Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நவீனன்

வரையறுக்கப்பட்ட அனுமதி
  • Joined

  • Last visited

Everything posted by நவீனன்

  1. சூப்பரான சத்தான டபுள் பீன்ஸ் பிரியாணி பிரியாணியில் நிறைய வெரைட்டிகள் உள்ளது. இன்று டபுள் பீன்ஸ் வைத்து சூப்பரான காரசாரமான பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பாஸ்மதி அரிசி - ஒரு கப், டபுள் பீன்ஸ் - அரை கப், எண்ணெய், நெய், உப்பு - தேவையான அளவு, வெஜிடபிள் ஸ்டாக் - 2 கப் அன்னாசிப்பூ, உலர்வெந்தயக்கீரை - சிறிதளவு. கொத்தமல்லி தழை - சிறிதளவு அரைக்க : பட்டை - அரை அங்குலத் துண்டு, இஞ்சி - அரை அங்குலத் துண்டு, சின்ன வெங்காயம் - 10 (உரிக்கவும்), பச்சை மிளகாய் - 4, பூண்டுப் பல் - 2, க்ரீன் சில்லி சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன், செய்முறை : * அரைக்க கொடுத்துள்ளவற்றை மிக்சியில் போட்டு சிறிதளவு நீர் விட்டு மையாக அரைத்துக்கொள்ளவும். * அரிசியை 10 நிமிடங்கள் நீரில் ஊறவைத்து, நீரை வடிக்கவும். * வாணலியில் நெய்விட்டு சூடாக்கி, அரிசியைச் சில நிமிடங்கள் வறுத்துக் கொள்ளவும். * குக்கரில் எண்ணெய்விட்டு, காய்ந்ததும் அரைத்த விழுதைச் சேர்த்து வதக்கி, டபுள் பீன்ஸ், உப்பு சேர்த்துக் கிளறவும். * அடுத்து அதில் க்ரீன் சில்லி சாஸ், அன்னாசிப்பூ, உலர் வெந்தயக் கீரைச் சேர்த்துக் கிளறவும். * பிறகு, வெஜிடபிள் ஸ்டாக் ஊற்றி, ஒரு கொதி வந்ததும் அரிசி சேர்த்து, குக்கரை மூடி வெயிட் போட்டு, 2 விசில் வந்ததும் இறக்கவும். ஆவி விட்டதும் குக்கரைத் திறந்து, கொத்தமல்லி தழை தூவிப் பரிமாறவும். * சூப்பரான டபுள் பீன்ஸ் பிரியாணி ரெடி. குறிப்பு: வீட்டில் இருக்கும் காய்கறிகளை அலசி, நறுக்கி நீர்விட்டு குக்கரில் வேகவிட்டு மசித்து நீரை வடிகட்டி, பயன்படுத்தவும். இதுவே வெஜிடபிள் ஸ்டாக் ஆகும்.
  2. சப்பாத்தி, பரோட்டாவிற்கு சூப்பரான சைடிஷ் பஞ்சாபி சிக்கன் சப்பாத்தி, பரோட்டாவிற்கு தொட்டுக்கொள்ள சூப்பரான பஞ்சாபி சிக்கன் கறி மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும். பஞ்சாபி சிக்கன் கறி எப்படி சமைப்பது எனப்பார்ப்போம். தேவையான பொருட்கள் : சிக்கன் - 1/2 கிலோ தயிர் - 3/4 கப் இஞ்சி விழுது - 1 டீஸ்பூன் பூண்டு விழுது - 1 டீஸ்பூன் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் கொத்தமல்லி - சிறிதளவு. அரைப்பதற்கு : பெரிய வெங்காயம் - 3 தக்காளி - 3 கிராம்பு - 2 மிளகு - 5 ஏலக்காய் - 3 மல்லித்தூள் - 1 டீஸ்பூன் செய்முறை : * அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும். * கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். * சிக்கனை நன்றாக கழுவி துண்டுகளாக வெட்டி வைக்கவும். * ஒரு பாத்திரத்தில் சிக்கனை போட்டு அதனுடன் தயிர், இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு போட்டு பிரட்டி 1 மணிநேரம் ஊற வைக்கவும். * கடாயை அடுப்பில் வைத்து 5 டீஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும் அரைத்து வைத்துள்ள விழுதை போட்டு பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும். * மசாலா நன்றாக வதங்கியதும் அதில் சிக்கனை சேர்த்து நன்றாக வதக்கவும். தேவையான அளவு தண்ணீர் விட்டு அடுப்பை மிதான தீயில் வைத்து சிக்கனை வேக விடவும். * சிக்கன் நன்றாக வெந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும். * சூப்பரான பஞ்சாபி சிக்கன் ரெடி. * இந்த பஞ்சாபி சிக்கன் சப்பாத்தி, பரோட்டாவிற்கு ஏற்ற பக்கா உணவாகும்.
  3. google chrome இணைய உலாவியால் யாழில் உள்நுழையும்போது இந்த பிரச்சனை இன்று வருகிறது. ஆனால் firefox இணைய உலாவியால் பிரச்சனை இல்லாமல் செய்திகளை வழமைபோல் இணைக்க முடிகிறது.
  4. சத்தான சுவையான கோதுமை ரவை வெஜிடபிள் இட்லி சர்க்கரை நோயாளிகள், வயதானவர்கள், டயட்டில் இருப்பவர்களுக்கு உகந்தது இந்த கோதுமை ரவை வெஜிடபிள் இட்லி. இன்று இந்த இட்லி செய்முறையை பார்க்கலாம். தேவையான பொருட்கள் : ரவை - 1 கப், உப் - தேவைக்கு, தயிர் - 1 கப், துருவிய கேரட், நறுக்கிய பீன்ஸ், பச்சைப்பட்டாணி யாவும் கலந்து - 1 கப், வெங்காயம் - 2, கறிவேப்பிலை - சிறிதளவு, இஞ்சி, பச்சைமிளகாய் விழுது - 1/4 டீஸ்பூன், முந்திரிப்பருப்பு - 4, கடுகு, உளுந்தம் பருப்பு - சிறிதளவு, நெய் - 1 டீஸ்பூன். செய்முறை : * வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். * கடாயில் சிறிது நெய் விட்டு ரவையை வறுத்து கொள்ளவும். * ஒரு பாத்திரத்தில் வறுத்த ரவையை போட்டு அதனுடன் தயிர், உப்பு சேர்த்து கலந்து அரை மணி நேரத்திற்கு ஊறவைக்கவும். * கடாயில் சிறிது நெய் விட்டு கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்த பின் இஞ்சி பச்சைமிளகாய் விழுது போட்டு வதக்கி, வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். * அடுத்து அதில் கேரட், பச்சைப்பட்டாணி, பீன்ஸ் கலவையை சேர்த்து வதக்கவும். * காய்கறிகள் நன்கு வதங்கியதும் பொடித்த முந்திரிப்பருப்பை சேர்த்து கலந்து, ஊறவைத்த ரவை கலவையில் கொட்டி நன்றாக கலந்து கொள்ளவும். * இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து மாவை இட்லிகளாக ஊற்றி வெந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும். * சத்தான சுவையான கோதுமை ரவை வெஜிடபிள் இட்லி ரெடி.
  5. ஒரு சிங்களத்தாய் வெள்ளத்தில் காணாமல்ப்போன தன் மகனுக்காக அந்த படத்தை ஒட்டுகிறாள்!! மறுபக்கத்தில் யுத்தத்தில் காணாமல்ப்போன ஒரு தமிழ்த்தாய் தன் மகனின் படத்தை ஒட்டுகிறாள்!
  6. சத்து நிறைந்த குடமிளகாய் - அன்னாசி சாலட் உடல்பருமன் உள்ளவர்களுக்கும், ஆஸ்துமா நோயாளிகளுக்கும் இந்த சாலட் மிகவும் நல்லது. உடல் ஆரோக்கியத்திற்கு தினமும் ஒரு சாலட் சாப்பிடுவது உடலுக்கு நல்லது. தேவையான பொருட்கள் : அன்னாசிப்பழம் - 3 துண்டுகள், குடமிளகாய் - 1, வெள்ளரிக்காய் - பாதி, உப்பு - தேவைக்கு, மிளகுத் தூள் - அரை ஸ்பூன், ரெட் சில்லி ஃப்ளேக்ஸ் - தேவைக்கு, எலுமிச்சைச் சாறு - தேவையான அளவு. செய்முறை : * அன்னாசிப்பழம், வெள்ளரி, குடமிளகாயைச் சதுரமாக நறுக்கிக்கொள்ள வேண்டும். * ஒரு பாத்திரத்தில் நறுக்கிய அன்னாசிப்பழம், வெள்ளரி, குடமிளகாயை போட்டு அதனுடன் உப்பு, மிளகுத் தூள், ரெட் சில்லி ஃப்ளேக்ஸைத் தூவி நன்றாக கிளறவும். * கடைசியாக அதில் சில துளிகள் எலுமிச்சைச் சாறு விட்டு பரிமாறவும். * குடமிளகாய் - அன்னாசி சாலட் ரெடி.
  7. ஸ்பைஸி காளான் பிரியாணி செய்வது எப்படி அசைவத்திற்கு இணையான மாற்று காளான். இன்று காளான் வைத்து ஸ்பைஸியான பிரியாணியை எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பாசுமதி அரிசி - ஒரு கப், நறுக்கிய பட்டன் காளான் - ஒரு கப், தக்காளி, வெங்காயம் - தலா 2 ரெட் சில்லி சாஸ், சோயா சாஸ் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், மிளகு - சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன், இஞ்சி - சிறிய துண்டு, உடைத்த முந்திரி - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் - நெய் கலவை, உப்பு - தேவையான அளவு. செய்முறை : * இஞ்சி, தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். * அரிசியைக் கழுவி, 10 நிமிடங்கள் ஊறவைத்து, நீரை வடிக்கவும். * வாணலியில் சிறிதளவு நெய் விட்டு அரிசியை சில நிமிடங்கள் வறுத்துக்கொள்ளவும். * தக்காளியைச் சுடுநீரில் சிறிது நேரம் போட்டு எடுத்து, தோலை உரித்து விட்டு மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும். * குக்கரில் எண்ணெய் - நெய் கலவையைச் சேர்த்து, சூடானதும் பட்டன் காளான் சேர்த்து... இஞ்சி, வெங்காயம், முந்திரி சேர்த்து வதக்கவும். * வெங்காயம் நன்றாக வதங்கியதும் இதனுடன் சில்லி சாஸ், சோயா சாஸ், உப்பு, மிளகு - சீரகத்தூள் சேர்த்துக் கிளறவும். * அடுத்து அதில் தக்காளிச் சாறு ஊற்றி பச்சை வாசனை போன வதக்கவும். * அடுத்து தேவையான நீர் சேர்த்துக் கொதி வந்ததும் அரிசியைப் போட்டுக் கிளறி, குக்கரை `வெயிட்’ போட்டு மூடி, 2 விசில் வந்த உடன் நிறுத்தவும். * ஆவி விட்டதும் குக்கரைத் திறந்து, கிளறி சூடாகப் பரிமாறவும். * சூப்பரான ஸ்பைஸி மஷ்ரூம் பிரியாணி ரெடி.
  8. சூப்பரான சைடிஷ் மட்டன் சாப்ஸ் செய்வது எப்படி பிரியாணி, புலாவ், சாம்பார் சாதத்திற்கு சூப்பரான சைடிஷ் இந்த மட்டன் சாப்ஸ். இன்று இந்த மட்டன் சாப்ஸை எப்படி செய்வது என்று விரிவாக பார்க்கலாம். தேவையான பொருட்கள் : மட்டன் - 1 கிலோ தேங்காய்ப்பால் - அரை கப்(திக்கான பால்) எண்ணெய் - தேவையான அளவு மஞ்சள்பொடி - 1 ஸ்பூன் மிளகுத்தூள் - 1 ஸ்பூன் சீரகத்தூள் - 1 ஸ்பூன் சோம்புத்தூள் - 1 ஸ்பூன் இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன் கரம்மசாலா பொடி - 1 ஸ்பூன் மிளகாய்ப்பொடி - 2 ஸ்பூன் உப்பு - தேவையான அளவு கொத்தமல்லி - சிறிதளவு செய்முறை : * மட்டனை கழுவி சுத்தம் செய்த பின் தண்ணீரை வடிகட்டி வைக்கவும். * கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். * ஒரு பாத்திரத்தில் மட்டனை போட்டு அதனுடன் தேங்காய்ப்பால், மஞ்சள்பொடி, மிளகுத்தூள், சீரகத்தூள், சோம்புத்தூள், இஞ்சி விழுது, பூண்டு விழுது, கரம் மசாலா பொடி, உப்பு மற்றும் மிளகாய்ப்பொடி போட்டு பிசறி 1/2 மணி நேரம் ஊற விடவும். * ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் ஊறவைத்துள்ள மட்டனை போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து தண்ணீர் வற்றும் வரை கிளறிக்கொண்டே இருக்கவும். * மட்டனில் தண்ணீர் வற்றியதும் மட்டன் நிறம் மாறும். * அப்போது அரை டம்ளர் தண்ணீர் தெளித்து கிளறி விட்டு குக்கரை மூடி 8விசில் விட்டதும் இறக்கவும். * குக்கரில் பிரஷர் அடங்கியதும் திறந்து அடுப்பில் வைத்து சிறிது நேரம் கிளறவும். * மசாலா அனைத்து மட்டனுடன் சேர்ந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். * சூப்பரான மட்டன் சாப்ஸ் ரெடி.
  9. குழந்தைகளுக்கு விருப்பமான கிரீன் மசாலா மீன் பிரை குழந்தைகள் மீன் என்றால் விரும்பி சாப்பிடுவார்கள். மீனில் குழம்பு, வறுவல் செய்து இருப்பீங்க. ஆனால் கிரீன் மசாலா வைத்து செய்யும் இந்த மீன் பிரை சூப்பராக இருக்கும். தேவையான பொருட்கள் : துண்டு மீன் - ½ கிலோ உப்பு, எண்ணெய் - தேவையான அளவு மஞ்சள் தூள் - அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன் அரைக்க : பூண்டு - 6 பல் பச்சைமிளகாய் - 5 மிளகு - 1 தேக்கரண்டி சீரகம் - ½ தேக்கரண்டி சோம்பு - ¼ தேக்கரண்டி கொத்தமல்லி - ஒரு கைப்பிடி கறிவேப்பிலை - சிறிதளவு புதினா - ஒரு கைப்பிடி செய்முறை : * முதலில் மீனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். * மிக்ஸியில் அரைக்க வேண்டிய பொருட்களை நன்றாக அரைத்து கொள்ளவும். * ஒரு பாத்திரத்தில் மீனை போட்டு அதனுடன் அரைத்த மசாலா, உப்பு, மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக மீனில் தடவி பிரிட்ஜில் ஒரு மணிநேரம் ஊற வைக்கவும். * ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மீனை போட்டு பொரித்தெடுக்கவும். * சுவையான கிரீன் மசாலா மீன் பிரை தயார்.
