Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

kandiah Thillaivinayagalingam

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by kandiah Thillaivinayagalingam

  1. 'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 42 மூன்று வகையான போதனைத் திரட்டுகளை உள்ளடக்கிய திரிபிடகம் [Tripitaka] கௌதம புத்தரின் பல்வேறுபட்ட போதனைகள் கொண்ட பௌத்தர்களின் மூலமான புனித நூல். இதுவும் மகாவம்சமும் பாளி மொழியில் எழுதப் பட்டவை. எனவே பாளி மொழியியை நன்கு தெரியாத சாதாரண பொதுமக்கள் இந்த இரண்டிற்கும் இடையில் உள்ள வேறுபாட்டை அறிய மாட்டார்கள். எனவே புத்த பிக்குகள் மகாவம்சத்தை போதிக்கும் பொழுது, பாமர மக்கள் எந்த கேள்வியும் எழுப்பாமல், அவை புத்தரின் உண்மை வாக்கியங்கள் என ஏற்றுக் கொள்கிறார்கள். உதாரணமாக, புத்தர் அல்ல, மகாநாம தேரர் தான் சொல்கிறார், புத்த மதம் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு மேலோங்கி இருக்கும், சிங்களவர்கள் மட்டுமே அதை "பாதுகாக்க" வேண்டும் [Mahanama said, (NOT the Buddha), that Buddhism will prevail, for five-thousand years, and the Sinhalese alone, must “protect” it.] என்று! ஆயிரத்தி ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே, இலங்கையின் புத்த தேரர்கள், புத்த தத்துவத்தை சிங்கள இனத்தின் மதமாக மாற்றி, அதன் வரலாற்றை, உதாரணமாக மகாவம்சப்படி பிரச்சாரம் செய்தது. எனவே இந்த காலப் பகுதியில், பௌத்தர்கள் தவறாக வழிநடத்தப்பட்டு, ஏமாற்றப்பட்டு, புத்த தேரர்களால் பொய் பரப்புரை செய்யப் பட்டுள்ளார்கள். இவர்கள், தத்துவத்தை மதமாக ஆக்கி, புத்தரையும் கடவுளாக மாற்றி, தம்மை அவரின் மதிப்பிற்கும் வழிபாட்டிற்கும் உரிய தூதர்களாக மாற்றி, புத்தரின் உண்மையான போதனைகளை புறக்கணித்துள்ளார்கள். [By converting the philosophy into a religion, Buddhist monks, also converted the Buddha, into a ‘God’, and themselves, as his ‘Messengers’, who must be revered and worshiped; totally disregarding the Buddha’s words]. எனவே மகாவம்ச பௌத்தத்தில், உண்மையில் புத்தரின் அறநெறியான சகிப்புத்தன்மை மற்றும் இரக்கம் என்பனவற்றிற்கு இடமே இல்லை. [In Mahavamsa Buddhism, there is no place, for the Buddha’s Dhamma, of tolerance and compassion!]. அதை இன்று இலங்கையில் தமிழர்களுக்கு, தமிழ் பிரதேசங்களில் நடைபெறும் அரச இயந்திரங்களின் அல்லது புத்த குருமார்களின் செயல்களில் இருந்து அறியலாம், உதாரணமாக, பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் பாராளுமன்றத்தில் ஏப்ரல் மாதம், 25 ஆம் திகதி 2023, செய்வாய்க்கிழமை சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் தமிழ் பேசும் இனத்திற்கு பாதகமான அதன் கடுமையான விளைவுகளை கருத்தில் கொண்டு அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவும், தமிழ் பேசும் இனத்தின் இருப்பை கேள்விக்குறியாக்கும் பேரினவாத அரசின் திட்டமிட்ட, தமிழரின் சுயநிர்ணய உரிமையை நீர்த்துப் போக வைக்கும் வகையில் தமிழர் தாயக மண்ணில் முன்னெடுக்கப்பட்டு வரும் நில அபகரிப்பு, குடியேற்றங்களின் மூலம் குடிப்பரம்பலை சிதைத்தல், தமிழர் தொன்மையை வெளிப்படுத்தும் சான்றுககளை அழித்தொழித்தல், இதற்கு ஏதுவாக தமிழ் மக்களின் தொன்மையை வெளிப்படுத்தும் சான்றுகளான சைவ ஆலயங்களை இடித்தும், அழித்தும், பௌத்த சின்னங்களை நிறுவியும், இந்நாட்டின் பூர்வீக குடிகளான தமிழ் மக்களின் வரலாற்றை சிதைக்கும் அரசின் அனைத்து கட்டமைப்புக்களின் செயற்பாட்டை எதிர்த்தும், அரசியல் கட்சிகள், மத அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள், பொது கட்டமைப்புக்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மாணவர்கள் மற்றும் தமிழ் தேசியப் பற்றாளர்கள் என அனைத்து மக்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் 25.04.2023 அன்று தமிழர் தாயகப் பிரதேசத்தில் அனைத்து வர்த்தக நிர்வாக சேவைகளை முடக்கி வடக்கு – கிழக்கு தழுவிய பூரண ஹர்த்தால் ஏற்பாடு செய்ததை கூறலாம். ஏறத்தாழ ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளை மட்டும் உள்ளடக்கிய மகாவம்சம் என்ற புராணக் கதைகளை [mythical narrations] அடிப்படையாக வரிந்து கட்டிக் கொண்டு, ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக மகிழ்வாக அனுபவித்த பன்மொழி நடைமுறை, பன்முக கலாச்சாரம் மற்றும் சர்வதேச வரலாறுகள் [multilingual, multicultural and even international history] எல்லாவற்றையும் மூடி மறைக்கப் பட்டுள்ளது. எனவே நாம் சரியான வரலாற்றை விஞ்ஞான, தொல்பொருள், கல்வெட்டு மற்றும் பயண சான்றுகளுடன் எங்கள் வருங்கால சந்ததியினருக்கு, இளைஞர்களுக்கு வழங்க நேரம் வந்துவிட்டது. அப்படியானால் தான் தேசிய மட்டத்தில் விதைக்கப்படுள்ள வெறுப்புகளும் மற்றும் அடிமைப்படுத்தும் செயல்களும் [nationalistic hatred and enslavement] முடிவுக்கு கொண்டுவர முடியும். "எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்ப தறிவு" என்ற இரண்டாயிரம் ஆண்டுகளிற்கு முற்பட்ட குறள் 423 யை மனதில் கொண்டும் , "எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய் நுண்பொருள் காண்ப தறிவு" என்ற குறள் 424 வழியில், இந்த நூறாண்டு வங்காள பல்துறையறிஞர் இரவீந்தரநாத் தாகூர் (Rabindranath Tagore), எமக்கு இன்று தந்துள்ள தேவையான மெய்யறிவு இலங்கைக்கும் பொருந்தும். 1913-ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற அவர் உண்மையில் கீதாஞ்சலி எனும் கவிதைத் தொகுப்பை ஒரு சுதந்திர இந்தியா பற்றிய அவரது கனவுகளை கவிதைகளாக சாமர்ப்பித்தாலும், அது அனைத்துத் தரப்பிற்கும், ஏன் இன்று இலங்கைக்கும் கூட பொருந்தக் கூடியதாகவே உள்ளது. எல்லா இனங்கள் மற்றும் மத மக்களும் தங்களை தேசிய அடிமை என்ற சங்கிலிகளிலிருந்து தங்களை விடுவிக்க [for people of all breeds and creeds, to free themselves from the chains of nationalistic enslavement] இப்ப தருணம் வந்து விட்டது என்று எண்ணுகிறேன்!! "இதயம் எங்கே அச்சமின்றி உள்ளதோ, எங்கே தலை நிமிர்ந்து நிற்கிறதோ, அறிவு வளர்ச்சிக்கு எங்கே பூரண விடுதலை உள்ளதோ, குடும்பத்தின் குறுகிய தடைப்பாடுகளால் வெளி உலகின் ஒருமைப்பாடு எங்கே உடைபட்டுத் துண்டுகளாய்ப் போய்விட படவில்லையோ, வாய்ச் சொற்கள் எங்கே மெய்நெறிகளின் அடிப்படையிலிருந்து வெளிப்படையாய் வருகின்றனவோ, விடாமுயற்சி எங்கே தளர்ச்சி யின்றி பூரணத்துவம் நோக்கி தனது கரங்களை நீட்டுகிறதோ, அடிப்படை தேடிச் செல்லும் தெளிந்த அறிவோட்டம் எங்கே பாழடைந்த பழக்கம் என்னும் பாலை மணலில் வழி தவறிப் போய்விட வில்லையோ, நோக்கம் விரியவும், ஆக்கவினை புரியவும் இதயத்தை எங்கே வழிநடத்திச் செல்கிறாயோ, அந்த விடுதலைச் சுவர்க்க பூமியில் எந்தன் பிதாவே! விழித்தெழுக என் தேசம்! "Where The Mind Is Without Fear" "Where the mind is without fear and the head is held high Where knowledge is free Where the world has not been broken up into fragments By narrow domestic walls Where words come out from the depth of truth Where tireless striving stretches its arms towards perfection Where the clear stream of reason has not lost its way Into the dreary desert sand of dead habit Where the mind is led forward by thee Into ever-widening thought and action Into that heaven of freedom, my Father, let my country awake" [இந்தியக் கவிஞர் இரவீந்திரநாத் தாகூர் வங்காள மொழியில் எழுதிய “Where the mind is without fear and the head is held high; Where knowledge is free;" கவிதைத் தொகுப்பு கீதாஞ்சலி (Gitanjali) / தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா] [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] முடிவுற்றது
  2. 'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 41 இலங்கை வரலாற்றை ஓலையில் எழுதப்பட்ட கையெழுத்துப் பிரதிகள் [Ola manuscripts], நீண்ட காலத்துக்கு நின்றுபிடிக்காது. அத்துடன் புத்த பிக்குகள், பொது மக்கள் வழங்கும் அன்னதானத்தில் வாழ்வதால், அவர்கள் சமைப்பது இல்லை. ஆகவே அவர்களின் மடம் அல்லது தங்கும் இடம் சமையல் அற்ற, வெப்பம் புகைகள் அற்ற இடமாகும். இதனால் அவர்களே அதைப் பாது காத்தனர். என்றாலும் இவையும் ஒரு காலத்தின் பின் கெடலாம். ஆகவே திருப்பி திருப்பி புதுப்பிக்க வேண்டும் [Ola manuscripts need to be copied before they become friable and crumbling]. இந்த பொறுப்பும் அவர்களை சார்ந்ததாக மாறியது அல்லது அவர்களே எடுத்துக் கொண்டார்கள். இந்த நேரங்களில் தான் அவை மூலப்பிரதியில் இருந்து சிலவற்றை அழிக்கவும், தமக்கு விரும்பியதை செருகவும் மற்றும் சிதைக்கவும் அவர்களால் முடிந்து இருக்கும் என்று நம்புகிறேன். இதனால் தான் தமிழர் விரோத உணர்வு மெல்ல மெல்ல கட்டப்பட்டது எனலாம். இதை தீபவம்சம், மகாவம்சம் , சூளவம்சம், இராசாவலி ஊடாக அறியலாம். தமிழர் விரோத உணர்வு அற்ற தீபவம்சம், பிற்பாடு வந்த நூல்களில் கூடிக்கொண்டு போவதை எவரும் இலகுவாக அறியலாம். நான் இந்த நீண்ட கட்டுரையை முடிக்க முன்பு, பௌத்தத்தைப் பற்றி, புத்தரைப் பற்றி சில வார்த்தைகள் சொல்லலாம் என்று எண்ணுகிறேன். உண்மையான புத்த போதனையில் சாதி இல்லை; கடவுள் இல்லை. புத்தம் என்பதன் பொருளே அறிவு (புத்தி) என்பதுதான். புத்தர் அன்பினை வலியுறுத்தியவர். சாதிகளுக்கு எதிரானவர். அன்புதான் உலக ஜோதி, அன்பு தான் இன்ப ஊற்று, அன்புதான் உலக மகா சக்தி என்று மக்களுக்குப் போதித்து வந்தவர் சித்தார்த்தன் எனும் பெயர் கொண்ட இந்த புத்த பெருமான் என்பது குறிப்பிடத் தக்கது. புத்தரை பற்றி கூறுவது என்றால், அவருக்கு முதலில் அரண்மனை வாழ்க்கை பிடிக்கவில்லை. அமைதியை இழந்தார். இவ்வுலக வாழ்க்கையில் கண்ணுற்ற துன்பங்களைப் பற்றி ஆராயத் தொடங்கினார். ஒரு நாள் இவர் வெளியே சென்றுக் கொண்டிருந்த போது கண்ட காட்சிகள் இவர் மனதை வெகுவாக புண்படுத்தின. வயது முதிர்ந்த ஒரு மனிதரையும், நோயாளி ஒருவரையும், பிணம் ஒன்றையும், துறவி ஒருவரையும் கண்டார். இதனால் மனம் கலங்கினார். இதற்கு முன்னால் இது போன்ற காட்சிகளையும் இவர் நேரில் கண்டதில்லை. ஆகையால் இத்தகைய காட்சிகள் இவரது சிந்தனைகளை வெகுவாகத் தாக்கியது. இதன் விளைவே அவரின் துறவறம் ஆகும். அதன் பின் ஞானோதயம் பெற்ற புத்தர், வாரனாசியின் அருகாமையிலுள்ள சாரநாத் என்னுமிடத்திலுள்ள "மான் பூங்கா" என்னுமிடத்தில் தன் கொள்கையை போதிக்கத் தொடங்கினார். 45 ஆண்டுகள் அயோத்தி, பீகார், அதையடுத்த பகுதிகளின் மக்களுக்கும், மன்னருக்கும் தாம் கண்ட பேருண்மையை ஊர் ஊராகச் சென்று பரப்பினார். இராஜகிரகத்தில் இரண்டாவது, மூன்றாவது, நான்காவது போதனைகளை நடத்தி வெற்றிகண்டார். அப்படியே, கபிலவஸ்துவில் ராகுல், மகா பிரஜாபதி ஆகியோரை தன் சமயத்தில் சேர்த்துக் கொண்டார். மகத மன்னர்களான பிம்பிசாரர், அஜாதசத்துரு ஆகியோர்களை பௌத்த சமயத்தை தழுவும்படி செய்தார். கோசல நாட்டிற்கும் சென்று பலரை பௌத்தத்தை தழுவிட வழிகோலினார். இந்த இடங்களிலெல்லாம் அவரது நான்கு உண்மைகளையும், "நான்கு அதிசய சத்தியங்களையும்", "எண் வகை வழிகளையும்" கூறினார். பிறகு தனது 80-வது வயதில், குசி நகரத்தில் கி.மு. 486-ல் உயிர் நீத்தார். கி.மு. 3-ம் நூற்றாண்டு வட இந்தியா, கிழக்கிந்தியா, இலங்கை ஆகிய இடங்களில் புத்த மதம் பரவி இருந்தது. கி.பி. முதலாம் நூற்றாண்டில் புத்தமதம் கிழக்கு நாடுகளுக்கு பரவியது. கி.பி. 7-ம் நூற்றாண்டில் திபெத்திற்குச் சென்றது. ஒரு சமயம் புத்தரைப் பல சித்திகள் தெரிந்த சித்தர் ஒருவர் சந்தித்தார். புத்தரிடம் உயிருள்ள சிப்பி ஒன்றைக் கொடுத்த அந்த சித்தர், "இந்த சிப்பிக்குள் விலை உயர்ந்த முத்து உள்ளது. சிப்பியை உடைத்து முத்தை எடுத்துக் கொள்ளுங்கள்" என்றார். அதற்கு புத்தர்,"முத்து எவ்வளவு விலை உயர்ந்ததாகவும் இருக்கட்டுமே! ஓர் உயிரைக் கொல்வது என்பது என்னால் முடியாது! சிப்பியை நீயே எடுத்துச் செல்" என்று சொல்லி விட்டார். இன்னும் ஒருமுறை, பெரியவர் ஒருவருக்கு புத்தரின் மீது கடுங்கோபம். தன் மகன் திருமணம் செய்து கொள்ளாமல் புத்தரின் சீடனாகி விட்டான் என்பதே அவரது கோபத்துக்கு காரணம். ஒருநாள் அந்த பெரியவரின் ஊர் வழியாக புத்தர் சொற்பொழிவுக்கு செல்ல வேண்டியிருந்தது. இதை அறிந்து அந்த பெரியவர் புத்தரை வழிமறித்து திட்டத் தொடங்கினார். வாய்க்கு வந்தபடி அசிங்கமான வார்த்தைகளை பிரயோகித்து திட்டினார். புத்தர் கொஞ்சமும் கோபப்படவில்லை. வெகுநேரம் வழிமறித்து திட்டிக் கொண்டே இருந்ததால் போதனைக்கு செல்ல நேரமாகியது. உடனே திட்டிய பெரியவரின் கையைப் பிடித்து, “பெரியவரே எனக்கு சொற்பொழிவாற்ற நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இப்போது என்னை போக விடுங்கள். இன்று மாலை இதே வழியில்தான் சொற்பொழிவு முடிந்து திரும்பி வருவேன். திட்டுவதற்கு இன்னமும் இருந்தால் அப்போது திட்டுங்கள்,” என்றார். இது தான் உண்மையான புத்தரின் செயல்பாடும் அவரின் போதனைகளும் ஆகும். ஆகவே நாம் இந்த நோக்கில் மகாவம்சத்தை படித்தால், அதில் உள்ள உண்மையும் பொய்யும் தானே வெளிப்படும். அதுமட்டும் அல்ல, இலங்கை புத்தரை போற்றும் வெறும் வழிபாட்டாளர்களாக மாறினார்கள் தவிர, அவரின் எந்த முதன்மை கொள்கையையும் பின்பற்றுபவர்களாக மாறவில்லை. [But Srilanka now have become mere worshipers of buddha but not true followers. That is the primary misleading conception is that Sri Lanka is a mere worshiping-nation but not a thinking-nation.] இப்படியான சூழலில் இலங்கை புத்த சமய மக்கள் தங்களது அறியாமை, சமய அடிப்படைவாதம் மற்றும் தேசியவாதத்தால் [with their ignorance, religious fundamentalism, and nationalism] அவர்கள் உண்மையான புத்தர் போதனையை பிரதிபலிக்க அல்லது புரிந்து கொள்ள முயற்சி செய்வார்கள் என்று நான் நம்பவில்லை. அதனால் தான் இன்று தமிழர் வாழ்விடங்கள் எங்கும் புத்தர் சிலைகள், தொல்பொருள் திணைக்களம் மற்றும் அரசநிறுவனங்கள், புத்தகுருமார்கள், அரசு படைகள் துணையுடன் பல்பொருள் அங்காடிகள் போல் முளைக்கின்றன, இது புத்தரின் எடுத்துக்காட்டுக்கு முற்றிலும் வேறுபட்டது [Buddha led a life of self-emptying. It was His praxis of liberation.] . [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] இறுதி பகுதி: 42 தொடரும்
  3. "கார்த்திகை தீபம்" "கார்த்திகை திருநாள் தீபம் ஒளிர்ந்து காலத்தின் வரலாற்றை இன்று சொல்லுது! கார்த்திகை காதில் கனமகர குண்டலம்போல் காரிருளை அகற்றி வெளிச்சம் தருகுது!" "காக்கை வன்னியன் இன்றும் இருக்கிறான் காசுக்கு தன் இனத்தையே விற்கிறான் காட்டிக் கொடுத்து அடிமை ஆக்கிறான் காரணம் கேட்டால் எதோ மழுப்புறான்!" "காணும் காட்சிகள் இருளை கொடுக்குது காது கேட்பதும் பொய்யாய் தெரியுது காதல் புரிந்தே கொலையும் செய்கிறான் கார்த்திகை தீபம் உண்மை பரப்பட்டும்!" "ஈன்றவள் இல்லை இணைந்தவள் இல்லை இருந்ததும் இல்லை நிலமும் இல்லை சிதைந்து போராடி வெற்றியும் இல்லை புதைந்து போனது மண்ணின் மைந்தர்களே" "கார்த்திகை தீபம் அன்றும் ஏற்றினோம் நடுகல் நட்டு வாழ்த்தி வணங்கினோம் நீதி வேண்டி சிலம்பை உடைத்தோம் நியாயம் வேண்டி உலகை கேட்கிறோம்" "ஒன்றாய் கூடு உண்மையை உரை நியாயம் நிறுத்து விசாரணை எடு கவலை மறக்க தீர்வை தா கேள்வி கேட்டு நடுக்கல் முழங்குது!” "வேலி நோக்கிய விளக்கு நிலையும் போலித் தலைவரைக் சுட்டிக் காட்டட்டும் நீலிக் கண்ணீர் வடிப்பவரைச் சொல்லட்டும் வாலிப உள்ளங்களுக்கு உற்சாகம் கொட்டட்டும்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] 'வேலி நோக்கிய விளக்கு நிலையும்' [தொல்.பொருள்.புறத்திணை இயல்-35] – என்ற சூத்திர வரிகளுக்குப் பொருள் கூறுகையில் “கார்த்திகைத் திங்கள் கார்த்திகை நாளில் ஏற்றிய விளக்கு” என்று உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர் உரை வகுத்துள்ளார்
