Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கையின் முடிவுறாத போர்

Featured Replies

இலங்கையின் முடிவுறாத போர்

வட இந்தியாவில் வெளியாகும் " The Pioneer " என்ற நாளிதழில் பிரியதர்சி டற்றா [Priyadarshi Dutta ] என்ற இந்திய ஊடகவியலாளர்

'இலங்கையின் முடிவுறாத போர்' என்ற தலைப்பில் ஓர் ஆய்வுக்கட்டுரையை எழுதியுள்ளார். ஈழத்தமிழர்பிரச்சினைபற்றி

நன்றாக அறிந்தவராக அவர் தமது கருத்துகளை அதில் முன்வைக்கிறார்.

தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றுசேர்ந்து எதிர்த்து நெருக்கடி கொடுத்ததினால் இந்தியஅரசு அமெரிக்காவின் ஜெனிவாத்

தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தது. இங்ஙனம் இலங்கைக்கு எதிராக வாக்களித்ததின்மூலம் ஈழத்தமிழர்கள் அரசியல் அனாதைகள்

அல்ல என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது என்கிறார். எனினும் தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தியஅரசு இலங்கைக்கு தமிழின

அழிப்பில் உதவியதைப்பற்றிப் பேசாமல் விட்டது -- அதைத் தவிர்த்ததைக் -- கண்டிக்கிறார். கடைசிநேரத்தில் போர்நிறுத்தத்தை

ஏற்படுத்த சர்வதேசம் முயன்றபோது இந்தியா அதற்கு முட்டுக்கட்டை போட்டது. இப்போது இலங்கைக்கு எதிராக வாக்களித்ததின் மூலம்

முன்பு செய்த குற்றங்களை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளாமல் மேற்கொண்ட பாவமன்னிப்பு நடவடிக்கை என்கிறார்.

ஈழத்தமிழர்கள் எப்போதும் இந்தியாவை தமது தாய்நாடாகக் கருதி பாசத்துடனும் மதிப்புடனும் செயற்பட்டதை உதாரணங்கள்மூலம்

விளக்குகிறார். 1927இல் ஹண்டி பேரின்பநாயகம் தலைமையிலான யாழ்ப்பாணம் இளைஞர் காங்கிரஸ் [ Jaffna Youth Congress ]

தேசபிதா மகாத்மா காந்தியை இலங்கைக்கு அழைத்துக் கௌரவித்ததையும், தமிழ்நாட்டுத் தமிழர்களைவிட தாங்களே இந்தியாவின்

மீது கூடிய பாசம் வைத்திருப்பதாக அப்போது ஒருவர் குறிப்பிட்டதாகவும் கூறுகிறார். இவற்றிற்கு முன்பாகவே சுவாமி விவேகானந்தர்

அமெரிக்காவில் சர்வமதசபையில் பேசி இந்துமதத்திற்கும், இந்தியாவிற்கும் பெரும்புகழ்சேர்த்துத் திரும்பிவரும்போது, இந்தியர்களுக்கு

முன்பாக ஈழத்தமிழர்களே அவரை வரவேற்று மதிப்பளித்ததையும் குறிப்பிடுகிறார். இங்ஙனம் இந்தியாவிடம் மிகுந்த பாசமும் அபிமானமும்

வைத்திருந்த ஈழத்தமிழர்களுக்கு இப்போது இந்தியா செய்த பச்சையான நம்பிக்கைத்துரோகத்தை இவர் மறைமுகமாகச் சுட்டிக்காட்டுவது

கவனிக்கத்தக்கது.

" தமிழ் ஈழம் " என்ற சொல்லை 1923இலேயே சேர் பொன். அருணாசலம் பயன்படுத்தியதையும், தமிழ்ஈழமே தமிழர்க்கான அரசியல்தீர்வு

என்பதை 1976இல் தமிழர் விடுதலைக் கூட்டணி தனது " வட்டுக்கோட்டைத்தீர்மானம் " மூலம் தொடக்கிவைத்தது. அதற்கும் விடுதலைப்

புலிகள் இயக்கத்திற்கும் சம்பந்தமில்லை என்பதைத் தெளிவுபடுத்துகிறார்.

ஈழத்தமிழர்களின் பிரச்சினைபற்றி ஆழமாகக் கற்றறிந்தவராக பிரியதர்சி இருக்கிறார். உண்மைகளை வெளிப்படுத்தியற்காக ஈழத்தமிழர்கள்

அவருக்கு மிகுந்த நன்றிக்கடன்பட்டுள்ளார்கள் எனலாம்.

காவிரிநதிநீர்ப் பிரச்சினைக்குக்கூட ஒன்றுபடாத தமிழ்நாட்டு அரசியல்கட்சிகள் ஜெனிவாத்தீர்மானவிடயத்தில் ஒன்றுபட்டதும், திமுகவினர்

மத்திய அரசுக்கான ஆதரவை விலக்குவோம் என்று பயமுறுத்தியதும் இந்த வெற்றிக்குக் காரணமாகும். இந்த ஒற்றுமையும் கட்டுக்கோப்பும்,

அரசியல் விழிப்புணர்வும் தொடர்ந்துபேணப்பட்டால் ஈழத்தமிழர்கள் அரசியல் அனாதைகள் ஆகமாட்டார்கள்.

மூலம்: http://dailypioneer....g-conflict.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.