 17வயது + ஆக 19 வயது என இன்றைக்கு அறிக்கை விட்டதும் பொய்யா ?? Sriramachandaran Mayutharan
  2. "வாகனத்தை பொக்ஸ் அடிச்சு தான் வெடி வைச்சு இருக்கிறாங்க ?" தீவகத்தில் இருந்து யாழ்.நோக்கி பயணித்த வாகனத்தை அல்லைப்பிட்டி பகுதியில் நின்ற பொலிஸார் மறிச்சு இருக்கிறாங்க. வாகனம் நிற்காது தொடர்ந்து பயணித்துள்ளது. அது தொடர்பில் மண்டைதீவு பொலிஸ் காவலரனுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் உஷார் நிலையில் இருந்ததும். வந்த வாகனம் மண்டைதீவில் பொலிஸார் உசார் என்றதும் , மீண்டும் அல்லைப்பிட்டி பக்கம் வாகனத்தை திருப்பி செல்ல முற்பட்டுள்ளனர். அந்த நேரம் அல்லைப்பிட்டியில் இருந்து வாகனத்தை துரத்தி வந்த பொலிஸ் குழு வாகனத்தை நோக்கி சூட்டுள்ளனர். அதோடு வாகனம் நிறுத்தப்பட்டுள்ளது. (சம்பவம் நடந்தது யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை வீதியில்) வாகனத்தினுள் உள்ளவர்கள் தமக்கு ஒரு துப்பாக்கி சூட்டு சத்தமே கேட்டதாகவும். அதோடு வாகனத்தை வீதியோரமாக நிறுத்தியதாக தெரிவித்துள்ளனர். ஆனால் பொலிஸ் தரப்பு தகவலின் அடிப்படையில் ஒரு கைத்துப்பாக்கி சூடும் , ஏகே துப்பாக்கி சூடு 08ம் நடத்தப்பட்டதாக படம் 1 :- வாகனத்தின் முன் பக்க கண்ணாடியில் உள்ள காயம். அது முன் பக்கத்தால் ஏதோ ஒரு பொருள் தாக்கியுள்ளது (?) உள்பக்கத்தால் வந்த சன்னம் ஏதேனும் தாக்கி இருந்தால் கண்ணாடியில் உள்ள ஓட்டை வெளிப்பக்கம் தள்ளி இருக்கும். முன் பக்கத்தால் ஏதோ ஒரு பொருள் தாக்கி இருக்கலாம் படம் 2 :- நின்ற வாகனத்தின் பின் பக்க கண்ணாடி அடித்து உடைக்கப்பட்டு இருக்கலாம். ஏனெனில் கண்ணாடி சிதறல்கள் அவ்விடத்தில் காணப்படுகிறது. படம் 3 :- துருப்பிடித்த வாள் படம் 4 :- வீதியில் படிந்துள்ள இரத்த கறை வாகனம் இரத்த வடிய வடிய சில தூரம் பயணித்து இருக்கலாம்.. படம் 5 ;- வாகனத்தின் பின் பக்க கண்ணாடி உடைவு. இது துப்பாக்கி சூட்டால் ஏற்பட்ட உடைவு போன்று இல்லை. இந்த கண்ணாடி உடைவு துண்டுகள் தான் படம் 2 இல் வீதியில் சிதறி இருக்கும் கண்ணாடி துண்டுகள், நின்ற வாகனத்தின் கண்ணாடி அடித்து உடைத்து இருந்தாலே , அவ்வாறு காணப்படும். படம் 6 :- துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான வாகனம் நின்ற இடம். அதில் இருந்து சுமார் 50 அடி தூரத்தில் உள்ள பேருந்து தரிப்பிடத்திற்கு அருகில் , பொலித்தீன் பையில் சாணகம் காணப்பட்டுள்ளது. படம் 7 ;- பொலித்தீன் பையில் காணப்படும் சாணகம் படம் 8 :- சம்பவம் இடம்பெற்ற பகுதி. சிவத்த வட்டத்திற்குள் இருப்பது தான் பேருந்து நிலையம். அதற்கு அருகில் தான் பொலித்தீன் பைக்குள் சாணகம் இருந்தது. படம் 09 :- மண்டைதீவு பொலிஸ் காவலரண். அங்கு வீதி தடைகள் தயார் நிலையில், மண்டைதீவு பொலிஸ் காவலரணில் 24 மணி நேரமும் பொலிஸார் கடமையில் இருப்பார்கள் ஏதேனும் சம்பவம் என்றால் வீதி தடைகளை வீதிக்கு உடனே இழுத்து விடுவார்கள். அதற்கு ஏதுவாக சில்லுகள் எல்லாம் பூட்டப்பட்டுள்ளன. இப்படி நிறைய விடயங்கள் இருக்கு. இருக்கட்டும். கைதானவர்கள் தொடர்பில் பலரும் முன் வைக்கும் குற்றச்சாட்டு " மாட்டு கள்ளர்" பொலிஸார் நேற்றைய தினம் நீதிமன்றில் கைதான இருவரையும் முற்படுத்திய வேளை அவர்களுக்கு முற்குற்றம் உள்ளதாக தெரிவிக்கவில்லை. உயிரிழந்த சிறுவனுக்கும் இருந்ததாக தெரிவிக்கவில்லை விளக்கமறியலில் வைக்கப்பட்ட இருவருக்கும் பிணை கோரி இன்றைய தினம் புதன்கிழமை சட்டத்தரணி பிணை விண்ணப்பம் செய்த போதிலும் , பிணைக்கு எதிர்ப்பு தெரிவித்த பொலிஸார் உயிரிழந்த மற்றும் விளக்கமறியலில் இருந்த இருவருக்கும் எதிராக எந்தவொரு முற்குற்றங்கள் இருந்ததாகவும் மன்றில் தெரிவிக்கவில்லை. அத்தோடு , பொலிஸ் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கைகளிலும் வாகனத்தில் பயணித்தவர்களுக்கு முற்குற்றம் இருப்பது தொடர்பில் எந்த விடயத்தையும் குறிப்பிடவில்லை. அதை விட சம்பவம் இடம்பெற்ற வேளை ஊர்காவற்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் சம்பவ இடத்தில் சம்பவத்துடன் தொடர்பு பட்ட பொலிஸ் குழுவில் ஒருவராக இருந்துள்ளார். அவரது உத்தரவிலையே துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் தகவல்கள் ஊடாக அறிய முடிகிறது. சம்பவம் தொடர்பில் முதல் கட்டமாக குறைந்த பட்சம், பொலிஸ் விசேட விசாரணை குழு ஒன்று அமைத்து , சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து இருக்க வேண்டும். விசாரணைங்களில் தலையீடு இருக்க கூடாது என்பதற்காக சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் குழுவை இடை நிறுத்தியோ , வேறு பொலிஸ் நிலையங்களுக்கு மாற்றம் செய்தோ விசாரணைகளை முன்னெடுத்து இருக்க வேண்டும். ஊர்காவற்துறை பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடாத்தி இருக்க முடியாது. பிறிதொரு விசேட பொலிஸ் குழுவே விசாரணைகளை முன்னெடுத்திருக்க வேண்டும். ஏனெனில் சம்பவத்துடன் தொடர்பு பட்ட பொலிஸ் குழுவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் காணப்படுவதனால் , அந்த பொலிஸ் நிலைய பொலிஸார் மேற்கொள்ளும் விசாரணைகள் எவ்வளவு தூரம் நியாயமாக இருக்க முடியும் ?? ஆ.. அப்புறம் வாகனத்தின் பின் சீட் எங்கே என கேட்டதற்கு , உமையாள்புரத்தில் வயல் உள்ளதாம், அங்கிருந்து நெல் மூட்டை ஏற்றி வர ஏதுவாக கழட்டி வைச்சது என வாகனத்தில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். வாகனம் கூட ஓரிரு நாட்களுக்கு முன்னர் தான் வவுனியாவை சேர்ந்த நபர் ஒருவரிடம் இருந்து விலைக்கு வாங்கியுள்ளனர். Sriramachandaran Mayutharan