  4. "கலங்காதே மகனே" கவலைப்படாதே / கலங்காதே நாம் அடிக்கடி கேட்கும் ஒரு ஆறுதல் வார்த்தை. எமது மனதை அறியக்கூடிய ஒரு கருவி இருக்குமாயின், எம் வாழ்வில் பலதடவை கட்டாயம் இந்த வார்த்தை எதிர் ஒலித்து இருக்கும். கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக மிக மகிழ்வாக இருந்த என் மகன் இன்று கவலையுடன் கணனியில் இருப்பதைக் கண்டேன். எனக்கு என்ன நடந்தது என்று புரியவில்லை. எது எப்படியாகினும் அவன் அருகில் சென்று, முதுகில் தட்டி ஆறுதல் படுத்தி 'கலங்காதே மகனே' என அவனுக்கு ஒரு தெம்பு கொடுத்தேன். அது நாம் முதல் கட்டாயம் செய்யவேண்டிய ஒன்று! இரு ஆண்டுக்கு முன்பு, அவன் உயிருக்கு உயிராய் காதலித்த அவனின் சக மாணவி, இறுதி ஆண்டில் மிக திறமையாக சித்தியடைந்தாள். அதுவரை அவளும் என் மகனையே விரும்பி, அன்னியோன்னியமாக நெருக்கமாக இருந்தவள், இப்ப அதே பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளராக பதவி பெற்றதும், என் மகனில் இருந்து ஒரேயடியாக விலக தொடங்கினாள். மகன் சந்திக்கப் போனால், யாரோ தெரியாதவன் போல. கண்டும் காணாமல் விலகி விலகிப் போனாள். பிறகு தான் மகனுக்கு தெரிய வந்தது, அவள் ஒரு மூத்த விரிவுரையாளர் ஒருவரை இப்ப காதலிக்க தொடங்கி விட்டாள் என்று! தாய் இல்லாமல் வளர்ந்தவன் என்பதால், நான் செல்லமாகவே அவனை வளர்த்து விட்டேன். அது தான் அவனால் எந்த சோகங்களையும் தாங்கும் வல்லமை குறைவாக காணப்பட்டது. அவன் அன்று வீட்டிற்கு வந்து கட்டிலின் ஒரு மூலையில் முடங்கி கிடந்துவிட்டான். காதலையே பணத்துக்கும் பதவிக்கும் மாற்றும் இப்படியானவளை கல்யாணம் கட்டி வாழ்வதை விட, அவளை மறந்து ஒரு புது வாழ்வை ஆரம்பிப்பதே நல்லது என்று ஆறுதல் கூறி, அவனை ஒரு பொழுதுபோக்காக, நடந்தவற்றை மறக்கவும் வெளியே கூட்டிச் சென்றேன். நான் பொதுவாக சமயத்திலோ ஆண்டவனிலோ நம்பிக்கை இல்லை. ஆனால் என் மனைவி அதற்கு எதிர் மாறு. அவள் எதாவது துக்கம் அல்லது மகிழ்வு நடந்தால், நயினாதீவில் உள்ள நாகபூசணி அம்மன் கோயில் போய் வழிபடுவது வழமை. அவள் எப்பவும் தன் மகனையும் அங்கு கூட்டிப் போவார். ஆகவே மகனுக்கும் அந்தப் பழக்கம், தாயின் மேல் உள்ள அதி உயர் மதிப்பினால் தானாகவே வந்துவிட்டது. நான் அதை தடுக்கவில்லை. அவன் இப்ப தான் அங்கேதான் தான் போகவேண்டும் என்று கூறினான். நானும் சம்மதித்து அங்கு சென்றோம். அப்படி அன்று போகும் பொழுதுதான் தனது இன்றைய நண்பியை ஒரு ஆண்டுக்கு முன் சந்தித்தான். அவள் பாலர் பாடசாலை இளம் ஆசிரியை. உயர் வகுப்பு வரையும் தான் படித்து இருந்தாலும், மிகவும் பண்பாக மரியாதையாக காணப்பட்டாள். அவள் அந்த ஊரையே சேர்ந்தவளும், அந்த ஆலயத்துக்கு அண்மையில் வாழ்பவளும் ஆவாள். அவளின் தந்தை ஒரு போலீஸ் உத்தியோகத்தர் என்றாலும், ஒரு விபத்தில் அவர் இறந்துவிட்டார் என்று அறிந்தோம். அவள் தாய் சகோதரர்களுடன் வாழ்ந்து வந்தாள். அவளின் பெயர் கூட நாகபூசணி அம்மனின் பெயரையே பிரதிபலித்தது. அன்று தற்செயலாக ஆலயத்தில் சந்தித்த இருவரும், நாம் கொழும்பு திரும்பிய பிற்பாடு முகநூலிலும் தொலை பேசியிலும் தமது நட்பை வளர்த்தார்கள். எனக்கு மகன் மகிழ்வாக இருக்க வேண்டும் என்பதாலும், அவளை நேரடியாக பார்த்தத்தாலும் அவர்களின் நட்பிற்கு நான் எந்த இடையூறும் கொடுக்கவில்லை. ஆனால் அவன் மீண்டும் சோர்ந்து இருப்பது எனக்கு புதிராக இருந்தது. திறந்து இருந்த கணணியை பார்த்தேன், அது அவளின் முகநூல் பக்கம் தான். அவன் மீண்டும் மீண்டும் ஹாய் / ஹலோ என அவளுக்கு அழைப்பு விட்டிருப்பது அதில் பதியப் பட்டிருந்தது. ஆனால் எந்த மறுமொழியையும் காணவில்லை. மகனிடம் இனி இல்லை என்ற அளவுக்கு நண்பியாக தினம் கதைத்துக் கொண்டு இருந்தவள், ஒரு ஆண்டு முடிந்து சில மாதங்களிலேயே மாறி விட்டாள் என்பது புரியாத புதிராக இருந்தது. இரண்டு ஆண்டுகளுக்குள் மகனின் வாழ்வில் இரண்டாவது தோல்வி. அதுவும் இது ஆண்டவன் சன்னதியில் ஏற்பட்ட காதல்! அவள் இப்ப மகனை தவிர்ப்பது வெளிப்படையாக தெரிகிறது. ஏன் ? எதற்கு என மகன் அறிய விரும்பினாலும் நான் ஆராய விரும்பவில்லை. புவனமுழுதாடுகின்ற புவனேஸ்வரி.. புறமிருந்தோர் புறமிருக்கும் பரமேஸ்வரி.. நவநவமாய் வடிவாகும் நாகேஸ்வரி.. ஆமாம் புதுமை புதுமையாய் உருவெடுக்கும் அவள், இன்று என்ன உருவத்தில் எங்கே, யாருடன் ... அது எமக்கு அப்பாற்பட்டது! நான் மகனைப் பார்த்தேன். அவன் அந்த முகநூலை முறைத்து பார்த்துக்கொண்டு இருந்தான். அவன் நான் பின்னால் நிற்பதை கவனிக்கவில்லை. நான் அவனின் முதுகில் தட்டி ஆறுதல் படுத்தும் பொழுது தான் அவனுக்கு உணர்வே வந்தது. அவனின் கண்களில் கண்ணீர் நிறைந்து இருந்தது. அது என்னை பார்த்ததும் ஆறாக பெருகியது. அவன் என்னை பார்த்து, 'இந்த பெண்ணுக்கு என்ன நடந்தது?, ஏன் இப்படி செய்கிறாள்? என் நட்பு , காதல் தேவை இல்லை என்றால், வெளிப்படையாக கூறலாம் தானே? நான் அவளின் புது நட்பு யார் என்று கேட்கப்போவதில்லை ?, உண்மையை கூறி ஒதுங்கலாம் தானே?' என்னிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டான். எனக்கு என்ன சொல்வது என்று புரியவே இல்லை. இன்று இவை எல்லாம் சகயமாக வந்துவிட்டது. நான் அவனுடன் கதைத்ததில், இதற்கு என்ன செய்வது என்று அவனுக்கே தெரியவில்லை என்பதை அறிந்தேன். நான் அவனை பார்த்தேன், இதற்கு தீர்வு உன்னிடமே என்றேன். அவன் உடனே என்னைப் பார்த்து, என்னிடமே விடை இருக்கு என்றால், நான் ஏன் கவலைப் படுகிறேன் என்றான்! 'மகனே எல்லாவற்றுக்கும் மறுமொழியோ அல்லது தீர்வோ காணமுடியாது. சிலவேளை அதை கைகழுவி விடுவதே தீர்வாக இருக்கும். உன்னால் இனி ஒன்றும் செய்யமுடியாது என் நீ நம்பும் பொழுது அல்லது எண்ணும் பொழுது, எப்படி நீ மட்டும் தீர்வு காண கவலைப்பட முடியும், கொஞ்சம் சிந்தி , கலங்காதே மகனே!' நான் மகனிடம் உருக்கமாக கேட்டேன். மகன் கொஞ்ச நேரம் என் முகத்தையும், தாயின் படத்தையும் உற்றுப் பார்த்தான், பின் அவளின் முகநூலை எடுத்து தன் நட்பை அதில் இருந்து அகற்றினான். இனிமேல் தனக்கு ஒரு காதலும் வேண்டாம், பெண் நட்பும் வேண்டாம். நீங்கள் பார்த்து தெரிந்து எடுக்கும் பெண்ணே உங்கள் மருமகள் ஆகட்டும்! என்று கூறிவிட்டு தன் படுக்கைக்கு சென்றுவிட்டான்! ஒன்றை கவனத்தில் வையுங்கள், நீங்கள் எதாவது ஒரு பிரச்சனையில் சிக்கி இருந்தீர்கள் என்றால், ' இதற்க்கு என்னால் தீர்வு காண முடியுமா ?' உங்களை நீங்களே கேளுங்கள், இல்லை என்றால், அதை உங்கள் மனதில் இருந்து அகற்றி விடுங்கள். அது உங்களுக்கு நிம்மதி கொடுக்கும்! நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  5. 'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 40 சிங்கள இனம், அவ்வப்போது தென் இந்தியாவில் இருந்து படை வீரர்களாகவோ அல்லது வேறு காரணங்களாலோ இலங்கையில் குடியேறிய தென் இந்தியா திராவிடர்களை உள்வாங்கி பல்கிப் பெருகின என்பதற்கு, அண்மைய உதாரணமாக, சென்ற நூற்றாண்டில் புத்தளம் நீர் கொழும்பு பகுதிகளில் வாழ்ந்த தமிழ் கத்தோலிக்க பரதவ மக்கள், சிலாப மறைமாவட்டத்தின் ஆயர் ஆக இருந்த எட்மன்ட் பீரிஸ் (1897 -1989 ) பள்ளிகளில் படிப்பிக்கிற கற்கை மொழியை தமிழில் இருந்து சிங்களத்துக்கு மாற்றினதால், அதன் விளைவாக அவர்கள் தமிழை மறந்து சிங்களவர்கள் ஆனார்கள் என்பது வரலாற்று உண்மை ஆகும் [ It is well known fact of Roman Catholic Church history that there was a process of Sinhalisation of these fishermen during the time of The Right Reverend Edmund Pieris (Sinhala: එඩ්මන්ඩ් පීරිස්), O.M.I. (27 December 1897 – 4 September 1989) was a Roman Catholic Bishop of Chilaw, Ceylon (now Sri Lanka).]. எது எப்படியாகினும், மகாவம்சம் ஒரு வரலாற்று நூலாக் கொள்ளப்படா விட்டாலும் வரலாற்றின் வெற்றிடங்களை நிரப்புகிற நூலாகக் கொள்ளலாம். அதாவது மகாவம்சம் என்ற நூல் உண்மைத் தரவுகள் பலவற்றை உள்ளடக்கிய ஒரு புனைவு நூல் என்று நாம் சுருக்கமாக கூறலாம். மகாவம்சம் மத சார்புள்ள வரலாறு என்பதால், பக்தி காரணமாக நம்ப முடியாத பல நிகழ்ச்சிகள் இடம் பெறுவது இயல்பேயாகும். அறிவுக்குப் பொருந்தாததை விலக்கி, பொருந்துவதும் பயன்படுவதுமான தரவுகளை ஏற்றுக்கொள்ளும் மரபின் வழி பார்த்தால், வரலாற்றுச் செய்திகளை அறிய மகாவம்சம் பெரிதும் துணை புரியும் என்பதில் எனக்கு ஐயப்பாடு இல்லை. ஆனால் இன்று மகாவம்சத்தில் விதைக்கப்பட்ட. களைகளை அல்லது நஞ்சுகளை தூக்கிப் பிடித்துக் கொண்டு, பௌத்த தர்மத்தைக் காப்பாற்றிப் பேணுவதற்குரிய இடமாக இலங்கைத் தீவு புத்தரால் ஆசிர்வதிக்கப்பட்டது என்றும் சிங்கள அரசியல் மேலாண்மைக்கும் சிங்கள தேசத்தின் இருப்பிற்கும் தமிழரே பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறார்கள் என்றும் நினைக்கும் இலங்கை பௌத்தர்களே அதிகம். மகாவம்ச ஆங்கில மொழிபெயர்ப்பு வெளிவந்த பின்னரே பௌத்த சிங்கள தேசிய உணர்வு மெல்ல மெல்ல ஒங்கத் தொடங்கியது. அதற்கு முன் இலங்கை பாகுபாடு பெரிதாக தென்படும் ஒரு நாடாக இருக்கவில்லை. மனிதன் எல்லா உயிர்களிடத்தும் அன்பு, கருணை காட்ட வேண்டும் என்பது பௌத்த மதத்தின் அடிநாதமான கோட்பாடாகும். புத்தர் உயிர்கள் மூவகைப்பட்டதென்றும் அதாவது மனிதர், விலங்குகள், தாவரங்கள். இவற்றில் எதற்கும் தீங்கு விளைவிக்கக் கூடாது என்றும் போதிக்கிறார். ஆனால் இன்று அதற்கு மாறாக நடைபெறுவதை காண்கிறோம். அதிலும் பல சந்தர்ப்பங்களில் புத்த பிக்குமார்களே வழி நடத்துவதையும் காண்கிறோம். இதற்கு முக்கிய காரணம் மகாவம்சத்தில் காணப்படும் களைகளை அகற்றாமல், அதையே திருப்ப திருப்ப விதைப்பது ஆகும். 1956-ல் “விஜயனின் வருகை” என்ற தலைப்புடன் சிறப்பு தபால் தலை ஒன்றை இலங்கை அரசு வெளியிட்டது. குவேனி ஒரு மரத்தடியில் அமர்ந்திருப்பது போலவும், கப்பலில் வந்த விஜயன் அவளிடம் அடைக்கலம் கோருவது போலவும் இந்த தபால் தலை அமைந்திருந்தது. இதைப் பார்த்த பல சிங்கள தலைவர்கள், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஏனென்றால், விஜயன் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப் பட்டு வரும் பொழுது, இலங்கையில் ஏற்கனவே குவேனி என்ற பெண், ஒரு மரத்தடியில், நாகரீகத்தின் அடையாளமாக, நூல் நூற்றுக்கொண்டு இருப்பது, தமக்கு அவமானம் என்று கருதினர். இதன் காரணமாக, இந்த தபால் தலையை இலங்கை அரசு வாபஸ் பெற்றுக் கொண்டது என்பது ஒரு அண்மைய வரலாற்று நிகழ்வாகும். தீபவம்சத்தில், கடைசி ஆறு பாடம், 17 இல் இருந்து 22 வரை தான் முழுதாக இலங்கையை பற்றி கூறுகிறது. இது ஆக 27 பக்கமே! எனவே மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவாகத் தான் மனித வரலாற்றை, இலங்கையில் நடைபெற்றதாக கூறுகிறது. அசோகா புத்த மதம் பரப்ப சென்ற இடங்களை அசோகா கல்வெட்டு 13 கூறுகிறது. அதில் தெற்கில் சோழ, பாண்டிய மற்றும் தாமிரபரணி வரையும் என்றே கூறுகிறது. இங்கு தாமிரபரணி ஆற்றுடன் சேர்ந்த பிரதேசத்தையே குறிக்கிறது எனலாம். இலங்கையை அல்ல. [“likewise in the south among the Cholas, the Pandyas, and as far as Tamaraparni”]. தாமிரபரணி ஆறு, பாண்டிய நாட்டில், இன்றைய திருநெல்வேலி மாவட்டத்தில் உண்டாகி, மன்னார் கடல் மட்டும் போகிறது. அசோகன் எந்த சந்தர்ப்பத்திலும் லங்கா என்று குறிப்பிடவில்லை, ஆனால் மேலே கூறிய தமிழர் பிரதேசங்களை கூறி உள்ளார். தாமிரபரணி கரைக்கு அடுத்த பக்கத்தில் இருக்கும் நாட்டை குறிக்காது. இதை வரலாற்று அறிஞர் V. A. ஸ்மித் ஆமோதிக்கிறார். [V. A. Smith, was clearly of the view that Lanka is not meant by the name Tamaraparni.] [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 41 தொடரும்
  6. "தமிழரின் உணவு பழக்கங்கள்" / "FOOD HABITS OF TAMILS" PART / பகுதி: 18 "தமிழரின் உணவு பழக்கங்கள்" / "FOOD HABITS OF TAMILS" PART / பகுதி: 18 "பண்டைய சிந்து சம வெளி உணவு பழக்கங்கள் தொடர்கிறது" / "Food Habits of Ancient Indus valley people or Harappans continuing" சிந்துவெளியில் காணப்படும் வீடுகளில் தனி சமையல் அறை, படுக்கை அறை, குளியல் அறை முதலியன இடம் பெற்றிருந்தன. அங்கு, வீடுகளின் சமையல் அறையின் வாசல் முற்றத்தை அண்டி இருந்தன. அவை செங்கல்களால் கட்டப் பட்ட அடுப்பை கொண்டிருந்தன. அங்கு பலவித மண் பாண்டங்கள், வெவேறு அளவிலும் வெவ்வேறு வடிவத்திலும் காணப்பட்டன. பெரும் பாலான மண்பாண்டம் சக்கரத்தை சுற்றி வார்தெடுக்கப் பட்டவை. அவை நேர்த்தியான மற்றும் வழுவழுப்பான தோற்றம் உள்ளவையாகவும், அதே நேரம் அவை சுடப் பட்டதால் நல்ல வலிமையாகவும் இருந்தன. அது மட்டும் அல்ல அவை கருப்பு அல்லது சிவப்பு வர்ணம் பூசப்பட்டு இருந்தன. இவை கிண்ணம், குவளை, கோப்பை, தட்டு, பெரிய அகலமான பாத்திரம், ஜாடி போன்றவையாகும். அத்துடன் செம்பு, வெள்ளி, ஈயம் போன்றவையால் செய்யப்பட்ட பாத்திரங்களும் தோண்டி எடுக்கப் பட்டன. அவை பணக்கார குடும்பங்களால் பாவிக்கப் பட்டு இருக்கலாம். சிந்து வெளி மக்கள் தமது சமையலுக்கு எண்ணெயுடன் மற்றும் இஞ்சி, உப்பு, பச்சை குடைமிளகாய், மஞ்சள் தூள் போன்றவை பாவித்தனர்.என்றாலும் அவர்கள் நாளாந்த வாழ்க்கையில் அல்லது ஏதாவது ஒரு சிறப்பு தினத்தில் அல்லது ஆண்டவனுக்கான காணிக்கையில் அல்லது படையலில் எப்படியான உணவு சமைத்தார்கள் என்பதோ அல்லது அவையின் பெயரோ எமக்கு இன்னும் தெரியாது. ஆனால் அவையின் சேர்மானங்கள், அதாவது என்ன என்ன சேர்க்கப்பட்டன என்பதை நன்றாக அறியக் கூடியதாக உள்ளது. மெஹெர்கரில் [Mehrgarh] நடைபெற்ற அகழ்வு ஆராச்சியில், அரைக்கும் கற்கள் கண்டு பிடிக்கப் பட்டன. அவை கோதுமை, பார்லி போன்றவை அரைக்கப் பாவிக்கப் பட்டு இருக்கலாம். எனவே, அவர்கள் மாவை பாவித்து அதிகமாக ரொட்டி போன்ற ஒரு உணவை சமைத்து இருக்கலாம் என ஊகிக்க முடிகிறது. அதே போல ஹரப்பா அகழாய்வில் களிமண் கருவிகளும் தானியங்களை அரைக்கும் கல் யந்திரங்களும் அம்மி போன்ற அமைப்புடைய கல்கருவியும் கிடைத்துள்ளன. இந்த அம்மி இன்னும் இந்தியா, இலங்கை நாடுகளில் பாவனையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இது கடுகு, கொத்த மல்லி, போன்ற வாசனைத் திரவியம் பாவித்தார்கள் என்பதை உறுதிப் படுத்துகிறது. அங்கு கண்டு பிடிக்கப் பட்ட மட்பாண்ட சமையல் பாத்திரங்கள், அவர்கள் கொதிக்க வைத்தும் வேக வைத்தும் சமைத்ததை காட்டுகிறது. அத்துடன் எரிந்த எலும்பு எச்சங்கள், அவர்கள் இறைச்சியை சுட்டு சமைத்ததை - பார்பிக்யூ [BBQ] மாதிரி - எடுத்து காட்டுகிறது. மேலும் அங்கு தந்தூரி அடுப்பை போன்ற ஒன்றும் கண்டு பிடிக்கப் பட்டது. இது அதிகமாக இன்றைய தந்தூரி அடுப்பின் பழைய வடிவமாக இருக்கலாம்? அன்றைய நாளாந்த வாழ்விற்கு அடிப்படை உணவான ரொட்டி செய்ய அது பாவிக்கப் பட்டு இருக்கலாம். மேலும் கி மு 3000 ஆண்டை சேர்ந்த, தானியங்களை அரைப்பதற்க்கான மேடையும் ஹரப்பாவில் காணப்பட்டது. இது பெரும் அளவில் மா அரைத்து ரொட்டி செய்ய, நகரங்களுக்கு வழங்கியதை காட்டுகிறது. இந்த நாகரிகம் மிகவும் மேம்பட்டது. இதனால், இவர்கள் உடலிற்கு ஏற்ற தகுந்த உணவின் முக்கியத்தை கட்டாயம் அறிந்து இருக்கலாம் எனவும் நாம் நம்பலாம். கறி (Curry) பொதுவாக சோற்றுடன் உண்ணப்படும் குழம்பு, பிரட்டல், பருப்பு, கீரை, மீன்கறி போன்ற பல்வேறு பக்க உணவுகளை - வெங்காயம், இஞ்சி, மஞ்சள், உள்ளி, குடைமிளகாய், மிளகாய், கொத்த மல்லி, சீரகம், மற்றும் இது போன்ற வாசனைத் திரவியங்களுடன் சமைத்த ஒரு சமையலை குறிக்கிறது. ஆங்கிலத்திலும் இது Curry என்றே கூறப்படுகிறது. இந்த சொல் தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு போன ஒரு சொல்லாகும். இதன் சரித்திரம் 4000 ஆண்டுகளுக்கு மேற்பட்டது. சிந்து சம வெளி மக்கள், தமது உச்ச நாகரிக கட்டத்தில், மூன்று முக்கிய சேர்மானங்களான - இஞ்சி, உள்ளி, மஞ்சள் போன்றவற்றை பாவித்து பண்டைய - கறி சமைத்துள்ளார்கள். மேற்கு தில்லி [west of Delhi] பகுதியில் அமைந்த பண்டைய கி மு 3000 ஆண்டை சேர்ந்த சிந்து வெளி நாகரிக நகரமான பார்மானவில் [Farmana] தோண்டி எடுக்கப்பட்ட மனித எலும்பின் பல்லையும் சமையல் பானையில் ஒட்டியிருந்த எச்சங்களையும் பரிசோதித்ததில், தொல்பொருள் ஆய்வாளர்களும் விஞ்ஞானிகளும் மஞ்சள், இஞ்சிக்கான அடையாளத்தை கண்டுள்ளார்கள். வாஷிங்டன் மாநில பல்கலைக்கழகம், வான்கூவர், அமெரிக்காவின், தொல்பொருள் ஆய்வாளரான அருனிமா காஷ்யப் [Arunima Kashyap] அவர்களும், ஸ்டீவ் வெபரும் [Steve Weber] சேர்ந்து இந்த முன்னைய கறியை கண்டு பிடித்தனர். அவர்கள் மேலும் பகுதியாக எரிந்த பூண்டு உள்ளியும் அங்கு கண்டார்கள்.