Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துளசி

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by துளசி

  1. "தமிழீழ விடுதலைக்கான மாணவர் சுடர் பயணம்" விருதுநகர்- தஞ்சாவூர் நோக்கிய பாதை. 12/05/2013 அன்று காலை 9 மணிக்கு விருதுநகரில் ஆரம்பித்து தேனீ, மதுரை, திண்டுக்கல், கரூர், திருச்சி ஊடாக சென்று 17/05/2013 தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நிறைவு பெறுகிறது. (முகநூல்)
  2. தமிழக மாணவர்கள் நடத்தும் "தமிழீழ விடுதலைக்கான மாணவர் சுடர் பயணம்" சென்னை- தஞ்சை நோக்கிய பாதை. வரும் 12/05/2013 அன்று தமிழகத்தின் 5 பகுதிகளில் ஒரு பகுதியாக "சென்னை மெரினா காந்தி சிலையில்" காலை சரியாக 9 மணிக்கு "உணர்ச்சிக்கவிஞர் காசி அனந்தன் " தலைமையில் "இனமான இயக்குனர் மணிவண்ணன் " அவர்களால் சுடரேற்றி தொடங்கிவைக்கப்படுகிறது. பின் திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஊடாக சென்று 17.05.2013 அன்று தஞ்சை "முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நிறைவுபெறுகிறது. அச்சுடர் "அய்யா பழ.நெடுமாறன் மற்றும் அய்யா இரா.நல்லகண்ணு ஆகியோரால் பெற்றுகொள்ளப்படுகிறது. (முகநூல்)
  3. தமிழக மாணவர்கள் நடத்தும் "தமிழீழ விடுதலைக்கான மாணவர் சுடர் பயணம்" தர்மபுரி- தஞ்சை நோக்கிய பாதை. மே 12 ஆம் திகதி காலை 9 மணிக்கு தர்மபுரியில் ஆரம்பித்து கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர் ஊடாக சென்று 17/05/2013 அன்று தஞ்சாவூர் "முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் " முடிவடைகிறது. மேலும் தகவலுக்கு: சீ.தினேஷ்-9791162911 (ஒருங்கிணைப்பாளர்-தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு) (முகநூல்)
  4. தமிழீழ விடுதலைக்கான "மாணவர் சுடர் பயணம்". உங்கள் ஊரின் வழியே பயணிக்கும் சுடரை நீங்கள் வழி நடத்த விரும்பினால்... தொடர்புக்கு - தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு.... 9791162911, 9791156568.. (முகநூல்: loyolahungerstrike)
  5. தமிழகத்தின் 32 மாவட்டங்களிலும் 8 கோடி தமிழர்களை சந்திக்கும் வகையில் 5 பகுதிகளில் இருந்து மாணவர்கள் சுடரினை ஏந்தி 12/05/2013 அன்று காலை புறப்படுகின்றனர். அவர்களுக்கு தமிழகம் முழுவதும் உள்ள உணர்வாளர்கள், பொதுமக்கள் , வணிகர்கள் உள்ளிட்ட தமிழர்கள் அனைவரும் பேராதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். மாணவ போராளிகளின் இந்த சுடர் பயணம் 17/05/2013 அன்று தஞ்சை "முள்ளிவாய்க்கால் முற்றத்தில் " முடிவடைகிறது. மேலும் தகவலுக்கு : சீ.தினேஷ் -9791162911 (ஒருங்கிணைப்பாளர் - தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு) (முகநூல்: loyolahungerstrike)
  6. திருப்பூரில் ஈழம் தொடர்பான மாணவர் போராட்டத்தை முன்னெடுத்த ஏஞ்சல் கல்லூரி மாணவர் ராம்குமார் அவர்களை அக்கல்லூரி நிர்வாகம் தேர்வு எழுத விடாமல் தொல்லை கொடுப்பதாக தெரிவித்தார். ராம்குமாருடன் உரையாட:: 8438137437 (முகநூல்)
