Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலவர்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by புலவர்

  1. யாழ்மாவட்டத்தைப் பொறுத்தவரை ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு ஆசனந்தான் வரும் போல் உள்ளது. இதனால் கட்சித்தலைமைகள் 2பேர் பழைய ஆட்களாக வைச்சுக்கொண்டு மிச்ச ஆட்களை இளைஙர்களைப் போட்டு எங்கள் அணியில் இளைஞர்களுக்கு இடம் கொடுத்துள்ளோம் என்று மக்களைப் பேய்க்காட்டுகிறார்கள். அவர்களை வைத்து ப் பெறப்படும் வாக்குகளை வைத்து தேசியப்பட்டியல் மூலமாகப் பழையபடி பழையவர்கள் பாராளுமன்றத்தற்கு செல்வதே அவர்களின் திட்டம். இளைஙர்களுக்கும் இது தெரிந்தும் மாகாணசபை>உள்ளூராட்சபைத் தேர்தல்களில் நிற்க இடம் கிடைக்கும் என்று நம்புகிறார்கள். இப்பொழதெல்லாம் இந்த உள்ளுராட்சி சபை உறுப்பினர்களுக்கெல்லாம் சம்பளம் கொடுக்கிறார்கள். முன்பெல்லாம் கிராமசபைகள் இருந்த காத்தில் அங்கத்தவர்களுக்கு ஊதியம்வழங்கப்hடுவதில்லை.
  2. திம்புக் கோட்பாட்டில் எந்தவித விட்டுக்கொடுபபையும் செய்யாத ஊழலற்ற தரப்பாக தமிழ்த் தேசிய இளம் வேட்பாளர்களைக் கொண்ட தரப்பாக தமிழ்த்தேசிய முன்ணணியே உள்ளது. அவர்களுக்கு அதிக ஆசனங்களைக் கொடுத்து பலமான தரப்பாக இம்முறை பாராளுமன்றத்திற்கு அனுப்பிவைப்போம். அவர்கள் பிழைவிட்டால் அடுத்த தேர்தலில் தண்டிப்போம்.
  3. என்னதான் குத்தி முறிங்சாலும் தமிழ்த்தேசியக் 4ட்டமைப்பை உடைத்து தமிழரசுக்கட்சியையும் உடைத்து விட்ட சுமத்திரனுக்கு சொம்பு தூக்க நாலுபேர் இருக்கினம் .இந்தத் தேர்தல் அவர்களுக்கு நல்ல பதில் சொல்லும். பார்சிறியை கையோடை வைச்சிருக்கிறது க்கும் காரணம் இருக்கு.
  4. நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமிதில் தெக்கணமும் அதிற்சிறந்த தமிழர் நல் திருநாடும் தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே! தமிழணங்கே! பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்து துடைக்கினுமோர் எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல் கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும் உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும் ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன் உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே வாழ்த்துதுமே வாழ்த்துதுமே!" இப்பாடலில் இரண்டாம் பத்தியில்.... "கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும் உன்னுதரத் தேயுதித்தே" என தனித்தே வருகின்றது. இவ்வரிகளை சேர்த்துப் பாடினால் முன்னுள்ள திராவிட திருத்தம் தெரிந்துவிடும் அபாயம் தவிர்க்கவே தவிர்க்கப்பட்டிருக்கின்றது. "தெக்கணமும் அதிற்சிறந்த தமிழர் நல் திருநாடும்" என்பதை. "திராவிடநல் திருநாடும்" என மாற்றி பாடபட்டிருக்கிறது. அறத்தோடு சிந்தியுங்கள் அடையாளம் மறைக்கும் சூழ்ச்சி யாரால் இயற்றப்பட்டது என்பதை அறிந்துத் தெளிக தமிழினமே.?
  5. அவர்கள் எப்படி வென்றார்கள் என்பது ஊங்களுக்குப் புரியாமல் இருக்கலாம். இந்தியா என்ற நயவஞசக நாட்டின் உதவி இல்லாமல் அவர்களால் ஒன்றும் புடுங்கியிருக்க முடியாது. அதுவும் போர் அறத்தை மீறிய வெற்றி. ஆனால் இப்போது படு தொல்வியடைந்த உலகில் உள்ளார்கள். வெற்றி என்பது போர்வெற்றியை பொருளாதார வெற்றியாக மாற்றுவது என் அவர்களால் முடியவில்லை. அவர்களுக்கு உதவி செய்தவர்கள் எல்லாம் இப்போது அவர்களையே பொருளாதார அடிமைநாடாக ஆக்கி விட்டார்கள்.