  10. ஈஸியாக செய்யலாம் சின்ன வெங்காய சாம்பார் சின்ன வெங்காயத்தில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று சின்ன வெங்காயத்தை வைத்து ஈஸியான முறையில் சாம்பார் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : சின்ன வெங்காயம் - 20 (தோல் உரிக்கவும்), புளி - எலுமிச்சைப் பழ அளவு, தக்காளி - 1 சாம்பார் பொடி - 2 டேபிள்ஸ்பூன், துவரம்பருப்பு - 100 கிராம், காய்ந்த மிளகாய் - 3, கடுகு, வெந்தயம் - தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை : * துவரம்பருப்பை குழைவாக வேக வைத்து நன்றாக மசித்து கொள்ளவும். * சின்ன வெங்காயத்தை தோல் உரித்து வைக்கவும். * தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். * புளியை கரைத்து கொள்ளவும். * வாணலியில் எண்ணெய் விட்டு சின்ன வெங்காயத்தை போட்டு சிறிது வதக்கிய பின்னர், தக்காளியை போட்டு வதக்கவும். * அடுத்து அதில் கொஞ்சம் தண்ணீர் விட்டு, கொதித்ததும் கரைத்த புளியை ஊற்றவும். * அடுத்து அதில் உப்பு, சாம்பார் பொடி சேர்த்து கொதிக்கவிடவும். * இதனுடன் வேகவைத்து மசித்த பருப்பை சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்கவிடவும். * கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் போட்டு தாளித்து சாம்பாரில் சேர்க்கவும். * கடைசியாக கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கி பரிமாறவும். * சூப்பரான ஈஸியான சின்ன வெங்காய சாம்பார் ரெடி.
  11. வேலூர் மட்டன் ‘தம்’ பிரியாணி செய்வது எப்படி வேலுர் மட்டன் தம் பிரியாணி மிகவும் பிரபலம். இன்று வீட்டிலேயே எளிய முறையில் வேலூர் மட்டன் ‘தம்’ பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : மட்டன் - ஒரு கிலோ வெங்காயம் - 1/4 கிலோ தக்காளி - 200 கிராம் இஞ்சி விழுது - 50 கிராம் பூண்டு விழுது - 50 கிராம் பச்சை மிளகாய் - 4 மிளகாய்த் தூள் - 4 தேக்கரண்டி தயிர் - 200 மி.லி பட்டை - 1 துண்டு கிராம்பு - 4 ஏலக்காய் - 2 கொத்தமல்லித் தழை - சிறிதளவு புதினா - 4 சிறிதளவு. எலுமிச்சை - ஒரு பழத்தின் ஜூஸ் ரீஃபைண்டு கடலை எண்ணெய் - 1/4 லிட்டர் அரிசி (ஜீரகச் சம்பா அல்லது பாஸ்மதி) - ஒரு கிலோ உப்பு - தேவையான அளவு செய்முறை : * வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும். * அரிசியை ஒரு முறை அலசி விட்டு, அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். * ப்ரஷர் குக்கரை அடுப்பில் வைத்து சூடாக்கி, எண்ணெய் சூடானவுடன், பட்டை, கிராம்பு, ஏலக்காய் இவற்றை சேர்த்து வெடித்தவுடன், நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும். * வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை உடன் சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும். * தக்காளி நன்றாக வதங்கியதும் இறைச்சியை அதில் சேர்த்து, 5 நிமிடத்திற்கு நிறம் மாறும் வரை கிளறிக் கொண்டிருக்க வேண்டும். * இத்துடன் இஞ்சிப் பூண்டு விழுது சேர்த்து, 5 நிமிடம் மிதமான தீயில், நறுமணம் வரும்வரை தொடர்ந்து கிளற வேண்டும். * அடுத்து மிளகாய் தூள் சேர்த்து சிம் தீயில், 5 நிமிடம் கலக்க வேண்டும். * தயிர், பச்சைமிளகாய், கொத்தமல்லி, புதினா, தேவையான அளவு உப்பு இவைகளைக் கலந்து, நீர் 1/2 டம்ளர் விட்டு, குக்கரை மூடி 4 விசில் வரும் வரை, மிதமான தீயில் வேக விட வேண்டும். * பெரிய பாத்திரத்தில் 5 லிட்டர் நீர் விட்டு, உப்பு போட்டு கொதிக்கவைக்க வேண்டும். அதில் ஊற வைத்த அரிசியை சேர்த்து, கூடவே 1/2 தேக்கரண்டி எலுமிச்சைச் சாறு விட்டு, 80 சதவிகிதம் வேக்காடு வரும் வரை வேக விட்டு தண்ணீரை வடித்து விட வேண்டும். எலுமிச்சைச் சாறு விடுவதால் அரிசி உடையாது. * இப்போது குக்கரைத் திறந்து, ருசி சரிபார்த்து, எலுமிச்சைச் சாறு கலந்து, மிதமான தீயில், எண்ணெய் மேலே வரும்வரை வதக்கி, நன்கு வடித்த சாதத்தை சேர்த்து, அரிசி உடையாமல் மெதுவாக கிளற வேண்டும். * அடுப்பில் தோசைக்கல் வைத்து, அதில் சிறிது நீர் ஊற்றி, குறைவான தீயில், மேலே கலந்த சாதம் உள்ள பாத்திரத்தின் விளிம்பில்(ஓரத்தில்) ஈரத்துணியை தலைப்பாகை போல் சுற்றி, காற்றுப் புகாமல் மூடி, மூடி மேல் ஒரு நீர் நிறைந்த பாத்திரத்தை 'வெய்ட்' போல் வைத்து சுமார் 20 நிமிடம் 'தம்' போட வேண்டும். தலைப்பாகை துணி இல்லாமலும் மூடி வைக்கலாம். * 'தம்' முடிந்த பிறகு, திறந்து பார்த்தால் 'கம கம' வேலூர் பிரியாணி சுண்டி இழுக்கும்.
  12. சமையலில் செய்யக்கூடாதவை. * ரசம் அதிகமாக கொதிக்ககூடாது. * காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது. * மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது. * கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது. * காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது. * சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது. * தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது. * பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது. * பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது. * தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது. * குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெயோ நன்றாக காயக்கூடாது. * குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது. #காய்கறிகளை நறுக்குவதற்கு முன், தண்ணீரில் நன்கு கழுவிய பிறகு நறுக்கவும். நறுக்குவதற்கு முன் ஊற வைப்பதோ, காய்களை நறுக்கிய பிறகு தண்ணீரில் கழுவுவதோ கூடாது. காய்கறிகளிலும் பழங்களிலும் தோலை ஒட்டித்தான் தாதுஉப்புக்களும், உயிர்ச்சத்துக்களும் நிறைந்திருக்கினறன. எனவே, முடிந்தவரை தோலுடன் சமைக்க வேண்டும். கீரை வாங்கும்போது மஞ்சள் நிறமுள்ள இலைகள் அதிகமிருந்தால் வாங்குவதைத் தவிர்க்கவும். ஓட்டைகள் மற்றும் பூச்சிகளின் முட்டைகள் உள்ள கீரைகளையும் வாங்கக்கூடாது. பழங்கள், காய்கறிகள், சிறுதானியங்களில் நார்ச்சத்துக்கள் அதிகமாக இருக்கும். எனவே, இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும். பாலைத் திரித்து பனீராக்குவதற்கு எலுமிச்சைச் சாறு ஊற்றுவோம். அதற்கு பதில் தயிர் ஊற்றி, பாலைத் திரித்தால் பனீர் புளிக்காமல் சுவையாக ‌இருக்கும். பூரிக்கு மாவு பிசையும்போது கால் டீஸ்பூன் ரவையைச் சேர்த்துக் கொண்டால், பூரி புஸுபுஸுவென உப்பலாக இருக்கும். எலுமிச்சை சாதம் செய்யும்போது தாளித்ததும் சாற்றை ஊற்றிக் கொதிக்கவிட்டால் சாதம் கசந்து போகும். அதற்கு பதில் ஒரு கிண்ணத்தில் எலுமிச்சைச் சாறு, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கலந்துகொள்ளவும். அதில் தாளித்ததை ஊற்றிக் கலக்கிய பிறகு, சாதத்தில் சேர்த்துக் கிளறினால், சாதம் கூடுதல் சுவையுடன் இருக்கும். டிப்ஸ்... டிப்ஸ்... கீரையை வேகவிடும்போது சிறிதளவு வெண்ணெய் அல்லது எண்ணெய் சேர்த்து வேகவைத்தால் பச்சை நிறம் மாறாது; ருசியாகவும் இருக்கும். தயிர் வடை போன்றே தயிர் இட்லியும் செய்யலாம்! தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய், முந்திரிப்பருப்பு, கொத்தமல்லித்தழை ஆகியவற்றை அரைத்து தேவையான தயிரும், உப்பும் சேர்த்து வைக்கவும். இட்லிகளை சதுரமான துண்டுகளாக்கி, இந்தக் கலவையில் சில நிமிடங்கள் ஊறவைத்துப் பரிமாறினால்... மணம், சுவை நிறைந்ததாக இருக்கும். விருப்பப்பட்டால், கேரட் துருவல், காராபூந்தி இவற்றையும் மேலே தூவலாம். வாழைப்பூவை சமையலுக்கு பயன்படுத்தும்போது மோர் கலந்த தண்ணீரில் பொடியாக நறுக்கிப் போட்டு, பின் அதை ஜல்லி கரண்டியால் அரித்தெடுத்து இட்லி பானையில், இட்லி வேகவைப்பது போல் வேகவைத்தெடுத்தால், பூ கறுக்காமல் இருக்கும். தக்காளி சூப் நீர்த்துப் போய்விட்டால் மாவு கரைத்து விடுவதற்கு பதில், வெந்த உருளைக்கிழங்கு ஒன்றை மசித்து சேர்த்தால் ருசியும் கூடும்; சத்தும் அதிகம் கிடைக்கும். தொண்டை கட்டிக்கொண்டால்... கற்பூரவல்லி சாற்றுடன் பனங்கற்கண்டு சேர்த்து பருகினால் சரியாகிவிடும். அதிக அளவு பாலாடை தேவைப்படுகிறவர்கள் கொதித்து ஆறிய பாலை மூடாமல் ஃப்ரிட்ஜில் வைத்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே அதிக அளவு பாலாடை தோன்றிவிடும். கறிவேப்பிலை, கொத்தமல்லியை ஃப்ரிட்ஜில் வைக்கும்போது மஸ்லின் துணியில் சுற்றி வைத்தால், நிறம் மாறாமல் பச்சைப்பசேலென இருக்கும். துவரம்பருப்புடன் இரண்டு மஞ்சள்பூசணித் துண்டுகள் (அ) சர்க்கரை வள்ளிக் கிழங்கு துண்டுகளை சேர்த்து வேகவைத்து, மசித்து, சாம்பாரில் சேர்த்தால்... சாம்பாரும் ருசிக்கும்; துவரம்பருப்பின் அளவையும் குறைத்துக்கொள்ளலாம். கேரட் அல்வா கிளறும்போது பால் ஊற்றுவதற்குப் பதிலாக பால்கோவா போட்டுக் கிளறி, ஏதாவது ஒரு எசென்ஸ் சில துளிகள் சேருங்கள்... பிரமாதமான சுவையில் இருக்கும். வடை தட்டும்போது உள்ளே ஒரு பனீர் துண்டை வைத்து மாவால் மூடி எண்ணெயில் போட்டுப் பொரித்து எடுத்தால், வடை வித்தியாசமான ருசியுடன் இருக்கும். பாகற்காய் குழம்பு செய்யும்போது, நாலைந்து துண்டு மாங்காய் சேர்த்து வைத்துப் பாருங்கள்... பாகற்காயின் கசப்பு தெரியாது; ருசியும் கூடும். சிறிதளவு இஞ்சியோடு மிளகு, தேங்காய்த் துருவல், பேரீச்சம்பழம், உப்பு சேர்த்து அரைத்து, தயிரில் கலந்தால், சூப்பர் சுவையில் பச்சடி தயார். குலாப் ஜாமூன் ஜீரா மிகுந்துவிட்டால், அதில் மைதாவை சிறிது சிறிதாக சேர்த்துப் பிசைந்து சப்பாத்தி போல் திரட்டி, சதுர துண்டுகளாக வெட்டி. எண்ணெயில் பொரித்தால்... சுவையான பிஸ்கட் ரெடி! இதை மிக்ஸரிலும் சேர்க்கலாம். ஜவ்வரிசி, ரவை இரண்டையும் சம அளவு எடுத்து வறுத்து, பால் சேர்த்து வேகவிட்டு, வெல்லப்பாகு சேர்த்து, நெய்விட்டுக் கிளறினால், வித்தியாசமான சுவையுடன் சர்க்கரைப் பொங்கல் ரெடி! வற்றல் குழம்பு செய்யும்போது, கடைசியில் வெங்காய வடகத்தை வறுத்துப் பொடித்துப் போட்டு கிண்டிவிட்டால், குழம்பு கனஜோரா இருக்கும்! முருங்கை இலைக் காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதை இடிக்கவும். இஞ்சி, மிளகு, சீரகம், பூண்டு ஆகியவற்றை இடித்து அதனுடன் சேர்க்கவும். இதில் தண்ணீர், சிறிது உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு, பாதியாக்கி வடிகட்டி, சூப் போல குடித்து வந்தால்... உடல் வலி குணமாகும். மல்லியை (தனியா) சிறிதளவு நெய் விட்டு வறுத்துப் பொடி செய்து... சாம்பார் செய்து முடித்தவுடன் இந்தப் பொடியை போட்டு மூடிவைத்தால், சாம்பார் நல்ல மணத்துடன் இருக்கும். எந்தவிதமான சூப் செய்தாலும், சோள மாவு இல்லாவிட்டால், ஒரு டீஸ்பூன் அவலை வறுத்து, பொடித்து, சலித்து, அதில் சேர்த்துக் கொதிக்கவிட்டால்... சூப் கெட்டியாக, ருசியாக இருக்கும். பீட்ரூட்டையும், ரோஜா இதழையும் அரைத்து அடிக்கடி உதடுகளில் தடவிவந்தால்... நாளடைவில் உதடுகள் நல்ல நிறமாகும். ஈ, கொசு வராமல் தடுக்க சில வழிகள்... புதினா இலையை கசக்கி அறையின் ஒரு மூலையில் வைக்கலாம்; காய்ந்த கறிவேப்பிலையைக் கொளுத்தலாம்; ஒரு ஸ்பூன் காபி பொடியை வாணலியில் போட்டு சூடுபடுத்தலாம். குப்பைமேனி இலையோடு மஞ்சள், கல் உப்பு சேர்த்து அரைத்து தோலில் அரிப்பு, அலர்ஜி, சிரங்கு உள்ள இடங்களில் தடவி வந்தால்... விரைவில் குணமாகும். கற்பூரம், பச்சை கற்பூரம், நாப்தலின் உருண்டை, மிளகு, உப்பு இவற்றை பொடித்து சிறு துணியில் கட்டி அலமாரி, பீரோவில் வைத்துவிட்டால், பூச்சி வராது; நறுமணமாக இருக்கும். சப்பாத்தி தேய்க்கும்போது, தொட்டுக்கொள்ள கார்ன்ஃப்ளார் (சோள மாவு) பயன்படுத்தினால் நன்றாக வரும்; மாவும் கொஞ்ச மாகத்தான் செலவழியும். இட்லிமாவு அரைத்தபின் ஒரு வெற்றிலையைக் கிள்ளிப்போட்டு வைத்தால், மாவு பொங்கி வழியாது.