  7. அன்பு உறவுகளே ... பேஸ் புக், மின்னஞ்சல், குறுஞ்செய்தி மூலமாக மாணவர் போராட்டத்தின் திட்டங்கள் இருந்த இடத்திலிருந்தே குறைவான செலவில் பகிர்ந்துக்கொண்டிருந்தாலும் நம் கோரிக்கைகளை பொதுமக்களிடத்திலும் கொண்டுசேர்க்கவேண்டிய இடத்தில் உள்ளோம். வரும் விடுமுறை நாட்களில் சென்னையில் ஒரு இடத்தில் மாணவர்கள் அமர்ந்து வேலை செய்ய திட்டமிட்டுள்ளோம். அதற்கு ஒரு சிறிய அறை ஒதுக்கித்தருவதாக உண்ணாநிலை போராட்டத்திற்கு இடம் தந்து உதவிய தமிழ் உணர்வாளர் ஐயா திருச்சி சௌந்தரராஜன் அவர்கள் கூறியிருக்கிறார். குறைந்தபட்ச தேவைகள் உள்ள பொருட்கள் வாங்க, நமது போராட்ட செய்தியை மற்ற மாணவர்களுக்கு கொண்டுசேர்க்க துண்டுபிரசுரம் அடிக்க, பதாகைகள் தயார் செய்வது போன்ற தேவைகளுக்காக நிதி உதவி பெற எண்ணியுள்ளோம். எந்த கட்சியின், இயக்கத்தின் பின்புலத்திலிருந்தும் இயங்காமல் மாணவர்கள் மாணவர்களாகவே இயங்குவதால் பொது மக்களிடமிருந்து நிதியுதவி பெறுவதில் தவறில்லை என்று பல கட்ட யோசனைகளுக்குப் பிறகு முடிவு செய்துள்ளோம். கீழ்வரும் நிபந்தனைகளுடன், கூடுமானவரை பொருளாக வாங்க முயற்சிப்போம், ஒவ்வொரு மாதம் இறுதியில் வரவு செலவு கணக்கு சரி பார்க்கப்பட்டு நிதி மேம்பாட்டு குழுவால் பொதுவால் சமர்ப்பிக்கப்படும். வரவு செலவு கணக்கில் வெளிப்படைத்தன்மை இருக்கும், கூட்டமைப்பின் பெயரில் வங்கிக்கணக்கை தொடங்கும் வரையில் தற்காலிகமாக என்னுடைய சொந்த கணக்கு எண் கொடுக்கப்படுகிறது, ஈழத்தமிழர்கள் நிதியுதவி அன்புடன் மறுக்கபடுகிறது. தற்போதையத் தேவை : பிளாஸ்டிக் நாற்காலிகள் மின்விசிறி ஆரம்பக்கட்ட மின்இணைப்பு செலவுகள் மே மாதம் 18ஆம் தேதி பேரணி பரப்புரை செலவு கணினி தொலைபேசி போக்குவரத்து செலவுகள் Bank Details Name : T.Dhileepan Account No. :171201000031062 Bank :I.O.B IFS code:1712 Branch :loyola college branch இனப் படுகொலை தினமான மே 18 அன்று பேரணியில் சந்திப்போம் ...இலக்கை நோக்கி ஓடுவோம் . தமிழிழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு சார்பாக திலீபன். (முகநூல்: loyolahungerstrike)
  8. தமிழக மாணவர்களுக்கு ஆதரவாகவும் சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் தமிழீழத்துக்கான பொது வாக்கெடுப்பை நடத்த கோரியும் இன்று ஜேர்மனில் நடந்த போராட்ட படங்கள். (முகநூல்)
  9. நாம் நேற்று வெளியிட்ட செய்திக்கு மறுப்புதெரிவித்து தமிழீழ விடுதலைக்கான மாணவர்கள் கூட்டமைப்பு என்ற பெயரில் இயங்கும் நிர்வாகிகள் எமக்கு அனுப்பிய செய்தி . மன்னிக்கவும் உறவுகளே , குமார் சங்ககாரா பற்றிய பதிவினை இந்த பக்கத்தை நடத்தும் நாங்கள் பதிவிடவில்லை, எங்கேயோ தவறு நடந்துள்ளது . மேலும் நாங்கள் தேசிய தலைவரின் பாதையில் உங்களுடன் பயணிப்பவர்கள் "கரும்புலி ஆவோமே தவிர கருணா ஆக மாட்டோம்"..மேலும் எங்கள் பக்கத்தில் நான்கு மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் நிர்வாகியாக இருந்தனர் . தற்போது பக்கம் மீண்டும் எங்களால் மீட்கப்பட்டது .. யார் இதற்கு காரணம் என தேடுகின்றோம் . இப்படிக்கு தமிழீழ விடுதலைக்கான மாணவர்கள் கூட்டமைப்பு மாணவ நிர்வாகிகள் (முகநூல்: loyolahungerstrike)
