-
ஜேர்மனியில் யாழ் இளைஞர் விபரீத முடிவு.!
சரி.இனிமேல் காணொளிகள் போடுவதை தவிர்க்கிறேன்.இப்படி சித்தரிச்சு போட்டால் தான் கூடுதல் வியூஸ் போகும் என்றதனாலும் போடுகிறார்கள்.
-
ஜேர்மனியில் யாழ் இளைஞர் விபரீத முடிவு.!
அனேக விடையங்கள் இப்போ யூருப்காரர்களால் வெளி வருவதனால் யூருப்களை இணைக்க வேண்டிய நிலை.இறப்பதற்கு முன் தன்னுடைய நிலைமைய அந்தப் பிள்ளை பதிவு செய்திருக்கிறார்..இப்படியான இறப்புக்களுக்கு பின்னராவது தமிழ்கடைகள் வைத்திருப்பவர்கள் கொஞ்சமாவது மனிதாபிமானத்தோடு நடவுங்கள்.
-
மீண்டும் அணைந்தது அணையா விளக்கு: யாழ். நினைவுத் தூபி மீண்டும் உடைத்து எறியப்பட்டது!
மீண்டும் அணைந்தது அணையா விளக்கு: யாழ். நினைவுத் தூபி மீண்டும் உடைத்து எறியப்பட்டது! written by admin December 7, 2025 மீண்டும் அணைந்தது அணையா விளக்கு: யாழ். நினைவுத் தூபி மீண்டும் உடைத்து எறியப்பட்டது! யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலில், வரவேற்பு வளைவுக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த ‘அணையா விளக்கு’ போராட்ட நினைவுத்தூபி, இனந்தெரியாத விஷமிகளால் இன்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 7, 2025) மீண்டும் உடைத்து எறியப்பட்டுள்ளது. இந்த நினைவுத் தூபி, செம்மணி மனிதப் புதைகுழி மீதான இருள் நீங்கவும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு சர்வதேச நீதி கோரியும் ‘மக்கள் செயல்’ எனும் இளையோர்களால் கடந்த ஜூன் மாதம் நடந்த போராட்டத்தின் நினைவாக அமைக்கப்பட்டது. தொடரும் அத்துமீறல்! அமைதி வழியில் நீதி கோரும் இந்த நினைவுத்தூபி, கடந்த ஒக்டோபர் மாதமும் விஷமிகளால் அடித்து நொறுக்கிச் சேதப்படுத்தப்பட்டிருந்தது. அன்றைய தினமே அது மீண்டும் நிறுவப்பட்ட போதிலும், தற்போது இரண்டாவது முறையாக உடைத்து எறியப்பட்டுள்ளது. மக்கள் உணர்வுகளுடனும் போராட்டக் கோரிக்கைகளுடனும் தொடர்புடைய ஒரு நினைவுச் சின்னம் தொடர்ந்து இலக்கு வைக்கப்படுவது கவலை அளிக்கிறது. https://globaltamilnews.net/2025/223798/
-
Heathrow விமான நிலையத்தில் spray தாக்குதல் .
- இயற்கையே ஏன் இந்தக்கோபம்!
