Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாயினி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  1. தமிழர்கள் ஏன் கறுப்புக்கொடி ஏற்றுகின்றார்கள் ? written by admin February 13, 2026 பல்கலைக்கழக மாணவர்களின் கறுப்புக்கொடி போராட்டத்தை சட்டவிரோதமானது என அறிவித்துள்ள பல்கலைக்கழ மானியங்கள் ஆணைக்குழுவின் கருத்து பிழையானது என தெரிவித்துள்ள ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி, போராட்டத்துக்கான காரணத்தைக் கண்டறிந்து அதனைத் தீர்ப்பதற்கு முயற்சிக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. இது குறித்து ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி (சங்கு சின்னக் கட்சி) சார்பில் அதன் பேச்சாளர் சுரேஷ் க.பிரேமச்சந்திரன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலையே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில், “இலங்கை சுதந்திரம் அடைந்ததிலிருந்து மிக நீண்டகாலமாக சுதந்திர தினத்தையும் அதற்குப் பின்னர் 1972ஆம் ஆண்டு இலங்கை குடியரசாகிய போது கொண்டுவரப்பட்ட குடியரசு அரசியல் சாசனத்திற்கு எதிராகவும் தமிழ் மக்கள் கறுப்புக்கொடி போராட்டங்களை முன்னெடுத்து வந்துள்ளமையுடன் அவற்றை கரிநாள்களாகவும் பிரகடனப்படுத்தி வந்துள்ளனர். இலங்கை என்பது சிங்கள, தமிழ் இராசதானிகளாக பிளவுபட்டு இருந்ததென்பதும் 1883ஆம் ஆண்டு காலனித்துவ ஆட்சியாளர்களான பிரித்தானியர்களால் தமது நிர்வாக வசதிக்காக ஒன்றாக்கப்பட்டது என்பதுதான் வரலாறு. ஒன்றிணைத்த இராசதானிகளை சிலோன் என்ற பெயரில் சூழ்ச்சியின் காரணமாக பெரும்பான்மையினமான சிங்கள தரப்பிடம் கையளித்து விட்டுச் சென்றார்கள் என்பதும் வரலாறு. ஆகவே, இவ்வாறான சுதந்திர தினத்தையோ அல்லது குடியரசு தினத்தையோ தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுடன் பெரும்பான்மை சிங்கள அரசுகளால் தமிழ் மக்களின் மொழியுரிமை, வாழ்விட உரிமை, கல்வி உரிமை, வேலைவாய்ப்புக்கான உரிமை போன்றவை பல்வேறு வழிகளில் நிராகரிக்கப்பட்டு தமது சுதந்திரத்தைத் தாமே பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிலைக்கு தமிழ் மக்கள் தள்ளப்பட்டதன் காரணமாகத்தான் இங்கு நீண்டதோர் ஆயுதப்போராட்டமே நடைபெற்றது. எனவே, தமிழ் மக்கள் ஏன் போராடுகிறார்கள்? அரசின் தமிழர்களுக்கு எதிரான அனைத்துச் செயற்பாடுகளையும் ஏன் எதிர்க்கிறார்கள்? ஏன் கறுப்புக்கொடி ஏற்றுகின்றார்கள்? ஏன் ஊர்வலங்களையும் கவனவீர்ப்புப் போராட்டங்களையும் நடத்துகின்றார்கள்? – என்பதற்கு அரசு சரியான தீர்வைக் கண்டுகொள்ள வேண்டுமே தவிர, ஜனநாயகபூர்வமான எதிர்ப்பைக் காட்டும் மக்களையோ மாணவர்களையோ தண்டிப்பதானது ஜனநாயக விரோதமானதும் சட்டவிரோதமானதுமாகும். இலங்கையின் அடிப்படை உரிமைகளில் பேச்சுரிமை, எழுத்துரிமை, ஒன்றுகூடுவதற்கான உரிமை, ஜனநாயக வழிமுறைகளில் கறுப்புக்கொடி ஏற்றுதல் உட்பட எதிர்ப்புத் தெரிவிப்பதற்கான உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. இலங்கையில் துக்கத்தை வெளிப்படுத்துவதற்கு கறுப்புக்கொடி ஏற்றுவது இயல்பானது. தமிழ் மக்கள் அடக்கப்பட்டு ஒடுக்கப்படுகின்றார்கள் என்பதும் தமிழ் மக்களுக்கு முழுமையான சுதந்திரம் கிடைக்கவில்லை என்பதும் துக்ககரமான செயற்பாடே. அவ்வாறான துக்ககரமான செயற்பாட்டின்போது பல்கலைக்கழகத்திலோ அல்லது வேறு எந்த இடத்திலோ கறுப்புக் கொடி கட்டுவது சட்டவிரோதம் என சட்டத்தில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. மக்களுக்கோ அன்றில் சொத்துக்களுக்கோ எவ்வித இடையூறும் விளைவிக்காமல் மக்கள் தமது எதிர்ப்பைக் காட்டுவது என்பது ஜனநாயகபூர்வமான நடவடிக்கையே. கடந்த 4ஆம் திகதி யாழ் பல்கலைக்கழத்தில் கறுப்புக்கொடி ஏற்றிய