-
கறையான் புற்று
எனக்கும் ஒரு சின்ன சந்தேகம்.🤭இந்த தடவை யாழில் எழுதுபவர்களின் ஆக்கங்கள் மிகவும் குறைவாகவே இருக்கிறது..அடிக்கடி ஞாபகபடுத்தல்கள் தேவை போலும்..✍
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
அவருக்கு பணம் அனுப்பும் அறிவுஜீவிகள் தான் சங்கீதாவை பற்றியும் பேச சொல்லி இருக்கிறார்கள். அதனால் தான் கதைக்க முன் வந்ததாக சொல்லி விட்டு தான் லிங் ஒன்று போட்டு இருக்கிறார்.பொதுவாக ஏதாவது பார்ப்போம் என்று தொடங்கினால் இவரது குப்பைகளும் கண்ணில படுகிறது.வைத்தியர் என்றோ அல்லது அவரும் ஒரு குடும்பஸ்தன் என்று சொல்வற்கோ அருகதை அற்ற மனிதர்.அர்ச்சனா.அவர் பின்னாடி நிற்கும் அம்மாமார், அன்ரிமார் இன்னும் திருந்த இல்லை.
-
தமிழர்களின் அபிலாசைகளை முன்னிறுத்தி நீதியமைச்சர் பதவி அழைப்பை நிராகரித்தேன்; ஒருபோதும் சுயதேவைகளின் அடிப்படையில் செயற்படவில்லை - சுமந்திரன்
உண்மையாவா.?🤭
-
ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
ஈரான் மீதான தாக்குதலை கண்டித்து இங்கு அந்த நாட்டவர்கள் போரட்டத்தில் இறங்கி உள்ளதாக காலையில் அறிந்தேன்.நான் அடிக்கடி டவுண்ரவுன் பக்கம் போவதால் யாராவது ஏதாச்சும் எடுத்து சொல்வார்கள். பொருட்களின் விலைகளும் கூடலாம்.✍
-
ரோஜா முள்.
பாகம் 2 எப்போ வரும்..🤭
-
கடும் பனிப்புயல்: நியூயோர்க் நகரம் முழுமையாக முடக்கப்பட்டது
கனடாவில் இந்த தடவை பனி கொட்டி இன்னும் சிலர் இயல்பாக வெளியில் போக இயலாத நிலை.சில இடங்களில் பனியை அள்ளி எடுக்கும் போது மண்ணையும் சேர்த்து எடுக்கபட்டுள்ளதால் பஸ் தரிப்பு இடங்களுக்கு அருகில் இலகுவாக வயோதிபர்கள், இயலாதவர்கள் தெரிலிலிருந்து கரைக்கு மாறிக் கொள்ள இயலாத நிலையும் ஏற்பட்டுள்ளது.பஸ் தரிப்பு இடங்களுக்கு அருகில் மிகவும் அவதானமாக பார்த்து போவது நன்று.
-
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் 12 விமானச் சேவைகள் ரத்து
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் 12 விமானச் சேவைகள் ரத்து written by admin March 1, 2026 வளைகுடா பிராந்தியத்தில் வான்பரப்பு மூடப்பட்டுள்ளதால், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் துபாய், ரியாத், தம்மாம் மற்றும் குவைத் உள்ளிட்ட நகரங்களுக்கான 12 விமானச் சேவைகளை ரத்து செய்துள்ளது. பயணிகள் விமான நிலையத்திற்குப் புறப்படுவதற்கு முன் விமான நிறுவனத்தைத் தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். பயணிகளின் பாதுகாப்பு மற்றும் நலனைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது. ரத்து செய்யப்பட்டுள்ள விமானங்களின் விபரங்கள்: விமான இலக்கம் புறப்படும் இடம் – சேருமிடம் UL 231 கொழும்பு – துபாய் UL 232 துபாய் – கொழும்பு UL 225 கொழும்பு – துபாய் UL 226 துபாய் – கொழும்பு UL 217 கொழும்பு – தோஹா UL 218 தோஹா – கொழும்பு UL 253 கொழும்பு – தம்மாம் UL 254 தம்மாம் – கொழும்பு UL 265 கொழும்பு – ரியாத் UL 266 ரியாத் – கொழும்பு UL 229 கொழும்பு – குவைத் UL 230 குவைத் – கொழும்பு பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்களுக்கு வருத்தம் தெரிவித்துள்ள ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், மேலதிக விபரங்களுக்குத் தமது உத்தியோகபூர்வ இணையத்தளம் அல்லது அழைப்பு மையத்தைத் (Call Center) தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. வான்பரப்பில் ஏவுகணைத் தாக்குதல் அபாயம் உள்ளதாலேயே, பயணிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடாது என்ற நோக்கில் இந்த ரத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ரத்து செய்யப்பட்ட விமானங்களுக்கான மாற்றுப் பயணத் திகதிகள் அல்லது பணம் மீளப் பெறுவது (Refund) குறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. #FlightAlert #SriLanka #SriLankanAirlines #MiddleEastWar #TravelUpdate #ColomboAirport https://globaltamilnews.net/2026/229935/
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்!
