vasee
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
Everything posted by vasee
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
படம் இந்த தொடரில் அதிக தொலைவு பயணம் செய்த அணியாக நியுசிலாந்தும் அதன் பாதி அளவில் தூரம் பயணம் செய்த அணியாக தென்னாபிரிக்காவும் உள்ளது. மற்ற அணிகளை விட (இந்தியா தவிர்த்து) நியுசிலாந்து அணி இந்த ஆடுகளத்தில் இரண்டாம் தடவையாக விளையாட உள்ளததால் முதல் முறை ஆடுகளத்தின் அனுபவம் இந்த இரண்டாம் முறை அவர்களுக்கு ஆடுகளம் பற்றிய புரிதலை கொடுக்கும். இரு அணிகளும் தமது அணியினை மாற்றாமல் இறுதிப்போட்டியில் ஈடுபடும். இந்திய அவுஸ்ரேலிய போட்டியில் வருணை எதிர்கொள்ள அவுஸ்ரேலியா ஒரு திட்டத்துடன் களமிறங்கியதாக கருதுகிறேன், அவரது அளவினை குறைக்கும் முயற்சியில் ஆரம்பத்திலேயே ஈடுபட்டார்கள், கெட் பந்தை தவறாக கணித்து கூக்ளியில் ஆட்டமிழந்தாலும் அவுஸ்ரேலியர்கள் வருணின் அளவினை குறைக்கும் முயற்சியில் ஓரளவு வெற்றி பெற்றார்கள் என கருதுகிறேன். அதன் மூலம் பின் காலில் சென்று பந்தை கணித்து விளையாட வழியினை உருவாக்கினார்கள், அதன் மூலம் வருணின் ஆதிக்கத்தினை குறைத்தார்கள். நியுசிலாந்தும் மிக சிறப்பாக முந்தயாரிப்பில் ஈடுபடும் அணி. முதல் 10 ஓவருக்குள் 3 விக்கெட்டுக்களை எடுத்து இந்தியணியினை நெருக்கடிக்குள்ளாக்கும் திட்டத்துடன் வருவார்கள், முதல் போட்டியில் செய்தது போல பந்து வீச்சினை தெரிவு செய்யாமல் துட்ப்பாட்டத்தினை நாணய சுழற்சியில் வென்று தேர்வு செய்யும் என எதிர்பார்க்கிறேன். இந்தியணியின் கான்ட் பிரேக் ரையோவிற்கு புதிய பந்தில் பந்து உயிர்ப்புடனிருந்தால் அவர்களை வெளியேற்றுவதுதான் நியுசிலாந்தின் திட்டமாக இருக்கும். நியுசிலாந்தின் துடுப்பாட்டத்திற்கு வில்லியம்சனே முக்கியமான நபராக இருப்பார், அவரை மையமாக வைத்தே நியுசிலாந்து அணி விளையாடுவதால் இந்தியணி வில்லியம்சனை அவுட்டாக்கினால் நியுசிலாந்து மாற்று தெரிவாக லதம் இருக்க வேண்டும். வெல்லப்போகும் அணியான நியுசிலாந்து அணிக்கு முன் கூட்டிய வாழ்த்துக்கள்.🤣
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
https://img1.hscicdn.com/image/upload/f_auto,t_ds_w_1280,q_70/lsci/db/PICTURES/CMS/72000/72095.3.gif 13 மார்ச் 1996 இல் ஈடன் காடன் மைதானத்தில் இந்திய இரசிகர்கள் இந்தியாவின் தோல்வியினை தாங்காது கலவரத்தில் ஈடுபட்டனர், 09 மார்ச் 2025 இல் இந்திய இரசிகர்கள் மீண்டும் ஒரு கலவரத்தில் இறங்கலாம். 🤣
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
பையன் கற்பூரத்திலை அடிச்சு சத்தியம் செய்யிறமாதிரி சொல்கிறார், இந்தியா வெல்லும் என அதனால் பிரச்சினை வராது ஆனால் இந்தியா தோற்கட்டும் இருக்கு களோபரம். இந்திய இரசிகர்கள் ஈடன் காடனில் செய்தமாதிரி யாழில் கலவரம் செய்ய வாய்ப்புள்ளது.🤣 பல இந்திய இரசிகர்களுக்கு இந்த வார இறுதியில் இருதய நோய் வர வாய்ப்புள்ளது, நீங்கள் புள்ளிகளை பற்றி கவலைப்படுகிறீர்கள்.🤣
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
கிருபன்! இறுதிப்போட்டியில் இந்தியாவும் நியுசிலாந்து விளையாட உள்ளது, ஒருவரும் நியுசிலாந்து வெல்லும் என தெரிவு செய்யவில்லை எனும் பட்சத்தில் இறுதி போட்டியில் நியுசிலாந்து வென்றால் இந்தியா இறுதி போட்டியில் வெல்லும் என தெரிவு செய்தவர்கள் தவிர்த்து மற்றவர்களுக்கு வெற்றிப்புள்ளியினை வழங்கமுடியுமா?🤣
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
உங்கள் தெரிவில் தவறேதும் இல்லை. இல்லை! நாங்கள் கடைசி திருப்பத்தினை எதிர்பார்த்து வழி மேல் விழி வைத்து காத்திருக்கிறோம் (இந்தியாவின் தோல்வி).
