Everything posted by தமிழ் சிறி
-
'உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் பிரதான சூத்திரதாரியை தேடிச்செல்லல்' மஹிந்த, மைத்திரி, கோட்டா,சஜித் பங்கேற்புடன் நூல் வெளியீடு
- பிள்ளையானை மீண்டும் தடுப்புக்காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு!
தலைமயிர் கறுப்பாகவும், தாடி வெள்ளையாகவும் உள்ளது. மறியலில்... தலைக்கு "டை" அடியும் நடக்குது போலுள்ளது. 😂- ஈரான் பாலம் தாக்கப்பட்டதற்கு பதிலடியாக மத்திய கிழக்கில் 8 முக்கிய பாலங்கள் தாக்கி அழிக்கப்படும் - பட்டியல் வெளியிட்டது ஈரான்
சபாஷ்... பலே... சரியான போட்டி. இப்படியே பேசிட்டு இருந்தா எப்படி... யார் பெரிசு என்று, அடித்துக் காட்டு(ங்க.) 😂- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
அரசியல்வாதி ஆகுவதற்கு உரிய தகுதிகள் அத்தனையும் இவருக்கு இருந்தாலும்.. இரண்டு பெண்டாட்டி, மூன்று பெண்டாட்டி இருந்தால்... இன்னும் சிறப்பாக இருக்கும். 😂- நாவற்குழியில் சிறுமியிடம் அத்துமீறிய பிக்கு விளக்கமறியலில்
இளநிலை பிக்குகள்... விகாரையில் பயிற்சி எடுக்க வரும் போதே.. ஆண்மை நீக்கம் செய்து (நலம் எடுத்து) சேர வேண்டும் என்ற சட்டத்தை, அரசு உடனடியாகயாக அமுல் படுத்த வேண்டும். அத்துடன்... இதுவரை, நலம் எடுக்கப் படாத... கிழட்டுப் பிக்குகளுக்கும் நலம் எடுக்க வேண்டி உள்ளது. ஊருக்குள் இவங்கள் தொல்லை தாங்க முடியவில்லை. @Kandiah57- பிள்ளையானை மீண்டும் தடுப்புக்காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு!
கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக... ராஜ வாழ்க்கை, வாழ்ந்த நான்... இப்போ பிச்சைக்காரன் மாதிரி இப்படியாயிட்டேன். 😂 🤣 நீண்ட நாட்களுக்குப் பின் வெளியில் வந்த பிள்ளையான் கைவிலங்குடன் அழைத்து வரப்பட்டு, மீண்டும் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.- குருக்கள்மடம் மனிதப் புதைகுழியில் முதற்கட்ட அகழ்வுப் பணிகள் மார்ச் 30 ஆரம்பம் - சட்டத்தரணி றாஸீ முஹம்மத் தெரிவிப்பு
புலிகள் 150 முஸ்லீம்களை... படு கொலை செய்து, குருக்கள்மடம் பகுதியில்.. புதைத்த மாதிரி கனவு கண்டோம். - காட்டான்குடி பாய்ஸ்.-- கருத்து படங்கள்
- பிள்ளையானை மீண்டும் தடுப்புக்காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு!
பிள்ளையானை மீண்டும் தடுப்புக்காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு! தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் இருந்த பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தன் என்பவரை , மீண்டும் தடுப்புக்காவலில் வைக்குமாறு கல்கிசை நீதவான் நீதிமன்றம் இன்று (02) உத்தரவிட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டு கிழக்கு மாகாண பல்கலைக்கழக உபவேந்தர் ஒருவர் காணாமல் போனமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் குறித்து, சட்ட மா அதிபரின் ஆலோசனை கிடைக்கும் வரை இவ்வாறு அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். https://athavannews.com/2026/1470794- எட்டு அரசு நிறுவனங்களை விற்கப் போவதில்லை என உயர் நீதிமன்றுக்கு அறிவிப்பு!