  10. ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கு நீதிகேட்டு நடைபெறும் எமது மாணவர் போராட்டத்தின் அடுத்தக்கட்ட நகர்வாக வரும் மே மாத விடுமுறை நாள்களில் ஈழத்தமிழர் இனப்படுகொலை காட்சிகளடங்கிய காணொளி பதிவை கிராமங்கள் தோறும் திரையிட முடிவெடுத்துள்ளோம். இணையதளத்திலிருந்து சேகரிக்கப்பட்ட போர் காட்சிப்பதிவுகள், மற்றும் சேனல் 4 இனப்படுகொலைக்கு எதிரான ஆவணத் தகவல்கள் என தமிழீழ விடுதலைக்காக மக்களிடையே காட்சிப்படுத்தப்பட உள்ள காணொளி குறுவட்டு தொக்குக்கப்பட்டு நிறைவு நிலையில் உள்ளது. குரல் பதிவு பணிகள் நடந்து வருகிறன. சில தினங்களுக்குள் முதல் கட்டமாக கடலூர், மாவட்டத்திலுள்ள 20-க்கும் மேற்ப்பட்ட கிராமங்களில் திரையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அரசியல் ஆதாயமின்றி கட்சி சர்பற்ற முறையில் முன்னெடுக்கப்படும் எமது இம் முயற்சிக்கு அதரவளிக்க கோருகிறோம் ! தொடர்புக்கு: தோழர்.ஆ.குபேரன் +919042223563 (முகநூல்)
  11. களமாடிய மாணவர்கள் இனி என்ன செய்ய வேண்டும்?-என்னும் குறுந்தகடு வெளியீட்டு விழா கருத்தரங்கம் 24-04-13 அன்று சென்னை எழும்பூர் ICSA அரங்கத்தில் மாலை 4 மணி முதல் இரவு 9 வரை சிறப்புற நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட பல்வேறு கல்லூரி மாணவர்கள் பெருந்திரளாய் பங்கு பெற்றனர். உலகத்தமிழ் அமைப்பின் தமிழ்நாடு மாணவர் பேரவை ஒருங்கிணைத்த இந்த விழாவில் கச்சதீவு மீட்பு இயக்க முதன்மை ஒருங்கிணைப்பாளர் “சீதையின் மைந்தன்” அவர்தம் குறுந்தகடை வெளியிட மாணவர்கள் பெற்றுக்கொண்டனர். விழாவில் அண்ணன் பேரறிவாளனின் வழக்குரைஞர் உயர்திரு.பாரி அவர்கள் சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியை உலகத்தமிழ் அமைப்பின் நிறுவனர் இரா.செழியன் அவர்கள் ஒருங்கிணைத்து நடத்தினார். (முகநூல்: loyolahungerstrike)
  12. கைதான மாணவர்கள் பலருக்கு நாளை செமஸ்டர் தேர்வுகள் நடக்க இருக்கிறது /// உடனே அவர்களை விடுதலை செய்ய அனைவரும் உதவுங்கள். (முகநூல்: loyolahungerstrike) --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- (முகநூல்: loyolahungerstrike)
  13. மன்னிக்கவும் உறவுகளே , குமார் சங்ககாரா பற்றிய பதிவினை இந்த பக்கத்தை நடத்தும் நாங்கள் பதிவிடவில்லை, எங்கேயோ தவறு நடந்துள்ளது அதை ஆதாரத்துடன் நிரூபிக்கிறோம் , மேலும் நாங்கள் தேசிய தலைவரின் பாதையில் உங்களுடன் பயணிப்பவர்கள் "கரும்புலி ஆவோமே தவிர கருணா ஆக மாட்டோம்" # மீளவும் மன்னிப்பு கேட்டபடி அந்த account ஐ activate பண்ணியுள்ளார்கள். அவர்கள் மன்னிப்பு கேட்டதால் loyolahungerstrike இலும் அதற்கான பதில் பதிவை நீக்கி விட்டார்கள். அனைவரும் அவதானமாக இருங்கள். loyolahungerstrike ஐயும் அல்லது அவர்கள் தாம் ஆரம்பித்திருப்பதாக கூறி தரும் இணைப்புகளையும் மட்டும் நம்புங்கள்.
