Everything posted by புலவர்
-
தமிழர்களின் மொழி உரிமையை அரச நிர்வாகத்தின் ஊடாக உறுதிப்படுத்துவோம் - அநுரகுமார
அரச கட்டடங்களில் மாத்திரம் தமிழிலும் பெயர்ப்பலகை வைப்பதை;தானே சொல்கிறார். அது இப்போதும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது . சிங்களப்கபகுதிகளுக்கூடாப ப் பயணம் செய்யும் பொழுத அரச கட்டங்களின் பெயர்ப்பலகையைப் பார்த்த்துத்தான் அந்த இடங்களை அறிய முடிகிறது. சுமத்திரனின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட ஒற்றை ஆட்சியின் கீழான அதிகாரப்பகிர்வு அரசியலமைப்புக்கு ஆதரவு என்பதன் மூலம் சுமத்திரனதும் அவரது சொம்புகளினதும் வாக்குமட்டும்தான் கிடைக்கும். சுமத்திரனுக்கு நல்ல பெட்டி ஒன்நறு கிடைக்கும்.
-
இலங்கை வந்தார் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்
இதுவரையிலும் இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர்கள் தமிழர்களின் நலன்களுக்கு எதிராகவே செயற்பட்டிருக்கிறார்கள். ஆகவே அவர்களின் எந்த ஒரு ஆலோசனையையும் தமிழர்கள் கருத்திற்கெடுக்க வேண்டியதில்லை. இந்தியா வேண்டுமானால் 1987 இல் செய்து கொண்ட்ட ஒப்பந்தத்தை நிறைவேற்றுமாறு இலங்கை அரசை வற்புறுத்தி தனது கையெழுத்தின் பெறுமதியை உறுதிப்படுத்த வேண்டும்.மற்றும்படி எங்களுக்கு ஆலோசனை சொல்ல எந்த நாட்டுக்கும் உரிமையில்லை. நாங்கள் கேட்கும் நியாயமான உரிமைகளை ஏற்றுக் கொண்டாலே போதும்.ஏன்ன்றால் இதன்நன்மை தீமைகளை அனுபவிக்கப் போவது தமிழர்கள்தான்.
-
தமிழ் மக்கள் வழிகாட்டுவார்கள்- நிலாந்தன்
யாருடன் பேரம் பேசுவது? பேரம் பேுசி பெறக் கூடிய ஆகக் கூடிய தீர்வுதான் என்ன? குறைந்த பட்சம் 13 ஐ முழுமையாக அமுல்படுத்துவதாக எந்த வேட்பாளர் சர்வதேச நாடுகளின் துதுவர்கள் சாட்சியாக கஎழுத்து மூல வாக்குறுதி வழங்கத்தயராக உள்ளார். குறைந்த பட்சம் அந்த ஒப்பந்தத்துடன தொடர்புடைய இந்தியத்துதுவராவது நாட்சியாக முன்வருவாரா?
-
வேட்பாளர்கள் தொடர்பான ஆய்வு நடவடிக்கை – முடிவுகள் தொிவிப்பது என்ன?
https://www.facebook.com/share/HEXdBCHWBwSGKxpN/?mibextid=WC7FNe
-
வேட்பாளர்கள் தொடர்பான ஆய்வு நடவடிக்கை – முடிவுகள் தொிவிப்பது என்ன?
இதுவரை நடந்த ஜனாதிபதித் தேர்தல்களில் வடக்கு கிழக்கு மக்கள் பெரும்பாலும் ஒரு அலையாகவே வாக்களித்திருக்கிறார்கள்.அவர்கள் வாக்களித்த வேட்பாளர் வென்றும் இருக்கிறார் தோற்றும் இருக்கிறார்.தமிழ்மக்களின் வாக்குகள் இல்லாமலேயே சிங்கள வேட்பாளர்களினால் வெற்றியைப் பெற முடியும்.அதற்குப்பல தேர்தல்கள் முன்னுதாரணமாக இருக்கின்றன.இம்முறை தென்பகுதியில் ரணீலுக்கும்>சஜித்துக்கும் கடுமையான போட்டி இருக்கிறது. அனுராவும் குறிப்பிடத்தக்க வாக்குகள் எடுக்கும் நிலையில் தமஜழ் வாக்குகள் ஒரு அலையாக ஒரு சிங்கள வேட்பாளருக்கு கிடைக்காமல் விட்டால் முதல்சுற்றில் எவருக்கும் 50 வீதம் கிடைக்காமல் போகலாம்.