மாணவர்களுக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும், அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என பல்கலைக்கழக மானிய ஆணைக்கழகம் கோருவதும் அதனைப் பல்கலைக்கழக நிர்வாகம் ஏற்பதும் சட்டவிரோதமானதுடன் ஜனநாயக விரோதமானதுமாகும் என ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி கருதுகின்றது. மாணவர்களின் அடிப்படை உரிமைகளிலோ ஜனநாயக வழிமுறையிலான போராட்டங்களிலோ தலையீடு செய்யாமல் அவர்கள் சுதந்திரமாகவும் அச்சவுணர்வின்றியும் தமது கல்வியைத் தொடர பல்கலைக்கழக ஆசிரிய சமூகம் அதற்கான பொதுவெளியை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றோம். பல்வேறுபட்ட மாணவர் போராட்டத்தை நடத்தி மிகப் பிரமான்டமான அறகலய போராட்டத்தின் மூலம் ஆட்சிக்கு வந்தவர்கள் தமிழ் மாணவர்களின் ஜனநாயக பூர்வமான போராட்டங்களை நசுக்குவதோ அன்றி அவர்களைத் தண்டிப்பதோ சரியானதா என்பதை ஆட்சியிலிருப்பவர்கள் சிந்திக்க வேண்டும்.” – என்றுள்ளது. தமிழர்கள் ஏன் கறுப்புக்கொடி ஏற்றுகின்றார்கள் ? - Global Tamil News
  2. யாழ். துப்பாக்கி சூட்டு சம்பவம் – மனித உரிமை ஆணைக்குழு விசாரணை written by admin February 11, 2026 யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில் 17 வயது சிறுவன் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் தொடர்பில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) தனது விசாரணைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளது. சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் தலைமையிலான குழுவினர் நேற்று (செவ்வாய்க்கிழமை) நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டனர். துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட இடம் மற்றும் வாகனத்தின் நிலை ஆகியவற்றை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர். சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறை உத்தியோகத்தர்கள் மற்றும் அந்தப் பகுதியில் கடமையில் இருந்தவர்களிடம் ஆரம்பகட்ட தகவல்கள் கோரப்பட்டுள்ளன. துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட போது வாகனத்தில் பயணித்த ஏனைய இருவரிடமும், உயிரிழந்த சிறுவன் அல்பினோ அருள் பயாஸின் உறவினர்களிடமும் விரிவான வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன. உயிரிழந்த சிறுவனின் நெற்றியில் தோட்டா பாய்ந்திருப்பதாக உடற்கூற்று ஆய்வில் தெரியவந்துள்ள நிலையில், இது திட்டமிட்ட கொலையா அல்லது தற்காப்பு நடவடிக்கையா என்பது குறித்து ஆணைக்குழு தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. இந்தச் சம்பவம் இலங்கையின் மனித உரிமை வரலாற்றில் மீண்டுமொரு கறையாகப் பார்க்கப்படுகிறது. காவல்துறையினா் ஒரு வாகனத்தை நிறுத்த முற்படும்போது, வாகனத்தின் டயர்களை இலக்கு வைக்காமல் பயணிகளின் தலையை இலக்கு வைத்துச் சுடுவது “அதிகார துஷ்பிரயோகம்” என மனித உரிமை ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இந்த அறிக்கை, நீதிமன்ற விசாரணைகளில் ஒரு முக்கிய ஆவணமாகப் பயன்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
  3. சூரியன் எப்.எம் வானொலி முகப் புத்தக பக்கத்தில் பிள்ளையின் காயப்பட்ட பக்கங்களளை மறைக்காமல் போட்டிருக்கிறார்கள்.ரத்தக் காயங்கள், தையல் வேறு போட்டு இருக்கிறார்கள்.குறிப்பிட பட்ட ஆசிரியர் என்று சொல்லப்படுபவர் அதற்கு எந்த வித தகுதியும் அற்றவர் என்று நான் நினைக்கிறேன்.
  4. போனகிழமை செய்தியில் படித்தேன் இதே பகுதியில் படிக்கும் மாணவர் ஒருவரின் தந்தை இறந்துள்ளார்.இதே பிரச்சனை தான்.இந்தப் பள்ளியில் தானோ கவனிக்கவில்லை.அவரும் ஒரு கவ்லி தொடர்பான பணியாளர் தான்.
