Everything posted by kandiah Thillaivinayagalingam
- "தீப்பிடித்த வரலாறு: யாழ் நூலகம் எரிக்கப்பட்ட நினைவு கூர்தல் இன்று [31/05/2024]"
-
"மீட்டாத வீணை.."
"மீட்டாத வீணை.." வரலாறும், கலாச்சாரமும், இயற்கை அழகும் நிறைந்த யாழ்ப்பாண மாவட்டமானது எழில் கொஞ்சும் கடற்கரையினையும் ஏப்ரல் - செப்டம்பர் வரையிலான காலப்பகுதிகளில் அதிக வெப்பநிலையினையும் டிசம்பர் - பெப்ரவரி வரை குளிரான காலநிலையினையும் கொண்டு இருப்பதுடன் தரைத் தோற்றத்தினை அவதானிக்கு மிடத்து கரையோர சமவெளியினை கொண்டும், அழகியத் தீவுகளினையும், பல்லுருவத்தன்மை கொண்ட கடற் கரைகளினையும், பாரிய மணல் மேடுகளினையும், நாற்புறமும் பனை சூழவும் காணப்படுகின்றது. அங்கு தான் கவிதா என்ற ஒரு இளம் பட்டதாரி ஆசிரியை, பெற்றோருடனும் சகோதர, சகோதரிகளுடனும் வாழ்ந்து வந்தார். அழகு மற்றும் நாகரிகம் என்ற வார்த்தைகளுக்கு அவளே உதாரணம். அவள் படிக்கும் காலத்திலும் சரி, இன்று ஆசிரியையாக பணிபுரியும் காலத்திலும் சரி, அவளின் கண் பார்வைக்காக, காதலுக்காக ஏங்காத ஆண்கள் மிகமிகக் குறைவே என்று சொல்லலாம். மேகங்கள் சில சுருண்டு சுழித்தது போல கூந்தலுடனும், காது வரை நீண்டு ஆடவர் மனதை கொள்ளை கொள்ளும் கெண்டை விழியுடனும், அழகான அரும்பை போல செவ் இதழுடனும், அழகிய வில்லை போல் வளைந்து மூன்றாம் பிறை திங்களை போல ஒளி விடும் நெற்றியுடனும், குழழின் இசையையும், யாழின் இசையையும், அமிர்தத்தையும் கலந்த இனிய சொற்களை இயல்பாக கூறும் திறனுடனும், தலையில் சூடும் ஒரு பூவைக் கூடச் சுமையாக உணரும் நூலை விட இளைத்த இடையுடனும் அவள் கண்களுக்கு விருந்தாக இருந்தாள். என்றாலும் அவளிடம் தற்பெருமையோ தலைக்கனமோ இல்லை. எல்லோரையும் மதித்து நாகரிகமாக பழகுவாள். ஆனால் எனோ எந்த ஆணிடமும் சிக்காமல், 'மீட்டாத வீணை' யாக, அவளுடைய உணர்வுகள், வீணையின் தந்திகள் போல, இன்னும் கேட்கப்படாத, மீட்டபடாத அழகான மெல்லிசைகள் நிறைந்து, அதை வாசிக்க பொருத்தமான ஒருவனுக்காக, தனக்குப் பிடித்த சரியான ஒரு வாழ்க்கை துணைக்காக, அதையும் பெற்றோர்கள் முதலில் விசாரித்து தேடட்டும், அதன் பின் இறுதி முடிவைத் தானே எடுப்பேன் என்று, பெற்றோரிடம் அந்த பாரத்தைக் கொடுத்துவிட்டு, தானும் தன்பாடுமாக இருந்துவிட்டாள். "மீட்டாத வீணை இது வீசி வரும் தென்றல்.. வாடாத முல்லை இது பாடி வரும் தேணீ.. தெவிட்டாத இனிமை இது திகட்டாத புதுமை.. பளிங்கான பதுமை இது பழகாத இளமை.." தங்கள் குடும்பத்துக்கு ஏற்ற கவிதாவுக்கு பொருத்தமான மற்றும் அவளுக்கு பிடித்த வரன், பல இழுபறிகளுக்கு பின் ஒருவாறு கண்டு பிடித்தார்கள். அவன் பெயர் எழிலன். லண்டனில் மேற்படிப்பு முடித்து, அங்கேயே ஒரு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும் அதே நேரம் அங்கே ஒரு விஞ்ஞானியாக ஆராச்சியிலும் ஈடுபட்டுக் கொண்டு இருந்தான். அடுத்த சில மாதத்தின் பின் விடுதலையில் அவன் யாழ்ப்பாணம் வருவதால், அதற்கு முதல், அவனின் பெற்றோர்கள் கவிதாவை பெண் பார்க்க மற்றும் அவளின் விருப்பத்தையும் நேரடியாக அறிய அவளின் வீட்டிற்கு ஒரு ஞாயிற்றுக் கிழமை சென்றார்கள். ஆனால் கவிதா, பெற்றோரின் தேடுதல் நல்ல வரனாக, நல்ல படித்த, பண்பாடுள்ள குடும்பத்தில் இருக்கிறது என்றாலும், தானும் பார்த்த பின்பு தான் முடிவு சொல்லுவேன் என்று கொஞ்சம் பிடிவாதமாக முதலில் இருந்துவிட்டாள். என்றாலும் அவளின் பெற்றோர்கள் அவனின் சில படங்களை, விடீயோக்களை, அவனின் தாயின் தொலைபேசியில் இருந்து எடுத்துக் காட்டி சம்மதத்தை பெற்று, திருமணத்துக்கான திகதியையும் குறித்தனர். எழிலன், தங்கள் வருங்கால மருமகன், கட்டாயம் தங்கள் மகள், கவிதாவின் அழகை மற்றும் குணங்களைப் பாராட்டி அவளுக்கு மகிழ்ச்சியைத் தருவார் என்று நம்பினார்கள். எழிலன் விரிவுரையும் ஆராச்சியும் செய்வதால், அதில் அவன் கூடுதலாக தன் கவனத்தை முழுக்க முழுக்க கொண்டு இருப்பதால், இரண்டு கிழமை விடுதலையில் தான் அவன் யாழ்ப்பாணம் வந்தான். அது இரு பக்க பெற்றோருக்கும் ஏமாற்றமாக இருந்தாலும், திருமணத்தின் பின், உடனடியாகவே தன்னுடன் கவிதாவையும் கூட்டிச் செல்லும் ஏற்பாடுகளை முன்னமே செய்து கொண்டு வந்தது அவர்களுக்கு மகிழ்ச்சியாகவே இருந்தது. எழிலன் யாழ்ப்பாணம் வந்து மூன்றாம் நாள் திருமணம் ஆகஸ்ட் தொடக்கத்தில் நிச்சயிக்கப்பட்டது. எனவே ஆக ஒரு நாள் தான் இருவரும் - கவிதாவும் எழிலனும் - சந்தித்து கதைக்க வாய்ப்பு கிடைத்தது. என்றாலும் இருவரும் மகிழ்வாக கூடுதலாக தங்கள் தங்கள் இன்றைய அபிலாசைகளையும் மற்றும் வருங்கால கனவுகளையும் பகிர்வதிலும் அலசுவதிலும் நேரம் சரியாகப் போய்விட்டது. கவிதா தானும் அங்கு ஒரு பொருத்தமான ஒரு வேலை செய்ய விரும்பினாள், ஆனால் அதற்கு தன்னுடைய இப்போதைய இலங்கை படிப்பு அதிகமாக போதாது என்பதால், தான் ஒரு மேல் படிப்பு தன் துறையில் படிப்பது நல்லது என்ற தன் எண்ணத்தையும் மற்றும் தாம்பத்திய வாழ்வை மகிழ்வாக முழுமையாகவும் ஒன்றாக ஒற்றுமையாக அனுபவிக்க வேண்டும் என்ற அவாவையும் வெளிப்படுத்தினாள். இன்று நாட்டில் சில, பல வீணைகள் முழுமையாக மீட்டபடாமலே புழுதியில் வீழ்கின்றன. மகிழ்வாக தொடங்கும் திருமண வாழ்வு, பாதியிலேயே பிரிவுக்கோ, விவாகரத்துக்கோ போய்விடுகின்றன, அப்படி இல்லாமல் தான் மதிக்கும், வணங்கும் கலைவாணியின் கைகளும் பட்டு [ துணை கொண்டு], அது நிரந்தரமாக அன்பு, காதல், விட்டுக் கொடுப்பு, ஒருவரை ஒருவர் மதித்தல், புரிந்துணர்வு .... என்று வீணையின் சரங்கள் தொடர்ந்து இசைத்திடாதா! அந்த இசைகள், இன்பங்கள் இதயத்தை என்றும் நிரப்பவேண்டும் என்பதே அவளின் சுருக்கமான அவா ! . எழிலன் பெரிதாக சமயம், தெய்வங்களில் நம்பிக்கை இல்லா விட்டாலும், அதை அவன் புரிந்துகொண்டான். அவனுக்கும் அவளின் அழகிய உடல் மற்றும் உள்ளம் என்ற வீணையின் சரங்களுடன் விளையாடி மீட்க ஆசை இல்லாமல் இல்லை. என்றாலும், அவளின் முதல் ஆசை முக்கியம். அது நிறைவேறும் மட்டும் கொஞ்சம் பொறுத்திருக்க வேண்டும் என்ற தன் அறிவுரையையும், தன் பல்கலைக்கழகத்திலேயே அதற்கான ஏற்பாடு தான் உடனடியாக செய்வதாகவும் இந்த செப்டம்பரில் இருந்து அங்கு தொடரலாம் என்று உறுதியும் கொடுத்தான். அதே நேரம், தன் ஆராச்சியையும் முழுக்கவனம் செலுத்தி, அதற்குள் முடித்துவிடுவேன் என்ற தன் ஆதங்கத்தையும் அவளுக்கு ஒரு முதல் முத்தத்துடன் கூறினான். அவளும் தன் முதல் அணைப்பையும் முத்தத்தையும் மகிழ்வாக அவனுக்கு கொடுத்தாள்! என்றாலும் அவள் இதயம் தனக்குள் "வான் பார்த்து ஏங்கும் சிறு புல்லின் தாகம் கானல்கள் நிறைவேற்றுமோ? ஊட்டாத தாயின் கணக்கின்ற பால் போல் என் காதல் கிடக்கின்றதே? தொடுவானம் இன்று நெடுவானம் ஆகி தொடும்நேரம் தொலைவாகுதே? மீட்டாத வீணை தருகின்ற ராகம் கேட்காது என் எழிலனே?" என முணுமுணுத்தபடி இருந்தது. அவள் நினைத்தது என்னவோ, நடக்கப் போவது என்னவோ? தான் மேலும் படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், தாம்பத்திய வாழ்வும், பிந்திப் போடாமல் அதனுடன் ஒன்றாக பயணிக்க வேண்டும் என்பதே அவளின் ஆசை! ஆனால் தன் ஏமாற்றத்தை - தான் இன்னும் சில ஆண்டு 'மீட்டாத வீணை' யாக இன்னும் இருக்கப் போவதை - அவள் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. முக்கியமாக அவனுக்கும் இருபக்க பெற்றோர்களுக்கும். காலையில் நடந்த திருமண நிகழ்வும், அதைத் தொடர்ந்து அன்று மாலையே ஆரம்பித்த திருமண வரவேற்பு ஆர்பாட்டமும் குதுகழிப்பும் அடங்கி விருந்தினர்கள் மண்டபத்தை விட்டு வெளியேற, முன் யாமம் ஆகிவிட்டது. நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் அவர்களுள் இருந்த சோர்வு மற்றும் நிம்மதியின் காரணமாக, ஹோட்டலில் அவர்அவர்களுக்கு என ஒதுக்கிய அறைகளில் நித்திரைக்கு போய்விட்டார்கள். அந்த பெரிய ஹோட்டலில் ஒன்றிரண்டு அறைகளில் மட்டுமே இன்னும் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தது. அதில் ஒரு பெரிய அறையில் கவிதா, எழிலன் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் மட்டும் இன்னும் கதைத்துக்கொண்டு இருந்தனர். கவிதா, தன் கலைந்த அலங்காரத்தை ஆளுயர கண்ணாடியின் முன் சரிபடுத்திக்கொண்டு இருந்தாள். இளநீல நிற புடவையுடன் நீண்ட கூந்தல் பின்னலிட்டு தலைநிறைய மல்லிகை இன்னும் சூடியபடி இருந்தது. தன் கயல்விழிகளுக்கு மேலும் அழகு சேர்க்கும் விதமாக கண்மையை தீட்டி வானவில் புருவங்களுக்கு இடையில் கோபுர வடிவ பொட்டும் வைத்து இருந்தாள். அதன் கீழ் சிறிதளவு குங்குமம் இப்ப தாய் தன் கையால் வாழ்த்தி வைத்தாள். கைகள் முழுவதும் அழகு வளையல்களும் கழுத்தில் சங்கிலியும் சிறிய ஜிமிக்கி வைத்த காதணியும் அணிந்து அழகு பதுமையென கவிதா அங்கு இருந்தாள். படபடக்கும் விழிகளுடனும் துடிதுடிக்கும் இதயத்துடனும் குளிரூட்டப்பட்ட அறையிலும் எனோ வேர்த்து ஈரமான உள்ளங்கைகளுடனும் புதுப்பெண்ணிற்கு உரிய சில அடக்கத்துடனும் அளவளாவிக் கொண்டு இருந்தாள். பக்கத்தில் எழிலன் எல்லாவற்றையும் கவனித்தபடி, சிரித்து ஆனால் கொஞ்சமாக அவளுடன் சேர்ந்து மற்றவர்களுடன் கதைத்துக் கொண்டும் இருந்தான். நேரம் சாமம் ஒரு மணி ஆகிவிட்டது. அவளது தாயும் அத்தையும், இனி கதைத்தது காணும் எல்லோரும் படுக்க போவோம் என்று, புதுமானத் தம்பதிகளை அவர்களுக்கு என ஒதுக்கிய அறைக்கு அனுப்பிவைத்தனர். அவ்வறை முழுவதும் பூக்களாலும், வாசனை திரவியத்தின் நறுமணத்தாலும் நிறைந்து இருந்தது. அப்ப தான் அவளுக்கு ஞாபகம் வந்தது, இது முதல் இரவு என்று. முதன்முதலில் இருவரும் மிக நெருக்கமாக தனி அறையில் சந்திப்பதால், அவர்களுக்குள் ஒரு ஆர்வத்தின் தீப்பொறி இருந்தது. அவள் எழிலனை ஆசையாக பார்த்தாள். அவன் எந்த ஒரு சலனமும் இல்லாமல், சர்வசாதாரணமாக, தன் மடிக்கணினியை எடுத்து, கவிதாவின் உயர் படிப்பிற்கான விண்ணப்ப படிவத்தை நிரப்புவதில் தீவிர கவனம் செலுத்தியதால் அவர்களது உறவு அன்று மெதுவாகப் போய்விட்டது. ஒருவேளை தன்னை கட்டுப்படுத்துவதற்காக அவன் அப்படி செய்திருக்கலாம்? என்றாலும் கொஞ்ச நேரத்தால் இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்தபடி உறங்கிவிட்டார்கள். அடுத்தநாள் காலை, கவிதா எழிலனை தன்னுடன் ஹோட்டலில் இருக்கும் பூங்காவில், காலை உணவுக்கு முன் நடக்க அழைத்தாள். அமைதியான பாதையில் அவர்கள் நடந்து செல்லும்போது, அவனுடன் தனது இதயத்தின் ஒரு பகுதியை வெளிப்படையாக பகிர்ந்து கொள்ள முடிவு செய்தாள். அங்கு மலர்கள் வண்ணம் வண்ணமாக அழகாக பூத்து பூத்து குலுங்கி இருப்பதையும், அதைச் சுற்றி வண்டுகள் ரீங்காரம் செய்தபடி மொய்ப்பதையும் காட்டி, இப்படியான இயற்கைக்காட்சிகளைப் ரசிப்பதில்லையா என்று கொஞ்சலாக கேட்டாள். அவன் மௌனமாக அவளைப்பார்த்து, அவளின் கன்னத்தை மெதுவாக தடவி, கூந்தலை வருடினான். அவள் இதுதான் தருணம் என்று, "வாழ்க்கை இந்த சின்ன சின்ன சந்தோஷங்களால் நிரம்பியது. நாம் ஒன்றாக அனுபவிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்." எந்த வெட்கமோ இன்றி, அவனை கண் வெட்டாமல் பார்த்தபடி கூறினாள். அவளின் வார்த்தைகள் எழிலனிடம் எதிரொலித்தது. அவன் அவளை அணைத்தபடி, முதலில் நீ படிப்பை தொடங்கு, நாம் மெதுவாக வாழ்க்கை என்ற வீணையை வாசிக்க தொடங்குவோம். அவள் நெருங்க நெருங்க, எழிலன் கவிதாவை புதிய வெளிச்சத்தில் பார்க்க ஆரம்பித்தான். வாழ்க்கையின் மீதான அவளது ஆழ்ந்த அன்பையும், எளிமையான விஷயங்களில் அழகைக் காணும் அவளது திறனையும் அவன் பாராட்டினான். "வாழ்க்கை வழங்கும் அனைத்தையும் நான் பார்க்க விரும்புகிறேன், உன்னுடன் என் பக்கத்தில்," அவன், அவள் காதில் சொன்னான்! அவனுடைய வார்த்தையில் கவிதாவின் உள்ளம் மகிழ்ச்சியில் திளைத்தது. அவள் மகிழ்வாக எல்லோருக்கும் போய்வருகிறேன் என்று கூறி, விமானத்தில் எழிலனுடன் ஏறினாள், ஆனால் இன்னும் சரியாக, முறையாக 'மீட்டாத வீணை' யாகவே ! ஆனால் அது விரைவில் நடைபெறும் என்ற நம்பிக்கையுடனும் உறுதியுடனும்! நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"தீப்பிடித்த வரலாறு: யாழ் நூலகம் எரிக்கப்பட்ட நினைவு கூர்தல் இன்று [31/05/2024]"
"தீப்பிடித்த வரலாறு: யாழ் நூலகம் எரிக்கப்பட்ட நினைவு கூர்தல் இன்று [31/05/2024]" கி.மு. 3000 ஆண்டுகளில் நாகரிகம் அடைந்து பின்னர் கி.பி. 300 ஆண்டுகளில் இருந்து, 700 ஆண்டுகள் வரை மிக செழிப்பாக வாழ்ந்த மாயன் நாகரீகத்தை படைத்த மாயன் மக்களை ஸ்பெயின் நாடு பீரங்கிகளை கொண்டு தாக்கி 'யுகடான்" (Yucatan) மாநிலத்தை கைப்பற்றயது . அத்துடன் நிறுத்தி விடவில்லை. 'ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால் அவர்களின் மொழியை அழிக்க வேண்டும்' என்பார்கள். அது போல, 'ஒரு மொழியை அழிக்க வேண்டும் என்றால் அவர்களின் நூல்களை அழிக்க வேண்டும்'. வரலாற்றில் இது பல இடங்களில் நடைபெற்றிருக்கிறது. 1981 ஆம் ஆண்டு மே 31 ஆம் திகதி நள்ளிரவுக்கு பின்னர் வன்முறைக் குழுவொன்றால் யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது 20ம் நூற்றாண்டின் இன, நூலழிப்புகளில் ஒரு மிகப்பெரும் வன்முறையாகக் கருதப்படுகிறது!. இப்படி ஒன்றையே மாயாக்களுக்கு உதவி செய்யும் அழிவு முதலியவற்றினின்று மீட்பவர் [இரட்சகர் ] போல வந்து சேர்ந்த ஸ்பானிய கிருஸ்தவ மதகுரு டியாகோ டி லாண்டாவும் (Diego de Landa) செய்தார். அவ்வாறே யாழிலும் இது அரங்கேறியது. இனப்படுகொளையாளிகள் என்றதும் ஹிட்லர் மற்றும் முசோலினியின் உருவங்கள் உடனடியாக நம் நினைவுக்கு வருகிறது .ஏன் என்றால் லட்சக்கணக்கானவர்களின் மரணத்துக்கு அவர்கள் நேரடிக் காரணம் என்பதால். ஆனால், இவர்களைக் காட்டிலும் குரூரமான பலரை வரலாறு கண்டிருக்கிறது. அப்படி ஒருவரே ஸ்பானிய மதகுரு, டியாகோ டி லாண்டா ஆவார். அவ்வாறே யாழ் நூலக எரிப்புக்கு முன்னின்ற இலங்கை அரசின் அரசியல்வாதியும் அல்லது அரசியல்வாதிகளும் ஆகும். அமாம் வானியல், அறிவியல், கணிதவியல், விவசாயம் என மாயன் பல ஆயிரம் ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து அனைத்தையும் புத்தகங்களாக எழுதி வைத்திருந்தனர் மாயாக்கள். எழுதி வைத்திருந்த ஆயிரக்கணக்கான நூல்களை, ஸ்பானிய இராணுவத்தின் உதவியுடன் மொத்தமாகத் தீயில் போட்டுக் கொளுத்தினார் லாண்டா.