Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உடையார்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by உடையார்

  1. மூன்று தமிழ் வாங்க நாலு பொருள் தந்து
  2. என் தேடல் நீ என் தெய்வமே நீயின்றி என் வாழ்வு நிறம் மாறுதே உனை மனம் தேடுதே நீ வழிகாட்டுமே - 2 இறைவா இறைவா வருவாய் இங்கே இதயம் அருகில் அமர்வாய் இன்றே - 2 ஒரு கோடி விண்மீன்கள் தினம் தோன்றினும் நீயின்றி என் வாழ்வு இருள் சூழ்ந்திடும் பிறர் அன்பை என் பணியில் நான் ஏற்கையில் உன் அன்பு உயிர் தந்து வாழ்வாகிடும் இறைவார்த்தையில் நிறைவாகுவேன் மறைவாழ்விலே நிலையாகுவேன் வழி தேடும் எனைக் காக்க நீ வேண்டுமே -இறைவா உன்னோடு நான் காணும் உறவானது உள்ளத்தை உருமாற்றி உனதாக்கிடும் பலியான உனை நானும் தினம் ஏற்கையில் எளியேனில் உன் வாழ்வு ஒளியாகிடும் உன் மீட்டலால் எனில் மாற்றங்கள் உன் தேடலால் எனில் ஆற்றல்கள் வழி தேடும் எனைக் காக்க நீ வேண்டுமே -இறைவா
  3. கோதையின் திருப்பாவை வாசகன் எம்பாவை கூப்பிடும் குரல்கேட்டு கண்ணன் வந்தான் மாதவர் பெரியாழ்வார் மன்னவர் குலத்தாழ்வார் ஒதியமொழி கேட்டு கண்ணன் வந்தான் (கோதையின் திருப்பாவை) வாரணம் அணியாக வலம்வரும் மணநாளில் மாதவன் வடிவாகக் கண்ணன் வந்தான் மார்கழிப் பனிநாளில் மங்கையர் இளம்தோளில் கார்குழல் வடிவாகக் கண்ணன் வந்தான் ஆவணிப் பொன்னாளில் ரோகிணி நன்னாளில் அஷ்டமிதிதி பார்த்துக் கண்ணன் வந்தான் அந்தியில் இடம்மாறி சந்தியில் முகம்மாறி சிந்தையில் சிலையாகக் கண்ணன் வந்தான் பொன்மகள் பாஞ்சாலி பூந்துகில் தனைகாக்க தென்றலின் வடிவாகக் கண்ணன் வந்தான் போர்முகம் பார்த்தனின் புயங்களைக் காத்திட கீதையின் வடிவாகக் கண்ணன் வந்தான் ஏழைக் குசேலனுக்கு்த் தோழமை தாள்தந்து வாழவைப்பேன் என்று கண்ணன் வந்தான் வாழிய பாடுங்கள் வலம்வந்து தேடுங்கள் வந்துநிற்பான் அந்தக் கண்ணன் என்பான்!
  4. அமர ஜீவிதம் சுவாமி அமுத வாசகம் பதித பாவனம் சுவாமி பக்த சாதகம் ஓம் ஓம் அமர ஜீவிதம் சுவாமி அமுத வாசகம் பதித பாவனம் சுவாமி பக்த சாதகம் ஓம் ஓம் முரளிமோகனம் சுவாமி அசுர மர்த்தனம் கீத போதகம் ஸ்ரீ கிருஷ்ண மந்திரம் அமர ஜீவிதம் சுவாமி அமுத வாசகம் பதித பாவனம் சுவாமி பக்த சாதகம் ஓம் ஓம் ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம்! நளின தெய்வதம் சுவாமி மதன ரூபகம் நாக நர்த்தனம் சுவாமி மான வஸ்திரம் பஞ்ச சேவகம் சுவாமி பாஞ்ச சன்னியம் கீதபோதகம் ஸ்ரீ கிருஷ்ண மந்திரம் ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம் அமர ஜீவிதம் சுவாமி அமுத வாசகம் பதித பாவனம் சுவாமி பக்த சாதகம் ஓம் ஓம் ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம் சந்தியா பங்கஜம் சுவாமி அந்திய புஷ்பகம் சர்வ ரட்சகம் சுவாமி தர்ம தத்துவம் ராக பந்தனம் சுவாமி ராச லீலகம் கீதபோதகம் ஸ்ரீ கிருஷ்ண மந்திரம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஹரி ஓம் அமர ஜீவிதம் சுவாமி அமுத வாசகம் பதித பாவனம் சுவாமி பக்த சாதகம் ஓம் ஓம் ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம்