மற்றும் ஒரு சான்றாக, இஞ்சியும் மஞ்சளும், ஹரப்பாவில் தோண்டி எடுக்கப்பட்ட மாட்டின் பல்லிலும் கண்டனர். கால் நடைகள் ஏன் கறி மாதிரி ஒரு உணவை உண்டான என்பது சரியாக புரியாவிட்டாலும், ஸ்டீவ் வெபர் அதற்கு ஒரு நியாயம் கற்பிக்கிறார். இன்றும் இந்த பகுதிகளிலும் மற்றும் இதர பகுதிகளிலும் மக்கள் தாம் சாப்பிட்ட உணவின் மிகுதியை தமது வீட்டிற்கு வெளியே அங்கும் இங்குமாக திரியும் மாடுகளுக்கு போடுகின்றனர். அது போல முன்பும் நடந்து இருக்கலாம் என்கிறர். ஹரப்பன் இடிபாடுகளில் வீட்டுக் கோழி அங்கு இருந்ததற்கான சான்றுகள் காணப் படுகின்றன. இது ஒரு வேளை, அங்கு கண்டு பிடித்த தந்தூரி போன்ற அடுப்பில் சமைக்கப்பட்டு இருக்கலாம். சோறு இல்லாமல் கறியா என்று நீங்கள் ஜோசிக்கலாம்? அப்படித்தான் பல தொல்பொருள் ஆய்வாளர்கள் நினைத்தார்கள். சிந்து வெளி மக்கள் ஓர் சில தானியங்களுக்கு மட்டும் - அதிகமாக கோதுமை, பார்லி போன்றவைக்கு மட்டும் கட்டுப் பட்டு இருந்ததாகவே கருதினர். ஆனால் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக தொல் பொருள் ஆய்வாளர் ஜெனிபர் பேட்ஸ் [Jennifer Bates] இதை மாற்றி அமைத்துள்ளார். அவர் இந்தியா - பிரித்தானியா கூட்டு குழுவுடன் சேர்ந்து, மேற்கு தில்லி பகுதியில் ஆய்வு செய்யும் போது, அங்கு சிந்து வெளி மக்கள் அரிசி, பயறு, பாசிப் பயறு உட்பட பல தானியங்கள் பயிரிட்டது தெரிய வந்தது. ஆகவே கறி உலகின் மிகவும் பிரபலமான உணவு மட்டும் இன்றி, அது மிகப் பழைய தொடர்ந்து பாவனையில் இருக்கும் ஒரு உணவும் ஆகும். நீங்கள் ஒரு பாரம்பரிய தமிழ் அல்லது இந்திய மதிய அல்லது இரவு உணவு ஒன்றை சாப்பிடுகிறீர்கள் என்றால் அங்கு கட்டாயம் இஞ்சி, மஞ்சள், பருப்பு இருக்கும். அத்துடன் சோறு அல்லது தினையும் அதிகமாக முடிவில் வாழைப் பழமும் இருக்கும். அப்படியானால், நாம் இன்று சாப்பிடும் உணவு, எம் முதாதையர் 4500 ஆண்டுகளுக்கு முன்பு சாப்பிட்ட உணவிற்கும் பெரும் வேறுபாடு கிடையாது எனலாம். இனி "பண்டைய சங்க தமிழரின் உணவு பழக்கங்கள்" பற்றிப் பார்ப்போம். நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி : 19 தொடரும் "FOOD HABITS OF TAMILS" PART: 18 "Food Habits of Ancient Indus valley people or Harappans continuing" Harappan houses had a kitchen opening from the courtyard, with a hearth or brick-built fireplace. Food in Indus Valley civilization was made in the utensils which included earthenware of various kinds. shapes and in a range of sizes. Most of the potteries were wheel made with fine and smooth appearances that were baked to give it strength. The potteries were painted with black or dark red slips. Such painted potteries included bowls, beakers, goblets, dishes, basins, saucers stands and jars. The excavations also include a number of vessels which are made up of Copper, silver, and lead. may be for in wealthy households. The Indus Valley peoples may be cooked with oils, ginger, salt, green peppers, and turmeric root, which would be dried and ground into an orange powder. We don't know the name of dishes they cooked in day to day life or for any special occasions or for any religious offerings in their kitchens because, mainly, we are still not able to read their language and also we are not found any literature, such as poems or written long records about their activities as Sumerian did. But we know the ingredients of their dishes and we know it very well. Also excavations in Mehrgarh have revealed grinding stones which is used in grinding wheat & barley so we can deduce that they used flour and maybe they know how to prepare Roti etc. In Harappa too they found hard stone - roller - grinders [Ammi], the design of which is still found all over India & Sri Lanka, confirm the use of spices. Also finding of pottery cooking vessel, may be used for boiling & stewing. Further charred bone remains show that they cooked meat by grilling. Also a small metre - high clay oven, instead of having a side - entry, this egg - shaped vessel's entry hole was at the top, which was narrower than its centre point. It was the ancestor of today's tandoori oven and may be used for bread - making, something fundamental to daily existence. Also Platform For Grinding Grains found at Archaeological Site Of Harappa, Indus Valley Civilization, belongs to 3rd Millennium BC, prove that they grind corn on the platforms for the city's supply of bread. This civilization was highly developed and thus many historians believe that they knew about importance of proper diet in life. What is curry? The term likely derives from kari, the word for sauce in Tamil, a Dravidian language. A curry, as the Brits defined it, might be A mixture of onion, ginger, turmeric, garlic, pepper, chilies, coriander, cumin, and other spices cooked with shellfish, meat, or vegetables. But the original curry predates Europeans’ presence in India & Sri Lanka by about 4,000 years. Villagers living at the height of the Indus civilization used three key curry ingredients — ginger, garlic, and turmeric — in their cooking. This proto - curry, in fact, was eaten long before Brits defined it .But thanks to technological advances, scientists can now identify minute quantities of plant remains left behind by meals cooked thousands of years ago. It is no easy task; researchers must gather crumbling skeletons and find ancient dirty dishes before using powerful laboratory microscopes to pinpoint the ingredients of ancient meals. Examining the human teeth and the residue from the cooking pots, [from the late third millennium B.C ancient town of Farmana, west of Delhi] archaeologists, & scientists spotted the tell - tale signs of turmeric and ginger, two key ingredients, Even today, of a typical curry. Archaeologist Arunima Kashyap at Washington State University Vancouver, who, along with Steve Weber, made the recent proto-curry discovery. They also found a carbonized clove of garlic. They found additional supporting evidence of ginger and turmeric use on ancient cow teeth unearthed in Harappa, one of the largest Indus cities, located in Pakistan west of the border with India. Why would cattle be eating curry - style dishes? Weber notes that in the region today, people often place leftovers outside their homes for wandering cows to munch on. The Harappan ruins also contain evidence of domesticated chickens, which were likely cooked in those tandoori - style ovens and eaten. And what would a proto - curry be without a side of rice? Many archaeologists once thought that Indus peoples were restricted to a few grains like wheat and barley. But Cambridge University archaeologist Jennifer Bates, part of a joint Indian - U.K. team, has been examining the relative abundance of various crops at two village sites near today’s Masudpur, also west of Delhi. She found that villagers cultivated a wide array of crops, including rice, lentils, and mung beans. we now know that curry is not only among the world’s most popular dishes; it also may be the oldest continuously prepared cuisine on the planet. If you are having a proper Tamil or Indian lunch or dinner, there is good chance that your food will contain ginger or turmeric or lentils. You have rice or millet and maybe even a banana to top it off. If so, the food that we eat today is no different from the ones eaten by our ancestors who lived in the Indus - Saraswathi region, 4500 years back. Let us now look at the "food habits of ancient Sangam Tamils". Thanks [Kandiah Thillaivinayagalingam Athiady, Jaffna] PART : 19 WILL FOLLOW
  7. 'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 39 இன்று இலங்கையில் ஏறத்தாழ முழுமையாக சிங்களவர்கள் வாழும், தென்மாகாண காலியை கருத்தில் கொண்டால், அங்கே ரொசெட்டாக் கல் அல்லது கல்வெட்டின் ஒரே பக்கத்தில் இரு அல்லது மூன்று வெவ்வேறு மொழிகளில் எழுதப்பட்டிருக்கும் கல்வெட்டு / கற்பலகை [Rosetta Stone] ஒன்றை எஸ். எச். தோம்லின் என்ற பொறியாளர் [An engineer, S. H. Thomlin] 1911 இல் கண்டு எடுத்து உள்ளார். இதை இன்று காலி மும்மொழி கல்வெட்டு (Galle Trilingual Inscription) என்று அழைப்பதுடன், இலங்கையின் கொழும்பு தேசிய நூதனசாலையில் காட்சிக்கும் வைக்கப்பட்டுள்ளது. இலங்கையின் காலியில் சீனக் கடற்படைத் தளபதியும், நாடுகாண் பயணியுமான 'செங் கே' [Chinese traveler Zheng He ,dated 15 February 1409] இத்தீவிற்கு இரண்டாம் முறை வந்ததின் நினைவாக 1409 ஆண்டில் சீன, தமிழ், பாரசீகம் [Chinese, Tamil and Persian] ஆகிய மூன்று மொழிகளில் எழுதப்பட்ட இந்த கற்றூண் [stone pillar] கல்வெட்டு நடப்பட்டது ஆகும். இதில் நீங்கள் கவனிக்க வேண்டியது என்னவென்றால் பதின்மூன்றாம் / பதினான்காம் நூற்றாண்டில், இலங்கையின் தெற்குப்பகுதியான காலியில் கூட , சிங்களத்தை தவிர்த்து தமிழில் கல்வெட்டு எழுதப்பட்டு இருப்பது, அந்த நாட்களில், காலியில் கூட, தமிழ் எவ்வளவு நடைமுறையில் இருந்தது என்பதற்கான சான்றாக விளங்குகிறது. மேலும் இது அவரும் [செங் கே] மற்றவர்களும் சிவனொளிபாதம் அல்லது பாவா ஆதம் மலைக்கு [Adam's Peak; சிங்களம்: சிறிபாத] வழங்கிய காணிக்கை பற்றி கூறுகிறது. புத்தருக்கு கொடுத்த காணிக்கை பற்றி சீன மொழியிலும், அல்லாஹ்விற்கு வழங்கியதை பாரசீக மொழியிலும், தென்னாவர நாயனார் [Tenavarai Nayanar] என அழைக்கப்படும் விஷ்ணுவிற்கு வழங்கியதை தமிழிலும் எழுதப் பட்டுள்ளது. [The Chinese inscription mentions offerings to Buddha, the Persian in Arabic script to Allah and the Tamil inscription mentions offering to Tenavarai Nayanar (Hindu god, Vishnu).]. தொண்டீசுவரம் (அல்லது தொண்டேசுவரம், தொண்டேச்சரம் / Tenavaram temple) என்பது இலங்கையின் தெற்கில் மாத்தறை மாவட்டத்தில் தெவிநுவர (தேவந்திரமுனை) எனும் பகுதியில் இருந்த ஒரு வரலாற்று சிறப்பு மிக்க சிவன் கோயிலாகும். பஞ்சஈஸ்வரங்களில் ஒன்று இது ஆகும். இது பின் இலங்கையை ஆக்கிரமித்த போத்துக்கீசியரால் சிதைவடைக்கப்பட்டது. இங்கு மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளின் போது ஒரு பெரிய சிவலிங்கம் ஒன்று ஆய்வாளர்களால் அகழ்ந்து எடுக்கப்பட்டது. தற்போது தொண்டேச்சரம் கோயில் இருந்த இடத்தில் ஒரு விஷ்ணு கோயில் அங்கிருந்த சிங்களப் பௌத்தரால் எழுப்பப்பட்டுள்ளது. "தெவிநுவர கோயில்" என இது இன்று அழைக்கப்படுகிறது. கல்லாடநாகன் (கிமு 50 – 44) (2) சோரநாகன் (கிமு 3 – 9) (3) இளநாகன் (கிபி 96 – 103) (4) மாகலக்க நாகன் (கிபி196 – 203) (5) குஜ்ஜநாகன் (கிபி 246 – 248) (6) குட்டநாகன் (கிபி 248 – 249) (7) ஸ்ரீநாகன் I (கிபி 249 – 269) ( அபயநாகன் (291 – 300) (9) ஸ்ரீநாகன் II (கிபி 300 – 302) (10) மகாநாகன் (கிபி 556 -568) எனப் பல அரசர்கள் நாக பின்னோட்டத்துடன் இலங்கையை 6 ஆம் நூற்றாண்டு வரை அநுராதபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆண்டுள்ளார்கள் என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டியது ஆகும். அது மட்டும் அல்ல, தீசன் என்ற சொல்லும் நாக வம்சத்தவருக்கு உரிய சொல்லே ஆகும். எடுத்துக் காட்டாக ஸ்ரீநாகனின் தந்தை பெயர் வீர தீசன் ஆகும் (The Early History of Ceylon by G.C.Mendis -pages 83-85). இவர்கள் யாரும் தங்களை ஹெல, சிகல அல்லது சிங்கள என அழைக்கவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது. நாகர்கள் அதிகமாக மங்கோலியா இன மூலத்தை கொண்டவர்கள் [Mongolian origin] என்று C.ராஜநாயகம் [C.Rasanayagam] கூறுவதுடன், வருணோ மஹதி [Waruno Mahdi] என்பவர், நாகர்கள் ஒரு கடல் வாழ் மக்கள் என்கிறார் [a maritime people]. மேலும் தென் இந்திய மக்களில், கேரளத்தில் வாழும் திராவிட நாயர் [Nāyars] சமுதாயத்தை உதாரணமாக எடுக்கிறார்கள், பண்டைய கேரளா மக்கள் தமிழ் சேரர் என்பது குறிப்பிடத் தக்கது. வட இலங்கையில் ஆரியர் வருவதற்கு முன் குடி ஏறி வாழ்த்த நாகர்கள் இவர்களே என்று ஹென்றி பார்க்கர் கூறுகிறார். இதை K.M. பணிக்கர் சில காரணங்களை சுட்டிக்காட்டி ஆமோதிக்கிறார். நாகர் தான் நாயர் என மாற்றம் அடைந்ததாகவும், ஆணும் பெண்ணும் தமது தலை முடியை முடிச்சு போடும் விதம், ஒரு நாகப்பாம்பின் பேட்டை ஒத்திருப்பது, இதை உறுதி படுத்துவதாகவும் கூறுகிறார். [Perhaps the only South Indian community that could be reasonably identified with the Nāgas of yore are the Nāyars, a Dravidian –speaking military caste of Kerala amongst whom remnants of serpent worship have survived. Henry Parker suggested that “the Nāgas who occupied Northern Ceylon long before the arrival of the Gangetic settlers were actual Indian immigrants and were an offshoot of the Nāyars of Southern India”. This view is lent support by K.M. Panikkar who suggests that the Nāyar were a community with a serpent totem and derives the term Nāyar from Nāgar or serpent-men. The belief that the Nāyars have taken their name from the Nāgas also appears to be supported by the peculiar type of hair knot at the top of the head borne by Nayar men and the coiffure of Nayar women in the olden days which resembled the hood of a cobra] மனோகரன். நாகர்கள் பண்டைய வட இலங்கையில் வசித்தவர்கள் என்றும், பண்டைய தமிழர் என்றும் இரண்டாம் நூற்றாண்டு டோலமியின் வரைபடத்தை வைத்து வாதாடுகிறார் [Manogaran (2000) believed the Nāgas of the MV to be ancient Tamils, drawing his conclusions on Ptolemy’s 2nd century A.C. map of Taprobane which he supposes indicates Nāgadīpa in the northern part of the island, the areal extent of which corresponds to the area settled by present-day Tamils] நாகர்கள் கி மு 3ஆம் நூற்றாண்டிற்கு முன்பே தென் இந்தியாவும் அதை ஒட்டிய பகுதிக்கும் வந்து, படிப்படியாக தமிழுடன் குறைந்தது கி மு 3 ஆம் நூற்றாண்டில் முழுமையாக இணைந்து விட்டார்கள் என்கிறார். நாகர், அதிகமாக திராவிட இனத்தவர்களும் மற்றும் பாம்பை வழிபடுபவர்கள் ஆகும் [Laura Smid (2003). South Asian folklore: an encyclopedia : Afghanistan, Bangladesh, India, Pakistan, Sri Lanka. Great Britain: Routledge. 429]. கி மு மூன்றாம் நூற்றாண்டு வரை நாகர்கள் தனித்துவமான இனமாக ஆரம்பகால இலங்கை வரலாற்று குறிப்பேடுகளிலும் [chronicle] மற்றும் ஆரம்பகால தமிழ் இலக்கிய படைப்புகளிலும் காணப்படுவதுடன், கி மு மூன்றாம் நூற்றாண்டு தொடக்கத்தில், நாகர்கள் தமிழ் மொழியுடனும், தமிழ் இனத்துடனும் ஒன்றிணைய தொடங்கி, தம் தனிப்பட்ட அடையாளத்தை இழந்தார்கள் [Holt, John (2011), The Sri Lanka Reader: History, Culture, Politics, Duke University Press] என்று கருதப் படுகிறது. [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 40 தொடரும்
