Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுதந்திரமும் இறமையுமுள்ள தனித்தமிழீழத்திற்கான இறுதியான அரசியல் தீர்வு முன்வைக்கப்படவேண்டும்: உலகளாவிய தமிழ் இளையோர் அவை

Featured Replies

y-ilaijoorkal%20%288%29.jpgphoto.gifஉலகளாவிய தமிழ் இளையோர் அவையினரால் ஒழுங்கு படுத்தப்பட்ட உலகளாவிய தமிழ் இளையோர் ஒன்றுகூடல் மற்றும் கருத்தரங்கானது லண்டன் மாநகரில் சனி 07 .04 .2012 மற்றும் ஞாயிறு 08 .04 .2012 ஆகிய தினங்களில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

உலகத் தமிழ் இளையோர்கள் ஒன்றுகூடி தேசியம், தமிழ் மொழி, தமிழினப்படுகொலைகள் மற்றும் கலை கலாசாரம் பற்றி விரிவான கலந்துரையாடல்களை மேற்கொண்டார்கள்.

y-ilaijoorkal%20%281%29.jpg

இவ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக உலகம் முழுவதும் இருந்த இளையோர்கள் வருகை தந்தார்கள் குறிப்பாக கனடா, ஜெர்மனி, இத்தாலி, நோர்வே, சுவீடன், சுவிஸ்லாந்து மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் இருந்தும் உரை நிகழ்த்தினார்கள்.

இவ் மாநாடு இரு பிரிவுகளாக தமிழர்களின் பூர்வீகம் தொடக்கம் தேசிய அடையாளங்கள் வரை சனிக்கிழமையும் தமிழின இனப்படுகொலை தொடக்கம் அனைத்துலகம் வரையான கலந்துரையாடல்கள் ஞாயிற்றுகிழமையும் இடம்பெற்றன.

இது தவிர 60 வருடங்களுக்கு மேலாக தொடரும் தமிழ் மக்களின் தனிநாட்டுக் கோரிக்கையினையும் தற்சமயம் இலங்கை படைகளாலும் அதன் ஒட்டுண்ணிகளாலும் அவர்கள் எதிர்கொள்ளும் இனப்பிரச்சனைகளை உலக அரங்கிற்கு எடுத்துசெல்லும் முகமாக அதனுள் பாண்டித்தியம் உள்ள பேச்சாளர்களுடனான பட்டறைகளும் இடம்பெற்றன.

இது தவிர, தமிழின அடையாளங்களும் தமிழர் போராட்டமும் (“Tamil Eelam identity and struggle”) உலக அரசியல் (“Geopolitics”), சுயநிர்ணய உரிமை (“Self-determination”) இலங்கையில் உலக அரசியலும் உலகளாவிய ரீதியில் தமிழீழ அரசியலும் (“ World in Sri Lanka and Tamil Eelam in the world”), மற்றும் தமிழ்மொழி, கலை கலாச்சாரம், (“Tamil language, arts and culture,”) போன்ற தலைப்புகளின் கீழ் இளையோர்களுக்கான விளக்கக்காட்சிகளும் இடம்பெற்றன. அத்துடன் பல்வேறு நாட்டில் இருந்து வந்தவர்களுடனான கலந்துரையடல்களும் விவாதங்களும் நடைபெற்றன.

தமிழர்களின் தேசிய அடையாளங்களும் அதனோடு சேர்ந்த எமது போராட்டங்களும், இனப்படுகொலையும் அதனை எவ்வாறு அனைத்துலகும் பார்க்கும் அத்தோடு நாம் எவ்வாறு எமது அடுத்தகட்ட வேலைகளை எடுத்துச்செல்லவேண்டும் என்ற பட்டறைகளும் இடம்பெற்றன.

இறுதியாக மேற்குறிப்பிட்ட நாடுகளுடன் சேர்ந்து ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் நியூசீலாந்து தமிழ் இளையோர்கள் ஆதரிக்க உலகளாவிய தமிழ் இளையோர் அவை அதன் உறுப்பினர்களுடன் சேர்ந்து சுதந்திரமும் இறமையுமுள்ள தனித்தமிழீழத்திற்கான இறுதியான அரசியல் தீர்வு முன்வைக்கப்படவேண்டும் என்ற தீர்மானத்தை ஒருமனதாக அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

உலகளாவிய தமிழ் இளையோர் அவையின் அறிக்கை

வரலாற்றில் தொன்றுதொட்டு தமிழர்கள் வாழ்ந்துவரும் தமிழீழப் பகுதியான இலங்கைத் தீவின் வடக்கு-கிழக்கினை தமிழர்கள் பூர்வீக தாயகமாகக் கொண்டுள்ளனர்.