இந்த தாக்குதல் ஆரம்பித்ததின் பின்னர் யாழ்ப்பாண மக்கள் பெற்ரோலுக்கு வரிசைக்கு நிக்கிறார்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்த வாழ்த்துக்கள் சிறியண்ணா.அடிக்காடி மருத்துவமனை பக்கம் போகாமல் நலமோடு வாழ வேண்டுகிறேன்.🖐அடுத்த தேர்தலில் செலவிடுவற்காக காசு சேர்க்க லண்டன் வரவிருக்கிறாராம் அர்ச்சுணா.கூப்பிடுங்கோ ...😀
-
மட்டக்களப்பு மாநகர எல்லைக்குள் தொடரும் காட்டு யானைகள் அட்டகாசம்
மட்டக்களப்பு மாநகர எல்லைக்குள் தொடரும் காட்டு யானைகள் அட்டகாசம் 22 Feb, 2026 | 04:28 PM மட்டக்களப்பு மாநகர எல்லைக்குட்பட்ட மாந்தீவு பகுதிக்குள் ஏற்கனவே புகுந்திருந்த கட்டு யானைகள் ஞாயிற்றுக்கிழமை (22) திருப்பந்துறை பிரதேசத்திற்குள் நுழைந்து அட்டகாசம் ஏற்படுத்தியுள்ளன. கடந்த ஐந்து தினங்களாக தொடர்ந்து அப்பகுதியில் காட்டு யானைகள் உட்பகுந்து நெற்பயிர்கள் மற்றும் ஏனைய பயிர் வகைகளையும் துவம்சம் செய்வதாக அப்பகுதி பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர். யானைகள் மனித மோதலுக்கு நிரந்தர தீர்வு இதுவரையில் எட்டப்படவில்லை என மக்கள் அங்கலாய்க்கின்றனர். இதேவேளை வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள உத்தியோகஸ்த்தர்களும், அப்பகுதி பொதுமக்களும் இணைந்து குறித்த காட்டு யானைகளை அப்பகுதிகளிலிருந்து வெளியேற்ற நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு காட்டு யானைகளில் அட்டகாசத்தாலும் நடமாட்டத்தாலும், வழமை போன்று தமது அன்றாட செயற்பாடுகளில் ஈடுபட முடியதுள்ளதாகவும், மிகுந்த அச்சத்தின் மத்தியிலேயே தாம் நடமாடுவதாகவும் அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்தனர். மட்டக்களப்பு மாநகர எல்லைக்குள் தொடரும் காட்டு யானைகள் அட்டகாசம் | Virakesari.lk
-
நூற்றாண்டை எட்டும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் நாவல்!
நூற்றாண்டை எட்டும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் நாவல்! written by admin February 22, 2026 யாழ்ப்பாணத்துப் பிள்ளையார் கோயில் திருப்பணிக்கு உதவினார் மலாயாவின் முஸ்லிம் மன்னர்! 1927 இல், மலாயாவில் வெளியான புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் நாவல் ஒன்று, இம்மாதம் யாழ்ப்பாணத்தில் மீளவும் அச்சிடப்பட்டு வெளியாகின்றது. சாம்பசிவம் – ஞானாமிர்தம் என்ற இந்த நாவலுக்குக் கதைக்களம் அன்றைய மலாயா-சிங்கப்பூரும் இலங்கையும். நாவலை எழுதியவர், யாழ்ப்பாணம், காரைநகர், சம்பந்தர்கண்டியைச் சேர்ந்த அருணாசலம் நாகலிங்கம் (1901-1979). அவர், அப்பொழுது, கோலப்பிலா திறைசேரியில் முதன்மை எழுதுவினைஞராகப் பணியாற்றிக்கொண்டிருந்தார். நாவல், கோலாலம்பூரின் லாஸர் அண்ட் சன்ஸ் அச்சகத்தில் 1000 பிரதிகள் அச்சிடப்பட்டது. இந்த