Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. விசுகு... சிங்களவனிடம் மன மாற்றத்தை எதிர்பார்ப்பது கடினம். ஏனென்றால் அவர்கள் சிறு வயதில் இருந்தே.. கல்வி, மதம் மூலம்... மூளைச் சலவை செய்து வைக்கப் பட்டுள்ளளார்கள். மயிலே... மயிலே.... இறகு போடு என்றால் போடாது. தலைவர் பிரபாகரன் காலத்தில் இவர்களிடம் இருந்து எமது உரிமைகளை அடித்து பறித்திருக்க வேண்டும். அந்தப் போராட்டம் கூட 75% வெற்றியளித்து சரியாக போய்க் கொண்டிருந்த நிலையில்... ஒட்டுக்கு ழுக்களும், எமது பாராளுமன்ற உறுப்பினர்களும் அவருக்கு கை கொடுக்காமல் இருந்ததன் விளைவு எல்லாம் கை நழுவி போய் இந்த அவலத்தில் வந்து நிற்கின்றது. இப்போ... காட்டிக் கொடுத்த ஓட்டுக் குழுக்களும், ஒப்புக்கு சப்பாணிகளாக இருந்த பாரளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் செயலை நினைத்து வெட்கப் படுவது கூட இல்லை. இன்னும் தமிழ் மக்களை ஏமாற்றி தமது வயிறை எப்படி வளர்க்கலாம் என்று திரிகின்றார்கள்.
  2. கிறிஸ்தவர் ஆகிய தந்தை செல்வா அவர்களால் ஆரம்பிக்கப் பட்ட தமிழரசு கட்சி, ஆபிரகாம் சுமந்திரன் என்னும் கிறிஸ்தவரால் அழிக்கப் படுவது.... காலம் செய்த கோலம் தான். சுமந்திரன்.... ஒறிஜினல் கோடாலி காம்பு.
  3. வாசுதேவ நாணயக்கார முதல் ஆளாகப் போய்... அனுரவுடன் ஒட்டிக் கொண்டார்.
  4. தொலைபேசிக்கும், கல்குலேட்டருக்கும் வித்தியாசம் கண்டு பிடிக்க முடியாதவர்கள் வசிக்கும் யாழ்ப்பாணத்தில்.... தேர்தல் பரப்புரையின் போது மான் சின்னத்தை சுவர்களில் வரைந்து மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பது கடினமாக இருக்கும் என நினைக்கின்றேன். "மான்" சின்னத்தை வரையப் போய்... அதை "ஆடு" என யாழ். மக்கள் நினைத்து விட்டால் கஸ்ரம்தான்.
  5. மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் மீது குற்றப்பத்திரிகை-மேல் நீதிமன்றில் உத்தரவு! மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் உள்ளிட்ட நான்கு பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றப்பத்திரிகை இன்று கொழும்பு மேல் நீதிமன்றில் கையளிக்கப்பட்டுள்ளது. 2012ஆம் ஆண்டு, கிரீஸ் கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்தபோது, இலங்கை அரசுக்கு சொந்தமான பணத்தை கிரீஸ் பத்திரங்களில் முதலீடு செய்து இலங்கை அரசுக்கு 1.8 பில்லியன் ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்படுத்தியதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது இதேவேளை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகைகள் கையளிக்கப்பட்டதன் பின்னர், பிரதிவாதிகளில் ஒருவரை தலா 10 மில்லியன் ரூபா பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் பிரதிவாதிகள் வெளிநாடு செல்வதற்கு தடை விதித்த நீதிமன்றம், அவர்களது கடவுச்சீட்டை நீதிமன்றில் ஒப்படைக்குமாறும், வெளிநாடு செல்வதாக இருந்தால் நீதிமன்றத்தின் அனுமதியைப் பெறுமாறும் உத்தரவிட்டுள்ளது. https://athavannews.com/2024/1403512
  6. பச்சை இனத் துவேசம் கொண்ட விமலின் செயல் நன்றாக இருந்தாலும்... அனுராவுடன் போய் மீண்டும் ஒட்டமால் இருந்தால்தான் தமிழருக்கு நல்லது. வெற்றி பெற்ற பக்கம் சாய்வதற்கு ஒரு கூட்டம் காத்துக் கொண்டு இருக்கும். நல்ல முறையில் ஆட்சியமைக்க வந்தவர்களை, இந்தப் புல்லுருவிகள் கெடுத்துவிடும் போல் உள்ளது.