  8. "நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா?" [சீரழியும் சமுதாயம்] பகுதி: 17 5] இன்பம் எல்லாவற்றிற்கும் மேல் என கருதும் கலாச்சாரம் [Pleasure Uber Alles Culture / pleasure is above all Culture] இன்பவியல் [Hedonism] என்பது இன்பமே மதிப்புப் பெற்ற ஒரே இலக்கு என்ற கோட்பாடு ஆகும், சிலர் இன்று அதற்க்கே அடிமையாகிறார்கள். அது எப்படி தம்மை கெடுக்கும் என்று எள்ளளவும் கவலைப் படுவதில்லை. உதாரணமாக, ஒரு உணவு எனக்கு உருசி என்றால், அந்த "உணவு" கொழுப்பு மற்றும் நீரிழிவு போன்றவற்றை கொடுக்கும் என்றாலும் எந்த கவலையும் இன்றி இப்ப இன்பமே அதை விட எனக்கு பெரிது என்று சாப்பிட்டு மகிழ்வதை குறிக்கலாம். வாழ்வு சலிப்பாக உள்ளதா? வாழ்க்கை எம்மை மூழ்கடிக்கிறதா? "ஓ, நான், நாள் முழுவதும் வீடியோ விளையாட்டு [video games] விளையாடுவேன். எனக்கு இந்த உண்மையான உலகம் தேவையில்லை" என்று எந்த மக்களுடனும் சமுதாயத்துடனும் பெரிதாக பங்கு பற்றாமல் இருந்த இடத்தில் சந்தோசம் என்று களித்து உடல் பருமனையும் நோயையும் வரவழைப்பதையும் மேலும் ஒரு உதாரணமாக கூறலாம். அதாவது ஒரு பரந்த அடிப்படையில், மகிழ்ச்சியை மட்டும் தனக்கு அதிகரிக்க முயற்சித்து, அதன் மூலம் தனது வலியை குறைக்க முயலும் ஒரு செயல் என்றும் கூறலாம். ஆனால் இந்த அவர்களின் கட்டாய கலாச்சாரத்தால், புத்திசாலித்தனமான, பொறுப்பான வாழும் வழியை [sensible, responsible way to live] அவர்கள் நிராகரிப்பதை காண்கிறோம். இது தான் எமக்கும் சமுதாயத்திற்கும் கவலை தரும் விடயம். ஒரு மனிதனுக்கு காதலனின் அல்லது காதலியின் சீராட்டு மகிழ்ச்சியை தருகிறது, அதே போல, ஒருவருக்கு ஒரு இசை, நண்பர்களுடன் மகிழ்ச்சியாக களித்தல், அல்லது வெறுமனே ஒரு தீவிரமான நாளின் பின், ஒரு நாற்காலியில் உட்கார்ந்து காற்று வாங்குதல் போன்றவை கட்டாயம் அவனுக்கு அல்லது அவளுக்கு மகிழ்ச்சியை தரும். இந்த நடவடிக்கைகள் உண்மையில் நல்லவையே, அதில் எமக்கு ஆட்சேபனை இல்லை. என்றாலும், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு போல, ஒரு மனிதன் முற்றும் முழுதாக ஒன்றில் சார்ந்திருத்தல், ஒரு பழக்கத்திற்கு அடிமையாதல், அளவுக்கு மீறி உண்ணுதல் அல்லது குடித்தல், மற்றும் கட்டாய நுகர்வு [Dependence, addiction, bingeing and compulsive consumption] போன்ற ஆபத்தான அல்லது தீங்கு விளைவிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது. முன்னர் மகிழ்ச்சியைத் தந்த நடவடிக்கைகள் அல்லது பழக்கங்கள், எந்த கட்டத்தில் சிக்கல் நிறைந்ததாக மாறும் என்று நாம் சரியாக குறித்துக் காட்ட முடியாது. என்றாலும், உதாரணமாக, எப்போதாவது ஒரு போதை பானம் பியர் [Beer/ஒரு வகைச் சாராயம்] அனுபவிப்பதற்கும் ஒவ்வொரு காலை படுக்கையிலிருந்து எழும்பும் போது ஏதாவது ஒரு போதை பானம் தேவை என்ற நிலைக்கும், இடையில் இந்த பிரச்சினைக்கு உரிய நிலையை நாம் கடந்து இருப்போம் என்று கூறலாம். பென்தாம் (Bentham) என்பவர் கூறும் இன்பவியல் கோட்பாடு ஆண்டாளுக்கு முற்றிலும் பொருந்தும், எல்லா நேரங்களிலும் மனிதன் ஏதாவது ஒரு நோக்கத்தின்பால், நடத்தைக்கு உட்படுகிறான். அந்த நோக்க வெற்றியின் இறுதியில் கிட்டும் மகிழ்ச்சியைச் சுவைப் பதற்க்கே ஒருவன் அவ்வாறான நடத்தைக்கு உட்படுகிறான் என்கிறார். உதாரணமாக, நாணம் மிகுதியால் நிந்திப்பது போல் மீண்டும் மீண்டும் நினைத்து திருமாலைப் பற்றி பேசுவதும் மற்றும் இது போன்ற ஆண்டாளின் செயல்களும், அவள் பெருமானையே நினைக்கும் நோக்கில், அவள் உண்மையில் சுவைக்கும் இன்ப நிகழ்ச்சிகளைக் நாம் காணலாம். பெரியாழ்வாரின் தோட்டத்துத் துளசிச் செடியருகே பெரியாழ்வாரால் கண்டெடுக்கப்பட்டவர் என கருதப்படும் ஆண்டாள், பருவம் எய்திய பின்னர், அவருக்கு மணம் செய்விக்க ஏற்பாடுகள் நடைபெற்றிருக்க வேண்டும். அப்போது, ஆண்டாளுக்குப் பிறப்புப் பின்னணி தெரியாத காரணத்திற்காகவே மணம் நடைபெறாமலேயே போயிருக்க வேண்டும். இதனால் மனம் வேதனையுற்ற ஆண்டாள் மானுட ஆண்களுடனான மணவாழ்க்கையையே வெறுத்து, திருமாலைக் காதலிப்பதாகவும் – அத்திருமாலையே மணமுடிக்க வேண்டு மென்று துடிப்பதாகவும் அவரின் பாடல்கள் அமைந்தன எனலாம் . இதில் அவள் தன்னில் எழும் காதல் உணர்ச்சியையும் – காம வேட்கையையும் தீர்த்துக் கொள்கிறார் என்று நம்புகிறேன். இதனால் அவள் நடத்தை, - இன்று சிலர் முற்றும் முழுதாக ஒன்றில் அடிமையாவது போல, உதாரணமாக பாலியல் வீடியோ- அப்படி மாறி, அதில் அவள் இன்பம் துய்த்திருக்கலாம் என்று நம்புகிறேன். உதாரணமாக திருப்பாவை, பாடல்-19 இல் அவளின் இன்ப ரசனையை மிக தெளிவாக காணலாம். “குத்துவிளக்கெரியக் கோட்டுக்கால் கட்டிலின்மேல் மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக் கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல் வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய்திறவாய் மைத்தடங் கண்ணினாய் நீயுன் மணாளனை எத்தனை போதும் துயிலெழு வொட்டாய்காண் எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்...” இதன் அர்த்தம், படுக்கை அறையில் குத்துவிளக்கு எரிகிறதாம். அழகிய கட்டிலில் விரிக்கப்பட்டிருக்கும் மெத்தையின் மீது ஏறிய கண்ணன், அழகிய கூந்தலையுடைய தன் மனைவி நப்பின்னை மேல் பாய்கிறான்; பலவாறு சுகம் கண்டவன், அவளது கொங்கைகளை தன் அகன்ற மார்பின் மீது வைத்துக் கொண்டு உறங்கிக் கிடக்கின்றானாம். இந்த இடத்தில் ஆண்டாள் சென்று நப்பின்னையை எழுப்பி உன் கணவனை நொடிப் பொழுது படுக்கையை விட்டு எழச் செய்ய மாட்டாயா? இமைப் பொழுது பிரிந்திருக்க மாட்டாயா? என்று கேட்கிறாள் என்கிறது. இங்கு ஒரு பெண்ணின் அவலம் வெளிப்படுகின்றது. பெண் அதில் பங்காற்றித் தனது தேவையைப் பூர்த்தி செய்ய நினைக்கும் கண்ணோட்டமும் வெளிப்படுகின்றது. எழுத்து கண்டுபிடிக்கப் பட்ட பின், கி மு 2100 அளவில் எழுதப்பட்ட மெசொப்பொத்தேமியா மக்களின் இலக்கியமான கில்கமெஷ் காப்பியத்தில் [Epic of Gilgamesh], சிடூரி [ Siduri] என்பவர், "உங்கள் வயிற்றை நிரப்புங்கள், பகலும் இரவும் மகிழ்ச்சியாகட்டும், நாட்கள் எல்லாம் சந்தோஷமாக இருக்கட்டும், பகலும் இரவும் நடனமாடி இசை முழங்குங்கள்..... இந்த விடயங்கள் மட்டுமே மனிதர்களின் [ஆண்களின்] அக்கறையாகட்டும்" [Fill your belly. Day and night make merry. Let days be full of joy. Dance and make music day and night ... These things alone are the concern of men] என்று ஆலோசனை வழங்குகிறார். ஒரு வகையில் பார்த்தால், முதன்முதலில் பதிவு செய்யப்பட்ட ஒரு இன்பவியல் வாதத்தை இது பிரதிநிதித்துவப் படுத்துகிறது எனலாம். அதே போல, "ஆசை செழிக்கட்டும், உங்களுக்கான துடிப்புகளை இதயம் மறக்கட்டும், நீ வாழும் வரை உமது விருப்பத்தைப் பின்பற்றுங்கள் [Let thy desire flourish, In order to let thy heart forget the beatifications for thee.Follow thy desire, as long as thou shalt live.], என்ற கி மு 2030 க்கும் கி மு 1640 க்கும் இடைப்பட்ட பண்டைய எகிப்தின் ஹார்ப்பரின் பாடல் [Harper's Songs] ஒன்றும் இன்பவியல் வாதத்தை பிரதிபலிக்கிறது எனலாம். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 18 தொடரும்
  9. "தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" / பகுதி: 19 ஆடி மாதம் என்பது பொதுவாக இந்து சமயம் கலந்த தமிழர் மரபில் போற்றுதலுக்குரிய, வணக்கத்திற்குரிய ஒரு புண்ணிய மாதமாக கருதப்படுகிறது. எனினும் கல்யாணம் போன்ற மகிழ்வான சடங்குகளுக்கு அதையே அமங்கலமான [an inauspicious month] மாதமாக அவர்கள் கருதுகிறார்கள். தை மாதம் அறுவடைக்கு பின்பான காலம். இம் மாதம் கல்யாண மாதம் எனக் கருதப்படுகிறது. கல்யாணம் செய்ய ஏங்கும் மணமாகா மகளிர், ஆடவர் [விடலை / a male child]. திருப்ப திருப்ப சொல்லும் கூற்று: "தை பிறந்தால் வழி பிறக்கும்" ஆகும். ஆனால் இதற்கு எதிராக இந்து மரபில் ஆடி மாதம் கல்யாணம் தடை செயப்பட்ட மாதமாக சில பல காரணங்களால் அன்று கருதப்பட்டு அது அவர்களின் பாரம் பரியமாக இன்றும் தொடர்கிறது. "ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்தம் ஆனந்தந் தோழர்களே! கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர் களே!" என்ற ஈழ கவிஞர் நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் அந்த ஆனந்த கொண்டாட்டத்தில் கல்யாணம் எனோ விலக்கப் படுகிறது. ஆனால் சக்தி வழிபாட்டிற்கு இது மங்கலமான ஒன்று எனக் கருதப் படுகிறது. ஆடி மாத பிறப்பை குறிக்கும் ஆடி பிறப்பில், சுற்றத்தாருடனும் நண்பர்களுடனும், கொழுக் கட்டையும், ஆடி கூழும் பகிர்ந்து உண்டு, மகிழ்வாக கொண்டாடும் மரபு இன்னும் தமிழரிடம் தொடர்கிறது. இந்த ஆடி மாதத்தில், மணமாகா இளம் பெண்கள் குறிப்பாக ஆடி செவ்வாய் தோறும் அம்மனை /சக்தியை விரதம் இருந்து வழிபட்டு தமக்கு நல்ல கணவர் /வாழ்க்கை துணைவர் அமைய அம்மனின் திருவருள் / பாக்கியம் வேண்டுவதும் உண்டு. அப்படி ஒரு பாக்கியம் அம்மன் உடனடியாக அங்கு அருளினாலும், பூசாரியார் அல்லது நம்பிக்கைகள் ஆடி மாதம் முடியும் மட்டும் வழிவிட மாட்டார்கள்? அது மட்டும் அல்ல, வழிபாட்டை தவிர, 'வேறு எந்த நல்ல செயல்களும் நடத்தக் கூடாது', 'புதுமணத் தம்பதிகள் சேர்ந்திருக்கக் கூடாது', என 'கூடாது' களின் கூடாரமாக இருக்கும் இம்மாதத்தின் கொடுமையான இன்னொரு 'கூடாது': ஆடியில் குழந்தை பிறக்கக் கூடாது. அது குடும்பத்தையே ஆட்டி வைத்துவிடும் என்ற நம்பிக்கை! 'ஆடிப் பிள்ளை தாய்மாமனை ஆட்டிப் படைக்கும் என்றும் ,'ஆடியில பிறந்த ஆம்பளைப் பிள்ளை ஆருக்கும் அடங்காது' என்றும் வேறு பழ மொழிகள் அதற்கு சொல்லி வைத்து அதற்கு ஏற்றவாறு தமது பாரம்பரியத்தை வளர்த்துள்ளார்கள். ஆடியில் கர்ப்பமானால் சித்திரையில் பிள்ளை பிறக்கும். அது வீட்டுக்கு ஆகாது என்பது தமிழ் மக்களின் நம்பிக்கை. அதேபோல ஆடியில் எதைச் செய்தாலும் அது ஆடிப் போகும் என்பதும் இன்னொரு அசைக்க முடியாத நம்பிக்கை. ஆடியில் குடி போக மாட்டார்கள், எந்த நல்ல காரியத்தையும் நம் மக்கள் செய்ய மாட்டார்கள். ஆகவே தான் இந்த மாதத்தில் சமயம் சம்பந்தமான பல பல விழாக்கள் ஆலயத்தில் நடைபெறுகின்றன. ஆடி பிறப்பு, ஆடி அமாவாசை, ஆடி பவுர்ணமி, ஆடிப்பெருக்கு, ஆடிப்பூரம், .. என விசேட வைபவங்கள் தொடர்ச்சியாக வந்து கொண்டே இருக்கும். தென்மேற்கு பருவத்தில் ஆற்றின் நீர்பிடி இடங்களில் பெய்த மழையினால் ஆறுகளில் புதுப்புனல் பொங்கிவரும். இதனையே ஆற்றுப்பெருக்கு / ஆடிப்பெருக்கு எனக்கூறுவர். மற்றும் ஆடி மாதம் குறிப்பாக விவசாயிகளுக்கு மிகவும் முக்கியமான தாகும். இந்த மாதத்தில்தான் விதை விதைப்பார்கள். அதாவது "ஆடிப் பட்டம் தேடி விதை" என்று முன்னோர்கள் கூறியதற்கேற்ப கிராமப்புறங்களில் பயிரிடும் வேலைகள் படு மும்முரமாக நடைபெ றும். இதனால் தான் மறைமுகமாக கல்யாணம் போன்ற விழாக்கள் நடைபெறுவதை தவிர்க்கிறார்கள். ஆன்மிகத்திலும் இறை வழிபாட்டிலும் ஈடுபட வேண்டி இருப்பதால் அதற்கு இடையூறாக மற்ற சுபவிசேஷங்கள் இருந்துவிடக் கூடாது - அப்படி இப்படின்னு சொல்லி கடத்தி விடுகிறார்கள் !. இதன் மூலம் அதி உச்சி கோடை மாதங்களான சித்திரை, வைகாசி ஆனி மாதங்களில் பிள்ளை பிறப்புகளை நிறுத்துகிறது /குறைக்கிறது .இது ஏன் என்றால் ஆடியில் கர்ப்பமானால் சித்திரையில் பிள்ளை பிறக்கும். கடும் வெயில் காலத்தில் பிள்ளை பிறந்தால் அது குழந்தைக்கும், தாய்க்கும் பல சுகவீனங்களை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கைதான் காரணம். அதோடு அம்மை போன்ற நோய்கள் பரவும் காலமும் கூட. கோடை வெயிலை சமாளிப்பது பெரியவர்களுக்கே சிரமமாக இருக்கும் போது பச்சிளம் குழந்தை தாங்குமா? அதனால்த்தான் அக்காலத்தில் ஆடிமாதத்தை தவிர்க்க சொன்னார் கள். மற்றும் படி அங்கு ஒரு விசேடம் ஒன்றும் இல்லை. சித்திரை மாதத்தில் குழந்தை பிறந்தால் பிரச்சினை, குடும்பத்துக்கு ஆகாது என்பதெல்லாம் ஒரு மூடநம்பிக்கை. நல்லதை சொன்னால்த்தான் நாம கேட்க மாட்டோமே. அதனால்த்தான் குடும்பத்துக்கு ஆகாது அப்படி இப்படின்னு சொன்னார்கள்! அது மட்டும் அல்ல நம் கலாச்சாரத்தின் அடிப்படையே நல்ல கருத்துக்கள் சொன்னால் புரிந்து கொள்ளமாட்டான் அதையே தெய்வ நம்பிக்கையுடன் சேர்த்துக் கூறினால் தவறாது கடைபிடிப்பான் என்பது தான்! வெயில் காலத்தில் பிறந்த குழந்தைகளுக்கு சங்கடமாக [அசௌகரியமாக] இருக்கும் என்பதால் இந்தப் பழக்கத்தைக் கடைப் பிடித்தார்கள் என்று நினைக்கிறேன். அந்த காலத்தில் மருத்துவ வசதிகள் மிக மிக குறைவு என்பதையும் வெப்பத்தை தணிக்கும் குளிரூட்டிகள் போன்ற வசதிகள் இல்லை என்பதையும் கவனத்தில் எடுக்க வேண்டும். ஆடி மாதம் என்பது ஒரு இரண்டும் கெட்டான் மாதம். வெயில், காற்று இரண்டுமே அதிகம் இருக்கும். மழையும் நினைத்த நேரங்களில் எல்லாம் பெய்யும். சீதோஷ்ண நிலை மாறி மாறி வருவதால் பரவும் நோய்களுக்கும் குறைவே இல்லை. மேலும் யாருக்கும் வியாதிகள் பரவக் கூடாது என்பதற்காகத் தான் ஆடி மாதத்தில் கூழ் ஊற்றுவார்கள். கூழ் உடம்பிற்கு குளிர்ச்சி என்பது குறிப்பிடத் தக்கது. அது இன்று ஆடி கூழாக, பாரம்பரியமாக மாறிவிட்டது. இந்த காலத்தில், நம்மை எந்த அளவிற்கு, குளிராக வைத்து கொள்ள வேண்டும் என்பது நமக்கு நன்றாகத் தெரியும், அந்த அளவுக்கு எமக்கு வசதிகளும் வாய்ப்புகளும் கூடி இருக்கின் றன. ஆனால் இன்றும் இதைக் காரணமாக கூறிக் கொண்டு திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்பதெல்லாம் கொஞ்சம் அதிகமாகவே படுகிறது எனக்கு. திருமணம் பற்றிய கருத்து இப்படி என்றால், இன்னும் ஒரு படி நம்முடைய மக்கள் அதிகமாக சென்று, நல்ல காரியம் எதுவும் செய்வதில்லை. உதாரணமாக, புது வீடு செல்ல கூடாது. பழைய வீட்டிலிருந்து காலி பண்ணக் கூடாது போன்ற எல்லாம் இன்னும் நடை முறை படுத்திக் கொண்டுதான் இருக்கின்றார்கள். வீட்டிற்கு குடி புகுவதற்கும், ஆடிக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும் என்று தெரியவில்லை எனக்கு, தெரிந்தவர்கள் தயவு செய்து சொல்லவும். அறியாமை என்ற ஒரு வார்த்தையை நம்முடைய அகராதியிலிருந்து அகற்று முடியாது என்பது மட்டும் எனக்கு தெளிவாகப் புரிகிறது. [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 20 தொடரும்