நாவலின் விற்பனையால் வரும் பணத்தில், காரைநகர், மருதடிப் பிள்ளையார் கோயிலின் பாழடைந்த திருக்குளத்தைச் சீரமைத்துக் கட்ட நாவலாசிரியர் எண்ணியிருந்தார்; செய்துமுடித்தார். கோயில் என்பதற்கு அப்பால், இக்குளத்தின் ஊர்ப்பயன்பாடு, நீர்ப்பயன்பாடு, கால்நடைகளின் பயன்பாடு என்பன அவர் சிந்தனையில் முன்னின்றதை நூன்முகத்தால் அறிந்துகொள்ளலாம். புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் எழுத்தை ஊக்குவித்து, அக்காலத்தில் 100 வெள்ளி பணம் கொடுத்து, பிள்ளையார் கோயில் திருப்பணிக்கு உதவியவர், அன்றைய மலே கூட்டாட்சி அரசுகளின் (Federated Malay States) நகரி செம்பிலான் (Negeri Sembilan) மன்னராக இருந்த, சேர். முகமது ஷா. பின்னாளில் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியரான, R. P. சேதுப்பிள்ளை; அக்காலத்தில் ஈழத்து முன்னணி நாவலாசிரியரும் இந்துசாதனப் பத்திராசிரியருமான (உலகம் பலவிதம்) ம. வே. திருஞானசம்பந்தப்பிள்ளை; யாழ்ப்பாண வரலாற்றாய்வாளர், செ. இராசநாயக முதலியார்; புனித பத்திராசிரியர் கல்லூரித் தமிழ்ப் பண்டிதர், வ. சு. இராச ஐயனார், ஆகியோர் நாவலுக்கு முன்னுரை வழங்கியிருந்தனர். சாதி, சமயம், சமூகம், சீதனம், மதுவையும் புலாலையும் தவிர்த்தல், பண்பாட்டு அடிமைத்தனம், பயிர்த்தொழில், உள்ளூர் உற்பத்தி போன்ற விடயங்களில், காந்தியக் கருத்துக்களை, தமிழ்ச் சிந்தனை மரபுப் பின்னணியுடனும், இலக்கிய மேற்கோள்களுடனும் நாவலாசிரியர் முன்வைக்கிறார். இரண்டாம் உலகப்போரின் யப்பானிய ஆட்சிக்காலத்தில், கோலப்பிலா மருத்துவ மனைக்கு முதன்மை எழுதுவினைஞராகப் பணிமாறிய அவர், சிங்கப்பூரில் நிறுவப்பட்ட சுபாஸ் சந்திர போஸின் இந்திய அரசுக்கும் ஆதரவளித்துள்ளார். 1947 இல் காரைநகர் திரும்பிவிட்டார். கோலப்பிலாவில் தமிழ்ப்பள்ளி நிறுவி அதன் முகாமையாளராகவும், முருகன் கோயில் முகாமையாளராகவும் இயங்கிய இந்த நூலாசிரியர், ஊரிலும் காரைநகர்ச் சிவன் கோயில் குடமுழுக்கு (1970), அனைவருக்கும் ஆலய வழிபாட்டுரிமை, நூற்பதிப்புகள் என, பல்வேறு சமய, சமூகப் பணிகளில் பங்குகொண்டு, 1979 இல் இயற்கை எய்தினார். 25-02-1901 இல் பிறந்த நாகலிங்கம் அவர்களுக்கு இது 125 ஆவது ஆண்டு. அவரை, 1975 இல் மல்லிகை பத்திரிகை பேட்டிகண்டு, அட்டைப்படத்துடன் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது. படங்களுடன் வெளியான முதலாவது ஈழத்தமிழ் நாவல் அவருடையது என சில்லையூர்ச் செல்வராசன் குறிப்பிட்டுள்ளார். இந்த நாவல் ஏற்கனவே வலைத்தளங்களில் பதிவிடப்பட்டுள்ளது. இப்பொழுது மீளச்சில் வெளியிடுபவர், நா. பாலக்கிருஷ்ணன், சம்பந்தர்கண்டி,காரைநகர். அம்பலம். நூற்றாண்டை எட்டும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் நாவல்! - Global Tamil News
-
36 ஆண்டு கால ஏக்கம் – மயிலிட்டி காணிக்கை மாதா ஆலயத்திற்கு அனுமதி கிடைக்குமா?