  5. நீங்கள் முதலில் எழுதியிருந்ததற்கு நான் தான் சிரிப்பு குறி போட்டிருந்தேன்..இப்போ எடுத்து விட்டேன்.அங்கே நான் எந்த நக்கல் நளினமும் செய்யவில்லை... நீங்கள் சொல்லி இருந்தவை எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள முடியாமலிருக்கிறது. காரணம்.எத்தனையோ யூருப்பர்ஸ் அடுத்தவர்களின் குடும்ப பிரச்சனைகளை கூட மிகைப் படுத்தி பதிவிடுவதை உங்களால் புரிந்து கொள்ள முடியாமிலிருக்கலம் ,ஆனால் எல்லாரும் அப்படி என்று இல்லைத் தானே..குறிப்பாக ஜேர்மனியில் நடக்கும் திருமணங்கள் மற்றும் குடும்ப பிரச்சனைகளை பாதிக்கப்பட்ட பெண்கள் எடுத்து அவரிடம் சொல்கிறார்களாம் அதனை பதிவிடுகிறாராம்..இப்படி ஒரு பதிவை சோடனை செய்து பதிவிட்டு பணம் சம்பாதிக்க வேணுமா..இப்படி எத்தனையோ வருகிறது..
  6. இதை தொகுத்து எழுதியவர் பாவம்.குறுப்பாக இயங்குபவர்களின் பேச்சுகளிலிருந்து தப்பித்துக் கொள்வார் என்று நம்புகிறேன்.😀
  7. மிகவும் சாதரணமான ஒரு இலச்சினையாக இருந்தால் நன்று.எதையும் அடையாளப்படுத்துவதாக இல்லாதிருந்தால் மிகவும் நல்லது..காரணம்..வேறு குறியீடுகளை சேர்க்கும் போது மக்கள் எல்லா விதமான உதவிகளையும் எதிர்பார்ப்பார்கள், கேட்பார்கள்.எல்லாவற்றையும் செய்யும் சூழ் நிலை இப்போ இல்லை என்று நினைக்கிறேன்.இலச்சினை கூட இன்னும் கொஞ்சக் காலம் போன பின் செய்தால் நன்று என்றே எனக்கு தோணுது..ஆரம்பமே பனர் அது, இது என்று தொடங்கினால் உண்மையான தேகைளுக்கு பணம் போதிமானதாக இருக்காது..எல்லாவற்றையும் அனைவரும் புரிந்து கொள்ளுங்கள்.விளம்பரப்படுதல்கள் கூடுதல் பழுக்களை ஏற்படுத்திக் கொள்ளப் போறீர்கள் போல் தெரிகிறது..எனக்கு மனதில் தோன்றியதை சொல்கிறேன்.இதற்கு மேல் உங்கள் விருப்பம்.நன்றி.
  8. தயவு செய்து அரசியல்வாதிகளையோ அல்லது அரசியல் சார்ந்த கருத்துக்களையோ யாரும் இதற்குள் விதைக்காமல் இருந்தால் நன்று..காரணம் இந்த அரசியல் வாதிகள் நினைத்திருந்தால் கஸ்ரப்பட்ட மக்களுக்கு எவ்வளவோ செய்திருக்கலாம்..அவர்கள் தங்களுக்கு வேண்டியவர்களையும், தங்களையும் மட்டுமே வளர்த்துக் கொண்டு வாழ்ந்தார்கள், வாழ்கிறார்கள், வாழவும் போகிறார்கள்.ஆகவே ஏராளனுக்கும் மற்றவர்களுக்கும் இது ஒரு பணிவான வேண்டுகோளாக இருக்கும் என்று நினைக்கிறேன்.நன்றி.
  9. ஆ..அப்படியா..ஊரில் இன்னும் கொஞ்சம் பார் திறக்க இடம் இருக்கோ....உங்களிடம் எல்லாம் எப்படி பிள்ளைகள் படித்தார்களோ..?
  10. என்னைப் பொறுத்த மட்டில் உங்கள் செயல்பாடுகள் எதற்கும் நான் தடங்கலாக இருக்க போவதில்லை.என்னால் முடியும் போது ஏதாவது செய்வேன் அவ்வளவு தான்.பயளாளிகளை கஸ்ரப்படுத்தாமல் இருந்தால் சரி.நன்றி.
  11. நான் எழுதும் கருத்து சிலருக்கு சங்கடமாக இருக்கலாம்..வேணாம் எழுதாமல் போவதே மேல்.நன்றி.