  10. "எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்!" யாழ்ப்பாணத்தின் மையப்பகுதியில், பசுமையான வயல்களுக்கும், மின்னும் நெல் வயல்களுக்கும் மத்தியில், தயாளன் என்ற எளிய விவசாயி வாழ்ந்து வந்தான். அவன் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், கடுமையாக உழைத்தான். அவனது கையும் காலும் மண்ணின் வாசனையுடன் பழகியது மட்டுமே அல்ல, அவனது ஆன்மா கூட இயற்கையின் தாளங்களுடன் எதிரொலித்தது. தயாளன் என்றும் பழங்கால பழமொழியில் நம்பிக்கையுடையவன். அதிலும் "வினை விதைத்தவன், வினை அறுப்பான்; தினை விதைத்தவன், தினை அறுப்பான்" அவனுக்கு மிகவும் பிடித்த ஒன்று. மற்றது 'கைபடாத குழந்தையும், கால்படாத பூமியும் வளார்ச்சி பெறாது” கைபடாத குழந்தை என்பது, தாயின் அன்பு, உறவுகளின் பாசம். இவை இல்லாமல் வளரும் குழந்தை எதிர்காலத்தில் சிறந்து வளர முடியாது. அதுபோல் உழவர்களின் கால்படாமல் விவசாயம் செய்தால் செழிக்காது. விளை நிலத்தில் உழவ செய்யாமல் இருந்தால் பாழ் நிலமாக (தரரிசு நிலம்) மாறிவிடும். அதில் பயிரிட்டு விவசாயம் செய்வது கடினம். குழந்தையின் வளர்ச்சி, நிலத்தின் விளைச்சல் இரண்டிற்கும் மற்றொன்றின் அரவணைப்பு தேவையாகின்றது என்பதே அவனின் எண்ணமும் செயலும் கூட. ஒவ்வொரு விடியலிலும், தயாளன் தனது சிறிய நிலத்தை அக்கறையுடனும் அர்ப்பணிப்புடனும் கவனித்து வந்தான். அவனது சிறு தோட்டம் காய்கறிகளால் நிரம்பியிருந்தன. ஒவ்வொன்றும் அவனது உழைப்பிற்கும் மண்ணின் மீதான அன்பிற்கும் சான்றாகும். ஆனால் அவனது சுமாரான சம்பாத்தியம் அவனது குடும்பத்தின் தேவைகளுக்கு போதுமானதாக இருக்கவில்லை. ஒரு நாள், தயாளனின் கிராமத்திற்கு அருகிலுள்ள நகரத்தைச் சேர்ந்த பெரிய கடைக்கார முதலாளி ஒருவர் அங்கு வந்தார். அவர் தனது கடைக்கு தேவையான காய்கறிகளை அந்த கிராமத்தில் இருந்து பெற தேடிக்கொண்டிருந்தார். அவ்வேளையில் தான், தயாளனின் அபரிமிதமான விளைச்சலைக் கண்டு, அவர் தயாளனுடன் ஒப்பந்தம் செய்தார். தயாளன் இதனால் நம்பிக்கைகொண்டு, அவன் தனது குடும்பத்திற்கு சிறந்த எதிர்காலத்தை கற்பனை செய்தான். நாட்கள் வாரங்களாக மாறியபோது, தயாளன் தனது சிறந்த அந்தந்த காலத்துக்குரிய காய்கறிகளை கடை உரிமையாளருக்கு விடாமுயற்சியுடன் தொடர்ந்து வழங்கினான். வாரம் இரு முறை காய்கறிகளை பறித்து, பையில் நிரப்பி தோளில் வைத்துக் கொண்டு நாலு மைலுக்கு அப்பால் இருக்கும் நகரத்துக்கு நடந்து சென்றே விற்றுவிட்டு வருவது அவனின் வழக்கம், அந்தந்த காலத்துக்கு உரிய காய்கறிகளை கொடுத்து விட்டு அதற்கு பதிலாக அரிசி, பருப்பு, சீனி போன்ற வீட்டுக்கு தேவையான பொருட்களை கடை முதலாளியிடம் இருந்து வாங்கி வருவான். தயாளன் தான் கொடுத்த அந்த காய்கறிகளுக்குப் பதிலுக்கு, அவன் நியாயமான பண்டமாற்றை எதிர்பார்த்தான். ஆனால் அந்த கடையின் முதலாளி, பேராசையால் உந்தப்பட்டு வஞ்சகமான நோக்கத்தை கொண்டிருந்தார் என்பது அவனுக்கு அப்ப தெரியாது. அவன் ஒரு கிராமத்து அப்பாவி! தயாளன் கொண்டுவரும் காய்கறியின் சுவை அந்த பகுதி மக்களிடையே மிகவும் பிரபலமடைந்தது. இதை அறிந்த முதலாளி, அந்த வாய்ப்பை பயன்படுத்தி மற்ற காய்கறிகளோடு கலந்து நல்ல லாபமும் சம்பாதித்து விடுவார்! பல வருடமாக விவசாயி தயாளன் காய்கறிகள் கொண்டு வருவதால் முதலாளி அதை எடை போட்டு பார்த்ததில்லை; தயாளன் சொல்கின்ற எடையை அப்படியே எடுத்து அதற்கு ஈடான மளிகை பொருட்களை கொடுத்து அனுப்புவார். காரணம் தயாளனின் நேர்மையும் நாணயமும் எல்லோரும் அறிந்தது என்பதால். என்றாலும் கடை முதலாளி தயாளனின் நம்பிக்கையைப் பயன்படுத்த முடிவு செய்தார். தயாளனுக்கு பண்டமாற்றாக கொடுக்கும் ஒவ்வொரு பத்து இறாத்தலுக்கும் உண்மையில் ஒன்பது இறாத்தலே கொடுப்பார். ஒவ்வொரு இறாத்தலிலும் அதற்குத் தக்கதாக குறைத்துவிடுவார். இந்த வஞ்சகத்தை அறியாத தயாளன், தனக்கு நேர்ந்த அநீதியை அறியாமல், அயராது உழைத்தான். ஒரு நாள் தயாளன் பத்து இறாத்தல் கத்தரிக்காய் கொடுத்துவிட்டு அதற்கான பொருட்களை வாங்கிச் சென்றான். சிறிது நேரத்தில் பத்து பத்து இறாத்தல் கத்தரிக்காய் மொத்தமாய் வேண்டும் என்று ஒரு சமையல்காரர் வந்து கேட்க, கடை முதலாளி, அந்த கத்தரிக்காய்களை அவனுக்கு முன்னால் எடை போட்டார். அதில் ஒன்பது இறாத்தல் மட்டுமே இருந்தது கண்டு கோபப்பட்டார். அன்று முழுவதும் முதலாளிக்கு தூக்கமே வரவில்லை, அதே சிந்தனை தான். தயாளன் மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தோம், இவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகத்தை செய்து விட்டானே? இத்தனை வருடங்களாக இப்படி முட்டாள்தனமாக எடை குறைவான காய்கறிகளை வாங்கி ஏமாந்து விட்டோமே? அடுத்த முறை தயாளன் வந்தால் சும்மா விடக்கூடாது என்று கடுங்கோபத்தில் இருந்தார். மூன்று நாட்கள் கழித்து தயாளன் மிகவும் மகிழ்வாக சில காய்கறிகளுடன் வழமைபோல் வந்தான். இம்முறை நல்ல விளைச்சல் என்பதால் நிறைய கொண்டு வந்திருந்தான். அவனை எப்படியும் நேராக கையும் களவுமாக பிடிக்க வேண்டும் என்று தன் மனதில் நினைத்துக் கொண்டு, எத்தனை இறாத்தல் தக்காளிப்பழம் என்று முதலாளி கேட்க பத்து இறாத்தல் என்றான் விவசாயி தயாளன். தயாளன் முன்னாலேயே எடைபோட்டு பார்க்க, அது ஒன்பது இறாத்தல் தான் இருந்தது. முதலாளி ஒன்றுமே சிந்திக்காமல், எடுத்த எடுப்பிலேயே, அவருக்கு வந்த கோபத்தில் பளார்,பளார் என தயாளனின் கன்னத்தில் அறைந்தார். இத்தனை வருடமாக இப்படித்தான் ஏமாத்திட்டு இருக்கியா? கிராமத்துக்காரங்க ஏமாத்த மாட்டாங்கன்னு நம்பித் தானே எடை போடாமல் அப்படியே நீ சொன்னபடி வாங்கினேன், இப்படி துரோகம் பண்ணிட்டியே சீய் என துப்ப, நிலைகுலைந்து போனான் தயாளன். ஐயா, என்ன மன்னிச்சிடுங்க நான் ரொம்ப ஏழை, எடைக்கல்லு வாங்குற அளவுக்கு என்கிட்ட காசு பணம் ஒன்றும் இல்லை. ஒவ்வொரு முறையும் நீங்க கொடுக்கிற ஒரு இறாத்தல் பருப்பை ஒரு தட்டிலும், இன்னொரு தட்டில் காய்கறிகளையும் வைத்து தான் எடைபோட்டு கொண்டுவருவேன். இதைத் தவிர வேறு எதுவும் நான் செய்வதில்லை. நான் கிராமக்காரன். உண்மையாக வாழ, உண்மையாக நேசிக்க பழகியவன். கன்னத்தை தடவிக்கொண்டு, தலை நிமிர்ந்து நின்றான். அவன் வாய் கொஞ்சம் மெதுவாக ஒரு பழைய பாடலை முணுமுணுத்தது. "நல்ல நல்ல நிலம் பார்த்து நாமும் விதை விதைக்கணும் நாட்டு மக்கள் மனங்களிலே நாணயத்தை வளர்க்கண்ணும்!" "இருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும் இல்லாதார் வாழ்க்கையிலே இன்பப் பயிர் வளர்க்கணும்!" முதலாளிக்கு செருப்பால் அடித்தது போல் அது இருத்தது. அவரின் வண்டவாளம் வெளிச்சத்துக்கு வந்துவிட்டதே? தான் செய்த துரோகம் தனக்கே வந்ததை உணர்ந்தார். இத்தனை வருடங்களாக விவசாயியை, கிராமத்தானை, தயாளனை ஏமாற்ற நினைத்த முதலாளியும் அவருக்கே தெரியாமல் ஏமாந்து கொண்டுதான் இருந்திருக்கிறார் என்பது அவருக்கு தெளிவானது. இது தான் உலகநியதி. நாம் எதை கொடுக்கிறோமோ அதுதான் நமக்கு திரும்ப வரும். ஆமாம் நல்லதைக் கொடுத்தால் நல்லது வரும் தீமையைக் கொடுத்தால் தீமை தான் வரும் வருகின்ற காலங்கள் வேண்டுமானால் தாமதமாகலாம், ஆனால் கட்டாயம் வரும் ஆகவே நல்லதை மட்டுமே கொடுப்போம், நல்லதை மட்டுமே விதைப்போம்! 'மனிதன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்.' 'வினை விதைத்தவன், வினையறுப்பான்; தினை விதைத்தவன், தினை அறுப்பான்' நன்றி கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்
  11. "ஒருபால் இருபால் அவரவர் முடிவு" "பண்டைய நாட்களில் இயற்கையின் அழைப்பில் பலரும் பாராட்டிட திருமணம் அரங்கேறி பருவமடைத்த ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே பக்குவமான பிணைப்பு பின்னிப் பிணைந்தது!" "சுமேரிய நாகரிகம் வழியில் சங்கத்தமிழனும் சுத்தமான இயற்கையான அணைப்பில் மூழ்கி சுதந்திர பிணைப்பில் வாழ்வை அமைத்து சுவர் அமைத்தான் குடும்பம் காக்க! " "இன்றைய நவீனம் புதியகுரல்களை உள்வாங்கி இணக்கம் கொண்ட ஒருபாலாரையும் இணைத்து இதயங்கள் ஒன்றுசேர சமஉரிமை தந்து நவீனஃபிளாஷ் [modern flash] பழைய மதிப்புகளை சந்தித்தன!" "கடந்தகால மரபும் தொடர்ந்து வாழ கள்ளமில்லா ஒருபால் அன்பும் இணைந்துவாழ களங்கமில்லா மரபுகளின் உட்கருத்தை விளக்க இருவேறு சொல்லில் வரையறுத்தால் என்ன ?" "வார்த்தைக்கு ஆழமான அகலமான சக்தியுண்டு வாழ்வின்பொருள் அறிந்து உணர்ந்து இணைந்தால் வாட்டமில்லா மோதலில்லா சமூகம் தோன்றி வாயார வாழ்த்துமே வரம்புகளை அறிவதாலே!" "திருமணம் ஆணுக்கும் பெண்ணுக்கும் என்றாகட்டும் இருமனம் சேரும் ஒருபாலார் சிவில் யூனியனாகட்டும் இரண்டுக்குமே ஒரே சட்டம் பார்வையாகட்டும் இல்லறமென்பது யாதென மனிதன் அறியட்டும் !" நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
  12. "ஒருபால் இருபால் அவரவர் முடிவு" "பண்டைய நாட்களில் இயற்கையின் அழைப்பில் பலரும் பாராட்டிட திருமணம் அரங்கேறி பருவமடைத்த ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே பக்குவமான பிணைப்பு பின்னிப் பிணைந்தது!" "சுமேரிய நாகரிகம் வழியில் சங்கத்தமிழனும் சுத்தமான இயற்கையான அணைப்பில் மூழ்கி சுதந்திர பிணைப்பில் வாழ்வை அமைத்து சுவர் அமைத்தான் குடும்பம் காக்க!" "இன்றைய நவீனம் புதியகுரல்களை உள்வாங்கி இணக்கம் கொண்ட ஒருபாலாரையும் இணைத்து இதயங்கள் ஒன்றுசேர சமஉரிமை தந்து நவீனஃபிளாஷ் [modern flash] பழைய மதிப்புகளை சந்தித்தன!" "கடந்தகால மரபும் தொடர்ந்து வாழ கள்ளமில்லா ஒருபால் அன்பும் இணைந்துவாழ களங்கமில்லா மரபுகளின் உட்கருத்தை விளக்க இருவேறு சொல்லில் வரையறுத்தால் என்ன ?" "வார்த்தைக்கு ஆழமான அகலமான சக்தியுண்டு வாழ்வின்பொருள் அறிந்து உணர்ந்து இணைந்தால் வாட்டமில்லா மோதலில்லா சமூகம் தோன்றி வாயார வாழ்த்துமே வரம்புகளை அறிவதாலே!" "திருமணம் ஆணுக்கும் பெண்ணுக்கும் என்றாகட்டும் இருமனம் சேரும் ஒருபாலார் சிவில் யூனியனாகட்டும் இரண்டுக்குமே ஒரே சட்டம் பார்வையாகட்டும் இல்லறமென்பது யாதென மனிதன் அறியட்டும் !" நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாண ம்]
  13. "என் அப்பாவுக்காக" ['கணபதிப்பிள்ளை கந்தையா' /11/06/1907 - 18/02/2000] "பாராட்டுகள் எதிர்பாராத, பெருமை பேசாத பாசாங்கு செய்யாத, அமைதியான அண்ணல் ! பாசம் கொண்டு, எம்மை உயிராய்நேசித்து பார்த்து வளர்த்த, பெருந்தகை இவன் !" "அன்னாரின் கனவுகளை, இன்று நிறைவேற்ற அன்னாரின் விருப்பங்களை, இன்று முழுமையாக்க அன்னாரின் கவலைகளை, இன்று நீக்கிட அயராது நாம்என்றும், உறுதியாக இருக்கிறோம் !" "எம் வாழ்வின், அனைத்து புயல்களிலும் எம்மை கைபிடித்த, துணிவுமிக்க வீரன் ! எம் மனஅழுத்தம், சச்சரவு காலங்களில் எம்மை வழிநடத்தும், உண்மையான நண்பர் !" "நல்ல கெட்ட நேரங்கள் எல்லாம் நட்புடன் ஆசீர்வதித்து தேற்றிய ஆசான் ! நடுகல்லாய் நாம் இன்று மலர்தூவி நறும்புகை ஏற்றி வழிபடும் தெய்வம் !" "உலகம் அறியும் நாயகன் இவனல்ல உண்மை பேசும் உத்தமன் இவன் ! உதாரணம் காட்டி தவறுகள் திருத்தி உரிமையுடன் அதட்டி மனிதனாக்கிய தலைவன் !" "நடந்தது நடந்ததே என்று கூறி நடப்பதை எதிர்கொள்ள பலம் தந்து நம்பிக்கையே வாழ்வின் ஆதாரம் என்று நயமாக இயம்பிய தந்தை இவன் !" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
  14. 'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 38 உண்மையில் உயரிய வரலாற்றுக் குறிப்பான மகாவம்சம் இலங்கையினதோ அல்லது சிங்களவர்களினதோ வரலாறாக எழுதியது என்பதை விட, அது மகாவிகாரையின் அல்லது தேரவாத பௌத்தத்தின் வரலாறு என்று கூறுவதே பொருத்தம் என்று எண்ணுகிறேன் [The Mahavamsa (Great Chronicle of historical poem) was written not as a history of Sri Lanka (or Sinhalese) but as a history of the Mahavihara (Theravada Buddhists)]. உதாரணமாக தீபவம்சம், மகாவம்சம் தேரவாத பௌத்தத்தை மட்டுமே சொல்லுகிறது, அப்பொழுது சிங்கள இனம் என்று ஒன்றும் இல்லை, எனவே சிங்கள பௌத்தம் [Sinhala Buddhists] என்ற சொல்லுக்கே இடமில்லை. எனவே உண்மையில் இலங்கையின் சரியான வரலாற்றையும், அதன் மக்களையும் [சிங்களவர், தமிழர்], அதன் பண்டைய மதங்கள் [இந்து [சைவம்], புத்த], அதன் பண்டைய மொழிகள் அல்லது எழுத்து வடிவங்கள் மற்றும் அதன் பண்பாடுகளையும் அறிய வேண்டுமாயின், [To study the history of Sri Lanka and its people (Sinhalese/Tamils), its ancient religions (Buddhism / Hinduism), its languages/scripts and its culture], நாம் வடக்கு தெற்கு இந்தியாவின் வரலாற்றையும் சரியாக புரிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால், இலங்கையின் வரலாற்றின் மூலம் (origin / roots) அங்குதான் ஆரம்பிக்கிறது. அதுமட்டும் அல்ல அந்நியர் ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெரும் மட்டும் இவை இரண்டின் வரலாறும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட, தொப்புள் கொடி உறவாகவே இருந்தன எனலாம் [interconnected / umbilical cord]. நாம் இன்னும் ஒன்றையும் கவனத்தில் கொள்ளவேண்டும், அதாவது, இந்த பாளி நூல்கள், இலங்கையின் புத்த அரசர்களின் இனப் பின்னணி [ethnic background] பற்றி குறிப்பிடவில்லை. எனவே அவர்களின் பெயர்களிலும் அதன் கருத்து அல்லது அதன் பின்னணியிலுமே நாம் அதைத் தேட வேண்டி உள்ளது. மேலும் வரலாற்று அறிஞர்களின் படி, ஒன்பதாம் நூற்றாண்டில் தான் நாகர் என்ற பதம் அல்லது பெயர், இலங்கை வரலாற்றில் இருந்து, அதாவது கல்வெட்டுகளில் [stone inscriptions] இருந்து வழக்கொழிந்து போயின என்கின்றனர். அதன் பின் தான் மிகவும் தெளிவாக இரண்டு முதன்மை இனக்குழுக்களாக [ethnic groups], அதாவது, ஹெல / சிகல மற்றும் தமிழர் [Hela / Sihala and Demela] என அடையாளம் காணக்கூடியதாக இருந்தது எனலாம். ஆகவே வரலாற்று ஆசிரியர்கள், நாகர்கள் இந்த இரண்டு முதன்மை இனக்குழுக்களுடனும் ஒருங்கிணைக்கப்பட்டார்கள் என்று நம்புகிறார்கள். பேராசிரியர் க இந்திரபாலாவின் [Prof. K. Indrapala] கூற்றின்படி, வரலாற்றுக்கு முந்தைய காலம் [prehistoric times] மற்றும் எழுத்துகள் கண்டுபிடிக்காத, வரலாற்றின் மிகப்பெரிய நாகரிகங்கள் உருவாகாத, மக்கள் ஒருங்கிணைந்த சமூகமாகச் சேர்ந்து வாழ்ந்த புரோட்டோ [மூல அல்லது முதனிலை] வரலாற்று காலத்திலும் [proto-historic times], வாழ்ந்த பொதுவான மூதாதையர்களின் வழித்தோன்றல்கள் [As per Prof. K. Indrapala, ‘The Sinhalese and Tamils of Sri Lanka are descended from the common ancestors who lived in the country in prehistoric and proto-historic times] இவர்கள் இருவரும் என்றும் இவர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளிற்கு மேலாக வரலாற்றை இலங்கையில் பகிர்ந்துள்ளார்கள் என்றும் கூறுகிறார். இதை நாம் ஏற்றுக்கொள்வோமாயின், இன்று நாம் சிங்களவர், நாம் தமிழர் என இலங்கையில் கூறுபவர்கள் அனைவரும் ஒரு தாய் மக்களே ஆவார்கள் என்பது கண்கூடு. நாம் மகாவம்சத்தில் விஜயனின் வருகையை பார்க்கும் பொழுது ஒரு உண்மை புலனாகிறது. அதாவது, இலங்கைக்கு புத்த மதம் வரும் முன்பே, மற்றும் சிங்களவர் என்ற ஒரு இனம் பரிணமிக்கும் முன்பே, இலங்கை, சங்க இலக்கியத்தில் கண்ட தென் இந்தியா மாதிரி, நாகரிகம் அடைந்த நாடாகவே காண்கிறோம். உதாரணமாக ஒருவனது அல்லது ஒருவளது உடலை மறைக்கும் உடை ஒன்று இல்லாமல் எவராலும் இன்று ஒரு நாகரிக மனிதனை சிந்திக்க முடியாது. 2500 ஆண்டுகளுக்கு முன்பு விஜயன் நாடு கடத்தப் பட்டு இலங்கைக்கு வந்து இறங்கும் பொழுது, அவன் முதல் குவேனி நூல் நூற்பதை காண்கிறான். பட்டினப் பாலையின் "துணைப் புணர்ந்த மடமங்கையர், பட்டு நீக்கித் துகில் உடுத்து,... " என்ற வரியில் நாம் காணும் நாகரிக மங்கை போல் குவேனியும் தன் அழகிய உடலுக்கு அணிந்து கொள்ள, உடை ஒன்றை பின்னுவதற்க்காக, நூற்பதை காட்டுகிறது. இது அன்று ஒரு முன்னேறிய நாகரிகம் இலங்கையில் இருந்தது என்பதை கட்டாயம் காட்டுகிறது என்றே நம்புகிறேன். குவேனி என்ற சொல், கவினி என்ற தமிழ்ச் சொல்லின் திரிபு என்றும், கவினி என்றால் "பேரழகு படைத்தவள்" என்றும் சொல்லப்படுகிறது. மேலும் இராமாயண காப்பியத்தில் இலங்கையை ஆண்ட ராவணன் ராட்சதன் என்று கூறப்பட்டது போல, குவேனியையும் ராட்சத குலம் என்று வர்ணிக்கிறது, "மகாவம்சம்" என்பது கவனிக்கத் தக்கது. கி மு 205 க்கும் கி மு 161 க்கும் இடைப்பட்ட துட்ட காமினி, எல்லாளன் [Dutugemunu and Ellalan] பெரும் போரைப் பற்றி அதிகம் எழுதப்பட்டுள்ளது. இதில் இன்னும் ஒன்றையும் நாம் கவனிக்க வேண்டி உள்ளது. துட்ட காமினியின் பத்து மாபெரும் வீரர்கள் என வர்ணிக்கப்படுபவர்களில், நந்திமித்ரா [Nandhimitta], வேலுசுமணா என்ற இருவர் தமிழர் ஆகும். உதாரணமாக நந்திமித்ரா, எல்லாளனின் தமிழ் சேனாதிபதியான மித்ராவின் [Mitta] சகோதரி மகனாகும் [nephew]. அதே போன்று, எல்லாளனின் படையில் பின்னாளில் சிங்களவர்களாக பரிணமித்த்தவர்களின் மூதாதைய வீரர்கள் மட்டுமல்ல, சேனாதிபதிகளும் இருந்துள்ளனர். உதாரணமாக தீகபாய, தீகஜந்து, காமினி, நந்திதா …. ஆவார்கள். இந்த சேனாதிபதிகளின் பட்டியலில், துட்ட கைமுனுவின் ஒன்று விட்ட சகோதரனான தீகபாய செனாவியின் பெயரும் இருப்பது குறிப்பிடத்தக்கது. என்றாலும் அந்த கால பகுதியில் சிங்களம் என்ற ஒரு இனம் இல்லை, ஆனால் இவர்களின் பவுத்த பரம்பரை பின்னாளில் சிங்களவர்களாக பரிணமித்தார்கள் என்பது தான் உண்மை. இது இந்த பெரும் யுத்தம், மொழி, இனம் அடிப்படையில் அல்ல, மத அடிப்படை மட்டுமே என்பதை மீண்டும் உறுதிப் படுத்துகிறது. எனவே, எல்லாளன் – துட்ட கைமுனு போர் தமிழர் – சிங்களவர் போராகப் பார்ப்பது தவறானது. அன்று சிங்கள இனமோ மொழியோ தோன்றாத காலம். அந்தப் போர் சைவ மதத்தினருக்கும் – பவுத்தர்களுக்கும் இடையிலான ஆட்சி அதிகாரப் போர் என்பதே உண்மையாகும். துட்ட கைமுனு நாக வம்சத்தை சேர்ந்தவன். அவனது தந்தை பெயர் காகவண்ண தீசன் [Kavantissa]. காகவண்ண தீசனின் பூட்டன் பெயர் மகாநாகன் ஆகும் [Kavantissa - a great-grandson of King Devanampiyatissa's youngest brother Mahanaga]. மகானாகனது தந்தை பெயர் முத்துசிவன் [Mutasiva / மூத்தசிவா]! இது ஒன்றே துட்ட கைமுனு யார் என்று எடுத்து காட்டுகிறது. அது மட்டும் அல்ல, துட்ட கைமுனு ஒரு சிங்கள மன்னன் என்று மகாவம்சம் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. துட்டகைமுனு வாழ்ந்த காலத்தில், சிங்களவர்கள் என்று அடையாளம் காணக் கூடிய ஒரு இனம் வரலாற்றில் தோன்றியிருக்கவில்லை. மகாவம்ச கதைப்படியே துட்ட கைமுனு தந்தை வழியிலும் தாய் வழியிலும் நாக வம்சத்தைச் சேர்ந்தவன். அவனது தாய் விகாரமாதேவி கல்யாணியை ஆண்ட மணியக்கியா அல்லது களனி தீசன் என்ற அரசனின் மகள் ஆவாள் [Dutugemunu's mother was Viharamahadevi, daughter of Tissa, king of Kalyani.]. எல்லாளன் மீது போர் தொடுக்கு முன்னர் கதிர்காமத்தில் உள்ள முருகனை வழிபாடு செய்து விட்டே புறப்படுகிறான். அவனது போர் முழக்கம் “இராச்சியங்களைப் பிடிக்க அல்ல நான் போர் தொடுத்தது. புத்தரின் தர்மத்தை நிலைநாட்டவே நான் போர் செய்தேன். இதுவே உண்மை என்பதை எண்பிக்க எனது படையினரின் மேனி தீயின் நிறத்தை எடுக்கட்டும்’ [Chapter XXV of Mahāvaṃsa depicts the story of the “The Victory of Duṭṭhagāmaṇi.” After having a relic placed on his spear, Duṭṭhagāmaṇi takes five hundred bhikkhus with his army to march in conquest across the Tamil occupied territories. He victoriously conquers many kings, but states, “Not for the joy of sovereignty is this toil of mine, my striving (has been) ever to establish the doctrine of the Saṃbuddha. And even as this is truth may the armour on the body of my soldiers take the colour of fire.”] என சூளுரைத்ததாக மகாவம்சம் (அதிகாரம் 25) தெரிவிக்கிறது. “பவுத்த மதத்தை மீட்பதற்கான புனிதப்போரில் துட்ட கைமுனு என்ற சிங்கள பவுத்த மன்னன், எல்லாளன் என்ற தமிழ் சைவ மன்னனை வென்றான்” என்ற கதை பின்னாளில் புனையப்பட்டு சிங்கள பள்ளி மாணவர்களுக்கான சிங்கள மொழிப் பாட நூலில் சேர்க்கப்பட்டது என்பது வெள்ளிடை மலையாகும். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 39 தொடரும்
