Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

vasee

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by vasee

  1. அவர் ஒரு உண்மையான அரசியல்வாதி😁.
  2. உண்மையில் இதுவரை இருந்த அரசியல்கட்சிகள், அரசியல்தலைவர்கள் போல செயற்படாமல் மக்கள் நன்மையின கருதிற்கொண்டு செயற்பட்டால் நன்று, அதே போல் சிறுபான்மை மக்களின் பிரச்சினையிலும் பழைய அரசியல்வாதிகள் போல பேரினவாத கொள்கையினை கடைப்பிடிக்காமல் மக்களுக்கான அனைத்து சம உரிமைகளும் சிறுபான்மை மக்களுக்கும் கிடைப்பதனை உறுதி செய்தால் நல்லது.
  3. அப்படி உள்ளே போனால் அந்த இடத்தில் கட்சி வேறு யாரையும் நியமிக்கலாம் என நினைக்கிறேன், அதனால் சும்மிற்கு இன்னும் வாய்புகள் இருக்கு ஆனால் அவரும் அதற்கு உள்ளே போகாமலிருக்கவேண்டும் (அதுவும் கொஞ்சம் கஸ்டம்தான்😁) அனைத்தும் ரசோதரன் கையில் உள்ளது😁.
  4. சில வேள சிறிக்கு அதிர்ஸ்டம் இருந்தால் பதவியில் இருக்கும்போதே ஊழலுக்காக சிறை செல்லும் வாய்ப்பு கிடைக்கலாம்.
  5. ஆனால் ஊழல் செய்யமாட்டார்கள் என நம்புவோம், நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமாயின் ஊழலுக்கு எதிராக கடும் நிலைப்பாடு எடுக்கவேண்டும் அதில் எமது தமிழ் அரசியல்வாதிகளின் மேலும் நடவடிக்கை எடுக்கவேண்டும். ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள மக்களை ஒரு புறம் இந்திய மீனவர்களும் மறுபுறம் எமது தமிழ் அரசியல்வாதிகளின் ஊழலாலும் பாதிக்கப்பட்ட நிலை மாறவேண்டும்.
  6. எனது அபிப்பிராயத்தில் சுமந்திரன் கூட இதன் தாற்பரியத்தினை புரிந்திருக்கவில்லை என நினைக்கிறேன், ஆரம்பத்தில் அனுரவிற்கு ஆதரவான கருத்தினை தெரிவித்திருந்ததாக நினைவுள்ளது, அது தனிப்பட்ட ரீதியில் அனைத்து தமிழ் அரசியல்வாதிகளையும் பாதிக்கும் என்பதனை அறியாத நிலையில் அல்லது குறைவாக மதிப்பிட்டிருக்கலாம், பின்னர் அனுரவை தீவிரமாக எதிர்க்க ஆரம்பித்ததன் நோக்கம் அது தற்போதய அனைத்து தமிழ் அரசியல்வாதிகளின் (சுமந்திரன் உட்பட) அரசியல் வாழ்க்கை முற்றுப்புள்ளியாகிவிடும் எனும் பயத்தில். இந்த அரசியல்வாதிகள் அனைவரும் வீட்டுக்கு போகவேண்டியவர்களே, ஆனால் தமிழ் மக்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகளை பேசக்கூட முடியாத நிலையினை புதிய சட்டமைப்பு மூலம் தமிழ் மக்களிற்கான நிரந்தர நீதி மறுப்பாக இந்த கட்சி உருவெடுக்குமோ எனும் பயமே தற்போது உள்ளதால், சுமந்திரன், சிறி போன்றவர்களை பற்றி கவலைப்படுவதனைவிட மக்களை பற்றி கவலைப்படவேண்டியதுதான். இவர்கள் தேர்தலில் வெல்வதாலும் எந்த மாற்றமும் ஏற்படபோவதில்லை ஆனால் மக்களின் பணம் பாதுகாக்கப்படும் நிலையே காணப்படுவதால் அனைத்து வழிகளிலும் நன்மைதான் இவர்கள் தோற்பது. ஆளும் கட்சியுடன் இனைந்து பயணிக்கும் தமிழ் அரசியல்வாதிகளாவது ஊழல் பாரம்பரியத்திலிருந்து விலகி மக்களுக்கு உதவி செய்யட்டும்.
