Everything posted by vasee
-
ஆஸ்திரேலியா இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் தொடர் - 2024
பகல் போட்டிகளுக்கு சிகப்பு புலனாகும் தன்மை அதிகமாக காணப்படும், இரவு போட்டிகளின் போது பந்து தெளிவாக தெரிவதற்காக பந்தின் நிறத்தினை வெள்ளையாக பயன்படுத்துவதாக கூறுகிறார்கள், இந்த பிங் பந்து இரண்டுக்கும் இடைப்பட்ட வெள்ளையும் சிகப்பும் இணைந்த நிறத்தில் பயன்படுத்துவதன் மூலம் பந்தின் புலனாகும் தன்மையினை இரவு பகல் போட்டிகளுக்கு சாதகமாகும் விதத்தில் உருவாக்கியுள்ளார்கள், ஆனால் மாலை கருக்கல் எனக்கூறும் அந்தி சாயும் வேளையில் வானத்தின் நிறமும் பிங் பந்தின் நிறமும் ஓரளவிற்கு ஒரே மாதிரியிருக்கும் போது பந்தினை கணிப்பது சிரமம் என கூறுகிறார்கள், அத்துடன் மின்னொளியில் பந்து அதிகமாக சுவிங் ஆகும் எனவும் கூறுகிறார்கள். முந்தய டெஸ் போட்டிகளில் பயன்படுத்திய அரக்கின் அளவினை விட தற்போது இரண்டு மடங்கு அதிகமாகவும் கட்டுகள் மிக உறுதியாக இருப்பதால் பந்து காற்றில் திரும்புவதும் தரையில் பட்டு திரும்புவதும் அதிகமாக காணப்படுகிறது (இதனால் டெஸ்ட் போட்டிகள் குறுகிய காலத்தில் முடிவடைவதற்Kஉ அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்) பிங் பந்து சிகப்பு பந்தினை விட அதிக அரக்கு காணப்படுவதால் ரிவர்ஸ் சுவிங் ஆகாது என கூறுகிறார்கள் பந்து பெரும்பாலான பகுதி முழுவதும் சுவிங் ஆகும் அத்துடன் கட்டும் சிகப்பு பந்தினை விட உறுதியானது.
-
மாகாண சபைத் தேர்தலை கால தாமதமின்றி நடத்தக் கோரும் சுமந்திரன்!
இலங்கை வரலாற்றில் மிதவாத அரசியல் ரீதியான நடவடிக்கையினால் எந்த வித நடைமுறையிலான தீர்வும் எட்டப்படவில்லை, இனியும் எட்டப்படபோவதில்லை, இது ஒரு நிதர்சனமான விடயம், ஆனால் தமிழரசியல்வாதிகள் அரசியல் தீர்வு தொடர்பாக பேசுவது வாக்குகளுக்காக, தற்போதுள்ள நிலையில் இந்திய அனுசரணை இன்றி தமிழர்களுக்கு எந்த தீர்வும் கிடைக்கப்போவதில்லை எனும் யதார்த்தத்தினை புரிந்து இலங்கை தமிழ் மக்கள் இந்தியாவுடனான தமது உறவை வலுப்படுத்த வேண்டும். இலங்கையில் சிறுபான்மையினமாக எக்காலத்திலும் நிரந்தர அமைதியுடன் வாழ முடியாது என்பது நிதர்சனமான விடயம், தொடர்ந்து இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதனை விடுத்து இந்தியாவுடனும், மேற்கு, இந்திய நலனை கருத்தில் கொண்டு தமிழர்கள் தமது கொளகையினை உருவாக்குவதன் மூலம் சிறுபான்மை இனம் இலங்கையில் அமைதியாக வாழும் சூழ்நிலையினை அதிஅக் அதிகாரங்கள் கொண்ட அலகுகளை பெற முடியும். இதற்கு உதாரணமாக உக்கிரேனை கூறலாம் போரில் ஈடுபடும் இரஸ்சியாவினை தவிர்த்து அமைதி முயற்சியில் உக்கிரேன் அரசு ஈடுபடுவதனை போல இலங்கை அரசினுடன் பேச்சுவார்த்தை என காலம் கடத்துவதனை விட இந்தியா, மேற்கு நாடுகளுடன் பேச்சு நடத்த வேண்டும். இது முகாமையாளருடன் பேசுவதனை விடுத்து நேரடியாக முதலாளியுடன் பேசுவது போன்றதாகும்.😁 எந்த நாடும் தனது நலனின்றி தேவையில்லாமல் மற்ற நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடாது அதனால் இந்தியா மேற்கு நாடுகள் தவற விடக்கூடாது எனும் வகையான அவர்களது நலனை தூண்டில் இரையாக இலங்கையினை பயன்படுத்தி எமது உரிமைகளை பெற முயற்சிக்கவேண்டும்.😁
-
இந்தியாவிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்குக் கோரிக்கை!
