Everything posted by தமிழ் சிறி
-
இரசித்த.... புகைப்படங்கள்.
உருமறைப்பு - மரத்தின் ஒரு பகுதி போல் காட்சியளிக்கும் பறவைகள்.
-
தன் வினை தன்னைச்சுடும் - மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்.
ஒரு கிராமத்தில் கந்தசாமி என்பவர் வாழ்ந்து வந்தார்.. அவர் வீட்டுத் தோட்டத்தில் ஒரு முருங்கை மரம் இருந்தது . வாரம் ஒரு முறை முருங்கை காய்களை பறித்து பையில் நிரப்பி தோளில் வைத்துக்கொண்டு ஒன்பது கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கும் டவுன் வரை நடந்து சென்றே... ரெகுலராக ஒரு மளிகைக் கடையில் விற்றுவிட்டு வருவது வழக்கம் !! முருங்கை காயை கொடுத்து விட்டு அதற்கு பதிலாக அரிசி, பருப்பு, சர்க்கரை போன்ற வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி வருவார் !! கந்தசாமி கொண்டு வரும் முருங்கைக்காயின் சுவை அந்த பகுதி மக்களிடையே மிகவும் பிரபலம் !! இதை பயன்படுத்தி மற்ற முருங்கைக்காயோடு கலந்து மளிகை கடைக்காரரும் நல்ல லாபம் சம்பாதித்து விடுவார் !! பல வருடமாக கந்தசாமி முருங்கைக்காய் கொண்டு வருவதால் மளிகை கடைக்காரர் அதை எடை போட்டு பார்த்ததில்லை !! கந்தசாமி சொல்கின்ற எடையை அப்படியே நம்பி அதற்கு ஈடான மளிகை பொருட்களை கொடுத்து அனுப்புவார் !! காரணம் கந்தசாமி யின் நேர்மையும் நாணயமும் எல்லோரும் அறிந்தது! ஒரு நாள் கந்தசாமி பத்து கிலோ முருங்கைக்காயை கொடுத்துவிட்டு அதற்கான பொருட்களை வாங்கிச்சென்றார்.... சிறிது நேரத்தில்.... பத்து கிலோ முருங்கைக்காய் மொத்தமாய் வேண்டும் என்று ஒரு சமையல்காரர் வந்து கேட்க...அவருக்காக மளிகைக்காரர் ... எடைபோட... அதில் ஒன்பது கிலோ மட்டுமே இருந்தது !! அன்று முழுவதும் மளிகைகாரருக்கு தூக்கமே வரவில்லை! கந்தசாமி மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தோம், இவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகத்தை செய்துவிட்டாரே !! இத்தனை வருடங்களுக்காக இப்படி முட்டாள் தனமாக எடை குறைவான முருங்கைக்காயை வாங்கி ஏமாந்து விட்டோமே !! அடுத்த முறை கந்தசாமி வந்தால் சும்மா விடக்கூடாது என்று கடுங்கோபத்தில் இருந்தார் !! நான்கு நாட்கள் கழித்து கந்தசாமி மிகவும் சந்தோஷமாக வந்தார் !! நல்ல விளைச்சல் என்பதால் நிறைய கொண்டு வந்திருந்தார் !! ‘கையும் களவுமாக பிடிக்கவேண்டும் என்று, எத்தனை கிலோ என்று மளிகைக்காரர் கேட்க ஒரு கட்டு பத்து கிலோ என்றார் கந்தசாமி ... அவர் முன்னாலேயே எடைபோட்டு பார்க்க ஒவ்வொரு கட்டிலும் ஒன்பது கிலோ தான் இருந்தது . வந்த கோபத்தில் மளிகைக்காரர் பளார்,பளார் என கந்தசாமியின் கன்னத்தில் அறைந்தார் !! ‘இத்தனை வருஷமா இப்படித் தான் ஏமாத்திட்டு இருக்கியா? கிராமத்துக்காரங்க ஏமாத்த மாட்டாங்கன்னு நம்பி தானே எடை போடாம அப்படியே வாங்கினேன், இப்படி துரோகம் பண்ணிட்டியே சீய்...’ என துப்ப, நிலைகுலைந்து போனார் கந்தசாமி . அய்யா...