-
அமெரிக்காவில் ஸெலன்ஸ்கி நடத்தப்பட்ட விதம் இந்தியாவுக்கு சொல்லும் சேதி என்ன?
போரை தொடர்ந்து நடாத்த மிக பெரிய பொருளாதாரம் வேண்டும் உலகெங்கும் போரை ஒரே நேரத்தில் நடத்த அமெரிக்க பொருளாதாரம் தயாரக இல்லை என்பதனைவிட வலுவாக இல்லை எனவே கொள்ளலாம். அமெரிக்காவின் நலனை பேண போரை நடாத்துவதனை விட அதனை தவிர்ப்பதே தற்போதய அமெரிக்க பொருளாதாரத்திற்கு சாதகம், அமெரிக்க நலனே போர் மூலமோ அல்லது போர் அற்ற சூழ்நிலையிலோ முதன்மைப்படுத்தப்படுகின்றது என்ற புரிதல் இல்லாத நாடுகளின் தலைவர்கள் தம் மக்களை அமெரிக்காவினை நம்பி நடுத்தெருவில் கொண்டு வந்து நிறுத்தி வைத்துள்ள நிலை முன்னரும் நிகழ்ந்துள்ளது இதற்கு அமெரிக்கா மட்டுமல்ல அனைத்து வல்லரசுகளும் ஒரே மாதிரியான நலனடிப்படையிலேயே இயங்குகின்றன. நாங்கள் ஐரோப்பாவினை காப்பாற்றுகிறோம் என கூறுவதன் மூலம் உக்கிரேன் தனது போரிற்கான ஆதரவை தொடர்ந்து பெற முயல்கிறது, ஐரோப்பிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியம் என்பவற்றுக்கிடையேயான அதிகார போட்டிக்கு உக்கிரேன் ஒரு பகடை காயாக பயன்படுத்தப்படுகின்றது என்ற புரிதல் இல்லாமல் இருக்கும் தலைவராக ஜெலென்ஸ்கி இருப்பார் என நினைக்கவில்லை. ஆனால் பிரசெல்ஸிற்கும் அமெரிக்க அரசிற்குமிடையேயான திரை மறைவு போர் வெகுவிரைவில் முடிவுக்கு வரும் போது உக்கிரேன் போர் முடிவிற்கு வந்துவிட்டிருக்கும் இதில் வெற்றியாளராக அமெரிக்காவே இருக்கும், போரிட்ட நாடுகள் அல்ல. இங்கு இரஸ்சியாவும் உக்கிரேனும் பகடை காயாக பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள், ஆனால் போரினால் நேரடி பாதிப்பு இந்த இரு தரப்பிற்கும்தான்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இலங்கை பிரிமியர் லீக் போட்டிகளும் உள்ளனவா?