இதை கவிதைக் களத்தில் இணைக்க மறந்து வீட்டீர்களா கோபி..?- நிலத்தடி நீர் பாதுகாப்புக்கு இன்றியமையாத வழுக்கையாற்றைப் பாதுகாப்பது காலத்தின் கட்டாயமாகும்
நிலத்தடி நீர் பாதுகாப்புக்கு இன்றியமையாத வழுக்கையாற்றைப் பாதுகாப்பது காலத்தின் கட்டாயமாகும் written by admin December 6, 2025 “வழுக்கையாற்றைப் பாதுகாப்பது காலத்தின் கட்டாயம்!” – ஆளுநர் நா.வேதநாயகன். யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீர் வளத்தைப் பாதுகாப்பதில் இன்றியமையாத வழுக்கையாற்றை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளுக்கு வடக்கு மாகாண நிர்வாகம் முழு ஒத்துழைப்பு அளிக்கும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் உறுதியளித்துள்ளார். ‘பங்கேற்புச் செயல் ஆய்வின் ஊடாக நீர் பாதுகாப்பு’ (WASPAR) திட்டத்தின் கீழ், வழுக்கையாறு தொடர்பான ஆய்வின் முடிவுகளை நடைமுறைப்படுத்த இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது. 🌊 இயற்கையின் கோபம் அல்ல, நம் தவறு! சுன்னாகத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் மக்கள் பிரதிநிதிகளுடனான விசேட கலந்தாய்வில் உரையாற்றிய ஆளுநர், காலநிலை மாற்றம் குறித்துக் கடுமையான கருத்துக்களைப் பகிர்ந்தார்: வழுக்கையாறு போன்ற இயற்கையான நீரோட்டப் பாதைகள் தூர்ந்து போனதும், ஆக்கிரமிக்கப்பட்டதும், பராமரிப்பின்றிக் கிடப்பதுமே இன்றைய பேரிடர்களுக்கு மூல காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். 🗺️ வழுக்கையாற்றின் முக்கியத்துவம் என்ன? யாழ். குடாநாட்டின் உயிர்நாடியாக வழுக்கையாறு திகழ்கிறது. மயிலிட்டித்துறையிலிருந்து அராலித்துறை வரை செல்லும் இந்த வடிகால்: நிலத்தடி நீரைச் செறிவூட்டுகிறது: முறையாகப் பராமரித்தால் மட்டுமே வலிகாமம் பகுதியின் கிணறுகளில் நீர் சுரக்கும். உவர் நீர் ஊடுருவலைத் தடுக்கிறது: கடலின் உப்பு நீர் உட்புகுவதைக் கட்டுப்படுத்துகிறது. வெள்ளத் தடுப்பு: கனமழை காலங்களில் வலிகாமம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள் வெள்ளத்தில் மூழாமல் இருக்க, இந்த ஆறு தடையின்றி ஓட வேண்டும். 🛠️ அடுத்து வரும் நடவடிக்கைகள்: உலக வங்கியின் நிதியுதவியுடன் அடுத்த ஆண்டு குளங்களைத் தூர்வாரும் செயற்பாடு முன்னெடுக்கப்படவுள்ளது. வழுக்கையாற்றுப் படுக்கையில் அமைந்துள்ள குளங்களும் இதில் தூர்வாரப்படும். 🤝 மக்கள் பிரதிநிதிகளுக்கு ஆளுநரின் வேண்டுகோள்: “யாழ்ப்பாணத்தின் குடிநீருக்கும் விவசாயத்துக்கும் நிலத்தடி நீரே ஆதாரம் என்பதை உணர்ந்து, எமது நீரின் அளவையும் தரத்தையும் பாதுகாப்பது அனைவரதும் பொறுப்பாகும்.” யாழ்ப்பாணத்தின் நீர் வளத்தைக் காக்க, இந்தத் திட்டத்தை வெற்றிபெறச் செய்ய வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்! https://globaltamilnews.net/2025/223694/- போலித் தகவல்களை நிறுத்துங்கள்! பாகிஸ்தான் காலாவதியான பொருட்களை வழங்கியதா ?