  13. ஸ்டார் ஹோட்டல் ரெசிப்பி தென்னிந்திய ஸ்பெஷல் இறால் புதினா - பனீர் டிக்கா மண் பானையில் வறுத்த சிக்கன் இறால் வித் பூண்டு சாஸ் டிராகன் பொட்டேட்டோஸ் பென்னே பாஸ்தா வித் வெஜிடபிள் பெரிபெரி சிக்கன் ஸ்கீவர்ஸ் பாட் தாய் வெஜ் நூடுல்ஸ் ஆர்கானிக் க்ரில்டு சிக்கன் பிரெஸ்ட் வித் மஷ்ரூம் சாஸ் பெரிபெரி மஷ்ரூம் தாய் சிக்கன் ஷாட்டே ஸ்டார் ஹோட்டல்களில் ருசிக்கு மட்டும்தான் முக்கியத்துவமா என்ன? `இல்லவே இல்லை... ருசியோடு சத்து மிகுந்த உணவுகளையும் நாங்கள் பரிமாறுகிறோம்’ என்கிற ஜிஎல்எம் மெரிடியன் ஹோட்டல் செஃப் நாச்சியப்பன், அவள் கிச்சன் வாசகர்களுக்காக புதுமையான ஊட்டச்சத்து ரெசிப்பிகளை வழங்குகிறார். தென்னிந்தியா ஸ்பெஷல் இறால் தேவையானவை: இறால் – 200 கிராம் எலுமிச்சைப் பழம் – ஒன்று இஞ்சி – பூண்டு விழுது – அரை டீஸ்பூன் காஷ்மீர் மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன் கார்ன்ஃப்ளார் (சோள மாவு) – ஒரு டீஸ்பூன் மைதா மாவு – ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிதளவு எண்ணெய், உப்பு – தேவையான அளவு செய்முறை: எலுமிச்சைப் பழத்தைப் பிழிந்து சாறு எடுக்கவும். பாத்திரத்தில் இறாலுடன் எலுமிச்சைச் சாறு, இஞ்சி – பூண்டு விழுது, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்துக் கலக்கவும். இதனுடன் கார்ன்ஃப்ளார் (சோள மாவு), மைதா மாவு சேர்த்து நன்கு கலக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி, மசாலா கலந்த இறால்களைப் போட்டுப் பொரித்தெடுக்கவும். பிறகு, அதே எண்ணெயில் கறிவேப்பிலையைப் போட்டுப் பொரித்தெடுக்கவும். பொரித்த இறால்களின் மீது கறிவேப்பிலையைத் தூவிப் பரிமாறவும். புதினா - பனீர் டிக்கா தேவையானவை: பனீர் – 200 கிராம் (சதுரங்களாக நறுக்கவும்) புதினா - ஒரு கட்டு பச்சை மிளகாய் – 3 (பொடியாக நறுக்கவும்) தயிர் – 50 மில்லி வெங்காயம் – நான்கு சதுரத் துண்டுகள் குடமிளகாய் – நான்கு சதுரத் துண்டுகள் வெண்ணெய் – 20 கிராம் கறுப்பு உப்பு – சிறிதளவு சீரகத்தூள் – 10 கிராம் கரம் மசாலாத்தூள் – 10 கிராம் இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன் கடுகு எண்ணெய் – ஒரு டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு டிக்கா குச்சிகள் (ஸ்கீவர்ஸ்) – தேவையான அளவு செய்முறை: புதினாவை ஆய்ந்து அலசி சிறிதளவு தண்ணீர் தெளித்து விழுதாக அரைக்கவும். பாத்திரத்தில் தயிருடன் பச்சை மிளகாய், புதினா விழுது, உப்பு, இஞ்சி – பூண்டு விழுது சேர்த்துக் கலந்து சிறிது நேரம் ஊறவைக்கவும். இதனுடன் கடுகு எண்ணெய், கறுப்பு உப்பு, சீரகத்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு பனீர் துண்டுகள், வெங்காயத் துண்டுகள், குடமிளகாய் துண்டுகள் சேர்த்துக் கலக்கவும். டிக்கா குச்சியில் குடமிளகாய், வெங்காயம், பனீர் என மாற்றி மாற்றி குத்தி வைக்கவும். தோசைக்கல்லில் வெண்ணெய்விட்டு உருக்கி, செய்து வைத்திருக்கும் டிக்காக்களை அடுக்கி டோஸ்ட் செய்து எடுக்கவும். பிறகு, குச்சியில் இருந்து குடமிளகாய், வெங்காயம், பனீரை எடுத்து தட்டில் பரப்பி, புதினா சட்னியுடன் சூடாகப் பரிமாறவும். மண்பானையில் வறுத்த சிக்கன் தேவையானவை: இளம் சிக்கன் – ஒன்று (800 கிராம் - ஒரு கிலோ) தயிர் – 100 மில்லி இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன் எலுமிச்சைப் பழம் – 2 காஷ்மீரி மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன் கறுப்பு உப்பு – 20 கிராம் கஸூரி மேத்தி (உலர்ந்த வெந்தயக்கீரை) – 10 கிராம் கடுகு எண்ணெய் – 50 மில்லி தனியாத்தூள் (மல்லித்தூள்) – 2 டீஸ்பூன் சீரகத்தூள் – அரை டீஸ்பூன் கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன் வெண்ணெய் – 50 கிராம் உப்பு – தேவையான அளவு செய்முறை: எலுமிச்சைப் பழத்தைப் பிழிந்து சாறு எடுக்கவும். சிக்கனின் தோலைச் சீவி நான்கு துண்டுகளாக நறுக்கி பாத்திரத்தில் போட்டு எலுமிச்சைச் சாறு, சிறிதளவு இஞ்சி – பூண்டு விழுது, உப்பு சேர்த்துக் கலக்கவும். இன்னொரு பாத்திரத்தில் தயிருடன் மீதமுள்ள இஞ்சி – பூண்டு விழுது, மிளகாய்த்தூள், கறுப்பு உப்பு, கஸூரி மேத்தி, கடுகு எண்ணெய், தனியாத்தூள், சீரகத்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்துக் கலக்கவும். இதனுடன் சிக்கன் கலவையைச் சேர்த்து இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, ஒவ்வொரு சிக்கன் துண்டையும் ஒவ்வொரு கம்பியில் குத்தி வைக்கவும். ஒரு மண் பானையில் சிறிதளவு மரக்கரி துண்டுகள் சேர்த்து எரியவிடவும். கம்பியில் குத்திய சிக்கன் துண்டுகளை வறுத்தெடுத்து வெண்ணெய் சேர்க்கவும் (கன்வென்‌ஷன் அவனில் ரோஸ்ட் செய்தும் எடுக்கலாம்). இதைச் சூடாக வெங்காயப் பச்சடியுடன் பரிமாறவும். இறால் வித் பூண்டு சாஸ் தேவையானவை: இறால் – 200 கிராம் கார்ன்ஃப்ளார் (சோள மாவு) – 2 டீஸ்பூன் மைதா மாவு – ஒரு டீஸ்பூன் பூண்டு (பொடியாக நறுக்கியது) – ஒரு டீஸ்பூன் இஞ்சி (தோல் சீவி, பொடியாக நறுக்கியது) – ஒரு டீஸ்பூன் செலரி (பொடியாக நறுக்கியது) - ஒரு டீஸ்பூன் பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கியது) – ஒரு டீஸ்பூன் காய்ந்த மிளகாய் விழுது – ஒரு டீஸ்பூன் டொமேட்டோ கெச்சப் – 50 மில்லி சர்க்கரை – சிறிதளவு நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு உப்பு, எண்ணெய் – தேவையான அளவு செய்முறை: பாத்திரத்தில் இறாலுடன் மைதா, கார்ன்ஃப்ளார் (சோள மாவு), உப்பு சேர்த்துக் கலக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றிச் சூடாக்கி இறால்களைப் போட்டு மொறுமொறுப்பாக பொரித்தெடுக்கவும். மற்றொரு கடாயில் சிறிதளவு எண்ணெய்விட்டு சூடாக்கி... இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், செலரி சேர்த்து வதக்கவும். இதனுடன் காய்ந்த மிளகாய் விழுது, டொமேட்டோ கெச்சப், சர்க்கரை, உப்பு சேர்த்துக் கிளறவும். பிறகு வறுத்த இறால் சேர்த்துக் கலக்கவும். இறுதியாக கொத்தமல்லித்தழை தூவி இறக்கி பரிமாறவும். டிராகன் பொட்டேட்டோஸ் தேவையானவை: உருளைக்கிழங்கு – 100 கிராம் கார்ன்ஃப்ளார் (சோள மாவு) – ஒரு டீஸ்பூன் மைதா மாவு – ஒரு டீஸ்பூன் இஞ்சி (தோல் சீவி, பொடியாக நறுக்கியது) – ஒரு டீஸ்பூன் பூண்டு (பொடியாக நறுக்கியது) – ஒரு டீஸ்பூன் தக்காளி கெச்சப் – 25 மில்லி சர்க்கரை, மிளகுத்தூள் – தேவைக்கேற்ப முந்திரிப்பருப்பு – 20 கிராம் வெங்காயத்தாள் (பொடியாக நறுக்கியது) – சிறிதளவு வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்) எண்ணெய், உப்பு – தேவையான அளவு செய்முறை: உருளைக்கிழங்கை நீளவாக்கில் துண்டுகளாக நறுக்கவும். இதனுடன் உப்பு, மிளகுத்தூள், மைதா மாவு, கார்ன்ஃப்ளார் (சோள மாவு) சேர்த்து நன்கு கலக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றிச் சூடாக்கி உருளைக்கிழங்கு துண்டுகளைப் போட்டு மொறுமொறுப்பாகப் பொரித்து எடுக்கவும். மற்றொரு கடாயில் எண்ணெய்விட்டு இஞ்சி, பூண்டு, வெங்காயம், தக்காளி கெச்சப், சர்க்கரை சேர்த்துக் கிளறவும். இதனுடன் பொரித்த உருளைக்கிழங்கு, முந்திரிப்பருப்பு சேர்த்துக் கிளறவும். இறுதியாக, வெங்காயத்தாள் தூவி இறக்கி சூடாகப் பரிமாறவும். பென்னே பாஸ்தா வித் வெஜிடபிள் தேவையானவை: பால் – ஒரு கப் (காய்ச்சாதது) பென்னே பாஸ்தா (வேகவைத்தது) – 200 கிராம் மைதா மாவு – ஒரு டீஸ்பூன் வெண்ணெய் - 2 டீஸ்பூன் சீஸ் துருவல் – 25 கிராம் க்ரீம் – 20 மில்லி பூண்டு (பொடியாக நறுக்கியது) – ஒரு டீஸ்பூன் ஆலிவ் ஆயில் – ஒரு டீஸ்பூன் கேரட், பீன்ஸ் துண்டுகள் – தலா 50 கிராம் பேபி கார்ன் – 20 கிராம் புரோக்கோலி – 50 கிராம் ஒரிகானோ – சிறிதளவு மிளகு, உப்பு – தேவையான அளவு செய்முறை: காய்கறிகளை வேகவைத்து எடுக்கவும். கடாயில் ஒரு டீஸ்பூன் வெண்ணெய்விட்டு உருக்கி, மைதா மாவு சேர்த்து வறுத்து எடுக்கவும். அதே கடாயில் பாலைச் சேர்த்துக் கொதிக்கவிட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, வறுத்த மைதா சேர்த்துக் கொதிக்கவிடவும். சாஸ் போல வந்த பின் இறக்கி வடிகட்டவும் (இதுவே வொயிட் சாஸ்). மற்றொரு கடாயில் ஆலிவ் ஆயில், பூண்டு, சேர்த்து வதக்கவும். இதனுடன் வேகவைத்த காய்கறிகள், வொயிட் சாஸ் சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு க்ரீம், சிறிதளவு சீஸ், ஒரு டீஸ்பூன் வெண்ணெய், உப்பு, மிளகு, ஒரிகானோ, வேகவைத்த பாஸ்தா சேர்த்துக் கிளறி இறக்கவும். மேலே சீஸ் துருவல் சேர்த்துப் பரிமாறவும். பெரிபெரி சிக்கன் ஸ்கீவர்ஸ் தேவையானவை: எலும்பில்லாத சிக்கன் – 250 கிராம் (நீளவாக்கிலோ சதுரவாக்கிலோ நறுக்கவும்) அன்னாசிப் பழ கியூப் துண்டுகள் – 10 காய்ந்த மிளகாய் – 4 வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்) சிவப்பு குடமிளகாய் – ஒன்று (பொடியாக நறுக்கவும்) நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு வெண்ணெய் – ஒரு டீஸ்பூன் எலுமிச்சைப் பழம் – ஒன்று இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன் மிளகு, உப்பு – தேவையான அளவு ஸ்கீவர்ஸ் - தேவையான அளவு செய்முறை: எலுமிச்சைப் பழத்தைப் பிழிந்து சாறு எடுக்கவும். கடாயில் வெண்ணெயை உருக்கி... வெங்காயம், குடமிளகாய், இஞ்சி – பூண்டு விழுது, கொத்தமல்லித்தழை, காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கி எடுக்கவும். ஆறிய பின் மிக்ஸியில் தண்ணீர் விடாமல் விழுதாக அரைத்து எடுக்கவும். பாத்திரத்தில் சிக்கன் துண்டுகள், அரைத்த விழுது, எலுமிச்சைச் சாறு, உப்பு, மிளகு சேர்த்துக் கலந்து சிறிது நேரம் ஊறவைக்கவும். ஸ்கீவர்ஸில் அன்னாசிப் பழ கியூப், ஊறவைத்த சிக்கன், மீண்டும் அன்னாசிப் பழ கியூப் என மாற்றி மாற்றி குத்தி வைக்கவும். இதை தோசைக்கல்லில் டோஸ்ட் செய்து எடுக்கவும். மயோனைஸுடன் சூடாகப் பரிமாறவும். பாட் தாய் வெஜ் நூடுல்ஸ் தேவையானவை: பாட் தாய் நூடுல்ஸ் (pad thai noodles) – 200 கிராம் புளி – 2 எலுமிச்சை அளவு வெல்லம் – 50 கிராம் காய்ந்த மிளகாய் - 5 முளைகட்டிய பயறு – 25 கிராம் சைனீஸ் முட்டைகோஸ் துண்டுகள் – 25 கிராம் கலர் குடமிளகாய் துண்டுகள் – 25 கிராம் வெங்காயத்தாள் – ஒரு கட்டு (பொடியாக நறுக்கவும்) சீமை