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இந்தியாவே வெல்லும் என எல்லோரும் சொன்னால் ஒரு சுவாரசியம் இருக்காதல்லவா?🤣 ஆனால் நான் கூறியது நடந்தால் அதனை பற்றி நான் எப்போதும் சிலாகிப்பதில்லை.🤣
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இது கொஞ்சம் ஓவர்.🤣 நடைமுறை யதார்த்தத்தினை புரியாதவர்கள், விடயங்களை இயல்புநிலைக்கு வெளியே தமது விருப்பு வெறுப்புகளோடு இணைத்து கஸ்ரப்படுவது, நான் இந்தியா தோற்க வேண்டும் என நடைமுறை இல்லாத விடயத்தினை விரும்புவது போல. ஆனால் விருப்பம் வேறு யதார்த்தம் வேறு, அதனை புரிந்து கொண்டால் பிரச்சினை இல்லை.🤣
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
எல்லாம் ஒரு நிகழ்தகவுதானே! நாணய சுழற்சியில் நாம் எதிர்பார்த்த தெரிவு வராவிட்டால் கண்டு கொள்வதில்லை, ஆனால் மற்ற விடயங்களில் அவ்வாறு நிகழும் போது அதனை சீரியசாக எடுத்து கொள்கிறோம் என கருதுகிறேன். ஒரு விடயத்தினை எவ்வாறு பார்க்கிறோம் என்பதில்தான் விடயமே இருக்கிறது.🤣
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
நிச்சயமாக! முழுமையாக இல்லாவிட்டாலும் பகுதி பகுதியாக பார்க்க வாய்ப்புள்ளது.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
நேற்றைய போட்டியில் வென்ற இந்தியாவிற்கு வாழ்த்துக்கள், இன்றைய போட்டி இரண்டு சிறந்த அணிகளுக்கிடியேயான போட்டி, எனது கணிப்ப்பு நியுசிலாந்து இன்றைய போட்டியில் வென்று இறுதிப்போட்டியில் இந்தியாவினை வீழ்த்தும்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
264 / 10 அவுஸ்ரேலியா, ஆடுகளம் 280 உரிய ஆடுகளம் என கூறுகிறார்கள் அவுஸ்ரேலியா விரைவாக விக்கெட்டுக்களை இழ்ந்ததால் 300 ஓட்ட்டங்களை எடுக்க கூடும் எனும் நிலையில் இருந்து 265 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து விட்டது, அவுஸ்ரேலிய இரண்டாந்தர பந்து வீச்சில் இந்தியா இந்த இலக்கினை 48 ஓவர்களில் எட்டி விடும்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
நீங்கள் புள்ளிகள் போய்விட்டது என கவலைப்படுகிறீர்கள் அங்கு ஒருவருக்கு பதவி போய்விட்டது.🤣
-
'ஐரோப்பாவை பாதுகாக்க தலைமுறைக்கான வாய்ப்பு' யுக்ரேன் குறித்த உச்சி மாநாட்டில் பிரிட்டன் பிரதமர் பேசியது என்ன?
இது முன்னமே யாழில் கூறப்பட்ட விடயம், அமெரிக்க புதிய அதிபர் ஐரோப்பிய ஒன்றியத்தினை பலவீனப்படுத்தி தனியே ஐரோப்பிய நாடுகளுடன் தனது உறவை வளர்க்க முற்படுகிறார், அது அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அவசியமான ஒன்று. பிரசெல்ஸின் நீண்ட நாளைய திட்டமான United States of Europe திட்டத்தின் மூலம் அதிகரித்த அதிகாரத்தினை கைப்பற்றும் முயற்சிக்கு உக்கிரேன் போரை ஒரு துருப்பு சீட்டாக பயன்படுத்தி வந்திருந்தது, இதில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே தன்னிச்சையாக தமது பாதுகாப்பு செலவின அதிகரிப்பு என விலகி நிற்கும் நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு நீண்ட நாள் தலையிடியாக இருந்து வந்துள்ள நிலையில் தற்போதய பூகோள அரசியல் சூழ்நிலை