-
வேட்பாளர்கள் தொடர்பான ஆய்வு நடவடிக்கை – முடிவுகள் தொிவிப்பது என்ன?
நான் மேலே காட்டியிருந்த கருத்துக்கணிப்பகளில் இருந்துதான் இருவரும் 50 வீதத்துக்கு மேல் எடுக்கவில்லை என்று எழுதினேன்.இந்தக்கருத்துக்கணிப்பும் முழமையானது அல்ல என்ற புரிதல் எனக்க இருக்கிறது.
-
வேட்பாளர்கள் தொடர்பான ஆய்வு நடவடிக்கை – முடிவுகள் தொிவிப்பது என்ன?
எப்படிப் பார்த்தாலும் 50 வுpதத்திற்கு மேல் யாருக்கும் கிடைக்கவில்லை. 2வது சுற்று விருப்பு வாக்கெடுப்பு எண்ணப்பட வேண்டும் என்று இந்தக்கருத்துக்கணிப்பு சொல்கின்றது.. தமிழ்ப் பொது வேட்பாளருக்கு கணிசமான வாக்குகள் கிடைத்தால் ஜனாதிபதித் தேர்தல் கடும் போட்டியாக இருக்கும் 2வது விருப்பு வாக்ககை எண்ணும் நிலை வந்தால் ரணில் சுத்துமாத்திப் பண்ணி ஜனாதிபதியாக வருவார.(( சுமத்திரன் போன தடவை வென்றது போல(
-
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகம் : நிறம் என்ன தெரியுமா?
ஒரு கொடிக்கு இவ்வளவு எதிர்ப்புகள் வருவதை நல்ல விடயமாகப் பார்க்கிறேன். விஜையின் அரசியல் வருகையை எல்லோரும் வரவேற்றிருக்கும் நிலையில் திமுக பதற்படுகிறது. அவர்கனேள கொடி பற்றிய சர்சைகளைப் பரப்பி வருகின்றனர். அதிமுக அமைதியாக பார்த்துக் கொண்டு இருக்கிறது.கள்ளத்தனம் கொண்ட கருணாநிதி பாடலை எதிர்த்து அதை உலக அளவில்பிரபலமாக்கிய திமுக 200 டமரூபா ஊபிக்களின் ஐடீ விங்க் விஜையின் கொடியையும் நன்றாக அறிமுகப்படுத்தியிருக்கின்றனர். கொடியில் இருக்கும் சிவப்பு மஞ்சள் இனி கட்சி தொடங்கும் யாரும் தமிழத் தேசியத்தை விலகிச் செல்ல முடியாது என்பதையும் திராவிட சிந்ததாந்தம் அழிந்து கொண்டு போகின்றது என்பதையும் எடுத்தக் காட்டகின்றது. விஜைய்க்கு ஊழலற்ற கட்சியாக ஒரே தெரிவு நாம்தமிழர்கட்சி மட்டும் தான் இரண்டும் இணைந்தால் 2026 தமிழகத்தின் ஆட்சியில் பல மாற்றங்களை உருவாக்கலாம். யார் தலைமையேற்பது ன்பதில்தான் சிக்கல் இருக்கிறது. மேலும் அவர்தமிழ்த்தேசியத்தை உறுதியாக முன்னெடுத்துச் செல்வாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 : ‘தமிழ்ப் பொதுவேட்பாளர்’ மாபெரும் பொதுக்கூட்டம்!