சுரைக்காய் துண்டுகள் – 25 கிராம் உடைத்த வேர்க்கடலை – ஒரு டீஸ்பூன் எண்ணெய், உப்பு – தேவையான அளவு செய்முறை: வெறும் வாணலியில் மிளகாயை வறுத்து மிக்ஸியில் பவுடராக அரைக்கவும். பாத்திரத்தில் புளிக்கரைசலுடன் வெல்லம் சேர்த்துக் கொதிக்கவிடவும். இதனுடன் அரைத்த மிளகாய்த்தூள், உப்பு சேர்த்துக் கொதிக்கவைத்து சாஸ் போல கெட்டியான பிறகு இறக்கவும். சூடான நீரில் நூடுல்ஸைப் போட்டு வைத்து எடுக்கவும். கடாயில் எண்ணெய்விட்டு சுரைக்காய், முட்டைகோஸ், குடமிளகாய் துண்டுகள், முளைகட்டிய பயறு, உப்பு சேர்த்து வதக்கவும். இதனுடன் புளி சாஸ், நூடுல்ஸ் சேர்த்துக் கிளறி இறக்கவும். மேலே வெங்காயத்தாள், உடைத்த வேர்க்கடலை சேர்த்து அலங்கரித்துப் பரிமாறவும். ஆர்கானிக் க்ரில்டு சிக்கன் பிரெஸ்ட் வித் மஷ்ரூம் சாஸ் தேவையானவை: சிக்கன் பிரெஸ்ட் (நெஞ்சுக்கறி - ஆர்கானிக்) - 2 தைம் – சிறிதளவு மிளகு (ஒன்றிரண்டாகப் பொடித்தது) – ருசிக்கேற்ப ஆலிவ் ஆயில் – ஒரு டீஸ்பூன் மஷ்ரூம் – 5 (பொடியாக நறுக்கவும்) ஒய்ஸ்டர் சாஸ் – ஒரு டீஸ்பூன் சிக்கன் ஸ்டாக் – 50 மில்லி பூண்டு பல் – 4 (பொடியாக நறுக்கவும்) உப்பு – தேவையான அளவு வேகவைத்து மசித்த உருளைகிழங்கு, காய்கறிகள் - தேவையான அளவு செய்முறை: பாத்திரத்தில் சிக்கனுடன் உப்பு, பொடித்த மிளகு, தைம், ஆலிவ் ஆயில், பூண்டு சேர்த்துக் கலந்து தனியாக எடுத்து வைக்கவும். பிறகு சிக்கனை தோசைக்கல்லில் போட்டு மூடிபோட்டி க்ரில் செய்யவும் (இதற்குத் தண்ணீர் தேவையில்லை. சிக்கனில் உள்ள தண்ணீரே போதுமானது). வாணலியில் சிறிதளவு ஆலிவ் ஆயில் விட்டு மஷ்ரூம் சேர்த்து வதக்கவும், இதனுடன் சிக்கன் ஸ்டாக், ஒய்ஸ்டர் சாஸ், உப்பு, மிளகு சேர்த்துக் கிளறி சாஸ் பதமாக வந்தபின் இறக்கவும். சிக்கனை மஷ்ரூம் சாஸ், வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு, காய்கறிகள் உடன் பரிமாறவும். பெரிபெரி மஷ்ரூம் தேவையானவை: மஷ்ரூம் – 200 கிராம் மைதா மாவு – 50 கிராம் டொமேட்டோ கெச்சப் – 25 கிராம் பார்பிக்யூ சாஸ் – 25 கிராம் சில்லி ஃப்ளேக்ஸ் – 10 கிராம் சிவப்பு மிளகாய் விழுது – 20 கிராம் சர்க்கரை, மிளகு – ருசிக்கேற்ப காஷ்மீரி மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன் வெண்ணெய் – ஒரு டீஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு எண்ணெய், உப்பு – தேவையான அளவு செய்முறை: பாத்திரத்தில் மஷ்ரூம், மைதா மாவு, உப்பு சேர்த்துக் கலக்கவும். இதனுடன் சிறிதளவு தண்ணீர் தெளித்துப் பிசிறவும். கடாயில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி மஷ்ரூம்களைப் போட்டு நன்கு பொரித்து எடுக்கவும். மற்றொரு கடாயில் வெண்ணெய் விட்டுச் சூடாக்கி, சிவப்பு மிளகாய் விழுது, டொமேட்டோ கெச்சப், பார்பிக்யூ சாஸ், சில்லி ஃப்ளேக்ஸ், காஷ்மீரி மிளகாய்த்தூள், மிளகு, சர்க்கரை, உப்பு சேர்த்துக் கலந்து பச்சை வாசனை போகும் வரை கிளறவும். இதனுடன் பொரித்த மஷ்ரூம்களைப் போட்டு நன்கு கலந்து எடுக்கவும். கொத்தமல்லித்தழை சேர்த்துப் பரிமாறவும். தாய் சிக்கன் ஷாட்டே (Thai chicken sataya) தேவையானவை: சிக்கன் ஸ்ட்ரிப்ஸ் (நீளவாக்கில் நறுக்கிய சிக்கன் துண்டுகள்) – 250 கிராம் லெமன் கிராஸ் – ஒரு இன்ச் அளவு எலுமிச்சை இலைகள் – 3 இஞ்சி (தோல் சீவியது) – சிறிதளவு காய்ந்த மிளகாய் – 2 தேங்காய்ப்பால் – 50 மில்லி கறி மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன் எண்ணெய் – ஒரு டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு செய்முறை: லெமன் கிராஸ், எலுமிச்சை இலைகள், இஞ்சி, காய்ந்த மிளகாயை மிக்ஸியில் போட்டு அரைத்து விழுதாக்கிக்கொள்ளவும். பாத்திரத்தில் அரைத்த விழுது, தேங்காய்ப்பால், உப்பு, கறி மசாலாத்தூள், சிக்கன் துண்டுகள் சேர்த்துக் கலக்கி ஊறவிடவும். பிறகு சிக்கன் துண்டுகளை ஸ்கீவர்களில் குத்தி வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு அதில் சிக்கனை அடுக்கி டோஸ்ட் செய்து எடுக்கவும். இதனை ஸ்வீட் சில்லி சாஸூடன் சூடாகப் பரிமாறவும்.
  14. சூப்பரான சைடிஷ் தேங்காய்ப்பால் சிக்கன் குழம்பு இட்லி, தோசை, ஆப்பமுடன் சேர்த்து சாப்பிட சூப்பரான சைடிஷ் தேங்காய்ப்பால் சிக்கன் குழம்பு. இன்று இந்த குழம்பை எப்படி எளிய முறையில் செய்வதென்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : சிக்கன் - அரை கிலோ சமையல் எண்ணெய் - தேவையான அளவு. சின்ன வெங்காயம் - 150 கிராம் தக்காளி - இரண்டு (பெரியது) பச்சை மிளகாய் - மூன்று வர மிளகாய் - இரண்டு கறிவேப்பிலை - ஒரு கொத்து சிக்கன் மசாலா தூள் - மூன்று தேக்கரண்டி மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு கடுகு - அரை தேக்கரண்டி தேங்காய் - ஒரு மூடி(தேங்காய் பால்) கொத்தமல்லி - சிறிதளவு செய்முறை : * தக்காளி, கொத்தமல்லி, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். * கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, பச்சை மிளகாய், வர மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் சின்ன வெங்காயத்தை போட்டு வதக்கவும். * வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும். * தக்காளி நன்றாக வதங்கியதும் சிக்கன் சேர்த்து மேலும் வதக்கவும். * அடுத்து அதில் சிக்கன் மசாலா தூள் சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து நன்கு கிளறி மூடி வேக வைக்கவும். * பாதியாக சிக்கன் வெந்ததும், தேங்காய் பாலை ஊற்றி, நன்கு கலக்கி மூடி வைக்கவும். * தேங்காய்ப் பால் வற்றி, திக்கான குழம்பு நிலைக்கு வரும் வரை வைத்திருக்கவும். * கடைசியாக கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும். * தேங்காய்ப்பால் சிக்கன் குழம்பு ரெடி.
  15. பச்சை சுண்டைக்காய் ஊறுகாய் எக்ஸ்பெர்ட் கமென்ட்ஸ் பச்சை சுண்டைக்காய் ஊறுகாய்: வெந்தயத்தை வறுத்துப் பொடித்து சேர்த்தால் வாசனை அள்ளும். தேவையானவை: பச்சை சுண்டைக்காய் - ஒரு கப், துருவிய இஞ்சி - ஒரு டேபிள்ஸ்பூன், புளி - எலுமிச்சை அளவு (தண்ணீர் விட்டு கெட்டியாகக் கரைத்துக்கொள்ளவும்), பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்), மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் - தலா ஒரு டீஸ்பூன், வெல்லம் - கோலிகுண்டு அளவு, உப்பு - தேவையான அளவு. தாளிக்க: கடுகு, வெந்தயம், நல்லெண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: பச்சை சுண்டைக்காயை இடித்து தண்ணீரில் அலசி வைக்கவும். வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம் தாளித்து, சுண்டைக்காயைப் போட்டு வதக்கவும். இதனுடன் பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து மேலும் வதக்கவும். பிறகு உப்பு சேர்க்கவும். சுண்டைக்காய் வதங்கியதும் புளிக்கரைசல் ஊற்றிக் கொதிக்கவிடவும். பின்னர், பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு கிளறி, தேவைப்பட்டால் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, வெல்லம் சேர்த்துக் கிளறி இறக்கவும். சுண்டைக்காய் குடலில் உள்ள பூச்சிகளை வெளியேற்றிவிடும்; பற்கள், எலும்புகளைப் பலப்படுத்தும். - ஜி.கிருஷ்ணவேணி, சாலிகிராமம் சோயா சோலாங்கி சோயா சோலாங்கி: சோயா மாவுடன் சிறிதளவு கடலை மாவு சேர்த்தால் சுவை கூடும். தேவையானவை: கோதுமை மாவு - 2 கப், சோயா மாவு - ஒரு கப், பொடியாக நறுக்கிய காலிஃப்ளவர், கேரட், பீட்ரூட் (சேர்த்து) - ஒன்றரை கப், நறுக்கிய வெங்காயம் - அரை கப், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், பட்டை, கிராம்பு - சிறிதளவு, மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்) - தலா ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. சோலாங்கி மசாலா செய்முறை: பொடியாக நறுக்கப்பட்ட காலிஃப்ளவர், கேரட், பீட்ரூட் ஆகியவற்றை வேகவைத்துக்கொள்ளவும். தவாவில் எண்ணெய்விட்டு, காய்ந்ததும் பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை தாளித்து... வெங்காயம், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்கு சுருள வதங்கியதும் வெந்த காய்கறிகளைப் போட்டு, மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), கரம் மசாலாத்தூள், கொஞ்சம் உப்பு சேர்த்து அடுப்பை ‘சிம்’மில் வைத்து மெதுவாகக் கிளறி இறக்கவும். சோலாங்கி மசாலா தயார். சோலாங்கி செய்முறை: கோதுமை மாவு, சோயா மாவு, தேவையான அளவு உப்பு மூன்றையும் கைகளால் நன்றாகப் பிசிறவும். அத்துடன் நான்கு டீஸ்பூன் எண்ணெயைக் கலந்து பிசறி வைக்கவும். பின்னர் இரண்டு கப் நீரைக் கொதிக்கவிடவும். அந்த நீரை மாவில் ஊற்றி கரண்டிக் காம்பால் கிளறவும். பின்னர் மூடி வைக்கவும். பத்து நிமிடங்கள் கழித்து கையால அடித்து மாவை நன்றாகப் பிசையவும். பிறகு, மாவை சப்பாத்திகளாகத் திரட்டி, தோசைக்கல்லில் போட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும். ஒரு சப்பாத்தியை பாதியாக வெட்டி, அந்தப் பாதியை கூம்பு வடிவமாக செய்து, பிரியாத வண்ணம் ஒரு கிராம்பை செருகி வைக்கவும். இதுதான் சோலாங்கி. இதைப் போலவே நிறைய சோலாங்கிகளை தயார் செய்துகொள்ளவும். பரிமாறும் முன் சோலாங்கிகளை ஒவ்வொன்றாக எடுத்து, அவற்றுள் காய்கறிக் கலவையை போட்டு, நறுக்கிய கொத்தமல்லித்தழையை மேலே தூவி சாப்பிடக் கொடுக்கவும். - சுகந்தா ராம், கிழக்கு தாம்பரம் ஃபுல் க்ரீன் சூப் ஃபுல் க்ரீன் சூப்: சிறிது வெற்றிலை சேர்ப்பது இன்னும் சிறப்பு. தேவையானவை: பச்சைத் தக்காளி - ஒன்று (நறுக்கவும்), புதினா, துளசி, கொத்தமல்லித்தழை - தலா ஒரு கைப்பிடி அளவு, கற்பூரவல்லி இலை - 5, சுக்குத்தூள் - அரை டீஸ்பூன், மிளகு - 5, அரிசி மாவு - 2 டீஸ்பூன் (வறுத்து அரைத்தது), பனங்கற்கண்டு - ஒரு டீஸ்பூன், நெய் - அரை டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப. செய்முறை: தக்காளி முதல் மிளகு வரை உள்ள பொருள்களை அரை லிட்டர் தண்ணீரில் கலந்து, மூன்று நிமிடங்கள் கொதிக்கவைத்து இறக்கி வடிகட்டவும். அதனுடன் அரிசி மாவு, பனங்கற்கண்டு, உப்பு சேர்த்து, வாசனைக்காக அரை டீஸ்பூன் நெய் சேர்க்கவும். ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஃபுல் க்ரீன் சூப் தயார்.