அவர்களுக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தினை கொடுத்திருக்கின்றது. இதனை முன்னரே எதிர்பார்த்து காத்திருந்த பிரித்தானியாவும் பிரான்ஸும் ஐரோப்பிய ஒன்றியத்தினை புறந்தள்ளி இதனை தமது பொருளாதார நலனுக்கு பாவிக்கும் முயற்சியில் பிரித்தானியா வெற்றி பெற்றுள்ளது என கருதுகிறேன். பிரசெல்ஸினை பின் தள்ளி பிரித்தானியா ஒரு அமைதி உடன்பாட்டினை உருவாக்கி அதில் அமெரிக்காவினை இணைத்தால் Marshal plan 2.0 இனை உருவாக்கி அதன் மூலம் பிரித்தானியாவினை மீண்டும் பொருளாதார ரீதியாக கட்டியெழுப்புவதனூடாக அதிகாரமிக்க நாடாக முடியும் என கருதுகிறது. பிரான்ஸ் எப்படியேனும் இதில் குறிப்பிட்ட நலனை பெற முயற்சிக்கிறது, பிரான்ஸ் தனியாக உக்கிரேனை கட்டியெழுப்ப ஐரோப்பிய நாடுகளில் உள்ள இரஸ்சிய பணத்தினை கையாள்வது பற்றி அண்மைய ட்ரம்ப் சந்திப்பில் நடத்தப்பட்ட பத்கிரிகையாளர் மானாட்டில் கோடி காட்டியிருந்தார், ஆனால் இவ்வாறான நிலைகளை அமெரிக்காவின் உதவியில்லாமல் செய்ய முடியாது என்பதால் பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் இரு நாடுகளும் அமெரிக்காவின் அனுசரணையினை கோருகின்றனர், இதில் யார் வெல்வார்கள் என பார்க்கலாம், அமெரிக்காவிற்கு தேவை பிரசெல்ஸின் அதிகாரத்தினை இல்லாதொழிப்பது. அமெரிக்கா எள் என்பதற்கு எண்ணெயாக யார் இருக்கிறார்களோ அவர்களே இதன் மூலம் பலன் பெறப்போகிறார்கள், ஆனால் பிரித்தானியா ஏற்கனவே பிரான்ஸினை விட பல படிகள் மேலே சென்று விட்டது. உருசுலாவின் இந்த நிகழ்வில் ஐரோப்பிய நாடுகளை கடிவாளம் போடும் முயற்சி பலிக்கவில்லை.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இந்தியா பந்து வீச்சிலும் துடுப்பாட்டத்திலும் சிறப்பாகவே உள்ளது, அதனை ஒரு போதும் மறுக்கவும் இல்லை அத்துடன் அவுஸ்ரேலியாவினை விட சிறந்த அணியாக இந்தியா உள்ளதனை ஒரு போதும் மறுக்கவில்லை.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
பொதுவாக கூக்ளி வீசும் போது துடுப்பாட்டக்காரருக்கு மிக தெளிவாக கையின் பின் பக்கம் தெரியும் அதன் மூலம் பந்து உள்ளே வரும் என எதிர்பார்ப்பார்கள், வருணின் லெக் ஸ்பின்னும் கூக்ளி வடிவத்திலேயே இருக்கிறது, குல்டீபின் கூக்ளியினை கணிப்பதும் கடினமாக இருக்கும் பந்தை விடுவிக்கும் போது ஏற்படுத்தும் மாற்றமே அந்த வேறுபாட்டினை வெளிப்படுத்துகிறது இதற்கு பந்து வீச்சு பகுதியில் நிற்கும் சக ஆட்டக்காரர் இந்த வேறுபாடுகளை அவதானிக்கலாம் அவர்கள் துடுப்பாட்டக்காரருக்கு சைகை செய்யலாம்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
அவுஸ்ரேலியா இரண்டு டிக்கெட் போட்டு வைத்திருப்பார்கள் ஆனால் இந்தியாவிற்கு ஒரு டிக்கட்தான்.🤣
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
