-
சந்தேகத்தில் அழைத்துவரப்படும் 10 மாணவர்களில் 7 பேருக்கு போதை மாத்திரை பயன்படுத்தியமைக்கான பெறுபேறு கிடைக்கப்பெறுகின்றது - யாழ். போதனா வைத்தியசாலையின் சட்டமருத்துவ அதிகாரி
I'm நேரடியாகவே விடயத்துக்கு வருகிறேன் வடமாகாணத்தின் பொறுப்புள்ள அரச பதவியில் இருக்கும் ஒருவரது மகள் புருஷன் திருமணத்துக்கு முன்பு கஞ்சா போதை வஸ்து பாவித்தது நான் அறிவேன். யாழ் கூடாநாட்டில் போதை மற்றும் ரவுடிகளை பணத்துக்காக வெளியில் எடுத்துவிடும் பெண் வக்கீலின் மகளை அதே ரவுடிக்கும்பல் அப்பெண் காதலித்தவனையே கல்யாணம் செய்யச்சொல்லி தெருவில் மிரட்டப்பட்டார் பெண்ணின் தந்தை நீதிவான் தமிழ் அரசியல்வாதிகள் எவரும் இதில் தலையிட மாட்டார்கள் காரணம் எல்லா கட்சிகளுக்கும் ரவுடிக்கும்பல் தேவை
-
சந்தேகத்தில் அழைத்துவரப்படும் 10 மாணவர்களில் 7 பேருக்கு போதை மாத்திரை பயன்படுத்தியமைக்கான பெறுபேறு கிடைக்கப்பெறுகின்றது - யாழ். போதனா வைத்தியசாலையின் சட்டமருத்துவ அதிகாரி
எனக்குச் சிரிப்பாய் இருக்கு இந்தக்கருத்தை வாசிக்கும்போது காரணம், கூறியது யாழ் வைத்தியசாலையின் அதிகாரி வருபவர்கள் அநேகமாக குடாநாட்டைச் சேர்ந்தவர்கள் இவர்கள் எல்லாம் ஒன்னும்தெரியாத பாப்பாக்கள் சிங்களம் திட்டமிடுகிறதாம். எல்லோருக்கும் சுயமாக சிந்திக்கத் தெரியாதாம் அப்பன் ஆத்தை சரியில்லை வளர்ப்பு சரியில்லை.
-
தமிழ் இன அழிப்பு போன்ற கருத்துகள் பகிரப்பட்டால் இனி சட்டம் பாயும் , அரசாங்கம் எச்சரிக்கை.
வடக்கிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட என் பி பி உறுப்பினர்கள் வெட்கம் மானம் இருந்தால் பதவியை விட்டு விலகவும். செத்தவன் கையில் வெத்திலைபோல ஒப்புக்குச் சப்பாணிகள்
-
நாட்டில் உப்பு தட்டுப்பாடு : உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் விளக்கம்!
அகலமான தட்டை பாத்திரத்தில் கடல் தண்ணீரை நிரப்பி ஒரு வாரம் வெயிலின் வைத்தால் உப்பு ரெடி. யாழ் குடாநாட்டில் குடியிருப்புக்கும் கடலுக்கும் இடையிலான தூரம் எங்கிருந்து பார்த்தாலும் ஏழு கிலோ மீட்டர்கள்.