சந்திரிகாவுக்கு வாக்குப் போட்டோம்>ரணிலுக்கு வாக்குப் போட்டோம்.பொன்சேகாவுக்கு வாக்குப் போட்டோம்>மைத்திரிக்கு வாக்குப் போட்டோம்.சஜித்துக்கு வாக்குப் போட்டோம். இவர்களில் வென்றவர்கள் சந்திரிகாவும் மைத்திரியும் . இருவருமே தமிழர்களின் இனப்பிரச்சினை தொடர்பாக ஒரு துரும்பளவுதானும் செயற்படவில்லை. 2009 பின் மகிந்த கட்சியினர் ஜனாதிபதியாக வரக்கூடாது என்நற தமிழர்கள் வாக்களித்தார்கள். ஆனால் மைத்திரி மகிந்தவையே பிரதமராக்கினார். எந்த ராஜபக்சே குடும்பத்தை சிங்களவர்களே அடித்து விரட்னார்களோ அதே ராஜபக்ச குடும்பத்தை குறுக்கு வழியில் பதவிக்கு வந்த ரணில் அரவணைத்தார். இப்பொழுது சொந்தக்கட்சியின் பலத்தை விட ராஜபக்சேக்களிடமிருந்து பிரிந்து வந்தவர்களை நம்பியே தேர்தலில் நிற்கிறார்.நாங்கள் சிங்கள வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதால் தமிழர்களுக்கு கிடைக்கக் கூடிய நன்மைகள் என்ன?பொது வேட்பாளருக்கு அந்த வாக்கைப் போடுவதால் வரும் நட்டம் என்ன?. எந்த விடயத்தையும் பரிசோதனை செய்து பார்ப்பதில் என்ன தவறு இருக்கப் போகிறது.நான் ஒரு விடயத்தில் தெளிவாக இருக்கிறேன். பொது வேட்பாளரை நிறுத்தியவர்கள் தங்கள் கட்சியின் இருப்பையும்>தாறஙகளும் அரசியலில் இருக்கிறோம் என்பதைக் காட்டவும் இதைப்பயன்படுத்துகிறார்கள். அவர்கள் இந்தியாவின் செல்லப் பிள்ளைகள் 13 இற்குப் அப்பால் அவர்கள் கனவு கூட காணமாட்டார்கள். அனூல் அவர்கள் தங்கள் சுயநலத்திற்காக நடத்தும் அரசியலை தமிழ்மக்கள் சாதகமாகப் பயன்படுத்துவதில் என்ன நட்டம் வந்து விடப் போகிறது.தமிழ்மக்கள் ஒரே ஒரு வாக்கினைப் பொது வேட்பாளருக்கு மட்டும் செலுத்த வேண்டும். இன்னுமொரு விடயமும் இருக்கிறது. ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணித்தல். ஆனால் நவீன ஜனநாயகத்தில் புறனக்கணிப்பவர்களைப் புறக்கணித்து விட்டு வெல்பவர்களைக் கொண்டாடுவது உலக வழமையாகி விட்டது. நாங்கள் ஒற்றுமையாக பொது வேட்பாளருக்கு வாக்களித்து இந்தப் பரிசோதனை முயற்சியைச் செய்வோம்.இந்த முறை ஜனாதிபதி முதல்சுற்றில் தெரிவாகாமல் இருந்து பொது வேட்பாளர் ஒர கணிசமான வாக்குகளைப் பெற்றால் அது பேசுபொருளாகும்.பரிசோதனை முயற்சியைச் செய்து பார்பதில் எந்த இழப்பையும் தமிழர்கள் புதிதாகப் பெற்ற விடப் போவதில்லை.
-
தமிழ் வேட்பாளருக்கு சங்கு.
பொது வேட்பாளரை நிறுத்திப் போட்டு கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் ரணிலிடம் பெட்டி வாங்கப் போன செல்வமும் சித்தார்த்தனும் எப்பவோ சங்கு ஊதிப் போட்டார்கள். இப்ப பெட்டி வாங்கிறதில சுமத்திரனுக்கு போட்டியாக நிற்கிறதால சுமத்திரனுக்கு கொஞ்சம் கவலைதான்.பொதுவேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கிறதா சொல்லிக் கொண்டிருந்த மாவையும் சிறதரனும் ஆமை தலையை உள்ளுக்கு இழுத்த மாதிரி சத்தமில்லாமல் அமைதியாய் இருக்கிறதும் கடைசி கட்ட பெட்டி பேரத்துக்காகத்தான்.