  3. வாகனத்தில் இருந்த சாணகம் , கயிறு , வாள், வாகனத்தில் விழுந்துள்ள துப்பாக்கி சூடுகள் பற்றி எவையும் எமக்கு தெரியாது என வாகனத்தில் இருந்த சிறிய தந்தை தெரிவித்துள்ளார். பொலீசாரே... துப்பாக்கிச் சூடு நடாத்தி சிறுவனை கொன்று, மற்றையவர்களை கைது பண்ணிய பின்... யாரும் அவ்விடத்தில் இல்லாத நிலையில், அந்த வாகனத்த்துள்... சாணகம், கயிறு , வாள் போன்ற்வற்றை கொண்டு போய் வைத்து.. அவர்களை மாட்டுக் கள்ளர் என நிறுவ பார்க்கிறார்கள். இலங்கை போலீசார்.. வழக்குகலாய் திசை திருப்பி தாம் தப்புவது இது முதல் முறையல்ல.
  4. பொலிஸார் வாகனத்தை மறித்த போது... நிற்காமல் போயிருந்தால், பின்னுக்கு இருந்துதான் துப்பாக்கிப் பிரயோகம் செய்திருப்பார்கள். அப்படியிருக்க... சிறுவனின் நெற்றியில் துப்பாக்கி குண்டு பாய்ந்து, மூளையை தாக்கியமையாலேயே மரணம் சம்பவித்துள்ளது என உடற்கூற்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொலிஸார் கொலை செய்து விட்டு இப்போ... தமக்கு சாதகமாக இச் சம்பவத்தை திசை திருப்புகின்றார்கள்.
  5. அல்லைப்பிட்டி சிறுவன் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் – கைது செய்யப்பட்டவர்களுக்கு பிணை! யாழ்ப்பாணத்தில் பொலிசாரின் கட்டளையை மீறி சென்ற வாகனத்தில் பயணித்த இருவரையும் 25 ஆயிரம் ரூபாய் ரொக்க பிணையிலும் தலா 2 ஆள் பிணையிலும் செல்ல ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று அனுமதித்துள்ளது. அல்லைப்பிட்டி பகுதியில் பொலிசாரின் கட்டளையை மீறி பயணித்த வாகனம் மீது பொலிஸார் நேற்றைய தினம் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ள நிலையில், வாகனத்தில் பயணித்த இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர் கைது செய்யப்பட்ட இருவரையும் விசாரணைகளின் பின்னர் நேற்றைய தினம் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை , அவர்களை எதிர்வரும் 24ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது. இந்நிலையில் குறித்த இருவர் சார்பிலும் முன்னிலையான சட்டத்தரணி இன்றைய தினம் நகர்த்தல் பத்திரம் ஊடாக வழக்கினை மன்றில் மீண்டும் விசாரணைக்கு எடுத்து , பிணை விண்ணப்பம் செய்ததனை அடுத்து இருவருக்கும் நீதிமன்று பிணை வழங்கியுள்ளது. இதேவேளை, துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான ஹயஸ் வாகனத்தை வவுனியாவில் உள்ள நபர் ஒருவரிடம் இருந்து தாம் புதிதாக கொள்வனவு செய்ததாகவும் , கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் தமக்கு சொந்தமான வயலில் நெல் அறுவடை செய்வதற்காக வேலணை பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் வேலையாட்களை ஒழுங்கு படுத்தி தருவதாக கூறியதால் , அவரை ஏற்ற சென்ற வேளையே சம்பவம் இடம்பெற்றதாக கைதான இருவரும் தெரிவித்துள்ளனர். அத்துடன், உயிரிழந்த சிறுவனின் சிறிய தந்தை தான் முன்னதாக வாகனத்தை ஓடியதாகவும் , தீவு பகுதியில் வீதியில் சிறுவன் தான் வாகனம் ஓட விரும்பி கேட்ட போது வாகனத்தை வழங்கிய நிலையில் வாகனத்தை ஓட்டி சென்ற வேளை அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸார் மறித்த போது வாகனத்தை நிறுத்தாது தொடர்ந்து செலுத்தினார் அவ்வேளை மண்டைதீவு பொலிஸ் காவலரணில் நின்ற பொலிஸார் வாகனத்தை மறிக்க தயாராக இருந்த வேளை மீண்டும் வாகனத்தை அல்லைப்பிட்டி பக்கம் நோக்கி திருப்பிய வேளை எம்மை பின் தொடர்ந்து வந்த பொலிஸார் எமது வாகனத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினார்கள். ஒரே ஒரு துப்பாக்கி சூட்டு சத்தம் மாத்திரமே எமக்கு கேட்டது. அதன் போதே பெறாமகன் வீதியோரமாக வாகனத்தை நிறுத்தி மயங்கி சரிந்தார். பின்னர் பொலிஸார் அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதுடன் , எம்மை கைது செய்து பொலிஸ் நிலையம் கொண்டு சென்று விட்டனர். வாகனத்தில் இருந்த சாணகம் , கயிறு , வாள் , வாகனத்தில் விழுந்துள்ள துப்பாக்கி சூடுகள் பற்றி எவையும் எமக்கு தெரியாது என தெரிவித்துள்ளனர். அதேவேளை , குறித்த நபர்கள் தீவகத்தில் சட்டவிரோதமாக மாடுகளை பிடித்து இறைச்சியாக்கும் கும்பல்களுடன் தொடர்பு என சமூக வலைத்தளங்களில் செய்திகளை பலரும் பதிவிட்டு வரும் நிலையில் , கைதான இருவர் மற்றும் உயிரிழந்த சிறுவன் தொடர்பில் முன்னர் குற்றச்சாட்டுக்கள் ஏதேனும் இருந்தாக பொலிஸார் நீதிமன்றில் எந்த தகவலையும் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் உயிரிழந்த சிறுவனின் இறுதி கிரியைகள் நாளைய தினம் வட்டுக்கோட்டையில் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1464397