எட்டு அரசு நிறுவனங்களை விற்கப் போவதில்லை என உயர் நீதிமன்றுக்கு அறிவிப்பு! ஸ்ரீலங்கா டெலிகாம், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், காப்புறுதிக் கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா வைத்தியசாலை உள்ளிட்ட எட்டு அரச நிறுவனங்களை விற்பனை செய்வது தொடர்பான முந்தைய நிர்வாகத்தின் முடிவை தற்போதைய அரசாங்கம் செயல்படுத்தாது என்று சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். முன்மொழியப்பட்ட விற்பனையை எதிர்த்து கலாநிதி குணதாச அமரசேகர மற்றும் பிறர் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனு மீதான விசாரணையின் போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. நீதிபதிகள் அச்சல வெங்கப்புலி, மஹிந்த சமயவர்தன மற்றும் சம்பத் அபேய்கூன் ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன்பாக இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த மனுவில் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டவர்களில், முந்தைய அரசாங்கத்தின் அமைச்சரவையும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் அடங்குவர். சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான அரசு சட்டத்தரணி, தற்போதைய அரசாங்கம் நிறுவனங்களை விற்பனை செய்யும் நடவடிக்கையைத் தொடர வேண்டாம் என முடிவு செய்துள்ளதாகவும், மறுசீரமைப்பு முயற்சிகளை மேற்பார்வையிடுவதற்காக மட்டுமே ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மனுதாரர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி கனிஷ்க விதாரணா, அரசாங்கம் விற்பனை நடவடிக்கையைத் தொடரப் போவதில்லை என உறுதி செய்துள்ளதால், இந்த மனுவைத் தொடர்ந்து நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்று குறிப்பிட்டார். இரு தரப்பினரின் வாதங்களையும் பரிசீலித்த பின்னர், உயர் நீதிமன்ற அமர்வு மனு மீதான விசாரணையை நிறைவு செய்தது. https://athavannews.com/2026/1470852- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
இந்தியாவில்…. இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி, ராகுல் காந்தி… போன்ற பலரும் இரட்டை தொகுதிகளில் போட்டியிடுபவர்களே. அதிலும் இந்த காந்திக்கள்…. வடக்கில் ஒரு தொகுதியும், தெற்கில் ஒரு தொகுதியும் என்று அகலக் கால் வைத்திருப்பார்கள். 😂- 3வது முறையாகவும் உலகக் கிண்ண கால்பந்தாட்ட வாய்ப்பை இழந்தது இத்தாலி அணி
உண்மைதான்… இத்தாலி கலந்து கொள்ளும் போது, அந்த விளையாட்டுக்களில் விறுவிறுப்புக்கும், ரசிகர்களின் கொண்டாட்டமும், ஆரவாரமும் பார்ப்பவர்களை பரவசப்படுத்தும்.- ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் வேட்புமனு தாக்கல்… தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், வியாழக்கிழமை (02) திருச்சி கிழக்குத் தொகுதியில் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளார். இதற்காக அவர் சென்னையிலுள்ள தனது இல்லத்திலிருந்து காலை புறப்பட்டு, தனி விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார். திருச்சி கிழக்குத் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்வதற்காக, திருச்சி விமான நிலையத்திலிருந்து பரப்புரை வாகனத்தில் ‘ரோட் ஷோ’ (Road Show) ஊடாக வந்த விஜய், முற்பகல் 