-
தமிழரசு கட்சியில் சுமந்திரனே அதிகாரம் மிக்கவர் – சிறிதரனுக்கு, சிவஞானம் அறிவுரை
தமிழரசுக் கட்சியில் சிவஞானம் வந்ததே அபத்தம் இவரது திருமணம் நடந்தது நல்லூரில் தற்போது உள்ள மாநரசபைக் கட்டிடம் கலியாண மண்டபமாக துரையப்பாவால் கட்டப்பட்டு முதலாவது திருமணம் இவரது திருமணமே ஆரம்பத்தில் அல்பிரட் துரையப்பா விசுவாசி. இவர் நல்லூர் தொகுதி தமிழரசுக்கட்சியின் பொறுப்பில் இருக்கிறார். யாழ் மாநகரசபையின் 15 ம் வட்டாரத்தின் உறுப்பினர் அம்மன்வீதியில் உள்ள யாழ்பாடி விருந்தகத்தில் அழகு நிலையம் நடத்துகிறான் என்று சொல்லி விபசாரவிடுதி நடத்தியவர். அவரது மருமகன் இப்போது நல்லூரடியில் மாமிசம் விக்கும் உணவகத்துக்குச் சொந்தக்காரன். அந்த உணவகத்தில் முதல் உரிமையாளர் இப்போ நடாத்துபவரது மைத்துனர் அவர்தான் போனமுறை நல்லூர் திருவிழாவுக்க போதைப் பொருளை பொட்டலம் கட்டி வித்து பிடிபட்டு சமூகவலைத்தளங்களில் அடிபட்டவர். இப்ப வழக்கு வம்பு என வர கனடாவுக்கு ஓடிவிட்டார். ஊருக்கு ஊர் இப்போ தமிழரசுக்கட்சியில் சுகிர்தன்கள் உலாவுகிறார்கள். சுமந்திரன் இவ்வாறானவர்களை ஏன் உள்வாங்கியுள்ளார் என்றால் பலவீனமானவர்கள் முதுகில் அளிக்கிறுப்பவர்களே பணிந்து போவார்கள். இப்படி ஒரு பிரச்சனையில் சுமந்திரனும் தெரியாத்தனமாக மாட்டுபட்டவர் அது தனது கார் சாரதியின் மைத்துனர் கஞ்சா கடத்தி பிடிபட ரணில்வரைக்கும் விடையம் சென்று வெளியில எடுத்து விட்டவர். அந்த விடையத்தில் சுமந்திரனின் குடும்பி ரணில் கையில் மாட்டுப்பட்டது சிங்களத் தலைமைகளுக்கு நிறையபேர் கடன் பட்டிருக்கினம் அதுதான் எல்லோரும் அவர்களுக்கு முன்னால் பம்முகினம். இதே பாணியைத்தான் சுமந்திரனும் கடைப்பிடித்து ஒரு அடிமைகள் கூட்டத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். நக்குண்டார் நாவிழந்தார். ஒரு பேச்சுக்காக சொல்லுறன் இந்த அடிமைகளிடம் நாம் கேட்டு எமது தேவைகளை நிறைவேற்றுவதை விட நேரடியாக ஒற்றையாகவோ ஒருமித்தோ சிங்களவனிடம் போய்க் கேட்கலாம்.
-
தமிழ் இனப்படுகொலை – கனடாவில் நினைவுச் சின்னம் – நாமல் கொதிக்கிறார்!
இல்லை நமல் கொதிக்கமாட்டார் சந்தோஷப்படுவார் காரணம் கனடாவில் உள்ள இலங்கைத் தமிழர்க்கு தமிழும் தெரியாது ஆங்கிலமும் தெரியாது என.
-
தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு
Monument நினைவுச் சின்னத்துக்கும் நினைவகத்துக்கும் வேறுபாடு தெரியாதவர்கள் தமிழர் உரிமை பெற்றுத்தரப்போகிறார்கள். நம்பிட்டம்
-
மாகாண சபைத் தேர்தலை கால தாமதமின்றி நடத்தக் கோரும் சுமந்திரன்!