இவரால் அழிக்கப்பட்ட நூல்கள் அனைத்தும், விலை மதிப்பற்ற ,மீண்டும் பெறமுடியாத களஞ்சியமாகும் . அவை எல்லாம் இன்று எமக்குக் கிடைத்திருக்கும் என்றால், உலகின் பல இரகசியங்களுக்கும், ஆச்சரியங்களுக்கும் விடை கிடைத்திருக்கலாம் அல்லவா ? . அவ்வாறே நான்சி முர்ரே, ஒரு மேற்கத்திய எழுத்தாளர், "சீருடை அணிந்த காவலர்களும் சாதாரண உடையில் இருந்த குண்டர்களும் சில ஒழுங்கமைக்கப்பட்ட அழிவுச் செயல்களை மேற்கொண்டனர்" என்று எழுதினார். "யாழ்ப்பாணம் பொது நூலகம் உட்பட, அதன் 95,000 தொகுதிகள் மற்றும் விலைமதிப்பற்ற கையெழுத்துப் பிரதிகள் உட்பட சில தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்குகளை அவர்கள் தரையில் எரித்தனர் ... இது பற்றி தேசிய செய்தித்தாள்களில் எதுவும் இல்லை, தமிழர்களின் கலாச்சார அடையாளமான நூலகத்தை எரித்தது கூட இல்லை. ஜூன் 2 ஆம் தேதி வரை அவசரகாலச் சட்டத்தைக் கொண்டுவருவதை அரசாங்கம் தாமதப்படுத்தியது, அந்த நேரத்தில் முக்கிய இலக்குகள் அழிக்கப்பட்டன." எரிப்பு இரண்டு இரவுகள் தடையின்றி தொடர்ந்தது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமையகம் மற்றும் ஈழநாடு நாளிதழின் அலுவலகங்கள் உட்பட யாழ்ப்பாண நகர் முழுவதும் உள்ள வீடுகள் மற்றும் கடைகளும் கும்பலால் தீவைக்கப்பட்டன. வர்ஜீனியா லியரி, சர்வதேச நீதிபதிகள் ஆணையம் சார்பில் ஜூலை/ஆகஸ்ட் 1981 இல் "யாழ்ப்பாண பொது நூலகத்தை அழித்த சம்பவம் யாழ் மக்களுக்கு மிகவும் துயரத்தை ஏற்படுத்திய சம்பவமாகும்." என்று கூறினார். இனங்களுக்கிடையிலான நீதி மற்றும் சமத்துவத்திற்கான இயக்கம் ஒரு தூதுக்குழுவை யாழ்ப்பாணத்திற்கு அனுப்பிய பின்னர் அறிக்கை ஒன்றில் "யாழ்ப்பாண மக்களுக்கு எந்த அழிவுச் செயல் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது என்று கேட்டால், யாழ்ப்பாண மக்களின் கற்றல் மற்றும் கலாச்சாரத்தின் மீதான, இந்த யாழ் பொது நூலகத்தின் மீதான, காட்டுமிராண்டித்தனமான தாக்குதலாகத் தான் இருக்கும். இந்த நூலகத்தின், அறிவின், பண்பாட்டின் சின்னத்தின் அழிவு பல ஆண்டுகளுக்கு கசப்பான நினைவுகளை விட்டுச் செல்லும் என்பதில் சந்தேகமில்லை என்று கூறியது. [Nancy Murray, a western author, wrote at the time ''uniformed security men and plainclothes thugs carried out some well organised acts of destruction”. "They burned to the ground certain chosen targets - including the Jaffna Public Library, with its 95,000 volumes and priceless manuscripts…no mention of this appeared in the national newspapers, not even the burning of the library, the symbol of Tamils' cultural identity. The government delayed bringing in emergency rule until 2 June, by which time the key targets had been destroyed." The burning continued unchecked for two nights. Homes and shops across Jaffna town were also set alight by the mob, including the TULF headquarters and the offices of the Eelanadu newspaper. Virginia Leary wrote in Ethnic Conflict and Violence in Sri Lanka - Report of a Mission to Sri Lanka on behalf of the International Commission of Jurists, July/August 1981, that “the destruction of the Jaffna Public Library was the incident, which appeared to cause the most distress to the people of Jaffna." The Movement for Inter-racial Justice and Equality said in a report, after sending a delegation to Jaffna, "If the Delegation were asked which act of destruction had the greatest impact on the people of Jaffna, the answer would be the savage attack on this monument to the learning and culture and the desire for learning and culture of the people of Jaffna... There is no doubt that the destruction of the Library will leave bitter memories behind for many years."]
-
"நேர்மைக்கு கிடைத்தப் பரிசு!"
எல்லோருக்கும் என் நன்றிகள்
-
"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்"
"தமிழர்களின் மரபும் பாரம் பரியமும்" / பகுதி: 14 இவ்வுலகம் தோன்றி படிப்படியாக மனித இனம் தோன்றியது போல, மனித இனம் தோன்றி , அது மெல்ல மெல்ல வளர, அவர்களுக்கு இடையில் பல பல பழக்க வழக்கங்களும் அன்றைய சூழ்நிலைக்கும் அவர்களின் அறிவு ஆற்றலுக்கும் ஏற்றவாறு தோன்றின, அவ்வற்றில் சில அவர்களின் சந்ததியினுடாக பல நூறு அல்லது ஆயிரம் ஆண்டுகளாக தொடர்ந்தன. அந்த முன்னையோர்களின் மரபே இன்று பாரம்பரியமாக நிற்கிறது எனலாம். அவ்வாறு தோன்றிய பழக்க வழக்கங்களில் சில இன்றும் அப்படியே அல்லது தேவைக்கும் அறிவிற்கும் ஏற்ப சற்று மாறுபட்டு மக்களின் அன்றாட நடைமுறை வாழ்க்கையில் சர்வசாதாரணமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. அந்த, தொன்றுதொட்டு இருந்து வரும் பழக்கங்கள் பல இலக்கியங்களில், காலத்தின் கண்ணாடியாக, அங்கங்கே பிரதி பலிப்பதையும் காண்கிறோம். அவ்வாறு பிரதிபலிக்கும் பழக்கங்களில் கண்ணேறு கழித்தல் ஒரு முக் கிய இடத்தை வகுக்கிறது. அது மட்டும் அல்ல அவர்களுக்கு இடையில் இன்று நிலவும் பழமொழியிலும் காணக் கூடியதாக உள்ளது. உதாரணமாக “கல்லடி பட்டாலும் கண்ணடிப் படக்கூடாது” , ‘விண்ணேறு தப்பினாலும் கண்ணேறு தப்பாது’ என்பதை கூறலாம். கண்ணேறு கழிக்கும் முறையை திருஷ்டி கழித்தல் என்றும் கூறுவர். இந்த மரபை குறைந்தது கி மு 3000 இல் இருந்து அறியக் கூடியதாக உள்ளது. உதாரணமாக சுமேரியா, பாபிலோனிய மற்றும் அசீரியன் கியூனிஃபார்ம் பதிவுகளில் [Sumerian, Babylonian and Assyrian cuneiform texts] இவை காணப் படுகின்றன. தீய கண்ணால் வரும் சாபத்தை அணைக்க பிரார்த்தனைகள் பொறிக்கப்பட்ட கல் வெட்டு களிமண் பலகை [tablet contains a incantation to counter the “evil eye,”] அங்கு கண்டுபிடிக்கப் பட்டுள்ளது, அதே போல ஜிப்சத்தால் செய்யப்பட்ட தீய கண் உருவச் சிலைகளும் அல்லது கண் தாயத்துகளும் [Eye idols carved out of gypsum or eye amulets] தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் தெற்கு மெசொப்பொத்தேமியாவில் வாழ்ந்த சுமேரியர்களின் 'igi hul' என அழைக்கப்படும் கண்ணேறுக்கான சாபத்தினை எதிர்க்கும் நடவடிக்கையை அல்லது அவர்களின் ஒரு கண்ணேறு கழிக்கும் பழக்கத்தை காட்டுகிறது. அது மட்டும் அல்ல, சுமேரிய இலக்கியத்தில், இந்த தீய கண்ணின் செயல் பாட்டையும் காண்கிறோம். உதாரணமாக , தீய கண் பார்வையால் இரு வெவேறு நிகழ்வுகளில் மரணத்தை ஏற்படுத்துவதையும் [“the eye of death” / "i-bi2 uš2-a"] காண்கிறோம். முதலாவதில் அணுன்னா தெய்வங்களின் தீய கண்களால், ஈனன்னா பாதிப்பு அடைகிறார் [Inanna is the victim of the evil eye of the Anunna-gods, the seven judges]. இங்கே ஈனன்னா பாதாளத்தின் [under world of the dead / netherworld] ஏழாவது வாசலை அடைந்தபின் இந்த காட்சி நடைபெற்றது. அணுன்னா தெய்வங்கள் என அழைக்கப்படும் ஏழு நீதிபதிகளும் அவளுக்கு எதிராக தீர்ப்பை வழங்கி, அவளை பார்த்தனர் -அது மரணத்தின் கண், அவளுடன் கதைத்தனர்- அது நோய் தரும் பேச்சு, அவளுக்கு அவர்கள் கூச்சலிட் டனர், அது நரகத்தின் காலவரம்பிலா தண்டனை சத்தம், பாதிக்கப்பட்ட பெண் [ஈனன்னா] ஒரு பிணமாக மாறியது. சடலம் ஒரு கொக்கி மீது தொங் கியது என்று விபரிக்கப் பட்டுள்ளது. [They looked at her – it was the eye of death,They spoke to her – it was the speech of illness, They shouted at her – it was the shout of damnation, The afflicted woman became a corpse, The corpse was hung on a hook / igi mu-ši-in-bar i-bi2 uš2-a-kam, inim i-ne-ne inim lipiš gig-ga-am3, gu3 i-ne-de2 gu3 nam-tag-tag-ga-am3, munus tur5-ra uzu niĝ2 sag3-ga-še3 ba-an-kur9, uzu niĝ2 sag3-ga ĝiš, gag-ta lu2 ba-da-an-la2]. இரண்டாவதில், ஈனன்னாவே தனது தீய கண்ணால் தனது கணவர் துமுழியை கொலை செய்யும் குற்றம் புரிகிறார். [Inanna is the visual perpetrator, killing her husband, Dumuzi, with her eye of death]. சுமேரியர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருப்பதை இன்றைய ஆய்வுகள் எடுத்து காட்டுகின்றன. மேலும் இன்றைய சிரியாவில் உள்ள டெல் பிராக் என்னும் இடத்தில் அல்லது பண்டைய வடக்கு மெசொப்பொத்தேமியாவில் [Tall Birāk, also spelled Tell Brak, ancient site located in present Syria -ancient northern Mesopotamia] ஆயிரக்கணக்கான கண் உருவங்கள் கண்டுபிடிக்கப் பட்டது. இதனால், அந்த இடத்தை கண் ஆலயம் என அழைக்கிறார்கள் [One of the most interesting discoveries at Birāk was the Eye Temple (c. 3000), so named because of the thousands of small stone “eye idols” found there]. இந்த கண் சிலைகள் ஒரு பரிகாரமாக, அங்கு காணிக்கை வழங்கப் பட்டதாக அதிகமாக இருக்கலாம். அது மட்டும் அல்ல, ஸ்பெயின் குகைகளில் 10,000 ஆண்டு பழமைவாய்ந்த தீய கண்ணைத் துடைக்கும் அல்லது கண்ணேறு கழித்தலை சித்தரிக்கும் சுவர் ஓவிய சின்னங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இது, இந்த மனித பழக்கத்தின் பழமையை மேலும் பறைசாற்றுகிறது [10,000 years old Drawings have been found on cave walls in Spain depicting symbols to ward off the evil eye]. இந்தியாவில் கிடைக்கப் பெற்ற மிகவும் பழைய நூல் ரிக் வேதம் ஆகும், அதில் பத்தாவது மண்டலத்தில், அதிகாரம் (சூக்தம்) 85 இல். பாடல் (சுலோகம்) 44 இல், கண்ணேறு பற்றி "மணமகளே உன் கணவனை ஒரு தீய கண்கொண்டு பார்க்க வேண்டாம், அவனுக்கு என்றுமே விரோதமாக இருக்காதே" ["O Bride ! May you NEVER look your husband with an EVIL EYE; never be hostile to him;"] என்ற ஒரு குறிப்பு உண்டு. இது கி மு 1500 க்கும் கி மு 1200 க்கும் இடையில் இயற்றப்பட்டு இருக்கலாம். எனினும் "யாதும் ஊரே ; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன" என தீயது, நல்லது என்பவை பிறர் தந்து வருபவை இல்லை, துன்பமும், அதன் தீர்வும் கூட அதுபோல் தான் என்ற சங்க பாடல்களில், எனது தேடலில், கண்ணேறுவை காண முடியவில்லை. 'தீதும் நன்றும் பிறர்தர வாரா' என்ற வரி அதற்கு விடையோ என்று எண்ணத் தோன்றுகிறது, எனினும் தாயத்து கட்டுதலை அங்கு காண்கிறோம். மகளை முன்னிலையாகக் கொண்ட பட்டினத்தார் பாடலில், அருள் அருள் புலம்பலில், "தொண்ணூற்று அறுவ ரையும் சுட்டான் துரிசு அறவே; கண்ணேறு பட்டதடி கருவேர் அறுத்தாண்டி!" என்ற வரியும், "பல்லாண்டு பல்லாண்டு பல்லாயி ரத்தாண்டு பலகோடி நூறா யிரம் மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன் செவ்வடி செவ்விதிருக் காப்பு,...." என்று இறைவன் மேல் கண்ணேறு பட்டு விடுமோ எனக் கருதி பெரியாழ்வார் பாடிய வரியும் அதன் பின் வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளாரின் (அக்டோபர் 5, 1823 - சனவரி 30, 1873) திருவருட் பாவில் ‘பண்ணேறு மொழியடியார் பரவி வாழ்த் தும் பாதமலர் அழகினையிப் பாவி பார்க்கின் கண்ணேறு படுமென்றோ கனவிலேனும் காட்டென் றாற் காட்டுகிலாய் கருணையீதோ.' என்ற வரியும் கண்ணேறு செய்தியை கூறுகின்றன. எனவே இவை பிராமண இந்து மதம் சைவத்துக்குள் அல்லது தமிழர் மதத்துக்குள் ஊடுருவியதால் வந்த பழக்க வழக்கமோ என்று எண்ணத் தோன்றுகிறது? இந்த கண்ணேறு கழித்தல் இன்றும் தமிழர் மத்தியில் காணப்படுகிறது, அவர்கள் ஒரு வித ஆராத்தி மூலம் [சுத்தி போடல்] அல்லது பூசணிக்காய்களை, பொம்மைகளை தொங்க விடுவது அல்லது காய்ந்த மிளகாய், எலுமிச்சம்பழம் போன்றவற்றை, ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி, ஒன்றாக சேர்த்து கட்டித் தொங்க விடுவது, அல்லது கறுத்த பொட்டு பெரிதாய் போடுவது அல்லது சிலர் சுத்தி போடலுடன் பாட்டுப் பாடியும் அல்லது வேறு சில வழிகளிலும் இதை கையாளுகிறார்கள். இது அவர்களின் பாரம்பரிய நடவடிக்கைகளில் முக்கியமாக இன்று காணப்படுகிறது. உதாரணமாக தூரத்து பயணம் முடித்து வருபவர்களுக்கு, புதிதாய் திருமணம் முடித்து வீட்டிற்கு வரும் மணமக்களுக்கு, மகப்பேறு முடித்து வீட்டிற்கு வரும் பெண்ணுக்கு இப்படி பல சந்தர்ப்பங்களில் ஆரத்தி எடுக்கும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது. இதற்கு அவர்கள் சொல்லும் முக்கிய காரணம் எமது பிள்ளைகள் மேல் , எங்கள் வீட்டின் மேல், எங்கள் நிலைமையின் மேல் அல்லது செல்வாக்கின் மேல் ......... பொறாமை, எரிச்சல் கொண்டு பார்ப்பவர்களின் எதிமறை அலைகளின் விளைவை தவிர்ப்பதற்கு ஆகும். ஆனால் இப்படி எண்ணுவதற்கு உண்மையில் முக்கிய காரணம், நாம் எம் பிள்ளை, எமது வீடு, எமது சாதனைகள், எமது சொத்துக்கள் ....... இப்படி போன்றவற்றின் மேல் பெருமை கொள்வதே ஆகும்! உதாரணமாக காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பது போல, எமது பிள்ளைகள், எங்கள் கண்ணுக்கு மிக அழகாக தோன்றுகிறது. எமது வீடு, எங்களுக்கு மிகவும் நேர்த்தியாக தோன்றுகிறது. ஆகவே கண் திருஷ்டி, எங்களிடமிருந்து தான் முதலில் வெளி வருகிறது! உதாரணமாக, கண்களுக்கு, பார்வைக்கு அதிக அதிர்கிற சக்தி உண்டு என்றால், அது சமமாக நல்ல பலனையும், கெட்ட பலனையும் நல்க வேண்டும் என்றாகிறது. அபூர்வமாக பரமாச்சாரியார் போன்ற கோடிக்கணக்கில் ஒருவருக்குத் தான் பார்வை அருள் உண்டு. மீதி அனைவரின் கண் களின் பார்வையும் தீய திருஷ்டி உடையவை என்று ஆகிவிடுகிறது. அது ஏன்? யாராவது சிந்தித்தது உண்டா? மேலும் எமது கண் ஒரு கதிர்வீச்சலையும் வெளிப்படுத்துவது இல்லை, அது ஒளியை உள்வாங்கவே வடிவமைக்கப்பட்டுள்ளது. இது புகைப்படம் எடுக்கும் கேமராவை போன்றது ஆகும். மங்களகரமான அல்லது புனித நாட்களில், தீய சக்திகள் வீட்டிற்குள் நுழைவதை தடுக்கும் முகமாக மாவிலை, வேப்பிலை போன்றவை கதவில் கட்டும் நம்பிக்கையும் பழக்கமும் இன்னும், குறிப்பாக கிராமப் புறங்களில் இருப்பதையும் காண்கிறோம். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 15 தொடரும்
-
'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளையும் வரலாற்று சான்றுகளையும் அறிவோமா?