நீங்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள், நான் குல்டீபை புகழவில்லை, சுழல் பந்து வீச்சில் உள்ள விடயங்களையே கூறி எதற்காக இந்தியணி வருணிற்கு மேலாக குல்தீப்பினை எடுக்கிறார்கள் என குறிப்பிட்டிருந்தேன். இப்போது கூட இந்த ஆடுகளம் நியுசிலாந்து ஆடுகளம் அளவிற்கு பந்து வீச்சிற்கு ஏற்ற வகையில் இல்லை என கருதி ஒருவரை அணியில் இருந்து நீக்க விரும்பி (சுழல் பந்து வீச்சில்) பட்சத்தில் இந்திய தெரிவுக்குழு வருணை நிக்க முயல்வார்கள். எப்போதும் அணித்தேர்வில் ஆடுகளம் எதிரணி என்பவற்றை கருத்தில் கொண்டு முடிவெடுப்பார்கள், தற்போது வருனை நீக்க மாட்டார்கள் என நம்புகிறேன் ஆனால் ஆடுகள நிலையினை பார்த்து நீக்கினால் ஆச்சரியமுமிருக்காது. அவுஸ்ரேலியா 320 மேல் ஓட்டங்களை எடுக்க வேண்டுமாயின் கெட் ஒரு நல்ல தொடக்கம் கொடுக்க வேண்டும் (அவுஸ் 280 ஓட்டங்களையே எடுக்குமோ தெரியவில்லை). ஆனால் இந்த ஆடுகளம் நியுசிலாந்து ஆடுகளத்தினை விட துடுப்பாட்டத்திற்கு சாதகம் என கூறுகிறார்கள்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இந்த ஆடுகளம் நியுசிலாந்துடன் ஆடிய ஆடுகளம் போலல்லாது துடுப்பாட்டத்திற்கு சாதகமானது, அவுஸ்ரேலிய பந்து வீச்சாளர்கள் நியுசிலாந்து பந்து வீச்சாளர்கள் அளவிற்கு சிறப்பாக பந்து வீசமாட்டார்கள் அதனால் வாய்ப்பு இருக்கலாம், இந்தியாவினுடனான போட்டியில் அவுஸின் பலம் துடுப்பாட்டம் எனவே அதிக ஒட்டங்களை முதலில் துடுப்பெடுத்தாடினால் அவுஸ் இலக்கு வைக்கலாம் 280 மேலாகவே. இந்தியா பலமான அணி என்பதில் எந்த வித கருத்து வேறுபாடும் இல்லை, ஆனால் அவுஸ்ரேலிய அணியினை இலகுவாக வென்றுவிடலாம் என கருதவில்லை, அவுஸ்ரேலியா சிறப்பாக விளையாடினால் இந்த பலவீனமான அவுஸ்ரேலிய அணி இந்தியாவினை வெல்ல முடியும், பார்ப்போம் என்ன நடக்கிறது என. இந்தியணியின் ஆரம்ப ஆட்டக்காரர்கள் சொதப்பினாலும் நடுவரிசை சிறப்பாக கையாழும், அதனால் இந்தியணிக்கு துடுப்பாட்டம் பிரச்சினையாக இருக்காது, அவுஸ்ரேலியா மிக பெரிய ஓட்டத்தினை குவித்து அதன் மூலம் அழுத்தம் ஏற்படுத்த முயற்சிக்கலாம். அத்துடன் இடது கை வேகப்பந்து வீச்சாளர்களை கண்டாலேயே இந்திய தொடக்க வரிசைக்கு ஒவ்வாமை வருவதுண்டு, அவுஸில் இரண்டு தொடக்க பந்து வீச்சாளர்களும் இடது கை வேக பந்து வீச்சாளர்கள்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
96 உலக கோப்பையில் அவுஸ்ரேலிய அணி தலைசிறந்த அணியாக இருந்தது, இறுதி போட்டியின் முன்னர் வெற்றி கோப்பையுடன் புகைப்படம் எடுக்கும் நிகழ்வில் இலங்கை அணியினை பார்த்து அவுஸ்ரேலிய அணியினர் கேட்டனாராம் நிங்கள் வெற்றிக்கோப்பையுடம் படம் எடுக்கவில்லையா என அதற்கு இலங்கை அணியின் தலைவர் கூறினாராம் நாங்கள் எமது நாட்டில் கொண்டு போய் படம் எடுத்து கொள்கிறோம் என. நிலமை தற்போது இந்தியணி அவுஸ்ரேலிய அணி போலவும் அவுஸ்ரேலிய அணி பலவீனமான இலங்கை அணி போலவும் உள்ளது, போட்டியின் முடிவுகள் எப்படியும் இருக்கலாம், குறித்த நாளில் சிறப்பாக விளையாடும் அணியே வெல்லும்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
கோனலி 3 ஒரு நாள் போட்டியில் விளையாடி சராசரியாக 4 ஓட்டங்களை பெற்றுள்ளார், அதிக பட்ச ஓட்டங்களாக 7 ஓட்டங்களை பெற்றுள்ளார்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