-
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
சமஷ்டிக்கு ஆதரவளிக்கும் வேட்பாளர் என்ற நிலையிலிருந்து 13 ஆம் திருத்தத்துக்கு கீழிறங்கியுள்ளார். மேலும் தமிழர்பிரச்சினைளகள தொடர்பாக சுமத்திரனுடன் மட்டும் பேசுவதன் அர்த்தம். என்ன தனியாக பெட்டி வாங்குகிறாரா? தமிழசுக்கட்சியின் கட்சிக்கட்டுப்பாட்டை மீறியதாக கட்சி ஏன் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கக்கூடாது?13 ஆம் திலுத்தம் என்பது சிறிலங்காவின் அரசியலமைப்பில் உள்ளது. அதை நிறை வேற்றுவதற்கு யாருடைய ஆலோசனையும் தேவையில்லை. ஜனாதிபதித் தேர்தல் முடிவடையும்வரை காத்திருக்கவும் தேவை இல்லை. யாரை ஏமாற்ற இந்த நாடகம். சுமத்திரன் பெட்டி வாங்குலதைப் பார்த்து பொது வேட்பாளரை நிறுததியவர்களும் ரணிலுடன் பேச்சு வார்ததை நடத்தி பெட்டி வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.சிறிதரன் வழமை போல் மதில் மேல் பூனையாக மௌனமாக இருக்கிறார். அவர் எந்தப்பக்கம் தாவுவார் என்பது அண்மைக்கால மௌனமே சாட்சியாக இருக்கிறது.
-
ஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்த தமிழ் பொதுக்கட்டமைப்பு
ரணிலே கட்சியில்லாமல் சுயேச்சையாக தேர்தலில் நிற்கிறாரர் .இந்தத் தேர்தலில் அவர் எடுக்கின்ற முடிவுகளுக்கு கட்சி எப்படிப் பொறுப்பேற்கும்? உண்மையில் விகிதாசார பிரிதிநித்துவ தேர்தலிக் படி ஒரு வலுவான அரசாங்கம் அமைவது மிகமிக அரிது.கூட்டணிக்கட்சிகளின் ஆதரவுடன்தான் அரசாங்கம் அமைக்கலாம். வரலாற்றில் 2 பெரிய கட்சிகள் இணைந்து தேசிய அரசாங்கம் அமைத்த வேளையில்ஈதமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்குச்சார்பான எபிரதான எதிர்க்கட்சியாக இருந்த வேளையில் தமிழர்களின் குறைந்த பட்ச எதிர்பார்ப்புகளான காணி விடுவிப்பு>அரசியல்கைதிகள் விடுதலை> போர்க்குற்ற விசாரணை>சிங்களக் குடியேற்றங்களைத் துடுத்தல்>தொல்டபொருட் திணக்களம் என்ற வகையில் தமிழர் தேசங்களில் புத்தர் சிலைகளை நிறுவி விகாரைகளைக்கட்டுதல்> போரினால் பாதிப்படைந்தவர்களுக்கு புனர்வாழ்வு அளித்தல்> காணாமல் போனவர்களின் நிலைமை தொடர்பான பாரபட்சம்ற்ற நீதி விசாரணை என்று எதுவுமே கேட்டுப்பெறாமல். பெட்டி வாங்குவதிலும் எதிர்க்கட்சிதலைவரான சம்பந்தருக்கு கொழும்பில் சொகுசு மாளிகையும். மற்றும் எம்பிகளிங்கு அரசால் வழங்கப்படும் சலுகைகளையும் அனுபவித்துவிட்டு இப்பொழுது கூட்டமைப்பு உடைந்து தமிழர் பலமிழந்து நிற்கும் வேளையில் சிங்கள வேட்பாளர்கள் கொடுக்கும் எந்த ஊறுதிமொழிகளும் ஒப்பந்தங்களும் ஒரு போதும் நிறைவேறப் போவதில்லை. பண்டா செல்வா ஓப்பந்தம்> டட்லி செல்வா ஒப்பந்தம். அதிகம் ஏன் இன்னொரு நாடான இந்தியாவுடன் ஏற்படுத்திய ஒப்பந்தம் எல்லாவற்றையும் தூக்கி குப்பைக் கூடையில் போட்டவர்களை நம்பி எப்படி ஒப்பந்தங்களைப் போடலாம். அவர் விரும்பினால் நடைமுநைச்சாத்தியமற்ற பலமான அரசாங்கம் அமையும்வரை காத்திராமல் தமழர்களுக்கு சமஷட்டி தேவையா இல்யைh என்று வடக்கு கிழக்கு மக்களிடம் ஒரு சர்வசன வாக்கெடுப்பை நடத்துமாறு ஏன் னகனட்கக் கூடாது.