'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 27 இன்று தமிழர்கள் பெரும்பாலும் வாழும் பகுதிகளான இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் தொல்பொருள் ஆய்வுகளில் காணப்படும் புத்த மத வழிபாட்டு தடயங்கள் அல்லது சான்றுகள், அங்கு சிங்களவர்கள் வாழ்ந்ததாக இலங்கை வாழ் பெரும்பான்மையான சிங்களவர்கள் இன்று நம்புகிறார்கள். அவர்கள் எனோ கி பி மூன்றாம் நூற்றாண்டில் இருந்து கி பி ஏழாம் நூற்றாண்டு வரையும் தமிழர் மத்தியில் பௌத்தம் மேலோங்கி இருந்தது என்ற வரலாற்று உண்மையை கவனத்தில் கொள்வதில்லை. இரண்டாவது நூற்றாண்டில் அநுராதபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த கஜபாகு என்கிற மன்னனால் கண்ணகி வழிபாடு சிங்கள மக்களிடையே அறிமுகம் செய்யப்பட்டது என சிங்கள வரலாற்று நூல்களில் ஒன்றான இராஜாவளி என்ற நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்தினி தெய்யோ என இது சிங்கள மக்கள் மத்தியில் வணங்கப்பட்டு வருகிறது, இந்த சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சியான மணிமேகலை முழுக்க முழுக்க ஒரு தமிழ் புத்த மத நூலாகும். தமிழர்கள் அந்த காலப் பகுதியில் புத்த மதத்தை தழுவி இருந்ததிற்கு இது ஒரு வரலாற்று சான்றாகும். எனினும் புத்த மதம் சிங்களவர்களுக்கே உரிமையானது என்ற தப்பபிப்பிராயத்தை மகாவம்சம் அவர்களுக்கு ஊட்டியுள்ளதே இந்த மனப்போக்கிற்கு அடிப்படை காரணமாகும். கி.பி. 3ம் நூற்றாண்டளவில், மகாயான பௌத்தம் என்ற புத்த மத பிரிவு, தென்னிந்தியாவில் உருவாகி, தமிழகத்திற்குள் அறிமுகமாகியதாக அறிகிறோம். புவியியல் சூழ்நிலை காரணமாக தென்னிந்தியாவின் அரசியல் சமூக மாற்றங்கள் இலங்கையையும் பாதித்தன. எனவே இலங்கையிலிருந்த தமிழர்கள் மத்தியிலும் மகாயான பௌத்தம் பரவத் தொடங்கியது. மணிமேகலை, குண்டலகேசி போன்ற தமிழ்ப் பெரும் காப்பியங்கள் பௌத்த தத்துவத்தை வலியுறுத்துபவையாக உருவெடுத்தன. ஆனால் இதன் பழமைவாதிகளான பௌத்தர்கள், தம்மை தேரவாத பௌத்தர்கள் என வரையறுத்துக் கொண்டனர். இந்தச் சமூகப் பகைப்பலத்தின் பின்னணியில், இதே காலப்பகுதியில் இலங்கை அரசன் தாதுசேனனின் மாமாவான மகாநாம தேரரால் மகாவம்சம் எழுதப்பட்டது. இப்படி இரண்டாக உருவான தேரவாத, மகாயான பௌத்த பிரிவுகள் என்பன சிங்கள மொழியின் உருவாக்கத்திற்கும் காரணமாக அன்று அமைந்திருந்ததுடன், தமிழ் மொழி என்பது மகாயான பௌத்தத்தின் ஊடகமாகக் கருதப்படவும் வழிவகுத்தது எனலாம். இந்த நிலையில், இலங்கையில் இந்து மதத்தால் உள்வாங்கப்பட்ட பௌத்தத்திற்கும், பழமைவாத பௌத்த மதத்திற்கும் எதிரான போராட்டமாகவே மகாவம்சம் அமைந்தது எனலாம். 6ம் நூற்றாண்டில் உருவான புராண இதிகாசங்களின் பாணியிலான மகாவம்சம், சில நூறாண்டுகளுக்கு முற்பட்ட அதிகாரப் போராட்டங்களை, இதிகாசங்களையும் புராணங்களையும் போலவே மக்கள் மயப்படுத்த முற்பட்டது. இதன் ஒரு வடிவமே எல்லாளச் சோழனுக்கும் துட்டகாமினிக்கும் இடையில் நடந்த போராட்டம் தொடர்பான மகாவம்சத்தின் விவரணையாகும். அது மட்டும் அல்ல, இன்று வடக்கு கிழக்கில் தொல் பொருள் ஆய்வில் கிடைக்கும் புத்த மத சான்றுகளும் இவையின் விளைவே, அதாவது தமிழ் மகாயான பௌத்தத்தின் சிதைவுகள், இதற்கும் சிங்களவருக்கு எந்தவித தொடர்பும் இல்லை. மகாவம்சத்தில் பாடம் 22 முதல் 32 வரை துட்டகாமினி பற்றி சொல்லப்படுகிறது. 271 பக்கங்கள் கொண்ட மகாவம்சத்தில், 81 பக்கம் இவனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது ஏறத்தாழ 30% ஆகும். ஆனால், மகாவம்சம் சொல்லும் எண்ணூற்று முப்பத்தைந்து ஆண்டு ஆட்சி காலத்தில் இவனின் ஆட்சி இருபத்தி நான்கு ஆண்டுகள் அல்லது 3% க்கு குறைவான காலமே! இந்த தவறான கையாளுதல், எமக்கு மகாவம்சத்தின் நம்பிக்கைக்கு ஒவ்வாத தன்மையையும், அதை எழுதிய நூலாசிரியரின் மனப்போக்கையும் வெளிப்படையாக காட்டுகிறது. சமண சமயம் தமிழ் நாட்டுக்கு கி மு 300 ஆண்டுகளில் வந்திருக்கலாம்? அதை தொடர்ந்து புத்த சமயமும் அங்கு வந்து, கணிசமான காலம் அங்கு நிலைத்து நின்றது. இந்த கால பகுதியில், உதாரணமாக கி பி 300 இல் இருந்து 600 வரை காலத்தை இருண்ட காலம் எனக் கூறப்படுகிறது. ஏறத்தாழ ஆறாம் நூற்றாண்டில் இல் இருந்து ஏழாம் நூற்றாண்டு வரை, மீண்டும் அங்கு இந்த பிராமண சமயங்களை கடுமையாக எதிர்த்து, சைவமதம் மேல் ஒங்கத் தொடங்கியது. இந்த அலை, பல புத்த பிக்குகளை திரளாக இலங்கைக்கு அனுப்பி இருக்கலாம்? மேலும் இலங்கை வாழ் தமிழர்களும் மீண்டு சைவ சமயத்துக்கு முழுமையாக திரும்பினார்கள். அதனால்த் தான், தீபவம்சத்தில் தமிழருக்கு எதிராக காணாத இனத்துவேசம் மாகாவம்சத்தில் காணப்படுவதற்கு ஒரு காரணமாகவும் இருக்கலாம்? மற்றது தேரவாத பௌத்தம் [இலங்கை சிங்களவர்கள் இச்சமயத்தைச் சேர்ந்தவராவர்கள்] மற்றும் மகாயான பௌத்தம் [மகாயான பௌத்தம், கி.பி. முதலாம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் தோன்றியது என்று அறிஞர்கள் கருதுகின்றனர். இந்தியா, இலங்கை தமிழர்கள், மீண்டும் சைவ மதத்திற்கு கி பி ஆறாம் நூற்றாண்டிற்கு பின் மாறமுன், குறிப்பிட்ட காலம் வரை மகாயான பௌத்தத்தில் இருந்தார்கள்] இவைகளுக்கு இடையில் உள்ள வேறுபாடும் பகையும் ஆகும். சமஸ்கிருத பெயர்ச் சொல் " सैंहल " [saiMhala] என்பதன் அர்த்தம் கறுவா அல்லது இலங்கைக்கு உரியது அல்லது அங்கு உற்பத்தி செய்யப் படுவது அல்லது சிங்களவர் [cinnamon / Laurus Cassia - Bot or belonging to or produced in Ceylon or Sinhalese ] ஆகும். இதன் உச்சரிப்பு "சின்ஹல" ஆகும். இலங்கை கறுவா விளையும் நாடாகையால், கறுவாவின் சமஸ்கிருதப் பெயரான "சின்ஹல" என்பதே சிங்களமாக மருவியிருக்கலாம் எனவும் வாதாடலாம் என நம்புகிறேன். ஏனென்றால் சிங்கத்தின் வம்சாவளியினரே சிங்களவர் என்பது நம்பமுடியாத இயற்கைக்கு மாறான தகவலாக இருப்பதால்? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 28 தொடரும்
-
"முட்டாள்கள் மௌனமாக இருப்பது புத்திசாலித்தனம், புத்திசாலிகள் மௌனமாக இருப்பது முட்டாள்தனம்!"
"அறப்படித்தவன் அங்காடி போனால் விற்கவும் மாட்டான் வாங்கவும் மாட்டான்" அறப்படித்தவன் என்றால் செவ்வையாக முழுமையாக படித்தவன் என்று பொருள். அதாவது அளவுக்கு மிஞ்சி படித்தவன். அதனால் அவன் அளவுக்கு மிஞ்சி யோசிக்கத் தொடங்குகிறான். அது தான் ஆபத்து ஒரு முறை, மாணவர்களில் ஒருவன் ஆசிரியரை பார்த்து “ஐயா அதிகம் படித்த அறிவாளிகளால் ஒன்றும் செய்ய இயலாது என்பதை விளக்குவது போல அல்லவா இந்தப் பழமொழி உள்ளது.” என்று கேட்டான். அதற்கு ஆசிரியர் “அப்படியல்ல என்று கூறியதுடன் ஒரு கதையை கூறினார் முன்னொரு காலத்தில் சாஸ்திரமும், மருத்துவமும் கற்றுதந்த ஒரு குருகுலத்தில் மாணவர்கள் நிறைய பேர் கற்றுவந்தனர். ஒரு நாள் மாணவர்களில் சாஸ்திரத்தில் தேர்ச்சி பெற்ற ஒருவரையும், மருத்துவத்தில் தேர்ச்சி பெற்ற ஒருவரையும் உணவுப் பொருட்களை வாங்க குரு அனுப்பினார். சாஸ்திரம் படித்தவனோ காய்கறி வாங்கச் சென்ற இடத்தில் சாஸ்திரப்படி இது சரியல்ல. இந்தக் கடையில் வாங்கக் கூடாது. இந்த விற்பனையாளரிடம் வாங்கக் கூடாது என்று அனைவரையும் கழித்தானாம். மருத்துவம் படித்தவனோ கத்தரிக்காய் ஆகாது. வாழைக்காய் வாயு, கிழங்குகளை உண்ணலாகாது, என ஒவ்வொரு காயையும் கழித்தானாம். இவ்விதமாக ஒருவர் கடைகளையும், கடைக்காரரையும் பழிக்க மற்றொருவர் காய்கறிகளை பழிக்க இருவரும் வெறும் கையுடன் குருகுலத்திற்குத் திரும்பி வந்தனராம். இப்படி கதையை முடித்தாரும் . அவர் மேலும் ஒரு விளக்கமாக ஒரு ஊரில் திருவிழா ஒன்று நடக்க இருந்தது. அத்திருவிழாவிற்கு சங்கீத கச்சேரி ஒன்றை ஏற்பாடு செய்ய வேண்டும் என ஊர்மக்கள் விரும்பினர். எனவே கச்சேரி ஏற்பாடு செய்ய நன்கு படித்த இருவரை ஊர் மக்கள் அணுகினர். “நீங்கள் சென்று சங்கீதக் கச்சேரிக்கு நல்ல வித்துவான்களை ஏற்பாடு செய்து வாருங்கள்” என்று கூறி அவ்விருவரையும் அனுப்பி வைத்தனர். முதலில் அவ்விருவரும் ஒரு வீணை வித்துவானை கச்சேரிக்கு ஒப்புதல் செய்யச் சென்றனர். அங்கு அவர் வீணையை படுக்க வைத்து ஒரு வெள்ளைத் துணியால் அதனை மூடிவைத்து இருந்தார். இதைக் கண்ட முதலாமவன் “இந்த வீணைக் கலைஞரைக் கச்சேரிக்கு ஒப்புதல் செய்ய வேண்டாம்” என்றான. அதற்கு இரண்டாமவன் “ஏன்?” என்று கேட்டான். “நீயே பார். அவர் வீணையை மூடி வைத்துள்ளதைப் பார்க்கும் போது ஏதோ பிணத்தை மூடி வைத்துள்ளது போல் உள்ளது!. நாம் முதன் முதலாக கச்சேரி ஏற்பாடு செய்கிறோம். இவர் கச்சேரி மேடையில் இக்கருவியை இங்கு இருப்பது போல மூடி வைத்தாரானால் அதைக் கண்ட நம் ஊர்மக்கள் என்ன நினைப்பார்கள்!. ஊர் பெரிய மனிதர்கள் சகுனம் சரியாக இல்லை என்று கூற மாட்டார்களா?” என்றான். இதனைக் கேட்ட இரண்டாமவன் முதலாமவனின் பேச்சினை ஒப்புக் கொண்டான். பின் இருவரும் “இன்னொரு நாள் வந்து கச்சேரிக்கு ஒப்பந்தம் செய்து கொள்கிறோம்!” என்று கூறிவிட்டு சென்றுவிட்டனர். அவ்வூரில் இன்னொரு தெருவில், கடம் வாசிக்கும் ஒருவர் இருந்தார். அவரை கச்சேரிக்கு ஒப்பந்தம் செய்ய இருவரும் நினைத்தனர். அப்போது இரண்டாமவன் “கடம் வாசிப்பவரை நாம் கச்சேரிக்கு ஒப்பந்தம் செய்ய வேண்டாம்” என்று தடுத்தான். “ஏன் வேண்டாம் என்கிறாய்?” என முதலாமவன் கேட்டான். அதற்கு இரண்டாமானவன் “நண்பரே நாமோ முதன் முதலாக கச்சேரி ஏற்பாடு செய்ய வந்துள்ளோம். கடம் என்பது மண்ணால் செய்யப்பட்டது. நமது போதாத வேளை இவர் கச்சேரி செய்யும்போது கடம் உடைந்து போனால் ஊரார் அபசகுணம் என்று கூறுவதோடு இதை ஏற்பாடு செய்த நம்மைத் திட்டமாட்டார்களா?” என்றான். அடுத்தவனும் “ஆமாம்” என ஒப்புக் கொண்டான். இப்படியாக இருவரும் பல கலைஞர்களையும் பார்த்து சாக்குப் போக்கு சொல்லி வெறும் கையுடன் ஊர் திரும்பினராம். இதுபோலவே அதிகம் விபரம் தெரிந்த ஒருவர் கடைக்குச் சென்றால் அவரால் எந்த ஒரு பொருளையும் திருப்தியாக வாங்க இயாது என்ற விளக்கத்துடன் கதையை முடித்தார் ஏனென்றால் அவருடைய பார்வைக்கு எல்லாப் பொருளும் குற்றமுடையதாக தோன்றும் என்பதே இப்பழமொழியின் கருத்தாகும்.” என்று கூறினார். இது எப்பவோ நான் கேட்டது நன்றி எல்லோருக்கும் என் நன்றிகள்
-
"முட்டாள்கள் மௌனமாக இருப்பது புத்திசாலித்தனம், புத்திசாலிகள் மௌனமாக இருப்பது முட்டாள்தனம்!"
முட்டாள்கள் என்பவர்கள் யாவர்? கேட்கப்படும் கேள்விகளுக்கு நாம் சரியான ஆதார பதிலை அளித்தாலும் நம்மை கீழ்த்தரமாக வர்ணித்து பதில் அளிக்கும் மூடர்களே முட்டாள்கள் ஆவார்கள். தன்னைத்தானே பகுத்தறிவுவாதிகளாக பாவித்து கொள்பவர்கள். கடவுள் அல்லது சோதிட நம்பிக்கையில் திணிக்கப்படும் வஞ்சகங்களை அப்படியே எடுத்து பின்பற்றுபவர்கள் இப்படி பலவிதமாக கூறலாம்? வெப்பம் என்று ஒன்று இருந்தால், அந்த வெப்பம் குறைய குறைய குளிர் ஒன்று வெளிப்படுகிறது அப்படியே அறிவாளிக்கு எதிர் சொல்லாக அறிவிலி [அறிவு குறைந்தவன்; பேதை; கபோதி] என்ற பதம் தோன்றுகிறது உதாரணமாக, அறிவாளியாக விஞ்ஞானத்தில் பட்டம் பெற்ற எனக்கு பௌதீகம் படிப்பித்த ஆசிரியை, சூரிய கிரகணம் என்றால் என்ன என்ற படம் கீறி விளக்கம் கொடுத்த ஆசிரியை, சூரிய கிரகணம் அன்று விரதம் இருந்து சாமி கும்பிடுவதை கண்டுள்ளேன்! இப்படியானவர்களை எப்படி கூப்பிடலாம் ? அங்கு தொழிலுக்காக பெயருக்காக , புகழுக்காக ஒரு பட்டம் மட்டுமே !! மற்றும் படி அவர்களின் மனதில் பதிந்து இருப்பது அதற்கு எதிர்மாரே!! "நிறுவனதில் நடைபெறும் கூட்டங்களில் வாயே திறக்காமல் ஒரு மூலையில் ஒழிந்திருப்பது / பல சங்கிலித்தொடர் வர்த்தகங்களின் சொந்தக்காரர், வாயை திறந்து பேசு என கத்துவார், அப்படி உன்னால் பேச முடியாவிட்டால் கூட்டத்திற்கு வராதே என கத்துவார்" அது முதலாளி, உங்களை அதில் பங்குபற்ற வைக்க எடுத்த ஒரு முயற்சி, ஆனால் அதை அவர், கூடத்தின் பின், தனிய கூப்பிட்டு, காரணம் சொல்லி ஊக்கப் படுத்தி இருக்கலாம்? எல்லோருக்கும் முன்னால், சத்தம் போடுவது அல்ல, அது அவரின் ஒரு பலவீனத்தைக் காட்டுகிறது அல்லது எனோ எதோ என்ற அகங்காரத்தை வெளிப்படுத்துகிறது?? "உங்கள் மகன் சித்த சுவாதினமற்றவர் அவருக்கு எம்மால் கற்பிக்க முடியாது அதனால் பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம்" இதுவும் உண்மையில் ஆசிரியரின் பலவீனத்தையே காட்டுகிறது. இலங்கை பாடசாலைகளில், ஆசிரியர்கள் பொதுவாக, பாடத்தில் கெட்டிக்காரர்களாக இருப்பவர்களை, முன் வரிசையில் இருத்தி, மற்றவர்களை பின் வரிசையில் இருத்தி, தம் கவனத்தை, முன் வரிசையுடன் நிற்பாட்டுவதை கண்டவன் நான். ஆனால் இங்கு மாணவனை முட்டாள் என்று சொல்லவில்லை, படிப்பித்தல் கடினம், அதாவது ஊக்கம் எடுப்பதில்லை என்று மட்டும் சொல்லுகிறார்கள். ஆனால் அந்த ஊக்கத்தை கொடுக்கத்தெரியாத ஆசிரியை, உங்கள் முதலாளி போல்?? இது, இந்த அலசல், என் மனதில் தோன்றியது, அவ்வளவுதான்! கீழே நான் முன்பு எழுதிய, இவைகளுடன் ஓரளவு தொடர்புடைய, இரு சிறு கதைகள் சிறு கதை - 69 / "தன்னம்பிக்கை" https://www.facebook.com/groups/978753388866632/posts/8885302041545021/? சிறு கதை - 59] / "வெள்ளந்தி மனிதர்கள்" https://www.facebook.com/groups/978753388866632/posts/8432025283539368/? நன்றி
-
"எரியுண்ட நூலகம் / முருகேசு மயில்வாகனன்"
நன்றி
-
"நேர்மைக்கு கிடைத்தப் பரிசு!"