  7. இதுதான் தற்போதய ட்ரென்ட் ஆக இருக்குமோ? கமலா காரிஸின் cloud storage விளக்கம்.
  8. பொதுவாக சில மாற்றங்கல் உலகெங்கும் ஏற்பட்டுள்ளது அது இந்த இரண்டு பிரதான கட்சி ஆதிக்கங்கள் இருந்து மூன்றாவதாக புதிய சக்தி உருவாகுதல். இந்த நிலை மாற்றம் இலங்கையில் மட்டுமல்ல மேற்கு நாடுகளிலும் நிகழுகிறது, இந்த புதிய மாற்றம் உலக போக்கில் இப்போதய அம்சமாக இருக்கலாம். எமது அரசியல்வாதிகள் நான் கேள்விப்பட்ட வரை ஊழல்கள்தான் செய்தார்கள் மக்களுக்கு சேவை செய்யவேண்டியவர்கள் தங்களுக்கு சேவை செய்தார்கள், அவர்களை அடித்து துரத்தாமல் விட்டளவில் அவர்கள் சந்தோசப்பட வேண்டியதுதான்.
  9. சும்மா விளையாட்டாக கூறினேன் ஆனாலும் ஒரு பயம்தான், ஏற்கனவே எமது மக்கள் சர்வாதிகார அடக்குமுறைக்குள்தான் இருக்கிறார்கள் இன்னும் நிலமை மோசமாகிவிடுமோ எனும் பயம்தான். எனக்கு புரிகிறது😁, நான் ரஸ்சியா சீனாவிற்கு ஆதரவு தெரிவிப்பவன் எனும் நிலைப்பாட்டை குறிப்பிட்டுக்காட்டுகிறீர்கள் என, ஆனால் சில வேளை எமது மக்கள் இதனால் மோசமாக பாதிக்கப்படுவார்களோ எனும் பயம்.
  10. நான் நினைக்கிறேன் இது அனுர அலை அல்ல, உலக மாற்றத்தின் நிழல் இலங்கையிலும் தொடர்கிறதோ😁 ரஸ்சியா, சீனா, இந்தியா போன்ற முன்னால் இடது சாரிகளின் புதிய வேடம் சர்வாதிகார முதலாளித்துவம் (Authoritarian Capitalism) 2/3 அறுதிப்பெரும்பான்மை கிடைத்தால் இலங்கையில் அரசியல் சட்டம், சட்டம் என்பவை இந்த சர்வாதிகார முதலாளித்துவத்தினை நோக்கி இரஸ்சியா, சீனா போல பயணிக்கலாம். உலகம் பலதுருவ மாற்றத்திற்கு தாயாராகி வருவதன் முதல் அறிகுறி? இந்த பல துருவ உலக அரசியலின் செல்வாக்காக இலங்கை உள்ளதோ😁.
  11. நீங்கள் சிரிப்பு குறி இட்டிருந்தாலும் நான் உங்கள் மனதை நோகடித்துவிட்டேனோ என கருதுகிறேன், எனது கருத்துக்கள் வெறும் வெட்டியான கருத்துக்கள் அதன் மூலம் சில வேளைகளில் என்னையறியாமலே மற்றவர்களை காயப்படுத்திவிடுகிறேன் என கருதுகிறேன், அதற்காக வருந்துகிறேன் அனைவருடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
  12. அட நீங்களுமா? கொஞ்சம் விபரமான ஆளாக இருப்பீர்கள் என எதிர்பார்த்தேன்😁. இது ஒரு எதிர்மறை உளவியல், அனுரவின் அரசியல் பிரமுகர்களின் தலையீட்டால் நியாயம் கிடைத்தது என கருதுபவர்களிற்கான பதில், கடந்த காலத்தில் கூட அதிகார வர்க்கத்திற்கும், பாதுகாப்பு தரப்பிற்குமிடையேயான உறவு நிலவி வந்துள்ளது, மக்களுக்கு இலகுவாக நியாயம் கிடைக்கு நிலையில் தற்போதய அரசு இயந்திரம் இல்லை, இதற்காகவே பயங்கறவாத தடை சட்டத்தினை நீக்குவதற்கு இந்த அரசு விரும்பவில்லை, இந்த பயங்கரவாத தடை சட்டமே பாதுகாப்பு தரப்பிற்கு அதிக அதிகாரங்களை வழங்கி பல மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுக்கிறது அதே சட்டம் மூலம் அதிகாரத்தில் இருப்பவர்கள் தாம் விரும்பியதை நிறைவேற்றும் அதிகாரத்தினை வழங்குகிறது. சம சமூக நீதி என கூறும் இந்த அரசுக்கும் கடந்த காலத்தில் இருந்த அரசுக்களுக்கும் எந்த வித்தியாசமில்லை.