தற்போது ரணில், ரணில் 2.0 தயாராகக்கூடும், சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்பது அனுர விடயத்தில் உண்மையாகி விடக்கூடாது.
-
இந்தியாவிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்குக் கோரிக்கை!
உண்மையில் பற்றாக்குறை உள்ளமையாலேயே இந்த பதுக்கல் ஏற்படுகிறது அது பற்றாக்குறையினை இரட்டிப்பாக்குகிறது, இந்த அத்தியாவசிய பொருள்களை வாங்கும் அளவு விலை மாற்றத்தினால் பெருமளவில் மாற்றம் ஏற்படுவதில்லை, இதனை ஒன்றிற்கு குறைவான விலை நெகிழ்ச்சி தன்மையுடைய பொருள்களிற்குள் அடக்குவார்கள். அதாவது எனது இரவு நேர உனவிற்கு அரை இறாத்தல் பாணை உண்கிறேன், பாணின் விலை திடீரென 2 ரூபாக அதிகரித்துவிட்டது என்பதற்காக அதனை உண்ணாமல் விட முடியாது ( பாண் விலை குறைந்த அடிப்படை உணவுப்பொருள்). நுகர்வோராக விலை அதிகரிப்பினால் பாதிப்பு ஏற்படுவது போல பாண் உற்பத்தியாளருக்கு அதன் விலை வீழ்ச்சி நட்டத்தினை ஏற்படுத்தும். இந்த விலை மாற்றம் கேள்வி மற்றும் வழங்கலுக்கிடையேயான ஒரு சமரச நிலை மூலம் உருவாகும், வழங்கல் குறைவாக இருக்கும் போது (அரை இறாத்தல் பாணிற்கு 10 பேர் போட்டியிட்டால்) விலை அதிகரிக்கும். இந்த தட்டுப்பாடுகளே ஏக போக சந்தைகளை உருவாக்குகிறது (Monopoly). இதற்கு குற்றம் சாட்டப்பட வேண்டியவர்கள் அரசே, வேறு யாருமல்ல, காரணம் அவர்கள் அடிப்படை பிரச்சினைகளை கவனித்து சரியான திட்டமிடலை செய்யாமையே காரணம். நிதி முகாமைத்துவம், நாட்டின் நாளாந்த நிர்வாக நடைமுறைகளில் இந்த புதிய அரசு மெத்தனமாக இருக்கிறதா அல்லது அனுபவமின்மையால் இப்படி எல்லாம் நிகழ்கிறதா என தெரியவில்லை.
-
ஆஸ்திரேலியா இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் தொடர் - 2024
போட்டியின் ஆரம்பிப்பதற்கு முன்னரே அவுஸ் வெல்லும் என கூறினாலும் போட்டி ஆரம்பித்து முதலாவது இனிங்க்ஸ் பின்னர் நீங்கள் அவுஸ் வெல்லும் என கூறிவிட்டீர்கள், அந்த நேரம் எனக்கு உங்களவிற்கு நம்பிக்கை இருக்கவில்லை, முதல் நாள் மேக மூட்டமாகவும் இரண்டாம் நாள் அதிக வெய்யில் 3 ஆம் நாள் மழை என எதிர்வு கூறியிருந்தமையால் ஆடுகளத்தின் தன்மை மாற்றத்தில் ஒரு சந்தேகம் நிலவியிருந்தது, அவுஸின் இலகு வெற்றிக்கு இந்திய அணியின் பங்கும் இருந்தது. இந்த போட்டியில் இரு அணிகளுக்கிடையேயும் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது, சிராஜின் சின்ன பிள்ளைத்தனமான கொண்டாட்டத்தில் ஆரம்பித்துள்ளது, மிக சிக்கலான ஆடுகளத்தில் 140 ஓட்டங்களை எடுத்த ட்ராவிஸ் கெட்டிற்கு குடுக்க வேண்டிய குறைந்த பட்ச அங்கீகாரத்தினை கொடுக்காமல் மிக கேவலமாக நடந்து கொண்டுள்ளது இந்திய அணி, அதனை இந்திய இரசிகர்களே இரசித்திருக்கமாட்டார்கள். ஆனால் அவுஸ் பார்வையாளர்கள் கூட மோசமாக நடந்து கொண்டார்கள்.