கடந்த வருடம் காலவதியான அரிசியைத் தான் குடுத்திருக்கிறார்கள். அது மட்டுமல்ல இன்னும் கப்பலில் பொருட்கள் அனுப்ப பட இருக்கிறது என்று செயதிகளில் கேட்க முடிகிறது. கப்பலில் இருந்த பொருட்கள் இலங்கைக்கு அனுப்ப பட்டது என்றால். அவசர நிலையில் எப்படி இலங்கையின் இலச்சினை பைகளில் பொறிக்கப்பட்டது.?- யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவன் வெட்டிக் கொலை
முகப் புத்தகத்திலும் எழுதிப் போட்டு கிடந்தது.தாக்கபட்டு இறந்த இந்த நபரும் அவரது துணைவியாரும் படிக்கும் பிள்ளைகளை தவறான வழிக்கு கொண்டு போகிறார்களாம்.இவரை விட இவரது மனைவியே (போதைகளை விற்று கூடுதலாக) தவறான செயல்களில் ஈடுபடுவதாகவும் எழுதிஇருந்தது.எதனால் இப்படி நடந்தது என்று யூருப்காரர்களோ , பத்திரிகைகாரர்களோ இவர்களின் அயலவர்களிடம் போய் விசாரித்த போது அவரகளே சொல்லி இருக்கிறார்கள்.இந்தக் குடும்பம் பற்றி.ஊரிலிருப்பவர்களுக்கு இருப்பதை வைத்து வாழ முடியாமலிருக்கிறது.- யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவன் வெட்டிக் கொலை
உங்கள் எழுத்து ஏன் இந்த செய்தியை இங்கு கொண்டு வந்து போட்டேன் என்று இருக்கிறது..- யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவன் வெட்டிக் கொலை
கொட்டும் மழைக்குள் இளைஞன் வெட்டிப் படுகொலை written by admin November 30, 2025 *** யாழ்ப்பாணத்தில் கொட்டும் மழைக்குள் இளைஞன் ஒருவன் வன்முறை கும்பலால் மிக கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளாா், திருநெல்வேலி சந்திக்கு அண்மித்த பகுதியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை வேளை குறித்த வாள் வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கொக்குவில் பகுதியை சேர்ந்த இளைஞன் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் , காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில், கோப்பாய் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் கையெழுத்து இட வேண்டும் என்ற நிபந்தனையில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். அதன் பிரகாரம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காவல் நிலையத்தில் கையெழுத்திட்ட பின்னர் , தனது நண்பனுடன் மோட்டார் சைக்கிளில் ஆடியபாதம் வீதி ஊடாக தனது வீடு நோக்கி பயணித்த வேளை காவல் நிலையத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் , திருநெல்வேலி சந்தியை அண்மித்த பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு பேர் அடங்கிய வன்முறை கும்பல் அவர்களின் மோட்டார் சைக்கிளை வழிமறித்து , பின்னால் அமர்ந்து பயணித்த இளைஞன் மீது சரமாரியாக வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டனர். தாக்குதலாளிகளிடம் இருந்து உயிரை காக்க வாள் வெட்டு காயங்களுடன் வீதியில் சுமார் 50 மீட்டர் தூரம் ஓடி சென்றவரை ,தாக்குதலாளிகள் துரத்தி துரத்தி வெட்டியுள்ளனர். ஓடி சென்றவர் வர்த்தகநிலையம் ஒன்றின் முன்பாக விழுந்த போது,துரத்தி வந்த நால்வரும் சரமாரியாக வாள் வெட்டினை மேற்கொண்டதில் , இளைஞனின் கால் ஒன்று கணுக்காலுடன் துண்டாட்டப்பட்டுள்ளது. அதனை அடுத்து தாக்குதலாளிகள் அங்கிருந்து தப்பி சென்றனர். இரத்த வெள்ளத்தில் காணப்பட்ட இளைஞனை அங்கிருந்தவர்கள் மீட்டு , நோயாளர் காவு வண்டியில் யாழ் . போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். வைத்தியசாலையில் இளைஞன் உயிரிழந்துள்ளாா். சம்பவம் தொடர்பில் கோப்பாய் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். முன்பகை காரணமாகவே கொலை இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும், வர்த்தக நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கமராக்களில் சம்பவங்கள் பதிவாகியுள்ளதால் தாக்குதலாளிகளை அடையாளம் கண்டுள்ளதாகவும் , அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். https://globaltamilnews.net/2025/223286/- வடக்கு, கிழக்கு மாகாண அனர்த்த நிலைமைகள் தொடர்பான செய்திகள் - 2025
இரவா, பகலா செய்திகளை வந்து பார்த்துட்டு தான் போறனான்.உங்கள் செய்தி இணைப்புக்களுக்கு மிக்க நன்றி ஏராளன்.நீங்களும் பத்திரமாக இருங்கள்.- யாழ் பல்கலை உள்ளிட்ட வடக்கின் பல பகுதிகளில் மாவீரர் தினம் அனுஸ்டிப்பு! ஒரே பார்வையில்!