11.20 மணியளவில் பாலக்கரை மாநகராட்சி அலுவலகத்தை வந்தடைந்தார். எனினும், அவர் உடனடியாக உள்ளே சென்று வேட்புமனுத் தாக்கல் செய்யாமல், சிறிது நேரம் தனது வாகனத்திலேயே (Caravan) காத்திருந்தார். நண்பகல் 12 மணியளவில் ‘நல்ல நேரம்’ என்பதால், அதுவரை காத்திருந்து அதன் பின்னரே அவர் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்ததாகக் கூறப்படுகிறது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். வேட்புமனுத் தாக்கல் தொடங்கிய முதல் நாளிலேயே அவர் பெரம்பூர் தொகுதியில் தனது மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அன்றைய தினமே பெரம்பூர் மற்றும் கொளத்தூர் ஆகிய இரு தொகுதிகளிலும் விஜய் தனது தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து வில்லிவாக்கம் மற்றும் அண்ணா நகர் தொகுதிகளில் அவர் பிரசாரம் செய்யத் திட்டமிட்டிருந்த போதிலும், பாதுகாப்பு காரணங்களுக்காக அந்தப் பிரசாரங்கள் தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. நேற்று மற்றும் அதற்கு முந்தைய தினங்கள் விடுமுறை என்பதால் வேட்புமனுத் தாக்கல் செய்யப்படாத நிலையில், இன்று மீண்டும் மனுத் தாக்கல் செய்ய முடியும் என்பதால் விஜய் இன்று காலை திருச்சியில் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளார். https://athavannews.com/2026/1470821- 3வது முறையாகவும் உலகக் கிண்ண கால்பந்தாட்ட வாய்ப்பை இழந்தது இத்தாலி அணி
3வது முறையாகவும் உலகக் கிண்ண கால்பந்தாட்ட வாய்ப்பை இழந்தது இத்தாலி அணி. 23வது உலக கிண்ண கால்பந்து போட்டியானது வருகின்ற ஜீன் மாதம் 11ம் திகதி ஆரம்பமாகி ஜீலை மாதம் 19ம் திகதிவரை அமெரிக்கா, மெக்சிகோ,கனடா ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது. இந்த போட்டிகளில் பங்குபற்றும் 48 அணிகளில் இதுவரை 42 அணிகள் தகுதிப்பெற்று விட்டன, மீதமுள்ள 6 அணிகளை தேர்வு செய்வதற்கான கடைசி கட்ட தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்றன. இதில் 4 பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டிருந்தன, ஓவ்வொரு பிரிவிலும் இரு அரையிறுதி போட்டிகள் நடைபெற்று அதில் வெற்றிப்பெறும் அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடி அதில் வெற்றியாளராக மாறும் அணி உலக கோப்பை போட்டிற்குள் நுழையும். 4 முறை சம்பியனான இத்தாலி அணி இறுதிப்போட்டியில் பொஸ்னியா மற்றும் ஹெர்ஸேகோவினா அணியை எதிர்கொண்டது. போட்டி தொடங்கி 15வது நிமிடத்திலேயே இத்தாலி அணியின் மொய்ஸ் கீன் தனது அணியை 1-0 என முன்னிலைப்படுத்தி அசத்தினார். இதற்கு பதிலடி கொடுக்க பொஸ்னியா அணியும் முயற்சிகளை மேற்கொண்டது. இத்தாலி வீரர் பஸ்டொனி 41வது நிமிடத்தில் பொஸ்னியா வீரரை கோல் அடிக்க விடாமல் தடுத்தமைக்காக விதிமீறலில் ஈடுபட்டமைக்காக நடுவரால் அவருக்கு சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டது. பின்னர் முதல் பாதி நிறைவடைந்த இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கிய நிலையில் போட்டியின் 79வது நிமிடத்தில் பொஸ்னியா அணியின் ஹரிஸ் டபக்கோவிக் முக்கியமான கோல் ஒன்றினை பதிவு செய்து போட்டியை சமப்படுத்தினார். இதனால் இத்தாலி அணி அதிர்ச்சியடைந்தது. இந்நிலையில் வெற்றிக்கோலினை பதிவு செய்ய இரு அணிகளும் மும்முரமாக மோதிக்கொண்டனர். போட்டி நேரம் நிறைவுக்கு வந்தும் இரு அணியும் கோலினை பதிவு செய்ய முடியாததால் நடுவரால் மேலதிக நேரம் வழங்கப்பட்டது. 