  13. மோட்டார் சைகிளில் வந்தவர்களின் மேல் மட்டும் தவறு இல்லை, வானினை ஒட்டின இவர்களிலும் தவறுள்ளது, முந்தும் மோட்டார் சைகிளை வான் இடித்துள்ளது எனும் பட்சத்தில் இரு தரப்பிலும் தவறு இருக்கலாம், அதனால் காவல்துறையினர் வாகன சாரதியின் வாகன சாரதி பத்திரத்தினை கோரி உள்ளார்கள் ஆனால் அதனை கொடுக்காமல் காவல் துறையினரின் செயற்பாட்டிற்கு இடையூறு செய்துள்ளார்கள் இது கூட சட்டப்படி குற்றம், இந்த நிகழ்வில் மோட்டார் வாகன சாரதி (குடித்துவிட்டு ஓடியதாக அது பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டால்), மற்றும் வான் சாரதி விபத்தினை உருவாக்கியது, விசாரணைக்கு ஒத்துழையாமை என இரண்டு குற்றங்கள் செய்துள்ளனர், காவல்துறை வன்முறையில் ஈடுபட்டு அதன் பங்கிற்கு தவறிழைத்துள்ளது ஆனால் வான் சாரதியே அதிகமாக தவறிழைத்துள்ளார் (அவர்களிடம் வாகன சாரதி அனுமதிப்பத்திரம் இருந்த்திருக்காதோ என சந்தேகமாக உள்ளது அவ்வாறாயின் அது மேலும் ஒரு தவறாகும்). இவ்வளவு தவறுகளையும் செய்துவிட்டு காவல்துறை மேல் குற்றம் கூறுவதன் மூலம் தம்மை பாதிக்கப்பட்டவர்களாக காட்டுவது கண்டிக்கத்தக்கது அதே நேரம் சட்ட அமலாக்க பிரிவான காவல்துறையே சட்ட மீறலில் ஈடுபடுவதனை தடுக்க எதிர்காலத்தில் அரசியலமைப்பு சட்டம் மற்றும் சட்டங்களினை உடனடியாக சீர்திருத்தம் செய்ய மேன்மை தாங்கிய அதி உத்தம ஜனாதிபதி அனுர அவர்களை கேட்டுக்கொள்கிறேன்.
  14. ரி 20 போட்டிகள் உயிர் இல்லாத ஆடுகளங்களில் வைக்காதது யார் தவறு? பராசக்தி சிவாஜிகணேசன் பாணியில் வாசிக்கவும்😁. தற்போது முந்தய ☝️ கருத்தினை வாசித்துப்பாருங்கள் புரியும் (நான் அந்த கருத்தில் கூட சிரிப்புக்குறி இட்டிருந்தேன் கவனிக்கவில்லையா?😁) இந்திய அணி செத்த ஆடுகளத்தில் சிறப்பாக ஆடுவார்கள் என்பதனைத்தான் கூறியிருந்தேன், ஆனால் அந்த ஆடுகளமும் கடினமான பந்து தரையில் பட்டு வேகம் குறைந்து வரும் (பசை போல் ஒட்டும்) ஆடுகளம் என இந்தியணி வீரர் அஸ்வின் ஒரு நேர்காணலில் கூறியிருந்தார் (நான் அந்த போட்டியினை பார்க்கவில்லை, நான் தவறாக கூறிவிட்டேன்). இந்தியணி அவுஸில் சிறபாக செயற்படும் என நம்புகிறேன் (விரும்புகிறேன்), முதல் 3 போட்டிகள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் நடைபெற உள்ளது, அண்மையில் அவுஸ்ரேலியா ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர்களிடம் சிக்கி சின்னாபின்னமாகி விட்டார்கள், அவர்களுக்கு டெஸ்ட் போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்கலை தெரிவு செய்வதில் பிரச்சினை உள்ளது, இது வரை காலமும் அணிக்கு தொடக்க ஆட்டக்காரராக விளையாடிய வோனரின் ஓய்வினை நிரப்ப சரியான ஆள் கிடைக்கவில்லை. ஆனால் இந்தியணி தற்போது எந்த அணியினை பார்த்தாலும் கல்லைக்கண்ட நாய் மாதிரி பயப்படுகிறார்கள் (நியுசிலாந்தின் அடி அப்படி) இவர்கள் 4-1 என தோற்றுவிடுவார்களோ எனும் பயமாக இருக்கிறது.