  7. நீங்கள்... என்ன டிராமா போட்டலும்... மண் கவ்வுவது உறுதி. 😂
  8. புளோரிடாவை தாக்கிய ‘மில்டன் சூறாவளி’ மில்டன் சூறாவளி மணிக்கு சுமார் 160 கிலோ மீற்றர் வேகத்தில் புதன்கிழமை (09) புளோரிடாவின் நகரங்களை தாக்கியது. “மிகவும் ஆபத்தான” மற்றும் “உயிர் அச்சுறுத்தும்” மில்டன் சூறாவளி புளோரிடாவின் சியஸ்டா கீயில் கரையைக் கடந்தது என்று அமெரிக்க தேசிய சூறாவளி மையம் தெரிவித்துள்ளது. புயல் இறுதி மணிநேரத்தில் தெற்கே தடம் புரண்டது மற்றும் தம்பாவிற்கு தெற்கே 70 மைல் (112 கிலோமீட்டர்) தொலைவில் உள்ள சரசோட்டாவிற்கு அருகிலுள்ள சியஸ்டா கீயில் நிலச்சரிவை ஏற்படுத்தியது. செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் 16 அங்குலங்கள் (41 சென்டிமீட்டர்) மழை பதிவானதால், தம்பா பகுதியில் நிலைமை இன்னும் ஒரு பெரிய அவசரநிலையாக இருந்ததுடன் தேசிய வானிலை சேவை திடீர் வெள்ளம் குறித்த எச்சரிக்கையை தூண்டியது. இதனால், புளோரிடாவில் 2 மில்லியனுக்கும் அதிகமான வீடுகள் மற்றும் வணிகங்கள் மின்சாரம் இல்லாமல் இருந்ததுடன், மில்லியன் கணக்கான மக்கள் மாநிலத்தை விட்டு புதன்கிழமை வெளியேறினர். மாநிலத்தின் கிழக்கு கடற்கரையில் உள்ள செயின்ட் லூசி கவுண்டியில் இறப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன, இருப்பினும் இறப்புகளின் எண்ணிக்கை தெளிவாகக் கூறப்படவில்லை. முன்னதாக, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இது “ஒரு நூற்றாண்டில் மிகவும் அழிவுகரமான சூறாவளிகளில் ஒன்றாகும்” என்று கூறினார். புளோரிடா, ஜோர்ஜியா, தென் கரோலினா, டென்னசி, வர்ஜீனியா மற்றும் வட கரோலினாவில் குறைந்தது 225 பேரைக் கொன்ற ஹெலீன் சூறாவளி வளைகுடா கடற்கரையைத் தாக்கிய இரண்டு வாரங்களுக்குப் பிறகு மில்டன் சூறாவளியின் வருகை வந்துள்ளது. https://athavannews.com/2024/1403471
  9. சுமந்திரனுக்கு…. வெள்ளை அடிக்க வேணும் என்றால், அவரைப் பற்றி கருத்து சொல்பவர்கள் மேல்… சாதி, சமய வெறியர் என்று சொல்லி திருப்திப்பட வேண்டியது தான். 😂 சுமந்திரன் “பத்தரை மாற்று தங்கம் என்று நிறுவ”… எவ்வளவு கஸ்ரப் பட வேண்டி இருக்கு. 🤣
  10. பிச்சை வேண்டாம் நாயை பிடி என்று.. அவனவன் தமிழரசு கட்சியை விட்டு தலை தெறிக்க ஓடுறாங்கள். இவர்கள் என்னவென்றால்… ராஜுனாமா கடிதம் கிடைக்கவில்லை, கட்சியின் யாப்பின் பிரகாரம் நடவடிக்கை எடுப்போம் என்று காமெடி பண்ணிக் கொண்டு இருக்கிறார்கள். 😂 போய்… ஓரமாக உட்கார்ந்து விளையாடுங்கப்பா.. 🤣
  11. யாழில் பெருந்தொகையான நாணயத் தாள்களைத் தீயிட்டுக் கொளுத்தியவர் கைது! யாழில் பெருந்தொகையான நாணயத் தாள்களையும் மோட்டார் சைக்கிளொன்றையும் தீயிட்டுக் கொளுத்தியவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் அராலி பகுதியைச் சேர்ந்த குறித்த நபர் நேற்றைய தினம் ஒரு தொகைப்பணத்துடன் தனது மோட்டார் சைக்கிளில் சென்று வட்டுக்கோட்டை பகுதியில் 5ஆயிரம் ரூபாய் தாள்கள் சிலவற்றை வீசியுள்ளார். பின்னர் தனது வீடு நோக்கி திரும்பியவர் வீட்டுக்கு அருகில் இருந்த மோட்டார் சைக்கிளொன்றையும் தன் கைவசம் இருந்த மிகுதி பணத்தினையும் வீதியில் போட்டு தீ வைத்துள்ளார். இச் சம்பவம் தொடர்பில் குறித்த நபரின் மனைவி வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சந்தேகநபரை கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாகவே குறித்த சம்பவம் இடம்பெற்றதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1403336
