Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நவீனன்

வரையறுக்கப்பட்ட அனுமதி
  • Joined

  • Last visited

Everything posted by நவீனன்

  1. சுவையான கடலைப்பருப்பு சட்னி கடலைப்பருப்பு சட்னி வித்தியாசமான சுவையுடன் சூப்பராக இருக்கும். இந்த சட்னியை எப்படி செய்வது என்று இப்போது கீழே விரிவாக பார்க்கலாம். தேவையான பொருட்கள் : கடலைப்பருப்பு - 1/2 கப் தேங்காய் துண்டுகள் - 1 கையளவு வர மிளகாய் - 5 தக்காளி - 1 கறிவேப்பிலை - சிறிது தண்ணீர் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு தாளிக்க : கடுகு கறிவேப்பிலை உளுந்தம் பருப்பு பெருங்காயத்தூள் எண்ணெய் - 1 ஸ்பூன் செய்முறை : * வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடலைப்பருப்பை போட்டு பொன்னிறமாக வறுத்து இறக்கி, குளிர வைக்க வேண்டும். * அடுத்து தேங்காய், வரமிளகாய், தக்காளி, கறிவேப்பிலையை தனித்தனியாக போட்டு நன்றாக வறுத்து குளிர வைக்கவும். * அனைத்தும் நன்றாக ஆறியதும் அதனை மிக்ஸியில் போட்டு, அத்துடன் தேவையான அளவு தண்ணீர், உப்பு போட்டு நன்கு மென்மையாக அரைத்து கொள்ளவும். * கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, உளுந்தம் பருப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து அரைத்த சட்னியில் ஊற்றி கிளறவும். * சுவையான கடலைப்பருப்பு சட்னி ரெடி!!!
  2. சத்தான முள்ளங்கி கீரை பொரியல் முள்ளங்கி, முள்ளங்கி கீரையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. முள்ளங்கி கீரை பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : முள்ளங்கி கீரை - 1 கட்டு பெரிய வெங்காயம் - ஒன்று சிகப்பு மிளகாய் - 2 கடுகு - 1/2 டீஸ்பூன் உளுந்தம் பருப்பு - 1 டீஸ்பூன் தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன் எண்ணெய் - 1 டீஸ்பூன் செய்முறை : * வெங்காயம், மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். * கீரையை சுத்தம் செய்து தண்டு பகுதியை தனியாக சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும். கீரையையும் பொடியாக நறுக்கி வைக்கவும். * அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு மற்றும் சிகப்பு மிளகாயை போட்டு தாளித்த பின் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். * அதன் பிறகு வெட்டி வைத்துள்ள தண்டு பகுதியை சேர்த்து 3 நிமிடம் வதக்கவும். பின்னர் கீரையை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். * பிறகு உப்பு சேர்த்து கிளறி மூடி வைத்து கீரை வேகும் வரை சிறிய தீயில் வைக்கவும். கீரை பச்சை நிறம் மாறாமல் வேக வைக்கவும். * வெந்ததும் தேங்காய் துருவல் சேர்த்து கிளறி விடவும். * சத்தான முள்ளங்கி கீரை பொரியல் ரெடி. * ரசம் மற்றும் சாம்பார் சாதத்திற்கு தொட்டுக் கொண்டு சாப்பிட ஏற்ற பொரியல் இது.
  3. மொறுமொறு காராபூந்தி : செய்முறைகளுடன்...! தேவையான பொருட்கள்: கடலை மாவு - 1 கப் அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன் சோடா உப்பு - 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1 சிட்டிகை மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன் எண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு வேர்க்கடலை - அரை கப், முந்திரி - தேவைக்கு, கறிவேப்பிலை - சிறிதளவு செய்முறை : * ஒரு பெரிய பௌலில் கடலை மாவு, அரிசி மாவு, பேக்கிங் சோடா, மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி, நன்கு அடர்த்தியாக பேஸ்ட் போல் கலந்து கொள்ளவும். அவ்வாறு கலக்கும் போது மாவுக் கலவையானது மிகவும் மென்மையாகவும், லேசான அடர்த்தியிலும் இருக்க வேண்டும். * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் விட்டு காய்ந்ததும், பூந்திக் கரண்டியை (சிறுசிறு துளைகள் உள்ள கரண்டி) எடுத்துக் கொண்டு, அந்த கரண்டியை எண்ணெயின் மேற்புறத்தில் வைத்து பிடித்துக் கொண்டு, அந்த கரண்டியில் கடலை மாவுக் கலவையை ஊற்ற வேண்டும். * அவ்வாறு ஊற்றும் போது அதிலிருந்து மாவானது, துளைகள் வழியாக எண்ணெயில் விழும், அதனை பொன்னிறமாக பொரித்து ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும். இதேப் போன்று அனைத்து மாவையும் ஊற்றி, பூந்திகளாக செய்துக் கொள்ளவும். * மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, வேர்க்கடலை, முந்திரி, கறிவேப்பிலை போன்றவற்றை போட்டு பொரித்து, பூந்தியுடன் சேர்த்து, கிளற வேண்டும். * இப்போது சுவையான மொறுமொறு காராபூந்தி ரெடி!!!
  4. மீல் மேக்கர் - பட்டாணி குருமா : செய்முறைகளுடன்...! தேவையான பொருட்கள் : மீல் மேக்கர் - 1 கப் பட்டாணி - அரை கப் வெங்காயம் - 1 தக்காளி - 1 இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன் பச்சை மிளகாய் - 2 மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன் மிளகாய் தூள் - 3/4 ஸ்பூன் தனியா தூள் - 1/2 ஸ்பூன் சீரக தூள் - 1/2 ஸ்பூன் கரம் மசாலா - 1/2 ஸ்பூன் தேங்காய் பால் - 1/2 கப் உப்பு - 3/4 ஸ்பூன் எண்ணெய் - 4 ஸ்பூன் கொத்தமல்லி - சிறிது செய்முறை : * தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். * பட்டாணியை வேக வைத்து கொள்ளவும். * மீல் மேக்கரை வெதுவெதுப்பான நீரில் 15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் நீரை வடித்து விட்டு, மீல் மேக்கரை பிழிந்து தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். * கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். * வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி பச்சை மிளகாய் சேர்த்து மீண்டும் வதக்கவும். * அடுத்து அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும். * பின் அதில் மஞ்சள் தூள், சீரகப் பொடி, தனியா தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறவும். * அடுத்து அதில் மீல் மேக்கர், தேங்காய் பால், வேக வைத்த பட்டாணி மற்றும் உப்பு சேர்த்து, 10 நிமிடம் கொதிக்க விடவும். * கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கவும். * சுவை மிகுந்த மீல் மேக்கர் குருமா தயார்.
  5. இட்லி... இனி பிடிக்கும்! * இட்லி பக்கோடா * ஸ்வீட் அண்ட் சோர் இட்லி * அச்சாரி இட்லி * பைனாப்பிள் ஃப்ரைடு இட்லி * பனீர் பட்டர் மசாலா இட்லி * மிக்ஸ்டு வெஜ் இட்லி * இட்லி பனீர் சாட் பட் * சிங்கப்பூர் ஃப்ரைடு இட்லி இட்லி பக்கோடா இட்லி என்றாலே சலித்துக்கொண்டு, ‘இதெல்லாம் யாரு கண்டுபிடிச்சது’ எனப் புலம்பும் இட்லி ஹேட்டர்ஸ்களுக்கு, தேனி டு கம்பம் ரோட்டில் அமைந்துள்ள ‘கிரீன் கிச்சன்’ உணவகத்தின் இட்லி திருவிழா, பிடிக்காத இட்லியையும் பிடிக்கவைக்கும். தேனி மக்களும், குமுளி, தேக்கடி, மூணாறு போன்ற சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லும் வெளி மாநில, வெளிநாட்டுப் பயணிகளும் ‘சூப்பர்’ எனச் சுவைக்கும் அந்த உணவகத்தின் பிரபலமான இட்லி ரெசிப்பிகளை இங்கே தருகிறார், அதன் உரிமையாளர் சரவண குகன். தேவையானவை: இட்லி - 3 பெரிய வெங்காயம் - 100 கிராம் சோம்பு - கால் டீஸ்பூன் பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன் பூண்டு விழுது - 50 கிராம் அரிசி மாவு - 100 கிராம் மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு செய்முறை: அரிசி மாவு, பெருங்காயத்தூள், சோம்பு, உப்பு, பூண்டு விழுது, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு பக்கோடா மாவு பதத்தில் தயார் செய்துகொள்ளவும். வெங்காயத்தை நீளமாக நறுக்கி அதில் சேர்க்கவும். இட்லியைச் சிறு துண்டுகளாக நறுக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் மிதமான தீயில் வைத்து, இட்லித் துண்டுகளை தயாரித்துவைத்துள்ள மாவில் சேர்க்கவும். பிறகு, மாவைக் கிள்ளியெடுத்து எண்ணெயில் சேர்க்கவும். பொன் நிறத்தில் மொறுமொறுவென வந்ததும் எடுத்து பரிமாறவும். ஸ்வீட் அண்ட் சோர் இட்லி தேவையானவை: இட்லி - 3 நறுக்கிய பூண்டு - 20 கிராம் மைதா மாவு, கார்ன்ஃப்ளார் - தலா 50 கிராம் கீறிய பச்சை மிளகாய் - 10 கிராம் நறுக்கிய பெரிய வெங்காயம் - 20 கிராம் பொடியாக நறுக்கிய அன்னாசிப்பழம் - 20 கிராம் எலுமிச்சைச் சாறு - அரை டீஸ்பூன் டொமாட்டோ சாஸ் - அரை டீஸ்பூன் சர்க்கரை - 1 டீஸ்பூன் மிளகுத்தூள் - அரை டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன் செய்முறை: இட்லியை சிறு துண்டுகளாக நறுக்கவும். மைதா மாவு, கார்ன்ஃப்ளாரை ஒன்றாகச் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கலந்துகொள்ளவும். அதில் இட்லித் துண்டுகளைப் புரட்டி தனியே வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் நறுக்கிய வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும். இத்துடன் 100 மில்லி தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். பிறகு உப்பு, மிளகுத்தூள், சர்க்கரை, டொமாட்டோ சாஸ், எலுமிச்சைச் சாறு, பொடியாக நறுக்கிய அன்னாசிப்பழம் ஆகியவற்றைச் சேர்த்து மிதமான தீயில் கொதிக்கவிடவும். கலவை கொதித்து சுண்டி கெட்டியாக திரண்டு கிரேவி போல் வந்தவுடன், மாவுக்கலவையில் புரட்டி வைத்துள்ள இட்லியை அதில் சேர்த்து நன்றாகக் கிளறிவிடவும். அந்த கிரேவி, இட்லியுடன் சேர்ந்து ருசி கூடும். இதனை அப்படியே சாப்பிடலாம், சைட் டிஷ் தேவையில்லை. அச்சாரி இட்லி தேவையானவை: இட்லி - 3 சீரகம் - 5 கிராம் மைதா மாவு, கார்ன்ஃப்ளார் - தலா 50 கிராம் நறுக்கிய பூண்டு - 10 கிராம் காய்ந்த மிளகாய் - 2 கீறிய பச்சை மிளகாய் - 5 கிராம் நறுக்கிய பெரிய வெங்காயம் - 10 கிராம் நறுக்கிய தக்காளி - 10 கிராம் முந்திரி பேஸ்ட் - 50 கிராம் மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன் மல்லித்தூள் (தனியாத்தூள்) - அரை டீஸ்பூன் மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு ஏதேனும் ஓர் ஊறுகாய் - அரை டீஸ்பூன் எண்ணெய் - தேவையான அளவு செய்முறை: இட்லியை சிறு துண்டுகளாக நறுக்கவும். ஒரு பவுலில் மைதா மாவு மற்றும் கார்ன் ஃப்ளாரை ஒன்றாகச் சேர்த்து சிறிது தண்ணீர்விட்டு கலந்துகொள்ளவும். அதில் இட்லித் துண்டுகளைப் புரட்டி எடுத்து தனியே வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் சீரகம், நறுக்கிய வெங்காயம், பூண்டு, தக்காளி, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், முந்திரி பேஸ்ட், ஊறுகாய் ஆகியவற்றை அடுத்தடுத்துச் சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு 100 மில்லி தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். இத்துடன் மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்துக் கொதிக்கவைக்கவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும். கலவை கிரேவி போல் வந்தவுடன், மாவுக்கலவையில் புரட்டி வைத்துள்ள இட்லித் துண்டுகளை அதில் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும். பைனாப்பிள் ஃப்ரைடு இட்லி தேவையானவை: இட்லி - 3 சிறு துண்டுகளாக நறுக்கிய பைனாப்பிள் - 100 கிராம் நறுக்கிய பெரிய வெங்காயம் - 20 கிராம் மைதா மாவு, கார்ன்ஃப்ளார் - தலா 50 கிராம் இஞ்சி விழுது - 10 கிராம் பூண்டு விழுது - 10 கிராம் கீறிய பச்சை மிளகாய் - 5 கிராம் கொத்தமல்லித்தழை - சிறிதளவு சர்க்கரை - தேவைக்கேற்ப வெள்ளை மிளகுத்தூள் - கால் டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு செய்முறை: இட்லியை சிறு துண்டுகளாக நறுக்கவும். மைதா மாவு மற்றும் கார்ன்ஃப்ளாரை ஒன்றாகச் சேர்த்துக் கலந்து, இட்லித் துண்டுகளை மாவில் புரட்டி எடுத்து தனியே வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கி அத்துடன் இஞ்சி விழுது, பூண்டு விழுது, பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு 100 மில்லி தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். கலவை கொதித்ததும் பொடியாக நறுக்கிய பைனாப்பிள், உப்பு, சர்க்கரை, வெள்ளை மிளகுத்தூள், கொத்தமல்லித்தழை சேர்க்கவும். கலவை கிரேவி போல் வந்ததும், மாவுக்கலவையில் புரட்டி வைத்துள்ள இட்லியைச் சேர்த்து நன்றாகக் கிளறிவிட்டு இறக்கவும். பனீர் பட்டர் மசாலா இட்லி தேவையானவை: இட்லி - 3 பனீர் - 50 கிராம் (துண்டுகளாக்கவும்) மைதா மாவு, கார்ன்ஃப்ளார் - தலா 50 கிராம் நறுக்கிய பெரிய வெங்காயம் - 10 கிராம் நறுக்கிய தக்காளி - 10 கிராம் கீறிய பச்சை மிளகாய் - 5 கிராம் சீரகம் - 5 கிராம் பூண்டு விழுது - 5 கிராம் முந்திரி பேஸ்ட் - 50 கிராம் டொமேட்டோ சாஸ் - 1 டீஸ்பூன் சர்க்கரை - 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன் மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன் கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன் வெண்ணெய், நெய் - 50 கிராம் எண்ணெய், உப்பு - தேவையான அளவு செய்முறை: இட்லியை சிறு துண்டுகளாக நறுக்கவும். ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, கார்ன்ஃப்ளாரை சிறிது தண்ணீர் விட்டு ஒன்றாகச் சேர்த்துக் கலந்து அதில் இட்லித் துண்டுகளைப் புரட்டி எடுத்து தனியே வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் சேர்த்துச் சூடானதும் தீயை மிதமாக்கி சீரகம், நறுக்கிய வெங்காயம், தக்காளி, பூண்டு விழுது, கீறிய பச்சை மிளகாய், முந்திரி பேஸ்ட் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக வதக்கவும். இத்துடன் 100 மில்லி தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். பச்சை வாசனை போனதும் டொமேட்டோ சாஸ், மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து கொதிக்கவிடவும். கலவை கிரேவி பதத்துக்கு வந்ததும் பனீர் துண்டுகள், சர்க்கரை, உப்பு, வெண்ணெய், நெய் சேர்த்துக் கிளறிவிடவும். பின்னர் மாவுக் கலவையில் புரட்டி வைத்துள்ள இட்லித் துண்டுகளைச் சேர்த்து, கலவை கிரேவியோடு நன்கு ஒட்டி வந்ததும் கிளறி இறக்கவும். மிக்ஸ்டு வெஜ் இட்லி தேவையானவை: இட்லி - 3 சீரகம் - 10 கிராம் மைதா மாவு, கார்ன்ஃப்ளார் - தலா 50 கிராம் வேகவைத்த கேரட் - பீன்ஸ் - தலா 50 கிராம் (சதுரமாக நறுக்கவும்) வேகவைத்த பச்சைப் பட்டாணி - 100 கிராம் வேகவைத்த காலிஃப்ளவர் துண்டுகள் - 20 கிராம் நறுக்கிய பெரிய வெங்காயம் - 100 கிராம் நறுக்கிய தக்காளி - 50 கிராம் கீறிய பச்சை மிளகாய் – 10 கிராம் பூண்டு விழுது - 10 கிராம் காய்ச்சிய பால் - 20 மில்லி ஃப்ரஷ் க்ரீம் - 20 மில்லி முந்திரி பேஸ்ட் - 100 கிராம் மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன் மல்லித்தூள்(தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு வெண்ணெய் - 50 கிராம் எண்ணெய் - தேவையான அளவு செய்முறை: இட்லியை சிறு துண்டுகளாக நறுக்கவும். ஒரு பவுலில் மைதா மாவு, கார்ன்ஃப்ளாரை ஒன்றாகச் சேர்த்துக் கலந்து சிறிது தண்ணீர் விட்டு கரைக்கவும். பிறகு, இட்லித் துண்டுகளை கரைசலில் சேர்த்து புரட்டி எடுத்து தனியே வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்து சூடானதும் சீரகம், நறுக்கிய வெங்காயம், தக்காளி, கீறிய பச்சை மிளகாய், பூண்டு விழுது, முந்திரி பேஸ்ட், காய்கறிகள் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக வதக்கவும். அதில் 100 மில்லி தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), கரம் மசாலாத்தூள் சேர்த்து மேலும் கொதிக்கவிடவும். கலவை கிரேவி போல் வந்ததும் உப்பு, வெண்ணெய், பால், ஃப்ரஷ் க்ரீம் ஆகியவற்றைச் சேர்த்து, மாவுக் கலவையில் புரட்டி வைத்திருக்கும் இட்லிகளைச் சேர்த்து நன்று கிளறிவிட்டு இறக்கவும். காய்கறிகள் உண்ணாத குழந்தைகளுக்கு இது நல்ல உணவாக அமையும். இட்லி பனீர் சாட் பட் தேவையானவை: இட்லி - 3 பனீர் - 100 கிராம் (துண்டுகளாக்கவும்) நறுக்கிய குடமிளகாய் - 50 கிராம் மைதா மாவு, கார்ன்ஃப்ளார் - தலா 50 கிராம் சீரகம் - 10 கிராம் நறுக்கிய தக்காளி - 50 கிராம் பூண்டு விழுது - 10 கிராம் நறுக்கிய வெங்காயம் - 10 கிராம் கீறிய பச்சை மிளகாய் - 5 கிராம் வெண்ணெய் - 20 கிராம் காய்ச்சிய பால் - 50 மில்லி ஃப்ரஷ் க்ரீம் - 10 மில்லி முந்திரி பேஸ்ட் - 100 கிராம் எலுமிச்சைச்சாறு - ஒரு டீஸ்பூன் சர்க்கரை - ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன் மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு செய்முறை: இட்லியை சிறு துண்டுகளாக நறுக்கவும். ஒரு பவுலில் மைதா மாவு மற்றும் கார்ன்ஃப்ளாரை ஒன்றாகச் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கலந்து கொள்ளவும். அதில் இட்லித் துண்டுகளைப் புரட்டி எடுத்து தனியே வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்து சீரகம், நறுக்கிய வெங்காயம், தக்காளி, குடமிளகாய், பூண்டு விழுது, கீறிய பச்சை மிளகாய், முந்திரி பேஸ்ட் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக வதக்கவும். அதில் 100 மில்லி தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். பிறகு மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள், எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து கொதிக்கவிடவும். கலவை கிரேவிபோல் வந்ததும் அதில் பனீர் துண்டுகள், சர்க்கரை, உப்பு, வெண்ணெய், பால், ஃப்ரெஷ் க்ரீம் ஆகியவற்றைச் சேர்த்து கிளறிவிடவும். பிறகு, மாவுக் கலவையில் புரட்டி வைத்துள்ள இட்லித் துண்டுகளைச் சேர்த்து எல்லாம் ஒன்று சேர்ந்து வரும்போது அடுப்பை அணைத்துப் பரிமாறவும். சிங்கப்பூர் ஃப்ரைடு இட்லி தேவையானவை: இட்லி - 3 மைதா மாவு, கார்ன்ஃப்ளார் - தலா 50 கிராம் காய்ந்த மிளகாய் - 2 பூண்டு விழுது - 10 கிராம் இஞ்சி விழுது - 10 கிராம் எலுமிச்சைச் சாறு - அரை டீஸ்பூன் முந்திரி - 20 கிராம் காய்ந்த மிளகாய் பேஸ்ட் - 20 கிராம் கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன் மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு நல்லெண்ணெய் - 100 மில்லி செய்முறை: இட்லியை சிறு துண்டுகளாக நறுக்கவும். ஒரு பவுலில் மைதா மாவு, கார்ன்ஃப்ளாரை ஒன்றாகச் சேர்த்துக் கலந்து சிறிது தண்ணீர் விட்டு கரைத்து அதில் இட்லித் துண்டுகளைப் புரட்டி எடுத்து தனியே வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் காய்ந்த மிளகாய், இஞ்சி விழுது, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கவும். முந்திரியைச் சேர்த்து பொன்னிறமானதும் 100 மில்லி தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். நன்றாகக் கொதித்ததும் அதில் உப்பு, கரம் மசாலாத்தூள், மிளகுத்தூள், எலுமிச்சைச் சாறு சேர்க்கவும். இத்துடன் மிளகாய் பேஸ்டை சேர்த்து நன்கு கிளறவும். கலவை கிரேவி பதத்துக்கு வந்ததும் மாவுக் கலவையில் புரட்டி வைத்துள்ள இட்லித் துண்டுகளைச் சேர்த்து நன்கு செட் ஆனதும் இறக்கவும். சைனீஸ் வகை உணவு இது.
  6. சுவையான ஓட்ஸ் மிளகு அடை சர்க்கரை நோயாளிகள், டயட்டில் இருப்பவர்கள் தினமும் உணவில் ஓட்ஸ் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. இப்போது ஓட்ஸ் மிளகு அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : புழுங்கல் அரிசி - கால் கிலோ ஓட்ஸ் - 1 கப் கடலைப்பருப்பு - 200 கிராம் மிளகாய் வற்றல் - 25 தேங்காய் துருவல் - கால் கப் பெருங்காயத்தூள் - சுண்டைக்காய் அளவு கல் உப்பு - தேவைக்கு எண்ணெய் - தேவைக்கு மிளகு - ஒரு தேக்கரண்டி சீரகம் - ஒரு மேசைக்கரண்டி கடுகு - அரை தேக்கரண்டி உளுத்தம் பருப்பு - ஒரு மேசைக்கரண்டி கறிவேப்பிலை - 2 கொத்து இஞ்சி - ஒரு அங்குலத் துண்டு செய்முறை : * இஞ்சியை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். * ஓட்ஸை வறுத்து பொடித்து கொள்ளவும். * ஒரு பாத்திரத்தில் அரிசி, கடலைப்பருப்பு மற்றும் மிளகாய் வற்றல் மூன்றையும் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 5 மணி நேரம் ஊற வைத்து ஊறியதும் கிரைண்டரில் போட்டு இஞ்சி சேர்த்து கொரக்கொரப்பாக அரைக்கவும். * கடைசியாக தேங்காய் துருவலை போட்டு 2 நிமிடங்கள் அரைத்து எடுக்கவும். * அரைத்த மாவில் பொடித்த ஓட்ஸ், உப்பு போட்டு கரைத்து கொள்ளவும். * வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள் போட்டு தாளித்ததும் மிளகு, சீரகம், இரண்டாக கிள்ளிய மிளகாய் வற்றல் மற்றும் கறிவேப்பிலை போட்டு பொரியவிடவும். அனைத்தும் பொரிந்ததும் தாளித்தவற்றை அரைத்து வைத்திருக்கும் மாவில் சேர்த்து நன்கு கலந்துவிடவும். * வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் கலந்து வைத்திருக்கும் மாவை 2 குழிக்கரண்டி அளவு ஊற்றி, நடுவில் கரண்டியை வைத்து அழுத்திவிடவும். அடை தடியாக இருப்பதால் அடிபிடித்து விடாமல் இருக்க தீயை குறைத்து வைத்து மூடிபோட்டு 3 நிமிடங்கள் வேகவிடவும். * 3 நிமிடங்கள் கழித்து திருப்பி போடவும். திருப்பி போட்ட பின் மூடவேண்டாம். மேலும் 3 நிமிடங்கள் கழித்து வாணலியில் இருந்து எடுத்துவிடவும். * சுவையான ஓட்ஸ் மிளகு அடை தயார்.