"நேர்மைக்கு கிடைத்தப் பரிசு!" அது ஒரு அழகிய குக்கிராமம். அதனூடாகத்தான் தூர இடத்து பேரூந்துகள் போவது வழமை. பேரூந்து தரிப்பு நிலையம் முன்பாக பல வகையான பழத் தோட்டம் ஒன்று இருந்தது. அதன் முதலாளி அதற்கு முன்னால் ஒரு பெட்டிக் கடை திறந்து வெவ்வேறு பழங்களுடன், சிற்றுண்டிகளும், தேநீர் மற்றும் பானங்களும் விற்கத் தொடங்கினார். அதுமட்டும் அல்ல, மக்களை கவருவதற்காக அவர்களின் அடிப்படை தேவையான கழிப்பறை வசதியும் அங்கு அமைத்து இருந்தார். அதனால், பேரூந்து வந்து நிற்கும் ஒவ்வொரு தடவையும் அவரின் பெட்டிக் கடை மிக ஆரவாரமாக இருக்கும். இந்த ஆரவாரத்தை பாவித்து, அந்த கிராமத்து சில இளைஞர் யுவதிகள் அங்கு பழங்களை களவெடுத்து போகத் தொடங்கினர். அவரின் கடைக்கு அந்த ஊர்மக்களும் வந்து வாங்கி போவதும் வழமை என்பதால், ஆரம்பத்தில் அது முதலாளிக்கு பெரிதாக தெரியாவிட்டாலும் , காலம் செல்ல அவருக்கு அதில் ஒரு சந்தேகம் ஏற்பட்டது. தன் கடையில் அவருக்கு துணையாக வேலை செய்பவர்களிடம் இதைப் பற்றி சொல்லியும் வைத்தார். என்றாலும் அவர்களை கையும் களவுமாக பிடிக்க முடியவில்லை? ஆகவே அவர் ஒரு நாள், தன் பழங்கள் எல்லாவற்றுக்கும் தனித்துவமான அடையாளம் ஒன்றை பதித்து வைத்தார். அது அவரை விட வேறு யாருக்கும் தெரியாது. அது மட்டும் அல்ல, பழங்களின் எண்ணிக்கையையும் குறித்து வைத்தார். அன்று அவர் தன் வேலையாட்களிடம் கடையின் பொறுப்பை கொடுத்து விட்டு, தானும் ஒரு கடைக்கு வருபவர் போல, கடைக்கு முன்னால் கொஞ்சம் தள்ளி நின்று அங்கு நோட்டம் விட்டுக் கொண்டு இருந்தார். வழமை போல அந்த ஒரு சில இளைஞர் யுவதிகள், கடை ஆரவாரமாக இருக்கும் தருவாயில் அங்கு வந்தனர். அவர்களுக்கு கடை முதலாளி முன்னுக்கு நிற்பது தெரியவில்லை. விரைவாக சில பழங்களை எடுத்துக் கொண்டு வெளியே போகத் தொடங்கினர். இதை நோட்ட மிட்ட , முதலாளி அவர்களை துரத்த தொடங்கினார். அவர்கள் குறுக்கு வீதியால் ஓடி, அந்த பழங்களை யாரோ ஒருவரின் வீட்டு வளவிற்குள் வேலியால் எறிந்து விட்டு, நல்ல பிள்ளைகள் மாதிரி, நடந்து போனார்கள். ஓடி வந்த முதலாளியை பார்த்து, என்ன நடந்தது என்று, ஒன்றும் தெரியாதவர்கள் மாதிரி கேட்டனர். முதலாளிக்கு அவர்களை சரியாக அடையாளம் காண முடியவில்லை . அவரும் நடந்ததை சொன்னார். அவர்கள், ஆமாம் நாமும் கண்டோம், சிலர் ஓடி, அந்த வளவுக்குள் போனார்கள் என்று, அவர்கள் வேலியால் எறிந்த அந்த குறிப்பிட்ட வளவுக்கு கூட்டிப் போனார்கள். இதற்கிடையில், தன் வளைவை துப்பரவாக்கிக் கொண்டு இருந்த ராமு என்ற பையன், அங்கு சில பழங்கள் விழுந்து இருப்பதைக் கண்டு, அதில் ஒன்றை எடுத்து கடிக்கத் தொடங்கினான். வந்து கொண்டு இருந்த முதலாளி, தான் கையும் களவுமாக பிடித்து விட்டேன் என்று ஓடி வந்து அவனை பிடித்து வெருட்ட தொடங்கினார். ராமுக்கு ஒன்றுமே புரியவில்லை. அவன் எவ்வளவோ சொல்லியும், அவர் அந்த பழத்தில் உள்ள அடையாளத்தைக் காட்டி வாதாடத் தொடங்கினார். இதற்கிடையில் ராமுவின் பெற்றோரும் சத்தம் கேட்டு, வீட்டில் இருந்து வெளியே வந்தனர். அவர்களை கண்டதும், முதலாளி இவன் தன் சில நண்பர்களுடன் என் கடையில் இருந்த பழங்களை திருடி வந்து விட்டான் என திட்டி பேச தொடங்கினார். அவர்களும், நாம் ஏழைகள் என்றாலும், களவு பொய் எம்மிடம் இல்லை. என் மகன் இன்று வெளியே கூட போகவில்லை என்றனர். முதலாளி கேட்ட பாடு இல்லை. தான் சொல்லுவதே சரியென அவனை ஒரேயடியாக கள்ளன் ஆக்கி விட்டார். மனம் ஒடிந்த பெற்றோர், அவன் பழத்தை கடித்ததால், அந்த பழத்தின் விலையை தருகிறோம் என்றனர். ஆனால் முதலாளி சத்தம் போட்டுக் கொண்டே இருந்தார். அதற்கிடையில் முதலாளியின் வேலையாட்களும் வர, ராமுவை இழுத்துக்கொண்டு தன் கடைக்கு போகத் தொடங்கினார். ராமுவின் பெற்றோர்களுக்கு முதலாளியின் செய்கையை பார்க்கும் பொழுது அரசன் நன்னனின் கதை ஞாபகத்துக்கு வந்தது. கேரளத்தில் உள்ள பூழி நாட்டின் ஒரு பகுதியை நன்னன் என்ற அரசன் ஆண்டு வந்தான். நன்னனது காவல் மரத்து மாம்பழம் ஒன்றை ஆற்று வெள்ளம் ஆடித்துக் கொண்டு வந்தது. அதை ஆற்றில் நீராடிக் கொண்டிருந்த ஒரு கோசர் குடி சிறுமி தன்னுடன் எடுத்து சென்று விட்டாள். மன்னனின் வேலையாட்கள் இதை மன்னனுக்கு தெரிவித்தார்கள். உடனடியாக எந்த முறையான விசாரணையும் இல்லாமல், ஆற்றில் மிதந்து வந்த மாம்பழத்தை சாப்பிட எடுத்ததுக்கு, அவளை களவு எடுத்ததாக சொல்லி, நன்னன் அந்தப் பெண்ணுக்குக் கொலை தண்டனை விதித்தான். கோசர் குடியினர் நன்னனிடம் முறையிட்டனர். அவனது மாம்பழத்தைத் தின்ற தவறுக்காக அவளது தந்தை 81 யானைகளை தண்டமாக கொடுக்க முன் வந்தார். நன்னன் அதற்கும் அசையவில்லை. இறுதியாக அவளது எடைக்கு எடை பொன்னு தருவதாக மன்றாடினான். ஆனால் நன்னன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்காமல் அவளைக் கொன்று விட்ட நன்னனைப் போலத்தான் இந்த முதலாளி அவர்களுக்கு தெரிந்தது! "மண்ணிய சென்ற ஒண் நுதல் அரிவை புனல் தரு பசுங்காய் தின்ற தன் தப்பற்கு ஒன்பதிற்று ஒன்பது களிற்றொடு அவள் நிறை பொன் செய் பாவை கொடுப்பவும் கொள்ளான் பெண் கொலை புரிந்த நன்னன் போல வரையா நிரையத்துச் செலீஇயரோ அன்னை ஒரு நாள் நகை முக விருந்தினன் வந்தெனப் பகை முக ஊரின் துஞ்சலோ இலளே." ராமுவின் பெற்றோர்களும் அழாக்குறையாக கெஞ்சியும் பார்த்தார்கள். முதலாளி அசையவில்லை. ராமுவை தன் கடைக்கு கொண்டுபோய், தொட்டாட்டு வேலை ஒரு மாதத்துக்கு செய்யும் படி பணித்தார், வேறு வழியில்லாமல், பெற்றோர்களும் சம்மதிக்க, ராமு அங்கு வேலை செய்யத் தொடங்கினான். இரண்டு நாள் கழிய, மீண்டும் அந்த இளைஞர் யுவதிகள் அங்கு வந்து, தம் கைவண்ணத்தை காட்டத் தொடங்கினார்கள், இதைக் கண்ட ராமு, பாய்ந்து அவர்களின் ஒருவனை பிடித்து விட்டான். அப்ப தான் முதலாளிக்கும், அங்கு வேலை செய்பவர்களுக்கும் உண்மை விளங்கியது. ராமுவின் நேர்மை புரிந்தது, உடனடியாக முதலாளி ராமுவைக் கூடிக்கொண்டு, அவனின் வீட்டுக்கு போய், தான் விட்ட தவறைக் கூறி மன்னிப்பு கேட்டதுடன், ராமுவின் நேர்மையை மெச்சி, அதற்கு பரிசாக, ராமுவை தானே தன் செலவில் படிப்பிக்க முன் வந்தார். ராமுவுக்கும் அவனின் பெற்றோருக்கும் பால் வார்த்தது போல் இருந்தது. "நேர்மை என்றும் மாய்வதில்லை உண்மை என்றும் ஓய்வதில்லை வஞ்சனை என்றும் வாழ்வதில்லை துணிவு என்றும் வீழ்வதில்லை பணிவு என்றும் தாழ்வதில்லை" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"எரியுண்ட நூலகம் / முருகேசு மயில்வாகனன்"
"எரியுண்ட நூலகம் / முருகேசு மயில்வாகனன்" யூத கவிஞரான ஹெயினின் வார்த்தைகள் இவை. “எங்கே புத்தகங்களை எரிக்கிறார்களோ, அங்கே ஈற்றில் மனிதர்களையும் எரிப்பார்கள்” எவ்வளவு உண்மை. Quoting from the Jewish poet Heinrich Heine. “Where they burn books, at the end they also burn people” How true is it.
-
"முட்டாள்கள் மௌனமாக இருப்பது புத்திசாலித்தனம், புத்திசாலிகள் மௌனமாக இருப்பது முட்டாள்தனம்!"
நன்றிகள் எல்லோருக்கும்
-
"முட்டாள்கள் மௌனமாக இருப்பது புத்திசாலித்தனம், புத்திசாலிகள் மௌனமாக இருப்பது முட்டாள்தனம்!"
"முட்டாள்கள் மௌனமாக இருப்பது புத்திசாலித்தனம், புத்திசாலிகள் மௌனமாக இருப்பது முட்டாள்தனம்!" இரண்டாயிரம் ஆண்டுகளிற்கு முன் வாழ்ந்த திருவள்ளுவர் இதைப்பற்றி என்ன கூறினார் என பார்ப்போமா ? குறள் 403: "கல்லா தவரும் நனி நல்லர் கற்றார் முன் சொல்லா திருக்கப் பெறின்." கற்றவரின் முன்னிலையில் ஒன்றையும் சொல்லாமல் அமைதியாக இருக்கப் பெற்றால் கல்லாதவர்களும் மிகவும் நல்லவரே ஆவார். கற்றவர்கள் முன் கல்லாதவர்கள் கற்கும் முனைப்புடன் மட்டுமே இருக்க வேண்டும். அவர்கள் முன் தனக்கு தெரிந்த அரை குறையானவற்றை பயனில்லாமல் பேசக் கூடாது என்பதே இதன் பொருளாகும் என நாம் கருதலாம். இதனால் தான் பாரதியார் "கூட்டத்தில் கூடிநின்று கூவிப் பிதற்ற லன்றி, நாட்டத்தில் கொள்ளா ரடீ! - கிளியே! நாளில் மறப்பா ரடீ" என்று பாடினாரோ? பொதுவாக "புத்திசாலிகள் வாய் மனதில் இருக்கும்; ,முட்டாள்கள் மனம் வாயில் இருக்கும்." ஆகவே புத்திசாலிகள் மௌனமாக இருக்கக் கூடாது என்பது வெளிப்படையே! அது போலவே "பூ மலர்ந்து கெட்டது, வாய் விரிந்து கெட்டது." ஆகவே முட்டாள்கள் மௌனமாய் இருப்பது நல்லது!! இப்ப நான் படித்த ஒரு கதையை கீழே தருகிறேன். மன்னர் புருஷோத்தமனுடைய மைத்துனன் மனோகரன் ஓர் அஞ்சா நெஞ்சன். தன் மனதில் தோன்றுவதை மறைக்காமல் எடுத்துரைப்பவன். மன்னரின் கருத்துக்கு எதிரான கருத்துக்களைக் கூற மற்றவர்கள் தயங்கும் போது, மனோகரன் அது தவறெனத் தோன்றினால் அவரை எதிர்த்து பேச தயங்க மாட்டான். ஒருநாள் சபையில் புருஷோத்தமன் தனது அரசாட்சியில் இளைஞர்களின் வேலையில்லாத் திண்டாட்டத்தைப் பற்றி அமைச்சர்களுடன் விவாதித்தார். அப்போது, "வேலையற்ற இளைஞர்களுக்கு மாதம் 30 வராகன்கள் உதவித்தொகை அளிக்கலாம் என்று நினைக்கிறேன்" என்றார். அமைச்சர்கள் அதைக் கேட்டு "ஆகா, அற்புதமான யோசனை" என்று பாராட்டினார்கள். ஆனால் மனோகரன் மட்டும், "இது மதியற்ற செயல். உதவித்தொகை அளிப்பதால் அந்த இளைஞர்கள் சோம்பேறி ஆகிவிடுவார்கள். இதை விடுத்து, அவர்களுடைய நிரந்தர வருமானம் தரும் வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்" என்று மன்னரின் கருத்துக்கு எதிர்மாறான கருத்தைக் கூறினான். சபையில் நடந்ததைக் கேட்டு சினமுற்ற ராணி தன் சகோதரனைப் பார்த்து, "மன்னனை விமர்சிக்க உனக்கு என்ன தைரியம்? இந்த ராஜ்யத்தை விட்டு இப்போதே வெளியேறு" என சீறி விழுந்தாள். ஆனால் அவளைத் தடுத்த மன்னர், "அவனைக் கோபிக்காதே ராணி. அவன் மனதில் பட்டதைக் கூறுகிறான். தன் கருத்துப்படி தான் மற்றவர்கள் நடக்கவேண்டும் என்று மன்னன் நினைப்பது தவறு. புத்திசாலிகள் கூறும் ஆலோசனைகளை பரிசீலித்து மக்களுக்கான திட்டங்களை வகுக்க வேண்டும். மனோகரன் புத்திசாலி. பொறுமையாக அவன் கூறுவதைக் கேட்போம்" என்றார். அவர் பொறுமையிழக்காமல் மனோகரனின் நலத்திட்டங்களைக் கேட்டு, அதை அப்படியே நடைமுறைப்படுத்தினார். அது முதல் நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் முற்றிலும் ஒழிந்தது. [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"The Burning of the Jaffna Public Library by the Police in 1981"
"The Burning of the Jaffna Public Library by the Police in 1981" In 1933, the same year the Nazis burnt large numbers of books that they considered ‘anti-German’, the idea of setting up a library in Jaffna was born. The Jaffna Public Library (JPL) would have celebrated its golden jubilee in 1983 had it not been burned down in 1981. Instead, June 2023 marked the 42 nd anniversary of that tragedy. 1933 was a difficult time in Sri Lanka. The economy was slow and unemployment was very high. Amid the gloom, one K M Chellappah, who worked for the district court in Jaffna, circulated an appeal in English and Tamil for “A Central Free Tamil Library in Jaffna”, and approached labourers, unions, teachers, authors, business people and prominent retirees for support. He insisted that the library would house not just a Tamil collection, but would also hold books in other languages. The idea caught on, and soon a seminal meeting of interested individuals passed a resolution agreeing that “a Central Free Tamil Library Association be formed with the original subscribers and others who are present at this meeting as original members of the Association”. With support in cash and kind flowing in from many quarters, the library was inaugurated on 1 August 1934 in a rented building on Jaffna’s Hospital Street. The initial collection was 844 books and 30 newspapers and periodicals. Professor S R Ranganathan, who at the time was the head of the library at Delhi University and considered the ‘Father of Library Science’ in India, advised the organisation of the collection and the library. Yet, it was a British clergyman named Father Long who helped to determine the library’s early success. He helped form the Jaffna Library Society, and secured cooperation from as far afield as the British Library and the library at Delhi University. Father Long also came up with a plan to establish a central library in Jaffna town, and to open branch libraries in all of Jaffna’s towns, village and colleges. In addition, there would be mobile libraries to cater to those areas the branches could not reach. The central library moved several times as the collection grew, but after some disagreement over a permanent location, construction began in the centre of Jaffna town in 1953. The new building opened on 11 October 1959. The library went from strength to strength, winning the support of successive Jaffna mayors and also raising funds through lotteries, carnivals and plays. The Jaffna Library had become more than an institution – it was a movement. By 1960, the library had amassed 16,000 books, a major collection of magazines in Tamil and English, and a large collection of manuscripts. Among these were remarkable historical materials such as early colonial accounts of Ceylon and commentaries on Tolkappiyam, the oldest grammar text in the Tamil language. In 1959, the library occupied 15,910 square feet and was bigger than the Colombo Library of the Metropolitan Sabha. It had a reference section, a section dedicated to novels, a children’s section, an acquisitions section, a lending section, a conference hall, and an exhibition hall with art galleries. It also had 33 staff and more than 17,000 members, and enjoyed the support of prominent Tamil scholars such as P Kumaraswamy and Arumuka Navalar, a revered Saivaite scholar whose collection of manuscripts was housed at the library. The burning: In the late-19th century the south of Ceylon saw the revival of Sinhala-Buddhist nationalism. In response, the Tamils in the north maintained a group consciousness by identifying themselves with their language, culture, territory and Hindu faith. The tensions culminated by the 1980s into an ethnic conflict that created tremendous hatred between the Sinhalese and the Tamils. On 1 June 1981, Sinhala police forces set the JPL on fire. Writing several years later, the scholar Nancy Maury recorded the extent of the damage: With several high-ranking Sinhalese security officers and two cabinet ministers, Cyril Mathew and Gamini Dissanayake (both self-confessed Sinhala supremacists) present in the town of Jaffna, uniformed security men and plainclothes thugs carried out some well organised acts of destruction. They burned to the ground certain chosen targets – including the Jaffna Public Library, with its 95,000 volumes and priceless manuscripts, a Hindu temple, the office and machinery of the independent Tamil daily newspaper Eelanadu. The Sinhalese police did not allow even a single sheet of paper to be rescued from the fire. Extremely rare items were lost, among them the only existing copy of the Yalpana Vaipavam (a history of Jaffna), miniature editions of the Ramayana, and microfilms of the Udhaya Tharakai, a bilingual journal published by missionaries in the early 20th century. The burning devastated all those associated with the library; Reverend David, an important scholar, reportedly died of shock upon hearing the news the next morning. Following the burning, A Amirthalingam, leader of the Tamil United Liberation Front and leader of the opposition at the time, spoke in the Sri Lankan parliament to name those who had masterminded the carnage and substantiated his statement with strong evidence. Yet the government, then under the presidency of J R Jayewardene, showed no interest in holding a serious inquiry. In Tamil Nadu, newspapers did not report the burning for several days, probably due to censorship by government officials in Jaffna. The Hindu noted on 6 June 1981 that “a public library with its entire collection of books has been burnt”, and on 13 June it quoted Amrithalingam saying that the library had held “95,000 volumes, some of which were rare and centuries old”. The Dinamani, a Tamil daily from Chennai, reported the burning on 3 June 1981, but that report was overshadowed by coverage of the riots and subsequent curfew in Jaffna, where many other buildings had also been set on fire. Only on 5 June did the newspaper give any significant attention to the loss of the JPL. But the coverage could never transmit the scale of the loss, and many Tamils outside Jaffna remained unaware of the massive blow to Tamil heritage.