என்ன மன்னிச்சிடுங்க நான் ரொம்ப ஏழை, எடைக்கல்லு வாங்குற அளவுக்கு என்கிட்ட காசு இல்லீங்க... ஒவ்வொரு முறையும் நீங்க கொடுக்கிற ஒரு கிலோ பருப்பை ஒரு தட்டுலயும், இன்னொரு தட்டுல முருங்கைக்காயையும் வச்சி தான் எடைபோட்டு கொண்டு வருவேன். ‘இதை தவிர வேற எதுவும் தெரியாதுங்கய்யா, என்று காலை பிடித்து அழ, . மளிகைக்காரருக்கு செருப்பால் அடித்தது போல் இருந்தது..... தான் செய்த துரோகம் தனக்கே வந்ததை உணர்ந்தார் !! இத்தனை வருடங்களாக கந்தசாமி யை ஏமாற்ற நினைத்த மளிகைக்காரரும்... அவருக்கே தெரியாமல் ஏமாந்து கொண்டு தான் இருந்திருக்கிறார் என்பது தெளிவானது !! இது தான் உலகநியதி !! நாம் எதைத் தருகிறோமோ அதுதான் நமக்குத் திரும்ப வரும் .... நல்லதை தந்தால் நல்லது வரும்,... தீமையை தந்தால் தீமை வரும் !! வருகின்ற காலங்கள் வேண்டுமானால் தாமதமாகலாம் , ஆனா.... நிச்சயம் வரும் !! ஆகவே நல்லதை மட்டுமே தருவோம், நல்லதை மட்டுமே விதைப்போம் !! மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். இதனை எப்போதும் நினைவில் கொள்ளுதல் வேண்டும். Shalini Charles
-
ஜனாதிபதி தேர்தல் சிரிப்புகளும், வாக்குறுதிகளும்.
அனுரவுக்கு கிடைக்க இருக்கும் வாக்கையும் இந்தப் பிக்கு, திருப்பி விடப் போகுது. 😂 சஜித்துக்கு... சுமந்திரன், சாணக்கியன் வாய்த்த மாதிரி... 🤣 அனுரவுக்கு ... இந்தப் பிக்கு வந்து வாய்த்திருக்கு. 😛😋
-
புதிய கொள்கையின் கீழ் ஒக்டோபர் முதல் வாகன இறக்குமதி!
புதிய கொள்கையின் கீழ் ஒக்டோபர் முதல் வாகன இறக்குமதி! 304 HS குறியீடின் கீழ் வகைப்படுத்தப்பட்ட வாகனங்கள் மற்றும் இயந்திரம் சாரா வாகன உதிரிப் பாகங்கள் இறக்குமதி மீதான தற்காலிக தடையை நீக்குவதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. இதன்படி, சர்வதேச நாணய நிதியத்துடன் கூடிய நீடிக்கப்பட்ட கடன் வசதிகள் வேலைத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார மீட்பு செயல்முறைக்கு இணங்க, நிதி அமைச்சின் பரிந்துரைகளுக்கு உட்பட்டு, 2024 ஒக்டோபர் 01 முதல் மூன்று கட்டங்களாக இந்தத் தடை நீக்கப்படும். இந்நாட்டின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு மீது ஏற்பட்டிருந்த அழுத்தத்தை முகாமைத்துவம் செய்ய 2020 மார்ச் மாதத்தில் முதன் முதலில் விதிக்கப்பட்ட இந்தத் தடை மூலம், மருந்துகள், எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதிக்குத் தேவையான அந்நியச் செலாவணியை நிர்வகிப்பதற்காக இவ்வாறு அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதி கட்டுப்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், பொருளாதார மீட்சி மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தின் கீழ் நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார மற்றும் சுற்றாடல் காரணிகளைக் கருத்திற்கொண்டு இந்தத் தடையை நீக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி, 304 HS குறியீடின் கீழ் வகைப்படுத்தப்பட்ட வாகனங்கள் மற்றும் இயந்திரம் சாரா வாகன உதிரிபாகங்களை இறக்குமதி செய்வதற்கான அங்கீகாரம் மூன்று கட்டங்களில் செய்யப்படும். முதலாவது கட்டம் : பொதுப் பயணிகள் போக்குவரத்து