  16. 30 வகை பிரியாணி `வழக்கத்தைவிடச் சில கவளங்களை அதிகமாக சாப்பிடவைக்கும் திறன் கமகம, விறுவிறு பிரியாணிக்கு உண்டு. அதிலும் அமர்க்களமான சுவையுடன், விதம்விதமாக பிரியாணி வகைகளைச் செய்து பரிமாறினால்... உறவு, நட்பு வட்டத்தில் உங்கள் கொடி உயர உயரப் பறக்கும். இந்தப் பெருமையை நீங்கள் பெற 30 வகை வெஜ் பிரியாணிகளை இங்கே செய்துகாட்டி அசத்துகிறார் சமையல்கலைஞர் சுதா செல்வகுமார். தேங்காய்ப்பால் பிரியாணி தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், தேங்காய்ப்பால் - 2 கப், காலிஃப்ளவர் (உதிர்த்தப் பூ) - கால் கப், பச்சைப் பட்டாணி (உரித்தது) - 2 டேபிள்ஸ்பூன், பிரியாணி இலை - ஒன்று, கிராம்பு - 3, நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன், நீளமாக நறுக்கிய பீன்ஸ் - 2 டேபிள்ஸ்பூன், பெரிய வெங்காயம் - 2 (நறுக்கவும்), பச்சை மிளகாய் - 4 (கீறவும்), பிரியாணி மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், நெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: அரிசியை நீரில் அலசி 15 நிமிடங்கள் ஊறவைத்து, பிறகு நீரை வடிக்கவும். வாணலியில் சிறிதளவு நெய்விட்டுச் சூடாக்கி, அரிசியை ஈரம் போகும் வரை சில நிமிடங்கள் வறுக்கவும். குக்கரில் எண்ணெய் - நெய்விட்டு, சூடானதும் பிரியாணி இலை, கிராம்பு தாளித்து, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கி, பச்சைப் பட்டாணி, நறுக்கிய காலிஃப்ளவர், பீன்ஸ், உப்பு சேர்த்து வதக்கவும். தேங்காய்ப்பால் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் பிரியாணி மசாலாத்தூள் சேர்த்து, வறுத்த அரிசி சேர்த்து கலக்கி, தீயைக் குறைத்து, வெயிட் போடவும். 10-15 நிமிடங்கள் வேகவிட்டு இறக்கவும். ஆவி விட்டதும் குக்கரைத் திறந்து, கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும். நவதானிய பிரியாணி தேவையானவை: பாசுமதி அரிசி - ஒன்றரை கப், கொண்டைக்கடலை, பட்டாணி, முழு கோதுமை, சிவப்பு காராமணி, சோள முத்துக்கள், மொச்சை, பச்சைப் பயறு, முழு உளுந்து, கொள்ளு (எல்லாம் சேர்த்து) - ஒரு கப், தேங்காய்த் துருவல் - அரை கப், நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு, மராட்டி மொக்கு - ஒன்று, கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப. அரைத்துக்கொள்ள: சின்ன வெங்காயம் - அரை கப் (நறுக்கியது), சோம்பு - ஒரு டீஸ்பூன், இஞ்சி - ஒரு அங்குலத்துண்டு (தோல் சீவவும்), பூண்டுப் பல் - 4, காய்ந்த மிளகாய் - 6, தக்காளி - ஒன்று, கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன். செய்முறை: தானியங்களைத் தனித்தனியாக நீரில் 8 மணி நேரம் ஊற வைக்கவும். குக்கரில் தேவையான நீர்விட்டு ஊறிய தானியங்களைச் சேர்த்து, உப்பு போட்டு குழையவிடாமல், மெத்தென்று வேகவிட்டு எடுக்கவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை மிக்ஸியில் மையாக அரைத்துக்கொள்ளவும். அரிசியை 15 நிமிடங்கள் நீரில் ஊறவைத்து, பிறகு நீரை வடிக்கவும். வாணலியில் சிறிது நெய்விட்டு அரிசியைப் போட்டு சில நிமிடங்கள் வறுக்கவும். குக்கரில் சிறிதளவு எண்ணெய்விட்டு, சூடானதும் மராட்டி மொக்கு தாளித்து, அரைத்து விழுதைச் சேர்த்து வதக்கி, உப்பு, கரம் மசாலா சேர்த்துக் கிளறி, வெந்த நவதானியங்களைச் சேர்த்துப் புரட்டவும். 3 கப் நீர்விட்டு அரிசியைச் சேர்த்துக் கிளறி, 2 விசில் வரும் வரை வேகவிட்டு இறக்கியப் பின் கொத்த மல்லித்தழை தூவிப் பரிமாறவும். ஹைதராபாத் பிரியாணி தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், சதுரமாக சிறிதாக நறுக்கிய காய்கறிக் கலவை (உருளைக்கிழங்கு, டர்னிப்ஸ், கேரட், பீட்ரூட்) மற்றும் பச்சைப் பட்டாணி சேர்த்து - ஒன்றரை கப், எலுமிச்சைப் பழம் - ஒரு மூடி (சாறு எடுக்கவும்), தயிர் - ஒரு கப், புதினா (அலசி ஆய்ந்தது) - 2 டேபிள்ஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன், பெரிய வெங்காயம் - 2 (நீளவாக்கில் நறுக்கவும்), பூண்டுப் பல் - 6, நெய் எண்ணெய், உப்பு - தேவையான அளவு. அரைத்துக்கொள்ள: முந்திரிப்பருப்பு - 10, கசகசா - ஒரு டீஸ்பூன், பட்டை - சிறிய துண்டு, ஏலக்காய், கிராம்பு - தலா 2, இஞ்சி - அரை அங்குல நீளத் துண்டு (தோல் சீவவும்), கொத்தமல்லித்தழை - அரை கப் (அலசி ஆய்ந்தது). செய்முறை: அரிசியை 10 நிமிடங்கள் ஊறவைத்து, நீரை வடிக்கவும். வாணலியில் சிறிதளவு நெய்விட்டு அரிசியை சில நிமிடங்கள் வறுத்துக்கொள்ளவும். குக்கரில் எண்ணெய்விட்டு, சூடானதும் வெங்காயம், பூண்டு சேர்த்து சிவக்க வதக்கி, அரைத்த மசாலாவைச் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். இதனுடன் காய்கறிக் கலவையைச் சேர்த்து வதக்கவும். தயிரைக் கடைந்து உப்பு, ஒரு கப் நீர் சேர்த்து குக்கரில் ஊற்றவும். ஒரு கொதி வந்தவுடன் அரிசியைப் போட்டு குக்கரை மூடி, தீயைக் குறைத்து வைத்து 10-15 நிமிடங்கள் வேகவிட்டு எலுமிச்சைச் சாறு சேர்த்து, புதினா, கொத்தமல்லித்தழை சேர்த்துக் கிளறி, சூடாகப் பரிமாறவும். ஹாட் வெஜ் பிரியாணி தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், சதுரமாக நறுக்கிய காய்கறிக் கலவை - ஒரு கப் (சௌசௌ, புடலங்காய், காலிஃப்ளவர், தோல் சீவிய உருளைக்கிழங்கு), வறுத்த முந்திரிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், மராட்டி மொக்கு - ஒன்று, உலர்ந்த அன்னாசிப்பூ - 2 இதழ், பிரியாணி இலை - ஒன்று, சோம்பு, சர்க்கரை - தலா அரை டீஸ்பூன், எண்ணெய் - சிறிதளவு, நெய், உப்பு - தேவையான அளவு. வறுத்துப் பொடிக்க: தனியா - 2 டேபிள்ஸ்பூன், முழு உளுந்து - ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, கறிவேப்பிலை - சிறிதளவு, பூண்டு - 4 பல், உப்பு - சிறிதளவு. செய்முறை: வாணலியில் சிறிது எண்ணெய்விட்டு சூடானதும் அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களை வறுத்து, மிக்ஸியில் பொடி செய்துகொள்ளவும். அரிசியை 10 நிமிடங்கள் ஊறவைத்து நீரை வடிக்கவும். பிறகு, அதை நெய்யில் சில நிமிடங்கள் வறுத்துக்கொள்ளவும். வாணலியில் நெய்விட்டு சூடானதும் பிரியாணி இலை, மராட்டி மொக்கு, அன்னாசிப்பூ, சோம்பு தாளித்து, நறுக்கிய காய்கறிக் கலவை சேர்த்து வதக்கி... உப்பு, வறுத்து அரைத்த பொடி, சர்க்கரை சேர்த்து வதக்கவும். பிறகு, 2 கப் சுடுநீரை ஊற்றி, அரிசியைச் சேர்க்கவும். ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் பாத்திரத்தைச் சூடாக்கிக்கொள்ளவும். அரிசிக் கலவையை அந்தப் பாத்திரத்துக்கு உடனே மாற்றவும். ஒரு கொதி வரும் வரை சூடாக்கி உடனே மூடவும். ஒரு மணி நேரம் கழித்து வெந்திருக்கிறதா என பார்த்து முந்திரிப்பருப்பு தூவிப் பரிமாறவும். கார்ன் - காலிஃப்ளவர் பிரியாணி தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், காலிஃப்ளவர் (உதிர்த்த பூ) - அரை கப், ஸ்வீட் கார்ன் முத்துகள் - ஒரு கப், பட்டை - சிறிய துண்டு, தேங்காய்ப் பால் - 2 கப், காய்ச்சி ஆறவைத்த பால் - சிறிதளவு, கறுப்பு ஏலக்காய் - 3, நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. அரைக்க: புதினா (ஆய்ந்தது) - 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 6 (அல்லது காரத்துக்கேற்ப), தேங்காய்த் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், வேர்க்கடலை - 2 டேபிள் ஸ்பூன், சாட் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன். செய்முறை: அரிசியை 15 நிமிடங்கள் நீரில் ஊற வைத்து நீரை வடிக்கவும். வாணலியில் சிறிதளவு நெய்விட்டு அரிசியை சில நிமிடங்கள் வறுக்கவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை விழுதாக அரைத்துக்கொள்ளவும். குக்கரில் எண்ணெய்விட்டு, சூடானதும் பட்டை, கறுப்பு ஏலக்காய் தாளித்து, உதிர்த்த காலிஃப்ளவர் பூ, அரைத்த விழுது சேர்த்து வதக்கவும். இதனுடன் ஸ்வீட் கார்ன் முத்துகள், உப்பு சேர்த்துக் கிளறி, தேங்காய்பால் சேர்த்து ஒரு கொதி வந்ததும் அரிசி சேர்த்து, குக்கரை மூடி 2 விசில் வந்தவுடன் இறக்கவும். ஸ்பைஸி மஷ்ரூம் பிரியாணி தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், நறுக்கிய பட்டன் காளான் - ஒரு கப், தக்காளி, வெங்காயம் - தலா 2 (பொடியாக நறுக்கவும்), ரெட் சில்லி சாஸ், சோயா சாஸ் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், மிளகு - சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், உடைத்த முந்திரி - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் - நெய் கலவை, உப்பு - தேவையான அளவு. செய்முறை: அரிசியைக் கழுவி, 10 நிமிடங்கள் ஊறவைத்து, நீரை வடிக்கவும். வாணலியில் சிறிதளவு நெய் விட்டு அரிசியை சில நிமிடங்கள் வறுத்துக்கொள்ளவும். தக்காளியைச் சுடுநீரில் சிறிது நேரம் போட்டு எடுத்து, தோலை உரித்து மிக்ஸியில் அடித்துக்கொள்ளவும். குக்கரில் எண்ணெய் - நெய் கலவையைச் சேர்த்து, சூடானதும் பட்டன் காளான் சேர்த்து... இஞ்சி, வெங்காயம், முந்திரி சேர்த்து வதக்கவும். இதனுடன் சில்லி சாஸ், சோயா சாஸ், உப்பு, மிளகு - சீரகத்தூள் சேர்த்துக் கிளறி, தக்காளிச் சாறு ஊற்றவும். பிறகு, தேவையான நீர் சேர்த்துக் கொதிக்கவிட்டு, அரிசியைப் போட்டுக் கிளறி, குக்கரை `வெயிட்’ போட்டு மூடி, 2 விசில் வந்த உடன் நிறுத்தவும். ஆவி விட்டதும் குக்கரைத் திறந்து, கிளறி சூடாகப் பரிமாறவும். வெஜ் கோஃப்தா பிரியாணி தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், பெரிய வெங்காயம் - 2 (வட்டமாக நறுக்கவும்), வாழைக்காய் - ஒன்று, அலசி ஆய்ந்த பசலைக்கீரை (பாலக்கீரை) - அரை கப், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், சர்க்கரை - சிறிதளவு, பிரெட் - 2 ஸ்லைஸ், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, பச்சை மிளகாய் - 2 (நீளவாக்கில் நறுக்கவும்), ஆம்சூர் பவுடர் (மாங்காய்த்தூள்) - ஒரு டீஸ்பூன், மசாலாப்பொடி (பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை பொடித்தது) - ஒரு டீஸ்பூன், நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: அரிசியை 15 நிமிடங்கள் நீரில் ஊற வைத்து, நீரை வடிக்கவும். வாணலியில் சிறிதளவு நெய்விட்டு, சூடானதும் அரிசியைச் சேர்த்து சில நிமிடங்கள் வறுத்துக் கொள்ளவும். நறுக்கிய பெரிய வெங்காயத்தை எண்ணெயில் பொரித்துக்கொள்ளவும். வாழைக்காயைத் தோல் சீவி மெத்தென்று வேகவைத்து மசித்துக் கொள்ளவும். பிரெட்டைத் தண்ணீரில் முக்கி எடுத்து உடனே பிழிந்து வாழைக்காயோடு சேர்க்கவும். பசலைக்கீரையைப் பொடியாக நறுக்கி கொஞ்சம் சர்க்கரை சேர்த்து சிறிதளவு எண்ணெயில் வதக்கிக்கொள்ளவும். அதையும் வாழைக்காயோடு சேர்த்து உப்பு சேர்த்துப் பிசைந்து உருண்டைகளாக உருட்டி சூடான எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து வைத்துக்கொள்ளவும். குக்கரில் எண்ணெய்விட்டு, சூடானதும் பச்சை மிளகாய், மசாலாப் பொடி சேர்த்து வதக்கி, தேவையான நீர்விட்டு, கொதிவந்ததும் அரிசியைப் போட்டு, உப்பு, மாங்காய்த்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்துக் கிளறவும். குக்கரை `வெயிட்’ போட்டு மூடி, 2 விசில் வந்ததும் இறக்கவும். ஆவி விட்டதும் குக்கரைத் திறந்து, பொரித்த கோஃப்தா உருண்டைகள் சேர்த்துக் கிளறவும். பொரித்த வெங்காயத்தைச் சேர்த்துப் பரிமாறவும். பைனாப்பிள் டம்ளிங் பிரியாணி தேவையானவை: பாசுமதி அரிசி, அன்னாசிப்பழச் சாறு - தலா ஒரு கப், நறுக்கிய அன்னாசிப்பழத் துண்டுகள் - அரை கப், பனீர் துண்டுகள் - 10, சர்க்கரை - அரை டீஸ்பூன், பாதாம் பருப்பு - 10, ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், உலர்ந்த திராட்சை - ஒரு டேபிள்ஸ்பூன், டைமண்ட் கல்கண்டு - ஒரு டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - ஒன்று (கீறவும்), கிராம்பு - 2, நெய் - தேவையான அளவு, உப்பு - ஒரு சிட்டிகை. செய்முறை: பாதாம் பருப்பை சுடுநீரில் ஊறவைத்து, தோல் நீக்கி, மையாக