  12. மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற வடமாகாண தைப்பொங்கல் விழா! பிரதம விருந்தினர்களாக அழைக்கப்பட்ட அமைச்சர், பிரதி அமைச்சர் கலந்து கொள்ளவில்லை! written by admin January 18, 2026 மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற வடமாகாண தைப்பொங்கல் விழா – பிரதம விருந்தினர்களாக அழைக்கப்பட்ட அமைச்சர், பிரதி அமைச்சர் கலந்து கொள்ளவில்லை. வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகு ஆண்டுதோறும் நடத்தும் வடமாகாண தைப்பொங்கல் விழா- 2026 இவ் வருடம் மன்னார் மாவட்டத்தின் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற திருக்கேதீஸ்வரம் திருக்கோயில் மூன்றலில் இன்றைய தினம் (18) ஞாயிற்றுக்கிழமை காலை நடை பெற்றது. வடக்கு மாகாண கல்வி. அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன் தலைமையில் இடம்பெற்ற குறித்த விழாவில் விருந்தினர்களாக கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகர், வடக்கு மாகாண ஆளுநர் நா வேதநாயகன், கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஆர். எச். உபாலி சமரசிங்க ஆகியோர் அழைக்கப் பட்டதோடு, சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண பிரதம செயலாளர் தனுஜா முருகேசன் மற்றும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர். எனினும் குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்த கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகர்,கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஆர். எச். உபாலி சமரசிங்க ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில் இந்த நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (18) காலை 9 மணியளவில் வடக்கு மாகாண கல்வி. அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன் தலைமையில் சிறப்பாக ஆரம்பமானது. இதன் போது விருந்தினர்களாக வடக்கு மாகாண ஆளுநர் நா வேதநாயகன் கலந்து கொண்டு சிறப்பித்த தோடு அழைக்கப்பட்ட ஏனைய விருந்தினர்கள் கலந்து கொண்டனர். இதன் போது சம்பிரதாய பூர்வமாக புதிர் எடுக்கும் நிகழ்வுகள் திருக்கேதீஸ்வரம் மாளிகைத் திடலில் இடம்பெற்றது. தொடர்ந்து விருந்தினர்கள் சம்பிரதாய பூர்வமாக திருக்கேதீஸ்வரர் ஆலயத்திற்கு ஆழைத்து வரப்படுவதுடன் அங்கு விசேட நிகழ்வு தொடர்ந்து இடம் பெற்றது. மேலும் பொங்கலைச் சிறப்பிக்கும் வகையில் மன்னார் மாவட்ட கலை மன்றங்களுக்கான ஆற்றுகை பொருட்களும், விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணப் பொருட்களும் வழங்கப்படமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2026/226770/
  13. 🍔 TGI Fridays இன் 16 கிளைகள் மூடப்படுகின்றன – 456 ஊழியர்கள் வேலை இழப்பு written by admin January 18, 2026 ஐக்கிய இராச்சியத்தில் (UK) உள்ள பிரபல அமெரிக்க உணவகச் சங்கிலியான TGI Fridays, தனது 16 கிளைகளை நிரந்தரமாக மூடுவதாக அறிவித்துள்ளது. இது பிரித்தானியாவின் வர்த்தகத் துறைக்கு (High Street) மற்றுமொரு பேரிடியாக அமைந்துள்ளது. நிர்வாக சிக்கல்கள் காரணமாக எடுக்கப்பட்ட இந்த அதிரடி முடிவினால், நூற்றுக்கணக்கான ஊழியர்கள் தங்களது வேலைவாய்ப்புகளை இழந்துள்ளனர். எஞ்சியுள்ள 33 கிளைகள் ஒரு புதிய மீட்பு ஒப்பந்தத்தின் (Rescue deal) மூலம் தொடர்ந்து இயங்கும். இதன் மூலம் சுமார் 1,384 பணியாளர்களின் வேலைவாய்ப்பு பாதுகாக்கப்பட்டுள்ளது. TGI Fridays-ன் பிரித்தானிய கிளைகளை நிர்வகித்து வந்த ‘லிபர்ட்டி பார் அண்ட் ரெஸ்டாரன்ட்’ (Liberty Bar and Restaurant) குழுமம் நிதி நெருக்கடியால் நிர்வாகிகளிடம் (Administrators) ஒப்படைக்கப்பட்டது. வாடிக்கையாளர் வருகை குறைவு, அதிகரித்த செயல்பாட்டுச் செலவுகள் மற்றும் பொருளாதார நெருக்கடி ஆகியவை இம்முடிவுக்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது. மூடப்பட்டவற்றில் மின்னார், எடின்பர்க், ரீடிங், ஸ்டீவனேஜ் மற்றும் காவென்ட்ரி உள்ளிட்ட 16 நகரங்களில் உள்ள கிளைகள் இதில் அடங்கும். Tag Words: #TGIFridaysUK #RestaurantClosures #UKHighStreet #HospitalityNews #JobLosses #Administration #RetailCrisis #UKNews2026 https://globaltamilnews.net/2026/226780/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.