36 ஆண்டு கால ஏக்கம் – மயிலிட்டி காணிக்கை மாதா ஆலயத்திற்கு அனுமதி கிடைக்குமா? written by admin February 22, 2026 மயிலிட்டி மக்களின் ஆன்மீக அடையாளமான புனித காணிக்கை மாதா ஆலயத்தில் வழிபாடு செய்வதற்கு, கடந்த 36 வருடங்களாக அனுமதி மறுக்கப்பட்டு வரும் அவலநிலை தொடர்கிறது. இம்முறையாவது திருவிழாவை நடத்த அனுமதி கிடைக்குமா என்ற ஏக்கத்துடன் மக்கள் காத்திருக்கின்றனர். 📍" width="16" height="16" style="box-sizing: border-box; outline: 0px; margin: 0px; padding: 0px; border: 0px; max-width: 100%; vertical-align: top; height: auto;"> இந்த ஆலயம் 1850 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட மிகப்பழைமையான கத்தோலிக்க ஆலயமாகும். சுமார் 52 பரப்பு நிலப்பரப்பில் ஆலயம், மயிலிட்டி றோ.க பாடசாலை, கன்னியர் மடம், பங்கு பணிமனை மற்றும் தோட்டக்காணிகள் அமைந்துள்ளன. 1990-ஆம் ஆண்டு உள்நாட்டு யுத்தம் காரணமாக மக்கள் வெளியேறிய பின், இப்பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக்கப்பட்டு இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இந்த நிலையில் திருவிழாவை ஆலயத்திலேயே கொண்டாடுவதற்கு அனுமதி கோரி ஜனாதிபதி, கடற்தொழில் அமைச்சர், வடமாகாண ஆளுநர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இராணுவத் தளபதி எனப் பல தரப்பினரிடம் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இதுவரை இராணுவத் தரப்பிலிருந்து முறையான சாதகமான பதில்கள் கிடைக்காததால், இம்முறையும் திருவிழா தடைபட்டு விடுமோ என்ற அச்சத்தில் மயிலிட்டி மக்கள் உள்ளனர். “எம் பாட்டன் பூட்டன் தொழுத ஆலயம், எம் மண்ணின் அடையாளம் மீண்டும் எமக்குக் கிடைக்க வேண்டும்” – இதுவே மயிலிட்டி மக்களின் ஒரே கோரிக்கையாக உள்ளது. 36 ஆண்டு கால ஏக்கம் - மயிலிட்டி காணிக்கை மாதா ஆலயத்திற்கு அனுமதி கிடைக்குமா? - Global Tamil News
-
மீண்டும் நிலவுக்கு மனிதர்கள்! நாசாவின் வரலாற்றுப் பயணம்!
மீண்டும் நிலவுக்கு மனிதர்கள்! நாசாவின் வரலாற்றுப் பயணம்! written by admin February 22, 2026 அரை நூற்றாண்டு கால காத்திருப்பு முடிவுக்கு வருகிறது! நாசா (NASA) தனது அதிரடித் திட்டமான ஆர்டெமிஸ் (Artemis) திட்டத்தின் மூலம், நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் மனிதர்களை நிலவுக்கு அனுப்பத் தயாராகி வருகிறது. 📍" width="16" height="16" style="box-sizing: border-box; outline: 0px; margin: 0px; padding: 0px; border: 0px; max-width: 100%; vertical-align: top; height: auto;"> இது நிலவில் தளம் அமைப்பதற்கான முதல் படியாகக் கருதப்படுகிறது. இந்தப் பயணத்தில் முதல் முறையாக ஒரு பெண் விண்வெளி வீரரும், ஒரு கறுப்பின விண்வெளி வீரரும் நிலவைச் சென்றடைய உள்ளனர். வெறும் தரையிறங்குவது மட்டுமல்லாமல், செவ்வாய் கிரகப் பயணத்திற்கான ஒரு முன்னோட்டமாகவும் இந்தத் திட்டம் அமையவுள்ளது. உலகின் சக்திவாய்ந்த SLS (Space Launch System) ரொக்கெட் மற்றும் ஓரியன் (Orion) விண்கலம் இதில் பயன்படுத்தப்படுகின்றன. பாதுகாப்பு காரணங்கள் மற்றும் தொழில்நுட்ப சோதனைகளைப் பொறுத்து ஏவுதளத் தேதிகளில் மாற்றங்கள் இருக்கலாம். இது விண்வெளி ஆய்வில் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கமாகும்! 