அரைத்துக்கொள்ளவும். சர்க்கரையுடன் கொஞ்சம் நீர் சேர்த்து, அன்னாசிபழத் துண்டுகளைப் போட்டு வேகவிட்டு எடுத்துக்கொள்ளவும். அரிசியைக் கழுவி, ஊறவைக்காமல் நெய்யில் வறுத்து எடுத்துக்கொள்ளவும். குக்கரில் அன்னாசிபழச் சாறு, ஒன்றரை கப் நீர் விட்டு சூடாக்கி, நன்கு கொதிக்க ஆரம்பித்தவுடன் உப்பு, கல்கண்டு சேர்த்து, அடுப்பைக் குறைந்த தீயில் வைத்து... அரிசி, அன்னாசிப்பழத் துண்டுகள் சேர்த்துக் கலக்கி, அரைத்த பாதாம் விழுதைச் சேர்த்துக் கிளறவும். குக்கரை மூடி, சாதம் வெந்ததும் இறக்கவும். வாணலியில் நெய் ஊற்றி, சூடானதும் பச்சை மிளகாய், கிராம்பு, உலர்ந்த திராட்சை, ஏலக்காய்த்தூள், பனீர் துண்டுகள் சேர்த்து வதக்கி, வெந்த சாதத்துடன் சேர்த்துக் கிளறி பரிமாறவும். இனிப்பு, காரம், உப்பு சேர்ந்து வித்தியாசமான சுவையுடன் இருக்கும் இந்த பிரியாணி. கேபேஜ் - கோவைக்காய் பிரியாணி தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், கோவைக்காய் (வட்டமாக நறுக்கியது) - அரை கப், முட்டைகோஸ் துருவல் - ஒரு கப், பெரிய வெங்காயம், தக்காளி - தலா 2 (நறுக்கவும்), கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு - தலா ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, பஜ்ஜி மிக்ஸ் பவுடர் - 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 5, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு, இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், நெய், எண்ணெய் - சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்ப. செய்முறை: பாசிப்பருப்பை 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். அரிசியை 10 நிமிடங்கள் ஊறவைத்து, நீரை வடித்து நெய்யில் சில நிமிடங்கள் வறுத்துக்கொள்ளவும். பஜ்ஜி மிக்ஸில் சிறிதளவு நீர் விட்டுக் கரைத்து, கோவைக்காயை முக்கி எடுத்து சூடான எண்ணெய்யில் பொரித்து வைத்துக்கொள்ளவும். குக்கரில் எண்ணெய்விட்டு, காய்ந்ததும் கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், சீரகம், கடலைப்பருப்பு தாளித்து... வெங்காயம், தக்காளி, இஞ்சி - பூண்டு விழுது சேர்த்துக் கிளறி, முட்டைகோஸ் துருவல், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். இதனுடன் ஊறிய பாசிப்பருப்பு சேர்த்து, தேவையான நீர்விட்டு கொதிவந்ததும் அரிசி சேர்த்து, குக்கரை மூடவும். வெந்ததும், பொரித்த கோவைக்காய் சேர்த்துப் புரட்டி, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும். மின்ட் - மேத்தி பிரியாணி தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், முளைகட்டிய வெந்தயம் - 2 டேபிள்ஸ்பூன், புதினா - ஒரு சிறிய கட்டு, தேங்காய்த் துருவல் - கால் கப், மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், பொட்டுக்கடலை - 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 6 (அல்லது காரத்துக்கேற்ப), இஞ்சி - அரை அங்குலத் துண்டு, மஞ்சள்தூள் - சிறிதளவு, ஓமம் - அரை டீஸ்பூன், எலுமிச்சைப்பழம் - ஒரு மூடி (சாறு எடுக்கவும்), பிரியாணி இலை - ஒன்று, குட்டி உருளைக்கிழங்கு - 10, லவங்கம் - 2, நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: அரிசியைக் கழுவி 15 நிமிடங்கள் ஊறவைத்து நீரை வடிக்கவும். வாணலியில் நெய்விட்டு அரிசியை சில நிமிடங்கள் வறுத்துக்கொள்ளவும். உருளைக்கிழங்கை வேகவிட்டு தோல் உரிக்க வும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் உருளைக்கிழங்கைப் போட்டு, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். புதினாவை எண்ணெயில் வதக்கவும். அதில் பாதியளவு எடுத்துக்கொண்டு... தேங்காய்த் துருவல், பொட்டுக்கடலை, பச்சை மிளகாய், இஞ்சி, ஓமம் சேர்த்து விழுதாக அரைக்கவும். வதக்கிய மீதி புதினாவைத் தனியே வைக்கவும். குக்கரில் எண்ணெய்விட்டு, சூடானதும் பிரியாணி இலை, லவங்கம் தாளித்து, முளைகட்டிய வெந்தயம், அரைத்த மசாலா விழுது சேர்த்து வதக்கவும். இதனுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து, தேவையான நீர்விட்டு கொதி வந்ததும் அரிசியைப் போட்டு, மீதி புதினாவைச் சேர்த்து, வெந்ததும் எலுமிச்சை சாறு, பொரித்த உருளைக்கிழங்கைச் சேர்த்துக் கிளறி பரிமாறவும். கலர்புஃல் கேப்சிகம் பிரியாணி தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், நறுக்கிய வெங்காயத்தாள் - கால் கப், குடமிளகாய் (பச்சை, மஞ்சள், சிவப்பு... சதுரமாக நறுக்கியது, மூன்றும் சேர்த்து) - ஒரு கப், பச்சை வேர்க்கடலை - கால் கப் (ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்), தயிர் - ஒரு கப் (கடையவும்), தனியாத் தூள் - அரை டீஸ்பூன், பிரியாணி மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், தக்காளி சாஸ் - 2 டேபிள்ஸ்பூன், நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: அரிசியை 15 நிமிடங்கள் நீரில் ஊற வைத்து, நீரை வடிக்கவும். வாணலியில் நெய்விட்டு சூடானதும் அரிசியை வறுத்துக்கொள்ளவும். குக்கரில் எண்ணெய் விட்டு சூடானதும் நறுக்கிய வெங்காயத்தாள், கலர்ஃபுல் குடமிளகாய் சேர்த்து வதக்கி, தக்காளி சாஸ், உப்பு சேர்த்துக் கிளறவும். இதனுடன் பிரியாணி மசாலாத்தூள் சேர்த்து... ஊறிய வேர்க்கடலை, கடைந்த தயிர் சேர்த்துக் கலக்கவும். பிறகு தேவையான நீர்விட்டு, ஒரு கொதி வந்ததும் அரிசி, தனியாத்தூள் சேர்த்துக் கிளறி, குக்கரை மூடி வெயிட் போட்டு 2 விசில் வந்தவுடன் இறக்கவும். ஆவி விட்டதும் குக்கரைத் திறந்து, கிளறிப் பரிமாறவும். பிரெட் - பட்டாணி பிரியாணி தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், நெய் - சிறி தளவு, பிரெட் ஸ்லைஸ் - 6, ஃப்ரெஷ் பச்சைப் பட்டாணி - அரை கப், கஸூரி மேத்தி (உலர்ந்த வெந்தய இலை) - ஒரு டேபிள்ஸ்பூன், தக்காளி - 2 (நறுக்கவும்), பெரிய வெங்காயம் - 2 (நீள வாக்கில் நறுக்கவும்), பிரியாணி இலை, உலர் அன்னாசிப்பூ - தலா ஒன்று, நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. அரைக்க: சின்ன வெங்காயம் - 8, சீரகம் - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 6 (அல்லது காரத்துக்கேற்ப), பூண்டு - 4 பல், தேங்காய்த் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகு - அரை டீஸ்பூன். செய்முறை: அரிசியை 10 - 15 நிமிடங்கள் ஊறவைத்து, நீரை வடிக்கவும். வாணலியில் நெய்விட்டு சூடானதும் அரிசியை சில நிமிடங்கள் வறுத்துக்கொள்ளவும். பிரெட்டின் ஓரங்களை எடுத்துவிட்டு, சதுரமாக வெட்டி, நெய்யில் வறுத்து எடுத்துக்கொள்ளவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை விழுதாக அரைத்துக்கொள்ளவும். குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், பிரியாணி இலை, அன்னாசிப்பூ தாளித்து, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி, அரைத்த மசாலா சேர்த்துக் கிளறவும். இதனுடன் பச்சைப் பட்டாணி சேர்த்து வதக்கி, உப்பு, கஸூரி மேத்தி சேர்த்துக் கிளறவும். பின்னர் தேவையான நீர்விட்டு, கொதி வந்ததும் அரிசியைப் போட்டு, குக்கரை மூடி வெயிட் போட்டு 2 விசில் வந்ததும் இறக்கவும். சிறிது நேரத்துக்குப் பின் குக்கரைத் திறந்து, வறுத்த பிரெட் துண்டுகளைச் சேர்த்துக்கிளறி பரிமாறவும். பண்டிகைக் கால பிரியாணி தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், சதுரமாக நறுக்கிய நாட்டுக் காய்கறிகள் - 2 கப், பச்சை மிளகாய் - 3 (நறுக்கவும்), வெள்ளை மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், தக்காளி - 2, கொத்தமல்லித்தழை (அலசி ஆய்ந்தது) - 2 டேபிள்ஸ்பூன், தனியாத்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள் - தலா அரை டீஸ்பூன், எலுமிச்சைப்பழம் - ஒரு மூடி (சாறு எடுக்கவும்), எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: அரிசியைக் கழுவி 15 நிமிடங்கள் ஊறவைக்கவும். பிறகு, சிறிதளவு உப்பு சேர்த்து பொலபொலவென்று சாதம் வடித்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு, நறுக்கிய பச்சை மிளகாய், நாட்டுக் காய்கறிகளைச் சேர்த்து வதக்கவும். இதனுடன் தக்காளி, தனியாத்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், சேர்த்துக் கிளறி... மிளகாய்த்தூள், சிறிதளவு உப்பு போட்டு மேலும் வதக்கவும். பிறகு, சாதத்தைச் சேர்த்து, எலுமிச்சைச் சாறு விட்டுக் கிளறி, கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும். பூண்டு, வெங்காயம், மசாலா சேர்க்காததால் பண்டிகைக்காலத்துக்கு உகந்த பிரியாணி இது. பபடி காண்டியா பிரியாணி தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், கடலை மாவு - அரை கப், அரிசி மாவு - கால் கப், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, சமையல் சோடா - ஒரு சிட்டிகை, பொடித்த ஓமம் - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள், இஞ்சி - பூண்டு விழுது - தலா ஒரு டீஸ்பூன், முந்திரிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லித்தழை (ஆய்ந்தது) - 2 டேபிள்ஸ்பூன், சன்ன ஓமப்பொடி (ஸ்நாக்ஸ் வகை) - கால் கப், எண்ணெய் - தேவையான அளவு, நெய், உப்பு - சிறிதளவு. செய்முறை: அரிசியை 10 நிமிடங்கள் ஊறவைத்து, நீரை வடிக்க வும். வாணலியில் நெய் விட்டு சூடானதும் அரிசியை சில நிமிடங்கள் வறுத்துக்கொள்ளவும். கடலை மாவு, உப்பு, அரிசி மாவு சமையல் சோடா, மஞ்சள்தூள், பொடித்த ஓமம், மிளகாய்த்தூள் சேர்த்து நீர்விட்டு கெட்டியாகப் பிசைந்து சப்பாத்தியாக திரட்டி, சிறு சிறு சதுரமாக வெட்டி சூடான எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். பபடி காண்டியா ரெடி. இதை காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைக்கவும். குக்கரில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கி, முந்திரிப்பருப்பு சேர்த்துக் கிளறவும். இதனுடன் தேவையான நீர்விட்டு... கொதி வந்ததும் அரிசி, உப்பு, கரம் மசாலாத்தூள் சேர்த்து கிளறி, கொத்தமல்லித்தழை சேர்த்து, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கவும். சிறிது நேரத்துக்குப் பிறகு குக்கரைத் திறந்து, பபடி காண்டியா போட்டுப் புரட்டவும். பரிமாறும் முன் சன்ன ஓமப்பொடி தூவி பரிமாறவும். இந்த வகை பிரியாணிக்கு சைட் டிஷ் தேவையில்லை. நட்ஸ் பிரியாணி தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், உடைத்த முந்திரிப் பருப்பு (வறுத்தது) - கால் கப், பால் - இரண்டரை கப், பாதாம், பிஸ்தா துருவல் (சேர்த்து) - கால் கப், வறுத்த வேர்க்கடலைப் பொடி - 2 டேபிள்ஸ்பூன், வெள்ளை மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், நறுக்கிய வெங்காயத்தாள், நறுக்கிய அக்ரூட் - தலா 2 டேபிள்ஸ்பூன், கிராம்பு - பட்டை பொடி - ஒரு டீஸ்பூன், பழுப்பு சர்க்கரை - ஒரு டீஸ்பூன். உப்பு, நெய் - தேவையான அளவு. வினிகர் மிளகாய் செய்ய: பச்சை மிளகாய் - 5 (வட்டமாக நறுக்கவும்), உப்பு - சிறிதளவு, சோயா சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன், வினிகர் - கால் கப் (ஃபுட் வினிகர் பிளெய்ன்). செய்முறை: வினிகர் மிளகாய் செய்யக் கொடுத்துள்ளவற்றைக் கலந்துகொள்ளவும். அரிசியை 15 நிமிடங்கள் ஊறவைத்து நீரை வடிக்கவும். வாணலியில் நெய்விட்டு சூடானதும் அரிசியைச் சில நிமிடங்கள் வறுத்துக்கொண்டு, பால் விட்டு (நீருக்குப் பதில்) பொல பொலவென சாதம் வடித்துக்கொள்ளவும். வாணலியில் நெய் விட்டு, சூடானதும் வெங்காயத்தாள் சேர்த்து வதக்கி, வெள்ளை மிளகுத்தூள், உப்பு, கிராம்பு - பட்டை பொடி சேர்த்துக் கலந்து... பாதாம், பிஸ்தா துருவல் சேர்த்துக் கிளறி, நறுக்கிய அக்ரூட் போட்டுப் புரட்டவும். இதில் சாதத்தைப் சேர்த்து, வினிகர் மிளகாய் போட்டுப் புரட்டி, வேர்க்கடலைப் பொடி, முந்திரி, பழுப்புச் சர்க்கரை தூவி இறக்கவும். அமிர்தப்பொடி பிரியாணி தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், மிளகு, சீரகம், வெந்தயம், எள், ஓமம், பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள், சுக்குப்பொடி - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - 2 டேபிள்ஸ்பூன், நாரத்தை இலைகள் - 10, சோம்பு - அரை டீஸ்பூன், எலுமிச்சைப்பழம் - ஒரு மூடி (சாறு எடுக்கவும்), மராட்டி மொக்கு - ஒன்று, பட்டைப் பொடி - அரை டீஸ்பூன், சீரகம் (அலங்கரிக்க) - சிறிதளவு, நறுக்கிய சின்ன வெங்காயம் - கால் கப், நெய், உப்பு - சிறிதளவு, நல்லெண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: பாசுமதி அரிசியை 15 நிமிடங்கள் ஊறவைத்து, தேவையான நீர், உப்பு சேர்த்து பொலபொலவென்று சாதமாக வடித்துக்கொள்ளவும். வாணலியில் சிறிதளவு நெய் விட்டு சூடானதும் மிளகு, சீரகம், வெந்தயம், எள், ஓமம், சோம்பு ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து ஒன்றாக பொடித்துக் கொள்ளவும். வெறும் வாணலியில் கறிவேப்பிலை, நாரத்தை இலையை ஒவ்வொன்றாக வறுத்து, தனித்தனியே மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். வாணலியில் நல்லெண்ணெய் விட்டு சூடானதும் மராட்டி மொக்கு, பட்டைப் பொடி சேர்த்து, வடித்த சாதம், கறி வேப்பிலை - நாரத்தை பொடி, மிளகாய்த்தூள் சேர்த்துக் கிளறி, சிறிது உப்பு, மற்ற பொடிகள், எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து இறக்கவும். சீரகத்தையும், சின்ன வெங்காயத்தையும் நெய்யில் வதக்கி மேலே தூவிப் பரிமாறவும். வாழைப்பூ பிரியாணி தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், வாழைப்பூ (ஆய்ந்து, நறுக்கியது) - ஒரு கப் (மோரில் போட்டு வைக்கவும்), கெட்டித் தயிர் - ஒரு கப் (கடையவும்), மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, காய்ந்த மிளகாய் - 6, பூண்டுப் பல் - 8, நறுக்கிய சின்ன வெங்காயம் - அரை கப், கொத்தமல்லித்தழை (ஆய்ந்தது) - 2 டேபிள்ஸ்பூன், சிவப்பு காராமணி - கால் கப், பிரிஞ்சி இலை - ஒன்று, பட்டை சிறிய துண்டு, நெய் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு. அரைக்க: தேங்காய்த் துருவல் - கால் கப், சோம்பு - ஒரு டீஸ்பூன், தோல் சீவிய இஞ்சி - அரை அங்குலத்துண்டு, மிளகு - அரை டீஸ்பூன். செய்முறை: சிவப்பு காராமணியை 2 மணி நேரம் ஊறவைக்கவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை விழுதாக அரைக்கவும். அரிசியை 10 நிமிடங்கள் ஊறவைத்து நீரை வடிக்கவும். வாணலியில் நெய் விட்டு அரிசியை சில நிமிடங்கள் வறுத்துக்கொள்ளவும். காராமணியுடன் உப்பு சேர்த்து அரை வேக்காடு பதத்தில் வேகவிடவும். குக்கரில் எண்ணெய்விட்டு, காய்ந்ததும் பிரிஞ்சி இலை, பட்டை, காய்ந்த மிளகாய் தாளித்து... பூண்டு, வெங்காயம், சேர்த்து வதக்கி, அரைத்த விழுது, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கிளறவும். நறுக்கிய வாழைப் பூவை ஒட்டப்பிழிந்து சேர்த்து, வேகவைத்த காராமணியும் சேர்த்து, கடைந்த தயிர் ஊற்றி, தேவையான நீர்விட்டுக் கலக்கவும். ஒரு கொதிவந்ததும் கொத்தமல்லித்தழை தூவி, அரிசியைப் போட்டு, குக் கரை மூடி 2 விசில் வந்து வெந்ததும் இறக்கவும். ஆவி விட்டதும் குக்கரைத் திறந்து, கிளறிப் பரிமாறவும். மீல்மேக்கர் பிரியாணி தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், சின்ன மீல்மேக்கர் - அரை கப், வெங்காயம் - 2, தக்காளி - 3, காய்ந்த பட்டாணி - கால் கப், எலுமிச்சைப்பழம் - ஒரு மூடி (சாறு எடுக்கவும்), ஆரஞ்சு ஃபுட் கலர் - ஒரு சிட்டிகை, சோள மாவு, மைதா மாவு - தலா ஒரு டேபிள் ஸ்பூன், அரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன், சோம்பு - ஒரு டீஸ்பூன், ஓமம், மல்லித்தூள் (தனியாத்தூள்) - தலா அரை டீஸ்பூன், மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், அப்பளம் (பொரித்தது) - 10, எண்ணெய், நெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: காய்ந்த பட்டாணியை 6 மணி நேரம் ஊறவைத்து, வேகவிட்டு எடுத்துக்கொள்ளவும். அரிசியை 10 நிமிடங்கள் ஊறவைத்து நீரை வடிக்கவும். வாணலியில் நெய்விட்டு சூடானதும் அரிசியைச் சில நிமிடங்கள் வறுத்துக்கொள்ளவும். மீல்மேக்கரை சுடுநீரில் போட்டு எடுத்து, ஒட்டப்பிழிந்து வைத்துக்கொள்ளவும். பெரிய பவுலில் மைதா மாவு, சோள மாவு, அரிசி மாவு, உப்பு, ஃபுட் கலர், ஓமம், மல்லித்தூள் (தனியாத்தூள்), எலுமிச்சைச் சாறு சேர்த்து, நீர் தெளித்து, மீல்மேக்கரைப் போட்டு 10 நிமிடங்கள் ஊறவிடவும். பிறகு, சூடான எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து வைத்துக்கொள்ளவும். குக்கரில் சிறிதளவு எண்ணெய் - நெய்விட்டு, சூடானதும் சோம்பு தாளித்து, நறுக்கிய வெங்காயம், தக்காளி, சேர்த்து வதக்கி... வெந்த பட்டாணி, உப்பு, மிளகுத்தூள் சேர்த்துப் புரட்டவும். தேவையான நீர்விட்டு, ஒரு கொதி வந்ததும் அரிசி சேர்த்துக் கிளறி, குக்கரை மூடி வேகவிடவும். அதனுடன் பொரித்த அப்பளத்தை உடைத்துப் போட்டுக் கிளறி பரிமாறவும். கொள்ளு - எள் பிரியாணி தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், கொள்ளு - அரை கப், எள் - 2 டேபிள்ஸ்பூன், புதினா இலை - ஒரு டேபிள்ஸ்பூன், தேங்காய்த் துருவல் - அரை கப், ஏலக்காய் - 5, ஜாதிக்காய்ப்பொடி - ஒரு சிட்டிகை, வறுத்த முந்திரி - ஒரு டேபிள்ஸ்பூன், நெய், எண்ணெய், - சிறிதளவு, நாட்டுச்சர்க்கரை - கால் கப், தேங்காய்ப்பால் - 2 கப். செய்முறை: கொள்ளு, எள் இரண்டையும் அலசி, உலர்த்தி, வெறும் வாணலியில் லேசாக வறுத்துப் பொடித்துக்கொள்ளவும். இதனுடன் தேங்காய்த் துருவல், ஜாதிக்காய்ப்பொடி, நாட்டுச்சர்க்கரை கலந்து வைத்துக்கொள்ளவும். அரிசியை 15 நிமிடங்கள் ஊறவைத்து, நீரை வடிக்கவும். வாணலியில் எண்ணெய், நெய்விட்டு, சூடானதும் அரிசியைச் சில நிமிடங்கள் வறுத்து எடுத்துக்கொண்டு, தேங்காய்ப்பால் சேர்த்து (நீருக்குப் பதில்) சாதம் வடித்துக்கொள்ளவும். ஏலக்காய், புதினாவை நெய்யில் வறுத்து சாதத்தில் சேர்க்கவும். கலந்து வைத்துள்ள இனிப்பு எள் - கொள்ளுப் பொடி சேர்த்துப் புரட்டி, முந்திரிப்பருப்பு தூவிப் பரிமாறவும். பாதுஷாஹி பிரியாணி தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், பாதாம் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன் (ஊறவிட்டு அரைக்கவும்), சிறிய குடமிளகாய் - 4, நறுக்கிய அவரைக்காய் - கால் கப், ஆம்சூர் பவுடர் (மாங்காய்த்தூள்) - ஒரு டீஸ்பூன், பட்டை - ஒரு துண்டு, ஏலக்காய் - 3, தேங்காய்த் துருவல் - கால் கப், சாம்பார் பொடி - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன் (ஆய்ந்தது), உருளைக்கிழங்கு - 2 (பொடியாக நறுக்கவும்), வெங்காயம் - 2 (வட்டமாக நறுக்கவும்), கரம் மசாலாத்தூள், சாட் மசாலாத்தூள் - தலா அரை டீஸ்பூன், மிளகு - ஒரு டீஸ்பூன், தயிர் - அரை கப், எண்ணெய், நெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: தேங்காய்த்துருவலுடன் மிளகு சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும். உருளைக்கிழங்கைக் கழுவி, வேகவிட்டு தோலுரித்து மசித்துக்கொள்ளவும். குடமிளகாயை குறுக்காக நறுக்கி விதை நீக்கி உப்பு கலந்த சுடுநீரில் 5 நிமிடங்கள் போட்டு மூடி வைத்து பிறகு நீரை வடித்துவிடவும். மசித்த உருளைக்கிழங்குடன் சாட் மசாலா, கரம் மசாலா, உப்பு, கொத்தமல்லித்தழை, தேங்காய் - மிளகு விழுது சேர்த்துப் பிசையவும். நறுக்கிய குடமிளகாயில் இந்தக் கலவையை நிரப்பவும். தவாவில் எண்ணெய் - நெய்விட்டு சூடானதும் இதைப் போட்டு கவனமாக இருபக்கமும் வதக்கி எடுத்து தனியாக வைக்கவும். அரிசியை நீரில் 15 நிமிடங்கள் ஊறவைக்கவும். குக்கரில் எண்ணெய்விட்டு சூடானதும் பட்டை, ஏலக்காய் தாளித்து, அவரைக்காய் சேர்த்து வதக்கி, சாம்பார் பொடி போட்டு, ஊறிய அரிசியைச் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். அதில் கொதிக்கும் நீர் 2 கப் ஊற்றவும். மாங்காய்த்தூள், உப்பு, பாதாம் விழுது சேர்த்துக் கிளறி மூடி, அடுப்பை குறைந்த தீயில் வைக்கவும். அரிசியை அரை வேக்காடு பதத்தில் வேகவிட்டு இறக்கவும். வேறு பாத்திரத்தில் எண்ணெய் தடவி பாதி சாதத்தை போட்டு, மேலே பாதி கடைந்த தயிர் சேர்த்து, அதன் மீது வதக்கிய ஃபில்லிங் குடமிளகாய்களை அடுக்கி, மேலே மீதி சாதத்தையும், மீதி தயிரையும் பரப்பி குக்கரில் வெயிட் போடாமல், ஆவியில் 10 நிமிடங்கள் வேகவிட்டு எடுத்து, தட்டில் கவிழ்க்கவும். வளையமாக நறுக்கிய வெங் காயத்தை சிவக்க வறுத்து, மேலே சேர்த்துப் பரிமாறவும். புடலை - பலாக்கொட்டை பிரியாணி தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், இளசான புடலங்காய் (நறுக்கியது) - ஒரு கப், பலாக்கொட்டை - 10, தேங்காய்த் துருவல் - கால் கப், கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு - (சேர்ந்தது) 50 கிராம், துவரம்பருப்பு நீர் - 2 கப், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, காய்ந்த மிளகாய் - 4, சின்ன வெங்காயம் - 4 (நசுக்கிக்கொள்ளவும்), பூண்டுப் பல் - 2 (நசுக்கிக்கொள்ளவும்), வெந்தயம் - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, தக்காளி - ஒன்று (நறுக்கவும்), பிரியாணி மசாலாப்பொடி - ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு (தாளிக்க) - சிறிதளவு, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: பாசிப்பருப்பு, கடலைப்பருப்பை 10 நிமிடங்கள் ஊறவிடவும். அரிசியை ஊறவைத்து நீரை வடித்து, நெய்யில் சில நிமிடங்கள் வறுத்துக்கொள்ளவும். குக்கரில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி, காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, வெந்தயம் தாளித்து, தக்காளி, நசுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். இதனுடன் உப்பு, நறுக்கிய புடலங்காய், நறுக்கிய பலாக்கொட்டை சேர்த்து மேலும் வதக்கி, துவரம்பருப்பு நீர் விட்டு... பிரியாணி மசாலாப் பொடி, அரிசி சேர்த்து, ஊறிய பருப்புகள் போட்டுக் கிளறவும். பின்னர் குக்கரை மூடி 2 விசில் வந்ததும் இறக்கவும். சிறிது நேரத்துக்குப் பின் குக்கரைத் திறந்து, மேலே நெய் ஊற்றி, தேங்காய்த் துருவல் தூவிப் பரிமாறவும். குறிப்பு: கால் கப் துவரம்பருப்பை நீரில் 10 நிமிடங்கள் ஊறவைத்து மஞ்சள்தூள், உப்பு, பெருங்காயத்தூள், 2 கப் தண்ணீர் சேர்த்து நன்கு வேகவிட்டு மசித்து எடுத்துக்கொள்ளவும். இதுதான் பருப்பு நீர். டபுள் பீன்ஸ் பிரியாணி தேவையானவை: பாஸ்மதி அரிசி - ஒரு கப், டபுள் பீன்ஸ், மசாலா வேர்க்கடலை - தலா அரை கப், எண்ணெய், நெய், உப்பு - தேவையான அளவு, வெஜிடபிள் ஸ்டாக் - 2 கப் அன்னாசிப்பூ, உலர்வெந்தயக்கீரை - சிறிதளவு. அரைக்க: பட்டை - அரை அங்குலத் துண்டு, இஞ்சி - அரை அங்குலத் துண்டு, சின்ன வெங்காயம் - 10 (உரிக்கவும்), பச்சை மிளகாய் - 4, பூண்டுப் பல் - 2, க்ரீன் சில்லி சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன், செய்முறை: அரைக்க கொடுத்துள்ளவற்றை சிறிதளவு நீர் விட்டு மையாக அரைத்துக்கொள்ளவும். அரிசியை 10 நிமிடங்கள் நீரில் ஊறவைத்து, நீரை வடிக்கவும். வாணலியில் நெய்விட்டு சூடாக்கி, அரிசியைச் சில நிமிடங்கள் வறுத்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய்விட்டு, காய்ந்ததும் அரைத்த விழுதைச் சேர்த்து வதக்கி, டபுள் பீன்ஸ், உப்பு சேர்த்துக் கிளறி, க்ரீன் சில்லி சாஸ், அன்னாசிப்பூ, உலர் வெந்தயக் கீரைச் சேர்த்துக் கிளறவும். பிறகு, வெஜிடபிள் ஸ்டாக் ஊற்றி, ஒரு கொதி வந்ததும் அரிசி சேர்த்து, குக்கரை மூடி வெயிட் போட்டு, 2 விசில் வந்ததும் இறக்கவும். ஆவி விட்டதும் குக்கரைத் திறந்து, மசாலா வேர்கடலை தூவிப் பரிமாறவும். குறிப்பு: வீட்டில் இருக்கும் காய்கறிகளை அலசி, நறுக்கி நீர்விட்டு குக்கரில் வேகவிட்டு மசித்து நீரை வடிகட்டி, பயன்படுத்தவும். இதுவே வெஜிடபிள் ஸ்டாக் ஆகும். காஷ்மீர் பிரியாணி தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், சிறிய சதுரமாக நறுக்கிய பழத் துண்டுகள் (அன்னாசி, மாம்பழம், ஸ்ட்ராபெர்ரி