  15. 'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 37 மகாவம்ச ஆசிரியர், இலங்கையில் புத்த சமயத்திற்கு ஒரு கவர்ச்சியை கொடுக்க, புத்தர் தனது கொள்கையை பரப்ப, தேர்ந்து எடுத்த மக்களாக சிங்களவர்களையும், தேர்ந்து எடுத்த நாடாக இலங்கையையும் தனது கதையில் வெளிக் காட்டி, அதற்கு மகுடம் வைத்தாற் போல், விஜயனினதும் அவனது தோழர்களினதும் இலங்கை வருகை நாளை செயற்கையாக, புத்தரின் மரண நாளுடன் ஒத்து போக செய்தது வெளிப்படையாக எந்த நடுநிலையாளருக்கும் கட்டாயம் தெரியும் [The author of Mahavamsa, artificially fixed the arrival of Vijaya and his compatriots to coincide with the passing away of Buddha in 543 BCE.]. உதாரணமாக, இந்த தந்திரத்தால், விஜயனிற்கு பிறகு ஆட்சி அமைத்த சில அரசர்களின் ஆட்சி காலத்தை நீடித்தது தெரிய வருகிறது, குறிப்பாக தந்தையும் மகனுமாக '130' ஆண்டுகள் ஆட்சி செய்தனர் என குறிப்பிடுகிறார் ?. மன்னன் பண்டு அபயன் 70 ஆண்டுகளும் அவனுடைய மரணத்துக்குப் பிறகு அவனது மகன் மூத்த சிவன் என்பவன் 60 ஆண்டுகள் ஆட்சி செய்தான் என்கிறது. [King Pandukhabaya, nephew of Abhayan was supposed to have ruled from 377 BC – 307 BC that is 70 years. Muttasivan, son of Pandukhabaya ruled for 60 years from BC 307 to BC 247], இதில் இன்னும் ஒரு விசேடம் என்னவென்றால், அறிவிற் சிறந்த அரசன் பாண்டுஅபயன் முப்பத்து ஏழு வயதில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றான் என்றும் அதன் பின்பு தான் எழுபது வருடகாலம் சீரும், செல்வமும் மிக்க அனுராதபுரத்திலிருந்து அவனுடைய அரசாட்சியை ஆண்டு வந்தான் என்கிறது மகாவம்சம். அதாவது அவன் 107 ஆண்டுகள் வாழ்ந்துள்ளான். அதேவேளை, முத்தசிவனின் [மூத்தசிவனின்] பிறப்பு பற்றி எந்த செய்தியும் அங்கு இல்லை. ஆனால், பாண்டுஅபயன் தனது மனைவி, சுவன்னபலியை [Suvannapali] பதினாருக்கும் பதினெட்டு வயதுக்கும் இடையில் சந்தித்து உள்ளான். ஆகவே மூத்த மகன் அதிகமாக இருபதுக்கும் முப்பதுக்கும் இடையில் பிறந்து இருக்கலாம் என்று நாம் ஊகித்தால், முத்த சிவன் குறைந்தது அகவை 137 க்கும் 147 க்கும் இடையில் [between 107 - 30 + 60 & 107 - 20 + 60] வாழ்ந்திருப்பான். அதேபோல முத்தசிவவின் மகன் திஸ்ஸ முத்தசிவவின் அகவை இருபதுக்கும் முப்பதுக்கும் இடையில் பிறந்து இருந்தால், திஸ்ஸ [தேவநம்பிய திசா] குறைந்தது அகவை 147 க்கும் 157 க்கும் இடையில் [between 137 - 30 + 40 & 137 - 20 + 40] வாழ்ந்திருப்பான். இவனுக்கு பிறகு இவனின் தம்பி உத்திய 10 ஆண்டுகள், அடுத்த தம்பி மகாசிவ 10 ஆண்டுகள், அடுத்த தம்பி சூரதிச்ச 10 ஆண்டுகள், அதை தொடர்ந்து சேனனும் குத்திகனும் 22 ஆண்டுகள், அதன் பின் கடைசிக்கு முதல் தம்பி அசேல முடி சூடுகிறான். அசேலக்கும் திஸ்ஸவுக்கும் இருபது ஆண்டு வித்தியாசம் என்று ஊகம் செய்தால், குறைந்தது 179 அகவையில் [147 - 20 + 10 + 10 + 10 + 22 = 179] அசேல [Asela] முடி சூடுகிறான். அதன் பின் 10 ஆண்டுகள் ஆள்கிறான். எனவே குறைந்தது 189 ஆண்டுகள் வாழ்ந்து உள்ளான். கௌதம புத்தரே தனது எண்பதாவது அகவையில் இறந்தது குறிப்பிடத் தக்கது. இவை தான் நம்ப முடியாத செய்திகள் ஆகும். மேலும் மகாவம்சம் 1000 ஆண்டுகளிற்கு பின் எழுத பட்ட கதை ஆகும். இதுவும் நம்ப முடியாத செய்திகளுக்கு ஒரு காரணமாகும். யார் வரலாற்றை வைத்திருக்கிறார்களோ, அவர்கள் நாட்டை வைத்துள்ளார்கள், ஆட்சி செய்வதற்கான உரிமையை வைத்துள்ளார்கள், மற்றும் இருப்பதற்கான உரிமையையும் வைத்துள்ளார்கள் என்கிறார் ஹெல்மண் -ராஜநாயகம் [“Whoever possesses the history possesses the country, possesses the right to rule, the right to exist” - Hellmann-Rajanayagam]. அதனாலேயே மகாநாம தேரர் இவ்வாறு குழப்பி உள்ளார் என்று எண்ணுகிறேன். இதை இன்றும் இலங்கைவாழ் பல புத்த தேரர்களிடமும், இலங்கை பெரும்பான்மை அரசியல் வாதிகளிடமும், தொல்பொருள் திணைக்களத்திடமும் இன்னும் காணலாம்? அரசபடைகளின் உதவியுடன் நடக்கும் தில்லுமுல்லுகள் இதற்கு சான்று பகிர்கின்றன, உதாரணமாக, அண்மையில் மார்ச் 2023 இல் பறிபோன நெடுந்தீவின் வெடியரசன் கோட்டை , யாழ்ப்பாணம், காங்கேசன்துறையில் இருந்த ஆதிசிவன் ஆலயம், பழமைமிகு கிருஸ்ணன் கோயில், சடையம்மா மடம், கதிர்காமத்துக்கு யாத்திரை ஆரம்பிக்கும் முருகன் கோயில் என்பன இடித்தழிக்கப்பட்டு, அங்கு மாளிகை கட்டப்பட்டது, முல்லைத்தீவு குருந்தூர் மலை விவகாரம், அச்சுவேலியில் முளைத்த அதிசய புத்தர், ஊர் மக்களின் எதிர்ப்பால் 'இராணுவத்தினரால்' அகற்றப்பட்டது மற்றும் இந்துக்களின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாக போற்றப்பட்ட கன்னியா வெந்நீர் ஊற்று பகுதிகள் தற்பொழுது பௌத்த மயமாக்கல் பகுதியாக மாற்றப்பட்டு உள்ளது எல்லாம் மகாநாம தேரரின் திட்டம் இன்னும் இன்றுவரை தொடர்வதை எடுத்து காட்டுகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால், ஒரே குடுப்பத்தை சேர்ந்த மூன்று தலைமுறையில், ஏழு அரசர்கள் 107 க்கும் குறைந்தது 189 க்கும் இடையில் நீண்ட வாழ்வு வாழ்ந்து உள்ளார்கள் ? இது ஒன்றே மகாவம்சத்தை எவ்வளவு தூரம் நம்பலாம் என்பதற்கு ஒரு உதாரணம் ஆகும். அது மட்டும் அல்ல, பண்டுவாசுதேவனில் இருந்து துட்டகாமினி வரை, அவர்கள் ஆண்ட காலங்கள் 30, 20, 70, 60, 40, 10, 10, 10, 10 என நேர்த்தியான பத்தின் பெருக்குங்கள் ஆகும், இந்த பரம்பரையில் வராத சேனன் குத்திகன் தவிர. [இவர்கள் 22 ஆண்டுகள் ஆட்சி செய்தார்கள்.] இந்த உண்மையின் அடிப்படையில் நோக்கும் பொழுது, இந்த பரம்பரை முழுவதும் ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது? அது மட்டும் அல்ல, எல்லாளன் கூட, மனுநீதி சோழன் மற்றும் சிபி சக்ரவர்த்தி போன்றோர்களின் கதையின் தழுவல் போலவே தெரிகிறது. துட்டகாமினி கூட, இறந்து கொண்டு இருந்த ஒரு புத்த பிக்குவின் அவதாரம் என்கிறது [Dutthagamani who killed Elara must also be an invented person. He is the re-incaranation of a dying monk as per the Mahavamsa,] அதாவது விஹார மகாதேவியின் வயிறில் நேரடியாக அந்த பிக்கு கருவாக அவதரித்தார் என்கிறது. எனவே உயிரியல் தொடர்பு துட்டகாமினிக்கு, தந்தை காவந்தீசனிடம் இல்லை என்றாகிறது. இது கர்ணன் குந்திதேவிக்கு பிறந்ததை நினைவூட்டுகிறது. ஆனால் அதே நேரத்தில் நான் அவரை இனவெறியாளர் என்றோ அல்லது அவர் தனது கவிதை இலக்கியமான மகாவம்சத்தில் ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியிலும் இது [புத்த சமய] தெய்வ பக்தர்களின் அமைதியான மகிழ்ச்சி மற்றும் உணர்வுகளுக்காக தொகுக்கப்பட்டது [‘serene joy and emotion of the pious’] என்று வெளிப்படையாக எழுதி இனவெறி கோட்பாட்டை விதைத்தார் என்றோ நான் குற்றம் சாட்ட வில்லை. ஏன் என்றால், அந்த காலப்பகுதியில் புத்த சமயத்திற்கு இந்து, [சைவ] மதத்தில் இருந்து அச்சுறுத்தல்கள் கூடி, புத்த மதத்தின் செல்வாக்கு தென் இந்தியா உட்பட இந்தியா முழுவதிலும் சரிந்து போய்க்கொண்டு இருந்ததுடன், அதன் தாக்கம் இலங்கை வாழ் தமிழர்கள் மத்தியிலும் தலை தூக்கி இருந்தது. எனவே மகாநாம தேரருக்கு ஒரு தேவை இருந்தது, எப்படியும் இந்தியாவில் அழிந்து கொண்டு இருக்கும் புத்த மதத்தை இலங்கையிலாவது நிலைநாட்ட வேண்டும் என்று. அதைத்தான் அவர் செய்தார் என்று நம்புகிறேன். மற்றது எனது இந்த தொடர் கட்டுரை இலங்கை வரலாற்றின் ஆழமான பகுப்பாய்வு அல்ல. அதை கல்வியாளர்கள் மற்றும் அறிஞர்கள் ஏற்கனவே செய்துள்ளனர். எனவே கட்டுக்கதைகள் மற்றும் தவறுகளை முன்னிலைப்படுத்தும் ஒரு கண்ணோட்டம் மட்டுமே என் கட்டுரையாகும். மகான் புத்தருடைய பொன்மொழிகள் அடங்கிய தம்மபதம் [Dhammapada] என்ற நூலில், உண்மையை உண்மை என்று அறிபவரும், அதேபோல பொய்யை பொய் என்று அறிபவரும் உண்மையை உணர்கிறார் [they who know truth as truth and untruth as untruth arrive at truth] என்ற அவரின் கூற்றை காண்கிறோம். அதைத்தான் நான் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 38 தொடரும்
  16. "தொட்டால் கொரோனா மலரும்" "தொட்டால் கொரோனா மலரும் தொடாமலும் அது பரவும் பட்டால் முகம் சிவக்கும் படாமலும் நீ சிவப்பாய் !" "கண்கள் படாமல், கைகள் தொடாமல் காச்சல் வருவதில்லை இருமல் வாட்டுவதில்லை !" "நேரில் வராமல் சந்திப்பு செய்யாமல் வேலை கெடுவதில்லை காதல் தொலைவதில்லை !" "தும்மல் வந்ததாலும் இருமல் வந்ததாலும் முகத்தை மூடிவிடு திசுவால் தொடைத்துவிடு !" "வெளியெ சென்றாலும் உள்ளே இருந்தாலும் கையை கழுவிவிடு சானிடைசர் தடவிவிடு !" "மரபணு பிறழ்வடையும் புதிதாய் திரிபடையும் மரணம் அதிகரிக்கும் வாழ்வை முடக்கிடும் !" "வீட்டில் இருந்தாலும் துப்பரவாய் இருந்தாலும் பாதுகாப்பாய் இரு இடைவெளி விட்டுஇரு !" "ஆரோக்கியமாக இருந்தாலும் இளமையாக இருந்தாலும் தடுப்பூசி ஏற்றிவிட்டு கூட்டத்தை தவிர்த்துவிடு !" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
  17. யாழ் இணையம் - உலகத் தமிழரின் கருத்துக்களத்தில் நீண்ட விவாதத்திற்குப் பிறகு, நான் தனிப்பட்ட முறையில் கீழே உள்ள முடிவுக்கு வருகிறேன். ஆனால் 'திருமணம்' என்ற வார்த்தையை நாம் கவனமாகக் கையாள வேண்டும் என்றும் உணர்கிறேன், இல்லையெனில் மனித சமூகத்தின் சமூக அமைப்பும் அதன் அற்புதமான கலாச்சாரமும் எதிர்காலத்தில் வெடிக்கலாம் ?? குறிப்பாக சமூக கட்டமைப்பு மற்றும் ஸ்திரத்தன்மையில் என்று எண்ணுகிறேன் எனினும் சமூகங்கள் வரலாற்று ரீதியாக சமூக விதிமுறைகள் மற்றும் வரையறைகளில் மாற்றங்களுக்கு ஏற்றதாக காலப்போக்கில், தன்னை சரிப்படுத்தி, ஆரம்பத்தில் சீர்குலைப்பதாகத் தோன்றுவது சாதாரணமாகி ஏற்றுக்கொள்ளப்படுவதும் உண்டு என்பதையும் நம்புகிறேன் ஒரே பாலின இணைப்பு அதிகாரப்பூர்வமாக "திருமணம்" என்று அழைக்கப்பட வேண்டுமா என்பது வரலாற்று, சமூக, மொழியியல் மற்றும் நெறிமுறை பரிமாணங்களை [historical, social, linguistic, and ethical dimensions] உள்ளடக்கிய பன்முகத்தன்மை கொண்டது. இந்த முன்மொழிவை ஏற்றுக்கொள்வதற்கும் நிராகரிப்பதற்கும் சில மதிப்புமிக்க காரணங்கள் என் மனதில் தோன்றின. அவை சரியா பிழையா என்பதை நீங்கள் எடுத்துக் கூறலாம் ஒரே பாலின சங்கங்களை "திருமணம்" என்று அழைப்பதை ஏற்றுக் கொள்வதற்கான சில காரணங்களை கீழே தருகிறேன் சமத்துவம் மற்றும் பாகுபாடு இல்லாதது / Equality and Non-Discrimination: சட்ட அங்கீகாரம் / Legal Recognition : ஒரே பாலினத் சங்கங்களை அல்லது இணைந்து வாழ்வதை "திருமணம்" என்று அழைப்பது, இந்த ஜோடிகளுக்கு பரம்பரை, வரிவிதிப்பு மற்றும் உடல்நலப் பாதுகாப்பு நலன்கள் [inheritance, taxation, and healthcare benefits] உட்பட, பாலினத் தம்பதிகளைப் போலவே சட்டப்பூர்வ அங்கீகாரம் மற்றும் உரிமைகளை வழங்குகிறது இன்றைய நடை முறையில் [என்றாலும் சட்டங்களை அதற்குத் தக்கதாக, ஒரு பாலின கூட்டுக்கும் அவை செல்லுபடியாகும் என்று இலகுவாக மாற்றலாம்?? என்பதும் கவனிக்கத் தக்கது!!] சமூக ஏற்றுக்கொள்ளல் / Social Acceptance: இது, மேலே கூறியவை, சமூக ஏற்றுக்கொள்ளலை ஊக்குவிக்கிறது மற்றும் ஒரே பாலின உறவுகளின் செல்லுபடியாகும் தன்மையை பாலின உறவுகளுடன் சமமான நிலையில் அங்கீகரிப்பதன் மூலம் களங்கத்தை குறைக்கிறது. மொழியின் பரிணாமம்: மாறும் இயல்பு: சமூக மாற்றங்களை பிரதிபலிக்கும் வகையில் மொழி காலப்போக்கில் உருவாகிறது. "திருமணம்" போன்ற வார்த்தைகளின் அர்த்தம் தற்கால புரிதல்கள் மற்றும் மதிப்புகளுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும் என்ற கருதுகோள் முன்னோடிகள்: திருமணத்தின் வரையறை காலப்போக்கில் பல்வேறு வடிவங்கள் மற்றும் நடைமுறைகளை உள்ளடக்கியதாக மாறி உள்ளது உதாரணமாக, பலதார மணம் என்பது பல கலாச்சாரங்களில் பொதுவானதாக இருந்தது, ஆனால் இப்போது குறைவாகவே உள்ளது. வரலாற்று சூழல்: பல்வேறு நடைமுறைகள்: வரலாறு முழுவதும், பல்வேறு வகையான இணைவுகள் மற்றும் இருவர் ஒன்றாக வாழ்தல் உள்ளன. உதாரணமாக, சில பூர்வீக அமெரிக்க கலாச்சாரங்கள் ஒரே பாலின இணைவை அங்கீகரித்தன, இருப்பினும் அவர்கள் "திருமணம்" என்று என்றும் அழைக்கவில்லை. விரிவுபடுத்தும் வரையறைகள்: பல பாலினச் சூழல்களுக்குள்ளும் கூட, திருமணத்தின் கருத்து காலகட்டங்களில் கணிசமாக வேறுபட்டுள்ளது ஒரே பாலின சங்கங்களை "திருமணம்" என்று அழைப்பதை நிராகரிப்பதற்கான காரணங்கள் கீழே தருகிறேன் பாரம்பரிய வரையறைகள்: வரலாற்று நிலைத்தன்மை / Historical Consistency: "திருமணம்" என்ற சொல் வரலாற்று ரீதியாக ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான சங்கத்தை குறிக்கிறது, சுமேரிய நாகரிகத்திலிருந்து தமிழ் சங்க காலம் மற்றும் பல கலாச்சாரங்கள் வரை அப்படியே பார்க்கப்படுகிறது. கலாச்சார முக்கியத்துவம்: பல கலாச்சாரங்களில், திருமணம் என்பது மரபுகள் மற்றும் மத நம்பிக்கைகளில் ஆழமாக வேரூன்றியுள்ளது, இது இரு பாலின சேர்க்கை, அதாவது ஆண் & பெண் என்று கண்டிப்பாக வரையறுக்கிறது. மாற்று சொற்கள் / Alternative Terminology: சிவில் யூனியன்கள் / Civil Unions: ஒரே பாலின தம்பதிகள் தங்கள் கூட்டு வாழ்வை "சிவில் யூனியன்கள்" அல்லது "வீட்டு கூட்டு வாழ்வு / "domestic partnerships," போன்ற வேறுபட்ட வரையறைவுகளின் கீழ் அங்கீகரிக்க வேண்டும் என்று பலர் வாதிடுகின்றனர், இதனால் திருமணத்தின் பாரம்பரிய கருத்தை மாற்றாமல் ஆனால், ஒரே மாதிரியான சட்ட உரிமைகளை வழங்க முடியும் பன்முகத்தன்மைக்கு மதிப்பளித்தல் / Respecting Diversity: வெவ்வேறு சொற்களைப் பயன்படுத்துவது உறவுகளின் பன்முகத்தன்மையை மதிப்பதுடன் அதன் இயல்பையும் தானாகவே வரையறுத்து, விளக்கமான கருத்தை துல்லியமாக கொடுக்கிறது. சமூக பதற்றத்திற்கான சாத்தியம்: திருமணத்தின் வரையறையை மாற்றுவது சமூக மற்றும் பாரம்பரிய கருத்துக்களை இலகுவாக சிதைத்து, வருங்கால சந்ததிக்கு எப்படியும் வாழலாம் என்ற ஒரு கட்டுப்பாடற்ற நிலையை அல்லது இதை புது நடப்பாக , ஃபேஷன்னாக ஊக்கிவிக்கலாம் ?? சமரச தீர்வுகள்: எனவே "சிவில் யூனியன்" போன்ற சொற்களைப் பயன்படுத்துவதன் மூலம், இது, இந்த கூட்டு என்ன என்பதையும், அதன் தாற்பரியங்களையும் இலகுவாக எடுத்துரைக்க முடியும் இறுதியாக, உங்கள் முடிவை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள் . அது உங்களைப் பொறுத்தது நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
  18. அன்பு ஏராளன் னுக்கு இலங்கையில் நடந்த உண்மை சம்பவத்தை / நிகழ்வுகளை ஒட்டி, அந்த சூழலில், ஆனால் கற்பனை கதை எழுதுவதே வழமை. அப்படியான ஒன்றே இது . என்றாலும் உண்மை கதைகளும் சில எழுதி உள்ளேன் நன்றி