  7. பேச்சுலர் ரெசிப்பி * அண்டா புஜியா வித் வெஜிடபிள்ஸ் * மேஷ் பொட்டேட்டோ * பொட்டேட்டோ சீஸ் கிரில் சாண்ட்விச் * பனீர் கிரில் சாண்ட்விச் * சில்லி சீஸ் டோஸ்ட் * கிரேட்டட் எக் - சீஸ் & பனீர் கிளப் சாண்ட்விச் * கிரேட்டட் சீஸ் வித் பொட்டேட்டோ ஃபில்லிங் சாண்ட்விச் பேச்சுலர் ரெசிப்பீஸ் - 3 பேச்சுலர்களின் பரபர கிச்சனுக்கு ஈடுகொடுக்கும் வகையில் சட்டென சமைத்துச் சாப்பிடக்கூடிய, அதேசமயம் சுவையான ரெசிப்பிகளை இங்கே தருகிறார்கள், சென்னை, இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட்டின் பேராசிரியர்கள் கெளரி சங்கர், எம்.மேத்திவ் ஆரோக்கியராஜ் மற்றும் பெருமாள். அண்டா புஜியா வித் வெஜிடபிள்ஸ் தேவையானவை: வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன் பெரிய வெங்காயம் - 20 கிராம் பச்சை குடமிளகாய் - 20 கிராம் கேரட் - 20 கிராம் (வேகவைத்தது) முட்டைகோஸ் - 20 கிராம் முட்டை - 2 உப்பு, மிளகுத்தூள் - தேவையான அளவு செய்முறை: காய்கறிகளை எல்லாம் மெல்லியதாக, நீளமாக நறுக்கி வைக்கவும். கேரட் மற்றும் முட்டைகோஸை மட்டும் நறுக்கி வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். அடுப்பில் நான்ஸ்டிக் வாணலியை வைத்து வெண்ணெய் சேர்த்து உருகவிடவும். பிறகு, நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தைச் சேர்த்து லேசாக பொன்னிறமாகும் வரை வதக்கவும். பிறகு, குடமிளகாயைச் சேர்த்து அதன் வாசனை வரும்வரை வதக்கி, வேகவைத்த கேரட் மற்றும் முட்டைகோஸைச் சேர்க்கவும் (கேரட் மற்றும் முட்டைகோஸை வேகவைக்க நேரமில்லை என்றால், அப்படியே சேர்த்து நன்றாக வதக்கலாம்). காய்கறிகளின் பச்சை வாசனை போனபிறகு உடனடியாக முட்டையை உடைத்து அதில் சேர்த்து நன்றாகக் கலக்கவும். முட்டையின் பச்சை வாசனை போக வேண்டும். தேவையான அளவு உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்துக் கிளறவும். சுவையான அண்டா புஜியா ரெடி. மேஷ் பொட்டேட்டோ இது ஒரு வெளிநாட்டு உணவு. இதை இந்திய சுவைக்கு ஏற்ப தயாரிப்போம். தேவையானவை: உருளைக்கிழங்கு - 3 (வேகவைத்து பேஸ்ட் பதத்துக்கு மசிக்கவும்) கடுகு - அரை டீஸ்பூன் உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன் கடலைப்பருப்பு - அரை டீஸ்பூன் பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கியது) - அரை டீஸ்பூன் சீரகம் - அரை டீஸ்பூன் பால் - 2 டீஸ்பூன் உப்பு, மிளகுத்தூள் - தேவையான அளவு பார்ஸ்லே இலைகள் (பொடியாக நறுக்கியது) - 10 கிராம் எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன் செய்முறை: அடுப்பில் நான்ஸ்டிக் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்து மிதமாக சூடானவுடன் கடுகைச் சேர்த்து வெடிக்கவிடவும். பிறகு உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து, சற்றே வாசனை வரத்தொடங்கிய உடன் நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் சீரகத்தைச் சேர்த்து வதக்கவும். அடுப்பை குறைந்த தீயில் வைத்து, மசித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கை சேர்த்து நன்றாகக் கலக்கவும். கலவையுடன் உருளைக்கிழங்கு நன்றாகச் சேர்ந்த பிறகு உப்பு, மிளகுத்தூள் மற்றும் நறுக்கிய பார்ஸ்லேக்களைச் சேர்த்து நன்றாகக் கிளறவும். இறுதியாக இரண்டு டீஸ்பூன் பாலைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். பால் முழுமையாக உருளைக்கிழங்கால் உறிஞ்சப்பட்ட பிறகு ஒரு புரட்டு புரட்டி அடுப்பில் இருந்து இறக்கவும். மேஷ் பொட்டேட்டோ ரெடி. குறிப்பு: பால் சுவை பிடித்தவர்கள் பாலைக் கூடுதலாக சேர்க்கலாம், பால் சுவை பிடிக்காதவர்கள் பாலைச் சேர்க்காமல் இருக்கலாம். பொட்டேட்டோ சீஸ் கிரில் சாண்ட்விச் கிரில் சாண்ட்விச் என்றவுடன், ‘என்னிடம் கிரில்லர் இல்லையே’ என்று தயங்கத் தேவையில்லை. எப்படி என்று மேலே படியுங்கள்..! தேவையானவை: உருளைக்கிழங்கு - 1 (சிப்ஸ் போல நறுக்கி உப்பு சேர்த்து வேகவைக்கவும்) பச்சை குடமிளகாய் - கால் டீஸ்பூன் துருவிய சீஸ் - 2 டீஸ்பூன் பிரெட் ஸ்லைஸ் - 2 வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன் உப்பு, மிளகுத்தூள் - தேவையான அளவு செய்முறை: பிரெட்டின் மேல் புறத்தில் கொஞ்சம் வெண்ணெயைத் தடவி, அதன் மேல் வேகவைத்த உருளைக்கிழங்கு ஸ்லைஸ்களை பிரெட்டின் வெளியே தெரியாத அளவுக்கு கச்சிதமாக அடுக்கவும். அதற்கு மேல் தேவையான மிளகுத்தூள் தூவி, அதன் மேல் துருவிய சீஸை சீராகப் பரப்பவும். பிறகு நறுக்கிய குடமிளகாய் வைத்து மற்றொரு பிரெட் வைத்து மூடவும். மீண்டும் மூடிய பிரெட்டின் மேல் பகுதியில் வெண்ணெய் தடவவும். அப்போதுதான் பிரெட் பொன்னிறத்தில் டோஸ்ட் ஆகும். பிரெட்டை தவாவில் டோஸ்ட் செய்வது எப்படி? அடுப்பில் நான்ஸ்டிக் தவாவை வைத்து சூடானதும் தீயை மிதமாக்கி வெண்ணெய் சேர்த்து உருகவிடவும். இதில் ரெடி செய்த பிரெட்களை வைக்கவும். சிறிது நேரத்தில் பிரெட் ரோஸ்ட் ஆன வாசனை வரும். அப்போது தோசைக் கரண்டியால் பக்குவமாக சாண்ட்விச் அடுக்குகள் பிரியாமல் பிடித்து கவனமாகப் புரட்டவும். மறுபக்கமும் நன்றாக பொன்னிறத்தில் வெந்ததும் எடுத்து, கெட்சப் அல்லது சாஸுடன் பரிமாறினால் சுவையான, எளிதாக செய்யக்கூடிய சாண்ட்விச் ரெடி. சாண்ட்விச் மெனுக்கள் அனைத்துக்கும் இதே ஸ்டைலில் செய்தால் போதும். பனீர் கிரில் சாண்ட்விச் தேவையானவை: பிரெட் - 2 ஸ்லைஸ் வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன் பனீர் (நைஸாகத் துருவவும்) - 4 டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன் சீரகத்தூள் - ஒரு சிட்டிகை சாட் மசாலாத்தூள் - ஒரு சிட்டிகை பச்சை, மஞ்சள், சிவப்பு நிற குடமிளகாய் (சிறு கியூப்களாக நறுக்கவும்) - தலா அரை டீஸ்பூன் உப்பு, மிளகுத்தூள் - தேவையான அளவு டொமேட்டோ கெட்ச் அப் - அரை டீஸ்பூன் செய்முறை: பிரெட்டின் ஒருபுறத்தில் வெண்ணெயை முழுமையாகத் தடவவும். அதன் மேல் கெட்ச் அப்பையும் தடவவும். பிறகு, துருவிய பனீரை பிரெட்டின் மீது இடைவெளி இல்லாமல் பரப்பவும். பனீர் மீது எலுமிச்சைச் சாறு, சீரகத்தூள், சாட் மசாலாத்தூள் ஆகியவற்றை சீராகப் பரப்பவும். அதற்கு மேல் நறுக்கிய குடமிளகாய்களை சீராகப் பரப்பவும். பிறகு, உப்பு மற்றும் மிளகுத்தூளை பரவலாக தூவி, மற்றொரு பிரெட்டை வைத்து மூடவும். பிரெட்டை மூடுவதற்கு முன், அதன் ஓரங்களில் எல்லாம் வெண்ணெய் மற்றும் கெட்சப்பைத் தடவி பிறகு மூடினால் நன்கு ஒட்டிக்கொள்ளும். அடுப்பில் தவாவை வைத்து வெண்ணெய் விட்டு உருகியதும், பிரெட் துண்டுகளை மெதுவாக எடுத்து வெண்ணெயின் மேலே வைத்து தீயை மிதமாக்கி வேகவிடவும். பிரெட்டின் இருபுறமும் நன்கு பொன்னிறமானதும் எடுத்து கெட்சப் அல்லது சாஸுடன் பரிமாறவும், இதுவே ‘அவன்’ வைத்திருப்பவர்களாக இருந்தால் வெண்ணெய் தடவிய பிரெட் ஸ்லைஸ்களை கிரில் மோடில் வைத்து கிரில் செய்து எடுக்கவும். அதிக நேரம் விட்டால் கருகிவிடும்... கவனம். குறிப்பு: இதை குடமிளகாய் சேர்க்காமலும் செய்யலாம். சில்லி சீஸ் டோஸ்ட் தேவையானவை: முட்டையின் மஞ்சள் கரு - 2 வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன் துருவிய சீஸ் - 4 டீஸ்பூன் டொமேட்டோ கெட்சப் - ஒரு டேபிள்ஸ்பூன் பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கியது) - ஒரு டீஸ்பூன் வொர்ஸ்டஷர் சாஸ் - கால் டீஸ்பூன் பிரெட் - 2 ஸ்லைஸ் உப்பு, மிளகுத்தூள் - தேவையான அளவு செய்முறை: முதலில் முட்டை மஞ்சள் கரு, துருவிய சீஸ், பச்சை மிளகாய், உப்பு, மிளகுத்தூள், வொர்ஸ்டஷர் சாஸ், கெட்சப் அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து நன்றாகக் கலக்கிக் கொள்ளவும். பிரெட் ஸ்லைஸ்களின் இருபுறமும் வெண்ணெய் தடவிக் கொள்ளவும். ஒரு பிரெட்டில் அடித்து வைத்துள்ள கலவையை சீராக, தடிமனாக பரப்பவும். அதன் மீது வெண்ணெய் தடவிய மற்றொரு பிரெட்டை வைத்து