Everything posted by தமிழ் சிறி
-
பெண்கள் கழிவறையைில் ரகசிய கெமரா – 300ற்கும் மேற்பட்ட வீடியோக்கள் கசிவு
பெண்கள் கழிவறையைில் ரகசிய கெமரா – 300ற்கும் மேற்பட்ட வீடியோக்கள் கசிவு.witter இந்தியாவில் பெண்களின் பாதுகாப்பு என்பது பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. திரும்பும் திசைகளில் எல்லாம் சிறுமிகள் தொடக்கம் வயோதிப பெண்கள் வரை அனைவரும் பல துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இந்நிலையில் ஆந்திர பிரதேசத்தில் உள்ள பொறியியல் கல்லூரி ஒன்றில் மாணவிகள் விடுதி கழிவறையில் (Washroom) ரகசிய கேமரா இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த கேமராவில் மாணவிகள் வீடியோக்கள் ரகசியமாக பதிவாகி இருந்ததாகவும், பின்னர் அவை கசிந்து சில மாணவர்களுக்கு விற்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள குடிவாடா மண்டலம் குட்லவல்லேரு பொறியியல் கல்லூரியில் நடந்த இந்த சம்பவம் மாணவர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. விடுதி கழிவறையில் இருந்த கேமராவை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவிகள், இதில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்றிரவு முதல் இன்று காலை வரை போராட்டம் நீடித்தது. தங்களுக்கு நீதி வேண்டும் என கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் தொடர்பாக, இறுதியாண்டில் படிக்கும் ஆண்கள் விடுதியைச் சேர்ந்த மூத்த மாணவர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அவரது லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது. பெண்கள் விடுதி கழிவறையில் இருந்து 300-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் கசிந்ததாகவும், சில மாணவர்கள் இந்த வீடியோக்களை கைதான மாணவனிடம் இருந்து வாங்கியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. https://athavannews.com/2024/1397559
-
கருத்து படங்கள்
- காணாமலாக்கப்பட்டவா்களுக்கு என்ன நேர்ந்தது? – செஞ்சிலுவைச் சங்கம் அறிக்கை!
காணாமலாக்கப்பட்டவா்களுக்கு என்ன நேர்ந்தது? – செஞ்சிலுவைச் சங்கம் அறிக்கை! வலிந்து காணாமலாக்கப்பட்டவா்களுக்கு என்ன நேர்ந்தது எனும் உண்மையைக் கண்டறிவதற்குரிய சகல முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இலங்கையில் சகல சமூகங்களையும் சேர்ந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள் காணாமல்போன தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறிந்துகொள்வதற்காக நீண்டகாலமாகக் காத்திருக்கின்றார்கள். அவர்கள் கௌரவத்துடன் வாழ்வதற்கு இடமளிக்கும் அதேவேளை, அவர்களது உறவுகளுக்கு என்ன நேர்ந்தது எனும் உண்மையைக் கண்டறிவதற்குரிய சகல முயற்சிகளும் மேற்கொள்ளப்படவேண்டும் என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இன்று வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், அதனை முன்னிட்டு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: உலகளாவிய ரீதியில் யுத்தம், வன்முறைகள், அனர்த்தங்கள், மனிதாபிமான நெருக்கடிகள் மற்றும் புலம்பெயர்வு போன்ற பல்வேறு காரணிகளால் தமது குடும்பத்தினரை, அன்புக்குரியவர்களை பிரிந்த சகலரையும் நாம் இன்றைய தினத்தில் நினைவுகூருகின்றோம். 