வாகனங்கள், சிறப்பு நோக்க வாகனங்கள் மற்றும் பிற இயந்திரம் சாரா வாகன உதிரிப் பாகங்களின் இறக்குமதிக்கு 2024 ஒக்டோபர் 01 முதல் அனுமதி வழங்கப்படும். இரண்டாம் கட்டம் : வணிக அல்லது சரக்கு போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படும் வாகனங்களின் இறக்குமதிக்கு 2024 டிசம்பர் 01 முதல் அனுமதி வழங்கப்படும். மூன்றாவது கட்டம் : தனியார் பயன்பாட்டுக்கான வாகனங்கள் (கார்கள், வேன்கள், விளையாட்டு பயன்பாட்டு வாகனங்கள் போன்றவை உட்பட) இறக்குமதிக்கு 2025 பெப்ரவரி 01 முதல் அனுமதி வழங்கப்படும். விதிக்கப்பட்ட தடையை படிப்படியாக நீக்குவது மூலம், இந்நாட்டின் வாகன தொழில்துறைக்கு புத்துயிர் அளிப்பதோடு, பொருளாதாரத்தையும் மீட்டெடுக்க எதிர்பார்க்கப்படுவதோடு, பழைய வாகனங்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் எரிபொருள் செயற்திறனின்மையைக் குறைத்தல் மற்றும் பராமரிப்புச் செலவு அதிகரிப்பைக் கட்டுப்படுத்துதல் போன்ற பிரச்சினைகளைத் தீர்க்க இது உதவும் என்று அமைச்சரவைப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1399389
-
ஞானசாரவுக்கு எதிரான நீதிமன்றின் அதிரடி உத்தரவு!
ஞானசாரவுக்கு எதிரான நீதிமன்றின் அதிரடி உத்தரவு! கொழும்பு, பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள 100 மில்லியன் ரூபா பெறுமதியான ஆடம்பர வீட்டினை கலபொட அத்தே ஞானசார தேரரார் பலவந்தமாக கைப்பற்றியமை தொடர்பான வழக்கு விசாரணை கொழும்பு, நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு வந்துள்ளது. இதேவேளை, சட்டவிரோதமான முறையில் கைப்பற்றப்பட்ட சொத்துக்களை உடனடியாக விடுவிக்குமாறு ஞானசார தேரர் மற்றும் பிரதிவாதிகள் இருவருக்கு கொழும்பு மேலதிக நீதிவான் பசன் அமரசிங்க உத்தரவிட்டுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவினை மீறினால் நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதிவான் எச்சரிக்கை விடுத்துள்ளார். https://athavannews.com/2024/1399395
-
அந்தமான் தலைநகரின் பெயர் மாற்றம்.
அந்தமான் தலைநகரின் பெயர் மாற்றம். அந்தமான் நிக்கோபாரின் தலைநகரம் போர்ட் பிளேரின் பெயர் ஸ்ரீ விஜயபுரம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாட்டை காலனி ஆதிக்கத்தின் சுவடுகளில் இருந்து விடுவிக்கும் விதமாக அந்தமான் நிக்கோபார் தலைநகரின் பெயர் ஸ்ரீ விஜயபுரம் என மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் தெரிவிக்கையில்,” ஒரு காலத்தில் சோழப் பேரரசின் கடற்படை தளமாக விளங்கிய தீவுப் பகுதி, இன்று நமது வளர்ச்சிக்கு முக்கிய தளமாக விளங்குகிறது என்றும், நமது சுதந்திரப் போராட்டத்திலும், சரித்திரத்திலும் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு இணையற்ற இடம் உண்டு” என்றும் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2024/1399419
- கருத்து படங்கள்
-
மகளை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தி கர்ப்பமாக்கிய தந்தை கைது- யாழில் சம்பவம்!