-
சுமந்திரனை சந்தித்தார் நாமல்!
சம்பந்தரின் ஆவியாய் இருக்குமோ?
-
சுமந்திரனை சந்தித்தார் நாமல்!
எல்லாப்பக்கத்தாலும் பெட்டி வாங்குகிறார். அவருக்கே விளங்கியிட்டுது. இது கதனது கடைசி எம்பி பதவி என்று. அதுதான் சுற்றிச்சுழன்று பெட்டி வாங்குகிறார்.
-
விடுதலைப் புலிகளை ஒழித்தது போல் ஊழலையும் முற்றாக ஒழிப்பேன்! -சரத் பொன்சேகா
இவருக்கு வாக்குப்போடச்சொன்ன கூட்டமைப்பையும் வாக்குப் போட்ட தமிழ்மக்களையும் நினைத்தால் சிரிப்பாக இருக்கிறது. இந்தமுறையும் ஒரு சிங்கள வேட்பாளருக்கே வாக்களிக்க வேண்டும் என்று அடம்பிடிக்கும் சில யாழ்கள உறவுகளை நினைத்தால் பாவமாக இருக்கிறது.
-
தமிழ் பொது வேட்பாளராக பா.அரியநேந்திரன், அறிவிக்கப்பட்டுள்ளார்!
ரணீலுக்கு வாக்களிக்க வேண்டும் என்று சொல்லாமல் சொல்கிறீர்கள்.ஆனால் அவருக்கு ஆதவளிப்பவர்களில் பெரும்பாலானோர் கடும் இனவாதம் கொண்ட பெரமுனகட்சியின் அமைப்பாளர்கள்.அவர்களுக்கு நாமலை முன்னிறுத்துவது ஒவ்வாமை மட்டுமல்ல. ரணிலே தங்களை சிங்கள அரகலய போராட்டத்தில் இருந்து காப்பற்றக் கூடியவர் என்று நினைக்கிறார்கள. ரணிலோ 5 தடைவைகளுக்கு மேல் பிதமராக இருந்தவரும் தற்போதைய ஜனாதிபதி அதிகாரத்தை கையில் வைத்திருந்தும் தமிழர்களிற்கு ஒரு துரும்பையும் கிள்ளிப் போடவில்லை. அவருக்குத் தெரியும் மற்றைய வேட்பாளர்களை விட தான் ஒரு அமைதியான முகத்தைக்காட்டி நடிப்பதை தமிழர்கள் உண்மை என்று ஏற்றுக் கொண்டு தனக்கு வாக்களிப்பார்கள் என்று கணக்குப் போடுகிறார். பூனையின் அமைதியான சுபாவத்தைக்கண்டு விபரம் அறியாத எலிக்குஞ்சொன்று அதனோடு நட்புப் கொள்ள நினைத்த சோமசுந்தரப்புலவரின் கவிதை நாடகம்தான் நினவுக்கு வருகின்றது.
-
தமிழ் பொது வேட்பாளராக பா.அரியநேந்திரன், அறிவிக்கப்பட்டுள்ளார்!