சுமந்திரன் இல்லாத ஒரு தமிழர் அரசியல் களம் எதிர்காலத்தில் வருவதற்கான சூழல் இப்போது உருவாகி இருப்பதை சுமந்திரன் உணர்ந்துள்ளார், அதன் வெளிப்பாடே இவரது இந்த அறிக்கை. நான் நினைக்கிறேன் விசையம் சுமந்திரனது கையை மீறிக்கொண்டு போகிறது. இப்படி இருந்தால் சுமந்திரனை எல்லோரும் மறந்துவிடக்கூடியநிலை வரும் என அவர்நினைக்கிறார்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
இது தேர்தல்க் கணக்கு, தமிழரசுக் கட்சி 63327 + சங்கு 22513 மாம்பழம் 7496 --------------- 93336 --------------- இவைகளுடன் சுயெட்சை கட்சி 17 க்குச் (ஊசிச்சின்னம்) சென்ற வாக்குகள் சேர்ந்தால் ஊசி + 93336 121322 வாக்குகள் மேற்கூறிய 121322 வாக்குகளுடன் சைக்கிள் கட்சி பெற்ற வாக்குகள் சேர்த்தால் 149308 வாக்குகள் இந்த வாக்குகள் யாவும் சிந்தாமல் சிதறாமல் தமிழ்த்தேசிய அரசியலை நல்ல நேர்மையான முறையில் கடைப்பிடித்தால் யாழ் தேர்தல் மாவட்டத்தில் 149308 வாக்குகளைப் பெறலாம். இலங்கைத் தேர்தலில் விகிதாசார நடைமுறையின்மூலம் தேசியக்கட்சிகள் பெற்றுக்கொள்ளக்குடிய வபாராளுமன்ற உறுப்புரிமையை ஒன்றுடன் மட்டுப்படுத்தியிருக்கலாம். தவிர இமூறை எதிர்கொண்ட அனுர அலையை வெற்றிகரமாகச் சமாளித்திருக்கலாம். அனுர தரப்புக்கு கிடைத்த வாக்குகள் அனைத்தும் அதாவது அங்கஜன் டக்ளஸ் மற்றும் விஜயகலா ஆகியோர் கடந்த தேர்தலில் பெற்ற வாக்குகளைலிருந்து இம்முறை அங்கஜன் டக்ளஸ் ஆகிய இருவரும் பெற்ற வாக்குகளைக கழித்து வரும் வாக்குகளின் கூட்டுத்தொகையே இம்முறை அனுர தரப்புப் பெற்றுக்கொண்டது.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
தேர்தல் கணக்கு 2020 ம் ஆண்டு, டக்லஸ் 45927 அங்கஜன் 49373 விஜயகலா 6522 மேற்கூறிய முவரதும் மொத்த வாக்குகள் 108344. இவைகள் அனைத்தும் தமிழ்தேசியத்தை தவிர்த்த வாக்குகள். இம்முறை விஜயகலா நீங்கலாக டக்ளஸ் அங்கஜன் பெற்றவாக்குகள் கூட்டுத்தொகை 30157 மட்டுமே. இம்முறை யாழில் தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்த வாக்குகள் 80000. யாழ் மக்கள் துரோகிகள் இல்லை தமிழ்த்தேசியக் கட்சிகள் என்று சொல்லிக் கன்னைபிரித்து ஆடினாங்களே அவங்களும் அவங்களைப் பிரித்த சுமந்திரனுமே துரோகிகள். இதில் டாக்குத்தர் என்பவருக்கு கிடைத்த வாக்குகளும் தமிழ்த்தேசியப் பரப்பின் வாக்குகளின் ஒரு பகுதியே.
-
தமிழரசு விரும்பினால் எம்முடன் இணையட்டும்; சுரேஷ் பிரேமச்சந்திரன்!
மண்டையன் குழுத் தலைவருக்கு இன்னமும் குசும்பு குறையவில்லை
-
தமிழ் கட்சிகள் யாழில் அவசர சந்திப்பு
ஒரு விடையம் சிலவேளை எல்லோருக்கும் மனச்சங்கடத்தை ஏற்படுத்தலாம், தாயகத்திலிருந்து வரும் செய்திகள் அவ்வளவு நல்லதாக இல்லை தவிர புலம்பெயர்தேசங்களிலிம் தமிழர்கள் மாற்றி யோசிக்கத் தொடங்கிவிட்டார்கள். முதாலவ்து தாயகத்தில் எங்களது அரசியல்வாதிகளது தகிடிதித்தங்களால் வெறுப்படைந்தோர் குறிப்பாக இளையோர் அனுரவுக்கு வாக்களித்தல் என்ன எனும் நிலைக்கு வந்துவிட்டார்கள். இரண்டாவது புலம்பெயர் சிங்களவர்களது ஒன்றுபட்ட நிலைப்பாடு அனுரவர பெரிதும் உதவியது அதை தாயகத்தில் உள்ள அவர்களது உறவுகளும் ஆமோதித்தனர். ஆனால் புலம்பெயர் தேசங்களில் உள்ள தமிழர்களது உறவுகள் கூறும் அபிப்பிராயங்களுக்கு தாயகத்தில் வேறு விதமான விமர்சனங்களை முன்வைக்கிறார்கள் உதாரணமாக படிப்பிப்பாட்டைவிட்டு வெளிநாட்டுக்குக் கழுவப் போனவர்கள் எங்களுக்குப் புத்தி சொல்லக்கூடாது எனும் சிந்தனை எல்லா அரசியல் தலைவர்களிலிருந்து அடிமட்ட வாக்காளன் வரைக்கும் இருக்குது என அறிய வருகிறது. அனேகமாக இனிமேல் தமிழ் அரசியல்வாதிகளை வழிக்குக் கொண்டுவருவதாகில் அனுரவுக்கு வாக்களிப்பதே நல்லது என்பதே தாயகத்து மக்களது அபிப்பிராயம்
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
எங்கையிருந்து இந்தக்காசு வந்தது? ஏன் குவாடரையும் கோழிப்புறியாணியையும் மறந்துவிட்டார்கள்? வெற்றிலையை வைத்து குழதைமேல் சத்தியம் வாங்கினார்களா? இனிமேல் தமிழ்நாட்டு மக்களை விமர்சிக்க எவருக்கும் யோக்கியதை இல்லை.