-
அரிசிக்கான விலைகளை நிர்ணயித்தார் ஜனாதிபதி : பின்பற்றாதவர்களுக்கு கடும் சட்ட நடவடிக்கையாம் !
அரிசி மட்ட்டுமல்ல தேங்காய், வெங்காயம் என்பவற்றிற்கும் தட்டுப்பாடு நிலவுகிறதாக கூறுகிறார்கள் இதனை நிவர்த்தி செய்ய இறக்குமதி, மானியங்கள், சீரான வினியோகத்தின் மூலம் விலை உயர்வை மட்டும் கட்டுப்படுத்துவதற்கு அரசிற்கு பெருந்தொகை பணம் செலவாகும், தற்போதுள்ள இலங்கை பொருளாதார நிலையில் இது சாத்தியமா? ஜப்பான், இந்தியா போன்ற நாடுகள் இலங்கை அரசிற்கு நன் கொடை வழங்குவதாக கூறப்படுகிறது, அதன் அளவு மிக சிறிதாக இருக்கிறது. இதில் இந்த நீண்டகால திட்டத்திற்கு அரசிற்கு பணம் திரட்டலில் சிக்கல் நிலவும், நான் நினைக்கிறேன் அரசு உடனடியாக அவசரகால பாதீட்டினை கொண்டு வரவேண்டும். இல்லாவிட்டால் நிலமை மோசமாகி விடலாம், தாமதித்தால் தவிக்க நேரிடலாம். புலம் பெயர் தமிழர்கள் இலங்கைக்கு தேவையான நிதியுதவியினை செய்வதன் மூலம் இந்த அரசிற்கும் இலங்கையிலுள்ள அனைத்து மக்களும் ஏற்பட போகும் பேரிடரினை தவிர்க்கலாம். அதே நேரம் விவசாயிகளின் நலன், நாட்டின் நலன் என்பவற்றினை கருத்திற்கொண்டு செய்யப்படும் நீண்டகால திட்டங்களுக்கும் புலம் பெயர் தமிழர்களும் வெளிநாட்டின் நன் கொடையின் மூலம் அதற்கான நிதியினை பெறலாம். ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள அத்தியாவசிய பொருள்களின் தட்டுப்பாடு தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவு பெற்ற இந்த அரசினை பெரும் நெருக்கடிக்குள் தள்ளி விடும்.
-
இந்தியாவிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்குக் கோரிக்கை!
தட்டுப்பாடு நிகழலாம் என கருத்து உருவானால் இலங்கை தற்போதுள்ள பொருளாதார சூழ் நிலையில் அது பெரிய அழுத்தத்தினை உருவாக்கலாம், இதனை யாரோ திட்ட மிட்ட முறையில் செய்கிறார்கள் எனக்கருதுகிறேன், இதனால் பாதிக்கப்படுவது மக்கள் எனும் அடிப்படை புரிதல் இல்லாமல் வெறும் அரசிய்ல் நோக்கில் செயல்படுகிறார்களோ என தோன்றுகிறது.
-
அரிசிக்கான விலைகளை நிர்ணயித்தார் ஜனாதிபதி : பின்பற்றாதவர்களுக்கு கடும் சட்ட நடவடிக்கையாம் !