  19. "புத்தாண்டுப் பரிசு" ஞாயிற்றுக் கிழமை 26, டிசம்பர் 2004 அன்று, நான் என் பெற்றோருடனும் சகோதரங்களுடனும் கொழும்பு கோட்டையில் இருந்து காலிக்கு காலை 6:50 மணிக்கு, குறைந்தது 1500 பயணிகளுடன் புறப்பட்ட புகையிரத வண்டியில் புத்தாண்டு பரிசுகளுடன் மாமா வீட்டுக்கு போய்க்கொண்டு இருந்தோம். மாமா காலியில் உள்ள சீமெந்து தொழிற்சாலையில் பொறியியலாளராக வேலை பார்ப்பதுடன், தென்னிலங்கையில் தனிப்பெருந் தன்மையுடன் திகழும் ஒரே சிவாலயம் என பெருமை கொண்ட, 1850 ஆண்டில் ஆரம்பிக்கப் பட்ட காலியில் அமைந்துள்ள சிவன் ஆலயத்திலும் அதன் ஆலய பரிபாலன சபையின் ஒரு உறுப்பினராகவும் இருந்தார். இலங்கையின் காலியில் சீனக் கடற்படைத் தளபதியும், நாடுகாண் பயணியும் ஆனா 'செங் கே' [Chinese traveler Zheng He ,dated 15 February 1409] இத்தீவிற்கு இரண்டாம் முறை வந்ததின் நினைவாக 1409 ஆண்டில் சீன, தமிழ், பாரசீகம் [Chinese, Tamil and Persian] ஆகிய மூன்று மொழிகளில் மட்டுமே [சிங்களத்தில் ஏன் எழுதப்படவில்லை என்பது ஆய்வுக்குரிய ஒரு விடயம்?] எழுதப்பட்ட கற்றூண் [stone pillar] அல்லது கற்பலகை [Rosetta Stone] ஒன்று எஸ். எச். தோம்லின் என்ற பொறியாளர் [An engineer, S. H. Thomlin] 1911 இல் காலியில் கண்டெடுத்தார் என்பதும், அதைத்தொடர்ந்து 1755 இல் பூர்த்தி செய்யப்பட்ட காலியில் உள்ள டச்சு சீர்திருத்தப்பட்ட தேவாலயத்தில் தமிழ் எழுத்துக்களால் பதியப் பட்ட, கிறித்துவத்திற்கு மாற்றப் பட்ட முதல் தமிழனின் கல்லறை வாசக கல் ஒன்றும் கண்டு எடுக்கப் பட்டது, அன்று காலியில் குறிப்பிட்ட அளவு தமிழர் அல்லது தமிழ் மொழி வாழ்ந்ததை உறுதிப் படுத்துகிறது. 9:30 மணி அளவில், ஹிக்கடுவை பெரலிய என்ற இடத்தில் ஆழிப்பேரலை [சுனாமி] மாத்தறை கடுகதி புகையிரத்தை தாக்கி, அந்த கிராம மக்களையும் சேர்த்து 1700 அல்லது அதற்கும் மேற்பட்ட மக்களை காவு கொண்டது. நான் என் பெற்றோர், சகோதரங்கள் மற்றும் புத்தாண்டுப் பரிசு அத்தனையையும் அதில் இழந்தேன். அன்றில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26 திகதி காலை நான் என் பெற்றோர்களின், சகோதரர்களின் நினைவாக மாத்தறை புகையிரத வண்டியில் புத்தாண்டுப் பரிசுகளுடன், ஹிக்கடுவை பெரலியவில் அஞ்சலி செலுத்தி, மாமா விடு போகத் தொடங்கினேன். தொடக்கத்தில் நான் சின்ன பிள்ளை என்பதால், அம்மம்மாவுடன் சென்றாலும், உயர் வகுப்புக்கு பின் நான் தனியாகவே போவது வழமையானது. இன்று டிசம்பர் 26, 2023, காலை நாலு மணிக்கே எழும்பிவிட்டேன். நான் கொட்டாஞ்சேனை, புதுச் செட்டி வீதியில் வாடகைக்கு இருந்து கொண்டு என் முதலாவது உத்தியோகமாக இலங்கை கடற்தொழில் அமைச்சு, காக்கை தீவு, கொழும்பு 15 இல் இந்த ஆண்டுதான், பொறியியல் பட்டம் பெற்று வேலைக்கு சேர்ந்தேன். ஆகவே தான் வரும் புத்தாண்டு ஒரு விசேட நாளாக எனக்கு பலவழிகளில் இருக்கிறது. நான் என் பணத்தில் மாமா வீட்டிற்கு புத்தாண்டு பரிசு வாங்கிக் கொண்டும் மற்றும் மாத்தறை வண்டியில் நினைவு தின அஞ்சலிக்கும் போகிறேன். மாமாவுக்கு மூன்று பெண் பிள்ளைகள், அதில் மூத்தவள் இப்ப முதலாம் ஆண்டு விஞ்ஞான பீட மாணவி. அவளைத்தான் நான் இன்னும் சில ஆண்டுகளில் கல்யாணம் கட்டப் போகிறேன். அவளின் பெயர் ஜெயக்குமாரி. இது சின்ன வயதிலேயே அம்மம்மாவால் முன்மொழியப் பட்டாலும், உண்மையில் நாம் இருவரும் ஒரு வயதின் பின் விரும்பிய ஒன்றே! மற்றவர்கள் இன்னும் மேல் நிலைப் பள்ளி மாணவிகள். நான் முதல் நாளே மாமா மாமியுடன் கதைத்து, ஜெயக்குமாரியையும் ஹிக்கடுவை பெரலிய கிராமத்துக்கு அஞ்சலிக்கு வரும் படி கூறி இருந்தேன். என் பெற்றோருக்கும் சகோதரர்களுக்கும், சுனாமி வந்த அந்த குறிப்பிட்ட நேரத்தில், அங்கே அவர்களின் படத்துக்கு, மற்றவர்கள் எல்லோருடனும் மலர்வளையம் சாத்தி மௌன அஞ்சலி செலுத்துவது வழமை. ஆனால் இம்முறை முதல் முதல் ஜெயக்குமாரியுடன் சேர்ந்து அந்த அஞ்சலி செலுத்தப் போகிறேன். அது மட்டும் அல்ல புத்தாண்டு பரிசாக அவளுக்கு மோதிரமும், சங்கிலியும், அங்கே அவர்களின் படத்துக்கு முன் போடப்போகிறேன். ஆனால் அதை நான் எவருக்கும் சொல்லவில்லை. அது ஆச்சரியமாக இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன். என்றாலும் அம்மம்மாவுக்கு நான் ஒன்றும் மறைப்பது இல்லை. அவரின் ஆசியுடன் தான் இதை யோசித்தேன்! ஐந்து மணி அளவில் நான் குளித்து வெளிக்கிட்டு விட்டேன். அஞ்சலி செலுத்தும் வரை நான் எதுவுமே சாப்பிடுவதில்லை. தண்ணி உட்பட. ஆகவே எதோ என் மனதில் பட்டவையை ஒரு அஞ்சல் கவிதையாக எழுதி, அவளின் பெயரையும் சேர்த்து பதிவு செய்துவிட்டு, புத்தாண்டு பரிசாக அவளுக்கும், மற்றவர்களுக்கும் வாங்கியதை ஒழுங்காக அடுக்கி, என் பெட்டியை எடுத்துக்கொண்டு கோட்டை புகையிரத நிலையத்துக்கு போனேன். ஆனால் இம்முறை உண்மையான புத்தாண்டு பரிசு இந்த பொருட்கள் அல்ல, என் பெற்றோருக்கு நான் கொடுக்கப் போகும் மருமகள் தான் என என் மனது சொல்லிக்கொண்டு இருந்தது. ஹிக்கடுவை பெரலிய சுனாமி நினைவு மண்டபத்துக்கு நான் நேரத்துடன் போய்விட்டேன். அங்கு பெரும் திரளான மூவின மக்களும் வந்திருந்தனர். ஒவ்வொருவரின் கதைகளும் ஒவ்வொரு கதை சொல்லிக்கொண்டு இருந்தன. நான் என் பெற்றோர்கள், சகோதரங்கள் படத்தை ஒரு ஒதுக்குப் புறமாக வைத்து, ஜெயக்குமாரி வரும் வரை காத்துக்கொண்டு இருந்தேன். நேரம் மெல்ல மெல்ல ஒன்பது முப்பதை அண்மித்துக்கொண்டு இருந்தது, ஆனால் அவள் வரவில்லை. என்ன நடந்தது எனக்குப் புரியவில்லை. மாமாவுக்கும் ஜெயக்குமாரிக்கும் மூன்று நான்கு தடவை அழைப்பு எடுத்து பார்த்துவிட்டேன். ஒரு பதிலும் இல்லை. என் அம்மா, அப்பாவின் படத்தை மீண்டும் மீண்டும் பார்த்தேன். நான் ஆச்சரியப் படுத்த நினைத்தது ஒன்று, இப்ப என்னைக் குழப்பத்தில் ஆழ்த்துவது வேறு ஒன்று! நேரம் நெருங்கிவிட்டது, நான் பெற்றோருக்கான கடமையை முதல் செய்யவேண்டும். எனவே எல்லாவற்றையும் மறந்துவிட்டு ஆயிரக்கணக்கான மற்றவர்களுடன் சேர்ந்து மலர் சாத்தி மௌன அஞ்சலி செய்தேன். முப்பது மீட்டர் உயரம் கொண்ட ஞாபகார்த்த புத்தர் சிலை ஆழ்கடலை பார்த்துக்கொண்டு நின்றது. நான் புறம்பாக பத்திரமாக கொண்டு வந்த மோதிரம், சங்கிலி இரண்டையும் எடுத்து பார்த்தேன். எனக்கு கோபம் கோபமாக வந்தது. ஆச்சரியமாக அவ்வற்றை அவளுக்கு போட்டு, என் பெற்றோரின், சகோதரர்களின் அஞ்சலியில் என்னுடன் ஒன்றாக முதல் முதல் ஈடுபடுத்த வேண்டும் என்ற என் கனா சுக்கு நூறாக உடைவது போல் இருந்தது. நான் மீண்டும் புத்தரின் கருணைக் கண்ணை உற்றுப் பார்த்தேன். அதில் ஒரு மாற்றமும் இல்லை! நான் மீண்டும் இம்முறை மாமிக்கும் சேர்த்து அழைப்பு எடுத்தேன். அதே நிலை தான். ஒரு பதிலும் இல்லை. அப்படி என்றால் அங்கு போய்த்தான் என்ன பிரயோசனம் ? எனோ எனக்கு கொஞ்சம் கோபமாகவும் இருந்தது, அதே நேரம் எதாவது நினைக்க முடியாதது நடந்து விட்டதா என்ற குழப்பமும் இருந்தது. எதுவாகினும் போய்த்தான் என்ன என்று பார்ப்பமே என தீர்மானித்து, அருகில் இருந்த புகையிரத நிலையம் போனேன். அங்கே நான் சீட்டுப் பெறுமிடத்திற்கு அருகில் செல்லும் பொழுது, யாரோ என் தோளில் கை போடுவதை உணர்ந்தேன். திரும்பி பார்த்தேன். அது வேறு யாரும் இல்லை. அவளின் மூத்த தங்கை. அழுதுகொண்டு நின்றாள். அக்காவை புகையிரதத்தில் ஏற்றிவிட தாம் எல்லோரும் போனதாகவும், ஒரு சந்தியில் அவர்களின் வண்டி ஒரு பார ஊர்த்தியுடன் மோதுண்டு விட்டதாகவும் அம்மா. அப்பா , அக்கா கடுமையாக அடிபட்டதால் இன்னும் வைத்திய சாலையிலேயே இருப்பதாகவும், கடைசி தங்கையை அங்கேயே விட்டுவிட்டு, தொலை பேசிகள் அந்த மோதலில் உடைந்து விட்டதால், வேறு வழி தெரியவில்லை, எனவே நேரடியாக வந்ததாகவும் சொன்னார். நான் உடனடியாக வாடகை வண்டி எடுத்துக்கொண்டு, அவளின் மூத்த தங்கையுடன் காலி வைத்திய சாலைக்கு போனேன். அவர்கள் மூவரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டு இருந்தார்கள். கடைசித் தங்கச்சி, வெளியே ஒரு வாங்கில். ஒரு மூலையில் அமர்ந்து இருந்தார். மாமாவுடன் வேலை செய்யும் சில சக ஊழியர்களும் அங்கு வந்து இருந்தனர். மூவரில் முன்னுக்கு இருந்த இருவரின் நிலைமையும் கவலைக்கு இடம்மென்றும், பின்னல் இருந்த மாமி பரவாயில்லை என்றும் அங்கு இருந்த மூத்த மருத்துவர் ஒருவர் எமக்கு கூறினார். நான் எவ்வளமோ கெஞ்சி கேட்டபின், ஜெயக்குமாரி மற்றும் மாமாவை ஒரு சில நிமிடம் பார்கவிட்டனர். அது தான் நான் கடைசியாக உயிருடன் பார்த்தது. இன்று 2024 ஆம் ஆண்டு முதல் நாள். எல்லோரும் புத்தாண்டு பரவலாக கொண்டாடிக்கொண்டு இருக்கிறார்கள். மாமா வீட்டிலும் அயலவர்கள், நண்பர்கள், உறவினர்கள் என ஒரு கூட்டமே கூடி இருக்கிறது. ஆனால் புத்தாண்டுக்கு அல்ல, புத்தாண்டு பரிசு தேடுவார் அற்று ஒரு மூலையில் இருக்கிறது. வாழை, தோரணம் கட்டப் படுகிறது. ஆனால் இங்கு தோரணம் மூன்று குருவிகளைக் கொண்டதாகக், குருவிகளின் தலை கீழ் நோக்கியும் வால் மேல்நோக்கியும் இருக்கிறது. நிலத்தில் விழுகின்றன, மடிகின்றன என சொல்லாமல் சொல்கிறது. தந்தையும் மகளும் தமது கடைசி யாத்திரையை ஒன்றாக, அருகருகே பயணிக்கின்றன. என் அம்மாவின் தம்பியும் மருமகளும் அம்மாவிடம் செல்கின்றனர். நான் எதை அம்மா அப்பாவுக்கு புத்தாண்டு பரிசாக கொடுக்க நினைத்தேனோ, அது என் பெற்றோரை தேடித் தானாகவே, என்னை விட்டுவிட்டு போகிறது! நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
  20. 'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்'] / பகுதி 36 இலங்கையின் பழங்குடியினர் எனக்கருதப்படும் வேடர் [வெத்தா எனும் வேடுவ இனத்தவர்] சமூகத்தினர் இலங்கையின் பல பாகங்களில் இன்றளவும் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் ஆரியரின் வருகைக்கு முன்னரே இலங்கையின் ஆதிக்காலம் முதல் வசிப்பவர்கள் என்றும், தென்னிந்திய பழங்குடி மரபினருடன் ஒத்த தன்மை கொண்டவர்கள் என்றும் வரலாற்று சான்றுகள் உள்ளன. இலங்கையின் வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிங்கள மற்றும் தமிழ் இனத்தவருடன் கலந்து தன் அன்றாட வாழ்வியலை கடத்தி வருகின்றனர். மற்றும் நாட்டின் பழங்கால வரலாற்று நூல்களில் குறிப்பிடப்படும் இயக்கர், நாகர் என்னும் இரு இனங்களில் இவர்கள் இயக்கர் பழங்குடியினரின் மரபின் வழி வந்தவர்கள் என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இலங்கையில் இவர்களை சிங்கள மொழியில் 'வெத்தா' என்று அழைக்கின்றனர். ஆனால் இவர்கள் தங்களை "வன்னியலா எத்தோ" Wanniyala-Aetto என்று குறிப்பிட்டு கொள்கின்றனர். தங்கள் தெய்வங்களுக்கு காட்டில் கிடைக்கும் காய்கள், கனிகள், தூப வகைகள், தீபங்கள், பூக்கள் என்பவற்றை பயன்படுத்தி வருகின்றனர். தமது பாரம்பரிய ஆயுதங்களான ஈட்டி, வில், அம்பு முதலியவற்றுக்கு வழிபாடுகளின் போது மரியாதையை செலுத்தி வருகின்றனர். இவர்களின் சடங்குகளின் போது மூதாதையர்களுக்கு முதல் மரியாதை செய்யப்பட்ட பின்னைரே தெய்வங்களை அழைத்து வழிபடுகின்றனர். இவர்களின் நம்பிக்கையில் காகம் கரைதல், கிளி தலை கீழாக தொங்குதல், பறவைகள் ஒலியெழுப்புதல், தும்மல், நாய்கள் பதறி போய் குரைத்தல், மனைவியின் பொட்டு அழித்தல் போன்ற சம்பவங்கள் நிகழும் போது தாம் நினைத்தவைகள் நடைபெறாது என இவர்களால் நம்பப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத் தக்கது. மகாவம்சம் குறிப்பிடுகின்ற விஜயனின் கதையும் மற்றும் விஜயனின் தம்பி சுமித்தவின் [Sumitta] இளையகுமாரன் பண்டு வாச தேவனின் [Panduwasa Dewa] கதையும் ஐதிகக் கதைகளாகவே தெரிகிறது. முதலாவதாக விஜயனின் தாய் தந்தையரின் பிறப்பும் மற்றும் பல நிகழ்வுகளும் எந்த காரணங்களையும் கொண்டு அறிவியல் ரீதியாக எவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை. இதைப்பற்றி முன்பே விரிவாக கூறிவிட்டோம். இரண்டாவதாக, பண்டுவாச தேவனைப் பற்றி பார்க்கும் பொழுது, பண்டு வாசதேவ இலங்கையின் முதலாவது அரச மரபின் இரண்டாவது அரசனாவான். இவன் முதலாவது அரச மரபைத் தோற்று வித்தவனும் முதல் அரசனுமான கலிங்க இளவரசன் விஜயனின் உடன் பிறந்தான் மகன் என மகாவம்சம் குறிப்பிடுகிறது. ஆனால் மகாவம்சத்துக்கு முன்னர் இயற்றப்பட்ட தீபவம்சம் இவனை பண்டுவாசன் [Paṇḍuvāsa] என்று குறிப்பிடுவதைக் கொண்டு இவன் பாண்டிய நாட்டில் இருந்து வந்தான் என்றும் வரலாற்றறிஞர்கள் வாதிடுகின்றனர். உதாரணமாக, பாளி அல்லது பிராகிருதம் மொழியில் பண்டு என்பது பாண்டியனை குறிக்கிறது, வாச என்பது வாசி யின் திரிப்பாகும், எனவே பாண்டியவாசி என்றாகிறது, அதாவது பாண்டியன் ஆகிறது [Deepavamsa calls King Pandu Vasudeva (504-474 BC) as Pandu Vasa (a Pali or Prakrit equivalent of Pandya Vasa meaning one from the Pandyan country i.e., a Pandya by his nationality]. விஜயனின் மனைவி ஒரு பாண்டிய இளவரசி என்பதால், மேலும் இலங்கையை ஆள ஆட்சியாளர் இல்லை என்பதால், பண்டுவாசனை பாண்டியன் இலங்கைக்கு அனுப்பியதாக குறிப்பிடுகின்றனர். இது மேலும் ஒரு வலுவான காரணத்தால் என்னால் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவே உள்ளது. உதாரணமாக, விஜயன் தனது பட்டத்து ராணியை, தான் பிறந்த கலிங்கத்தில் இருந்து, எதோ பல காரணங்களால் தேடவில்லை, அவன் தென் இந்தியாவில் அமைந்த பாண்டிய நாட்டிலேயே தேடினான். ஆகவே இப்ப அரச வாரிசை எப்படி கலிங்கத்தில், தன் அரச குடும்பத்தில் தேடுவான்? கொஞ்சம் நடு நிலையாக சிந்தியுங்கள். எந்த காரணத்திற்க்காக தனது பட்டத்து மனைவியை கலிங்கத்தில் எடுக்க வில்லையோ, அதே காரணம் இப்பவும் அவனுக்கு இருக்கும். எனவே கட்டாயம் தன் மனைவியின் பாண்டிய அரச குடும்பத்தில் இருந்தே எடுத்திருப்பான், இதில் எந்த ஐயப்பாடும் இல்லை. அதனால் தான் பண்டுவாசனின் வாரிசுகள் கூட அபயன் [Abhaya /பயமில்லாதவன்], பண்டு அபயன் [காபயன்] [Pandukabhaya], மூத்த சிவன், மகா சிவன் இப்படியான பெயர்களை காண்கின்றோம். இலங்கைக்கு முன்னைய காலத்தில் பாண்டிய அரச நாடு இலகுவான தொடர்புடைய நாடாக இருந்தது. உதாரணமாக, வைகை நதியினூடாக வந்தால் , அது மன்னாரை அடைகிறது. மன்னாரில் இருந்து அருவி ஆறு (Malwattu Oya) மூலம் பயணித்தால் அனுராதபுரம் அடையலாம். எனவே பாண்டிய நாட்டுடன் நல்ல நட்பு தொடர்பு இருந்ததிற்கு இதுவே காரணம். இதனால், பாண்டிய நாட்டின் எதிரியான சோழ நாடு அனுராதபுர அரசர்களுக்கும் எதிரியாகவே இருந்தது எனலாம். அதுவே மஹாநாம தேரர் சோழருக்கு எதிரான வெறுப்பு மனப்பான்மைக்கு [to be Chola phobic] ஒரு காரணமாகும் என்று நம்புகிறேன். மற்றது மகாவம்சத்தில் காணப்படும் தமிழருக்கு எதிரான இனத்துவேசத்திற்கு முக்கிய காரணியாக விளங்கியவர், கி.பி 5 ஆம் நூற்றாண்டில் தமிழகத்திலிருந்து இலங்கைக்கு வந்த பௌத்த ஞானியான, காஞ்சிபுரத்துப் பௌத்த பள்ளியைச் சேர்ந்த புத்தகோசர் [the great commentator Buddhaghosa] ஆவார். இளமையில் இவர் வடமொழி வேதங்களை நன்கு கற்று பிறகு பௌத்த மதத்திற்கு மாறியதால், பாளி மொழியில் நன்கு புலமையும் பெற்றிருந்தார். இலங்கையை மகாநாமன் (கி.பி.409-431) ஆட்சி புரிந்த காலப் பகுதியில் அநுராதபுரம் மகா விகாரையில் மூன்று ஆண்டுகள் தங்கியிருந்த புத்தகோசர் “விசுத்தி மார்க்கம்” என்ற பௌத்தமத நூலை பாளி மொழியில் இயற்றினார். மேலும் இலங்கையில் இருந்த பல பௌத்த நூல்களை இவர் பாளி மொழியில் மொழிபெயர்த்தபின், அந்த மூலப்பிரதிகளை எரித்துவிட்டார். காரணம் இவரின் அசல் மொழி கருத்து எண்ணம் ஆகும் [He burnt the originals after translating into Pali, introducing the Mula Bhasha [मूल भाषा {mul bhaSha} = ORIGINAL LANGUAGE] concept.]. இதுவே மஹாநாம வுக்கு கொடுத்த உத்வேகமாக இருக்கலாம்? மகாபாரதத்தில் விதுர நீதி என்ற ஒரு பகுதி உள்ளது. அது " நீ எப்பவும் உண்மை சொல்ல வேண்டும், ஆனால் சொல்லும் உண்மை தீங்கு விளைவிக்கும் என்றால், அதை சொல்லாதே, பொய் உதவும் என்றால், பொய்யை உண்மை போல் சொல்லிவிடு" என்கிறது. [There is a verse in Mahabharata.YOU SHOULD ALWAYS TELL THE TRUTH.IF TELLING TRUTH WOULD HARM THE PEOPLE THEN DON’T TELL THAT.IF TELLING A LIE WILL HELP PEOPLE THEN TELL THAT LIE AS A TRUTH.That is from Vidura niti of Mahabharata]. இதைத்தான் மகாவம்சத்தின் ஆசிரியர் தம் இனத்திற்கு என்றும் வரலாறு சாதகமாக இருக்க வேண்டும் என்பதால் மாற்றி சொல்லி இருப்பார் என்றும் எண்ணுகிறேன். உதாரணமாக இன்று குருந்தூர் மலை விடயத்தை எடுத்துக்கொண்டால், அங்கு காணப்படும் பௌத்த எச்சங்கள், அன்று வாழ்ந்த தமிழ் பௌத்தர்களினதாக இருந்தும், அதை சிங்களவர்கள் வாழ்ந்த இடமாக வரலாற்றை மாற்ற முற்படுவதுடன், மற்றும் சிங்கள மக்கள் வசிக்காத ஒரு இடத்தில் பௌத்தம் சார்ந்த ஒரு அழிபாடுகள் கண்டுபிடிக்கப்படுமானால் அவற்றை மீளக்கட்டி வழிபாட்டுக்குரியதாக அமைப்பதை ஏற்பதாக தொல்லியல் சட்டம் கூறவில்லை என்பதையும் மறந்து, நீதிமன்ற உத்தரவையும் மீறி, பௌத்த பிக்குகளும், அரசாங்கமும் பௌத்த விகாரை ஒன்று அங்கு கட்டப்பட்டு புத்தர் சிலை பிரதிஸ்டை செய்யப்பட இருப்பது தெளிவாக அவர்களின் நோக்கத்தையும் மனநிலையையும் காட்டுகிறது. அதுமட்டும் அல்ல, அநுராதபுரத்தில் 20 க்கும் மேற்பட்ட இந்து ஆலயங்களின் அழிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை பெரும்பாலும் சைவ ஆலயங்கள், திராவிட கலை மரபில் கட்டப்பட்டவை. அந்த ஆலயங்களின் அழிபாடுகள் தேசிய மரபுரிமைச் சின்னங்களாகக் கருத்திற்கொண்டு பார்க்கப்பட்டதே தவிர, அவை மீள அமைக்கப்பட்டு வழிபாட்டுக்குரிய ஆலயங்களாக அமைக்கப்படவில்லை. அவற்றில் ஒரு காளிகோவிலைத் தவிர ஏனையவை எங்கிருந்தன என்பது கூட அடையாளங்காண முடியாதளவுக்கு அதனுடைய நிலைமை காணப்படுகின்றது என்பது கவலைக்குரிய விடயமே! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி 37 தொடரும்