🚀" width="16" height="16" style="box-sizing: border-box; outline: 0px; margin: 0px; padding: 0px; border: 0px; max-width: 100%; vertical-align: top; height: auto;"> #NASA #Artemis #MoonMission #SpaceNews #ScienceTamil #Astronauts #MoonLanding #SpaceExploration #நாசா #விண்வெளி #நிலவு #ஆர்டெமிஸ் மீண்டும் நிலவுக்கு மனிதர்கள்! நாசாவின் வரலாற்றுப் பயணம்! - Global Tamil News
-
வாழ்நாள் சாதனையாளர் விருதினைப் பெற்ற ஈழத்து மெல்லிசை மன்னர் M.P.பரமேஷ்
வாழ்நாள் சாதனையாளர் விருதினைப் பெற்ற ஈழத்து மெல்லிசை மன்னர் M.P.பரமேஷ் Dec 17, 2020 அன்றும் இன்றும் என்றும் இசையை தனது வாழ்க்கையாக்கியவர். என்றும் நான் என் இசைப் பயணத்தை நிறுத்தவில்லை நிறுத்தப் போவதுமில்லை என்று இன்றும் உற்சாகத்துடன் தினமும் பாடல்கள் எழுதி இசையமைத்து பாடி வருகிறார் ஈழத்து மெல்லிசை மன்னர் M.P.பரமேஷ். தனது காதலிக்கு எழுதிய ‘உனக்கு தெரியுமா நான் உன்னை நினைப்பது’ என்ற கவிதையை, இசையமைத்து, காதலிக்காக பாடி, அதை இலங்கையின் முதலாவது தமிழிசைத் தட்டில் பதிவு செய்து வெளியிட்டவர் இவர். அவரின் காதலி “சங்கீத பூஷனம்“ சிவமாலினிதான் இவர் சாதனை புரிய காரணமானவர் என்றே சொல்லலாம். இருவருக்கும் திருமணம் ஆனதும் மாலினி அவர் கணவருடன் சகல மேடைகளிலும் பாடி வந்தார். அவர் ஒரு ‘சங்கீத பூஷணம்’ என்பதால் சினிமா பாட்டுகள் பாடும் பொழுது மிகவும் எதிர்ப்புகளை சந்தித்தார். ஒரு ‘சங்கீத பூஷணம்’ கர்னாடக சங்கீத கச்சேரிகளில் மட்டும்தான் பாட வேண்டும். சினிமா பாடல்கள் பாடி சங்கீதத்தை அவமதிக்கக் கூடாது என்றெல்லாம் குற்றம் சாட்டப்பட்டார். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் ‘சினிமா பாடலும் இசைதான்’ என்று பதில் சொல்லிவிட்டு தன் கணவருடன் தொடர்ந்து பாடினார் மாலினி. மாலினி மீது வைத்த காதல்தான் ‘உனக்கு தெரியுமா நான் உன்னை நினைப்பது’ பாடல் உருவாகி இலங்கையின் இசை வரலாற்றில் அழிக்க முடியாத சாதனை படைக்க காரணமான பாடலாகும். அதைத் தொடர்ந்து M.P.பரமேஷ் நீயின்றி நிலவு போகாதே தூர போகாதே நீ வாழுமிடமெங்கே மனமாளிகை ரோஜா எழுதுகிறேன் பாட்டு அழைக்குமோசை கேக்கலையா பாடலெனக்கிது முதல் தரம் தான் என்ற பாடல்களையும் எழுதி, இசையமைத்து பாடினார். இந்த 8 பாடல்களையயும் 3 இசைத் தட்டுகளில் வெளியிட்டார். இவைகளில் முதலாவதாக வெளியிடப்பட்ட இசைத் தட்டில் இருந்த ‘உனக்கு தெரியுமா’ பாடல் சாதனை படைத்தது. அது மட்டுமல்லாது 4-வது இசைத் தட்டில் சிங்கள பாடல்களையும் வெளியிட்டார். இந்த சிங்கள பாடல்கள் ஏற்கனவே மற்ற 3 தமிழிசை தட்டுகளிலும் M.P.