எடுத்தோம் கவுத்தோம் என இதில செயல்பட முடியாது, ஏற்கனவே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விட்டது என தெரிந்தவுடன் அரிசி மொத்த வர்த்தகம் செய்யும் பெரிய முதலாளிகள் அரிசினை பதுக்குவார்கள் என்பதற்காகத்தான் அரிசி இறக்குமதி, விலைக்கட்டுப்பாடு என இப்படி அறிவுப்புகள் வருகின்றன. ஏற்கனவே நட்டத்திலுள்ள விவசாயிகளுக்கு இறக்குமதி செய்யும் அரிசியினால் மேலும் நட்டம் ஏற்படும் ஆனால் அதே நேரம் அர்சி விலை ஏறினால் இந்த அரசிற்கு அது ஒரு அரசியல் தற்கொலையாக முடியும் இரு தலை கொள்ளி எறும்பின் நிலையில் இந்த அரசுள்ளது. ஆனால் உடனடி பிரபலத்திற்காக அரிசி இறக்குமதி அரிசி விலைக்கட்டுப்பாடு என போனால் உள்நாட்டு விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும், அதனால் நீண்டகால அடிப்படையில் பொருளாதார பாதிப்பு ஏற்படுவதனை கருத்தில் கொண்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க முற்படுவதுடன் விலை கட்டுப்பாட்டினை கொண்டு வரும் நோக்கில் மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இறக்குமதியினை மேற்கொள்ளவேண்டும். எதிர்காலத்தில் இவ்வாறு நிகழாதவாறு அரிசி களஞ்சியங்களை உருவாக்கி அதிக உற்பத்தி நிகழும் காலப்பகுதியில் ஏற்படும் விலை வீழ்ச்சியால் விவசாயிகளுக்கு நட்டம் ஏற்படாமல் அடிப்படை விலையில் அரிசியினை கொள்வனவு செய்து அதனை களஞ்சியப்படுத்தி அரிசி தட்டுப்பாட்டு காலத்தில் அதனை வினியோகிப்பதன் மூலம் விலையினை சீராக பேணுவதற்காகான அடிப்படை சந்தைப்படுத்தும் கட்டமைப்பில் அரசு மூலதன செலவீடுகளை செய்ய முன்வரவேண்டும். நீண்ட கால அடிப்படை திட்டத்துடன் அரசு செயற்பட முன் வரவேண்டும், அரசு திட்டமிட்ட முறையில் அரிசி கையிருப்பை பேணவேண்டும்.
-
ஆஸ்திரேலியா இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் தொடர் - 2024
இந்தியாவே வெல்லும் என இந்தியர்கள் கூறுகிறார்களே?
-
ஆஸ்திரேலியா இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் தொடர் - 2024
டெஸ்ட் போட்டிகளில் பயன்படுத்தும் சிகப்பு பந்தின் கட்டு வெள்ளைபந்தை விட உறுதியாக இருப்பதனால் இவ்வாறான பந்துவீச்சுகளை எதிர் கொள்ளவேண்டியிருக்கும் பந்து வீச்சாளர் பந்தின் கட்டினை பைன் லெக் திசையில் வைத்து பந்தினை வீசும் போது மணிக்கட்டினை நேராக வைத்து பிளிக் செய்வது போல் வீசும் போது இவ்வாறு நிகழும் மிக சிலரே இதனை சிறப்பாக செய்வார்கள், அத்துடன் பந்தின் கட்டினை தளம்பலாக வீசும் போது பந்து எந்த பக்கம் திரும்பும் என்பதும் கணிப்பது சிரமமாகும், இந்த பிரச்சினை 20 ஓவர் 50 ஓவர் போட்டிகளில் பயன்படுத்தும் வெள்ளை பந்தில் பெரிதாக இருக்காது.
-
ஆஸ்திரேலியா இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் தொடர் - 2024
உங்களுக்கு நகைசுவை நன்றாக வருகிறது, ஆனால் உருவக்கேலி என பிரச்சினை வரலாம், கிரிக்கெட் இந்தியா, அவுஸ்ரேலியா இரு நாடுகளும் வேறு நாடுகளிடம் உதைபட்டால் யுரியூப்பில் தொகுப்பு பார்ப்பதுண்டு, இந்த இரு நாடுகளுக்கிடையே போட்டி நடந்தால் ஆடுகளத்தில் மோசமாக நடந்து கொள்ளும் நாட்டிற்கெதிராக மற்ற அணி வெல்ல விரும்புவதுண்டு. இங்கு கிரிக்கெட்டில் அவுஸ்ரேலியர்கள் பெரிதாக கண்டு கொள்ள மாட்டார்கள் ஆனால் இந்தியர்கள் அதனைப்பற்றியே பேசிக்கொண்டிருப்பார்கள் அவர்கள் அணி தோற்றால் செத்த வீடு மாதிரி இருக்கும் வித்தியாசமான மனிதர்கள்.
-
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளை நினைவுகூருவதும் ஜேவிபியின் நினைவுகூரல்களும் ஒரே மாதிரியானவை - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் இரு முனைப்போட்டிதான், அனுர எதிர் அர்ச்சுனா.