கூப்பர் கோனலியினை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கலாம், ஆனால் கடினமான பந்தில் இலகுவாக எடுக்க கூடிய ஓட்டங்களை அவர் தவறவிடுபவர் என கருதுகிறேன் அதனால் இங்கிலிஸ் இனையே தொடக்க ஆட்டக்காரராக களமிறக்க அதிக வாய்புள்ளது. இந்த ஆடுகளத்தில் சுழல் பந்து வீச்சாளர்களின் சராசரி ஓட்ட விகிதம் ஓவருக்கு 4.8 அதாவது வெற்றி இலக்கான 250 (ஓவருக்கு 5) இனை விட குறைவாக உள்ளது, அவுஸ்ரேலிய அணியின் மத்திய தர வரிசை மிக மெதுவாக ஒட்டம் சேர்க்கும் வரிசையாக உள்ளது அதனால் ஆரம்ப ஓவர்களில் சரியான துவக்கத்தினை அவுஸ்ரேலிய தொடக்க வீரர்கள் கொடுக்க வேண்டும் அல்லது இங்கிலிஸினை மத்திய தரவரிசையில் வைத்துக்கொண்டு கொனலியினை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்க வேண்டும். இந்தியா இந்த போட்டியிலும் 4 சுழல் பந்து வீச்சாளர்களுடன் களமிறங்குவார்கள் என செம்பாட்டான் கணித்துள்ளார். கெட் மற்றும் இங்கிலிஸினை தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறக்கி அவுஸ்ரேலிய அணி எதிர்பார்க்கும் சிறந்த தொடக்கத்தினை கொடுக்க முடியாமல் ஆரம்பத்திலேயே விக்கெட்டினை இழந்தால் அது அவுஸ்ரேலிய அணியின் நடுவரிசையில் அதிக நெருக்கடியினை கொடுக்கும், அதனால் கோனலியினை ஆரம்ப ஆட்டக்காரராக இறக்கலாம் என கருதுகிறேன்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
குறித்த ஆடுகளத்தில் ஒரு வாரத்திற்கு முன்னரே ஒரு போட்டி நடைபெற்றுள்ளது அதில் 240 இலக்கினை இந்தியணி 45 ஓவர்களில் விரட்டி இருந்தது (280 ஓட்ட ஆடுகளம் என கருதுகிறேன்), ஏற்கனவே ஒரு வாரத்திற்கு முன்னர் போட்டி இடம்பெற்றதால் ஆடுகளம் மேலும் மெதுவாகியிருக்கலாம் அதனால் 260 ஓட்டங்கள் வெற்றிக்குரிய இலக்காக இருக்கலாம் (எனது கருத்து தவறாக இருக்கலாம்). அவுஸ்ரேலிய அணி 250 எடுத்தாலே வெற்றி பெறக்கூடும் என கருதுகிறேன் (சிறப்பான களத்தடுப்பு).
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
அவுஸ்ரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரரான மட் சோர்ட் காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகி விட்டார் அவருக்கு பதிலாக கூப்பர் கோனலி அணிக்குள் வருகிறார், அதனால் கெட்டுடன் இங்கிலிஸ் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வாய்ப்புள்ளது. கோனலி சகலதுறை ஆட்டக்காரர், இடது கை சுழல் பந்து வீச்சாளர். அரையிறுதி போட்டி பாகிஸ்தான் இந்திய அணி ஆடிய ஆடுகளம் (பிட்ச்), போட்டியன்று இரவு ஈரலிப்பு காணப்படாது என்பதால் அணிகள் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாட விரும்பும் என கருதப்படுகிறது. இதனிடையே இன்னொரு மணிக்கட்டு பந்து வீச்சாளரான தன்வீர் சங்கா அவுஸ்ரேலியாவிற்காக களமிறக்கப்படலாம் என கருதப்படுகிறது, ஆனால் ஏற்கனவே அடம் சம்பா ஒரு லெக் சுழல்பந்து வீச்சாளராக உள்ளார் அத்துடன் கோனலியின் இடது கை பந்து வீச்சுள்ளது இந்த நிலையில் அவுஸ்ரேலியா ஒரு வேக பந்து வீச்சாளரை எடுத்து விட்டு அந்த இடத்தில் சங்காவினை கொண்டு வருவார்களா என தெரியவில்லை, அவ்வாறு கொண்டு வருவதாயின் ஸ்பென்சர் ஜோன்சனையே மேசையில் உக்கார வைப்பார்கள் என கருதுகிறேன் (ஜோன்சனும் சங்காவும் 11 வது துடுப்பாட்டக்காரர்கள்), ஆனால் சங்காவினை கொண்டு வருவது ஒரு மோசமான தெரிவல்ல ஏனெனில் இந்தியணி வலது கை ஆட்டக்காரர்களை அதிகம் கொண்ட அணி.