மூடவும். அடுப்பில் நான்ஸ்டிக் தவாவை வைத்து வெண்ணெய் சேர்த்து உருகியதும் பிரெட் ஸ்லைகளை வைத்து இருபுறமும் பொன் நிறத்தில் டோஸ்ட் செய்து எடுத்தால் சில்லி சீஸ் டோஸ்ட் தயார்! குறிப்பு: படத்தில், டோஸ்ட் செய்த பிரெட்டை, வட்டமாக நறுக்கி பரிமாறப்பட்டுள்ளது. கிரேட்டட் எக் - சீஸ் & பனீர் கிளப் சாண்ட்விச் தேவையானவை: வேகவைத்த முட்டை - ஒன்று (துருவிக்கொள்ளவும்) துருவிய பனீர் - 3 டேபிள்ஸ்பூன் துருவிய சீஸ் - 3 டேபிள்ஸ்பூன் பிரெட் - 3 ஸ்லைஸ் டொமேட்டோ கெட்சப் - 2 டீஸ்பூன் சாட் மசாலாத்தூள் - ஒரு சிட்டிகை உப்பு, மிளகுத்தூள் - தேவையான அளவு வெண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன் பச்சை மற்றும் சிவப்பு குடமிளகாய் (நறுக்கியது) - தலா அரை டீஸ்பூன் சீரகத்தூள் - கால் டீஸ்பூன் புதினா சட்னி - 2 டேபிள்ஸ்பூன் செய்முறை: பிரெட் துண்டுகளின் இருபுறங்களிலும் வெண்ணெயைத் தடவி வைக்கவும். அதில் இருந்து ஒரு பிரெட் ஸ்லைஸை எடுத்து அதன் மீது கெட்சப்பை தடவவும். கெட்சப்பின் மேல் வேகவைத்து துருவிய முட்டையை சீராகப் பரப்பவும். அதன் மீது துருவிய சீஸை சீராக இடைவெளி இல்லாமல் பரப்பவும். பிறகு சாட் மசாலாத்தூள், தேவையான அளவு உப்பு மற்றும் மிளகுத்தூளை தூவிவிடவும். இனி, வெண்ணெய் தடவிய மற்றொரு பிரெட்டால் மூடவும். மூடிய பிரெட்டின் மீது புதினா சட்னி அல்லது டொமேட்டோ கெட்சப்பை தடவவும். அதில் துருவிய பனீரை சீராக பிரெட் தெரியாத அளவுக்குப் பரப்பவும். அதன் மீது நறுக்கிய குடமிளகாய், சீரகத்தூள், உப்பு மற்றும் மிளகுத்தூள் தூவவும். இந்த சாண்ட்விச்சை மற்றொரு வெண்ணெய் தடவிய பிரெட்டால் மூடவும். அடுப்பில் நான்ஸ்டிக் தவாவை வைத்து, செய்து வைத்துள்ள சாண்ட்விச்சை டோஸ்ட் செய்து எடுக்கவும். இது இரண்டு அடுக்கு சாண்ட்விச் என்பதால் புரட்டும்போது கூடுதல் கவனத்தோடு சரியாகப் புரட்டவும். அவ்வளவுதான்... அற்புத சுவையில் கிரேட்டட் எக் - சீஸ் & கிளப் சாண்ட்விச் ரெடி. புதினா சட்னி செய்ய... தேவையானவை: புதினா - ஒரு பங்கு கொத்தமல்லி - ஒரு பங்கு பச்சை மிளகாய் - ஒன்று (அல்லது காரத்துக்கேற்ப) புளித்த தயிர் - கால் பங்கு உப்பு - தேவையான அளவு செய்முறை: நன்றாக அலசிய புதினா, கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாயை மிக்ஸியில் சற்றே கொரகொரப்பாக அரைக்கவும். பிறகு உப்பு மற்றும் புளித்த தயிரைச் சேர்த்து, மீண்டும் சட்னி பதத்துக்கு நன்றாக அரைத்தெடுக்கவும். சட்னி செய்ய நேரமில்லை எனில், பதிலாக டொமேட்டொ கெச்அப்பையே பயன்படுத்தலாம். கிரேட்டெட் சீஸ் வித் பொட்டேட்டோ ஃபில்லிங் சாண்ட்விச் ஃபில்லிங் செய்யத் தேவையானவை: வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன் நறுக்கிய பூண்டு - கால் டீஸ்பூன் நறுக்கிய பெரிய வெங்காயம் - ஒரு டேபிள்ஸ்பூன் நறுக்கிய பச்சை மிளகாய் - கால் டீஸ்பூன் உப்பு, மிளகுத்தூள் - தேவையான அளவு உருளைக்கிழங்கு - ஒன்று (வேகவைத்து மசிக்கவும்) கொத்தமல்லித்தழை - சிறிது ஃபில்லிங் செய்முறை: அடுப்பில் நான்ஸ்டிக் வாணலியை வைத்து வெண்ணெய் சேர்த்து, உருகியதும் நறுக்கிய பூண்டு, நறுக்கிய வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக வதக்கவும். பச்சை வாசனை நீங்கிய உடன் மசித்த உருளைக்கிழங்கைச் சேர்க்கவும். அடுப்பை ‘சிம்’மில் வைத்து தேவையான அளவு உப்பு, மிளகுத்தூள் மற்றும் கொத்தமல்லித்தழை சேர்க்கவும். அசத்தலான ஃபில்லிங் ரெடி. சாண்ட்விச் செய்யத் தேவையானவை: பிரெட் - 4 ஸ்லைஸ் வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன் டொமேட்டோ கெட்சப் - ஒரு டேபிள்ஸ்பூன் உருளைக்கிழங்கு ஃபில்லிங் - 10 டேபிள்ஸ்பூன் துருவிய சீஸ் - 4 டீஸ்பூன் உப்பு, மிளகுத்தூள் - தேவையான அளவு சாண்ட்விச் செய்முறை பிரெட் துண்டுகளில் ஒரு பக்கத்தில் வெண்ணெயைத் தடவவும். அதற்கு மேல் டொமேட்டோ கெட்சப் தடவி, அதன் மேல் உருளைக்கிழங்கு ஃபில்லிங்கை சீராகப் பரப்பவும். பிறகு, துருவிய சீஸை உருளைக்கிழங்கு தெரியாத அளவுக்கு அடர்த்தியாக பரப்பவும். அதன் மேல், தேவையான அளவு உப்பு மற்றும் மிளகுத்தூளை சீராகத் தூவவும். வெண்ணெய் தடவிய மற்றொரு பிரெட்டால் மூடவும். பிரெட்டின் மேற்பரப்பில் வெண்ணெய் தடவிவிடவும். அடுப்பில் நான்ஸ்டிக் தவாவை வைத்து வெண்ணெய் சேர்த்து உருகவிடவும். பிறகு, பிரெட் ஸ்லைஸ்களை வைத்து இருபுறமும் டோஸ்ட் செய்து எடுத்தால்... கிரேட்டட் சீஸ் வித் பொட்டேட்டோ ஃபில்லிங் சாண்ட்விச் ரெடி.
  8. சூப்பரான முட்டை சப்பாத்தி ரோல் குழந்தைகளுக்கு முட்டையை ஆம்லேட், பொரியல் செய்து கொடுத்திருப்போம். சற்று வித்தியாசமாக முட்டை சப்பாத்தி ரோல் செய்து கொடுத்து அசத்துங்கள். தேவையான பொருட்கள் : முட்டை - 4 சப்பாத்தி - 6 பெரிய வெங்காயம் - 3 பச்சை மிளகாய் - 1 கறிவேப்பிலை - சிறிது எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி - சிறிதளவு உப்பு - தேவையான அளவு செய்முறை : * வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லியை சிறிது சிறிதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உப்பு ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். * வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு அதில் முட்டையை உடைத்து ஊற்றி 2 நிமிடம் கிளறி உதிரியாக வந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கி வைக்கவும். * அடுத்து செய்து வைத்துள்ள சப்பாத்தியை தோசை கல்லில் போட்டு சூடானவுடன் இந்த முட்டை பொரியலை சிறிது நடுவில் வைத்து சுருட்டவும். இதே போல் அனைத்தையும் செய்து வைக்கவும். * இப்போது சூப்பரான முட்டை சப்பாத்தி ரோல் ரெடி.
  9. சைனீஸ் ப்ரைட் ரைஸ் : செய்முறைகளுடன்...! தேவையான பொருட்கள் : பாசுமதி அரிசி - 500 கிராம் சுத்தம் செய்த இறால் - 300 கிராம் புரோசின் பீஸ் (green peas) - 100 கிராம் முட்டை - 2 மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி பூண்டு - 3 பற்கள் அஜினோமோட்டோ - 1/2 தேக்கரண்டியிலும் குறைந்தளவு எண்ணெய் - 3 மேசைக்கரண்டி மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி உப்பு - ஒரு தேக்கரண்டி கறிவேப்பிலை - 2 நெட்டுக்கள் கிராம்பு - 4 கறுவா - 2 ஏலக்காய் - 4 செய்முறை : மேற் சொன்ன பொருட்கள் அனைத்தையும் தயார் நிலையில் எடுத்து வைத்துக் கொள்ளவும். அரிசியை கழுவி அதனுடன் ஏலக்காய், கறுவா, கிராம்பு, கால் தேக்கரண்டி மஞ்சள் தூள், கால் தேக்கரண்டி உப்பு ஆகியவற்றை சேர்த்து விரும்பினால் ஒரு தேக்கரண்டி நெய் அல்லது மாஜரினும் சேர்த்து 700 மி.லி தண்ணீர் ஊற்றி குக்கரில் வைத்து வேக வைத்து எடுத்து ஒரு தட்டில் கொட்டி ஆற விடவும். அப்போது தான் சாதம் உதிர் பதமாக இருக்கும். இறாலை சிறுத் துண்டுகளாக நறுக்கி கால் தேக்கரண்டி உப்பு மற்றும் கால் தேக்கரண்டி மஞ்சள் தூளும் சேர்த்து பிரட்டி வைக்கவும். முட்டையை உடைத்து ஊற்றி அதில் கால் தேக்கரண்டி உப்பு சேர்த்து அடித்து அப்பமாகப் பொரித்து எடுத்து சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி பூண்டை தட்டிப் போட்டு பிரட்டி வைத்திருக்கும் இறாலையும் போட்டு நன்கு வதக்கவும். இறால் நன்கு வதங்கியதும் அதனுடன் பீஸை போட்டு வதக்கவும். அதன் பின்னர் கறிவேப்பிலை, மீதமுள்ள உப்பு, மிளகுதூள், அஜினோமோட்டோ போட்டு பிரட்டி விடவும். அஜினோமோட்டோ சேர்க்கும் போது கவனமாக சேர்க்கவும் சிறிதளவேனும் அதிகமானாலும் புளிப்பு தன்மை அதிகமாகிவிடும். இந்த கலவையில் வேக வைத்து ஆற வைத்த சாதத்தையும், துண்டுகளாக நறுக்கி வைத்திருக்கும் முட்டையையும் சேர்க்கவும். எல்லாவற்றையும் சேர்த்த பின்னர் நன்கு பிரட்டி விட்டு சூடாகியதும் இறக்கவும். சமைத்து முடியும் வரை குறைந்த தீயிலேயே வைத்திருக்கவும். சுவையான சைனீஸ் ப்ரைட் ரைஸ் ரெடி. இதனை மட்டன் அல்லது சிக்கன் பிரட்டல், அவித்த முட்டை சேர்த்துப் பரிமாறவும்.