2023 ஆம் ஆண்டின் இறுதியில் உலகளாவிய ரீதியில் 2 இலட்சத்து 39 ஆயிரத்து 700க்கும் மேற்பட்டோர் காணாமல்போயிருப்பதாக செஞ்சிலுவை மற்றும் செம்பிறைச்சங்கக் கூட்டிணைவில் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றார்கள். இருப்பினும் இந்த எண்ணிக்கை காணாமலாக்கப்படல்களின் உண்மை நிலைவரத்தையும், தீவிரத்தன்மையையும் துல்லியமாகப் புலப்படுத்தவில்லை. இலங்கையில் சகல சமூகங்களையும் சேர்ந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள் காணாமல்போன தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறிந்துகொள்வதற்காக நீண்டகாலமாகக் காத்திருக்கின்றார்கள். அவர்கள் கௌரவத்துடன் வாழ்வதற்கு இடமளிக்கும் அதேவேளை, அவர்களது உறவுகளுக்கு என்ன நேர்ந்தது எனும் உண்மையைக் கண்டறிவதற்குரிய சகல முயற்சிகளும் மேற்கொள்ளப்படவேண்டும் என்று அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1397502- இலங்கை வந்தார் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் தமிழ் பிரதிநிதிகள் சந்திப்பு! இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கும் தமிழ் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. மரியாதை நிமித்தமாகக் கொழும்பில் இந்தச் சந்திப்பு நேற்று இடம்பெற்றுள்ளது. இச்சந்திப்பின்போது, இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையிலான உறவை வழுப்படுத்துதல் மற்றும் சமூக பொருளாதார விடயங்களை மேம்படுத்துவது குறித்துக் கலந்துரையாடப்பட்டுள்ளது. குறித்த சந்திப்பில் கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைருமான செந்தில் தொண்டமான், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தவிசாளர் மருதபாண்டி ராமேஸ்வரன், கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார், தொழில் இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவருமான வடிவேல் சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1397506- இரசித்த.... புகைப்படங்கள்.
- பாரிஸ் 2024 பரா ஒலிம்பிக்
தங்களின் இன்முகமான வரவேற்பிற்கு, நன்றி சுவியர். 🥰 நான் வரவில்லை. மகள் மட்டுமே வருகின்றார்.- கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
- பாரிஸ் 2024 பரா ஒலிம்பிக்
பரா ஒலிம்பிக் விளையாட்டுக்களை பார்ப்பதற்காக, வருகின்ற கிழமை எனது மகளும் பாரிஸ் செல்ல இருக்கின்றார்.- ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகாவின் பரிதாப நிலை.
போலீஸ்காரனும்... சரத்துக்கு, "டிக்கி"யை காட்டிக் கொண்டு நிற்கிறான். 😃 ஆட்கள் இல்லாத இடத்தில்... போலீஸ்காரன் ஏன் காவலுக்கு, நிற்கிறான். சிலவேளை... வெறும் கதிரையை தூக்கிக் கொண்டு போயிடுவார்கள் என்று நினைத்தார்களோ. 😂- அநுர குமார திஸாநாயக்க ஜனாதிபதியானால் 6 மாத காலம் தான் அந்தப் பதவியில் இருப்பார்-ஹிருணிகா!
அநுர குமார திஸாநாயக்க ஜனாதிபதியானால் 6 மாத காலம் தான் அந்தப் பதவியில் இருப்பார்-ஹிருணிகா! தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க ஜனாதிபதியானால் அதிகபட்சமாக 6 மாத காலம் தான் அந்தப் பதவியில் இருப்பார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார். மீரிகம பிரதேசத்தில் இடம்பெற்ற சஜபா அரசியல் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே திருமதி ஹிருணிகா பிரேமச்சந்திர மேற்கண்டவாறு தெரிவித்தார். 2000 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்திற்குள் பிரவேசித்த அநுர குமார திஸாநாயக்க மக்களுக்காக எந்த நடவடிக்கையும் எடுக்காதவர் என அவர் குறிப்பிட்டுள்ளார். அப்படிப்பட்ட ஒருவரால் தற்போதைய இலங்கையை அபிவிருத்தி செய்ய முடியும் என நம்ப முடியுமா?எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அதிகபட்சமாக 2 வருடங்கள் பதவியில் இருப்பார் என்றும், அவருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள பல வழக்குகளை வாபஸ் பெறவே அவர் ஜனாதிபதியானார் என்றும் தாம் முன்னர் தெரிவித்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2024/1397483 @Maruthankerny- கனடா தமிழர் தெரு விழாவில் குழப்பம்.... இசை நிகழ்ச்சியில் முட்டை வீச்சு!
