Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உடையார்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by உடையார்

  1. பிரியாணி செஞ்சா இப்படி செய்யணும் அவ்வளவு ருசி|காளான் பிரியாணி செய்வது
  2. This piece is interpreted from the perspective of a Gopika who reminisces in the memories that she had of Krishna as she walks through Vrindavan. Everything around her reminds her of Krishna and she thinks of the moments that they spent together as she describes his beauty. பிருந்தாவன் வழியாக நடந்து செல்லும்போது கிருஷ்ணாவைப் பற்றிய நினைவுகளை நினைவுபடுத்தும் கோபிகாவின் கண்ணோட்டத்தில் இந்த துண்டு விளக்கப்படுகிறது. அவளைச் சுற்றியுள்ள அனைத்தும் கிருஷ்ணாவை நினைவூட்டுகின்றன, மேலும் அவர் தனது அழகை விவரிக்கையில் அவர்கள் ஒன்றாகக் கழித்த தருணங்களைப் பற்றி அவள் நினைக்கிறாள்.
  3. மேஜர் நாயகன் நிதர்சன களப் படப்பிடிப்பாளர் மேஜர் நாயகன். மேஜர் நாயகன், பேரம்பலம் யோகேஸ்வரன்; இவன் 1989 காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்து, பல களங்களில் பங்கெடுத்து 09.06.1992 அன்று முல்லைத்தீவு அளம்பில் பகுதியில் முன்னேறிய சிறீலங்கா இராணுவத்தினருடனான மோதலின்போது தனது இடது காலை இழந்தவன். தன் பணியில் இடைவிடாது ஏதாவது போராட்டத்திற்குப் பயன் தரக்கூடியதாக செய்யவேண்டும் என்ற ஆர்வமுடையவன். இவன் தொழில்நுட்பத்துறையில் பெரிதும் நாட்டம் உடையவன். 1993ம் ஆண்டுக் காலப் பகுதியில் காணொளிப் பதிவு மற்றும் காணொளித் தொகுப்புப் பயிற்சிக்காக லெப்டினன்ட் கேணல் நவம் அறிவுக்கூடத்திற்கு அனுப்பப்பட்டான், பயிற்சி முடிந்து 1994 காலப்பகுதியில் நிதர்சனப்பிரிவு பணிகளுக்காக படப்பிடிப்பு மற்றும் படத்தொகுப்புப் அனுப்பப்பட்டான். சிறந்த ஒரு படப்பிடிப்பாளன் அதைவிட சிறந்த ஒரு படத்தொகுப்பாளன். இவன் ஒளிவீச்சின் பல நிகழ்ச்சிகள் குறும்படங்கள் (ஒருசூடு), விவரணங்கள் என்பவற்றை தொகுத்து வந்தான். குறிப்பாக ஓயாத அலைகள் -2 விவரணத்தில் இவனது ஆற்றல் திறமை நன்கு புலப்பட்டன. நவம் அறிவுக்கூடப் பயிற்சி முடிந்து சிறந்த ஒளிப்பதிவாளன், படத்தொகுப்பாளன் என்னும்பெயரைப் பெற்று தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் சான்றிதழ்களையும் பெற்றவன் மேஜர் நாயகன். தன்னோடு இருக்கும் போராளிகளை பெரிதும் நேசிப்பவன், இவன் தலைவர் மீது வைத்திருந்த பற்று, பாசம் கணக்கிடமுடியாதவை, எவ்வளவு வேலை