  5. உன்னைத்தான் பாடவந்தேன் வண்ண மயில் வேல் முருகா உண்னைக்கண்டு மறந்துவிட்டேன்
  6. இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோனியாரே
  7. நான் சாப்படுவதில்லை பல காலமகா பரோட்டா சால்னா_Road side parota salna in tamil /பரோட்டா குருமா https://www.youtube.com/watch?v=mYn-s_h9RL8 https://www.youtube.com/watch?v=QYs-TIQb9rQ
  8. சிலம்புகூறும் பதினோராடல் - மலர் வணக்கம்
  9. ஆவணி வந்ததும் புண்ணிய சதுர்த்தி நாளும் பிறந்ததம்மா அதி காலை முதலே மங்கள மேளம் ஒலிக்குதம்மா கஜ முகனின் வரவை காண குடும்பம் வாசலில் கூடுதம்மா மாகோலம் இட்டொரு மணை மேல் வந்தால் ஆரத்தி ஆகுதம்மா! கணபதி ராஜா வந்தாராம் மனையில் இன்றே பொன்னாளாம்! கணபதி ராஜா வந்தாராம் மணையில் இன்றே பொன்னாளாம்! ஓம் அர்த விநாயக துர்கா விநாயகா, பீமா சண்ட விநாயகா, தேகரி விநாயகா, உத்தண்ட விநாயகா, பாசவாணி விநாயகா, கர்ப விநாயகா, சித்தி விநாயகா, லம்போதர விநாயகா, பூர்ணதந்த விநாயகா, சால கடன்கட விநாயகா, புஷ்பாண்ட விநாயகா, கொண்ட விநாயகா, வேதா வேஷ விநாயகா, ராயபுத்திர விநாயகா, பிரணவ விநாயகா, திசை ஆதி கிழக்கின் முகம் நோக்கி அமர்ந்த சூர்யா சந்திர கோடி பிரகாச ஓம் வல்லார கணபதி, கபில கணபதி, துண்டி கணபதி, வக்ரதுண்ட கணபதி, மகோதக கணபதி, ஹேரம்ப கணபதி, கணநாத கணபதி, விக்னேஷ கணபதி, விக்னஹார கணபதி, பாலாசந்திர கணபதி, சுற்பகர்ண கணபதி, ஜெஷ்டராஜா கணபதி, கஜானன கணபதி, மகோத்கட கணபதி, கிழக்கு நோக்கி அமர்ந்த விநாயகா! என் வழக்கு என்று முடியும் வந்தருள்வாய் தும்பிக்கை ஆண்டவா! வெண் பஞ்சில் உருட்டி விநாயகனுக்கொரு மாலை இடுகின்றார் கரு மணியை எடுத்து கருணை பொங்கும் விழியாய் வைக்கின்றார் பொறிநூலும் இட்டே களி மண் சிலையில் கணபதியை கண்டார் திரு நீரும் பூசி குடையும் வைத்து குல குரு ஆக்குகின்றார்! கணபதி ராஜா வந்தாராம் மனையில் இன்றே பொன்னாளாம்! கணபதி ராஜா வந்தாராம் மனையில் இன்றே பொன்னாளாம்! ஓம் வக்ர துண்ட விநாயக ஏக தந்த விநாயகா! திருமுக விநாயகா பஞ்சாஷ்ச்ச விநாயகா! ஹேரம்ப விநாயகா வரத விநாயகா! மோதக விநாயகா! அபயத விநாயகா! சிம்ஹதுண்ட விநாயகா! கூநிதாக்ஷ விநாயகா! சிப்ர பிரகாச விநாயகா! சிந்தாமணி விநாயகா! தந்த ஹஸ்த விநாயகா! விசின்ட்டில விநாயகா! உர்தண்டமுண்ட விநாயகா! என் குற்ற குறையோடு தெற்கு முகம் நோக்கி அமர்ந்த சூர்ய சந்திர கோடி பிரகாச ஓம் ஞாநேச கணபதி, கர்மவ கணபதி, யோகேச கணபதி, சித்தி வித்தி