அப்போ நடந்த சம்பவங்கள் எதற்கும்.... உங்கள் அபிமான கனடிய தமிழர் பேரவை பொறுப்பாளி அல்ல என்பதுதானே உங்கள் வாதம். இந்த தெருவிழா நடக்க முன்பே பல தமிழர் அமைப்புகள் பகிஷ்கரிப்பு கோரிக்கையை முன்வைத்ததாக அறிகின்றோம். அந்த நேரமாவது கனடிய தமிழர் பேரவை சம்பந்தப் பட்டவர்களை அணுகி என்ன பிரச்சினை என்பதனை பேசித் தீர்த்திருந்தால் இந்த அசம்பாவிதங்களை தவிர்த்து இருக்கலாமே. அதற்கு... அவர்களுக்கு தடையாக இருந்தது எது? ஒரு நகரத்தில் நடக்கும் நிகழ்வை ஓரிரு தமிழர் அமைப்புடன் கலந்து பேசி சுமூகமாக நடத்தி முடிக்க வேண்டிய தார்மீக பொறுப்பு கனடா தமிழர் பேரவைக்கு இல்லை என்றால்.... சிங்களவனுடன் "இமாலய பிரகடனம்" செய்வதில் ஏதாவது அர்த்தம் உண்டா.- கனடா தமிழர் தெரு விழாவில் குழப்பம்.... இசை நிகழ்ச்சியில் முட்டை வீச்சு!
அப்படி யாரும் சொல்லவில்லை. தமிழர் நலன் சார்ந்து இருக்கின்ற கனடிய தமிழர் பேரவை... தனியே ஸ்ரீலங்கா போய்... "இமாலய பிரகடனம்" என்ற ஒப்பந்தத்தை செய்த பின் தான்.... தாயகத்தில் மட்டுமல்ல புலம் பெயர் தேசத்தில் இருக்கின்ற மக்களும்.. இமாலய பிரகடனம் என்றால்.. என்ன என்று தெரியாமல் விழித்தார்கள். தாயக மக்களுக்கே... தெரியாமல் புத்த பிக்குகளையும், பல்லாயிரம் மக்களை கொன்று போரை நடத்தியவர்களை சந்தித்ததைத்தான்.... தவறு என்றும், இவ்வளவு பிரச்சினை ஆரம்பமாக உள்ள முக்கிய காரணம் என்று குறிப்பிடுகின்றோம். உங்களுக்கு நடந்த பல விடயங்கள் தெரியும். ஆனால்... தெரியாத மாதிரி நடிக்கின்றீர்கள் அல்லது அதனை ஒத்துக் கொள்ள உங்கள் சுயமரியாதை இடம் தரவில்லை என்றே கருத வேண்டி உள்ளது. ஆரம்பமான முக்கிய பிரச்சினையை வசதியாக மறைத்துக் கொண்டு, திரும்பத் திரும்ப ஒரே கருத்தை சொல்லிக் கொண்டு இருப்பது உங்களுக்கே அலுப்பு அடிக்கவில்லையா. நன்றி, வணக்கம்.- கனடா தமிழர் தெரு விழாவில் குழப்பம்.... இசை நிகழ்ச்சியில் முட்டை வீச்சு!
நீங்கள், அடிமடியிலை... கை வைக்கிறீர்கள். 😂 🤣 அவர்களாக போய்... புத்த பிக்குகளிடம் குனிந்து ஆசிர்வாதம் வாங்கலாம். சஜித், சந்திரிக்கா, மகிந்த, கோத்தாவை... பின்கதவால் சந்திக்கலாம். அதை எல்லாம்.... நீங்கள் கண்டாலும், காணாத மாதிரி இருக்க வேண்டும் என நினைக்கின்றார்கள். இந்தப் பிரச்சினை தோன்றியதன் முக்கிய மூல காரணமே, கனடா தமிழ் பேரவையில் உள்ளவர்கள் செய்த செயல் என்பதை இவர்கள் தெரிந்தும்... தெரியாத மாதிரி கதை அளந்து கொண்டு இருப்பதை பார்க்க சகிக்க முடியவில்லை. 😡 அவர்கள்... இல்லாத முள்ளமாரித்தனம் எல்லாம் செய்தவனை கண்டிக்க வக்கில்லாமல், மற்றவனுக்கு... "வகுப்பு" எடுத்துக் கொண்டு இருக்கின்றார்கள். 😂- ஜனாதிபதி தேர்தல் சிரிப்புகளும், வாக்குறுதிகளும்.
