Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அதிகாரப் பகிர்வு குறித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகள் நியாயமானவை என்பதனை அரசாங்கம் புரிந்து கொண்டு செயற்பட வேண்டும்-பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்

Featured Replies

அதிகாரப் பகிர்வு யோசனைத் திட்டத்தை அரசாங்கம் உடனடியாக அமுல்படுத்த வேண்டுமென பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் நெசர்பே பிரபு தெரிவித்துள்ளார். யுத்தத்தின் பின்னரான நல்லிணக்கத்தை உறுதி செய்ய வேண்டுமாயின் அதிகாரப் பகிர்வு மிகவும் அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிக்கைப் பரிந்துரைகளின் அடிப்படையில் நாட்டில் அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையும் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறுவதனால் ஈழக் கோட்பாட்டாளர்களின் கரங்கள் வலுப்பெரும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக பிரித்தானியா வாக்களித்தமை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் தெரிவித்துள்ளார். 13ம் திருத்தச் சட்ட அமுலாக்கம், சிவில் நிர்வாகத்தை நிலைநாட்டல், வடக்கு மாகாணசபைத் தேர்தலை நடாத்துதல் போன்ற விடயங்கள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமென தெரிவித்துள்ளார்.

அதிகாரப் பகிர்வு குறித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகள் நியாயமானவை என்பதனை அரசாங்கம் புரிந்து கொண்டு செயற்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்

http://www.seithy.com/breifNews.php?newsID=58315&category=TamilNews&language=tamil

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு\வின் அறிக்கையே ஒரு அரைகுறை அறிக்கை ! இதில் பல உண்மைகள் மூடி மறைக்கப்பட்டுள்ளது தான் உண்மை !!!

மனிதாபிமானம் இல்லாதவர்கள் போர்க் குற்றச்சாட்டு விசாரணைகள் தேவையில்லை என்று நினைப்பார்கள்.

இப்போதைக்கு கூட்டமைப்பின் அதிகார பகிர்வென்பது .... சுமத்திரனுக்கு சிங்களத்தில் இருந்து வெளிவிவகார அமைச்சை பெற்றுக்கொள்வதே! :icon_mrgreen:

... ஐயா சம்பந்தர் ஐயா ... ஜெனீவாவிற்கும் வராமல் விட்டார், அங்கு எமது பிரட்சனைகளை, எம்மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் மூலம் தெரியப்படுத்துவதௌ தவிர்த்தார், .... இன்றும் சிங்கள பாராளுமன்றத்திலும், இலங்கையில் உள்ள பத்திரிகைகளிலும் அறிக்கை வாசிப்பதிலும்/விடுவதிலும் தமிழ் மக்களின் பிரட்சனைகள் தீர்ந்து விடுமென நம்புகிறார்!!!!!!!!

.... ஐயா சம்பந்தர் ... நல்லாக புரிந்து கொண்டுள்ளார், நாம் கீரைக்கடைக்கு, எதிர்க்கடை ஏற்படுத்த விரும்பவில்லை, கடந்த காலங்களில் ஏற்பட்ட பிரிவுகளினால் இழந்தவைகளை நினைவில் கொண்டு! ... அதனை சம்பந்தரும், நேற்று பின் கதவால் உள்ளிட்ட சுமத்திரனும் பிழையாக பாவிக்கின்றார்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களுக்கு விசனத்தை ஏற்படுத்தியுள்ள பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினரின் கூற்று

Posted by குணா on 09/04/2012 in செய்தி | 0 Comment

வடக்கில் இராணுவத்தின் இருப்பை மேலும் வலுயுறுத்தியுள்ள பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினரின் கூற்றுக்கு தமிழ் மக்களிடையே விசனத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம், வடக்கிற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த, பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் லோட் நெஸ்பி, வடக்கின் மக்கள் நிலைமைகள் குறித்து ஆராய்ந்திருந்தார். அதன் பின்னர் அவர் கொழும்பில் ஊடகவியலாளர்களுக்கு பேட்டியளிக்கையில்,

வடக்கில் தொடர்ந்தும் இராணுவத்தினரை நிலைநிறுத்த வேண்டியது அவசியமானது எனத் தெரிவித்திருந்தார்.

அவரின் அக் கருத்து தமிழ் மக்களிடையே விசனத்தைத் தோற்றுவித்துள்ளது. ஏற்கனவே வடக்கு கிழக்கில் இராணுவத் தலையீடுகளினால் வெறுப்புக்குள்ளாகியிருக்கும் மக்கள், தமது பகுதிகளிலிருந்து இராணுவத்தை வெளியேற்ற வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் நெஸ்பி, வடக்கில் தமிழ் மக்களின் நிலைகளை பிரிட்டன் அரசுக்கு எடுத்துக் கூறுவதற்காக விஜயம் மேற்கொண்டிருந்த அவர் இவ்வாறு தெரிவித்திருப்பது மக்களிடையே அதிருப்பதியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல்கள் முற்று முழுதாக நீங்கவில்லை. மரபு ரீதியாக தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்த மாட்டார்கள் என்ற போதிலும், படையினரை நிலைநிறுத்த வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எந்தக் காலத்திலும் தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் இயங்குவதனை தடுத்து நிறுத்த படையினரின் பிரசன்னம் அவசியமானது எனவும் வட அயர்லாந்தில் கிளர்ச்சிக்குழுக்களின் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட்ட போதிலும் நீண்ட காலத்திற்கு பிரித்தானிய படையினர் நிலைகொண்டிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதேநேரம், வடக்கு கிழக்கில் நடத்தப்பட்ட சனத்தொகை மதிப்பீடு தெளிவான விளக்கங்களுடன் சமர்ப்பிக்கப்பட வேண்டுமெனவும் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது ஏற்பட்ட இழப்புக்கள் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு வெளியிடப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

-eelam press

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.