  14. "தமிழீழ விடுதலைக்கான மாணவர்கள் கூட்டமைப்பு" என்ற பெயரில் பலர் போலி முகநூலை ஆரம்பித்துள்ள நிலையில் இன்று அப்பெயரில் உள்ள ஒரு முகநூல் பக்கத்தில் சங்ககாராவை ஈழ தமிழர்களும் ஈழ தமிழர்களின் நலன் காக்க பாடுபடும் தமிழர்களும் மதிக்க வேண்டும் என்ற ரீதியில் ஒரு பதிவு போடப்பட்டிருந்தது. தி.மு.கவில் இணைந்த மாணவர்களா அதை நடத்துகிறார்கள் என்ற சந்தேகத்தை பலர் அந்த பதிவின் கீழ் போட்டிருந்தார்கள். அந்த பதிவை நீக்கும்படி கேட்டும் உடனே நீக்கவில்லை. ஆனால் loyolahungerstrike இல் அந்த பக்கத்தின் printshot போடப்பட்டு அதை போராடும் மாணவர்கள் நடத்தவில்லை என்று மாணவர்கள் தெளிவுபடுத்தினார்கள். ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- சங்ககாராவிற்கு ஆதரவாக எழுதியிருக்கும் முக புத்தக பக்கத்திற்கும் மாணவர்களிற்கும் எந்த தொடர்பும் இல்லை .இது மாணவர்களால் நடத்தபடவில்லை என்றும் தெரிவித்து கொள்கின்றோம்.. (முகநூல்: loyolahungerstrike) பி.கு: அதன் பின்னர் அந்த முகநூல் பக்கத்தில் சங்கக்காராவின் அந்த பதிவை அகற்றி விட்டிருந்தார்கள். இப்பொழுது அந்த முகநூல் பக்கத்தையே காணவில்லை. deactivate பண்ணி விட்டார்களோ தெரியவில்லை. மாணவர் போராட்ட தகவல் எடுப்பதற்கு எந்த பக்கத்தை like பண்ணி வைத்திருந்தாலும் loyolahungerstrike முகநூல் பக்கத்தில் போடப்படாத எதையும் மாணவர்கள் கூறுவதாக நினைத்து விடாதீர்கள்.
  15. சன் ரைசஸ் அணியில் இருக்கும் சங்ககராவை எதிர்த்து ஹைதராபாத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது ஈழத் தமிழர்களின் பிரச்சினையை நாம் அரசியலாக்கக் கூடாது - கருணாநிதி இன்று # குடும்ப வருமானத்திற்கு பிரச்சினை வந்ததும் டெசோ தாத்தா அதை அரசியலாக்க வேண்டாம் என்கிறார். இது உலகமஹா நடிப்புடா சாமி! (முகநூல்)
  16. பிரபா மற்றும் அவருடன் முப்பத்தி ஏழு மாணவர்களையும் ஏதோ வீரப்பனை பிடித்து கொண்டு போவது போல கட்டடத்தை சுற்றி வளைத்து போலிஸ் மூன்று வேன்களில் அவர்களை ஏற்றி சென்றுள்ளது. பெரிய அதிகாரிகள் உட்பட 250 க்கும் மேற்பட்ட போலீசார்கள் குவிந்து கைது செய்துள்ளனர். அவர்கள் 'boycott srilankan players from ipl' மற்றும் 'free tamil eelam ' என்கிற வாசகங்கள் அடங்கிய பனியன்களை சட்டைக்குள் அணிதிருந்தனர். அவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். சன் ரைசெர்ஸ் அணி விளையாட்டு அரங்கத்தில் 1500 குண்டர்களை வீரர்களின் பாதுகாப்பிற்காக நிறுத்தி வைத்திருந்தது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் காவல் துறை மாணவர்களை அரங்கத்தில் நுழையவே விடாமல் கைது செய்து சிறையில் அடைத்தது. கைதான மாணவர்கள் பலருக்கு நாளை செமஸ்டர் தேர்வுகள் நடக்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. சிங்கத்தை அதன் குகையிலே போய் சந்திக்க முற்பட்ட மாணவர்களின் துணிச்சலை பாராட்டுவோம் ! அவர்களின் அடுத்த முயற்சி வெற்றி பெறட்டும். தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம்! (முகநூல்)