கொடுத்தாலும் முகம் சுழிக்காமல் செய்வான், கால் ஒன்றை இழந்த நிலையிலும் திறமையாக செயற்பட்ட இந்த வேங்கை 23.08.2001 அன்று கொக்குத் தொடுவாய் படை சிறுமுகாம் (மினிமுகாம்) தாக்குதலை படமாக்கிவிட்டு வரும் போது எதிரியின் எறிகணை ஒன்று அவன் அருகில் வீழ்ந்து வெடித்ததில் அந்த இடத்திலேயே தன் கணொளிப்படக் கருவியை அணைத்தபடி தாய் மண்ணை முத்தமிட்டான். நாயகன் வீரச்சாவு என்னும் சேதி கேட்டுத் திகைத்தோம் மனதுக்குள் அழுதுவிட்டு நிமிர்ந்தோம். இவன் மட்டுமா இவனைப் போல் பல படப்பிடிப்புப் போராளிகளை இந்த மண் இழந்துள்ளது. இவர்கள் வரிசையில் மேஐர் நாயகமும் இணைந்துவிட்டான், இவன் மக்கள்மீதும் மண்மீதும் தலைவர் மீதும் வைத்த பற்றை செயல்மூலம் காட்டிச் சென்றான். எனினும் இவன் விட்ட இந்தப் பணியை நாம் தொடர்வோம் என்று இவன் விதைகுழி மீது உறுதியெடுத்துக் கொள்வோமாக. நன்றி: எரிமலை இதழ் (சித்திரை 2002). https://thesakkatru.com/mejor-nayagan/
  4. தரணிதனில் அறுபத்து அறுகோடி தீர்த்தமும் சரவ ணத்துள் அடக்கம் சாற்றுமோர் எழுகோடி மந்திரங் களுமுன் சடாக்ஷ ரத்துள் அடக்கம் விரதமிகு நவகோடி சித்தர்களும் உனதுசுப வீக்ஷணத் தனில் அடக்கம் மேலான தேவால யங்களும்உன் ஆறுபடை வீட்டி னிற்குள் அடக்கம் இரவிமுதல் முப்பது முக்கோடி தேவருமுன் இதயக் கமலத் தடக்கம் ஈரேழு புவனமுதல் அண்டங்கள் பலவும்உன் இடத்தினில் அடக்கம் ஐயா வரிசைமிகு பக்தஜன பரிபால னாமோக வள்ளி குஞ்சரி மணாளா வனசமலர் அயன்மதனை அருள்சரச கோபாலன் மருகச ரவண முருகனே
  5. இரத்தக்கோட்டைக்குள்ளே நான் நுழைந்துவிட்டேன் இனி எதுவும் அணுகாது எந்தத் தீங்கும் தீண்டாது - (2) 1. நேசரின் இரத்தம் என்மேலே நெருங்காது சாத்தான் - (2) பாசமாய் சிலுவையில் பலியானார் பாவத்தை வென்று விட்டார் - (2) 2. இம்மட்டும் உதவின எபினேசரே இனியும் காத்திடுவார் - (2) உலகிலே இருக்கும் அவனை விட என் தேவன் பெரியவரே - (2) 3. தேவனே ஒளியும் மீட்புமானார் யாருக்கு அஞ்சிடுவேன் - (2) அவரே என் வாழ்வின் பெலனானார் யாருக்கு பயப்படுவேன் - (2) 4. தாய் தன் பிள்ளையை மறந்தாலும் மறவாத என் நேசரே - (2) ஆயனைப் போல நடத்துகிறீர் அபிஷேகம் செய்கின்றீர் – என்னை - (2) 5. மலைகள் குன்றுகள் விலகினாலும் மாறாது உம் கிருபை - (2) அநாதி சிநேகத்தால் இழுத்துக்கொண்டீர் அணைத்து சேர்த்துக் கொண்டீர் - (2)
  6. அன்பு என்றாலும் இயேசுபிரான் ஆதி என்றாலும் இயேசுபிரான் இரக்கமென்றாலும் இயேசுபிரான்
  7. கோமான் நபிகள் தோன்றாவிட்டால்... || இசை முரசு E.M.நாகூர் ஹனிபா | பள்ளபட்டி கச்சேரி.