-
"யாழ்ப்பாணப் பொது நூலக எரிப்பு"
திருமதி ரூபவதி நடராஜா, எரிக்கும் பொழுது அங்கு கடமையாற்றிய முன்னைய தலைமை நூலகர், யாழ்ப்பாணம் பொது நூலகம் மற்றும் சந்தரெசி சுதுதுங்க, இன்றைய சிங்கள இலக்கிய கவிஞர். எழுத்தாளர், தொல்லியல் ஆய்வாளர் - இருவரும் யாழ் நூலக எரிப்பு பற்றி தமிழிலும் [யாழ்ப்பாணம் பொது நூலகம், அன்றும் இன்றும்] சிங்களத்திலும் [“தீப்பற்றிய சிறகுகள்", கவிதை தொகுப்பு - இதன் தமிழாக்கம் விரைவில் வரவுள்ளது] எழுதியுள்ளார்கள். வடக்கினதும் தெற்கினதும் ஆதங்கம் இங்கு தென்படலாம் என்று எண்ணுகிறேன்?, என்றாலும் நான் சிங்களம் தெரியாததால், ரூபவதி நடராஜாவின் புத்தகம் மட்டுமே வாசித்து உள்ளேன், தமிழாக்கம் வந்த பின்பே சந்தரெசி சுதுதுங்கவின் கவிதையையும் வாசிப்பேன். திருமதி ரூபவதி நடராஜா வை அவரது மகனின் வீட்டில் சந்தித்து, புத்தகம் வாங்கும் பொழுது எடுத்தப்படம் கீழே இணைத்துள்ளேன் என் எண்ணத்தில் "யாழ்ப்பாணப் பொது நூலக எரிப்பு" ஒரு கட்டுரையாக கீழே சமர்ப்பிக்கிறேன். ................................................................................................................................................................................ "யாழ்ப்பாணப் பொது நூலக எரிப்பு" 'ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால் அவர்களின் மொழியை அழிக்க வேண்டும்' 'ஒரு மொழியை அழிக்க வேண்டும் என்றால் அவர்களின் நூல்களை அழிக்க வேண்டும்' யாழ்ப்பாண பொது நூலகம் 1933 ம் ஆண்டு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு, பல காலங்களை கட்டம் கட்டமாய் கடந்து ஒரு சாதாரண தொடக்கத்திலிருந்து உள்ளூர் குடிமக்களின் பல உதவிகளுடன் காலப்போக்கில், ஒரு முழுமையான நூலகமாக மாறியது. இந்த நூலகம் பனை ஓலை கையெழுத்துப் பிரதிகளில் எழுதப்பட்ட காப்பகப் பொருட்களின் களஞ்சியமாகவும், முக்கியமான வரலாற்று ஆவணங்களின் அசல் பிரதிகள் மற்றும் நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு யாழ்ப்பாண தீபகற்பத்தில் வெளியிடப்பட்ட செய்தித்தாள்களின் பொக்கிஷமாக மாறியது. இதனால் இது ஈழத்தமிழர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாக மாறியது. பல நாட்டு மக்களின் கண்ணை கவர்ந்த கட்டிடக்கலை அமைப்புடன் ஆசியாவிலேயே பிரமாண்டமாக வளர்ந்து அழகான காட்சி தந்தது. தமிழ் இலக்கியம், இலக்கணம், வரலாறு, விஞ்ஞானம், வைத்தியம், கலை, கலாச்சாரம் என்று மிகப் பெரியதொரு தமிழ் பொக்கிஷமாக, தமிழ் களஞ்சியமாக விளங்கிய தமிழ் பாரம்பரியத்தின் முத்து என்று புகழ்பெற்ற தெற்காசியாவின் மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றான யாழ்ப்பாண பொது நூலகம் 1981 ஆம் ஆண்டு மே 31 ஆம் திகதி நள்ளிரவுக்கு பின்னர் இலங்கை அரச அதிகாரத்தால், சிங்கள இன வன்முறைக் குழுவொன்றால் யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது 20ம் நூற்றாண்டின் இன, நூலழிப்புகளில் ஒரு மிகப்பெரும் வன்முறையாகக் கருதப்படுகிறது!. 97,000 க்கும் மேற்பட்ட மிக மிக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தமிழ் பனை ஓலைகள், கையெழுத்துப் பிரதிகள், காகிதத்தோல்கள், புத்தகங்கள், பத்திரிகைகள் மற்றும் செய்தித்தாள்கள் இன்னும் பல அரிய தமிழனித்தின் தனித்துவமான நூல்கள் எரித்து அழிக்கப்பட்டது. அத்தோடு யாழ்ப்பாண வைபாவாமாலை (யாழ்ப்பாணத்தின் வரலாறு) போன்ற மிக முக்கியமான வரலாற்று நூல்கள் நூலகத்தில் எரியூட்டப்பட்டது. மே 31 ம் திகதியில் இருந்து ஜூன் 1 ம் திகதி வரை இரண்டு நாட்கள் தொடர்ந்து எரிந்து சாம்பலாகிப் போனது தமிழினத்தின் வரலாற்று சரித்திரம். இலங்கை யு.என்.பி ஆட்சிக்காலத்தில் மாவட்ட அபிவிருத்தி கவுன்சில் தேர்தல்கள் நடை பெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதி அது, முன்னதாக, மே 31 ம் திகதி, TULF (தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி) நடத்திய பேரணியில் மூன்று சிங்கள காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டனர். அன்றிரவு அரச அதிகாரிகளும் காவல்துறையும் துணைப்படைகளும் மூன்று நாட்கள் நீடித்த ஒரு படுகொலையைத் தொடங்கினர். யாழ்ப்பாண நகரம் முழுவதும் உள்ள வீடுகளும் கடைகளும் அழிக்கப்பட்டது, TULF கட்சியின் தலைமை அலுவலகம் அழிக்கப்பட்டது, ஈழநாடு பத்திரிகை அலுவலகங்கள் அழித்து ஒழிக்கப்பட்டது, கோயில்கள் அழிக்கப்பட்டது, அதுமட்டும் இல்லாமல் பல தமிழர்களின் உயிர்களும் பறிக்கப்பட்டது. நான்சி முரே, (Nancy Murray) என்னும் ஒரு மேற்கத்திய எழுத்தாளர், தனது கட்டுரையில் "அந்த நேரத்தில் சீருடை அணிந்த பாதுகாப்புப் படையினர் மற்றும் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட துணைப்படைகள், குண்டர்கள் என பலர் இந்த அழிவுச் செயல்களைச் செய்தார்கள்” என்று எழுதியிருந்தார். அதுமட்டுமின்றி யாழ்ப்பாண நகரில் பல உயர் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் குறிப்பாக சிங்கள அமைச்சரவை அமைச்சர்களான சிரில் மேத்யூ மற்றும் காமினி திசானாயக்கே ஆகிய இருவரும் யாழ்ப்பாணத்தில் இருந்தனர் என்பதை அவர் சுட்டிக்காட்டி இருந்தார். அமெரிக்காவின் கண்காணிப்புக் குழுவின் தலைவரும், ஆம்னஸ்டி இன்டர்நேஷனலின் (Amnesty International) 1982 ஆம் ஆண்டு இலங்கைக்கான உண்மை கண்டறியும் பணியின் தலைவருமான ஆர்வில் எச். ஷெல் (Orville H. Schell) கருத்துப்படி, அந்த நேரத்தில் யு.என்.பி அரசாங்கம் மே மற்றும் ஜூன் மாதங்களில் இந்த கொலைகளுக்கு பொறுப்பேற்க ஒரு சுயாதீன விசாரணையை அரசாங்கம் ஏற்படுத்தவில்லை என்றும், மற்றும் பொறுப்பானவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். தமிழ் இனம் கட்டி உருவாக்கிய ஒரு அழகிய ஒரு அறிவு கூட்டை எரியூட்டியது மட்டுமன்றி இரண்டு நாட்கள் தொடர்ந்து எரிந்த நூலகத்தை சிங்கள அரசு கண்டும் காணாமலும் கைவிட்ட தோடு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தது தான் மிகவும் வேதனைக்குரிய விடயம். நாற்பத்தி மூன்று ஆண்டுகள் கடந்து போயும், ஆறாத வடுக்களுடனும் தீராத தீக்காயங்களுடனும் தமிழனித்தின் சாட்சியமாய் யாழ்ப்பாண பொது நூலகம் இன்றும் நீதிக்காக காத்துக்கிடக்கிறது. இதே போன்ற ஒரு செயல் ஒன்றையே, மீட்பவர் [இரட்சகர் ] போல வந்து சேர்ந்த ஸ்பானிய கிருஸ்தவ மதகுரு டியாகோ டி லாண்டாவும் (Diego de Landa) மாயாக்களுக்கு எதிராக செய்தார். இனப்படு கொளையாளிகள் என்றதும் ஹிட்லர் மற்றும் முசோலினியின் உருவங்கள் உடனடியாக நம் நினைவுக்கு வருகிறது. ஆனால் இவர்களைக் காட்டிலும் குரூரமான பலரை வரலாறு கண்டிருக்கிறது. அப்படி ஒருவரே ஸ்பானிய மதகுரு, டியாகோ டி லாண்டா ஆவார். மதம் போதிக்க மதியிழந்து வெறியனாக ஒரு நாகரீகத்தையே அழித்தவர் இவர் ஆவார். வானியல், அறிவியல், கணிதவியல், விவசாயம் என மாயன் பல ஆயிரம் ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து அனைத்தையும் புத்தகங்களாக எழுதி வைத்திருந்தனர் மாயாக்கள். எழுதி வைத்திருந்த ஆயிரக் கணக்கான நூல்களை, ஸ்பானிய இராணுவத்தின் உதவியுடன் மொத்தமாகத் தீயில் போட்டுக் கொளுத்தினார் லாண்டா. இவரால் அழிக்கப் பட்ட நூல்கள் அனைத்தும், விலை மதிப்பற்ற , மீண்டும் பெறமுடியாத களஞ்சியமாகும் . அவை எல்லாம் இன்று எமக்குக் கிடைத்திருக்கும் என்றால், உலகின் பல இரகசியங்களுக்கும், ஆச்சரியங்களுக்கும் விடை கிடைத்திருக்கலாம் அல்லவா ? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பி கு: இந்த நூலகம் தான் ,நான் யாழ் மத்திய கல்லூரியில் - சாதாரணம், உயர் வகுப்பு மற்றும் பல்கலைக்கழக விடுதலைக்காலத்தில் பாவித்த நூலகமும் ஆகும்.
-
"மனக்கதவை திறவுங்கள் மாற்றம் உனதாகும்"
"மனக்கதவை திறவுங்கள் மாற்றம் உனதாகும்" "மனக்கதவை திறவுங்கள் மாற்றம் உனதாகும் உங்கள் எண்ணத்துக்குள் அவை வெளிப்படட்டும் கட்டுகளை விடுவித்து சங்கிலிகளை உடைத்து உங்கள் மனம் திறந்தவெளியில் உலாவட்டும்!" "திறந்த இதயத்துடனும் திறந்த மனதுடனும் மாற்றம் மென்மையாக அன்பாக அமையட்டும் எதிரியை விட நண்பனை அறிந்தால் புதிய மாற்றம் புரிந்து வளரும்!" "மனதைத் திறந்து தன்பாட்டில் பறக்கவிட்டால் எதிர்காலத்தை தழுவி புதியதை வரவேற்றால் உங்கள் கனவுகள் விரைவில் நனவாகும் தேடிய எதிர்பார்ப்பு தானாக திறக்கும்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
'தேசபக்திக்கும் இனவாதத்துக்குமிடையிலான எல்லையினை நிர்ணயித்தல்' (Demarcating Patriotism and Racism)
'தேசபக்திக்கும் இனவாதத்துக்குமிடையிலான எல்லையினை நிர்ணயித்தல்' (Demarcating Patriotism and Racism) 'தேசபக்திக்கும் இனவாதத்துக்குமிடையிலான எல்லையினை நிர்ணயித்தல்' (Demarcating Patriotism and Racism ) என்னும் கட்டுரையினை 'சிலோன் டுடே' (Cedylon Today) பத்திரிகையில் அமா ஹெச். வன்னியராச்சி ( Ama H. Vanniarachchy) எழுதியிருக்க்கின்றார். நல்லதொரு கட்டுரை. தற்போதுள்ள சூழலில் அனைவரும் வாசிக்க வேண்டிய கட்டுரை. இக்கட்டுரை சிங்களக் கவிஞை சந்திரசிறி சுதுசிங்கவின் (Sandarasee Sudusinghe ) புதிதாக வெளியான கவிதைத்தொகுதியான 'எரிந்த சிறகுகள்' ('ஹினி வான்டு பியாபத்' - Gini Wandu Piyapath) பற்றியது. இக்கவிதைகள் இலங்கையில் இன்னும் நீறு பூத்த நெருப்பாக எரிந்துகொண்டிருக்கும் இனப்பிரச்சினை, பதவிக்காக இனவாதத்தைத் தேசபக்தி என்னும் போர்வையில் பேசும் அரசியல்வாதிகள், யாழ் நூலக எரிப்பு, தீண்டாமை மற்றும் வரதட்சணைச் சமூகக்கொடுமைகள் போன்றவற்றை மிகவும் கடுமையாக விமர்சிக்கின்றது என்பதை இக்கட்டுரைவாயிலாக அறிந்துகொள்ள முடிகின்றது. பதவிக்காக தேசபக்தி என்னும் போர்வையில் இனவாதம் பேசும் ஆட்சிக்கட்டிலிருக்கும் அரசியல்வாதிகளை 'ஆளும் நரிகள்' என்று கவிஞை வர்ணிக்கின்றார் என்பதையும், அந்நரிகளே சொர்க்கத்தீவின் சீரழிவுக்குக் காரணமென மேலும் அவர் குற்றஞ் சாட்டுகின்றார் என்பதையும் மேற்படி கட்டுரை வெளிப்படுத்துகின்றது. கவிஞை சந்திரசிறி சுதுசிங்கவின் மேற்படி கவிதைத் தொகுதி (110 கவிதைகளைக் கொண்டது) விரைவில் தமிழில் வெளிவருமென்று எதிர்பார்ப்போம். ஆங்கிலக் கட்டுரையினையும், அதற்கான இணைப்பினையும் கீழே தரப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் வாசியுங்கள். (Ceylon Today) Demarcating Patriotism and Racism By Ama H. Vanniarachchy | Published: 2:00 AM Sep 25 2021 The little paradise island of the Indian Ocean, also known as a precious little pearl, has been in the hands of demons for almost seven decades. The essence of this little paradise has been brutally sucked out and the remaining left out to dry by these demons. Who are these demons? Are they unseen, supernatural beings? No, they are the ones who rule that little paradise island. As poetess Sandarasee Sudusinghe says in her latest book, Gini Wandu Piyapath, they are the ruling-jackals (palaka kanahilun) of the land. These ruling-jackals, power-hungry, would play any stunt to remain in power. As a part of their gruesome power game, they would even risk the lives of their subjects; the islanders. This is what exactly happened in the year 1981, when the Jaffna Library was set on fire, letting it burn down to ashes. This tragic shameless event, as Sudusinghe boldly says, was an act of those inhuman ruling-jackals. Racism in disguise of patriotism was the bait of these ruling-jackals. Burning Wings Published in 2021, Gini Wadunu Piyapath is a collection of 110 poems written by Sudusinghe. The book, is a rare attempt by any poet to be brutally honest about one true tragic incident that shook humanity, leaving an unforgettable deep wound, still burning, in the consciousness of the people of the island – the burning of the Jaffna Library. What I like the most about the poems is that they reveal the brutality of this incident and how it’s fumes are still burning, how no attempts were taken to extinguish the fire, and how it was a shameful act of the country’s dirty politics. Sudusinghe’s boldness and dedication to humanity touched my heart. Brutally honest Through 110 beautifully composed poetic and emotional poems which are presented through five chapters, Gini Wadunu Piyapath takes the reader on a tragic journey. I also loved how her poems ripped the myth of disguised patriotism that is deceivingly worn by politicians, which in reality is just hatred, greed for power, and racism. Maybe I said a little too much about the theme of the book. I suggest you read all 110 poems to make your heart weep in great grief and feel heavy with guilt and shame and at the same time, fear for your fate in the hands of the ruling-jackals. As Sudusinghe hints, gruesome and brutal acts such as the burning of the Jaffna Library could happen again, as this is all about the power game of politicians. As long as racism shines, they will enjoy power. When the fumes of racism and hatred are gone, and peace and unity come, no jackals shall be in power. Sudusinghe fiercely questions, how fair is it to punish books that are helpless and defenceless for something they have never done? She also questions why no attempt was made to heal the deep wounds caused by this brutal event, in the consciousness of the Tamil community as an attempt at peace and reconciliation. It also takes you on a journey revealing the birth, the growth, and the destruction of the Jaffna Library enlightening you about many facts that are not known by the masses. Sudusinghe through her fiery writing questions us on many things that we today sadly embrace as culture, blind faith, and politics. She questions, is development all about tall skyhugging buildings? How fair was it to kill people during the JVP riots? She also hints at how baseless the caste system that divides people is, and how fair is it to kill people in the name of religion? She also challenges patriarchy by questioning customs such as dowry and the black dress some women are forced to wear covering their entire body in the name of culture. Lamentation of the library Out of all the 110 poems, poem Number 101 is shockingly painful. It filled my eyes with tears. An agonising feeling of guilt filled my heart. This poem is written as a lamentation of the library. Father David, who couldn’t bear the sight of the burning library, embraced death out of a broken heart. Poem Number 81, portrays how the heart of Jeyapalan (a Tamil poet in Jaffna), beaten with unbearable agony and hurt, witnessed the burning library on that fateful night. These poems reveal how the flames of the burning library burnt the hearts of the Tamil community of Jaffna. Rising from the ashes The Jaffna Library, I felt, is like a Phoenix. It rose back to life from ashes, after a painful death. Today, it stands tall and proud as a landmark of our history, reminding us of its tragic past, silently, telling us that ‘cultural heritage’ should not be a victim of racism, violence, and terror. It also symbolises a tragic past that we all purposefully choose to ignore, instead of addressing issues and finding ways to heal wounds. I think Gini Wadunu Piyapath is a timely book that makes us understand that there is a grave difference between patriotism and racism, although in many instances they appear to confuse and mislead us. Sudusinghe reminds us of the importance of understanding this and embracing humanity and compassion regardless of religion, race, caste, gender, and politics. Gini Wadunu Piyapath is also a rare poetry book that is written in a research-based perspective, focusing on one single historic event and its social and political background. The poetess Sudusinghe is an archaeologist, journalist, writer, and poetess. She has written and published five books and Gini Wadunu Piyapath is her sixth book. A past student of Matara Mahamaya Girls’ School, Sudusinghe is a graduate of the University of Peradeniya. After completing her Bachelor’s degree in Archaeology, she became the recipient of the Maulana Asad Postgraduate Degree Scholarship and went to study Communication and Journalism at the Mysore University in India. She has also completed her Masters in Science from the Postgraduate Institute of Archaeology. She is currently studying for her Masters in Library Science at the University of Colombo. Her many travels in foreign lands and exposure to other cultures may have influenced her broad thinking and vision as a poetess.