  17. சென்னை ஸ்டேடியதிற்குள் போராட்டம் நடத்த இருந்த மாணவர்கள் கைது. சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் மோதும் போட்டி இன்று இரவு 8 மணிக்கு தொடங்கிறது. இதில் சென்னையை சேர்ந்த சன்குழுமம் நிர்வகிக்கும் சன்ரைசர்ஸ் அணியில் இலங்கை வீரர் சங்ககர காப்டனாக உள்ளதால் அதனை எதிர்த்தும் சிங்கள வீரர்கள் இந்தியாவில் எங்கும் விளையாட கூடாது என்றும் தமிழ் ஈழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு , பிரபா தலைமையிலான மாணவர்கள் போராட்டம் நடத்த ஸ்டேடியதிற்குள் செல்லவிருந்த வேளை காவல்துறையினரால் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர் . எந்த வழியிலாவது போராட்டகாரர்கள் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பில், கிரிக்கெட் மைதானத்தை சுற்றியுள்ள சாலைகள் மற்றும் மைதானம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் மேலும் நூறுக்கும் -க்கும் மேற்பட்ட இடங்களில் கூடுதல் கேமராக்கள் பொறுத்தபட்டும் அதனை மீறி மாணவர்கள் மைதானத்துக்குள் சென்று அவர்களது டிஷர்ட் களில் We Want Tamil Eelam , boycott sri lanka என்று அச்சிடப்பட்ட பனியன் துணியை உடலுக்கு போட்டு கொண்டு இருக்கையின் மேல் நின்று கீழ்க்கண்டவாறு முழக்கங்ககளையிட்டு போராட்டம் நடந்த இருந்தனர் . இதனை தொலைபேசி ஊடக ஓட்டுகேட்ட காவல்துறையினர் மாணவர்களை சுற்றிவளைத்து கைது செய்து காவல்நிலையத்தில் வைத்துள்ளனர். Who is side are you on? Where is the Huminty? Lanka Play by the Rules we want tamil eelam.. genocidal srilankans get out. http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=14258%3Astetiyatirkul-a-struggle-to-arrest-the-students&catid=36%3Atamilnadu&Itemid=102
  18. நீலப்பறவை அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
  19. சன் ரைசர்ஸ் விளம்பரதாரர்கள் 11.30 க்கு எக்ஸ்பிரஸ் அவென்யூவில் நடத்தவேண்டிய நிகழ்ச்சி இன்னும் நடைபெறவில்லை. மாணவர்கள் அதிகமாக அங்கு குவிந்ததால் நிகழ்ச்சி குறித்த நேரத்தில் நடைபெறவில்லை. அதனையடுத்து தாஜ் கோரமண்டலில் நடைபெறுவதாக இருந்தது, அங்கும் பதட்டம் நிலவியதால் நிகழ்ச்சி இன்னும் நடைபெறவில்லை. மாலை 5 மணிக்குள் விளம்பரதாரர்களின் நிகழ்ச்சி நடைபெறவேண்டிய கட்டாயத்தில் உள்ளதால் அடுத்து நிகழ்ச்சி எப்போ, எங்கே நடைபெறும் என தெரியாத நிலையே உள்ளது. பலத்த காவல்துறை பாதுகாப்பு இரு இடங்களிலும் போடப்பட்டுள்ளது.. (முகநூல்)

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.