-
ஆஸ்திரேலியா இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் தொடர் - 2024
உண்மைதான், ஆனால் இவர் ஒரு சகல துறை ஆட்டக்காரர்.
-
நாம் தமிழரும் தற்போதைய விலகல் சலசலப்புகளும்
எனக்கு இந்திய, இலங்கை அரசியலில் எல்லாம் எதுவும் தெரியாது, உலக அரசியலும் தெரியாது (ஆர்வம் இல்லை) ஆனால் இந்த அரசியல்வாதிகள் பல சந்தர்ப்பங்களில் நல்ல என்டர்டெய்மென்ட் கொடுப்பவர்களாக இருப்பார்கள்.
-
ஆஸ்திரேலியா இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் தொடர் - 2024
மார்ஸ் இனால் பந்து வீச முடியாது எனும் நிலையில் அவரின் இடத்திற்கு இவரினை மாற்றீடு செய்யப்படலாம் என ஒரு கருத்து நிலவுகிறது.
-
நாம் தமிழரும் தற்போதைய விலகல் சலசலப்புகளும்
பேச்சாளர்களாக எனக்கும் சீமானின் பேச்சு பிடிக்கும் வை கோ கூட நன்றாக பேசுவார் அனால் சீமானளவிற்கு பேசுவார் என நினைக்கவில்லை, அதிலும் குறிபாக எனக்கு பிடித்த ஆமை ஒட்டினை படகாக பயன்படுத்தின கதை நன்றாக இருந்தது, சொல்வது பொய் என தெரிந்தாலும் மக்கள் அவர் கூறுவதனை அசந்து போய் கேட்டுக்கொண்டிருப்பார்கள் அதுதான் திறமை.
-
ஆஸ்திரேலியா இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் தொடர் - 2024
இந்த போட்டியில் ரோகித் , கில் திரும்ப அணிக்குள் வருகிறார்கள் (இந்தியாவிற்கு பாதகம்😁), அவுஸில் சர்ச்சைக்குரிய பந்து வீச்சாளர் கேசல்வூட் இந்த போட்டியில் இல்லை (இந்தியாவிற்கு சாதகம்). ஆனால் போலன்ட் விளையாடுகிறார் அவர் மெல்பேர்ன் போட்டிகளில் சிறப்பாக செயல்படுபவர் (அவர் மெல்பேர்னை சேர்ந்தவர் பழங்குடி இனத்தினை சேர்ந்தவர்).
-
ஆஸ்திரேலியா இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் தொடர் - 2024
ஏராளன் குறிப்பிட்டது போல ஒரு நாள் 20 ஓவர் போட்டிகளில் பயன்படுத்தப்படும் வெள்ளை பந்து அதன் அரக்கு முதல் 10 ஓவர்களில் இழக்கப்படுவதால் பந்து காற்றில் திரும்புவது மட்டுப்படுத்தப்படும் 25 ஓவர்களுக்கு மேல் பந்து ரிவர்ஸ் சுவிங் ஆகும் என கூறுகிறார்கள், ஆனால் டெஸ்ட் போட்டியில் பயன்படுத்தும் சிவப்பு பந்து 40 ஓவர்கள் வரை அதன் அரக்கு பகுதி காக்கப்படுகிறதாக கூறுகிறார்கள், அத்துடன் பந்தின் கட்டும் உறுதியாக இருக்கும் அதனால் பந்து தரையில் பட்டு ஏற்படும் Seam movement (பந்து எந்த பக்கம் திரும்பும் என கணிப்பது) பந்து வீச்சாளருக்கு சாதகமாக இருக்கும், ஆனால் வெள்ளைப்பந்து பொதுவாக மட்டையாளருக்கு சாதகமாக இருக்கும். இரண்டும் வேறுபட்ட ஆட்டங்கள் என கருதுகிறேன். மின்னொளியில் பந்து அதிகமாக சுவிங் ஆகும் என கூறுகிறார்கள், இந்தியாவின் நிலை இலகுவாக இருக்காது. மெல்பேர்னில் நடக்கும் பொக்ஸிங் டே போட்டி ஒரு முக்கிய போட்டியாக இங்கு பார்ப்பார்கள் அதனால் அதனை அவுஸ் வெல்லவே விரும்புவார்கள் கடந்த இரு தொடர்களிலும் இந்தியாவே தொடரை வென்றுள்ளது இந்த தொடரில் சிட்னியில் நடைபெறும் போட்டியே இந்தியா வெல்லும் என முன்பு நினைத்திருந்தேன் முதல் போட்டியிலேயே