-
"யுத்த வடுகளுக்கு மத்தியில் ஒரு காதல்"
"யுத்த வடுகளுக்கு மத்தியில் ஒரு காதல்" 25 ஆண்டுகால இனவாத யுத்தத்தின் போது, வடக்கு மற்றும் கிழக்கில் வைத்தியசாலை கட்டமைப்புகள் உட்பட அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் நாசமாக்கப்பட்டுள்ளதோடு அவை இன்றைய தேவைகளுக்கு ஏற்ப அபிவிருத்தி செய்யப்படவில்லை. அது மட்டும் அல்ல, 2009 இல் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட போரின் இறுதிக் கட்டத்தில் இராணுவத்தின் குண்டுத் தாக்குதல்களால் வன்னி பிரதேசத்தின் முழு உட்கட்டமைப்பும் தரைமட்டமாக்கப்பட்டு இரண்டரை இலட்சத்துக்கும் மேலானவர்கள் இராணுவம் நடத்திய முகாம்களில் அடைக்கப்பட்டதுடன் 40,000க்கும் அதிகமான தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. இந்த சூழலில் தான், போரினால் பாதிக்கப்பட்ட வவுனியா நகரில், குழப்பம் மற்றும் நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில், ஆர்வமுள்ள கலைஞரான ராஜன் மற்றும் ஒரு பாசமிக்க செவிலியரான சாந்தி ஆகிய இரண்டு இளம் உள்ளங்கள் மிகவும் எதிர்பாராத சூழ்நிலையில் அங்கு சந்தித்தனர். மலை நாட்டை சேர்ந்தவர் சாந்தி. அவர் வவுனியாவில் யுத்தம் மௌனிக்கப் பட்டதை அடுத்து, காயமடைந்தவர்களைக் குணப்படுத்தவும், துக்கப்படுபவர்களுக்கு ஆறுதலளிக்கவும் தனது அறிவையும் அனுபவத்தையும் பகிர, அங்கு அரசு சாரா அமைப்பு ஒன்றினால் தற்காலிகமாக நிறுவப்பட்ட ஒரு மருத்துவமனையில் பணியாற்ற முதல் முதல் வவுனியாவுக்கு நுவரெலியாவில் இருந்து அன்று தான் வந்தார். தமிழ் மணம் வீசும் மண்ணுக்குள் நுழைகிறோம் என்ற எண்ணம் கொஞ்சம் குதூகலமாய் அவளுக்கு இருந்தாலும், அடிபட்டு துவண்டு கிடக்கும் பூமிக்கு நெருங்குவதை நினைக்கும் போது அவளின் மனது முழுதும் இறுக்கம் பிணைந்து கிடந்தது என்பதே உண்மை. நல்ல இருட்டு சூழ்ந்து கிடந்தது. வரவேற்று அழைத்துச் செல்ல அரசு சாரா அமைப்பின் சார்பில் ராஜன் என்ற இளைஞன் வந்திருந்தான். ராஜன் ஒரு ஆர்வமுள்ள கலைஞன் ஆவான். அவன் தன்னைச் சுற்றியுள்ள வலியையும் துன்பத்தையும் வெளிப்படுத்த தனது படம் வரையும் ஆற்றலையும் கவிதைகள் வடிக்கும் திறமையையும் ஒரு வழிமுறையாகப் பயன்படுத்தினான். அவனது ஓவியங்கள் போரினால் பாதிக்கப்பட்டவர்களின் கதைகளை சித்தரித்து, விரக்தி, நம்பிக்கை மற்றும் காதல் போன்ற உணர்ச்சிகளைக் எடுத்துக் காட்டியதுடன், அவ்வற்றுக்கு ஏற்ற கவிதை வரிகள் மேலும் பார்ப்பவர்களின் மனதைக் கவர்ந்தன. இடிபாடுகள் மற்றும் பாழடைந்த கட்டிடங்களுக்கு மத்தியில், வவுனியா புகையிரத நிலையத்தில் இறங்கிய சாந்தியை ராஜன் வரவேற்றான். முதல் முதல் ராஜனின் பார்வை சாந்தியின் பார்வையை சந்தித்தது. "கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல" ஒருவர் கண்ணோடு மற்றொருவர் கண்ணும் பார்வையால் பேசிவிட்டால் அதற்கு பிறகு வாய்ச் சொற்களால் ஒரு பயனும் இல்லை. அது தான் அங்கு நடந்தது. இருவரும் ஒரு சில நிமிடம் பேச மறந்து விட்டார்கள். பொதுவாக காதல் உச்சரிக்க, உணர சுகமானது தான், ஆனால் பலருக்கு வாழ கடினமானது. பட்டாம்பூச்சிகள் பறக்க, தேனீக்கள் ரீங்காரம் பாட, மலரினும் மென்மையாக தொடங்கி, பல சந்தோசத் தருணங்களை அள்ளித் தருவது. இவர்கள் எப்படியோ? வரவேற்று அழைத்துச் செல்ல ராஜன் தயாராக இருந்தான். ஒல்லியான உருவங்களில் நகர் முழுதும் இலங்கைப் போலீசார் அல்லது ஆர்மி நின்று கொண்டிருந்தனர். யுத்தம் முடிவுற்ற பின்பும், ஏராளமானோர் கொல்லப்பட்டும் சிறை பிடிக்கப்பட்ட பின்பும், குறிப்பிட்ட இடைவெளியில் சாலையில் செல்லும் வாகனங்களை ஏனோ நிறுத்தி நிறுத்தி விசாரித்துக் கொண்டிருந்தனர். காவலர்களின் கண்களில் துளியும் சிநேகம் இருப்பதாகத் தெரியவில்லை. ராஜனையும் சாந்தியையும் நிறுத்தி சிங்களத்திலும் அரைகுறை தமிழிலும் விசாரித்தனர். ராஜனின் அடையாளம் முன்பே தெரிந்தது போல இருந்தது. அதுதான், யார் சாந்தி, ஏன், எங்கே அழைத்து கொண்டு போறாய் போன்ற கேள்விகளைக் கேட்டு விசாரித்தனர். ராஜனும் வாக்குவாதம் செய்து, அங்கிருந்து புறப்பட அனுமதியும் பெற்றான். ஆனால் அவனுக்கு உள்ள பிரச்சனை, சாந்தியை சந்தித்தது முதல், எப்படி இனி அமைதியாக உறங்குவதே? "துளி இடை மின்னுப் போல் தோன்றி, ஒருத்தி, ஒளியோடு உரு என்னைக் காட்டி, அளியள், என் நெஞ்சு ஆறு கொண்டாள்; அதற்கொண்டும் துஞ்சேன்," மழை பொழயும் காலத்தில் மின்னல் போல் ஒருத்தி தோன்றித் தன் ஒளி - உருவத்தை எனக்குக் காட்டி என் நெஞ்சு செல்லும் வழியை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டாள். அது முதல் எனக்கு உறக்கம் வரவில்லை என்ற நிலை தான் அவனுக்கு! அதன் பின், ராஜனின் மோட்டார் சைக்கிள், சாந்தியை பின்பக்கம் ஏற்றிக் கொண்டு வவுனியாவுக் ஊடாக ஏ-9 வீதியில் விரையத் துவங்கியது. சாலைக்குப் பக்கவாட்டில் புகையிரதத் தடமும் சமாந்தரமாக உடன் பயணித்து கொண்டு இருந்தது. குறிப்பிட்ட தூரத்துக்கு ஒரு பாதுகாப்பு குடில் என ஏ-9 வீதி மற்றும் புகையிரத தடம் ஓரம் இராணுவம் அமைத்து இருந்தது. இரண்டு பக்கமும் வயல் வெளிகள் வெறும் புற்கள் மூடி அகலமாகக் கிடந்தன. ஒவ்வொரு குடிலுக்குள்ளும் குறைந்தது இரண்டு இராணுவ வீரர்களாவது இருந்தனர். சாந்திக்கு எல்லாமே புதுமையாக இருந்தது. என்றாலும், குண்டுவீச்சுகளாலும் ஷெல்களாலும் உடைந்து பள்ளமும் குழியுமாக உள்ள வீதியால் மோட்டார் சைக்கிள் போகும் பொழுது ஏற்படும் குழுக்களும், அதனால் ராஜனின் முதுகுடன் நெருங்கி ஒட்டி உராஞ்சி போவதும் அவளுக்கு இன்னும் ஒரு புது உணர்வுகளையும் சொல்லிக் கொண்டே இருந்தது. அவனும் அதற்கு விதிவிலக்கல்ல. அவளோட கை ராஜனை வளைச்சு இறுக்கி இரண்டு பேருக்கும் இடையில் இடைவெளி இல்லாமல் போக, அந்த சுகத்தை, ஆனந்தத்தை அனுபவிச்சிகிட்டே அவனும் போனான். அவர்களுக்கு இடையே ஒரு சொல்லப்படாத தொடர்பு தானாக உருவாகத் தொடங்கியது. அவர்களைச் சுற்றி கொந்தளிப்பு இருந்த போதிலும், அன்பின் நுட்பமான தீப்பொறி பற்றவைக்கப்பட்டது. போரின் இருளால் கூட அணைக்க முடியாத சுடராக கொழுந்து விட்டு எரியத் தொடங்கின. போரால் சிதைந்த நிலப்பரப்பின் நிழலில் அவர்கள் ஒன்றாகக் கழித்தபோது, ராஜனும் சாந்தியும் தங்கள் சுற்றுப் புறத்தின் கடுமையான யதார்த்தங்களைக் கடந்து தங்களுக்குள் ஒரு நிலையான காதலைக் கண்டு பிடித்தனர். துப்பாக்கிச் சூடுகளின் எதிரொலிகள் மற்றும் காயமடைந்தவர்களின் அழுகைகளுக்குப் பதிலாக அமைதி வரும் எதிர்காலத்தைப் பற்றிய கனவுகளைப் தங்கள் தங்கள் வழியில் , நோக்கில் பகிர்ந்துகொண்டு, ஒருவருக்கொருவர் அந்த தேடலில் ஒரு ஆறுதல் கண்டனர். போர் ஓய்வு அடைந்தாலும் இன்னும் கைதுகளும், காணாமல் போவதும், மக்களின் காணிகள் திருப்பி கொடுக்காமல் அரசு வைத்திருப்பதும், காணிகள் இன்னும் பல காரணங்களுக்கு பறித்தெடுப்பதும் தீவிரமடைந்து கொண்டு இருந்தது. இந்த கொந்தளிப்புக்கும் பதற்ற சூழ்நிலைக்கும் இடையிலும் அவர்களின் காதல் தொடர்ந்து கொண்டு இருந்தது. அங்கே அமைதி மற்றும் நீதிக்கான விருப்பத்தை வெளிப்படுத்தும் மௌன எதிர்ப்பின் வடிவமாக ராஜனின் ஓவியங்கள் அமைந்தன. ஒரு செவிலியராக தனது கடமைக்கும் ராஜன் மீதான காதலுக்கும் இடையில் சிக்கிக் கொண்ட சாந்தி, தன் வாழ்க்கையின் இரு அம்சங்களையும் எனினும் சமப்படுத்திக் கொண்டு இருந்தாள். அவர்களின் போராட்டங்களுக்கும், தியாகங்களுக்கும், அவர்களின் அன்பின் நெகிழ்ச்சிக்கும் வவுனியா மௌன சாட்சியாக மாறியது. அவர்களின் காதல் கதை நம்பிக்கையின் அடையாளமாக மாறியது, கடினமான சூழ்நிலைகளில் கூட தாங்கும் அன்பின் சக்திக்கு அது ஒரு சான்றாக மாறியது. யுத்தம் இறுதியில் மே 2009 முடிவுக்கு வந்து இருந்தாலும் பல வடுகளை வவுனியாவில் விட்டுச்சென்றது என்பதை அவள் கடமை புரியும் மருத்துவமனையில் இருந்து சாந்திக்கு தெரியவந்தது. தங்கள் வாழ்க்கையையும் தங்கள் நகரத்தையும் மீண்டும் கட்டியெழுப்புவதற்கு மத்தியில், அவர்கள் அன்பு, அமைதி மற்றும் தங்கள் நிகழ் கால உறுதிமொழிகள் நிறைந்த எதிர்காலத்தின் படத்தை இதயத்தில் வரைந்தனர். நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"பண்டைய தமிழரின் செல்வம் பற்றிய சிந்தனை"
"பண்டைய தமிழரின் செல்வம் பற்றிய சிந்தனை" இன்று நாம் வாழ்க்கையை வாழ்வாங்கு வாழ்வதற்கும், வளமோடு வாழ்வதற்கும் வழிவகுப்பன, நம் முன்னோர்களின் வாழ்க்கை நெறிகள் ஆகும். இந்த நெறிமுறைகளைப் பத்திரப்படுத்தி அதன் மூலம் எம்மை இன்றும் பக்குவப் படுத்திக் கொண்டு இருப்பன பண்டைய சங்க இலக்கியங்கள் ஆகும். உதாரணமாக பெற்றோர் சேர்த்த செல்வத்தைச் செலவு செய்வோர் உயிருள்ளவராக மதிகக்கப்பட மாட்டார்கள் என்பதையும், பொருள் இல் வாழ்க்கைக்கு அடிப்படைத் தேவை என்பதையும், பகுத்துண்டு வாழ்தல் வேண்டும் என்பதையும், மற்றும் நாம் உழைத்து, அதில் கிடைக்கும் செல்வத்தையே நாம் பயன்படுத்தி, அடுத்தவருக்கும் உதவி செய்யப் பயன்படுத்த வேண்டும் என்பதையும் சில சங்க பாடல்கள் மூலம் அறியக் கூடியதாக உள்ளது. அப்படியான மூன்று பாடல்களை எடுத்துக் கட்டாக கிழே தருகிறோம். ஒன்று: குறுந்தொகை 283 "உள்ளது சிதைப்போர் உளரெனப் படாஅர் இல்லோர் வாழ்க்கை இரவினும் இளிவெனச் சொல்லிய வன்மை தெளியக் காட்டிச் சென்றனர் வாழி தோழி யென்றும் கூற்றத் தன்ன கொலைவேல் மறவர் ஆற்றிருந் தல்கி வழங்குநர்ச் செகுத்த படுமுடை பருந்துபார்த் திருக்கும் நெடுமூ திடைய நீரில் ஆறே." குறிப்பு: பாட்டனார் தேடி வைத்த பொருளைச் சிதைப்போர் உயிரோடு உள்ளவராகக் கருதுவது நம் தமிழர் மரபில் இல்லை என்பதாகும். தாமே தம் முயற்சியால் பொருள் ஈட்டாமல், முன்னோர் ஈட்டி வைத்துள்ள செல்வத்தைச் சிதைப்பவர்கள் செல்வமுடையோர் எனச் சொல்லப்பட மாட்டார்கள். நம் பெற்றோர் சேர்த்த செல்வத்தை நாம் செலவு செய்யும் போது, அந்த செல்வத்தின் மதிப்பை நாம் உணராமல் போகிறோம். தன் முயற்சியால் தேடாமல் வாழ்வது, இரந்து வாழ்தலை விட இழிந்தது என்று தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது. இப்பாடல் வழியாக மேலும் "பகுத்துண்டு வாழ்தல் வேண்டும்", "நாம் உழைத்து, அதில் கிடைக்கும் செல்வத்தையே நாம் பயன்படுத்தி, அடுத்தவருக்கும் உதவி செய்யப் பயன்படுத்த வேண்டும்" என்பதயும் அறியமுடிகிறது. இரண்டு: அகநானூறு 151 "தம் நயந்து உறைவோர்த் தாங்கி தாம் நயந்து இன் அமர் கேளிரொடு ஏமுறக் கெழீஇ நகுதல் ஆற்றார்நல்கூர்ந்தோர்! என மிகுபொருள் நினையும் நெஞ்சமொடு அருள் பிறிது ஆபமன் வாழி தோழி கால் விரிபு உறுவளி எறிதொறும் கலங்கிய பொறி வரிக் கலைமான் தலையின் முதல் முதற் கவர்த்த கோடல் அம் கவட்ட குறுங்கால் உழுஞ்சலி தாறு சினை விளைந்த நெற்றம் ஆடுமகள் அரிக் கோற் பறையின் ஐயென ஒலிக்கும் பதுக்கைத்து ஆய செதுக்கை நீழல் கள்ளி முள் அரை்ப பொருந்தி செல்லுநர்க்கு உறுவது கூறும் சிறு செந் நாவின் மணி ஓர்த்தன்ன தெண்குரல் கணிவாய் பல்லிய காடு இறந்தோரே!" குறிப்பு: சங்ககாலத் தலைவன் ஒருவனுடைய சிந்தனை இப்படி இருக்கிறது. பணம் [பொருள்] எதற்கு? அவரை விரும்பி வாழ்வோருக்கும், அவரால் விரும்பப்படுவோருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், நகைமுகம் காட்ட முடியாமல் வறுமையில் வாடுவோருக்கும் நல்கி அவர்களை வாழவைப்பதற்குப் பொருள் வேண்டுமாம்! இதனால் வரும் மகிழ்ச்சி ஒன்று, தாம் விரும்பும் சுற்றத்தாருடன் கூடிக் கலந்து இன்புறும் மகிழ்சி மற்றொன்று. இவ்விரண்டு மகிழ்ச்சிகளின் திறவுகோல் பொருள்! அதனால் பொருளைத் தேடவேண்டும்" அதாவது தன்னலத்தோடு பொதுநலச் சிந்தனையும் இங்கு கலக்கிறது. மூன்று: புறம் - 189 "தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும் நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான் கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும் உண்பது நாழி; உடுப்பவை இரண்டே; பிறவும் எல்லாம் ஓரொக் கும்மே; அதனால் செல்வத்துப் பயனே ஈதல்; துய்ப்பேம் எனினே, தப்புந பலவே'' குறிப்பு: எல்லோருக்கும் அடிப்படையானது உணவு, உடை, உறைவிடம் … போதும் என்று மனிதன் சொல்வது உணவுக்கு மட்டுமே! மானம் காக்கவே ஆடை அணிகிறோம்! உடுக்கப்படுபவை அரை ஆடை, மேலாடை என இரண்டே! இவை போல பிற உடல், உள்ளத் தேவைகளும் ஒன்றாகவே இருக்கும். உயிர்கள் யாவுக்கும் உணர்வுகள் பொதுவானது (உண்பது நாழி; உடுப்பவை இரண்டே) இந்த செயல்கள் பணக்காரனுக்கும் ஏழைக்கும் [அரசனுக்கும், ஆண்டிக்கும்] பொதுவானது. பெற்ற செல்வத்தைக் அடுத்தவருக்குக் கொடுப்பதே சிறந்த அறமாகும்.கொடுத்து வாழ்வோர் இறப்புக்குப் பின்னரும் வாழலாம்!! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"தமிழரின் உணவு பழக்கங்கள்" / "FOOD HABITS OF TAMILS"