30 நிமிடங்கள் மேலதிகமாக கிடைத்த நிலையில் மீண்டும் போட்டி சூடு பிடிக்க தொடங்கியது. இருந்தும் அதிலும் இரு அணிகளும் கோலினை பதிவு செய்யாத நிலையில் போட்டியின் வெற்றியாளரை தீர்மானிக்க போட்டி பெனால்ட்டி சூட் முறைக்கு மாற்றப்பட்டது. இதன்போது முதல் கோலினை இத்தாலி வீரர் தவறவிட பொஸ்னியா கிடைத்த வாய்ப்புக்களை சரியாக கோலாக மாற்றியது. மீண்டும் 3வது வாய்ப்பில் இத்தாலி அணி மீண்டும் தவற விட பொஸ்னியா அணி 4 கோல்களையும் சரியாக அடித்து நீண்ட வருடங்களுக்கு பிறகு உலக கிண்ண போட்டிக்கு தகுதிப்பெற்று அசத்தியது. எதிர்பாரத தோல்வியை சந்தித்த இத்தாலி அணி இம்முறை உலக கிண்ண தொடருக்கு தகுதிப்பெறாமல் சோகத்துடன் வெளியேறியது. தோல்வியின் பின் கருத்துத் தெரிவித்த இத்தாலி அணியின் பயிற்சியாளர் ஜெனாரோ கத்தூசோ (Gennaro Gattuso), “எனது வீரர்கள் இத்தகையதொரு வலியை அனுபவிக்கத் தகுதியானவர்கள் அல்ல. அவர்களின் உழைப்பைக் கண்டு நான் பெருமையடைகிறேன். ஆனால் இந்தத் தோல்வியை ஜீரணிக்க கடினமாக உள்ளது” என உருக்கமாகத் தெரிவித்தார். https://athavannews.com/2026/1470793- கருத்து படங்கள்
- பாடசாலைகளில் ஒழுக்கத்தைப் பேணுவது தொடர்பாக புதிய சுற்றறிக்கை
பாடசாலைகளில் ஒழுக்கத்தைப் பேணுவது தொடர்பாக புதிய சுற்றறிக்கை பாடசாலைகளில் ஒழுக்கத்தைப் பேணுவது தொடர்பாக கல்வி அமைச்சு புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தச் சுற்றறிக்கையானது, அனைத்து மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள்இ கோட்ட மட்ட பணிப்பாளர்கள் உதவிக் கல்வி பணிப்பாளர்கள், பரிவேணாதிபதி தேரர்கள் மற்றும் அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாடசாலைகளில் ஒழுக்கத்தைப் பேணுவது தொடர்பாக கல்வி அமைச்சால், இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட, 2016 ஏப்ரல் 29 திகதியிடப்பட்ட சுற்றறிக்கையில் உள்ள அறிவுறுத்தல்களுக்குக் மேலதிகமாக, இந்தச் ளசுற்றறிக்கையில் உள்ள விதிமுறைகள் இனி நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று குறித்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத் தீர்ப்பின் ஒரு பகுதியை மேற்கோள் காட்டி இந்தச் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதன்படிஇ கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், தண்டனையாகவோ அல்லது வேறு எந்தக் காரணத்திற்காகவும் எந்தக் குழந்தையும் உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ துன்புறுத்தப்படக்கூடாது என்றும்இ எந்த நிலையிலும் எந்தவிதமான உடல்ரீதியான தண்டனையும் விதிக்கப்படக்கூடாது என்றும், தவறு செய்பவர்கள் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. பாடசாலை மாணவர்களிடையே ஒழுக்கத்தைப் பேணுவது தொடர்பான விஷயங்களைக் கையாளும்போது, சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்குச் சிறப்புக் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று அந்தச் சுற்றறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. https://athavannews.com/2026/1470694- விரிவடையும் மத்திய கிழக்கு போர்; சாதனை அளவை எட்டிய எண்ணெய் விலை!