பரமேஷ் அவர்களின் வரிகளிலும், இசையமைப்பிலும் வெளிவந்த பாடல்கள்தான். பின் வரும் இந்த 4 பாடல்களும் தமிழிலிருந்து சிங்கள மொழிக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பாடல்களாகும். உனக்கு தெரியுமா / Thigu neela asthekai பாடலெனக்கிது முதல் தரம் தான் / Agasagevan அழைக்குமோசை கேக்கலையா / sulanga selavanai மனமாளிகை ரோஜா / Thura arte athithe ஒரு இசையமைப்பாளர் பாடகர் கவிஞர் என்பதையும் தாண்டி அந்த காலத்தில் வெளியிடப்பட்ட இசைத் தட்டுகள், இன்டர்நெட் மற்றும் எந்த டெக்னாலஜி இல்லாத காலத்தில் பட்டி தொட்டி எல்லாம் ஒலிக்க செய்தார். இவரது புகழ் இந்தியாவரை ஒலித்தது. இந்த இசைத் தட்டுகளை வெளியிட வேண்டிய சிந்தனை எப்படி வந்தது என்று கேட்டோம். “இசைத் தட்டுகளை வெளியிட வேண்டிய காரணம் எனது இசைக் குழு தொடர்ந்து இயங்காமல் போனதுதான். எனது பாடசாலை தோழர்களையும், மற்றும் சில இசைக் கலைஞர்களையும் இணைத்துதான் முதலில் எனது இசைக் குழுவை ஆரம்பித்தேன். அதில் பெரிய வருமானம் வரவில்லை. எனக்கும் அது குறிக்கோளாக இல்லை. ஆனால், ஒவ்வொரு மனிதருக்கும் வாழ்வில் வயதுக்கேற்ற மாற்றம் வரும். எனது இசைக்குழு நண்பர்கள் அவரவர் வாழ்க்கையை கவனிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். வேலைக்கு சென்று பணம் சம்பாதிக்கவும், சிலருக்கு வெளிநாடு செல்லவும், கப்பலுக்கு வேலைக்கு செல்லவும் வாய்ப்புகள் கிட்டியது. அவர்கள் என் இசைக் குழுவை விட்டு சென்றதும் புதிய தரமான கலைஞர்கள் கிடைக்கவில்லை. கிடைத்தால் அவர்கள் நிலையாக எம்முடன் இருக்க முடியவில்லை. இலங்கையில் இசைக் கலைஞர்கள் பெரியளவில் கிடைப்பது கஷ்டம். அதனால் எனது இசைக் குழு தொடர்ந்து இயங்க முடியவில்லை. இந்த இசை நிகழ்ச்சிகளில் நாம் பெருமளவில் சினிமா பாடல்களை பாடினாலும் நான் எனது சொந்த பாடல்களையும் இயற்றி இசையமைத்து பாடினேன். அந்த பாடல்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன. அதில் சில ‘உனக்கு தெரியுமா’, ‘மீனிசை பாடிவரும்’, ‘யாழ் பாடி யாழ்பணம்’, ‘திருகோணமலை எங்கள் நாடு’ என்ற பாடல்கள் மிகவும் பிரபலமானவை. “இந்த பிரபலமான பாடல்களை இசைத் தட்டுகளில் பதிவு செய்து விடு” என்று எனக்கு மூத்த கலைஞர்களின் அறிவுரை கிடைக்க அதை பின்பற்றினேன். இசைத் தட்டுகள் வெளியிடும் முன் “இசைத் தென்றல்” என்ற பெயரில் மேடை நிகழ்ச்சிகளை செய்து மிகவும் புகழ் பெற்றோம். அப்போது எனது அம்மாவின் வேண்டுகோளுக்கிணங்கி என் தம்பியை எம்முடன் இணைத்துக் கொண்டேன். தம்பி மேடை நிகழ்ச்சிகளில் வாத்தியக் கருவி(keyboard) வாசிப்பவராக இருந்தார். அத்துடன் வாத்தியக் கருவி ஒருங்கமைப்பாளராக(orchestrator)வும் இருந்தார். அவரை மூத்த கலைஞர்கள் வழி நடத்தினார்கள். மூத்த கலைஞர்களிடம் எனக்கு என்ன தேவை என்று சொல்லி விடுவேன், அவர்கள் தமது வேலைகளை திறம்பட செய்வார்கள். நான் பாடல் வரிகள் எழுதுவது, இசையமைப்பு, பாடுவது, விளம்பர வேலைகள் பொருளாதார சிரமங்களை சமாளிப்பது என்று பொறுப்புக்களை கவனித்ததால் எனது படிப்பை நிறுத்தி விட்டு கொழும்பு சென்று தங்கி இசைத் தட்டு வெளியிடும் முன்னேற்றப்பாடுகளில் தீவிரமாக இருந்தேன். என் நண்பனும், எனது இசைக் குழுவில் முக்கிய நபராக இருந்த மகேஷ் எனக்கு பொருளாதார ரீதியில் மிகவும் உதவி செய்தார். என் தம்பியின் படிப்பு கெட்டுவிட கூடாதென்பததிற்காக நான் அவரை தொந்தரவு செய்யவில்லை. நான் இசையமைத்த பாடல்களை பதிவு செய்யும்பொழுது, இலங்கை