தீவின் ஏனைய பகுதிகளிலிருந்து வேறுபட்டு, இப்பகுதித் தமிழர்கள் தனித்துவமான மொழி, கலை, வரலாறு மற்றும் பண்பாட்டு விழுமியங்களை கொண்டவர்கள்.

அங்கு கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாக சிங்கள பௌத்தத்தை முதன்மைக் குறிக்கோளாகக் கொண்டியங்கும் சிறிலங்கா அரசு தமிழர்களின் பொருளாதாரம், கலை, பண்பாடு, இனவிகிதாசாரம், தாயகப் பிரதேச உரிமம் ஆகிய தமிழர்களின் அடையாளங்களை அழித்து வருகின்றது.

அப்பகுதியில் தமிழர்கள் வரலாற்று ரீதியாக மொழியுரிமை, கல்வி, மற்றும் குடியுரிமை மறுக்கப்பட்டு அரச இயந்திரத்தினூடாக திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டு வருகின்றார்கள்.

அங்கு திட்டமிட்ட வகையில் அறுபது ஆண்டுகளுக்கு மேலாக அரசு மூலமாகவும் அதன் சட்டங்களினூடாகவும் தமிழர்கள் என்ற காரணத்தினால் இன அழிப்புக்குள்ளாக்கப்படுகின்றனர்.

தமிழினம் 1976இல் மேற்கொள்ளப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானத்திலுள்ள கோட்பாடுகளுக்கு அமைவாக தனக்கு இறைமையுள்ள தமிழீழம் வேண்டும் என 1977இல் வாக்களித்து, அதனை மீளவும் 2009இலும் 2010இலும் உறுதிப்படுத்தியுள்ளது.

சிறிலங்கா அரசு 2009 ஆம் ஆண்டின் இறுதிப் போரின்போது தன்னால் மேற்கொள்ளப்பட்ட சர்வதேச மனித உரிமைச் சட்டங்களை மீறிய குற்றச்செயல்களுக்கு பொறுப்புக்கூறும் நிலையையோ, நீதி வழங்கும் செயற்பாட்டையோ தனது உள்ளகக் கட்டுமானங்களினூடாக செயற்படுத்த முடியாது உள்ளது.

எனவே, தமிழ் இளையோர்களை சரியான பாதையில் முன்னேற்றி செல்வதற்கு ஈழத்தமிழர்களுடைய அடையாளங்களை பேணி பாதுகாப்பதும் எமது வரலாற்றை நினைவுகொள்வதுவும் இன்றியமையாதவை.y-ilaijoorkal%20%282%29.jpg

உண்மையை நிலைநாட்டி, பொறுப்புக்கூறும் வகையில் நீதி வழங்குவதற்கு சுதந்திரமான சர்வதேச பொறிமுறையொன்று உருவாக்கப்பட வேண்டும் என உலகளாவிய தமிழ் இளையோர் அவை வேண்டுகோள் விடுக்கின்றது.

தமிழர்களின் அடிப்படை உரிமைகளை விட்டுக்கொடுக்காத வகையில் - குறிப்பாக தமிழர் தாயகம், தமிழர்களுக்கான தன்னாட்சி, தமிழர்கள் ஒரு தேசிய இனம் என்பவற்றின் அடிப்படையில் தமிழர் விடுதலைப் போராட்டத்துக்கு தீர்வுகாண உலகளாவிய தமிழ் இளையோர் அவை உழைக்கும்.

தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள பன்முகப்படுத்தப்பட்ட இன அழிப்பினை வெளியுலகுக்குத் தெரியப்படுத்தி விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்கு உலகளாவிய தமிழ் இளையோர் அவை தொடர்ந்தும் பாடுபடும்.

தமிழ் தேசிய அடையாளத்தினைத் ஆதரித்து அதனைப் பாதுகாத்தல், எமது வரலாறு, மாவீரர் ஈகம் ஆகியவற்றைப் போற்றி அவைதொடர்பான விழிப்புணர்வை ஊட்டுதல், தமிழீழத் தேசியக் கொடி, தமிழீழத்தின் தேசிய சின்னங்கள், எமது சமூக, அரசியல், கலாசார சின்னங்கள், எமது வரலாற்று-பண்பாட்டு விழுமியங்களுடன் தொடர்புடைய தேசிய விழாக்கள் என்பவற்றை ஊக்குவிப்பதற்க்காக உலகளாவிய தமிழ் இளையோர் அவை செயற்படும்.y-ilaijoorkal%20%283%29.jpgy-ilaijoorkal%20%284%29.jpgy-ilaijoorkal%20%285%29.jpgy-ilaijoorkal%20%287%29.jpgy-ilaijoorkal%20%286%29.jpgy-ilaijoorkal%20%289%29.jpgy-ilaijoorkal%20%289%29.jpgy-ilaijoorkal%20%2810%29.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.