  6. யாரப்பா இந்த ரணில்? போனதேர்தலிலேயே அவருக்கு ஓய்வு கொடுத்தாச்சு. பிறகு குறுக்கு வழியில் வந்தாலும் மீண்டும் வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள். ஆனால் வெட்கம் ரோசம் இல்லாமல் திரும்பவும் பதவி ஆசையில் அலைகிறார். அவருடையை உரையை அவரோ கேட்பாரோ தெரியவில்லை.
  7. மணிவண்ணன் பதவிக்காக யார்காலையும் பிடிப்பார். கட்சித்தலைமையை மீறி ஈபிடிபியுடன் நகூட்டுச்சேர்ந்து மாநகரசபை மமேயரான கதை எல்லோருக்கும் தெரியும்
  8. சிங்களவர்கள் பாணுக்காககவும் எரபொருளுக்காகவும் போராடினார்கள். ஆனால் தமிழர்கள் இது போன்ற தடைகளைத்தாண்டி வந்தவர்கள் அவர்கள் தமிழத் தேசியத்திற்காகவும் சுயநிர்ணய உரிமைக்காகவும் போராடினார்கள். ரில்வின் சில்வா அதை வசதியாக மறைைத்து விட்டார். எந்தச் சிங்கள மீடபராலும் தமழர் பிரச்சினைக்குத் தீர்வு தரமுடியாது.
  9. சுமத்திரனை தமிழ்தேசிய அரசியலில் இருந்து அகற்ற வேண்டுமெனறால் சிறிதரனுக்கும் வாக்குப் போடக் கூடாது. 2020 இல் கை;கிய தேசியக்கட்சியை முற்றாகத் தோற்கடித்தது போல் தமிழரசுக்கட்சியை அரசியல் அரங்கிலிருந்து முற்றாகத் தோற்கடிக்க வேண்டும்.
  10. துணைவிமானி ஒரு பெண்ணாம். ஓட்டோ பயலட்டில் விட்டு விட்டு எதும் கசமுசா பண்ணப்போய் இப்படியானதோ என்றும் சிலர் கருத்துத்தெரிவிக்கிறார்கள்.
  11. இந்திய விசுவாசிகள் இந்திய ஒட்டுக்குருக்களைச் சேர்த்துக் கொண்டு பொதுக்கட்டமைப்பு என்று சொல்லி பொது வேட்பாளரை நிறுத்தினார்கள்.தங்கள் வாக்குகளை ஒரு தமிழ் பொது வேட்பாளருக்கு செலுத்துவதன் மூலம் சிங்கள பெரும்பான்மை அரசியல் வாதிகளுக்கு தங்கள்வாக்குகளை அளிக்க விரும்பாத தமிழ்மக்கள் தங்கள் வாக்குகளைப் பொது வேட்பாளருக்கு அளித்தார்கள்.அரசியல் அறம் அறவே அற்ற ஒட்டுக் குழுக்கள் சங்குச்சின்னத்தை அறமற்று அபகரித்துக் கொண்டன. பொதுக்கட்டமைப்பை கட்டுப் படுத்தும் பலமற்ற பத்தி எழுத்தாளர்கள் இப்பொழுது புலம்பி என்ன பயன்?நிலாந்தன் ஒரு தமிழ்த்தேசிய விசுவாசி அவருக்குத் தமிழ்த்தேசிய மன்னனி கொள்ளகயில் விட்டுக்கொடுக்காமல் இருப்பது அலர்ஜியாக இருக்கிறது.
  12. என்ன புத்திசாலித்தனம்!!!ஒருத்தன் வேட்புமனுவுக்கு விதானையிடம் குடும்பக் காட் நிரப்பின மாதிரி நிரப்பி வைச்சிருக்கிறான்.....இதிலை 5 வது இடத்திலை மகள். மகள் திருமணம் செய்ததாலை Surname கணவனின் பெயர்...ஆகா!எப்படிப்பட்ட ஜனநாயகநாடு இது!