யாழ் பல்கலை உள்ளிட்ட வடக்கின் பல பகுதிகளில் மாவீரர் தினம் அனுஸ்டிப்பு! ஒரே பார்வையில்! written by admin November 27, 2025 யாழ். பல்கலையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வில் மாணவர்கள் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். கொடிகாமம் துயிலுமில்லம் யாழ்ப்பாணம் , கொடிகாமம் துயிலுமில்லத்தின் முன்பாக இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தலில் மாவீரர் மேரியனின் தாயான கந்தையா நாகராணி பொது சுடரினை ஏற்றி வைத்தார். கோப்பாய் துயிலுமில்லம்! யாழ்ப்பாணம் , கோப்பாய் துயிலுமில்லத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தலில் மூன்று மாவீரர்களின் தாயான நடேசு தவமணி பொது சுடரினை ஏற்றி வைத்தார். நல்லூர் நினைவாலயத்தில் யாழ்ப்பாணம் ,நல்லூர் மாவீரர் நினைவலையத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தலில் மாவீரர் கப்டன் பண்டிதரின் தாயார் பொது சுடரினை ஏற்றி வைத்தார். எள்ளங்குளம் துயிலுமில்லம் யாழ்ப்பாணம் , வடமராட்சி எள்ளங்குளம் துயிலுமில்லத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தலில் மூன்று மாவீரர்களின் தந்தையான இரத்தினம் செல்லத்தம்பி பொது சுடரினை ஏற்றி வைத்தார். சாட்டி துயிலுமில்லம் யாழ்ப்பாணம் , தீவகம் சாட்டி துயிலுமில்லத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தலில் மூன்று மாவீரர்களின் தந்தையான செல்லர் அருளம்பலம் பொது சுடரினை ஏற்றி வைத்தார். மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் உணர்வு பூர்வமாக இடம்பெற்ற மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வு தமிழ் மக்களின் விடுதலைக்காக தம் உயிரை தியாகம் செய்த வீரர்களை நினைவு கூறும் ‘மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வு’ இன்று (27) வியாழன் மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் கொட்டும் மழையிலும் மிகவும் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. -தமிழர் தாயகத்திற்காக உயிர் நீத்த உறவுகளை நினைவு கூறும் வகையில் கார்த்திகை மாதம் 27 ஆம் திகதி மாவீரர் தினம் வருடா வருடம் நினைவு கூறப்பட்டு வருகிறது. அதற்கு அமைவாக மன்னார் மாவட்ட மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஆட்காட்டி வெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு இன்று (27) மாலை மாவீரர் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவினால் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது . மாலை 6.5 மணியளவில் மாவீரர் ஒருவரின் தாயினால் பொதுச் சுடர் ஏற்றப்பட்டது. அதனை தொடர்ந்து ஆட்காட்டி வெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களின் உறவினர்கள் பெருந்திரளான மக்கள், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், என ஆயிரக்கணக்கானவர்கள் ஒன்று திரண்டு கண்ணீர் மல்க உணர்வுபூர்வமாக மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். https://globaltamilnews.net/2025/223152/- மஹிந்த ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதி!
லவ் பெயிலியர் அதனால் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக பதிவொன்று பார்த்தேன்..🤔- இன்று மாவீரர் தினம்!
- காதலன் வீட்டில் லிவிங் டு கெதராக இருந்து அங்கிருந்த தாயின் 8 பவுன் தங்க நகைகளை திருடிச்சென்ற காதலி பொலிஸாரால் கைது #இலங்கை
எவ்வளவு நல்ல பிள்ளை.ஆரம்பமே இப்படி என்றால்...🤭 - இயற்கையே ஏன் இந்தக்கோபம்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.