  10. மால்வானி சிக்கன் : செய்முறைகளுடன்...! தேவையான பொருட்கள் : சிக்கன் - கால் கிலோ வெங்காயம் - ஒன்று தக்காளி - ஒன்று மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் - சிறிதளவு தயிர் - ஒரு மேசைக்கரண்டி எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி உப்பு - தேவைக்கேற்ப அரைக்க 1 : இஞ்சி - சிறு துண்டு பூண்டு - 3 பல் பச்சை மிளகாய் - ஒன்று மல்லி தழை - சிறிதளவு அரைக்க 2 : சோம்பு - கால் தேக்கரண்டி பச்சை மிளகாய் - ஒன்று இஞ்சி - மிக சிறிய துண்டு பூண்டு - 2 பல் மல்லி தழை - சிறிதளவு வெங்காயம் - பாதி அரைக்க 3 : தேங்காய் - 2 மேசைக்கரண்டி பட்டை - சிறிய துண்டு கிராம்பு - ஒன்று ஏலக்காய் - ஒன்று தனியா - கால் தேக்கரண்டி மிளகு - கால் தேக்கரண்டி கசகசா - கால் தேக்கரண்டி முந்திரி - 5 காய்ந்த மிளகாய் - 2 பச்சை மிளகாய் - ஒன்று பூண்டு - 2 பல் பிரிஞ்சி இலை, பெருங்காயம், பட்டை, கிராம்பு, எண்ணெய் - தாளிக்க மல்லி இலை - அலங்கரிக்க செய்முறை : அரைக்க 1 லிஸ்டில் கொடுத்துள்ளதை அரைத்துக் கொள்ளவும். சிக்கனை சுத்தம் செய்து இந்த கலவை மற்றும் தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், எலுமிச்சை மற்றும் தயிர் சேர்த்து பிசறி ஊற வைக்கவும். அரைக்க 2 என்று கொடுத்துள்ளதில் சிறிதளவு எண்ணெய் விட்டு வெங்காயத்தை வதக்கி அரைத்துக் கொள்ளவும். அரைக்க 3 என்று கொடுத்துள்ளதில் எல்லாவற்றையும் எண்ணெயில்லாமல் வறுத்து பொடித்து வைக்கவும். எண்ணெயை சூடாக்கி தாளிக்க கொடுத்துள்ளதை தாளிக்கவும். பொரிந்ததும் பொடியாக அறிந்த வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் ஓரளவுக்கு வதங்கியதும் அரைத்து வைத்துள்ள இரண்டாவது மசாலாவை சேர்த்து வதக்கவும். இரண்டொரு நிமிடம் வதக்கி தக்காளி, மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு (ஏற்கனவே சிக்கனில் உப்பு இருக்கு) சேர்த்து குழையும் வரை வதக்கவும். இப்பொழுது ஊற வைத்த சிக்கனை சேர்த்து கிளறவும். மசாலா சிக்கனில் நன்கு பரவியதும் அரைத்து வைத்துள்ள மூன்றாவது மசாலாவை சேர்க்கவும். ஒரு கப் தண்ணீர் விட்டு மூடி வைத்து மிதமான தீயில் முப்பது நிமிடம் அல்லது சிக்கன் வேகும் வரையில் வேக விடவும். எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கி மல்லி தழை தூவி பரிமாறவும். இது சுடு சாதம், சப்பாத்தி, பூரியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
  11. குவைத் கப்சா தேவையானவை: சிக்கன் - அரை கிலோ (தோலுடன் துண்டுகளாக்கவும்) பாஸ்மதி அரிசி - 4 கப் மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன் மிளகுத்தூள் - 1 டீஸ்பூன் பெரிய வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கவும்) பூண்டு - அரை கப் இஞ்சி - ஒரு துண்டு (பொடியாக நறுக்கவும்) தக்காளி - 2 கப் (பொடியாக நறுக்கியது) தக்காளி - 2 (மிக்ஸியில் அரைக்கவும்) பட்டைத்தூள் - கால் டீஸ்பூன் ஏலக்காய்த்தூள் - தலா அரை டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - அரை டீஸ்பூன் (கொரகொரப்பாக அரைத்தது) இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன் கிராம்புத்தூள் - கால் டீஸ்பூன் மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன் சீரகம் - ஒரு சிட்டிகை முழு மிளகு - 5 உப்பில் ஊறிய எலுமிச்சங்காய் - ஒன்று (துண்டுகளாக்கவும்) தண்ணீர் - ஆறே கால் கப் பாதாம், பிஸ்தா, பைன் பருப்புகள் - தலா கால் டீஸ்பூன் அவித்த முட்டை - 2 (வட்டமாக நறுக்கவும்) கொத்தமல்லித்தழை - தேவைக்கேற்ப (நறுக்கவும்) நெய்யில் வறுத்த கிஸ்மிஸ் (உலர் திராட்சை) - 1 டீஸ்பூன் எலுமிச்சை - ஒன்று (அலங்கரிக்க நறுக்கவும்) வெண்ணெய் - கால் கப் உப்பு - தேவையான அளவு செய்முறை: பாஸ்மதி அரிசியை ஒரு மணி நேரம் ஊறவிடவும். ஒரு முழுக்கோழியை நான்கு பெரிய துண்டுகளாக்கவும். அதில் இருந்து எடுத்த இரண்டு பீஸ்கள் அரை கிலோ இருக்க வேண்டும். கழுவி சுத்தம் செய்த சிக்கனுடன் மல்லித்தூள்(தனியாத்தூள்), மிளகாய்த்தூள், மிளகுத்தூள் மற்றும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பிசைந்து 30 நிமிடங்கள் ஊறவிடவும். அடுப்பில் வாணலியை வைத்து வெண்ணெய் விட்டு சூடாக்கி சிக்கன் துண்டுகளை பொன்னிறமாக பொரித்து எடுத்து வைக்கவும். சிக்கன் பொரித்ததும் போக வாணலியில் மீதம் இருக்கும் நெய்யை சரிபாதியாக பிரித்து இரண்டு பவுல்களில் எடுத்து வைக்கவும். அடுப்பில் மற்றொரு வாணலியை வைத்து ஒரு பாதியை நெய்யைச் சேர்த்து சூடானதும் பூண்டு, வெங்காயம் சேர்த்து லேசாக பொன்னிறமாக வதக்கவும். அதில் இஞ்சி, உப்பு சேர்த்து வதக்கவும். அதனுடன் நறுக்கிய மற்றும் அரைத்த தக்காளி சேர்த்து நெய் பிரிந்துவரும் வரை வதக்கவும். நெய் பிரிந்து வந்ததும் பட்டைத்தூள், ஏலக்காய்த்தூள், கொரகொரப்பாக அரைத்த காய்ந்த மிளகாய், மிளகாய்த்தூள், கிராம்புத்தூள், சீரகம், முழுமிளகு சேர்த்து வதக்கவும். இதனுடன் உப்பில் ஊறிய எலுமிச்சங்காயைச் சேர்த்து வதக்கவும். இத்துடன் பொரித்து வைத்துள்ள சிக்கன் துண்டுகள், உப்பு, தண்ணீர் சேர்த்து 20 நிமிடங்கள் வேகவிட்டு அடுப்பை அணைக்கவும். இனி, வெந்த சிக்கன் கலவையில் இருந்து சிக்கன் துண்டுகளை தனியாக எடுத்து, ‘பேக்கிங் அவன்’னுக்கான பாத்திரத்தில் சேர்த்து, அதனுடன் வெந்த சிக்கனில் இருக்கும் மீதமுள்ள சாற்றில் இருந்து இரண்டு கரண்டி சாறு எடுத்து சிக்கனின் மீது ஊற்றவும். இதனுடன் சிறிது வெண்ணெய் சேர்த்து 180 டிகிரி செல்சியஸ் சூடு செய்த அவனில் வைத்து 10 நிமிடங்கள் முறுகவிடவும். பிறகு, வெளியே எடுத்து சிக்கனின் மேல் எலுமிச்சைச் சாற்றை ஊற்றவும். ஊறிய அரிசியை, மீதமிருக்கும் மற்றொரு பாதி நெய்யில் சேர்த்து வறுக்கவும். வாயகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து வறுத்த அரிசி, மீதமிருக்கும் சிக்கன் வேகவைத்த சாறு, உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகவிடவும். அரிசி வெந்ததும் சிறிதளவு வெண்ணெய் சேர்த்து கரண்டியால் சாதம் உதிரியாகும்படி கிளறிவிடவும். ஒரு பாத்திரத்தில் சாதத்தை சமமாகப் பரப்பி, அதன் மேல் சிக்கன் கலவையை வைத்து, அதைச் சுற்றிலும் வட்டமாக நறுக்கிய முட்டைத் துண்டுகளை வைத்து, அதற்கு மேல் கிஸ்மிஸ் (உலர் திராட்சை), பாதாம், பிஸ்தா, பைன் பருப்புகள் மற்றும் கொத்தமல்லித்தழை தூவி எலுமிச்சை துண்டுகள் வைத்து பரிமாறவும். குறிப்பு: சாலட் மற்றும் டக்கோஸ் சாஸ் உடன் பறிமாறினால் இன்னும் சிறப்பு.
  12. ஆப்கானிஸ்தான் காபுலி புலாவ் தேவையானவை: பாஸ்மதி அரிசி - 3 கப் மட்டன் - ஒரு கிலோ பெரிய வெங்காயம் - 2 (நறுக்கவும்) பூண்டு - 3 (நறுக்கவும்) பட்டை - ஒரு துண்டு ஏலக்காய் - 10 சீரகம் - 2 டீஸ்பூன் கிராம்பு - 6 தண்ணீர் - 3 கப் கேரட் - 3 (நீளவாக்கில் வெட்டியது) சர்க்கரை - கால் கப் கிஸ்மிஸ் (உலர் திராட்சை) - அரைகப் (தண்ணீரில் 10 நிமிடம் ஊறவைக்கவும்) ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன் பாதாம் - அரை கப் (தண்ணீரில் ஒர் இரவு ஊறவைத்து தோல் நீக்கவும்) கரம் மசாலாத்தூள் - 2 டீஸ்பூன் எண்ணெய் - அரை கப் + சிறிதளவு உப்பு, மிளகுத்தூள் - தேவையான அளவு செய்முறை: அரிசியை நன்றாகக் கழுவி 2 மணி நேரம் ஊறவிடவும். அடுப்பில் அடிகனமான வாணலியை வைத்து, கால் கப் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும். ஒரு கிலோ மட்டனை 4 பங்குகளாகப் பிரித்து, ஒவ்வொரு பங்கையும் தனித்தனியாக நிறம் மாறும் வரை எண்ணெயில் பொரித்து எடுக்கவும். அந்த எண்ணெயில் மட்டனின் வாசனை வர வேண்டும் என்பதற்காகவே மட்டனை 4 பகுதிகளாக பிரித்து பொரித்தெடுக்கிறோம். மட்டன் பொரித்த எண்ணெயில் வெங்காயத்தைச் சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும். பிறகு, நறுக்கிய பூண்டு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் சீரகம் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். அந்தக் கலவையில் பொரித்த மட்டனைச் சேர்க்கவும். உப்பு, மிளகுத்தூள், ஏலக்காய்த்தூள், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாகக் கலக்கி உப்பு போட்டு மட்டனை அரை மணி நேரம் வேகவிடவும். இதனை வடித்து, வெந்த மட்டனைத் தனியாகவும், வடித்த தண்ணீரை தனியாகவும் எடுத்து வைக்கவும். அடுப்பில் மற்றொரு வாணலியை வைத்து, மீதமிருக்கும் கால் கப் எண்ணெய் சேர்த்துச் சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து, கேரட்டைச் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். பிறகு, சர்க்கரை சேர்த்து 2 நிமிடங்கள் சர்க்கரை கருகாமல் பொன்னிறமாக வரும்வரை வதக்கவும். வாணலியை அடுப்பில் இருந்து இறக்கி, வடிகட்டிய கறித் தண்ணீரைச் சேர்க்கவும். அதனுடன் பத்து நிமிடம் ஊறிய உலர் திராட்சையைச் சேர்த்து, தேவைக்கேற்ப உப்பு சேர்த்து கலந்து வைக்கவும். அடுப்பில் வாயகன்ற பாத்திரத்தை வைத்து 3 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதித்ததும், ஊறிய அரிசியைச் சேர்த்து உப்பு போட்டு 5 நிமிடங்கள் வேகவிட்டு தண்ணீரை வடித்துவிடவும். ஓர் அலுமினியப் பாத்திரத்தின் உட்புறமாக எண்ணெய் தடவி, முதலில் பாதி அளவு அரிசி, பாதியளவு மட்டன் வேகவைத்த தண்ணீர் சேர்த்து, அதன் மேல் வேகவைத்த மட்டனை பரத்தி அதற்கு மேல் கேரட் மற்றும் உலர் திராட்சை சேர்த்து, அதற்கு மேல் மீதம் உள்ள அரிசி மற்றும் தண்ணீரையும் சேர்க்கவும். நீளமான மரக்கரண்டியின் பின்பாகத்தை வைத்து கலவை பாத்திரத்தின் அடிபாகம் வரை செலுத்தி மூன்று, நான்கு இடங்களில் ஓட்டை இடவும். பாத்திரத்தின் மூடியை கனமான துண்டில் பொதிந்து, அதை வைத்து புலாவ் உள்ள பாத்திரத்தை மூடவும். மிதமான சூட்டில் 5 நிமிடங்கள் வேகவிடவும். பின்பு குறைந்த தீயில் 20 நிமிடம் வேகவிடவும். அடுப்பை விட்டு இறக்கி, 10 நிமிடங்கள் கழித்து, அடிப்பாகம் வரை கரண்டியைவிட்டுக் கிளறி, அகலமான தட்டில் இட்டு, அதன் மேல் நறுக்கிய பாதாம் மற்றும் கரம் மசாலாத்தூள் தூவிப் பரிமாறவும். குறிப்பு: மட்டனுக்கு பதிலாக சிக்கன் பயன்படுத்தியும் காபுலி புலாவ் செய்யலாம். உலர் திராட்சையுடன் ஆப்ரிகாட் (Apricot) சேர்த்தும் சமைக்கலாம். பாதாமுடன் பிஸ்தா பருப்பையும் சேர்த்துக்கொள்ளலாம்.