  13. தமிழரசுக் கட்சியில் தகுதியானவர்களை போட்டியிடுவதை தடுத்த அராஜகம் மாவை பதவி விலகுவதற்கு காரணமான சுமந்திரன் மற்றும் வைத்தியர் சத்தியலிங்கத்தை தோலுரித்து மனம் திறந்தார் சந்தர்ப்பம் https://fb.watch/v9YWOb3BIN/
  14. இனித்தான் யார்காலை யார்வாருகிறார்கள் என்பது நடக்கும்.எல்லோரும் வீட்டை விட்டுப் போய் விட்டார்கள். தமிழரசுக்கட்சியின் தலைவர் பதவியில் ஒருமுறையாவது இருக்க வேண்டும் என்று சிறியர் மட்டும் தனியாக ஒட்டிக்கொண்டிருக்கிறார்.ஆனால் அவர்களின் உடல்மொழி அவர்களின் ஒற்றுமையைக் காட்டிக் கொடுக்கின்றது. வேட்பாளர் தெரிவில் சிறிதரன் தோற்று விட்டார்.
  15. https://tamilwin.com/article/kv-thavarasa-resigned-from-all-itak-posts-1728222873 தமிழரசுக் கட்சியின் அனைத்து பொறுப்புக்கள் தொடர்பிலும் ஜனாதிபதி சட்டத்தரணி தவராசாவின் அதிரடி முடிவு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அனைத்துப் பதவி மற்றும் பொறுப்புக்களில் இருந்தும் விலகுவதாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்துள்ளார். இதன்படி, இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்பு கிளைத் தலைவர் பதவி, இலங்கை தமிழரசுக் கட்சியின் சட்டக் குழு தலைவர், மத்திய குழு உறுப்பினர் ஆகிய அனைத்துப் பொறுப்புக்களில் இருந்தும் விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியானது சுமந்திரனின் தன்னிச்சையான செயல் அறிக்கை ஒன்றின் மூலம் அவர் இதனை அறிவித்துள்ளார். குறிப்பாக தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் நியமனத்திற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்த போது அதில் யாழ். கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தினுடைய மற்றும் கொழும்பு வாழ் மக்களினுடைய கோரிக்கைக்கு அமைவாக தான் விண்ணப்பத்தை கொடுத்திருந்ததாகவும், அதனை எந்தவொரு காரணமும் இல்லாமல் சுமந்திரன் நிராகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், சுமந்திரன் தான் சார்ந்த அணியை வேட்பாளர் பட்டியலில் தெரிவு செய்து கட்சிக்காக தொடர்ச்சியாக பாடுபடுகின்ற மிக முக்கியமான திறமைசாலிகளை உள்ளெடுக்காததன் அடிப்படையிலும் தான் நியமிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்த மக்களுக்கு பொறுப்புச் சொல்ல முடியாத ஒரு கட்டத்தினால் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், தான்தோன்றித் தனமாக தமிழரசுக் கட்சியின் தேர்தலில் தோல்வியுற்ற பின்னரும் கட்சியை பதில் பொதுச் செயலாளர் சத்தியலிங்கத்தின் ஊடாக முழுச் செயற்பாடுகளையும் நிர்வகித்து வரும் சுமந்திரன் கட்சியை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்வதை அனுமதிக்க முடியாது. இந்த ஆண்டு இறுதிக்குள் 300 பில்லியன் ரூபாய் சொத்துக்கள் முடக்கப்படும் அபாயம் இலங்கை தமிழரசுக் கட்சி வரலாற்றில் பல தியாகங்களாலும், வீரம் செறிந்த பல போராட்ட சரித்திரங்களாலும் உருவாக்கப்பட்டது. 2002ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழ்த் தேசியத் தலைவரின் உயர்ந்த சிந்தனையின் அடிப்படையில் இந்த வீடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக உருவாக்கப்பட்டது. அந்த வீட்டில் இருந்த அனைவரையும் வெளியேற்றி, தமிழரசுக் கட்சிகளின் தூண்களையும் வெளியேற்றி, மேலும் தென்னிலங்கையின் முகவர் அரசியல் செய்வதற்கு முற்படுகின்ற சுமந்திரனின் தான் தோன்றித் தனமான செயற்பாடு ஒட்டு மொத்த தமிழரசுக் கட்சியையும் அழிக்கும். துரோகத்திற்கு நான் தயார் அல்ல..