வானொலியில் வேலை செய்த அத்தனை இசைக் கலைஞர்களையம் நாடினேன். அவர்கள் மிகவும் திறமையான வாத்திய இசைக் கலைஞர்கள். அந்தக் காலத்தில் அவர்களுக்கு கட்டுப்பாடு இருந்தது, அதாவது, அவர்கள் இலங்கை வானொலிக்கு மட்டுமே பணி புரிய வேண்டும் என்பது தான். நான் தேவையான நபர்களை தொடர்பு கொண்டு அனுமதி பெற்று அத்தனை வாத்திய கலைஞர்களையும் எனது பாடல்களை பதிவு செய்யும்பொழுது அவர்களை பயன்படுத்தி ஒழுங்கு செய்தேன். அந்த கலைஞர்கள் ஆங்கில notation வாசிக்கும் வழக்கமற்றவர்கள். ஹிந்துஸ்தானிய notationதான் எனது பாடல்கள் பதிவு செய்யும் பொழுது பாவிக்கப்பட்டன. ஹிந்துஸ்தானிய ஸ்வாரத் தட்டுகளை எனக்கோ என் தம்பிக்கோ எழுத தெரியாது. நான் அத்தனை கலைஞர்களுடனும் இருந்து எனக்கு தேவையானவற்றை கேட்டும், சொல்லியும், பாடியும் பெற்றுக் கொண்டேன். அந்த நேரத்தில் சகல விதத்திலும் எனக்கு உதவி செய்தவர் ஒரு பெரும் திறம் கலைஞர் Pappa Myskin அவர்கள். மூத்த கலைஞர்களாகிய இலங்கை வானொலி கலைஞர்கள் தான் எனது பாடல்களுக்கு சினிமா பாடல்களின் பின்னணி இசைத் தரம் இணைத்தவர்கள். ஆனால், இந்த நேரத்தில்.. இப்போதைய காலக்கட்டத்தில் எனது தம்பி “அனைத்துப் பாடல்களையும் நான்தான் இசையமைத்தேன்…” என்று சொல்வது பச்சைப் பொய். அத்துடன் “நான்தான் சகல ஸ்வாரத் தட்டுகளை notation எழுதினேன்” என்று சொல்வது அந்த ஹிந்துஸ்தானிய notation-களை எழுதிய சகல கலைஞர்களையும் அவமானப்படுத்தும் பொய்யாகும். இதை, நான் இங்கே தெளிவாக பதிவு செய்கிறேன். இசைத் தட்டுகளில், இசையமைப்பில் ஏன் அவர் பெயர் இருக்கின்றது என்று சிலர் கேட்டனர். தனது பெயரை போடாமல்விட்டால் பிரிந்துவிடுவேன் என்று சொல்வார். அதனால்தான் போட வேண்டியதாகிவிட்டது. எனக்குத் தெரியாமல் record-ல் பெயர்களை மாற்றினார். records print ஆகி வரும்பொழுதுதான் நானே அதைப் பார்த்தேன். அப்போதே எனக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது. ஆனாலும், எதையும் மாற்ற முடியவில்லை… அதற்கான பணம் அப்போது என்னிடம் இல்லை. இசையமைப்பில் வேண்டுமென்றே என் அனுமதியின்றி அவர் பெயரையும் போட்டுக் கொண்டார். என் பெயரை அதிலிருந்து அவர் அழிக்காமல்விட்டது எனது அதிஷ்டம்தான். எல்லாவற்றையும் தம்பிதானே என்று விட்டு விட்டேன். தனது பெயரை உரிமை இல்லாமல் போட்ட பின்னரும் என்னை விட்டு பிரிந்து போய் சொந்தமாக இசைக் குழு ஒன்றை அமைத்தார். அந்தக் காலத்தில் அவர் வேண்டுமென்றே செய்த தவறை இன்றும் கடைபிடிக்கிறார். இத்தனை காலமும் நான் இதைப் பற்றி பொருள்படுத்தாமல் இருந்தேன். குடும்ப விடயம் என்று கருதி வெளியில் பேசுவதில்லை. இப்பொழுது நான் பேசியாக வேண்டும். நான் இசையமைத்த சகல பாடல்களுக்கும் எனது மகள் பிரபாலினிதான் வாரிசு. வேறு யாரும் இதை உரிமை கொண்டாட என் அனுமதி இல்லை. இசையமைப்புக்கும், வாத்தியக் கருவி ஒருங்கமைப்புக்கும் வித்தியாசம் தெரியாத என் தம்பி இன்றும் குழப்பத்தில் “எனது பாடல்களுக்கெல்லாம் நான்தான் இசையமைப்பாளர்” என்று சொல்லிக் கொள்வது தவறு மற்றும் பொய். என் மனைவிக்கு என் காதலை தெரிவிக்க நான் எழுதி இசையமைத்து பாடிய “உனக்கு