போன்றவை - டின்னில் கிடைக்கும்) - அரை கப், வெங்காயம் - 2 (நறுக்கவும்), உலர் திராட்சை, பேரீச்சை (விதை நீக்கி, நறுக்கியது), உலர் பூசணி விதை, டூட்டி ஃப்ரூட்டி, செர்ரிப்பழம், திராட்சைப்பழம் (விதையற்றது) - தலா ஒரு டேபிள்ஸ்பூன், ஃப்ரெஷ் க்ரீம் - 2 டேபிள்ஸ்பூன், குங்குமப்பூ, ஏலக்காய்த்தூள் - தலா ஒரு டீஸ்பூன், கிராம்பு - 2, துருவிய பனீர் - 2 டேபிள்ஸ்பூன், ஃப்ரெஷ் பச்சைப் பட்டாணி - 2 டேபிள்ஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், காய்ச்சி ஆறவைத்த பால் - சிறிதளவு, பொடியாக நறுக்கிய கேரட் - 2 டேபிள்ஸ்பூன், வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், நெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: அரிசியை நீரில் 15 நிமிடங்கள் ஊறவைத்து, அளவான உப்பு சேர்த்து வேகவிட்டு எடுத்துக்கொள்ளவும். வெண்ணெயை சூடாக்கி வெங்காயத்தைச் சிவக்க வதக்கவும். வாணலியில் நெய்விட்டு சூடானதும் சீரகம் தாளித்து, கேரட், பச்சைப் பட்டாணி சேர்த்து வதக்கி... உலர் திராட்சை, பேரீச்சை, உலர் பூசணி விதை, டூட்டி ஃப்ரூட்டி, செர்ரிப்பழம், திராட்சைப்பழம், சர்க்கரை சேர்த்துக் கிளறி... சாதம், ஏலக்காய்த்தூள், கிராம்பு சேர்த்து மேலும் கிளறவும். இதனுடன் பனீர் துருவல், பழத்துண்டுகள் சேர்த்துக் கிளறவும். பிறகு ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து, குங்குமப்பூவைச் சிறிது பாலில் கரைத்து ஊற்றி, வதக்கிய வெங்காயத்தை மேலே சேர்த்து அலங்கரித்து பரிமாறவும். வேர்க்கடலை - சீஸ் பிரியாணி தேவையானவை: பாஸ்மதி அரிசி - ஒரு கப், துருவிய சீஸ் - அரை கப், பச்சை வேர்க்கடலை - அரை கப், பட்டை - ஒரு அங்குலத் துண்டு, கிராம்பு - 3, பிரியாணி இலை - ஒன்று, வெங்காயம் - 3, மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், துருவிய மாங்காய் - கால் கப், பச்சை மிளகாய் - 4 (வட்டமாக நறுக்கவும்), எண்ணெய், நெய், உப்பு - சிறிதளவு. செய்முறை: அரிசியைக் கழுவி 10 நிமிடம் ஊறவைத்து நீரை வடிக்கவும். வாணலியில் நெய் விட்டு சூடாக்கி அரிசியை சில நிமிடங்கள் வறுத்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, கிராம்பு, பிரியாணி இலை தாளித்து, நறுக்கிய வெங்காயம், வட்டமாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். இதனுடன் உப்பு, மாங்காய்த் துருவல், பச்சை வேர்க்கடலை போட்டுப் புரட்டி தேவையான நீர் விட்டு, ஒரு கொதி வந்ததும் அரிசி சேர்த்து, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கவும். ஆவி விட்டதும் குக்கரைத் திறந்து, துருவிய சீஸ் தூவி, மிளகுத்தூள் சேர்த்துக் கிளறி சூடாகப் பரிமாறவும். பிரிஞ்சால் பிரியாணி தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், பிஞ்சுக் கத்திரிக் காய் - கால் கிலோ (நறுக்கவும்), சின்ன வெங்காயம் - ஒரு கப் (நறுக்கவும்), மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, புளித்தண்ணீர் - 2 கப், கடுகு - ஒரு டீஸ்பூன், சிறு துண்டுகளாக நறுக்கிய முருங்கைக்காய் - அரை கப், தக்காளிச் சாறு - கால் கப், கொத்தமல்லித்தழை (ஆய்ந்தது) - ஒரு டேபிள்ஸ்பூன், நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. அரைக்க: காய்ந்த மிளகாய் - 5, தனியா - ஒரு டீஸ்பூன், வெந்தயம் - அரை டீஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு டேபிள் ஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன். செய்முறை: பாசுமதி அரிசியை நீரில் 15 நிமிடம் ஊறவிட்டு, நீரை வடிக்கவும். வாணலியில் நெய்விட்டுச் சூடாக்கி அரிசியை சில நிமிடங்கள் வறுத்துக்கொள்ளவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு சூடாக்கி, அரைக்க கொடுத்துள்ளவற்றை வறுத்து, சிறிதளவு உப்பு சேர்த்துப் பொடி செய்துகொள்ளவும். குக்கரில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் கடுகு தாளித்து, நறுக்கிய வெங் காயம் சேர்த்து வதக்கி... தக்காளிச் சாறு, வறுத்து அரைத்த பொடி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து... நறுக்கிய கத்தரிக்காய், முருங்கைக்காயைச் சேர்த்து வதக்கவும். புளித்தண்ணீர் ஊற்றி, ஒரு கொதி வந்ததும் அரிசியைப் போட்டுக் கிளறி, வேகவிட்டு, கொத்தமல்லித் தழை தூவிப் பரிமாறவும். ரெயின்போ பிரியாணி தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், சேப்பங்கிழங்கு - 2, இனிப்பான ஆரஞ்சுபழச் சாறு (ஒரு பெரிய ஆரஞ்சு பழத்தைப் பிழிந்து, விதை நீக்கி, தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும்) - இரண்டரை கப், துருவிய கேரட், பீட்ரூட் - தலா 2 டேபிள்ஸ்பூன், வெண்டைக்காய் (வட்டமாக நறுக்கியது) - 2 டேபிள்ஸ்பூன், தக்காளி - 2 (நறுக்கவும்), வேர்க்கடலைப்பொடி - ஒரு டேபிள்ஸ்பூன், நறுக்கிய குடமிளகாய் - 2 டேபிள்ஸ்பூன், உருளைக்கிழங்கு - ஒன்று (தோல் சீவி, சதுரமாக நறுக்கவும்) மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய், நெய், மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு. செய்முறை: சேப்பங்கிழங்கை வேகவிட்டு தோல் உரித்து வட்டமாக நறுக்கி உப்பு, மிளகுத்தூள், மஞ்சள்தூள் சேர்த்துப் பிசிறி, சூடான எண்ணெயில் பொரித்து வைத்துக்கொள்ளவும். அரிசியை 10 நிமிடங்கள் ஊறவைத்து, நீரை வடிக்கவும். வாணலி யில் சிறிதளவு நெய்விட்டு அரிசியை சில நிமிடங்கள் வறுத்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய்விட்டு சூடானதும் நறுக்கிய உருளைக்கிழங்கு, குடமிளகாய், வெண்டைக்காய், தக்காளி, துருவிய கேரட், பீட்ரூட் சேர்த்து... உப்பு, மிளகாய்த்தூள் போட்டு வதக்கி, நீருக்குப் பதில் ஆரஞ்சுப் பழச்சாறு ஊற்றி, ஒரு கொதி வந்ததும் அரிசியைப் போட்டுக் கிளறி வேகவிட்டு, வேர்க்கடலைப் பொடி, வறுத்த சேப்பங்கிழங்கு தூவிக் கிளறி பரிமாறவும். இளநீர் - ட்ரை ஃப்ரூட்ஸ் பிரியாணி தேவையானவை - பாசுமதி அரிசி - ஒரு கப், இளநீர் - 2 கப், காய்ந்த திராட்சை, பேரீச்சை (கொட்டை நீக்கவும்), உலர் அத்திப்பழம் (சேர்த்து) - ஒரு கப், உரித்த முலாம்பழ விதை - ஒரு டீஸ்பூன், சர்க்கரை சேர்க்காத கோவா - 50 கிராம், பனீர் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், நெய் - தேவையான அளவு, ஏலக்காய் - 3, செர்ரி, டூட்டி ஃப்ரூட்டி (சேர்த்து) - 2 டேபிள்ஸ்பூன், பிஸ்தா - ஒரு டேபிள்ஸ்பூன் (துருவியது), கேசரி கலர் அல்லது விருப்பமான ஃபுட் கலர் - ஒரு சிட்டிகை. செய்முறை: அரிசியை 10 நிமிடங்கள் நீரில் ஊறவைத்து வடிகட்டவும். வாணலியில் நெய்விட்டுச் சூடாக்கி அரிசியை சில நிமிடங்கள் வறுத்துக்கொண்டு, நீருக்குப் பதில் இளநீர் விட்டு வேகவிட்டு எடுத்துக்கொள்ளவும். வாணலியில் நெய்யைக் காயவிட்டு காய்ந்த திராட்சை, பேரீச்சை, உலர் அத்திப்பழம் உரித்த முலாம்பழ விதை, செர்ரி, டூட்டி ஃப்ரூட்டி, ஏலக்காய் சேர்த்து வதக்கவும். இதனுடன் பனீர் துருவல், உதிர்த்த கோவா, கேசரி கலர் (அ) விருப்பமான ஃபுட் கலர் சேர்த்துக் கிளறி, வெந்த சாதத்தைப் போட்டு மேலும் கிளறி இறக்கவும். துருவிய பிஸ்தாவை மேலே தூவி அலங்கரிக்கவும். குறிப்பு: உலர் அத்திப்பழத்தை நீரில் 15 நிமிடங்கள் ஊறவைக்கவும். பேரீச்சையைக் கொட்டை நீக்கி, நறுக்கிக்கொள்ளவும். கதம்ப பிரியாணி தேவையானவை: பாசுமதி அரிசி, நறுக்கிய தக்காளி - தலா ஒரு கப், ஆய்ந்த முளைக்கீரை, பசலைக்கீரை, முருங்கைக்கீரை (சேர்த்து) - ஒரு கப், முளைகட்டிய பயறு - அரை கப் (பச்சைப் பயறு, கேழ்வரகு, உளுந்து போன்றவை), நறுக்கிய வெங்காயம் - அரை கப், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், பட்டை, கிராம்பு, சோம்பு (சேர்த்து) - ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, பச்சை மிளகாய் - 5 (விழுதாக அரைக்கவும்), பிரியாணி இலை - ஒன்று, கொத்தமல்லித்தழை, தேங்காய்த் துருவல் - அலங்கரிக்கத் தேவையான அளவு, எண்ணெய், நெய், உப்பு - சிறிதளவு. செய்முறை: அரிசியை 15 நிமிடங்கள் ஊறவைத்து, நீரை வடிக்கவும். வாணலியில் சிறிது நெய்விட்டுச் சூடாக்கி அரிசியை சில நிமிடங்கள் வறுக்கவும். குக்கரில் எண்ணெய்விட்டு, காய்ந்ததும் பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, சோம்பு தாளித்து... வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி, ஆய்ந்த கீரைகளையும் போட்டு வதக்கி, மஞ்சள்தூள், பச்சை மிளகாய் விழுது சேர்த்து மேலும் வதக்கவும். இதனுடன் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்துக் கிளறி, உப்பு, முளைக்கட்டிய பயறு சேர்த்துக் கலந்து, சிறிதளவு நீர் தெளித்து, மூடி வைத்து வேகவிடவும். பிறகு, தேவையான நீர் சேர்த்து, ஒரு கொதி வந்ததும் அரிசி சேர்த்துக் கிளறி, குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கவும். பிறகு தேங்காய்த் துருவல், ஆய்ந்த கொத்தமல்லித்தழை தூவிக் கிளறி பரிமாறவும். முகலாய் வெஜ் பிரியாணி தேவையானவை: பாஸ்மதி அரிசி - ஒரு கப், பாகற்காய், பீன்ஸ் (சேர்த்து) - அரை கப் (நீளவாக்கில் நறுக்கியது), பொடித்த சர்க்கரை - ஒரு டீஸ்பூன், நறுக்கிய பழம் - அரை கப் (ஆப்பிள், மாம்பழம்), வெண்ணெய், உலர் திராட்சை - தலா ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் - நெய் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு. அரைக்க: முந்திரிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன் (15 நிமிடங் கள் ஊறவைக்கவும்), கசகசா - ஒரு டீஸ்பூன் (10 நிமிடங்கள் ஊறவைக்கவும்), மல்லி (தனியா) - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 6 (அல்லது காரத்துக்கேற்ப), இஞ்சி - அரை அங்குலத் துண்டு (தோல் சீவவும்). செய்முறை: அரைக்கக் கொடுத்துள்ளவற்றை விழுதாக அரைக்கவும். அரிசியை 15 நிமிடங்கள் ஊறவைத்து, நீரை வடிக்கவும். வாணலியில் நெய்விட்டு சூடானதும் அரிசியை சில நிமிடங்கள் வறுக்கவும். குக்கரில் எண்ணெய், வெண்ணெய் சேர்த்துச் சூடாக்கி, அரைத்த விழுதைப் போட்டு வதக்கி... காய்கறி, உப்பு சேர்த்து மேலும் வதக்கி, சர்க்கரை, உலர் திராட்சையைப் போட்டுப் புரட்டவும். பிறகு தேவையான நீர் விட்டு, ஒரு கொதி வந்ததும் அரிசியைப் போட்டு, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கவும். ஆவி விட்டதும் குக்கரைத் திறந்து, நறுக்கிய பழங்களைச் சேர்த்துக் கிளறி பரிமாறவும். செஷ்வான் ஃப்ரைடு ரைஸ் பிரியாணி தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், முட்டைகோஸ் (துருவியது) - கால் கப், டொமேட்டோ கார்லிக் சாஸ் - ஒரு டேபிள் ஸ்பூன், வொர்செஸ்டர்ஷயர் சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன், வெள்ளை மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், வெங்காயத்தாள் (நறுக்கியது) - கால் கப், குடமிளகாய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், பிரியாணி மசாலாப் பொடி - ஒரு டீஸ்பூன், எண்ணெய், நெய், உப்பு - தேவையான அளவு. அரைக்க: காய்ந்த மிளகாய் - 4, பூண்டுப் பல் - 3, தோல் சீவிய இஞ்சி - சிறிதளவு, சீரகம் - ஒரு டீஸ்பூன். செய்முறை: அரைக்கக் கொடுத்துள்ளவற்றை விழுதாக அரைக்கவும். குக்கரில் 3 கப் நீர் விட்டு உப்பு, சிறிதளவு எண்ணெய் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். அதில் கழுவிய அரிசியைப் போட்டுக் கிளறி பாதி வெந்ததும் அடுப்பை நிறுத்தி, நீரை வடித்து தட்டில் சாதத்தைக் கொட்டி உதிர்த்துவிடவும். குக்கரில் நெய், எண்ணெய் விட்டு, சூடானதும் அரைத்த விழுதைச் சேர்த்துக் கிளறி, வெங்காயத்தாள், முட்டைகோஸ், குடமிளகாய் சேர்த்து வதக்கி, உப்பு சேர்த்துக் கலக்கவும். இதனுடன் பிரியாணி மசாலாப் பொடி, டொமேட்டோ கார்லிக் சாஸ் சேர்த்து... சாதத்தையும் போட்டுக் கிளறவும். பிறகு வோர்செஸ்டர்ஷயர் சாஸ், வெள்ளை மிளகுத்தூள் சேர்த்து குக்கரை மூடி, அடுப்பை குறைந்த தீயில் வைத்து, 10 நிமிடங்கள் வெயிட் போடாமல் வேகவிட்டு எடுக்கவும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.