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
இலங்கை அதிபர் தேர்தலில் தமிழர்தரப்பின் ஒருசாரரால் கொண்டுவரப்பட்ட பொதுவேட்பாளர் விடையத்தில் இந்தியாவின் பங்கு அதிகமாக இருந்தது இதில் இந்தியாவின் நேரடி கைத்தடியாக இருக்கும் மண்டையன் குழுத் தலைவன் சுரேஸ் பிரேமச்சந்திரனது பிரசன்னம் இருக்கும்போதே அவதானித்த ஒன்றுதான். எனினும் யாழ் கருத்துக் களத்தில் வேறு ஒரு திரியில் "பொதுவேட்பாளரை முன்னிறுத்துவது வரலாற்றுப்பிழை" எனக்குறிப்பிட்டிருந்ததாக நினைவு. வடக்குக் கிழக்கிலிருந்து வரும் தேர்தல் முடிவு நிலைகளின்படி அரியனேந்திரன் அவர்கள் பெற்ற வாக்குகள், தெற்கின் ஏனைய முண்ணணி வேட்பாளர்கள் வடக்குக் கிழக்கில் பெற்ற வாக்குகளின் கூட்டுத்தொகையைவிடக் குறைவு என்பது புலப்படுகிறது. இதன்மூலம் எதிர்வரும் காலங்களில் வடக்குக் கிழக்கின் தமிழ் மக்கள் தமிழர் தரப்பு அரசியல்வாதிகள் வைக்கும் கோரிக்கை எதுவும் மக்களின் ஆதரவுடன் இல்லாதது என சிங்களத்தரப்பு, இந்தியா, சர்வதேசம் ஆகியன நேரடியாகக் கூறாதுவிடினும் அதை எடுகோளாக வைத்தே அரசியல் காய்களை நகர்த்தும். இக்கட்டான சூழலில் எமது கோரிக்கைகளுக்குச் செவிசாய்ப்பதுபோல் பாவனை செய்தாலும் மேலும் மேலும் தமிழர் தரப்பைப் பலவீனப்படுத்தி தமிழர் கோரிக்கைகளை மலினப்படுத்துவதற்கான முன்னேற்பாடே பொதுவேட்பாளர். காலம் காலமாக அதிகாரத்தில் வருபவர்கள் இரன்டு முக்கிய கட்சியிலிருந்து வந்தாலும் அவர்கள் தமிழர் தரப்பைப் பலவீனப்படுத்தி அவர்களது கோரிக்கைகளைச் சிறுக்கச்செய்யும் மூலோபாயத்துடன் நடந்துகொண்டது வரலாறு. இதன்மூலம் சிங்களத் தலைமைகளில் எவரும் தமிழர்க்கான உரிமை விடையத்தில் ஒரேமாதிரியான கொள்கையுடயவர்கள் என உலகம் அறிந்தாலும் தமிலர் தரப்பின் மீதான பிரித்தாளுகையின் காரணமான பலயீனம் எம்மை உய்யவிடாது. மாறாக இந்த இரண்டு தரப்பையும் தவிர்த்து இன்னுமொரு தரப்பு அதிகாரத்தில் வந்தாலும் அத்தரப்பும் எமக்கான உரிமைபற்றி கவனத்தில் எடுக்காது என்பதை நிரூபிக்கக்கூடிய சந்தர்ப்பமாக ஜே வி பியின் அனுரகுமார தேர்தலில் வந்துள்ளார். ஆனால் அப்படியான் ஒரு நல்ல வாய்ப்பையும் தமிழர்தரப்பு இல்லாதொழித்து சயித் அல்லது ரணில் எனும் தெரிவிலிருந்து மாறாது மாறி மாறி வாக்களித்து தங்கள் தலையில் தாங்களே மண் அல்லிப்போட்டது மட்டுமன்றி, "அரகலயவைத்" தொடர்ந்து ராஜபக்சேக்களைச் சிங்களவர்களது கோபத்திலிருந்து