கணபதி, சிந்தாமணி கணபதி, புத்தீச கணபதி, மஹா கணபதி, பூர்நானந்த கணபதி, லக்ஷ்மீச கணபதி, சகதேச கணபதி, ஏகதந்த கணபதி, லம்போதர கணபதி, தூம்ப்ரவர்ண கணபதி, சிப்ர பிரசாத கணபதி, தெற்கு திசை நோக்கி அருளும் விநாயகா! உனக்கு அர்ச்சனை முடித்து அபிஷேகம் ஆகிறது மனம் குளிர்வாய் கஜராஜ கருணாகரா! படையல் வைத்தே பூஜை செய்தோம் எங்கள் கணநாதா நடு நடுவே எங்கள் குறையும் சொன்னோம் காதில் கேட்கிறதா உன் மூஷிகமும் என் மனதை போலே சின்னஞ்சிரிதல்லவோ அது கடவுளை தாங்குது எந்தன் மனமோ பாவம் சுமந்ததுவோ! கணபதி ராஜா வந்தாராம் மனையில் இன்றே பொன்னாளாம்! கணபதி ராஜா வந்தாராம் மனையில் இன்றே பொன்னாளாம்! ஓம் சூலதந்த விநாயகா, களிப்ரிய விநாயகா, சதுர்தந்த விநாயகா, த்யிமுக விநாயகா, ஜ்யேஷ்ட விநாயகா, கஜ விநாயகா, கால விநாயகா, நாகேச விநாயகா, மணிகர்ணிக விநாயகா, ஆஷா விநாயகா, ஸ்ருஷ்டி விநாயகா, யக்ஷ விநாயகா, கஜகர்ண விநாயகா, சித்ரகண்டா விநாயகா, மங்கள விநாயகா, மித்ர விநாயகா. ஆழிசூழ் உலகில் மேற்க்கை நோக்கி அமர்ந்த சூர்ய சந்திர கோடி பிரகாச ஓம் விநாயகாய கணபதி விக்ட கணபதி, ஆசபூர்னாக கணபதி, சூம்ப்ரதேச கணபதி, பிரமோத கணபதி, மோத கணபதி, சுமுக கணபதி, துர்முக கணபதி, வாசவாணி கணபதி, பரேச கணபதி, லாபேச கணபதி, தரநீதர கணபதி, மங்களேச கணபதி, மூஷிக த்வஜ கணபதி. மேற்கு முகம் நோக்கி அமர்ந்த விநாயகா! எமை காத்தருள்வாய் மதகரிமுக கணநாயகா! பாரதம் எழுதிய பண்டிதனுக்கு நாமாவளி சொன்னார் அந்த மூவுலகத்தை காப்பவனிங்கே மூன்றடி தானிருந்தார் வெண் கட்டு உடுத்தி குட்டி கொண்டு தொழுதோம் கணபதியே! இப்பிறவி கடலின் ஆழம் அறிய கரைச்சேர்தருள்வாயே! கணபதி ராஜா வந்தாராம் மனையில் இன்றே பொன்னாளாம்! கணபதி ராஜா வந்தாராம் மனையில் இன்றே பொன்னாளாம்! ஓம் மோத விநாயகா! பிரமோத விநாயகா! சுமுக விநாயகா! துர்முக விநாயகா! கணநாத விநாயகா! ஞான விநாயகா! பிராண விநாயகா! அவிமுக்த விநாயகா! ஐஸ்வர்யா மழை பொழியும் வடக்கு திக்கு நோக்கி அமர்ந்த சூர்ய சந்திர கோடி பிரகாச ஓம் மயுரப்ரஜ கணபதி ராஜேச கணபதி ப்ருத்யுமேச கணபதி ஒம்காரேச கணபதி குணேச கணபதி வரத கணபதி சித்தி புத்திப கணபதி கணேச கணபதி சதுர்பாஹு கணபதி த்ரிநேத்திர கணபதி கஜமஸ்த கணபதி நிதிப கணபதி கஜகர்ண கணபதி சிந்தாமணி கணபதி வடக்கு முகம் நோக்கி அமர்ந்த விநாயகா எமக்கென்று இருக்கும் ஓர் கதியும் நீதானே உனக்கு கோடி நமஸ்காரம் நாமாவளி நிவேத்யம் அர்ப்பணம் சமர்ப்பணம்! ஒரு ஆண்டுக்கொரு முறை வந்தருள் புரியும் மத்திமுகத்தோனே! நீ மீண்டும் மீண்டும் எழுந்தருள்வாயே எங்கள் மனையினிலே! ஒரு சிறு குறைகள் செய்திருந்தாலும் மன்னிதருள்வாயே! வந்தேன் இருந்தேன் சந்தோஷம் என அருள் மழை போழிவாயே! கணபதி ராஜா வந்தாராம் மனையில் இன்றே பொன்னாளாம்! கணபதி ராஜா வந்தாராம் மனையில் இன்றே பொன்னாளாம்! ஶ்ரீ கணேஷா போற்றி