சரி பொது வேட்பாளரை நிறுத்துவதில் பயன் இல்லை. எந்த சிங்கள வேட்பாளருக்கு தமிழ்மக்கள் வாக்களித்தால் தமிழர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும்.தமிழ்ப் பொது வேட்பாளரால் எந்தப்பயனும் இல்லை என்று தெரிந்து கொண்ட உங்களுக்கு எந்தச சிங்கள வேட்பாளரைத் தமிழர்கள் தெரிவு செய்ய வேண்டும் என்பதிலும் தெளிவான நிலைப்பாடு இருக்க வேண்டும்.
-
தமிழ் பொது வேட்பாளராக பா.அரியநேந்திரன், அறிவிக்கப்பட்டுள்ளார்!
2வுது 3வது தெpரிவைச் செய்யக்கூடாது என்று ஏன் இவர்களால் சொல்ல முடியவில்லை. மறைமுகமாக யாரோ ஒரு சிங்கள வேட்பாளரை வெற்றியடையச் செய்யும் முயற்சியா இது என்ற கேள்வி எழுகின்றது. ஆனால் தமிழ்மக்கள் புத்திசாலித்தனமாக வாக்களித்து இவர்களின் கபடத்தனத்திற்கு நெற்றியடி கொடுக்க வேண்டும்.
-
தமிழ் பொது வேட்பாளராக பா.அரியநேந்திரன், அறிவிக்கப்பட்டுள்ளார்!
இதுவரையில் சிங்கள வேட்பாளர்களுக்கு தமிழ்மக்கள் தங்கள் வாக்குகளைச் செலுத்யதற்காக சர்வதேசம் எந்தவகையில் உதவிசெய்திருக்கிறது? அவ்வாறு நடந்தாலும் தமிழர் கள் மேலதிகமாமாக என்ன நட்டம் வரப் போகிறது/ பரீட்சித்துப்பார்பதில் என்ன தவறு இருக்கப் போகிறது?சிறிலங்காவில் தமிழர்களின் வாக்குகள் இல்லாமல் தனிச்சிங்களமக்களினாலேயே ஜனாதிபதித் தேர்தலில் வெல்ல முடியும் என்பதற்கு பல முன்னுதாரணங்கள் இருக்கின்றன. தமிழர்கள் ஒன்று திரண்டு ஒரு சிங்கள வேட்பாளருக்கு வாக்களித்தும் ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த வரலாறுகள் பல இருக்கின்றன.தமிழ்மக்கள் அதிக அளவு வாகக்களித்து தெரிவு செய்த சந்திரிகாவும் மைத்திரியும தமிழர்களுக்கு செய்த நன்மைகள் என்னவென்று பட்டியலிட முடியுமா?யார் வரக்கூடாது என்று மைத்திரிக்கு வாக்களித்தார்களோ அவரைப் பிரதமராக்கியவர் மைத்திரி.யார் வேண்டாமென்று சிங்களமக்களால் விரட்டியடிக்கப்பட்ட ராஜபக்சேக்களுடன் சேர்ந்து குறுக்கு வழியில் ஜனாதிபதியானவர் ரணில். தமிழர்களின் குறைந்த பட்ச கோரிக்கைகளை ஏறெடுத்தும் பார்க்காத சிங்க ளவேட்பாளர்கள்தான் களத்தில் நிற்கிறார்கள்.இவர்களில் யாரோ ஒருவர் ஜனாதிபதியாக வரப்போகிறார். இவர்களை நம்புவதை விட ஒரு பரிசோதனை செய்வதில் என்ன கேடுவரப் போகிறது.ஆனால் இந்தப் பொது வேட்பாளர் விடயத்தில் கரிசனையாகவுள்ள அரசியல்கட்சிகளும் பத்தி எழுத்தாளர்களும் இந்தியாவின் நலனை முன்னிறுத்துபவர்கள். அவர்களால் 13 மேலே போக முடியாது தவறானவர்களால் ஒரு சரியான விடயம் முன்வைக்கப்படும் பொழுது அதனைச் சாதகமாகப் பயன்படுத்தாமல் விடுவது தமிழர்களுக்குத்தான் இழப்பாகும்.