  16. https://www.virakesari.lk/article/195618 பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதா இல்லை ஏற்கனவே எடுத்த தீர்மானத்தின் பிரகாரம் ஒதுங்கியிருப்பதா இல்லை பொதுக்கட்டமைப்பின் பங்காளிகளாக அரசியல் கட்சிகளை கட்டுப்படுத்தி வைத்திருப்பதா என்று தீர்மானம் எடுக்க முடியாது சிவில் அமைப்புக்களின் ஒருங்கிணைவான தமிழ் மக்கள் பொதுச்சபை தடுமாற்றத்துக்கு உள்ளாகியுள்ளது. இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பின் பங்காளிகளில் ஒன்றான சிவில் அமைப்புக்களின் ஒருங்கிணைவான தமிழ் மக்கள் பொதுச்சபையானது, ஆரம்பத்தில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியை இணைத்து தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பாக தேர்தலுக்கு முகங்கொடுப்பதென பேச்சுக்களை நடத்தியிருந்தது. பின்னர் இருநாட்கள் அவகாசத்துடன் அக்கட்டமைப்பு விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியுடன் இணைவது பற்றி ஆராய்ந்தது. தொடர்ந்து புலம்பெயர் தரப்பின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து துறைசார்ந்த நபர்களின் கூட்டு ஒன்றுடன் இணைந்து சுயேட்சையாக களமிறங்குவது பற்றி கவனம் செலுத்தியிருந்தது. எனினும் கடந்த 29ஆம் திகதி திருகோணமலையில் கூடிய தமிழ் மக்கள் பொதுச்சபையானது பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்றும் சங்குச் சின்னத்தினைப் தனியொரு அரசியல் தரப்பு பயன்படுத்துவதில்லை என்றும் தீர்மானம் எடுத்து அறிவித்திருந்தது. இதற்குள் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி சங்குச் சின்னத்தினை தனதாக்கிக் கொண்டது. இந்நிலையில், சங்குச் சின்னத்தினை பயன்படுத்தி அரசியல் தரப்பொன்று பயனடைவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று குறிப்பிட்டு திருகோணமலை முடிவை மீளாய்வு செய்யுமாறு வலியுறுத்தப்பட்டது. இதனையடுத்து கடந்த இரண்டு நாட்களாக இணையவழியில் அதுகுறித்து கலந்துரையாடப்பட்டது. எனினும் இரண்டு நாட்களிலும் முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை. இந்தக் கலந்துரையாடல்களின்போது ஒரு தரப்பினர் தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும், தேர்தலில் போட்டியி வேண்டும் என்றும், பிறிதொரு தரப்பினர் திருகோணமலை தீர்மானமான தேர்தலில் போட்டியிடாதிருப்பதை பின்பற்ற வேண்டும் என்றும் அடுத்த தரப்பினர் அரசியல் கட்சிகளுடன் மீள் ஒப்பந்தம் செய்து அவற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்றும் முன்மொழிவுகளைச் செய்துள்ளனர். இதன்காரணமாக, தமிழ் மக்கள் பொதுச்சபையால் உறுதியான ஒரு தீர்மானத்துக்கு வரமுடியாதுள்ளது. இதனைவிடவும் சங்குச் சின்னத்துக்கு ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி உரிமையாளராகியிமையும் பொதுச்சபைக்கு அதிருப்திகளை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே அடுத்த பொதுத்தேர்தலில் எவ்விதமான முடிவினை தமிழ் மக்கள் எடுக்க வேண்டும், அதில் தனது வகிபாகம் எதுவென்று தீர்மானம் எடுக்க முடியாது தடுமாறிவருகின்றது தமிழ் மக்கள் பொதுச்சபை. இந்நிலையில் நேற்று இரவும் இணைய வெளியில் மீண்டும் கூட்டமொன்று நடைபெற்றுள்ளது. எவ்வாறாயினும் குறித்த கூட்டத்தில் உரையாடப்பட்ட விடயங்கள் இச்செய்தி அச்சுக்குச் செல்லும் வரையில் இறுதியாகவில்லை.
  17. நல்ல விடயம் இறக்குமதி குறைய உள்ளுர்விவசாயிகளின் உற்பத்திபெறுமதி அதிகரிக்கும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.