  15. எமது அரசியல்வாதிகள் யாருமே அரசியலுக்கு தகுதியற்றவர்கள். இதனாலேயே நான் யாழுக்கு முடிந்தளவு ஒழுங்காக வருகிறேன், போன பஸ்ஸிற்கு இனி கை காட்டி பிரயோசனம் இல்லை.😁
  16. நீங்க எப்படி கேட்டாலும் சொல்லமாட்டம் (தெரிந்தால்தானே சொல்வதற்கு ) ஆனால் ரசோதரன் தனக்கு தெரியும் என கூறினாலும் ஏனோ சொல்கிறாரில்லை, நீங்கள் எதற்கும் பரீட்சையில் விடைதெரியாத மாணவர்கள் விடைத்தாள்களுடன் காசு கட்டி விடுவது போல ரசோதரனை அணுகவும், அவர் மனம் வைத்தால் உங்கள் கேள்விக்கு ரசோதரந்தான் விகிரமாதித்தன்.😁
  17. இப்ப தெரியுதா இந்தியா யார் என்று😁.
  18. பல கோமாளித்தனமான விடயங்கள் அதற்கு பிறகும் செய்திருக்கிறேன், அண்மையில் எனது மகனிற்கு அவரது ஆசிரியை உப்புத்தண்ணீரில் ஓடும் விளையாட்டுக்காரினை பரிசளித்திருந்தார், அதனை பார்த்த போது உப்புத்தண்ணீரில் பழைய அலுமிய சட்டி மற்றும் பழைய உலர்கலத்தில் உள்ள காபன் கோலை பயன்படுத்தி திரவ மின் கலம் செய்தமை நினைவில் வந்தது ஆனால் ஏதோ காரணத்தால் அது வேலை செய்யவில்லை, தரவடிப்படையில் அது வேலை செய்யவேண்டும் ஆனால் வேலை செய்யவில்லை சில வேளை எலக்ரோரொட்டாக பயன்படுத்திய அலுமினியமும் காபன் கோலும் சுத்தமற்று இருக்கலாம் என அதனை ஈடுகட்டு முயற்சியின் பின்னரும் அது வேலை செய்யவில்லை. எனது பெற்றோர் என்னை ஜோசப் த ட்ரீமர் என நக்கலாக அழைப்பார்கள் (எனது பெயர் ஜோசப் இல்லை😁 அது சிறுவர் ஆங்கில கதையில் வரும் ஒரு கதாபாத்திரம்)😁.
  19. கேல்விப்படவில்லை! ஆனால் பெயரே ஒரு மாதிரியாக இருப்பதலால் தெரிந்து கொள்ளவிரும்வில்லை😁.
  20. சின்ன வயதில் கழி ஒலியினை உருவாக்கி (மனித காதுகளால் உணர முடியாத அளவுக்கதிமான அதிர்வலைகளை) நுளம்பினை விரட்டுவதற்கு இலத்திரனியலில் உபகரணம் ஒன்றை செய்திருந்தேன் (3வோல்ட் இரண்டு பற்றரிகள்) ஆனால் நுளம்பு வழமைபோல் வந்து தொல்லைகொடுத்திருந்தது. 😁
  21. இந்த கேள்வி விடை தெரியாது, ஆனால் யாழ்ப்பாணத்தில் முற்காலத்தில் ஆதிக்க சாதியினர் அடக்குமுறைக்காளாகும் சாதி பெண்கள் மேற்சட்டை அணியக்கூடாது என கட்டுப்பாடுகள் விதித்திருந்தார்களாம் (உண்மைத்தன்மை தெரியாது) அது போல ஏதாவது காரணமாக இருக்கலாம்.