  6. கியூபாவில் எரிசக்தி முடக்கம். கியூபாவில் நிலவும் கடுமையான எரிசக்தி நெருக்கடி மற்றும் விமான எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, அந்நாட்டிற்கான அவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு ஜேர்மனிய வெளிவிவகார அமைச்சு தமது குடிமக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. கியூபாவின் சர்வதேச விமான நிலையங்களில் கடந்த 10 ஆம் திகதி முதல் மார்ச் 11 ஆம் திகதி வரை விமான எரிபொருள் கிடைக்காது என அந்நாட்டு அதிகாரிகள் அறிவித்துள்ளது.இந்த நிலையில், ஏர் கனடா, ஏர் டிரான்சாட் மற்றும் வெஸ்ட்ஜெட் போன்ற முன்னணி சர்வதேச விமான நிறுவனங்கள் தமது சேவைகளை இடைநிறுத்தியுள்ளன. இதன் விளைவாக கியூபாவில் சிக்கியுள்ள சுமார் 3,000 பயணிகளை மீட்பதற்காக ஏர் கனடா நிறுவனம் வெற்று விமானங்களை அனுப்பி வருகின்றது. வெனிசுவேலா மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் மற்றும் மெக்ஸிகோ போன்ற நாடுகளுக்கு விடுக்கப்பட்ட வர்த்தக வரி மிரட்டல்கள் காரணமாக, டிசம்பர் நடுப்பகுதியிலிருந்து கியூபாவிற்கான எண்ணெய் விநியோகம் முற்றாக முடங்கியுள்ளது.இந்த இக்கட்டான சூழ்நிலையைச் சமாளிக்க கியூபா அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதுடன், அரசு நிறுவனங்களுக்கு வாரத்திற்கு நான்கு நாட்கள் மட்டுமே வேலை, வங்கி வேலை நேரக் குறைப்பு மற்றும் எரிபொருள் விற்பனையில் கடுமையான கட்டுப்பாடுகளையும் நடைமுறைப்படுத்தியுள்ளது. அடிப்படைச் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால், அங்குள்ள நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என அஞ்சப்படுகிறது. https://athavannews.com/2026/1464388
  7. எரிபொருள் தட்டுப்பாட்டால் முடங்கியது கியூபா: அமெரிக்காவுக்கு ரஷ்யா கண்டனம்! எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கியூபா முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக எச்சரித்துள்ள ரஷ்யா, அமெரிக்காவின் மனிதாபிமானமற்ற நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. தென் அமெரிக்க நாடான கியூபா, அதன் அண்டை நாடான வெனிசுலாவில் இருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய் பெற்று வந்தது. இதற்கு ஈடாக, பாதுகாப்பு, மருத்துவம் மற்றும் கல்வி சேவைகளை அளித்து வந்தது. இந்நிலையில், வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியாவை அமெரிக்க ராணுவம் சமீபத்தில் கைது செய்து நியூயார்க் சிறையில் அடைத்தது. இதையடுத்து, வெனிசுலாவின் எண்ணெய் சந்தை அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, கியூபாவுக்கு வழங்கப்பட்டு வந்த கச்சா எண்ணெய்யை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிறுத்தினார். மேலும், கியூபாவுக்கு எண்ணெய் வழங்கும் நாடுகளுக்கு வரி விதிக்கப் போவதாகவும் எச்சரித்துள்ளார். ஏற்கனவே, கியூபா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இந்நிலையில், எரிபொருள் தட்டுப்பாட்டால், கியூபாவில் விமானம் மற்றும் பிற போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இத்தகைய அசாதாரணமான நிலைமையை சமாளிக்க அலுவலகங்கள், பாடசாலை மற்றும் பல்கலைகளை கியூபா அரசு 4 நாட்களுக்கு மூடியுள்ளது. அமெரிக்காவின் இந்த மனிதாபிமானமற்ற செயலால் கியூபாவின் எரிசக்தி நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளதாக, ரஷ்யா தன் கண்டனத்தை தெரிவித்துள்ளது. மேலும், கியூபாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய ரஷ்யா தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளது. மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாமும், அமெரிக்க வரிகளுக்கு அஞ்சாமல் கியூபாவிற்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளார். இதவேளை ஐக்கிய நாடுகள், பொதுசெயலரும் தன் வருத்தத்தை தெரிவித்துள்ளார். https://athavannews.com/2026/1464329
  8. முன்னாள் எம்.பி. அமரகீர்த்தி அத்துகோரல கொலை வழக்கின் தீர்ப்பு இன்று! முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல, அவரது பாதுகாப்பு அதிகாரி மீதான தாக்குதல் மற்றும் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இன்று (11) கம்பஹா மேல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இந்த சம்பவம் 2022 மே 9 அன்று நிட்டம்புவ பகுதியில் நடந்தது. அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல மற்றும் அவரது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி இருவரும் ஒரு கும்பல் தாக்குதலில் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுடன் தொடர்புடைய பல சந்தேக நபர்கள் பின்னர் கைது செய்யப்பட்டனர். விசாரணையைத் தொடர்ந்து, கொலைகள் தொடர்பாக 42 நபர்களுக்கு எதிராக சட்டமா அதிபர் கம்பஹா உயர் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை தாக்கல் செய்தார். நீண்ட விசாரணைக்குப் பிறகு, தீர்ப்பு ஜனவரி 14 ஆம் திகதி வழங்க திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும், வழக்கை மீளாய்வு செய்த மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பை இன்று வரை ஒத்திவைக்க முடிவு செய்தது. https://athavannews.com/2026/1464258