  13. குழந்தைகள் விரும்பி சாப்பிடும் எள் நூடுல்ஸ் எப்படி ஆரோக்கியமாக தயாரிக்கலாம் என தெரியுமா உங்களுக்கு? மிகவும் எளிதான மற்றும் சுவை மிகுந்த எள் நூடுல்ஸின் செயல்முறை குறிப்புகளைப் படித்திடுங்கள்..உடலுக்கு ஆரோக்கியமானது. குழந்தைகளும் விரும்பு உண்பார்கள் நூடில்ஸ் அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு. இதை வெவ்வேறு வழிகளில் மற்றும் முறைகளில் தயாரிக்க முடியும். ஹாங்காக் நூடுல்ஸ் மிகவும் காரமாக இருந்தால், காண்டோனீஸ் நூடுல்ஸ் காரம் இல்லாமல் லேசாக இருக்கும். நீங்கள் எப்போதாவது எள் நூடுல்ஸ் முயற்சி செய்து பார்த்ததுண்டா நாங்கள் உங்களுக்கு வழக்கமான நூடுல்ஸ் போன்று இல்லாமல் மிகவும் வித்தியாசமான ஒரு மாலை சிற்றுண்டி செய்முறை குறிப்புகளை வழங்க வேண்டும் என நினைத்து இந்த எள் நூடுல்ஸ் செய்முறையை கொடுத்துள்ளோம். இதன் செய்முறை மிகவும் எளிதானது மற்றும் இதில் பயன்படுத்தும் பொருட்கள மிகவும் எளிதாக கிடைக்கும். எள் : எள் உங்களின் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. அதிக கால்சியம் நிறைம்ந்தது சுவையும் அதிகம். கேழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைப் பயன்படுத்தி டேஸ்டியான நூடுல்ஸை நீங்களும் ட்ரை பண்ணுங்க. செயல்முறை: பறிமாறும் அளவு - 4 பேர் தயாரிப்பு நேரம் - 15 நிமிடங்கள் சமையல் நேரம் - 20 நிமிடங்கள் தேவையான பொருட்கள்: 1. வேகவைத்த நூடுல்ஸ் - 2½ கப் 2. பூண்டு - 1 டீஸ்பூன் (நறுக்கியது) 3. வெள்ளை எள் - 1 டீஸ்பூன் 4. இஞ்சி - 1 டீஸ்பூன் (நறுக்கியது) 5. வினிகர் - 1 தேக்கரண்டி 6. கருப்பு சோயா சாஸ்- 1 தேக்கரண்டி 7. நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன் 8. வெங்காயத்தாள் - 1 டீஸ்பூன் (நறுக்கியது) 9. உப்பு - தேவைக்கு ஏற்றபடி எப்படி செய்வது ? 1. எள்ளை மிதமான சூட்டில் குறைந்தது இரண்டு நிமிடங்கள் வறுக்கவும். அதன் பின்னர் அதை ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும் 2. இப்போது, அடுப்பில் ஒரு பான் வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்கவும். அதனுடன் இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து நன்கு பொன்னிறமாக வறுக்கவும். 3. அதன் பின்னர் இதனுடன் வேக வைத்த நூடுல்ஸை சேர்க்கவும். அதனுடன் சிறிது உப்பு, கருப்பு சோயா சாஸ் மற்றும் சிறிது வினிகர் சேர்க்கவும். 4. கலவையை நன்கு கலக்க அவற்றை சிறிது பிரட்டி விடவும். பின்னர் நூடுல்ஸ் மீது வறுத்த எள் தூவவும். 5. இப்போது, எள், நூடுல்ஸில் நன்கு கலக்கும் வண்ணம் கலவையை மீண்டும் பிரட்டி விடவும். கலவை நன்கு கலந்த பின் அடுப்பை அனைத்து விடவும். 6. நூடுல்ஸை ஒரு பரிமாறும் கிண்ணத்திற்கு மாற்றி விடவும். 7. நறுக்கப்பட்ட வெங்காயத் தாள் மற்றும் மீதமுள்ள எள்ளை, நூடுல்ஸ் மீது தூவி அலங்கரிக்கவும். 8.இப்பொழுது உங்களின் சுவை மிகுந்த எள் நூடுல்ஸ் பறிமாறத் தயாராக உள்ளது. உங்களுக்கு இன்னும் எளிதாக புரிய இங்கே வீடியோ கொடுக்கப்பட்டுள்ளது. முயற்சி செய்து பாருங்கள் !! Simple Sesame Noodl 00:19 / 02:36 உங்கள் குழந்தைகள் காரம் இல்லாத உணவை உட்கொள்ள விரும்பினால் இது அவர்களுக்கேற்ற மிகவும் சரியான உணவு. சுவை மிகுந்த இது, மிகவும் ஆரோக்கியமானதும் கூட. இதை நீங்கள் மேழும் சிறப்பிக்க விரும்பினால் இதனுடன் வேக வைத்த காய்கறிகள், முட்டை, மற்றும் சிக்கன் ஆகியவற்றை சேர்க்கலாம்.
  14. நீங்கள் உங்களை அறிமுகபடுத்தி ஒரு பதிவை எழுதுங்கள் நண்பரே... அதன் பின்பு களஉறவுகள் வரவேற்பார்கள்... நீங்கள் நாலு அல்லது ஐந்து பதிவை எழுதியபின் அடுத்த கட்டத்துக்கு போகலாம்.
  15. பன்னீர் கிரேவி தேவையான பொருட்கள்: பன்னீர் – 1 கப் (துண்டுகளாக்கப்பட்டது) குடைமிளகாய் – 1 கப் (நறுக்கியது) வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது) தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது) மிளகாய் தூள் – 1 டீஸ்பூன் கரம் மசாலா – 1 டீஸ்பூன் மல்லித் தூள் – 1/2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது) கொத்தமல்லி – சிறிது உப்பு – தேவையான அளவு அரைப்பதற்கு… தக்காளி – 2 மல்லி – 1 டீஸ்பூன் வரமிளகாய் – 4 செய்முறை: 1.முதலில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களில் மல்லி மற்றும் வரமிளகாயை லேசாக வறுத்து, பின் அவற்றை மிக்ஸியில் போட்டு, அத்துடன் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். 2.பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் பன்னீர் துண்டுகளை சேர்த்து, பொன்னிறமாக வதக்கி, சுடுநீரில் 5 நிமிடம் ஊற வைத்து, பின் பன்னீரை தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளவும். 3.பின் அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி, பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, அத்துடன் வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கி, பின் அதில் அரைத்து வைத்துள்ள தக்காளி பேஸ்ட்டை சேர்த்து, அத்துடன் மசாலா பொருட்களையும் சேர்த்து கிளறி தேவையான அளவு உப்பு தூவி பச்சை வாசனை போக வேக வைக்க வேண்டும். 4.பிறகு அதில் குடைமிளகாயை சேர்த்து 4 நிமிடம் வதக்கி, 1/2 கப் தண்ணீர் ஊற்றி, கொதிக்க விட வேண்டும். 5.பின்பு அதில் பன்னீர் துண்டுகளை சேர்த்து கிளறி, கொத்தமல்லி தூவி இறக்கினால், பன்னீர் கிரேவி ரெடி!!!