  8. எனக்கும் இடம் உண்டு (எனக்கும் இடம் உண்டு அருள் மணக்கும் முருகன் மலரடி நிழலில் எனக்கும் இடம் உண்டு) அருள் மணக்கும் முருகன் மலரடி நிழலில் எனக்கும் இடம் உண்டு கார்த்திகை விளக்கு பெண்களுடன் திருக் காவடி சுமக்கும் தொண்டருடன் (2) தினம் பூத்திடும் ஞான மலர்களுடன் ஒரு புல்லாய் முளைத்து தடுமாறும் புல்லாய் முளைத்து தடுமாறும் (எனக்கும் … ) நேற்றைய வாழ்வு அலங்கோலம் அருள் நெஞ்சில் கொடுத்தது நிகழ்காலம் (2) வரும் காற்றில் அணையா சுடர்போலும் இனி கந்தன் தருவான் எதிர்காலம் கந்தன் தருவான் எதிர்காலம் (எனக்கும் … ) ஆடும் மயிலே என்மேனி அதில் அழகிய தோகை என் உள்ளம் (2) நான் உள்ளம் என்னும் தோகையினால் கந்தன் உறவு கண்டேன் ஆகையினால் உறவு கண்டேன் ஆகையினால் (எனக்கும் … ).
  9. ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய உலகை ஆளும் இனிய நாமம்
  10. ஸ்ரீமன் நாராயண ஸ்ரீமன் நாராயண ஸ்ரீமன் நாராயண நீ ஸ்ரீ பாதமே ஷரனு கமலா சதி மூகக்கமல கமலஹித கமலப்ரியா கமலெக்ஷனா கமலா சனசாஹித, கருட கமன ஸ்ரீ கமலலா நாபா நீ பதகமலமே ஷரனு || 1 || பரம யோகிஜன பாகதேய ஸ்ரீ பரமபுருஷா பராத்பரா பரமாத்மா பரமானுருப ஸ்ரீ திருவேங்கதாகிரிதேவா ஷரனு || 2 ||
  11. யேசு நாமம் ஒன்றை நம்புவீர், பூலோகத்தாரே. யேசு நாமம் ஒன்றை நம்பும்; ரட்சண்யத்துக் கிதுவே ஸ்தம்பம்; பேசும் வேறே நாமமெல்லாம் பேருலகை ரட்சிக்காதே, - யேசு பார்த்திபன் தவீது குல கோத்திரக் கன்னிமரிபால், நேத்திரம் போலே உதித்து நேமியின் ரட்சகனான, - யேசு பூதலத் தஞ்ஞான இருள் போக்கவே மெஞ்ஞான பெருஞ் ஜோதியாய் விளங்கும் நீதிச் சூரிய னான மகத்வ - இயேசு பாவிகளீடேற மோட்ச பாக்கியம் பெறுவதற்காய் ஜீவன் விட்டுயிர்த்தெழுந்து சேணுலகுக் கேறிச் சென்ற, - யேசு விண்டலத்தவர்கள் சூழ, வெருண்டலகை பதறி வீழ; மண்டலத்தைத் தீர்வை செய்ய மாமுகில் மீதேறி வரும், - யேசு
  12. யா ஷபியே... யா ஷஹீதே... ரசூலுல்லாஹ்
  13. தனத்ததன தான தந்த தனத்ததன தான தந்த தனத்ததன தான தந்த ...... தனதான ......... பாடல் ......... மனக்கவலை யேது மின்றி உனக்கடிமை யேபு ரிந்து வகைக்குமநு நூல்வி தங்கள் ...... தவறாதே வகைப்படிம னோர தங்கள் தொகைப்படியி னாலி லங்கி மயக்கமற வேத முங்கொள் ...... பொருள்நாடி வினைக்குரிய பாத கங்கள் துகைத்துவகை யால்நி னைந்து மிகுத்தபொரு ளாக மங்கள் ...... முறையாலே வெகுட்சிதனை யேது ரந்து களிப்பினுட னேந டந்து மிகுக்குமுனை யேவ ணங்க ...... வரவேணும் மனத்தில்வரு வோனெ என்று னடைக்கலம தாக வந்து மலர்ப்பதம தேப ணிந்த ...... முநிவோர்கள் வரர்க்குமிமை யோர்க ளென்பர் தமக்குமன மேயி ரங்கி மருட்டிவரு சூரை வென்ற ...... முனைவேலா தினைப்புனமு னேந டந்து குறக்கொடியை யேம ணந்து செகத்தைமுழு தாள வந்த ...... பெரியோனே செழித்தவள மேசி றந்த மலர்ப்பொழில்க ளேநி றைந்த திருப்பழநி வாழ வந்த ...... பெருமாளே.