  9. மணிப்பூரில் தொடரும் கலவரம். 250 கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு! மணிப்பூரில் குகி மற்றும் மெய்தி சமூகங்களுக்கிடையில் கடந்த 2 வருடங்களாக ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியதில் 250இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். தொடர்ந்து பா.ஜ.க அரசு விலகியதால் மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி நிலவிய நிலையில் கடந்த 04ஆம் திகதி கெம்சந்த் சிங் தலைமையில் புது பா.ஜ.க அரசு பதவியேற்றது. இந்நிலையில் மீண்டும் மணிப்பூரில் கலவரம் வெடித்துள்ளது. உக்ருல் மாவட்டம் லிட்டன் சரேய்கோங் கிராமத்துக்குள் புகுந்த கும்பலொன்று தங்குல் சமூகத்தை சேர்ந்த நபரொருவரை தாக்கி, வீடுகளுக்கும் தீ வைத்துள்ளதுடன் குறித்த கிராமத்தில் இன்று (10) அதிகாலை துப்பாக்கிச் சூடும் நடந்துள்ளது. இதனைத் தடுப்பதற்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டிருந்தபோதிலம் தொடர்ந்தும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றவண்ணம் உள்ளன. தொடர்ந்து உக்ருல் மாவட்டத்தில் இணைய சேவைகளை 5 நாட்களுக்கு நிறுத்தி வைக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1464098
  10. அமெரிக்கா எப்போது நிலுவைத் தொகையை வழங்கும் – விளக்கம் கோரியுள்ள ஐ. நா. சபை. தாமதமாகி வரும் நிலுவைத் தொகைக்கு, அமெரிக்கா எப்போதுஇ எவ்வளவு தொகையை வழங்கும் என்பது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் விளக்கம் கோரியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை தற்போது கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. சீர்திருத்தங்களை வலியுறுத்தி அமெரிக்கா தனது நிலுவைத் தொகையை வழங்க தாமதித்து வருவதால், வரும் ஜூலை மாதத்திற்குள் ஐநா-வின் செயல்பாடுகள் முற்றிலும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் மொத்த நிலுவைத் தொகையில் சுமார் 95 சதவீதத்தை அமெரிக்காவே வழங்க வேண்டியுள்ளது. சாதாரண பட்ஜெட் 2.19 பில்லியன் டொலர், அமைதி காப்புப் பணிகள் 2.4 பில்லியன் டொலர், ஐநா தீர்ப்பாயங்கள் 43.6 மில்லியன் டொலர்இ சுமார் 4.6 பில்லியன் டொலர் ஆகும். ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம், கடந்த 2025-ஆம் ஆண்டில் ஐநா-வின் சாதாரண வரவு செலவு திட்டத்துக்கு எவ்வித நிதியையும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஐநா சபை தனது நிர்வாகச் செலவுகளைக் குறைக்க வேண்டும் எனவும், தேவையற்ற பிரிவுகளை நீக்கிவிட்டு அடிப்படைப் பணிகளுக்கு மாத்திரம் முக்கியத்துவம்அளிக்க வேண்டும் எனவும் அமெரிக்கா வலியுறுத்துகிறது. அமெரிக்காவின் ஐநா தூதர் மைக் வால்ட்ஸ் இது தொடர்பில் தெரிவிக்கையில், நாங்கள் மிகப்பெரிய தொகையை முன்பணமாக வழங்கத் திட்டமிட்டுள்ளோம். ஆனால்இ ஐநா சபை மேற்கொண்டு வரும் சீர்திருத்தங்கள் இன்னும் வேகமெடுக்க வேண்டும். இது ஒருவகையான கட்டுப்பாடான அன்பு போன்றது எனக் குறிப்பிட்டுள்ளார். குறைந்தது 55 நாடுகள் ஏற்கனவே தங்களது 2026-ஆம் ஆண்டுக்கான பங்களிப்பை முழுமையாகச் செலுத்தியுள்ள நிலையில், அமெரிக்காவின் தாமதம் ஐக்கிய நாடுகள் சபையை பெரும் சிக்கலில் ஆழ்த்தியுள்ளது. நிதிப் பற்றாக்குறையால் சுமார் 2,681 பணியிடங்கள் குறைக்கப்படவுள்ளன. ஊழியர்களின் ஊதியம் மற்றும் அத்தியாவசிய நிர்வாகச் செலவுகளுக்குக் கூட நிதி இல்லாத சூழல் உருவாகியுள்ளதாக ஐநா ஊடகப் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார். டொனால்ட் ட்ரம்ப் அண்மையில் கையெழுத்திட்ட சட்டமூலம் மூலம் ஒன்றில் ஐநா மற்றும் பிற சர்வதேச அமைப்புகளுக்கு வழங்க 3.1 பில்லியன் டொலர் ஒதுக்கப்பட்டுள்ளது. எனினும், இதில் எவ்வளவு தொகை ஐநா-விற்கு எப்போது கொடுக்கப்படும் என்பதில் இன்னும் தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை https://athavannews.com/2026/1464140
  11. நோய் வாய்ப்பட்ட பூனைக்கு அறுவை சிகிச்சை செய்ய மறுப்பு சுவிட்சர்லாந்தில் நோய்வாய்ப்பட்ட தனது பூனைக்கு அறுவை சிகிச்சை செய்ய மறுத்த பெண்ணொருவர் மீது, விலங்கு வதை சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் சூரிச் மாகாணத்தில் இப்பெண் வளர்த்து வந்த பூனைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் பூனையை கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார். பூனையைப் பரிசோதித்த கால்நடை மருத்துவர், அதற்குத் தற்காலிக சிகிச்சையளித்ததுடன், பூனையால் சிறுநீர் கழிக்க முடியாமல் இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார். பூனையின் உயிரைக் காப்பாற்ற அவசர அறுவை சிகிச்சை ஒன்று அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். எனினும், அந்தப் பெண் அறுவை சிகிச்சைக்கு ஒப்புக்கொள்ள மறுப்புத் தெரிவித்துள்ளார். சிகிச்சையின்றி வீடு திரும்பிய அந்தப் பூனை அடுத்த நாளே உயிரிழந்துள்ளது. பூனையின் உயிரிழப்பைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட மருத்துவர் அளித்த புகாரின் அடிப்படையில் அந்தப் பெண்ணுக்கு எதிராக விலங்குவதை மற்றும் கொடுமைப்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த அறுவை சிகிச்சைக்காக 1,000 சுவிஸ் ஃப்ராங்குகள் (Swiss Francs) செலவாகும் என மதிப்பிடப்பட்டிருந்தது. இதன் இலங்கை பெறுமதி சுமார் 402, 082 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1464143