தவறான புரிதலில்... கந்தையா அண்ணைக்கு பலர் கருத்து எழுதியுள்ளார்கள். அவர் ஆப்கானிஸ்தானுக்கு அந்தத் தந்தையை ஒருவழிப் பயணச்சீட்டுடன் அனுப்பி வைக்க வேண்டு என்று கூறியே... சிரிப்புக் குறியை போட்டுள்ளார். ஆப்கானிஸ்தானுக்கு ஒருத்தனை திரும்பி வரமுடியாதபடி அனுப்பி வைத்தால்.... தலிபான்களே தகுந்த தணடனையை கொடுப்பார்கள் என்று கருதித்தான் அந்தக் கருத்துக்கு சிரிப்பு குறி போட்டார். தலிபான்களின் தண்டனை எப்படி இருக்கும் என்று சொல்லித் தெரியவேண்டியது இல்லை. அது உங்களுக்கே நன்கு தெரியும். அத்துடன் அவர் அந்தக் காமுகனின் செயலை அவர் எங்கும் நியாயப் படுத்தவில்லை என்பதை பலர் கவனிக்கத் தவறி விட்டார்கள். நேற்று வெள்ளிக்கிழமை 13´ம் திகதி எல்லோரையும் போட்டு சிப்பிலி ஆட்டிப் போட்டுது. 😲
-
தென்னிலங்கையின் முகவா்களாக சிலா் வடக்கில் செயற்படுகின்றனா் – அரியநேந்திரன்!
தென்னிலங்கையின் முகவா்களாக சிலா் வடக்கில் செயற்படுகின்றனா் – அரியநேந்திரன்! ஜனாதிபதித் தேர்தலில் சங்கு சின்னத்திற்கு மாத்திரமே வாக்களிக்குமாறும், ஏனையவர்களுக்கு விருப்பு வாக்கு போட வேண்டாம் என்றும் தமிழ் பொது வேட்பாளர் அரியநேந்திரன் கோாிக்கை விடுத்துள்ளாா். யாழில் இன்றையதினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு கோாிக்கை விடுத்துள்ளாா். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில், ”எட்டு மாவட்டங்களிலும் எமது பிரச்சார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எதிர்பார்த்த வாக்குக்களை விட அதிக வாக்குகள் எமக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை எமக்கு வந்துள்ளது. மக்களிடம் நாம் சங்கு சின்னத்திற்கு மாத்திரம் வாக்களிக்க வேண்டும் என்றே கோரி வருகிறோம். ஆனால் சிலர் சங்கு சின்னத்துக்கு வாக்களித்த பின்னர் விரும்பிய மற்றைய வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு சிலர் கூறு கின்றனர். இது எனதோ இப்பொதுக் கட்டமைப்பை சார்ந்தவர்களுடைய கருத்தோ இல்லை. தற்போதைய நிலவரப்படி எவருமே 50 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற முடியாத நிலைமை காணப்படுகிறது. அதானல் தென்னிலங்கையை சேர்ந்தவர்கள் வடக்கு கிழக்கில் முகாமிட்டு பிரச்சாரங்களை முன்னெடுக்கின்றனர். நல்லூர் திருவிழாவிற்கு காப்புக்கடை போடுவது போன்று, கொக்கட்டிசோலை தான்தோன்றிஸ்வரர் ஆலயத்தில் இனிப்பு கடை போடுவது போன்று, வடக்கு கிழக்கில் வந்து தங்கி பிரச்சாரம் செய்கின்றனர். அவர்களுக்கு முகவர்களாக சில தமிழர்கள் செயற்படுகின்றனர். எமது இனத்திற்காக அவர்கள் சிந்தித்து சங்கு சின்னத்திற்கு ஆதரவு வழங்க முன் வரவேண்டும்” என அரியநேந்திரன் மேலும் தெரிவித்தார். https://athavannews.com/2024/1399355
-
நீண்ட தூர ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்தினால் நேட்டோவுடன் நேரடி யுத்தமாக கருதுவோம் - புட்டின்