  14. நிலவும் தூங்கும் மலரும் தூங்கும் வேளையில். கண்ணுறக்கம் இல்லாமல் ஏங்கித் தவிப்பதேன். இதயமே இதயமே காத்திடக் கடவுள் உண்டு .
  15. நினைவெல்லாம் மக்கத்து நபி மீது
  16. யாழ்ப்பாணம் உடுவில் மீனாட்சி அம்மன் ஆலயம் பதிகம் பாடல் இசை -K.ஜெயந்தன் https://www.facebook.com/jeyanthancom... வரிகள் -T.பிரதாபன் பாடியவர் -G.Gசாந்தன் தயாரிப்பு -கவிஞர் சிந்து ராகவன்
  17. உடுத்துறை மண்ணில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் வேம்படி வைரவர் புகழ் கூறும் பாடல் இது பாடல் இசை -இசை வேந்தன் .கந்தப்பு ஜெயந்தன் பாடல் வரிகள் -சின்னப்பு பாலா (நோர்வே ) பாடல் தயாரிப்பு -S.S.சங்கரப்பிள்ளை குடும்பத்தினர்
  18. சிந்திக்கும் ஆற்றலை பெற்றவரே || இசைமுரசு நாகூர் E.M.ஹனிபா | கச்சேரி பாடல்கள்
  19. ஆசி தந்தருள்வாய் அம்மா அழகான காசியிலே வாழும் விசாலாட்சி
  20. குழலாக பிறப்பேனோ கண்ணா உந்தன் விரல் தீண்ட கனி வாயில் இசை பாடுவேன் மயிலாக பிறப்பேனோ கண்ணா உந்தன் மயிர்க்காலில்
  21. அழகெல்லாம் முருகனே ... அருளெல்லாம் முருகனே தெளிவெல்லாம் முருகனே ... தெய்வமும் முருகனே அழகெல்லாம் முருகனே ... அருளெல்லாம் முருகனே தெளிவெல்லாம் முருகனே ... தெய்வமும் முருகனே ... தெய்வமும் முருகனே பழஞானப் பசியாலே ... பழநிக்கு வந்தவன் (x2) பழமுதிர்ச்சோலையிலே ... பசியாறி நின்றவன் (x2) ... பசியாறி நின்றவன் அழகெல்லாம் முருகனே ... அருளெல்லாம் முருகனே தெளிவெல்லாம் முருகனே ... தெய்வமும் முருகனே ... தெய்வமும் முருகனே குன்றெல்லாம் ஆள்பவன் ... குகனாக வாழ்பவன் (x2) குறவள்ளிக் காந்தனவன் ... குறிஞ்சிக்கு வேந்தனவன் (x2) பூவாறு முகங்களிலே ... பேரருள் ஒளிவீசும் (x2) நாவாறப் பாடுகையில் ... நலம்பாடும் வேலனவன் (x2) அழகெல்லாம் முருகனே ... அருளெல்லாம் முருகனே தெளிவெல்லாம் முருகனே ... தெய்வமும் முருகனே ... தெய்வமும் முருகனே.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.