  10. அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
  11. ஐந்து கடமைகளில் எத்தனை தத்துவங்கள் அத்தனையும் சொர்கத்தின் சங்கை மிகு முத்திரைகள் ஐந்து கடமைகளில் எத்தனை தத்துவங்கள் அத்தனையும் சொர்கத்தின் சங்கை மிகு முத்திரைகள் தீனோரே கேளுங்கள் திருமறை வழி வாருங்கள் தீனோரே கேளுங்கள் திருமறை வழி வாருங்கள் வித்தகன் அல்லாவின் உத்தம தூதர் நபி இத்தரையோர்க் குரைத்த போதம் வித்தகன் அல்லாவின் உத்தம தூதர் நபி இத்தரையோர்க் குரைத்த போதம் சத்திய இஸ்லாத்தின் முத்தான கொள்கையின் சொத்தாக கிடைத்திட்ட வேதம் சத்திய இஸ்லாத்தின் முத்தான கொள்கையின் சொத்தாக கிடைத்திட்ட வேதம் தீனோரே கேளுங்கள் திருமறை வழி வாருங்கள் தீனோரே கேளுங்கள் திருமறை வழி வாருங்கள் கலிமா தொழுகையுடன் கவின் மிகு நோன்பிருந்து கனிவுடன் ஜக்காத்தைக் கொடுத்து கலிமா தொழுகையுடன் கவின் மிகு நோன்பிருந்து கனிவுடன் ஜக்காத்தைக் கொடுத்து நலமுடன் உடலும் பொருளும் இருந்தால் ஹஜ்ஜை முடிக்கணும் அடுத்து நலமுடன் உடலும் பொருளும் இருந்தால் ஹஜ்ஜை முடிக்கணும் அடுத்து தீனோரே கேளுங்கள் திருமறை வழி வாருங்கள் தீனோரே கேளுங்கள் திருமறை வழி வாருங்கள் இறைவன் ஒருவன் என்ற இனிய கொள்கையை மறையாய் கொண்டது இஸ்லாம் இறைவன் ஒருவன் என்ற இனிய கொள்கையை மறையாய் கொண்டது இஸ்லாம் முறையாய் மனிதர்களை ஓர் குலமாக்கிட நெறியாய் திகழ்வது இஸ்லாம் முறையாய் மனிதர்களை ஓர் குலமாக்கிட நெறியாய் திகழ்வது இஸ்லாம் தீனோரே கேளுங்கள் திருமறை வழி வாருங்கள் தீனோரே கேளுங்கள் திருமறை வழி வாருங்கள் உள்ளத்தில் ஒளி ஊட்டி உணர்வில் அருள் கூட்டி கண்ணியம் காத்திடும் மார்கம் உள்ளத்தில் ஒளி ஊட்டி உணர்வில் அருள் கூட்டி கண்ணியம் காத்திடும் மார்கம் மன்னர் முஹம்மதை ஜன்னத்தில் காண்பதற்க்கு புண்ணிய வழி சொல்லும் மார்கம் மன்னர் முஹம்மதை ஜன்னத்தில் காண்பதற்க்கு புண்ணிய வழி சொல்லும் மார்கம் தீனோரே கேளுங்கள் திருமறை வழி வாருங்கள் தீனோரே கேளுங்கள் திருமறை வழி வாருங்கள் ஐந்து கடமைகளில் எத்தனை தத்துவங்கள் அத்தனையும் சொர்கத்தின் சங்கை மிகு முத்திரைகள் ஐந்து கடமைகளில் எத்தனை தத்துவங்கள் அத்தனையும் சொர்கத்தின் சங்கை மிகு முத்திரைகள் தீனோரே கேளுங்கள் திருமறை வழி வாருங்கள் தீனோரே கேளுங்கள் திருமறை வழி வாருங்கள்
  12. உனையன்றி --- லூர்து அன்னை பாடல்
  13. 1.காக்கைச் சிறகினிலே நந்தலாலா-நின்றன் கரியநிறந் தோன்றுதையே நந்தலாலா; 2. பார்க்கு மரங்கலெல்லாம் நந்தலாலா -நின்றன் பச்சைநிறந் தோன்றுதையே நந்தலாலா; 3. கேட்கு மொலியிலெல்லாம் நந்தலாலா - நின்றன் கீத மிசைக்குதடா நந்தலாலா; 4.தீக்குள் விரலைவைத்தால் நந்தலாலா-நின்னைத் தீண்டுமின்பம்ந் தோன்றுதடா நந்தலாலா.