நேட்டோவை எச்சரிக்கும் புடின்! ஷ்யா மீது உக்ரேன் நீண்ட தூர ஏவுகணைகளை பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை நேட்டோ நீக்கினால் உக்ரேன் – ரஷ்ய யுத்தத்தில் நேட்டோ நேரடியாக களமிறங்குகின்றது என தான் கருதுவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார். நேட்டோ, அமெரிக்கா , ஐரோப்பிய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் ரஷ்யா ரஷ்யாவுடனான போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா , ஐரோப்பிய நாடுகள் நிதி உதவி, ஆயுத உதவிகள் அளித்து வருவதால், ரஷ்யாவுக்கு கடும் சவாலை உக்ரேன் தொடர்ந்தும் அளித்து வருகிறது. இரண்டு ஆண்டுகளைக் கடந்தும் இந்தப் போர் தொடர்ந்து நீடித்து வருகிம் நிலையில், இந்தப் பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க தயாராக இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் அண்மையில் அறிவித்தார். எனினும், ரஷ்ய பிராந்தியங்கள் மீது ஆளில்லா ஏவுகணைகள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி உக்ரேன் தாக்குதல் நடத்தி வருகின்றது. இந்த நிலையில், இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின், மேற்கத்திய நாடுகளின் ஆயுதங்களை வைத்து தாக்குதல் நடத்தும் திறன் உக்ரேன் இராணுவத்திற்கு கிடையாது என்றும் செயற்கைகோள் மூலமான உளவுத் தகவல்களை பெறாமல் இவற்றை பயன்படுத்த முடியாது என்றும் தெரிவித்துள்ளார். எனவே, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா அல்லது நேட்டோ செயற்கைகோள்களை தான் உக்ரேன் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த ஏவுகணைகளுக்கு தேவையான சில அதிநவீன கருவிகள் நேட்டோ அமைப்பிடம் தான் உள்ளதாகவும் எனவே, இந்த போரில் நேட்டோ படைகள் நேரடியாக ஈடுபடுகிறதா அல்லது இல்லையா என்பதே முக்கியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த ஏவுகணைகளை உக்ரேன் பயன்படுத்த அனுமதித்தால், அது போரின் தன்மையை மாற்றும் எனத் தெரிவித்துள்ள புடின், அது நேட்டோ படைகள், அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகள் ரஷ்யாவுடன் நேரடியாக மோதுவதற்கு சமம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். தங்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்கும் வகையில் தகுந்த முடிவுகளை ரஷ்யா எடுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். https://athavannews.com/2024/1399377
-
கருத்து படங்கள்
நன்றி சுவியர். 🙂 நன்றி நிலாமதி அக்கா. 🙂 நன்றி கவி அருணாசலம். 🙂 Top Posters In This Topic தமிழரசு1276 posts தமிழ் சிறி1004 posts நவீனன்510 posts nunavilan 366 posts நன்றி குமாரசாமி அண்ணை. பல கருத்துக்கள் பதியப்பட்ட அனைத்து பிரபலமான திரிகளினதும் பக்கத்தின் ஆரம்பத்தில் வலப் பக்கத்தில் காட்டுகின்றது.