  12. களுவாஞ்சிக்குடி என்றால்... தமிழராக இருக்க சந்தர்ப்பம் இல்லை. அப்ப... அவர்களாகத்தான் இருக்கும். அல்வாயனை மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி. 🥰
  13. தமிழரசு கட்சியின் சின்னத்துடன்... தேர்தலில் நிற்க எல்லோரும் பயப்படுகின்றார்கள் போலுள்ளது. 🤣 தாழுகின்ற கப்பலில் யாராவது ஏறுவார்களா. 😂
  14. புளோரிடாவை அச்சுறுத்தும் மில்டன் சூறாவளி! மில்டன் சூறாவளி புளோரிடா கடற்கரையை நோக்கி நெருங்கும் போது, பொது மக்களின் உயர் ஆபத்து மற்றும் சேதங்கள் குறித்து அமெரிக்க அதிகாரிகள் எச்சரித்து வருகின்றனர். அண்மைய ஆண்டுகளில் வடக்கு அட்லாண்டிக்கில் உருவாகும் மிக சக்திவாய்ந்த புயல்களில் ஒன்று மில்டன். ஹெலீன் சூறாவளி அமெரிக்கா முழுவதும் கணிசமான சேதத்தை ஏற்படுத்திய இரண்டு வாரங்களுக்குப் பின்னர் இந்த சூறாவளி உருவாகியுள்ளது. புயல் புதன்கிழமை (09) தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய சூறாவளி மையம் (NHC), மில்டன் உள்ளூர் நேரப்படி புதன்கிழமை இரவு அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் “மிகவும் ஆபத்தான சூறாவளியாக” கரையைக் கடக்கும் என்று கூறியுள்ளது. மில்டன் சுமார் ஒரு நூற்றாண்டில் இப்பகுதியைத் தாக்கும் மிக மோசமான புயலாக இருக்கலாம். மில்டன் ஞாயிற்றுக்கிழமை ஒரு வகை சூறாவளியாக மாறியது மற்றும் மெக்சிகோவின் யுகடன் தீபகற்பத்தை கடந்த பிறகு மெக்ஸிகோ வளைகுடா வழியாக கிழக்கு நோக்கி சீராக நகர்கிறது. இது மிகவும் சக்திவாய்ந்த சூறாவளி பிரிவில் வைக்கப்பட்டது. https://athavannews.com/2024/1403304 @suvy இந்தச் சூறாவளிக்கு "மில்ரன்" என்று ஆணின் பெயர் வைத்துள்ளார்கள்.
  15. வைத்தியர் அர்ச்சனா விளக்கமறியலில் இருக்கும் போதுதான்…. ஜனாதிபதி தேர்தல் நடந்த்து. 🤣 அவரின் கட்சியை சேர்ந்த அனுரதான் இப்ப புது ஜனாதிபதி என்று சொல்லி விடுங்கோ. 🤣 அடுத்து பாராளுமன்ற தேர்தல் வருகுது. பிரச்சாரம் செய்ய வேணும். மீண்டும் விளக்கமறியலில் போய் இருக்காமல், நல்ல பிள்ளையாக இருங்கோ தம்பி. 😂 🤣
  16. தமிழரசு கட்சிக்குள்தான் உட்பூசல் என்றால்…. மலையக தமிழ் கட்சிகளுக்குள்ளும் உட் பூசலா… ? எனக்கென்னவோ சி.ஐ.ஏ., மொசாட், றோ…. போன்ற வெளிநாட்டு புலநாய்வு அமைப்பினரின் சதி வேலையாக இருக்குமோ என்று சந்தேகமாக கிடக்குது. 😁 😂 🤣
  17. உண்மையில் இந்த தேசியப் பட்டியல் முறை ஒழிக்கப் படவேண்டும். மக்களால்… நிராகரிக்கப் படுகின்றவர்கள், கள்ள வழியால் பாராளுமன்றம் போய், கதிரையில் குந்துவது வாக்களித்த மக்களை அவமதிப்பது போலாகும். இது உண்மையான ஜனநாயகமாக இருக்க முடியாது.
  18. முதியோர் கொடுப்பனவு… சகலருக்கும் கிடைக்கும் என்றால் மிக நல்ல விடயம். தகவலுக்கு நன்றி ஏராளன். 👍🏽
  19. விசுகு… ஊழல் ராஜபக்சக்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று… பெரும்பாலான சிங்களவர்களே ஒற்றைக்காலில் நிற்கிறார்கள்.
  20. எங்களுக்கு இந்த நல்ல ஆட்சி வேண்டாம். 😛 மதுபானசாலைக்கு அனுமதி தரும் ரணிலின் ஆட்சிதான் வேண்டும். 🤣 - தமிழ் பா.உ.க்கள். - 😁
  21. ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல் விசாரணைகள் ஆரம்பம்! கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். இன்று (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் இதனை கூறினார். இது தொடர்பான விவரங்கள் இன்னும் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்பதையும், விசாரணைகளின் தீவிரம் தொடர்பாக மக்கள் மத்தியில் உள்ள ஆவலையும் அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1403207

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.