ட்ரம்ப்பின் ஈரான் தொடர்பான பேச்சால் கச்சா எண்ணெய் விலை உயர்வு! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரான் தொடர்பாக வெளியிட்ட கருத்தைத் தொடர்ந்து, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. முக்கிய கடல் வழிப்பாதையான ஹோர்முஸ் நீரிணையில் நிலவும் தடைகள் விரைவில் நீங்கும் என்ற எதிர்பார்ப்பு ட்ரம்ப்பின் உரையின் மூலம் தகர்க்கப்பட்டதே இதற்கு காரணமாகும். ஜனாதிபதி உரை தொடங்குவதற்கு முன்னர் ஒரு பீப்பாய் பிரெண்ட் (Brent) கச்சாய் எண்ணெயின் விலை 100 அமெரிக்க டொலர்களாகக் காணப்பட்டது. உரையின் போது விலையில் ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்ட போதிலும், இறுதியில் அது சுமார் 4% இனால் அதிகரித்து, தற்போது ஒரு பீப்பாய் 105.38 டொலர்களாக உயர்ந்துள்ளது. உலகின் மொத்த எரிசக்தி தேவையில் சுமார் 20% இந்த குறுகிய கடல் வழிப்பாதை ஊடாகவே கொண்டு செல்லப்படுவதால், இது உலகப் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமானது. கடந்தபெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, இந்தக் கடல் வழிப்பாதையைப் பயன்படுத்தும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக ஈரான் எச்சரித்ததையடுத்து, நிலைமை இன்னும் முழுமையாக வழமைக்குத் திரும்பவில்லை. ஆட்சி மாற்றம் அல்லது ஈரானின் உட்கட்டமைப்புகளை அழிப்பது குறித்து ட்ரம்ப் விடுத்த கடுமையான எச்சரிக்கைகள், விநியோகச் சங்கிலிக்கு மேலும் அச்சுறுத்தலாக அமையும் என முதலீட்டாளர்கள் அஞ்சுவதே இந்த விலை உயர்வுக்குக் காரணம் என பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். https://athavannews.com/2026/1470726- பொலிசாரைத் துரத்தித் துரத்தி கொட்டிய குளவிகள்!
பொலிசாரைத் துரத்தித் துரத்தி கொட்டிய குளவிகள்! கொத்மலை ரம்பொட வெதமுல்ல தோட்ட பகுதியில் உள்ள கசிப்பு தயாரிப்பு நிலையத்தை சுற்றிவளைக்க சென்ற 7 பொலிஸ் அதிகாரிகள் குளவி தாக்குதலுக்குள்ளாகிய சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. ரம்பொட வெதமுல்ல தோட்டப் பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்தி செய்து வருவதாக பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய அவர்கள் அங்கு சென்ற போதே திடீரென குளவி தாக்குதலுக்குள்ளாகியதாக தெரிவிக்கப்படுகிறது. தாக்கப்பட்ட அதிகாரிகளின் 2 பேர் கொத்மலை வைத்திய சாலையிலும் மேலும் ஆபத்தான நிலையிலுள்ள 5 பேர் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் 03 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. https://athavannews.com/2026/1470666- நேட்டோவை விட்டு விலகும் அமெரிக்காவின் அதிரடிப் பரிசீலனை
நேட்டோவை விட்டு விலகும் அமெரிக்காவின் அதிரடிப் பரிசீலனை. அமெரிக்கா நேட்டோ அமைப்பிலிருந்து வெளியேறுவது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருவதாக அந்த நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். நேட்டோ கூட்டணியை ஒரு காகிதப்புலி என்று சாடிய ட்ரம்ப், பிரித்தானியாவிடம் ஒரு கடற்படை கூட இல்லை என்றும் விமர்சித்துள்ளார். மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள மோதல்களுக்குப் பிறகு, இந்த அமைப்பில் அமெரிக்கா உறுப்பினராக நீடிப்பது குறித்து மீண்டும் பரிசீலிப்பீர்களா எனக் வினவிய நிலையில், ஆம், அது மறுபரிசீலனைக்கும் அப்பாற்பட்டது என்று தாம் கருதுவதாக கூறினார். நான் ஒருபோதும் நேட்டோவால் ஈர்க்கப்படவில்லை. அவர்கள் ஒரு காகிதப்புலி என்பது எனக்கு எப்போதோ தெரியும், அது ரஷ்ய ஜனாதிபதி புட்டினுக்கும் நன்கு தெரியும் என விமர்சித்துள்ளார். பிரித்தானியாவிடம் கடற்படை கூட இல்லை. நீங்கள் மிகவும் பழமையாகிவிட்டீர்கள், என கடுமையாக ட்ரம்ப் விமர்சித்துள்ளார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஈரான் தொடர்ந்தும் ஹோர்முஸ் நீரிணையை மூடி உலக நாடுகளின் பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அந்த நீரிணையை திறப்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி நேட்டோ நாடுகளின் உதவியை கோரியிருந்தார். இந்நிலையில் அவரது அழைப்பு நேரடியாகவே நேட்டோ நாடுகள் நிராகரித்த நிலையில், ட்ரம்ப் நேட்டோ நாடுகளை இவ்வாறு விமர்சித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1470675- இஷாரா செவ்வந்திக்கு சிஐடி பிரிவுக்குள் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்!