  21. "தமிழரின் உணவு பழக்கங்கள்" / "FOOD HABITS OF TAMILS" PART / பகுதி: 17 "பண்டைய சிந்து சம வெளி உணவு பழக்கங்கள் தொடர்கிறது" / "Food Habits of Ancient Indus valley people or Harappans continuing" சிந்து சமவெளி நாகரிகத்தின் மக்கள் அனைவரும் சைவ உணவு உண்பவர்கள் அல்ல என்பதும், சைவ உணவுப் பொருட்களுடன் சிந்து சமவெளி நாகரிக மக்களும் இறைச்சியை உட்கொண்டனர் என்பதும் இறந்தவர்களுக்காக வழங்கப்படும் பிரசாதங்களில் இறைச்சி சேர்க்கப்பட்டுள்ளது என்பதன் மூலம் தெளிவாகவும் உறுதிப்படுத்தப்பட்டதாகவும் தெரிகிறது. மேலும் அங்கு மாட்டிறைச்சி, குறைந்தது சிலராவது சாப்பிட்டதற்கு சான்றுகள் உண்டு. அங்கு தோண்டி எடுக்கப் பட்ட தொல்பொருள்களில், ஒரு வேட்டையாடும் கருவியான, சுண்டுவில்லில் [கவண்வில் அல்லது கவட்டை / slingshot] பாவிக்கும் களிமண் பந்துக்கள், மற்றும் செம்பு மீன் கொக்கிகள், அம்புவின் நுனி, எறியும் கத்தி போன்றவை எடுக்கப் பட்டுள்ளது. அவை விலங்குகளை கொல்ல பாவிக்கப்பட்டு இருக்கலாம் என்பதை எடுத்துக் காட்டுவதுடன், அவை மேலும் சிந்து வெளி மக்கள் விவசாயிகளாக மட்டும் இன்றி, அவர்கள் ஆற்றல் வாய்ந்த, மற்றும் திறமையான வேட்டைக் காரர்களாகவும் மீனவர்களாகவும் இருந்தனர் என்பதையும் சுட்டிக் காட்டுகிறது. இதுபோலவே தானியங்களை அரைக்கும் கல்திருகைகள் மொகஞ்சதாரோவில் கண்டறியப் பட்டுள்ளன. லோத்தலில் தந்தூரி அடுப்பு போன்ற சுடு அடுப்புகள் காணப் படுகின்றன. இறைச்சி பொதுவாக கால்நடையில் இருந்து வந்தன. அவை ஆடு, மாடு, பன்றி, போன்ற கால் நடைகளுடன் மற்றும் கோழி, ஆமை, பறவையும் ஆகும். மேலும் எருமைகள், செம்மறியாடு, ஆடுகள், மாடுகள் போன்றவை பால் எடுப் பதற்க்காக வளர்க்கப் பட்டன. அத்துடன் காட்டுக் கோழி, காட்டு விலங்குகளான, மான், மறிமான் (Antelope), காட்டுப்பன்றி போன்றவை அங்கு வேட்டையாடப் பட்டன. ஆறு, குளம், கடலில் இருந்து பெறப்படும் உடன் மீன் [fresh fish], மட்டி போன்ற வற்றையும் அவர்கள் உண்டார்கள். அத்துடன் பல மீன்கள் காயவிடப்பட்டன அல்லது உப்பு இடப்பட்டன. மீனுடன் அவர்கள் பழங்கள், காய்கறிகள் முதலிய வற்றையும் காயவைத்து அங்கு நிலவிய கடுமையான குளிர்காலத்தில் பாவித்தார்கள். பாறை மீன், கெழுத்தி மீன் போன்ற கடல் மீன்களின் எலும்புகள் மற்றும் ஓடுகள், சிந்து சம வெளி நாகரிகத்தை சேர்ந்த ஹரப்பா வீடுகளைச் சுற்றி கண்டு எடுக்கப்பட்டன. இவை எல்லாம் அங்கு மக்கள், கடல் உணவு உட் கொண்டதை எடுத்து காட்டுகிறது. மொகஞ்சதாரோவில் கிடைத்துள்ள எலும்புக்கூடுகளின் பற்களைப் பரிசோதனை செய்த போது, அங்கு ஆண்களை விடப் பெண்கள் மிகக் குறைவாகவே உணவு உட்கொண்டிருக்கிறார்கள் என தெரிய வந்துள்ளது. மேலும் உணவுப் பண்பாடு என்ற கட்டுரையில் தமிழ் அறிஞர் அ.கா.பெருமாள் ஹரப்பா நாகரிக காலகட்ட உணவு வகைகள் பற்றித் தெளிவாக விளக்கிக் கூறியிருக்கிறார். ஹரப்பன் வீடுகளில் முற்றத்தின் வெளியில் சமையலறை செங்கல்லால் கட்டப்பட்ட அடுப்பைக் கொண்டு இருந்தன. அங்கு சமையலுக்கு பல்வேறு அளவுகளில் மட்பாண்ட பாத்திரங்கள் பயன்படுத்தப்பட்டன; அதே நேரம் பணக்கார வீடுகளில் உலோக பாத்திரங்களும் பயன்படுத்தப்பட்டன. சில குறிப்பிட்ட விவசாய கருவிகளும் அங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, அங்கு கண்டு பிடிக்கப்பட்ட தீக்கல் (Flint) அல்லது சிக்கிமுக்கிக் கல் கத்திகள் அறுவடைக்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என இன்று ஊகிக்கப் படுகிறது. அது மட்டும் அல்ல, பண்டைய காலத்தில் ஹரப்பன் காளிபங்கானில் [தற்கால தார் பாலைவனத்தில் பாயும் காகர் நதியின் தென்கரையில் அமைந்த சிந்துவெளி பண்பாட்டுக் கள நகரம் ஆகும்] உழவு செய்யப்பட்ட வயல் கிமு 3 ஆம் மில்லினியத்தின் தொடக்கத்தில் கலப்பை அங்கு பயன்பாட்டில் இருந்ததைக் எடுத்துக்காட்டுகிறது; மேலும் ஒன்றையொன்று கடக்கும் கோடுகளின் வடிவத்தில் [criss-cross] அமைந்த, ஒரு கலப்பை மூலம் தரையில் செய்யப்பட்ட நீண்ட, குறுகிய அகழிகள் [furrows], ஒரே வயலில் இரண்டு பயிர்களை வளர்க்கப் பயன்பட்டது என்பதைக் காட்டுகிறது. ஆச்சரியம் என்னவென்றால் இந்த நடைமுறை இன்றைய நவீன காலத்திலும் தொடர்வதே! இன்று நமது முக்கிய உணவுகளான - உருளைக்கிழங்கு, தக்காளி, மிளகாய், புளித்த ரொட்டி [ வேகவைத்த பொருட்களை பஞ்சுபோன்றதாகவும் மென்மையாகவும் மாற்றும் நுரைமம் அல்லது நொதி கொண்ட பாண் / leavened bread], சீஸ், ஆப்பிள்கள் - உலகின் பிற பகுதிகளிலிருந்து இந்தியாவிற்கு வந்தவை ஆகும். உதாரணமாக, சிந்து சமவெளி மக்களும் மற்றும் பண்டைய இடைக்கால இந்தியாவின் மக்களும் உருளைக்கிழங்கு அல்லது தக்காளியை அறிந்திருக்க மாட்டார்கள். அதே நேரத்தில், நம் முன்னோர்கள் ஒரு காலத்தில் சாப்பிட்டவற்றில் பெரும்பாலானவை காலப்போக்கில் நம் தட்டுகளில் இருந்து மறைந்து விட்டன. இந்த மறைந்த உணவுகளில் துணைக்கண்டத்தில் ஒரு காலத்தில் வேட்டையாடப்பட்ட அல்லது வளர்க்கப்பட்ட பல விலங்குகள் இருந்துள்ளன என்பது குறிப்பிடத் தக்கது. இதுவரை நாம் எடுத்துக்காட்டிய உணவுகளை நன்றாக உற்றுப் பார்த்தால், சிந்து சமவெளி நாகரிகத்தை சேர்ந்த நம் முன்னோர்கள் இன்று நாம் உட்க்கொள்ளுவதையே அதிகமாக சாப்பிட்டுள்ளனர் என்பது தெளிவாகும். மாறாக, உண்மையில், அவர்கள் சாப்பிட்டதையே நாம் அதிகமாக இன்று இன்னும் சாப்பிடுகிறோம்! "விவசாய உபரிகளை உற்பத்தி செய்து கட்டுப்படுத்தும் திறன் ஆரம்பகால சிக்கலான சமூகங்கள் மற்றும் நகரங்களின் எழுச்சிக்கு ஒரு அடிப்படை காரணியாக இருந்தது." என்பதற்கு, இந்த உண்மைக்கு, சிந்து சமவெளி நாகரிகம் [கிமு 3300-1300 க்கு இடைப்பட்ட காலத்தில்,] சந்தேகமில்லாமல் ஆதாரம் காட்டுகிறது. நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி : 18 தொடரும் "FOOD HABITS OF TAMILS" PART: 17 "Food Habits of Ancient Indus valley people or Harappans continuing" The fact that the people of the Indus Valley civilization were not all vegetarians and Along with the vegetarian food items the people of Indus valley civilization also consumed meat that was evident or confirmed from the fact that meat was included in the offerings made for the dead and there is also evidence that at least some people in Harappan sites ate beef. Also With the excavation of number of artefacts like sling balls of clay, copper fish hooks, the arrow heads, the flying knives etc strongly prove that these were required to kill and this also prove that, the Indus valley people were not only farmers, they were competent and efficient hunters and fishermen. Meat came mainly from cattle, but Included in this list are chicken, mutton, beef, pork. Buffaloes, sheep, goats and cows were reared for milk too. Along with that, they also hunted a wide range of wildfowl and wild animals such as deer, antelopes and wild boar. They also ate fish and shellfish from the rivers, lakes and the sea; as well as being eaten fresh, many fish were dried or salted. Along with fish, fruits & vegetables also dried for use in the harsh winters.– many bones and shells in hard form from marine fish such as jack and catfish etc has been found in and around the houses of the Indus valley civilization, at Harappa, far inland. Harappan houses had a kitchen opening from the courtyard, with a hearth or brick-built fireplace. Pottery vessels in a range of sizes were used for cooking; in wealthy households metal vessels were also used. Few certain agricultural tools have been found. Flint blades were probably used for harvesting. A ploughed field at Early Harappan Kalibangan shows that the plough was in use by the early 3rd millennium BC; its criss-cross furrows allowed two crops to be raised in the same field, a practice that has continued into modern times. Many of our staples today — potatoes, tomatoes, chillies, leavened bread, cheese, apples — came to India from other parts of the world. The people of the Indus Valley, as well as those of ancient and most of medieval India, for example, would not have known what to with a potato or a tomato. At the same time, much of what was once eaten by our ancestors has been taken off our plates over time, thanks to cultural and economic forces. Among these foods are a number of animals that were once hunted or reared in the subcontinent. If you have a good look at the food and it becomes clear that our ancestors of the Indus-Valley civilization ate a lot of what we do today. Rather, we eat a lot of what they ate! So powerful that people still continue to follow that !! An examination of the teeth of the skeletons found at mohenjo-daro revealed that women consumed much less food than men. Also, Tamil scholar A.K. Perumal has clearly explained the food types of the Harappa civilization period in his article 'Food Culture'. “The ability to produce and control agricultural surpluses was a fundamental factor in the rise of the earliest complex societies and cities.” For this fact, the Indus Valley Civilization [of the period between 3300-1300 BC,] bears unequivocal evidence. Thanks [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] PART : 18 WILL FOLLOW
  22. "நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா?" [சீரழியும் சமுதாயம்] பகுதி: 16 [தொழில்நுட்பத்துடன் இணைத்தல் தொடர்கிறது] "பால் கடல் கடைதல்" என்ற புராணத்தில், அங்கு கடைந்து எடுத்தது ஒரு இறப்பில்லா வாழ்வு தரும் அமுதம் என்பதால் தேவர்கள், தங்களுடன் சேர்ந்து கடைந்த மற்றவர்களை ஏமாற்றி தாம் மட்டும் உண்டதற்கு மாறாக, 'ஒரு மருந்தேயாயினும் விருந்தோடு உண். இறப்பில்லா வாழ்வு தரும் அமுதமே ஆனாலும், விருந்தினர்க்கும் பகிர்ந்து அளித்து உண்ணவேண்டும்' என்கிறது தமிழரின் கொன்றை வேந்தன். அது மட்டுமல்ல புறநானுறு 91 இல், பெரிய மலையிடத்து மிகவும் இடருக்குப் பின் பெற்ற அரிய நெல்லிக்கனியை உனக்கென்று கொள்ளாமல், அதன் சிறப்பை எனக்குச் சொல்லாமல், ஈந்து எனக்கு இறப்பில்லா வாழ்வு ஈந்தனையே என்று அதியமான் நெடுமான் அஞ்சியை, அவ்வையார்; "பால் புரை பிறைநுதல் பொலிந்த சென்னி நீல மணிமிடற்று ஒருவன் போல மன்னுக, பெரும! நீயே தொன்னிலைப் பெருமலை விடரகத்து அருமிசை கொண்ட சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது, ஆதல் நின்னகத்து அடக்கிச், சாதல் நீங்க, எமக்கு ஈத்தனையே" என்று வாழ்த்திப் பாடுகிறார். இது தான் தமிழ் இலக்கியத்தின் சிறப்பு. இன்றைய தொழில் நுட்பத்தில் மனிதன் இறைவா தன்மையை [Human immortality] அடைதல் சாத்தியமாக தெரியவில்லை. என்றாலும் உயிரியல் ரீதியாக [biologically] நித்திய ஜீவன் [eternal life] ஒன்றை அடையாக கூடிய சாத்தியக் கூறுகளை, இறப்பில்லா உயிரி என அழைக்கப்படும், ஒரு இன ஜெல்லிமீன் அல்லது இழுது மீன் [one species of jellyfish, Turritopsis dohrnii] ஒன்றில் காண்கிறோம். அந்த குறிப்பிட்ட ஜெல்லிமீனின் வாழ்க்கை வட்டம், 'பொலிப்' (Polyp) என்ற குழந்தை பருவத்தில் ஆரம்பித்து, 'மெடுசா' (Medusa) என்ற முதிர்ந்த பருவத்தை அடைகிறது, அதன் பின் அது இறப்பதற்குப் பதிலாக மீண்டும் குழந்தை பருவமான 'பொலிப்' பிறகு திரும்பி வந்து மீண்டும் தனது வாழ்க்கை வட்டத்தை அழிவில்லாமல் தொடர்கிறது. இது மனிதனுக்கு ஒரு தெம்பு தரும் சான்றாகும். ரஷ்ய இணைய முக்கியஸ்தரான டிமிட்ரி இட்ஸ்கொவ் [Russian Internet mogul Dmitry Itskov] இப்படியான நம்பிக்கையை, அவரின் புதிய முயற்சி 2045 [2045 Initiative] மூலம் அடையலாம் என எதிர்பார்க்கிறார். அவர் இந்த முயற்சியை பெப்ரவரி 2011 இல் ஆரம்பித்து, ரஷ்ய வல்லுநர்கள் பலருடன் இணைந்தது, இன்று செயலாற்றுகிறார். ஆனால் இது முற்றிலும் ஒரு உயிரியல் முயற்சி அல்ல. இது மனிதனையும் இயந்திரத்தையும் இணைக்கும் ஒரு முயற்சியாகும். அதனால் ஒரு மீவு மனிதனை பரிணாம படுத்துதல் ஆகும். மீவு மனிதன் என்பது "Humanoide" எனப்படும் எந்திர மனிதன் ஆகும். மீவு மனிதன் இயற்கையாக பரிணாமம் அடைந்து தோன்றினால், அதனால் பெரிதாக கெடுதல் ஒன்றும் ஆகாது. ஆனால் மனித இனத்தின் மீது செயற்கையாய் திணிக்கும் முயற்சி அப்படி இல்லை. மீவுமனிதத்துவதுக்கு உட்பட்ட மனிதனை "Post-Human" என்றும் அழைக்கலாம். இந்த சித்தாந்தத்தை ஏற்றுக்கொள்பவர்கள் மனிதர்கள் இயல்பாகவே குறைபாடு [inherently flawed] உள்ளவர்கள் என்றும் அதை தொழில் நுட்ப படைப்புகளால் மீட்கலாம் என்றும் நம்புகிறார்கள். மெய்மை அல்லது ஒன்றின் உண்மையான நிலை [reality] யை இவர்கள் ஒரு சிறைச்சாலையாக பார்ப்பதுடன், ஒரு மாய உலகிற்கு [virtual world] தப்பித்து போக முயலுகிறார்கள். அத்துடன் இவர்கள் மரணத்தை இல்லாமல் ஒழிக்கவும், அறிவை மேம்படுத்தவும், மனிதத் தெய்வத்தன்மை அடைவதற்கும் [to cheat death, enhance intelligence, and achieve human godhood], இவர்கள் மனிதனை இயந்திரங்களுடன் இணைக்க முயல்கிறார்கள். இது தான் இன்றைய மனித சமுதாயத்தின் பெரும் கேள்வியாக உள்ளது. நாம் என்ன யோசனையை தழுவியிருந்தால், மனிதகுலத்தின் நலனுக்கு அது மிகப்பெரிய அச்சுறுத்தலாக, இடைஞ்சலாக இருந்து இருக்கும்? என்று யாராவது கேட்டால், இன்றைய காலகட்டத்தில், கட்டாயம் அது மீவுமனிதத்துவம் [Transhumanism] என்றே கூறலாம். ஏன் என்றால் அது மனித இனத்தை, அதன் உயிரியல் கட்டுப்பாடுகளிலிருந்து [biological constraints] விடுவிப்பதை நோக்கமாக கொண்டது. அதனால் வரும் விளைவு, நன்மையா தீமையா இன்னும் சரியான பதில் இல்லை? ஒரு மட்டத்தில் இயக்கத்தின் இலக்குகள் தீங்கற்றதாகத் தோன்றினாலும், தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மனித பரிணாமத்தை மிக தீவிரமாக்கி, முடிவில் இன்றைய மனிதனை அது இல்லாமல் செய்யும் என எதிர் பார்க்கப் படுகிறது. அதன் பின் ஒரு உயர்ந்த தொழில்நுட்பம் ஆட்க்கொள்ளும் மனிதர் [posthuman] தோன்றுமாம் ? இன்று செயற்கை நுண்ணறிவுடன் மனித நாகரிகத்தை ஒட்டிஇணைப்பதாலும் [fuse human civilization with artificial intelligence], மற்றும் ஒவ்வொரு புது கண்டு பிடிப்புகளாலும், நாம் சமுதாயத்துடனான எம் தொடர்பை மேலும் மேலும் துண்டிப்பதை அல்லது குறைப்பதை காண்கிறோம். என்றாலும், இவையை அளவோடு நாம் கடைப்பிடிக்கும் பொழுது, இவை பெரிதாக எம்மை, எம் சமுதாயத்தை பாதிக்கப் போவதில்லை, அதை பொறுத்தவரையில் சந்தோசம். ஆனால், எதுவும் எல்லை மீறினால் பிரச்சனை தானே? என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும் என்று நம்புகிறேன். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 17 தொடரும்
  23. நன்றிகள் எல்லோருக்கும்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.