-
உலகின் ராட்சத உடல்வாகு கொண்ட பாடிபில்டர் மாரடைப்பால் உயிரிழப்பு
ஒரு நாளைக்கு.. ஏழு முறை சாப்பிடுகின்றார். அத்துடன் 2.5 கிலோ இறைச்சியும், 108 சுஷியும் சாப்பிட்டால் மாரடைப்பு வராமல் என்ன செய்யும்.😂 கொஞ்சம் வாயை கட்டியிருந்தால்... நீண்ட நாள் வாழ்ந்திருக்கலாம்.
-
போயிங் நிறுவனத்தின் புதிய விண்கலத்தில் விண்ணுக்கு பயணமானார் சுனிதா வில்லியம்ஸ்!
நேரலையில் சுனிதா வில்லியம்ஸ்! சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) சிக்கியுள்ள நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் இன்று இந்திய நேரப்படி இரவு 11:45 மணிக்கு விண்வெளியில் இருந்து நேரடி ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்கவுள்ளனர். குறித்த ஊடகவியலாளர் சந்திப்பானது நாசா+, நாசா செயலி மற்றும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது, சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் தங்கள் நீட்டிக்கப்பட்ட பணியின் நுண்ணறிவு மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஜூன் 5 ஆம் திகதி போயிங்கின் ஸ்டார்லைனர் விண்கலத்தில் பூமியிலிருந்து புறப்பட்டனர். அவர்கள் பயணித்த விண்கலமானது ஜூன் 6 ஆம் திகதி சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தது. இருப்பினும், விண்கலத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக அவர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருப்பது எதிர்பாராதவிதமாக நீட்டிக்கப்பட்டது. எட்டு நாட்கள் பணிக்காக சென்ற அவர்கள், தற்சமயம் மூன்று மாதங்களாக அங்கு தங்கியுள்ளனர். பாதுகாப்புக் காரணங்களுக்காக விண்வெளி வீரர்கள் திரும்புவது 2025 பெப்ரவரி வரை தாமதமாகும் என்று நாசா அண்மையில் உறுதி செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1399316
-
உலகின் ராட்சத உடல்வாகு கொண்ட பாடிபில்டர் மாரடைப்பால் உயிரிழப்பு
உலகின் ராட்சத உடல்வாகு கொண்ட பாடிபில்டர் மாரடைப்பால் உயிரிழப்பு. பெலாரஸ் நாட்டைச் சேர்ந்தவர் இலியா யெஃபிம்சிக் என்ற 36 வயதான சிறந்த பாடிபில்டர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். தனது தீவிர பயிற்சி மூலம் உலகின் அசுரத்தனமான உடல்வாகு கொண்ட பாடிபில்டர் என்று அழைக்கப்பட்ட இவர் மாரடைப்பு ஏற்பட்டு 36 வயதிலேயே உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 6ஆம் திகதி வீட்டில் இருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. வைத்தியசாலையில் அனமதித்த போது கோமா நிலைக்கு செல்லப்பட்டு நேற்று முன்தினம் உயிர் பிரிந்துள்ளது. ராட்சத உடல்வாகு கொண்டவராக இருந்தாலும் இதுவரை எந்தவொரு தொழில்முறையாக போட்டிகளில் அவர் கலந்த கொள்ளவில்லை. ஆனால் அடிக்கடி தனது ரசிகர்களுடன் வீடியோக்களை சமூக வலைத்தளம் மூலம் பகிர்ந்து கொண்டுள்ளார். இவர் தினந்தோறும் 16,500 கலோரிகள் என்ற அளவிற்கு ஒரு நாளைக்கு ஏழு முறை சாப்பிடுவதாக தகவல் தெரிவிக்கின்றன. மேலும் 2.5 கிலோ இறைச்சி மற்றும் 108 சுஷி (ஜப்பான் உணவு வகை) சாப்பாட்டில் எடுத்துக் கொள்வதாகவும் தகவல் தெரிவிக்கின்றன. 6 அடி ஒரு இன்ச் உயரம் கொண்ட இவர் 154 கிலோ எடை கொண்டவராவார். இவரது மார்பளவு 61 இன்ச் என கூறப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1399309