"தமிழரின் உணவு பழக்கங்கள்" / "FOOD HABITS OF TAMILS" PART / பகுதி: 12 "பண்டைய சுமேரியரின் உணவு பழக்கங்கள் தொடர்கிறது"" / "Food Habits Of Ancient Sumer continuing" மெசொப்பொத்தேமியாவில் இருந்து ஒரு சில சமையல் செய்முறை மட்டுமே இன்று தப்பி பிழைத்துள்ளன. முக்கியமாக 7" X 9 .5 " அளவைக் கொண்ட, மூன்று பெரிய பாபிலோனிய களிமண் பலகையில் - கியூனிபார்ம் எழுத்துக்களில் - அவை ஓரத்தில் சிறிது சிதைவுண்டு இருந்தாலும் கூட - சுமார் 35 உணவு வகைகள் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை, அமெரிக்காவில் உள்ள யேல் பலகலைக்கழகத்தில் [Yale university] வைக்கப்பட்டுள்ளன. அவை யேல் பலகலைக்கழக பேராசிரியர்களால் கண்டு பிடிக்கப்பட்டதால், அவை யேல் சமையல் பலகைகள் என்றே அழைக்கப் படுகின்றன. இதுவே உலகின் மிகப் பழமையான சமையல் புத்தகம் ஆகும். என்றாலும் இந்த சிக்கலான, எளிதற்ற கியூனிபார்ம் எழுத்துக்கள் பாமர சுமேரியர்களால் அன்று வாசித்து இருக்க முடியாது. இவை, கியூனிபார்மை பற்றி சிறப்பாக எழுத வாசிக்க ஆண்டு கணக்காக படித்த எழுத்தர்களால் [scribes] மட்டுமே விளங்கிக் கொள்ளக் கூடியவையாக காணப் படுகின்றன. ஆகவே இந்த சமையல் குறிப்பு அல்லது நூல், சாதாரண சமையற்காரர் அல்லது தலைமைச் சமையற்காரருக்கு எழுதப்பட்ட வையாக அதிகமாக இருக்க முடியாது. எனவே, இது அன்று, 4000 ஆண்டுகளுக்கு முன்பு, நடைபெற்ற சமையலைப் பற்றிய ஒரு ஆவணமாக அல்லது தொகுப்பாக இருக்கலாம். இந்த சமையல் குறிப்புகள் மிகவும் விரிவாகவும் ஆனால், அபூர்வமான, அரிதான கூட்டுப் பொருள்களை கொண்டதாகவும் இருக்கிறது. ஆகவே இவை மெசொப்பொத்தேமியாவின் அரண்மனைக்கான சிறப்பு உணவாக அல்லது மேல் தட்டு வர்க்கத்தினருக்கான அல்லது கோயிலின் மடைப்பள்ளியில் தயாரிக்கும் மத பிரசாதத் திற்க்கான, சிறப்பு [விசேஷ] கால, சிறப்பு சமையல்களாக இருக்கலாம் என ஊகிக்கப் படுகிறது. என்றாலும் யேல் சமையல் பலகைகளில் உள்ள சமையல் குறிப்புகளை இன்று முற்றாக புரிந்து கொள்வதில் மிகவும் சிரமம் காணப் படுகிறது. காரணம் இந்த களிமண் பலகை உடைந்த, சிதைந்த நிலையில் உள்ளதும், இதிலுள்ள வார்த்தைகள், மொழி நமக்கு புரியாததாக, பரிட்சயம் அற்றதாக உள்ளதும், மேலும் அந்தக் கால மக்கள் சமையல் செய்த கூட்டு பொருட்கள் பற்றி நாம் முழுமையாக அறியாது இருப்பதும் ஆகும். அது மட்டும் அல்ல, இந்த சமையல் குறிப்பில், சமைக்கும் நேரம், சமையலுக்குத் தேவையான பொருட்களின் அளவு போன்றவை காணப்படவில்லை. ஆகவே இது ஒரு கை தேர்ந்த சமையல்காரருக்காக தயாரிக்கப் பட்டது போல் தோன்றுகிறது. என்றாலும் - உயிரியல், விஞ்ஞானம், தொல்பொருள், இலக்கியம் சார்ந்த ஒரு ஊகத்தின் அடிப்படையில் - அங்கு குறிக்கப்பட்ட கூட்டு பொருள்கள், இன்று ஓரளவு அடையாளம் காணப்பட்டுள்ளன. அசிரியன்கள் [Assyrian] பற்றி ஆராயும் பிரெஞ்சு நாட்டின் ஜீன் போட்டீரோ (Jean Bottero), என்ற ஆராய்ச்சியாளர், மார்ச் 1985 ல் அருங்காட்சியக பத்திரிகை ஒன்றில் உலக மக்களுக்கு பேட்டி அளிக்கும் போது, இதிலுள்ள தகவல்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தி மயக்க மடையச் செய்கின்றன என்றும், சமையல் குறிப்பில் அவர்களின் செல்வ வளம், துல்லியமாய் சமைத்தல், நெளிவு சுளிவுகள், ஆடம்பரமான நுணுக்கங்கள் போன்றவற்றைத் தெள்ளத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன என்றும், அந்த ஆதிகாலத்திலேயே இத்தனை தகவல்கள் சொல்லப்பட்டிருப்பது மிகவும் ஆச்சரியமான ஒன்று என்றும் குறிப்பிட்டுள்ளார். இப்போது, இன்றைய நவீன உலகில், பெண்ணோ ஆணோ பொதுவாக சமையல் புத்தகம் இல்லாமல் சமைப்பதில்லை. ஏராளமான சமையல் புத்தகங்கள், சஞ்சிகைகள் பரந்த அளவில் காணப்படுகின்றன. ஆனால் எமது பாட்டியை, பாட்டனை கேட்டால், அவர்கள் எள்ளி நகையாடுகிறார்கள்? அப்படி என்றால், உண்மையாகவே, சமையல் புத்தகம், சமையல் குறிப்பு முன்பெல்லாம் எழுதப்படுவதில்லையா? அதெல்லாம் இல்லை. கிட்டத்தட்ட நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, இந்த நாளாந்த சமையல்கள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மேலும் யேல் சமையல் குறிப்புகளில் ஒன்று மட்டும் தெளிவாகவும், பொதுவானதாகவும் உள்ளது. அதாவது எல்லா உணவிலும் கோழி, மரக்கறிகள், தானியம் மற்றும் தண்ணீர் என்பவை பயன்படுத்தப் பட்டுள்ளது. இதற்கு முன்பு பொதுவாக, நேரடியாய் நெருப்பில் போட்டு அல்லது சுட்டு அல்லது எதாவது பாத்திரம் மாதிரி ஒன்றில் வதக்கி அல்லது வறுத்து அல்லது தீத் தணலில் புரட்டி புரட்டி வாட்டி தமது உணவுகளை தயாரித்தனர். அதன் வளர்ச்சியாகத் தான், இந்த நீரில் போட்டு சமைப்பது நாளடைவில் பரிணமித்து இருக்கலாம். உதாரணமாக கி மு 1750 ஆண்டை சேர்ந்தது என கருதப்படும், முதலாவது யேல் சமையல் பலகை, YBC 4644, 25 சமையல் செய்முறைகளை கொண்டுள்ளது. இவை 21 புலால் துவட்டலும் [மெதுவாக வேகவைத்த சமையல் / stews] 4 காய்கறி துவட்டலும் ஆகும். இந்த சமையல் குறிப்பு கலக்கும் அல்லது சேர்க்கும் மூலப் பொருட்களின் பட்டியலையும் அது எந்த வரிசையில் சேர்க்கப்பட வேண்டும் என்பதையும் தருகிறது. ஆனால் எவ்வளவு, எவ்வளவு நேரம் போன்ற தரவுகள் அங்கு காணப்படவில்லை. இரண்டாவது யேல் சமையல் பலகை, YBC 8958 ஆகும். இது 7 சமையல் குறிப்புகளை விரிவாகத் தருகிறது. சமையல் பலகை பல இடங்களில் முறிந்து காணப்படுவதுடன் இரண்டாவது சமையலின் பெயர் காணப் படவில்லை. ஆனால் இது ஒரு சின்னப் பறவை ஒன்றில் சமைத்த உணவு. அதிகமாக அந்த பறவை கௌதாரியாக [partridges / a short-tailed game bird with mainly brown plumage, found chiefly in Europe and Asia] இருக்கலாம் என அறிஞர்களால் ஊகிக்கப்படுகிறது. {{கிருஸ்துக்கு முன்னான, சிங்கள இனம் என ஒன்று தோன்றாதா இலங்கையை நாம் கருத்தில் கொள்ளும் பொழுது, டாக்டர் தேரணியகல [Deraniyagala] அவர்களால் பண்டைய இலங்கை வேட்டைக்காரர்கள் மற்றும் உணவு சேகரிப்பாளர்கள் எப்படி உணவு தயாரித்தார்கள் என்பதை ஒரு படம் மூலம் எடுத்துக் காட்டியது ஒரு நல்ல சான்றாக உள்ளது [பலாங்கொடை மனிதன் / படம் - 01]. அதே போல, தொல்பொருளியல் பிரிவின் பேராசிரியர் ராஜ் சோமதேவ [Dr Raj Somadeva], தன் ஆய்வின் பொழுது பண்டைய ஒரு வீட்டின் சமையலறை ஒன்றை உடவளவை குன்றில் உள்ள, ரஞ்சமடம [Ranchamadama in Uda Walawe hillock] என்ற இடத்தில் கண்டு பிடித்தார். அங்கு சமையலில் இருந்து கரி எடுக்கப்பட்டு C 14 யை ஆராய்ந்த பொழுது, இது கி மு 1000 ஆண்டு என கணக்கிடப் பட்டது. அந்த பண்டைய சமையல் அறையில், அந்த வீட்டு பெண், உணவு தயாரிக்க பாவித்த அரைத்தல், கலத்தல் போன்றவைக்கான [Grinding, mixing and blending etc] பாத்திரங்கள் அல்லது கருவிகள் அவர் வெளியிட்டுள்ளார் [ படம் - 02] இவைகள் எல்லாம் இலங்கையின் பண்டைய சமையல் முறை பற்றி அறிய உதவியாக உள்ளது. அது மட்டும் அல்ல, அந்த அகழ்வின் பொழுது, மான் மற்றும் கடமான்களின் [Deer and Moose] எச்சமும் கண்டு பிடிக்கப் பட்டது. எழுத்துருவில், பண்டைய காலத்தில் பதியப்பட்ட இலங்கை உணவு பற்றிய செய்தி ஒன்றும் மகாவம்சத்தில் காணப்படுகிறது. மகாவம்சம், அத்தியாயம் 7. 21 இல் "இவர்கள் பசித்து இருக்கிறார்கள் என்று அவன் [விஜயன்] சொன்னதும், தன்னால் விழுங்கப்பட்ட வர்த்தகர்களின் கப்பலில் இருந்த அரிசியையும் இதர பொருட்களையும் அவள் [குவேனி] அவர்களுக்கு காட்டினாள் என்கிறது. அதை தொடர்ந்து அவர்கள் சுவையூட்டும் பொருள்களுடன் சோறு ஆக்கி எல்லோரும் உட்க்கொண்டார்கள். பண்டைய கல்வெட்டுகளில் இருந்து அந்த சுவையூட்டும் பொருள்கள் அதிகமாக, மிளகு மற்றும் உப்பை விட, மேலும் மஞ்சள், இலவங்கப்பட்டை [கறுவா], இஞ்சி போன்றவையும் அடங்கும் எனத் தெரிய வருகிறது.}} நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி : 13 தொடரும் "FOOD HABITS OF TAMILS" PART: 12 "Food Habits Of Ancient Sumer continuing" Out of the cuisines of ancient Mesopotamia, the oldest known written recipes, which are known as Recipe tablets from the Yale Babylonian Collection, Only very few recipes are survived today. They are 35 recipes incised on three clay tablets that form part of the Yale Babylonian collection, Now held at Yale university, containing recipes in Akkadian, contain a recipe for meat stew, and actually a team replicated the recipe at an exhibition at NYU in 2018, Probably originating from southern Mesopotamia. These tablets created in1650 to 1750 BCE, plus a additional recipes written much later. The cuneiform writing system was complex and generally only scribes who had studied for years could read and write, such as the selected government bureaucrats, priests, and merchants. so it is unlikely that the cookbooks were meant for the ordinary cook or chef. Instead, they were written to document the current practices of culinary art or Recipes to religion. In Mesopotamia, Caring for the gods was an important government obligation and food was offered daily by priestly bureaucrats acting on behalf of the king, The recipes are elaborate and often call for rare ingredients. Therefore, We may assume that they represent Mesopotamian haute cuisine meant for the royal palace or formal "Culinary Liturgy" for religious offerings. Further, We can assumed that, They simply had reasons to write down their recipes, as these recipes - as we pointed out - were intended for use in a religious context and to maintain uniformity across all temples. They are all for versions of a meat-in-sauce dish which would be served to a god in his temple, accompanied by bread (probably mixed barley and wheat) and date cakes, etc. The god (probably Marduk in this instance, as he was the city god of Babylon) would eat behind closed curtains. Leftovers would go to the king. It was only in 1995 that Bottero published a full translation and commentary; and discussion will no doubt continue. It does seem clear, however, that these fragments of evidence should not be interpreted as reflecting the food of the common people of the time.There are also other several sources you can use to find information on the foods, agricultural practices, and dining customs of ancient world to understand deeply and clearly. These Yale tablets are damaged and contain words that scholars have been unable to translate. They are difficult guides because so many parts are missing. Nonetheless, They are the single best evidence of how dishes dating back to about 4000 years might have been prepared. Most of the recipes were now by guesses based on scientific, archaeological, biological and other literary evidences. The present state of the research tells only little about the sauces, seasonings and condiments used in Mesopotamian cookery. One thing is sure, that without writing, recipes cannot survive. Yet the absence of written recipes does not rule out an interest in gastronomic matters of the existence of sophisticated culinary techniques. For example, the ancient Egyptians apparently felt no need to write down their recipes, yet we find instructive traces of their cooking methods in tombs dating from as early as the fourth millennium. From stone tablets to digital ones, recipes have always been an essential part of cooking. Cookbooks may be general, or may specialize in a particular cuisine or category of food. may be written by individual authors, who may be chefs, cooking teachers, or other food writers; they may be written by collectives; or they may be anonymous. A question I’ve asked myself many times is: ‘how will technology impact cookbooks?’ Will they become obsolete, or will there always be space for food-stained volumes of recipes stacked on a kitchen shelf? However, Ask any food lover what books lie on their bedside table, and you’re almost guaranteed that at least one will be a cookbook. Yes, Mesopotamian priest or chief cook probably kept all these clay tablets on his bedside which demonstrate Recipes for meat and vegetarian dishes, and a few stews. The first tablet YBC 4644, includes 25 recipes for stews, 21 are meat stews and 4 are vegetable stews. The recipes list the ingredients and the order in which they should be added, but does not give measures or cooking time - they were clearly meant only for experienced chefs. the second tablet, YBC 8958, has seven recipes which are very detailed. The text is broken in several places and the name of the second recipe is missing, but it is a dish with small birds, maybe partridges. {{When we consider pre Christian Srilanka's food habits, Before the evaluation of Sinhala race from the combination of Arians and Dravidians [Tamils], we find a sketch of how the ancient hunters and food gatherers cooked their meals by Dr Deraniyagala [Balangoda Man / Photo - 01 ] and Also Dr Raj Somadeva discovered an ancient House with a kitchen at Ranchamadama in Uda Walawe hillock, the charcoal off the cooking was C 14 dated to over 1000 BC. The utensils used by the lady of the house for preparation [Grinding, mixing and blending etc] of food was published by him [Photo - 02] Remain of Deer and Moose was also found during the excavations, which included fired pottery and beads, perhaps worn by the lady of the house. Small quartz cutters and scrapers were also found, these were used for preparation and eating of food such as meat and fruits etc. The earliest written mention of food was in the Mahavamsa Chapter 7.21, the circumstances under which the first meal taken by the Vijaya [500 BC] and his men as described: "When he [Vijaya] said, ‘These men are hungry,’ she [Kuveni] showed them rice and other (food) and goods of every kind that had been in the ships of those traders whom she had devoured. (VIJAYA’s) men prepared the rice and the condiments, and when they had first set them before the prince they all ate of them" The condiments available to flavour food other than pepper and salt are such as Turmeric, Cinnamon, Ginger etc. as mentioned in inscriptions and ancient text.}} Thanks [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] PART : 13 WILL FOLLOW
-
"நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா?" [சீரழியும் சமுதாயம்]