இந்தியா வென்றுள்ளது ஆனால் சிட்னி மைதானம் பெரிய ஓட்டங்களை குவிக்கலக்கூடிய 3 ஆம்நாளின் பின்னர் சுழற் பந்து வீச்சாளருக்கு சாதகமான ஆடுகளை முதலில் நாணய சுழற்சியில் வெல்லும் அணி முதலில் துடுப்பெடுத்தாடினால் அந்த அணி வெல்லும், தற்போதுள்ள நிலவரத்தினை பார்த்தால் இந்தியாவினால் சுழற்பந்து வீச்சுக்கூட விளையாட முடியவில்லை, மெல்பேர் சிட்னி இரு நகர்களிலும் பெருமளவு இந்தியர்கள் உள்ளார்கள் மைதானம் நிறைந்தே காணப்படும். நன்றி ஏராளன், அவுஸ் 3:2 என இந்த தொடரை வென்று இந்த தொடரை இந்தியாவிடமிருந்து கைப்பற்றலாம் என கருதுகிறேன்.
-
ஆஸ்திரேலியா இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் தொடர் - 2024
அடுத்த போட்டி அடிலேட்டில் இளஞ்சிவப்பு (பிங்) பந்தில் விளையாட உள்ளார்கள் அதுவும் பகல் இரவு ஆட்டம், பந்து அதிகமாக சுயிங் ஆகும் இந்தியாவினால் அது போன்ற சூழ்நிலையினை கையாள முடியாது, அடுத்த போட்டி அவுஸ் வெல்வதற்கே வாய்ப்புள்ளது. நாளை மறுதினம் போட்டி நடைபெறவுள்ளது, அந்த போட்டியினை அவுஸ் வெல்லும் என கூறினாலும் இந்தியர்கள் இந்தியா இலகுவாக வென்றுவிடும் என கூறுகிறார்கள், பேர்த் போட்டியில் பெரிய ஓட்டங்களை எடுத்த ஜெஸ்வால் மிக சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழப்பார் என கருதுகிறேன், ரோகித், கோலி இருவராலும் இடது கை வேகப்பந்துவீச்சாளரான ஸ்ராக்கினை எதிர்கொள்வது கடினமாக இருக்கும், ராகுல் இந்த போட்டியிலும் திறமையாக விளையாட வாய்ப்புள்ளது, ஆனாலும் இந்த போட்டியினை இந்தியாவினால் வெல்ல முடியாது நியுசிலாந்திடம் முதல் போட்டியில் 46 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது போல இந்த மைதானத்தில் இந்தியா ஒரு சாதனையினை வைத்துள்ளதாக நினைவுள்ளது.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
தற்போதய Mark up (விலையினை அதிகரிக்கும் முயற்சி) அடுத்து அதிக விலையில் விற்கும் நிலை பின்னர் விலை வீழ்ச்சி நிலையாகும். இது குறுங்கால ஒரு மணிநேரத்திற்கான ஆயவகும, இது வரை விலை வீழ்ச்சி அடைவதற்கான அறிகுறி தென்படவில்லை, விலை 2.40 மேல் அடுத்த விலை அதிகரிப்புடன் அதிக எண்ணிக்கையுடன் காணப்பட்டால் அது ஒரு சாதகமானதாகும் அவ்வாறில்லாமல் விலை 2.00 கீழ் சென்றால் இது ஒரு போலியான முன்னேற்றமாக இருக்கலாம்.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
XRP hourly chart இதுவரை நிலவியிருந்த விலை 2.00 resistance level ஐ XRP கடந்துள்ளது அதன் விலை அதிகரிப்பினை அதன் அளவு உறுதி செய்துள்ளது, முன்னர் கூறிய 2.73 இனை எட்டுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. விலை 2.00 கீழ் கானப்பட்ட trading range ஒரு re accumulation ஆகவரையறுக்கலாம் இதனடிப்படையில் 2.70 அடையலாம் அதன்பின்னர் 2.73 முக்கிய resistance இல் விலை எவ்வாறு செயற்படுகிறது என்பதற்கு அமைவாக அடுத்த நகர்வு அமையலாம். இந்த 2.73 இனை விலை கடந்தால் மிகவும் சாதகமாகும்.