-
தமிழ் பொது வேட்பாளராக பா.அரியநேந்திரன், அறிவிக்கப்பட்டுள்ளார்!
பல கட்சிகள் ஒன்று சேர்ந்து பொது வேட்பாளரை நிறுத்தியிருக்கிறார்கள். இவ்வளவு காலமும் சிங்கள வேட்பாளர்களுக்கு வாக்களித்து என்ன பயனை தமிழர்கள் பெற்றுக் கொண்டார்கள். அவர்களுக்கு போடும் வாக்கு வீணான வாக்குகள்தானே . இந்த முறை தமிழ்ப் பொது வேட்பாளருக்குப் போடுவதால் புதியதாக நாம் எதனையும் இழந்து விடப்போவதில்லை. ஆனால் தமிழ்மக்கள் ஒரு வாக்கை மட்டும்.பொது வேட்பாளர்களுக்கு அளிக்க வேண்டும். 2வது 3வது தெரிவைச் செய்வது பொது வேட்பாளர் நிறுத்தியதற்கு அர்த்தமில்லாமல் செய்து விடும். இதுபற்றி இன்னும் இந்த பொதுவேட்பாளரை நிறுத்திய குழுவினர் இது தொடர்பாக கள்ள மெளனம் சாதிப்பது நல்லதல்ல.
-
ஜனாதிபதி வேட்பாளராக நாமல் – பொதுஜன பெரமுன அறிவிப்பு!
இனிக் கொஞ்சம் தமிழ் அரசியல்வாதிகளும் அவர்களின் சொம்புகளும் ரணிலுக்கு வாக்கு பெடாவிட்டால் நாமல் வந்து விடுவார். ஆகவே ரணிலுக்கு வாக்குப் போடுங்கள் என்று கிளம்புவார்கள்.
-
விருப்பு வாக்கினைப் பயன்படுத்துவது தமிழா்களின் ஜனநாயக உரிமை – சி.வி.விக்னேஸ்வரன்!
https://seithy.com/breifNews.php?newsID=321063&category=TamilNews&language=tamil2வது விருப்பு வாக்கை ரணிலுக்கு போடலாம் என்று சொன்னதாக கேள்வி. அதை விட ரணிலின் விருப்பமான தேர்தலைப்ப் பின் போடுவதற்கு ஆதரவளித்ததுதும் உண்மை.ரணில் செய்வது எல்லாம் சரி என்றால் பிறகு எதற்கு பொது வேட்பாளர். பொதுவேட்பாளரை நிறுத்தினால் 2வது 3 வது வாக்கினை பயன்படுத்ததாதீர்கள். அது பொது வேட்பாளரை நிறுத்தும் நோக்கத்திற்கு முரணானது என் இவர்களால் சொல்ல முடியவில்லை.?
-
பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான உடன்படிக்கை கைச்சாத்து!
சுமத்திரனும் சாணக்கியனும் ரணிலை ஆதரிக்கும் நிலையில் தமிழ்ப் பொதுவேட்பாளரை தமிழ்ர்கள் பரீட்சித்துப்பார்பதில்தவறில்லை. ஆனால் இந்தப் பொதுவேட்பாளர் தெரிவில் ஈடுபட்டிருக்கும் கட்சியினரும் பத்தி எழுத்தாளர்களும் இந்திய நலனை முன்னிறுத்துபவர்கள்.அவர்களின் ஆகக் கூடிய கோரிக்கை 13 ஆம்திருத்தச்சட்டமாகத்தான் இருக்க முடியும்.தேர்தல் விஞ்ஞாபனத்தில் சமஸ்டியை முன்வைத்து ஒரு வாக்கை மட்டும் தமிழ்மக்கள் பொதுவேட்பாளருக்கு அளிக்க வேண்டும் என்று இந்தக் கட்டமைப்பு தமிழ்மக்களைக் கோருமா?விக்கியர் இப்போழுதே 2வது வாக்கை ரணிலுக்கு போடுமாறு சொல்லியுள்ளது குறிப்பிடத்தக்கது. 2வது 3வதுவாக்கைப் பொது வேட்பாளரை நிறுத்துவதில் அர்த்தமில்லை.அதை விட ஜனாதிபதித் தேர்தலைப்பகிஸகரிக்கலாம்.தமிழ்மக்கள் பொதுவேட்பாளருக்கு வாக்களித்தமையால் முதல்சுற்றில் ஜனாதிபதி தெரிவு செய்யப்படாவிட்டால் அது பேசு பொருளாகும்.இந்தக்கட்டமைப்புக்குள் சுமத்திரன் அணியைப்புறந்தள்ளி தமிழருசுக்கட்சியைைும் தமிழ்தேசிய முன்னனியையும கொண்டுவரவேண்டும். தமீத்தேசிய முன்னனியின் தலைவர் சுகவீனமற்று தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கும் நிலையில் அவர்கள் தேர்தலைப் புறக்கணிக்கும் நிலையில் இருந்து மாறுவார்களா என்பது சந்தேகமானது.