-
நேர்மையான தீர்வு வழங்க ரணில் விக்கிரமசிங்கவால் தான் முடியும்; அவருக்கே தமிழ் மக்களின் வாக்கு - அங்கஜன்
அங்கஜன், அப்ப ஏன்… மகிந்த ஜனாதிபதி ஆக இருந்த போது அவரை ஆதரித்தும், மைத்திரி ஜனாதிபதியாக இருந்த போது, அவரை ஆதரித்தது மட்டுமல்லாது உங்கள் வீட்டுக்கே கூப்பிட்டு விருந்து வைத்து மகிழ்ந்தீர்கள். உங்களுக்கு காரியம் ஆக வேண்டுமென்றால்… யார் காலிலும் விழுந்து காரியத்தை சாதியுங்கள். தமிழ் மக்களையும் அந்தச் சகதிக்குள் இழுக்காதீர்கள். முதலில்… நீங்களும், டக்ளசும், வேறு சில தமிழரசு கட்சி அரசியல்வாதிகளும் நிலையான கொள்கையுடன், நேர்மையாக மக்கள் முன் வலம்வரப் பாருங்கள். உங்களின் உபதேசம் இப்போ தேவையில்லை.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
- ஜனாதிபதி தேர்தல் சிரிப்புகளும், வாக்குறுதிகளும்.
ஜனாதிபதியை பார்க்க சென்ற கூட்டம். கூட்டத்தை பார்த்து ஜனாதிபதியை முடிவு செய்வதென்றால் 2019 இல் அநுர தான் ஜனாதிபதி.- அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களிடையே விவாதம் – மூன்றாம் உலக போர் ஏற்படும் என எச்சரிக்கை
அட... கமலா, டிரம்ப்புக்கே... தண்ணி காட்டிப் போட்டார். 😂 பைடன் இருந்திருந்தால்.... இளகின இரும்பை கண்டா மாதிரி... தூக்கி, தூக்கி அடித்திருப்பார். 🤣 கமோன் கமலா... உரும்பிராய் மண் என்றால்... சும்மாவா. 😛 😜- கனடாவிலிருந்து யாழில் காணி வாங்க வந்தவருக்கு ஏற்பட்ட நிலை; 85 இலட்சம் ரூபா பணத்துடன் தரகர் தலைமறைவு!
காசு கையில் வைத்திருந்தால் மட்டும் போதாது. அதனை எப்படி பாதுகாப்பது என்ற மூளையும் இருக்க வேண்டும்.- சபாஷ்... சரியான போட்டி.
மனைவி; "என்னங்க உங்கம்மாவை முதியோர் இல்லத்தில் சேர்க்கப் போனீங்களே என்னாச்சு?" கணவன்;"அதெல்லாம் சேர்த்தாச்சு" ம;"எங்கம்மா சொன்னது சரிதாங்க" க;"என்னா சொன்னாங்க" ம; "நீங்க தங்கமானவங்கலாம். ஆம்பளனா உங்கள போலதான் இருக்கனும்பாங்க"? க; "ஏனாம்? ம;"மனைவி சொல்ல தட்டாம கேட்கிறீங்கனுதா." க;" சொல்ல மறந்துட்டேன்.வயசான காலத்தில் பேச்சுத் துணைக்கு தெரிந்தவர்கள் யாரும் இல்லாமல் அம்மா எப்படி இருப்பாங்கனு யோசனையா இருந்தேன்" ம; "பேச்சு துணைக்கு ஆள் கிடைச்சுட்டாங்களா?" க; "கிடைச்சுட்டாங்க" ம; "அப்படியா யாரு?" க;"உங்கம்மா.இப்பத்தான் உன் அண்ணன் வந்து உங்கம்மாவை சேர்த்துட்டு போனான்" ம;"என்னது?பொண்டாட்டி பேச்சை கேட்டு பெத்த அம்மாவை அனாதை ஆஸ்ரமத்தில் சேர்க்கிறவன் எல்லாம் ஒரு ஆம்பளயா?" உங்கம்மானா அம்மா! எங்கம்மானா சும்மாவா? Rajagopal Gopal- 1915 இல் தூக்கிலிடப்பட்டவருக்கு ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு!