  12. கனடாவில் பயங்கரம் : துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழப்பு! கனடாவின், பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் ஆயுதம் ஏந்திய நபர் ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதலில் பொதுமக்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர். தாக்குதலை நடத்திய சந்தேக நபரும் இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவ இடத்தைப் பாதுகாப்பிற்குள் கொண்டுவந்துள்ள பொலிசார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்தத் தாக்குதலுக்கான காரணம் குறித்து இதுவரை உத்தியோகபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. உயிரிழந்தவர்களின் விபரங்களைச் சேகரிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. https://athavannews.com/2026/1464244
  13. தமிழரசு கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களில், இருக்கும் ஏழு பேரில்... இரண்டு பேர் மட்டுமே வாயை திறப்பார்கள். மற்ற ஐந்து பேரும்... கொட்டாவி விடக் கூட, வாயை திறக்காமல், பம்மிக் கொண்டு இருப்பார்கள். 😂 பாராளுமன்றத்தில் வாயை திறப்பவர்கள்... ஸ்ரீதரனும், சாணக்கியனும் மட்டுமே. ஸ்ரீதரன் பாடசாலை அதிபராக இருந்த படியால், அவர் பள்ளிக்கூடம் போயிருப்பார். பள்ளிக்கூடம் போகாத ஆள்... சாணக்கியனாகத்தான் இருக்கும். 🤣
  14. SJP மற்றும் தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாடசாலைக்கு செல்லவில்லையா? பிமல் ரத்நாயக்க கேள்வி! இங்குள்ள ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாடசாலைக்கு செல்லவில்லையோ என தோன்றுகிறது என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இன்று கூமாங்குளம் அலகரை வீதியினை புனரமைப்பதற்கான ஆரம்ப வேலையினை ஆரம்பித்து வைத்த பின்னர் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், நாங்கள் தேர்தலிற்காக வீதியினை செய்து தரவில்லை, மாறாக மக்களின் போக்குவரத்திற்காகவே செய்துதரவுள்ளோம். நாம் கிராமிய வீதி அமைப்புக்கள் உருவாக்கப்பட வேண்டும் என அமைச்சரவை தீர்மானம் எடுத்துள்ளோம். இவ்வமைப்பானது குறித்த வீதி உரிய முறையில் மேற்கொள்ளப்படுகின்றதா என்பதை பார்வையிடுவதே பிரதான பணியாக இருக்கும். எனவே இக்கிராமத்திலும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஒழுங்குபடுத்தலில் விரைவாக அவ்வமைப்பை உருவாக்கவும். மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்பட்ட வீதிகளையே நாம் அமைக்கின்றோம். முப்பது வருடம் யுத்தத்திலே பாதிப்படைந்த மக்கள் என்ற ரீதியில் வடமாகாணத்திற்கு ஜனாதிபதி அதிகளவான நிதியினை ஒதுக்கியுள்ளார். டித்வா புயலினை காரணமாக அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மேற்கொள்ள முடியாது என்ற காரணத்தை நாம் கூறியிருக்கலாம். ஏழை எளிய மக்களிற்கு உதவி செய்வதற்காகவே ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசினை அமைத்துள்ளோம். மேலும் நாம் வழங்கிய வாக்குறுதிகளை முழுமையாக செய்து வருகின்றோம். திருட்டு, கொள்ளை, மோசடிகளை இல்லாது அழிப்பதாக அரசியல் ரீதியாக தெரிவித்திருந்தோம். இவ்வாறான மோசடிகளில் நூறு வீதம் அரசோ, அரச அமைச்சர்களோ, நாடாளுமன்ற உறுப்பினர்களோ ஈடுபடவில்லை. இருந்தாலும் கூட எதிர்க்கட்சித்தலைவர் நாடாளுமன்றத்தில் பல போலியான குற்றச்சாட்டுக்களை தெரிவிக்கின்றார். இது தொடர்பாக எங்களுக்கு எதிராக வழக்கோ அல்லது பிரேரணையோ கொண்டு வாருங்கள் என தெரிவித்தோம், ஆனால் எதையும் அவர் செய்யவில்லை. குறிப்பாக நாடாளுமன்றத்தில் கூறும் பொய்களிற்கு நாம் வழக்கு தாக்கல் செய்ய முடியாது. நாம் மோசடி மற்றும் வீன் விரயத்தை இல்லாது ஒழிப்போம். குறிப்பாக கடந்த காலங்களில் ஒரு நிகழ்விற்கு அதிகளவான செலவு மேற்கொள்ளப்படும். ஆனால் நாம் அவ்வாறான செலவுகளை குறைத்து மிச்சப்படுத்தியுள்ளோம். மேலும் கடந்த காலங்களிலே உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டவர்கள் தங்களது உறவுகள் அனைவருக்கும் வேலையை பெற்றுக்கொடுப்பார்கள். ஆனால் நாங்கள் அவ்வாறு வழங்கவில்லை. கடந்த காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களே இவ் ஒப்பந்த வேலைகளை மேற்கொண்டனர். இவ்வீதியானது 550 இலட்சம் ரூபாய்க்கு மதிப்பீடு செய்து கேள்வி கோரல் பத்திரம் தாக்கல் செய்திருந்தோம். குறித்த ஒப்பந்தத்தை 385 இலட்சம் ரூபாய்க்கு ஒரு ஒப்பந்தகாரர் எடுத்துள்ளார். இதன் மூலமாக 165 இலட்சம் ரூபாய் மிச்சப்படுத்தியுள்ளோம். மொட்டுக்கட்சி அரசோ அல்லது SJP அரசாங்கமாக இருந்திருந்தால் குறித்த 165 இலட்சம் ரூபாயும் பைகளிற்குள் சென்றிருக்கும். இதேபோன்று வடக்கு மாகாண சபையிலும் பெரிய மாற்றமென்பதற்கு இல்லை. குறிப்பாக கடந்த மாகாண சபையிலே இரு அமைச்சர்களை வடமாகாண முதலமைச்சர் நீக்கியிருந்தார். இனவாதம் இல்லாத அரசினை உருவாக்குவோம் என ஜனாதிபதி வாக்குறுதி வழங்கியுள்ளார். நீங்கள் தமிழர் என்பதால் இந்த அரசினால் அநீதி இழைக்கப்பட்டு உள்ளதா என கேட்கிறேன். பல வருட காலமாக இந்நாட்டிலே ஒரு பிரச்சனை ஒன்று இருக்கின்றது என்று எங்களுக்கு தெரியும். அதனை தீர்த்து வைக்க வேண்டிய தேவை