தெரியுமா” பாடலுக்கும் இதுதான் நிலைமை…” என்று வருத்தத்துடன் தெரிவித்தார். கவிஞர், பாடகர், இசையமைப்பாளர் ஈழத்து மெல்லிசை மன்னர் M.P. பரமேஷ் அண்ணா அவர்கள். இதுவரையிலும் 2000 பாடல்களுக்கு மேலே இசையமைத்து தயாராக வைத்திருக்கிறார், ஆனாலும், பொருளாதார ரீதியில் எல்லாவற்றையும் தரமான முறையில் பதிவு செய்து வெளியிட முடியாததால் சில நூறு பாடல்களை மட்டுமே பதிவு செய்தும், மீள் பதிவு செய்தும் வருடா வருடம் வெளியிடுகிறார். இலங்கையை பொறுத்தவரை சினிமா இப்பொழுதுதான் வளர்ந்து வருகிறது, அங்கே அந்த காலத்தில் சினிமாவில் இசையமைத்து பெயரும் புகழும் சம்பாதிக்க முடியாது என்பதை விட வாய்ப்புகள் குறைவு என்றே சொல்ல வேண்டும். ஆனால் M.P.பரமேஷ் அவர்கள் இந்திய நடிகர்கள் அளவுக்கு புகழ் பெற்றிருந்தார். 30 வருட போரில் மக்கள் உயிர்களை, உடமைகளை மட்டும் இழக்கவில்லை. அவர்கள் கலையை, கலைஞர்களின் படைப்புகளை, உணர்வுகளை இழந்துவிட்டார். M.P.பரமேஷ் அவர்களை போன்ற அற்புதமான மூத்த கலைஞர்களை ஈழத்து மக்கள்கூட மறந்துவிட்டார்கள் என்பது கவலைக்குரிய விடயம்தான். 1986-ல் ஜெர்மனி சென்ற M.P.பரமேஷ் அவர்கள் தொடர்ந்தும் இசையுடன் வாழ்ந்து வருகிறார். அவர் மனைவி மாலினி 2000-ம் ஆண்டு இறையடி அடைந்துவிட்டார். பரமேஷ் மாலினி தம்பதியினருக்கு 6 குழந்தைகள், அனைவரும் இசையில் ஆர்வமுள்ளவர்கள். பரமேஷ் மாலினியின் மூத்த மகளான, ஈழத்து மெல்லிசை குயில் “பிரபாலினி பிரபாகரன்” இலங்கையின் முதல் தமிழ் பெண் இசையமைப்பாளர் என்ற பெருமைக்குரியவர். பிரபாலினி இந்தியாவில் 2016 முதல் ஈழத் தமிழ் மகளாக எடிசன் விருது பெற்ற பெருமைக்குரியவர். இசையில் அமைதியாக பல தரப்பினருடன் இணைந்து பணி புரிந்து வருகிறார். ரசிகர்களால் Queen Cobra என்று அழைக்கப்படுபவர் இந்த ஈழத் தமிழ் மகள். கடந்த ஆண்டு M.P.பரமேஷ் அவர்கள் தனது இசை வாழ்வின் GOLDEN JUBILEE விழாவைக் கொண்டாடினார். உலகெங்கும் வாழும் பல கலைஞர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். பல விருதுகளை பெற்ற பரமேஷ் அவர்களுக்கு 2019ல் ஜெர்மனியில் வெற்றி மணி பத்திரிகையின் வாழ்நாள் சாதனையாளர் விருது, மற்றும் tamil mirror canadaவின் வாழ்நாள் சாதனையாளர் விருதும் கிடைக்கப் பெற்றார். இன்றும் தனது மனைவிக்காக பாடல்கள் எழுதி இசையமைத்து வெளியிட்டு வரும் அன்பு காதலன்! காதல் உள்ளவரை உங்கள் இசை என்றும் ஒலித்துக்கொண்டே இருக்கும்! பரமேஷ் அவர்களின் பாடல்களை itunes, sportify மற்றும் சகல digital platformகளிலுல் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். https://tamilcinetalk.com/tamil-eelam-singer-music-director-m-p-paramesh-story/?fbclid=IwY2xjawQHO3BleHRuA2FlbQIxMQBzcnRjBmFwcF9pZBAyMjIwMzkxNzg4MjAwODkyAAEe2q5jz2lmVoJjwhQzLpT-_KzevRtxbdRhbeZO_gmz0eVEv49ugEjaVTP1z4Y_aem_F1pbhkZepXLubhEFf3n9wg
-
றோசா முள்ளா? மலரா??
வைத்தியசாலையில் தங்கி இருக்கும் அழவுக்கு ரோசா குத்தி விட்டதா...? காலையில் யாழில் புதியவர் ஒருவரை இன்ரவியூ எடுத்து கொண்டு இருந்தாரே..🤭.சரி பூரண நலம் பெற்று வீடு திரும்புங்கோ சிறியண்ண.👋