பேசாமல் அனுரவுக்கு வோட் போட்டுட்டு... 10,000 சிலிண்டர் வாங்கி, கடை ஒன்று போடலாம் என்று இருக்கின்றேன்.- காற்று மாசுபாடு காரணமாக இந்தியர்கள் வாழ்நாளில் 3.4 வருடங்களை இழக்கும் அபாயம்- ஆய்வில் தகவல்
காற்று மாசுபாடு காரணமாக இந்தியர்கள் வாழ்நாளில் 3.4 வருடங்களை இழக்கும் அபாயம்- ஆய்வில் தகவல். இந்தியாவில் காற்று மாசு தொடர்ந்து நீடித்து வந்தால் மக்கள் வாழும் தங்கள் வாழ்நாளில் 3.4 ஆண்டுகளை இழக்க நேரிடும் என அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்லைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 2021-ம் ஆண்டின் காற்று மாசுப்பாட்டை காட்டிலும் 2022-ம் ஆண்டில் காற்று மாசுபாடு 19.3 சதவீதம் குறைந்துள்ளது. காற்று மாசுபாடு இதேபோன்று நிலைத்திருந்தால் இந்தியாவில் வாழும் மக்கள் சராசரியாக 3.4 வருட வாழ்நாளை இழக்க நேரிடும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வளர்ந்து வரும் அதிக மக்கள் தொகையின் காரணமாக காற்று மாசுபாட்டிற்கான சுமையை இந்தியா எதிர்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மிகவும் மாசுபட்ட பகுதி வடக்கு பகுதி ஆகும். இது 50 கோடிக்கும் அதிகமான மக்கள் மற்றும் நாட்டின் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 40 சதவீதம் பேர் வசிக்கும் பகுதியாகும். 2022-ம் ஆண்டில் இந்தப் பகுதியில் காற்று மாசின் தரநிலை அளவு 17.2% குறைந்தாலும், இந்த மாசு நிலைகள் நீடித்தால் மக்கள் வாழ்நாளில் 5.4 ஆண்டுகளை இழக்க நேரிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. வடக்கு பகுதி தாண்டி மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் அதிக காற்று மாசுபாட்டை எதிர்கொள்ளும் மாநிலங்களாக திகழ்கிறது. இங்கு சராசரியாக 29.23 கோடி மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் தங்களுடைய ஆயுட்காலத்தில் 2.9 வருடங்களை இழக்க நேரிடும் என்றும், தெற்கு ஆசியாவை பொறுத்த வரைக்கும் கடந்த 20 ஆண்டுகளில் 2022-ல் காற்று மாசுபாடு 18 சதவீதம் குறைந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1397434- கனடா தமிழர் தெரு விழாவில் குழப்பம்.... இசை நிகழ்ச்சியில் முட்டை வீச்சு!
கந்தையா அண்ணை... பாடகர் சிறிநிவாஸ் அந்த மேடையில், இரண்டு பாடல்களை மட்டும் பாடியதாக அறிய முடிகின்றது. அவர் பாடும் படங்கள் மேலே இணைக்கப் பட்டுள்ளதுடன்... அவரை மேடையில் இருந்து காவல் அதிகாரிகள் பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் காணொளி காட்சிகளும் பதிவாகி உள்ளது. இதில் உள்ள எந்தப் படத்திலும்... அவர் மீது முட்டை வீசியதற்கான அறிகுறிகள் அறவே இல்லை. அப்படி இருக்க... முட்டை கதையை கட்டி விடுபவர்கள் அதனை ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும் அல்லவா. இல்லாத ஒன்றை சொல்லும் போது... அவரின் அபிமானிகளான தென் இந்திய தமிழர்களின் மனதிலும் ஒரு காயத்தை ஏற்படுத்தி இரண்டு நாட்டு தமிழர்களிடமும் மேலும் விரிசலை ஏற்படுத்தும் என்பதை இவர்கள் உணராமல் எழுதுவது ஆபத்தானது.- கருத்து படங்கள்
- யாழ் தேவி புகையிரத சேவைகளை மீள ஆரம்பிப்பதாக உறுதி- நாமல்!