மறியலில்... உள்ள பொலிஸ்காரர் நன்றாக கவனித்து, நல்ல சாப்பாடு வாங்கிக் கொடுக்கிறார்கள் போலுள்ளது. 😂- கருத்து படங்கள்
- நாளையிலிருந்து வானிலையில் மாற்றம்!
நாளையிலிருந்து வானிலையில் மாற்றம்! நாட்டில் தற்போது நிலவும் வறட்சியான வானிலை நாளையில் இருந்து மாற்றம் அடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டில் தற்போது நிலவும் வெப்பமான வானிலை மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக வரட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக் கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கடல் நிலை: நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் சாதாரண அலையுடன் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற் பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும். https://athavannews.com/2026/1470573- உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன - கல்வித் திணைக்களம்
2025 உயர்தரப் பரீட்சை: 62%க்கும் அதிகமானோர் பல்கலை சேர்க்கைக்கு தகுதி! 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் (A/L) பங்கேற்ற மொத்த பரீட்சார்த்திகளில் 62.64 சதவீதம் பேர் பல்கலைக்கழக சேர்க்கைக்குத் தகுதி பெற்றுள்ளனர் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டு A/L தேர்வு முடிவுகள் நேற்று (31) இணையத்தில் வெளியிடப்பட்டன. பரீட்சைகள் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையதளங்களான (www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk) ஆகியவற்றில் உள்நுழைந்த பிறகு, சரியான சுட்டெண்ணை உள்ளிடுவதன் மூலம் முடிவுகளைப் பெறலாம். 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற உயர்தரப் பரீட்சை தேர்வில் மொத்தம் 221,413 பாடசாலை பரீட்சார்த்திகளும், 60,397 தனியார் பரீட்சார்த்திகளும் பங்கேற்றனர். 146,405 பாடசாலை பரீட்சார்த்திகளும் பல்கலைக்கழக சேர்க்கைக்குத் தகுதி பெற்றுள்ளனர் என்றும், அதே நேரத்தில் 30,122 தனியார் பரீட்சார்த்திகளும் பல்கலைக்கழகங்களில் சேர்க்கைக்குத் தகுதி பெற்றுள்ளனர். அதன்படி, மொத்த பரீட்சார்த்திகளில் 62.64 சதவீதமான, அதாவது 1,76,527 பரீட்சார்த்திகளில் பல்கலைக்கழக சேர்க்கைக்குத் தகுதி பெற்றுள்ளனர். இதற்கிடையில், பரீட்சையை எதிர்கொண்ட 111 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் பல்வேறு காரணங்களுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2026/1470577- ரஷ்யா, சீனாவிற்கு அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பகிரங்க எச்சரிக்கை!
அதானே, நட்பு நாடுகள்… தமக்குள் உதவிக் கொள்வதால், அமெரிக்காவுக்கு என்ன பிரச்சினை. அமெரிக்காவின் செயல்… சரியான சின்னப் பிள்ளைத்தனமாக உள்ளது. 😁 - பிள்ளையானை மீண்டும் தடுப்புக்காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு!
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.