1915 இல் தூக்கிலிடப்பட்டவருக்கு ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு! கடந்த 1915 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 7 ஆம் திகதி தூக்கிலிடப்பட்ட தியுனுகே எட்வர்ட் ஹென்றி பெட்ரிஸுக்கு மரணத்திற்குப் பின் ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 1915 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25 ஆம் திகதி, அப்போதைய இலங்கை ஆளுநரால் நியமிக்கப்பட்ட இராணுவ நீதிமன்றத்தின் நியாயமற்ற விசாரணையைத் தொடர்ந்து,எட்வர்ட் ஹென்றி பெட்ரிஸுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கப்பட்டுள்ள விசேட அதிகாரங்களுக்கு அமைவாக இந்த ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த தீர்மானத்தை அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தலும் நேற்று வெளியிடப்பட்டது. 108 ஆண்டுகளுக்கு முன்பு காலனித்துவ நீதிமன்றத்தால் தூக்கிலிடப்பட்ட எட்வர்ட் ஹென்றி பெட்ரிஸின் கொலை தொடர்பான விசாரணைக்கு 2023 டிசம்பரில் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1399306- வடக்கு கிழக்கு இணைக்கப்படாது;நாமல் உறுதி
அப்படி சொன்னால் நாமலுக்கு... மாட்டு சாணியும், மனுச சாணியும் கலந்து அடிப்பார்கள். 😂 🤣- ஜனாதிபதித் தேர்தல்-பிரதிநிதிகள் நாட்டிற்கு வருகை!
இவங்கள் "மிக்ஸர்" சாப்பிட வாறாங்கள். 😂 நடந்து முடிந்த எத்தனையோ... தேர்தல்களுக்கு சர்வதேச கண்காணிப்பாளர்கள் வந்துள்ளார்கள். எப்பவாது ஒரு முறைகேட்டை கண்டு பிடித்து அம்பலப்படுத்தி இருக்கிறார்களா...? அரசாங்கம் அவர்களுக்கு ஐந்து நட்சத்திர ஹோட்டேல் கொடுத்து... குட்டியும், புட்டியும் கொடுக்க... கும்மாளம் அடிக்கிற ஆட்களுக்கு... தேர்தலை குறை சொல்ல எப்படி மனம் வரும். இவங்களை கூப்பிடுகிற காசுக்கு... இரண்டு விகாரையை கட்டி விட்டு போகலாம். 🤣- ஜனாதிபதித் தேர்தல்-பிரதிநிதிகள் நாட்டிற்கு வருகை!
ஜனாதிபதித் தேர்தல்-பிரதிநிதிகள் நாட்டிற்கு வருகை! ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக 9 நாடுகளில் இருந்து தேர்தல் கண்காணிப்பாளர்கள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஆணைக்குழுவின் அழைப்பிற்கிணங்க அவர்கள் வருகை தந்துள்ளதாக அதன் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் 18ஆம் திகதி முதல் அவர்கள் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளனர். இதில் சார்க் வலய நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் ரஷ்ய கண்காணிப்பாளர்களும் இந்த கண்காணிப்பு குழுக்களில் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1399264- கிளிநொச்சியில் முஸ்லிம்களின் காணி அபகரிப்பு- கண்ணீர் விட்டு கதறும் தாய்
முஸ்லீமுக்கு வந்தால் இரத்தம், தமிழனுக்கு வந்தால்... தக்காளி சட்னி. 😂 - ஜனாதிபதி தேர்தல் சிரிப்புகளும், வாக்குறுதிகளும்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.