இருக்கின்றது. பெரும்பாலான பிரச்சினைகள் தமிழ், சிங்கள, முஸ்லீம்கள் என்ற ரீதியில் இல்லை. குறிப்பாக பணம் இருந்தால் மூவினத்தவர்களும் சந்தோசமாக உள்ளனர். ஆனால் பணம் இல்லை எனின் இது கஷ்டமாகும். வாக்குறிதி வழங்கிய விடயங்களை ஒவ்வொன்றாக அரசாங்கம் என்ற ரீதியில் மேற்கொள்ள வேண்டும். கல்வி சீர்திருத்தம் தொடர்பாக தெரிவித்திருந்தோம், அதனை தற்போது ஆரம்பித்துள்ளோம். இங்குள்ள ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாடசாலைக்கு செல்லவில்லையோ என தோன்றுகிறது. குறிப்பாக தமிழரசுக் கட்சியில் ஒருவரே அப்படி இருக்கின்றார், மற்றவர்கள் கொஞ்சம் பரவாயில்லை. நாம் மேற்கொண்ட கல்வி சீர்திருத்த விடயத்தில் இவர்கள் மேற்கொண்ட செயலினால் தரம் 06 இற்கான வகுப்பினை இவ்வருடம் ஆரம்பிக்க முடியாமல் போய்விட்டது. இருந்த போதும் நாம் கல்வி சீர்திருத்தத்தை மேற்கொள்வதற்கு ஆரம்பித்தோம். நாம் மக்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் அரசினை அமைத்துள்ளோம். கடந்ந நாட்களாக அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் போராட்டம் இடம்பெற்றது. இந்நிலையில் ஜனாதிபதிக்கும் அவர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையின் போது அவர்களை ஆசிரியர்களாக உற்வாங்குவதற்கான பிரமானத்தின் அடிப்படையில் ஜனாதிபதி சம்மதம் தெரிவித்துள்ளார். வடமாகாணத்திலே படையினர் மற்றும் அரசின் கீழ் உள்ள காணிகளை தேவையின் அடிப்படையில் பாதுகாப்பு படையினரின் சம்மதத்துடன் மீளவும் பொதுமக்களுக்கு வழங்கவுள்ளோம். 60 மாதங்கள் பணியாற்றுவதற்காக எமது அரசாங்கம் அமைக்கப்பட்டுள் ளது. கடந்த காலங்களிலே அரசாங்கங்கள் வழங்கிய நிதியை விட தற்போது டித்வா சூறாவளியால பாதிக்கப்பட்ட மக்களிற்கு பெருமளவான நிதியினை வழங்கியுள்ளோம். குறிப்பாக எமது அரசாங்கத்தினால் பணத்தினை மிதப்படுத்தியமையாலே வழங்க முடிந்தது. மேலும் வறுமைக்குட்பட்ட மக்களின் தன்மையை அறிந்து கொள்ளக்கூடிய ஜனாதிபதி இருப்பதனால் இது நடந்தது. குறிப்பாக டித்வா புயலில் அழிவடைந்த வீடுகளிற்கு ஐம்பது இலட்சம் வழங்கவுள்ளார் என்பதை எங்களால் கூட நம்ப முடியாது இருந்தது. ஒரு வீட்டினை மட்டும் உள்ளவர்களின் வீடுகள் அழிவடையும் போது அவர்களின் மனநிலை எவ்வாறு இருக்கும் என்று எங்களிற்கு புரியும். இது வவுனியாவில் ஒரு வீடு, கொழும்பில் ஒரு வீடு மற்றும் இலண்டனில் ஒரு வீடு இருப்பவர்களிற்கு தெரியாது. இதன் காரணமாகவே அழிவடைந்த வீட்டிற்கு ஐம்பது இலட்சம் ரூபாவும், அதற்கு மேலேயும் வழங்குவதற்கு தீர்மானித்தோம். மேலும் டித்வா சூறாவளி காலத்திலேயே சம்பளத்தையும் அதிகரித்திருந்தோம். அத்தோடு மலையக தொழ்லாளர்களுக்கு 200 ரூபாய் அரசாங்கம் வழங்கியதன் ஊடாகவே 1700 ரூபாய் வழங்கப்படவுள்ளது. குறிப்பாக எங்களுடைய நாட்டை நாங்கள் தான் கட்டியெழுப்ப முடியும் மாறாக வேறு யாரும் அதனை செய்ய முடியாது. இலங்கையை கட்டியெழுப்ப யாருமே பெரிய அளவில் உதவி செய்ய போவதில்லை. சில நாடுகள் குறிப்பிட்டளவு நிதியினை வழங்கிய போதும் முழு நாட்டையும் கட்டியெழுப்ப போதுமானதாக இருக்காது. நீங்கள் அனைவரும் இணைந்து 75 வருடகால மோசடியான அரசினை இல்லாது செய்துள்ளீர்கள். அத்தோடு நான்கு திசையை உள்ளடக்கிய நல்ல கட்டமைப்பை கொண்ட அரசாங்கத்தை உருவாக்கியுள்ளீர்கள். அதிகளவான மக்கள் எங்கள் அரசின் மீது ஆர்வமாக உள்ளனர். ஆனால் இவ் அரசை யார் எதிர்க்கின்றனர். குறிப்பாக கடந்த காலத்தை போல் சௌகரியமாக இருக்க முடியாத ராஜபக்ஷக்கள், ஐக்கிய மக்கள் சக்தியினரே. குறிப்பாக ஒரு குடும்பமே ராஜபோக வாழ்க்கை வாழ்ந்தார்கள் அது தற்போது முடியாது உள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியினர் பொய் கூறுவதோடு எங்களையும் பேசுகின்றார்கள். இவ்வாறானவர்களிற்கு உடந்தையாக இருந்த சிறு தொகை அதிகாரிகளும் எதிர்க்கின்றனர். இருந்த போதும் இனவாதம் இல்லாமல் இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் எமக்கு எதிராக இல்லை. கொழும்பு, காலியிலும், பருத்தித்துறையிலும் இருந்து வலைப்பந்து விளையாட்டு போல் இனவாத விளையாட்டை விளையாடுவார்கள். இதன் மூலமாக அவர்களிற்கு ஒரு செய்தி உள்ளதுடன், அவர்களிடம் ஏமாந்து வாக்கும் போடப்படும். தெற்கில் இனவாதம் இல்லாமல், வடக்கிலும் இனவாதம் இருக்காது. ராஜபக்ஷ சரியான பசியுடன் உள்ளார். அவர்களின் உணவு இல்லை. கம்மன்பில, வீரவன்ச ஆகியோருக்கு இனவாத உணவு இல்லாமல் மெலிந்துள்ளனர். அமைச்சு பதவி இன்றி வாக்குகள் இன்றி தற்போது இவர்கள் இனவாதம் எங்குள்ளது என தேடுகின்றனர். இவர்களை போன்றவர்களே யாழிலும் உள்ளதுடன், அவர்களிற்கு அமைச்சு பதவி இல்லாமல் போய்விட்டது. அத்தோடு வடக்கில் உள்ள இவர்களும் இனவாதத்தை தேடி திரிகின்றனர். ஆனால் நாங்கள் அவர்களுக்கு இனவாத உணவை வழக்கம்போவது இல்லை. அவர்களிற்கு இரண்டை தெரிவதற்கான சந்தர்ப்பம் தற்போது உள்ளது. ஒன்று இனவாதம் இல்லாமல் அப்படியே இல்லாமல் போவது. இரண்டாவது இந்த நாட்டிலே ஒற்றுமையாக ஒன்றாக சேர்ந்து பயணிக்கத்தக்க வகையில் அவர்கள் செய்வதன் மூலம் அவர்கள் தப்பிக்கொள்வார்கள். தற்போது இனவாத செயற்பாட்டை தேடுபவர்கள் இரு பக்கமும் இருந்து குரைக்கின்றனர் என தெரிவித்தார். https://athavannews.com/2026/1464113