  16. காளான் வறுவல் இந்த உணவு சாதம், சப்பாத்தி, பரோட்டா, பூரி, நெய் சாதம் ( கீ ரைஸ் ) போன்ற உறவுகளுக்கு ஏற்ற பக்க உணவாக ( சைட்டிஷ் ) உண்ணலாம். நான் மொட்டு காளான் ( பட்டன் மஷ்ரூம் ) பயன்படுத்தி செய்து உள்ளேன். இதை காட்டிலும் இலை காளான், இதற்கு சிப்பி காளான் (ஆய்ஸ்டர் மஷ்ரூம் ) என்ற பெயரும் உண்டு. இதை பயன்படுத்தி ஒரு முறை சமைத்து உண்டு விட்டால் உங்கள் நாவும் மனமும் இதையை தான் தேடும். தேவையான பொருட்கள் மசாலா அரைக்க வரமிளகாய் 3 கொத்தமல்லி விதை 3 தேக்கரண்டி மிளகு 1 தேக்கரண்டி சோம்பு 1/2 தேக்கரண்டி சீரகம் 1 தேக்கரண்டி பொட்டுக்கடலை 1 தேக்கரண்டி கசகசா 1 தேக்கரண்டி இலவங்கம் 3 அண்ணாச்சி மொக்கு 1 ஜாதி பூ 1 பட்டை 1 இன்ச் கொப்பரை தேங்காய் துருவல் 3 தேக்கரண்டி சின்ன வெங்காயம் 15 இஞ்சி 2 இஞ்ச் பூண்டு 5 பற்கள் கறிவேப்பிலை 1 கொத்து மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி மொட்டு காளான் 1 பாக்கேட் ( 200 கிராம் ) தக்காளி 1 ( பொடியாக நறுக்கியது ) பச்சை மிளகாய் 2 ( பொடியாக நறுக்கியது ) பிரியாணி இலை 1 கறிவேப்பிலை 1 கொத்து கொத்தமல்லி இலைகள் 1/4 கப் உப்பு தேவையான அளவு தண்ணீர் 1 கப் எண்ணெய் 4 மேஜைக்கரண்டி செய்முறை 1. மொட்டு காளானை தண்ணீரில் அலசி, துணியில் துடைத்து சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும். 2. இப்பொழுது வடச்சட்டியை அடுப்புல வைத்து காய்ந்ததும் வரமிளகாய், கொத்தமல்லி விதை, சீரகம், மிளகு, சீரகம், சோம்பு, கிராம்பு, கசகசா, பொட்டுக்கடலை, அண்ணாச்சி மொக்கு இவற்றை எல்லாம் சேர்த்து நன்றாக வறுத்து கொள்ளவும். 3. வறுத்து வைத்துள்ள பொருட்களோடு கொப்பரை தேங்காய் துருவலையும் சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்கு பொடி செய்து கொள்ளவும். 4. இப்பொழுது இந்த பொடியில் சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக நைசாக அரைத்து கொள்ளவும். 5. பிறகு வடச்சட்டியை அடுப்புல வைத்து காய்ந்ததும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் பொடியாக பிரியாணி இலை, பொடியாக நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலா விழுதை சேர்த்து நன்கு வதக்கவும். எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். 6. அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும் இந்த கலவை கூழ் போல் ஆகும் வரை வதக்கவும். தேவையான உப்புத்தூளை சேர்த்து கொள்ளவும். 7. இந்த கலவையில் நறுக்கி வைத்துள்ள மொட்டு காளானை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும் சிறிது தண்ணீரை சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். ஏனெனில் காளான் கொதிக்கும் சமயத்தில் தண்ணீர் விடும். 8. இச்சமயத்துல காளான் நன்றாக வெந்து மசாலா கலவையோடு ஒன்றாக கலந்து கலவை கெட்டியாக ஆகும் வரை பெருந்தீயில் கொதிக்க விடவும். 9. கலவை கெட்டியாகி எண்ணெய் பிரிந்து வரும் வேலையில்( சிறு தீயில் ) காளான் கலவையை சுண்டி கிளறவும். இறக்கும் சமயத்துல நறுக்கிய கொத்தமல்லி இலைகளை தூவி பரிமாறவும். நீங்கள் சமைக்கும் உணவு, புரதச்சத்து மிகுந்ததாகவும், குழந்தைகளின் வளர்ச்சியை உறுதிப்படுத்துவதாகவும் அமைந்தால் சிறப்புதானே. அப்படிப்பட்ட இந்த சமையல் வீட்டில் செய்து பாருங்கள். சாமை - நாட்டுக்கோழி பிரியாணி தேவையானவை: சாமை - 1 கப் நாட்டுக்கோழி - 2000 கிராம் பெரிய வெங்காயம் - 1 எலுமிச்சைச் சாறு - அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன் மஞ்சள்தூள், சீரகத்தூள், சோம்புத்தூள் - 1 டீஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன் புதினா - கால் கப் கொத்தமல்லித்தழை - கால் கப் ஏலக்காய் - 2 பட்டை - சிறிய துண்டு கிராம்பு - 2 கல்பாசி - 1 சிறிய துண்டு மிளகு, சோம்பு - அரை டீஸ்பூன் நெய்/நல்லெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன் உப்பு - தே.அளவு செய்முறை: சாமை அரிசியை கழுவி வைக்கவும். நாட்டுக்கோழியை சுத்தம் செய்து கொள்ளவும். அடுப்பில் குக்கரை வைத்து நறுக்கிய கோழித்துண்டுகள், அதற்கு தேவையான அளவு உப்பு, இஞ்சி-பூண்டு விழுது, மிளகு, மஞ்சள்தூள்,தண்ணீர் ஊற்றி 25 நிமிடம் வேகவைக்கவும். கோழி வெந்ததும் அதன் தண்ணீரையும், சதைப்பகுதிகளை தனியாகவும் எடுத்து வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, ஏலக்காய், கல்பாசி, சோம்பு, கிராம்பை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து தாளிக்கவும். இத்துடன் நீளமாக நறுக்கிய வெங்காயம், புதினா, கொத்தமல்லித்தழை சேர்த்து வதக்கவும். பிறகு அத்தனை தூள்களையும் சேர்த்து உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்து வாசனை போக வதக்கவும். இத்துடன் வெந்த கோழி, இறுத்த கோழிச்சாறு ஊற்றி (1 கப் சாமைக்கு 2.5 கப் தண்ணீர்) கொதிக்கவிடவும். இத்துடன் சாமையைச் சேர்த்து 10 நிமிடம் வேகவைத்து இறக்கி பரிமாறவும்.
  17. சூப்பரான ஸ்பைசி முட்டை மசாலா ஸ்பைசி முட்டை மசாலா சாம்பார் சாதம், தயிர் சாதத்திற்கு சூப்பராக இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : முட்டை - 5 வெங்காயம் - 1 தக்காளி - 2 இஞ்சி பூண்டு விழுது -1 ஸ்பூன் பச்சை மிளகாய் - 2 கொத்தமல்லி இலை - சிறிதளவு வெங்காயத்தாள் - சிறிதளவு பெருஞ்சீரகம் - 1 ஸ்பூன் கடுகு - 1 தேக்கரண்டி மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி உப்பு - ருசிக்க எண்ணெய் - 2 ஸ்பூன் செய்முறை : * முட்டையை வேகவைத்து பாதியாக வெட்டி வைக்கவும். * தக்காளி, கொத்தமல்லி, வெங்காயத்தாள், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். * வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி கடுகு, பெருஞ்சீரகம் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், ப.மிளகாய் போட்டு வதக்கவும். * வெங்காயம் சிறிது வதங்கிய பின்னர் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும். * அடுத்து அதில் மிளகாய் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து வாசனை போகும் வரை வதக்கவும். * பிறகு தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும். * தக்காளி சிறிது வதங்கி எண்ணெய் பிரிந்து வரும் போது முட்டையை போட்டு உடையாமல் கிளறி கொத்தமல்லி தழை, வெங்காயத்தாள் தூவி இறக்கவும். * சுவையான ஸ்பைசி முட்டை மசாலா ரெடி.
  18. சூப்பரான கொத்தமல்லி எலுமிச்சை சூப் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் கொத்தமல்லி எலுமிச்சை சூப் குடிக்கலாம். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் வெங்காயம் - 1 வெங்காயத்தாள் - 1 இஞ்சி - 1 இன்ச் (தட்டியது) பூண்டு - 1 பல் எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன் வெஜிடேபிள் ஸ்டாக் - 4 கப் மிளகு தூள் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு வெண்ணெய் - 1 டீஸ்பூன் செய்முறை : * வெங்காயம், கொத்தமல்லி, வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும். * பூண்டை தட்டிக்கொள்ளவும். * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் சேர்த்து உருகியதும், தீயை குறைவில் வைத்து, வெங்காயம், இஞ்சி, பூண்டு, வெங்காயத் தாள் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். * பின் அதில் வெஜிடேபிள் ஸ்டாக் ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும். * பின்பு கொத்தமல்லி, எலுமிச்சை சாறு, உப்பு, மிளகு தூள் சேர்த்து கிளறி, சூப்பானது சற்று கெட்டியானதும், அடுப்பில் இருந்து இறக்கி பரிமாறவும். * சூப்பரான கொத்தமல்லி எலுமிச்சை சூப் ரெடி!!!
  19. சூப்பரான எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு கத்தரிக்காய் பிடிக்காதவர்கள் கூட இந்த எண்ணெய் கத்தரிக்காயை விரும்பி சாப்பிடுவார்கள். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : கத்தரிக்காய் - 1/4 கிலோ சின்ன வெங்காயம் - 15 பெரிய வெங்காயம் - 1 தக்காளி - 2 தேங்காய் - 2 துண்டுகள் பூண்டு - 10 பல் கடுகு - 1/4 ஸ்பூன் வெந்தயம் - 1/2 ஸ்பூன் மிளகாய் பொடி - 2 ஸ்பூன் தனியா பொடி - 1 மஞ்சள் பொடி - 1/4 ஸ்பூன் புளி தண்ணீர் - 1 கப் நல்லெண்ணெய் - ஒரு குழிக்கரண்டி கறிவேப்பிலை - 1 கீற்று கொத்தமல்லி - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு செய்முறை : * கத்தரிக்காய்களை மேலாக காம்பை மட்டும் நறுக்கி விட்டு, மேலே படர்ந்துள்ள காம்பை விட்டு ஒரு கத்தரிக்காயை (பூ போல) நான்கு பாகங்காக வரும்படி நறுக்கி கொள்ளவும். * பூண்டை ஒன்றும் பாதியாக தட்டிக்கொள்ளவும். * தக்காளி, கொத்தமல்லி, பெரிய வெங்காயம், சின்ன வெங்காயத்தை நறுக்கி கொள்ளவும். * வாணலியில் எண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயம், தக்காளியை போட்டு நன்றாக வதக்கி ஆற விடவும். * மிக்சியில் வதக்கிய வெங்காயம், தக்காளியை தேங்காயுடன் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும். * வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம் போட்டு தாளித்த பின் நறுக்கிய பெரிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். * வதங்கியதும் தட்டி வைத்த பூண்டை போட்டு வதக்கவும். * அடுத்து கத்தரிக்காயை போட்டு வதக்கி கொள்ளவும். * கத்தரிக்காய் சற்று வதங்கியதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது சேர்த்து கிளறி விடவும். * இதனுடன் மிளகாய், தனியா, மஞ்சள் பொடிகளை சேர்த்து கிளறவும். * அடுத்து புளி கரைசல் சேர்த்து, மேலும் சிறிது தண்ணீரும் சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு கொதிக்க விடவும். * நன்கு கொதித்து கத்தரிக்காய் வெந்து குழம்பு திக்கான பதத்துடன் எண்ணெய் மேலாக தெளிந்து வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கவும். * சுவையான எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு தயார்.