யாழ் தேவி புகையிரத சேவைகளை மீள ஆரம்பிப்பதாக உறுதி- நாமல்! தற்போதைய நிர்வாகத்தின் கீழ் செயற்திறன் இன்மை காரணமாக பல மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ள யாழ் தேவி புகையிரத சேவைகளை மீள ஆரம்பிப்பதாக உறுதியளிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் 30 வருடகால யுத்தத்தை முடித்துக் கொண்டு எமது அரசாங்கம் வடமாகாணத்திற்கான யாழ் தேவி புகையிரத பாதைகளை வெற்றிகரமாக நிறுவியது என தெரிவித்தார் எனினும் தற்போதைய நிர்வாகத்தின் செயற்திறன் இன்மையினால் இந்த சேவைகள் பல மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கு மாகாணத்திற்கான புகையிரத சேவைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கு தமது அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் மாத்தறை முதல் கதிர்காமம் வரையிலான 114 கிலோமீற்றர் நீளமான புகையிரத பாதையை தாமதமின்றி விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியுள்ளார். http://athavannews.com/2024/1397410- கொஞ்சம் ரசிக்க
பழம் நழுவி, பாலில் விழுந்த மாதிரி..... அதுக்கு நேரே தான் அவர்கள் காத்திருக்கின்றார்கள். 😂- சிரிக்கவும் சிந்திக்கவும் .
உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள சைக்கிள். 😂- ஜனாதிபதி தேர்தல் சிரிப்புகளும், வாக்குறுதிகளும்.
வரி அனைத்தையும் நிறுத்தி, அனைத்து விலைகளையும் குறைத்து, வறுமையை ஒழித்து, நாட்டில் உள்ள கடன் அனைத்தையும் அடைத்து... நான் யார் என்பதனை காட்டுகின்றேன். - அனுர குமார திசாநாயக்க.- எங்கள் ஆட்சியில் திருகோணமலையில் இருந்து... உலக நாடுகளுக்கு பெட்ரோல் ஏற்றுமதி செய்வோம். - அனுர -- ஐசிசியின் சுயாதீனத் தலைவராக ஜெய் ஷா போட்டியின்றி தெரிவானார்
இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின், மகனை எதிர்த்து போட்டியிட்டு விட்டு உயிருடன் அங்கு யாரும் இருக்க முடியுமா? ஆனால்... ஜனநாயக முறைப்படி நடந்த தேர்தல் என்று உருட்டுவார்கள்.- வட மாகாண வைத்தியா்கள் குறித்து அமைச்சர் சுரேன் ராகவன் வெளியிட்ட கருத்து!
உண்மைதான்.. மற்ற இனத்தில் காணக் கிடைக்காத பழக்கம் எம் இனத்தில் அதிகமாக உள்ளது. பணத்திற்காக எதனையும் செய்யத் தயாராக உள்ள மனச் சாட்சி இல்லாத மனிதர்கள்.- இங்கிலாந்தில் விந்தணு தானத்திற்கு அமோக வரவேற்பு; ஏன் தெரியுமா?
கெட்ட உலகம் இது. 😂 இரத்த தானம் செய்ய தயங்குபவர்கள்... விந்து தானம் செய்ய, பாய்ந்தடித்து ஓடுகின்றார்கள். 🤣 நாங்கள்.... இரத்ததானமும் செய்யவில்லை, விந்து தானமும் செய்யவில்லை. எல்லாம் சொந்த உபயோகத்திற்கே பொத்திப் பாதுகாத்துக் கொண்டோம். 😍- வட மாகாண வைத்தியா்கள் குறித்து அமைச்சர் சுரேன் ராகவன் வெளியிட்ட கருத்து!
சுரேன் ராகவன்... பிறப்பால் தமிழராக இருந்து கொண்டு, சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் தன் இனத்தையே கேவலப் படுத்தி, சிங்களவர்களை குளிர்விக்கும் ஒரு கீழ்த்தரமான சிந்தனை உடைய மனிதன். குறுகிய வழியில் பணம் சம்பாதிப்பதற்காக... இப்படிப் பட்டவர்கள் பலர் இப்போ திடீரென தோன்றியுள்ளார்கள். - காணாமலாக்கப்பட்டவா்களுக்கு என்ன நேர்ந்தது? – செஞ்சிலுவைச் சங்கம் அறிக்கை!
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.