  22. 2018 உலக வங்கியின் கருத்துப்படி இலங்கையின் உட் கட்டுமானங்களை சரி செய்வதற்கு இலங்கைக்கு 36 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படும் என கூறப்பட்டுள்ளது, இவ்வாறான எதிர்மறைகளான சூழ்நிலையிலும் இலங்கையின் தமிழர் வாழும் பகுதியில் உற்பத்தி நிறுவனம் அமைக்க முற்பட்ட புலம்பெயர் தமிழர்களின் முயற்சியினை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதி தனக்கு இலஞ்சம் வழங்க வேண்டும் என கேட்டமையால் கைவிடப்பட்டது. மக்களின் வாழ்க்கையினை மேம்படுத்த அந்த மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசியல்வாதிகளே அவர்களது நல் வாழ்க்கைக்கு குறுக்கே நிற்கிறார்கள். இவர்கள் எல்லோரும் கடைசியாக பதுங்குமிடம்தான் தமிழ்தேசியம்.
  23. வோல்ஸ்ரிட் ஜெனர்ல்ட் இல் ட்ரம்பின் தற்காலிக போர் நிறுத்த முன்வடிவம் பற்றி கூறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது, அதன் படி அமெரிக்கா தொடர்ச்சியாக உக்கிரேனுக்கு அயுத வழங்கும் எனவும் அதற்கு கைமாறாக உக்கிரேன் 20 ஆண்டுகள் நேட்டோவில் இணையமாட்டேன் என உறுதிப்பிரமானம் எடுக்கவேண்டும் எனவும், அது தவிர இரஸ்சியா தற்போது ஆக்கிரமித்துள்ள பகுதிகளை இரஸ்சியா உரிமை கொள்ளலாம் இரண்டு நாட்டுக்குமிடையே 800 மைல்கள் உள்ள இராணுவ அற்ற வலயத்தினை அமெரிக்க கூட்டாளிகள் கண்காணிப்பார்கள். இதனை உக்கிரேன் ஒப்புக்கொள்ளாவிட்டால் உக்கிரேனுக்கான ஆயுத வழங்கல் நிறுத்தப்படும், மறுவளமாக இரஸ்சியா ஒப்புக்கொள்ளாவிட்டால் உக்கிரேனுக்கு அதிக ஆயுதம் வழங்கப்படும். இதனை தொடர்ந்து பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://meduza.io/en/news/2024/11/07/wsj-reports-that-trump-is-reviewing-ukraine-peace-plan-options-that-cede-all-occupied-territory-to-moscow-suspend-nato-expansion-and-create-dmz https://kyivindependent.com/trump-ukraine-plan-wsj/ இதனை இரஸ்சியா ஏற்றுக்கொண்டால் இலங்கையில் நோர்வே பேச்சுக்காலத்தில் ஒரு தரப்பினை பலப்படுத்தி அதற்கான கால அவகாசத்தினை பேச்சுவார்த்தை என்பதன் மூலம் பெற்றுக்கொண்டு பின்னர் போரினை ஆரம்ம்பித்து மறு தரப்பினை தோற்கடித்தது போல ஒரு சூழ்நிலை உருவாகும். மறுவளமாக இரஸ்சியா 2022 முன்னர் செய்த ஒப்பந்தத்தினை ஏற்று கொள்ள விரும்பும் அதற்காக தற்போது கைப்பற்றிய இடங்களையும் விட்டுக்கொடுக்கும், உக்கிரேன் நிரந்தரமாக நேட்டோவில் இணைய கூடாது உக்கிரேன் இராணுவம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பேணப்பட வேண்டும் எனும் நிபந்தனைகளை வலியுறுத்தலாம். அது உக்கிரேனும் அணுகூலம் இரஸ்சிய பாதுகாப்பிற்கும் அனுகூலம் எல்லையில் மேற்கு நாட்டு அமைதி படைகளை அனுமதிப்பது என்பது இரு நாடுகளுக்கும் ஆபத்தான விடயமாகும். இவற்றை பார்க்கும் போது போர் முடிவடையாது இன்னும் மோசமாக தொடர்வதற்கே வாய்ப்பு அதிகம், பைடன் அரசினை விட ட்ரமின் ஆட்சிக்காலத்தில் போர் மேலும் உலகெங்கும் தீவிரமடையலாம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.