  15. துப்பாக்கிச் சூடு நடாத்தப் பட்ட பின்... வாகனத்தின் காணொளி: 👉 https://www.facebook.com/reel/1508123317691140 👈 Reborn Visu Ranjith Guna ஓடும் போது சுட்டிருந்தால் வாகனம் விபத்துக்குள்ளாகியிருக்கும்!!!! ############ Reegan Devadas இந்த வானம் நிறுத்தி வைக்கப்பட்டதை பார்க்கும் போது... தேவையின் அடிப்படையில் செய்யப்பட்ட கொலை ############### Kogi Kogi சிறுவனை சுட்டுக் கொல்லவா போலீசாருக்கு துப்பாக்கி வழங்கப்பட்டுள்ளது 😡😡😡😡
  16. “நானா” வின், காணொளி: 📽️👉 https://www.facebook.com/reel/905203261910665 👈 “Creepy Camera man” என அழைக்கப்படும் இவரது பெயர் முஹம்மது அஸ்கார் முஹம்மது-ராசிக் (Mohamed Askar Mohamed-Razik). 45 வயதான இவர் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டவர். அண்மையில் கனடாவின் டொராண்டோ நகரில் இவர் செய்த காரியங்கள் ஒட்டுமொத்த இலங்கைச் சமூகத்தையும் தலைகுனிய வைத்துள்ளது. நீண்ட நாட்களாக பொதுமக்களையும், குறிப்பாக பெண்களையும் அச்சுறுத்தி வந்த முஹம்மது அஸ்கார் ராசிக் என்பவரின் அட்டகாசங்களுக்கு ஒருவழியாக கனடா காவல்துறை முற்றுப்புள்ளி வைத்துள்ளது. "சமூக வலைதளப் பிரபலம்" என்கிற போர்வையில் இவர் செய்த அநாகரீகச் செயல்கள் தற்போது உலகறிய வந்துள்ளன. இவரது வீடியோக்களைப் பார்த்த எவருக்கும் ஒன்று தெளிவாகத் தெரியும், இவர் ஒரு சாதாரண படைப்பாளி அல்ல. ஆள் ஒரு மோசமான நபர் என்பது…. பொது இடங்களில் செல்லும் பெண்களை வழிமறிப்பது, அவர்களை வம்புக்கு இழுப்பது, மற்றும் அவர்கள் பயப்படும் வரை கேமராவை முகத்திற்கு நேரே பிடித்து ஆக்ரோஷமாக நடந்து கொள்வது இவரின் வாடிக்கை. இவரது வன்முறை கலந்த அணுகுமுறை மற்றும் இவர் பெண்களிடம் காட்டிய ஆக்ரோஷம் பலரை பொது இடங்களில் அச்சத்துடன் நடமாட வைத்தது. “வீடியோ எடுக்க வேண்டாம்" என்று பெண்கள் மறுத்த பிறகும், ஒரு நிழலைப் போல பின்தொடர்ந்து துன்புறுத்துவதை ஒரு ‘மிகவும் அனுபவித்து’ செய்து வந்துள்ளார். பல நாட்களாக இவரை ஏன் யாரும் தடுக்கவில்லை என்ற கேள்வி எழுந்து வந்த நிலையில், தற்போது கனடா காவல்துறை இவரை 'Criminal Harassment' (குற்றவியல் துன்புறுத்தல்) பிரிவில் கைது செய்துள்ளது. இனி சட்டத்தின் பிடியில் இருந்து “மைனர் மாப்பிளை” தப்புவது இனி கடினம். "இலங்கையர்" என்ற அடையாளத்தோடு இவர் செய்த இந்த அருவருப்பான காரியங்கள், உலகெங்கிலும் வாழும் கண்ணியமான இலங்கை மக்களுக்குப் பெரும் அவமானத்தைத் தேடித்தந்துள்ளது. இவரைப் போன்ற ஒரு தனிநபரின் வக்கிரமான குணத்திற்காக ஒட்டுமொத்த சமூகத்தையும் குறை கூற முடியாது. ஆனால், இவரைப் போன்றவர்கள் சமூகத்தின் பெயரால் உலவுவதை அனுமதிக்கக்கூடாது என்பதில் இலங்கைச் சகோதரர்கள் உறுதியாக உள்ளோம். காவல்துறை இவருக்கு உரிய தண்டனையை வழங்கும் என நம்புவோம். அதே சமயம், சமூக ரீதியாக இவரைப் போன்றவர்களைப் புறக்கணிப்பதன் மூலமே எமது சமூகத்தின் கண்ணியத்தை நாம் நிலைநாட்ட முடியும். Mukinthan Thurairajasingham
  17. தனது பெறாமகன் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளதாக சிறுவனின் உறவினர் தெரிவிப்பு! அருவி வெட்டுக்கு வேலையாட்களை ஏற்ற சென்ற போதே தனது பெறாமகன் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளதாக , உயிரிழந்த சிறுவனின் சித்தி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் பொலிசாரின் கட்டளையை மீறி சென்ற வாகனத்தின் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்திய போது வாகனத்தினை ஓட்டி சென்ற சிறுவன் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளான். அந்நிலையில் சிறுவனின் உயிரிழப்பு தொடர்பில் சித்தியார் தெரிவிக்கையில் , சிறுவனுக்கு சாரதி அனுமதி பத்திரம் இல்லாத போதிலும் , அவர் வாகனம் ஓட்டுவதனை தொழிலாக செய்து வந்தார். எனவும் பொலிஸாருக்கு கையூட்டுக்களை வழங்கி சாரதி அனுமதி பத்திரம் இன்றி சாரத்தியம் செய்து வந்தார் எனவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அருவி வெட்டு நடவடிக்கைக்காக வேலணையில் வேலையாட்களை ஏற்றுவதற்காக சென்ற போது தன்னிடம் பணம் இல்லாததால் தான் பொலிஸார் மறித்த போது நிறுத்தாமல் பயணித்துள்ளனர் எனவும் அதனாலயே பொலிஸார் சுட்டுள்ளனர் எனவும் வாக்குமூலம் வழங்கியுள்ளார். இதேவேளை, அவருடன் வாகனத்தில் பயணித்த ஏனைய இருவரும் நெருங்கிய உறவினர்களே எனவும் குடும்ப கஷ்டம் காரணமாகவே 17 வயதில் அவர் உழைக்க சென்றதாகவும் அவரை அநியாயமாக சுட்டு கொன்று விட்டார்கள் எனவும் கண்ணீர் மல்க தெரிவித்தார். யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் இன்று காலை பொலிசாரின் கட்டளையை மீறி சென்றதாக தெரிவித்து ஹயஸ் ரக வாகனம் ஒன்றின்மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு மேற்கொண்ட நிலையில் குறித்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1464076