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
அவுஸ்ரேலியாவில் மற்றவர்களுக்கு பிடிக்கவில்லை என்பதற்காக தமது பாரம்பரிய கிறிஸ்மஸ் நிகழ்வினை கைவிடும் நிலை போல இலங்கையில் உள்ல மக்கள் தம்து உறவுகளை நினைவு கூறுவது சட்ட விரோதமாக உள்ளது.
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
இறந்தவர்களை அவர்கள் சம்பந்தப்பட்டவர்கள் அமைதியான முறையில் நினைவு கூறுதலில் எந்த விதமான சட்டப்பிரச்சினையும் ஏற்படப்போவதில்லை, பல இலட்சக்கணக்கான தமிழர்களை கொன்ற இலங்கை படையினரை நினைவு கூறுவதனை தமிழர்கள் எதிர்க்கவில்லை, எதிர்க்க போவதுமில்லை, அது சாதாரண மனித பண்பு ஒருவர் உயிருடன் இருக்கும் போது எவ்வலவு மோசமானவர்களாக இருந்தாலும் அவர்கள் இறந்த பின்னர் அவர்களை பற்றிய கடந்தகாலத்தினை மறந்து விடுவார்கள். ஆனால் தமிழர்கள் மட்டும் தாம் சார்ந்தவர்களை நினைவு கூறுவதற்கும் மற்றவர்களின் அனுமதியினை கோரும் நிலையில் உள்ளார்கள், அதனை தடுத்து நிறுத்துவதற்கு பல வழிகளிலும் முனையும் தரப்பிடமிருந்து நியாயம் கிடைக்கும் என நம்பும் நிலையில் நாம் இருக்கின்றோம்.
-
2015 ஆம் ஆண்டின் மைத்திரியின் அரசு மீது அன்று வைத்த அதே கண்மூடித்தனமான விசுவாசத்தை இன்று அநுர மீதும் வைத்திருக்கிறார்களா தமிழர்கள்?
- 2015 ஆம் ஆண்டின் மைத்திரியின் அரசு மீது அன்று வைத்த அதே கண்மூடித்தனமான விசுவாசத்தை இன்று அநுர மீதும் வைத்திருக்கிறார்களா தமிழர்கள்?
அனுர அரசினை இனவாதம் பேசாமல் ஆட்சிக்கு வந்த அரசு என சிறுபான்மையினரால் பார்க்கப்படும் அரசு, அதே சிறுபான்மையினரின் உரிமைகள், போர் குற்ற நீதி, சமூக நீதி என வரும் போது அப்போதும் இதே நிலை எடுத்தால் அனுர அரசு தனது முழு பதவிக்காலத்தினை மட்டுமல்ல இனி வரும் தேர்தல்களையும் எவ்வாறு எதிர் கொள்ளமுடியும் என தெரியவில்லை, மக்கள் திருட்டு பூனை கண்ணை மூடி பாலை குடிப்பது போல இருக்க விரும்புவது யதார்த்தத்தினை எதிர்கொள்ள விரும்பாத நிலை அல்லது ஒரு நப்பாசை அவர்களுக்கு முழுமையான ஆட்சி காலத்தினை முடிக்கும் வரை இலவு காத்த கிளியாக இருக்க விரும்புவதற்கு தயாரக இருப்பதற்கு தடையாக அனுர அரசின் மீது உள்ள குறைபாடுகளை கூறுபவர்களை மூர்க்கமாக எதிர்க்க முற்படும் இந்த வகை தீக்கோழி ஆபத்து வரும் போது மணலுக்குள் தலையினை புதைப்பது போன்ற ஒரு வகை நடவடிக்கையாகும். ஆனால் அனுர அரசிற்கு இவ்வாறான எந்த நெருக்குதலும் இல்லை, அவர்கல் தமது நிலைப்பாட்டை தேர்தலுக்கு முன்ன்னமே தெளிவாக கூறிவிட்டார்கள். - 2015 ஆம் ஆண்டின் மைத்திரியின் அரசு மீது அன்று வைத்த அதே கண்மூடித்தனமான விசுவாசத்தை இன்று அநுர மீதும் வைத்திருக்கிறார்களா தமிழர்கள்?
Important Information
By using this site, you agree to our Terms of Use.