  14. முத்தைத் தருபத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக் குருபர எனஓதும் முத்தைத் தருபத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக் குருபர எனஓதும் முக்கட்பரமற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித்திருவரும் முப்பத்துமூவர்க்கத் தமரரும் அடிபேண முக்கட்பரமற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித்திருவரும் முப்பத்துமூவர்க்கத் தமரரும் அடிபேண பத்துத்தலை தத்தக் கணைதொடு ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாகப் பத்துத்தலை தத்தக் கணைதொடு ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாகப் பத்தற் கிரதத்தைக் கடவிய பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள் பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ஒருநாளே பத்தற் கிரதத்தைக் கடவிய பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள் பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ஒருநாளே தித்தித் தெய ஒத்தப் பரிபுர நிர்த்தப்பதம் வைத்துப்பயிரவி திக்கொக்கு நடிக்கக் கழுகொடு கழுதாடத் தித்தித் தெய ஒத்தப் பரிபுர நிர்த்தப்பதம் வைத்துப்பயிரவி திக்கொக்கு நடிக்கக் கழுகொடு கழுதாடத் திக்குப் பரி அட்டப் பயிரவர் தொக்குத் தொகு தொக்குத் தொகுதொகு சித்ரப்பவுரிக்குத் ரிகட கெனவோதக் திக்குப் பரி அட்டப் பயிரவர் தொக்குத் தொகு தொக்குத் தொகுதொகு சித்ரப்பவுரிக்குத் ரிகட கெனவோதக் கொத்துப்பறை கொட்டக் களமிசை குக்குக் குகு குக்குக் குகுகுகு குத்திப் புதை புக்குப் பிடியென முதுகூகை கொத்துப்பறை கொட்டக் களமிசை குக்குக் குகு குக்குக் குகுகுகு குத்திப் புதை புக்குப் பிடியென முதுகூகை கொட்புற்றெழ நட்பற் றவுணரை வெட்டிப்பலி இட்டுக் குலகிரி குத்துப்பட ஒத்துப் பொரவல பெருமாளே! கொட்புற்றெழ நட்பற் றவுணரை வெட்டிப்பலி இட்டுக் குலகிரி குத்துப்பட ஒத்துப் பொரவல பெருமாளே
  15. அம்மா மரியே பெரியநாயகி வாழ்க அருள் நிறை மரியென அழைத்திடும் போது அருகினில் வருவாய் தாயே அமைதியை தருவாய் நீயே அம்மா மரியே பெரியநாயகி வாழ்க ஆபத்தில் அழைத்தோம் அபயம் தருவாய் அண்டி வந்தோம் உமை தாயே ஆதரிப்பாய் என்றும் நீயே அம்மா மரியே பெரியநாயகி வாழ்க செய்வதறியா தவித்திடும் போது செவ்வழி நடத்திடு தாயே சேயாய் காத்திடு தாயே அம்மா மரியே பெரியநாயகி வாழ்க மனபலம் இழந்து உடல் நலம் சோர்ந்து தடுமாறும் வேளையில் தாயே தாங்கி நடத்திடுவாய் தாயே அம்மா மரியே பெரியநாயகி வாழ்க வறுமையும் பிணியும் வாட்டிடும் வேளை வந்திங்கு உதவிடு தாயே வளமை காத்திடு தாயே அம்மா மரியே பெரியநாயகி வாழ்க வியாபாரம் தொழிலில் விரக்திகள் வந்தால் வெற்றியை தந்திடுவாயே வேண்டிய வரம் தரும் தாயே அம்மா மரியே பெரியநாயகி வாழ்க தினமும் உம்மை தேடியே வந்தோம் திடம் எமக்களிப்பாய் தாயே தீங்கின்றி காத்திடுவாயே அம்மா மரியே பெரியநாயகி வாழ்க அறியாமை மனதை ஆட்டிடும் போது அறிவொளி தந்திடு தாயே அக இருள் நீக்கிடு தாயே அம்மா மரியே பெரியநாயகி வாழ்க சாதிய பேதம் நீக்கியே நாட்டில் அமைதியை தந்திடு தாயே அமலியாய் உதித்திட்ட தாயே அம்மா மரியே பெரியநாயகி வாழ்க உற்றார் பெற்றார் உடன்பிறப்பெல்லாம் ஒதுக்கிடும் வேளையில் தாயே உறவாய் வருவாய் நீயே அம்மா மரியே பெரியநாயகி வாழ்க குடும்பமாய் செபித்து கூவியே அழைத்தோம் குறைகளை தீர்த்திடு தாயே குடும்பத்தை காத்திடு தாயே அம்மா மரியே பெரியநாயகி வாழ்க

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.