  18. விசேட தேவையுடையவர்களுக்காக வருகிறது புதிய பேருந்துகள்! ‘கிளீன் ஸ்ரீலங்கா’ (Clean Sri Lanka) திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்தி, விசேட தேவையுடையவர்களுக்கான வசதிகளுடன் கூடிய, குளிரூட்டப்பட்ட தாழ்தள பேருந்து சேவையை ஒரு முன்னோடித் திட்டமாக நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்காக 10 பேருந்துகளைக் கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 15 ஆம் திகதி குறித்த பேருந்துகள் நாட்டை வந்தடையவுள்ளன. இந்தப் பேருந்துகளை இயக்குவதற்கும் பராமரிப்பதற்கும்த் தேவையான பௌதீக மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகளை வழங்க இலங்கை போக்குவரத்து சபைக்கு இயலுமை இல்லை என்பது தெரியவந்துள்ளது. எனவே, பேருந்துப் போக்குவரத்தை நவீனமயமாக்கும் முதற்கட்டமாக, நவீன வசதிகள் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பம் கொண்ட 100 பேருந்துகளைக் கொழும்பு நகரில் சேவையில் ஈடுபடுத்தும் திட்டத்திற்காக, கடந்த வருடம் ஜூலை 21 ஆம் திகதி எடுக்கப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்திற்கு அமைய, இலங்கை போக்குவரத்து சபையின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட லங்கா மெட்ரோ ட்ரான்சிட் (தனியார்) நிறுவனத்திடம் இந்த 10 பேருந்துகளையும் ஒப்படைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த பேருந்துகளையும் அவற்றின் இயக்க நடவடிக்கைகளையும் அந்த நிறுவனத்தின் கீழ் முன்னெடுப்பதற்குப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. https://athavannews.com/2026/1464095
  19. யாழில் துப்பாக்கியுடன் சந்தைப்பகுதியில் நடமாடிய நபரால் பரபரப்பு! யாழ்ப்பாணத்தில் உள்ள சந்தை ஒன்றுக்கு துப்பாக்கியுடன் பச்சை மிளகாய் வாங்க வந்தவரால் சந்தையில் பரபரப்பு ஏற்பட்டதுடன் , சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். மருதனார்மடம் சந்தைக்கு தலைக்கவசம் அணிந்து , கைகளுக்கு கையுறை அணிந்தவாறு, பை ஒன்றுடன் ஒருவர் வந்துள்ளார். வந்தவர் அங்கிருந்த வியாபாரி ஒருவரிடம் பச்சை மிளகாயை கொள்வனவு செய்து கொண்டு , ” சந்தைக்குள் வட்டிக்கு பணம் வழங்குபவர்கள் யார் ? ” என வினாவியுள்ளார். அதற்கு வியாபாரி தனக்கு தெரியாது என கூறியதும் அவர் அங்கிருந்து சென்றுள்ளார். குறித்த நபர் கையில் கொண்டுவந்திருந்த பையினுள் ரி 56 ரக துப்பாக்கி காணப்பட்டதாகவும் , அவரது இடுப்பு பகுதியில் கைத்துப்பாக்கி ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருந்தமை போன்ற தோற்றம் காணப்பட்டதாக, சுன்னாகம் பொலிஸாருக்கு வியாபாரிகள் அறிவித்துள்ளனர். அதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் சந்தையில் இருந்த கண்காணிப்பு கமரா பதிவுகளை சோதனையிட்டு , துப்பாக்கியுடன் வருகை தந்த நபர் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த நபர் தொடர்பில் தகவல் அறிந்தோர் சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் 0718591331 எனும் இலக்கத்திற்கு அறிவிக்குமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2026/1464079
  20. 1750 பெற்றுக்கொண்டமைக்கு பெருந்தோட்ட தொழிலாளர்கள் மகிழ்ச்சி! ஜனாதிபதியின் வரவு–செலவு திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட 1750 ரூபா நாளாந்த சம்பளம் கிடைத்ததை தொடர்ந்து, தோட்டப்புறங்களில் தொழிலாளர்கள் பாற்சோறு சமைத்து, பட்டாசு கொளுத்தி, பூஜை வழிபாடுகள் செய்து மகிழ்ச்சி கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், நோர்வூட் எல்படை தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள பட்டியல் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதில் 1550 ரூபா அடிப்படை சம்பளமாகவும், வரவுக்கான கொடுப்பனவாக 200 ரூபாவும் வழங்கப்படுவதாக தோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, நோர்வூட் எல்படை தோட்ட மக்கள் ஜனாதிபதிக்கு ஆசி வேண்டி பூஜைகள் செய்ததுடன், பாற்சோறு சமைத்து நன்றியை தெரிவித்தனர். இது குறித்து கருத்து தெரிவித்த தொழிலாளர்கள், கடந்த காலங்களில் சம்பள உயர்வுக்காக பல போராட்டங்களில் ஈடுபட்டதாகவும், ஆனால் இந்த முறை எந்தவித போராட்டமும் இன்றி, மக்களை வீதிக்கு இறக்காமல், ஜனாதிபதி உறுதியளித்தபடி சம்பள உயர்வை பெற்றுக்கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர். இதற்காக ஜனாதிபதிக்கும் பெருந்தோட்டத் துறை அமைச்சர்களுக்கும் நன்றியை தெரிவித்தனர். மேலும் சிலர் கருத்து தெரிவிக்கையில், கடந்த காலங்களில் தொழிற்சங்கங்கள் பல போராட்டங்களை முன்னெடுத்து சம்பள உயர்வை பெற்றுக் கொடுத்த போதிலும், அது போதியளவில் அமையவில்லை என்றும், வரவுக்கான கொடுப்பனவு முறையாக வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்தனர். தற்போதைய ஜனாதிபதி எந்தவித போராட்டமும் இன்றி கூடுதல் சம்பள உயர்வை பெற்றுக் கொடுத்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது எனவும், இதற்காக ஜனாதிபதிக்கும் அவரது அரசாங்கத்திற்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்ததாகவும் கூறினர். https://athavannews.com/2026/1464002
  21. ரஷ்யாவின்… பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. அமெரிக்கன் கட்டதுரைக்கு… கட்டம் சரியில்லை. 😆
  22. இந்தக் கொலைகாரரை வெளியே விடாதீர்கள். இதுகள் வெளியில் நடமாடுவதால், மக்களின் உயிருக்குத்தான் ஆபத்து.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.