"நவீன சமுதாயம் வீழ்ச்சியடை கிறதா?" [சீரழியும் சமுதாயம்] பகுதி: 11 2]குடும்ப முறிவு அல்லது குடும்ப செயலிழப்பு [The Collapse Of The Family] எந்த நபரின் அல்லது எந்த ஒரு குழுவின் வாழ்வி லும் குடும்பமே அவரின் அல்லது அவர்களின் முதலாவது சமூக குழுமம் ஆகும் [social community]. இங்கு தான் தம்மை பிணைச்சு, கலாச்சாரத்தின் மதிப்புகளை புரிந்து கொள்ளுவதுடன், சமூக நடத்தை அனுபவத்தையும் [social behavior] பெறுகிறது. இந்த குடும்பத்தில் தான், தமது முதல் இன்பத்தையும் மற்றும் துன்பத்தையும் கண்டு அனுபவிக்கிறது. இவைகள் எல்லாம், பின் பரந்த உலகிற்கு முகம் கொடுக்க அந்த நபருக்கு உதவுகிறது. எனவே குடும்பம் என்பது, தனிநபர்கள் ஈடுபடும் வெறும் நடவடிக்கைகள் அல்ல, இது ஒரு சிக்கலான சமூக அமைப்பு ஆகும். இங்கு குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் ஒரு தன்னேரில்லாத தனிச் சிறப்புப் பண்பு கொண்ட உறுப்பினராகவும் அந்த முழு குடும்பத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகவும் உள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது. ஒரு சில தசாப்தங்களின் இடைப் பட்ட காலத்தில், பெற்றோர் பிள்ளைகளுடன் பாட்டி, தாத்தா, அத்தை, மாமாக்கள் என பாரம்பரிய நீட்டிக்கப் பட்ட குடும்பம் [traditional extended family] இருந்தது. இன்று அது சுருங்கி தனிக் குடும்பமாகவும் சிலவேளை ஒற்றை பெற்றோர் குடும்பமாகவும் குறைந்து விட்டது என்று ஆய்வுகள் காட்டுகின்றன. திருமணம் செய்த ஒரு ஆணும் பெண்ணும் அவர்களின் குழந்தைகளும் ஒரு குடும்பம் என பழைய வரையறை கூறுகிறது. அவர்களுடன் சில வேளை பாட்டன் பாட்டியும் அடங்கும். என்றாலும், அந்த வரையறை பல ஆண்டுகளுக்கு முன், அதிகமாக வழக்கொழிந்து விட்டது. இன்று காலத்தின் மாறுதலையும் கவனத்தில் கொண்டு குடும்பம் என்பதற்கு ஓரளவு விட்டுக் கொடுப்புகளுடன் புதிய வரையறை செய்யப் பட்டுள்ளது. அதாவது குடும்பம் என்பது எந்த பாலினத்தையும் கொண்ட, திருமணம் செய்த அல்லது செய்யாத இரு பெற்றோர்களை அல்லது சிலவேளை மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட பெற்றோர்களை கொண்டதாகவும், இருவருக்கும் அல்லது ஒருவருக்கு பிள்ளைகள் பிறந்ததாகவும், அல்லது அவர்களில் எவருக்கும் பிறக்காத தத்து எடுத்த பிள்ளைகளாகவும் இருக்கலாம் என்று கூறுகிறது. பொதுவாக, திருமணம் சார்ந்த குடும்பம் ஒரு நல்ல சமுதாயத்தின் அடித்தளமாகும். இதை எமக்கு வரலாறு போதித்துள்ளது, உதாரணமாக, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட, சங்க காலத்திலேயே திருமணம் என்ற சடங்கு ஆரம்பித்து விட்டதாக தொல்காப்பியர் மூலம் அறிகிறோம். தலைவன் தலைவியரிடையே பொய்யும், வழுவும் தோன்றிய பின்னர் ஆன்றோரும், சான் றோரும் சடங்குகளை வகுத்து, வரையறைகளை அமைத்தனர் என்று ‘பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப.’ (பொருள் 143) என தொல்காப்பியர் கூறுகிறார். பொய்யாவது செய்ததனை மறுத்து நிற்றல். வழுவாவது செய்ததை அதன் கண் நில்லாது தவறி ஒழுகுதல். கரணத்தொடு செயற்படின் பொய்யும், வழுவும்நிகழாவாம். ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான சூழ்நிலை ஒன்றுதான் குழந்தைகளை வளர்ப்பதற்கு ஏற்ற நல்ல தருணம் என்றும், அதை பாரம்பரிய குடும்ப மாதிரி [traditional model of family] ஒன்றே இலகுவாக மிகத் திறமையாக கொடுக்கவல்லது என்றும் குறிப்பிடத்தக்க ஆராய்ச்சிகள் ஆதரவு வழங்குகின்றன. சில குடும்ப சூழ்நிலைகள் துரதிருஷ்டவசமாக இதை நிர்வகிக்க முடியாது இருப்பதுடன், ஒற்றை பெற்றோர் [single parent] தங்களால் முடிந்தவரை சிறந்ததை செய்ய இன்று போராடுகிறார்கள். நல்ல திருமணம் மற்றும் நிலையான குடும்பங்கள் இல்லாமல், ஒரு வலுவான சமுதாயம் இருக்க முடியாது என்று வரலாறு எமக்கு பாடம் படிப்பிக்கிறது. எனவே தான், திருமணங்களுக்கு ஊக்கமளிக்கவும் பாதுகாக்கவும் சமுதாயம் சட்டங்கள் இயற்றி அவ்வற்றை நடைமுறைப்படுத்தின. ஏறத்தாழ நாலாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மெசொப்பொத்தேமியா பெண்களின் வாழ்க்கையை அங்கு காணப்பட்ட பெண் தெய்வம் குலாவிற்கான [goddes Gula] துதிப்பாடல் ஒன்று "நான் ஒரு மகள், நான் ஒரு மணமகள், நான் ஒரு மனைவி, நான் ஒரு இல்லத் தரசி"["I am a daughter, I am a bride, I am a spouse, I am a house keeper"] என கூறுவதன் மூலம் தெரியப் படுத்துகிறது. எனவே பெண்கள் தமது சம்பிரதாயமான பங்கான மனைவி, தாய், வீட்டுக் காப்பாளர் ஆகிய நிலைகளுக்கு சிறு வயதில் இருந்தே நன்கு பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரிய வருகிறது. மேலும் பண்டைய சுமேரியாவில் ஆண் பெண் இருவருக்கும் இடையிலான உறவுகள் ஒரு திருமணக்கோரிக்கை / முன் மொழிதல் உடன் ஆரம்பமாகி, அதைத் தொடர்ந்து திருமண ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டு, இறுதியாக ஒரு கல்யாணத்தில் முடிவுக்கு வருகிறது. இப்படிதான் அங்கு குடும்ப வாழ்க்கை நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்தது என்பதையும், அங்கு அவை உறுதிசெய்யப்பட்ட ஒரு கல்யாணத்தில் முடிந்தது என்பதையும் காண்கிறோம். பொதுவாக ஒரு சமுதாயத்தில் உள்ள உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து இணைந்து சம்மதத்துடன் வாழவேண்டும். அத்துடன் ஒவ்வொரு உறுப்பினரும் சட்டத்தை மதித்து பின்பற்றி, தமது பங்களிப்பை நல்ல முறையில் ஒருவருக்கொருவர் ஆரோக்கியமான உறவு கொண்டிருக்க வழிவகுக்க வேண்டும். இயன்றவரை மோதல்களை தவிர்த்து, தீர்மானங்கள் மூலம் அங்கு எமக்கு தேவையானவற்றை அடையாக் கூடிய சூழ்நிலையை உருவாக்க வேண்டும். மற்றும் தம்பதிகள் அங்கு ஒருவருக் கொருவர் விசுவாசமாக இருக்கும் ஒரு சந்தர்ப் பத்திலேயே அந்த சமுதாயம் ஒரு சிறந்த வெற்றிகரமான சமுதாயம் எனப் பொதுவாக அறியப் படும். ஏனென்றால் 'குடும்பம்' சமூகத்தின் மிக முக்கியமான சமூக அலகு ஆகும். எனவே குடும்பங்கள் வலுவாக இருக்கும்போது தான், சமூகம் வலுவாக இருக்கும் என்பது ஒரு அடிப்படை விதியாகும். ஆனால் இன்று நிலைமை அதிகமாக இவ்வற்றிற்கு முரணாக உள்ளது. உதாரணமாக, இன்றைய மன அழுத்தம் அதிகம் நிறைந்த உலகில், அனைத்து திருமணங்களில் குறிப்பிடத் தக்க ஒரு பங்கு விவாகரத்தில் பரவலாக பல சமுதாயத்தில் முடிவடைகின்றன. இது குடும்பங்களை பலவீனமாக்கி, சமூகங்கள் உடைய வழிவகுக்கிறது. [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 12 தொடரும்
-
28 / 05 / 2024: எங்கள் சகோதரியின் [அக்காவின்] ஐம்பத்தி ஒன்றாவது திருமண நாள்
நன்றிகள் எல்லோருக்கும் !!
-
"என்னவளே! அடிஎன்னவளே! மனசுஇலபோலக் காயுதடி"
"என்னவளே! அடிஎன்னவளே! மனசுஇலபோலக் காயுதடி" "என்னவளே! அடிஎன்னவளே! மனசுஇலபோலக் காயுதடி சின்ன இடையாளே! செருக்குப் பிடித்தவளே துன்பம் வேண்டாமே! மௌனம் கலைத்தாலென்ன? இன்பமொன்றே எண்ணி உன்னிடம் வந்தேனே!" "மின்னல் வேகத்தில் கோபம் கொள்ளாதே கன்னம் சிவக்க உற்றுப் பார்க்காதே! அன்ன நடையில் மனதைப் பறிகொடுத்து கன்னி உன்னை மனதாரக் காதலித்தேனே!" வண்ணக்கிளியே அழகே! தனிமை என்னைவாட்டுதே மண்ணில் வாழும்வாழ்வும் எனக்கு வெறுக்குதே! கண்கள்கூட நீயில்லாமல் இரவில் மூடமறுக்குதே எண்ணமெல்லாம் நீயொருத்தியே! அருகில் வாராயோ?" "விண்ணில் மலரும் நிலாவும் சுடுகுதே உண்ண உணவிருந்தும் பட்டினி கிடக்கிறேனே! கண்டகண்ட ஓடுகாலிப்பயல் நான் அல்ல பெண்ணே அன்பொளியே! என்னை ஏற்பயோ?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
28 / 05 / 2024: எங்கள் சகோதரியின் [அக்காவின்] ஐம்பத்தி ஒன்றாவது திருமண நாள்
நன்றி
-
"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்"
"தமிழர்களின் மரபும் பாரம் பரிய மும்" / பகுதி: 13 இன்று தமிழர்களின் நிலைப்பாடு சற்று மாறுபடுகிறது. இனம், மொழி, பண்பாடு ஆகியவற்றில் பல்வகைக் கலப்பினை ஏற்றுக்கொண்டு, அதற்கு ஏற்றவாறு பாரம்பரியத்தை சரிப்படுத்தி வாழ்கின்றனர். இன்று உலகம் சுருங்கி விட்டது, அதில் வாழும் மக்கள் அனைவரும் "யாதும் ஊரே யாவரும் கேளிர்" போல, கணியன் பூங்குன்றனார் பாடியது போல, எல்லா ஊரும் எங்கள் ஊர்தான், எல்லோரும் எங்கள் உறவுகள் தான் என இன்று ஒன்றாகி விட்டனர். இத்தகைய சிந்தனை மிக சிறந்தது எனினும் எம் இனம், மொழி, பண்பாடு முதலியவற்றிலும் கொஞ்சம் கவனம் செலுத்தி நாம் அவற்றை சிதைய விடாமல் காப்பாற்ற வேண்டியதும் எம் கடமையாகும். இல்லா விட்டால் எம் அடையாளமே தொலைந்து விடும். நாம் ஒருவரை ஒருவர் சந்திக்கும் பொழுது, ஒருவருக்கு ஒருவர் வணக்கம் கூறிக்கொள்வது உலக மாந்தர் இயல்பு ஆகும். அவரவர் தம் மொழிக்கும் பண்பாட்டிற்கும் ஏற்றவாறு இச்செயலை மேற்கொள்கின்றனர். இதில் ‘வணக்கம்’ எனக் கூறுவது தமிழர் மரபாகும். தமிழர்களின் போற்றுதலுக்குரிய சொல்லாக ‘வணக்கம்’ அமைந்துள்ளது. மன உணர்வுடன் ஒன்றிணைந்த பல்வகை சூழல்களை உணர்த்துவதற்கு இச்சொல் கையாளப்படுகின்றது. ‘வணக்கம்’ என்னும் சொல் மிக உயர்ந்த பொருளி னைக் கொண்டுள்ள சொல்லாகும். தமிழர்களின் சிந்த னைக்கும் பண்பாட்டிற்கும் ஏற்ப இச்சொல் அமைந்துள்ளது. ‘வணக்கம்’ என்னும் சொல் வணங்குதல், தொழுதல், போற்றுதல், வாழ்த்துதல், வரவேற்றல், அன்பொழுகல், நன்றி உரைத்தல் போன்ற பல் வகைப் பொருள்களை உணர்த்தி நிற்கிறது. இதைத், தமிழர் மட்டும் அல்ல, இலங்கை இந்தியா வாழும் பிற மக்களும் இரு கை கூப்பி சொல்வார்கள். இதையே இஸ்லாமியர்கள் சலாம் என்றும், மேற்கத்தியர்கள் கை குலுக்கி, ‘குட் மார்னிங்’ (Good morning), குட் ஆஃப்டர்னூன் (Good afternoon), 'குட் ஈவினிங்' (Good evening) என்றும், ஜப்பானியர்கள் இடுப்பு வரை குனிந்தும் சொல்வார்கள். வா + இணக்கம் = வணக்கம். தங்கள் வரவை நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம் என்பதே இதன் பொருள் என நம்புகிறேன். ஒன்பதாம் நூற்றாண்டை சேர்ந்ததும், இன்று பெரும் பகுதி மறைந்து விட்டதுமான, ஒரு தமிழ் இலக்கண நூலான, தமிழ்நெறி விளக்கம், பெரியவர் ஒருவரைக் கண்டவுடன் வணக்கம் சொல்வதும் அதற்கு அவர் பதில் வணக்கம் சொல்லுவதும் இயல்பாகும் என ‘வாழ்வதி யாவது கொல்லோ வான்புகழ்ச் சூழ்கழ லண்ண னெஞ்சம் ஆழ்துய ரெய்த வணங்கிய வணங்க’ என்று பாடுகிறது. எனினும் இன்று இச்சொல்லின் பயன்பாட்டில் பிற இனத்தவர் பண்பாடு சர்வசாதாரணமாக கலந்து, காலையில் சந்திக்கும் போது ‘குட் மார்னிங்’ / Good Morning, மாலை நேரச் சந்திப்பின் போது 'குட் ஈவினிங்' / Good Evening, பின்னர் இரவின்போது 'குட் நைட்' / Good Night என, பெருமைக்குரிய வணக்கத்திற்கு பதிலாக, சொல்லும் வழக்கத்தை பெரும் பாலான தமிழர்கள் கொண்டுள்ளனர். இது தமிழரின் பண்பாட்டுடன் ஆங்கிலேயர் பண்பாடு கலப்புற்றதால் ஏற்பட்ட ஒரு விளைவு ஆகும். எனவே நாம் இனியாவது, நண்பர்கள். உறவினர்கள். விருத்தினர்கள். மற்றும் அனைவரையும் வரவேற்கும் போது, இருகரங்களையும் இதயத்தின் முன் நிறுத்தி, கைகளை கூப்பி, தலை தாழ்த்தி வரவேற்போம். நம் கைகளை இதயத்தின் முன் நிறுத்துவதால் இதயபூர்வமாகவும். தலை தாழ்த்துவதால் பணிவுடனும். வரவேற்கின்றோம் என்று இதன் பொருள்படும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டத் திருக்குறள்: 09 உடல், கண், காது, மூக்கு, வாய் எனும் ஐம்பொறிகள் இருந்தும், அவைகள் இயங்கா விட்டால் என்ன நிலையோ அதே நிலை தான் ஈடற்ற ஆற்றலும் பண்பும் கொண்டவனை வணங்கி நடக்காதவனின் நிலையும் ஆகும் என்று "கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை" எனக் கூறுகிறது. என்றாலும் ஒருவரை வணக்கம் கூறி வரவேற்பதை பண்டைய இலக்கியங்களில் காண முடியவில்லை. சங்கம் மருவிய கால சிலப்பதிகாரத்தில் கூட, சேர மன்னர் தன் குடும்பத்துடன் கானகத்தை காணச் சென்ற போது மக்கள் அனைவரும் வாழ்த்து சொன்னார்களே தவிர வணக்கம் சொல்லவில்லை. 'வாழ்க எங்கோ மன்னவர் பெருந்தகை ஊழிதொ றூழி யுலகங் காக்கென' அதாவது எங்கள் மன்னவர் வாழ்க, பண்புகளில் பெரிய மனிதரான எங்கள் மன்னன், பல ஊழிகளிலும் இவ்வுலகத்தை காப்பதற்காக வாழ்க என்று தான் சொன்னார்கள். எனினும் அதன் பின் வந்த மணிமேகலையில் "தானம் தாங்கிச் சீலம் தலைநின்று போன பிறப்பில் புகுந்ததை உணர்ந்தோள் புத்த தன்ம சங்கம் என்னும் முத்திற மணியை மும்மையின் வணங்கிச்" என்ற வரியை காண்கிறோம். அங்கு மும்மையின் வணங்கி என்பதன் பொருள் மனம், மொழி, மெய் என்ற மூன்றாலும் வணங்குதல் ஆகும். இங்கு தமிழர் பாரம்பரியமாக இன்று உள்ள வணக்கத்தின் உண்மை அர்த்தத்தை அறிகிறோம். அதன் பின் ஒன்பதாம் நூற்றாண்டு மாணிக்கவாசகரின் சிவபுராணத்தில் "சிவன், அவன் என் சிந்தையுள் நின்ற அதனால், அவன் அருளாலே அவன் தாள் வணங்கி," என்ற வரியைக் காண்கிறோம், மீண்டும் அதன் பின் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதியில் "கமலாலயனும்,மதியுறு வேணி மகிழ்நனும், மாலும் வணங்கி என்றும்" என்ற வரியைக் காண்கிறோம். எனவே முதலில் இறை வணக்கத்துடன் ஆரம்பித்து பின்னாளில் அதே பாணியில் விருந்தினரை, உறவினரை, நண்பரை வணங்கி வரவேற்றுகும் பாரம்பரியம் தோன்றி இருக்கலாம் என்று நம்புகிறேன். வணக்கம் என்பதும் ஒரு முத்திரை. கைகளைக் குவித்து வணங்கும் போது, முக்கியமாக எதிரில் நிற்பவரைப் பற்றிய உங்கள் விருப்பு வெறுப்புகள் மறைகின்றன. அப்போது அவருக்குள் இருக்கும் தெய்வீகத்தையும் உங்களால் உணர முடிவதால், உங்களால் உண்மையாகவே வணங்க முடிகிறது. இது ஒரு அன்பு தரும் யோகா என்றும் கூறலாம். எனவே இது உண்மையான நட்ப்பை காட்டி வர வேற்கும் ஒரு நல்ல சைகை ஆகும். உதாரண மாக கை குலுக்கும் பொழுது, நீங்கள் மற்றவரின் கையை தொடுகிறீர்கள். இது ஒரு நட்பு சைகையாக இருந்தாலும், சிலவேளை தொற்று கிருமிகள் [தீய உயிரிகளை (germs)] உங்களுக்கு அவர்களை தொடுவதன் மூலம் கடத்தப் படலாம். அது மட்டும் அல்ல , சிலவேளை அவரின் கை வியர்வை நிறைந்தோ அல்லது துப்பரவற்றோ இருக்கலாம். எனவே வணக்கம் மிகவும் சுத்தமான மற்றும் எளிமையான முறையாகும். மேலும் நாம் இரு கைகளாலும் வணங்கும் பொழுது, பத்து கை விரல்களின் நுனிகளும் ஒன்றோடு ஒன்று தொடுகின்றன அல்லது இணைக்கப் படுகிறது. இப்படியான பயிற்சியை யோகாவில் ஹாகினி முத்திரை [Hakini Mudra] என்பர். சமஸ்கிருதத்தில் ஹாகினி என்றால் சக்தி அல்லது ஆட்சி ["power" or "rule,"] எனப் பொருள்படும். பொதுவாக யோகாசனம் ஒரு அற்புதமான கலை ஆகும். தினமும் யோகா செய்பவர்களுக்கு நோய் வருவது தடுக்கப்படுவதுடன் மனவலிமையும் அதிகரிக்கும் என்பர். அப்படியான யோகாவில் ஒரு அம்சம் தான் இந்த கை விரல்களால் செய்யும் முத்திரைகள் ஆகும். நம் உடலில் மறைந்திருக்கும் சக்தியை வெளிக் கொண்டு வருவதே முத்திரைகள் என்றும் நரம்புகளுடன் சம்பந்தப்பட்ட உடல் உறுப்புகளை இந்த முத்திரைகள் மூலம் கட்டுப்படுத்தலாம் என்றும் சொல்லப்படுகிறது. இந்த ஹாகினி முத்திரை நினைவு ஆற்றலை அதிகரிக்கிறது, ஒருமித்த கவனத்தை அல்லது ஒருமுகச் சிந்தனையை அதிகரிக்கிறது, மூளை வளர்க்கிறது, மூளையின் வலது மற்றும் இடது அரைக்கோளங்களை ஒருங்கிணைக்கிறது, அமைதியையும் ஊக்குவிக்கிறது என யோகாவில் சொல்லப் படுகிறது [boosts memory power, increases concentration, energizes the brain, coordinates the right and left hemispheres of the brain, and promotes calmness]. எனவே, இது நம் கண்கள், காதுகள் மற்றும் மூளையின் நினைவு நரம்புகளைத் தூண்டுகின்றன என்றும் நம்புகிறார்கள். இவை எல்லா வற்றையும் எமக்கு தெரியாமலே, எமது பாரம்பரிய வணக்கம் மௌனமாக செய்து முடிப்பது அதன் இன்னும் ஒரு சிறப்பாகும்!! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 14 தொடரும்