  20. இறால் நூடுல்ஸ் : செய்முறைகளுடன்...! தேவையான பொருட்கள் : நூடுல்ஸ் பாக்கெட் - மூன்று இறால் - பத்து மஞ்சள் பொடி - கால் தேக்கரண்டி உப்பு - தேவைக்கு பீன்ஸ் - ஆறு கேரட் - ஒன்று எண்ணெய் - இரண்டு தேக்கரண்டி பட்டர் - நான்கு தேக்கரண்டி மிளகு தூள் - கால் தேக்கரண்டி செய்முறை : பீன்ஸ், கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். இறாலை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். நூடுல்ஸை மூன்று பாக்கெட்டுக்கு ஆறு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு நுடுல்ஸை உதிர்த்து போட்டு அதில் உள்ள மசாலாவையும் சேர்த்து கொதிக்கவிட்டு குழையாமல் இரண்டு மூன்று நிமிடத்திற்குள் வடித்து அதில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு பிரட்டி வைக்கவும். வாணலியை காய வைத்து அதில் எண்ணெய் விட்டு கேரட் தனியாக, பீன்ஸ் தனியாக சிட்டிகை உப்பு போட்டு இரண்டு நிமிடம் வதக்கி எடுத்து விட வேண்டும் அதே வாணலியில் கொஞ்சமாக பாதி பட்டர் போட்டு சுத்தம் செய்து வைத்துள்ள இறாலை பொடியாக நறுக்கி அதில் மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் பிரட்டவும். பிறகு அதில் வதக்கி வைத்துள்ள காய், வடித்து வைத்துள்ள நூடுல்ஸ் போட்டு மீதி உள்ள பட்டரையும் போட்டு மிளகு தூள் தூவி கிளறி இறக்கவும். பேச்சிலர்ஸ் சமையல் * ஸ்கிராம்பிள்டு பனீர் * பனீர் ஜல்ஃப்ரீசி * பனீர் டக்கா டக் * சீஸ் மற்றும் பனீர் ஆம்லெட் * படாடா டி ஃப்ரெட்டாடா பேச்சிலர்ஸ் சமையல் என்றால், அதில் ருசி குறைவாகத்தான் இருக்கும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால், ஹோட்டல்களிலும் ரெஸ்டாரன்ட்களிலும் கிடைக்கும் பனீர் உணவுகளின் செய்முறையை, 20 நிமிடங்களுக்குள் சமைக்கும் விதமாக ஷார்ட் கட் ரூட்டில் மாற்றி அமைத்திருக்கிறார்கள், சென்னை ஐஐஹெச்எம் கல்லூரியின் மூத்த பேராசிரியர்கள் செந்தில்குமார் மற்றும் கெளரி சங்கர். நொடிகளில் படியுங்கள், நிமிடங்களில் சமையுங்கள்! ஸ்கிராம்பிள்டு பனீர் தேவையானவை: பனீர் - 200 கிராம் (துருவியது) சோம்பு - அரை டீஸ்பூன் பூண்டு - அரை டீஸ்பூன் இஞ்சி - அரை டீஸ்பூன் பச்சை மிளகாய் பேஸ்ட் - 1 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது வெங்காயம் - 50 கிராம் (நறுக்கியது) மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன் மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் மல்லித்தூள் (தனியாத்தூள்) - அரை டீஸ்பூன் கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன் தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது) உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன் செய்முறை: அடுப்பில் நான்ஸ்டிக் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் சோம்பு, நறுக்கிய பூண்டு மற்றும் இஞ்சியை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்க்கவும். சற்று வதக்கி, பச்சை மிளகாய் பேஸ்டைச் சேர்த்து வதக்கவும். பின்னர் கறிவேப்பிலை சேர்த்து வாசனை வரும்வரை வதக்கவும். பிறகு, நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும்வரை வதக்கி, உப்பு, மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), மஞ்சள்தூள் சேர்த்து அவற்றின் பச்சை வாசனை போக ஒன்று அல்லது இரண்டு டீஸ்பூன் தண்ணீர் சேர்த்து வேகவிடவும். பின்னர் நறுக்கிய தக்காளி மற்றும் துருவிய பனீரைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். கலவையை அடுப்பில் இருக்கும் இறக்கும் முன்னர், கரம் மசாலாத்தூள், கொத்தமல்லித்தழை தூவி, இறக்கி பரிமாறவும். பரோட்டா, சப்பாத்தி, பிரெட், தோசை போன்றவற்றோடு இதை சேர்த்துச் சாப்பிடலாம். பனீர் ஜல்ஃப்ரீசி தேவையானவை: பனீர் - 200 கிராம் வேகவைத்த கேரட் - 1 வேகவைத்த பீன்ஸ் - 5 வேகவைத்த உருளைக்கிழங்கு - 1 காளான் - 25 கிராம் வேகவைத்த பச்சைப் பட்டாணி - 25 கிராம் சீரகம் - அரை டீஸ்பூன் பூண்டு - அரை டீஸ்பூன் (நறுக்கியது) இஞ்சி - அரை டீஸ்பூன் (நறுக்கியது) பச்சை மிளகாய் பேஸ்ட் - 1 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது பெரிய வெங்காயம் - 50 கிராம்(நறுக்கியது) மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன் மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் மல்லித்தூள் (தனியாத்தூள்) - அரை டீஸ்பூன் கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன் சீரகத்தூள் - கால் டீஸ்பூன் (விரும்பினால்) தக்காளி - 2 (மீடியம் சைஸ்) உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன் எலுமிச்சைச் சாறு - அரை மூடி செய்முறை: பனீர் மற்றும் உருளைக்கிழங்கை ஒரு இஞ்ச் சதுரத் துண்டுகளாக நறுக்கவும். கேரட், பீன்ஸை மட்டும் நீளத் துண்டுகளாக நறுக்கவும். தக்காளியை மிக்ஸியில் பேஸ்ட்டாக அரைக்கவும். அடுப்பில் நான்ஸ்டிக் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்து சீரகம், நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை, பூண்டை சேர்த்து வதக்கவும். பிறகு பச்சை மிளகாய் பேஸ்ட்டை சேர்த்து வதக்கி, காளான் மற்றும் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். இத்துடன் மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள், ஒரு கரண்டி தண்ணீர் சேர்த்து தூள்களின் பச்சை வாசனை போக கொதிக்கவிடவும். பிறகு, தக்காளி பேஸ்ட்டைச் சேர்த்து நன்கு கொதித்ததும் நறுக்கி வைத்திருக்கும் பனீரைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். உப்பு சேர்க்கவும். கலவையில் வேகவைத்த கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, பச்சைப் பட்டாணி அனைத்தையும் சேர்க்கவும். இந்த பனீர் ஜல்ஃப்ரீசியை அடுப்பில் இருந்து இறக்கும் முன்னர் 5 சொட்டு எலுமிச்சைச் சாறு சேர்த்து விரும்பினால் ஒன்று, இரண்டு சிட்டிகை சீரகத்தூள் தூவலாம். இதனால் சீரகத்தின் ஃப்ளேவர் ஸ்ட்ராங் ஆகக் கிடைக்கும். பனீர் டக்கா டக் தேவையானவை: பனீர் - 200 கிராம் (முக்கோண வடிவத்தில் நறுக்கவும்) கடுகு - கால் டீஸ்பூன் சோம்பு - கால் டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது பூண்டு - அரை டீஸ்பூன் (நறுக்கியது) இஞ்சி - அரை டீஸ்பூன் (நறுக்கியது) பெரிய வெங்காயம் - 2 (நறுக்கியது) தக்காளி - 1 (நறுக்கியது) மிளகுத்தூள் - அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன் மல்லித்தூள் (தனியாத்தூள்) - அரை டீஸ்பூன் மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் எண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை: அடுப்பில் நான்ஸ்டிக் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் கடுகைச் சேர்க்கவும். அது வெடித்த பின்னர் சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, நறுக்கிய இஞ்சி மற்றும் பூண்டைச் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு நறுக்கிய வெங்காயம், தக்காளி, உப்பு சேர்த்து வதங்கிய பின் மிளகுத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்) சேர்த்து நன்கு கிளறி வேகவிடவும். தூள்களின் பச்சை வாசனை நீங்கியதும் முக்கோணமாக நறுக்கி வைத்திருக்கும் பனீரைச் சேர்த்து சில நிமிடங்களில் இறக்கவும். குறிப்பு: பனீருடன் வேகவைத்த சிக்கன், வேகவைத்த மட்டன் மற்றும் முட்டையை உடைத்துச் சேர்த்து வேகவிட்டும் சமைக்கலாம். சீஸ் மற்றும் பனீர் ஆம்லெட் தேவையானவை: முட்டை - 2 உப்பு - தேவையான அளவு மிளகுத்தூள் - தேவையான அளவு துருவிய சீஸ் - 2 டேபிள்ஸ்பூன்(கூடுதல் சுவைக்குக் கூடுதலாகச் சேர்த்துக்கொள்ளலாம்) வெண்ணெய் - தேவையான அளவு செய்முறை: முட்டைகளை உடைத்து நன்றாக அடித்து, உப்பு, மிளகுத்தூள் கலந்து, அதில் சீஸை சேர்த்து கரையும்வரை ஊற்றி கலக்கவும். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து வெண்ணெய் சேர்த்துச் சூடானதும் முட்டை - சீஸ் கலவையைச் ஊற்றி வேகவைக்கவும். இருபுறமும் திருப்பிவிட்டு வேகவைத்து எடுக்கவும். குறிப்பு: சீஸுக்கு பதில் பனீர் சேர்த்தும் செய்யலாம். படாடா டி ஃப்ரெட்டாடா தேவையானவை: முட்டை - 4 உருளைக்கிழங்கு - 2 (மீடியம் சைஸ்) பெரிய வெங்காயம் - 1 (மீடியம் சைஸில் நறுக்கியது) உப்பு - தேவையான அளவு மிளகுத்தூள் - தேவையான அளவு வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன் செய்முறை: உருளைக்கிழங்கை வேகவைத்து, சிப்ஸுக்கு நறுக்குவதுபோல மெல்லிய வட்டங்களாக நறுக்கவும். முட்டைகளை உடைத்து ஒரு பாத்திரத்தில் சேர்த்து தேவையான அளவு உப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து, ஒரு டேபிள்ஸ்பூன் வெண்ணெய் சேர்த்துச் சூடானதும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். பின் வேகவைத்து நறுக்கிய உருளைக்கிழங்கைச் சேர்த்து வதக்கவும். வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு முழுமையாக மூழ்கும் அளவுக்கு முட்டைக் கலவையை அதன் மேலே சேர்க்கவும். அடி பிடிக்காமல் இருக்க ஓரங்களில் வெண்ணெய் சேர்க்கவும். நன்றாக வெந்ததும் மெதுவாக திருப்பிப் போட்டு வேகவைத்து இறக்கவும் (இரண்டு தோசைக் கரண்டிகளைப் பயன்படுத்தவும்). ஆஃப் பாயில் டேஸ்ட் விரும்பவர்கள் திருப்பிப்போடாமல் வேகவைத்து அப்படியே இறக்கியும் சாப்பிடலாம்.
  21. நண்டு வறுவல் என்னென்ன தேவை? நண்டு – 5 சின்ன வெங்காயம் – 15 தக்காளி – 2 மிளகாய்த் தூள் – ஒரு டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு மஞ்சள் தூள் - சிறிதளவு வதக்கி அரைக்க: பூண்டு பல் - 10 மிளகு – 2 டீஸ்பூன் தாளிக்க: நல்லெண்ணெய் – தேவையான அளவு சோம்பு – அரை டீஸ்பூன் கறிவேப்பிலை, மல்லித் தழை – சிறிதளவு எப்படிச் செய்வது? வாணலியில் எண்ணெய் விட்டு சோம்பு தாளித்து, வெங்காயம் போட்டு சிவக்க வதக்குங்கள். பிறகு தக்காளித் துண்டுகளைச் சேர்த்து நன்றாக வதக்கி, அரைத்த மசாலா, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்துப் பச்சை வாசனை போகும்வரை வதக்குங்கள். நண்டு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். நண்டு வெந்து, மசாலா கெட்டியானவுடன் மல்லித் தழை தூவி இறக்கிவையுங்கள். பிரெட் பிரியாணி என்னென்ன தேவை? பாசுமதி அரிசி - ஒரு கப் சீரகம் - ஒரு டீஸ்பூன் பிரெட் துண்டுகள் - 5 கேரட் - கால் கப் இஞ்சி, பூண்டு விழுது - ஒரு ஸ்பூன் நறுக்கிய வெங்காயம் - அரை கப் பிரியாணி மசாலா, கரம் மசாலா – தலா ஒரு டீஸ்பூன் பிரிஞ்சி இலை - 1 முந்திரி - ஒரு டேபிள் ஸ்பூன் புதினா, மல்லித்தழை - சிறிதளவு பட்டை – சிறு துண்டு கிராம்பு - 2 உப்பு, நெய் அல்லது எண்ணெய் – தேவையான அளவு எப்படிச் செய்வது? பிரெட்டைச் சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளுங்கள். குக்கரில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், இஞ்சி - பூண்டு விழுது, பிரிஞ்சி இலை, பட்டை, கிராம்பு சேர்த்து வதக்குங்கள். பிறகு வெங்காயம், முந்திரி, கேரட், புதினா போட்டு வதக்கி உப்பு சேர்த்து தேவையான தண்ணீர் ஊற்றுங்கள். அதில் கரம் மசாலாத் தூள், பிரியாணி மசாலா சேர்த்து ஊறிய அரிசியைப் போட்டு இரண்டு விசில் விட்டு இறக்கிவையுங்கள். குக்கர் சூடு ஆறியதும் திறந்து, நெய்யில் வறுத்த பிரெட், மல்லித்தழை சேர்த்துக் கிளறிவிடுங்கள். சீரகத்தை நெய்யில் வறுத்துச் சேர்த்துப் பரிமாறுங்கள். காய்கறிகள் குறைவாகவும் பிரெட் அதிகமாகவும் இருக்க வேண்டும். அரிசியை அரை மணி நேரம் ஊறவைத்துத் தண்ணீரை வடித்துவிடுங்கள். வாணலியில் சிறிது நெய் விட்டு அரிசியை வறுத்த பிறகு பிரியாணி செய்தால் உதிரியாக இருக்கும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.