-
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
முதலில் சுமத்திரன் மட்டும் ரணிலுடன் பேச்சுவார்தை நடத்தியது சரியா?தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர்களிடம் கலந்துரையாடவிட்டாலும் பரவாயில்லை தமிழரசுக்கட்சியுடனாவது இதுபற்றிக் கலந்துரையாடினாரா?தனியே அவர் மட்டும் போய்பேச்சு வார்த்தை நடத்த யார் அதிகாரம் கொடுத்தது. அல்லது மற்றவர்களைக் கழட்டிவிட்டு தான் தனியே போய் சந்தித்த மர்மம் என்ன?தனியாகப் பெட்டி வாங்கி விட்டாரா?ரணில்எழுத்து மூலம் உறுதி அளித்தாரா?ரணில் 1983 இல் இருந்து அரசியலில் இருக்கிறார் ஆறுமுறை பிரதமர் பதவியில் இருந்தார் ஒரு முறை ஜனாதிபதியாக இருந்திருக்கிறார் அப்பொழுதெல்லாம் கொடுக்காத 13{ இன்னுமா கொடுக்கப் போகிறார்.முந்தி என்றால் ரணிலுக்கு வாக்களிக்காவிட்டால் ராஜபக்சேக்கள் வந்து விடுவார்கள் என்று பிரச்சாரம் செய்யலாம். இப்பொழுது ராஜபக்சேக்களின் தயவில் ஜனாதிபதியாகி சிங்கள மக்களாலேயே விரட்டப்பட்ட ராஜபக்சேக்களைக் காப்பாற்றிய ரணில் தமிழரகளுக்குத் தீர்வு தருவார் என்று தமிழர்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள்.அறிவிக்கப்பட்ட உள்ளுராட்சித் தேர்தலையே நடத்தாத குள்ள நரி ரணில். சிங்களமக்களால் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டு சிங்கள மக்களை ஏமாற்றி பின்கதவு வழியால் ஜனாதிபதி ஆகிய ரணில் தமிழ்மக்களுக்கு நல்லது செய்வார் என்பது முழுமுட்டான்த்தனம்.
-
ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் சுட்டுப் படுகொலை!
முஸலிம்கள் எங்கள் போராட்டத்திற்கு எதிராக நின்றார்கள் என்ற காரனத்திற்காக இஸ்ரேல் பாலஸ்தீனியர்கள் மீது செய்யும் கொடுரமான தாக்குதல்களை நியாயப்படுத்த முடியாது.அப்படிப்பார்த்தால் எமது போராட்டத்திற்கெதிராக முஸ்லிம்நாடுகளை விட இஸ்ரேல் >அமெரிக்கா>இந்தியா உக்ரைன்உட்பட போன்ற நாடுகள் நேரடியாகவே பங்களித்தார்கள். எமது விடுதலை இயக்கத்திற்கு எதிரான தடைகளைப் போட்டு மேற்குலகமும் ஆதரவைக் கொடுத்தது.பாலஸ்தீனியர்களுக்கு அவர்களது மண்ணில் உரிமையுடன் வாழ மறுப்பது அநீதி.