தப்பவைத்த ரனில் மேலிருந்த கோபத்தின் வெளிப்பாட்டின் காரணமாக முண்ணணிப்போட்டியாளராக வந்த அனுரவைத் தொற்கடிக்கக் காரணமாகி, சிங்கள இனம் இத்தீவில் வாலும் இன்னுமொரு இனம் எனினும் அவர்களது அபிலாசைகளிலும் மண் அல்லிப்போட்டுவிட்டார்கள். கூடிய விரைவில்நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுவெளியில் நாம் இப்போது விமர்சிக்கும் தமில் அரசியல்வாதிகளை அகற்றி தமில் மக்கள் ஜனநாயக முறையில் தங்களது பிரதிநிதிகளை தேர்வுசெய்து நாடாளுமன்றம் அனுப்பக்கூடிய சந்தர்ப்பத்தையும் இழந்து நிற்கிறது. ராஜபக்சேக்களது அரசியலை முறியடித்து அவர்களைக் களத்திலிருந்து அப்புறப்படுத்தக்கூடிய பழிவாங்கும் சந்தர்ப்பம் தமிழர்க்கு இருந்தும் அதைக் கோட்டைவிட்டுவிட்டதும் இத்தேர்தல்மூலம் நடந்துள்ளது. ரணில் அல்லது சஜித் யாராவது பதவிக்கு வரவேண்டுமென்பது தமிழர்களது அடிப்படைப்பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கான நல்நோக்கத்துக்காக இல்லை, மாறாக குறுகியகாலநலஙளுக்கானதேயாகும். இங்கு புலம் பெயர் தமிழர்களாகிய நாங்கள் எவ்வளவு குத்திமுறிந்தாலும் அவர்களது நடைமுரை அரசியலை அவர்களே தீர்மானிக்கவேண்டும் என்பதே நியாயமானதும் நிதர்சனமானதுமாகும். எனினும் தொலைபேசிக்கும் கல்குலேற்றருக்கும் வித்தியாசம் தெரியாத வாக்களர்களையும் தமிழர்கள் கொண்டிருக்கிறார்கள் என்பதை பியதாசாவே நினைத்துக் கவலைப்படுவார். எம்மால் எழுத்துக்களில் மீது விரல்களால் குத்தி எமது ஆதங்கத்தை மட்டும் தெரிவிக்கலாம். தீர்மானம் செய்யவேண்டியவர்கள் அவர்கள், நாம் அவர்களிலிருந்து விலத்தியிருப்பதே நாம் அவர்களுக்குச் செய்யும் உதவி. எமது வளம்பெற்ற வாழ்க்கைக்கு உதிரம் சொரிந்த மாவீரநினைவேந்தலுடன் புலம்பெயர் தமிழ்ச் சமூகம் தாயக அரசியல் தமிலர் விடிவு ஆகியவற்றிலிருந்து விலகியிருப்பதே தாயகத்தில் இருக்கும் எமது உறவுகளுக்கு நாம் செய்யக்கூடிய உதவி. ஆகவே இது ஒன்றும் பெருய விடையம் இல்லை.
-
12 வயது மாணவன் ஐஸ் போதைப் பொருள் பாவித்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதி
மேற்குலகில் இப்போது ஸ்பீட் எனும் வாகனங்களில் வேகத்தை அதிகரிப்பதற்கு பெட்ரோலுடன் மேலதிகமாகச் சேர்க்கும் ஒரு திரவத்தை போதைக்காக இழுக்கிறார்கள். அதன் வெற்றுச் சிலின்டர்கள் தெருவோரம் எங்கும் பரவிக்கிடக்குது. அரசாங்கம் அதைப்பற்றிக் கண்டுகொள்வதில்லையோ எனக் கேள்வி எழுகுது.